ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

July 1, 2025

மரண பயம் எதிலே வருகின்றது…?

மரண பயம் எதிலே வருகின்றது…?


சகோதர தத்துவம் நமக்குள் எதிலே இருக்க வேண்டும்…?
1.நீங்கள் நலமாக இருக்க வேண்டும் என்று நான் எண்ணினால் எனக்குள் அந்தச் சகோதர தத்துவம் வளர்கின்றது.
2.உங்கள் குடும்பம் வளம் பெற வேண்டும் என்று எண்ணினால் எனக்குள் இருக்கும்
3.நல்ல குணமும் எதிர் குணங்களும் நலம் பெறுகின்றது.
4.ஏனென்றால் எனக்குள் எல்லாமே அந்த அணுக்கள் ஒரு குடும்பமாகத் தான் வாழ்கின்றது
5.”நீங்கள்நான்…” எல்லோரும் சேர்த்து இந்த உடலில் ஒரு குடும்பமாக வாழ்கின்றது.
6.ஒரு உலகமாக வாழும்ஒரு ஊராக வளர்கின்றது.
 
இதை நாம் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டும். நாம் யார் பிரிந்து இருக்கின்றோம்…? யாரும் யாரை விட்டுப் பிரிந்து இல்லை. ஒரு வேளை சாபமிட்டால் அங்கே இருவருடைய உணர்வும் ஒன்றாகி விடுகின்றது.
 
நட்பாகின்றது அல்லது பகைமையாகி விடுகின்றது. பகைமை உணர்வுகள் நமக்குள் வந்து விட்டால் பகைமையைப் பெருக்கத் தொடங்கி விடுகின்றது. நட்பின் தன்மை வரப்படும் பொழுது அந்த நட்பே நமக்குள் பெருகுகின்றது.
 
பகைமை உணர்வுகள் நமக்குள் வளரும் பொழுது தான் ஐயோ மேல் வலிக்கின்றது தலை வலிக்கின்றது உடல் வலிக்கின்றது முதுகு வலிக்கின்றது இடுப்பு வலிக்கின்றது என்று வருகின்றது.
 
இந்த உணர்வுகள் வர வர
1.நாம் கோபப்பட்டால் தான் அதற்குச் சாப்பாடு கிடைக்கும்.
2.அல்லது என்னை இப்படிப் பேசினார்களே என்று வேதனைப்பட்டால் அந்த வேதனையான அணுக்களுக்குச் சாப்பாடு கிடைக்கின்றது.
 
நீங்கள் சும்மா இருந்து பாருங்கள் இனம் புரியாதபடி வேதனைகள் வரும் அறியாத கோபம் வரும் நமக்குள் பகைவர்களை உருவாக்கிக் கொள்ளலாம்.
 
அந்த நேரத்திலே பகைமை உருவாக்கப்படும் பொழுது புறத்திலேயும் பகைவர்களை உருவாக்கி விடுகிறது. அப்பொழுது மரண பயம் என்ற நிலை வருகின்றது.
 
மரண பயம் எதிலே வருகின்றது…? மனிதனை உருவாக்கிய நல்ல அணுக்களுக்கு
1.நமக்கு ஏதும் கிடைக்காமல் போய்விடுமோ…?
2.நம் ஆசை நிறைவேறாமல் போய்விடுமா…?
3.அதல பாதாளத்திற்குப் போய் விடுவோமா…?
4.நம் குடும்பம் சிரமப்பட்டுவிடுமோ…? என்றெல்லாம் எண்ணும் பொழுது மரண பயம் வந்து விடுகின்றது.
 
மரண பயம் வந்து விட்டால் மனிதனைக் காக்கும் நிலை இழக்கப்படுகின்றது. பயத்தால் துடிப்பு நிலை அதிகரிக்கிறது…! எதை எண்ணுகின்றோமோ அதனின் வளர்ச்சி இங்கே வருகின்றது.
 
ஒவ்வொரு குணங்களுக்குள்ளும் மரண பயம் பட்டால் அது மடிந்து விடுகின்றதுசெயலாக்கங்களை இழந்து விடுகின்றது.
 
