ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

May 27, 2025

நீர் சக்தியை உருவாக்கும் அகஸ்தியன்

நீர் சக்தியை உருவாக்கும் அகஸ்தியன்


இந்தப் பிரபஞ்சத்தில் நமது பூமிக்குள் எவ்வாறெல்லாம் சூரியன் கவர்ந்து இந்த உணர்வுகள் வளர்ந்துள்ளது…? தாவர இனங்கள் எதனெதன் நிலையை எடுத்துக் கொண்டதோ அது வித்தான பின் பூமியின் ஈர்ப்பின் துணை கொண்டு தாய்ச் செடியின் சத்தைக் கவர்கின்றது.
 
பல உணர்வுகளை இரண்டறச் சேர்த்து ஒரு வித்தாகச் செடியாக மாறினால் அதிலிருந்து வரும் அதனின் வித்து அந்தத் தாய்ச் செடியின் சத்தை எப்படிக் கவர்கின்றது…? என்பதை அணுவின் ரகசியத்தை அகஸ்தியன் உணர்கின்றான்
 
1.ஒன்றுடன் ஒன்று மோதி உணர்வின் தன்மை மேகமாக மாறி அதன் வழி கொண்டு மேகத்திலிருந்து நீர் வருவதைக் கண்டு
2.இவனுக்குள் பல தாவர இனங்களை நுகர்ந்து வியர்வை போன்று வரும் உணர்வின் தன்மை உடலில் உருவாக்கிய பின்
அவன் எந்தப் பாறை மீது அமர்ந்தாலும் தனக்குள் ஈர்க்கும்… நீராக உருவாகும் ஊற்றாக உருவாகின்றது.
 
மின்னல்களோ மற்ற நிலைகளோ மோதி ஆவியின் தன்மை எடையற்ற நிலைகள் கொண்டு மேகங்களாகக் கூடினாலும்
1.இதனை ஈர்க்கும் சக்தி எடையற்ற நிலைகள் அந்த அகஸ்தியன் அமர்ந்த தரைப் பாகங்களில் பட்டால்
2.அங்கே ஈர்க்கப்பட்டு நீர் ஊற்று உருவாகும் நிலை வருகின்றது.
 
மலை உச்சியில் இந்த ஊற்றுகள் உருவாகின்றது. ஆனால் மலையின் அடிவாரத்தில் நீர் இருப்பதில்லை. கீழே தோண்டினாலும் நீர் வருவதில்லை. ஆனால் வெறும் பாறையாக இருக்கின்றது.
1.அதன் உணர்வின் தன்மை வியர்த்து அதன் உணர்வுடன் கரைக்கப்பட்டு
2.அதன் வழி பாறைகளின் இடைவெளிகளில் நீரூற்றுகள் தோன்றுகின்றது.
 
அகஸ்தியன் இருந்த இடங்களில் எல்லாம் நீர் சத்து கலந்தே வருகின்றது. ஆக பல பல உணர்வின் தன்மை அவன் உடலுக்குள் மாற்றத்தை ஏற்படுத்தும் நிலையும் அவன் தாய் கருவிலேயே உருப்பெற்ற நிலைகள் தான் அவை.
 
ஆகவே முதல் மனிதனான அகஸ்தியன் விண்ணுலக ஆற்றலை மாற்றியமைக்கும் சந்தர்ப்பம் அவனுக்குக் கிடைக்கின்றது. இப்படிக் கிடைத்த மனிதன் தான் தன் ஐந்தாவது வயது வரப்படும் பொழுது காடுகளுக்குள் எங்கே சென்றாலும் அவனுக்கு எதிர்ப்பே இல்லாத நிலைகள் வருகின்றது.
 
காட்டு அரசன் என்ற நிலைகளில் அவனுக்குப் பெயர் சூட்டுகின்றனர்.
1.மிருகங்கள் அனைத்தும் அஞ்சுகின்றது. விஷம் கொண்ட மனிதர்கள் இவனைக் கண்டு அஞ்சுகின்றனர். இவன் வழியே இணங்கி வருகின்றனர்.
2.இப்படி ஒடுக்கும் உணர்வுகள் அவனுக்குள் வளர்ந்து அவன் அறியாமலே செயல்கள் செயல்படுகின்றான்.
 
