ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

January 11, 2012

உயிரே கடவுள் – மெய்ஞான மாத இதழ் -- 2001


உயிரே கடவுள் – மெய்ஞான மாத இதழ்  
(மார்ச் 2001)
தீய உணர்வுகளின் தன்மைகளைத் தடைப்படுத்தும் பொழுது, நம்மிடத்தில் சிந்தித்துச் செயல்படும் தன்மை வருகின்றது. அப்படிச் சிந்திக்கும் தன்மை இல்லையென்றால், பிழை என்ற நிலை உருவாகும். பிழை என்ற நிலையில், நண்பர்களுக்குள் சிறிது குறையாகி விட்டதென்றால், பிறகு நீங்கள் குறையத்தான் வளர்க்க முடியுமே தவிர, அங்கே நல் உணர்வை எடுக்க முடியாது.

நண்பர்களுக்குள், தவறு என்று யார் செய்திருந்தாலும் சந்தர்ப்பங்கள் நம்மை எப்படி இயக்குகின்றது, என்ற நிலையை நாம் தெரிந்து கொள்ள வேண்டும். சந்தர்ப்பங்களால், நம்மைப் பிறிதொரு தீமை இயக்கி விடாதபடி, நாம் நம்மை முதலில் பாதுகாக்கும்  நிலை பெறவேண்டும்.

எப்படிப் பாதுகாக்க வேண்டுமென்றால், ஈஸ்வரா”…. என்று உயிரை எண்ணி, துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியின் உணர்வினை எண்ணி நுகர்ந்து, தீமைகளைத் தடைப்படுத்துதல் வேண்டும்.

யாம், நிறைய அருள் உபதேசங்களை உங்களுக்குக் கொடுத்திருக்கின்றோம்.  அருள் உணர்வுகளை, எப்படி உங்களிடத்தில் இயக்கமாக்க வேண்டும்? எப்படித் தீமைகளைத் தடுக்க வேண்டும்? என்று யாம் அடிக்கடி உங்களுக்கு உபதேசித்திருக்கின்றோம்.

சாமி சொன்னார்கள், மறந்துவிட்டது என்று இருக்கக்கூடாது.  அருள் உணர்வுகளை, உங்களுக்குள் ஆழமாகப் பதிவு செய்து கொள்ள வேண்டும். 

இந்த விளக்கங்களை நாம் தெரிந்து கொண்டால், ஒவ்வொரு நிமிடமும் தீமைகள் வராதபடி தடுக்கலாம்.

நாம் எதை எண்ணுகின்றோமோ, அவைகளை நம்முள் சேர்க்கின்றோம். நம்மிடம் ஒருவர் கஷ்டத்தைக் கூறும் பொழுது, அதை  நாம் உற்றுக் கேட்கும் பொழுது, அவ்வுணர்வுகள் நம்மில் பதிவாகின்றது.
ஆனால் பிறர், தான் சொல்லும் கஷ்டத்தைக் கேட்கவில்லை என்றால், என்னவோ பெரிய பிகு பண்ணுகின்றான் பார், என்று நாம் சொல்லுகிறோம், காது கூடக் கேட்க மாட்டேன் என்கிறது என்று நம்மைப் பற்றிக் குறை கூற ஆரம்பித்து விடுவார்கள்.

ஆகையினால்,  ஈஸ்வரா என்று உயிரை எண்ணி, வேதனையின் உணர்வுகளைக் கேட்டால், 
அதனைச் செவியுடன் நிறுத்திக் கொண்டு,
உள்ளுக்கே கவரும் தன்மையாக எடுக்கக் கூடாது. 
நம்முடைய எண்ணங்கள், துருவ நட்சத்திரத்தின்பால் சேர்க்கப்படும் பொழுது, பிறர் சொல்லும் வேதனை உணர்வுகளை, தன்னுள்ளே கவராது.

இப்பொழுது, யாம் உங்களுக்கு மத்தியில் பேசிக் கொண்டு இருக்கிறோம் என்று வைத்துக் கொள்ளுங்கள். அது சமயம், நீங்கள் நம்முடைய வீட்டில் செய்யவேண்டிய வேலை என்ன, வீட்டில் மகன் என்ன செய்து கொண்டிருக்கின்றானோ, ஏதாவது செய்து விட்டால் என்னவாகும்? என்று எண்ணிக் கொண்டிருப்பீர்கள் என்றால், யாம் சொல்லும் உணர்வுகள் உங்களிடத்தில் பதிவாகாது.

ஆகையால், ஒருவர் நம்மிடம், தீமை தரும் உணர்வுகளையோ, வேதனை தரும் உணர்வுகளையோ, சொல்வாரே என்றால், அது சமயம், துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளை நம்முள் இணைப்போமேயானால், அத்தீய உணர்வுகளை நம்முள் புகாது தடுக்கலாம்.

அவர்கள் சொல்லும் உணர்வுகள் செவிகளில் கேட்கும்,  ஆனால், ஈர்க்காது.  இதனை ஒரு பயிற்சிக்குக் கொண்டு வரவேண்டும்.

இன்று,  எத்தனையோ பேர் எம்மிடம் கஷ்டங்களை நிவர்த்திக்க வருகின்றார்கள், அவர்களுடைய வேதனைகளைச் சொல்கின்றார்கள்.  யாம் அதை ஈர்ப்பதில்லை.

யாம்,  எம்மைத் துருவ  நட்சத்திரத்தின் உணர்வுகளுக்குள் இணைத்துக் கொள்வதால்,  அவர்கள் என்ன சொன்னாலும், கேட்டுக் கொள்வோம்.

அதன் பிறகு, யாம் கோபமாக என்ன சொல்வோம்? போங்கள், உங்களுக்கு ஒன்றுமில்லை போங்கள்,  என்று சொல்வோம்.

 அப்படி யாம் சொன்னால், சாமி திடீரென்று நம்மைக் கோபிக்கின்றாரே என்று எண்ணினால் என்னவாகும். ஏனென்றால்,
அவர்கள் சொல்லும் வேதனையின் உணர்ச்சிகளை
உடனே தாங்கி,
மடக்கி அனுப்புகின்றோம்.

நீங்கள் சாமி நம்மைக் கோபித்துக் கொண்டார் என்று சொன்னால், யாம் என்ன பண்ணுவது. அப்படியானால், அவர்கள் சொல்லும் கஷ்டத்தை யாம் ஈர்க்க வேண்டுமா? யாம் உங்கள் கஷ்டத்தை நீக்குவதற்குத்தான், அப்படிச் சொல்கின்றோம்.

மற்றவர்கள் அனுபவிக்கும் கஷ்டத்தையெல்லாம், நீங்கள் உற்றுக் கேட்பீர்கள் என்றால் என்னவாகும்? அந்த உணர்வுகள் உங்களுக்குள் இந்திரீகமாக மாறும். ஆகையால், இந்தத் தீய உணர்வுகளை நீங்கள், உங்களிடத்தில் வராது தடைப்படுத்தக் கற்றுக் கொள்ளவெண்டும்.

இவ்வாறு, தீமைகள் தமக்குள் வராது தடைப்படுத்த, தியானத்தைச் சீராகக் கடைப்பிடிக்கும் அன்பர்கள் அனைவருக்கும், எமது அருள் ஆசிகள்.
  
ஆரம்பத்தில் யாம், அநேகம் பேருக்குப் பல நிலைகளை சொல்லிக் கொடுத்தோம். ஆனால் அவர்கள், சொல்லிக் கொடுத்ததின் நிலைகளைத் தோல்வி அடையச் செய்து விட்டனர். மனிதரின் இயக்கம் எப்படி இருக்கின்றது?, அதை நாம் எப்படிக் கொண்டுவர வேண்டும்? என்று உணர்த்துகின்றோம்.

ஆனால், பெரும் பகுதியானவர்கள் என்ன செய்து விட்டார்கள்?  நாளை என்னவோ நடக்கட்டும். இன்று, நாம் தொழிலில் முன்னேற வேண்டும்.

தான் ஒன்றைச் சொன்னால், அவ்வார்த்தையையும், தன்னையும் மற்றவர்கள் மதிக்கும்படி செய்ய வேண்டும் என்று, இப்படித்தான், தலைகீழாகக் கொண்டு போகிறார்கள்.

அருளைப் பெருக்கி, இருளைப் போக்கும் தன்மையை யாம் எவ்வளவுதான் கொடுத்தாலும் எடுபட மாட்டேன் என்கிறது.

ஆகையால், யாம் மற்ற நிலைகளை நிறுத்தி விட்டு,  இப்பொழுது தியானவழி அன்பர்களை, துருவ நட்சத்திரத்துடன் ஒன்றச் செய்யும் நிலைக்குக் கொண்டு வருகின்றோம். 

அந்த உணர்வோடு கொண்டு போகப்படும் பொழுது, அவ்வுணர்வின் ஒளிக்கற்றைகளை,  உங்களில் சேர்த்துப் பழகுங்கள். ஆனால், சாதாரண மின்னல் வருகின்றதே, அதை நீங்கள் பார்க்கக் கூடாது.

மின்கதிர்களை எண்ணிச் சுவாசிக்கப்படும் பொழுது, அதன் உணர்வின் தன்மையினை உங்களிடத்தில், ஒவ்வொரு அணுவிலும் சேர்க்க உதவும். 

நாம் நுகர்ந்த உணர்வுகள் இரத்தத்தில் கலந்து, மற்ற அணுக்களில் சேர்கின்றது. இவையெல்லாம், குரு தன்மையால் வருவது.

சாமி (ஞானகுரு) சொன்னார், இதையெல்லாம் பெறவேண்டும் என்று எண்ணப்படும் பொழுது,  நீங்கள் எண்ணிய ஆற்றல் பெறுவதற்கு, உறுதுணையாக இருக்கும். 

நான் தனித்தன்மையில் செல்வேன் என்று எண்ணினால் முடியாது.
குரு இல்லாத வித்தை எதுவுமே வித்தையாகாது. ஆகையால்,
குருநாதர் சொன்னார் என்ற நிலையில்,
ஒன்றை இணைத்துப் பார்க்கும் பொழுது, தனக்குள் உருவாகும்.

ஆகவே, இதன் வழியில்தான் நாம் அறிய முடியும். அப்படியில்லாமல், நமது எண்ணங்களை பலவீனமடையச் செய்தால்,  அந்த உணர்வின் அணு, உங்களை திசை திருப்பிவிடும். 

