ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

January 12, 2012

உயிரே கடவுள் – மெய்ஞான மாத இதழ் -- 2000

உயிரே கடவுள்  மெய்ஞான மாத இதழ் 
(பிப்ரவரி 2000)
அகஸ்தியர் அணுவின் இயக்கத்தை அறிந்தார். உணர்வின் இயக்கத்தை அறிந்தார். தீமைகளை அகற்றிடும் வல்லமை பெற்றார். தம் மனைவிக்குப் போதித்தார். கணவனும், மனைவியும் இரு உணர்வும் ஒரு உணர்வாக உருவாக்கினார். உணர்வின் தன்மையை உரு கருவாக்கும் உணர்வினைப் பெற்றனர்.

27 நட்சத்திரங்களின் உணர்வின் அணுக்கள், ஒன்றோடு ஒன்று மோதும் பொழுது,  ஒளிக்கற்றைகள் மாறி, ஒளி பிம்பங்கள் தெரிவதைப் போன்று,  இதன் உணர்வின் அணுக்களின் தன்மையை தமக்குள் ஏற்றார். பகைமை என்ற உணர்வுகள் வரப்படும் பொழுது,  அதைச் சுருக்கி, ஒளியாக மாற்றும் திறன் பெற்றார்.

இப்படி, அகஸ்தியர் துருவனாகி, துருவ மகரிஷியாகி, துருவ நட்சத்திரமானார். இதனின் உண்மைகளை அறிந்து, அதன் வழி நாம் வாழவேண்டும்.

புவியிலிருந்து வெளிப்படும் உணர்வின் தன்மைகளை, சூரியனின் காந்தப் புலனறிவுகள் கவர்ந்து, எலெக்ட்ரான்களாக மாற்றுகின்றது சேர்த்துக் கொண்ட உணர்வுக்கொப்பதான், மற்றொன்றை உருவாக்குகின்றது. 

ஒரு உயிரினம் தனக்கு எதிர்நிலை வரப்படும் பொழுது, தன்னைக் காத்துக் கொள்ள எண்ணி ஏங்குகின்றது.  இது சமயம், தான் எடுத்துக் கொண்ட உணர்வுகள் தன்னுள் இணைந்த பின், உணர்வின் தன்மை ஒன்றாகி, உணர்வின் உணர்ச்சிகள் மாறுகின்றது. 

உணர்ச்சிக்கொப்ப ரூபங்கள் மாறுகின்றது என்பதை எலெக்ட்ரிக், எலெக்ட்ரான் என்ற நிலையில் விஞ்ஞான அறிவால் கண்டுணர்கின்றனர் விஞ்ஞானிகள்.

இப்படி, விஞ்ஞான அறிவு கொண்டு, கண்டுணர்ந்த எலும்புக் கூட்டை எடுத்து, எலெக்ட்ரான் என்ற உணர்வின் அதிர்வுகளை, ஆயிரம் மடங்கு கூட்டுகின்றனர். இதன் தொடர் கொண்டு, இந்த உணர்வின் தன்மைகளை அறிந்து, இந்த உயிரினம் எதனை உணவாக உட்கொண்டது? எதனால் எதிர்நிலை ஆனது?  இதனின் ரூபம் என்ன?  இதனுடைய குணங்கள் என்ன? என்று விஞ்ஞானிகள் அறிந்து,  அதனின் உருவத்தையே காட்டுகின்றார்கள்.

ஒரு திருடனைப் பிடிக்க வேண்டுமென்று, ஒரு கைரேகையை வைத்து மற்ற கைரேகைகளுடன், அன்று ஒப்பிட்டுப் பார்த்தார்கள். ஆனால் இன்று, எலெக்ட்ரிக், எலெக்ட்ரான் என்ற நிலைகள் கொண்டு, ஒரு கைரேகையின் உணர்வைப் பதிவாக்கிவிட்டால், ஒரு கம்ப்யூட்டரின் உணர்வின் இயக்கத்தின் தன்மை கொண்டு, குற்றவாளியின் உருவத்தையும், அவனின் குணத்தையும், அவனின் செயலையும், அவன் எங்கே இருக்கின்றான் என்பதையும் விரித்துக் காண்பிக்கின்றது. தான் தெரியாமல் தவறைச் செய்தாலும்,  இந்த உணர்வின் தன்மை கொண்டு அறிகின்றனர்.

இதைப் போன்று, யார் தவறு செய்தாலும், அந்த உணர்வின் தன்மை அவருக்குள் பதிவாகும் என்பதை, மறந்துவிட வேண்டாம். 

அதே போன்று, பதிவான உணர்வுகள் வெளிப்படும் பொழுது, சூரியனின் காந்தப் புலனறிவுகள் கவர்ந்து வைத்துக் கொள்கின்றது என்பதையும், நாம் அறிந்து கொள்ள வேண்டும் இதைத்தான், விஞ்ஞானிகள் எலெக்ட்ரிக், எலெக்ட்ரான் என்ற நிலைகளில் அறிந்துள்ளனர்.

ஆனால்  மெய்ஞானிகள், நமது உயிர், ஆதிமூலம் என்ற நிலைகளில் உருப்பெற்று, சேர்த்துக் கொண்ட வினைக்கொப்ப மனிதனாக எப்படி உருவானது, என்ற உணர்வின் தன்மையை அறிந்து,  அறிந்த உணர்வு கொண்டு நஞ்சினை வென்றனர். உணர்வினை ஒளியாக்கினர். 

ஒளியான அவர்கள், தன் இன மக்களும் பெறவேண்டும் என்று உண்மையின் உணர்வினை ரூபமாக்கினர். துவைதம் என்று கற்சிலையாக (ஆலயத்தில்) வடித்தனர். குணங்களின் தன்மையினைச் சித்தரித்தனர். நாம் பெறவேண்டிய மார்க்கம் எது? என்பதை உணர்த்தி, தீமைகளிலிருந்து விடுபடும்  நிலையை, மெய்ஞானிகள் உருவாக்கினார்கள்.

விநாயகர் ஆலயத்தில், அரச மரத்தை வைத்தனர். ஏனெனில், நாம் தீமைகளை அகற்றி, அருளுணர்வைப்  பெறவேண்டும் என்பதை நினைவுபடுத்துவதற்காக, ரச மரத்தை வைத்தனர். 

இப்பிரபஞ்சத்தில் இருக்கக்கூடிய துருவ நட்சத்திரம், அகண்ட அண்டத்திலிருந்து வரும் விஷத்தன்மைகளைக் கவர்ந்து, தம்முள் ஒளியாக மாற்றி, வாழ்ந்து வளர்ந்து கொண்டுள்ளது.

அரசமரத்தின் இலைகளைப் பார்த்தோம் என்றால், இலைகளின் நுனிப்பகுதி கூர்மையாக, நீண்டு, ஒரு ஏரியலை (ariel) போன்று இருக்கும். 

அரசமரம், தன் இலை ஏரியலைப் போன்று இருப்பதால், காற்றிலிருக்கும் நீர சத்தையும், அதற்குள் இருக்கும் இயக்க உணர்வுகளையும், சனிக்கோளில் இருந்து வெளிப்படும் கதிரியக்கப் பொறிகள், ஒன்றோடு ஒன்று மோதி வெடிக்கும் பொழுது, பிரிந்து வரும் உணர்வின் சத்துகளைக் கவருவது போன்று, தனக்குள் எடுத்து, தன்னுள் அனைத்து பாகங்களிலும் பரவச் செய்து, தரையில் இருக்கும் தன் இனத்தோடு சேர்த்து, நீர் நிலைகள் இருக்கும் பக்கம், தன் உணர்வின் தன்மையை வளர்க்கும் நிலை பெற்றது அரசமரம்.

ஒரு வலுவான கட்டிடத்தில், ஒரு அரச மரத்தின் வித்து விழுந்துவிட்டால், அந்த வித்து, காற்றிலிருந்து தன் சத்தை எடுத்து விழுதுகளைப் பரப்பி, கட்டிடத்தையே வீழ்த்தி, தான் வளரும் தன்மை வாய்ந்தது. 

நஞ்சினை வென்று, உணர்வினை ஒளியாக மாற்றிய, துருவ நட்சத்திரத்தைத்தான் அரசமரமாகக் காண்பித்தனர் ஞானிகள்.

நஞ்சினை வென்று, உணர்வினை ஒளியாக மாற்றிய, துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி நான் பெறவேண்டும் ஈஸ்வரா, என்ற உணர்வினை நுகர்ந்தால், நமக்குள் அறியாது சேர்ந்த வேதனை என்ற உணர்வைக் சுருக்கி, அடக்கி, ஒளியின் உணர்ச்சிகளை, தெளிந்த அறிவை நம்மிடத்தில் பெறச் செய்கின்றது. விஷத்தை ஒடுக்கி, உயிருடன் ஒன்றிய ஒளியாக மாற்றுகின்றது.

நம்மிடத்தில், ஒவ்வொரு நிலைகளிலும் நட்சத்திரப் பொறிகள்தான், உணர்வின் அறிவாக இயக்குகின்றது. 27 நட்சத்திரங்களின் உணர்வுகளை மாற்றி, மாற்றிக் கவர்ந்து, தம்முள் உணர்வினை ஒளியாக மாற்றி, விண் சென்றார் துருவ மகரிஷி,  என்ற நிலையைத் தெளிவுபடுத்துவதற்காகக் காவியங்களைப் படைத்து, அருவ நிலைகளை உருவ நிலையாக வடித்து, நம்மிடத்தில் உண்மையின் உணர்வுகளைப் பதியச் செய்தனர் ஞானிகள்.

பிறிதொருவர் வேதனைப்படுவதை, நாம் உற்றுக் கவனிக்கும் பொழுது, அவ்வேதனையின்     உணர்வுகள்,  நமக்குள்  ஜீவஅணுக்களாக
விளைகின்றது. இதன் தொடர்வரிசையில்,
எதனின் உணர்வை நமக்குள் வலுவாக்கினோமோ,
இதே நிலை கொண்ட மற்றொருவர்,
இதே வேதனை கொண்டு இறந்தார் என்றால்,  
அவர் மீது, நாம் பற்று கொண்டிருப்போம் என்றால்,
அவருடைய உயிரான்மா நமது உடலுக்குள் வந்துவிடுகின்றது.
இதுதான் ஜீவான்மா என்பது.

இதைப் போன்று, தேள்களை, பாம்புகளை, எறும்புகளை அடித்துக் கொல்கின்றோம். இவைகளின் உயிரான்மாக்கள் எல்லாம், நம்முள் வந்துவிடுகின்றன. நமது உடலின் உணர்வை நுகர்கின்றன. மனிதனாக உருப்பெற்றுக் கருவாகின்றன.

ஆக, ஜீவான்மாக்கள் மனித இரத்த நாளங்களில் குடிபுகுந்து, இரத்த நாளங்களிலே சுழன்று கொண்டே வரும்.  ஆனால், வளர்ச்சியில்லாத உணர்வின் தன்மை, நமக்குள் கருவுறும் கருவுக்குள் இணைந்துவிடும். இந்த உணர்வின் தன்மை கொண்டு,  அது மனிதனாகப்  பிறக்கச் செய்கின்றது.

நமது இரத்தத்தில் கலந்து சுழன்று வரப்படும் பொழுதுடிரான்ஸாக்சன் (transaction) அதாவது, நமது உயிரின் தன்மைஉணர்வின் ஒலிகளை உடல் முழுவதும் பரவச் செய்து,  அதன் வழி கொண்டு, நம்மை இயக்குகின்றது.

உயிரில்,  இதன் நுண் உணர்வுகள் சென்றபின்,  உடலை விட்டுப் பிரியும் பொழுது அந்த ஆன்மா, எத்தனை வேதனைப்பட்டதோ, அதே உணர்வினை உயிர்வழி நுகரச் செய்கின்றது,

கண் என்ன செய்கின்றதென்றால், அதே உருவத்தைக் காட்டுகின்றது.  ஐயோ, பிசாசு வருகின்றது, எதிரி வருகின்றான், போன்ற உணர்ச்சிகளைத் தூண்டுகின்றது. பிறிதொரு ஆன்மா புகுந்து கொண்ட உடலில், இவையெல்லாம் தெரியும்,  ஆனால்,  நமக்குத் தெரியாது.

மைக்கில் வரும் அலைகளை,
டிரான்ஸிஸ்டர் (transistor) கவர்ந்து, விரிவாக்கி,
ஒலிக்கற்றைகளை ஸ்பீக்கர் (speaker) மூலமாக
எப்படி வெளிப்படுத்துகின்றதோ,
இதைப் போன்று அந்த ஆன்மாவின் நிலைகளை,
நம்முள்,  ஒளி அதிர்வுகளை, கண்வழி பாய்ச்சுவதும்,
உணர்வின் ரூபங்களைக் காட்டுவதும்,
சொல் வழியாக ஒலிக்கற்றைகளையும்
வெளிப்படுத்துகின்றது.

நாம் தவறு செய்யவில்லை. பிறிதொரு ஆன்மா, நம்முள் வந்து இயக்குகின்றது. அதைவிட்டு (உயிரின் பாகம்) நகர்ந்து விட்டால், இரத்த நாளங்களில் எந்த பாகத்தில் செல்கின்றதோ, அந்த பாகத்தில் வலியும், குடைச்சலும் ஏற்பட்டு, ஐயோ, கை வலிக்கின்றதே, கால் குடைச்சலாக இருக்கின்றதே என்பது போன்ற வேதனைகளைத் தூண்டும். 
இது போன்ற பிற ஆன்மாக்களை ஈர்க்கும் சக்தி, பெண்களுக்கே உள்ளது. ஏனெனில், பெண்களிடம் அன்பும், பரிவும், பாசமும் அதிகமாக இருப்பதனால், பெண்களிடம் கவரும் ஆற்றலும், அதிகமாக உள்ளது.

உதாரணமாக, குடும்பத்தில் பெண்கள் மிகப் பாசமாக இருப்பார்கள். ஒருவர் இறந்துவிட்டால்,  ஐயோ... பாவமே...,  குடும்பத்தில் இத்தனை பேரை விட்டுவிட்டுச் சென்றுவிட்டாரே என்று எண்ணினால், இவர்களுடைய உடலில் அந்த ஆன்மா வந்துவிடும்.

இப்படி, பிறிதொரு ஆன்மா இவர்களுடைய உடலில் வந்துவிட்டால், தான் மனித உடலில் வாழ்ந்த காலத்தில், என்னென்ன துயரத்தை அந்த ஆன்மா அனுபவித்ததோ, அவைகளையெல்லாம் இங்கே விளைவித்து, இவர்களுடைய உடலில் கைவலி, கால்வலி போன்ற நோய்களை உருவாக்குகின்றது.

இப்படி, பெண்களிடம் பாசத்தின் தன்மை இருப்பதனால், பிற ஆன்மாக்களைக் கவர்ந்து, அதன்வழி செல்லப்படும் பொழுது, குடும்பத்தில் விஷத்தின் தன்மைகள் அதிகமாகப் பரவுகின்றன.

இதைப்போன்று, நம்மை அறியாமலே துயர் கொள்ளும் நிலைகள் வருகின்றன. இப்படி, நம்மை அறியாது வரும் துயரங்களை நீக்குவதற்கு, ஜோசியமும்,  வாஸ்து சாஸ்திரங்களும் பார்த்தால் போய்விடுமா? 

வாஸ்து சாஸ்திரம் பார்த்து,  வீட்டின் நிலையையும், வாசல்படியையும்  மாற்றி வைத்துவிட்டால், அனைத்தும் சரியாகி விடுமா?  உங்களைக் காக்குமா?  என்பதைச் சற்றுச் சிந்தித்துப் பாருங்கள்.

மனிதர்களுக்கு ஜாதகமில்லை. எத்தகைய தீமைகளையும் மாற்றி அமைக்கும் தன்மை பெற்றவர்கள்,  மனிதர்கள்". 

இன்று வாழும் வாழ்க்கையில், எவ்வளவோ மாற்றங்களைச் செய்துள்ளனர். விஞ்ஞான அறிவு கொண்டு, எத்தனையோ சாதனைகளைச் செய்கின்றனர்.

விமானம் பறப்பதற்கு,  ஜாதகமா பார்க்கின்றனர்? விஞ்ஞான அறிவு கொண்டு, மேகங்களின் அடர்த்தி அதிகமாக இருக்குமானால், விமானத்தை விடவேண்டாம் என்று உணர்கின்றனர். இப்படி விஞ்ஞான அறிவு கொண்டு, மனிதர் தம்மைக் காத்துக் கொள்கின்றனர்.

ஆனால்,  மெய்ஞானிகள் காண்பித்த அருள் வழியில் நாம் செயல்பட்டால்,  நம்முள் பகைமை உணர்வுகள் வராது காக்கலாம்.

நாம் உடல் அழுக்கைப் போக்க, சோப்புப் போட்டுத் தேய்த்துக் குளிக்கின்றோம். இதே போன்று, நமது ஆன்மாவில் அறியாது சேர்ந்த அழுக்கை நீக்க வேண்டுமென்றால், துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியின் உணர்வை, நம்முள் இணைக்க வேண்டும்.

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியின் உணர்வை, நம்முள் செலுத்தும் பொழுது, நமது ஆன்மாவில் தீமைகள் சேராது தடுத்து, ஆன்மாவில் பட்ட அழுக்கை நீக்குகின்றது.

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி நான் பெறவேண்டும், என் உடல் முழுவதும் படரவேண்டும், என் உடலிலுள்ள ஜீவ ஆன்மாக்கள், ஜீவ அணுக்கள் அனைத்தும் பெறவேண்டும். 

எனது வாழ்க்கையில், நான் யார், யாரையெல்லாம் பார்த்தேனோ, அவர்களுடைய குடும்பம் எல்லாம் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியும் பெறவேண்டும். அவர்களின் குடும்பத்தில், அறியாது சேர்ந்த இருள் நீங்க வேண்டும் என்ற,  இந்த உணர்வின் எண்ணங்களை, நமது உடலில் பதிவாக்குதல் வேண்டும். 

அதிகாலை 4.00 மணியிலிருந்து 6.00 மணிக்குள், துருவ நட்சத்திரத்திலிருந்து வெளிப்படும் அருள் உணர்வினை நாம் நுகர்தல் வேண்டும்.

இவ்வாறு, துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியின் உணர்வுகளை நம்முள் இணைக்கும் பொழுது, நம் உடலில் அறியாது சேர்ந்த தீய உணர்வின் அணுக்களுக்கு, ஆகாரம் செல்லாது தடுக்கப்படுகின்றது.

இப்படி, தீமைகளை நம்முள் தீமைகள் புகாது தடைப்படுத்திவிட்டால், அவைகளைச் சூரியனின் காந்தபுலனறிவுகள் கவர்ந்து, மேலே கொண்டு சென்றுவிடும். நமது ஆன்மா சுத்தமாகிவிடும். ஆகவே,
துருவ மகரிஷிகளின் அருள் உணர்வுகளை,
பற்றுடன் பற்றுங்கள்.
உடலின் பற்றைப்  பற்றற்றதாக்குங்கள்.
அருள் ஞானத்தைப் பற்றுடன் பற்றுங்கள்.
பகைமையற்ற வாழ்வு வாழ்ந்திடுங்கள்.
இருளான உணர்வுகளை நீக்கி,
மெய்ப்பொருள் காணும் திறன் பெறுங்கள்.
மெய் வாழ்க்கையாக வாழ்ந்திடுங்கள். 
இதன் வழி, அருள்ஞானம் பெறவேண்டும் என்று ஏங்கி இருப்போர் அனைவருக்கும்,  எமது குரு அருளும், எமது அருளும், என்றும் உறுதுணையாக இருக்கும்.
(மார்ச் 2000)
குடும்பத்துடன் சந்தோசமாக வாழும் காலத்தில், நாம் ஒரு காரில் பயணம் செய்கின்றோம் என்றால், நமது காருக்கு குறுக்கே ஒருவர் திடீரென்று வந்துவிட்டால், சடாரென்று காரை நிறுத்தி, குறுக்கே வந்தவரைப் பார்த்து வெறுப்பு கொண்டு, அவரைத் திட்டுகின்றோம். இப்படி, காரின் குறுக்கே வந்தவரைப் பார்த்து, வெறுப்பதுடன் மட்டுமல்லாமல், ஒருவேளை அவர் காரில் அடிபட்டிருந்தால் என்னாவது? என்ற பயமும் நமக்குள் வருகின்றது.

இது சமயம் காரினுடைய டிரைவரும் சரி, மற்றும் காருக்குள் இருக்கும் மற்றவர்களும் சரி, இதனின் உணர்வுகளை நுகர நேருகின்றது. காரின் குறுக்கே வந்தவருக்கு, ஏதேனும் ஆபத்து வரக்கூடாது என்று எண்ணுகின்றனர். ஆனால், பயத்தின் உணர்வுகளை அவர்கள் நுகர்ந்ததனால், பயத்தின் உணர்வுகள் அவர்களிடத்தில், ஓம் நமசிவாயா என்று உடலாக மாறிவிடுகின்றது.

நமது மனித உடலில் பயத்தின் உணர்வுகளும், அதிர்ச்சியின் உணர்வுகளும், இரத்த நாளங்களில் கலக்கப்படும் பொழுது,  அதிர்ச்சியான உணர்வுகளைத் தூண்டும் உணர்வுகள், நல்ல அணுக்களில் ஊடுருவி, நமது உடலையே நடுங்கச்  செய்கின்றது. 

அது சமயம், நாம் எதைச் செய்வது என்ற சிந்தனை இல்லாதபடி.  பிரமை பிடித்தது போன்று ஆகி விடுகின்றோம்.

ஆனால், ஒருவர் தான் அறியாது, திடீரென்று ஒரு காரின் குறுக்கே வருவதன் காரணம் எதுவென்றால், அவருடைய குடும்பத்தில் எத்தனையோ பிரச்சனைகள், வியாபாரத்தில் கடன் கொடுக்கல், வாங்கல், தனக்குத் திரும்பக் கொடுக்க முடியாத நிலைமை, அதனால் சஞ்சலமும், சோர்வும் ஏற்பட்டு, கடன் கொடுத்தவருக்கு நாம் எப்படி நல்லவராக நடந்து கொள்வது, என்ற சிந்தனையில் செல்வோரும் உண்டு.

