ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

May 31, 2025

ஆதியும் அந்தமும் அறிந்துணர்ந்த அகஸ்தியன்

ஆதியும் அந்தமும் அறிந்துணர்ந்த அகஸ்தியன்


நாம் மனிதனாக எப்படி வந்தோம்…? என்பதைத்தான் விநாய புராணம் கந்த புராணம் மகாபாரதம் இராமாயணம் போன்ற காவியங்கள் நமக்குத் தெளிவாகக் கூறுகின்றது.
 
1.அகஸ்தியன் தனக்குள் இது எல்லாம் எப்படி…? என்று பல வினாக்களை எழுப்பித் துருவத்தின் ஆற்றலை எண்ணி
2.சூரியன் எப்படி உருவானது…? சூரியன் உருவாகுவதற்கு முன் என்னவாக இருந்தது…? என்று
3.இவனுக்குள் பட்ட… இடி மின்னல்கள் கலந்து செல்லும் உணர்வுகளை இவன் தாய் கருவிலேயே பெற்றதனால்
4.பூர்வ புண்ணியமாக அறியும் தன்மை கொண்டு… அவனுக்குள் அறியும் ஞானமும் அதை வளர்த்துக் கொள்ளும் சக்தியும் பெறுகின்றான்.
 
அதன் வழி வசிஷ்டர்…!
1.“தான் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆசையால்” அவனுக்குள் நுகர்ந்தான்… உணர்ந்தான்…!
2.அவன் உடலில் விளைந்தது அதன் வழி விளைந்தது தான் துருவனான பின்
3.“இந்த அகண்ட அண்டத்தையும் எப்படி அறிந்து கொள்ள வேண்டும்…? என்று “மேலும்” அவனுடைய உணர்வுகளை விரிவடையச் செய்கின்றான்.
 
அப்படி விரிவடைந்த நிலையில் தான் சூரியன்களும் கோள்களும் இல்லாத பொழுது எப்படி உருவானது…? என்ற நிலையை அறிய அவனுடைய உணர்ச்சிகள் தோன்றுகின்றது.
 
ஏனென்றால் அகண்ட அண்டத்திலிருந்து கவர்ந்து தான் சூரியன் தனது சக்திகளை எடுக்கின்றது. பிரபஞ்சத்தில் உருவான கருவின் தன்மை தான் வான இயல் புவியியலாகி தாவரவியலாகி உயிரியலாக அந்த உணர்வுகளைக் கவர்ந்து மனித உடலாகி உணர்வுகள் எண்ணங்களாகி எண்ணத்தின் தன்மை வலுப் பெற்றது. அப்படி வளர்ந்தவன் தான் அகஸ்தியன்.
 
இந்த உண்மையின் நிலையைப் படித்தவர்கள் நீங்கள் தெரிந்து கொள்ளலாம். படிக்காதவர்களுக்குள் பதிவானால் நினைவு வருகின்றது.
 
ஆனாலும் படித்தவர்கள் பெரும் பகுதி என்ன செய்கின்றார்கள்…? இதற்கும் அதற்கும் எப்படி…? இது உண்மையா அது பொய்யா…? என்று கலக்கப்பட்டு உண்மையை அறியும் நிலையை தனக்குள்ளேயே தடைப்படுத்திக் கொள்ளும் நிலையே வருகின்றது.
1.இதைப் போன்ற நிலைகளில் இருந்து விடுபட்டு
2.உங்களுக்குள் பேருண்மைகளைப் பதிவாக்கும் நிலைக்குத் தான் இந்த உபதேசம்.  
 
அன்று தாய் கருவிலே பெற்ற சக்தியின் துணை கொண்டு அகஸ்தியன் உண்மைகளை அறிகின்றான்.
 
மாமிசங்கள் உண்பதையும் மற்ற நிலைகளையும் விடுத்து விட்டு வேகவைத்துப் பல பொருள்களைச் சுவையாகச் சேர்த்து மகிழ்ச்சி ஊட்டும் உணர்வை உருவாக்கி அத்தகைய உணர்வின் எண்ணங்களைத் தனக்குள் தோற்றுவித்து உலகத்தையும் பிரபஞ்சத்தையும் அவைகளின் இயக்கங்களைத் தெளிவாக அறிகின்றான்.
 
இந்தப் பிரபஞ்சத்தைச் சேர்ந்த 27 நட்சத்திரங்களுடைய உணர்வுகள் ஒன்றுக்கொன்று இணைந்து எவ்வாறெல்லாம் இயக்குகின்றது…? என்பதையும் தெளிவாகத் தெரிந்து கொண்டவன் அகஸ்தியன்.
1.துருவனான பின் அகண்ட அண்டத்தையும் அவன் அறிய ஆரம்பிக்கின்றான்.
2.சூரியக் குடும்பம் ஆவதற்கு முன் பிரபஞ்சம் எப்படி இருந்தது…? என்பதையும் தனக்குள் கண்டறிந்து மூச்சலைகளாக வெளிப்படுத்தியுள்ளான்
3.இதையெல்லாம் நாமும் கவர்ந்தோம் என்றால் அவன் கண்ட பேருண்மைகளை நாமும் காண முடியும்… உணர முடியும்.

கணவன் மனைவி வாழ்த்த வேண்டிய வாழ்த்து

கணவன் மனைவி வாழ்த்த வேண்டிய வாழ்த்து


உங்கள் வாழ்க்கையில் வசிஷ்டரும் அருந்ததியும் போன்று வாழ வேண்டும் என்றால் நளாயினியைப் போன்று கணவன் மனைவியை மதித்தும் மனைவி கணவனை மதித்தும் நடக்க வேண்டும். சாவித்திரியைப் போன்று எங்கள் இரு உயிரும் ஒன்றிட வேண்டும் இரு உணர்வும் ஒன்ற வேண்டும் என்று எண்ணுதல் வேண்டும். அதைப் போன்று எண்ணினால் எமனிடமிருந்து சாவித்திரி தன் கணவனை மீட்டினாள்.
 
அப்படி என்றால் எமன் யார்…?
1.பிறருடைய வேதனையான உணர்வுகளை எடுத்து அதை நுகர்ந்து கொண்டால் வெறுப்பு வேதனை நோய் என்ற நிலை நமக்குள் வருகின்றது.
2.அப்படி நுகர்ந்த உணர்வே நமக்குள் எமனாகின்றது பல நோய்கள் வருகின்றது… அவர் உணர்வே நமக்குள் வலுவாகின்றது.
 
இதைப் போன்ற நிலைகளை மாற்றுவதற்கு எப்போதுமே கணவன் வெளியிலே செல்லும் போதெல்லாம் தன் மனைவிக்கு அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும்
1.அந்த அருள் என்றுமே எனக்கு உறுதுணையாக இருந்து
2.அந்த ஆசி கொடுத்தல் வேண்டும் என்று எண்ணிக் கணவன் வெளியிலே செல்லுதல் வேண்டும்.
 
அதே சமயத்தில் மனைவியும் கணவன் வெளியில் செல்லும் போதெல்லாம் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற வேண்டும் அவர் உடல் முழுவதும் படர வேண்டும் அவர் உடலில் உள்ள ஜீவான்மா ஜீவணுக்கள் பெற வேண்டும் என்று எண்ணி
1.அவர் எந்தக் காரியம் செய்தாலும் அது நல்லவையாக அமைய வேண்டும்.
2.அவரைப் பார்ப்பவருக்கு எல்லாம் நல்ல எண்ணங்கள் வர வேண்டும் என்று எப்போதுமே மனைவி வாழ்த்துதல் வேண்டும்.
 
வெளியிலே எங்கே சென்றாலும் என் கணவருக்கு அந்த அருள் மணம் பெற வேண்டும் தொழிலில் செழித்திருக்க வேண்டும் அவர் பார்ப்பவர்களுக்கெல்லாம் நல்ல எண்ணங்கள் வர வேண்டும் என்று மனைவி எண்ணுதல் வேண்டும்.
 
. இதே மாதிரி எண்ணி இருவரும் வாழ்தல் வேண்டும்.
 
ஒருவன் தனக்குத் தீங்கு செய்தான் என்ற நிலையில்… அவன் அமெரிக்காவில் இருக்கின்றான் என்று வைத்துக் கொள்வோம். எனக்குத் தீங்கு செய்தவன் உருப்படுவானா…? என்று எண்ணும் பொழுது அவன் சாப்பிட்டுக் கொண்டிருக்கும் பொழுது இதே மாதிரி எண்ணினால் அவனுக்குப் புரை ஓடுகின்றது.
 