ஏனென்றால், நாம் இம்மனித உடலுக்குப்பின், பெறவேண்டியது எது? என்பதை உங்கள் எல்லோருக்கும், தெளிவாக்கும் தன்மைக்குத்தான் கொண்டு போகின்றோம்.

இன்று மனிதருடைய ஆசைகள் எப்படி இருக்கின்றது? இன்றைக்கு செல்வத்தைச் சம்பாதித்து விடலாம், செல்வத்தைத் தேடலாம் என்ற ஆசைகளில்தான் இருக்கின்றது.

ஆனால், இந்த உடலுக்குச் செல்வம் தேவை என்று, யாம் உணர்ந்து தான் இருக்கின்றோம். நீங்கள் செல்வத்தைத் தேடிப் போகின்றீர்கள் என்றால், அவ்வழியில், உங்களை முறைப்படுத்திச் சென்றால், செல்வம் தானாக உங்களைத் தேடி வரும்.

நீங்கள் வேண்டாம் என்று சொன்னாலும், செல்வம் தன்னாலே தேடி வரும், அமைதியும் கிடைக்கும், சொல்லும் நன்றாக இருக்கும், கேட்போரிடத்தில் தீய உணர்வுகளை நீக்கும்.

இப்பொழுது, நாமே தபோவனத்துக்குச் செல்வம் வேண்டும் என்று தேடிப் போய்க் கொண்டிருந்தால், இவ்வளவு பணம் வராது, வரும். ஆனால், கூடவே சங்கடமும் சேர்த்து வரும். அப்புறம், குழப்பம் தான் வரும்.

ஆகையினால், நாம் செல்வத்தை எண்ணுவது முக்கியமல்ல.  அருள் செல்வத்தை எல்லோரும் பெறவேண்டும் என்று என்ணும் பொழுது, அந்த அருள் செல்வம் தன்னாலே வரும்.  ஆரம்பத்திலிருந்து, யாம் இதைத் தான் செய்து வருகின்றோம்.

ஆக, அருளைப் பெருக்கும் பொழுது, இருள் நீங்குகின்றது. அப்பொழுது, பொருள் தன்னாலே சேரும். 

எதன் நிலையில் எப்படிச் செயல்படுத்த வேண்டும்? என்பதற்குத்தான் இவைகளை உங்களுக்குத் தெளிவாகக் கூறுவது.

ஒவ்வொரு முறையும், நாம் பிறிதொரு தீமைகளைப் பார்க்க நேர்ந்தாலும், எண்ணினாலும், உடனே குரு கொடுத்த அருள் உணர்வின் துணை கொண்டு, துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியின் உணர்வை எடுத்து, பிற தீய உணர்வுகள் தம்மிடத்தில் வராது தடைப்படுத்த வேண்டும்.

அவ்வாறு, தீமைகள் தம்முள் சேராது தடுக்கும் நிலையாக, துருவ நட்சத்திரத்தின் அருள் உணர்வுகளைச் சேர்க்கும் அன்பர்கள் அனைவருக்கும்,  எமது அருள் ஆசிகள்.

எமக்கு எத்தனை சோதனைகள் வந்தாலும், குருநாதர் எம்மைக் காக்கும் நிலை உண்டு. எதன் நிலையிலும், எம்மைக் காத்துக் கொண்டுதான் வரும். ஆனாலும், எமது சிறு வயதில் செய்த தவறின் உணர்வுகள், எமது உடலில் உண்டு. சின்னஞ்சிறு வயதில், குருவியைக் கயிற்றில் கட்டி, எரியும் நெருப்பில் காண்பித்து, அக்குருவியை எரியச் செய்திருக்கின்றோம்.

குருவியைக் கொன்றாயல்லவா, அதனின் அணுக்கள் உனக்குள் இருக்கும். அதை அடக்குவதற்கு என்ன செய்யவேண்டும்? என்று குருநாதர் சொன்னார்.

சிறிய வயதில், அறியாது செய்த உணர்வுகள் என்றாலும்கூட, அந்த உயிரினங்கள் படும் வேதனையை இரசித்திருக்கின்றோம். ஆனால், அந்தக் குருவி அனுபவிக்கும் வேதனைகள் வரப்படும் பொழுது, இதெல்லாம் எங்கேயும் போகாது.

ஆனால், அதனை உடனடியாகக் கொன்றிருந்தால் வேறு. சிறுகச் சிறுக வேதனை அடையச் செய்து, அதிலிருந்து வரும் வேதனையின் உணர்வை நுகரப்படும் பொழுது, வேதனைகள், நமக்கும் வந்துதான் தீரும்.

இதெல்லாம் எமக்குத் தெரியாது. எமது சின்ன வயதில் நடந்ததையெல்லாம், குருநாதர் எனக்குச் சொல்லிக் காண்பித்தார்.

சிறு வயதாக இருந்தாலும் கூட, நாம் அறியாது தவறுகள் செய்தாலும், நம்மிடத்தில் உள்ள காந்தம், அவ்வுணர்வுகளை ஈர்த்து, நம்மிடத்தில் அணுவாக்கி விடுகின்றது. 

அணுவாகி விட்டால், அதன் தன்மையாக மாறும். இது போன்ற சில உணர்வுகள், நமக்குள் உணடு. 

அதன் வளர்ச்சி வரப்படும் பொழுது, அந்த அணுக்களுக்குச் சாப்பாடு தேவை. அந்த உணர்ச்சிகள் உந்தும் பொழுது, கண் வழி நுகர்கின்றோம். அந்த உணர்ச்சியால், நம்மை அறியாமலே, தவறுகள் செய்யும் நிலை வரும்.

இப்பொழுது நல்ல மனிதர்களாக, பெரியவர்களாக இருப்பார்கள்.
சின்னப் பிள்ளையாக இருக்கும் பொழுது,
செய்த சேஷ்டைகளினால் பதிவான உணர்வுகள்,
இப்பொழுது, அது தன் உணர்ச்சிகளை அவர்களிடத்தில் உந்திக் கொண்டிருக்கும்.

இன்று பூமியில், விஷச் செடிகள் அதிகமாக வளர்கின்றன. மழை இல்லை என்றால், அவை பட்டுப்போகின்றன. மழை பெய்தால், அவைகள் துளிர்த்துவிடுகின்றன.

நமது உடலும், ஒரு நிலத்தைப் போன்றதுதான். எதை உற்றுப் பார்க்கின்றோமோ, அது,  ஊழ்வினை என்ற வித்தாக நம்மிடத்தில் பதிவாகின்றது.

பின், அதன் தொடராக, அதன் உணர்வை நுகர்ந்து உயிரிலே பட்டு அறியச் செய்து, இரத்தத்தில் கலந்து, அணுக்களாகின்றன. இப்படி மனிதரான நம்மிடத்தில்,  இதன் உணர்வுகள் அதிகமாக வளரும்.

ஆகையினால், இதன் உணர்வுகளை அதிகமாகச் சேர்த்துச் சேர்த்துநம் உடலுக்குள் மகாபாரதப் போர் நடக்கத் தொடங்கி விடுகின்றது. பெரியவர்கள் சில பேர், என்னுடைய எண்ணம் அப்படிப் போகின்றது, இப்படிப் போகின்றது,  தடுக்க முடியவில்லை என்று சொல்வார்கள்.

தடுக்கத் தெரிந்தவர்கள் தடுத்துக் கொள்கின்றார்கள். தடுக்க முடியாதவர்கள் அதில் சிக்குண்டு, தீய அணுக்களைத் தம்முள் வளர்த்துக் கொள்கின்றார்கள்.

என்னால் முடியவில்லை. முயற்சி செய்கிறேன், ஆனாலும் முடியவில்லை என்று சொல்லுகின்றார்கள். ஆக, அந்த உணர்வின் அணுக்கள் தானாக வேலை செய்யும். அதை அடக்குவதற்கு ஒரே சக்தி,  துருவ நட்சத்திரம்.

எப்பொழுது, நாம் துருவ நட்சத்திரத்தின் பேரருள் உணர்வின் தன்மையை நுகர்ந்து, தீமைகளை அடக்கத் தவறுகின்றோமோ, அது (அந்த தீமை செய்யும் உணர்வுகள்), நம்முடைய நல்ல குணங்களை, நிச்சயம் அடக்கியே தீரும்.

ஆக,  நல்ல குணங்களைப் பாதுகாக்க வேண்டும் ன்றால்,  துருவ நட்சத்திரத்தின் உணர்வை, நாம் நுகர்ந்தே ஆகவேண்டும்.

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியின் உணர்வை நாம் நமக்குள் வலிமையாக சேர்த்து, நமது ஆன்மாவை தூய்மையாக்க வேண்டும்.

ஆக, நாம் அடிக்கடி, நமக்குள் துருவ நட்சத்திரத்தின் உணர்வை சேர்த்துக் கொண்டே வந்தால், அந்த உணர்வின் வலு நமக்கு சேரும்.

துருவ நட்சத்திரத்தின் பேரருள் உணர்வுகள் நமக்குள் அதிகமானால், நாளடைவில் நமக்குள் முழுமை அடைந்தால், நாம் இந்த உடலுக்கு பின் பிறவியில்லா நிலையாக, இந்த உயிர் எப்படி ஒளியானதோ, இதைப் போன்று,  நாம் சேர்த்துக் கொண்ட உணர்வின் தன்மையும், ஒளியாக மாறுகின்றது.

பிறவியில்லா நிலை என்ற, அழியா ஒளிச்சரீர வாழ்க்கையைப் பெறும் நிலையாக, அருள் ஞானிகளின் அருள் ஞான வழியில், தம்முள் பேரருள் பேரொளியின் உணர்வுகளை பெருக்கி வரும் அன்பர்கள் அனைவரும், தங்கள் வாழ்க்கையில்
அறியாமை நீங்கி,
துன்பங்கள் நீங்கி,
நோய்கள் நீங்கி,
நஞ்சுகள் நீங்கி,
பேரருள் பேரொளி பெற்று, இப்பிறவியில் பிறவியில்லா நிலை பெறும் நிலையாக, அருள் ஞானச் சுடராக, பேரின்பப் பெருவாழ்வாக வாழ்ந்து வளர்ந்திட,  எமது அருள் ஆசிகள்.
(மே 2001)
இன்று நமது பூமியில், மனிதர்கள் உருவாகி பல நிலைகள் பெற்றாலும், பல நகரங்களை உருவாக்கினாலும், பூமியில் பூகம்பங்கள் ஏற்பட்டு, மனிதர்களால் உருவாக்கப்பட்ட பல நகரங்கள் பூமிக்குள் புதைபட்டு விட்டன. இந்த நகரங்களுக்கு மேல், இரண்டடுக்கு, மூன்றடுக்கு கூட பூமிக்கு உள்ளே சென்றுவிட்டன.

