
துருவத்தின் ஆற்றல்
உயிரணு தோன்றி மனிதனிலிருந்து விடுபட்டு ஒளியின் உடல் பெற்ற அந்தத் துருவ
நட்சத்திரத்தின் உணர்வை உங்களுக்குப் பழக்கத்தில் பெறும்படி யாம் செய்தது.
இதை நீங்கள் எளிதில் கவர்ந்து நுகர்ந்து உணர்ந்து தீமைகளை நீக்கிடும் ஞானத்தைப் பெற
முடியும். அதைத்தான் இப்பொழுது பெறச்
செய்தது.
இதை எடுத்துக் கொண்ட பின்
1.அடுத்து எப்பொழுது வேண்டுமென்றாலும் துருவ
நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று
2.கண்ணின் நினைவைத் துருவ
நட்சத்திரத்தின் பால் செலுத்தி அதைப் பெற வேண்டும் என்று
ஏங்கிக் கண்களை மூடி
3.அந்தத் துருவ
நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எங்கள் இரத்த நாளங்களில் கலக்க வேண்டும்
4.எங்கள் உடல் முழுவதும் பரவ வேண்டும் எங்கள்
உடல் உறுப்புகளை உருவாக்கிய அணுக்கள் அனைத்தும் பெற வேண்டும் என்று ஏங்கி
5.ஒரு நிமிடம் இரண்டு நிமிடம் தியானித்தால்
போதும்.
அதை நம் உடலுக்குள் வலுவாக்கி வேதனைப்பட்டோர் உணர்வைக் கேட்டறிய நேர்ந்தாலும் அது நம்
உடலுக்குள் வலுப் பெறாதபடி அதை நீக்கி…
நம் உடலுக்குள் இருக்கும் நல்ல அணுக்களைப் பாதுகாப்பாக… நல்ல உணர்வுகளை வளர்த்துக் கொள்ள
முடியும்.
இல்லையென்றால் அந்த வேதனை என்று அணுக்கள் வளர்ச்சி அடைய
கடுமையான நோய்களும் கடுமையான வேதனைகளும் வரும்.
தேடிய செல்வம் எது இருப்பினும் வைத்தியத்திற்குச் செலவழித்து அதை நீங்கள் பாதுகாத்தாலும் உங்கள்
உடலில் இருந்த உணர்வுகள் கடைசி நிலை எதுவோ அதன் வழி இந்த
உயிர் அழைத்துச் சென்று வேறு ஒரு உடலாக மாற்றிவிடும்.
ஆகவே இந்த உடலில் இருக்கும் பொழுது துருவ நட்சத்திரத்தின்
பேரருள் பேரொளியை உங்களுக்குள் வளர்த்துப் பிறவி இல்லா நிலை அடைவதே கடைசி நிலை.
ஒவ்வொரு நாளும் உங்கள் வாழ்க்கையில் வரும் கஷ்டங்களையோ நஷ்டங்களையோ பையன் சொன்னபடி கேட்கவில்லை என்று
வேதனைப்படுவதோ அல்லது வேதனைப்படுபவர்களை நுகர்ந்தாலோ உடனே நீங்கள்
ஆத்ம சுத்தி செய்ய வேண்டும்.
ஆறாவது அறிவு கார்த்திகேயா என்றாலும் சேனாதிபதி ஆறாவது அறிவின்
துணை கொண்டு தான் துருவ நட்சத்திரத்தின்
பேரருளை நுகர்கின்றோம்.
1.அந்தத் துருவ
நட்சத்திரத்தின் உணர்வுகளை புருவ மத்தியில் உயிரின் நிலைகள் இணைக்கப்படும் போது
2.கண் வழி கவர்ந்தாலும்
கண்ணின் நினைவினை உயிரிலே
இணைக்கப்படும் பொழுது
3.உயிர் வழி அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளை ஈர்க்கும் திறன் வரும் பொழுது
4.மூக்கின் வழி செல்லும் தீய உணர்வுகளை அது தடைப்படுத்துகின்றது.
பின் நம்முடைய நினைவாற்றல் நம் உடலில் உள்ள அணுக்களுக்குச் செலுத்தப்படும் பொழுது அதுவும் வலுப்பெற்று நம்
உட;லுக்கு முன் முகப்பில் உள்ள விஷத்தன்மைகளை தூர ஒதுங்கிச் செல்லத் தள்ளி விடுகின்றது. நமது
ஆன்மா தூய்மை அடைகின்றது.
1.அதே சமயத்தில் நம் உடலுக்குள் இருக்கும்
அணுக்கள் ஒவ்வொன்றுக்கும் ஒரு ஆன்மா ஒரு வட்டம் உண்டு… அந்த ஜீவான்மாக்களும்
சுத்தமாகின்றது.
2.இந்த உயிரைப் போல உணர்வின் தன்மை ஒளியின் அறிவாக அணுக்கள் வளர்ச்சி வரும் சக்தி பெறுகின்றது.
அப்படி ஒளியாக்கப்படும் பொழுது உயிருடன் இணைந்து… ஒளி என்ற அறிவு எப்படி இருந்ததோ அதன் அறிவின்
தன்மை பெற்ற அணுக்களை இப்படிச் சிறுகச் சிறுக மாற்றி… இந்த உடலுக்குப் பின் நாம் நமது உயிருடன் ஒன்றி
ஒளியின் உடலாக மாறுவதே கடைசி நிலை.
1.எந்தத் துருவத்தின்
உணர்வை நாம் நுகர்ந்தோமோ
2.அதன் ஈர்ப்புக்கே நம்மை அழைத்துச் செல்கின்றது
நமது உயிர்.