வாகனம் ஓட்டும்போது எண்ணினால் விபத்தாகின்றது. தொழிலில் இதே போன்று எண்ணினால் சிந்தனை குறைகின்றது… எந்திரங்களில் சிக்கி விடுகின்றார்கள்.
 
ஒரு கணக்கோ பொருளோ நல்ல முறையில் பார்த்துக் கொண்டிருக்கும் பொழுது சிந்தனை குறைந்து முடியாத நிலைகள் ஏற்படுகின்றது.
 
இதைப் போன்ற நிலைகளை மாற்ற வேண்டும் என்றால் கணவன் வெளியில் செல்லும் போதெல்லாம் அவருக்கு அந்த மகரிஷியின் அருள் சக்தி பெற வேண்டும் என்று மனைவி வாழ்த்துக் கூறுதல் வேண்டும்.
 
அதே சமயத்தில் வெளியில் செல்லக்கூடிய கணவனும்
1.என் அன்னை தந்தையின் அருளால் மனைவியின் அருள் துணை எனக்குக் கிடைக்க வேண்டும்.
2.மகரிஷிகளின் அருள் சக்தி என்றுமே எங்களுக்கு உறுதுணையாக இருக்க வேண்டும் என்று எண்ணிக் கணவனும் செல்லுதல் வேண்டும்.
 
இருவருமே இதைப் போன்று எண்ணி வாழ்ந்து வந்தால் வசிஷ்டரும் அருந்ததியும் போன்று இணைந்து வாழ்கின்றோம் என்று பொருள்.
 
ரோட்டில் செல்கின்றோம். எதிர்பாராது எங்கிருந்தோ ஒரு பஸ் தறி கேட்டு வருகின்றது என்று வைத்துக் கொள்வோம். அந்தச் சந்தர்ப்பத்திலே “மனைவியின் உணர்வுகள் கணவனை அங்கே போக விடாது தடுக்கும்…”
 
அல்லது பஸ்ஸிலே ஏறப்போகின்றோம் என்றாலும் இதே நிலைகள் வளரப்படும் பொழுது “மனைவியின் உணர்வுகள் அந்தப் பஸ்ஸில் ஏற விடாது தாயின் உணர்வுகள் அங்கே தடுக்கும்…”
 
இதை உங்கள் அனுபவத்தில் தெரிந்து கொள்ளலாம்.
 
சாதாரணமாக நாம் நடந்து செல்லப்படும் பொழுது நமக்கு எதிரியாக இருப்பவர்கள்… “எனக்குத் துரோகம் செய்தான் அல்லது இடைஞ்சல் செய்தான்” என்று எண்ணும் பொழுது மேடு பள்ளம் தெரியாதபடி விபத்தாகி விடும்.
 
அல்லது ஒரு வாகனம் வந்தாலும் தெரியாதபடி புரையோடுவது போன்று சிந்தனைகள் இழந்து விடும். இனம் புரியாதபடி விபத்தாகி விடும். இது எல்லாம் இயற்கையில் நடக்கும் சில சம்பவங்கள்.
 
ஆனால் இதை மாற்ற அன்னை தந்தையரை எண்ணி… “அவருடைய அருள் துணை எனக்கு என்றும் இருக்க வேண்டும்…” என்று எண்ணிச் சென்றால் நம்மைப் பாதுகாக்கும் சக்தியாக வரும்.
 
தாய் எப்போதுமே தன் பிள்ளைகள் வாழ்க்கையிலே உயர்ந்த நிலை பெற வேண்டும் என்ற ஆசி கொடுத்துக் கொண்டே இருக்கும். அதே சமயத்தில் மனைவியின் எண்ணங்கள் வரும் பொழுது அந்த அன்பான எண்ணங்கள் மகிழ்ச்சியான உணர்வு கொண்டு எங்கே சென்றாலும் காக்கும் சக்தியாக வரும்.
 
தீமை என்று வரப்படும் பொழுது “அந்த எண்ணமே எமன்…”
1.எமனிடமிருந்து சாவித்திரி தன் கணவனை மீட்டினாள்... இணைந்து வாழ்வதே சாவித்திரி.
2.ஆகையினால் மனைவி அருள் உணர்வு கொண்டு எண்ணப்படும் பொழுது அந்தச் சக்தி என்றுமே உறுதுணையாக இருக்கும்.
 
நமது வாழ்க்கையில் எப்பொழுதுமே தாய் தந்தையரை வணங்கி மனைவியின் அருள் பெற வேண்டும் என்று கணவன் வெளி செல்வதும் கணவன் வெளியிலே செல்லும் போதெல்லாம் மனதில் நினைத்து ஆசீர்வதித்து மனைவி அனுப்புதல் வேண்டும்.
 
தொழிலுக்குச் சென்றாலும் சரி அவர் செய்யும் தொழில் எல்லாம் உற்பத்தியாகும் பொருள்களிலும் அதை வாங்குவோர் குடும்பமும் நன்றாக இருக்க வேண்டும் என்று எப்பொழுதுமே “மனைவி கணவனை வாழ்த்திக் கொண்டிருத்தல் வேண்டும்…”
 
கணவன் மீது மனைவி பிரியமாக இருக்கின்றது. வீட்டில் இருக்கக்கூடிய சொந்த பந்தங்களோ நாத்தனாரோ மற்றவர்களோ வந்து கொஞ்சம் வேதனைப்படும்படி பேசி விடுகின்றார்கள்.
 
அந்த வேதனையால்… கணவர் வீட்டில் இல்லாத நேரத்தில் “பாவிகள் இப்படிப் பேசுகின்றார்களே…” என்று இந்த உணர்வுகளைச் சேர்த்துத் தன் கணவனை எண்ணும் பொழுது இதே உணர்வுகள் அவர் எந்தக் காரியத்திற்குச் சென்றாலும் தடைப்படும்.
 
அவர் வாகனம் ஓட்டிக் கொண்டிருக்கும் பொழுது மனைவி எண்ணினால் அவருடைய சிந்தனை இழக்கப்பட்டு விபத்தாகும்.
1.சாதாரண மனிதனுடைய உணர்வுகள் எண்ணும்பொழுது அந்த உணர்வு எப்படி இயக்குகின்றதோ இதைப் போன்று தான்
2.கணவன் மனைவிக்குள் மற்றவர்கள் செய்யும் உணர்வைத் தனக்குள் எடுத்துத் தன் கணவரை எண்ணினால் அங்கே தடையாகின்றது.
 
இதை எல்லாம் தடைப்படுத்த வேண்டும் அல்லவா.
 
ஈஸ்வரா என்ற உயிரை எண்ணி அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் அவர்கள் அறியாத இருள்கள் நீங்க வேண்டும் என்று குறை கூறுவோர் நிலைகளை இப்படி மாற்றிப் பழகுதல் வேண்டும்.
 
என் கணவருக்கு அந்த அருள் உணர்வு பெற வேண்டும். பேரானந்த நிலைபெறும் அந்த அருள் சக்தி பெற வேண்டும் மகிழ்ந்து வாழும் சக்தி பெற வேண்டும் என்று அடிக்கடி கணவனை உயர்ந்த நிலை பெற எண்ணுதல் வேண்டும்.
 
இதே மாதிரிக் கணவனும் எங்கே சென்றாலும் மனைவியை எண்ணி  மனைவிக்கும் அந்த அருள் சக்தி கிடைக்க வேண்டும் என்று எண்ண வேண்டும்.
1.இப்படி எண்ணினால் அன்று அகஸ்தியன் எப்படி வாழ்ந்தானோ
2.அதைப்போல வாழ்க்கையில் வரக்கூடிய இருளை நீக்க முடியும்.

May 29, 2025

உங்களுக்குள் பதிவான ஞானிகளின் உணர்வின் சத்தைச் சரியான நேரத்தில் பயன்படுத்த வேண்டும்

உங்களுக்குள் பதிவான ஞானிகளின் உணர்வின் சத்தைச் சரியான நேரத்தில் பயன்படுத்த வேண்டும்


துன்பம் வரும் பொழுது உங்கள் நினைவினை அகஸ்தியன் பால் செலுத்தி அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை நுகர்ந்து உங்கள் உடலுக்குள் செலுத்துங்கள்.
 
நாரதன் கலகப் பிரியன்… நாரதன் கையிலே இனிமையான இசை உண்டு.
1.பிடிவாதமான உணர்வுகளை வளர்த்திடாது அருள் ஒளி கொண்டு இருளை நீக்கி இனிமை என்ற உணர்வினை இணைவாக ஏற்றி
2.மகிழச் செய்யும் உணர்வினை நமக்குள் வளர்த்திடல் வேண்டும் என்பதற்குத்தான் இதைத் தெளிவாக்குகின்றேன்.
 
