ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

March 17, 2022

பிரம்ம முகூர்த்தம்

 

2000 சூரியக் குடும்பங்கள் ஒன்றுடன் ஒன்று இணைந்து எப்படி வாழ்கிறதோ ஒவ்வொரு உடலும் ஒரு பிரபஞ்சத்தைப் போன்றது தான்.

அகண்ட அண்டத்தில் ஒவ்வொரு பிரபஞ்சத்திலும் ஒவ்வொரு விதமான உணர்வுகள் உண்டு. ஒவ்வொரு பிரபஞ்சத்திலும் நம் பூமியைப் போன்று உயிரினங்கள் வாழக்கூடிய பூமி உண்டு.

அதில் வடிகட்டிய உணர்வு கொண்டு தாவர இனங்களும் உண்டு... உயிரணுக்களின் வளர்ச்சியும் உண்டு. அதனதன் உணர்வுக்கொப்பத்தான் ஒவ்வொரு பிரபஞ்சத்திலும் உயிரனங்களின் வளர்ச்சிகள் உண்டு. மற்ற பிரபஞ்சத்தில்
1.நம் பூமியைக் காட்டிலும் வளர்ச்சி பெற்ற மனிதர்களும் உண்டு.
2.நம்மைக் காட்டிலும் கூழையான மனிதர்களும் உண்டு.
3.கூழையான நிலையில் சிந்தனை வலுவானவர்களும் உண்டு.

இப்படி இந்த 2000 சூரியக் குடும்பத்தின் ஈர்ப்பு வட்டத்தில் நாம் வாழ்கின்றோம்.

முதலில் ஒரு சூரியன் உருவாகி 27 நட்சத்திரங்கள் உருவாகி அதன் வழிகளிலே வளர்ச்சியாகிப் பெரிய அகண்ட அண்டமானது. அந்த அண்டத்திற்குள் இது ஒரு பிரபஞ்சம்.

இப்படி 2000 சூரியக் குடும்பங்கள் உருவானது ஒரு அகண்ட அண்டம் என்றால் இதைப் போன்று எத்தனையோ அண்டங்கள் உண்டு.
1.ஒன்றுடன் ஒன்று தொடர்பு கொண்டு தான் நாம் வாழ்கின்றோமே தவிர
2.ஒன்றுடன் ஒன்று தொடர்பு கொள்ளாது வாழ முடியாது... வாழவில்லை.

அதைப் போன்று தான் மனிதனுக்கு மனிதன் இன்று தொடர்பில்லாது யாரும் இருக்க முடியாது. யாரைச் சந்தித்தாலும் நம் சந்தர்ப்பம் அவர் படும் வேதனைகளை நுகர்ந்தால் நமக்கும் வேதனை வருகின்றது... அந்தச் சந்தர்ப்பத்தின் மூலம்...!

ஆனால் அந்தச் சந்தர்ப்பத்தைத் துருவ நட்சத்திரத்தின் பேரருளை நமக்குள் சேர்ப்பிக்கும் நல்ல சந்தர்ப்பமாக உருவாக்க வேண்டும். தீமையை நீக்கும் இந்தச் சந்தர்ப்பத்தை நாம் உருவாக்கினால் நமக்குள் தீமை என்ற உணர்வு வராதபடி தடுக்கலாம்.

அதற்குத்தான் உங்களுக்கு இப்போது இந்தப் பயிற்சி.

1.”பிரம்ம முகூர்த்தம்...” என்று சொல்வார்கள்
2.உயிர் ஒவ்வொன்றையும் பிரம்மம் ஆக்குகின்றது...
3.இந்த உயிரைப் போன்றே உணர்வை ஒளியாகப் பிரம்மமாக்கும் நேரம் இது.

ஆகவே இருளை அகற்றி ஒளி பெறும் அந்த நேரம்தான பிரம்ம முகூர்த்தம் என்பது.

இருளை அகற்றி அறிவென்ற தெளிவாகத் தெரியும் இந்த நேரத்தில் உங்கள் கவனம் எல்லாம் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பால் ஈர்க்கப்பட வேண்டும்,

1.உங்கள் உறுப்புகளை இயக்கிக் கொண்டிருக்கும் ஒவ்வொரு அணுக்களுக்கும்
2.துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை பெறச் செய்யும் அந்தச் சந்தர்ப்பத்தை ஏற்படுத்துவதுதான் துருவ தியானம்.

விஞ்ஞானத்தால் காண முடியாததை மெய் ஞானத்தால் அறிய முடியும் - ஈஸ்வரபட்டர்

 

விஞ்ஞானம் கொண்டு இன்று பல ஏவுகணையின் மூலமாகப் பல மண்டலங்களின் உண்மை நிலையறியத் தன் சக்தியை விஞ்ஞானத்தில் செலுத்தி அறியப் பார்க்கின்றான் இன்றைய மனிதன்.

1.ஒவ்வொரு மண்டலத்திலும் மாறுபட்டதன் நிலையை அறியும் ஆவலில்
2.தன் எண்ண சக்தியை விஞ்ஞானத்தில் செலுத்தி அறிந்திட எண்ணுகின்றான்.

அனைவருக்கும் பொதுவான அச்சக்தியை ஒவ்வொருவரும் உணர்ந்தே தன் எண்ணத்தை ஒரு நிலைப்படுத்தினால் ஜெபம் கொண்ட நிலையில் எம் மண்டலத்திற்கும் அவரவர்களின் ஆத்மாவுடன் இவ்வுடலின் சக்தியையும் சேர்த்தே பல மண்டலங்களுக்குச் சென்று அம் மண்டலங்களில் உள்ள உண்மை நிலையை அறிந்து வரலாம்.

எந்த மண்டலத்தில் எந்த உயிரணு உதித்து வாழ்ந்ததுவோ அந்த மண்டலத்தை விட்டுப் பிற மண்டலத்தில் வாழ்வதற்கு அதற்குச் சக்தியில்லை.

1.சுவாச நிலை மாறுபடும் பொழுது வாழும் தன்மையும் அற்று விடுகிறது.
2.எம் மண்டலத்தில் இவ்வுயிரணு ஜீவன் பெற்றதோ
3.அந்நிலையிலிருந்து மாறுபட்டால் எந்த உயிரணுவினாலும் வாழ்ந்திட முடியாது.

நம் பாடத்தில் இவ்வாத்மா அழிவதே இல்லை இவ்வுடல்தான் மாறுகிறது என்றேன். அப்பொழுது இவ்வழியாத ஆத்மா பிற மண்டலத்துக்குச் சென்றால் மட்டும் அழிந்துவிடுமா...? என்பீர்.

எந்த மண்டலத்தில் எந்த உயிரணு தோன்றியதோ அவ்வுயிரணு என்ற ஆத்மாவானது அதன் சுவாசம் கொண்டு உயிர் என்னும் ஜீவனைப் பெற்ற இக்காற்று மண்டலத்திற்கு மேல் செல்லும் சக்தி அவ்வுயிரணுவிற்கு இல்லை.

இன்று விஞ்ஞானம் கொண்டு பிற மண்டலத்திற்கு எடுத்துச் செல்லும் ஜீவாத்மாக்களும் அந்நிலையில் இவர்கள் விட்டு வந்தாலும் (நாய், பூனை, குரங்கு) அந்நிலையின் சுவாச நிலைக்கும் இஜ்ஜீவாத்மாவின் சுவாச நிலைக்கும் ஏற்காத தன்மையில் அவ்வாத்மாவை எம்மண்டலத்தில் இருந்து வந்ததோ அம்மண்டலத்தின் நிலைக்கு ஏற்காத தன்மையில் உந்தித் தள்ளிவிடும். இனம் இனத்துடன்தான் சேரும்.

ஆனால் இங்கிருந்து பல உயிரணுக்களை.. உயிரினங்களை... எடுத்துச் சென்று மற்ற மண்டலத்தில் அங்கே வாழ்ந்திட முடியுமா...? என்பதனை அறியப் பல சக்திகளைச் செயலாக்குகிறார்கள்.

எந்த மண்டலத்திலும் உள்ள உயிரணு பிற மண்டலத்திற்குச் சென்று வாழ்ந்திட முடியாது. ஆனால் நம்முள் உள்ள சக்தியை அவ்வெண்ண சக்தியை ஒரு நிலைப்படுத்தி ஜெபம் கொண்டால் சகல நிலையையும் அறிந்திடலாம்.

சூட்சும நிலைக்குச் சென்றவர்கள் எந்த மண்டலத்திலும் வாழும் நிலைக்கு வந்திட முடிந்திடும். இன்று நம்மில் இருந்து சென்ற பல சூட்சும நிலை பெற்றவர்கள் எம்மண்டலத்திலும் செல்லும் பாக்கியத்தைப் பெற்றவராய் இருக்கின்றார்கள்.

இன்று சூரியனில் சென்று வாழலாமா...? பெரும் நெருப்பு கோளமான அந்நிலைக்கு எப்படிச் செல்வது...? என்று விஞ்ஞானம் கொண்டு ஏவுகணை அனுப்புபவனும் சூரியனின் நிலையைக் கண்டு அஞ்சுகின்றான்.

சூரியனின் நிலை குளிர்ந்த நிலை. நம் பூமியைப் போல் காலை மாலை இரவு என்று மாறுபட்ட நிலை அங்கில்லை. இங்கு எப்படி நம் நிழலைக் காணுகின்றோமோ அந்நிலையும் அங்கில்லை.

அதி சுவையான நீரும்... ஆனந்த மயமான மணமும்... உள்ள பூமி அது. இந்நிலையில் உள்ளது போல் மழை நிலையும் மாறுபட்ட நிலையில் அங்கு உள்ளது. மழை உண்டு ஆனால் மாறுபட்ட நிலை. பனியான மழை. எப்பொழுதும் அந்நிலை இருந்து கொண்டே உள்ளன.

காட்சி:
அந்நிலையில் ஜீவன் பெற்று பல உயிரணுக்கள் வாழ்கின்றன. நாம் இவையெல்லாம் கதைக்குச் சொல்வதைப் போல் சொன்னதின் நிலையல்ல. உள்ளதின் உண்மையைத்தான் ஜெபம் கொண்டு அறிந்ததில் வெளியிடுகின்றோம்.

ஒவ்வொருவரின் சக்தியிலும் அறிந்திடும் தன்மையுண்டு. இப்பூமியைப்போல் பல நூறு மடங்கு பெரியவையான அச்சூரியன் சுழலும் வேகத்திலேயே அதன் ஈர்ப்புத் தன்மையும் பல மடங்கு அதிகமாகப் பெறுகிறது.

இச்சூரியனைச் சுற்றி எப்படி 48 மண்டலங்கள் அதன் ஈர்ப்பு நிலைகொண்டு வாழ்கின்றனவோ அதைப்போல் சூரியனும் பல சூரியன்களின் சக்தியின் உதவியால் வாழ்கிறது.

March 16, 2022

தீமைகள் நமக்குள் புகும் வழியும்... அதைத் தடைப்படுத்தும் வழியும்...

 

ஒரு மனிதன் வேதனைப்படுகிறான் என்றால் நாம் பார்க்காமல் இருக்க முடியாது... சொல்வதைக் கேட்காமல் இருக்க முடியாது... அதை நுகராமல் இருக்க முடியாது... எல்லாம் தெரிந்த பின் உதவி செய்யாமலும் இருக்க முடியாது.

ஆனால் அப்படிக் கேட்டு உணர்ந்தாலும் இந்த உணர்வுகள் நம் உடலிலே இயக்காமல் தடைப்படுத்திப் பழக வேண்டும்.

முதலிலே உணர்ந்தோம்... மேலும் அதிகமாகப் போகாதபடி தடுத்தல் வேண்டும். தடுக்க வேண்டும் என்றால் எப்படிச் செய்ய வேண்டும்...?

ஈஸ்வரா... என்று நமது கண்ணின் நினைவினைத் துருவ நட்சத்திரத்தின் பால் செலுத்தப்படும் பொழுது
1.நமது கரு விழி அங்கிருந்து வரும் சக்தியைக் கவர்கின்றது.
2.நம் உடல் உறுப்புகளை உருவாக்கிய அணுக்கள் அனைத்திற்கும் உடனே அந்த வீரிய சக்தியை உண்டாக்குகிறது.
3.கரு விழியுடன் சேர்ந்த காந்தப் புலன் இந்தப் பூமியில் படர்ந்திருக்கும் துருவ நட்சத்திரத்தின் சக்தியைக் கவர்ந்து
4.நமது ஆன்மாவாக மாற்றுகின்றது.

டி.வி.க்கு எப்படி ஆண்டனா முக்கியமோ இதே மாதிரி நம் உடலுக்கு கண் ஆண்டனாவாக இருக்கிறது. அதிலே (கருமணிகளில்) ரெக்கார்ட் செய்தாலும் அதை ஆண்டெனா வழி அறியக்கூடிய சக்தியும் கிடைக்கிறது.

நமக்கு நமது கண் ஆண்டெனா. அதிலே எந்த உணர்வினை நினைவினைச் செலுத்துகின்றோமோ நம் உடல் உறுப்புகள் அனைத்திலும் வீரிய உணர்வைச் செலுத்தியபின் இந்தக் காற்றிலிருந்து இழுத்து நம் ஆன்மாவாக மாற்றுகின்றது.

அதற்கு முன் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்று கண்ணின் நினைவினை நாம் உள் முகமாக உடலுக்குள் செலுத்தப்படும் பொழுது உடலில் உள்ள எல்லா உறுப்புகளும் அது வலுப்பெறத் தொடங்குகிறது.

துருவ நட்சத்திரத்தின் உணர்வை ஈஸ்வரா... என்று புருவ மத்தியில் நம் உயிரை எண்ணப்படும் பொழுது நமக்குள் தீமைகள் புகாது தடுக்கபப்டுகின்றது.

காரணம்... இதற்கு முன் நாம் சேர்த்துக் கொண்ட முந்திய தீய வினைகளுக்கு இந்த மூக்கு வழிதான் அந்த உயிர் வழி தான் உணர்ச்சிகள் சென்று ஆகாரமாகப் போகிறது.

ஏற்கனவே எடுத்த உணர்வு அதிலே சென்ற இயக்க அணு அதை வளர்ப்பதற்கு உதவும். அதைப் போன்ற தீமைகளை உட்புகாது முதலிலே தடைப்படுத்த வேண்டும்.
1.அதாவது அந்த இயக்க அணுக்கள் நம் இரத்தத்திலே ஜீவ அணுவாகப் போவதற்கு முன்
2.அதைத் தடைப்படுத்திப் பழகுதல் வேண்டும் (இது முக்கியம்).
3.அதற்குத்தான் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற வேண்டும் என்று
4.உடலுக்குள் புகாது முகப்பிலே தடைப்படுத்துகின்றோம் (உயிர் வழி எடுக்கும் போது முக்கு வழி தடைப்படுத்தப்படுகிறது).

விஷத்தை அகற்றி… அந்த விஷத்தையே ஒளியாக மாற்றிக் கொண்டிருக்கும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் சக்தியை நாம் பெறுவோம் என்றால் உயிருடன் ஒன்றி ஒளியாக மாறி… என்றும் பிறவியில்லா நிலை என்ற… ஒளி உடலைப் பெற முடியும்.

ஆறறிவு படைத்த இன்றைய மனிதன் வளர்ச்சி என்ற பெயரிலே எல்லாவற்றையும் அழிவிற்குக் கொண்டு வந்துவிட்டான் - ஈஸ்வரபட்டர்

   

அனைத்துமே ஆவிதான்... ஆவியிலிருந்து வந்தது தான் அனைத்து உலோகங்களும்... ஜீவராசிகளும்...! அந்நிலையிலிருந்து பிரித்தெடுத்து அதனதன் தன்மையில் அறியும் ஆற்றலைப் பெற்றுள்ளோம்

இப்பூமியில் இயற்கையிலிருந்து எடுத்த நிலைகளிலிருந்து அணுகுண்டு செய்து இப்பூமியில் புதைத்து வைத்துள்ளார்கள். சகல பாதுகாப்புடனும் அவர்கள் பாதுகாத்து வைத்த உலோகத்தினாலான துருப்பிடிக்காத இரும்பைக் கொண்டு பாதுகாத்து வைத்துள்ளார்கள்.