பூகம்ப நிலைகளால், சிந்து நதியின் கரையின் ஓரங்களில் உருவான நகரங்களான, சிந்து மாகாணங்களில் ஒன்று, முதல் பூகம்பத்தில் உள்ளே சென்று விட்டது. இரண்டாவது பூகம்பத்தால், இன்னொரு நகரம் பூமியின் உள்ளே சென்றுவிட்டது. மூன்றாவது பூகம்பத்தால், மற்றொரு நகரமும் உள்ளே சென்றுள்ளது.

இதைப் போன்று, நகரங்கள் உள்ளே செல்லும் பொழுது, அழுத்தம் அதிகரித்து, கடல் நீர் பொங்கி நில அரிப்பு ஏற்பட்டு, அங்கே ஒரு மேடாகவும் மாறிவீட்டன. நமது ஊர்களிலும் பூமிக்கடியில் சில நகரங்கள், சில ஊர்கள் புதைந்துள்ளன. கடல் அலைகள் பெருகப்படும் பொழுது, நகரங்கள் கடல் நீரால் மூடப்பட்டு விடுகின்றன.

இதைப் போன்று, கடலுக்கடியிலும் பல நகரங்கள் புதைந்துள்ளன. கடலுக்கடியில் பூமி கொதிக்கப்படும் பொழுது, கடல் அலைகள் ஓங்கி வளர்ந்து, மற்ற இடங்களை அடித்துச் சென்று, அமிழ்த்து விடுகின்றன. இதுவெல்லாம், இயற்கையின் சில மாற்றங்கள்.

இன்று இருப்பது நாளை இல்லை, என்பதை நாம் அறிந்து கொள்தல் நல்லது. ஏனென்றால், நாம், நம் உடலில் பற்று வைத்துத்தான் வாழ்கின்றோம்.  உயிர் பற்று யாரும் வைப்பதில்லை.

மனிதராக உள்ள நாம், பூகம்பத்தில் சிக்கி மரணமடையப்படும் பொழுது,  இதன் உனர்வின் தன்மை கொண்டு பூமிக்குள் அடைபட்டு கற்தேரைகளாக வளரும் சந்தர்ப்பம் வருகின்றது. 

கொதிகலனாகி ஏற்பட்ட பூகம்பத்தால் அமிழ்ந்த உயிர்கள், திலிருந்து மீண்டும் ஏதாவது ரு சந்தர்ப்பத்தில், வெளியில் வந்தால்  எரிப்பூச்சிகளாக  மாறும் தன்மை வருகின்றது.

கவர்ந்து கொண்ட உணர்வுக்கொப்ப, உயிரின் இயக்கம் எப்படி அமைகின்றது,  என்பதனை குருநாதர் தெளிவாக உணர்த்தியருளினார்.

பூமியில் பரிணாம வளர்ச்சியில், எத்தனையோ கோடி உடல்களைப் பெற்று, மடிந்து, இன்று மனிதராகப் பிறந்துள்ள நாம், இப்பொழுது எப்படி வாழ்கின்றோம் என்பதைச் சிந்தித்துப் பாருங்கள். 

மனிதர் தாம் வாழ, செல்வத்தைத் தேடுகின்றோம்.  தேடிய செல்வத்தைப் பாதுகாக்க, மனதைப் பறிகொடுக்கின்றோம். இதனால், வேதனை என்ற உணர்வானால், உணர்வின் சோர்விற்குள் சிக்குகின்றோம். 

வேதனை என்ற நிலையாகி, நமக்குள் எத்தனையோ நோய்களை உருவாக்குகின்றோம். இப்படி இதன் உணர்வாகும் பொழுது, இதுவே நம்மை வழி நடத்திச் செல்லுகின்றது.

நமது பூமியே பெரும் கொதிகலனாக மாறிக் கொண்டு வருகின்றது. நமது பூமி மட்டுமல்ல, நமது பிரபஞ்சமும் மாறி வருகின்றது. பிரபஞ்சத்தில் உருவாகிய மனிதன், மின்னல் கடலில் தாக்கப்படும் பொழுது மணலாக மாறியதை பிரித்தெடுத்து, அதனைக் கதிரியக்கங்களாக மாற்றும் தன்மை பெற்றான்.

இப்படி எடுத்துக் கொண்டு, தான் வாழ, தன் நாட்டைக் காக்க, பிற உயிரினங்கள் மற்றொன்றைக் கொன்று புசிப்பது போன்று, மிருகங்கள் தன் இனத்தையே கொன்று புசிப்பது போன்று, மனிதர் தம் இனத்தையே கொல்லும் நிலை உள்ளது.

இன்று மனிதரிடையே விஞ்ஞான அறிவு வளர்ந்திருந்தாலும் கூட,  அவன் மிருக உணர்விலிருந்து மாறவில்லை.
ஆக, மனிதராகப் பிறந்தோம்,
தீமைகளை அகற்றும் வலிமை பெற்றோம்,
தீமையிலிருந்து விடுபடுவோம் என்ற உணர்வு
விஞ்ஞானத்திலும் சரி, அரசாங்க நிலைகளிலும் சரி, மனிதர்கள் உருவாக்கவே இல்லை.

பிறரைத் துன்பப்படுத்துவதும், துன்பப்படுவதும் என்ற உணர்ச்சிகளில் மனித நிலைகள் மாறி, மனித உடலுக்குள் ஏற்பட்ட இந்த உணர்வுகள், இன்று, காற்று மண்டலத்தில் நச்சுத் தன்மையாக மாறிக் கொண்டுள்ளது. இது போன்ற உலகில்தான், நாம் வழுகின்றோம்.

இன்னும் சிறிது காலத்தில், பூமியின் சிதைவு எவ்வாறு ஆகும் என்று சொல்ல முடியாது. விஞ்ஞான அறிவால் எடுத்துக் கொண்ட உணர்வுகள், தனது நாட்டைக் காக்க, உலகெங்கிலும் விஷத்தின் தன்மையை உருவாக்கி, விஷத்தைப் பரப்பி, ஒரு நொடிக்குள் மனிதரை மடியச் செய்திடும் நிலை உள்ளது.

இதனால் இன்று, விஷத்தைத் தாங்கிய உயிரணுக்களாக வெளிவருவதும், உயிரணு வெளிவந்த பின், விஷத்தைப் பாய்ச்சி உணவாக உட்கொள்ளும் உடலாக உருவாக்கும் தன்மை, விஞ்ஞான அறிவால் ஏற்பட்டுவிட்டது.

இன்று மனிதராக இருக்கின்றோம், விஷத்தை நுகரப்படும் பொழுது, மீண்டும் விஷ ஜந்தாக மாறும் நிலைகளே, உருவாகி வருகின்றது என்பதனை யாரும் மறந்திட வேண்டாம்.

ஆகவே, இந்தத் தீமைகளில் இருந்து விடுபடும் நிலையாக, மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் அவர்கள் காண்பித்த அருள் வழியில், நாம் அனைவரும் வாழ்வோம். 

அவ்வாறு, தம்முள் அருளைப் பெருக்கி இருளைப் போக்கும் நிலையாக, வாழ்ந்து வரும் அன்பர்கள் அனைவரும், தங்களுள் அருள் மகரிஷிகளின் அருள் சக்தி பெற்று, தங்களுடைய பார்வையால் மற்றவர்களுடைய துனபங்களைப் போக்கிடும், நோய்களைப் போக்கிடும் அருள் சக்தி பெற்று, தம்முள் பேரருள் பேரொளி பெற்று, இந்த வாழ்வில் பிறவி இல்லா நிலை பெறும்  நிலையாக, அழியா ஒளிச்சரீரம் பெறும் நிலையாக, பேரின்பப் பெரு வாழ்வாக வாழ்ந்து வளர்ந்திட, எமது அருளாசிகள்.
(செப்டம்பர் 2001)
வான்மீகி மகரிஷிகள் கொடுத்தருளிய, இராமாயணக் காவியத்தின் உண்மையின் தன்மை கொண்டுதான், காந்திஜி, தமது உயிர் உடலை விட்டுப் பிரியும், கடைசி நொடி வரையிலும் வாழ்ந்தார்.

எல்லோரையும், எல்லாவற்றையும் காக்கும் பல உணர்வுகளுடனும், பிறரைத் துன்புறுத்தா நிலைகளிலும் அஹிம்சைத் தத்துவத்தைக் கடைப்பிடித்து, தென்னப்பிரிக்காவில் வாழும் மக்களுக்கு, நீதி பெற்றுத் தந்தபின், இந்திய நாட்டைக் காக்க வேண்டுமென்ற ஆசை, காந்திஜிக்கு வந்தது.

இந்திய மக்கள், அடிமைத்தனத்திலிருந்து விடுபட வேண்டுமென்றால், பல உயிர்கள் பலியாக வேண்டியிருக்கின்றது, என்ற உணர்வினை காந்திஜி  உணர்ந்து,  சாந்தத்துடன், ஞானத்துடன், விவேகத்துடன் மக்களை நல்வழிப்படுத்தினார்.

அதாவது, அன்னிய நாட்டிடமிருந்து, நமது மகரிஷிகள் வெளிப்படுத்திய உணர்வினை மீட்டு, அதை மக்களுக்குக் கிடைக்கச் செய்து, மக்களை நல்வழியில் வாழச் செய்ய வேண்டுமென்ற முடிவை, காந்திஜி தமக்குள் எடுத்து,  இந்திய மக்களைப் பண்படும்படி செய்தார்.
காந்திஜி உலக மக்கள் அனைவரும் நம் சகோதரர் என்பதை தமது எண்ணம், சொல், செயலில் வைத்து, இந்திய மக்கள் அனைவரும் தங்களிடமுள்ள பகைமை உணர்வுகளை நீக்கி, அனைவரையும் அரவணைக்கும் தன்மை பெறவேண்டும் என்று எண்ணி, அவர் தனது மன உறுதி கொண்டு, இந்திய மக்களைச் சீர்படுத்த வேண்டும் என்ற ஒரே நோக்கத்துடன் செயல்படுத்தினார். இதனால், காந்திஜி உலக அரங்கில், அனைவருடைய உள்ளத்திலும் இடம் பிடித்தார்.