இந்த வாழ்க்கையில் குறுகிய காலமே வாழும் நாம் இந்த உடலின் இச்சையை வளர்த்திட வேண்டாம். அருள் உணர்வின் தன்மையாக அவன் (அகஸ்தியன்) அருள் பெற வேண்டும் என்று இந்த இச்சையைக் கூட்டுங்கள்.
 
1.ஒளியின் உணர்வாக என்றும் நிலை கொண்ட மகரிஷிகளின் அருள் வட்டத்தில் வாழ்வோம்
2.அகண்ட அண்டத்தில் வரும் உணர்வை உணவாக எடுப்போம்
3.வருவது அனைத்தையும் ஒளியின் உணர்வாக மாற்றுவோம் என்ற இந்தத் தன்னம்பிக்கையை வளர்த்துக் கொள்ளுங்கள்.
 
ஏனென்றால் நாம் எதை எண்ணுகின்றோமோ அதை நம் உயிர் உருவாக்குகின்றது. எதை எண்ணுகின்றோமோ அதைக் கண் காட்டுகின்றது.
 
நமக்குள் அருள் ஒளி என்று பதிவான பின் மீண்டும் அது கண்ணுக்கு எட்டப்படும் பொழுது
1.எதனின் உணர்வை நமக்குள் நுகர்ந்தோமோ அந்த இடத்திற்கே கண் நம்மை அழைத்துச் செல்கின்றது.
2.அந்த உணர்வினை நுகரச் செய்கின்றது… பகைமை உணர்வை மாற்றுகின்றது
3.அருள் ஒளி என்ற உணர்வை உருவாக்குகின்றது.
 
ஆகவே அருள் ஒளியைப் பெறுவோம் என்று நாம் தியானிப்போம். இந்த வாழ்க்கையில் அறியாது சேர்ந்த வேதனை வெறுப்பு சலிப்பு சஞ்சலம் இதைப் போன்ற உணர்வுகளை நீக்குவோம்.
 
நோயாளியை அன்புடன் பண்புடன்  பார்த்தாலும் நாம் நுகர்ந்த உணர்வுகள் அவரைக் காக்க உதவுகின்றது. ஆனால் நம்மைக் காக்கும் நிலை அற்று விடுகின்றது. நம்மைக் காக்கும் நிலை இல்லை என்றால் நல்லது அழிந்து விடுகின்றது.
 
நல்லவைகள் அழிந்திடாது அருள் ஞானத்தைப் பெருக்கித் தீமையை நீக்கும் சக்திகளை நாம் பெற வேண்டும் என்று ஏங்கி… நம்முடைய சக நண்பர்களுக்கும் அதை உணர்த்தி
1.அவர்கள் அந்த ஆற்றலைப் பெற வேண்டும்… அவர்களும் துன்பத்திலிருந்து விடுபட வேண்டும்
2.அவர்கள் அருள் ஒளி பெற வேண்டும் என்று நாம் ஏங்கினால்
3.அவர் உணர்வு கொண்டு நாமும் வளர முடியும்… நம் உணர்வு கொண்டு அவரை வளர்க்கவும் முடியும்.
 
நமக்குள் எடுத்து வளர்த்துக் கொண்ட அருள் உணர்வுகள் இந்தப் பரலோகத்தில் பரவுகின்றது. அந்த உணர்வின் தன்மை “நம் எண்ணமே நம்மைக் காக்கின்றது…”
 
அருள் ஒளியை நாம் பெற்றால் அனைவரும் அது பெற வேண்டும் என்று எண்ணினால் அனைவருடைய உணர்வுகளும் நமக்குள் ஒன்றென இணைகின்றது.
 
பகைமையற்ற உணர்வுகள் நமக்குள் வளர்கின்றது. நாரதன் கலகப்பிரியன் தீமைகளை அகற்றுகின்றது. அருள் ஒளி என்ற உணர்வை நமக்குள் உருவாக்குகின்றது…
1.அதைப் பெருக்குகின்றது… அதுவே நம்மை இயக்குகின்றது.
2.அந்த உணர்வின் இயக்கமாக உயிர் ஒளியாகின்றது.
 
இதை நாம் அனைவரும் செயல்படுத்துவோம்…!

மெய் உலகை உருவாக்குவோம்

மெய் உலகை உருவாக்குவோம்


எம்முடைய உபதேசத்தைக் கேட்டுக் கொண்டிருப்பவர்கள்… நேரமாகிவிட்டது வீட்டுக்குச் செல்ல வேண்டும்… தொழிலுக்குச் செல்ல வேண்டும் என்று சிலருடைய எண்ணங்கள் இருந்தால்… உங்கள் எண்ணங்களைப் பல நிலை கொண்டு அலைய விட்டால்… இந்த அருள் உணர்வுகளைப் பெறுவது கடினமாகி விடுகின்றது.
 
ஆலயங்களுக்குச் செல்கிறோம் என்றால் மலர் பூஜை விளக்கு பூஜை என்று எத்தனையோ நிலைகளைச் செயல்படுத்துகின்றார்கள். அதைச் செய்ய நாள் கணக்கில் மணிக்கணக்கில் கூட உட்கார்ந்து இருக்கின்றோம்.
 
யாகங்கள் வேள்விகளைச் செய்தால் அங்கேயும் அமர்ந்து… தான் எந்த ஆசையில் போனோமோ “அவன் அதைக் கொடுப்பான்” என்று ஆர்வத்தில் உட்கார்ந்து இருக்கின்றோம்.
 
ஆனால் அந்த ஆசைகள் நிறைவேறவில்லை என்றால் தெய்வத்தையே பழித்திடும் நிலைகள் வருகின்றது. ஆக ஆசைக்கொப்பத் தான் நாம் அங்கெல்லாம் செல்கின்றோம்.
 
அவ்வாறு இல்லாதபடி
1.நமது ஆசை அனைவரும் நலம் பெற வேண்டும் என்றும்
2.அருள் ஒளி எனக்குள் பெற வேண்டும் என்றும்
3.என் பார்வை சொல் செயல் எல்லாம் அனைவரும் நலம் பெறும் சக்தியாக மலர வேண்டும் என்று
4.உயிரான நெருப்பில் இந்த உணர்வின் அலைகளைப் பரப்பினால்
5.உண்மையான யாகம்… உயிரின் நிலைகள் கொண்டு அவ்வாறு உருவாக்கும் சக்திகள் தான்.
 
அதாவது எண்ணத்தின் உணர்வு கொண்டு அந்த அருள் மகரிஷிகளின் உணர்ச்சிகளைப் பரப்புவதும்… அந்த உணர்வின் அணுக்களாக மாற்றுவதும்… சொல்லின் உணர்வுகள் அனைவருக்கும் பரவச் செய்து…
1.கண்ணின் நினைவாற்றல் கொண்டு யாரை எண்ணுகின்றோமோ அந்தச் சொல்லின் ஆற்றல் அங்கே ஊடுருவி
2.அவர்கள் நலம் பெற வேண்டும் உலக மக்கள் ஒன்றி வாழ வேண்டும் அருள் ஒளி பெற வேண்டும் என்று எண்ணும் போது
3.நம் எண்ணத்தின் உணர்வுகள் கண்ணின் நினைவு கொண்டு அவர்கள் மேல் பாய்ச்சப்படுகின்றது.
 
அவர்கள் நலம் பெற வேண்டும் என்ற உணர்வுகளை நாம் எண்ணும் பொழுது “அவருடைய தீமை நமக்குள் வராதபடி தடுக்க இது உதவும்…”
 
ஆகவே ஒவ்வொருவரும் அந்த ஞானிகள் காட்டிய அருள் வழியில் வாழ்வோம். உலக மக்கள் அருள் மகரிஷிகளின் அருள் வட்டத்தில் வாழத் தியானிப்போம். நமது பார்வையும் சொல்லும் செயலும் புனிதம் பெறுவோம். அனைவரையும் புனிதமாக்கும் உணர்வை நமக்குள் உருவாக்குவோம்.
 
உலக மக்கள் நலம் பெறத் தியானிப்போம். விஞ்ஞான உலகில் அஞ்ஞான வாழ்க்கை வாழும் அனைவரும் அந்த அஞ்ஞான வாழ்க்கையில் இருந்து விடுபட்டு மெய்ஞான வாழ்க்கை பெற வேண்டும் என்று தியானிப்போம்.
 