பலர் பதப்படுத்தும் நிலையில் பதப்படுத்தி வைத்துள்ளார்கள். இப்பூமியிலிருந்து எடுத்த உலோகத்திலே தன் அறிவினால் விஞ்ஞானம் கொண்டு இவ்வணுகுண்டைச் செய்து வைத்துள்ளார்கள்.

அனைத்துமே ஆவி நிலை ஆகக்கூடியதுதான். உதாரணத்திற்கு தங்கத்தினால் ஓர் ஆபரணத்தைச் செய்து இன்று நீ பார்க்கும் எடைக்கும் பத்தாண்டிற்குப் பிறகு அவ்வாபரணத்தை உபயோகிக்காத நிலையிலேயே நிறுத்திப் பார்த்தால் அதன் நிறையில் ஒரே நிலை இல்லாமல் குறைந்துதான் இருக்கும்.

1.தேய்மானம் என்பார்கள்...!
2.பிற வஸ்துவில் பட்டுத் தேய்வதல்லை
3.இக்காற்றில் கலந்துள்ள ஆவித் தன்மையினால் இப்பூமிக்குள்ள காந்த சக்தியைக் கொண்டு ஈர்ப்பதினால் அதுவும் ஆவியாகிறது.

அனைத்து உலோகங்களின் நிலையும் இதுதான். இவ்வுலக நிலையும் இதுதான். இவ்வுலகம் ஆவியை ஈர்த்து அவ்வாவியையே வெளிப்படுத்துகிறது.

அதனால்தான் இன்று விஞ்ஞானம் கொண்டு செய்திடும் அணுகுண்டைப் பாதுகாக்கும் நிலை கொண்ட அவ்விரும்புக் கவசமே இவ்வுலகம் ஈர்த்து ஆவியை வெளிப்படுத்தும் தன்மையில் அதன் நிலையும் ஆவியாகி... “அதில் ஏற்படும் சிறு துவாரத்தினால் வரப்போகின்றது இவ்வுலக மாற்றமே...!”

இன்று விஞ்ஞானம் கொண்டு சூரியனிலிருந்து வரும் சக்தியினால் பல நிலைகளைச் செய்திடலாம் என்று விஞ்ஞானப் படுத்துகிறான். சூரியனிலிருந்து வந்த அணுக்கதிரினால் பூமியில் ஏற்பட்ட கனி வளங்களையும் பல திரவ வஸ்துக்களையும் தன்னிலைக்கு ஈர்த்து எடுத்து விட்டான்.

இன்று இவன் செயற்கைக்காகச் சூரியனிலிருந்து வரும் ஒளிக்கதிரை ஈர்த்து (SOLAR POWER) அதிலிருந்து பல சாதனை செய்து காட்டுகின்றானாம். இக்காற்றையே கரியாக்கி வாழ்கின்றான்.

1.வரும் சக்தியையே ஒவ்வோர் இடத்திற்கும் தன்னிலைக்குகந்த விஞ்ஞானமாக்கி ஈர்த்து எடுத்து விட்டான்
2.வாழும் மனிதர்கள் இக்காற்றிலிருந்து பிரித்தெடுத்து நல் சுவாசம் எடுப்பதற்குண்டான சக்தியை அழித்து வருகிறான்.
3.இன்றைய விஞ்ஞானத்தினால் வந்த வினைதான் இது...!
4.மனிதனுக்கு ஆறறிவு என்று அவன் பெற்ற அறிவினாலேயே உலக நிலையையே இவ்வாறறிவு படைத்த மனிதன்தான் மாற்றுகின்றான்.

இதனால் இவ்வுலகம் மட்டும் மாறப்போகிறதா...? உலகுடன் தொடர்பு கொண்ட எல்லா மண்டலங்களுமே மாறத்தான் போகின்றன.

இன்று இவ்வுலகில் வாழும் மக்களினால் வந்த வினை தான் அது.

1.ஆத்மீக வழியை வழியமைத்தால் ஏற்பதற்கும் ஆளில்லை.
2.இதன் நிலை அறிந்துதான் பல சித்தர்கள் பல உண்மைகளையே மறைத்தார்கள்.

இன்று குழந்தை பெறுவதற்கே செயற்கை முறைப்படுத்திப் பேழையில் கரு வளர்த்து அக்கருவை தாய்க்குச் செலுத்திக் குழந்தையை வளர விடுகின்றானாம்.

இன்று ஒரு சித்தனால் தாயும் தந்தையும் இல்லாமல் இக்காற்றில் உள்ள சகல சக்தியிலும் கலந்துள்ள இம்மனித ஜீவ அணுவிற்கு வேண்டிய ஜீவ அணுவையே பிரித்தெடுத்து அப்பிரித்ததின் ஜீவ அணுவை வளரவிட்டுக் குழந்தையாக்கிக் காட்ட முடியும்.

புராணக் கதைகளில் படித்திருப்பீர்... ஆறுமுகனைக் கார்த்திகைப் பெண்கள் வளர்த்தார்கள் என்று.

அந்த அறுமுகன் எந்தத் தாயின் கர்ப்பத்தில் இருந்தான் என்பதனைச் சூட்சுமத்தில் மறைத்தார்கள். அனைத்தையுமே இந்நிலையில் வெளியிட்டு நான் என்ற ஆணவத்தை ஏற்படுத்திடவும் விரும்பவில்லை.

நம் சக்தியை நல்வழிக்குச் செலுத்திவிட்டால் அந்நிலையில் என்றுமே நிலைத்திருக்கலாம். சக்தியையே... “நமக்குத் தெரிந்தது...! என்று ஆணவத்தால் செய்து காட்டி என்ன பயன்...? என்றுணர்ந்துதான் அன்றே பல சித்தர்களினால் பலவும் மறைக்கப்பட்டன.

1.எண்ண நிலையை ஒரு நிலைப்படுத்தினால்
2.சகல நிலையையும் சகலரும் அறிந்திடலாம்.

March 15, 2022

தியானத்தின் மூலம் பெற வேண்டிய உறுதியான எண்ணம்

 

கேள்வி:-
சில நாள்களில் காலை துருவ தியானம் செய்ய முடியாதபடி உடல் கனமாகவும் சோர்வாகவும் இருப்பதற்குக் காரணம் என்ன...?

ஞானகுரு:-
உதாரணமாக... வேதனை என்ற உணர்ச்சிகள் நமக்குள் இருந்தால் நம் செயலில் வேதனை அதிகமாக இருக்கும். நாம் எடுக்கும் இந்த வேதனை என்ற விஷத்தின் தன்மை உண்மையை உணரச் செய்யும்... உணர்வின் ஆர்வத்தைக் கூட்டும்... அதை எடுத்துக் கொள்ளும்.

ஆனால் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்று எண்ணும் பொழுது
1.விஷத்தால் இயங்கிக் கொண்டிருந்த உணர்வுகள் சோர்வடையப்படும் பொழுது
2.நம்மைப் படுக்கையிலிருந்து எழுந்திருக்க விடுவதில்லை... அது சோர்வடைந்து விடுகிறது.
3.அந்த விஷத்தின் ஊக்கமே நமக்குள் வலிமை கொடுக்கின்றது.

ஆனால் அதே சமயத்தில் தியானத்தை எடுத்து உடல் உறுப்புகளில் செலுத்தப்படும் போது... “ஏற்கனவே இருந்த விஷங்கள் தணியப்படும் பொழுது...” நம்மால் முடியாது போய்விடுகின்றது.

அந்த மாதிரி நேரங்களில் எல்லாம் மீண்டும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற வேண்டும் என்று எங்கள் இரத்த நாளங்களில் கலந்து எங்கள் உடல் உறுப்புகளை உருவாக்கிய அணுக்கள் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெறவேண்டும் என்று செலுத்திப் பழகுதல் வேண்டும்.

பின் சிறிது நேரத்தில் அது தெளிவாவதைப் பார்க்கலாம்.

1.இந்த மாதிரி வரும்... காரணம் எல்லோருக்குள்ளும் இந்த வேதனையான உணர்வுகள் உண்டு.
2.நாம் இந்தச் சக்தி எடுத்தவுடன் அது சோர்வடையும்
2.என்னடா நாம் தியானம் செய்து இந்த மாதிரி ஆகிவிட்டதே... என்று கூட நினைப்போம்..

விஷத்தின் இயக்கத்திற்கு ஆக்கபூர்வமான நிலைகளைக் கொடுக்கவில்லையென்றால் அதனுடைய நிலை இந்த மாதிரி வந்துவிடும்.
அந்த மாதிரிச் சந்தர்ப்பங்களில்...
1.படுக்கையில் இருந்தபடியே சிறிது நேரம் கண்ணின் நினைவை அந்தத் துருவ நட்சத்திரத்தின் பால் செலுத்தி
2.துருவ நட்சத்திரத்தின் சக்தி எங்கள் இரத்த நாளங்களில் கலந்து எங்கள் உடல் உறுப்புகளை உருவாக்கிய அணுக்கள் அனைத்தும் அந்த சக்தி பெற வேண்டும் என்று ஏங்கி எடுத்துக் கொள்ள வேண்டும்.

அப்போது அதிலிருந்து விடுபடுவதை உணரலாம்.

கேள்வி:-
தியானம் செய்து கொண்டிருக்கும் போது உடல் உறுப்புகள் அனைத்தும் காட்சியாகத் தெரிந்தது. அதனுடைய துடிப்பும் தெரிந்தது. ஆனால் இதை எல்லாம் பார்த்துக் கொண்டிருக்கும் போது பயமும் நடுக்கமும் வந்து விட்டது. ஏன்...?

அந்த மாதிரி பயம் வராதபடி எனக்கு மன பலம் வேண்டும்.

ஞானகுரு:-
பணம் வேண்டுமென்று ஆசைப்படுகின்றோம். திடீரென்று “ஒரு லட்சம் ரூபாய் பரிசு விழுந்து விட்டது...!” என்று கேள்விப்பட்டால் உங்கள் மனது எப்படி இருக்கும்...?

பயத்தைக் காட்டிலும் படபட... படபட... என்று நெஞ்சிலே துடிப்பு அதிகமாக இருக்கும். பணம் வந்துவிட்டது என்று கேட்டதுமே அதனால் மூச்சு நின்று போனவர்களும் உண்டு. இல்லையா...!

இதைப் போன்று தான் உயர்ந்த சக்திகள் நமக்குள் வரப்படும் போது..
1.ஆக அதைப் பெறுகின்றோம் என்ற நிலையில்
2.அந்த அருளைப் பெற்றுக் கொண்டிருக்கின்றோம் என்ற ஆனந்தத்தைச் சேர்த்தால் அது வலுவாகும்.

ஆனால் பயத்தைக் கொடுத்தோம் என்றால் பய அலைகள் தான் வரும். வேகமாக இயக்கப்படும் போது இதனுடன் கொஞ்சம் விஷத்தைக் கலந்து விட்டால் எப்படி இருக்கும்...? பலவீனம் தான் ஆகும்.

ஆகவே... நாம் அந்த அருள் சக்திகளைப் பெறுகின்றோம் இந்த ஆசையில்
1.நல்ல நிலைகளைப் பெற்றுக் கொண்டு இருக்கின்றோம்
2.துருவ நட்சத்திரத்துடன் நாம் இயங்கிக் கொண்டிருக்கிறோம்
3.அந்த உணர்வு நமக்குள் இயங்கிக் கொண்டிருக்கின்றது என்ற இந்த வலுவைச் சேர்க்க வேண்டும்.

இது எல்லாம் குருநாதர் காட்டிய அருள் வழியில் இந்த வாழ்க்கையில் கடைபிடிக்க வேண்டிய சரியான நெறி முறைகள்.

உலக மாற்றத்தின் உண்மைகளை அதிவிரைவில் அனைவருக்குமே வெளியிடுவோம்…! - ஈஸ்வரபட்டர்

 

இங்கே சில உண்மைகளை வெளிப்படுத்துகின்றோம் என்பதின் பொருளே
1.இக்கலியின் மாற்றத்திலிருந்து மக்களை நல்வழியில் கல்கிக்கு அழைத்துச் செல்வதற்காக
2.பல சித்தர்களினாலும் மறைக்கப்பட்ட பல உண்மைகளை இன்று இந்நிலையில் அச்சித்தர்களுடன் கலந்தே
3.இவ்வுலக மக்கள் இதிலிருந்து மீண்டு உண்மையை உணர்ந்து ஏற்று நடப்பதற்காகத்தான்…!

இந்தச் சக்தி அனைவருக்கும் பொதுவானதே.

அச்சக்தியின் நிலையை ஏற்கும் தன்மை மட்டுமல்ல… ஏற்றதனை வழி நடப்பதிலும் அச்சக்தியின் தன்மையுள்ளது.

அனைத்தையும் அறிந்து விட்டோம் என்ற நிலையில் நம் சக்தியை விரையமாக்கினாலும் அச்சக்தி நிலைத்திடாது. அச்சக்திகளை நிலைநிறுத்தி வாழும் தன்மையிலே வழி வந்திட வேண்டும் நாம் அனைவருமே.

சூரியனிலிருந்து நாம் அணுக்கதிர்களைப் பெற்று வாழ்கின்றோம். அவ்வாவியான அணுவேதான் இவ்வுலகும் அனைத்து உலகுமே.

ஆவியான அணுவை ஆக்கும் வழியில் செயல்படுத்திடாமல் அழிக்கும் நிலைக்குச் செயல்படுத்திடும் வினையை இவ்வுலக மக்கள் கூடிய விரைவில் உணரும் காலம் மிகவும் நெருங்கிக் கொண்டே வருகிறது.

எந்நிலையில் என்று கேட்பீர்கள்...?

இவ்வுலகில் சூரியனிலிருந்து வரும் அணுக்கதிர்களைக் கொண்டேதான் பல நிலை பெற்ற செயல்களை இம் மனிதனின் எண்ணம் கொண்டு உருவாக்கியுள்ளான்.

இவன் உருவாக்கிய அணுகுண்டுகளை ஒவ்வொரு நாட்டிலும் பாதுகாக்கும் நிலையில் பூமியின் அடியில் புதைத்துப் பல இரும்புக் கவசங்களைக் கொண்டு சிறு அணுவும் வெளிப்படாத நிலையில் தன் அறிவை எல்லாம் சக்தியையெல்லாம் செயல்படுத்தி விஞ்ஞானக் குண்டுகளைப் பல நாடுகளில் புதைத்து வைத்துள்ளான்.

“இன்று வெடிக்கப் போகின்றேன்... நாளை வெடிப்பேன்...!” என்று பயமுறுத்தலுடன் பயமுறுத்தலுக்காக வைத்துள்ள குண்டுகளை இவனும் வெடிக்கப் போவதில்லை... மற்றவனும் வெடிக்கப் போவதில்லை.

ஆனால் இவ்வுலகம் சுற்றிக் கொண்டே உள்ள நிலையில் சூரியனின் அணுக்கதிர்களைப் பெற்றுக் கொண்டே உள்ளது. இவ்வுலகமும் ஈர்த்து வெளிப்படுத்திக் கொண்டே உள்ளது.

ஆவியில் வந்த அணுக்கதிர்கள்தான் அனைத்துமே. இவ்வுலகம் ஈர்த்த நிலையில் அது வெளிப்படுத்தும் நிலை கொண்டு இவ்வுலகத்தின் பாதுகாப்பினால் ஆன அணுகுண்டுகள் வைத்துள்ள நிலையெல்லாம் இப்பூமி வெளிப்படுத்தும் காந்த சக்தியை ஈர்த்துக் கொண்டே உள்ளன.

