ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

August 20, 2019

காசி விஸ்வநாதர் ஆலயத்தில் தியானத்தில் கிடைத்த அனுபவம் 20.08.2019

விஸ்வதரிசனம் 

உயிரான ஈசனைப் புருவ மத்தியில் எண்ணி ஆதிசங்கரர் உணர்வுகளை எடுக்கப்படும் பொழுது விஸ்வ தரிசனமாகவும் அதற்குரிய உணர்வின் ஒலிகளும் (நாதங்களும்) கிடைத்தது. 

ஆதிசங்கரர் வெளிப்படுத்திய அத்வைதம் என்ற தத்துவத்தின் படி காற்றில் மறைந்துள்ள மகோன்னதமான சூட்சம சக்திகளை எடுக்கும் தியானமாக இன்று அமைந்தது.

உயிரான ஈசனுக்குள் (சீவலிங்கத்திற்கு) பல அபிஷேக உணர்வுகளும் ஞானிகள் மகரிஷிகள் உணர்வுகளும் பரவிப் படர்ந்தது. 

உலகம் முழுவதும் அந்த ஆதிசங்கரர் உணர்வுகள் பரவிட அருள்வாய் ஈஸ்வரா. ஒவ்வொரு உயிராத்மாவும் ஆதிசங்கரர் காட்டிய அருள் வழியில் காற்றில் மறைந்துள்ள மகரிஷிகளின் அருள் சக்திகளைப் பெற அருள்வாய் ஈஸ்வரா.

1.காசி மாநகரில் ஆதிசங்கரர் நிரூபித்த உயிரின் ஆற்றலை
2.அந்த விஸ்வநாதனின் உயர்ந்த சக்திகளை 
3.உலக மக்கள் அனைவரும் பெற அருள்வாய் ஈஸ்வரா.

அன்னபூரணி
உடலுக்கு மூன்று வேளை உண்ணும் நிலையிலிருந்து பூமி சமைத்து அதிலே விளைந்த உணவுகளைப் புசிப்பதிலிருந்து விடுபடும் நிலையாக விண்ணுலக ஆற்றலை எடுத்து உயிரான ஈசனுக்கு உணவு கொடுக்கும் தியானமாக இது அமைந்தது.

தேவர்கள் அமுதத்தை உண்டு அமரர்களாக இருப்பது போல் ஆதிசக்தியின் ஆற்றலை அதாவது அகண்ட அண்டத்தின் ஆற்றலை (தானமாக) பிச்சை எடுத்து வாங்கி உயிருக்கு ஊட்டும் தியானமாக இன்று இருந்தது.

1.பூரணத்துவம் பெற்ற… பூரண நிலையில் இருக்கும்…
2.பேரண்ட மகரிஷிகளின் துணை கொண்டு 
3.அந்த விண்ணுலக ஆற்றலை அன்னபூரணியின் சக்தியை முழுமையாகப் பருகும் ஒரு சந்தர்ப்பமாக இந்தத் தியானம் அமைந்தது.

உலக மக்கள் அனைவரது உயிர்களுக்குள்ளும் அன்னபூரணியின் அருள் சக்தி படர்ந்து அனைவரும் மெய் ஞானிகளாக மகரிஷிகளாக வளர்ந்திட வாழ்ந்திட அருள்வாய் ஈஸ்வரா..!