உலக மக்கள் அனைவரும் இந்த மனித வாழ்க்கையிலேயே ஒளி என்ற உணர்வை உருவாக்கும் பிறவி இல்லாத நிலை என்ற நிலையை அனைவரும் அடைய வேண்டும் என்று தியானிப்போம்.
 
1.அனைவரும் அருள் ஒளி பெற வேண்டும் அருள் வாழ்க்கை வாழ வேண்டும் என்றும்
2.அவரவர்கள் குடும்பத்தில் பற்றுடன் வாழ வேண்டும் என்றும்
3.எதிர்காலக் குழந்தைகள் மெய்ஞானத்தை வளர்க்க வேண்டும்… மெய் உலகை  உருவாக்க வேண்டும் என்றும்
4.எல்லா மகரிஷிகளையும் வேண்டிப் பிரார்த்திக்கின்றேன்.

May 28, 2025

சோம்பேறியாக இருக்கும் நம்மை உஷார்படுத்தும் சந்தர்ப்பம்

சோம்பேறியாக இருக்கும் நம்மை உஷார்படுத்தும் சந்தர்ப்பம்


நம்மை ஒருவன் தவறாகப் பேசுகின்றான் பழித்துப் பேசுகின்றான் சங்கடமான நிலைகளில் தொல்லை கொடுக்கின்றான் என்ற உணர்வுகளை நுகர்ந்தால்
1அவன் எண்ணிய உணர்வுகளை நமக்குள் வளர்த்து அவன் நினைவிலேயே நாம் வளர்ந்து விடுகின்றோம்.
2.நல்ல உணர்வுகளை இழக்க நேர்கின்றது.
 
இதைப் போன்ற நிலைகளிலிருந்து எல்லாம் நம் குருநாதர் காட்டிய அருள் வழியில் பகைமை உணர்வுகள் நமக்குள் விடாதபடி பாதுகாத்துக் கொள்ள வேண்டும்.
 
பகைமை கொண்டு ஒருவன் பேசினால் அந்த உணர்வை நமக்குள் எடுத்தால் நம் உடலுக்குள் இருக்கும் நல்ல குணங்களும் அந்தப் பகைமை உணர்வுகள் ஒன்றுக்கொன்று வீரியத்தன்மை அடைந்து மேல் வலி கை கால் குடைச்சல் இது போன்று வேதனையின் நிலைகளைத் தோற்றுவித்து விடுகின்றது.
 
ஆகவே நம் உடலுக்குள் தீமை என்ற உணர்வு உள்புகாது காத்திடல் வேண்டும். ஆறாவது அறிவைக் கார்த்திகேயா என்றாலும் சேனாதிபதி தீமை உள்புகாதபடி தீமையை வென்ற அருள் ஞானிகளின் உணர்வை நமக்குள் நுகர்ந்து அதை வலுவான நிலைகள் கொண்டு உருவாக்குதல் வேண்டும்.
1.அந்தச் சந்தர்ப்பத்தை நாம் உருவாக்க வேண்டும்.
2.ஒருவன் தீமை என்ற நிலையில் அதிகமான அளவு தொல்லை கொடுக்கின்றான் என்றால்
3.அதை மறக்க அருள் ஒளி பெற வேண்டும் என்று இதை உருவாக்கிடல் வேண்டும்.
4.இது ஒரு நல்ல சந்தர்ப்பம் ஆகின்றது.
5.நாம் சும்மா இருந்தாலும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளையும் பேரொளியையும் எடுத்திருக்க மாட்டோம்.
6.ஆனால் ஒருவன் தீமை செய்யும் உணர்வுடன் வரும் பொழுது அந்த அருள் ஒளி பெற வேண்டும் என்று ஏங்குகின்றோம்.
7.அந்த வலுவின் தன்மை நமக்குள் உருவாகின்றது
8.சோம்பேறியாக இருந்தவனை உஷார்படுத்தியது போன்று வந்து விடுகின்.றது.
 
வயல்களிலே தண்ணீரை வாய்க்காலிலிருந்து பாய்ச்சுகின்றோம். கவனக்குறைவாக இருந்தால் தண்ணீர் போகும் பாதையில் உடைப்பாகிவிட்டால் நீர் வேறு பக்கம் சென்று விடும். சீரான நிலையில் கொண்டு நம் வயலுக்குப் பாய்ச்ச முடியாது.
 
அதைப் போன்று நாம் இந்த வாழ்க்கையில் நமக்குள் நல்ல உணர்வின் தன்மையைத் தடைப்படுத்தும் நிலை எதுவாக இருந்தாலும் அவ்வாறு இடைமறித்தால் அதையெல்லாம் நாம் மாற்றி அமைத்தல் வேண்டும்.
 
நம் கண்ணுக்குப் பெயர் இடையன் என்றும்… நல்ல எண்ணம் கொண்டு நாம் செல்கின்றோம் இடைமறித்துத் தவறான உறவுகள் நமக்குள் வந்தால் அதனின்று காத்து நல்வழி செயல்படுத்தும் உணர்ச்சிகளை ஊட்டிடல் வேண்டும்.
 
நம் கண்களுக்குப் பெயர் கண்ணன் என்றும் இடையன் என்றும் அவன் மாடுகளை மேய்ப்பவன்… இந்தக் கண் நம்மை மேய்க்கின்றது. தவறு என்ற உணர்வு வரப்படும் பொழுது இந்த உணர்வுகள் நம்மை இடைமறித்து நல்வழியான நல்ல இடங்களுக்கு அழைத்துச் செல்கின்றது.
 
நண்பனுக்குள் ஒருவருக்கொருவர் பழகிக் கொள்கின்றோம் திடீரென்று எண்ணங்கள் உதயமாகும். நண்பரைப் பார்க்க வேண்டும் என்று எண்ணினால் “அவர் வேறு ஒரு தெருப் பக்கம் சென்று கொண்டு இருந்தாலும்” நம் கண்ணின் நினைவாற்றல்கள் அங்கே செல்லும். அவரை இழுத்துக் கொண்டு இங்கே வரும்.
 
அதைப் போன்று
1.துருவ நட்சத்திரத்தைப் பற்றி ஆழமாகப் பதிவாக்குகின்றோம்.
2.அதை பதிவாக்கிக் கொண்ட பின் நம்மை எங்கே அழைத்துச் செல்லும்…?
3.அந்தத் துருவ நட்சத்திரத்திற்கு நம்மை அழைத்துச் செல்லும்.
 
ஒரு நோயாளியை உற்றுப் பார்க்கிறோம் உதவி செய்கிறோம் என்றால் அதை வலுவாக்கினால் இதே கண் அந்த நோயாளி மடிந்த பின் நம் உடலுக்குள் அந்த ஆன்மாவை அழைத்து வந்துவிடும்.
 
ஆகவே இந்தக் கண்ணின் இயக்க நிலைகளை கீதையிலே நீ எதை எண்ணுகின்றாயோ அதுவாகின்றாய். எதன் உணர்வை வலுப்பெறுகின்றாயோ அதன் தன்மையை நீ அடைகின்றாய் என்று சாஸ்திரங்கள் தெளிவாகக் கூறுகின்றது.
 
ஆகவே நாம் இந்த உடலுக்கு பின் எதுவாக வேண்டும்…? அருள் ஒளியின் உணர்வுகளை நமக்குள் பெருக்குதல் வேண்டும்.

May 27, 2025

நீர் சக்தியை உருவாக்கும் அகஸ்தியன்

நீர் சக்தியை உருவாக்கும் அகஸ்தியன்


இந்தப் பிரபஞ்சத்தில் நமது பூமிக்குள் எவ்வாறெல்லாம் சூரியன் கவர்ந்து இந்த உணர்வுகள் வளர்ந்துள்ளது…? தாவர இனங்கள் எதனெதன் நிலையை எடுத்துக் கொண்டதோ அது வித்தான பின் பூமியின் ஈர்ப்பின் துணை கொண்டு தாய்ச் செடியின் சத்தைக் கவர்கின்றது.
 
பல உணர்வுகளை இரண்டறச் சேர்த்து ஒரு வித்தாகச் செடியாக மாறினால் அதிலிருந்து வரும் அதனின் வித்து அந்தத் தாய்ச் செடியின் சத்தை எப்படிக் கவர்கின்றது…? என்பதை அணுவின் ரகசியத்தை அகஸ்தியன் உணர்கின்றான்
 
1.ஒன்றுடன் ஒன்று மோதி உணர்வின் தன்மை மேகமாக மாறி அதன் வழி கொண்டு மேகத்திலிருந்து நீர் வருவதைக் கண்டு
2.இவனுக்குள் பல தாவர இனங்களை நுகர்ந்து வியர்வை போன்று வரும் உணர்வின் தன்மை உடலில் உருவாக்கிய பின்
அவன் எந்தப் பாறை மீது அமர்ந்தாலும் தனக்குள் ஈர்க்கும்… நீராக உருவாகும் ஊற்றாக உருவாகின்றது.
 
