ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

September 18, 2016

தீமைகளை நம்முடன் அடங்கி இயக்கச் செய்யும் “வாழ்க்கையே தியானம்”

துருவ தியானத்தில் கொடுத்த இந்தச் சக்தியின் துணை கொண்டு உங்கள் வாழ்க்கையில் எப்பொழுதுமே அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி நாங்கள் பெறவேண்டும் என்று எங்கினால் அதை நீங்கள் பெறும் தகுதியைப் பெறுகின்றீர்கள்.

கையில் அழுக்குப்பட்டால் நந்நீரை விட்டுக் கையைத் தூய்மைப்படுத்திக் கொள்கின்றோம்.

இதைப் போல நம் வாழ்க்கையில் ஒவ்வொரு நொடியிலேயும் பல தீமைகளைக் காணும் பொழுதும், கேட்கும் பொழுதும் இது நமக்குள் ஊடுருவி நம்மை அறியச் செய்தாலும், அந்த உணர்வின் வளர்ச்சிகளை அதை நமக்குள் வளராது தடைப்படுத்தி “நம்முடன் அடங்கி இயக்கச் செய்ய வேண்டும்”.

அவ்வாறு செய்ய வேண்டும் என்றால் அருள் மகரிஷிகளின் உணர்வை நாம் எடுத்துப் பழக வேண்டும். கடுமையான தீமைகளைப் பார்த்தாலும் ஆத்ம சுத்தி செய்து துருவ நட்சத்திரத்தின் உணர்வினை இணைத்து இந்த வலுவைக் கூட்டிட வேண்டும்.

இன்று நாம் குழம்பு வைக்கும் பொழுது காரம், புளி, உப்பு என்று கலந்து தான் வைக்கின்றோம்.

காரம், புளி, உப்பு ஒவ்வொன்றும் தனித்தன்மை கொண்டு அதனுடைய வீரியச் சத்தினை உருவாக்கிக் கொண்டிருக்கும் நிலையில் அதனை நாம் “பக்குவப்படுத்திச் சம அளவு கொண்டு வரும் பொழுது” சுவையாக வருகின்றது.

இதைப் போலத்தான் உலகில் இன்று கடுமையான நிலைகளும் வேதனைப்படும் நிலைகளும் துயரப்படுத்தும் செய்திகளும் நம்மை அறியாமலே பல நிலைகளில் வந்து கொண்டேயுள்ளது.

ஆக, நம் வாழும் காலங்களில் இத்தகையை “எதிர்மறையான உணர்வுகள்” வரும் பொழுது வெறுப்பின் தன்மை அடைந்து பிரித்திடும் தன்மையும் அந்த வெறுப்பின் உணர்வுகள் நமக்குள் வளர்ந்துவிடுகின்றது.

அப்பொழுது நம் உடலுக்குள் இருக்கும் நல்ல அணுக்களுக்கும் நாம் நுகர்ந்த இந்த வெறுப்பி  உணர்வுகளுக்கும் இரண்டும் போராகித் தீமையை விளைவிக்கும் அணுக்களாக உருப்பெற்று நம் நல்ல உணர்வுகளை அழித்துவிடுகின்றது.

ஆகவே, இதைப் போன்ற நிலைகளிலில்லாது அவைகளை நம்முடன் இணங்கி இயக்கிடும் நிலையைச் செயல்படுத்திட வேண்டும். அவ்வாறு செயல்படுத்த வேண்டும் என்றால் என்ன செய்ய வேண்டும்?

துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளை உங்களுக்குள் ஆழமாகப் பதிவு செய்ததை நீங்கள் நினைவுக்குக் கொண்டு வர வேண்டும்.

எப்பொழுதெல்லாம் தீமைகளைச் சந்திக்கும் சந்தர்ப்பம் வருகின்றதோ உடனடியாக துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளை நீங்கள் நுகர்ந்து இந்த உணர்வினை இணைத்துவிட்டால் இந்த எண்ணம் தான் “கல்யாணராமன்” என்பது.

நாம் “எத்தகையை தீமைகளையும் பகைமையாகக் கருதாது” அது தனக்குள் அடங்கி தன்னுடன் இணைந்து எப்படி ஒரு குழம்புக்குள் புளிப்பும் காரமும் இணைந்து சுவையாக உள்ளதோ இதைப் போல மாற்றிக் கொள்ள முடியும்.

நாம் வாழ்க்கையில் காணும் தீமைகள் யாவையாகினும் கடும் நோயாக இருந்தாலும் ஆக, நம் பார்த்துணர்ந்து அதிலிருந்து நாம் விலகிச் செல்ல வேண்டும் என்று நுகர்ந்த உணர்வின் அணுக்கள் நமக்குள் விளைந்திடாது அது வலுப் பெறாது துருவ நட்சத்திரத்தின் உணர்வை இணைத்து இணைத்து ஒவ்வொரு நொடிகளிலேயும் நாம் இணைத்தே வாழ வேண்டும்.

இது தான் “வாழ்க்கையே தியானம்” என்பது.