ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

July 20, 2014

தியானத்தில் எந்த எண்ணத்தை நாம் வலுவாக வைக்க வேண்டும்...?

நான் தியானம் பண்ணிக் கொண்டே இருக்கின்றேன், என் வீட்டுக்காரர் இப்படித் திட்டுகின்றார்.

நானும் தியானம் பண்ணிக்கொண்டே இருக்கின்றேன், கொடுத்த கடன்காரன் கொடுக்கவே மாட்டேன் என்கிறான் என்று விட்டுவிட்டால் என்னவாகும்? இது சவாரி பண்ணி விடும்.

தியானம் பண்ணிக்கொண்டேயிருக்கின்றேன், நோய் வந்துவிட்டது என்று நினைத்தால், இதை விட்டுவிட்டு, அதை எடுத்துக் கொள்கிறீர்கள்.

ஆக, எதற்கு ஜீவன் ஊட்டுகின்றீர்கள்? தீமைகளுக்குத்தான் நீங்கள் சக்தியை ஊட்டி வளர்க்கின்றீர்கள்.

நம் எண்ணங்கள் எதில் வருகின்றது? நம்முள் உள்ள அணுக்கள் பசியைத் தூண்டும் பொழுது, நல்லதை எடுக்க விடாமல் தடுக்கின்றது. அந்த மாதிரி தடுக்கின்ற நேரத்தில் நாம் என்ன செய்ய வேண்டும்?

நம் ஆன்மாவைச் சுத்தப்படுத்திப் பழகவேண்டும். “ஈஸ்வராஎன்று உயிரை எண்ணி, அந்த துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெறவேண்டும்.

அது எங்கள் உடல் முழுவதும் படரவேண்டும், ங்கள் ஜீவான்மா ஜீவ அணுக்கள் பெறவேண்டும் என்று
துருவ நட்சத்திரத்தின் உணர்வை
நல்ல உரமாகக் கொடுத்து
அந்த ஞானத்தை நாம் பெருக்க வேண்டும்.

தீமையான உணர்வு நமக்குள் புகாமல் தடுக்க முடியும். இப்படிச் சுத்தப்படுத்த வேண்டும்.