மின்னல்களோ மற்ற நிலைகளோ மோதி ஆவியின் தன்மை எடையற்ற நிலைகள் கொண்டு மேகங்களாகக் கூடினாலும்
1.இதனை ஈர்க்கும் சக்தி எடையற்ற நிலைகள் அந்த அகஸ்தியன் அமர்ந்த தரைப் பாகங்களில் பட்டால்
2.அங்கே ஈர்க்கப்பட்டு நீர் ஊற்று உருவாகும் நிலை வருகின்றது.
 
மலை உச்சியில் இந்த ஊற்றுகள் உருவாகின்றது. ஆனால் மலையின் அடிவாரத்தில் நீர் இருப்பதில்லை. கீழே தோண்டினாலும் நீர் வருவதில்லை. ஆனால் வெறும் பாறையாக இருக்கின்றது.
1.அதன் உணர்வின் தன்மை வியர்த்து அதன் உணர்வுடன் கரைக்கப்பட்டு
2.அதன் வழி பாறைகளின் இடைவெளிகளில் நீரூற்றுகள் தோன்றுகின்றது.
 
அகஸ்தியன் இருந்த இடங்களில் எல்லாம் நீர் சத்து கலந்தே வருகின்றது. ஆக பல பல உணர்வின் தன்மை அவன் உடலுக்குள் மாற்றத்தை ஏற்படுத்தும் நிலையும் அவன் தாய் கருவிலேயே உருப்பெற்ற நிலைகள் தான் அவை.
 
ஆகவே முதல் மனிதனான அகஸ்தியன் விண்ணுலக ஆற்றலை மாற்றியமைக்கும் சந்தர்ப்பம் அவனுக்குக் கிடைக்கின்றது. இப்படிக் கிடைத்த மனிதன் தான் தன் ஐந்தாவது வயது வரப்படும் பொழுது காடுகளுக்குள் எங்கே சென்றாலும் அவனுக்கு எதிர்ப்பே இல்லாத நிலைகள் வருகின்றது.
 
காட்டு அரசன் என்ற நிலைகளில் அவனுக்குப் பெயர் சூட்டுகின்றனர்.
1.மிருகங்கள் அனைத்தும் அஞ்சுகின்றது. விஷம் கொண்ட மனிதர்கள் இவனைக் கண்டு அஞ்சுகின்றனர். இவன் வழியே இணங்கி வருகின்றனர்.
2.இப்படி ஒடுக்கும் உணர்வுகள் அவனுக்குள் வளர்ந்து அவன் அறியாமலே செயல்கள் செயல்படுகின்றான்.
 
ஒரு போக்கிரி இருக்கின்றான் என்று வைத்துக் கொள்வோம். அதே சமயத்தில் சாந்த குணம் கொண்ட ஒருவன் கடையிலே சென்று சில்லறை கேட்கின்றான் என்றால் போயா…! உனக்கு இல்லை என்பான் கடைக்காரன்.
 
ஆனால் அந்தப் போக்கிரி கேட்டால் அவன் அறியாமலேயே அவனை இயக்கச் செய்து சில்லறையைக் கொடுத்து விடுகின்றான்.
 
இதைப் போல உணர்வின் இயக்கங்கள் உற்று நோக்கும் பொழுது அகஸ்தியனுக்கு எப்படிச் சாதகமாக இயங்குகின்றது…? என்றும் இது எல்லாம் சந்தர்ப்ப இயக்கங்கள் தான்.
 
இயற்கையில் கோள்கள் எதை நுகர்ந்ததோ அதைத் தனக்குள் நுகர்ந்திடும் வல்லமை பெற்றது. சனிக்கோளோ மற்ற அணுக்கள் மோதும் பொழுது ஆவியாக எடையற்ற நிலையாகப் பரவுவதும் தன் சுழற்சியின் ஈர்ப்பு வட்டத்தில் நீராக மாற்றும் சக்தி பெற்றது.
 
இதைப்போல மனித உடலுக்குள்ளும்
1.தான் உணவாக உட்கொள்ளும் உணவுக்குள் இருந்த நிலையை நீராக மாற்றுவதும் விஷக்கழிவினை நீராக மாற்றி விஷத்தை நீக்கி விட்டு
2.நமக்குள் உமிழ் நீர் என்று ஜீரணிக்கும் உமிழ் நீராக மாற்றுகின்றது.
 
நமக்குள் ஊறும் உமிழ் நீர்கள் உணவாக உட்கொள்ளும் அந்தப் பொருளை அமிலமாக மாற்றி அதை இரத்தமாக மாற்றுகின்றது. குளுக்கோஸ் ஒரு சுவையின் தன்மை மாற்றுவதும் அது சுழன்று வரப்படும் பொழுது வடிகட்டும்போது அமிலமாக மாற்றுவதும் அது ஒன்றுடன் ஒன்று மோதப்படும் பொழுது வாயு உற்பத்தியாகின்றது.
 
அந்த வாயுவின் தன்மை கொண்டு கை கால்களைச் சுருக்குவதும் மடக்குவதும் போன்ற நிலை வருகின்றது. எண்ணத்தின் உணர்வு கொண்டு செயல்படுத்தும் பொழுது நரம்பு மண்டலம் சீராக இயங்கி எதை எண்ணுகின்றோமோ அதை இயக்கிச் செயல்படுத்துகின்றது.
 
நண்டை எடுத்துக் கொண்டால் தன் உணர்வின் வலு கொண்டு எதிலே எண்ணத்தைப் பாய்ச்சுகின்றதோ அது இயக்குகின்றது. ஆனால் அதற்கு நரம்பு மண்டலங்கள் கிடையாது.
 
இருந்தாலும் கூட்டாக அமைந்திருக்கும் அதனுடைய உணர்வுக்குள் அமிலங்கள் இரண்டறச் சேர்க்கப்படும் பொழுது அந்த உணர்வின் அழுத்தத்தால் வாயு உருவாகின்றது.
 
இடுக்கி போன்ற தன் கை கால்களை இயக்குவதும் தன் உணர்வின் வலுக் கொண்டு அதைச் செயல்படுத்துவதும் நரம்பு மண்டலம் இல்லாமலே நண்டினங்கள் செயல்படுத்துகின்றது. தேள் இனங்களும் அவ்வாறே இயக்குகின்றது.
 
இதையெல்லாம் குருநாதர் இயற்கையின் உண்மையின் உணர்வால் அதை எவ்வாறு இயக்குகிறது என்பதையும் இந்த உண்மையை உனக்குள் அறிந்து கொள். இதை எல்லாம் கடந்து தான் நீ மனிதனாக வந்திருக்கிறாய்.
1.அவை அனைத்தையும் அறியும் உணர்வின் தன்மை உனக்குள் உண்டு.
2.கார்த்திகேயா என்று உனது எண்ணத்தை எதன் பால் செலுத்துகின்றாயோ அதனை அறியும் பருவம் பெறுகின்றாய்.
3.தீமையை அகற்றும் உணர்வினை நீ நுகர்ந்தால் தீமையகற்றிடும் சக்தியைப் பெறுகின்றாய் என்று
4.குருநாதர் அடிக்கடி இவ்வாறு எனக்கு உணர்த்துவார்.
 
அவர் கண்ட உண்மையின் உணர்வுகளைப் பதிவாக்கி நினைவு கொண்டு உற்று நோக்கிச் சுவாசிக்கும்படி செய்து தீமைகளிலிலிருந்து விடுபடும் உணர்வை உருப்பெறச் செய்யும்படி சொல்வார்.
 
தீமைகளிலிருந்து விடுபடும் சக்திகள் உனக்குள் அது உருப்பெற்றுவிட்டால்
1.உன் சொல்லைக் கேட்போர் உணர்வுகளுக்குள் இத்தகைய ஆற்றல்கள் பதிவாகி அவர்களும் தீமையிலிருந்து விடுபட இது உதவும்.
2.உன் சார்புடையோர் அனைவருக்கும் தீமையிலிருந்து விடுபடும் சக்தியை அவர்கள் வளர்த்து விட்டால்
3.தீமையை அகற்றிடும் வல்லமை கொண்ட காற்று மண்டலம் இங்கே சுழலுகின்றது.
 