அதே சமயத்தில், நம்முடைய வருமானம் இவ்வளவுதான். ஆனால், குழந்தைகளுக்கு பள்ளிக்கு மாத கட்டணம் செலுத்த வேண்டும், அவர்களுக்கு உடை எடுக்கவேண்டும், நாளை என்ன செய்வது? என்ற நிலையில் குடும்பத்தை காக்கும் உணர்வுடன் அவருடைய எண்ணங்கள் சென்று,  அதே சிந்தனையில் செல்லப்படும் பொழுது, எதிரே வரும் வாகனத்தையோ, எதிரே வரும் மனிதரையோ, அல்லது எதிரே இருக்கும் பள்ளத்தையோ,  பார்க்க முடியாத சந்தர்ப்பம் ஏற்படுகின்றது.

இப்படி, திடீரென்று குறுக்கே வரும் மனிதரைக் கண்டதும், காரின் டிரைவர் ஒலியை எழுப்பி, சடாரென்று பிரேக் பிடிக்கின்றார். இதனால், காருக்குள் இருக்கும் அனைவருக்கும் அதிர்ச்சி ஆகின்றது. அது சமயம்,  காரின் குறுக்கே வந்தவரை எண்ணும் பொழுது,  நமது உயிரான ஈசன், இதனின் உணர்வின் உணர்ச்சிகளை நமது உடல் முழுவதும் சுழலச் செய்து, அதன் வழியில் நம்மை இயக்குகின்றது.  இதனின் உணர்வின் தன்மை, நமது நல்ல அணுக்களின் வலுவை இழக்கச் செய்கின்றது.

நன்கு வசதியுள்ள, வேதனையை அறிந்திராத செல்வந்தர்கள், இத்தகைய அதிர்ச்சியான சம்பவங்களைக் காண நேரிடும் பொழுது, இதனின் உணர்வுகள் அவர்களிடம் ஆழப்பதிந்து, இதனின் உணர்வுகளை மற்றவர்களுடன் உரையாடலில் பகிர்ந்து, இதையே எண்ணி, இதனின் உணர்வுகளை வளர்ப்பதனால். அவருடைய உடலில் பலவிதமான நோய்களும், உடலில் நடுக்க வாதமும், சிந்திக்கும் தன்மையை இழப்பதும், இனம் புரியாத கோபம் வருவதும், இனம் புரியாத பயம் உருவாவதும், போன்ற நிலைகள் அவரிடத்தில் ஏற்படுகின்றது.

இதே போன்று, வாகனத்தில் சென்று கொண்டிருக்கும் பொழுது, எதிரே ஒரு வாகனம் வந்து கொண்டிருக்கும். அதே சமயத்தில், இன்னொரு பக்கம் இருந்து ஆடோ, மாடோ, நாயோ, ஏதோ ஒன்று குறுக்கே வரும். இதன் மீது மோதாமலிருக்க, எதிரே வரும் வாகனத்தைக் கவனிக்காது மறுபக்கம் திருப்பும் பொழுது, வாகனம் இரண்டும் எதிர்பாராது மோதலாகின்றது.

ஒரு நாயோ, பூனையோ காரின் குறுக்கே வந்துவிட்டால், அதைக் காப்பாற்ற எண்ணி, சிந்தனையை அதன்   மேல் செலுத்தி, எதிரே வரும் வாகனத்தைக் கவனிக்காது திடீரென்று வண்டியைத் திருப்புவதால், எதிரே வந்த வாகனமும், இவருடைய வாகனமும் மோதி விபத்துக்குள்ளாகின்றது.

இத்தகைய விபத்தில், சந்தர்ப்பவசமாகச் சில காயங்களுடன் உயிர் பிழைத்துக் கொள்ளுகின்றார் என்று வைத்துக் கொள்வோம். செல்வந்தராக இருந்து செல்வத்தால் மகிழ்ச்சியாக இருந்தார். ஆனால், இந்த விபத்தால் பயம் கலந்த வேதனையும், அதிர்ச்சியும் அவருள் சேர்ந்து, அவரிடத்தில் மன நோயாக மாறிவிடுகின்றது.

இதனால்,  சிந்தனை செய்யும் பொழுது பலவீனமும், தம் குழந்தைகள், தம் சொல்லைக் கேட்க மறுக்கும் பொழுது அதிர்ச்சியும், பலவீனமான நிலையில் பயமும், தன்னிடத்தில் வேலை செய்பவர்கள் தவறு செய்வதால், அதிர்ச்சியும், பயமும் வருகின்றது.  இதன் தொடர் கொண்டு, பலவித நோய்களும் வருகின்றது.

பண வசதி படைத்திருப்பதினால், மனோத்தத்துவ டாக்டரிடம் செல்கின்றனர். ஆனால், மன நோயினால் உணர்வின் தன்மை, உடலில் நோயாகின்றது. பின்னர் இதற்கு வேண்டிய மருத்துவமும், பயிற்சியும் செய்கின்றனர்.

வாழ்க்கையில் எவ்வளவுதான் செல்வம் படைத்திருந்தாலும், இது போன்று, எதிர்பாராத சம்பவங்களால் நுகர்ந்த உணர்வுகள், உடலில் தீமைகளை விளைவிக்கும் நிலையாக விளைந்து விடுகின்றது.  இவ்வாறு சந்தர்ப்பத்தால், நமக்குள் அறியாது சேரும் தீமைகளை எப்படித் துடைப்பது?

துருவ நட்சத்திரத்தின் அருள் உணர்வுகளை, நம்முள் இணைத்திடல் வேண்டும். ஏனென்றால், மனிதனாகப் பிறந்து, தமது வாழ்க்கையில் நஞ்சினை வென்று, தீமை தரும் சந்தர்ப்பங்களை மாற்றியமைத்து, ஒளியின் சரீரம் பெற்றவர்கள் இன்று துருவ நட்சத்திரமாக இருக்கின்றார்கள். துருவ நட்சத்திரத்திலிருந்து வரும், பேரருள் பேரொளியின் உணர்வுகளை நமக்குள் கவர்ந்து, நம்மை நாம் சுத்தப்படுத்திக் கொள்ளவேண்டும்.

தங்கத்தில் திராவகத்தை ஊற்றியதும், தங்கத்தில் கலந்துள்ள செம்பும், பித்தளையும் ஆவியாகி விடுவதைப் போன்று, துருவ நட்சத்திரத்தின் பேரருள் உணர்வுகள் நம்முள் இணையும் பொழுது, நம்முள் உள்ள தீமையின் உணர்வுகள் ஒடுக்கப்படுகின்றது.

 துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நான் பெறவேண்டும், என் உடல் முழுவதும் படரவேண்டும், என் உடலில் உள்ள ஜீவான்மாக்கள், ஜீவ அணுக்கள் அனைத்தும் பெறவேண்டும் என்ற உணர்வுகளை நமது உடலுக்குள் செலுத்தவேண்டும்.

நம்மைச் சுத்தப்படுத்திக் கொண்டு, யார் தவறு செய்தாரோ, அவர் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெறவேண்டும், அவர்கள் நன்மை செய்யும் பண்புகள் பெறவேண்டும், என்று இதனின் உணர்வுகளை நமக்குள் சேர்க்கும் பொழுது, இவை அனைத்தும்,  நமக்குள் கலவையாகி, நமக்குள் இரத்த நாளங்களில் கலக்கச் செய்கின்றது.

இதனின் உணர்வுகளை, நமது உடலில் உள்ள அணுக்கள் உணவாக எடுத்து, மகிழ்ச்சி பெறும் உணர்வின் அணுக்களாக மாறுகின்றது.

ஒருவர் நல்லவராக வேண்டும் என்ற உணர்வை நாம் எண்ணும் பொழுது, இதனின் உணர்வுகள் நாம் எண்ணியவரின் உடலில் படர்கின்றது. அதே சமயம், நாம் நுகர்ந்த உயர்ந்த உணர்வின் உணர்ச்சிகள், நமது உடலில் சேரப்படும் பொழுது,  நமது உடலிலுள்ள நல்ல அணுக்கள்,  அதனை அதிகமாகத் தன்னுள் பெறுகின்றன.

இது போன்று,  நாம் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி உணர்வுகளை, நமக்குள் வலு சேர்க்க, நமக்குள் மனத் தூய்மையும், சிந்தித்து செயல்படும் தன்மையும், பிறவியில்லா நிலை பெறச் செய்யும் அருளுணர்வுகளும் நம்முள் உருவாகின்றது.

இவ்வுண்மைகள் அனைத்தும், அருள்ஞானிகள் நமக்கு உணர்த்தியவைகள்.  இவைகளைத் தம்முள் அறிந்துணர்ந்து, நமது வாழ்க்கையில் வரும் தீமைகளை நீக்கும் நிலையாகவும், பிறவியில்லாப் பெருநிலை பெரும் நிலையாகவும், தாம் அருள்ஞான நெறி துணைகொண்டு, தம்முள் பேரருள் உணர்வுகளைச் சேர்த்து வரும் அன்பர்கள் அனைவரும், தம்முள் அறியாது சேர்ந்த தீயவினைகள், சாபவினைகள், பாவவினைகள், பூர்வ ஜென்மவினைகளை அகற்றி, மெய்பொருள் காணும் திறன் பெற்று, இவ்வாழ்க்கையில் பிறவியில்லா நிலை பெறும் நிலையாக, பெருவீடு பெருநிலை பெறும் நிலையாக, பேரின்பப் பெருவாழ்வாக வாழ்ந்து வளர்ந்திட, எமது அருள் ஆசிகள்.

(ஏப்ரல் 2000)
தயவு செய்து, பிறருக்கு ஏற்படும் துன்பங்களையோ, வேதனைகளையோ பார்த்துச் சந்தோஷப்படாதீர்கள். பிறரின் துன்பத்தைப் பார்த்து, அவனுக்கு அப்படித்தான் வேண்டும் என்று சந்தோஷப்படுவீர்களானால், அதனின் உணர்வுகள் உங்களில் விளைந்து, நோயாக உருவாகிவிடும்.

விஞ்ஞானிகள் பல ஆராய்ச்சிகளைச் செய்து, மனித உணர்வின் செயல்களை அறிகின்றனர். விஞ்ஞானி, ஆணைப் பெண்ணாக மாற்றுகின்றார். பெண்ணை ஆணாக மாற்றுகின்றார். அதே சமயத்தில், மனித உடலில் வருகின்ற நோய்களைப் போக்குவதற்கு, பாம்பு, தேள், மாடு போன்றவைகளில் பல இரசாயனங்களைக்  கலந்து, அதில் மருந்தினைத் தயாரிக்கின்றனர்.

நமது நுரையீரல் கெட்டுப் போய்விட்டது, இருதயம் கெட்டுப் போய்விட்டது என்றால், இப்பொழுது அஞ்ச வேண்டியதில்லை. பல நவீனக் கருவிகளின் துணை கொண்டு, செயற்கை உறுப்புகளை நமது உடலில் பொருத்தி, பழுதுபட்ட உடல் பாகங்கள், மேலும் சிறிது நாளைக்கு வேலை செய்யும்படியாக அமைத்து விடுகின்றார்கள்.

எத்தகைய விஞ்ஞான நிலைகள் இருந்தாலும்,
இந்த உடலில் எத்தனை நாள் வாழப் போகின்றோம்?
மேலும் சிறிது காலம் வாழுவதற்கே, இதைச் செய்கின்றனர்.
இப்படி மாற்று உறுப்புகளை பொருத்திக் கொண்டவர்கள்,
மற்றவர்கள் மாதிரி, சந்தோஷமாக இருக்க முடியாது.

ஏனென்றால், மாற்று உறுப்புகளைப் பொருத்திக் கொண்டபின், முன் போன்று நமது பணிகளைச் செய்ய முடியாது. டாக்டர்கள் சில விதிகளைக் கொடுத்து, இப்படித்தான் செயல்படவேண்டும் என்று கூறிவிடுவார்கள். இப்படித்தான், நமக்கு மருந்துகளையும், மற்ற நிலைகளையும் கொடுத்துச் சமப்படுத்துகின்றனர்.

இப்படிச் சமப்படுத்தி வாழும் நாம், மற்றொருவர் கடுமையான காய்ச்சலில் இருக்கும் பொழுது அவரை உற்றுப் பார்த்து, அவருடைய வேதனையைக் கேட்டறிந்தால், உடனடியாக நமக்குள் பல நிலைகள் வரும். ஆகவே, நாம் எல்லாவற்றிற்கும் அஞ்சி வாழ்ந்து, நம்முடைய நிலைகளில் சோர்வடைந்து, நிம்மதி என்பதை இழந்திருப்போம்.

சர்க்கரைச் சத்து வியாதிக்கு, இனிப்பைச் சாப்பிடக்கூடாது, மற்றும் அதைச் சாப்பிடக்கூடாது, இதைச் சாப்பிடக்கூடாது என்று  டாக்டர்கள் அறிவுறுத்தியதால், நாம் விரும்பியதைச் சாப்பிட முடியாமல், நம்முடலில் வேதனை வளர்ந்து கொண்டே வரும். 

ஆகவே, எவ்வளவு நிலையானாலும் மனிதர் துரித நிலையில் மடியும் தன்மைதான் வருகின்றதே தவிர, மனிதர் நீடித்த நாள் வாழும் சக்தி உள்ளதா? இந்த மனித உடலில் நாம் முழுமையாக இருக்க முடிகின்றதா? இல்லை. குறுகிய காலம் வாழ்வதற்காக, பல உணர்வுகளை நாம் சேர்த்துக் கொண்டேதான் வாழுகின்றோம்.


இதே போன்று, ஆஸ்த்மா உள்ளவர்கள் பழங்களைச் சாப்பிட்டால், உடனே அவர்களுக்கு ஆஸ்துமா தொல்லை அதிகமாகிவிடும். குளிர்ந்த பானத்தைச் சாப்பிட்டாலும், இதே போன்று வந்துவிடும். ஒரு ஊர் விட்டு மற்றொரு ஊருக்கு சென்றால், அந்த ஊரின் தண்ணீரைச் சாப்பிட்டால், எதிர் நிலையான கிருமிகள் உண்டாகி, ஆஸ்துமா தொல்லை அதிகமாகி விடுகின்றது. ஆகவே, மனிதருக்குள் இத்தகைய வினைகள் வந்துகொண்டே இருக்கின்றது.


ஆனால், குடும்பத்தில் ஒருவருக்கு ஆஸ்துமா நோய் இருக்கிறதென்றால், அந்தக்  குடும்பத்தில் மற்றவர்கள் பேசும் பேச்சின் உணர்வுகளை, அவர்களது குடும்பத்தில் உள்ள கர்ப்பிணிப்பெண், உற்றுக் கேட்டு நுகர்கிறதென்றால், அந்தக்  கர்ப்பிணிப் பெண்ணின் கருவில் வளரும் சிசுவினிடத்தில், ஆஸ்துமாவை உருவாக்கும் அணுக்கிருமிகள் உருவாகி விடுகின்றன. குழந்தை தவறு செய்ததா?  இல்லை.

இதே போன்று, ஒரு குடும்பத்தில் சர்க்கரைச் சத்து உள்ளவரை ஒரு கர்ப்பிணிப் பெண் அதிகமாகக் கவனித்து, அவருடைய சொல்லைக் கேட்டுச் செயல்பட்டுக் கொண்டிருந்தால், அந்தக் கர்ப்பிணிப் பெண்ணின் கருவிலிருக்கும், குழந்தைக்கும் சர்க்கரைச்  சத்து வந்துவிடும்.  இதனைப் பரம்பரை நோய் என்று சொல்லுகின்றார்கள்.

இன்று உலகில் எடுத்துக் கொண்டால், நூற்றுக்கு முப்பது சதவீதம் பேர், ஆஸ்துமாவில் வாடுகின்றனர். நூற்றுக்கு முப்பது சதவீதம் பேர், சர்க்கரை வியாதியால் வாடுகின்றனர். நூற்றுக்கு முப்பது சதவீதம் பேர், இரத்தக் கொதிப்பால் வாடுகின்றனர். இப்படி, குடும்பத்தில் ஒருவருக்கு நோய் இருந்தும், உணர்வின் வழி மற்றவருக்கும் பரவுகின்றது.


இதைத்தான், இராமாயணத்தில் ஒரு அசுரன் இறந்தால், பல அசுரர்கள் எழுகின்றனர் என்று கூறுகின்றனர். இதனை மெய்ப்பிக்கும் நிலையாக நமது குருநாதர்,  ஒரு மனித உடலுக்குள் வேதனை என்ற நிலை உருவாகி, அந்த அசுர உணர்வுகளால், அந்த மனிதர் மடிந்தார் என்றால்,  அந்த உடலில் விளைந்த உணர்வின் அலைகளை நுகர்ந்தவர்கள் எவர் எவரோ,  அவரவர் உடல்களைக் கொல்கின்றது என்பதை எமக்கு உணர்த்தினார்.

மனித உடலில் எடுத்துக் கொண்ட வீரிய உணர்வுகளுக்கொப்ப, தேள், பாம்பு, கொசு போன்ற நிலைகள் மனித உடலில் இருந்து பிறக்கும் தன்மை வருகின்றது. மனிதரை,  முழுமுதல் கடவுள் என்று விநாயகரை வைத்து, ஞானிகளால் காண்பிக்கப்படுகின்றது. மனித உடலில் இருந்து வெளிப்படக் கூடிய உணர்வுகள் எதுவோ, அதற்குத்தக்க ஒவ்வொரு உடலிலும் சேர்க்கப்படும் பொழுது,  இந்த நிலை ஏற்படும்.

சலிப்பும், சஞ்சலமும் ஒருவரிடம் அதிகமானால், அவர்களுடைய தலையில் பேன்கள் உருவாகும். பேன்கள் தலையில் அதிகமாக உள்ளவர்கள், பத்து நாளைக்குத் தொடர்ந்து சந்தோஷமாக இருந்து பாருங்கள். உங்கள் தலையிலுள்ள பேன்கள் தன்னால் மறைந்து போகும். ஆக இது போன்று, சலிப்பு, சஞ்சலம், வேதனை உணர்வுகளால் உருவாகும், தீமைகளில் இருந்து மீள்வது எப்படி?

மனிதராகப் பிறந்து, நஞ்சை வென்றவர் அகஸ்தியர். அகஸ்தியர், துருவனாகி, துருவ மகரிஷியாகி, துருவ நட்சத்திரமானார். நமது பிரபஞ்சத்திலிருந்து மட்டுமல்ல, அகண்ட அண்டத்திலிருந்து, எங்கிருந்து நஞ்சு வந்தாலும், ஒளியாக மாற்றிடும் திறன் பெற்றது, துருவ நட்சத்திரம். 

துருவ நட்சத்திரத்திலிருந்து வெளிப்படும் உணர்வினை நுகர்ந்து, நமது உடலில் உருவாக்கி விட்டால், இந்த உடலில் தீமையை நீக்கிடும் சக்தியினை, நாம் பெறுகின்றோம்.

மனித உணர்வுகளின் இயக்க உண்மைகளை அறிந்து,
மெய்ஞானிகள் காண்பித்த அருள்வழியில் செயல்பட்டு,
தம்மிடத்தில் அறியாது சேரும் தீமைகளை அகற்றி,
இருளான உணர்வுகளை நீக்கி,
மெய்பொருள் காணும் நிலையாக
வாழ்ந்து வரும், அன்பர்கள் அனைவரும்,
இருளினை வென்று, பேரருள் பெற்று, பேரொளி பெற்று,
உங்கள் பேச்சால், மூச்சால், பார்வையால்
மற்றவர்களின் தீமைகளை,
நோய்களை நீக்கும் அருளாற்றல் பெற்று,
இந்த வாழ்க்கையில் பெருவீடு, பெருநிலை பெறும்  நிலையாக பேரின்பப் பெருவாழ்வாக வாழ்ந்து வளர்ந்திட, எமது அருள்  ஆசிகள்.

(மே 2000)
மெய்ஞானிகள் காண்பித்த அருள் வழியில், மக்கள் அனைவரும் ஏகோபித்த நிலையில், துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியின் உணர்வுகளை தம்முள் கவர்ந்து வலுவாக்கும் பொழுது, நம்மிடத்தில் தீமை என்ற நிலைகள் அணுகுவதை தடுத்து விலக்கிவிடும்.

நாம் கவராது விட்டுவிட்ட தீமையின் உணர்வுகள் அனைத்தையும், காலையில் ஆறு மணிக்கெல்லாம் சூரியன் கவர்ந்து மேலே கொண்டு சென்றுவிடும். இதனால்,
நமது பூமியில், பரமாத்மாவாக இருப்பது சுத்தமாகின்றது.
நமது ஆன்மாவும் சுத்தமாகின்றது.
நமது ஆன்மா சுத்தமாகும் பொழுது,
நமது உடலில் உள்ள, ஜீவான்மாவும் சுத்தமாகின்றது.
நமது உயிரான்மா,  அது ஒளியின் தன்மை பெறுகின்றது.

நாம் மெய்ஞானிகளின் அருள் உணர்வைப் பெறுகின்றபொழுது, அது, நமக்கு சொர்க்கவாசலாக அமைகின்றது. இதை விடுத்து, கோவிலுக்குச் சென்று தெய்வத்தை தரிசிக்கின்றேன் என்று சொல்லி, ஒருவர் மீது ஒருவர் விழுந்து, ஒருவரை ஒருவர் தள்ளிக் கொண்டு செல்லும் பொழுது, நமக்கு வெறுப்புத்தான் வரும். ஆகவே, இது மனிதருக்குகந்த நிலையல்ல, அசுர உணர்வுதான் வரும்.

அதே போன்று, கோவிலில் பிரசாதம் கொடுக்கும் பொழுது பாருங்கள். நான் முதலில் பெறவேண்டும் என்றுதான் எண்ணுவார்களே தவிர, அனைவரும் ஒன்றுபட்ட உணர்வு கொண்டு, மனதைக் கட்டுப்படுத்தி, அங்கே நிற்கிறார்களா என்றால் இல்லை.