இந்நிலையிலேயே இன்னும் சில காலங்களில் அதன் சக்தி இழந்து இவ்வுலக சக்தி தன்னுள் ஈர்த்த சக்தியை வெளிப்படுத்தும் நிலையில் கக்கும் நிலையில் அதன் மேல்பட்டு ஓர் இடத்தில் வெடிக்கும் நிலையில் அணுக்களின் சிதறலினால் அனைத்து அணுகுண்டுகளுக்கும் அதனதன் ஈர்க்கும் நிலையில் அனைத்தும் வெடிக்கும் நிலை மிகக் குறுகிய காலத்தில் உள்ளது.

இப்பூமியில் அணுகுண்டுகள் வெடிக்கும் நிலையில் இப்பூமியே அதிரும் நிலையில்தான் சிறு அதிர்வினால் இவ்வுலக நிலையே மாறும் தன்மைக்கு வரப்போகின்றது.

இந்நிலையை அறிந்து நல்வழி பெற்று வாழ்வதுதான் நம்மால் இன்று செய்திட முடியும்.

இன்று இந்நிலையை வெளிபடுத்துபவர் ஏன் அந்நிலையிலிருந்து காப்பாற்றலாமே...? என்ற வினாவும் எழலாம்.

1.அனைத்தையும் அறிந்து சூட்சும நிலைகொண்டு நல்வழி புகட்டிடலாமே தவிர
2.அனைத்தும் அறிந்த ஆண்டவன் என்ற அச்சக்தியின் சக்தியே நான் என்ற சக்தி எனக்கில்லையப்பா.

யானறிந்த சக்தியை என்னுடன் கலந்துள்ள பல ரிஷிகளின் நிலை கொண்டே இந்நிலையை வெளியிடுகின்றேன். அதி விரைவில் அனைவருக்குமே வெளியிடவும் காலம் சொல்வோம்.

March 14, 2022

குருத்தெலும்புக்குள் (MONITOR) நாம் பாய்ச்ச வேண்டிய அருள் சக்தி

 

துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எங்கள் நெஞ்சின் எலும்புகளில் படர்ந்து அதற்குள் ஊனை உருவாக்கிக் கொண்டிருக்கும் அணுக்கள் அனைத்தும் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று ஏங்கித் தியானியுங்கள்.

செல்ஃபோன்களில் நாம் அழுத்திய பின் எங்கிருந்து ஃபோன் செய்கின்றனரோ... அவருடைய பதிவை நாம் பார்க்கின்றோம். அதே போல
1.ஒரு வேதனைப்படுவர் உணர்வைப் பதிவாக்கி விட்டால்
2.அந்த வேதனைப்படுவதை மீண்டும் எண்ணினால்
3.காற்றிலிருந்து அந்த வேதனைப்படும் உணர்ச்சிகளை நாமும் நுகர நேருகின்றது

அதே சமயத்தில் வேதனைப்படுவரைப் பார்த்தபின் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்று அடுத்த கணமே... அதனுடன் இணைக்கப்படும் பொழுது
1.வேதனையைத் தணித்த அந்த உணர்வின் சக்தி அதன் அருகிலே படும்பொழுது
2.வேதனையான உணர்ச்சியைத் தூண்டும் நிலைகள் வலு இழக்கின்றது.

துருவ நட்சத்திரத்தின் பேரருளை இப்படி அங்கே பெருக்கக் கற்றுக் கொள்ள வேண்டும்.

துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எங்கள் நெஞ்சின் எலும்புக்குள் படர்ந்து ஊனை உருவாக்கும் அணுக்கள் அனைத்தும் அந்தச் சக்தி பெற வேண்டும் என்று ஏங்கி இந்த உணர்வைப் பதிவாக்குங்கள்.

நம் நெஞ்சுக்கு மத்தியில் இருக்கும் குருத்தெலும்புக்குள் துருவ நட்சத்திரத்தின் உணர்வைப் பதிவாக்கப் படும்பொழுது
1.அங்கே ஒரு விதமான உணர்ச்சிகள் வந்து
2.இந்தக் காற்றிலே படர்ந்துள்ள அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை நமது உடல் அருகிலே ஈர்த்துக் கவரும்படி செய்யும்.

அபப்டி ஈர்க்கும் பொழுது... நாம் எந்த அளவிற்கு எண்ணுகின்றோமோ அதற்குத் தக்க அந்தத் துடிப்பின் தன்மை குருத்தெலும்பிலே வரும்.

துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் விலா எலும்புகளில் படர்ந்து அங்கே ஊனை உருவாக்கிய அணுக்கள் அனைத்தும் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று மறுபடியும் ஏங்கித் தியானியுங்கள்.

சிவன் ஆலயத்தில் நந்தீஸ்வரன் சிவனுக்குக் கணக்குப்பிள்ளை...!
1.துருவ நட்சத்திரத்தின் உணர்வை எந்த அளவிற்கு நெஞ்சின் விலா எலும்புகளில் அதிகமாகச் சேர்க்கின்றோமோ
2.அந்தக் கணக்கு கூடக் கூடக் கூட நம் உடலில் வந்த இருளை நீக்கவும்
3.துருவ நட்சத்திரத்தின் பேரருளைப் பெறும் தகுதியும் நாம் பெறுகின்றோம்.

இதைப் போன்று நம் வாழ்க்கையில் அந்த அருள் உணர்வின் தன்மை அதிகரித்தால் இந்த உடலுக்குப்பின் பிறவியில்லா நிலை அடைந்த துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்திற்கு நாம் சென்று விடுகின்றோம்.

ஆனால் வேதனை என்ற உணர்வுகள் அதிகரித்தால் இந்தக் கணக்கு கூடினால் விஷத் தன்மை கொண்ட உடல் எதுவோ அதன் ஈர்ப்புக்குள் இந்த உயிர் அழைத்துச் சென்று அந்த வேதனைப்படும் உடலாக உருவாக்கி விடுகின்றது.

ஆகவே நமது பற்றெல்லாம் துருவ நட்சத்திரத்தின் பால் இருக்க வேண்டும். அதிலிருந்து வரும் அருள் சக்திகளைப் பெற வேண்டும் என்று நாம் ஏங்கி இருக்க வேண்டும்.

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி எங்கள் இரத்த நாளங்களில் கலக்க வேண்டும் எங்கள் உடல் உறுப்புகளை உருவாக்கிய அணுக்கள் அந்தச் சக்தி பெற வேண்டும் என்று அடிக்கடி நாம் எண்ணுவோம் என்றால்
1.இந்த உணர்வின் வளர்ச்சிகள் நம் உடலில் உள்ள குறைபாடுகளை குறைத்து நோய்களைக் குறைத்து
2.சிந்திக்கும் ஆற்றலை வலிமை பெறச் செய்து
3.துருவ நட்சத்திரத்தின் உணர்வை நமக்குள் பெருகச் செய்து
4.என்றும் பிறவியில்லா நிலை என்ற முழுமை அடைய இது உதவும்.

தியானம் என்பது தனித்துச் செய்ய வேண்டிய ஒன்றல்ல… அன்றாட வாழ்க்கையின் ஒரு அங்கம் தான் அது…! - ஈஸ்வரபட்டர்

 

கேள்வி:
நாம் ஏதாவது ஒரு காரியத்தைப் பற்றி முடிவு எடுக்க முடியாமல் இருந்தால் அதைப் பற்றித் திரும்பத் திரும்ப யோசித்துக் கொண்டு இருக்காமல் அந்த விஷயத்தை ஆராய்ந்து கூறுமாறு அந்தராத்மாவிடம் ஒப்பித்து விட்டு நமது வேறு காரியங்களைச் செய்து கொண்டிருந்தால் அந்த அந்தராத்மா அந்தக் காரியத்தை அலசிப் பார்த்து சரியான விடையைக் கண்டு பிடித்து நம் வெளி மனதிற்குத் தெரியப்படுத்தும் என்று எண்ணுகின்றேன்.

ஈஸ்வரபட்டர்:
இந்நிலைதான் ஜெப நிலை (தியானம்) என்று நான் உணர்த்தும் நிலை.

ஒரு நிலைக்கு நம்முள் தீர்வு கண்டிட...
1.நம்முள் சுற்றியுள்ள எண்ணச் சிதறல்களை ஒரு நிலைப்படுத்தி
2.அந்நிலையிலேயே நம் மனதை அமைதியுறச் செய்து
3.அந்நிலையில் நம் மனது தெளிவு பெறும் நிலைதான்
4.நீங்கள் சொல்லும் அந்தராத்மா முடிவெடுக்கும் நிலை என்பது.

அந்நிலைதான் ஜெப நிலையும். ஜெபம் என்பது மனதை ஒருநிலைப்படுத்தும் நிலைதான்.

இன்று நம்மில் கலந்துள்ள பல பெரியோர்களின் வழியில் அவர்கள் வழிப்படுத்திச் சென்ற நிலை வாழ்க்கை நிலைக்கும் ஜெப நிலைக்கும் வேறுபாடில்லை.

வாழ்க்கை நிலையில் வரும் நிலைகளுக்குத் தெளிவு பெற வழியமைத்த நிலைதான் இஜ்ஜெபநிலை. இந்நிலையையே ஞானிகளும் சித்தர்களும் வழியமைத்து வந்ததுதான் அவர்களின் உயர்ந்த நிலை.

இவ்வெண்ணம் ஒவ்வொரு மனிதனுக்கும் பல நிலைகளில் செயல் படுத்துகிறது.
1.உள் மனம் வெளி மனம் மட்டுமல்ல
2.முதல் பாடத்தில் சொல்லியுள்ளேன் அகக்கண் புறக்கண் என்பதையே ஞானக்கண்ணால் வென்று வா…! என்று.

சாதாரண மனிதர்களின் நிலைக்கும் சித்தர்களின் நிலைக்கும் எந்நிலையில் மாற்றம் உள்ளது...?

நாம் சாதாரண மனிதர்களாகிய நாம் ஒன்றை எண்ணும் பொழுது பிற நிலை தாக்கினால் நம் எண்ணம் ஒன்றையே தான் சுற்றிக் கொண்டிருக்கும். அந்நிலையில் தாக்கும் மற்றதின் நிலையை இந்நிலைபோல் செயல்படுத்திட முடிந்திடாது.

1.எண்ணத்தின் சிதறலைத் தாங்கும் சக்தியை இழந்து
2.அந்நிலையில் மனச் சோர்வு கொண்டு நம்மை அறியாமல் பல சொற்களை வெளியிடுவோம்.
3.நம் நிலைக்கும் பதட்டம் வரும்
4.அப்பதட்டத்திலிருந்து வருவது தான் கோபமும்.

இப்படி நாமே வளர்த்துக் கொள்வதுதான் நம்மில் இந்நிலையெல்லாம். இந்நிலையில் இருந்து மீள்வதற்குத் தான் பல நிலையின் மோதல்களைத் தாங்கும் நிலை ஏற்படுத்திட “ஜெபம்” என்ற நிலையை உருவாக்கினார்கள் நம் முன்னோர்கள்.

ஜெப நிலையை நம்முள் ஏற்படுத்திக் கொண்டால் எந்நிலையிலும் அது தாக்கும் நிலையிலேயே அந்நிலைக்குத் தீர்வு கண்டிட நம்மைப் பக்குவப்படுத்திடும் நிலையாக வரும்.
1.நம்மை நாமே அடிமைப்படுத்தும் நிலையிலிருந்து
2.அத்தகைய ஜெப நிலையைப் பெற்றிட வேண்டும்.

இதை நமக்குப் புரியச் செய்வதற்காகப் பல இதிகாச நூல்களில் ஆண்டவன் என்று ரூபப்படுத்தி ஆண்டவனுக்குப் பல தலைகள்… பல கைகள்… இருப்பதாகக் காட்டினார்கள் ஞானிகள்.

ஆண்டவன் ஒரே சமயத்தில் பலருக்கும் எந்நிலையில் அருள் புரிகின்றார் என்பதைப்போல் சித்தர்கள் மக்களுக்கு உணர்த்தும் வகையில் உணர்த்திய வழிகள் தான் ஆண்டவனுக்குப் பல தலைகளும் பல கைகளும் காட்டப்பட்டது.

சூட்சும நிலையில் உள்ளவர்கள் (ஞானிகள்) ஒரே சமயத்தில் பல நிலைகளில் தன் செயலைச் செயலாக்குகிறார்கள்.

ஒவ்வொரு மனிதனும் அவரவரின் எண்ணத்தின் சிதறலினால்தான் பல நிலைகள் பதட்ட நிலை பெற்றுத் தன்னுள் தன்னையே கைதியாக்கி வாழ்கின்றான்.

உள் மனம் வெளி மனம் என்பதல்ல இவ்வெண்ண மனம். பல நிலைகளுக்குச் சென்றாலும் ஒரு நிலைப்படுத்திடும் பக்குவம் பெற்றாலே ஒவ்வொரு மனிதனும் தன் ஆத்மாவிற்கு நல் சொத்தைச் சேர்த்த நிலை பெறுகின்றான்.

1.இன்று மக்களுக்குப் போதனை நிலையும் குறைவு
2.வழி நடத்திடும் அவர்களது பெரியோர்களின் நிலையும் குறைவு
3.வழி நடத்திடும் அவர்களது பெரியோர்களின் நிலையும் (தாய் தந்தை) உபதேசிக்கும் நிலையற்றதினால் வந்த நிலை இவ்வுலகின் நிலை இன்று.

முந்தைய காலத்தில் பல நீதி நிலைகளைக் கதையாக்கி தாத்தா பாட்டி கதை என்ற ரூபத்திலும் அரிச்சந்திரனின் கதையாகவும் விக்கிரமாதித்தனின் கதையாகவும் மக்களின் எண்ணத்தில் பதிய வைப்பதற்காகப் பல நீதி நூல்களை வெளியிட்டார்கள்.

இன்று அனைத்து நீதி நூல்களையுமே ஆராயும் தன்மையில் வைத்துள்ளார்கள். அந்நிலையையும் மாற்றி அன்று சித்தர்கள் வெளியிட்டதின் வழியிலேதான் இன்று இருக்கும் விஞ்ஞான உலகத்தின் அறிந்த நிலையெல்லாம்.

“முள்ளை முள்ளால் எடு...” “வைரத்தை வைரத்தால் அறு...” என்பதைப் போல் ஒவ்வொரு நோய்க்கும் அந்நோயின் தன்மை கொண்ட எந்நிலை கொண்ட நோய் வருகிறதோ அதன் தன்மைக்குகந்த மருந்தை அதன் விஷத் தன்மையிலேயே அதற்கு மேல் இதை ஏற்றி இதை வெளிப்படுத்தும் நிலையை உணர்த்தியவர்களே நம் சித்தர்கள் தான்.

இவ்வுலகில் வந்து குவியும் அமிலத் தன்மையிலிருந்து பல நிலைகளைத் தன்னுள் ஈர்த்து ஒவ்வொன்றையும் செயல்படுத்திக் காட்டிய பல ரிஷிகள் உள்ளார்கள்.

போகரின் நிலையும் போகரை ஒத்த நிலைகளில் உள்ள பல ரிஷிகளின் நிலையும் இன்று அழியாத உடலை எந்நிலையில் பாதுகாத்து வைத்துள்ளார்கள்...?

இக்காற்றில்தான் அனைத்து நிலைகளுமே கலந்துள்ளன. தன் நிலையையும் தன் உடலையும் அழியாத நிலைப்படுத்திப் பாதுகாக்கும் பக்குவத்தை இன்றும் ஈர்த்துச் செயல்படுத்துகிறார்கள்.

இவ்வுடலையே கல்லாகவும் எந்நிலை கொண்ட உலோகம் போலவும் காத்து வைத்திட முடியும். இக்காற்றில் உள்ள அமிலத்தை தனக்குகந்ததை ஈர்த்துக் காத்து வருகின்றார்கள்.