எந்த நண்பனின் நிலைகளில் தீமைகளை அகற்றிடும் நிலைகளைப் பதிவாக்குகின்றோமோ அந்த நண்பன் அவன் உடலில் விளைய வைத்த உணர்வுகள் உனது ஆன்மாவாக மாறுகின்றது. அதன் உணர்வை உணவாக உட்கொள்ளும் அணுக்கள் உன் உடலில் உருவாகின்றது.
 
1.ஒரு மனிதனை இவ்வாறு உருவாக்க வேண்டும் என்றால் அவனைக் காக்க வேண்டும் என்றால்
2.நீ கண்டறிந்த உணர்வினை உன் சார்புடைய மக்களுக்கு இதை எடுத்துரைத்து அவர்களுக்குள் விளையச் செய்ய வேண்டும்.
 
தீமையை நீக்கும் உணர்வுகள் அங்கே விளைந்தால் உனக்குள் தீமை அகற்றிடும் உணர்வுகளாக… அவர்களுக்குள் அது உற்பத்தியாகும் பொழுது தான் அந்த நிலை வருகின்றது.
 
சிறு துளிகளாக மழை பெய்கின்றது. ஆனால் அதை ஆங்காங்குள்ள பூமியினுடைய நிலைகள் இழுத்து விடுகின்றது… வெள்ளமாகச் செல்வதில்லை.
 
ஆனால் அதே சமயத்தில் சிறு துளிகள் அனைத்தும் ஒன்றாகச் சேர்ந்து வலுப்பெறும் போது வெள்ளமாக ஓடத் தொடங்குகிறது. இதைப் போன்று தான் ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் தான் பெற்ற உணர்வினை அருள் ஒளியை உருவாக்குதல் வேண்டும். உணர்வின் வலிமையை உருவாக்குதல் வேண்டும்.
 
அவர் உடலிலிருந்து வெளிப்படும் அத்தகைய உணர்வுகளைச் சூரியனுடைய காந்த சக்தியால் கவரப்பட்டால்
1.நம் உணர்வு அவர் உடலிலும் அவர் உணர்வு நம் உடலிலும் ஈர்க்கப்படும் போது
2.இருவரது உணர்வுகளும் ஒன்றாக இணைகின்றது.
 
கோபமான உணர்வு ஒரு உடலிலே பதிவானால் அந்தக் கோபமான உணர்வுகளும் இரண்டறக் கலக்கத்தான் செய்கின்றது. நமக்குள் நல்ல குணங்களை மீறி அந்தக் காரத்தின் உணர்ச்சியை ஊட்டும் பொழுது அத்தகைய அணுக்கள் விளைந்தால் இரத்தக் கொதிப்பாக மாறுகின்றது.
 
இதை அருள் ஞானிகள் உணர்வு கொண்டு அடக்கினால் தனது நண்பனுக்கும் அந்த நிலை பெற வேண்டும் என்று சந்தர்ப்பத்தால் வேதனையோ துன்பங்களை ஏற்படும் பொழுது அருள் ஒளி பெற வேண்டும் என்று தனக்குள் எடுத்து அதை உருவாக்க வேண்டும்.
 
அதாவது ஒருவர் தவறு செய்கிறார் என்றால் அவன் உடலுக்குள் ஊடுருவி தவறிலிருந்து மீட்கும் நிலையாகச் சிந்திக்கும் செயலாகப் பெற வேண்டும் என்று உணர்வை ஊட்டிடல் வேண்டும்.
 
பல முறை நாம் செய்தால் அந்தத் தவறின் உணர்வுகள் நமக்குள் வராது தடுக்கின்றோம். நண்பன் என்று பேசப்படும் பொழுது ஏற்றுக் கொள்ளும் சந்தர்ப்பம் வருகின்றது. அத்தகைய உணர்ச்சிகளை ஊட்டி அதை ஏற்கும்படி செய்து அது அங்கே பதிவானால் நினைவு கொண்டு தீமைகளை நீக்கிடும் அருள் சக்தி பெறுகின்றான்.
1.அந்த அருள் வழியில் என்றும் இணைந்து வாழலாம்.
2.இப்படிப்பட்ட கூட்டமைப்பை அதிகமாகச் சேர்த்தால் வலு கொண்ட உணர்வாகச் செல்கின்றது.
 
இராமாயணத்தில் வாலி என்ற நிலை வரும் பொழுது விஷம் கலந்த உணர்வுகள் எதனையுமே தாக்கிடும் நிலையாக அந்த ஆற்றல் பெற்றது. அது வாயுபுத்திரன் தான். உணர்வின் அழுத்தங்கள் அதிகமாகி விஷத்தின் தன்மை பாய்ச்சுகின்றது.
 
வாலி எவரைக் கண்டாலும் அவனுடைய வலுவையும் சேர்த்து சம வலிமை பெறுகின்றான். ஒரு நோயாளியின் உடலிலிருந்து வெளிப்படும் உணர்வுகளைச் சூரியனுடைய காந்த சக்தி கவர்கின்றது. நமது கண்கள் உற்றுப் பார்க்கின்றது.
 
அவனின்று வெளிப்படும் உணர்வினை நல்ல குணங்களை அடக்கிடும் வாலியாக அது வருகின்றது. அதை நுகர்ந்தால் நல்ல குணங்கள் செயலிழந்து விடுகின்றது. நம்முடைய வலிமையும் இழக்கச் செய்கின்றது.
 
1.அதைப்போல சுக்ரீவன் என்று வரப்படும் பொழுது அது அவனுடைய சகோதர இனம் தான்.
2.சூரியனின் நிலைகள் கொண்டு அதீதமான வெப்பத்தையும் மற்ற உணர்வுகளையும் விஷத்தின் தன்மை கலந்து
3.வாயு என்ற நிலையில் அதிகரிக்கப்படும் பொழுது சூறாவளி போன்று தீமைகளை அடித்துச் செல்லுகின்றது.
 
ஆஞ்சநேயர் என்பது வாயுபுத்திரன் தான்.
 
நாம் எண்ணும் எந்த உணர்வின் தன்மையோ நம் உடலுக்குள் அந்த உணர்வுகள் ஊடுருவி உணர்ச்சிகளைத் தூண்டி நாம் சொல்லைக் கேட்போர் உடலுக்குள் இந்த உணர்வுகள் தாவிச் சென்று அந்த உடலான கோட்டைக்குள் ஊடுருவி உணர்வின் உணர்ச்சிகளை உந்தி மெய் உணர்வாக அறியச் செய்கின்றது.
 
இதைப் போல தான் உணர்வின் தன்மை ஒன்றிலே மோதும் போது எண்ணங்கள் எவ்வாறு உருவாகின்றது…? அந்த உணர்ச்சியின் தன்மை எவ்வாறு இயக்குகின்றது…? வெளிப்படுத்தும் உணவுகள் சூரியனுடைய காந்த சக்தி கவரப்படும்போது சீதா லட்சுமி ஆக மாறுகின்றது.
 
வேதனைப்படுத்தும் உணர்வை நுகர்ந்தால் வாலி என்று வருகின்றது. கோபப்படும் உணவை நுகர்ந்து கொண்டால் காளி என்றும் இதைப் போன்று பல பல உணர்வுகள் தீமைகளை அடக்கும் தன்மை வருகின்றது.
 
1.ஓர் விஷத்தின் தன்மை கொண்ட நிலையில் மற்ற விஷத்தினை இதற்குள் கலக்கப்படும் பொழுது அடக்கும் தன்மையாக வருகின்றது.
2.தாவர இனங்களிலே பல விதமான விஷங்கள் உண்டு… அதிலே ஒன்றுடன் ஒன்று இணைக்கப்படும் பொழுது
3.இதற்கும் அதற்கும் ஒத்துக்கொள்ளாது… அந்த விஷம் அதை ஒடுக்குகின்றது.
 
இதைப் போன்று நமக்குள் சந்தர்ப்பத்தால் நுகர்ந்தது விஷ அணுக்களை உருவாக்கும் தன்மை கொண்டால் அதை எப்படி மாற்ற வேண்டும்…?
 
மனிதனாக இருக்கும் நாம் நல்ல மருந்துடன் விஷத்தினைக் கலக்கின்றோம். அதை உட்கொள்ளும் பொழுது வேகமாக உடலுக்குள் பரவுகின்றது. உடல் முழுவதும் விஷ வாயுவாக உருவாக்குகின்றது. இரத்த நாளங்களில் கலக்கப்படும் பொழுது அந்த இரத்தத்திலிருந்து தான் விஷ அணுக்களும் உணவாக எடுத்துக் கொள்கின்றது.
1.நல்ல மருந்துடன் விஷத்தைக் கலந்து உள்ளே அனுப்பப்படும் பொழுது நல்ல மருந்திற்கு வீரிய சக்தியாக அமைந்து
2.நம் உடலில் இருக்கும் விஷமான அணுக்களை மடியச் செய்கின்றது.
 
