
“என்றோ நடந்தது…” என்றாலும் நீங்களும் அதைப் பெற முடியும்
ஆதியிலே… ஒவ்வொரு
அணுக்களும் மோதி மேகமாகி மேகம் அடர்த்தியாகி எடையற்ற நிலைகளில் கூடுகின்றது.
இப்படி ஒரு அடர்த்தியின் தன்மை அடைந்தபின் இந்த அணுக்கள் மேகக்
கூட்டத்திற்குள் மோதுகின்றது.
மோதலான பின் நீராக வடிகின்றது. நீரான பின் பல விதமான உணர்வு கொண்ட அணுக்கள் அதனுடன் சிக்கி
எடை கூடுகின்றது… நகர்ந்து ஓடத் தொடங்குகிறது.
ஓடும் நிலையில் உராய்கின்றது… வெப்பமாகின்றது… ஆவியாக மாறுகின்றது இந்த உணர்வுகள்
இரண்டறச் சேர்த்து ஒரு பொருளாக உருவாகின்றது.
அதாவது… இயற்கை
அதனுடைய சந்தர்ப்பத்தில் இதைக் கடந்த நிலைகள் கொண்டு ஒன்றின் தன்மை அடைந்த பின்
ஓடும் வேகத்தில் சூடாகி ஆவியாகி இதற்குள் சிக்கிய உணர்வுகள் அணுத் தன்மையாகும் போது
பரமாகிறது.
பரம் என்றால் எல்லை… ஒரு
பொருளாகின்றது… ரூபம்…! அதற்குத் தான் “பரம்பொருள்” என்று காரணப் பெயரை வைக்கிறார்கள்.
1.இது எல்லாம் இயற்கை எப்படி விளைந்தது…? என்று
அகஸ்தியன் மனிதனான பின் அணுவின் இயக்க ஆற்றலைக் கண்டுணர்ந்தவன் அவன்.
2.அவனுள் அவன் கண்டு… உண்மைகளை உணர்ந்து… உணர்வின் இயக்கம் எவ்வாறு…? என்ற நிலையைத் தெளிவாக்கினான்
3.அவனுள் விளைந்த இந்த உணர்வின் ஆற்றல் வெளிப்பட்டதை நமது சூரியன் கவர்ந்து
அலைகளாக மாற்றி வைத்துள்ளது.
என்றோ நடந்தது…!
ஆனால் மனிதனான பின் தன்னை அறிந்து கொள்ளும் உணர்வால் அறிந்த அவன் (அகஸ்தியன்)
அவனுள் விளைந்த உணர்வின் ஒலியலைகளைப் பரப்பப்படும் பொழுது சூரியனுடைய காந்தப்
புலனறிவு கவர்ந்து வைத்துள்ளது நமது பூமியில்.
ஏனென்றால் திட்டியவர்களை எண்ணும் பொழுது உடனே உங்களுக்குக் கோபம் வருகிறது. வேதனைப்படும்படி ஒருவன் செய்வதைப் பார்த்தவுடன்
பாவிப்பயல் இப்படிச் செய்கிறானே….! என்ற உணர்ச்சிகள்
தூண்டுகின்றது… இது விளைகிறது.
இதைப் போல
1.இயற்கையின் உண்மையின் உணர்வுகளை அகஸ்தியன் கண்டுணர்ந்த உணர்வுகள் இந்தப்
பூமியில் படர்ந்திருப்பதை
2.எமது குரு… அவன் அருளைப் பெறும் உணர்வினை எனக்குள் பதிவு
செய்து
3.நினைவு கொண்டு அதனைப் பார்…! அதை நுகர்ந்து அறி…! உலகம் எப்படி உருவானது என்ற உண்மையை உன்னில் நீ காண்.
4.இந்த உணர்வின் தன்மையை உனக்குள் விளையச் செய்
5.இயற்கை எப்படி விளைந்தது…? நீ மனிதனானது எவ்வாறு…? மனிதனான பின் நீ எவ்வாறு செயல்பட வேண்டும்…?
6.உன்னுடைய வாழ்க்கையினுடைய கதி என்ன…? (ஏனென்றால்) இந்த மனிதனுக்குப் பின் உடல் இல்லை.
உயிர் ஒளியானது… உணர்வின்
தன்மையை ஒளியாக மாற்றுதல் வேண்டும். அந்த அருளைப் பெற்றவன்
அகஸ்தியன். அவன் மண்ணுலகை வென்றான்… விண்ணுலகை
அடைந்தான்… வானுலகையும் அளந்தான்... அண்டத்தையும்
அறிந்தான்…!
அந்தச் சக்திகள் எல்லாம் பிண்டத்திற்குள் எப்படி விளைந்தது…? என்ற நிலையை அவன் கண்டுணர்ந்ததனால்
அவனுக்குப் பின் வந்தவரால் “அகஸ்தியன்” என்று காரணப் பெயராக வைக்கப்பட்டது.
1.ஆதியில் நமது பூமியோ சூரியனோ இல்லாத காலங்களிளிருந்து “அதையெல்லாம்” அவன் அறிந்து உணர்ந்தவன்.
2.அவனுள் விளைந்த இந்தச் சக்தியைப் பெற்றால் அவன் அடைந்த எல்லையை நீங்களும் அடைய
முடியும்,