வைரமாகவும் இவ்வுடலை ஆக்கிட முடியும். மண்ணுடன் மண்ணாக மக்கும் நிலையிலும் ஆக்கிடுகின்றோம்.

அனைத்துமே இவ்வெண்ணத்தினால் வந்ததுதான்...!

உலக சக்தியும்... சக்தியாக சக்தியுடனே நம் எண்ணத்தைக் கலக்கவிட்டு நல்சக்தி பெற்று விட்டால் “அனைத்துச் சக்திகளையுமே நம்முள்ளே கண்டிடலாம்...!”

இவ்வெண்ண சக்தியினால் வளர்வதுதான்… வளர்வது மட்டுமல்ல வாழ்வதுதான்… இவ்வுலகமும் பிற உலகங்களுமே.

March 13, 2022

காது - அதிர்வு... கண் - ஆண்டெனா... இழுத்து உயிரிலே பட்டபின் அந்த உணர்வே நம்மை இயக்குகிறது

 

இந்தக் காற்று மண்டலமே நச்சுத் தன்மையாக இருக்கப்படும் போது பிறருடைய செயலையும் உலகம் இயக்கும் இயக்கங்களையும் உற்று நோக்கும் போது நம்மை அறியாமலே தீமைகள் வரத் தொடங்குகிறது.

காரணம்... அரக்கத்தனமாகத் தானும் தற்கொலை செய்து பல ஆயிரம் பேரைக் கொல்ல வேண்டும் என்ற இந்த உணர்வு வரப்படும் போது அதே உணர்வை நாம் நுகர்ந்தால் நம் உணர்வின் இயக்கமும் மாறிவிடும்.

இன்றைய உலகம் போகும் போக்கிலே...
1,எத்தகைய அசம்பாவிதங்களைக் காதில் கேட்டாலும்
2.அதற்கு அடுத்த கணம் நம் கண்ணிற்கே தான் வருகின்றது - ஆண்டனா.
3.காதிலே “உணர்வின் அதிர்வுகள்... பட்டதும் எலக்ட்ரானிக்...!”
4.கண் அந்த அதிர்வுகளை நுகர்ந்து உயிரிலே பட்டு உணரச் செய்கின்றது
5.அந்தத் தீமை செய்யும் உணர்வுகள் நம் உடலில் உள்ள இரத்தங்களில் கலந்து விடுகின்றது.
6.அங்கே அந்த இயக்க அணுவாக நமக்குள் மாறி நம்மையும் அதனின் நிலைக்கே மாற்றி விடுகின்றது... விஷத்தின் தன்மை அதிகரித்து விடுகின்றது.

ஆகவே அதைப் போன்ற கொடுமைகளைக் காதில் கேட்டாலும் உடனே ஈஸ்வரா... என்று கண்ணின் நினைவினை உயிருடன் ஒன்றி அந்த்த் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்று ஏங்கிப் பெற வேண்டும்.

1.கண்ணின் கருமணிகளில் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் படும்பொழுது
2.அதைச் சுத்திகரிக்க இது உதவும்.

துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எங்கள் இரத்த நாளங்களை கலக்க வேண்டும் எங்கள் உடல் உறுப்புகளை உருவாக்கிய அணுக்கள் அனைத்தும் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற வேண்டும் என்று வலு ஏற்றிக் கொள்ளுங்கள்.

அப்போது கேட்டறிந்த தீமையான உணர்வை இது தள்ளி விடுகின்றது.

அதற்குப்பின் நாளை நடப்பதெல்லாம்... நல்லதாக இருக்க வேண்டும் என்ற எண்ணத்தில்
1.மகரிஷிகளின் அருள் உணர்வுகள் இங்கே படர வேண்டும்
2.உலகம் அறியாத இருளிலிருந்து விடுபட்டு
3.தன்னைத் தான் அறிந்து அருள் உணர்வு பெறும் அந்த அருள் சக்தி உலக மக்கள் அனைவரும் பெற வேண்டும் என்று எண்ண வேண்டும்.

உலக மக்கள் அனைவரது உணர்வுகளும் நமக்குள் உண்டு. பத்திரிகையோ டிவியோ பார்க்கப்படும் பொழுது அதனின் உணர்வின் இயக்கம் நமக்குள் உண்டு. அதை மாற்றி இதனுடைய நிலைகளைச் சீராக்க வேண்டும்.

ஆக மொத்தம்... பிறருடைய பகைமை உணர்வை நமக்குள் வராதபடி அந்த உணர்வு நம் உடலில் இருக்கக்கூடிய கெட்ட அணுக்களுக்கு ஆகாரமாகப் போகாதபடி தடுப்பதும்... நமது நல்ல அணுக்களுக்கு அருள் சக்தியைக் கொடுப்பதும் தான் “விரதம்...” என்று சொல்வது.

அந்த அருள் உணர்வுகளை நமக்குள் சேர்த்து வளர்ப்பது தான் ஏகாதசி விரதம் என்று சொல்வது.
1.இதை ஒவ்வொரு நாளும் காலை துருவ தியான நேரத்தில் செய்து பழகுதல் வேண்டும்.
2.நம் ஆத்மாவைச் சுத்தம் செய்து கொள்ள வேண்டும்
3.ஒரு பதினைந்து நிமிடமாவது அதை வலுவேற்றிக் கொள்ள வேண்டும்.

இதைப் போன்று செய்யும் ஒரு பழக்கம் வந்து விட்டால் வாழ்க்கையில் குறைபாடுகள் வரும் போது அதை ஈர்க்காதபடி சிந்தித்து செயல்படும் வலிமையும் வரும்... ஞானமும் பெருகும்.

இதை உங்கள் அனுபவத்தில் தெரிந்து கொள்ளலாம்.

ஆவியின் பிம்பமான அனைத்து பிம்பமுமே ஆண்டவன் தான்...! - ஈஸ்வரபட்டர்

 

உடலை விட்டுப் பிரிந்த ஆவிகளுக்கு மட்டும் மற்ற உடலில் ஏறினால் வெளி வரும் சக்தியில்லேயே...! மற்ற முனிவர்களும் சித்தர்களும் ரிஷிகள் மட்டும் தன் சக்தியை எந்நிலையில் செயல்படுத்துகிறார்கள்...? என்று இதைப் படிப்பவர்கள் எண்ணலாம்.

இந்நிலையை அறிவதற்கு முன் இவ்வுலகின் நிலையை முதலில் அறிந்திடுவோம். நேற்றைய பாடத்தில் “அனைத்துமே ஆவி தான்...” என்று உணர்த்தினேன்.

எந்நிலை என்று அறிந்திட எண்ணுவீர்.

இவ்வுலகம் எப்படித் தோன்றியது…? மற்ற மண்டலங்கள் எப்படித் தோன்றின…? இவ்வுலகம் தோன்றிய நாள் முதற்கொண்டே இதே அளவுடன் தான் உள்ளனவா…? இவ்வுலகின் நிலையென்ன…? என்று அறிந்திட எண்ணுவீர்.

ஆவியான உலகங்கள் தான் அனைத்து உலகங்களுமே. உலக ஆரம்ப காலத்தில் உலகம் எப்படி தோன்றியது…? இக்காற்றுடன் இக்காற்றே ஆவிதான்.

காற்றுடன் கலந்துள்ள நீரும்… சகல சக்திகளும்… கலந்துள்ள இவ்வாவி
1.காற்றில் கலந்துள்ள அமிலங்கள் ஒன்றுடன் ஒன்று கலந்து திடப்பொருளாகி
2.அத்திடப் பொருளில் உள்ள காந்த சக்தியினால் பல அமிலத் தன்மைகள் உள்ள திட பிம்பங்களைத் தன்னுள் ஈர்த்து
3.அதுவே சுழலும் வேகத்தில் இக்காற்றினில் கலந்துள்ள சகல அமில சத்தையும் தன்னுள் ஈர்த்து
4.ஒரே கோளமாக ஆனது தான் இப்பூமியின் நிலையும்.
5.இதைப்போலத்தான் மற்ற பூமிகளின் நிலையும்.
6.சிறுகச் சிறுக ஈர்த்துத்தான் இவ்வுலகமே ஆனதப்பா...!

இக்காற்று மண்டல ஆவியில் கலந்துள்ள அமிலத் தன்மையினால் வளர்ந்தது தான் இப்பூமி.

எந்த நிலைகொண்ட அமிலத்தை ஈர்த்து இப்பூமி வளர்ச்சி பெற்றதோ அதே நிலைகொண்ட அமிலத்தைத்தான் இன்றும் ஈர்த்து வளர்கிறது.

இவ்வளரும் நிலை இந்நிலை கொண்டேதான் வளர்ந்து கொண்டே உள்ளனவா…? வளர்வதற்கு சக்தியான அமிலம் எங்கிருந்து வந்து கொண்டே உள்ளது என்றும் எண்ணுவீர்.

இவ்வுலகம் எந்நிலை கொண்டு வளர்ந்ததோ அந்த நிலை கொண்ட சுவாச நிலைகொண்ட உயிர் அணுக்கள்தான் இன்று இவ்வுலகிலுள்ள உயிரணுக்களின் தன்மையெல்லாம்.

இவ்வுயிரணுக்களின் சுவாச நிலையும் இவ்வுலக சுவாச நிலையும் ஒன்று போல்தான் இருந்திடும். இவ்வுலகின் சுவாச நிலையை மற்ற மண்டலங்கள் ஆவியாக ஈர்க்கின்றன.

இவ்வுலகம் எப்படி ஆவியான அமிலத்தைத் தன்னுள் ஈர்த்து வளர்த்து கொண்டதுவோ அதைப்போல் இவ்வுலகம் வெளிப்படுத்தும் சுவாச நிலையை மற்ற மண்டலங்கள் ஆவியாக ஈர்த்து அதற்குகந்த நிலையில் அதன் தன்மை உள்ளது.

இவ்வுலகத்தின் சுவாச நிலை ஈர்த்து எடுக்கும் அளவு அதன் ஆவியையும் வெளிப்படுத்துகிறது. அதனால் இவ்வுலகம் வளர்ந்து கொண்டே உள்ளதுவா…? குறைந்து உள்ளதுவா…? என்று எண்ணுவீர்.

இவ்வுலகின் காலங்கள் மாறுபடும் பொழுது இவ்வுலகின் தன்மையிலும் மாறுபாடு நடக்கின்றது. அந்நிலையில் அதன் ஈர்ப்புத் தன்மையில் மாறும் நிலையில் உள்ளது. அந்நிலையில்தான் இவ்வுலகத்தின் அளவு நிலையும் மாறுபடும் தன்மை பெறுகிறது.

இவ்வுலகம் மாறுபடும் நாளில் தான் எல்லா மண்டலங்களுமே மாறுபடும் தன்மை பெறுகின்றது. அந்நிலையில் ஏற்படும் ஆவியின் சக்தி நிலைகொண்டு ஒவ்வொரு மண்டலங்களிலும் மாறுபடும் தன்மைகள் வருகின்றன.

அந்நிலையை சூட்சுமத்தில் வருபவர்கள் அறிந்திடலாம்.

1.இவ்வுலகம் யாரும் கண்டு எடுத்து வாழ்வதற்கு வந்த உலகமல்ல.
2.ஆவியினால் அவதரித்த உலகம்.
3.ஆவியின் உயிரணுக்களை ஈன்றெடுத்த உலகம்.
4.ஆவியின் ஆவியான அனைத்துமே கலந்துள்ள உலகம்.
5.நீ அருந்தும் நீரும் ஆவிதான் நெருப்பும் ஆவிதான்.
6.நீ இன்று செல்வமாக்கக் கருதும் இப்பூமியின் பொக்கிஷங்கள் அனைத்துமே ஆவிதான்.
7.ஆவியின் ஆவிதானப்பா அவ்வாண்டவனே.

ஆவி உலகம் என்பதனை நாம் இன்று பேய் பிசாசு ரூபத்தில் இனி எண்ணிலடாகாதப்பா.

இம்மனித உடலில் இருந்து பிரிந்த ஆத்மாக்கள் தன் ஆசையை செயல்படுத்திடத்தான் இவ்வுலகையே இவ்வுலக மக்களின் எண்ணத்தையே மாசுபடுத்தி இருக்கிறது.

ஆசையின் நிலையிலிருந்து உடலை விட்டுப் பிரிந்த ஆவிகளின் வழிவழியாய் வந்ததின் கொடுமையின் கொடுமைதானப்பா இன்று உடலுடன் வாழ்பவர்களின் நிலையெல்லாம்…!

இதிலிருந்து மீள்வதற்காக முனிவர்கள் சித்தர்கள் ரிஷிகள் இவர்களின் நிலையை விளக்கிடுவேன்.

ஆண்டவா… ஆண்டவா…
ஆண்டவா…. ஆண்டவா…!

ஆண்டவன் எங்குள்ளான்…?
ஆண்டவன் எங்குள்ளான்…?
என்றே அறிந்திட… “ஆண்டவனை”
எங்கும் எதிலும் காண்பதற்கே
என்னையே நான் ஆண்டவனாக்க…
என்னில் அவ் ஆண்டவனை
என்றும் கண்டிடவே….!

என்னுள்ளே அன்பையும்
சத்தியத்தையும் தர்மத்தையும்
அஹிம்சையையும் ஏற்றிடவே

ஏற்றிய வழியினிலே
ஆண்டவனைக் கண்டிடவே
ஆண்டவா… ஆண்டவா…!
என்றே நம் ஆத்ம
ஜோதியை வணங்கிடுவோம்

அகிலத்திலே அகிலமாக
ஆவியின் ஆவியாக
ஆவியின் சக்தியே
ஆவியே ஆண்டவனே…!

ஆவியின் பிம்பமான
அனைத்து பிம்பமுமே
ஆண்டவன் என்று கண்டு
ஆண்டவா ஆண்டவா…!
என்றே வணங்கிடுவோம்…!

“எல்லோரும் பேரின்பம் பெற வேண்டும்...” என்று எண்ணுவதுதான் ஏகாதசி விரதம்

 

1.தன் உடலில் எது இயக்குகின்றது...? என்று தனக்குத் தானே சிந்தித்து
2.தீமைகள் நம்மை இயக்கவிடாது தடுத்து அருள் உணர்வைப் பெருக்கி
3.இருளை அகற்றி வாழ்க்கையில் செவ்வென வாழ்ந்து
4.இந்த உடலுக்குப்பின் உயிருடன் ஒன்றி ஒளியின் உடலாகப் பெறும் தகுதி பெறும் சந்தர்ப்பம்தான்
5.இங்கே தியானத்தில் யாம் கொடுக்கக்கூடிய பயிற்சி.

ஆனால் சிலருடைய ஆசைகள் எப்படி இருக்கிறதெனறால் உடலைப் பார்ப்பதற்குத் தான் தியானம் செய்கின்றார்களே தவிர... உடலுக்குப்பின் நாம் எப்படி நிலையாக இருக்க வேண்டும்...? என்று எண்ணவில்லை.

அழியாத நிலைகள் கொண்டு உயிர் என்றுமே நிலையாக இருக்கின்றது. அதை நாம் தியானித்து அந்தச் சக்தி பெற வேண்டும் என்று இல்லை.

1.தியானம் இருந்தேன் நல்லதானது...
2.காப்பாற்றினார் கடவுள் ஆகிவிட்டது...! என்ற இந்த உணர்வுக்கு நாம் சென்றால்
3.மீண்டும் புவியின் ஈர்ப்புக்குள் தான் வருகின்றோம்.

அப்படி இல்லாதபடி எல்லோரும் அந்த அருள் உணர்வு பெற வேண்டும் என்ற ஏகாந்த நிலையை நாம் கொண்டு வர வேண்டும்.

வாழ்க்கையின் நிமித்தம் எத்தனையோ நினைக்கின்றோம்... எண்ணியபடி காரியங்கள் நடக்கவில்லை என்றால் உடனே வருத்தம் வருகின்றது... அப்பொழுது வேதனை வருகின்றது.

