ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

December 6, 2014

பூச்சிக் கொல்லி மருந்துகளை விவசாயத்திற்குப் பயன்படுத்துவதால் மனிதனுக்கு சிந்திக்கும் ஆற்றல் குறைகின்றது

விவசாய நிலங்களில் பூச்சிக்கொல்லி மருந்துகளைப் போடும்போது எந்தப் பூச்சிக்கு அது எதிர்நிலையோ அதுதான் சாகின்றது. மற்ற பூச்சிகள் சாவதில்லை.

கரையான் மருந்தைப் போட்டால் கரையான் மடிகின்றது. ஆனால் எறும்பு மடிவதில்லை. ஒவ்வொரு உணர்வுக்குத் தக்கவாறு ஒவ்வொரு விதமான வித்தியாசங்கள் வருகின்றது.

செடி கொடிகளுக்கு விஷத்தன்மையானால் அதற்குத் தகுந்த மருந்தைப் போட்டால் அது மடிகின்றது. அதே சமயம் செடிகளில் உள்ள நல்ல அணுக்களையும் இது கொன்றுவிடும்.

தூவிய விஷம் செடியில் பட்டு வித்தில் கலந்துவிடுகின்றது. இதை சாப்பிடுகின்ற மாடு அந்த விஷத்தை எடுத்து சத்தைக் கூட்டிக் கொள்கின்றது.

நாம் மனிதனானவன் இந்த வித்தைச் சாப்பிடும்பொழுது அதிலுள்ள விஷம் கலந்து உடலிலுள்ள அணுக்களுக்கு விஷமான நிலைகள் கூடிவிடுகின்றது.

அப்பொழுது நமக்கு சிந்திக்கும் தன்மை குறைந்து விடுகின்றது. அந்த சந்தர்ப்பங்களில் ஏதாவது நினைத்தது நடக்கவில்லை என்றால் உடனே கோபம் வரும்.

இன்று பெரும் பகுதியான மக்களுக்கு விஞ்ஞான அறிவினால் வந்த சாப்பாட்டுடன் சேர்த்து கோபம் வருகின்றது. இந்த உணர்வுகளால் உடலில் கடுகடுப்பு அதிகமாக இருக்கும்.

இன்றைக்கு நாம் விஞ்ஞான நிலைகளில் சிக்கித் தவித்துக் கொண்டுள்ளோம். இதெல்லாம் உணர்வை அறிந்து வைத்திருக்கின்றேன். அதனால் நான் சொல்லுகின்றேன்.

டாக்டர்கள் இன்னென்ன நோய்களுக்கு இன்னென்ன மருந்து என்றூம் இன்னென்ன செடிகளால் விஷம் வருகின்றது என்றும் அதற்கு இன்னென்ன கொடுத்தால் சரியாகிவிடும் என்றும் கண்டுபிடித்திருக்கின்றார்கள். அதனால் செய்து விடுகின்றார்கள்.

அது தெரியாது நாம் பதறுகின்றோம். நாடித் துடிப்புகளைப் பார்க்கின்றார்கள். இருதயத்தின் துடிப்பின் வேகத்தை வைத்து இது இதனால்தான் இருக்குமென்று துடிப்பின் நிலைகள் கொண்டு டாக்டர்கள் அறிந்து கொள்கின்றவர்கள்.

டாக்டர்கள் அவர்கள் படிக்கும்போது இன்னென்ன நோய்க்கு இன்னென்ன மருந்து என்று பழக்கப்படுத்தி விட்டிருக்கின்றார்கள். அதைப் பழக்கப்படுத்தி சரியான நினைவில் இருந்தாரென்றால் அந்த டாக்டர் உயர்ந்து விடுகின்றார்.
அதில் ஏமாந்தார் என்றால்
ஒரு நொடி தவறி விட்டதென்றால்
அதே மருந்து நல்லது செய்வதற்கு பதில் கெடுதல் செய்யும்.

ஒரு மருந்தை ஒரு டாக்டர் கொடுக்கின்றார். அந்த மருந்தை கொடுக்கும்பொழுது இன்னொரு துடிப்பு நிலை இருந்தது என்றால், அதன் எதிர்ப்பு நிலை இருந்ததென்றால் அதை தனித்து இன்னொரு மருந்தை கொடுக்கின்றார்.

இதே மாதிரித்தான், நமது குருநாதர் இந்த உலகம் எப்படி இயங்குகின்றது என்னென்ன நிலைகளில் இருக்கின்றது என்பதை எமக்குத் தெரியவைத்தார்.

அவர் உணர்த்திய அருள் வழியில் தீமைகளை அகற்றி
நஞ்சை ஒளியாக மாற்றச் செய்யும் அருள் சக்திகளை
நீங்களும் பெறவேண்டும் என்பதற்காகத்தான் இந்த உண்மைகள் அனைத்தும் உங்களுக்கு உணர்த்தி வருகின்றோம்.