ஒரு போக்கிரி இருக்கின்றான் என்று வைத்துக் கொள்வோம். அதே சமயத்தில் சாந்த குணம் கொண்ட ஒருவன் கடையிலே சென்று சில்லறை கேட்கின்றான் என்றால் போயா…! உனக்கு இல்லை என்பான் கடைக்காரன்.
 
ஆனால் அந்தப் போக்கிரி கேட்டால் அவன் அறியாமலேயே அவனை இயக்கச் செய்து சில்லறையைக் கொடுத்து விடுகின்றான்.
 
இதைப் போல உணர்வின் இயக்கங்கள் உற்று நோக்கும் பொழுது அகஸ்தியனுக்கு எப்படிச் சாதகமாக இயங்குகின்றது…? என்றும் இது எல்லாம் சந்தர்ப்ப இயக்கங்கள் தான்.
 
இயற்கையில் கோள்கள் எதை நுகர்ந்ததோ அதைத் தனக்குள் நுகர்ந்திடும் வல்லமை பெற்றது. சனிக்கோளோ மற்ற அணுக்கள் மோதும் பொழுது ஆவியாக எடையற்ற நிலையாகப் பரவுவதும் தன் சுழற்சியின் ஈர்ப்பு வட்டத்தில் நீராக மாற்றும் சக்தி பெற்றது.
 
இதைப்போல மனித உடலுக்குள்ளும்
1.தான் உணவாக உட்கொள்ளும் உணவுக்குள் இருந்த நிலையை நீராக மாற்றுவதும் விஷக்கழிவினை நீராக மாற்றி விஷத்தை நீக்கி விட்டு
2.நமக்குள் உமிழ் நீர் என்று ஜீரணிக்கும் உமிழ் நீராக மாற்றுகின்றது.
 
நமக்குள் ஊறும் உமிழ் நீர்கள் உணவாக உட்கொள்ளும் அந்தப் பொருளை அமிலமாக மாற்றி அதை இரத்தமாக மாற்றுகின்றது. குளுக்கோஸ் ஒரு சுவையின் தன்மை மாற்றுவதும் அது சுழன்று வரப்படும் பொழுது வடிகட்டும்போது அமிலமாக மாற்றுவதும் அது ஒன்றுடன் ஒன்று மோதப்படும் பொழுது வாயு உற்பத்தியாகின்றது.
 
அந்த வாயுவின் தன்மை கொண்டு கை கால்களைச் சுருக்குவதும் மடக்குவதும் போன்ற நிலை வருகின்றது. எண்ணத்தின் உணர்வு கொண்டு செயல்படுத்தும் பொழுது நரம்பு மண்டலம் சீராக இயங்கி எதை எண்ணுகின்றோமோ அதை இயக்கிச் செயல்படுத்துகின்றது.
 
நண்டை எடுத்துக் கொண்டால் தன் உணர்வின் வலு கொண்டு எதிலே எண்ணத்தைப் பாய்ச்சுகின்றதோ அது இயக்குகின்றது. ஆனால் அதற்கு நரம்பு மண்டலங்கள் கிடையாது.
 
இருந்தாலும் கூட்டாக அமைந்திருக்கும் அதனுடைய உணர்வுக்குள் அமிலங்கள் இரண்டறச் சேர்க்கப்படும் பொழுது அந்த உணர்வின் அழுத்தத்தால் வாயு உருவாகின்றது.
 
இடுக்கி போன்ற தன் கை கால்களை இயக்குவதும் தன் உணர்வின் வலுக் கொண்டு அதைச் செயல்படுத்துவதும் நரம்பு மண்டலம் இல்லாமலே நண்டினங்கள் செயல்படுத்துகின்றது. தேள் இனங்களும் அவ்வாறே இயக்குகின்றது.
 
