
“எம்முடைய உபதேசங்களை” மீண்டும் மீண்டும் கேட்டுப் பதிவாக்கிக் கொண்டே வர வேண்டும்
இப்பொழுது நாம் காலையிலிருந்து இரவு வரையிலும் நாம் எதை
எதையெல்லாம் எண்ணுகின்றோமோ இவை அனைத்தையும்
1.நமது உயிர் ஓம் நமச்சிவாய… ஓம் நமச்சிவாய… என்று அந்தக் குணங்களில் இயக்கும்
அணுவாக நமக்குள் உருவாக்கி விடுகின்றது.
2.இவ்வாறு காலையிலிருந்து இரவு வரையிலும்
சதாசிவமாக்கிக் கொண்டே உள்ளது நமது உயிர்.
நாம் காலையில் இருந்து இரவு வரையிலும் எத்தனையோ வேதனைகள்
சலிப்பு சஞ்சலம் சங்கடம் வெறுப்பு கோபம் குரோதம் பயம் ஆத்திரம் இதைப் போன்ற
உணர்வுகளை நாம் நுகரப்படும் பொழுது அவை அனைத்தையும் நமது உயிர் “ஓ…” என்று ஜீவணுவாக மாற்றி
“ம்” என்று நமது உடலாக மாற்றி
விடுகின்றது.
உதாரணமாக… செடி
கொடியினில் விளைந்த வித்தினை நாம் நிலத்தில் ஊன்றுகின்றோம். ஆனால்
(முதலில் உருவான) அந்தச் செடியின் சத்தைச்
சூரியன் கவர்ந்து வைத்துக் கொள்கின்றது.
நிலத்தில் ஊன்றப்பட்ட அந்த வித்து நிலத்தின் துணை கொண்டு… சூரியனால் கவர்ந்து வைக்கப்பட்டுள்ள தாய்ச்
செடியின் சத்தை நுகர்ந்து அதே செடியாக விளைந்து அதன் வித்தை மீண்டும் உருவாக்குகின்றது.
இப்பொழுது நாம் காலையிலிருந்து இரவு வரையிலும் வேதனை சலிப்பு
சஞ்சலம் கோபம் பயம் அவசரம் ஆத்திரம் என்ற உணர்வினை நாம் நுகர்ந்தால்
1.எந்தெந்த மனிதனின் உடலிலிருந்து அந்த வேதனை
உருவாகி வெளி வந்ததோ அதனை நாம் நுகரப்படும் பொழுது
2.அதே வேதனையை உருவாக்கும் அணுவாக நம் உடலுக்குள்
உருவாகி விடுகின்றது.
இப்பொழுது ஒரு செடியில் விளைந்த வித்து எவ்வாறு தாய்ச் செடியின்
சத்தைக் கவர்ந்து அது தனது வித்தை உருவாக்குகின்றதோ… தன் இனத்தை உருவாக்குகின்றதோ அதே போல்
1.நம் உடலுக்குள் பிறர்படும் வேதனையோ அல்லது
மற்றதையோ வேடிக்கை பார்த்தால்
2.அல்லது சாபமிடுவதைப் பார்த்தால் ஒருவர்
வேதனைப்படுவதை உற்றுப் பார்த்தால்
3.அந்த உணர்வை நாம் நுகர்ந்து வேதனைப்படுகின்றார்
என்று அறிகின்றோம்.
ஆனாலும் அத்தகைய உணர்வுகளை நாம் நுகர்ந்த பின் உயிர் அறியச்
செய்கின்றது. அவை நம் இரத்தங்களில் கலந்து…
1.எந்த உடலில் அது உருவானதோ அதே அணுவின் தன்மை
நமக்குள் உருவாக்கப்படும் பொழுது அதற்கு இரை தேவை.
2.எந்த மனித உடலில் இருந்து அது வெளி வந்ததோ அது
காற்றில் உண்டு.
3.அப்பொழுது நம் உடலுக்குள் இருந்து அந்த
உணர்ச்சிகளை உந்தப்படும் பொழுது அதே உணர்வை நாம் நுகர்வோமென்றால்
4.நமக்குள் இதே போல் வேதனைப்படுவதும்
வெறுப்படைவதும் சங்கடப்படுவதும் போன்ற நமக்குள் அந்த உணர்ச்சிகளைத் தூண்டும்.
இவ்வாறு நமக்குள் வருவதிலிருந்து நாம் மீள்வதற்குத் தான்
இப்பொழுது உங்களுக்குள் அந்த மகரிஷிகளின் அருள் சக்தி நாம் பெற வேண்டும் என்று
எண்ணி ஏங்கச் செய்கின்றோம். அதைப் பெற வேண்டும் என்றால் யாம்
கொடுக்கும் உபதேச உணர்வினைப் பதிவாக்கிக் கொள்ள வேண்டும்.
துருவ நட்சத்திரமோ இப்புவியில் துருவ மகரிஷி அல்லது அகஸ்தியராக
இருக்கும் பொழுது தீமைகளை வென்று வானை நோக்கி உணர்வுகளை நுகர்ந்து நஞ்சினை வென்று
உணர்வினை ஒளியாக மாற்றி இன்று துருவ நட்சத்திரமாக இருக்கின்றனர்.
அதனின்று வருவதைச் சூரியனின் காந்தப் புலனறிவு கவர்ந்து
பிரபஞ்சத்தில் பரவச் செய்கிறது. நமது பூமியோ
அதைத் துருவப் பகுதியில் கவர்ந்து நமது பூமிக்குள் கொண்டு வருகின்றது.
1.அதனை நீங்கள் நினைவு கூர்ந்து உங்களில்
பதிவாக்கி நினைவு கொண்டு அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளையும் பேரொளியையும்
பெற முடியும்.
2.அப்போது நாம் கேட்டுணர்ந்த பார்த்துணர்ந்த அந்தத்
தீமையின் அணுக்களை நமக்குள் வளராது தடுக்க உதவும்.
2.அந்தத் துருவ நட்சத்திரத்தின் வலுவான உணர்வுகளை
நமக்குள் அந்த அணுக்களைப் பெருக்கவே நாம் தியானமிருக்கின்றோம்….
3.அடிக்கடி ஆத்ம சுத்தி செய்யவும் சொல்கிறோம்.