மற்றவர்கள் முதலில் பெறட்டும் என்று நாம் எண்ணும்பொழுது, நமது மனம் கொண்டு, நாம் இருந்த இடத்திலிருந்தே பெறமுடியும். அவர்கள் அருகிலே சென்று பெறுகின்றனர். ஆனால், அவர்கள் அருகில் செல்வதற்கு முன்னால்,  நாம் இருந்த இடத்திலிருந்து, உடனடியாகப் பெறுகின்றோம்.  இந்த உண்மையை, அறிந்து கொள்தல் வேண்டும்.

ஆகவே, நமது மனம் பண்பட்டால்தான், நமது குணங்கள் பண்படும். நமது குணங்கள் பண்பட்டால்தான், நமது வாழ்க்கையினை பண்படுத்தும் நிலை வரும். ஆகவே,  இதையெல்லாம் நாம் சிந்தித்தல் வேண்டும்.

இவைகளை எல்லாம் யாம் பெறவேண்டும் என்றுதான், எமது குருநாதர் மலை, காடு, என்று பல இடங்களுக்கு எம்மை அழைத்துச் சென்றார். அப்படி அழைத்து செல்லும் காலத்தில், ஒரு முறை எமக்கு ஒரு பச்சிலையைக் காண்பித்துக் கொடுத்தார். அந்த பச்சிலையை கையில் கொடுத்து, அதில் உன் உணர்வின் மணத்தை ஓது, அதனின் உணர்வின் எண்ணத்தால் எண்ணி, அங்கே போட்டு விட்டு வா என்றார் குருநாதர்.

குருநாதர் சொன்ன முறைப்படி, உணர்வின் மணத்தை ஓதிப் போட்டு விட்டு வந்தபின், அந்த பக்கம் புலி ஒன்று வருகின்றது. யாம் அங்கு போட்டிருந்த பச்சிலையை, அந்தப் புலி நுகர்ந்த பின், அப்படியே அசையாமல் நிற்கின்றது. அதே சமயத்தில், மலைக் காட்டுக்குள் மறதிப் பூடு  என்பதை குருநாதர் எமக்கு காண்பித்தார்.

இந்த மறதிப் பூட்டினை, இலேசாகக் கிள்ளி யாராவது ஒருவரது வீட்டில் போட்டுவிட்டு வந்துவிட்டாலோ, அல்லது அவர்களது வீட்டின் கதவிடுக்குகளில் வைத்து விட்டாலோ போதும், அவர்கள் வீட்டிற்கு வெளியே என்னென்ன செயல்கள், வேலைகள் செய்துவிட்டு வீட்டிற்கு வந்தாலும்,  அவைகளெல்லாம் ஞாபகத்தில் இருக்காது.

இந்நிலையை நாம் ஒருவருக்குச் செய்தால் என்னவாகும். நாம் பெரிய மனிதர் ஆகிவிடலாம். இது போன்ற நிலைகள், நாட்டில் நிறைய உண்டு. குருநாதர் இன்னும் சில வேர்களைக் காண்பித்தார். அந்த வேர்களைக் கையில் வைத்துக் கொண்டால், விஷப் பூச்சிகள் மட்டுமல்ல, புலியும் கூட ஒடுங்கி நிற்கின்றது.

ஏனென்றால், மனித உடலுக்குள் அந்த மணத்தின் தன்மை கொண்டபின், விஷம் கொண்டவைகள் பயப்படுகின்றன.
அவைகளுடைய விஷம் ஒடுங்குவதினால்,
அவைகள், தங்களுடைய வலுவையும் இழந்துவிடுகின்றன.

இப்படி குருநாதர் ஒவ்வொன்றாகக் காண்பித்து, இயற்கையின் உண்மையின் நிலைகளை உணர்த்தி, எமக்குச் சில ஆசைகளை ஊட்டுகின்றார். இவைகளைக் காணும் பொழுது, எமக்குள் உடனே அகந்தை வருகின்றது. எவராவது வம்புக்கு வரட்டும், அவர்களை ஒரு கை பார்ப்போம், என்ற எண்ணம்தான் வருகின்றது. ஆனால், தீமைகள் நமக்குள் வராது தடுக்கும், பாதுகாப்புக் கவசமாக வைத்துக் கொள்வோம் என்ற எண்ணம் இல்லை.

அப்பொழுது  குருநாதர், தீமைகள் உடலுக்குள் புகாது தடுக்கும் நிலைகள் கொண்டு, நல்லுணர்வின் தன்மையை உனக்குள் வலுவாகச் சேர்த்துக் கொள்ளவேண்டும்.

தவிர, பிறரை வீழ்த்துவது எளிது. வீழ்த்தும் உணர்வு, திருட்டுத்தனமாக உனக்குள் சென்று விடுகின்றது. வீழ்த்தும் உணர்வை உனக்குள் எடுக்கும் பொழுது, இந்த உணர்வுகள் உள் நின்று என்ன செய்யும்? அதே தவறைத்தான் செய்ய வைக்கும்.

ஆகவே, நான் கொடுத்த சக்தியை நீ இழக்கத்தான் நேருமே தவிர அதை வளர்க்க முடியாது.  ஒருவர் தீமை செய்கிறார் என்றால், அவரைத் தீமையின் உணர்வுகளிலிருந்து மீள வைக்க வேண்டும். அவருக்குத் தெளிந்த உணர்வை ஊட்ட வேண்டும்

"நீ ஏன் அவர்களுக்கு தெளிந்த உணர்வை ஊட்ட வேண்டும்?" என்று குருநாதர் கேட்டார்.
ஓம் நம சிவாய என்று,
அவருக்குள் தவறின் உணர்வுகள் இயங்குகின்றது.
அவர் செய்யும் தவறின் உணர்வுகளை நாம் நுகர்ந்தால்,
சிவாய நம ஓம் என்று அவருடைய தவறின் உணர்வுகள்
உனக்குள் வந்து, அவர் செய்த தவறையே
உன்னையும் செய்யத் தூண்டும் என்று தெளிவாக்கினார்.

ஆகவே,  ஒவ்வொரு மனிதருடைய உயிரையும் கடவுளாக மதித்தால், அவர்களுடைய உடலைக் கோவிலாக மதித்தால், அவர்கள் செய்யும் தவறின் உணர்வுகள், உனக்குள் வராது,  என்று எனக்கு உபதேசித்தார்.

இதன் வழி கொண்டு, உலக மக்கள் அனைவரும் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெறவேண்டும், என்று நாம் தவம் இருப்போம். அனைவரும் மகரிஷிகளின் அருள் வட்டத்தில் வாழவேண்டும், என்று பிரார்த்திப்போம்.  இந்த உடலுக்குப் பின், பிறவி இல்லா நிலை என்ற அழியா ஒளிச்சரீரம்  நாம் அனைவரும் பெறுவோம்.

ஒரு முறை ஆனைமலைக் காடுகளுக்கு, குருநாதர் எம்மை அழைத்துச் சென்றுவிட்டு, பொள்ளாச்சி பஸ் நிலையத்திற்கு அழைத்து வந்தார்.

பொள்ளாச்சி பஸ் நிலையத்திற்கு அருகில் வந்து கொண்டிருக்கும் பொழுதுவேகமாக வந்து கொண்டிருக்கும் பஸ்ஸிற்கு முன்னால், ரோட்டைக் கடப்பது போன்று குறுக்கே சென்றுஎம்மையும் இழுத்தார். நாங்கள் குறுக்கே புகுந்தவுடன்,  பஸ் திடீரென்று நின்றுவிட்டது.

உடனே குருநாதர் டிரைவரைப் பார்த்து, "மடத்தனமாக வண்டி ஓட்டுகின்றான் பார்" என்கிறார்.

பஸ்ஸின் டிரைவரோ, "ஏனய்யா புத்தி இருக்கிறதாபைத்தியமா பிடித்திருக்கிறது" என்று திட்டினார்.

குருநாதரும், "இது போலவா வண்டி ஓட்டுவது?  அறிவு கெட்டதனமாக வண்டி ஓட்டுகிறாய்" என்று டிரைவரைத் திட்டினார்.

பின்குருநாதர் தெளிவுபடுத்தினார். அதாவதுஇதுபோன்று சமுதாயத்தில்,  சந்தர்ப்பங்கள் சில நேரங்களில்உணர்வின் வேகம் கொண்டுநம் உணர்வுகள் செயல்பட்டு, 
தான் செய்த தவறை மறந்து, 
பஸ் டிரைவரைத்தான், குறை சொல்கிறோம். 

தவறு எப்படி நேர்ந்தது? என்று சிந்திக்கத் தவறும் பொழுதுடிரைவர் மீது கோபம் கொள்வது போன்ற நிலைகள் ஏற்படுகின்றன. 

டிரைவர் பிரேக் போடாமல் விட்டு விட்டால்அங்கே என்ன நேரும்? என்று நாம் சிந்திப்பதில்லை.  நாம் நசுங்கி இருப்போம் என்று,  அந்த இடத்தில் சிந்திக்க வேண்டும்.

டிரைவர் திட்டியது சரிதான்
என்று ஏற்றுக் கொள்ளும் நிலை வருமானால்
நாளை இது போன்ற அவசர புத்தி நமக்கு வராது. 
நல்ல அறிவினை ஊட்டினார் என்று எண்ணினால்
டிரைவர் மீது பகைமை வராது.

இப்படிகுருநாதர் உணர்வுகள் ஒவ்வொன்றையும் அனுபவ ரீதியில் கொடுத்தார். மக்கள் தங்கள் வாழ்க்கையில், தாம் எடுத்துக் கொண்ட எண்ணங்கள் கொண்டு செயல்படும் பொழுது, சிந்தனை அதன்பால் தான் இருக்கின்றதே தவிரஅங்கே தாம் செல்லும் பாதையில் உள்ள, இடையூறுகள் தெரிவதில்லை. தம்முடைய ஆசையின் நிலைகளிலே செல்கின்றனர். ஆனால், பாதையில் இருக்கும் ஆபத்தையும் எதிரியையும் மறந்து விடுகின்றனர்.

இது போன்ற சந்தர்ப்பங்கள் வரும் பொழுது, நாம் என்ன செய்ய வேண்டும் என்றால், அருள் ஒளியின் உணர்வை நமக்குள் சேர்த்து, தீமைகள் நம்மிடையே வராது விலக்கிஅருள் உணர்வுகள் அவர்கள் பெறவேண்டும் என்று எண்ணுதல் வேண்டும்.

ஆகவேநான் கொடுத்த சக்தி கொண்டு பிறரை வீழ்த்துவேன் என்ற அகந்தை கொண்டால்நல்வழியின்  உணர்வுகள் உனக்குள்  வராது என்று, குருநாதர்  எமக்குத்  தெளிவுபடுத்தினார்

ஒருவர் தீங்கு செய்கிறார் என்று எண்ணி, அதே உணர்வினை நுகர்ந்தால், நமக்குள் தீங்கு விளைவிக்கும் உணர்வுகள் வரும். ஆகவே, நாம் தீமைகளைத்தான் செய்ய முடியுமே தவிர,  நன்மை செய்ய முடியுமா?, என்று நாம் சிந்தித்தல் வேண்டும்.

ஒருவர் வேதனைப்படுகின்றார் என்று நுகரும் பொழுது, அந்த வேதனை நமக்குள் ஆகின்றது. இதைப் போன்று, ஒருவர் தீங்கு செய்கின்றார் என்றால்,  தீங்கின் நிலையே நமக்குள் விளைகின்றது. எனவே தீங்கு செய்கின்றவர்களை எண்ணும் பொழுது,
அவர்கள் அதிலிருந்து மீள வேண்டும் என்று,
நான் கொடுத்த அருள் சக்தியின் துணை கொண்டு,
அவரைத் தீமையிலிருந்து மீட்ட வேண்டும்
என்று ஒவ்வொரு நொடியிலும் அனுபவ ஞானத்தை ஊட்டினார் குருநாதர்.

யாம், தியான வழி அன்பர்கள் அனைவருக்கும், குருநாதர் காண்பித்த அருள் வழியில் தெளிவுபடுத்துகின்றோம். ஒருவர் நமக்குத் தீமைகள் செய்கிறார் என எண்ணும் பொழுது, அவர் தீமைகளிலிருந்து விடுபட வேண்டும் ஈஸ்வரா என்று எண்ணி,  உங்களுடைய உயிரான ஈஸ்வரனிடம் வேண்டுங்கள். 

உங்களுக்குள் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியின் உணர்வைப் பெறுங்கள். இந்த உணர்வின் தன்மை உங்களுடைய உடலை, உணர்வைத் தூய்மையாக்கிவிடும்.

அதே சமயத்தில், அவர்களைப் பாதுகாக்கும் உணர்வுடன் செயல்படுத்துங்கள்,  அப்பொழுது நமக்கும் பாதுகாப்பாகின்றது.

நீங்கள் ஆலயங்களுக்குச் சென்று,
அபிஷேகமும், ஆராதனையும் செய்வதைப் போன்று, உங்கள் உடலுக்குள், மகிழ்ச்சியூட்டும் உணர்வுகளை அபிஷேகம் செய்யுங்கள். 

இதனால், உங்கள் உடலை உருவாக்கிய அணுக்களுக்கு, உங்கள் உடலில் உள்ள நல்ல அணுக்களுக்கு,  நல் அமுது கிடைக்கின்றது.

நமது குருநாதர், துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்தில் ஆறாவது அறிவு கொண்டு, ஏழாவது அறிவு பெற்ற சப்தரிஷி மண்டலங்களாக வாழ்கின்றார். தீமைகளிலிருந்து விடுபடும் நிலையையும், அருள் ஒளியைப் பெறும் நிலையையும், உணர்த்திய உணர்வு கொண்டு, துருவ நட்சத்திரத்தை எமக்குக் காண்பித்தார்.

குருநாதர் எம்மிடம், அந்த துருவ நட்சத்திரத்தின் உணர்வை எடுத்து, நீ பெற்றுக்கொள். இருளை அகற்ற உதவும், மெய்ப்பொருளைக் காண உதவும், உன்னை அறியாத தீங்கினை அகற்றிட உதவும் என்று உபதேசித்தார். 

நமது குருநாதர், தாம் ஒளியின் சரீரமான பின், எம்மை, நீ அதில் ஆயுள் மெம்பராகு என்று உரைத்தார்.  அதனால், யாம் தியானவழி மெம்பர்கள் உங்கள் அனைவரையும், அங்கு ஆயுள் மெம்பராக இணைத்து விடுகின்றோம்.

இன்று விஞ்ஞான உலகில் நாம் இருந்தாலும், அஞ்ஞான வாழ்க்கையாகதான் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். விஞ்ஞானிகள் இவ்வளவு கண்டுபிடித்துக் கொடுத்தாலும், அவர்களுடைய வாழ்க்கையில் நிம்மதி இருக்கின்றதா? செல்வத்தைத் தேடி, செல்வந்தராக ஆனாலும் குடும்பத்தில் நிம்மதி இருக்கின்றதா?

செல்வத்தின் மேல்தான் நாட்டம் வருகின்றதே தவிர, அருள் செல்வத்தின் மீது யாருக்கும் நாட்டம் இருப்பதில்லை. கோயிலுக்குச் சென்று தெய்வத்தை வணங்கினாலும், உடல் இச்சைக்கு வேண்டியதைக் கேட்டு வணங்குகின்றோம்.

ஆனால்,  இந்த உடலில் வரும், தீமை தரும் ஆசை நீங்க வேண்டும், அருள் ஒளி பெறவேண்டும் என்று யாரும் எண்ணுவதில்லை.

விஞ்ஞானம், எவ்வளவோ முன்னேறி இருக்கிறது. இன்று செவ்வாய் கோளுக்கு, இராக்கெட் அனுப்புகின்றனர். அங்கே இருக்கும் உண்மைகளை அறிய விரும்புகின்றனர். செவ்வாய் நாதகாரகன்.
இவர்கள் அனுப்பும் இராக்கெட்டின் ஒலியைக் காட்டிலும், 
செவ்வாயின் ஒலி அதிகமாக இருப்பதனால்செவ்வாய்க் கோளில் இறங்கிய இராக்கெட்டின் ஒலிஅதிர்வுகள் மாறி, இராக்கெட்டின் இயந்திர இயக்கங்களும் மாறுகின்றது.
இந்த நிலை ஆனாலும், விஞ்ஞானிகள் விடுவதில்லை. 

ஏன்? எதனால்? எப்படி? என்ற நிலைகளில் சிந்திக்கின்றனர்.  குறையினை மாற்றியமைத்து,  மறுபடியும், செவ்வாயில் இராக்கெட்டை இறக்குவதற்கு, விஞ்ஞானிகள் முயற்சி எடுக்கின்றனர்.

ஆகவே, இதைப் போன்று நமது வாழ்க்கையில், தியானவழியில் சில சந்தர்ப்பங்களில் நமது செயல்பாட்டில் தோல்வி அடைந்தாலும், எப்படியும் இதிலிருந்து மீளவேண்டும், எது நம்மை மாற்றியமைத்தது? என்று சிந்தித்து, பேரருளை நமக்குள் பெருக்கி, இருளை அகற்றும் நிலைகளை நமக்குள் பெறுதல் வேண்டும்.

சாமியிடம் சென்று ஆசீர்வாதம் வாங்கினேன், தொழில் நன்றாக நடந்தது. சாமியிடம் ஆசீர்வாதம் வாங்கினேன், என் வேதனைகள் நீங்கியது. என்ற எண்ணத்தை வளர்த்துக் கொள்ளாமல், உயர்ந்த உணர்வின் தன்மையை, அருள் உணர்வை உங்களுக்குள் பெருக்கினால், உங்கள் உடலில் உள்ள குறைகள் நீங்குகின்றது.  தன்னிச்சையாக வியாபாரமும் பெருகிவரும், நீங்கள், தேடி அலைய வேண்டியதில்லை.

அருள் உணர்வைப் பெருக்கினாலே, அதற்குண்டான அமைப்பும் தேடி வருகின்றது என்று அதிக ஆசைப்பட்டால், எதனையும் நிர்வகிக்கும் குறைந்துவிடும்.

பின், நாம் கிடைத்த செல்வத்தையும், பாதுகாக்கும் தன்மையினை இழந்து விடுவோம். இது போன்ற நிலைகள் இல்லாதபடி,  நாம் நமது வாழ்க்கையில், குரு அருள் ஒன்றையே பிரதானமாக வைத்து வாழ்வோம்.

குருவின் துணையால், துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியினைப் பெறுவோம். நம்மில் அறியாது சேர்ந்த, இருளை விலக்குவோம், என்று அருளுணர்வை தம்முள் வளர்த்து வரும் அன்பர்கள் அனைவரும், அருள் மகரிஷிகளின் அருள் சக்தி பெற்று, இல்லற வாழ்க்கையில் இருளினை அகற்றி, மெய்பொருள் காணும் திறன் பெற்று, மலரைப் போன்று மனம் பெற்று, மகிழ்ந்து வாழும் சக்தி பெற்று, இந்த வாழ்க்கையில் பிறவியில்லா நிலை பெறும் நிலையாக, பேரின்பப் பெருவாழ்வாக வாழ்ந்து வளர்ந்திட, எமது அருள் ஆசிகள்.

(ஜூன் 2000)
நமது உயிர் நமது உடலிலுள்ள அனைத்து குணங்களுக்கும் குருவாக இருக்கின்றது. நாம் எதையெல்லாம் எண்ணுகின்றோமோ, கேட்கின்றோமோ, நுகர்கின்றோமோ, இவை அனைத்தையும் ஓம் நம சிவாயா, ஓம் நம சிவாயா என்று, நமது உடலாக மாற்றிக் கொண்டே உள்ளது,  நமது உயிர், 
நாம் பிறிதொருவர் கோபப்படுவதை உற்றுப் பார்த்து, கோப உணர்வின் தன்மையை நுகரப்படும் பொழுது, நமக்குள்ளும் அதே கோப உணர்ச்சிகளைத் தூண்டச் செய்கின்றது.

இந்தக் கோப உணர்வுகள் நமது இரத்த நாளங்களில் கலந்து, ம் என்று நமது உடலில் ஐக்கியமாகி விடுகின்றது. இதனின் உணர்வுகளை, நாம் திரும்பத் திரும்ப, எண்ணும்பொழுது அது நமக்குள் கருவாகி விடுகின்றது.

ஆகவே, கோப குணத்தின் உணர்வின் தன்மை அணுவாக விளைந்துவிட்டால், நமது உயிரைப் போலவே, கோப அணுவின் இயக்கம் ஈசன் என்றும்,  அதில் ஏற்படும் துடிப்பு  விஷ்ணு என்றும்,  அதனை ஈர்க்கும் காந்தம் லட்சுமி என்றும், காரணப் பெயர்களை ஞானிகள் வைத்தனர்.

கோப குணத்தின் தன்மை கொண்டு, ஜீவ அணுவாக உருவானதால், அது கார உணர்ச்சிகளைத் தூண்டக் கூடிய தன்மையும், கார உணர்வுகளை உணவாக உட்கொள்ளும் தன்மையும் அடைகின்றது.


மிளகாய் காரமானது. ஆனால், காரமான மிளகாயையே உணவாக உட்கொண்டு வாழும் புழுக்களும் இருக்கின்றன. மிளகாயைச் சிறிதளவு நமது நாக்கில் வைத்தாலே, அதனின் காரத்தை நம்மால் தாங்க முடிவதில்லை. ஆனால், புழுவோ, மிளகாயை உணவாக எடுத்து அதனுள்ளேயே வசிக்கின்றது.

இது போன்றுதான், நாம் கார உணர்வின் தன்மையை நுகர்ந்து, அது நமக்குள் அணுவாகிவிட்டால் பின்,  கார உணர்வையே, தன் உணவாக எடுக்கும் அணுவாக மாறிவிடுகின்றது.

ஒரு முறை கார உணர்வின் அணுவாகி விட்டால், பின் தன் இனத்தினை உருவாக்கும் வித்தினை இட்டு, தன் இனத்தைப் பெருக்கத் தொடங்கிவிடுகின்றது. ஆகவே, அணுத்தன்மை அடைந்தால் அது பிரம்மம் என்றும்,  பிரம்மாவின் மனைவி சரஸ்வதி என்றும்,  அதாவது கார உணர்வு கொண்டு, உடலில் அதனின் சக்தி கார உணர்ச்சியை வெளிப்படுத்தி, அதனின் ஞானமாக விளையச் செய்கின்றது என்பதுதான், இதற்குப் போருள்.