அப்போது எந்தப் பற்று வருகிறது...? வேதனை என்ற பற்று தான் அதிகமாக வருகிறது.

இதைப் போன்ற நிலைகளிலிருந்து எல்லாம் விடுபட்டு அருள் ஞானத்தை வளர்ப்பதற்குண்டான நிலைகளை நாம் செயல்படுத்த வேண்டும்.

எப்பொழுதுமே... எதிலுமே... உடல் பற்று இல்லாதபடி... உயிர் எப்படி உணர்வை ஒளியாக மாற்றுகின்றதோ அதே போன்று எல்லோருக்கும் அந்த அருள் பெற வேண்டுமென்ற அந்தப் பற்றினை நாம் வளர்க்க வேண்டும்.

அதைப் பற்றுடன் பற்றி இந்த வாழ்க்கையில் வரும் இருள் என்ற நிலையைப் பற்றற்றதாக மாற்றி விட வேண்டும். “இது தான் தியானம்...”

1.தியானம் இருந்தேன் கல்யாணம் நடந்தது...
2.தியானம் செய்தேன் சொத்து வந்தது... அது வந்தது... இது வந்தது... என்று வெறுமனே சொல்லிக் கொள்ளலாம்.
3.ஆனால் இதற்கு ஆசையைக் கூட்டக் கூடாது.

நலமாக வேண்டும் என்று ஆசைப்படலாம்... அந்த அருள் உணர்வு பெற வேண்டும் என்ற அந்த இச்சை வரவேண்டும். இச்சாசக்தி... கிரியாசக்தி...!

அந்த துருவ நட்சத்திரத்தின் உணர்வைப் பெற இச்சைப் படும்பொழுது உயிரிலே பட்டுக் கிரியையாகி அந்த ஞானத்தின் வழி நம்மை வழிநடத்தும்.

உடலுக்கு என்று நாம் இச்சைப்பட்டு அதைக் கிரியை ஆக்கினால் இந்த வாழ்க்கையின் நிலைக்குத்தான் வரும்.
1.சிறு குறையானால் தடைப்பட்டால் ஞானத்தை இழக்க வேண்டி வரும்.
2.இதைப் போன்ற நிலையிலிருந்து விடுபட்டு அருளைப் பெறுக்க வழி காட்டுகின்றோம்.

வாழ்க்கையில் வரக்கூடிய பற்றை எல்லாம் நீக்கி “எல்லோரும் பேரின்பம் பெற வேண்டும் என்று எண்ணுவதுதான் ஏகாதசி விரதம்...”

அன்று ஒரு நாள் முழுவதும்... அந்த மாதம் முழுவதற்கும் அதில் வரக்கூடிய குறைகளை நீக்குவதற்கும் பிறருடைய பகைமைகளைக் குறைப்பதற்கும்... அவர்களுக்கெல்லாம் அருள் பெற வேண்டுமென்ற ஏகாந்த நிலை வரப்படும் பொழுது நமக்குள் ஏகாதசி ஆகிறது.

உடலை விட்டுப் பிரியும் சமயம் யாரிடமும் பகைமை இல்லாது சென்றால் பிறவியில்லாத நிலை அடைகிறோம்... பத்தாவது நிலை அடைகின்றோம்.... ஏகாதசி விரதம் என்ற முழுமைக்கு வருகின்றது.

ஆகவே 12 மாதங்களிலும் 12 ராசிகளிலும் மாறி வரப்படும் பொழுது ஒவ்வொரு ராசியிலும் ஒவ்வொரு மனிதனுடைய உணர்வுகள் அந்த ராசிகள் மாறப்படும் பொழுது அதை எப்படி மாற்றவேண்டும் என்று தான் தத்துவ ஞானிகள் கூறியுள்ளார்கள்.

1.வைகுண்ட ஏகாதசி...! - எல்லோரும் ஏகமாகச் சேர்ந்து
2.ஒருவருக்கொருவர் பகைமை உணர்வுளை இழுக்காதபடி
3.துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி அனைவரும் பெற வேண்டும் என்று ஏங்கி இருக்க வேண்டும்.

வெறுப்பு வேதனை சலிப்பு சஞ்சலம் சங்கடம் கோபம் குரோதம் இவையெலலாம் மனித உடலுக்குள் வராதபடி தடுத்து அனாதையாக்குதல் வேண்டும்.

அப்படி ஆனாதையாக்கினால் காலையில் ஆறு மணிக்கெல்லாம் அந்த உணர்வுகளைச் சூரியன் கவர்ந்து மேலே சென்று கொண்டு விடுகிறது.

சூரியன் கவர்ந்து சென்று விட்டால் நம் ஆன்மா தூய்மை அடைகிறது... ஜீவாத்மா தூய்மை அடைகிறது... உயிராத்மா ஒளியாகிறது.. இந்தப் பரமாத்மாவும் (காற்று மண்டலம்) புனிதமாகிறது.

இந்த உடலை விட்டுச் செல்லும் நாம் துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்தில் சப்தரிஷி மண்டலத்துடன் இணைகின்றோம்.

ஆகவே அந்தத் துருவ நட்சத்திரத்தின் சக்தியைப் பெறக்கூடிய தகுதியை வளர்த்து எல்லோரும் ஒன்று சேர்ந்து வாழும் தன்மை கொண்டு இதையே நாம் கடைபிடித்தால்
1.ஒளி என்ற உடலும்
2.ஒளியான அறிவும்
3.இருளை நீக்கும் ஞானமும்
4.மெய்ப்பொருள் காணும் சக்தியும் நமக்குக் கிடைக்கும்.

March 12, 2022

உடலுக்குள் புகுந்த ஆன்மாவைப் புனிதப்படுத்தத் தான் வேண்டும்… வெளியேற்ற முடியாது - ஈஸ்வரபட்டர்

 

சக்தியின் சக்திகள்தான் சகலருமே. பாகுபாடு வந்ததெல்லாம் மனிதரின் எண்ணத்தில் தான்...!

அனைத்து உலகமுமே எந்த நிலையில் அமைந்தன...?

அனைத்து உலகத் தன்மையுமே ஆவிதானப்பா. அவ்வாவியே “சக்தி தானப்பா...” அவ்வாவியை எவ்வுலகத்திலும் காணலாம்.
1.நீ காணும் சூரியனும் ஆவிதான் (VAPOR)
2.சூரியனைச் சுற்றியுள்ள 48 மண்டலங்களும் ஆவிதான்
3.நட்சத்திர மண்டலமாகக் காணும் பல கோடி மண்டலங்களும் ஆவிதான்
4.இவ்வுலகமும் நீர் நெருப்பு மாடு மனை நீயும்தான் அனைத்துமே ஆவிதான்.
5.ஏன் சகலமும் ஆவிதான்.
6.சகலத்தில் வந்த ஆவியின் பிம்பம் தான் இன்று நாம் காணும் அனைத்துமே.

ஆவி என்றாலே பேய்… பிசாசு… என்று மக்களின் மனதில் பீதியை ஏற்படுத்தி விட்டார்கள். இப்பீதியை ஏற்படுத்தி யாவரும் அவ்வெண்ணத்தில் கலந்த பயத்தினால் வந்ததுதான்.

இவ்வாவி என்றாலே…
1.உடலை விட்டுப் பிரிந்து செல்லும் ஆத்மாவையே ஆவி உலகம் என்ற உலகமாக்கி
2.எல்லோர் நினைவிலும் ஆவி என்றாலே அரண்டு நினைக்கும் நிலையில் தான் காலம் காலமாக பழக்கத்தில் வந்துவிட்டது.

ஆவியுடனே ஆவியாக வாழும் நாம் நம்மைப் போல் வாழ்ந்த உடலை விட்டுச் சென்ற ஆவிகள் தன் எண்ணத்தின் நிலை கொண்டு அது அது எடுத்த சுவாச நிலையின்படி சுற்றிக் கொண்டுள்ளது.

வாழ்ந்த காலத்தில் நல்லவனாகவும் தீய நினைவு கொண்ட விஷம் படைத்தவனாகவும் வாழ்ந்ததை நிலைப்படுத்தி தன் குரோதத்திலும் நல் நிலையில் உள்ள நல் ஆவியும் சுற்றிக் கொண்டே உள்ளது.

1.இவ்வுலகினிலே தன் எண்ணத்தை முதலில் செயல்படுத்தி
2.அதன் பிறகு பிறவி எடுக்கலாம் என்ற நிலையில் பல ஆவிகள்
3.அதாவது உடலை விட்டுச் சென்ற ஆவிகள் உடலுடன் உள்ள மனிதர்களின் எண்ணத்துடன் கலந்து செயல்படுத்திட
4.இரண்டு எண்ணமும் ஒரு நிலைப்படும் பொழுது
5.உடலுடன் உள்ளவர்களின் உடலில் உடல் கூடு இல்லாத ஆவிகள் அதன் நிலையைச் செயல்ப்படுத்திட இவ்வுடலில் ஏறுகின்றது.

இவ்வுடலில் வந்து ஏறிய ஆவிகள் அவ்வுடலில் இருந்து கொண்டே தன் எண்ணப்படியெல்லாம் உடலுடன் உள்ள வரை செயல்படுத்துகிறது.

பல துர் ஆவிகளின் நிலைக்கு ஆளாகும் உடலுடன் உள்ளவர்களுக்கு அவர்களின் எண்ணத்தை நல்ல நிலைப்படுத்திட அவ்வாவிகள் அவர்களை விடுவதில்லை.

நாம்... அவர் செய்யும் பாவங்கள் என்று எண்ணுகின்றோம். பாவத்தை அவன் மட்டும் செய்யவில்லை. அவனை ஆட்டுவிப்பது அத் துர் ஆவியின் நிலைதான்.

1.அறியாமல் தன் எண்ணத்தில் களங்கம் வைத்திருப்பவனுக்கு
2.துர் ஆவிகளின் செயலுக்குத் தன்னை அடிமைப்படுத்தி வாழ்கின்றோம் என்று உணர்ந்து வாழ்ந்தால்
3.தன் எண்ணத்தைச் சுத்தப்படுத்தி புனித வாழ்க்கை வாழ்ந்து
4.இத் துர் ஆவியின் நிலையிலிருந்து தன் நிலையை உயர்த்தி வாழ முடியும்.

பேய் பிடித்துள்ளது… பிசாசு பிடித்துள்ளது… ஆவியை ஓட்ட வேண்டும்… என்றெல்லாம் ஆவியை ஓட்ட வேப்பிலை தட்டிப் பல வித ஒலிகளை எழுப்பும் வாத்திய இசையை இசைத்து அவ்வாவியை ஓட்டுவதாகச் சொல்கிறார்கள்.

எவ்வாவியை யார் ஓட்ட முடியும்...?

அவ்வாவிக்குப் பிற உடலில் ஏறித் தன் எண்ணத்தைச் செயல்படுத்திடத்தான் முடிந்திடுமே தவிர உடலில் இருந்து வெளி வந்திட அவ்வாவிக்குச் சக்தியும் திறமையும் இல்லை.

அவ்வுடல் என்று மாறுபடுகிறதோ அதனுடன் தான் இவ்வாவியும் வெளிப்படுகின்றது. பிற உடலில் ஏறிய இவ்வாவியினால் மனித ஜென்மத்திற்கு ஜெனனத்திற்கு வர முடிந்திடாது.

ஆண்டவன் சக்தியில் அருளிய ஏழு ஜென்மங்களையே பல ஆவிகள் பயன்படுத்திடாமல் ஆவி உலகிலும் தன் ஆசையை செயல்படுத்திட மற்ற உடலில் ஏறி தன் ஆத்மாவுக்கு அடங்காத இன்னலைத்தானே தேடிக் கொடுக்கின்றது.

ஒருவர் உடலில் இருந்து அவர் ஆவி பிரிந்து செல்லும் பொழுது அவ்வுடலுக்குச் சொந்தமான ஓர் ஆவி மட்டுமா பிரிந்து செல்கிறது...?

அவ்வுடலுடன் இருந்த பொழுது அவன் ஏற்றிக் கொண்ட பல ஆவிகளுமே பிரிந்து செல்கின்றன.

அவன் உடலில் ஏறிய ஆவிகளின் சுவாச நிலை மாறுபட்டு பல பல புதிய புதிய இன வர்க்கங்கள் வருவதுவும் இம்மனித மனங்கள் எடுத்த சுவாசத்தின் நிலையிலிருந்துதான்.

துர் ஆவியைப் போலவே...
1.நல் நிலையில் நம் சுவாசம் கொண்டு பல நிலைகளைத் தன்னுள் காணும் ஒவ்வொருவருக்கும்
2.அந்நிலையில் அவர் உடலில் ஏறிய ஆவிகளும்
3.அவர் எடுத்த அவ்வுடலுடன் உள்ளவரின் சுவாச நிலை கொண்டு
4.அவ்வுடலில் ஏறிய நல் நிலை பெற்ற ஆவிகளும்
5.இவ்வுடலுடன் இருந்தவனின் ஆத்மா பெறும் பாக்கியத்தையே அவையும் பெறுகின்றன.

அதாவது தன் ஆத்மா மட்டும் சாந்தி பெறுவதில்லை. பல ஆத்மாக்களுக்கும் விமோசனம் கிடைக்கின்றது.

March 11, 2022

நஞ்சை வடிகட்டும் வலுவான உறுப்புகளாக... நம் உடல் உறுப்புகளை உருவாக்க வேண்டும்

 

மாமகரிஷி ஈஸ்வராய குருதேவரிடம் யாம் பெற்ற அனுபவங்கள் கொஞ்சநஞ்சமல்ல. அனைத்தையும் யாம் உங்களுக்கு எடுத்துச் சொல்ல வேண்டும்.

1.குருநாதர் கொடுத்த அந்த அருளை ஒவ்வொரு நொடியிலும் உங்களுக்குள் பதிவு செய்கின்றோம்
2.கண்ணின் நினைவை அதிலே செலுத்தப்படும் பொழுது கெட்டது போகாமல் உங்களுக்குள் தடுக்கப்படுகின்றது.

அதே நினைவு கொண்டு உள்முகமாக உங்கள் உடலுக்குள் இரத்த நாளங்களில் செலுத்தி உடல் உறுப்புகளை உருவாக்கிய அணுக்கள் அனைத்தும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்று செலுத்தினால் வீரியமடைகின்றது. உடலுக்குள்ளே வலுவான பின் தீமைகளைத் தள்ளிவிட்டு விடுகின்றது

உதாரணமாக ஒரு வேதனைப்படுபவரைப் பார்க்கின்றோம். மீண்டும் அவரை நினைக்கும் பொழுது அந்த வேதனை வருகின்றது. வேதனையான உணர்ச்சி வரப்படும்போது
1.ஒரு பலகாரத்தைச் சுட்டுக் கொண்டிருந்தால் சரியாகச் செயல்பட முடியாது.
2.ஒரு இயந்திரத்தில் வேலை செய்தாலும் அதைச் சீராக இயக்க முடியாது
3.ஒருவர் சந்தோஷமான வார்த்தையைச் சொன்னால் காது கொடுத்துக் கேட்க முடியாது.

இப்படி ஒரு சமயம் பதிவானது மறுபடியும் இந்த உணர்வு கலக்கப்படும் பொழுது நம்மால் சரியான பதிலும் சொல்ல முடியாது போய்விடுகிறது. அதனால் இது போன்ற நிலைகளை எல்லாம் மாற்றி பழகுதல் வேண்டும்.

சூரியன் தனக்குள் உருவாகும் பாதரசத்தால் 27 நட்சத்திரங்களும் பிற மண்டலங்களில் இருந்து விஷமான நிலையைக் கொண்டு வரப்படும் பொழுது இது மோதி அந்த விஷத்தைப் பிரித்து விடுகின்றது.