ஒருவரிடம் விஷயத்தைச் சொல்லி விடுங்கள். உடனே அந்த நல்ல குணங்களுக்கு நாம் சொன்னது தப்பாகி விட்டதோ…! என்று படபட என்று இங்கே துடிப்பாகும். நல்ல குணங்கள் மடியும் தருணம் வந்து விடுகின்றது.
 
என்ன சொல்வாரோ…! ஏது சொல்வாரோ…? இந்த உணர்வுகள் வரப்படும் பொழுது இந்த உணர்வுகள் அதிகரித்து விட்டால் மடிந்து விடுகின்றது. இந்த உணர்வின் தன்மை வரப்படும் பொழுது நம் நல்ல குணங்களைக் காண முடியுமா…?
1.நல்ல குணங்கள் மடிந்து மரண பயத்தை ஊட்டுகின்றது.
2.மனிதனையே மரணமடையச் செய்யும் நிலை உருவாக்கி விடுகின்றது.
3.இதைப் போன்ற நிலைகளிலிருந்து நாம் விடுபட வேண்டும்.
4.மகரிஷிகளின் அருளை நாம் பெறுதல் வேண்டும்
5.மலரைப் போன்ற மணம் பெற வேண்டும் வாழ்க்கையில் மகிழ்ந்து வாழும் சக்தி பெற வேண்டும்.
 
எமது அருளாசிகள்.

”அருள் ஞானக் குழந்தை எனக்குள் உருவாகின்றது…!” என்று நாம் எண்ணுதல் வேண்டும்

”அருள் ஞானக் குழந்தை எனக்குள் உருவாகின்றது…!” என்று நாம் எண்ணுதல் வேண்டும்


1.இந்த வாழ்க்கையில் நாம் தெரிந்து கொள்ள வேண்டியது எது…? தெளிய வேண்டியது எது..?
2.நாம் அறிய வேண்டியது என்ன…? நாம் சேர்க்க வேண்டியது என்ன…?
 
இன்றைய செயல் நாளைய சரீரமாக நாம் அனைவரும் ஒளிச் சரீரம் பெற வேண்டும். முந்தைய செயல் இன்றைய மனித சரீரம் இன்றைய செயல் நாளைய சரீரம்.
 
ஆகபிறவி இல்லா நிலை அடைதல் வேண்டும்…. ஒளியின் சரீரமாக நாம் மாற்றி அமைக்க வேண்டும். எல்லோருக்கும் அந்த அருள் ஞானத்தைப் பெறச் செய்ய வேண்டும்.
 
1.இன்று உடலில் இருக்கக்கூடிய நோயை எல்லாம் மறந்து விடுங்கள்.
2.எப்படி இருந்தாலும் இந்த உடல் இருக்கப் போவதில்லை என்று உறுதியாகத் தெரிகின்றது.
3.இந்த உடலுக்காக ஏன் கட்டி அழுக வேண்டும்…?
4.இந்த உடலை விட்டு விடலாம் அடுத்து ஒளியின் உடலாக நாம் பெற வேண்டும்.
 
கர்ப்பமுற்றிருக்கும் தாய் தன் குழந்தைக்காக எத்தனையோ வேதனைப்படுகின்றது. ஆனால் குழந்தை பிறக்க வேண்டும் என்று மகிழ்ச்சியுடன் இருக்கின்றது.
 
அருள் ஒளியின் உணர்வுகளைத் தனக்குள் இணைக்கப்படும் பொழுது நாம் எப்படிச் செயல்பட வேண்டும்…?
 
தன் உடலில் வரக்கூடிய சுமைகளை கர்ப்பிணி எவ்வாறு எண்ணுகின்றதோ அதைப் போன்று
1.அருள் ஒளியை நான் வளர்க்கின்றேன்
2.அருள் ஞானத்தைப் பெறப் போகின்றேன்.
3.அருள் வழியினை நான் பின்பற்றுகின்றேன் என்ற இந்த உணர்வில் மகிழ்ச்சி பெற வேண்டும்.
 
குழந்தையின் மேல் உள்ள ஆசையில் கர்ப்பிணித்தாய் என்ன செய்கின்றது…?
 
