ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

August 24, 2019

“இமயமலை இரகசியம்” - 22.08.19 அன்று மானசரோவர் சென்று தரிசனம் செய்த இடத்தில் ஸ்படிகங்களைப் பற்றி அறிந்து கொண்ட அனுபவம்


இந்த உலகையே சமப்படுத்திய அகஸ்தியமாமகரிஷி தென்னாட்டிலே தோன்றியிருந்தாலும் இமயமலையில் எண்ணிலடங்கா மகரிஷிகளின் செயலின் முக்கியத்துவத்துவத்தைப் பற்றிய கேள்வியை ஏற்கனவே ஈஸ்வரபட்டரிடம் கேட்டிருந்தேன். 

இமயமலைப் பிரயாணத்தின் பொழுது ஏற்கனவே அங்கே இமயமலையில் அதிகமாகச் சுற்றிய அன்பர் ஒருவர் இமயமலையில் பூகோள அமைப்பைப் பற்றி 20.8.19 அன்று என்னிடம் சொல்லிக் கொண்டிருந்தார்.

1.இமயமலைத் தொடர்ச்சியின் பாறைகள் (மண்) அமைப்பு 
2.ஒவ்வொரு இடத்திலும் ஒவ்வொரு விதமான நிறங்கள் இருப்பதாகவும் 
3.நாம் நினைத்தே பார்க்க முடியாத அளவில் வர்ணங்கள் அதிலே உண்டு என்றும் சொல்லியிருந்தார்.

22.8.19 அன்று அங்கே மானசரோவர் (உத்தரகான்ட் மாநிலம்) சென்று வரும் வழியில் ஸ்படிகங்கள் பற்றிய அறிய ஒரு எனக்கு வாய்ப்பு கிடைத்தது. அங்கே பல வர்ணங்களில் அந்த ஸ்படிகங்களை மாலையாகவும் மற்ற வகைகளிலும் செய்து விற்பனைக்கு வைத்திருந்தார்கள்.

ஒவ்வொரு விதமான மாலையை அணிவதாலும் 
1.மனிதனுக்குள் இருக்கும் சில மன குழப்பத்தை நீக்கும் சக்தியும் 
2.உடல் நலம் பெறச் செய்யும் சக்தியும் கிடைக்கும் என்று சொல்லிக் கொண்டிருந்தார்கள்.

அது போக அந்த ஸ்படிகங்களின் உண்மைத் தன்மையை (ORIGINAL) எப்படிப் பரிசோதிப்பது..? என்று சொன்னார்கள். அதாவது 
1.அதே நிறமுள்ள இரண்டு ஸ்படிகங்களை ஒன்றுடன் ஒன்று அழுத்தமாக மோதச் செய்தால் 
2.அதிலே ஒளிக் கற்றைகள் வருகின்றது. எந்த நிற ஸ்படிகமோ அதே நிறம் வருகின்றது,
3.இப்படி ஒளி வந்தால் தான் அவைகள் உண்மையான ஸ்படிகங்கள்..!

உண்மையான ஸ்படிகள் அனைத்தும் இமயமலைத் தொடர்ச்சியில் உள்ள பாறைகளில் இருந்து வெட்டி எடுக்கப்பட்டு பின்னர் அவை சுத்தம் செய்யப்பட்டு விதவிதமான வடிவங்களில் உருவாக்கப்படுகின்றது என்றும் அங்கே தெளிவுபடுத்தினார்கள்.

மேலும் அங்கே அந்தப் பாறையின் கல்களையும் வைத்திருந்தார்கள். வயலட் பச்சை மஞ்சள் போன்ற நிறக் கற்களைப் பார்த்தேன்.

அப்பொழுது தான் எனக்குள் இலேசாகப் போறி தட்டியது. இதிலே ஏதோ முக்கியமான சூட்சமம் இருப்பது போல் தெரிந்தது.

பின்னர் சிறிது நேரத்திற்குப் பின்னர் ஈஸ்வரப்ட்டர் என்னிடம் “இங்கே என்ன பார்த்தாய்…? என்னிடம் கேட்ட கேள்விக்கு ஏதாவது உனக்குப் புரிந்ததா இல்லையா…? என்று கேட்கத் தொடங்கினார்.