அதிலே...
1.கேது விஷத்தை எடுத்துக் கொள்கின்றது
2.இராகு கருகிய புகைகளை எடுத்துக் கொள்கின்றது
3.ஓடும்போது மின் கதிர்களை வெள்ளிக் கோள் எடுத்துக் கொள்கிறது.
4.மோதலில் வரக்கூடிய சப்தத்தைச் செவ்வாய்க் கோள் எடுத்துக் கொள்கின்றது
5.மோதி ஆவியாகப் பிரிந்து செல்வதை சனிக்கோள் எடுத்துக் கொள்கின்றது.

இப்படி அதனதன் வலு கொண்டு அதனதன் நிலைகளில் எடுக்கின்றது.

சூரியனுக்கு எப்படி இந்த பிரபஞ்சத்தில் உள்ள கோள்கள் இருக்கின்றதோ அதே போன்றுதான் நமக்குள் சுவாசித்த பின் இரத்தத்தில் கலந்த உணர்வுகள் உடலில் உள்ள உறுப்புகளில் இயங்குகின்றது.

கல்லீரல் ஓரளவுக்கு விஷத்தைப் பிரித்து வடிகட்டி அனுப்புகின்றது.
1.அங்கு அதிகமான விஷத்தன்மையானால் முடியாது போகிறது... விட்டு விடுகிறது.
2.மண்ணீரலுக்குப் போனாலும் இதே நிலைதான்.
3.அதை இழுத்து நுரையீரலுக்கு வரும் பொழுது அங்கே தேங்கினால் நுரையீரலும் கெட்டு விடுகின்றது.
4.நுரையீரல் கெட்டு அந்த விஷத்தின் தன்மை அனுப்பப்படும் போது சிறுநீரகம் இரத்தத்தில் இருக்கக்கூடிய மாசுகளை பிரிக்கும் தன்மை இழந்து விடுகின்றது.

உப்புச் சத்தையோ சர்க்கரைச் சத்தையோ பிரிக்க முடியவில்லை என்றால் அந்தச் சத்துக்கள் எல்லாம் அளவு கூடி விடுகின்றது... வாத நீர்களை உண்டாக்கிவிடுகிறது.... பலவீனமாகி விடுகிறது.

அத்தகைய பலவீனத்தை மாற்ற வேண்டும் என்றால் துருவ நட்சத்திரத்தின் உணர்வைச் சிறுகச் சிறுக... சிறுகச் சிறுக நமக்குள் சேர்த்துக் கொண்டே வர வேண்டும்

துருவ நட்சத்திரத்தின் வளர்ச்சி அதிகமானால் சர்க்கரை சத்தையும் உப்புச் சத்தையும் குறைக்க முடியும். ஆகவே...
1.உடல் உறுப்புக்கள் அனைத்தும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் சக்தியைப் பெறும்படி செய்து விட்டால்
2.இந்த உடலுக்குப்பின் உயிருடன் ஒன்றி ஒளியின் உடலாக பெறக்கூடிய தகுதி பெறுகின்றோம்.

மனிதன் ஒருவனால் தான் இது முடியும்.

கோலமாமகரிஷி ஆட்கொண்ட ஆதிசங்கரரின் அருளாற்றலை எடுத்தால் ஆவிகளிடமிருந்து மீளலாம் - ஈஸ்வரபட்டர்

 

அன்றாட வாழ்க்கையில் ஆவியின் தொடர்பில்லாமல் வாழ்வது மிகவும் கடினமான நிலை. தன் எண்ணத்தைச் செயல்படுத்திட எந்த ரூபத்திலும் அவ்வாவி செயல்படுத்திடும்.

அவ்வாவியின் எண்ணமெல்லாம்...
1.தான் முன் ஜென்மத்தில் விட்டு வந்த குறையை
2.எந்தெந்த நிலையில் யார் யார் மேல் அன்பு பாசம் ஆசை குரோதம் வெறுப்பு விருப்பு கொண்டு வளர்ந்ததோ
3.இவை எல்லாவற்றையுமே எந்த ரூபத்திலும் அந்த எண்ணத்திற்குகந்தவர்கள் கிடைத்தவுடன்
4.அவர்களின் உடலில் எப்பாகத்திலும் ஏறி அவர்கள் எண்ணத்துடனே கலந்து தன் நிலையைச் செயல்படுத்திக் கொள்ளும்.

நம் குடும்பத்தில் இருந்து பிரிந்து சென்ற ஆவிகள் மட்டும் நம்மை வந்து காத்துச் செயல்படுத்தும் என்பதல்ல. இவ்வுலகில் சுற்றியுள்ள எந்த ஆவியும் தன் எண்ணத்தைச் செயல்படுத்திடத் தனக்குகந்த உடலை எடுத்துக் கொள்கின்றது.

ஆவியின் நிலை இந்நிலையில் உள்ளதினால் இதை உணர்ந்த ஜெபம் கண்ட நம் முன்னோர் பலர் இந்நிலையிலிருந்து மக்களை மீட்கத்தான் பல வழிகளை நமக்கு உணர்த்தினார்கள்.

இவ்வுலகம் முழுவதுமே ஆண்டவன் என்றால் யார் என்று சொல்கிறார்கள்...?

ஒவ்வொரு நிலையிலும் ஒவ்வொரு நிலைப்படுத்தித் தான் வணங்கும் பக்தியைக் கொண்டே அவர்களுக்கு உகந்த நிலையை ஆண்டவனாக்கி வணங்குகின்றார்கள்.

அனைத்து உலகிலுமே இவ் ஆவி என்னும் பயந்த கிலி நிலை பரவித்தான் உள்ளது. பலரின் கண்களுக்கு ஆவியின் நிலை புலப்படுவதையும் கேட்டிருப்பீர்.

சில நிலைகளில் ஆவியின் நிலையையே ஆண்டவனாக வணங்குகின்றார்கள். சக்தி நிலையறிந்து சக்தியான அவ்வாண்டவனைக் கண்டவர்கள் யார் உள்ளார்கள்...?

நம் ரிஷிகள் எல்லாரும் நம்மை இவ்வாவியின் நிலையில் இருந்து தப்ப பல ஜெப வழிகளை நமக்குணர்த்தி அச்சக்தியிலிருந்து தான் பெற்ற பல நல் உணர்வுகளை நமக்கு ஊட்டினார்கள்.

அந்த நிலையில்தான் கோலமாமகரிஷி அவர்கள்...
1.தன் ஜெபத்தை... தான் பெற்ற அருள் செல்வத்தை...
2.அனைவரும் உணர்ந்து நல் வழிக்கு மக்களைச் சீர்படுத்த ஆதிசங்கரரின் உடலில் அவர் நிலையை ஏற்றி
3.ஆதிசங்கரரையே அனைவரும் தெய்வமாகக் காணும் நிலைக்கு
4.அவர் உடலில் இவர் இருந்து பல செயல்களைச் செய்து வந்தார் ஆதிசங்கரரின் ரூபத்திலேயே.

அவர் சொல்லி வந்த உபதேசங்களை வழி நடத்திட பல இடங்களில் பல மடாலயங்கள் அமைத்தார்கள். அந்நிலையையே வழி வழியாய் இன்று மக்களுக்கு உணர்த்துவதற்காக சங்கராச்சாரியார்கள் என்று மத வழியை அவ்வழியில் புகட்டி வழி நடத்தி வருகின்றார்கள்.

நல்வழியில் வந்த நிலைதான் ஆதிசங்கரரின் நிலை. ஆனால் அனைவரையும் ஒன்று போல் எண்ணும் நிலைக்கு இல்லாமல் மாறியதின் நிலை இன்றுள்ள நிலை.

1.பக்தி மணம் உள்ளது
2.பக்தி மணத்தில் எல்லா மணமும் ஒன்றே என்னும் ஒரே மணத்தைப் பரப்பிவிடாமல்
3.அம்மணத்துடன் சிறு விஷமான மணமும் கலக்கவிட்டு விட்டார்கள்.

இந்நிலையில் சிறிதளவு மாற்றும் தன்மை இன்று வந்தாலும் அவர்கள் வழியிலேயே உலகத்தையே தெய்வ மணமாக்கிடலாம்.

இவ் ஈஸ்வரபட்டனாகிய நான் இக்கலியின் ஆரம்பத்தில் ஓர் உடலை ஏற்று இப்பக்தி மணத்தைப் பரப்பியதுவும் ஜாதி நிலையில் இருந்துதான். ஜாதியின் மதத்தின் நாமத்தைச் செப்பிட விரும்பாததினால் இந்நிலையில் செப்பவில்லை நான்.

வழி வழியாய் வந்த வினைதான் இவ்வினை. நாமாக ஏற்ற நிலையல்ல. நாமாக மீளும் நிலையைத்தான் இனி அனைவரும் எண்ணத்தில் கொண்டு செயல்படுத்திட வேண்டும்.

ஆதிசங்கரராய் வணங்கிடும் கோலமாமகரிஷி அவர்கள் இன்றும் உள்ளார். என்றும் இருப்பார்...!

இன்று அவர் நடத்திச் சென்ற வழியில் வந்த சங்கரர் வழியில் இருந்திடும் பல ஜெபங்கள் செய்து பூஜிப்பவர்கள் அவருடன் தொடர்பு கொள்ள வேண்டுமென்றால்...
1.அவரிடத்திலுள்ள சிறு கறையையும் நிறைவாக்கி ஜெபம் பெறும் பொழுது
2.அந்த ரிஷிகளின் தொடர்பு பெற்று... இன்று மகான் என்ற இன்றுள்ள மனிதர்களால் நாமம் பெற்றவர்கள்
3.சப்தரிஷிகளின் சொல் நாமத்தை ஏற்றிடலாம்.

மாமகான் என்ற நாமத்துடனே பல ரிஷிகளுடனும் கலந்திடலாம் இப்பாக்கியத்தை எண்ணி வழியமைத்து வந்திட்டாலே...!

March 10, 2022

தியானத்தில் வளர்ச்சி மிக மிக முக்கியமானது

 

உங்கள் வாழ்க்கையில் இந்தத் தியானம் செய்வதற்கு முன் இருந்த அனுபவமும் தியான வழிக்கு வந்த பின் பெற்ற சில அனுபவங்களும் உங்களுக்குத் தெரியும்.

அதனை நீங்கள் கூர்ந்து கவனித்து
1.அந்த உணர்வின் இயக்கம் நாம் இயங்குகின்றோமா...?
2.நுகர்ந்த உணர்வு நம்மை இயக்கியதா...?
3.அவ்வாறு இயக்கிய உணர்வுகளுக்குத் தக்க நாம் செல்கின்றோமா...? என்று
4.நன்றாக நாம் தெளிவாக தெரிந்து கொள்ள வேண்டும்.

நாம் உணவாக உட்கொள்ளும் உணவுக்குள் மறைந்து வரும் நஞ்சினை நம் உடல் மலமாக மாற்றுகிறது. ஆகவே தீமை என்ற உணர்வின் தன்மையை மாற்றியமைக்கக் கூடிய சக்தி மனிதனுக்கு உண்டு.

அதை நாம் எப்படி மாற்றி அமைக்க வேண்டும்...? என்பதை உணர்ந்து... மாற்றி அமைப்பதற்குண்டான சக்தியை நீங்கள் பெற்றுப் பழகுதல் வேண்டும்.

எனக்கு (ஞானகுரு) எப்படித் தீமையிலிருந்து தப்புவதற்கு அந்த துருவ நட்சத்திரத்தின் உணர்வை குருநாதர் எனக்குள் பெறச் செய்தாரோ அதைப் போன்று உங்களுக்குள்ளும் அதைப் பெறச் செய்து கொண்டிருக்கின்றோம்.

இதை நீங்கள் வளர்த்துக் கொண்டால்
1.முந்தைய தீய வினைகள் இருந்தாலும் குறையும்.
2.புதிதாக தீயவினைகள் நமக்குள் வளராதபடி தடுக்க முடியும்.

இந்த இரண்டும் இல்லை என்று சொன்னால் நான் தியானம் செய்தேன்.. அதைச் செய்தேன்... இதைச் செய்தேன்...! என்று சொன்னால் அர்த்தமற்றது.

செடிக்கு அது சரியான பருவத்தில் நீரை ஊற்றிக் கொண்டே இருந்தால்தான் அது முளைத்து வளரும்.
1.செடியை வைத்து விட்டேன்... நீரையும் ஊற்றி விட்டேன்...
2.அது வளர்ந்து விளைந்துவிடும்... என்று சொன்னால் அது எப்படி விளையும்...?

எத்தனையோ கோடி உடல்களில் சந்தர்ப்பவசத்தால் எடுத்துக் கொண்ட உணர்வுகள் கொண்டு தான் மனித ரூபத்தைக் கொடுத்தது நம் உயிர்.

பல விஷத் தன்மைகளை அடக்கினான்... உணர்வின் தன்மை மாற்றி அமைத்தான்... அகஸ்தியன் ஒளியின் உடல் பெற்றான்... துருவ நட்சத்திரமாக இன்றும் இருக்கின்றான்.

அதிலிருந்து வரக்கூடிய உணர்வினை நம் உடலில் இருக்கக்கூடிய ஒவ்வொரு அணுக்களுக்கும் பெறச் செய்ய வேண்டும். அந்தத் தகுதியை நாம் பெற வேண்டும்.

அகஸ்தியன் ஒளியாக ஆனது போல
1.நாமும் நம் உடலில் இருக்கக்கூடிய அணுக்களைச் சிறுகச் சிறுக மாற்றி
2.முந்திய வினைகள் இருந்தால் அதைத் தணித்து... புதிதாக வினைகள் சேராதபடி தடுத்து
3.நம் உணர்வினை வலுவாக்கி ஒளியாக்க முடியும்.

அத்தகைய வலு பெறச் செய்வதற்குத் தான் இங்கே உபதேசம் கொடுப்பது.

சாமியிடம் உபதேசங்களைக் கேட்டதும்... அதன்படி உங்கள் வாழ்க்கையில் நடந்து கொண்டதும்...
1.உங்களை எது இயக்கியது...?
2.வெறுப்பு வந்து குடும்பத்தில் பகைமை எப்படி வந்தது...?
3.தொழில் எதனால் நஷ்டம் அடைந்தது...? என்பதை நீங்கள் உணர்ந்து
4.தியானத்தின் மூலம் அனுபவபூர்வமாகப் பெற்ற தீமையை நீக்கக்கூடிய அந்த உணர்வுகளை
5.நீங்கள் வெளிப்படுத்தும் பொழுது எல்லோருக்கும் இது பயனுள்ளதாக அமையும்.

அதற்குத் தான் உங்கள் அனுபவங்களைச் சொல்லச் சொல்வது.

புகழுக்கும் பேராசைக்கும் அடிமைப்பட்டுத் தான் இன்றைய உலகம் உள்ளது - ஈஸ்வரபட்டர்

 

அன்றாண்ட அரசர்கள் தன் பெயர் நிலைக்கத் தன் புகழ் ஓங்க... கோயில்கள் மூலமாகத் தன் பெயரை நிலைநாட்டினார்கள்.

கோயில்களைச் ஸ்தாபிதம் செய்து அந்நிலையில் பல கல்வெட்டுகளில் தன் பெயர் நிலைக்கத் தன் புகழின் ஆசைக்காக தன்னால் எழுப்பிய கோயிலிலேயே தன் பெயரையும் கல்வெட்டில் செதுக்கி வைத்து அவர்கள் பெயர் என்றுமே அழியாமல் இருக்க வேண்டுமென்றே புகழ் ஆசையினால் பல கோயில்களைக் கட்டினார்கள்.

புகழின் ஆசையில் வந்ததுதான் இன்று நாம் சென்று வணங்கும் பல கோயில்களின் நிலை. அக்கோயிலை ஸ்தாபிதம் செய்த அவ்வரசர்களின் ஆவிகளும் அந்நிலையிலேயே தான் சுற்றிக்கொண்டுள்ளன.