பார்வதி பஜே, அதாவது பார்த்த உணர்வுகள் அனைத்தும், தன்னில் இணைந்து இயக்கும் நிலைக்குத்தான் பார்வதி என்கின்றோம். ஒன்றைப் பார்த்து, நுகர்ந்த உணர்வுகள் 'சக்தி' என்ற நிலையில் உடலாகின்றது, சிவமாகின்றது என்பதை இங்கே காண்பிக்கின்றனர்.


கோபத்தின் உணர்வை நாம் நுகரப்படும் பொழுது,  அந்த உணர்ச்சிகள்தான் நம்மை ஆளும் "ஆண்டாள்".

அதே சமயம், அடிக்கடி கோபத்தின் உணர்வின் தன்மையை நாம் நுகர்ந்தால், அதே உணர்வு நமக்குள் அணுவாகி, நம்மை ஆள்வார்.  இதைத்தான்  "நம்மாள்வார்  என்று சொல்லுவார்கள்.

வேதனைப்படுவோரை உற்றுப் பார்த்தால், அது பார்வதி.  பார்த்து, நுகர்ந்த உணர்வுகள், நமது உடலில் உணர்ச்சியின் தன்மையாகி உடலாகின்றது. ஆகவே  இதை, "பார்வதி பஜே நமசிவாயா  என்கிறோம். 

நமது உடல் ஒரு அரங்கம். இதில், நமது உயிர் அரங்கநாதனாக  (இந்த உடலான அரங்கத்திலிருந்து) நுகரும் உணர்வுகளை நாதங்களாக அனுப்புகின்றது. நாதத்தின் இயக்கமே, உணர்ச்சிகள். இதுவே ஆண்டாள். 

நாம் எதை எண்ணி நுகர்ந்தோமோ, அதை வைத்து ஆள்கின்றது, அணுவாகின்றது. இதைப் போன்று, ஒவ்வொரு நொடியிலும் எதை எண்ணுகின்றோமோ அது அரங்கநாதமாக இருந்து, அரங்கத்திற்குள் இருந்து நாதமாக இயக்கி, அதன் உணர்ச்சியால் நம்மை ஆள்கின்றது, ஆண்டாள்.

ஆகவே, தீமைகளை நீக்கிய அருள்ஞானிகளின் உணர்வை நாம் நுகர்ந்தால், அது அரங்கநாதமாகி, அந்த உணர்வின் தன்மை கொண்டு, இருளை அகற்றும் நாதமாக மாறுகின்றது, ஆண்டாள்.

நமது உயிர் நம்மை ஆள்கின்றது. ஆனாலும், நாம் எதை எண்ணுகின்றோமோ, அதை வைத்துத்தான் ஆள்கின்றது. 
நாம் நுகர்ந்த உணர்வை வைத்து,
இந்த உடலை இயக்கவும் செய்கின்றது.
நுகர்ந்த உணர்வின் தன்மையினை, உடலாக மாற்றுகின்றது.

அதாவது, நாம் புழுவிலிருந்து மனிதனாக பிறக்கும் காலம் வரையிலும், பிறிதொரு தீமையை நுகர்ந்து, தீமையிலிருந்து மீண்டிடும் நிலையில் உருவான, உடலான அரங்கத்திலிருந்து, உணர்வின் தன்மை நாதமாகும்போது, அதனின் உணர்ச்சிக்கொப்ப எண்ணம், சொல், செயல் எல்லாமே நடக்கின்றது. ஆகவே, உணர்ச்சிகளே இதை ஆள்கின்றது, ஆண்டாள். நாம் நுகர்ந்த உணர்வுகளே நம்மை ஆள்கின்றது, நம்மாள்வார்.

இத்தகைய உணர்வின் இயக்க உண்மையின் தன்மைகளை, நாம் தெரிந்து கொள்ள வேண்டும் என்று ஆலயங்களை அமைத்து, ஸ்தல புராணங்களை வடித்தனர். உயிரின் இயக்கத்தை ஈசன் என்றனர்.

ஈசன் என்பது, நுகர்ந்த உணர்வுகளை உருவாக்குகின்றது. உணர்வின் தன்மையினைக் காந்தம் கவர்கின்றது. உணர்வின் உணர்ச்சிகள் உடலாகும் பொழுது, இரையாகின்றது. ஆகவே, இரையின் உணர்வு எதுவோ, அதன் உணர்ச்சியின் தன்மையினை செயலாக்குகின்றது. எனவே, இறைவா என்று சொல்லுகின்றோம்.

நாம் இறைவா என்று எதை வேண்டி இருக்க வேண்டும்?
எல்லோரும் உயர்வு பெறவேண்டும்,
அருள்ஞானியின் உணர்வைப் பெறவேண்டும்
என்ற உணர்வை நம்முள் இரையாக்க வேண்டும். இத்தகைய உணர்வின் தன்மையினை இரையாக்கி, உணர்வின் சொல்லாக வெளிப்படுத்தும் பொழுது, எல்லோரும் நன்றாக இருக்க வேண்டும், என்ற எண்ணங்கள் வருகின்றது.

இன்று நிலக்கரியை எடுத்துக் கொண்டால், அதில் விஷம் கலந்திருக்கும். விஷத்தை நீக்காத நிலக்கரியை வீட்டில் வைத்து எரித்தால், விஷம் வெளிப்பட்டு ஆளையே கொன்றுவிடும். வீட்டிலிருப்பவர்கள் தூங்கிக் கொண்டிருப்பது போன்றே இறந்துவிட வேண்டியதுதான். நிலக்கரியைச் சுட்டு, அதை வெளிப் பயன்பாட்டுக்குக் கொண்டு வரப்படும் பொழுது, அதில் விஷம் இருக்காது.

இரயிலுக்கு பயன்படுத்தக் கொண்டு வரப்படும் நிலக்கரி, விஷம் நீக்கப்பட்ட, சுடப்பட்ட நிலக்கரிதான். அதே போன்று வீட்டிற்குச் சமையலுக்கு அனுப்பப்படும் நிலக்கரியும், விஷம் நீக்கப்பட்டதாகத் தானிருக்கும். விஷம் நீக்கப்பட்டபின்தான், நிலக்கரியை வியாபாரத்திற்குக் கொண்டு செல்வார்கள்.

பிரித்தெடுக்கப்பட்ட விஷத்தை, வேறு சில காரியங்களுக்குப் பயன்படுத்திக் கொள்வார்கள். இதைப் போன்றுதான்,  விஷத்தைப் பிரித்து அடக்கக்கூடிய ஆற்றல், தாயின் கருவிலே இருக்கும் அகஸ்தியருக்குக் கிடைக்கின்றது.

இப்படி, தாயின் கருவிலிருந்த பத்து மாதமும் பச்சிலையின் மணத்தைச் சேர்த்துச் சேர்த்து, அதனின் ஆற்றல் உருவாகி, குழந்தையாகப் பிறக்கப்படும் போது, அகஸ்தியர் உடலில் இருந்து வெளிப்படும் மணத்தை, மற்ற உயரினங்கள் நுகர்ந்தால், நாயோ, நரியோ, யானையோ, புலியோ இவரிடம் வருவதில்லை. தம் தாயின் வழி, அகஸ்தியர் இந்த ஆற்றல் பெற்றார். அதனின் தொடர் கொண்டு, அகஸ்தியர் என்ன செய்கின்றார்?

நட்சத்திரங்களிலிருந்து வெளிப்படும் கதிரியக்கங்கள், ஒன்றோடு ன்று மோதி, மின்னலாக மாறுவதை அவர் கண்டார். மின்னலோ, கடலில் விழுந்தால் மணலாக மாறுகின்றது. மரத்தை மின்னல் தாக்கினால், கருக்கிவிடுகின்றது.

கருக்கிய உணர்வுடன், பூமியின் நடு ஈர்ப்பிற்குள் சென்றுவிடும். எதிர் நிலையான, நட்சத்திர உணர்வுகள் கலந்த பொருள்களில் ஊடுருவி, புவியின் உள் பாகத்திற்குள் சென்றால், அங்கு கொதிகலனாகி பாறையெல்லாம் உருகி,  நிலநடுக்கமாகும்.

27 நட்சத்திரங்களின் எதிர்மறையான மின்னல்கள் அதிகமாக வர நேர்ந்தால், புவியில் எந்தப் பகுதியில் தாக்குகின்றதோ, அந்தப் பகுதியில் சிறுகச் சிறுகக் கொதிகலனாகி, வெடித்து வெளியில் வரப்படும் பொழுது, அந்த இடத்தில் நிலநடுக்கங்கள் உருவாகின்றன.

 மின்னலின் விஷத்தின் தன்மையை கேதுக் கோள் எடுத்துக் கொள்வதால்,  விஷம் நீங்கிய ஒளிக்கற்றையை வெள்ளிக் கோள் எடுப்பதால், அதன் உணர்வை அகஸ்தியர் தமக்குள் எடுத்துக் கொள்கின்றார். 

இதனால், விஷம் புகாதபடித் தடுக்கப்படுகின்றது.  இதனின் ஒளிக்கற்றைகளைத்தான், அகஸ்தியர் சுவாசிக்கின்றார்.

இப்படி மின்னல் வரப்படும் பொழுது, செவ்வாய்க் கோளானது அதனின் சப்தத்தைப் பிரித்துக் கொள்கின்றது. மின்னலிலிருந்து வெளிப்படும் ஆவியின் தன்மையை, சனிக் கோள் எடுத்துக் கொள்கின்றது. இரண்டும் மோதிய உணர்வுகளை, இராகுக் கோள் எடுத்துக் கொள்கின்றது.

இப்படி எந்தக் கோள், எதன் வலிமை பெற்றதோ அதைத்தான் எடுக்கின்றது. மனிதனானபின், உறுப்புக்களில் அணுக்கள் எதன் உணர்வை எடுத்ததோ, அந்த உறுப்புக்கள் மாற்றமாகி, சீராக இயக்கும் உறுப்புக்களாக மாறுகின்றது. விஷத்தை பிரிக்கும் உறுப்புக்கள் வருகின்றன.

இதன் தொடர் கொண்டு, அகஸ்தியர் உயிரின் இயக்கத்தையும், விண்ணுலக இயக்கத்தையும், அறிந்துணர்கின்றார். குருநாதர் எம்மைப் பார்த்து, மின்னலைப் பார் என்று பல முறை கூறினார். ஆனால், யாம் மறுத்துக் கொண்டே இருந்தோம்.

சந்தர்ப்பத்தால் ஒரு முறை, திடீரென்று எமக்கு முன்னால், மின்னல் ஒன்று பாய்ந்தது. மின்னலைப் பார்த்தாயல்லவா, இதனால் உன் கண் என்ன ஆனது?  என்று கேட்டார் குருநாதர். இது போன்ற சில உணர்வுகளை, நான் கொடுத்த சக்தியின் துணை கொண்டு உனக்குள் அடக்கி,  வீரிய உணர்வு கொண்டு பாய்ச்சு என்றார். 

மின்னல் கடலில் தாக்கப்பட்டு மணலாக மாறினலும், ஒரு மீன், மின்னலின் உணர்வுகளால் தாக்கப்படும் பொழுது, அது  எலக்ட்ரிக் மீனாக  மாறுகின்றது. அதனுடைய அறிவானது,  வெகு தூரத்தில் இருப்பதையும் அறியக்கூடிய சக்தி பெறுகின்றது.

கடலில் மின்னல் தாக்கப்படும் பொழுது, மின்னலானது ஒரு மீனைத் தாக்கினால் அந்த மீன் இறந்தாலும், மீண்டும் அது உருப்பெற்று, புதுவிதமான மீனாக உருவாகி, வெகு தொலைவில் இருப்பதையும் அறிந்துணரக்கூடிய சக்தி பெறுகின்றது.

அப்படிப்பட்ட வளர்ச்சியின் தன்மையில் டால்பின் மீன் என்ற நிலைகள் உருவானது. அதாவது ஞானத்தைக் கொண்டு வளர்க்கும் சக்தி, கடல் வாழ் நிலைகளில்தான் உருவானது என்று, குருநாதர் எமக்குத் தெளிவுபடுத்தினார்.

இது போன்று,  ஒளிக்கற்றைகளை அகஸ்தியர், தாம் சுவாசித்து,  தம்மில் உணர்வின் தன்மை வரப்படும் பொழுது, நமது பிரபஞ்சத்தையும், நமது பிரபஞ்சம் பிற மண்டலங்களில் இருந்து,ன் உணவை எடுப்பதையும், முழுமையாக அறிந்துணர்ந்தார்.

நமது குருநாதர் அருள் துணை கொண்டு, அகஸ்தியர் கண்டுணர்ந்த உணர்வுகளை நாமும் கவர்ந்து, நம் உடலை உருவாக்கிய அனைத்து அணுக்களுக்கும் உணவாகக் கொடுத்து,  இந்தப் பிறவியில் அழியா ஒளிச்சரீரம் பெறமுடியும். அகஸ்தியர் கண்ட, அண்டத்தின் பேருண்மைகளையும், நாம் அனைவரும் அறிய முடியும். இதன்வழி பின்பற்றும் அனைவருக்கும், எமது அருளாசிகள்.

(ஜூலை 2000)
தாய், தந்தை நம்மைப் பேணிக் காக்கின்றனர். நமக்கு வேண்டிய நல்ல புத்திகளைச் சொல்கின்றார்கள். நாம், நமது காரியத்தில் வெற்றி பெறவேண்டும் என்று எண்ணி, துரித நிலைகள் கொண்டு செயல்படுகின்றோம்.
அது சமயம்,  குடும்பத்தில் பெரியவர்கள், அனுபவப்பட்டவர்கள் நம்மைப் பார்த்து,  சிந்தித்துச் செயல்படு  என்று கூறுகின்றார்கள். 

எதனால்? நம்முடைய அவசர கோலத்தைப் பார்த்து, நாம் சிந்தனையற்றுச் செயல்படுகின்றோம் என்று அவர்களால் உணர முடிகின்றது. இது அவர்களது அனுபவம்.

ஏதாவது ஒரு காரியம் தொடங்க முற்படும்போது, பெரியவர்கள் அறிவுரைகள் கூறினால், சிலர், சரியென்று ஏற்றுக் கொண்டு விடுவதுண்டு. ஒரு சிலர், பெரியவர்களின் அறிவரைகளை ஏற்காமல், பெரியவர்களைப் பார்த்து, இவர்கள் சனியன்கள் மாதிரி, ஏதாவது ஒன்று சொல்லித் தடைப்படுத்திக் கொண்டே இருப்பார்கள்,  என்று சொல்வது உண்டு.

சந்தர்ப்பம், பெரியவர்கள் நம்முடைய காரியங்களைத் தடைப்படுத்துகிறார்கள், என்று எண்ணப்படும் பொழுது, நம்முடைய சிந்தனையைச் செயல்படுத்த முடியவில்லையே என்று எண்ணப்படும் பொழுது, வேதனை என்ற நிலைகள் வந்து சூழ்ந்து கொள்கின்றன. இது போன்ற சமயங்களில்,  அறிவுரை கூறிய தாய், தந்தையர் மீதோ, மற்றவர்கள் மீதோ, வெறுப்பு வருகின்றது.

எல்லாவற்றையும் பார்த்துத்தான், நான் செய்து கொண்டிருக்கின்றேன். ஏதாவது சொல்லிக் கொண்டே இருக்காதீர்கள், என்று கோபத்துடன் பதில் சொல்ல நேருகின்றது. சிந்தித்து, மற்றவர்களுக்குத் தெளிவுபடுத்தும் நிலை இல்லை. இதனால் என்னவாகின்றது?

சந்தர்ப்பத்தால், நமது வாழ்க்கையில் நம்மிடத்தில் மோதும் தீய உணர்வுகள், நம்மிடத்திலுள்ள நல்ல குணங்களை மறைத்துவிடுகின்றது. ஆகவே, நாம் நம்முடைய நல்ல குணங்களை மறைக்கும் தீமைகளை நீக்கிவிட்டு, அருள்ஞானத்தை நமக்குள் பெருக்கும் சக்தி பெறவேண்டும்.

நமது தாய், தந்தை, பெரியவர்கள் சொல்வதைக் கேட்டு ஒரு நிமிடம் சிந்தித்தோமானால், நமது அவசரத்தால் பெரும் நஷ்டம் ஏற்படுவதிலிருந்து,  நம்மை நாம் காத்துக் கொள்ள முடியும். 

ஆகவே, சுற்றுப்புறச் சூழ்நிலையும் நாம் செயல்படும் தன்மையும் சரியில்லை என்றால், நாம் எடுத்துக் கொண்ட காரியங்கள் தோல்வியைத் தழுவும். நமது ஆரம்பமே தோல்வியைத் தழுவினால், நமது மனம் இருண்டு விடுகின்றது.

நமது தாய் தந்தை, அறிவுரை சொல்வது நமக்கு எதிர் நிலையாகும் பொழுதும், நமது முயற்சிகள் தோல்வியடையப்படும் பொழுதும், நாம் நல்லதைச் சிந்திக்கும் தன்மை இழந்துவிடுகின்றோம். இது போன்ற சில சந்தர்ப்பங்கள், நமது நல்ல குணங்களை மறைத்து விடுகின்றன.

இவைகளிலிருந்தெல்லாம் மீள்வது எங்ஙனம்? விஞ்ஞானிகள் எலெக்ட்ரிக், எலெக்ட்ரானிக் என்பதன் அடிப்படையில், மனிதர் போன்ற  ரோபாட்  என்ற இயந்திரங்களை உருவாக்குகின்றனர். தொழிற்சாலைகளில் இயந்திரங்களுக்கொப்ப, மாறுதல்களுக்கேற்ப, செயல்படும் வண்ணம் ரோபாட்டுகளை உருவாக்குகின்றனர். ஒரு வீட்டிற்கு வேண்டியவர், வேண்டாதவர் போன்றவர்களை அறிந்து இயங்கும் வண்ணம் உள்ள, ரோபாட்டுகளையும் உருவாக்கியுள்ளனர்.

ஒரு வீட்டிற்குள், திருட வேண்டும் என்ற எண்ணத்துடன் ஒரு நபர் வந்தால், இந்த ரோபாட் உடனே கண்டறிந்து, ஓலமிடும். ஏனெனில், மனித உணர்வு மாறுபட்டு வரும் பொழுது, இந்த ரோபாட் இயந்திரம் உடனே கண்டறிகின்றது. உடனே அந்த திருடன்மீது, மின்சாரத்தைப் பாய்ச்சிக் கொன்றுவிடுகின்றது. இது போன்றுதான், நமது உயிர் எலக்ட்ரிக்காக இயங்குகின்றது, நாம் நுகரும் உணர்வுகள் எலக்ட்ரான்களாக நம்மை இயக்குகின்றன.

விண்ணிற்கு அனுப்பிய விண்கலம், அது, தான் கவர்ந்த உணர்வுகளை அலைகளாக மாற்றி, விண்ணில் பரப்பும்பொழுது, விஞ்ஞானிகள் இங்கிருந்து இயந்திரங்கள் மூலம் கவர்ந்து, விண்ணின் நிலைகளை அறிகின்றனர்.

விண்ணின் நிலைகளைப் படமெடுத்து, அறிந்து, அலைகளாகப் புவியில் பரவச் செய்யும் விண்கலத்தின் ஒரு பகுதி, பழுதாகிப் போனால், விஞ்ஞானிகள் விண்கலத்திலிருந்து வரும் தகவல்களை அறிய முடியாமல் போகின்றது. இதனால், விண்கலம் காணாமல் போய்விட்டது என்று விஞ்ஞானிகள் கூறிவிடுகின்றனர். ஆனால், அது அண்டவெளியில் பறந்து கொண்டுதான் இருக்கும்.

இன்று மனிதர்கள், தங்களுடைய குழந்தைகளோ, உறவினர்களோ காணவில்லை என்றால் பதட்டமடைகின்றனர். அவர்களுடைய இருப்பிடத்தை அறிய முடியவில்லை. இதனால். அவர்களுடைய நிலைபற்றி அறிய முடியாமல், பயம் வருகின்றது.

ஆனால், நாம் பயத்தைத் தவிர்த்து, காணாமல் போனவர் வீடு திரும்ப வேண்டும் என்ற உணர்வை வலுவாக்கினால், அவருடைய இயக்கங்களை மாற்றி, வீடு திரும்பும்படி செய்யலாம். அவர்கள் வீட்டை வெறுத்து, வெறுப்பாகச் செல்லப்படும்பொழுது, அவர்களுடைய உணர்வை நாம் காண முடிவதில்லை.

அன்பு கொண்டு வாழும் பொழுது, வெளியூர் சென்ற என் பையன் ஒரு மாதமாகியும் தபால் போடவில்லையே, எப்படி இருக்கிறானோ? என்ற  வேதனையின் உணர்வை எடுக்கும் பொழுது, உணர்வுகள் வலிமையடைகின்றன.

அந்தப் பையன் அமெரிக்காவில் இருந்தாலும், அந்த பையனின் உணர்வில் மோதி,  சிந்திக்கும் தன்மையை இழக்கச் செய்து, பணியில் தவறை ஏற்படுத்தி விடுகின்றன. சாலையில் நடந்து கொண்டு சென்று கொண்டிருக்கும் பொழுது, சிந்தனை மறைக்கப்பட்டு, மேடு, பள்ளம் தெரியாதபடி கீழே விழுந்து, காயங்கள் ஆகிவிடுகின்றன.

இவைகளெல்லாம் நாம் உணர்ந்து,  எப்படி விஞ்ஞானிகள், மாறுபட்ட உணர்வுகள் கொண்ட ஒருவன் உள்ளே நுழைகையில், ஓலமிட்டு, அவனைத் தாக்கிக் கொல்வதற்கு, ரோபாட் என்ற இயந்திரத்தை உருவாக்கியுள்ளனரோ, இது போன்றுதான், நாம் அருள் ஞானிகளின் அருள் உணர்வுகளை, நமக்குள் பெருக்கி வலுவாக்கும் பொழுது, அருள் ஞானிகளின் அருள் உணர்வுகள், நஞ்சான உணர்வுகளை அருகில் விடுவதில்லை. 