காந்திஜி எதிரிகளையும் கடவுளாக மதித்தார். அவர், தனக்குள் பகைமை உணர்வுகள் இயக்காதபடி தடுத்து, சாந்தம், ஞானம், விவேகம், எனும் நல்லுணர்வுகளை தமது உடலுக்குள் சுதந்திரமாக்கினார். 

ஞானத்தின் வழிகொண்டு, நல் உணர்வுகளைத் தமக்குள் சுதந்திரமாக்கி, அனைவரையும் அன்புடன் அரவணைக்கும் சக்தி பெறவேண்டும் என்ற உணர்வினை, காந்திஜி தனக்குள் ஓங்கி வளரச் செய்தார்.

காந்திஜியின் உணர்வுகளை நாம் நுகர்ந்தோம் ன்றால், உலகைக் காத்திடும் பேரருளை நாம் அனைவரும் பெறுவோம். 

காந்திஜியின் வழியில் சென்றோம் ன்றால், நமது குடும்பத்தில் பகைமை அகற்றி, ஒன்றுபட்டு வாழும் தன்மை பெறமுடியும்.

காந்திஜி, மதங்கள், இனங்கள் என்ற பேதமில்லாது, நாம் அனைவரும் கடவுளின் பிள்ளைகள் என்றும் சீதாராமா என்றும் சொல்லத் தொடங்கினார். சீதாராமா என்று நாம் மகிழ்ச்சியான உணர்வை நுகர்ந்தால், நம்மிடம் மகிழ்ச்சியின் தன்மை வெளிப்படுகின்றது. மகிழ்ச்சியான சொல் வெளிப்படும் பொழுது, கேட்போர் உணர்வுகளிலும் மகிழ்ச்சி அடைகின்றது.

இதைத்தான், காந்திஜி ஹரே ராமா…” என்று அடிக்கடி சொன்னார். பிறரைத் துன்புறுத்தி வாழ்வதைக் காட்டிலும், அனைவரையும் இன்புறச் செய்து வாழ வேண்டும் என்ற உணர்வை ஓங்கி வளர்த்தவர் காந்திஜி.

எல்லோரும் சந்தோஷமாக இருக்க வேண்டும் என்ற உணர்வை நாம் எடுத்தால், அதன் உணர்ச்சிகள் நமது உடலுக்குள்ளும் நல்லதாக செய்யும்,. மக்களுக்கும் நல்லது செய்யும், என்று காந்திஜி எண்ணினார். அதன் வழி, அவருடைய சொல்லும்,  அவருடைய செயலும் ஒன்றாக இருந்தது.

மக்கள் ஏகோபித்த நிலையில் தவறு செய்யும் நிலை வரும் பொழுது, காந்திஜி உண்ணாவிரதம் இருந்தார். காரணம், உண்ணாவிரதம் இருப்பதன் மூலம், மக்களிடையே தம் மீதான பாசத்தை வரவைத்து, அதன் வழியில் மக்களுக்கு உண்மைகளை புரிய வைத்தார்.

பிறருக்குத் தீங்கு செய்யாத நிலைகளையும், தீண்டாமை என்ற நிலைகளை மறக்கச் செய்து, அனைவரையும் அரவணைத்து வாழும் தன்மை பெறவேண்டும், என்ற உறுதி கொண்ட உணர்வை மக்களுக்கு ஊட்டினார்.

நாம் ஒவ்வொரு ஞானியரையும், போற்றித் துதிக்கின்றோம். காந்திஜியையும் போற்றித் துதிக்கின்றோம். ஆனால், அவர்கள் காட்டிய அறவழிகளை, நமது வாழ்க்கையில் கடைபிடிப்பதில்லை.

ஒவ்வொரு காலத்திலும் மகான்கள் தோன்றுகின்றனர். ஆனால், மகான்கள் இருக்கும் வரை போற்றுகின்றோமே தவிர, அவர்கள் மறைந்த பின்,  அவர்களைச் சுத்தமாக மறந்து விடுகின்றோம்.

இன்று மனிதர் ஒவ்வொருவரும், தனக்குச் செல்வத்தை தேட, எத்தனையோ வழிமுறைகளைக் கடைபிடிக்கின்றனர். செல்வத்தைச் சேர்த்தபின், அவர்களின் குடும்பத்திற்குள் செல்வத்திற்காகப் போரிட்டு, குடும்பத்திற்குள் ஒற்றுமையற்ற நிலை உருவாகி, செல்வத்தைச் சீரழிக்கச் செய்யக் கூடிய, போர் முறைகள் நடக்கின்றன. இது போன்ற நிலைகள், பெரிய செல்வந்தர்கள் வீடுகளில், இப்பொழுதும் இருப்பதைக் காணலாம்.

இப்போர் முறைகளினால் செல்வம் கரைகின்றது. அந்த உணர்வுகள் வளர்கின்றன. அன்பு, பண்பு என்ற நிலைகள் மறைகின்றன. இது போன்ற நிலைகள், உலகம் முழுவதற்கும் இருக்கின்றது.

இவையெல்லாம் யாம் ஏன் சொல்கிறோம் என்றால், நமது நூற்றாண்டில் வாழ்ந்த காந்திஜி ஒரு மகான் என்பதை விட "ஒரு ரிஷி" என்றே சொல்லலாம்.

உலக மக்கள் அனைவரும் தெளிந்த நிலைகள் கொண்டு, சகோதர தத்துவத்துடன் வாழ வேண்டுமென்று, ஒரே நிலையில் இருந்தவர் காந்திஜி. காந்திஜியே ஒரு சமயம், அன்னியனே வெளியேறு என்று சொல்லும் தன்மை வந்துவிட்டது.

சாந்தமும், விவேகமும் காந்திஜி கொண்டிருந்தாலும், அன்னியருடைய ஆட்சி மிகவும் கடுமையான நிலைகளில் வரும் பொழுது, காந்திஜி எல்லா மக்களையும் ஒன்று திரட்டி, அன்னியனே வெளியேறு என்ற கோஷத்தை எழுப்பினார். அன்னியன் என்றால்,
தீமை செய்வோர், 
தீமை செய்யும் சக்திகளையெல்லாம் வெளியேற்றி,
அன்புடன் அரவணைக்கும் நிலையினை
நமது நாட்டில் உருவாக்க வேண்டும், என்று காந்திஜி கூறினார்.

காந்திஜி, யாரையும் அன்னியமாக எண்ணவில்லை. மற்றவரை, யார் பகைமை உணர்வுடன் பார்க்கின்றனரோ, அவர்கள் தான் அன்னியர் ஆகின்றனர்.

இந்த அன்னியத்தில் இருந்துதான், விடுபட வேண்டும் என்று, அன்னியர்கள் வெளியேற வேண்டும் என்று சொன்னார்.

ஆகவே, நாம் அனைவரும் காந்திஜியின் கொள்கைகளை, நமது வாழ்க்கையில் கடைபிடிக்க வேண்டும். நாட்டைக் காக்கும் பண்புகள் வளர வேண்டும். நாட்டில், அன்பு கலந்த உணர்வுகள் வளர வேண்டும் என்ற அருள் உணர்வுகளை தங்களிடத்தில் வளர்க்கும் அன்பர்கள் அனைவரும், மகாத்மா காந்திஜியின் அருள் சக்தி பெற்று, அனைவரையும் அரவணைத்து வாழும் அருள் சக்தி பெற்று, இந்த வாழ்க்கையில் சாந்தத்துடன், ஞானத்துடன், விவேகத்துடன் வாழ்ந்து, தெளிந்த ஞானமும் மகிழ்ந்து வாழ்ந்திடும் அருள் சக்தி பெற்று, பேரானந்தப் பெருவாழ்வாக வாழ்ந்து வளர்ந்திட,  மது அருளாசிகள்.
 
(அக்டோபர் 2001)
இந்தச் சாமியார் காப்பாற்றுவார், அந்தச் சாமியார் காப்பாற்றுவார் என்று சொல்கின்றார்கள் என்று நீங்கள்  எந்தச் சாமியாரையும் தேடிச் செல்ல வேண்டாம். 

நீங்கள், உங்கள் அம்மாவை மட்டும் தினமும் பாத நமஸ்காரம் செய்து, அம்மா உங்களுடைய அருளாசி வேண்டும், நல்லது நடக்கவேண்டும், என்று ஆசி வாங்கிப் பாருங்கள்.

பின், நீங்கள் காட்டிற்குள்ளேயே சென்று பாருங்கள் புலியோ, யானையோ, ஏதோ உங்களைத் தாக்க வரட்டும். அப்பொழுது, அம்மா. என்று அழைத்துப் பாருங்கள், அந்த மிருகங்கள் உங்களைத் தாக்காது. யாம் உங்களிடம் சவால் விடுகின்றோம். 

தாயின் உணர்வுகள், நம்முள்ளே பதிவாகி ருக்கின்றது.  நம்முடைய தாய், நாம் நல்லவராக வர வேண்டும், ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்று சதா நினைத்துக் கொண்டிருப்பவர்.

நாம் குறும்புத்தனம் செய்யும் பொழுது, திட்டாமலா இருப்பார்கள். தாய், தான் பட்டினியாக இருந்தாலும், பரவாயில்லை. தன் பையனைக் காக்க வேண்டும் என்று மகனுக்கு உணவைக் கொடுக்கின்றார். தனக்கு வயிற்றுக்கு இல்லை என்றாலும் கூட, தன் மகனைக் காக்க வேண்டும் என்று பெரும் சிரமத்தையும் தாங்கிக் கொள்கின்றார். ஆனால், நாம் தாயை மதிக்கின்றோமோ,  தாயை மதிப்பதில்லை.

நாம், நம் தாயை எப்படி மதிக்க வேண்டும்?  நாம் எந்தக் கோவிலுக்குச் சென்றாலும், என்னுடைய அம்மாவிற்கு அருள் உணர்வுகள் கிடைக்க வேண்டும். எனக்காக எத்தனை கஷ்டங்கள் அனுபவித்தார்களோ, அதெல்லாம் நீங்க வேண்டும்.

என்னுடைய அம்மா, ஆரோக்கியமாக இருக்க வேண்டும்,  அவர்களுடைய அருள் சொல், எனக்குள் எப்பொழுதும் இருக்க வேண்டும்  என்று எண்ணுங்கள்.

உங்களுக்கு ஒரு பெரிய சிரமமே வருகிறது என்று வைத்துக் கொள்ளுங்கள். தொழில் வகையில், எவ்வளவோ கஷ்டம் வருகிறது என்று வைத்துக் கொள்ளுங்கள்.

