ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

January 18, 2012

அத்திரி மகரிஷி

  
 சாமி புத்தகம்அத்திரி மகரிஷி
(பக்கம் 14-16)
அத்தி மரத்தின் நிழலிலே, அத்திப் பழங்கள் எப்படி தன் தண்டுகளில் உருப்பெறுகின்றதோ,
அந்த உணர்வின் எண்ணத்தைக் கொண்டு,
ஒவ்வொரு அணுவிற்குள்ளும்
அது தோன்றும் உணர்வின் நிலைகள் கொண்டு
ஒவ்வொன்றிலும் உருப்பெறச் செய்ய முடியும்
என்று தன் உணர்வின் தன்மை கொண்டு, அரசனாக இருந்தவன் அத்திரி.

நாட்டின் நிலையும், தனது குடும்பத்தில் தன் மக்கள் தன்னுடைய அரசுக்குள் போர் முறைகள் கொண்டு, தனக்கு இந்த சொத்து வேண்டும், அந்த சொத்து வேண்டும் என்றும், இந்த அரசுக்குள் போர் முறைகள் கொண்டு, இந்த அரசனையே (அத்திரியை) திருப்பித் தாக்கும் நிலை வரும்போது, ஆற்றல் மிக்க மெய் நிலைகளை உணர்ந்து, அரச சபையைக் கூட்டி, அதன் வழிகளிலே அரசை நடத்தி, அந்தப் பேரண்டத்தின் பேருண்மையின் நிலைகளைப் பெறமுடியும் என்று இருந்தாலும், அதை அவனால் பெற முடியவில்லை.

அவனுடைய குடும்பத்தில், மக்கள் எதிர்நிலைகள் செய்யும்போது, இவனது சிந்தனைகள் குலைந்து, நாட்டிற்குள் தன் பிள்ளைகள் என்று வரும்போது, மக்கள் மத்தியிலே பல கொடூரத் தன்மைகளை விளைய வைத்து,  மக்களின் நிலைகளில் எல்லை கடந்த நிலைகளாகி, அவர்கள் பரிதவித்துக் கொண்டிருக்கும் நிலையும், மழை நீர் பெய்யாத நிலையும், அது தவித்துக் கொண்டிருக்கக் கூடிய நிலைகளில்தான்,  அரச நிலையே வேண்டியதில்லை, என்று உணர்கின்றான்.

பின், ஒவ்வொரு உயிரின் தன்மையில், அவர்கள் எடுத்துக் கொண்ட நல்ல எண்ணமும் அந்த நல்ல எண்ணத்தை நாம் பெற்றால், அந்த உணர்வின் ஆற்றல் கொண்டு மெய் உணர்வின் நிலைகளை நமக்குள் வளர்த்து, அந்த மெய்யின் தன்மையான ஒளிநிலை பெற முடியுமென்று பேருண்மையை அறிந்து உணர்ந்தவர்தான், அத்திரி மாமகரிஷி. 

அவரது அரசாட்சி காலங்களில் நடந்த நிகழ்ச்சிகள் அனைத்தும் கண்டுணர்ந்து, இதையெல்லாம் வெறுத்து
இனி, நாம் ஒவ்வொரு மக்களின்
நல் எண்ணங்களை நாம் பெற்றால் தான்,
நாம் விண் செல்ல முடியும்  என்ற நிலைக்கு வந்து
அரச நிலையைத் துறந்து, காடு வனம் என்ற நிலைகளில் திரிந்து, ஆற்றல் மிக்க சக்தியைத் தனக்குள் பெற்று, மக்கள் மத்தியிலே ஊடுருவி வந்து,  ஒவ்வொரு மக்களையும் மகிழச் செய்து, அந்த மகிழ்ச்சியான எண்ணத்தைத் தான் சுவாசித்து, அந்த உணர்வின் ஆற்றலைத் தனக்குள் பெருக்கி,  தன் உயிராத்மாவின் நிலைகளை ஒளியாக மாற்றிச் சென்றவர், அத்திரி மாமகரிஷி.

ஆக, அத்திரி மாமகரிஷி அரசனாக வாழ்ந்தான், பின் உணர்ந்தான் பின் தன் நிலைகளை அறிந்தான். இதைப் போன்று, மனித வாழ்க்கையில் நாம் ஒவ்வொருவரும் வாழவேண்டுமென்று எண்ணிக் கொண்டிருந்தாலும், நாம் அரசனைப் போல, வீட்டிற்குள்ளும் அரசாட்சி புரிகின்றோம்.