சாமி…! ஏதோ சிறிது உண்மைகள் அறிய முடிகிறது. ஆனால் முழுமையும் அறிய முடியவில்லை. ஆனால் ஞானகுரு என்னிடம் கூறியது… 
1.மகரிஷிகளின் அருள் சக்தியை எடுக்கும் பொழுது நம் உயிர் ஒரு சூரியன் ஆகின்றது.
2.அதிலே எந்த உணர்வுகள் மோதுகிறதோ அதையெல்லாம் ஒளியாக மாற்றிக் கொண்டேயிருக்கும். 
3.மகரிஷிகளின் உணர்வுகள் உயிரிலே ஆழமாகப் பதிவாக்கி அங்கே அதை உருவாக்கிவிட்டால் 
4.எல்லா உணர்வுகளையுமே ஒளியாக மாற்றத் தொடங்கும் என்று என்னிடம் சுமார் 25 வருடம் முன் சொல்லியிருக்கின்றார் என்றேன்.

மேலும் 27 நட்சத்திரங்களும் 27 நிறங்கள் கொண்டது.. அதனுடைய ஒளிக்கற்றைகள் மண்ணிலே பதிந்து கருவாகி விளைந்தால் 27 வைரக்கற்களாக மாறும்..! என்றும் உபதேசத்தில் ஞானகுரு சொல்லியிருக்கின்றார். இது தான் சாமி எனக்குத் தெரியும்..! என்றேன்.

ஈஸ்வரபட்டர் சிரித்துவிட்டு “இன்னுமா உனக்குப் புரியவில்லை…?” என்று கேட்டுவிட்டு 27 நட்சத்திரங்களின் ஒளிக் கற்றைகள் இமயமலைத் தொடர்ச்சியில் அதன் பூகோளப் பகுதியில் அதிகமாகப் படர்ந்து கொண்டேயுள்ளது. 

அது தான் அங்கே பல வித வரணங்களில் பாறைகளாக உருவாகிறது. 
1.அந்த நட்சத்திரங்களின் கற்றைகள் ஒன்றுடன் ஒன்று மோதினால் 
2.எப்படி மின்னலாகப் பளீர்… என்று ஒளியாகத் தோன்றுகிறதோ அதே போல் 
3.அந்தக் கற்களையும் ஒன்றுடன் ஒனறு உராயும் பொழுது ஒளிக் கற்றைகள் தோன்றுகிறது. 

இருந்தாலும் இது புற நிலை தான்..! 

அதே 27 நட்சத்திரங்களின் சக்தியைக் “குருவின் துணை கொண்டு…” தன் உயிராத்மாவில் சேர்த்தால் அதாவது 
1.இரண்டு இமைகளுக்கு மையத்தில் இருக்கும் 
2.உடலின் உச்சியில் புருவ மத்தியில் இருக்கும் உயிர் பாகம் சேமித்தால் (இந்த உடலான இமயமலையில்)
3.உயிராத்மா பேரொளியாக மாறும்.

இங்கே இமயமலையில் திடப்பொருளாக கற்களாக உருவாகின்றது. ஆனால் அந்த 27 நட்சத்திரத்தின் சக்தியை உயிரின் பாகம் சேர்த்துக் கல்லாக ஆக்காமல் 
ஒளியாக.. பேரொளியாக 
ஒளிக் கற்றைகளாக 
ஒளியின் கூட்டமைப்பாக 
ஒளி வெள்ளமாக 
ஒளியின் பிரவாகமாக உருவாக்க வேண்டும்.

இந்த உண்மையை அறிந்ததனால் தான்.. அதை வலுவாக்கிக் கொள்ள வேண்டும் என்ற நிலையில் அந்தச் சக்தியைத் தானும் பெற்று உலக மக்கள் எல்லோருக்கும் கிடைக்கச் செய்ய வேண்டும் என்ற நிலையில் “இமயமலையில் மகரிஷிகளின் செயல்பாடுகள்… இன்றும் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றது..!” என்று எனக்குத் தெளிவுபடுத்தினார்.

இமயமலையின் இரகசியம் இது தான்…!