இதையெல்லாம் குருநாதர் இயற்கையின் உண்மையின் உணர்வால் அதை எவ்வாறு இயக்குகிறது என்பதையும் இந்த உண்மையை உனக்குள் அறிந்து கொள். இதை எல்லாம் கடந்து தான் நீ மனிதனாக வந்திருக்கிறாய்.
1.அவை அனைத்தையும் அறியும் உணர்வின் தன்மை உனக்குள் உண்டு.
2.கார்த்திகேயா என்று உனது எண்ணத்தை எதன் பால் செலுத்துகின்றாயோ அதனை அறியும் பருவம் பெறுகின்றாய்.
3.தீமையை அகற்றும் உணர்வினை நீ நுகர்ந்தால் தீமையகற்றிடும் சக்தியைப் பெறுகின்றாய் என்று
4.குருநாதர் அடிக்கடி இவ்வாறு எனக்கு உணர்த்துவார்.
 
அவர் கண்ட உண்மையின் உணர்வுகளைப் பதிவாக்கி நினைவு கொண்டு உற்று நோக்கிச் சுவாசிக்கும்படி செய்து தீமைகளிலிலிருந்து விடுபடும் உணர்வை உருப்பெறச் செய்யும்படி சொல்வார்.
 
தீமைகளிலிருந்து விடுபடும் சக்திகள் உனக்குள் அது உருப்பெற்றுவிட்டால்
1.உன் சொல்லைக் கேட்போர் உணர்வுகளுக்குள் இத்தகைய ஆற்றல்கள் பதிவாகி அவர்களும் தீமையிலிருந்து விடுபட இது உதவும்.
2.உன் சார்புடையோர் அனைவருக்கும் தீமையிலிருந்து விடுபடும் சக்தியை அவர்கள் வளர்த்து விட்டால்
3.தீமையை அகற்றிடும் வல்லமை கொண்ட காற்று மண்டலம் இங்கே சுழலுகின்றது.
 
எந்த நண்பனின் நிலைகளில் தீமைகளை அகற்றிடும் நிலைகளைப் பதிவாக்குகின்றோமோ அந்த நண்பன் அவன் உடலில் விளைய வைத்த உணர்வுகள் உனது ஆன்மாவாக மாறுகின்றது. அதன் உணர்வை உணவாக உட்கொள்ளும் அணுக்கள் உன் உடலில் உருவாகின்றது.
 
1.ஒரு மனிதனை இவ்வாறு உருவாக்க வேண்டும் என்றால் அவனைக் காக்க வேண்டும் என்றால்
2.நீ கண்டறிந்த உணர்வினை உன் சார்புடைய மக்களுக்கு இதை எடுத்துரைத்து அவர்களுக்குள் விளையச் செய்ய வேண்டும்.
 
தீமையை நீக்கும் உணர்வுகள் அங்கே விளைந்தால் உனக்குள் தீமை அகற்றிடும் உணர்வுகளாக… அவர்களுக்குள் அது உற்பத்தியாகும் பொழுது தான் அந்த நிலை வருகின்றது.
 
சிறு துளிகளாக மழை பெய்கின்றது. ஆனால் அதை ஆங்காங்குள்ள பூமியினுடைய நிலைகள் இழுத்து விடுகின்றது… வெள்ளமாகச் செல்வதில்லை.
 
ஆனால் அதே சமயத்தில் சிறு துளிகள் அனைத்தும் ஒன்றாகச் சேர்ந்து வலுப்பெறும் போது வெள்ளமாக ஓடத் தொடங்குகிறது. இதைப் போன்று தான் ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் தான் பெற்ற உணர்வினை அருள் ஒளியை உருவாக்குதல் வேண்டும். உணர்வின் வலிமையை உருவாக்குதல் வேண்டும்.
 
அவர் உடலிலிருந்து வெளிப்படும் அத்தகைய உணர்வுகளைச் சூரியனுடைய காந்த சக்தியால் கவரப்பட்டால்
1.நம் உணர்வு அவர் உடலிலும் அவர் உணர்வு நம் உடலிலும் ஈர்க்கப்படும் போது
2.இருவரது உணர்வுகளும் ஒன்றாக இணைகின்றது.
 