இதை உணர்ந்து, அருள் ஞானிகள் காண்பித்த அருள் வழியில் அருளளுணர்வுகளை தம்முள் பெருக்கி வரும் அன்பர்கள் அனைவரும்,
தம்முள் இருளை விலக்கி,
மெய் பொருள் காணும் திறன் பெற்று,
உயிரைப் போன்றே உணர்வனைத்தையும் ஒளியாக்கி,
ஏகாந்த நிலை பெற்று,
பிறவியில்லாப் பெருநிலை பெறும் நிலையாக
வேகா நிலை பெரும் நிலையாக வாழ்ந்து,
இவ்வாழ்வில் உடல் நலத்துடன், மன நலத்துடன், மன வளத்துடன்,
            வாழ்ந்து வளர்ந்திட எமது அருள் ஆசிகள்.

(ஆகஸ்ட் 2000)
நமக்குத் துன்பம் கொடுப்பவரைப் பார்த்து, இவன் இப்படிச் செய்கின்றானே என்று சொல்வதற்கு மாறாக, துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி, அவர் (துன்பம் கொடுத்தவர்) பெறவேண்டும் என்று எண்ணி, நமக்குள் தீமை வருவதை தடுத்திடல் வேண்டும். 

அவர்கள் சிந்தித்துச் செயல்படும் தன்மையையும், ஒன்றுபட்டு வாழும் உணர்வுகள் அவர்கள் பெறவேண்டும் என்று எண்ணி தியானிக்க வேண்டும்.

துருவ நட்சத்திரத்தின் பேரருள் உணர்வை நமக்குள் சேர்த்து, இன்னொரு உடலின் பிடிப்பிற்குள் சிக்காதபடி, எவருடைய உடலிலும் பதிவாகாதபடி, நமக்குள் அருள் உணர்வை பதிவாக்கப்படும் பொழுது,  இந்த உடலை விட்டுப் பிரியும் உயிரான்மா, நேரடியாகவே, துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்திற்குள் செல்கின்றது,  சொர்க்கமடைகின்றது.

இதைத்தான் இராமாயணத்தில் கூறுகின்றனர். அதாவது,  இராமனின் மனைவி சீதா, இராவணன் எனும் அரக்கன் கையில் சிக்கி, சிறையில் அடைக்கப்பட்டாலும்,  சீதாவானது, இராமனின் நிலைகளையே எண்ணியது. 

இராவணன் ஒரு அரக்கன். அவனுக்கு மற்றவர்களை அடிமைப்படுத்துவது சுகம். அந்த அரக்கனின் பிடியில் சிக்கிய சீதா, அரக்கனின் உணர்வையும், அரக்கிகள் கொடுக்கும் தொல்லைகளையும் சிறிதளவும் எண்ணத்தில் வைக்கவில்லை.

இராம நாமம், அதாவது  உயர்ந்த எண்ணங்களைக் கொண்டு, சீதா பதி பக்தி  என்னும் நிலையில் தன் கணவன் மீதான உணர்வுகளைத் தம்முள் உருவாக்கியது.  இராமன் எப்போது வேண்டுமானாலும் என்னை மீட்டி செல்லும் ஆற்றல் பெற்றவர். தன்னை மீட்டிக் கொண்டு போவார் என்ற எண்ணத்தைத்தான் சீதா கூட்டியது.  அரக்கர்கள் கூட்டி வந்த நிலையிலும் கூட, தன் பதி பக்தியைத்தான் அங்கே எண்ணியது.

ஆக, கணவன், மனைவி என்ற நிலையில்,
தன் பதி என்ற உணர்வைத் தனக்குள் சேர்த்துக் கொண்டு,
பதி பக்தியின் தன்மைகளைத் தனக்குள் வளர்த்துக் கொண்டது. 

சீதா எடுத்துக் கொண்ட உணர்வின் தன்மையே, பதியை (இராமனை) வீரியமாக இயக்கச் செய்கின்றது. இராமனின் உணர்வை வலுப் பெறச் செய்து, சீதாவை மீட்டுச் செல்லும் வலிமையானது இராமனிடத்தில், சீதாவால்தான் உருவாக்கப்படுகின்றது.

இதன் தொடர் கொண்டு, இராமன் கடல் கடந்து, அரக்கர்களுடன் போரிட்டு, அரக்கர்களிடமிருந்து சீதாவை மீட்டி வந்தாலும், அங்கே கூடியுள்ள மக்கள், சீதா அரக்கர்களால் சிறையில் அடைக்கப்பட்டவர், அவருடைய பதி விரதம் எத்தகையது? என்று சந்தேகிக்கின்றனர்.

இதனால், சீதாவினுடைய பதி விரதத்தின் தன்மையை எடுத்துக் காட்ட வேண்டும் என்பதற்காகவும், மக்களுடைய கூக்குரலுக்காக வேண்டியும், இராமனும் அதன் வழியே, தம் மனைவியை பிறர் மெச்ச வேண்டும் எனும் நோக்கில், உன்னுடைய பதி பக்தி என்ற நிலைக்காக வேண்டி நீ அக்னியில் இறங்கி வரவேண்டும்  என்றுரைத்தார்.

பதியின் சொல் தட்டாத சீதா,  என்னுடைய பதிதான் முக்கியமே தவிர, இந்த அக்னி எனக்குச் சொந்தமல்ல” என்ற நிலையில், சீதா அக்னியைப் பற்றிச் சிறிதும் பயம் கொள்ளவில்லை.

தன் பதியின் உணர்வை தனக்குள் எடுத்து, அக்னியின் இடையே இறங்கி வந்தார். இதனுடைய கருத்து என்ன? பிறர் மீது தீமை என்ற உணர்வையோ, அக்னி தன்னைச் சுட்டுவிடும் என்ற எண்ணத்தையோ, சீதா தன்னிடத்தில் வளர்க்கவில்லை.

சீதா, பதி பக்தியின் தன்மை கொண்டு, அக்னியில் சாதாரணமான நிலையில் வரும் பொழுது, அக்னி அங்கே சுடவில்லை. இதனால், சீதா பரிசுத்தமானவள் என்ற நிலைகள் வருகின்றது. ஆகவே, பதியின் மேல் எற்படுத்திக் கொண்ட அந்த உணர்வுகள் எப்படி இயங்குகின்றது என்று இராமாயணத்தில் நிரூபிக்கின்றனர். 

சாதாரணமான மக்களும்,  பதி பக்தியின் தன்மையின் மனதை, எண்ணங்களை, தங்களில் கொண்டு வரப்படும் பொழுது, அதுவே தாங்கள் ஜெயிப்பதற்குக் காரணமாக இருக்கின்றது  என்பதை, இராமாயணக் காவியம் மூலம் காண்பிக்கப்படுகின்றது.

இராமர் என்பது உணர்ச்சியின் இயக்கங்களே. ஆனால், திசை திருப்பப்பட்டு உண்மையின் இயக்கங்களை மறந்து, வெறும் இராம ஜெயத்தை எழுதிக் கொண்டுள்ளார்கள்.

ஜனகச் சக்கரவர்த்தி என்றால், சூரியனைக் குறிக்கின்றது. அது மற்ற உணர்வின் தன்மைகளை எடுக்கின்றது. மற்ற உயிரணுக்களை வளர்க்கின்றது. எதன் உணர்வின் தன்மை பெற்றதோ, அதன் உணர்வின் தன்மை கொண்டு, அதனதன் நிலைகளில் எப்படி வளருகின்றது என்பதை உணர்த்துவதற்கு, ஜனக சக்கரவர்த்தி என்று பெயரிட்டு மூலக்கூறுகளைத் தனித்தும், பிரித்தும் காவியங்கள் மூலம் தெளிவாகக் கூறினார்கள் ஞானிகள்.

மண்ணிலிருந்து சீதாவைக் கண்டெடுத்தார், ஜனகச் சக்கரவர்த்தி. மண்ணிலிருந்து வரக்கூடிய, உருவாக்கும் உணர்வின் தன்மை கொண்டு, அதன் குணத்திற்கொப்ப உணர்வின் தன்மையை உருவாக்கும் சக்தி பெற்றது. ஆக, இதுதான் ஜனக சக்கரவர்த்தி என்பது. சூரியன்,
தாவர இனத்தின் தன்மையை எடுத்து,
உயிர்களின் தன்மையை நுகரச்செய்து,
உயிரணு போன்று உணர்வின் தன்மையை இயக்கி,
உணர்வின் தன்மை அறிந்துணர்ந்து செயல்படும் தன்மைகள் வருகின்றது.

இவைகளெல்லாம் திரேதா, உடல்களில் உணர்வு என்றும், சீதா சுவைக்கொப்ப உணர்ச்சிகள் எப்படி இயக்குகின்றது? என்பதையும் நமது சாஸ்திரங்கள் தெளிவாகக் கூறுகின்றன.

இராமன், சீதாவை, இராவணனிடம் இருந்து மீட்டியபின், சாம்ராஜ்யப் பதவியை அடைகின்றனர். அடைந்தபின் சீதா கர்ப்பமுறுகின்றார். அரக்கனிடம் இருந்து மீட்டு வந்ததும், அதற்குள், சீதா எப்படிக் கர்ப்பமுற முடியும்? என்று மக்கள் பேசுகின்றனர்.

இதனால், எங்கே செல்கிறோம், எங்கே செல்லப் போகின்றோம் என்று சீதைக்கே தெரியாதபடி, சீதையை அழைத்துக் கொண்டு போய், காட்டில் அனாதையாக விட்டுவிடுகின்றார், இராமன்.

இராமன் என்பவர் கடவுள்தானே, எல்லோருக்கும் நீதி வழங்குபவராக இருக்கக் கூடியவர், மக்கள் கூறுகின்றார்கள் என்று அநீதி வழங்கி நாம் துன்பப்படுகின்றோமே என்ற நிலை வருகின்றதா?  துன்பம் அல்லாதவர்.

ஆனாலும், கர்ப்பிணிப் பெண்ணைக் காட்டில் கொண்டு போய்த் தனியாக விட்டுவிட்டு வந்தால், என்ன செய்யும், எத்தனை அவஸ்தைகளையும், துன்பங்களையும், அனுபவித்திருக்கும்? 

அப்போதும் சீதா என்ன எண்ணுகின்றது. எதற்காக, இப்படித் தன்னைத் தனியாகக் காட்டில் விட்டார் என்று சீதா எண்ணவில்லை.


தன் பதி செய்வதின், உண்மையின் உணர்வுகளை உணர்ந்து,
எங்களில் உயர்ந்த உணர்வுகள் வளரவேண்டும் என்றும்,
அருள் தன்மை எங்களில் வளரவேண்டும் என்றும்,
அவருடைய உணர்வுகளுடன் ஒன்றி வாழவேண்டும்
என்ற உணர்வைத்தான், சீதா எடுத்துக் கொள்கின்றது.


சீதாவிடம், இராமன் தன்னைச் சாம்ராஜ்யத்தை விட்டு, காட்டிற்கு என்னை அனுப்பிவிட்டாரே என்ற நிலை இல்லை. வான்மீகியின் ஆசிரமத்திற்கு சீதா வந்து நிற்கும் பொழுது, வான்மீகி, சீதாவை அறிந்து கொள்கின்றார். சீதா ஆசிரமத்தில் தங்கி வசிப்பதற்கான உதவிகளைச் செய்தார் வான்மீகி.

அப்போது, கர்ப்பிணிப் பெண்ணான சீதாவிற்கு, இராமன், சீதா சரிதத்தை எடுத்துரைக்கின்றார். இராம நாம ஜெபத்தையும், இராமனுடைய நிலைகளையும், அசுர உணர்வுகளின் இயக்கங்களையும், அதிலிருந்து மீட்கப்பட்ட உணர்வுகளையும், சீதாவின் கருவிலே இருக்கக் கூடிய குழந்தைக்கு, வான்மீகி ஓதுகின்றார்.

சீதாவிற்கு குழந்தைகள் பிறந்தபின், அவர்களுக்கு லவ, குசா என்று பெயரிடப்படுகின்றது. அந்தக் குழந்தைகள், இராமனுடைய பிள்ளைகள்தான் நாங்கள் என்றும், தாயார் தவறு செய்யவில்லை என்றும், சந்தர்ப்பத்தால் ஏற்படுத்தப்பட நிலைகள்தான் என்றும், பாடல்களாகப் பாடி வருகின்றனர்.

சீதாவோ, தம் கணவனின் உணர்வின் தன்மையை எடுத்து, தம் கணவர் மனம் கலங்காமல் மகிழ்ச்சியுடன் இருக்க வேண்டும், அவர் உயர்ந்த நிலைகள் பெறவேண்டும், என்ற உணர்வின் தன்மையை எடுத்துத் தவமிருந்தது.

தம் கணவருடன் இணைந்து வாழவேண்டும், மனம் ஒன்றி வாழவேண்டும் என்ற உணர்வின் தன்மையை வளர்த்துக் கொண்டார். எடுத்துக் கொண்ட உணர்வு அனைத்தும், விஷ்ணுவை அடைந்தது. ஆகவே, அங்கே  வேதனையற்ற உணர்வும், தெளிந்த ஞானமும் வருகின்றது.

            இராமன் தம் குற்றத்தை உணர்ந்து, சீதாவைத் தம்முடன் அரவணைத்து வாழலாம் , எனும் நோக்கில் வரப்படும் பொழுது,
உடலிலே வளர்த்துக் கொண்ட சுவை, சீதா",
பூமியைப் பிளந்து, 
உடல் அங்கே உள்ளே சென்று விடுகின்றது.

உயிரான விஷ்ணுவிடம், பதி பக்தியின் உணர்வின் தன்மை பெற்றபின், தம் பதியின் உணர்வுடன் இணைந்து ஒன்றி, என்றுமே சொர்க்கம் என்ற நிலை அடைகின்றது.

அகஸ்தியர் தம் மனைவியுடன், இரு மனமும் ஒரு மனமாக ஒன்றி, இரு உயிரும் ஒரு உயிராக ஒன்றி எப்படித் துருவ நட்சத்திரமாக ஆனாரோ,  அதே போன்ற நிலையில், சீதா இங்கே சொர்க்கம் அடைந்தார் என்று இராமாயணத்தில் காண்பிக்கப்பட்டது.

கணவன், மனைவி என்ற நிலைகளில்
விஷ்ணுவை நோக்கி, அங்கே சொர்க்கமடைகின்றது.
உடல் என்ற நிலைகள், பூமியைப் பிளந்து இங்கே செல்கின்றது.

ஆகவே, இந்த உடலில் நாம் எவ்வளவு காலம் தவம் செய்தாலும், இந்த மண்ணில் தோன்றிய உணர்வின் தன்மை, இறுதியில் மண்ணையே சென்றடைகின்றது.

உயிருடன் ஒன்றிய உணர்வின் தன்மை,
ஒளியின் அறிவாக இருக்கும் பொழுது,
து, இருளை அகற்றிடும் அருள் உணர்வாக,
நிலைத்த ஒளியின் சரீரம் பெறுகின்றது 
என்று இராமாயணத்தில் உணர்வின் எண்ணங்களைப் பற்றித் தெளிவாக கூறப்படுகின்றது.

விஞ்ஞானிகள் ஒரு உயிரணு கிடைத்தால், அதைச் சேமித்து அதனில் பல உணர்வுகளைச் செருகி, புதுப்புது உயிரினங்களாக உருவாக்குகின்றனர். இதைத்தான் அன்று, ஞானிகள் பிரம்மாவைச் சிறைபிடித்தான் முருகன். அதாவது, ஆறாவது அறிவு கொண்டவர்கள், எதையும் சந்தர்ப்பத்தால் உருவாக்கும் சக்தி பெற்றவர்கள், என்று, சாஸ்திர நூல்கள் தெளிவாகக் கூறுகின்றன.

ஆகையால், ஆறறிவு கொண்ட மனிதர்கள், விஞ்ஞான அறிவு கொண்டு பூமியையே திசை திருப்பவும், அழிக்கவல்லதுமான அணு ஆயுதங்களை உருவாக்கி வைத்துள்ள நிலையில், ஏதோ ஒரு நொடி ஆத்திரத்தில், ஒரு நாட்டையே அழிக்க முற்பட்டு, பூமியின் திசையையே திருப்பிவிடும் நிலை வரும்.

இப்படி, ஒரு நொடியில் பூமியின் இயக்கத்தையே மாற்றும் காலத்தில் இருக்கும் பொழுது, நாம் துருவ நட்சத்திரத்தின் அருள் உணர்வை நமக்குள் சேர்த்துப் பெருக்கி வளர்த்தால், நமது உயிர், இந்த உடலை விட்டு எந்த நிமிடத்தில் வெளியே சென்றாலும், துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பில் வாழ முடியும்.

சூரியன் ஒரு காலம் அழியலாம். ஆனால், துருவ நட்சத்திரம் ஒரு பொழுதும் அழியாது. துருவ நட்சத்திரத்தின் அருகே விஷத்தின் தன்மை சென்றாலே, துருவ நட்சத்திரம் விஷத்தின் தன்மையைப் பொசுக்கி, தன் தன்மையில் ஒளியாக வாழும் நிலை பெற்றது. 

துருவ நட்சத்திரத்தின் அருளுணர்வை நாம் பெற்றோம் ன்றால், நமது உயிரிலுள்ள தீமைகளை அகற்றி, பேரொளியாக மாற்றும் திறன் பெறுகின்றோம்.

ஆகவே, ஆறறிவு கொண்ட மனிதர்களான நாம்,  இந்த உடல் இருக்கும் பொழுதே, துருவ நட்சத்திரத்தின் பேரருளை, பேரொளியைப் பெற்று, பிறவி இல்லா நிலை என்ற நிலையை அடைய முயற்சிப்போம். 

அருள் ஞானிகள் காண்பித்த அருள்வழியில், தம்முள் அருள் ஞானத்தைப் பெருக்கி வரும் அன்பர்கள் அனைவரும்
உலகில் படர்ந்து வரும் நஞ்சுகளிலிருந்து மீண்டு,
தெளிந்த ஞானத்துடன், மகிழ்ந்து வாழும் சக்தி பெற்று,
பிறவி இல்லா நிலை என்ற நிலை அடைந்து,
இவ்வாழ்க்கையில் பேரின்பப் பெருவாழ்வாக வாழ்ந்து,
உடல் நலத்துடன், உடல் பலத்துடன், மன நலத்துடன்,
தொழில் வளத்துடன், செல்வம் செல்வாக்கு பெற்று,
வாழ்ந்து வளர்ந்திட எமது அருள் ஆசிகள்.

(செப்டம்பர் 2000)
ஒரு சமயம், தனது மனைவிக்கு இரத்தப் போக்கு போய்க் கொண்டிருக்கின்றது, அதை குணப்படுத்த வேண்டும் என்று  எம்மைத் தேடி ஒருவர் வந்தார். அது சமயம், எனக்கு மூல நோய் இருந்தது. உட்கார்ந்தோம் என்றால், கடுகடுவென்று இருக்கும்.

நோய் பெண்மணிக்கு. ஆனால், அந்தப் பெண்மணியின் கணவர்தான் வந்திருந்தார். அவர், தனது மனைவிக்குத் தொடர்ந்து உதிரப் போக்கு போய்க் கொண்டிருக்கின்றது. டாக்டர்கள் இதனைக் குணப்படுத்த முடியாமல் கைவிட்டு விட்டார்கள்.

தனக்குக் கண்ணில்லாத குழந்தை ஒன்றும், மற்றும் ஐந்தாறு குழந்தைகள் இருப்பதாகவும், இவர்களை எல்லாம் காப்பாற்ற வேண்டி இருக்கின்றது. ஆகவே, நீங்கள்தான் எனது மனைவியை குணப்படுத்தித் தரவேண்டும். உங்கள் குருநாதரிடம் சொல்லி, மருந்து தாருங்கள் என்றார்.

அப்பொழுது, குருநாதர் எமக்குக் காட்சி கொடுத்து, எம்மிடம் பேசிக் கொண்டிருந்தார். யாம் இதன் விவரங்களை குருநாதரிடம் கேட்கப்படும் பொழுது, முருகன் வருகின்றார். ஆறாவது அறிவின் தன்மை பெற்று, நீ இங்கே வா என்றார். 

இந்த ஆறாவது அறிவைச் சரியாகப் பயன்படுத்தாதினால், உருவான நிலை என்ன? இவர்கள் சொன்ன, குறை மேல் ஆசை வருகின்றது.  குழந்தைகள் சிரமப்படுகின்றார்கள் எனச் சொல்லும் பொழுது, குருநாதர் காட்சி தருகின்றார்.

இப்பொழுது முருகனைக் காண்பித்து, அதன் பின்பக்கமாக குருநாதர் காட்சியில் வந்து, சிரிக்கின்றார்.

யாம் குருநாதரிடம், அவர்களுடைய வீட்டில் ஐந்தாறு குழந்தைகள் இருக்கின்றன. அவற்றில், குருட்டுக் குழந்தையும் இருக்கின்றது. நாளை அவர்கள் இறந்து போனால், அவர்களுடைய குழந்தைகள் தவிப்பார்களே,  அவர்கள் வருத்தமாகச் சொல்கிறார்கள், நீங்கள் சிரிக்கின்றீர்கள் என்றோம்.

போய் ஓமப்பொடி வாங்கிவா என்று, குருநாதர் எம்மிடம் கோபமாகச் சொன்னார்.

எமக்குக் கோபம் வந்து விட்டது. சாமி, அவர்கள் வேதனையாக இருக்கிறார்கள், நீங்கள், ஓமப்பொடி வாங்கிக் கொண்டு வரச் சொல்கிறீர்கள், என்றோம்.

எனக்குத் தெரியாது, நீ போய் ஐயப்பனைக் கேட்டுக்கொள் என்றார். குருநாதர்

காட்சியில் ஐயப்பன் வந்தார். ஐயப்பனிடம் கேட்டால், அவர் மௌனமாக இருக்கின்றார்.