அந்த நேரத்தில்,  நீங்கள், உங்களுடைய அம்மாவை நினைத்து, தியானம் செய்யுங்கள்.  காக்கும் உணர்வு வந்து, உங்களுக்குள் சிந்தனை பிறக்கும். உங்களுக்கு நல்ல வழி காண்பிக்கும். இதை, நீங்கள் உங்கள் அனுபவத்தில் தெரிந்து கொள்ளலாம்.

யாம் சித்தாகி இருந்த புதிது. அந்த சமயத்தில், பழனி அருகே பாப்பம்பட்டியில் உள்ள ஒரு பையன், அவன் மலைப்பகுதிக்கு சென்று விறகு பொறுக்கி வருபவன். தினமும் விறகு பொறுக்கச் செல்பவன். விறகு பொறுக்கி வந்தபின், வீட்டிலிருக்கும் நேரமெல்லாம், எப்பொழுது பார்த்தாலும், அவனுக்கும் அவனுடைய அம்மாவிற்கும், சண்டையாக இருக்கும்.

யாம் சுற்றுப்பயணத்தில் இருக்கும் பொழுது, இந்தப் பையனும் அவனுடைய அம்மாவும் எம்மைப் பார்க்க வந்தார்கள். அவனுடைய அம்மா சொன்னதன் பேரில், ஏன் உனது அம்மாவைத் திட்டுகின்றாய் என்று வந்திருந்த பையனைப் பார்த்து யாம் கேட்டோம்.

அதற்கு அவன், என்னுடைய அம்மா என்னைப் பார்த்து, சும்மா அது, இது என்று, ஏதாவது ஒன்றை எப்பொழுது பார்த்தாலும், சொல்லிக் கொண்டே இருக்கும் என்றான்.

நீ அம்மாவிடம் திட்டுகளை வாங்கிய பிறகு, எங்கேயாவது வெளியே சென்றால் அடிபடுகின்றதா என்று கேட்டோம்.

ஆமாம், காலில் அடிபட்டது என்று கூறினான்.

உன் அம்மா மனம் நொந்து சொன்ன பிறகு, நீ விறகு பொறுக்கச் சென்றால், கீழே விழுவாய், கை காலில் அடிபடும்., நீ விறகு வெட்டும் பொழுது, தவறி நீ உனது கையை வெட்டிக் கொண்டிருக்கின்றாயா என்று கேட்டோம்.

ஆமாம் என்று சொன்னான்.

ஆகவே, இங்கே உன் அம்மா சங்கடப்பட்டுக் கொண்டிருக்கும் பொழுது, பிறகு உனக்கு எப்படி இருக்கும் என்று கேட்டோம்.

பிள்ளைகளை வளர்க்கும் பெற்றோர்கள், பையன் மேல் ரொம்பப் பிரியமாக இருப்பார்கள். அடுத்தாற்போன்று பையன் குறும்புத்தனம் செய்யும் பொழுது, இப்படிச் செய்கின்றானே, இப்படிச் செய்கின்றானே என்று நினைக்கின்றார்கள்.

அதனின் வேதனையின் உணர்வு, பையனைத் தாக்கப்படும் பொழுது, அவனுடைய சிந்தனையைக் குறைக்கச் செய்து, அவனை மேலும் கெட்டவனாக மாற்ற முடிகின்றதே தவிர, அவனை நல்லவனாக மாற்ற முடிவதில்லை.

தாய் என்ன செய்ய வேண்டும்?
என் பையன் உயர்ந்த நிலை பெறவேண்டும்.
அவனுக்கு நல்ல அறிவு வரவேண்டும்,
சிந்திக்கும் ஆற்றல் பெறவேண்டும்
என்கிற வகையில், அவனை எண்ணும் பொழுதெல்லாம் இது போன்று செய்து பாருங்கள்.

பையன் தன் அருகில் இருக்கிற போதும், இல்லாத போதும் முன் சொன்ன மாதிரி எண்ணுங்கள்.  உங்களுடைய உணர்வுகளால், பையனை மாற்ற முடியும், நல்லவனாக உருவாக்க முடியும்.  இந்த அருள் உணர்வுகளை, அவர்களுக்கு உபதேசித்தோம்.

அதன் பின் தாயும் மகனும் சென்று விட்டார்கள். ஒரு முறை, விறகு பொறுக்குவதற்காக இந்த பையனும், அவனுடைய நண்பர்களுமாகச் சேர்ந்து, ஏழெட்டுப் பேர் பாப்பம்பட்டி காட்டிற்குள் சென்றார்கள். இவர்கள் காட்டிற்குள் விறகு சேகரித்துக் கொண்டிருக்கும் பொழுது, இவர்கள் இருந்த இடத்திற்கு, யானைக் கூட்டம் ஒன்று வந்துவிட்டது.

யானைக் கூட்டத்தைப் பார்த்ததும் அவர்கள் சேகரித்து வைத்திருந்த விறகுக் கட்டுகளைப் போட்டுவிட்டு ஓடத் தொடங்கினார்கள். ஓடிக்கொண்டிருந்தவர்கள் எல்லோரையும், யானைகள் துரத்திக் கொண்டு வந்தன.

யானைகள் துரத்திக் கொண்டு வந்ததும், எம்மிடம் உபதேசம் பெற்ற பையன், மேலும் ஓடமுடியாமல் தன் தலையில் இருந்த விறகுக் கட்டுகளைத் தன் முன்னால் நிறுத்தி, அம்மா. அம்மா…” என்று கூறிக்கொண்டே இருந்தான். இவனை விரட்டிக் கொண்டு வந்த யானை, அப்படியே நின்று விட்டது.

ரொம்ப நேரம் வரையிலும், அப்படியே நின்று கொண்டிருந்து பார்த்துவிட்டு பிறகு, அங்கிருந்து நகர்ந்து போய்விட்டது. அதன் பிறகு, தப்பித்தோம், பிழைத்தோம் என்று ஓடி வந்துவிட்டான்.

பிறகு எம்மை வந்து பார்த்து, சாமி, அம்மாவிற்கும் சக்தி இருக்கின்றது என்று கூறினான். 

எப்படிச் சக்தி இருக்கிறது என்று கேட்டோம்.

யானைகள் எங்களை விரட்டி வந்தன வேறு ஒன்றும் சொல்லவில்லை. அம்மா என்றுதான் கூறினேன். துரத்தி வந்த யானை நின்றுவிட்டது. சிறிது நேரம் பார்த்துவிட்டு, அங்கிருந்து விலகிச் சென்றுவிட்டது. எங்களில் ஒருவன் யானையிடம் இருந்து தப்புவதற்காக, பள்ளத்தில் குதித்து, காலை ஒடித்துக் கொண்டான், என்று கூறினான்.

இதன் மூலம், நாம் தாயிற்கு எவ்வளவு பெரிய சக்தி இருக்கின்றது என்பதை அறியலாம். நமது தாயிடம் உள்ள சக்திகளை, நாம் உணர்தல் வேண்டும். ஏனென்றால், நம்மை மனிதராக உருவாக்கியதும், நம் தாய்தான். தெய்வமாக இருந்து காப்பாற்றியதும், நம் தாய்தான்.

ஆகவே, நாம் தாயை மதித்துப் பழகுதல் வேண்டும். நம் தாயின் அருளால், அகஸ்தியர் துருவனாகி, துருவ மகரிஷியான, துருவ நட்சத்திரமான, அதனின்று வரும் பேராற்றலை நாம் அனைவரும் பெறுவோம்.

இந்த வாழ்க்கையில் வரும் அனைத்து இருளையும் அகற்றுவோம். வாழ்க்கையில் எல்லா நலமும் வளமும் பெறுவோம். மகிழ்ந்து வாழ்வோம், மகரிஷிகளின் அருள் வட்டத்தில் இணைந்து வாழ்வோம். எமது அருளாசிகள்.
(அக்டோபர் 2001)
யாம் பத்ரிநாத் போகும் வழியில், மும்பைக்கு அருகில் உள்ள ஒரு ஊரில் நடந்து சென்று கொண்டிருந்தோம். யாம் ஒரு பக்கம் சென்று கொண்டிருந்தபொழுது, குருநாதர் ஒரு திசையைக் காண்பித்து, இந்த பக்கம் செல் என்று கூறினார்.

குருநாதர் சொல்லிய திசையில் யாம் சென்றோம். அப்பொழுது சிலரைச் சந்திக்க நேர்ந்தது. அவர்கள் பிராமண ஆட்கள். அவர் அஸ்ஸாம் காட்டில் வன அதிகாரியாக இருந்தார். ஒரு பெரிய ஆபீஸர் என்ற நிலையில் இருந்தார். அவர்களிடம், சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்தோம். அது சமயம், அவர்களிடையே தாய்க்கு உண்டான முக்கியத்துவத்தைப் பற்றிப் பேசினோம்.

அப்பொழுது அந்தக் காட்டிலாகா அதிகாரி எம்மைப் பார்த்து, என்னங்க, எத்தனை கடவுள் இருக்கின்றது, பெரிய சாதுக்கள் எத்தனை பேர் இருக்கின்றார்கள். ஆனால், நீங்கள் தாயை உயர்த்திப் பேசுகின்றீர்களே என்று கேட்டார்.

மேலும் தாய் இன்று என்ன செய்கின்றது. பிள்ளைகளை எத்தனை திட்டுகளைத் திட்டுகின்றார்கள், என்னவெல்லாம் பேசுகின்றார்கள் என்று கேட்டார்.

எம்மிடம் பேசிக் கொண்டிருந்த, அதிகாரியின் குடும்பத்தில் பாகம் பிரிப்பதில் அண்ணன், தம்பிகளிடையே தகராறு இருந்திருக்கின்றது. ஆகையினால், இந்த அதிகாரிக்கு, தன் தாயின் மீது கொஞ்சம் வெறுப்பு. ஆகையினால், யாம் சொன்னதை மறுத்துப் பேசினார். ஒரு கண்ணில் வெண்ணையும், ஒரு கண்ணில் சுண்ணாம்பும் வைப்பது போன்று இருக்கின்றது உங்கள் பேச்சு என்று சொன்னார்.

ஆனால், யாம் உங்கள் தாயினால்தான் ஆபீஸராக வந்தீர்கள். ஆனால், உங்கள் தாயை வெறுக்கின்றீர்கள் என்று இரண்டு மூன்று மணி நேரம் பேசி, சில உண்மைகளை உணர்த்திய பின், யாம் அங்கிருந்து கிளம்புவதற்குமுன், உங்களுக்கு எப்பொழுது ஆபத்து வருகின்றதோ, அப்பொழுது  அம்மா  என்று அழைத்துப் பாருங்கள், உங்களுக்கு உதவி செய்வார்கள் என்று கூறினோம்.