அதைப் போன்று, பண வசதி கொண்டு வீட்டிற்குள் அரசாட்சி செய்தாலும், நாம் ஒரு அரசனாகவே இருக்க விரும்புகின்றோம். ஓரளவிற்கு பொருள் இருந்தாலும், தன்னை மதிக்கவில்லை என்றால்,  இரு நான் பார்க்கின்றேன் என்ற எண்ணம் தான் வருகின்றது.  ஒரு பேரரசனாக இருந்தாலும், அந்த நிலைகள்தான் வருகின்றது.

ஆக அதே சமயம், ஒருவர் உதவி செய்கிறார் என்று எண்ணினால், அந்த உதவியின் தன்மையை நாம் பெற்றுவிட்டபின், அவர் செய்யக் கூடிய தவறுக்கெல்லாம் நாம் உடந்தையாக ஆகவேண்டும்.

அப்படி ஆகவில்லை என்றால், நான் உதவி செய்தேன், என்னை எதிர்க்கிறான் பார் என்கிற நிலைகளில், அவன் செய்யும் தவறுக்கு உறுதுணையாக வேண்டும். இப்படித்தான் நாம் ஒவ்வொரு உண்மையினுடைய நிலைகளிலும் நம்மை அழித்துக் கொண்டுதான் இருக்கின்றோம்.

இதைப் போன்றுதான், மனிதனுடைய வாழ்க்கையிலும் இதே உணர்வுதான் இவ்வாறு, ஒருவருக்கொருவர் நம்மை அறியாமலேயே ஞானிகளுக்கு முன்னாடி மெய்யையே அழிக்கும் உணர்வுகள், வந்து கொண்டேதான் இருக்கின்றது.

மெய் என்றும் அழிவதில்லை. அதன் ஒளியின் சுடர் கொண்டு, என்றும் பொங்கிக் கொண்டேதான் இருக்கும். 

ஆக, மெய்யுணர்வின் தன்மையால், மெய்யைக் காக்க வேண்டுமென்ற எண்ணம் கொண்டு, நாம் இங்கே செயல்பட்டுக் கொண்டிருக்கின்றோம். மெய் ஒளியை அனைவரும் பெற எமது அருளாசிகள்.

(பக்கம் 32-34)
இன்று, யாம் கடும் தவம் இருந்து, நமது குருநாதர் காட்டிய அருள் வழிகொண்டு, உங்கள் உயிரை ஈசனாக மதித்து, அவன் வீற்றிருக்கும் ஆலயம் என்று உங்கள் உடலைக் கருதி,
ஈசன் வீற்றிருக்கக்கூடிய ஆலயம்
புனித நிலைகள் பெறவேண்டும்,
அந்தப் புனித எண்ணங்கள் தோன்ற வேண்டும்,
புனித மூச்சுக்கள் நீங்கள் வெளியிட வேண்டும்.
அந்த புனித மூச்சின் தன்மைகள்,
விஞ்ஞான உலகில் வரக்கூடிய, இருளை மாய்க்க வேண்டும்,
என்ற இந்த உணர்வின் தன்மை கொண்டு, குருநாதர் காட்டிய அருள்வழியை உங்களுக்குள் பதிவு செய்து கொண்டிருக்கின்றோம். யாம் எடுக்கக் கூடியது ஏகாந்த நிலை.

ஆக, யாம் எடுக்கக்கூடிய எண்ணம், அந்த மெய் ஒளியின் தன்மைகள் எனக்குள் இறையாகி, இந்த உணர்வின் தன்மை உங்களுக்குள் ஈசனாக நின்று, உங்கள் உயிரை இயக்கிக் கேட்டுக் கொண்டிருக்கும் இந்த உணர்வலைகளுக்குள்,
யாம் பேசும் இந்த உணர்வலைகள், ஆராதனையாகச் சேர்ந்து,
இந்த சுவாசத்தின் நறுமணம்
உங்கள் உயிரான நிலைகளிலே மோதச் செய்து,
இந்த உணர்வின் அலைகள், உங்கள் உடலான ஆலயத்திற்குள், உங்களுக்குள் நற்குணங்களாக இருக்கும் இந்த உணர்வுக்குள், அந்த சத்துக்குள் ஊடுருவி, அந்த மகிழ்ச்சியின் உணர்வுகளைத் தூண்டச் செய்து அந்த மகிழ்வான சுவாசத்தை பெறச் செய்வதற்குதான், இன்று யாம் செய்யும் நிலைகள்.

ஆக, உங்கள் உயிரை யாம் கடவுளாக மதித்து, இந்த உணர்வின் தன்மையைப் பெறச் செய்யும்போது, உங்கள் மகிழ்ச்சியின் எண்ண மூச்சலைகள் விடும்போது, உங்கள் உடலுக்குள் இருக்கக் கூடிய உங்கள் ஈசனுக்கும், அந்த உணர்வின் சக்தி கிடைக்கின்றது.

