ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

December 14, 2014

துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்தில்தான் நாம் போய்ச் சேரவேண்டும் - ஞானகுரு

தபோவனத்தின் அங்கத்தினராக திருச்சபையின் ஆயுள் உறுப்பினராகச் சேர்ந்திருக்கிறோம். குருதேவர் காட்டிய அருள்வழியில் குருவழியில் நாம் ஆயுள் உறுப்பினராக இணைந்திருக்கின்றோம்.

துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்தில் அவர் ஆயுள் மெம்பராக இருக்கின்றார். நாமெல்லாம் குரு வழியில் துருவ நட்சத்திரத்தின் அருள் வழியில் ஆயுள் மெம்பராக இணைந்திருக்கின்றோம்.

துருவ நட்சத்திரம் என்பதே பல மனிதர்களுடன் ஒன்றி
உணர்வின் தன்மை தெளிவாக்கி
தெளிந்த உணர்வு ஒன்றி ஒன்றிய நிலைகள் கொண்டு
இன்று எல்லோருடைய உணர்வும்
பகைமையற்ற உணர்வு கொண்டு ஒளி என்ற சரீரத்தைப் பெற்றது.

பலவிதமான பல கோடிக்கணக்கான நச்சுத்தன்மைகள் இருந்தாலும் துருவ நட்சத்திரம் அதையெல்லாம் ஒளியாக மாற்றிடும் அருள் சக்தி பெற்று வாழ்ந்து வருகின்றது.

நாம் இந்த மனித உடலுக்குப்பின் பிறவியில்லா நிலை அடைவதே கடைசி நிலை. கோடிக்கரை என்பது மனித உடலில் கரையில் இருக்கின்றோம்.

இராமேஸ்வரத்தில் இராமன் நேரமாகிவிடது என்று மணலைக் குவித்து பூஜிக்கத் தொடங்குகின்றார்.

அதனுடைய பொருள் என்னவென்றால்
இந்த மனித உடலில் அதிக நாள் நீடித்து இருப்பதில்லை.
அதற்குள் நாம் எல்லோருடைய எண்ணங்களையும் ஒன்றாக்கி
இந்தப் புவியின் ஈர்ப்புக்குள் மற்றவர்கள் இழுத்துவிடாது
அந்த பேரருள் உணர்வுகள் எல்லோருக்கும் பெறவேண்டும் என்று
நம் மீது அவர்கள் பற்றைக் குறைக்க வேண்டும்.

அருள் உணர்வுகள் அவர்கள் பெறவேண்டும் என்று எண்ணும்போது நம் மீது அவர்களுக்கு பற்று வருவதில்லை.

நாம் ஒவ்வொரு மனிதனும் செயல்படும் நிலைகளில்
கடைசி நிலைகளில்
துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்தில் போய்ச் சேரவேண்டும்.