உடனே அவர், நீங்கள் பேசுவது வித்தியாசமாக இருக்கின்றது, நாங்கள் எவ்வளவு படித்திருக்கின்றோம், என்னவெல்லாம் செய்திருக்கின்றோம், அம்மா என்று கூப்பிட்டவுடனே வந்து காப்பாற்றுமா? என்று கேட்டார்.

எம்மைச் சந்தித்த சிறிது நாள் கழித்து, ஒரு சமயம் அவர் அஸ்ஸாம் காட்டிற்குப் போயிருந்தார். அந்தக் காட்டைச் சுற்றிக் காண்பிப்பதற்காக, தனது மனைவியையும், தனது இரண்டு குழந்தைகளையும் ஜீப்பில் அழைத்துப் போயிருந்தார்.

ஜீப்பை ஒரு இடத்தில் நிறுத்திவிட்டு, போட்டோ எடுத்துக் கொண்டிருந்தார். அப்பொழுது, அங்கே யானை ஒன்று மரத்தின் பின்னால் நின்று கொண்டிருந்ததை யாரும் கவனிக்கவில்லை.

இவர் காட்டிலாகா அதிகாரியாக இருந்ததால், தமக்குக் காட்டைப் பற்றித் தெரியும் என்பதால், எதைப் பற்றியும் பயம் இல்லாமல் இருந்தார். இருந்தாலும், இவர்களுடைய ஆர்வத்தால், பக்கத்தில் யானை இருந்ததைக் கவனிக்கவில்லை.

யானை, திடீரென்று மரத்தின் பின்னால் இருந்து வெளிப்பட்டு, அதிகாரியைத் தன் துதிக்கையினால் தூக்கிவிட்டது.

அன்று யாம் சொல்வதைக் கேட்டுக் கொண்டிருந்தார் அல்லவா? இதன் உணர்வுகள் இவரிடத்தில் தூண்டி, யானையின் துதிக்கையில் இருந்த அதிகாரி, அம்மா என்று கத்தியிருக்கின்றார். ஜீப்பில் இருந்த அவருடைய மனைவியும், குழந்தைகளும் அம்மா அம்மா…” என்று கத்தியிருக்கின்றார்கள்.

யானை அதிகாரியைத் தூக்கியவாறு அப்படியே வைத்திருந்தது. அவரை அடிக்கவுமில்லை, அதற்கு மேல் ஒன்றும் செய்யவுமில்லை. குழந்தைகள் அம்மா, அம்மா என்று சொல்லிக் கொண்டே அழுதனர். யானை,  அதிகாரியைக் கீழே இறக்கிவிட்டது.

யானை, தன் துதிக்கையிலிருந்த அதிகாரியை இறக்கிவிட்ட பின், கொஞ்ச நேரம் அங்கேயே நின்று கொண்டிருந்தது. குழந்தைகள் எல்லாம், அம்மா அம்மா…” என்று அதே நிலையில் கூறி கொண்டிருந்தனர். பிறகு, சிறிது நேரம் கழித்து, யானை அங்கிருந்து விலகி சென்றுவிட்டது.

யாம் பத்ரிநாத், கேதார்நாத் போன்ற பல இடங்களுக்குச் சென்றுவிட்டு, திரும்பும் சமயத்தில் அங்கே ஆபீஸரை திரும்பவும் சந்தித்தோம். 

சாமி. நாங்கள் என்ன பூர்வ புண்ணியம் செய்தோமோ தெரியவில்லை. நீங்கள் சொல்லித் தந்த மந்திரம்,  எங்களைக் காப்பாற்றியது.

நாங்கள் எத்தனையோ மந்திரங்களைக் கற்றிருக்கின்றோம். ஆனால், தாங்கள் சொல்லிக் கொடுத்த மந்திரத்திற்குண்டான சக்தி, வேறெதற்கும் இல்லை என்று கூறினார்.
எந்த மந்திரம் அது?” என்று யாம் அவரிடம் கேட்டோம்.
அம்மாஎன்ற மந்திரம் தான் அது என்றார். அம்மா என்று சொன்னதால்தான், யானை எங்களைத் தாக்கவில்லை. நாங்களும் தப்பிப் பிழைத்தோம் என்று கூறினார். உண்மையில் நடந்த நிகழ்ச்சி இது. 
இது போன்று, யாம் பல பேருக்கு அனுபவரீதியிலேயே, உண்மைகளை உணர வைத்திருக்கின்றோம்.

நம் தொழில்  நன்றாக நடக்கவேண்டும் என்று ஆசை இருக்கும். நாம் செய்யும் தொழிலில் சிறிது நஷ்டம் வந்தால், இப்படி வந்துவிட்டதே, இப்படி ஆகிவிட்டதே என்று எண்ணுவோம்.

அது சமயம், தொழிலைப் பற்றிச் சிந்தித்து, தொழிலை மேம்படுத்துவதற்கான வழி முறைகளை எண்ணுவதில்லை. தொழிலில் வரும் இடைஞ்சலைச் சமாளிக்க முடியாது என்று எண்ணி, உடனே ஜோசியரை நாடுவார்கள். இப்படி ஒரு தவறுக்குப் பல தவறுகளைச் செய்து கொண்டிருப்பார்கள்.

ஆகவே, இத்தகைய தவறுகளிலிருந்து மீள வேண்டுமா இல்லையா?  நீங்கள், உங்களுடைய தவறுகளிலிருந்து மீள வேண்டும் என்பதற்காகத்தான், யாம் உங்களுக்கு அருள் உணர்வுகளைக் கொடுக்கின்றோம். 

சும்மா இல்லை. அருள் உணர்வுகளுடன், அருள் சக்திகளையும் கொடுக்கின்றோம்.  எமக்கு, மது குருநாதர், எப்படி சக்தி கொடுத்தாரோ, அதைப் போன்றுதான், உங்களுக்கும் சக்தி கொடுக்கின்றோம்.

இன்று, காற்று மண்டலமே மிகுந்த நச்சுத் தன்மையாக இருக்கின்றது. எங்கே பார்த்தாலும் தீவிரவாதம், மதத்திற்குள்ளும், இனத்திற்குள்ளும் மொழிக்குள்ளும் தீவிரவாதம் என்று, இன்று எல்லா நிலைகளிலும் தீவிரவாதங்கள் வளர்ந்துள்ளன.

அந்த நிலைகளை நாம் பார்த்து, கேட்டு அறிய நேரும்பொழுது, அந்த உணர்வுகள் நமது உடலுக்குள்ளும் வந்துவிடுகின்றது. அது நமக்குள் வலுவாக ஆகும் பொழுது, நம்முள் சிந்திக்கும் திறன் இழக்கப்படுகின்றது. நல்லவைகளை நாம் நுகர முடியாதபடி, தடையேற்படுகின்றது.

ஆகவே,  இத்தகைய தீமைகளையெல்லாம் மாற்றியமைக்க வேண்டுமல்லவா? அதற்காகத்தான்,  யாம் மணிக்கணக்கில் உபதேசித்து, உங்களிடத்தில் அருள் உணர்வுகளைப் பதிவாக்குகின்றோம்.

யாம் உங்களிடத்தில் பதிவு செய்த, அருள் உணர்வுகளை நீங்கள் மனதில் எண்ணி,  ஈஸ்வரா…” என்று, உங்களுடைய புருவ மத்தியில், உயிரான ஈசனை எண்ணினால், தீமைகள் வராது உங்களை நீங்கள் காத்துக் கொள்ளலாம். 

இதன் உண்மைகளை உணர்ந்து, அருள் ஞானிகளின் அருள் உணர்வுகளைத் தம்முள் வளர்த்து வரும் அன்பர்கள் அனைவரும், துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற்று, தங்கள் வாழ்க்கையில் அறியாது சேர்த்த இருளை நீக்கி, மெய்பொருள் காணும் திறன் பெற்று, உயிருடன் ஒன்றிய உணர்வுகளை ஒளியாக்கும் திறன் பெற்று, என்றும் பதினாறு என்று, பெரு வீடு பெருநிலையை அடையும் நிலையாக, பேரின்ப பெருவாழ்வாக வாழ்ந்து வளர்ந்திட, எமது அருளாசிகள்.
(நவம்பர் 2001)
நீங்களும் ஒரு டாக்டர் தான்,  உங்களுடைய உயிர்தான், டாக்டராக இருக்கின்றது. உயிரான டாக்டரிடம், உங்களுடைய உணர்வுகளைச் சொன்னீர்களென்றால், அதற்குத் தகுந்த மாதிரி, உயிரான டாக்டர் உங்களை இயக்கி,  உங்களை நல் வழிப்படுத்துவார். 

ஆனால், நாம் வேதனை, வெறுப்பு என்ற உணர்வுகள் நம்மிடம் வரும்பொழுது,  உயிரான டாக்டரை மதிக்காதபடி இருந்துவிடுகின்றோம்.

உயிர், நமக்கு நல்லது கெட்டது போன்றவைகளைக் காண்பிக்கின்றது. கெட்டது என்று தெரிந்தும் அதை உள்ளே விடாதபடி தடுக்கவில்லை என்றால், என்னவாகும். டாக்டர்கள், ஒன்றைச் சாப்பிடாதீர்கள் என்று சொல்லியிருந்தும், அதை சாப்பிட்டோம் என்றால், உடல் நோயாகும்.

இது போன்றுதான், நாம் ஒருவர் வேதனைப்படுவதைப் பார்த்து,  நல்ல மனிதர் இப்படி ஆகிவிட்டாரே என்று வேதனைப்படுகின்றோம். அப்பொழுது என்ன செய்கின்றோம்?

வேதனையின் உணர்வுகள், நம்முள் நுழைவதற்கு ஏதுவாகத் திறந்து வைத்துவிடுகின்றோம். இதனால், வேதனை உணர்வுகள் நம்முள் புகுந்து விடுகின்றது.

ஆகவே, நாம் எப்பொழுதும் தீய உணர்வுகள் நம்முள் நுழையாதவண்ணம், கதவுகளை மூடி வைக்கவேண்டும்.

