ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

June 5, 2025

எனக்குக் கிடைத்த பூர்வ புண்ணியம்

எனக்குக் கிடைத்த பூர்வ புண்ணியம்


குரு அருளால் என் (ஞானகுரு) குடும்பம் ஓரளவுக்கு எல்லோருக்கும் சேவை செய்யக்கூடிய நிலைகள் வந்து சேர்ந்திருக்கின்றது.
 
காரணம் என்னுடைய தாய் கர்ப்பமாக அந்தக் கருவில் நான் இருக்கப்படும் பொழுது என்னுடைய பாட்டி இன்னொரு தம்பி மகளை என்னுடைய அப்பாவுக்கு இரண்டாம் தாரமாகக் கட்டிக் கொடுக்க வேண்டும் என்று முயற்சி செய்தது.
 
என் அம்மாவிற்கு ரொம்பவும் தொல்லை கொடுத்துக் கொண்டிருந்தது…” என் அண்ணனுக்குப் பின் இருவர் பிறந்தார்கள்.
1.அந்த மாதிரி நேரத்தில் நான் கருவில் இருக்கும் பொழுது என்னுடைய அம்மா சொல்லியது (பின்னாட்களில்).
2.உன்னுடைய பாட்டி அப்பாவுக்கு எப்படியாவது இரண்டாம் தாரம் கல்யாணம் செய்ய வேண்டும் என்று வற்புறுத்திக் கொண்டுள்ளது.
3.இதை நிறுத்த வேண்டும் என்பதற்காக  நான் வேண்டாத தெய்வங்கள் இல்லை.
4.கோயில் குமெல்லாம் சுற்றி வந்தேன். மூதாதையர்கள் குலதெய்வங்கள் எல்லோரையும் வேண்டினேன்.
5.எங்களுடைய பாட்டனுடைய பாட்டன் மந்திர சக்தி எல்லாம் கொஞ்சம் கற்றுக் கொண்டவர்கள்.
6.அவர்களையெல்லாம் எண்ணி இந்தக் கல்யாணம் நடக்கக்கூடாது என்று வேண்டிக் கொண்டேன்.
7.நீ கர்ப்பத்தில் இருக்கும் பொழுது. அதே துயரத்தில் நான் இருந்து கொண்டிருந்தேன்
8.அதனால்தானப்பா…! உனக்கு இந்த ஞானமெல்லாம் கிடைத்தது என்று என்னிடம் தாய் சொன்னது.
9.நம்முடைய குலதெய்வங்கள் அனைத்தும் ஒன்று சேர்ந்து நமக்குத் துணையாக நின்றது.
 
என்னுடைய அண்ணன் எங்கள் பாட்டியைத் தான் அம்மா என்று கூப்பிடுவார். தன்னுடைய அம்மாவை மதிக்க மாட்டார். இது நடந்த நிகழ்ச்சி.
 
என்னுடைய அத்தைக்குப் பிள்ளை இல்லை. சொத்தை என் அண்ணனுக்கு எழுதி வைத்து விடலாம் என்று ஏற்பாடு செய்தார்கள். அந்தச் சொத்தை இந்தப் பிள்ளைக்கு எழுதி வைத்து நம் வீட்டில் இருந்த 25 ஏக்கர் நிலமும் நகையும் கொடுத்துக் கட்டி வைக்கலாம் என்று திட்டம் போட்டார்கள். என் அம்மா மீது வெறுப்பு.
 
இது எல்லாம் நீங்கள் கவனமாகத் தெரிந்து கொள்ள வேண்டும். இதை எல்லாம் எமக்குக் குருநாதர் காட்டிய உண்மையின் உணர்வுகள்.
 
1.உன் குடும்பத்தில் எப்படி இப்படி நடந்தது…?
2.இது போன்று ஒவ்வொரு குடும்பத்திலும் எத்தனை சிக்கல்கள் வருகிறது பார்…! என்று எல்லாம் அணுபவபூர்வமாகக் குருநாதர் காட்டினார்.
 
நான் பிறந்த பிற்பாடு என்னுடைய பாட்டி என்னுடைய தாயைத் திட்டுவது கொஞ்சநஞ்சம் அல்ல. நான் சிறு பிள்ளையாக இருந்து வளர்ச்சியாக என் தாய்க்கு உதவி செய்தேன். எனக்குப் பின்னாடி இருவர் பிறந்து இறந்து விட்டார்கள் எனக்கு முன்னாடி பிறந்த இருவரும் இறந்து விட்டார்கள்.
 