நீ குருவையே எதிர்த்து பேசிவிட்டாய்,  இனி உன்னிடம் ஒன்றும் பேச மாட்டேன் என்று ஐயப்பன் கூறினார்.

குருநாதரிடம் யாம் கேட்டோம், ஐயப்பன் ஒன்றும் பேசமாட்டேன் என்கிறாரே என்றோம்.

அவர் எப்படிப் பேசுவார்? என்றார் குருநாதர்.

பின்னே யாரிடம் கேட்பது என்றோம், யாம். குருவாகிய உங்களிடம் தானே கேட்க முடியும், யாம் என்ன தவறு செய்தோம்? தேடி வந்தவர்கள் நலம் பெறவேண்டும் என்று தானே கேட்டோம்,  என உரைத்தோம்.

நீ ஐயப்பனையே கேள் என்று குருநாதர் கூறிவிட்டார்.

பாவம், இந்தப் பெண்மணி இறந்ததென்றால், அவர்களுடைய குழந்தைகளெல்லாம் அனாதைகளாக நிற்கும். கண்ணில்லாத குழந்தையும் இருக்கின்றது, இவர்களை எல்லாம் பாதுகாக்க வேண்டுமல்லவா? அந்தப் பெண்மணியைக் காப்பாற்றினோம் என்றால், அவர்களுடைய குடும்பத்தைக் காப்பாற்றிக் கொள்வார்கள். ஆனால், குருநாதரும், ஐயப்பனும் கேட்க மாட்டேன் என்கிறார்கள்.

அதன் பிறகு, எமது மகள் மீராவைக் கூப்பிட்டோம். அப்பொழுது, மீரா சிறு வயது பெண். அப்பொழுது,  மீரா, குருநாதரிடம் உரையாடினார்.
மீரா, எம்மைப் பார்த்து,
நீங்கள் குருநாதரிடம் முறை தவறிக் கேட்டீர்கள்,
குருநாதரிடம் கோபமாகப் பேசினால் எப்படி?
நோய் தீரவேண்டும் என்று கேட்டிருக்க வேண்டும், அதை விட்டு விட்டு, குருநாதரை அதிகாரம் பண்ணிக் கேட்கின்றீர்கள்.

அதிகாரம் செய்து, வேண்டுமானால் நீ எடுத்துக் கொண்டு போ  என்று குருநாதர், மீராவுக்குக் காட்சி கொடுத்துக் கூறினார்.

அப்பொழுது, நோயாளியின் கணவர் ஓமப்பொடியை வாங்கிக் கொண்டு வந்துவிட்டார்.

அந்தப் பெண்மணியை ஓமப் பொடியைச் சாப்பிடச் சொல் என்று மீரா மூலம் குருநாதர் கூறினார்.

அது எப்படி குணமாகும்? என்றோம் யாம். 
குருநாதர் தான் சொல்கிறார்,
ஆனால் யாம், அது எப்படி ஓமப்பொடி சாப்பிட்டுக் குணமடைய முடியும்? என்று  வாதிக்கின்றோம்.

இப்படி, மறுபடியும் விதண்ட வாதம் செய்தவுடனே, குருநாதர் மறுபடியும் மௌனமாகவே இருந்துவிட்டார்.  நீயே போய்க் காப்பாற்றிக்கொள்,  நீ குருவுக்கு மிஞ்சிய ஆளாக ஆகின்றாய்” என்று கூறிவிட்டார்.

அதன் பிறகு, நாங்கள் இருவருமே மௌனமாகி விட்டோம். இப்படி நான்கு மணி நேரம் ஆகிவிட்டது.

சாமி, என் மனைவிக்கு உடலிலிருந்து இரத்தம் முழுவதும் போய்விட்டது. டாக்டர்களும் கைவிரித்து விட்டார்கள். இன்றோ, நாளையோ என்று என் மணைவியின் நிலை இருக்கின்றது. நீங்கள் காப்பாற்றுவீர்கள் என்று  நம்பி வந்தால், நீங்கள் குருநாதரிடம் சண்டை போட்டுக் கொண்டிருக்கின்றீர்களே என்றார், எம்மைத் தேடி வந்தவர்.

குருநாதரிடம் நோய் நீக்கும் வழியைக் கேட்டுக் கொண்டிருக்கின்றோம், அவர் கொஞ்சம் கூட, கவனிக்க மாட்டேன் என்கிறார்  என்றோம் யாம். இது எம்முடைய புத்திசாலித்தனம்.

அன்றைக்கு இருக்கக் கூடிய சூழ்நிலையில், இதனின் உணர்வுகள் எப்படி இயக்குகின்றது? என்பதைக் காண்பித்தார் குருநாதர்.

இதனைத் தொடர்ந்து, பக்கத்து வீட்டுக்காரர், ஒரு தேவர், அவர் எம்மை மாப்பிள்ளை, மாப்பிள்ளை என்று அழைத்துக் கொண்டே வந்தார். என்னப்பா இது, நல்லையா நாயக்கர் சம்பாதித்து வைத்திருக்கிறார் என்று, நீ ஊரை சுற்றிக் கொண்டிருக்கின்றாய். என்னென்னவோ மந்திர வேலைகளைச் செய்து கொண்டிருக்கின்றாய், இதெல்லாம் உனக்கு எதற்கு? என்று எம்மிடம் கேட்டார்.

நான் என்ன செய்ய வேண்டும்? என்று அவரிடம் கேட்டோம்.

நீ இது போன்ற மந்திர, தந்திர வேலைகளைச் செய்யக் கூடாது. நீ மறுபடியும் வீட்டிற்கு வந்து, வெளி வேலைகளுக்குச் சென்று, விறகுக் கடையும் கவனித்துக் கொள்ளவேண்டும் என்றார். தொடர்ந்து அவர், நீ பைத்தியத்துடன் சேர்ந்து சுற்றி, இதையெல்லாம் செய்து கொண்டிருக்கின்றாய் என்று சத்தம் போட்டார்.

அப்பொழுது, மீரா எங்களைப் பார்த்துக் கொண்டிருந்தது. எனது மகள் மீரா அவரைப் பார்த்து, கோபிக்காதீர்கள், குருநாதர் உங்களுக்கு லட்டு கொடுக்கின்றார் என்று சொன்னது.

அதற்கு அவர், என்ன பிள்ளை, எங்கே கொடுக்கிறார்? என்று கேட்டார்.

முகர்ந்து பாருங்கள், வாசனை தெரியும் என்றது மீரா.

பக்கத்து வீட்டுக்காரர், எனக்கு ஒரு வாசனையும் தெரியாது, ஒரு கத்திரிக்காயும் தெரியாது, இதுவெல்லாம் யாரை ஏமாற்றுகிற வேலை? என்று கூறினார்.

இல்லை, மறுபடியும் முகர்ந்து பாருங்கள், லட்டு வாசனை தெரியும் என்றது மீரா.

எனக்கு மூக்கடைத்துவிட்டது, வாசனை தெரியவில்லை என்று கூறினார் அவர்.

தாத்தா, குருநாதர், இப்பொழுது ஜிலேபி கொடுக்கின்றார், கொய்யாப் பழம் கொடுக்கிறார் என்று மீரா சொன்னால், எதுவும் எனக்கு தெரியாது, யாரை ஏமாற்றுகிறீர்கள்?, கொய்யாப் பழத்தை கொண்டு வரச்சொல், என் கையில் கொடுக்கச் சொல் என்றார் தேவர்.

நீங்கள் முதலில் வாசனையைப் பாருங்கள், பிறகு கொடுக்கிறேன் என்றார். குருநாதர். இப்படி, இருவருக்கும் வாக்குவாதம் தொடர்ந்தது.

ஊரை எமாற்றி, எங்களைப் பைத்தியக்காரனாக்க விரும்புகிறார் உனது குருநாதர் என்று பேசினார், பக்கத்து வீட்டுக்காரர்.

மீரா, மூக்கடைத்து விட்டது, வாசனை தெரியவில்லை என்றுதானே கூறினீர்கள், இப்பொழுது, நிஜமாகவே வாசனை தெரியும் பாருங்கள் என்று கூறிக் கொண்டிருந்த சமயத்தில், நோயாளிப் பெண்மணியின் கணவர், என்னங்க நீங்கள் விளையாடிக் கொண்டிருக்கின்றீர்கள்?, எனக்கு ஒரு நல்வழியைக் காண்பியுங்கள் என்று கூறினார்.

அதுதான் ஏற்கனவே சொல்லிவிட்டேனே, ஓமப்பொடி கொடுங்கள், குணமாகும் என்று கோபமாக மீரா மூலம் கூறினார், குருநாதர்.

ஓமப்பொடி கொடுத்தால் நோய் குணமாகுமா, அது எப்படி? என்று நோயாளியின் கணவரும் கேட்டார்.

இது நடந்த நிகழ்ச்சி. குருநாதர், எமக்கு ஒவ்வொரு அனுபவத்தையும் நேரடியாகக் கொடுத்தார்.

பக்கத்து வீட்டுக்காரரைப் பார்த்து, முகர்ந்து பாருங்கள் வாசனை தெரியும் என்று கூறினால், எனக்கு ஒரு வாசனையும் தெரியாது, மூக்கடைத்து விட்டது என்று கூறினால், திரும்பத் திரும்ப, இதையே கூறுகின்றாயே என்று கேட்டார்.

குருநாதர் சிரித்துக் கொண்டே., இப்பொழுது, அழுத்தமாக உறிஞ்சிப் பாருங்கள் என்றார். பக்கத்து வீட்டுக்காரரும் அது போன்று செய்யவே, நச், நச் என்று பெரிய தும்மலாகத் தும்மினார்.

அவர் வெற்றிலையும், புகையிலையும், எப்பொழுதும் வாயில் போட்டு மென்று கொண்டிருப்பவர். இந்தத் தும்மலினால், அவர் வாயில் இருந்த வெற்றிலை, அவருடைய வேஷ்டி, சட்டையில் எல்லாம் விழுந்து கறை படிந்துவிட்டது. எம்மீதும், வெற்றிலை கறையாகிவிட்டது.

இப்படி, சிறிது நேரம் தும்மிக் கொண்டே இருந்தார். பக்கத்து வீட்டுக்காரரும் மீராவைப் பார்த்து, ஏய் பிள்ளை, தும்மலை நிறுத்தச் செய்கின்றாயா, இல்லையா? என்று கேட்டார்.

எனக்கென்ன தெரியும்?  குருநாதரிடம் கேளுங்கள், முகர்ந்து பார்க்கச் சொன்னார். வாசனை இல்லை என்று சொன்னீர்கள், இப்பொழுது வாசனை தெரிந்ததல்லவா என்றாள் மீரா.

இது என்னவோ பெரிய வேலையாக இருக்கின்றது. உங்கள் குருநாதரிடம் மன்னிப்புக் கேட்டுக் கொள்கின்றேன், தும்மலை நிறுத்தச் செய் என்று கேட்டுக் கொண்டார், தேவர்.

அது சமயம், ஓமப்பொடி வாங்கி வந்தவர், இது என்ன எல்லோரையும் ஏமாற்றுவது போன்று இருக்கின்றது. உங்களுடைய குருநாதர் பைத்தியக்காரராக இருந்தார். உங்களுடைய வாழ்க்கையும் பைத்தியக்காரர் போன்று இருக்கின்றது. நானும் போயும், போயும், உங்களைத் தேடி வந்தேன் என்று கூறினார்.

தேவரும், என்னால் தும்ம முடியவில்லை, மாப்பிள்ளை, உன் குருநாதரிடம் சொல்லி, என்னுடைய தும்மலை நிறுத்து என்று எம்மிடம் கூறினார்.

யாம், எமக்கென்ன தெரியும்?, நீங்களே எமது குருநாதரைக் கேட்டுக் கொள்ளுங்கள் என்றோம்.

இதற்கு எமது மகள் மீரா, இனிமேல் இது போன்று சொல்ல மாட்டேன் என்று சொல்லுங்கள் என்றதும், இனிமேல் அப்படிச் சொல்வேனா, உன் குருநாதரிடம் சொல்லி என்னுடைய தும்மலை நிறுத்து என்றார்.

முக்கால் அல்லது ஒரு மணி நேரம் தும்மிக் கொண்டிருந்தார். எனக்கு வயிற்று வலி ஆகின்றது, உடலெல்லாம் வலிக்கின்றது, என்னை விட்டுவிடு என்றார்.

மீரா, சரி, தும்மல் நின்று போகும், குருநாதர் இன்னொரு பொருள்  தருகின்றார், வாசனை பாருங்கள் என்றதும் கொடு பிள்ளை, கொடு என்றார் தேவர். உடனே தும்மலும் நின்றது.

தும்மல் நின்றதைப் பார்த்துக் கொண்டிருந்த, ஓமப்பொடியை வாங்கி வந்தவர் எம்மிடம், நைனா, ஓமப்பொடி கொடுத்தால் குணமாகும் போலத்தான் தெரிகின்றது,  நான்தான் பைத்தியக்காரன் என்றார்.

யாம், ஓமப்பொடியைக் கொண்டு போய், உனது மனைவிக்கு கொடு என்றோம். இதை கொண்டு போய்க் கொடுத்தவுடனே, இரண்டு, மூன்று மாதமாக இருந்து கொண்டிருந்த உதிரப் போக்கு, நின்று போனது. குணமானவுடனே,  ஓடி வந்து எங்களிடம் சொன்னார்.

அதன் பிறகு குருநாதர் எமக்குச் சொன்னார். ஐயப்பனிடம் எப்படிக் கேட்பது, நீ அவரையே மிரட்டுகிறாய், முருகனை மிரட்டுகிறாய், அதன் பிறகு, நான் என்ன சொல்ல வேண்டியிருக்கின்றது என்றார்.
நீ எப்படி இருக்கவேண்டும்?
குருநாதரிடம் எப்படிப் பேச வேண்டும்?
நீ என்னென்ன செய்ய வேண்டும்?  என்று எமது மகள் மீராவிற்கு, குருநாதர் காட்சி கொடுத்து, மீரா மூலம் எமக்கு உபதேசம் கொடுத்தார்.

இவ்வாறு, அனுபவபூர்வமாகத்தான் எமக்குப் பல நிலைகளை உணர்த்தி,  நாம் எவ்வாறு மெய் வழியில், குரு வழியில் செல்வது? என்று உபதேசித்தார். 


இதன்வழியில், குருநாதர் காட்டிய மெய் உணர்வுகளைக் கடைப்பிடித்து வருபவர்கள் அனைவரும், அவர்களது வாழ்க்கையில் இருள் நீங்கி, மெய்ப்பொருள் காணும் திறன் பெற்று, நோய் நீங்கி, நோய் நீக்கிடும் அருள் சக்தி பெற்று, குடும்பத்தில் அனைவரும் ஒற்றுமை உணர்வுடன் மகிழ்ந்து மகிழ்ந்து வாழ்ந்திடவும், என்றென்றும் அந்த மகரிஷிகள் அருள் வட்டத்தில் இணைந்து வாழ்ந்திடவும், எமது அருள் ஆசிகள்.

(அக்டோபர் 2000)
ஒவ்வொரு மனிதரின் வாழ்க்கையிலும், சந்தர்ப்பங்கள் அவர்களை எந்தெந்த நேரத்தில், எது எது இயக்குகின்றது என்பதையும், அவரவர் வாழ எதைச் செய்கின்றனர் என்பதையும், நமது குருநாதர் எமக்கு, தினம், தினம், அனுபவப்பூர்வமாக உணர்த்தினார்.


ஒரு உடலில், ஒரு உணர்வின் தன்மை எப்படிப் பெருகுகின்றது? பெருகியபின், அவ்வுடல் என்ன நிலையாகின்றது? என்பதையெல்லாம் எமக்குத் தெளிவாக உபதேசித்து அருளினார்.

குருநாதர், எமக்கு எழுத்து வடிவில் எதையும் கற்றுக் கொடுக்கவில்லை. ஆனால், அருள் வழியில், எமக்கு கற்றுக் கொடுத்தார். 

பார்த்தால், சின்ன விஷயமாகத் தோன்றும். ஆனால், அதனுள் விஷயம் ஏராளமாக இருக்கும். 

எமது சொந்தக்காரர்கள் எல்லாம், எம்மைப் பார்த்து, பைத்தியத்துடன் சேர்ந்து அலைந்து கொண்டிருக்கின்றேன் என்று எம்மைத் திட்டுவதற்குதான் வந்தார்களே தவிர,  குருநாதருக்கும், எமக்கும் இடையே உள்ள, உண்மை நிலை என்ன?  என்பதை அறிந்துகொள்ள முன் வரவில்லை.

நண்பர்களாக இருந்தவர்களும், எம்மைப் பைத்தியத்துடன் சேர்ந்து பைத்தியமாகி விட்டார் என்றுதான் பேசினார்கள். ஏன், எமது வீட்டில் சாமி அம்மாவும் அப்படித்தான் பேசினார்கள். வீட்டில் இருந்த மாமா, அத்தை, எமது குழந்தைகள் என்று, அனைவரும் எம்மை அப்படித்தான் நினைத்தார்கள்.

அருள் உணர்வின் தன்மையை, சாமி அம்மாவும் கொஞ்சம், கொஞ்சமாகத் தெரிந்து கொண்டார்கள். ஏனென்றால், நாங்கள் வைத்திருக்கும் விறகுக் கடைக்கு, குருநாதர் வந்து, ஹாயாகப் படுத்துக் கொள்வார்.

சாமி அம்மாவிடம், இவர்களைப் பார், அவர்களைப் பார், என்று தனது உள்ளங்கையைக் காண்பிப்பார். இப்படியெல்லாம் பல நிலைகளை செய்து, உலகம் எப்படி இருக்கிறது என்று உணர்த்தினார்.

பிறகு, சினிமாத் தியேட்டர்களில் என்ன படங்கள் ஓடுகின்றன? என்று குருநாதர் கேட்பார். சினிமாத் தியேட்டர்களில் ஓடும் படங்களைச் சொன்னால், எந்தச் சினிமாப் படம் பார்க்க விரும்புகின்றாய்?, அதை இங்கேயே பார்க்கலாம் என்று கூறுவார்.

அது எப்படித் தியேட்டரில் ஓடும் சினிமாப் படத்தை இங்கிருந்து பார்க்க முடியும்? என்று யாம் கேட்போம்.

இப்பொழுது பார் என்று கூறுவார். சினிமாப் படம், அது, அப்படியே நாங்கள் நின்ற இடத்தில் இருந்தே பார்க்க முடிந்தது. எமது மகள் மீராவிடம், தியேட்டரில் என்ன படம் ஓடுகின்றது? என்று கேட்பார் குருநாதர். மீராவிடம் கேட்டு, மீரா விரும்பிய படத்தை அங்கே காண்பிப்பார்.

 யாம், குருநாதர் எமக்குக் கொடுத்த உணர்வுகளை வரிசைப்படுத்தி, ஒழுங்குபடுத்தி, என்ன தியேட்டரில் என்ன படம் ஓடுகின்றது என்று குழந்தைகளிடம் கேட்டு, அதைப் பாருங்கள் என்று கூறி, யாமும் மற்றவர்களுக்குச் சினிமாப் படம் காண்பிக்க ஆரம்பித்தோம்.

இதனால், எம்மைப் பார்த்தால் போதும், குழந்தைகள் கூட்டம் கூடிவிடும். நைனா., நைனா., என்று குழந்தைகள் எம்மைச் சூழ்ந்து கொள்வார்கள். இந்தந்தச் சினிமாப் படங்களைக் காண்பியுங்கள் என்று கேட்பார்கள். அவர்கள் கேட்ட சினிமாவைக் காண்பித்தால், உடனே குழந்தைகளுக்குக் குஷியாகும்.

அதன் பிறகு, குருநாதர் எம்மைத் திட்டுவார். உன்னைச் சினிமா பார்க்கச் சொன்னேனா?
ஒவ்வொருவரும், சினிமாவில் நடிப்பதைப் போன்று,
வாழ்க்கையில் எப்படி நடிக்கின்றார்கள்? 

இதனின் உணர்வு எப்படி வருகின்றது?  ஒருவருக்கு நடிப்பு எப்படி வருகின்றது?. ஒரு உணர்வை நுகர்ந்தபின், எப்படி நடிக்கின்றார்கள்? நுகர்ந்த உணர்வின் உணர்ச்சிகள், ஒருவரை எப்படி ஆட்டிப் படைக்கின்றது? என்று இதைத்தான் உன்னைப் பார்க்கச் சொன்னேன் என்றார், குருநாதர்.

ஒருவருடைய உணர்வுக்குத் தக்க, அவருடைய வாழ்க்கையில், வீட்டில் ஒருவருடன் சண்டைக்குச் செல்கின்றார்.
ஒரு பக்கம் அரவணைக்கின்றார்,
மறு பக்கம் வெறுக்கின்றார்.
இதனின் உணர்வுகளைச் சுவாசிக்கின்றார். அதனின் உணர்வுகள், அவருக்குள் எப்படி அங்கே இயங்குகின்றது? என்று உபதேசித்தார்.

நீ குழந்தைகளுக்குச் சினிமாப் படம் காண்பிக்கின்றாய். அதனால் குழந்தைகள் சந்தோஷப்படுகின்றன. ஆனால், பெரியவர்களிடம் சொன்னால், அவர்கள் எதற்கு ஆசைப்படுகிறார்கள்? ஏதாவது, புதையல் கிடைக்குமா? புதையல் இருக்கும் இடம் தெரியுமா? என்று கேட்டு வருகின்றார்கள். புதையல் கிடைத்தால், நான் நன்றாக ஆகிவிடுவேன். குபேரனாக வாழலாம் என்பது, பெரியவர்களுடைய ஆசை.

ஆனால், அருள் ஞானத்தைப் பெருக்க வேண்டும், இருளைப் போக்க வேண்டும், என்ற நிலைக்குத்தான் "அருள் ஆற்றலை" உனக்குக் கொடுத்தேன்.
நீ மற்றவர்களுடைய ஆசைகளைப் பெருக்கவா போகின்றாய்? என்று கேட்டார் குருநாதர்.