1.இன்று நாம் வாழ்ந்திடும் இந்நாட்டில்... ஆண்டவனின் பெயரையே
2.தன் புகழுக்காகத்தான் அன்றாண்ட அரசன் முதல் இன்று வாழ்ந்திடுபவர் வரை எண்ணி வணங்குகின்றோம்.

ஆண்டவன் என்பது எந்நிலையில் உள்ளது பார்த்தாயா...?

அன்று இருந்தவர்களின் குண நிலையைப் பொறுத்துத்தான் இன்று வாழும் மக்களின் நிலையும் உள்ளது. வழி வழியாய் வந்த மக்களின் “சுவாச நிலை” மாறுபடவே இல்லை.

மனித உடலை விட்டு ஆவி உலகுக்குச் சென்றாலும் தன் எண்ணத்தைச் செயல்படுத்திட அவ்வாவிகளுக்கு ஆசையும் அடங்கவில்லை.

அவ்வெண்ணத்தின் தொடர்ச்சியில் வரும் எண்ணம்தான் இப்பொழுது உள்ளவர்களின் நிலையும்.
1.புகழ் ஆசையினால் வந்த வினைதான் இன்று இவ் உலகம் உள்ள நிலையும்
2.புகழுக்காக ஏங்கிடும் எண்ணம்தான் எல்லோருக்குமே இன்று உள்ளது.

இன்றிருப்பவரின் மன நிலை அவர்கள் செய்த நிலை மட்டுமல்ல தொடர்ந்து கொண்டே வரும் “பல ஆவிகளின் தொடர்தான்...”

“புகழ்…” என்னும் பேராசைக்கு அடிமைப்பட்டதினால் இன்றுள்ள எல்லோரின் மனமும் புகழ் ஒன்றுக்கே எண்ணி ஏங்கும் நிலையில் உள்ளது.

காலத்தையே விஷமாக்கியவர்கள் அன்றாண்ட அரசர்கள்தான். மனிதர்களின் மனதையெல்லாம் பேராசைக்கு உட்படுத்தியவர்களும் அவ்வரசர்கள்தான். அவ்வெண்ண நிலை இன்றும் இங்கு மாறவில்லை.

பல கோயில்களில் ஆண்டவனின் விக்ரகங்கள் களவாடும் நிலை எப்படி வந்தது...? கயவனை அவ்வாண்டவன் பிடித்துத் தரக்கூடாதா...? அவனுக்கு நல்வழி புகட்டக் கூடாதா...? என்றெல்லாம் ஆண்டவனை நாம் பல வினாக்களைக் கேட்கின்றோம்.

கல்லான விக்ரகம்தான் ஆண்டவன் என்பது. எடுத்துச் செல்பவன்... தான் அவனின் எண்ணத்தின் பேராசையினால் களவாடிச் செல்கின்றான். கல் என்ன செய்யும்...?

ஆனால் சில கோயில்களில் களவாடிச் செல்லும் விக்ரகங்கள் எடுத்துச் செல்பவன் உதிரம் கொட்டி இறப்பது எந்நிலையில்...?

அக்கோயிலை ஸ்தாபிதம் செய்த ஆவி வந்து அவனை அடித்துக் கொன்று விடுகிறது. ஆவியின் நிலையும் தொடர்பில்லாத சில கோயில்களில்தான் அவ்விக்கிரகங்கள் களவு போகும் நிலையில் உள்ளன.

ஆவி நிலையில் உள்ள எந்தக் கோயிலின் விக்ரகமும் களவாடிச் செல்பவனின் நிலையைப் பார்த்து அவனை விட்டு வைத்திடாது. பல கோயில்களின் நிலையும் இந்நிலையில்தான் இன்றுள்ளது.

ஆண்டவன் என்னும் ஆண்டவனையே இந்நிலைக்கு வந்ததின் நிலையெல்லாம் அரசர்களினால் வந்த வினைதான்...!

தெய்வ பக்தியும் நல்லொழுக்கமும் நற்போதனையும் மக்களின் எண்ணத்தில் பதியச் செய்து ஆத்மீக வழியில் அன்புடன் வாழ்வதற்கு வழியமைத்துச் சென்றிடாமல் இக்கலியின் காலத்தையே விஷமாக்கி இவ்விஷத்தின் தொடர்புடனே வாழ்கின்றான் ஒவ்வொரு மனிதனும்.

இந்நிலையில் ஜாதி மதம் என்ற வேலி வேறு. இதைப் படித்திடும் ஒவ்வொருவரும்
1.தன் எண்ணத்தைத் தூய்மைப்படுத்துங்கள்
2.சத்தியத்தை உம்முள் ஐக்கியப்படுத்துங்கள்
3.அன்பையே ஆண்டவனுக்கி வணங்கிடுங்கள்.

தெய்வத்தைக் கண்ட பேரானந்தப் பொக்கிஷத்தை நம் ஆத்மா என்ற ஆண்டவனுக்கு அர்ப்பணித்தே வாழ்ந்திடலாம். ஒவ்வொருவரும் இன்று சூழ்ந்துள்ள விஷத் தன்மையில் இருந்து மீண்டு தன்னைத் தானே உணர்ந்து வாழ்வதற்கே இப்பாட நிலையும் ஜெப நிலையும்.

March 9, 2022

தியானப் பயிற்சி

 

அம்மா அப்பா அருளால் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் அருள் சக்தியால் அகஸ்தியன் துருவனாகி துருவ மகரிஷியாகி துருவ நட்சத்திரமான அதனின்று வரும் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா.

கண்ணின் நினைவைத் துருவ நட்சத்திரத்தின் பால் செலுத்தி... அதனின்று வரும் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா... என்று கண்களை மூடிப் புருவ மத்தியில் இயங்கிக் கொண்டிருக்கும் உயிரான ஈசனிடம் வேண்டி ஏங்கித் தியனியுங்கள்.

உங்கள் உடல் உறுப்புகளை உருவாக்கிய அணுக்கள் அனைத்தும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளைப் பெறுவதற்குத்தான் இந்தத் தியானப் பயிற்சி.

வேதனை... வேதனை... என்று எண்ணும்போது அதை நுகர்ந்தறிந்தால் உடல் உறுப்புகளில் உள்ள அனைத்து அணுக்களும் விஷத்தின் தன்மை பெற்று விடுகின்றது.

எந்த உறுப்பில் விஷத்தன்மை (வேதனை) அதிகமாகின்றதோ அங்கே விஷத்தன்மை கொண்ட அணுக்கள் உருவாகின்றது.
1.அதை மாற்றி அமைப்பதற்கு விஷத்தின் தன்மையை முறித்த
2.துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை நாம் பெறுதல் வேண்டும்.

ஒளி உடல் பெற்ற துருவ நட்சத்திரத்திலிருந்து வரக்கூடிய உணர்வைச் சூரியனின் காந்த சக்தி கவர்ந்து அலைகளாக மாற்றுகின்றது,
1.அதை நாம் கவர்ந்து நம் இரத்தங்களில் கலக்கச் செய்து
2.எல்லா உறுப்புகளுக்கும் கண்ணின் நினைவு கொண்டு செலுத்தப்படும் பொழுது
3.அந்த உறுப்புகளை உருவாக்கிய அணுக்கள் துருவ நட்சத்திரத்தின் பேராற்றலைப் பெற்று வலிமை பெறுகின்றது.

தினமும் இதைச் சேர்த்துக் கொண்டு வந்தால் நம் உடலில் உள்ள பிணிகளையும் மன வேதனைகளையும் சங்கடங்களையும் சலிப்புகளையும் வெறுப்புகளையும் மாற்றிவிடுகிறது.

1.துருவ நட்சத்திரத்தின் சக்தியை எடுத்து இருதயத்தில் செலுத்தப்படும் போது
2.இருதயத்தை உருவாக்கிய அணுக்கள் வீரியமடைகிறது
3.மன உறுதி கொண்டு சிந்தித்து செயல்படும் சக்தியும் நமக்குள் வருகின்றது.

வாழ்க்கையில் அமைதியும் சாந்தமும் கொண்டு வாழ இது உதவும். அதிகாலையில் இதைப் போன்று தியானத்தின் மூலம் சக்தி ஏற்றிக் கொள்ள வேண்டும்.

உதாரணமாக தொழில் நஷ்டம் என்று வைத்துக் கொள்வோம். அதனால் மனம் சோர்வாக இருக்கும்போது அந்த வேதனை இரண்டும் வரப்படும் பொழுது இந்த உணர்வுகள் உமிழ் நீராக மாறி உடலில் இருக்கக்கூடிய அனைத்து அணுக்களுக்கும் விஷத்தின் தன்மை கூட்டிவிடுகிறது.

சோர்வடைந்து விட்டால் சிந்திக்கும் தன்மை குறைகின்றது... தொழில் செய்யும் திறனும் குறைந்து விடுகிறது. கடைசியில் நோயும் வந்து விடுகின்றது.

இதைப் போன்ற நிலைகளைத் தடுக்க வேண்டுமென்றால் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எங்கள் இரத்த நாளங்களில் கலந்து எங்கள் உடல் முழுவதும் படர்ந்து எங்கள் உடல் உறுப்புகளை உருவாக்கிய அணுக்கள் அந்தச் சக்தி பெற வேண்டும் என்று ஐந்து நிமிடமாவது ஏங்கித் தியானிக்க வேண்டும்.

அப்படித் தியானித்தால் சிந்திக்கும் வலிமை பெற்று
1.அடுத்து நம் காரியங்களை எப்படிச் செய்யலாம் என்று உறுதியான எண்ணம் தோன்றும்.
2.நாம் பிறரிடத்தில் உதவியோ மற்றதோ கேட்கப்படும் பொழுது அவர்கள் நமக்கு உதவி செய்யக்கூடிய பக்குவமும் வரும்.
3.குடும்பத்தில் அமைதியும் சாந்தமும் கொண்டு பரிவு கொண்டு வாழ இது உதவும்.

பிற ஆத்மாக்களின் உணர்வின் உந்துதல் இல்லாமல் தன் நிலை உணர்ந்து வாழ வேண்டும் - ஈஸ்வரபட்டர்

 

ஆவியின் தொடர்புடன் தான் பல அணுக்களின் உந்தலினால் நாம் வாழ்க்கை வாழ்ந்து கொண்டுள்ளோம் என்றேன். தாஜ்மஹாலின் நிலையை விளக்கினேன்.

இங்கு பல கோயில்களின் நிலையும் அது போல் தான். தஞ்சாவூர் பிரஹதீஸ்வரர் கோவில் நிலையென்ன...?

அங்கு ஆண்ட இராஜராஜ சோழனின் எண்ணமேதான் அக்கோயில். எவ்வெண்ணம் வைத்து அவ்வரசன் அக்கோயிலை ஸ்தாபிதம் செய்தாரோ அதே எண்ணம் கொண்டே அவ்வரசர் உடலை விட்டு அவ்வாத்மா பிரிந்த பிறகும் அந்த நிலையிலேயே அவ்வாத்மா அங்குள்ளது.

இன்றும் மறு ஜென்மம் எடுத்திடாமல் சூட்சும நிலைக்கும் சென்றிடாமல் ஆசையின் நிலையிலேயே அவ்வாத்மா அங்கே சுற்றிக் கொண்டுள்ளது. இதைப்போலதான் பல கோயில்களின் நிலையும்.

அன்று வாழ்ந்தவர்களின் மன நிலையைப் பொறுத்தே கோயில்களை எழுப்பினார்கள். இங்கு வாழும் மக்களின் எண்ணமும் இங்கு வாழ்ந்தவர்களின் எண்ணத்தின் தொடர்புடன்தான் உள்ளன.

ஒவ்வோர் இடத்திலும் வாழ்ந்தவர்களின் எண்ணம் எந்தெந்த நிலையில் உடலை விட்டுப் பிரிந்து சென்றனவோ அதே நிலையில் தான் அவர்கள் வாழ்ந்த பூமியில் வாழ்பவரின் எண்ணமும் தன் எண்ணத்திற்கு உகந்ததைச் செயல்படுத்த அவ்வெண்ணத்திற்கு உகந்தவர்களின் உடலில் அவ்வாத்மா சென்று தன் எண்ணத்தைச் செயல்படுத்துகிறது.

1.ஒவ்வொரு மனிதனின் நிலையும் இந்த நிலையா...?
2.பிற ஆவிகளின் தொடர்பில்லாமல் யாருமில்லையா...?
3.இங்கு மட்டும்தான் இந்நிலையா...?
4.இவ்வுலகின் மற்ற பாகங்களில் உள்ளவர்களின் நிலையெல்லாம் எந்நிலை...?

இப்படிப் பல வினாக்கள் எழுந்திடலாம் இதைப் படிப்பவர்கள் ஒவ்வொருவருக்குமே.

மன நிலையில் நமக்குள்ள அதி பேராசையும் அதி கோபம் துவேஷம் இந்நிலையை நாம் வளரவிடும் பொழுது பல ஆவிகள் நம்மைத் தாக்கும் நிலைக்கு ஆளாகித்தான் ஒவ்வொருவருமே வாழ்கின்றோம்.

முன் ஜென்மத்தில் நமக்கிருந்த எண்ணத்திற்கும் இஜ்ஜென்மத்தில் வாழும் முறைக்கும் தொடர்புள்ளதினால் ஒரே குடும்பத்தில் வாழ்ந்திடுபவர்களுக்கும் எண்ண நிலை மாறுபடுகிறது. நம் எண்ணத்திற்கு உகந்த அணுக்களின் தன்மையும் நமக்குள் குடிபுகுகின்றது.

1.விதையொன்று போட்டுச் செடி ஒன்று முளைவதல்ல.
2.எண்ணத்திற்கு உகந்த ஆவிகளின் தொடர்பு ஒவ்வோர் உடம்பிலும் உள்ளன.

இந்நிலையிலிருந்து நாம் விடுபட நம் நிலையில் அத்தெய்வ பக்தி என்ற ரூபப்படுத்தி நம் முன்னோர்களென்பது சூட்சும நிலையில் வாழ்ந்திடும் ஆண்டவன் ரூபத்திலுள்ள அரும்பெரும் ஜோதிகள் வழிகாட்டியபடி அஹிம்சையையும் அன்பையும் ஏற்றே பேராசையையும் பெரும் கோபத்தையும் நம்மை அண்டவிடாமல் வாழ்வதுவே நல் வாழ்க்கை.

அவ்வழியினைப் பிடித்து நம்மைச் சுற்றியுள்ள பல ஆவிகளின் ஏவலுக்கு நாம் ஆளாகாமல் இந்நிலையை அறிந்து வாழ்வதுதான் உத்தமம்.

1.ஜோதிடம் கண்டு வாழ்வதுவும் ஆவியின் தொடர்புடன்தான்
2.மை போட்டுக் கேட்பதுவும் ஆவியின் தொடர்புடன்தான்
3.பூ கட்டிக் கேட்பதுவும் கோயில்களில் அருள் வந்து ஆடுபவர்களைக் கேட்பதுவும் ஆவியின் தொடர்புடன்தான்.

வழிவழியாய் வந்தவர்கள் எண்ணத்தில் இருந்து வந்ததுவே ஆண்டவனின் ரூபத்தில் நாமத்தைச் சொல்லித் தன் எண்ணத்தைச் செயல்படுத்த இவ்வாவிகளெல்லாம் வந்து ஆடுவது தான் இன்று நாம் காணும் நிலையெல்லாம்.

இன்று நாம் வாழும் இந்நாட்டில் ஆண்டவனின் ரூபத்தில் ஆவியின் தொடர்பாட்டத்தைக் காண்கின்றோம். இவ்வுலகில் ஒவ்வொரு பாகத்திலும் ஆங்காங்கு வாழ்ந்த மக்களின் எண்ணம் ஒவ்வொரு ரூபத்தில் அவர்கள் ஆவி உலகிற்குச் சென்ற பிறகும் இப்பொழுது வாழ்ந்திடும் மக்களின் ரூபத்தில் வந்தே தான் செயல்படுத்துகிறார்கள்.