விஷமான உணர்வைக் கொடுத்து நல்ல மருந்தினைக் கொடுத்து அடக்கினாலும் நாம் அடுத்து அதை நிறுத்தாவிட்டால்
1.நல்ல மருந்து மற்ற விஷத்தை ஒடுக்கிய இந்த உணர்வுகள்
2.நம் உடலில் விஷத்தை உருவாக்கும் வேறொரு அணுக்களாக உருவாக்கி
3.மற்ற அணுக்களைக் கொன்று குவிக்கும் நிலை வருகின்றது.
 
அதனால் தான் டாக்டர்கள் குறித்த அளவு கொண்டு இந்த மருந்தினை உட்கொள்ளும்படி சொல்வார்கள். அந்த அளவுகோல் மீறி அந்த மாத்திரையை உட்கொண்டால் அதுவே நமக்குள் கடும் நோயாக மாறி விடுகின்றது.
 
சித்த வைத்தியர்களை எடுத்துக் கொண்டாலும் விஷத்தின் தன்மை கொண்டு மாற்றி அமைக்கும் தன்மை கொண்டு வருவார்கள். ஆனால் அவர் சொன்ன அளவுகோலுக்கு மீறி அதை உட்கொண்டால் விஷத்தின் தன்மை உடலில் பரவி நல்ல அணுக்களைக் கொல்லும் நிலைகள் வந்து விடுகின்றது.
 
நல்ல அணுக்களைக் கொல்லும் நிலைகளுக்கும் மற்ற உயிரைக் கொல்வது போன்று இதைப் போன்று இயற்கையின் உண்மை நிலைகளை அன்று அகஸ்தியனால் கண்டுணரப்பட்டது தான்.
 
மற்ற மனிதனின் உணர்வுகள் தன்மை கொண்டு எவ்வாறு வாழ்கின்றனர்…? எதன் எதன் உணர்வின் இயக்கங்கள் மாறுகின்றது…? நம் உயிர் எவ்வாறு செயலாக்குகின்றது…? என்ற நிலையை உண்மையினை நீ உணர்ந்து கொள் என்றார் குருநாதர்.
 
ஒருவன் ஏசுகிறான் என்று உற்றுப் பார்த்தால் அந்த உணர்வின் தன்மை சிவலோகம் என்ற நிலையை அந்த உயிரின் இயக்கமாக உணர்ச்சிகள் உடலுக்குள் தூண்டுகின்றது.
1.சுழற்சியின் உணர்வை ஊட்டுகின்றது உணர்வின் தன்மையாக இயக்குகின்றது.
2.இரத்தத்துடன் கலந்து கருவுறும் தன்மை வருகின்றது. இந்திரலோகமாக இந்திரீகமாக மாறுகின்றது.
 
கோழி முட்டை எப்படி உருவாகின்றதோ நம் இரத்த நாளங்களில் அது கருவுறும் அணுவாக உருப்பெறும் தன்மை பெறுகின்றது. கரு என்ற உணர்வுகள் உருவாக்கி விட்டால் அதனின் காலக்கெடு வரப்படும் பொழுது அந்தக் கருமுட்டை வெடிக்கின்றது. எக்குணத்தின் தன்மை பெற்றதோ அந்த அணுவின் தன்மையாக வருகின்றது.
 
இரத்த நாளங்கள் எங்கே சுழல்கின்றதோ எந்த உறுப்பில் அது வெடிக்கின்றதோ அந்த உறுப்புகள் நஞ்சாகி விஷத்தின் தன்மை பாய்ச்சி நல்ல அணுக்களைக் கொல்லும்… அல்லது செயலிழக்கச் செய்கின்றது.
 
நல்ல உறுப்புகளை உருவாக்கிய அணுக்கள் மடிந்தால் அல்லது அஞ்சி நடுங்கினால் உடலுக்குள் ஒரு விதமான வேதனை வருகின்றது. கல்லீரலோ மண்ணீரலோ மற்ற சுரப்பிகள் நரம்பு மண்டலங்களிலோ மாற்றப்பட்டால் கடும் வேதனைகள் வருகின்றது.
 
ஆனால் நாம் தவறு செய்யவில்லை.
 
இதைப் போன்ற உணர்வுகள் எவ்வாறு மாற்றம் அடைகின்றது என்பதனை குரு உணர்த்துகின்றார். அகஸ்தியரால் கண்டுணரப்பட்ட உணர்வுகள் நஞ்சினை வென்றிடும் உணர்வு கொண்டு நஞ்சின் இயக்கத்தை உணர்ந்தவன் அவன்
1.நஞ்சினை அடக்கிடும் உணர்வு பெற்றவன்.
2.விண்ணை நோக்கி உற்றுப் பார்த்து மின் கதிர்களை நுகர்கின்றான் அதை அடக்குகின்றான்.
3.மின்னட்டாம் பூச்சி போன்று தன் உடலுக்குள் இருக்கும் அணுக்களை ஒளிக்கதிராக மாற்றும் அணுக்களாக மாற்றுகின்றான்.
4.துருவப் பகுதியில் வரும் ஆற்றலை நுகர்ந்து துருவனாகின்றான்.
5.கடும் விஷங்களையும் அடக்கிடும் ஆற்றல் சந்தர்ப்பத்தால் இந்த உணர்வுகள் விளைகின்றது.
 
அந்த ஆற்றல்களை நாம் அனைவரும் பெறுதல் வேண்டும். அதற்கே இதைப் பதிவு செய்கின்றேன்.

May 26, 2025

அகஸ்தியனுக்குள் விளைந்த நுண்ணறிவுகள்

அகஸ்தியனுக்குள் விளைந்த நுண்ணறிவுகள்


1.அகஸ்தியன் கற்றறிந்து வந்தவனல்ல.
2.தாய் கருவிலே கவர்ந்த உணர்வுகள் அந்த அணுக்களே இயக்கி அவன் உடலுக்குள்ளே விளைந்தது.
3.விஞ்ஞானி எப்படி உணர்வுகளை உருமாற்றுகின்றானோ அதைப்போல
4.இயற்கையின் தன்மையைத் தனக்குள் உருவாக்கி அந்த உணர்வினைக் கண்டுபிடிக்கும் மெய்ஞானி ஆகின்றான்.
 
விஞ்ஞானி ஒன்றைப் பதிவு செய்து அதைப் பெற வேண்டும் என்று தன் உணர்வைக் கூட்டுகின்றான். அதன் வழி நுகர்ந்தறிந்த உணர்வு கொண்டு ஒவ்வொரு பொருளையும் அவன் உருவாக்குகின்றான்.
 
உருவாக்கும் உணர்ச்சிகள் அவனுக்குள் வரப்படும் பொழுது அந்த அணுக்கள் அவனுக்குள் உருவாகின்றது. அப்படிப்பட்ட அணுக்கள் உருவான பின் உணவுக்காக உணர்ச்சிகளைத் தூண்டும் பொழுது உணர்வின் அறிவாக அது இயக்குகின்றது.
 
மேலும் மேலும் இவன் கண்டுணர்ந்த உணர்வுகளை இணைக்கப்படும் பொழுது மகிழ்ச்சி பெறும் உணர்வுகளாகவும் அதைச் செயலாக்கும் உணஸ்சிகளின் செயல்களும் மற்ற உணர்வுகளை நுகந்தறிந்து செயலாக்கத்தையும் கண்டுணர்ந்து விஞ்ஞானி ஆகின்றான்.
 
அதைக் கண்டுணர்ந்தவன் எந்திரத்தை உருவாக்கி அதை எப்படிப் பிரிப்பது…? என்று தத்துவத்தைக் கண்டு இவன் கண்டு கொண்ட ஒரு பொருளுக்குள் மறைந்த உணர்வை எவ்வாறு பிரிக்க வேண்டும்…? என்றும் அதற்குள் இன்ன பொருள் இருக்கிறது என்றும் விஞ்ஞானி காணுகின்றான்.
 
