ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

May 18, 2025

அருள் ஞானக் குழந்தைகள் உருவாகட்டும்… உலகைக் காத்திடும் சக்தியாக மலரட்டும்

அருள் ஞானக் குழந்தைகள் உருவாகட்டும்… உலகைக் காத்திடும் சக்தியாக மலரட்டும்


அனைவரும் மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று வேண்டினால் நமக்குள் பகைமை உணர்வுகள் வராது தடுக்கப்படுகின்றது. அனைவரும் நலம் பெற வேண்டும் என்ற உணர்வுகளை எண்ணி எடுத்தால் அது நமக்குப் பாதுகாப்பாகவும் நமக்குள் நன்மை செய்யும் சக்தியாகவும் மாறும்.
 
அதே சமயத்தில் உலகுடன் ஒத்து வாழ வேண்டும் உலக ஞானம் பெற வேண்டும் அருள் ஞானம் பெற வேண்டும்.
 
அன்று தாய் கருவிலே உருப்பெற்ற அகஸ்தியன்
1.அவனின் தாய் சந்தர்ப்பத்தால் விஷத்தை வென்றிடும் உணர்வுகள் பெற்று அந்த உணர்வின் சக்தியைத் தான் நுகர்ந்தாலும்
2.அதன் வழி கொண்டு தாய் கருவிலே விளைந்த உணர்வின் துணை கொண்டு
3.அவன் பிறந்த பின் தன் தாய் தந்தையை இன்னொரு பிறவி இல்லா நிலைகள் அடையச் செய்தான்.
 
துருவ நட்சத்திரம் என்று சொல்கின்றோமே
1.அகஸ்தியனுடைய தாய் தந்தையும் அகஸ்தியனின் மனைவியும் இவர்கள் நான்கு பேரும் பிரம்மமாக நின்று அன்னை தந்தை அரவணைப்புடன்
2.நஞ்சை வென்றிட்ட உணர்வினைத் தன்னுடன் அரவணைத்து ஒன்றிய நிலைகள் கொண்டு துருவ நட்சத்திரமாக உருப்பெற்று
3.அதனின் அரவணைப்பில் சப்தரிஷி மண்டலங்களாகத் தன் ஈர்ப்பு வட்டத்தில் வாழச் செய்து கொண்டுள்ளான் அன்று அகஸ்தியன்.
 
இதனை வழிப்படுத்தி கர்ப்பமுற்ற தாய் கருவில் வளரும் சிசுக்களுக்கு ஒவ்வொரு நாளும் மகரிஷிகள் உணர்வுகளைக் கருவில் இருக்கும் சிசு பெற வேண்டும் என்று ஏங்கிப் பெற்றால்
1.துருவ மகரிஷியின் ஆற்றல் அங்கே பெற்று
2.நஞ்சை வென்றிடும் உணவுகள் பெற்று உங்களையும் காக்கும் உணர்வாக வருகின்றான்.
 
நமக்குள் வளர்ந்த இனமாக இருப்பினும் நாம் எண்ணிய உணர்வின் கருவின் உணர்வை அது ஒளியாக மாற்றுகின்றது…” நமக்குள் தெளிவாக்கும் உணர்வின் தன் மகனாகவும் வருகின்றது. நமக்கு அருள் ஞானத்தைப் போதிக்கும் அருள் ஞானக் குழந்தையாகவும் வளர்கின்றது.
 
மனிதனின் வாழ்க்கையில் கர்ப்பம் என்று அறிந்தாலே துருவ மகரிஷியின் உணர்வுகள் கருவில் வளரும் குழந்தைக்குக் கிடைக்க வேண்டும் உலக ஞானம் பெற வேண்டும் உலகைக் காத்திடும் உத்தம ஞானியாக வேண்டும் என்ற உணர்வினை நாம் எடுத்துக் குழந்தை பிறக்கும் வரையிலும் இந்த உணர்வினை வலுக்கூட்டிச் செயல்படுத்த வேண்டும்.
 
குழந்தை பிறந்த பின் உலக ஞானத்தை அவன் அறியும் தன்மையும் உலகைக் காத்திடும் உணர்வுகளும் அவனுக்குள் விளையும். காலை பிரம்ம முகூர்த்த நேரத்தில் அருள் ஞானிகள் உணர்வுகளைக் கருவில் வளரும் சிசுக்களுக்கு ஊட்டுதல் வேண்டும்.
 
எப்படி அகஸ்தியனின் தாய் தந்தையர் சந்தர்ப்பத்தால் விஷத்திலிருந்து விடுபடும் உணர்வுகளைத் தனக்குள் முலாமாகப் பூசும் போதுஅவர்கள் நுகர்ந்த உணர்வுகள் கருவிலே வளரும் சிசுவுக்குள் இணைந்து நஞ்சினை வென்றிடும் உணர்வு பெற்று அதன் வாழ்க்கையில் நஞ்சை வென்று உணர்வினை ஒளியாக மாற்றி ஒளியின் சரீரம் பெற்றது போன்று
1.நீங்களும் இந்த உணர்வின் தன்மையை அருள் ஒளி பெற வேண்டும் என்ற நினைவினைக் கூட்டி
2.அருள் ஞானக் குழந்தையாக உருவாக்கி உங்களைக் காத்திடவும்
3.இந்தப் புவியில் வாழும் மனித இனத்தைக் காத்திடும் உணர்வாக உங்களில் அருள் ஞானம் பெற வேண்டும் என்று பிரார்த்திக்கின்றேன்.
4.அருள் ஒளிச் சுடராக அருள் ஞானக் குழந்தைகள் உருவாகட்டும்உலகைக் காத்திடும் சக்தியாக மலரட்டும்.