ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

January 26, 2012

விண் செல்லும் மார்க்கங்கள், உபாயங்கள்

      
நமது குருநாதர், அந்த துருவமகரிஷி எவ்வாறு, எதன் வழியில் விண்ணுலகம் சென்றார் என்ற நிலையில், அவருள் அறியும் ஆற்றல்  பெற்றபின், அதன் வழிகொண்டு அவருக்குண்டான உணர்வின் துணை கொண்டு ,
விண் செல்லும் மார்க்கங்களை, எமக்குள் உபதேசித்து
அவர் எவ்வாறு விண் செல்லுகின்றார், என்ற நிலையும்
எமக்கு விண் செல்லும்  முறைகளை, உபதேசித்துவிட்டு
அவர் உடலை விட்டுப் பிரிந்த பின், அவர்கள் 
விண் செல்லும் மார்க்கங்களை, எம்மில் உபதேசித்து
அதன் வழி, அவரை  உற்றுப் பார்க்கப்படும்போது
அந்த சப்தரிஷி மண்டலத்துடன், இணையும் ஆற்றலும் 
அவர் உடலில் இருந்து,  இந்த உடல் பெற்ற நிலையை
உடல் பெறா நிலைகள், கரைவதையும் காட்டுகின்றார், எமது குருநாதர்,  மாமகரிஷி ஈஸ்வரப்பட்டாய குருதேவர்.
      ஆக இவர் தற்காலத்தில் சென்றதுதான், இப்போது 20 வருடங்களுக்கு முன், அதாவது 1971 என்று எண்ணுகின்றேன், 1970 என்று எண்ணுகின்றேன். ஆனால் நினைவில் இல்லை 1970ல் உடலை விட்டுச் சென்றபின், 
அவர் உயிரான்மா, எவ்வாறு விண் செல்கிறது  என்றும்,
அது,  செல்லும் மார்க்கங்களை  எமக்குள் உபதேசித்து
அதற்கு,  என்ன உபாயங்கள்  செய்ய வேண்டும்?
அவர் பின் செல்லும் உணர்வுடன் தொடர்ந்து,
எப்படி, இதை உனக்குள் பெருக்க வேண்டும் என்று, 
அவர் காட்டிய அருள் வழிப்படி, அதைச் செய்தது.

  பின் அதைத்தான், கண்டுணர்ந்த நிலைகளை, இன்று சப்தரிஷி மண்டலங்களிலிருந்து சக்திகளைப் பெறும் தன்மையை, எமக்கு உபதேசித்த உணர்வின் துணை கொண்டு, அன்று அகஸ்தியனால் பெற்று, துருவனாகி அதன் வழிகளில், வெளிப்பட்ட உணர்வுகள் இங்கே உண்டு, அதை எப்படிப் பெறவேண்டும்? என்று கூறிய அந்த அருள் வழிப்படிதான், அதை நுகர்ந்தறிந்து, எமக்குள் அது விளையச்செய்து, அதன் உணர்வின் எண்ண அலைகளைப் பரப்பப்பபடும் போது, உங்கள் செவிப்புலனறிவில் ஈர்க்கப்பட்டு, அதன் உணர்வின் துணை கொண்டு,
உங்களுக்கு, அந்த விண்ணுலக ஆற்றலைப்
பெறும் தகுதியை ஏற்படுத்துவது, இந்த நிலை.
ஆகவே, அவருள் பெற்ற இந்த உணர்வுகள்தான்,
இன்று உங்களுக்குள் நுகரும் ஆற்றல் அனைத்தும்.

மனிதனில் உயர்ந்து சென்று, தீமைகளை அகற்றி, தீமைகளை அகற்றும் உணர்வுகளை நாம் நுகரப்படும்போதுதான், இது சிவமாக்கி நமது உடலின் நிலைகளை சீராக்கும் நிலைகள்.  அதுதான் சிவக்குழந்தை சிங்காரவேலன் என்று, நாம் அந்த துருவ மகரிஷியின் அருள் சக்தியும், அந்த சப்தரிஷிகளின் சப்தரிஷி மண்டலங்களின் ஒளிகாந்த சக்தியும் நுகரப்படும்போது, சிவமாக்கி, நம் உடலுக்குள்  சிவக்குழந்தையாக்கி உருபெறச்செய்யும் போதுநம்முள் விளைந்த அந்த உணர்வுகள், ஒளியாக மாற்றி, நாம் என்றென்றும் பிறவியில்லா நிலைகளை, அடையச் செய்யும் தன்மைகள், உருபெறுகின்றது.