ஆனால், ஆசையினைப் பெருக்க வேண்டும். எந்த ஆசையினைப் பெருக்க வேண்டும்? அருளை ஆசைபட்டால், இருளைப் போக்கும். உடலின் ஆசையை வளர்த்தால், இருள் சூழும். ஆக,
உயிர் ஆசை,
உடல் ஆசை, என்பதற்கு விளக்கம் கொடுத்தார் குருநாதர்.

ஏனென்றால், விஞ்ஞான அறிவில் எலெக்ட்ரிக், எலெக்ட்ரான் என்ற நிலை வரப்படும் பொழுது, கம்ப்யூடர் போன்ற சாதனங்களை உருவாக்குகின்றனர். கெமிக்கல் கலந்த நிலைகளில், நாம் எப்படி
சிக்கி முக்கி கல்லைத் தட்டுகின்ற பொழுது
அதில் உணர்வின் அதிர்வும், ஒளியும் வருவதைப் போன்று
கெமிக்கல் கலந்த பொருள்களில் அதிர்வைக் கொடுத்து,
உணர்வின் ரூபத்தை, விஞ்ஞான அறிவால் காட்டுகின்றனர்.

நாம், கோபம் என்ற நிலையை எடுத்துக் கொண்டபின், கோபத்தின் உணர்வுகள் எலெக்ட்ரானிக், கோப உணர்வின் உணர்ச்சிகள், அழுத்தங்கள் வரப்படும் பொழுது, நமது கண் எப்படிச் சிவக்கின்றது, நரம்புகள் எப்படி முறுக்குகின்றது, எதன் வழி செயல்படுகின்றது> என்று குருநாதர் எமக்கு உணர்த்தினார்.

எலெக்ட்ரிக், எலெக்ட்ரான் என்ற நிலையில் ஒரு பொருளுடன் ஒரு பொருள் கலக்கப்படும் பொழுது, அதனின் கலவையின் நிலைகள் எப்படிச் செயல்படுகின்றன? செடி கொடிகள் எப்படி வளர்கின்றன? எப்படி  ரூபம் மாற்றமடைகின்றன? என்பதையெல்லாம் எமக்கு உணர்த்தினார்.

இப்படி,  எங்களுக்குள் நடைபெறும் உணர்வுப் பரிமாற்றங்கள்,  வேறு யாருக்கும் தெரியாது.

            அனுபவரீதியாக, ஒவ்வொன்றையும் சினிமாப் படம் போன்று காண்பித்தார். இந்த உண்மையின் இயக்கத்தை, நமது அகத்திற்குள் பதிவு செய்ய வேண்டும் என்ற நிலைகளில், குருநாதர், எமக்கு உபதேசித்த அருள் வழி கொண்டுதான், இப்பொழுது, யாம் உங்களிடத்தில் பதிவு செய்கின்றோம்.
சில நேரங்களில்,  யாம் உபதேசித்த உண்மையின் நிலைகளை,  உங்களுக்குள் பதிவு செய்து கொண்ட உணர்விற்கொப்ப, நுகர்ந்தபின்,  உணர்வின் அறிவாக, நீங்கள் அறிந்து கொள்ள முடியும்.

எலெக்ட்ரிக் என்ற உணர்வுடன் (உயிருடன்), துருவ நட்சத்திரத்தின் உணர்வை இணைக்கப்படும் பொழுது, உங்களிடத்திலுள்ள கோபத்தையும், உங்கள் மேல், மற்றவருக்குள்ள கோபத்தையும் தடைப்படுத்தி, உங்களுக்குள் நிதானத்தைத் தரும்.

பதினெட்டாம்படி என்ற நிலையில், அஷ்டதிக்கிலிருந்தும் வரக்கூடிய நிலைகளைச் சிந்தித்துச் செயல்படுத்தி, தூய உணர்வின் தன்மையை உயர்த்தப்படும் பொழுதுதான், பிறவி இல்லா நிலையை அடைய முடியும்.

இதன் வழி பின்பற்றும் அனைவருக்கும், எமது அருளும் குருநாதரின் அருளும் உறுதுணையாக இருக்கும்.

சூறாவளிக் காற்று ஒன்று வரப்படும் பொழுது, அதில் சிக்கிக் கொண்ட அணுக்கள் ஒன்றுடன் ஒன்று மோதி, மோதலில் தன் நிலையினை இழந்து, மற்றவைகளுடன் இணைத்துக் கொண்டபின், புது வித்தாக மண்ணில் பதிவாகின்றது. பின், தன் உணர்வின் தன்மை கொண்டு, காற்றில் உள்ள தன் சத்தினை எடுத்து வளர்கின்றது.

இதை போன்றுதான், நமது உடலிலும் சூறாவளி போன்று, நமது வேதனையின் உணர்வுகளால், நம் உடலுக்குள் வாயு மண்டலங்களாக மாற்றப்பட்டு, நமது உணர்வின் தன்மை விஷத்தன்மை ஆக்கப்பட்டு, நம்மை, நமது உடலை எத்தனை வேகமாக ஆடச் செய்கின்றது, நமது எண்ணங்கள் எப்படி வேகமாக ஓடுகின்றது. 

இவ்வாறு, நாம் சுவாசிக்கும் உணர்விற்கொப்ப, நமது உடலில் அணுக்கள் சேர்ந்து விட்டால், அது ஒடுங்கி என்ன செய்கின்றது என்பதை ஞானிகள் உணர்த்தினார்கள்.

27 நட்சத்திரங்களின் கதிரியக்கங்கள் வான்வீதியில் மோதும் பொழுது, உணர்ச்சிகளின் தன்மை வான்வீதியில், சூறாவளியின் தன்மையாக மாறுகின்றது. அதன் உணர்வின் இயக்கங்களை, நமது பூமி துருவப் பகுதி வழியாகக் கவர்ந்தால், நமது பூமிக்குள் சூறாவளியாக மாறுகின்றது. ஆக, வான்வீதியில் மட்டுமல்ல நமக்குள்ளும் தான்.

இதே போன்று, ஒருவரின் உடலில் ஏற்படும் உணர்வினை நாம் நுகர்ந்தால், நுகர்ந்த உணர்வு நம்மை எப்படி இயக்குகின்றது, என்பதை குருநாதர் தெளிவாக உணர்த்தினார். எமது மகள் மீரா மூலம், எமக்கு புத்திமதி சொல்லுவார். எமது மகள் மீராவிற்கு காட்சி ரூபம் கொடுத்தார்.

இதைப் போன்று, யாம் காட்சி ரூபங்களைக் கொடுத்தால் என்னவானது என்றால், அவரவர் ஆசைக்கு எடுத்துக் கொண்டனர். உண்மையைச் சொன்னால், ஞானத்தைச் சொன்னால், எடுப்பதற்கு ஆளில்லை. 

தன்னுடைய ஆசைக்குத்தான், காளியம்மனை வணங்குகின்றார்கள், மாரியம்மனை வணங்குகின்றார்கள், கருப்பணச்சாமியை வணங்குகின்றார்கள்.

கோபத்தின் உணர்வுகளை நமக்குள் பெருக்கப்படும் பொழுது, இரத்தக் கொதிப்பு வருகின்றது. நரம்புகள் வெடிக்கின்றன, சிந்திக்கும் தன்மை வருவதில்லை. பிறிதொரு நிலைகளைத் தாக்கும் உணர்வுகள் வருகின்றன. அவ்வாறு தாக்கும் உணர்வு வந்தால், நமது உடலில் உள்ள நல்ல குணங்களைக் கொன்று குவிக்கின்றது.

ஆக, இதனின் உணர்வுகள் நமது உயிரினில் மோதப்படும் பொழுது, என்னென்ன செய்கின்றது என்பதை அறிந்து, நம்மை நாம் சாந்தப்படுத்தி, தெளிந்து சிந்திக்கும் நிலைக்குத்தான், துருவ நட்சத்திரத்தை எண்ணி தியானிக்கச் சொல்லுவது.

துருவ நட்சத்திரத்தின் உணர்வுகள், நம்மிடத்தில் அறியாது சேர்ந்துள்ள தீய உணர்வுகளை ஒடுக்குகின்றது. துருவ நட்சத்திரம், 27 நட்சத்திரங்களில் உள்ள விஷத் தன்மைகளை ஒளியாக மாற்றுகின்றது.

நாகப்பாம்பு என்ன செய்கின்றது?  தன் உடலில் உள்ள விஷத்தை, பிற உயிரினத்தின் மீது பாய்ச்சி, தன் உணர்வின் தன்மையை உணவாக எடுத்துக் கொள்கின்றது. ஆக, மற்ற, பிற ஒவ்வொரு உடலில் உள்ள விஷத்தையும், தன் உடலில் கலக்கின்றது. அப்படிக் கலக்கிய விஷங்கள்தான்,  நாகரத்தினமாக மாறுகின்றது. 

விஷத்தின் உணர்வின் தன்மை உயிருடன் ஒன்றி, உணர்வின் தன்மையாக ஆகின்றது. உணர்வின் தன்மை ஒளியானபின், உயிர் வெளியே போகின்றது. உணர்வின் தன்மை நாகரத்தினமாக மாறுகின்றது.

விஷத்தின் உறைவிடம், உயிருடன் ஒன்றி உணர்வின் தன்மையாகின்றது. ஒளியானபின், உயிர் வெளியே போய்விடுகின்றது. உணர்வின் தன்மை ஒளியானபின், பாம்பின் உயிர் மனிதனுக்குள் சென்று அங்கே தூய்மையாக்கும் உணர்வு பெறுகின்றது. இப்படியும் உயிரணுக்கள் மாறுகின்றது என்று குருநாதர் எமக்கு உணர்த்தினார்.

இயற்கை எப்படி நம்மை இயக்குகின்றது? நாம் எப்படி வாழ வேண்டும்? எதன் வழி வாழவேண்டும்? என்று இவ்வாறு அறிந்து கொண்ட நாம், இனி துருவ நட்சத்திரத்தின் அருள் உணர்வுகளை, ஒவ்வொரு நொடிப் பொழுதும் நமக்குள் சேர்த்து, 
உயிருடன் ஒன்றும் உணர்வுகளை,
ஒளியின் தன்மையாக உருவாக்குவோம். 
அழியா ஒளியின் சரீரம் பெறுவோம்.
மகரிஷிகளின் அருள் வட்டத்தில் இணைந்து வாழ்வோம்.

(நவம்பர் 2000)
தாவர இனத்தின் வித்துகளை வேக வைத்து  நிலத்தில் போட்டால், அவ்வித்துக்கள் முளைப்பதில்லை. இது போன்றே, தீமை தரும் உணர்வுகளை நாம் அறியாது நுகர நேர்ந்தால், உடனே  துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாம் பெறவேண்டும் என்று எண்ணினால், நுகர்ந்த அருள் உணர்வுகள், நம்மில் அறியாது வரும் நஞ்சான உணர்வுகளை ஒடுக்குகின்றது.  நஞ்சான உணர்வுகள் நம்முள் விளைவதில்லை.

குமாரபாளையத்தில், சக்திவேல் என்பவர் எம்முடன் இருந்தார். காரணம், சக்திவேலுக்கு ஆஸ்துமா நோய் இருந்தது. அவருக்கு இருந்த ஆஸ்துமா நோயை நீக்கி, குணப்படுத்தினோம். ஆகவே, சக்திவேல், குமாரபாளையத்தில் எப்பொழுதும் எமக்கு உதவியாக இருந்தார். இரவில், யாம் இருந்த இடத்திலேயே தங்கிக் கொள்வார்.

இதனால், சிலர் சக்திவேலின் அம்மாவிடமும் அப்பாவிடமும் போய், மந்திரவாதி, (அதாவது யாம்) உன் பையனைக் கடத்திக் கொண்டு போய்விடுவான். அந்த சாமியாரிடம் சக்திவேலைச் சேரவிடாதே என்று கூறிவிட்டார்கள். இதை, சக்திவேலிடமும் அவருடைய அம்மா கூறினார்கள்.

அன்று இரவில், சக்திவேலின் அம்மா படுத்திருக்கும் பொழுது, அன்று முழு நிலா இருந்திருக்கும் போல் தெரிகின்றது. நிலாவிலிருந்து சிவனும், பார்வதியும், முருகனும் இறங்கி வந்து, சக்திவேலின் அம்மாவை, வா வா…” என்று கூப்பிட்டிருக்கின்றார்கள். இதனால், பயந்து போன சக்திவேலின் அம்மா இரவு ஒரு மணி இருக்கும், அந்த இரவு நேரத்தில், யாம் இருக்கும் இடம் தேடி, ஓடி வந்தார்கள். அது சமயம், சக்திவேலும் எம்முடன்தான் இருந்தார்.

சிவனும், பார்வதியும், முருகனும், சக்திவேலின் அம்மாவை வா வா…” என்று அழைத்தவுடன், சக்திவேலின் அம்மா பயந்து போய், என்னை விட்டுவிடு, என்னைக் கூப்பிடாதே, எனக்குப் பிள்ளைகுட்டிகள் இருக்கின்றார்கள், நான் தான், அவர்களைக் காப்பாற்ற வேண்டும் என்று கூறியிருக்கிறார்கள்.

இதை அப்படியே, சக்திவேலின் அம்மா எம்மிடம் கூறினார்கள். ஆனால், இதற்கு முன், சக்திவேலின் அம்மா எம்மைப் படு மோசமாகத் திட்டியிருக்கின்றார்கள்.

இப்படிக் காட்சி கிடைத்தபின், நடு இரவில் எம்மைத் தேடி வந்த சக்திவேலின் அம்மா, சாமி நாங்கள் தப்புச் செய்யவில்லை, நாங்கள் பிள்ளை குட்டிக்காரர்கள், எங்களைக் காப்பாற்றுங்கள், டேய் சக்திவேலு. சாமியிடம் எங்களைக் காப்பாற்றச் சொல்லுடா, என்னை வா வா. என்று கூப்பிட்டால், நான் போய்த் தானே ஆகவேண்டும், என்னைக் காப்பாற்றச் சொல்  என்று கூறினார்கள்.

அதன் பிறகு யாம்,  ஒன்றுமில்லை, பயப்படத் தேவையில்லை, நீங்கள் நன்றாக இருப்பீர்கள் என்று சக்திவேலின் அம்மாவை ஆசீர்வதித்தோம்.

இந்தச் சம்பவத்திற்குப் பிறகு, சக்திவேலின் அம்மா எமக்குத் தினமும் உணவு கொண்டு வந்தார்கள். சக்திவேலின் அம்மா சக்திவேலை அழைத்து, சாமியார்களைத் திட்டாதே, சாமிக்கு உணவு கொண்டுபோய்க் கொடுத்து வா என்று சக்திவேலிடம் கூறினார்கள்.

ஏனென்றால், அன்று யாம் முழு ஆற்றலுடன் இருந்தோம். இன்றைக்கு உங்களுக்கு ஞானத்தை ஊட்டி, சக்தியைப் பெறச் செய்கின்றோம். அதில்லாமல்,  உங்களுக்கு நேரடியாக ஆற்றலைக் கொடுத்தால், இருடா ன்னைத் தொலைத்துக் கட்டுகிறேன் என்று மற்றவர்களுக்குச் சவால் விடுவீர்கள், வேறு என்ன செய்யப் போகிறீர்கள்?

குருநாதர் எம்மைத் தேடி வந்து கொடுத்தார்.
ஏன் கொடுத்தார்?
மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும்,
எல்லாவற்றையும் தாங்கும் சக்தி பெறவேண்டும் என்று கொடுத்தார். 

ஆகவே, எதையும் தாங்கக் கூடிய சக்தியும், நன்மை செய்வதற்கு,  ஆற்றலைப் பயன்படுத்த வேண்டிய நேரத்திற்குப் பயன்படுத்த வேண்டும். அதைத்தான் நாம் இப்பொழுது செய்யவேண்டும்.

நமது உடல் நமக்குச் சொந்தமாகின்றதா? நாம் தேடிய செல்வங்கள் தான், நமக்குச் சொந்தமாகின்றதா? நாம் நல்ல அழகான துணிகளை உடுத்துகின்றோம். சுத்தமாக இருக்க வேண்டும் என்று, முக பவுடர், அது, இது என்று பூசுகின்றோம்.

ஆனால்,  உடலில் ஒரு நோயிருந்து, அதனால் வேதனையை அனுபவித்துக் கொண்டிருக்கும் பொழுது, ஒருவர் உங்களிடம் வந்து, பவுடர் பூசிக் கொள்ளுங்கள் என்று சொன்னால், என்ன, கிண்டலா செய்கின்றீர்கள், அலங்காரம் செய்து கொள்ளும் நிலையிலா நான் இருக்கிறேன் என்று கேட்பீர்கள்.

நீங்கள் சந்தோஷமாக இருந்து பாருங்கள். உங்களுடைய முகத்தில் அழகு கூடும். அதே சமயத்தில், நல்ல ஆடம்பர உடையினை உடுத்தி, பவுடர் பூசி அலங்காரப்படுத்தி இருந்த போதிலும், மனது சரியில்லை, வேதனை என்ற நிலையானால், முகம் சுருங்கிவிடும்.

ஆகையால், பார்ப்பவர்கள் என்ன கேட்பார்கள், என்னங்க, ஏன் ஒரு மாதிரியாக இருக்கிறீர்கள்? ஏதேனும் கவலையா? என்று கேட்பார்கள். ஆகவே, நம்மை எது செயல்படுத்துகிறது?

அருள் உணர்வை நமக்குள் பெருக்கி, இருளை அகற்றி, மகிழ்ச்சியூட்டும் உணர்வினை நம் உடலுக்குள் செலுத்தி, நமது அங்கங்களைப் பொலிவுறச் செய்யவேண்டும். சாதாரணமாக இருக்கும் பொழுது, எம்மைப் பாருங்கள். எமது முகத்தில் வித்தியாசமாக இருக்கும். அருளைப் பார்க்கும் பொழுது, வித்தியாசமான தோற்றங்கள் வரும்.

இது போன்று, நல் உணர்ச்சிகளால் முகம் விரிவடைவதும், மகிழ்ச்சியாவதும் போன்ற நிலைகள் பெறுகின்றது. உதாரணத்திற்கு, நீங்கள் ஞானத்தை எடுத்துப் பேசிப் பாருங்கள். அந்நேரத்தில், உங்களிடத்தில் மகிழ்ச்சியின் உணர்வு இருக்கும்.

அதே சமயம், ஒருவர் உங்களைத் தேடி வந்து, தம்முடைய கஷ்டத்தையெல்லாம் கூறுவார். நீங்கள் அது சமயம், ஞானத்தின் நிலை கொண்டு அவருக்கு அறிவுரை கூறுவீர்கள்.

ஆனால், இரண்டாவது தரம் தனது கஷ்டத்தைச் சொன்னால், என்ன., இது, இவ்வளவு தூரம் கூறியும் தனது கஷ்டத்தைத் தானே கூறிக் கொண்டிருக்கின்றார் என்று அப்பொழுதே உங்களுடைய முகம் மாறும்.

ஏனென்றால், அவர் சொன்ன வேதனையின் உணர்வு வலுப் பெறுகின்றது. உங்களுடைய ஞானம் இங்கே அடிபடுகின்றது. உணர்வை மாற்ற முடியவில்லை.
ஆனால், இந்நிலையை மாற்றி உங்களுக்குள் அருள் உணர்வைப் பெறவேண்டும். துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி, அவர் பெறவேண்டும், அவருக்கு, நல்ல காலம் வரவேண்டும், சிந்திக்கும் தன்மை, அவர் பெறவேண்டும், பொருளறிந்து செயல்படும் திறன், அவர் பெறவேண்டும், என்று எண்ணவேண்டும்.

அது சமயம், உங்களுடைய உயிர் என்ன செய்யும்? அருள் உணர்வை எடுத்து,  உங்கள் உடலில் உள்ள எல்லா அணுக்களுக்கும் பங்கிட்டு, தெளிந்த ஞானத்தை ஊட்டும் நிலையும், வழியறிந்து செயல்படும் பக்குவத்தையும் உங்களுக்குள் பெறச் செய்கின்றது.


நமக்கு ஆகாதவர் யாராவது இருந்தால், இவனால் தான் எனக்குத் தலைவலி என்பார்கள். அவர்கள் வந்தாலே, ஆகா வந்துவிட்டான், தலைவலியும் வந்துவிட்டது என்று கூறுவார்கள். இன்று நல்ல மன நிலையில் இருந்தேன், இவனைப் பார்த்தேன், எல்லாக் காரியமும் கெட்டு விட்டது என்று கூறுவார்கள். இவை எல்லாம் எதைக் காண்பிக்கின்றது? மனிதரின் வாழ்க்கையில், இது போன்ற நிலைகள் வருகின்றன.

தியான வழியில் உள்ளவர்கள், தலைவலியால் வருத்தப்படுபவர்களுக்கு மகரிஷிகளை எண்ணி, அவர் குணமடைய வேண்டும் என்று சொல்லிப் பாருங்கள். அவருக்குத் தலைவலி நீங்கும். அடுத்து ஒரு முறை, தலைவலி என்று சொல்ல வரும் பொழுது, உங்களை நினைத்து வந்தேன், தலைவலி போய்விட்டது என்று கூறுவார்கள். இதை உங்கள் அனுபவத்தில் பார்க்கலாம்.


ஏனென்றால், உணர்வின் எண்ணம் கொண்டு சுவாசித்த பின், நோய்களை நீக்கும் சக்தி வருகின்றது.
ஆனால், ஒருவர் வந்தாலே,
தனக்குத் தலைவலி வருவதாக எண்ணுபவரின்
உடல் பதட்டமடைகின்றது. தலை சுற்றுகின்றது,
சிந்திக்கும் தன்மையை இழக்கச் செய்கின்றது,
இது எதனால் வருகின்றது?

இது போன்று, ஒருவரை பார்த்தாலே தனக்குத் தலை சுற்றுகின்றது, தலை வலிக்கின்றது எனும் பொழுது,  ஈஸ்வரா.. என்று உயிரை எண்ணி, துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி அவர் பெறவேண்டும், அவர் நன்மை செயும் நிலை பெற வேண்டும் என்று எண்ணினால், அவருடைய உணர்வுகள் நமக்குள் வருவதில்லை. 