உதாரணமாக, காற்று பலமாக உள்ள பொழுது என்னவாகும். தூசி, நாற்றம், அனைத்தையும் அடித்துக் கொண்டு வரும். அப்படி வரும் பொழுது, அவை அனைத்தும் நம்முள் நுழைந்துவிடும். ஆகவே, நாம் கதவை மூடி வைத்திருக்கப் பழக வேண்டும்.

நாம் ஒரு உணர்வை மூக்குவழி நுகரும் பொழுது, அது நம் உயிரில் மோதுகின்றது. நமது கண் ஒன்றை பார்க்கும் பொழுது, கருவிழி ருக்மணி என்ன செய்கின்றது?

கவர்ந்த உணர்வை, நமது உடலில் உள்ள விலா எலும்புகளில் உள்ள ஊனில் பதிவாக்கிவிடுகின்றது. வேதனைப்பட்ட உணர்வை நுகர்ந்து, நமது எலும்புக்குள் ஊழ்வினை என்ற வித்தாகp பதிவாக்குகின்றது.

இவைகளெல்லாம் சுவாசித்தல் மூலம் நம்முள் செல்வதில்லை. சுவாசத்தில் இல்லாமலே, கருவிழி பார்த்த ஒன்றை படமாக்கி நம்முள் பதிவாக்கி விடுகின்றது.

எக்ஸ்ரே படம் எடுத்தால், உடனே படமாகக் காட்டுவதைப் போன்று, கருவிழி பார்த்தவுடனே, நமது உடலில் உள்ள விலா எலும்புகள் கடிகாரம் மாதிரி படபடவென துடித்து இழுக்கும். இழுத்து உடனே தன்னுள் பதிவாக்கிக் கொள்கின்றது.

இவ்வாறு பதிவான பின்னே என்ன செய்கின்றது. கண்ணோடு சேர்ந்த காந்தப்புலன் அதனின்று வெளிப்படும், வேதனை உணர்வைக் கவர்ந்து, அவ்வுணர்வை இயக்க கூடிய அணுக்களாக மாற்றுகின்றது.

வேதனையின் உணர்வுகள், நமது உடலுக்குள் வலுவானபின், அதன் அருகில் இருக்கக்கூடிய நல்ல அணுக்களைப் பலவீனப்படுத்தும். மேலும், அந்த நல்ல அணுக்களை உணவாக எடுத்துச் சாப்பிடத் தொடங்கும். பின் நாம் நலிவடைய வேண்டியதுதான்.

எனவே,  இதைப் போன்ற நிலைகளை நாம் தடுக்க, நாம் நமது குருநாதர் காட்டிய அருள் வழியில், அந்த துருவ நட்சத்திரத்தின் அருள் உணர்வுகளை, உயிர் வழி கவர்ந்து, நம் உடலை உருவாக்கிய நல்ல அணுக்களுக்கு, உணவாகக் கொடுக்க வேண்டும். 

இவ்வாறு நாம் செய்து வர, நாம் அனைத்துத் தீமைகளிலிருந்தும் விடுபட முடியும். மகரிஷிகளின் அருள் வட்டத்தில் இணைந்து வாழ முடியும்.
DSC_0000030.jpg   
டிசம்பர் 2001
சிவன் நெற்றிக் கண்ணை திறந்தால் சுட்டுப் பொசுக்கி விடுவான், என்று காவியங்களில் கூறப்பட்டிருக்கும். அதாவது,  நம் கண்ணின் நினைவைப் புருவ மத்தியில் செலுத்தி, உயிரான ஈசனை எண்ணி ஏங்கி, அருள் உணர்வுகளை நம்முள் இணைக்கும் பொழுது, நம்முள் அறியாது சேர்ந்த தீமைகள் ஒடுங்குகின்றன என்பதே ஞானிகள் உரைக்கும் உண்மையாகும்.

அகஸ்திய மாமகரிஷிகள், வான்மீகி மகரிஷிகள் போன்ற ஞானிகள், சந்தர்ப்பங்களால்தான், தங்களுள் மெய்ஞானத்தைப் பெற்றார்கள்.

இம்மெய்ஞானிகளைப் போன்று, நாமும், நம்முள் மெய்ஞானத்தைப் பெறுவதற்குண்டான சந்தர்ப்பங்களை உருவாக்கும் ஆற்றல், நமது ஆறாவது அறிவிற்கு உண்டு.

மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் அருள்துணை கொண்டு, யாம், இயற்கையின் இயக்கப் பேருண்மைகளை, அனுபவ ஞானமாக, பல சிரமங்களுக்கிடையேதான், பெற்றோம்.

            உங்களுக்கு உபதேசமாகக் கொடுக்கும் பொழுது, அந்த அருள் உணர்வுகளை, உங்களுடைய கருத்தில் பதிய வைக்காமல் விட்டு விடுகின்றீர்கள்.

            எமது அருள் ஞான உபதேசங்களை நீங்கள் படிக்கும் பொழுதும், கேட்கும் பொழுதும் ஆர்வமுடன் இருப்பீர்கள். ஆனால், அருள் ஞான உபதேசங்களைக் கேட்டு, படித்த பிறகு சில நிமிடங்களில், சாலையில் சிலர் சண்டை போட்டுக் கொண்டிருந்தால், அதைப் பார்த்து, அதனின் உணர்வை ஈர்த்து,  உங்களுக்குள் பதிவு செய்து, வளர்க்க ஆரம்பித்துவிடுவீர்கள்.

உதாரணமாக, ஒரு குரு, தம் சீடரை அழைத்து, அவருடைய கையில் காசைக் கொடுத்து, கடைக்குச் சென்று கொழுக்கட்டை வாங்கி வா என்று சொல்லி அனுப்பி வைத்தார். சீடரும், தாம் கடைக்குச் சென்று கொழுக்கட்டை வாங்கி வருவதற்குக் கிளம்பினார்.

சீடர் கடைக்கு செல்லும் வழியில், குறுக்கே ஒரு சாக்கடை இருந்தது. சாக்கடையைத் தாண்டித்தான், கடைக்கு செல்ல வேண்டும். சாக்கடையில் இருந்து வரும் நாற்றமோ, சீடரால் தாங்கிக் கொள்ள முடியாத அளவு இருந்தது.

சீடர், அத்ரி சீ தூ…” என்று சொல்லிக் கொண்டு மூக்கை பொத்தியவாறு சாக்கடையைத் தாண்டி சென்றார். இப்படிச் சென்றவர், நேராகக் கடைக்குப் போய் நின்று, கொழுக்கட்டை தாருங்கள் என்று கேட்பதற்குப் பதிலாக, அத்ரி சீ தூ…” கொடுங்கள் என்று கேட்டார்.

அதாவது, எமது அருள் ஞான உபதேசங்களை நீங்கள் கேட்பீர்கள். பின்னர் என்ன செய்வீர்கள்? நல்லவைகளை அறிந்து கொண்ட பின், சாலையில் சிலர் சண்டை போட்டு கொண்டிருந்தால், அதைக் கண்களால் பார்த்து, அதன் உணர்வுகளை விலைக்கு வாங்கிக் கொள்வீர்கள்.

இதன் உணர்வுகளை வளர்த்துக் கொண்ட நிலையில், வீட்டிற்குள் போவீர்கள். வீட்டில் மனைவி மீதும், குழந்தை மீதும் வெறுப்பு இருக்கும். குழந்தை சிறிது குறும்புத்தனம் செய்தால் போதும்.

இவன் இப்படிச் சேட்டை செய்கிறான்,
சாமி நாம் எப்படி இருக்க வேண்டும் என்று உபதேசம் செய்கிறார்.
ஆனால் வீட்டில், மனைவி, குழந்தைகள் இப்படி இருக்கின்றார்களே என்று, தன்னை நியாயப்படுத்திக் கொண்டு, தன் மனைவி, குழந்தைகளிடம் வேக உணர்வைக் காண்பிப்பார்கள்.

ஏனென்றால், நமக்குள் எதிர்நிலையான உணர்வுகளான பின், நமக்குள் உணர்வுகள் வேகமாகின்றது.

ஆனால், அருள் ஞான உணர்வுகளை உங்களுக்குள் பதிவு செய்து வளர்த்து,  உங்களுடைய உணர்வுகள் எதிர்நிலைக்கு மாறாதிருந்தால், உங்களுடைய உடலில் உள்ள நோயைக் குறைக்க முடியும். குடும்பத்தில் உள்ள சிக்கலை நிவர்த்திக்கும் ஆற்றலும், சிந்தித்துச் செயல்படும் தன்மையும் வரும்.

அருள் ஞான உணர்வுகளை, நீங்கள் படிக்கும் பொழுதும், கேட்கும் பொழுதும் ஊழ்வினை என்ற நிலையில் பதிவாகுகின்றது. யாம் சொல்லிக் கொண்டு வருவதனைத்தையும், கூர்ந்து கவனித்தீர்கள் என்றால், உங்களுடைய கருவிழி ருக்மணி, கவர்ந்த உணர்வலைகளை உங்களுடைய செல்களில் பதிவாக்குகின்றது.

ஒருவரை, எமது அருள் ஞானப் புத்தகங்களைப் படிக்கச் சொல்லி, அவரைத் தாம் படித்ததைத் திரும்பச் சொல்லும்படிக் கேட்டால், அவருக்குச் சொல்லத் தெரியாது. ஏனென்றால், புத்தகங்களில் கருத்துகள் அடுக்கடுக்காக வரும்.

தியானத்தில் இருப்பவர்கள் திரும்பச் சொல்கின்றார்கள் என்றால், அவர்கள் தியானத்தில் இருப்பவர்களாக மட்டுமே இருக்க முடியும். 

யாம் தந்தருளிய தியான முறையினைக் கடைப்பிடித்து வருபவர்கள், தாங்கள் படித்த கருத்தினுடைய மூலங்களை அடுக்கடுக்காகச் சொல்ல ஆரம்பிப்பார்கள்.

காரணம், எலக்ட்ரிக், எலக்ட்ரானிக். பதிவான உணர்வுகள், எலக்ட்ரான் என்ற முறைப்படி, அது காற்றில் இருப்பதை எடுத்து, நம்முடைய இயக்கச் சக்தியாக்க கூடிய ஞானம் நமக்கு வருகின்றது.

ஞானத்தின் தன்மை வந்தால், நமக்குள் தீமை புகாது வலிமை கிடைக்கும். நான் காட்டிற்குச் சென்று ஞானத்தைப் பெறுவேன், பெறவேண்டும் என்று நினைத்தால்,  முடியாது.