கோபமான உணர்வு ஒரு உடலிலே பதிவானால் அந்தக் கோபமான உணர்வுகளும் இரண்டறக் கலக்கத்தான் செய்கின்றது. நமக்குள் நல்ல குணங்களை மீறி அந்தக் காரத்தின் உணர்ச்சியை ஊட்டும் பொழுது அத்தகைய அணுக்கள் விளைந்தால் இரத்தக் கொதிப்பாக மாறுகின்றது.
 
இதை அருள் ஞானிகள் உணர்வு கொண்டு அடக்கினால் தனது நண்பனுக்கும் அந்த நிலை பெற வேண்டும் என்று சந்தர்ப்பத்தால் வேதனையோ துன்பங்களை ஏற்படும் பொழுது அருள் ஒளி பெற வேண்டும் என்று தனக்குள் எடுத்து அதை உருவாக்க வேண்டும்.
 
அதாவது ஒருவர் தவறு செய்கிறார் என்றால் அவன் உடலுக்குள் ஊடுருவி தவறிலிருந்து மீட்கும் நிலையாகச் சிந்திக்கும் செயலாகப் பெற வேண்டும் என்று உணர்வை ஊட்டிடல் வேண்டும்.
 
பல முறை நாம் செய்தால் அந்தத் தவறின் உணர்வுகள் நமக்குள் வராது தடுக்கின்றோம். நண்பன் என்று பேசப்படும் பொழுது ஏற்றுக் கொள்ளும் சந்தர்ப்பம் வருகின்றது. அத்தகைய உணர்ச்சிகளை ஊட்டி அதை ஏற்கும்படி செய்து அது அங்கே பதிவானால் நினைவு கொண்டு தீமைகளை நீக்கிடும் அருள் சக்தி பெறுகின்றான்.
1.அந்த அருள் வழியில் என்றும் இணைந்து வாழலாம்.
2.இப்படிப்பட்ட கூட்டமைப்பை அதிகமாகச் சேர்த்தால் வலு கொண்ட உணர்வாகச் செல்கின்றது.
 
இராமாயணத்தில் வாலி என்ற நிலை வரும் பொழுது விஷம் கலந்த உணர்வுகள் எதனையுமே தாக்கிடும் நிலையாக அந்த ஆற்றல் பெற்றது. அது வாயுபுத்திரன் தான். உணர்வின் அழுத்தங்கள் அதிகமாகி விஷத்தின் தன்மை பாய்ச்சுகின்றது.
 
வாலி எவரைக் கண்டாலும் அவனுடைய வலுவையும் சேர்த்து சம வலிமை பெறுகின்றான். ஒரு நோயாளியின் உடலிலிருந்து வெளிப்படும் உணர்வுகளைச் சூரியனுடைய காந்த சக்தி கவர்கின்றது. நமது கண்கள் உற்றுப் பார்க்கின்றது.
 
அவனின்று வெளிப்படும் உணர்வினை நல்ல குணங்களை அடக்கிடும் வாலியாக அது வருகின்றது. அதை நுகர்ந்தால் நல்ல குணங்கள் செயலிழந்து விடுகின்றது. நம்முடைய வலிமையும் இழக்கச் செய்கின்றது.
 
1.அதைப்போல சுக்ரீவன் என்று வரப்படும் பொழுது அது அவனுடைய சகோதர இனம் தான்.
2.சூரியனின் நிலைகள் கொண்டு அதீதமான வெப்பத்தையும் மற்ற உணர்வுகளையும் விஷத்தின் தன்மை கலந்து
3.வாயு என்ற நிலையில் அதிகரிக்கப்படும் பொழுது சூறாவளி போன்று தீமைகளை அடித்துச் செல்லுகின்றது.
 
ஆஞ்சநேயர் என்பது வாயுபுத்திரன் தான்.
 
நாம் எண்ணும் எந்த உணர்வின் தன்மையோ நம் உடலுக்குள் அந்த உணர்வுகள் ஊடுருவி உணர்ச்சிகளைத் தூண்டி நாம் சொல்லைக் கேட்போர் உடலுக்குள் இந்த உணர்வுகள் தாவிச் சென்று அந்த உடலான கோட்டைக்குள் ஊடுருவி உணர்வின் உணர்ச்சிகளை உந்தி மெய் உணர்வாக அறியச் செய்கின்றது.
 