ஆனால் அதே சமயத்தில் இன்ஜினியர் அதற்குண்டான உறுப்புகளைச் செய்து விஞ்ஞானி கண்ட உணர்வுகளை எந்திரத்தின் துணைகொண்டு இவனின் உணர்வைக் கொண்டு
1.எதனை எதனுடன் கலந்தால் வெப்ப நிலைகள் எப்படி இங்கே கூடுகின்றது…?
2.வெப்ப நிலைகள் கொண்ட பின் ஆவியாக ஆன பின் இதை உறையச் செய்யும் மார்க்கம் என்ன…? என்ற
3.டெக்னிகலை இன்ஜினியர்கள் அதைக் கண்டுகொள்கின்றார்கள்.
 
அவன் கொடுத்த கருவினை இவன் உருவாக்கி இதைப் பிரித்துச் சேமிக்கும் உணர்வாக விஞ்ஞானி கொடுக்கும் நிலைகள் கொண்டு “இதனுடைய ஆக்கச் சக்தி இவ்வளவுதான்” என்ற அளவீடு கொண்டு வரப்படும் பொழுது இன்ஜினியர் அதற்குத் தக்க எந்திரங்களை உருவாக்கி உறுப்புகளுக்கு வலுக் கொடுத்து அதிலே வரும் தடைகளைச் சீர்படுத்தி உருப் பெறும் உணர்வுகளைப் பிரித்து அதை எவ்வாறு செயல்படுத்துவது…? என்ற நிலைகளைக் கொண்டு வருகின்றார்கள்.
 
உதாரணமாக மணல்களைக் கடலிலிருந்து எடுத்து வந்து அதிலே பிரிக்கப்படும் போது வெடிக்கும் நிலை வந்து விட்டால் என்ன செய்வது…? ஹைட்ரஜன் என்ற நிலையில் ஊடுருவப்பட்டு கடலின் தன்மை கொண்டு உப்புச் சத்தின் நிலைகள் அதிலே மின்னல் தாக்கப்படும் பொழுது “யுரேனியமாக” அது மாறுகின்றது.
 
அதே கடலின் சத்தின் தன்மையை எடுத்து இது பிரிக்கப்படும் பொழுது ஆவியின் தன்மை அடைந்த பின் இதற்குள் அடைத்து மீண்டும் கிடைக்கும் உணர்வு கொண்டு இதைக் கரைத்து அணுத் தன்மை கொண்டதாகப் பல நிலைகள் பிரிக்கின்றார்கள்.
1.அணு விசைகளை அணுக் கதிரியக்கங்களை தனக்குள் ஒரு பவுடரைப் போன்று உருவாக்குகின்றார்கள்.
2.மணலில் இருக்கும் தன்மைகளை மணலைக் கருக்கி அதனுள் வரும் உணர்வினைப் பிரித்து அணுகுண்டுகளைத் தயார் செய்கின்றான்.
3.அந்தக் கடுகளவு இருக்கும் அணு விசைகளைக் கொண்டு ஒரு இயந்திரத்தில் இணைக்கப்படும் பொழுது
4.அதனுடைய வேகத்தடிப்பு கொண்டு இயந்திரத்தையே துரிதமாக இயக்கச் செய்கின்றது.
 
இது எல்லாம் விஞ்ஞானி கண்ட நிலைகள்.
 
இதைப் போன்று தான்
1.”விஷத்தின் துடிப்பு கொண்ட நிலைகளைத் தாய் கருவிலே பெற்ற அகஸ்தியர்”
தன் உணர்வின் எண்ணம் கொண்டு மூன்றாவது வயதிலே வானத்தை உற்றுப் பார்க்கின்றான்.
3.அந்த வானுலகம் எவ்வாறு இயங்குகின்றது…? என்பதையும் அது எப்படிப் பிரபஞ்சமாக மாறுகிறது…? என்பதையும்
4.அதிலிருந்து வரக்கூடிய சக்திகளை நமது பூமி துருவத்தின் வழி எவ்வாறு கவர்கிறது…? என்பதையும்
5.நஞ்சு கலந்ததாக வருவதைத் தனக்குள் இவன் ஒடுக்கி அந்த உணர்வின் இயக்கப் பொறிகளை அகஸ்தியன் கண்டுணர்கின்றான்.
 
அவ்வாறு கண்டு கொண்ட நிலையில் அந்தக் காட்டுக்கே அரசனாக மாறுகின்றான் தன் 5 வயதிலேயே…!
 
இறைச்சிகளை உணவாக உட்கொண்ட அவன் இன மக்கள் இறைச்சிகள் அல்லாத உணவை எவ்வாறு உட்கொள்ள வேண்டும் என்று கனிகளையும் மற்றதுகளையும் உட்கொள்ளும்படி செய்தான்.
 
பல பயிர்களை இட்டு பல பல வித்துக்களை ஒன்றாக்கி அதையெல்லாம் விளைய வைத்த பின் உணவாக உட்கொள்ளும் நிலைக்குக் கொண்டு வருகின்றான்.
 
தனக்குள் உணர்ந்த நிலைகள் கொண்டு இறைச்சிகளை உட்கொள்ளாது அருள் ஒளி உணர்வினை உருவாக்கும் தன்மை பெறுகின்றான். முதல் மனிதன் அணுவின் தன்மையை அறிந்த அகஸ்தியன் பல பல தாவர இனங்களை உருவாக்குகின்றான்.
 
அதன் வரிசையில் மனித நிலைகளுக்குள் சிறுகச் சிறுக ஊடுருவி இதன் உணர்வின் எண்ணங்கள் வலுப்பெற்று விஞ்ஞானி ஆகின்றார்கள். கற்றுணர்ந்து உணர்வினை அறியும் அறிவுக்கு வரும் பொழுது இவன் உணர்வினை எதற்குள் செலுத்துகின்றானோ அதில் வளர்ச்சி பெற்று விஞ்ஞானி ஆகின்றான்.
 
விஞ்ஞான அறிவு கொண்டு ஒன்றின் இயக்கங்களைத் தனித்துப் பிரித்து ஒழுங்குபடுத்தும் நிலைக்கு வருகின்றான் மனிதன். விவசாய நிலங்களில் கால சூழ்நிலைக்கொப்ப வெயில் காலங்களிலும் வளரும் பயிர்களை உருவாக்குகின்றான்.
 
வெயில் காலத்தில் நமக்கு வியர்க்கின்றது. சனிக்கோளின் உணர்வுகள் மற்ற மற்ற அணுக்களில் இருக்கப்படும் பொழுது ஒன்றுடன் ஒன்று வெப்பத்தின் தணல் ஆகும் பொழுது ஆவியாக மாறுகின்றது.
 
1.ஆவியின் தன்மை வரப்படும் பொழுது அதிலிருந்து நீர் சத்தைப் பிரிக்கின்றது.
2.அந்த நீர்சத்தை உணவாக உட்கொள்ளும் தாவர இனங்களை உருவாக்குகின்றான்.
 
மறைந்த நிலையில் நமக்குள் வியர்க்கின்றது. அதுவே அந்த அணுவின் உணவாக உட்கொண்டு பயிரினங்கள் வளரும் தன்மையும் அதை உருவாக்குகின்றான் விஞ்ஞானி.
 
அன்று மெய்ஞானி இத்தகைய நிலைகள் காலப்பருவத்திற்கொப்பத் தனக்கு உணவு தேவை என்றும் பல பல உணர்வுகளை இணைத்து மனிதனுக்கு உகந்த தாவர இனங்களாக உருவாக்கினான்.
 
இறைச்சிகளை உணவாக உட்கொள்ளாது தாவர இனத்தைப் பிரித்து அந்த உயர்ந்த குணங்களைத் தனக்குள் சேர்த்து உணர்வின் ஒளியாக மாற்றி ஒளியான அணுக்களாக உருவாக்குகின்றான் அகஸ்தியன்.
 
அவ்வகையில் வளர்ந்தவன் தான் பல தாவரங்களின் நிலைகளை உண்மையை அறியும் பொழுது அதையெல்லாம் நுகந்தறிந்து தனக்குள் அணுவாக உருவாக்குகின்றான்.
1.அறியும் உணர்வுகள் இவனுக்குள் இரு மடங்கு மோதப்படும் பொழுது ஞானத்தின் தன்மை பெறுகின்றான்.
2.ஒன்றுடன் ஒன்று இணைக்கப்படும் பொழுது அதனுடைய இயக்கங்கள் எவ்வாறு என்றும் தனக்குள்ளேயே அறிகின்றான்.
3.அவன் எவ்வாறு அறிகின்றான்…? என்று குருநாதர் காட்டிய அருள் வழியில் இதை எல்லாம் அனுபவபூர்வமாக அறிந்தேன்.
 
அதையே தான் உங்களுக்குள்ளும் இப்போது பதிவு செய்கின்றேன்.