
அதிகாலையில் ஒரு பத்து நிமிடமாவது துருவ நட்சத்திரத்தின் சக்தியை எடுக்கப் பழகிக் கொள்ளுங்கள்
விஷத்தன்மைகள் பூமியில் அதிகமாகப் பரவிக் கொண்டுள்ளது. சாயப்பட்டறைகள் மூலமாகக் கெமிக்கல்கள் பரவிக் கொண்டுள்ளது. அதே போல கரும்பு ஆலைகளிலும் கரும்புச் சாற்றில் உள்ள அழுக்குகளை நீக்க அதிலும் கெமிக்கலைப் போடுகின்றார்கள். அந்தக் கெமிக்கலை நம் துணியில் போட்டால் துணி வெந்து ஓட்டையாகிவிடும். ஆனால் அந்த கெமிக்கலை உபயோகித்து அதிலே உருவான சர்க்கரையைத் தான் நாம் உட்கொள்கிறோம்.
1.பார்ப்பதற்கு அழகாக இருக்கின்றது... ருசியாக உள்ளது. ஆனால் விஷத்தன்மைகள் கலந்து வருகின்றது
2.இப்படி விஞ்ஞான அறிவு கொண்டு பொருள்களை தெளிவாக்கினாலும் இந்த நிலை ஆகிறது.
குடி தண்ணீரிலும் இதைச் செயல்படுத்தினார்கள். நாம் சமையலுக்கு உபயோகப்படுத்தும் எண்ணெய்களையும் தூய்மைப்படுத்த இது போன்றே செயல்படுத்துகின்றார்கள். எண்ணையில் இருக்கும் கொழுப்புச்சத்தை எடுக்கின்றோம் என்று சொல்கின்றார்கள்.
அதை எடுக்கின்றது... ஆனால் அந்த எண்ணெயை நாம் உபயோகப்படுத்தும் பொழுது இந்தக் கெமிக்கல் நம் உடலுக்குள் இணைந்து விடுகின்றது... அணுக்களிலும் சேர்கின்றது.
இதிலிருந்து எல்லாம் நாம் தப்ப வேண்டும். அந்த மகரிஷியின் அருள் சக்திகளை ஒவ்வொரு நிமிடமும் நமக்குள் சேர்த்து மேலே சொன்ன தீமையான விளைவுகள் வராதபடி தடுத்துப் பழக வேண்டும்.
விஞ்ஞான அறிவால் பல வகைகளிலும் நச்சுத்தன்மைகளைப் பரவ விட்டுள்ளார்கள். அதனால் அஞஞான வாழ்க்கையாகச் சிந்தித்து செயல்படும் திறனை பெரும்பகுதியானவர் இழந்து விட்டோம்.
1.அதனால் திடீரென்று உணர்ச்சிவசப்படக் கூடிய நிலைகளும் தவறு செய்யக்கூடிய உணர்ச்சிகளைத் தூண்டுவதும் சிந்தனை இல்லாது செயல்படுத்தும் நிலைகளும் வருகின்றது.
2.இதைப்போல் வரும் பொழுது தான் போக்குவரத்திலும் விபரீத விபத்துகள் ஏற்படுகின்றது.
3.மனிதனுக்கு மனிதன் என்ற நிலை இல்லாதபடி பல விபரீத செயல்களும் இரக்கம் ஈகையற்ற நிலைகளும்
4.ஒருவரை ஒருவர் தாக்கிக் கொன்றிடும் நிலைகள் வந்து விடுகின்றது.
காரணம் ஒரு பொருளிலே விஷம் பட்டு விடடால் அதை நாம் உட்கொள்ளும் பொழுது நம்முடைய சிந்தனைகள் இழக்கப்படுகின்றது. இது எல்லோருக்கும் தெரிந்தது தான்.
அதே போலத்தான் நம்மை அறியாமலே விஷத்தன்மைகள் சிறுகச் சிறுக உடலில் உள்ள அணுக்களில் சேர்க்கப்படும் பொழுது தவறு செய்யும் இயல்புகளாக மாறி விடுகின்றது. கடும் நோய்களும் வருகிறது.
இதிலிருந்து நாம் மீள வேண்டும்.
1.காலையில் கண் விழித்த உடனே துருவ தியானத்தில் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை வலு சேர்த்துக் கொண்டு
2.அந்தச் சக்தி கணவன் தன் மனைவிக்குக் கிடைக்க வேண்டும் என்றும் மனைவி தன் கணவனுக்குக் கிடைக்க வேண்டும் என்றும் குழந்தைகளுக்குக் கிடைக்க வேண்டும் என்றும்
3.குடும்பத்தில் உள்ள அனைவரும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்று குடும்பத்தில் உள்ள அந்த குழந்தைகளும்
4.இதைப் போன்று எண்ணக் கூடிய ஒரு பழக்கத்திற்கு நாம் கொண்டு வர வேண்டும்.
அந்தக் குழந்தைகளுக்கு ஒரு இரண்டு நாள் மூன்று நாள் சொல்லிப் பதிவாக்கி அவர்களையும் பழக்கிக் கொண்டு வந்தால் சீராகும். அவர்களுக்கும் நல்ல படிப்பு வரும் ஞானங்கள் வரும் என்று சொல்லிப் பழக்கப்படுத்திக் கொண்டு வர வேண்டும்.
அதிகாலை ஒரு ஐந்து ஐந்தரைக்குள் ஒரு பத்து நிமிடமாவது துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை எடுத்து
1.நம் உடலை உருவாக்கிய எல்லா அணுகளுக்கும் வலு சேர்த்துப் பழக வேண்டும்.
2.அந்தச் சக்திகளை நாம் அவசியம் பெருக்கிப் பழக வேண்டும்.