இதைப் போல தான் உணர்வின் தன்மை ஒன்றிலே மோதும் போது எண்ணங்கள் எவ்வாறு உருவாகின்றது…? அந்த உணர்ச்சியின் தன்மை எவ்வாறு இயக்குகின்றது…? வெளிப்படுத்தும் உணவுகள் சூரியனுடைய காந்த சக்தி கவரப்படும்போது சீதா லட்சுமி ஆக மாறுகின்றது.
 
வேதனைப்படுத்தும் உணர்வை நுகர்ந்தால் வாலி என்று வருகின்றது. கோபப்படும் உணவை நுகர்ந்து கொண்டால் காளி என்றும் இதைப் போன்று பல பல உணர்வுகள் தீமைகளை அடக்கும் தன்மை வருகின்றது.
 
1.ஓர் விஷத்தின் தன்மை கொண்ட நிலையில் மற்ற விஷத்தினை இதற்குள் கலக்கப்படும் பொழுது அடக்கும் தன்மையாக வருகின்றது.
2.தாவர இனங்களிலே பல விதமான விஷங்கள் உண்டு… அதிலே ஒன்றுடன் ஒன்று இணைக்கப்படும் பொழுது
3.இதற்கும் அதற்கும் ஒத்துக்கொள்ளாது… அந்த விஷம் அதை ஒடுக்குகின்றது.
 
இதைப் போன்று நமக்குள் சந்தர்ப்பத்தால் நுகர்ந்தது விஷ அணுக்களை உருவாக்கும் தன்மை கொண்டால் அதை எப்படி மாற்ற வேண்டும்…?
 
மனிதனாக இருக்கும் நாம் நல்ல மருந்துடன் விஷத்தினைக் கலக்கின்றோம். அதை உட்கொள்ளும் பொழுது வேகமாக உடலுக்குள் பரவுகின்றது. உடல் முழுவதும் விஷ வாயுவாக உருவாக்குகின்றது. இரத்த நாளங்களில் கலக்கப்படும் பொழுது அந்த இரத்தத்திலிருந்து தான் விஷ அணுக்களும் உணவாக எடுத்துக் கொள்கின்றது.
1.நல்ல மருந்துடன் விஷத்தைக் கலந்து உள்ளே அனுப்பப்படும் பொழுது நல்ல மருந்திற்கு வீரிய சக்தியாக அமைந்து
2.நம் உடலில் இருக்கும் விஷமான அணுக்களை மடியச் செய்கின்றது.
 
விஷமான உணர்வைக் கொடுத்து நல்ல மருந்தினைக் கொடுத்து அடக்கினாலும் நாம் அடுத்து அதை நிறுத்தாவிட்டால்
1.நல்ல மருந்து மற்ற விஷத்தை ஒடுக்கிய இந்த உணர்வுகள்
2.நம் உடலில் விஷத்தை உருவாக்கும் வேறொரு அணுக்களாக உருவாக்கி
3.மற்ற அணுக்களைக் கொன்று குவிக்கும் நிலை வருகின்றது.
 
அதனால் தான் டாக்டர்கள் குறித்த அளவு கொண்டு இந்த மருந்தினை உட்கொள்ளும்படி சொல்வார்கள். அந்த அளவுகோல் மீறி அந்த மாத்திரையை உட்கொண்டால் அதுவே நமக்குள் கடும் நோயாக மாறி விடுகின்றது.
 
சித்த வைத்தியர்களை எடுத்துக் கொண்டாலும் விஷத்தின் தன்மை கொண்டு மாற்றி அமைக்கும் தன்மை கொண்டு வருவார்கள். ஆனால் அவர் சொன்ன அளவுகோலுக்கு மீறி அதை உட்கொண்டால் விஷத்தின் தன்மை உடலில் பரவி நல்ல அணுக்களைக் கொல்லும் நிலைகள் வந்து விடுகின்றது.
 