தன் கணவனையும் பார்க்க வேண்டும் குடும்பத்தையும் பார்க்க வேண்டும் தன்னையும் பார்க்க வேண்டும் வீட்டு வேலையும் செய்ய வேண்டும்…! இத்தனை வேலைகளையும் அது செய்து கொண்டிருக்கின்றது. ஆக மொத்தம் தன் இனமாகக் குழந்தையை வளர்க்க வேண்டும் என்று எண்ணுகின்றது.
 
அருள் ஞானிகள் என்ன செய்கின்றார்கள்…?
 
இருளை அகற்றிடும் உணர்வின் தன்மையை ஒளியாகப் பெற்று எல்லோரும் மகிழ்ந்து வாழ வேண்டும் என்று எண்ணுகின்றார்கள். அதை நாமும் நமக்குள் உருவாக்க வேண்டும்.
 
கர்ப்பிணி தனக்கு வரக்கூடிய தீமைகளை அது எப்படி எண்ணுவதில்லையோ குழந்தை மீது பற்று கொண்டு தன் குழந்தையை எண்ணிக் கொண்டிருக்கின்றதோ எத்தனையோ அவஸ்தைகள் வந்தாலும் அதை எண்ணாமல் குழந்தையை வளர்க்கும் உணர்வையே தனக்குள் பெருக்கிக் கொள்கின்றது.
 
அந்தக் கர்ப்பிணியைப் போன்று
1.நாம் அருள் ஒளியின் உணர்வுகளை நமக்குள் சுமந்து
2.நமக்குள் வரக்கூடிய நஞ்சினை வளர்த்திடாது
3.நான் அருள் வழியில் வளர்கின்றேன்
4.அருள் ஒளி எனக்குள் உருவாகின்றது
5.அருள் ஞான அணுக்கள் எனக்குள் உருவாகின்றது
6.”அருள் ஞானக் குழந்தை எனக்குள் உருவாகின்றது…!” என்று இப்படி நாம் எண்ணுதல் வேண்டும்.
 
ஏனென்றால் இது போன்று உருவானது தான் அந்தத் துருவ நட்சத்திரம். ரிஷியின் மகன் நாரதன்…! அது ஒளியின் கருவாக ஒளியின் சரீரமாக உருவாக்கும் நிலை பெற்றது.
 
மனிதன் என்ற நிலை அடைந்த பின் இருளை அகற்றும் உணர்வின் தன்மை நாரதனாக அமைகின்றது ஆகவே அந்த அருள் ஒளியை நமக்குள் கூட்டினால் தனக்குள் உண்மைகளை உணர்த்தும் அறிவின் தெளிவாக நமக்குள் ஊட்டும்.
 
இருளை அகற்றியவன் அவன் அந்த அருள் ஒளியை நமக்குள் கூட்டப்படும் பொழுது இருள் சூழ்ந்த நிலைகளை மாற்றி விட்டு உயிருடன் ஒன்றிய நிலைகளாக நம் எண்ணங்களுக்குள் வலு சேர்த்து தீமைகளிலிருந்து விடுபடச் செய்யும். ஆகவே அந்த அருள் ஒளியைக் கூட்டும் நிலையை உருவாக்குங்கள்.
 
சொல்வது அர்த்தமாகிறதல்லவா. இதை ஒவ்வொருவரும் நீங்கள் பெற வேண்டும் என்று பிரார்த்தித்துக் கொள்கின்றேன்.
1.அருள் ஞானச் சுடராக அருள் ஒளி பெற்று அனைவரையும் அதைப் பெறச் செய்யக்கூடிய சக்தியாக நீங்கள் வளர வேண்டும்.
2.அருள் மகரிஷிகளின் அருள் வட்டத்திலே நீங்கள் என்றும் இணைந்து வாழ வேண்டும்.
3.அருள் ஞானச் செல்வம் பெற்று அருள் வழியில் வாழ்க்கை நடந்து
4.அருள் சொல்களைச் சொல்லி அந்தத் தெய்வீகப் பண்புகள் உங்களுக்குள் வளர வேண்டும் என்று பிரார்த்தித்து இதை நிறைவு செய்கின்றேன்.