ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

May 3, 2025

இந்த உலகைக் காக்கும் மகரிஷிகளை நாம் சிருஷ்டிக்க வேண்டும்

இந்த உலகைக் காக்கும் மகரிஷிகளை நாம் சிருஷ்டிக்க வேண்டும்


கர்ப்பிணியாக இருக்கும் அனைவரும்
1.வியாசகன் அகஸ்தியன் போகர் என்று பெரும் தத்துவ ஞானிகளுடைய பெரும் மகரிஷிகளின் உணர்வுகளை எண்ணி எண்ணி ஏங்குங்கள்.
2.கருவிலிருக்கக்கூடிய குழந்தை அந்தச் சக்தி பெற வேண்டும் என்று எண்ணுங்கள்.
3.இவ்வாறு பெரும் மகரிஷிகளை நீங்கள் சிருஷ்டிக்க வேண்டும்.
 
எதிர்காலக் குழந்தைகள் அந்த மகரிஷிகளின் அருளாற்றல் மிக்க சக்திகளைப் பரப்பினால் தான் விஞ்ஞான அறிவால் பேரழிவாக வந்து கொண்டிருக்கும் நிலையிலிருந்து இந்த உலகை மீட்ட முடியும்.
 
காரணம்மத பேதம் இன பேதம் மொழி பேதம் என்ற நிலையில் உருப்பெற்றுக் கொண்டிருக்கும் அசுர உணர்வுகள் பரவிக் கொண்டிருக்கும் மனிதனை மனிதன் என்று இல்லாது அசுரத் தன்மை கொண்டு அழித்திடும் உணர்வுகள் ஒவ்வொரு மனிதனின் நிலைகளிலும் இது ஊடுருவி உள்ளது.
 
அத்தகைய அசுர உணர்வுகளிலிருந்து மீட்டிட அந்தச் சப்தரிஷிகளின் அருளாற்றல் மிக்க சக்தி கருவிலிருக்கக்கூடிய குழந்தைக்கு உருப்பெற வேண்டும் என்று நீங்கள் ஏங்கிப் பெறுவீர்கள் என்றால்
1.அந்தக் குழந்தை உங்களையும் காக்கும் உங்கள் குடும்பத்தையும் காக்கும்.
2.எந்த ஊரிலே பிறந்ததோ அந்த ஊரையும் காத்திடும்.
3.அதனின்று உலகைக் காத்திடும் நிலை வரும்.
 
விஞ்ஞான அறிவால் வரும் பேரழிவை அந்தக் கருவில் இருக்கக்கூடிய குழந்தைகள் அது வளர வளர வளர இந்த உலகில் உள்ள தீமைகளை மாற்றி அமைத்திடும் திறன் பெறும்.
 
இனி இந்த உலகம் பெரும் மாற்றங்களைச் சந்திக்கப் போகின்றது. எவ்வளவு கோடிப் பணம் வைத்திருந்தாலும் அவை நமக்கு உதவப் போவதில்லை.
 
1.இன்று காஷ்மீரிலோ அல்லது இந்தியாவின் சில பகுதிகளை எடுத்துக் கொண்டாலோ
2.அல்லது மற்ற பாகிஸ்தானின் எல்லைப் பகுதிகளில் உள்ளோர் அனைவருமே தன் பிள்ளை எது…? தன் குழந்தைகள் எது…? என்று
3.செல்வங்கள் அழிந்துஅனாதைகளாக்கப்பட்டு வேதனைப்பட்டுக் கொண்டுள்ளார்கள்.
4.இது போன்று உலக நிலைகள் அனைத்திலும் ஆப்பிரிக்காவிலும் இன பேதங்களால் பேரழிவுகள் வந்து கொண்டுள்ளது.
 
உலகம் முழுவதும் இது போன்று ஏற்பட்டு கொண்டிருக்கும் இந்த நிலையில் தென்னாடுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி என்று நாம் போற்றிக் கொண்டிருக்கும் இந்த நாட்டில்அகஸ்தியனால் தீமைகளை அழித்திடும் ஆற்றல் அவனில் பெற்று தீமையற்ற உடலாகத் தான் வளர்த்து இன்றும் துருவ நட்சத்திரமாகஒரு பேரண்டமாக சப்தரிஷி மண்டலமாக வளர்ந்து கொண்டுள்ளார்கள்.
 
அகஸ்தியன் காட்டிய அறநெறியைப் பின்பற்றி எத்தனையோ தத்துவ ஞானிகளும் மகான்களும் தோன்றியுள்ளார்கள். ஆகவேஇன்று கர்ப்பிணியாக இருப்பவர் அனைவரும் அந்த அகஸ்தியன் வியாசகன் போகர் போன்ற அந்த மகரிஷிகளுடைய உணர்வுகளைக் கருவிலிருக்கும் குழந்தைக்கு இணைத்துப் பழகுதல் வேண்டும்.
 
பிருகு அத்திரி போன்றவர்கள் ஆரம்பத்தில் அரசர்களாக இருந்தாலும் பின்பு பெரும் கொண்ட சக்திகளை தங்களுக்குள் பெருக்கி வளர்த்துக் கொண்டார்கள். அத்தகைய மகரிஷிகளின் உணர்வுகளைக் கருவிலிருக்கக்கூடிய குழந்தைகள் பெற வேண்டும் என்று சதா அதை உருப் பெறச் செய்யுங்கள்.
1.உலகில் இருக்கும் அசுர சக்திகளை மாற்றிடும் திறன் அந்த எதிர்காலக் குழந்தைகளுக்கு வளர்கின்றது.
2.தீமைகளில் இருந்து உலகைக் காத்திட இந்தத் தென்னாடு பயன்படப் போகின்றது.
 
உலகில் பேரழிவு வரும் இந்த நேரங்களில் இந்த உபதேசத்தைக் கேட்டவர்கள் அனைவரும் அருகில் உள்ள சகோதரிகள் கர்ப்பிணிகளாக இருந்தால் இதை உபதேசியுங்கள்.
 
அவ்வாறு நாம் செய்தோம் என்றால்
1.இந்த உலகைக் காக்கும் மகரிஷிகளை நாம் சிருஷ்டிக்கலாம்.
2.அவர்களின் மறைவில் நாமும் பிறவா நிலையை அடையலாம். இதை மனதில் வைத்துச் செயல்படுங்கள்.