ஆவியின் தொடர்பில்லாமல் எத்தேசத்திலும் எந்நிலையும் நடக்கவில்லை...!

விஞ்ஞானியாய் விஞ்ஞானம் பல கண்டு வாழ்பவனுக்கும் அவன் வழியில் இருந்த ஆவியின் தொடர்பினால் தான் இவன் விஞ்ஞானமும் வளர்கிறது. ஒவ்வொரு பாகத்திலும் இவ்வாவியின் தொடர்பு கொண்டுதான் வாழ்கின்றார்கள் மக்கள் எல்லோருமே.

1.தன் நிலை உணர்ந்து வாழ்பவர்கள்தான் சூட்சும உலகிற்குச் செல்கிறார்களே தவிர
2.ஆவியின் தொடர் கொண்டு வாழும் ஒவ்வொருவரும் அடுத்தடுத்தே பல பிறவியை எடுக்கின்றார்கள்.

பல பிறவியில் மனிதராகவே பிறவி எடுத்தாலும் நன்றே...! ஆனால் மனிதப் பிறவி மாறுபட்டு மிருகமாகி மிருகத்திற்கும் கீழ்நிலைக்குச் சென்று புழுவாகி விமோசனமே இல்லாமல் இத்தெய்வமான மனித வாழ்க்கையை ஏன் சிதற விட்டு அழுகும் அணுக்களாக அல்லல்பட்டுச் சுற்றிக் கொண்டே இருக்க வேண்டும்...?

மனித ஜென்மத்திலுருந்து மாறுபட்டு மிருக ஜென்மத்திற்கு வந்தாலே மனித ஜென்மத்தில் நடந்தவை எல்லாமே மிருக ஜென்மத்தில் தெரிந்திடும்.

நடந்தவையை நினைத்தே மிருகமாகி ஒவ்வொரு ஜென்மத்திலும் விட்ட குறையெல்லாம் தெரிந்தே ஏன் அல்லல்பட்டு வாழ வேண்டும்...?

1.இவ்வுடல் என்னும் மாய ரூபம் தான் மாறுபடுகிறது
2.நம் எண்ணம் என்றுமே அழிவதில்லை
3.நம் ஆத்மாவுடனேதான் நம் எண்ணமும் சுற்றிக் கொண்டுள்ளது.

இந்நிலையில் நாம் இருப்பதனை உணர்ந்து ஒவ்வொருவரும் தெளிந்து தெரிந்து வாழ்ந்திட வேண்டும்.

March 8, 2022

நல்ல அணுக்கள் வலு குறையும் போதெல்லாம் துருவ நட்சத்திரத்தை வைத்துச் சார்ஜ் செய்து வலுவாக்க வேண்டும்

 

சாதாரணமாக... ஒரு பேட்டரி இயங்கிக் கொண்டே உள்ளது. அதிலே சார்ஜ் குறைந்து விட்டால் செல்கள் எதுவும் இயங்காது. மீண்டும் ஏற்றினால் தான் இயக்கம் இருக்கும்.

இதைப் போன்று
1.நம் உயிரின் உணர்வு கொண்டு உடலில் உள்ள நல்ல அணுக்களுக்கு
2.அந்தத் துருவ நட்சத்திரத்தின் வீரியத்தை ஊட்டினால் சிந்திக்கும் வலிமை கிடைக்கும்.

மற்ற உணர்வுகளைக் கேட்டுச் சோர்வின் தன்மை வரப்படும் பொழுது
1.அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வைப் பெற்றுப் பெற்று
2.நமக்குள் வலிமை பெறச் செய்து கொண்டே இருக்க வேண்டும்.

பேட்டரி சரியாக இருந்தால் அதனுடன் இணைக்கப்பட்ட எல்லா இயந்திரங்களும் சீராக இயக்கும்... அதிலே இருக்கும் சார்ஜ் உறுதுணையாக இருக்கும்.

ஆகவே அதிகாலையில் அந்தத் துருவ நட்சத்திரத்தின் சக்தியை எடுத்துச் சார்ஜ் செய்து கொள்ளுங்கள். அடுத்தடுத்து உங்கள் உடலுக்குள் செலுத்தி நல்ல அணுக்களுக்கு வீரிய சக்தி ஊட்டித் தீமைகளை அகற்றப் பழகிக் கொள்ளுங்கள்... இதனால் உங்கள் வாழ்க்கையே தியானமாகும்...!

வாழ்க்கையில் நம் மீது வந்து மோதும் தீமைகளைப் பற்றற்றதாக மாற்றி... அந்தத் துருவ நட்சத்திரத்தைப் பற்றுடன் பற்றும் ஒரு பழக்கம் வர வேண்டும்.

நம் உறவினர்களையும் நண்பர்களையும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்று அதைப் பற்றும்படி செய்து
1.அவர்கள் உடலில் உள்ள தீமைகளை அகற்றிடும் உணர்வுகளை ஊட்டினால்
2.அவர்களும் நலமாகின்றார்கள்... நாமும் நலமாகின்றோம்.
3.நம் உடலும் நலமாகும்... நம் வாழ்க்கையும் நலமாகின்றது... தொழிலும் நலமாகிறது.

இந்த முறையை ஒவ்வொரு குடும்பத்திலும் பழகிக் கொள்ளுங்கள்.

சங்கடம் சலிப்பு வேதனை வெறுப்பு பகைமை வந்தால் அடுத்த கணம் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி எங்கள் இரத்தநாளங்களில் கலக்க வேண்டும்... எங்கள் உடல் உறுப்புகள் முழுவதும் படர வேண்டும் என்று சிறிது நேரம் எண்ணி ஏங்கித் தியானியுங்கள்.

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி அனைவரும் பெற வேண்டும். அவர்கள் இரத்த நாளங்களில் அந்தச் சக்தி கலக்க வேண்டும்... அவர் உடல் உறுப்புகள் முழுவதும் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் தெய்வீக அன்பைப் பெற வேண்டும்... தெய்வீக அருளைப் பெற வேண்டும்... தெய்வீக சக்தி பெற வேண்டும்... தெய்வீக வழியில் நடக்கும் அந்த அருள் ஞானம் பெற வேண்டும்... என்று நாம் எண்ணிப் பழகுதல் வேண்டும்.

பண்பும் பரிவும் அன்பும் பாசமும் எங்கள் குடும்பத்தில் வளர வேண்டும்... அரவணைத்து வாழும் அருள் ஞானம் பெற வேண்டும். நாங்கள் அனைவரும் மகரிஷி வட்டத்தில் இணைந்து வாழும் அந்த அருள் சக்தி பெற வேண்டும் என்று ஒவ்வொரு சமயமும் அந்த ஆற்றலைப் பெருக்கிக் கொண்டே வர வேண்டும்

1.இது போன்று நாம் செயல்படுத்தினால் நம் வாழ்க்கையை ஒழுங்குபடுத்த இது உதவும்.
2.வேறு யாரும் சொல்லி நாம் செயல்படுத்த முடியாது.

துருவ நட்சத்திரத்தின் பேராற்றலை இந்த முறைப்படி செய்து பெற்றால் அருள் ஞானம் பெற்று இருளை அகற்றி மெய்ப்பொருள் காணும் திறன் பெறுவீர்கள்.

இல்லை... வெறுப்பு வேதனை என்ற உணர்வு வந்தால் வேதனையான உணர்வுக்கொப்ப உங்கள் சொல்லும் உங்கள் செயலும் அமைந்து
1.பிறிதொருவர் நல்லது சொன்னால் ஈர்க்காதபடி அந்த நியாயத்தைத் தான் பேசுவீர்கள்.
2.பண்பை ஏற்றுக்கொள்ளும் தன்மையோ... பண்பை நமக்குள் வளர்த்துக் கொள்ளும் நிலையோ
3.வரும் தீமைகளை அகற்றிடும் நிலையோ வருவது மிகவும் சிரமம் ஆகின்றது.

ஆகவே அதைப் போன்ற நிலைகள் ஆகாதபடி குருநாதர் காட்டிய வழிப்படி நீங்கள் ஒவ்வொருவரும் அருள் ஞான வாழ்க்கை வாழப் பிரார்த்திக்கின்றேன் (ஞானகுரு).

உடலை விட்டுப் பிரிந்த பின் நம் நிலை… - ஈஸ்வரபட்டர்

 

மக்களின் வாழ்க்கை நிலையிலும் ஆவியின் தொடர்பு கொண்ட நிலையில் தான் பலரின் நிலை உள்ளது. எண்ணம் நல்வழியில் சென்று தெய்வ பக்தி கொண்ட மனிதர்களுக்கெல்லாம் அவர்கள் செல்லும் வழிக்குத் தெய்வமாக அருள் புரிகிறார்கள்... நாம் இப்போது போற்றி வணங்கிடும் சப்தரிஷிகளும் ஞானிகளும் சித்தர்களுமே.

நல் வழியை மாற்றி நாம் நம் மனதை அடிமைப்படுத்தி வாழும் வாழ்க்கைக்கு அந்நிலையிலெல்லாம் ஆசை கொண்டு சென்ற பல ஆவிகளின் தொடர்புகளை நம்முள்ளேயே நமக்குத் தெரியாமலேயே அவ்வாவிகளின் ஏவலுக்குகந்தவனாக நம்மை நாம் அடிமைப்படுத்தி வாழ்கின்றோம் என்பதனை உணர்ந்தே வாழ்வதற்காகத்தான் இந்நிலையில் உணர்த்தி வருகின்றேன்.

1.காலம் காலமாக இவ்வாவிகளின் நிலையெல்லாம்
2.நல் நிலையில் உடலை விட்டுப் பிரிந்த ஆவி சூட்சும நிலை கொண்டு...
3.தான் வாழ்ந்த குடும்பத்திற்குத் தன் அங்கத்தின் அங்கமாய்
4.தான் பெற்று வளர்த்த மக்களின் நன்மைக்காக பல நல்ல நிலை கொண்ட சக்தியை
5.தான் வாழ்ந்த குடும்பத்திற்கு தன் இரத்தத் தொடர்புடைய பிள்ளைகள் காலம் வரை தெய்வமாக
5.அக்குடும்பத்திற்குத் தான் விட்டுச் சென்ற சில குறைகளையும் பூர்த்தி செய்யும் நாள் வரை
6.அக்குடும்பத்திற்குப் பல உதவிகளை அக்குடும்பத்திலுள்ளோர் அறியாமலேயே அது செயல்படுத்தி
7.அக்குடும்பத்திலேயே தன் எண்ணத்தைச் சுழலவிட்டு அவ்வாவியின் நிலை இருக்கிறது.

அந்நிலையின் தன்மை பூர்த்தி பெற்ற பிறகுதான் தன் நிலைக்கு உகந்த உடல் கிடைத்த பிறகு மறு ஜென்மம் பெற்று வாழ்க்கைக்கே வருகிறது.

ஆனால் குரோதத்திலும் பேராசையிலும் தான் வாழ்ந்த நாளில் பல தீய பழக்கங்களுக்குத் தன்னை அடிமைப்படுத்தி வாழ்ந்த ஆவிகள் எல்லாம் ஆவி நிலைக்குச் சென்ற பிறகும்...
1.எந்த நிலையில் அவ்வாவி பிரிந்ததோ அதே குரோத நிலையில்தான்
2.அவ்வாவி அக்குரோதத்தை எந்த நிலையில் விட்டுச் சென்றதோ அதனின் தொடர் நிலையாக குரோதம் கொண்டவர்கள் மூலமாக
3.தான் வாழ்ந்த நாளில் பெற்ற நல்ல நிலையில் இருந்த ஆவி எப்படியெல்லாம் தன் நிலையைச் செயல்படுத்தினவோ
4.அதே போல் தான் இத்துர் ஆவிகளும் வந்து தீமைகளைச் செயல்படுத்துகின்றன.

இத்துர் ஆவிகளினால் அதன் சுவாச நிலைகொண்டு மற்ற மிருக உடலுக்கு எந்நிலையில் சென்று மனிதன் மிருகமாகும் மிருக இனத்திற்குச் சென்று வாழும் நிலைக்கு ஆளாகின்றான்.

வாழ்ந்த நாளில் நாம் எடுக்கும் வாழ்க்கை முறை கொண்டுதான் மறு ஜென்மம் நமக்கு அமைவதுவும்.

இன்று மனிதர்களுக்கு உள்ள எண்ணமும் செயல் திறமை அறிவு அனைத்துமே மிருக ஜெந்துக்களுக்கும் பறவைகளுக்கும் உண்டு.

மனிதனைக் காட்டிலும் பறவைகள் மிருகங்கள் இவைகளுக்குத் தன் போன சரீரத்தின் நிலையெல்லாம் தெரிந்திடும். ஆனால் அவைகளுக்குச் சொல்லாற்றலும் நம்மை ஒத்துச் செயல்படுத்த அங்கங்களும் இல்லாததினால் தான் விட்டுச் சென்ற குறையை எண்ணியே மிருகமாக வாழ்கின்றன.

மனிதன் அம்மிருகத்தைத் தன் நிலைக்கு அரும் பெரும் சுவையாக்கிச் சமைத்து உண்ணுகின்றான். இவன் உண்ணும் நிலையும் ஆவியாகி அம் மிருகத்திற்குத் தெரிகின்றது.

அம்மிருக உணவை பறவைகளின் உணவை நாம் புசிப்பதினால் நம்முள்ளேயே நாம் அவற்றின் அவ்வுடல்களில் எந்த எந்த அணுக்களின் தாக்கல்கள் இருந்தனவோ அவற்றையெல்லாம் நம்முள்ளும் நாம் ஏற்றிக் கொள்கின்றோம்.

இவ்வுலகில் பல நிலைகொண்ட ஆவித்தன்மை உள்ள பொழுது
1.அவ்வாவி அணுக்களுக்கு நம்மை நாம் அடிமைப்படுத்திடாமல்
2.வரும் தடங்கல்களை எல்லாம் நாம் போக்கி
3.நம்முள் உள்ள சிறு சிறு மனச் சஞ்சலங்களையும் நம்மையே சுற்றிக் கொண்டில்லாமல்
4.இந்நிலையையெல்லாம் புனிதப்படுத்தி வாழ்ந்திட வேண்டும்.

இவ்வாவிகளின் நிலையே பல நிலையில் உள்ளன. இன்று தாஜ்மஹால் என்ற நிலையில் உள்ள மும்தாஜ் என்னும் ஆவியின் நிலையென்ன...?

அவ்வாவி இன்னும் அத் தாஜ்மஹாலிலேயே அந்த நிலையிலேயே சுற்றிக்கொண்டுள்ளது. எந்த எண்ணத்தைப் பூர்த்தி பெறாமல் விட்டுச் சென்றதோ அதே நிலையில் தான் இன்னும் உள்ளது அவ்விரண்டு ஆவிகளுமே... ஷாஜஹான் என்னும் ஆவியும்...!

அவ்வாவிகளுக்கு அதற்கு மேல் நிலைக்குச் செல்லும் நிலைக்கும் ஆசைப்படவில்லை… மறு ஜென்மத்திற்கும் வரவில்லை. சூட்சும நிலைக்குச் செல்வதற்கும் முடியவில்லை.

ஆனால் அவ்விரண்டு ஆவிகளுமே ஆனந்த நிலையில்தான் இன்றும் அந்நிலையில் உள்ளன. அவையின் நிலை என்றுமே அந்நிலையிலேதான் இருந்திடும், ஆனந்த நிலையில் அன்புடனே வாழ்ந்து வருகின்றன அவ்விரண்டு ஆவிகளுமே அம்மாளிகையில்.

வாழ்ந்த நாளில் இரண்டும் இணைந்து வாழாத நிலையில் ஆவி நிலையில் இணைந்த காவியக் காதலராய் இன்றும் வாழ்கின்றார்கள் அவ்விரண்டு ஆவிகளுமே...!

இந்நிலைபோல் இவ்வாவி உலகில் பல நிலைகள் உள்ளன.