அடுத்து தம்பி பிறந்து இருக்கிறார் என்று என்னுடைய பாட்டி என் கழுத்தில் சூடு போட்டது இன்னும் எனக்கு அது நினைவிருக்கிறது. ஏனென்றால் சூடு போட்டால் அடுத்து நோய்கள் வராது என்று அந்தக் காலத்தில் ஒரு மூடநம்பிக்கை.
 
தெற்கத்தி நோய் என்று வலிப்பு மாதிரி வரும் காக்கா வலிப்பு நோய் என்று சொல்வார்கள். என்னுடைய பெரியப்பா வீட்டில் பிள்ளைகளுக்கு இது போன்று வந்ததால் அந்த நோய் வரக்கூடாது என்பதற்காக இந்த மாதிரி சூடு போடுகின்றார்கள்.
 
எனக்குத் தம்பி பிறந்த அன்று சாமி கும்பிடு என்று சொல்லி சூடு போட்டார்கள். இந்த நிகழ்ச்சிகளை நீங்களும் தெரிந்து கொள்வது நல்லது.
 
ராஜபாளையத்தில் என்னுடைய தங்கை திருமணம் ஆகிக் கர்ப்பமாக இருந்த அந்த நேரத்திலே என்னுடைய பாட்டி திட்டி விட்டது என்று சொல்லிக் கோபித்துக் கொண்டு ன் அம்மா கிணற்றில் விழுந்து விட்டது…”
 
ஆனால் அந்த ஊர் வழக்கப்படி குழந்தைகள் இரண்டு வயதுக்கு மேல் ஆகிவிட்டாலே அருகில் இருக்கும் குளங்களில் நீச்சல் கற்றுக் கொடுத்து விடுவார்கள்.
 
அம்மா கிணற்றில் விழுந்தவுடன் நான் ஓடிப் போய்க் காக்க முயற்சி செய்தேன். ஏனென்றால் அங்கே ஒருவரும் இல்லை எனக்கு லீவு வேறு. எனக்கு அப்போது வயது ஏழு அல்லது எட்டு இருக்கும்.
 
கிணற்றில் நான் குதித்து.. என் அம்மா என்னைப் பிடித்துவிடும் என்று சொல்லி அவருடைய தலை முடியைப் பிடித்து அப்படியே இழுத்துக் கொண்டே வந்தேன்.
 
படி மேல் ஏற்றிவிட்டு நீ மேலே ஏறி வருகின்றாயா இல்லையா…?” என்று சொல்லி என் தாயைக் காப்பாற்றினேன்.
1.அதிலிருந்து என் அம்மா கூடவே எப்பொழுதும் இருப்பேன்.
2.என்னுடைய அம்மாவின் “அந்த ஆசி தான் எனக்குக் குரு அருள் கிடைத்தது
3.தாய் எடுத்துக் கொண்ட கருவில் எனக்குள் விளைந்த பூர்வ புண்ணியம்
4.அவர்கள் வேண்டிக் கொண்ட அந்த உணர்வு தான் என்னை இந்த அளவுக்கு உயர்த்தியது.
5.என்னுடைய அண்ணனுக்கோ தம்பிக்கோ தங்கச்சிக்கோ ஒருத்தருக்கும் இது கிடைக்கவில்லை.
 
னுபவபூர்வமாக குருநாதர் இந்த உணர்வுகளை எனக்கு நினைவுபடுத்தி நீ எப்படி வளர்ந்து வந்தாய்…? உன் குடும்பப் பாரம்பரியம் எப்படி வந்தது…? என்ற நிலையும் உணரச் செய்தார்.
 
ஒவ்வொரு குடும்பங்களிலும் தவறு இல்லாமலேயே சங்கடங்களும் சந்தர்ப்பத்தால் பாசத்தால் நுகர்ந்த நிலையில் எத்தனையோ தொல்லைகளும் வேதனைகளும் எப்படி வருகின்றது…?
 
இதைப் போன்ற உண்மையின் நிலைகளை விளக்கி… மனிதன் என்ற பண்பை வளரச் செய்து
1.அன்று அகஸ்தியன் பெற்ற உணர்வுகளைப் பெறச் செய்து
2.தன்னை எது இயக்குகின்றது…? என்பதை குருநாதர் உணர்த்தினார்.
 
தவறு செய்கின்றீர்கள் என்றால் நீங்களா…? இல்லை…! பிறருடைய உணர்வுகள் உங்களுக்குள் இயக்கப்படும் பொழுது நல்ல குணம் தாங்காது அது போன்று இருளான நிலைகளுக்குச் சென்று விடுகின்றோம்.
 
அதையெல்லாம் மாற்றிப் பழகுதல் வேண்டும். அதற்குத் தான் தியானப் பயிற்சியே கொடுக்கின்றோம்.