ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

December 7, 2014

உங்கள் ஒவ்வொருவருக்கும் விஷத்தை (தீமைகளை) நீக்கும் ஆற்றல் உண்டு - ஞானகுரு

ஜோதிடம் பார்த்து நல்ல நேரம் வருகிறதா? கெட்ட நேரம் வருகிறதா? என்று பார்ப்பவர்கள்  நாம் என்னதான் சொன்னாலும் நேரத்தைப் பார்க்கக் கிளம்பிவிடுவார்கள்.

அங்கே அவன் பார்த்தவுடன், இந்த ராசிக்கும் அந்த ராசிக்கும் மோசமாக இருக்கின்றது என்று சொல்லி நல்லதாக இருந்தாலும் காசு வாங்குவதற்காக இப்படிச் சாங்கியம் செய்ய வேண்டும் என்று சொல்லிவிடுவான்.

அதை இவர்கள் பதிவாக்கிக் கொள்வார்கள். பதிவானது நடக்கவில்லை என்றால் சிறிது காலம் பார்க்கின்றார்கள். பிறகு என்ன செய்வார்கள்?

மறுபடியும் இந்த யாகம் செய்யவேண்டும், அந்தச் சக்கரம் வைக்க வேண்டும் என்று திரும்ப அவனின் எண்ணத்திற்குத்தான் சென்று விடுகின்றார்கள். காசைக் கொடுத்துவிட்டு இந்த மாதிரிச் சென்றுவிடுகிறார்கள்.

கோவிலில் மந்திரம் சொல்வதெல்லாம் அதர்வண வேதத்தில் மனிதனை நெருப்பில் போட்டு கொளுத்தி அதற்குண்டான நிலைகளைச் செய்து உணர்வுகளை எடுத்துக் கொள்கின்றார்கள்.

ஒரு நோயாளியின் உணர்வை நுகர்ந்தோம் என்றால் அந்த வேதனை நமக்குள் வந்துவிடுகின்றது. நோயாளி இறந்தான் என்றால் அந்த ஆன்மா நம் உடலுக்குள் வந்துவிடுகின்றது.

இதே மாதிரித்தான் மந்திரங்களைச் சொல்லி உணர்வுகளைச் செலுத்தி அவர்களைக் கொன்று அந்த உணர்வுகளைச் சொல்லி அந்த ஆன்மாக்களை எடுத்துக் கொள்கின்றனர்.

அந்த ஆன்மாக்களை வைத்துத்தான், பில்லி சூன்யம் செய்வதெல்லாம்.
இதை வைத்து நல்லது செய்தாலும்
மழைக்குக் குடை பிடிப்பது மாதிரி
சிறிது காலத்திற்குத்தான் இருக்கும்.

பின் நாம் எடுத்துக் கொண்ட உணர்வுகள் விளைந்த பின் எப்படி எரித்துக் கொன்றானோ அதே மாதிரி உடலில் எரிச்சல் நிச்சயம் வரும்.

அவன் தீயில் வேகும் பொழுது எந்த உணர்வை எடுத்துப் பிரித்தானோ, அதே உணர்ச்சிகள் எரியுதேம் எரியுதே என்று கதறுவான்.
மந்திரவாதியும் சரி, மந்திரவாதியிடம் கேட்டவர்களும் சரி,
கடைசியில் இப்படித்தான் ஆகும்.
இதை உங்களுக்குத் தெரியப்படுத்துகின்றேன்.

நீங்கள் இதைத் தப்பு என்று ஒதுங்கி நடந்தால் உங்களுக்கு நல்லது. இல்லாவிடில் எல்லாவற்றிற்கும் ஜோதிடம் பார்ப்பவர்களையும், மந்திரவாதிகளையும் தான் நாடிச் செல்லும் நிலை உருவாகிவிடும்.

தேள் கொட்டினால் அதற்காக மந்திரிக்கச் செல்வோம். அதே சமயத்தில் இந்த தியானம் எடுப்பவர்கள் விஷம் இறங்கிவிடும் என்று சொன்னால் இறங்குவதைப் பார்க்கலாம்.

துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெறவேண்டும் என்ற உணர்வுகளைச் சுவாசித்து,
தேள் கொட்டியவரின் கையில் ஏதாவது கொடுத்து
வாயில் போடச் சொல்லி மரத்தில் கை வைக்கச் சொல்லி
விஷம் இறங்கிவிடும் என்று சொன்னால் இறங்கிவிடும்.

அப்பொழுது உங்கள் உணர்வு உள்ளுக்குள் சென்று வேலை செய்கின்றது. விஷத்தை நீக்ககூடிய சக்தி உங்கள் ஒவ்வொருவருக்கும் உண்டு. உங்களை நீங்கள் நம்புங்கள்.