நல்ல அணுக்களைக் கொல்லும் நிலைகளுக்கும் மற்ற உயிரைக் கொல்வது போன்று இதைப் போன்று இயற்கையின் உண்மை நிலைகளை அன்று அகஸ்தியனால் கண்டுணரப்பட்டது தான்.
 
மற்ற மனிதனின் உணர்வுகள் தன்மை கொண்டு எவ்வாறு வாழ்கின்றனர்…? எதன் எதன் உணர்வின் இயக்கங்கள் மாறுகின்றது…? நம் உயிர் எவ்வாறு செயலாக்குகின்றது…? என்ற நிலையை உண்மையினை நீ உணர்ந்து கொள் என்றார் குருநாதர்.
 
ஒருவன் ஏசுகிறான் என்று உற்றுப் பார்த்தால் அந்த உணர்வின் தன்மை சிவலோகம் என்ற நிலையை அந்த உயிரின் இயக்கமாக உணர்ச்சிகள் உடலுக்குள் தூண்டுகின்றது.
1.சுழற்சியின் உணர்வை ஊட்டுகின்றது உணர்வின் தன்மையாக இயக்குகின்றது.
2.இரத்தத்துடன் கலந்து கருவுறும் தன்மை வருகின்றது. இந்திரலோகமாக இந்திரீகமாக மாறுகின்றது.
 
கோழி முட்டை எப்படி உருவாகின்றதோ நம் இரத்த நாளங்களில் அது கருவுறும் அணுவாக உருப்பெறும் தன்மை பெறுகின்றது. கரு என்ற உணர்வுகள் உருவாக்கி விட்டால் அதனின் காலக்கெடு வரப்படும் பொழுது அந்தக் கருமுட்டை வெடிக்கின்றது. எக்குணத்தின் தன்மை பெற்றதோ அந்த அணுவின் தன்மையாக வருகின்றது.
 
இரத்த நாளங்கள் எங்கே சுழல்கின்றதோ எந்த உறுப்பில் அது வெடிக்கின்றதோ அந்த உறுப்புகள் நஞ்சாகி விஷத்தின் தன்மை பாய்ச்சி நல்ல அணுக்களைக் கொல்லும்… அல்லது செயலிழக்கச் செய்கின்றது.
 
நல்ல உறுப்புகளை உருவாக்கிய அணுக்கள் மடிந்தால் அல்லது அஞ்சி நடுங்கினால் உடலுக்குள் ஒரு விதமான வேதனை வருகின்றது. கல்லீரலோ மண்ணீரலோ மற்ற சுரப்பிகள் நரம்பு மண்டலங்களிலோ மாற்றப்பட்டால் கடும் வேதனைகள் வருகின்றது.
 
ஆனால் நாம் தவறு செய்யவில்லை.
 
இதைப் போன்ற உணர்வுகள் எவ்வாறு மாற்றம் அடைகின்றது என்பதனை குரு உணர்த்துகின்றார். அகஸ்தியரால் கண்டுணரப்பட்ட உணர்வுகள் நஞ்சினை வென்றிடும் உணர்வு கொண்டு நஞ்சின் இயக்கத்தை உணர்ந்தவன் அவன்
1.நஞ்சினை அடக்கிடும் உணர்வு பெற்றவன்.
2.விண்ணை நோக்கி உற்றுப் பார்த்து மின் கதிர்களை நுகர்கின்றான் அதை அடக்குகின்றான்.
3.மின்னட்டாம் பூச்சி போன்று தன் உடலுக்குள் இருக்கும் அணுக்களை ஒளிக்கதிராக மாற்றும் அணுக்களாக மாற்றுகின்றான்.
4.துருவப் பகுதியில் வரும் ஆற்றலை நுகர்ந்து துருவனாகின்றான்.
5.கடும் விஷங்களையும் அடக்கிடும் ஆற்றல் சந்தர்ப்பத்தால் இந்த உணர்வுகள் விளைகின்றது.
 
அந்த ஆற்றல்களை நாம் அனைவரும் பெறுதல் வேண்டும். அதற்கே இதைப் பதிவு செய்கின்றேன்.