இவ்வாறு நமது குருநாதர், எமக்கு அனுபவ ரீதியாக, பல நிலைகளை உணர்த்தினார்.  நுகர்ந்த உணர்வை, உயிர் இயக்குகின்றது. உயிர் ஈசனாக இருக்கின்றது. 

மனிதர், தாம் உயர்ந்த ஞானத்தின் தன்மை பெற்று,
பிறவி இல்லா நிலை பெறுவதற்குதான், 
இத்தனை உபாயங்களையும் கொடுப்பது. 
இது அனைத்தும் நீங்கள் பெறுவதற்கு, எமது ஆசிகள்.

மனிதர்கள், விஞ்ஞான அறிவு கொண்டு ஒருவருக்குக் கண் இல்லையென்றால், மாற்றுக் கண்ணைப் பொருத்தி, கண் பார்வை கொடுக்கின்றனர். செவித் தன்மைக்கு, இப்படி ஒரு மாற்று ஏற்பாடு இல்லை என்றாலும், அவர்களுக்கு உணர்வின் உணர்ச்சிகளை, (சைகை மூலம்) தெரியும்படி கொண்டு வருகின்றார்கள். இருதயம் பழுதாகி விட்டால், பழுதான இருதயத்தை அகற்றிவிட்டு, செயற்கை இருதயம் பொருத்துகின்றனர்.

நோயாளியின் உடலிலும், மற்றவர் உடலிலும் உள்ள சில செல்களைக் கழித்து, பழுதான உறுப்பு போன்றே மோல்டு செய்யப்பட்டு, அந்த உணர்விற்குள் சேர்க்கப்ப்பட்டு, அதே போன்ற புது உறுப்புகளை உருவாக்குகின்றனர்.

இந்த உடலுக்கும், மற்ற உடலுக்கும் என்ன இருக்கிறதென்று ஆய்ந்து, உணர்வின் செல்களை உருவாக்கி, உறுப்புகளை எடுத்து இணைக்கின்றனர்.

இப்படி இணைத்தபின், இரத்தத்தில் வருவதைச் சமப்படுத்த வேண்டும். எதிர் நிலையானால், கழன்று கொள்ளுகின்றது. மாற்று இருதயம் பொருத்தினாலும், அல்லது மாற்றுச் சிறுநீரகம் பொருத்தினாலும், இதே தான். இரத்தம் சீராக இருக்க வேண்டும்.

இரத்தத்தை வடிகட்டிச் சுத்தப்படுத்துவதற்காக, சில மருந்துகளை டாக்டர்கள் கொடுப்பார்கள். கொடுக்கப்பட்ட மருந்துகளைச் சாப்பிட்டால்தான், இரத்தத்திற்கும், பொருத்தப்பட்ட உறுப்பிற்கும் பொருந்தி வரும். ஒரு நாளைக்கு மருந்து சாப்பிடவில்லை என்றால், பொருத்தப்பட்ட உறுப்பின் இயக்கம் தோற்றுவிடும்.

ஆகையால், இரண்டையும் சமப்படுத்திச் சீராக இருந்தாலும், ஒருவர் காய்ச்சலுடன் வருகின்றார். அவருடைய காய்ச்சலின் வீரியம் கண்டு, அதன் உணர்வை நுகர்ந்துவிட்டால், உடலில் கிருமிகளாகின்றது. அன்றைக்கு இவர்களுக்கு ஆபத்து. ஆபத்து என்று வந்துவிட்டால், அதற்கென்று மருந்துகளைச் சாப்பிட வேண்டும்.

அது சமயம், சாதாரண டாக்டரிடம் சென்றால், பொருத்தப்பட்ட உறுப்பு கழன்றுவிடும். இப்படியெல்லாம், விஞ்ஞானிகள், அதற்கென்று பருவத்தைச் பார்த்து செயல்படுத்துகின்றனர்.

ஆனால், இப்படி ஒவ்வொன்றையும் பார்த்துப் பார்த்துச் செய்தும், நாம் எத்தனை நாள் வாழுகின்றோம்?  சிறிது நாள் தான் வாழுகின்றோம். 

நமக்கு இப்படி ஆகிவிட்டதே, மருந்தையும் சுவையில்லா உணவையும்தான், சாப்பிட்டு வாழ்கின்றோம் என்ற வேதனை அதிகமாகின்றது. மக்கள் எல்லாம் சந்தோஷமாக இருக்கின்றார்கள், நம் காலம் இப்படியாகி விட்டதே என்று, நாம் நல்லவர்களாக இருந்தாலும், வேதனையின் உணர்வைத்தான் அதிகமாக்க முடிகின்றதே தவிர, மாற முடிகின்றதா?

ஆகவே, நாம் நமது உடலில் இருக்கும் காலத்தில்,
எதைச் சேர்க்க வேண்டும்?
உடல் நலக் குறைவாக இருந்தாலும்,
அருள் உணர்வை பெறவேண்டும்,
உணர்வின் தன்மை ஒளியின் சரீரம் பெறவேண்டும், என்று நம் உணர்வுகளை மாற்றினால், நாம் பிறவியில்லா நிலை அடைகின்றோம். இவையெல்லாம்,  எமக்குக் குருநாதர் காண்பித்த உணர்வின் உண்மைகள். 

இந்த அருள்ஞானத்தை, குருநாதர் காண்பித்த அருள் வழியில், உங்களுக்குள் பதிவு செய்கின்றோம். அருள்ஞான உணர்வை, உங்களுக்குள் இணைத்துப் பெருக்கும் பொழுது, உங்களுள் தீமைகளை அகற்றும் சக்தி விளைகின்றது.

குமாரபாளையத்தில், நாராயணசாமி என்பவர் இருந்தார். மேனேஜராக வேலை பார்த்துக் கொண்டிருந்தார். அவருடைய மகன் ஆஞ்சனேயர் மடத்தில், டிரைவராக வேலை பார்த்து வந்தார். அவர்களையும், அவர்களது குடும்பத்தினரையும், மாதேஸ்வரன் மலைக்கு யாம் அழைத்துச் சென்றோம்.

நாராயணசாமி மற்றும் அவர்களுடைய பாட்டி, குழந்தைகள் அனைவரையும் அழைத்துச் சென்றோம். போகும் வழியானது யானைக் காடு, குறுக்குப் பாதை என்று யானைக் காட்டின் வழியாக, அவர்களை அழைத்துச் சென்றோம்.

மலைப்பாதையில் சென்று கொண்டிருக்கும் பொழுது, எங்களுக்கு எதிர்த்தால் போன்று ஒரு புதரில், இரண்டு புலிகள் நின்று கொண்டிருந்தன. யாம் அழைத்து வந்தவர்கள், புலிகளைப் பார்க்கவில்லை.

அவர்கள் பார்த்தால், பயந்துவிடுவார்கள் என்று  கருதி, யாம் அவர்களுக்கு முன்னால் போய் நின்று கொண்டோம். யாம் அழைத்து வந்தவர்களில், 10 வயது, 12 வயது சிறுவர்களும் இருந்தனர். பின்னால், வயதானவர்கள் வந்து கொண்டிருந்தனர்.

யாம், அவர்கள் புலியைப் பார்க்காதவாறு, மறைந்து நின்று கொண்டு பிரார்த்தனை செய்தோம். எல்லோரையும் பார்த்துக் குறி வைத்துக் கொண்டிருந்த புலிகள், அவைகளுக்கு எதிரான உணர்வுகளைக் கண்டவுடன், இரண்டு புலிகளும் தாண்டிக் குதித்து ஓடின. எதையோ கண்டு பயந்ததைப் போன்று, விருட்டென்று ஓடி மறைந்தன.

புலிகள் ஓடுவதைக் கண்டு, யாம் அழைத்து வந்தவர்கள் வெகுவாகப் பயந்து போனார்கள். அதன் பிறகு, அங்கிருந்து அவர்களை அழைத்துச் சென்றோம். அப்பொழுதெல்லாம், அவர்களுக்குக் காட்சிகள் கிடைக்கும்படிச் செய்தோம்.

மாதேஸ்வரன் மலைக்கு, அவர்களைப் பழக்கத்திற்காகக் கூட்டிச் சென்றோம். இயற்கை எப்படிச் செயல்படுகிறது? என்ற நிலைகளை யாம் அறிவதற்காக வேண்டி,  குருநாதர் எம்மை எல்லா இடங்களுக்கும் செல்லச் செய்து,  பலரைச் சந்திக்கும்படிச் செய்தார்.

காட்டிற்குள்ளும், மனித வாழ்க்கையிலும் என்ன இருக்கின்றது என்பதை, தெரிந்துதான் சொல்கின்றோம். ஆனால், உங்களுக்கு இதைச் சொல்கின்றோம் என்றால், சாமி, கதை சொல்வதாக எண்ணக் கூடாது.
இயற்கை எப்படி இயங்குகின்றது?
வாழ்க்கையில் வரக்கூடிய நிலைகள் என்ன செய்கின்றது? என்பதை,
குருநாதர் எம்மை அனுபவரீதியாக உணரும்படி செய்தார்.

காட்டிற்குள் சென்றால், மிருகங்கள் கட்டுப்படும். மனிதர்களிடம் பழகும் பொழுது, அவர்களிடம் இருந்து தப்பிப்பதே கடினம் தான்.

அதனால், நாம் இன்று பெரும் காட்டினுள் வாழ்கின்றோம். இங்கே,  நமது உணர்வுகள் கொண்டுதான், நாம் எதையும் மாற்றி அமைக்க வேண்டும். 

ஆகையால், ஒருவர் தவறு செய்கிறார் என்று எண்ணும் பொழுது, நமக்குள் தவறின் உணர்வுகளே விளைகின்றது. அகவே, ஒருவரிடம் தவறு என்று உணர்ந்த அடுத்த நிமிடமே, 
அவருடைய தவறான உணர்வு நம்மிடம் இல்லாதபடி,
துருவ நட்சத்திரத்தின் உணர்வை எடுத்து,
நமக்குள் சுத்தப்படுத்திக் கொள்ள வேண்டும். 
இதனால், அவருடைய உணர்வு நம்மை தாக்குவதில்லை.

இப்படி, துருவ நட்சத்திரத்தின் உணர்வை தம்முள் பெருக்கி, தீமைகள் வராது காக்கும் நிலையாக, உணர்வை ஒளியாக மாற்றும் நிலையாக, ஞானிகள் காண்பித்த அருள்வழியில் வாழ்ந்து வரும் அன்பர்கள் அனைவரும், தம்முள் அறியாது சேர்ந்த சாப வினைகளை, பாவ வினைகளை, தீய வினைகளை நீக்கி, அருள் ஞானிகளின் அருள் சக்தி பெற்று, உங்களுடைய பார்வையில் மற்றவர்களுடைய தீமைகளை நீக்கிடும், நோய் நீக்கிடும் அருள் சக்தி பெற்று, நீங்கள் இவ்வாழ்க்கையில், பெருவீடு பெரு நிலை பெறும் நிலையாக, பிறவியில்லா நிலையினைப் பெறும் நிலையாக, பேரின்பப் பெருவாழ்வாக வாழ்ந்து வளர்ந்திட, எமது அருள் ஆசிகள்.

(டிசம்பர் 2000)
தசரதச் சக்கரவர்த்தி என்பது எது?  பத்தாவது நிலையை அடையக்கூடிய, மனித உடலை உருவாக்கிய உயிருக்குப் பெயர்தான்,  தசரதச் சக்கரவர்த்தி.  

உதாரணமாக, தசரதச் சக்கரவர்த்தி தாம், மூன்று நாட்டையும் கவர்ந்து கொள்ள வேண்டும் என்ற உணர்வைக் கவர்ந்து கொள்கினறார். இந்த சிந்தனை உருவாகின்றது. அதன் வழிப்படி, அவர் திட்டமிடுகின்றார்.

உணர்வின் தன்மையினை, அணுவாகப் பெருக்கிக் கொள்கின்றார். அதன் ஞானம் வருகின்றது. அதன் வழி வியூகத்தை வகுத்து, இந்த நாட்டை, எப்படி ஆட்சி புரிய வேண்டும், என்ற உணர்வின் போர் முறைக்குச் செல்கின்றார்.

எதன் சக்தியைத் தன்னுள் இணைத்துக் கொண்டாரோ, அதன் உணர்வின் தன்மை கொண்டு, தன்னுள் இணைந்த சக்தியை இயக்கச் செய்து, மூன்று நாட்டையும் வெல்கின்றார்.

அப்படி மூன்று நாட்டையும் வென்ற பின்,
வெற்றி பெற்ற உணர்வு தன்னுள் இருப்பதனால்,
நாம் புரிந்து கொள்வதற்காக,
என்னை வெற்றி பெறச் செய்தாய்,
உனக்கு என்ன வரம் வேண்டும்?
இரண்டு வரத்தைக் கேள்,
என்று, தசரதச் சக்கரவர்த்தி தனது மனைவி கைகேயியிடம் கேட்பதாக, இராமாயணக் காவியம் கூறுகின்றது.

என்ன வரம் வேண்டும்? என்று தசரதச் சக்கரவர்த்தி கேட்கும்பொழுது, நான் சமயம் வரும் பொழுது கேட்கின்றேன் என்று கைகேயியிடமிருந்து பதில் வருகின்றது. ஒரு வித்தை நிலத்தில் ஊன்றினால், உடனே விளைந்து விடுமா? செடி தோன்றி,  வளர்ந்து,  பூ பூத்து,  அதன்பின் தான் காய் காய்க்கும். 


ஆகவே, தசரதச் சக்கரவர்த்தியின் உடலுக்குள், தான் வெற்றி பெற்றதற்கான உணர்வின் தன்மை வரப்படும் பொழுது, அவருடைய உடலில், இதன் உணர்வின் தன்மை முழுமை அடைகின்றது.

உதாரணமாக நமது உடலில் கோபம் என்ற உணர்வின் தன்மையை உருவாக்கி விட்டால், கார உணர்ச்சி கொண்ட அணுவாக உருவாகின்றது.  அணுத் தன்மை அடைந்தபின், அது தன் சக்தியாக இயக்கிக் கொண்டு, தன் இனத்தின் தன்மையைப் பெருக்குகின்றது. 

ஒரு வித்தை நிலத்தில் ஊன்றினால், அது செடியாகி, தன் வித்துகளை உருவாக்குகின்றதோ,  இதைப் போன்று,
எடுத்துக் கொண்ட உணர்வின் சக்தி கொண்டு,
எண்ணிய உணர்வு, இவருடைய உடலுக்குள் வந்து,
தன் இனமான, குழந்தைகளாக உருவாக்கி விடுகின்றது.

பிறரை, வேதனைப்படுத்தி செயல்பட்டது தான் கைகேயி. ஆகவே, பிறரைத் துன்புறுத்தும் உணர்வின் தன்மை வரப்படும் பொழுது, நாளடைவில் அதன் உணர்வின் எண்ணங்கள் அதிகரித்து,  அதிகரித்துத்  தன் உணர்வின் தன்மை வலுவாகின்றது.

இராமனுக்குப் பட்டாபிஷேகம் செய்யும் தருணம் வருகின்றது. எல்லோரும் அதற்கான காரியங்களைச் செயல்படுத்துகின்றனர். ஆனால், கைகேயி இராமனுக்கு பட்டம் சூட்டிவிட்டால், தான் வேலைக்காரியாகி விடுவேன் என்று எண்ணுகின்றார். அதாவது,
மற்றொன்றின் மீது போர் தன்மை கொண்டு,
வெற்றி பெறச் செய்த உணர்வுகளின்,
உணர்ச்சியின் தன்மை
இந்த உடலுக்குள் நின்று, எப்படிச் செயல்படுகின்றது? என்ற நிலையைத்தான், தசரத சக்கரவர்த்தியின் உடலில், பத்தாவது நிலையை அடையப்படும் பொழுது, இவருடைய உடலில் இருந்த உணர்வின் உணர்ச்சிகள், எப்படிச் செயல்படுகின்றது என்பதைத் தெளிவாகக் காண்பிக்கின்றார்கள்.

அது சமயம், தசரதச் சக்கரவர்த்தி இராமனுக்குப் பட்டாபிஷேகம் செய்வதற்குண்டான எல்லா ஏற்பாடுகளையும், செய்து விடுகின்றார். இதுதான் தருணம் என்று, கைகேயி தசரதச் சக்கரவர்த்தியிடம், போர் காலத்தில் இரண்டு வரங்கள் தருவதாகச் சொன்னீர்கள் அல்லவா? அந்த இரண்டு வரங்களை இப்பொழுது தருவீர்களா என்று கேட்கின்றார்.

கைகேயி தன் மகனுக்குப் பட்டம் சூட்ட வேண்டும் என்று எண்ணுகின்றார். தன் மகன் என்றால்,
மற்ற போர் முறைகளில் வென்ற உணர்வுகள். 
அது இவ்வுடலில் என்ன செய்யும்? 
தனது கை ஓங்கி இருக்க வேண்டும், என்ற நிலையைச் செய்யும். 

உணர்வின் உணர்ச்சிகள் எண்ணமாகி, எதன் உணர்ச்சிகள் உடலில்  உருவாகின்றதோ, அதன் தொடர் கொண்டு, நமது உடலில் எத்தனை போர் முறைகள் நடக்கின்றது?

தீமையின் உணர்வுகள், நல்ல குங்களைச் செயலற்றதாக மாற்றுகின்றது என்பதைத்  தெளிவாக்குகின்றது  இராமாயணம்.

கைகேயி, வரங்களைத் தாருங்கள் என்று கேட்டபின், தசரதச் சக்கரவர்த்தி, தாரளமாகக் கேள், உனக்கில்லாததா? என்று சொல்லுகின்றார். தொடர்ந்து கைகேயி கேட்ட வரங்கள், இராமன் காட்டிற்குச் செல்லவேண்டும், பரதனுக்குப் பட்டம் சூட்ட வேண்டும் என்பது.

ஆகவே, ன்றைக்குப் போர் முறைகளில் வெற்றி பெறக் காரணமாக இருந்த நிலைகளால், தன் உடலுக்குள் நல்லவனைத் தேர்ந்தெடுக்க முடியாமல் தவிக்கின்றார் தசரதச் சக்கரவர்த்தி.
பத்தாவது நிலை அடையக் கூடியவர்,
மற்றதை வேதனைப்படுத்தி,
ஜெயித்துக் கொண்டபின்,
தான் நிகரில்லாதவன், என்ற நிலைகளை எண்ணினாலும், உடலுக்குள் தீய வினைகள் வந்து, நல்லதைச் செய்யவிடாதபடி எப்படித் தடுக்கின்றது? என்பதை இங்கே உணர்த்துகின்றது, இராமாயணக் காவியம்.

உதாரணமாக, நீங்கள் நன்மை செய்ய வேண்டும் என்று எண்ணினாலும், தீய உணர்வுகள், உங்கள் உடலில் எப்படி நோயை உருவாக்குகின்றது என்பதனையும், பத்தாவது நிலையை அடையும் உயிர், எல்லாவற்றையும் ஆட்சி புரியும் நிலை வந்தாலும், நமக்குள் தீய உணர்வுகள் எப்படி இயக்குகின்றது? என்ற நிலையையும், இராமாயணக் காவியம் தெளிவாக உணர்த்துகின்றது.

சட்டப்படி, நான் முதலில், மூத்தவனுக்குப் பட்டம் சூட்டவேண்டும் என்று எண்ணினேன். நீ இடைமறித்து பரதனுக்குப் பட்டம் சூட்ட எண்ணுகின்றாய், பரவாயில்லை. ஆனால், நீ நல்லவனைக் காட்டிற்கு அனுப்பச் சொல்லுகின்றாயே? இது உனக்குத் தகுமா? என்று கைகேயியிடம் தசரதச் சக்கரவர்த்தி கேட்கின்றார்.

உடனே கைகேயி, சட்டப்படி மூத்தவன் இருக்கும் பொழுது, இளையவனுக்குப் பட்டம் சூட்ட முடியாது, ஆகவே, இராமன் துறவறம் பூண்டால்தான், பரதனுக்குப் பட்டம் சூட்ட முடியும். அதனால்தான் சொல்கின்றேன், பரதனுக்குப் பட்டம் சூட்டினால்தான், நான் அரசியாக இருக்க முடியும், இல்லையென்றால், வேலைக்காரியாகத்தான் இருக்க முடியும்.

போர்க்காலத்தில் நீங்கள் வெற்றி பெறுவதற்கு உதவி செய்தேனே, எதற்கு? நான் வேலைக்காரியாக இருப்பதற்காகவா? என்பது போன்ற வினாக்களை கைகேயி எழுப்புகின்றார்.

அதாவது,  விஷ உணர்வுகளை எடுத்துக் கொண்டால் என்னவாகும்? என்பது இங்கே உணர்த்தப்படுகின்றது.

இதனால், வேதனை உணர்வை நுகர்ந்த தசரதச் சக்கரவர்த்தியின் நிலை என்னவென்றால், இப்படி ஆகிவிட்டதே, நல்லவனுக்கு ஒன்றும் செய்ய முடியவில்லையே என்று எண்ணுகின்றார்.

எத்தனை பேரை வேதனைப்படுத்தி சாம்ராஜ்யத்தைப் பிடித்தாரோ, அதே வேதனை அவருக்குள் எப்படி வருகின்றது?

போர் முறைகளில் வெற்றி பெறும் பொழுது, இரசித்தார். ஆனால், உடலில் ஆட்சி புரியும் தன்மை வரப்படும் பொழுது, நல்லவைகளை ஒதுக்கி, தீமைகளை எப்படி வளர்க்கின்றது என்பதை, இராமாயணத்தில் தெளிவாகக் கூறுகின்றார்கள்.

ஆகவே, பத்தாவது நிலையை அடையக் கூடிய தகுதி பெற்ற நாம், இந்த வாழ்க்கையில், தீமைகளை எப்பொழுதெல்லாம் காணுகின்றோமோ, உடனடியாக, துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை நமக்குள் சேர்த்து, அந்தத் தீய வினைகள் நமக்குள் வளராமல் தடுக்க வேண்டும்,            

இந்தப் பிறவியில், பிறவி இல்லா நிலை அடையும், அருள் வாழ்க்கை வாழ்வோம். அந்த மகரிஷிகள் சென்ற எல்லையை அடைவோம்.  எமது அருளாசிகள்.