ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

April 1, 2014

நமக்குத் தீங்கு செய்கின்றவர்களை நாம் எப்படி எண்ண வேண்டும்?

ஒருவர் தீங்கு செய்கிறார் என்று எண்ணி அதே உணர்வினை நுகர்ந்தால், நமக்குள் தீங்கு விளைவிக்கும் உணர்வுகள் வரும். ஆகவே,
நாம் தீமைகளைத்தான் செய்ய முடியுமே தவிர, 
நன்மை செய்ய முடியுமா?என்று நாம் சிந்தித்தல் வேண்டும்.

ஒருவர் வேதனைப்படுகின்றார் என்று நுகரும் பொழுது, அந்த வேதனை நமக்குள் ஆகின்றது. இதைப் போன்று, ஒருவர் தீங்கு செய்கின்றார் என்றால் தீங்கின் நிலையே நமக்குள் விளைகின்றது.

எனவே, தீங்கு செய்கின்றவர்களை எண்ணும் பொழுது
அவர்கள் அதிலிருந்து மீள வேண்டும் என்று,
நான் கொடுத்த அருள் சக்தியின் துணை கொண்டு
அவரைத் தீமையிலிருந்து மீட்ட வேண்டும்
என்று ஒவ்வொரு நொடியிலும் அனுபவ ஞானத்தை ஊட்டினார் குருநாதர்.

தியான வழி அன்பர்கள் அனைவருக்கும், யாம் குருநாதர் காண்பித்த அருள் வழியில் தெளிவுபடுத்துகின்றோம்.

ஒருவர் நமக்குத் தீமைகள் செய்கிறார் என எண்ணும் பொழுது, அவர் தீமைகளிலிருந்து விடுபட வேண்டும் ஈஸ்வரா என்று எண்ணி உங்களுடைய உயிரான ஈஸ்வரனிடம் வேண்டுங்கள். 

உங்கள் உடல் முழுவதும் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி படரவேண்டும் என்று ஏங்கி தியானியுங்கள். இந்த உணர்வின் தன்மை உங்களுடைய உடலையும் உணர்வுகளையும் தூய்மையாக்கிவிடும் 

அதே சமயத்தில்
அவர்களை பாதுகாக்கும் உணர்வுடன் செயல்படுத்துங்கள்.
அப்பொழுது நமக்கும் பாதுகாப்பாகின்றது.