ஒரு விஞ்ஞானி, புதிய ஒரு இயந்திரத்தைக் கண்டுபிடிக்கும் பணியில் இருக்கும் பொழுது, பல சங்கடங்களை அனுபவிக்கலாம். அப்படி அவர், பல சிரமங்களை அனுபவித்து, கண்டுபிடித்த இயந்திரத்தை நாம் சரியானபடி ஏற்றுக் கோண்டோமானால், அந்த விஞ்ஞான அறிவு நமக்கு பயன்படும்.

விஞ்ஞான அறிவு கொண்டு, கம்யூட்டரை செய்துகொடுக்கின்றார்கள். சிரமப்பட்டுத் தான் அதைச் செய்து கொடுக்கிறார்கள். ஆனால்,  கம்ப்யூட்டரை விளையாட்டிற்குத் தட்டிக் கொண்டிருந்தால், பயன் ஒன்றும் இருக்காது.

அதைப் போன்று, யாம் உபதேசிக்கும் அருள் உணர்வுகளை, கூர்மையாக உற்று நோக்கிப் பதிவு செய்து கொண்டபின்,  அந்த உபதேசித்த உணர்வுகளை நினைவுபடுத்தி, நீங்கள் துருவ நட்சத்திரத்திலிருந்து வரும் பேரருளை எளிதில் நுகர முடியும். 

உங்கள் உயிர் வழி, துருவ நட்சத்திரத்திலிருந்து வரும் பேரருளை நுகர்ந்து, உங்கள் உடலில் உள்ள அனைத்து அணுக்களுக்கும் உணவாக கொடுக்க முடியும். நாம் அனைவரும், இதை ஒரு பழக்கத்திற்குக் கொண்டு வர வேண்டும். 

அவ்வாறு, கொண்டு வந்துவிட்டோம் என்றால், நாம் எப்பொழுது வேண்டுமென்றாலும் அந்த மகரிஷிகளின் அருள் சக்திகளை நமக்குள் சேர்ப்பிக்க முடியும். நமக்குள் தீமைகள் வராது தடுக்க முடியும்.

மெய் வழி வாழ முடியும். மெய்ஞானிகள் கண்ட பேருண்மைகளை, நாமும் கண்டுணர முடியும். மெய்ஞானிகளுடன் இணைந்து, வேகா நிலை என்ற நிலையாக, அழியா ஒளிச்சரீரம் நாம் அனைவரும் பெறமுடியும். எமது அருளாசிகள்.
டிசம்பர் 2001
நாம் எண்ணக்கூடிய உணர்வை, உயிர் நம்முள் உருவாக்குகின்றது. ரேடியோவிற்கும், T.V. க்கும் எப்படி ஆண்டெனா இருக்கின்றதோ, இதைப் போன்று, நமது உடலுக்குள் இருக்கக்கூடிய அனைத்திற்கும், நமது கண் கருவிழிதான் பதிவாக்கி, ஆண்டெனாவாக வேலை செய்கின்றது. 

நாம், நமது நினைவைச் செலுத்தும் பொழுது, காற்றிலிருப்பதை இழுத்துக் கொடுப்பது, நமது கண்கள்தான். நமது கண்வழி தான் வருகின்றது.

இப்படி வந்த உணர்வுகள் நமது உயிரில் மோதும் பொழுது, எண்ணம் வருகின்றது. இதன் உணர்ச்சியின் தன்மை, உடலை இயக்குகின்றது. ஒருவரைப் பற்றி கோபமான நிலைகளில், நம்முள் பதிவாக்கி விட்டோமென்றால், பிறகு அவரைப் பற்றி நினைக்கும் பொழுதெல்லாம் நமக்குள் ஆத்திரம் வரும்.

இது போன்று வெறுப்புடன், அடுப்பில் பெண்கள் வேலை செய்து கொண்டிருந்தால் போதும், நினைவிழந்து, அடுப்பில் வைத்த பொருள் பொங்கி வரும் பொழுது, உடனே அந்தப் பாத்திரத்தை வெறும் கையினால் தூக்குவார்கள். கையும் புண்ணாகிவிடும். இதை நீங்கள், உங்களுடைய வாழ்க்கையில் பார்க்கலாம்.

ஏனென்றால், வெறுப்பின் உனர்வுகள் நம்மை இயக்கும் பொழுது, நாம் செய்யும் பணியில் தவறு நேர்கின்றது. இது மாதிரி இயக்காமல் தடுக்க வேண்டுமல்லவா? தீமைகளை மாற்றி அமைக்ககூடிய சக்தி, நமது ஆறாவது அறிவிற்கு உண்டு.

உதாரணமாக, டாக்டருக்குப் படிக்கப் போகின்றீர்கள் என்றால், நன்றாகப் படிக்க வேண்டும் என்ற அக்கறை உள்ளவர்கள், முன்னுக்கு வந்து விடுகின்றார்கள். ஏதோ கடமைக்குப் படிக்கப் போகிறேன் என்று  இருப்பவர்களுக்கு, படிப்பு ஏறுவதில்லை. அவரால், சரியாக இயங்கவும் முடிவதில்லை. 

ஒரு செயலை நல்ல விதத்தில் செய்ய வேண்டும், என்று, வலுவான உணர்வை எடுத்து முயற்சிக்கின்ற பொழுது, அது உங்களுக்கு நல்ல நேரம், அதன்படி செயலும் நடந்துவிடும்.

யாம், உங்களுடைய உயிரைக் கடவுளாக மதிக்கின்றோம். உங்களுடைய உடலைக் கோவிலாக மதிக்கின்றோம். இயற்கையின் இயக்கத்தின் உணமைகளை, குருநாதரின் அருள் துனை கொண்டு, யாம் அறிந்து கொண்டோம். 

உங்களை அறியாமல் இயக்கக்கூடிய நிலைகளில் இருந்து,  நீங்கள் மீளவேண்டும் என்பதற்குத்தான், இவைகளை  யாம் உங்களிடத்தில் பதிவு செய்கின்றோம்.

சில பேர், நான் நினைத்தது நடக்கவில்லை என்றிருப்பார்கள். ஆக, அவர்கள் தன் ஆசையின் நிலையிலேயே இருப்பார்கள். ஆனால், யாம், இதையெண்ணி, இப்படி ஏங்கியிருங்கள் என்று ஒன்றைச் சொல்வோம். ஆனால், கேட்பவர்களோ சொன்னதை விட்டுவிடுவார்கள்.

உதாரணமாக, தோசையைச் சுடும் பொழுது, தோசை மேல்தான் ஆசையாக இருப்போம். ஆனால், நெருப்பு எப்படி எரிந்து கொண்டிருக்கின்றது என்பதைக் கவனிப்பதில்லை.

நெருப்பைத் திகு திகு என்று எரித்துவிட்டு, தோசைச் சட்டியில் மாவை ஊற்றினால், எப்படி இருக்கும்? தோசைச் சட்டியில், எந்தப் பக்கம் அனல் அதிகமாக இருக்கின்றதோ, அந்தப் பக்கம் தோசை ஒட்டிக் கொள்ளும். பிகு தோசையை எடுத்தால், வரமாட்டேன் என்கிறது என்று இருப்பார்கள்.

ஞானகுரு, தோசையை இப்படி சுடச் சொன்னார். ஆனால், தோசை சட்டியை விட்டு வரமாட்டேன் என்கிறது, என்று சொன்னால் எப்படி?  நாம் அடுப்பில் நெருப்பு வைத்திருக்கும் பக்குவத்தில்தான் இதெல்லாம் இருக்கின்றது.

இதைப் போன்றுதான்,  நமது உயிர் ஒரு நெருப்பு. அதில், நாம் எதனுடைய பக்குவத்தைச் செலுத்துகின்றோமோ, நிச்சயம் அது செயல்படும். 

நீங்கள் வேறு யாரிடமும் யோசனை கேட்க வேண்டியதில்லை. ஆனால், அருள் உணர்வுகளை உங்களுக்குள் பதிவாக்கிக் கொள்ளவேண்டும். உங்களிடம், அதைத்தான் பதிவாக்குகின்றோம்.

அடுப்பில் நெருப்பு அதிகமாக இருக்கும் பொழுது, பக்குவம் தெரிந்தவர்கள் என்ன செய்வார்கள்?

முதலில்,  தோசைச் சட்டியில்  தண்ணீரை ஊற்றி,
சூட்டைத் தணிக்கின்றார்கள். 
எரியும் விறகை வெளியில் எடுத்து, 
நெருப்பின் வேகத்தைக் குறைக்கின்றார்கள். 

இப்படி நெருப்பையும், தோசை சட்டியின் சூட்டையும் சமப்படுத்தியபின்,  மாவைத் தோசைச் சட்டியில் ஊற்றினால், தோசை மிகவும் அருமையாக வருகின்றது.

ஆனால், நெருப்பையும், தோசைச் சட்டியின் சூட்டையும் சமப்படுத்தாதபடி, சனியன், தோசை வரமாட்டேன் என்கிறதே, என்று சுரண்டு சுரண்டு என்று சுரண்டிவிட்டு, மறுபடியும் எண்ணையைப் போட்டார்கள் என்றால் அதுவும் சூடாகின்றது.

ஆக பக்குவமில்லை என்றால், நாம் தோசையைக் கூட, சுடமுடியாது.

இது போன்றுதான், நமது வாழ்க்கையிலும் பக்குவம் தேவை. பக்குவப்படுத்துவதற்கு ஞானம் தேவை.  அந்தப் பக்குவத்தை, உங்களுக்கு பெறச் செய்வதற்காகத்தான், யாம் இப்பொழுது உபதேசிக்கின்றோம்.

நமக்குள் வரும் தீமைகளை மாற்றுவது எப்படி? என்பதன் உண்மைகளை அறிய, குருநாதர் எம்மைக் காட்டிற்குள் அழைத்துச் சென்று, பல அவஸ்தைகளைக் கொடுத்து உணர்த்தினார்,  அறியச் செய்தார். 

குருநாதர் காட்டிய அருள் வழியில், தீமைகளை மாற்றி அமைக்கும் நிலையாக, அகத்தின் இயக்கம் எப்படி என்பதை உங்களுக்கு உணர்த்தி, "சக்தி வாய்ந்த வாக்காக" உங்களிடம் பதிவு செய்கின்றோம். 

இவ்வுலகில் உள்ள நஞ்சுகளிலிருந்து, "உங்களைக் காக்கக்கூடிய அருள் உணர்வுகளை" உங்களுக்குள் வளர்த்துக் கொள்ளுங்கள். எமது அருளாசிகள்.