உங்களில் விளைய வைத்த நல்ல உணர்வின் சத்து, காற்றிலே காந்த அலைகளைப் பெருக்கிய பின், இந்தக் காற்றிலே நல்ல அலைகளாக பெருகுகின்றது. ஆக நல்ல அலைகள் பெருகும்போது,  நீங்கள் மகிழ்ச்சியுடன் இருக்கிறீர்கள் என்ற எண்ணத்தை, யாம் கூட்டி எண்ணிப் பார்க்கும்போது, அந்த மகிழ்ச்சியான உணர்வுகளை யாம் சுவாசிக்க நேருகின்றது.

ஆயிரம் பேர், நீங்கள் மகிழ்ச்சியாக இருக்கிறீர்கள் என்றால், அந்த மகிழ்ச்சியின் நிலைகளில் துன்பத்திலிருந்து விடுபட்டு, நாம் உணர்வின் ஆற்றல் கொண்டு மகிழ்ந்திருக்கிறோம் என்ற மூச்சலைகளை வெளியிடப் படும்போது, யாம் ஆயிரம் பேர் மகிழ்ந்திருக்கிறார்கள் என்ற எண்ணத்தை சுவாசிக்கும்போது, 
உங்களுக்குள் ஆயிரம் நட்சத்திரம், ஆயிரம் குணங்கள், ஆயிரம் வேற்றுமைகள் இருந்தாலும், இந்த உணர்வுகளெல்லாம் மறந்து,  மகிழ்ந்திருக்கிறேன் என்ற உணர்வைத் தனித்து யாம் சுவாசிக்கும்போது, ஆயிரம் பேரினுடைய உணர்வும், எமக்கு ஆற்றல் மிக்கதாகக் கிடைக்கின்றது. இதைப் போன்று தான், உங்களுக்கு யாம் சொல்லும் நிலையும். 

மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் அருளிய அருளின்படி, நீங்கள் ஒவ்வொருவரும் தியானம் எடுத்துக் கொண்டவர்கள்,  ஒருவர் துன்பபட்டுக் கொண்டிருந்தால், உடனே ஆத்ம சுத்தி செய்து, அவர்கள் துன்பத்தில் இருந்து விடுபட்டு, அந்த மகரிஷிகளின் அருளால், அவர்கள் இன்பமான நிலைகளில் இருக்க வேண்டும் என்று சொல்லுங்கள்.

(பக்கம் 43-45)
மூதாதையர்களுடைய உணர்வின் அலைகளின், தொடர்பு கொண்டவர்கள் நாம். அவர்கள் இறந்தபின், அந்த உயிராத்மாவில் அந்த உணர்வின் அலைகள் உண்டு. ஆனால், அந்த உணர்வின் மணங்களேதான் உண்டே தவிர, அதன் செயலாக்கம் இல்லை. 

இன்னொரு சரீரத்திற்குள் பட்டால்தான் அது இயங்கும். ஏனென்றால், அவர்கள் எடுத்துக் கொண்ட உணர்வு, இன்னொரு மனித உடலுக்குள் போனால், அங்கேயும் துன்பத்தை உண்டாக்கும். அதன் வழி அங்கே இயக்கும். ஆனால், அதிலிருந்து விஷத்தன்மைகள் மாறி, மீண்டும் வேறொரு சரீரங்கள் தான் பெறமுடியும். அந்த உணர்வுக்குத் தக்கவாறு, உடல் பெற்றுவிடுகின்றனர்.

இதை போன்ற உயிராத்மாக்களை நாம் சரீரத்திலிருந்து ஜெபமெடுத்தவர்கள், இவ்வாறு தியானித்தவர்கள் அனைவருமே இறந்தவர்களுடைய உயிராத்மா சப்தரிஷி மண்டலத்துடன் இணைந்து அவர்கள் ஒளி சரீரம் பெறவேண்டுமென்று நாம் சொல்லும்போது, அந்த உயிராத்மா சப்தரிஷி மண்டலத்துடன் இணைந்துவிடுகின்றது. ஆக இன்னோரு உடல் பெறும் நிலைகள் அங்கே கருகிவிடுகின்றது. இன்னொரு சரீரம் பெறும் உணர்வுக்குள், அது இயக்கி, ஒளி நிலை பெறுகின்றது.

ஆக, அந்த உயிராத்மாக்கள் ஒளிநிலை பெற்று, அங்கே சப்தரிஷி மண்டலத்திலிருந்து வரக்கூடிய, ஆற்றல் மிக்க சக்தியை அது சுவாசித்து, அந்த உணர்வின் நிலைகளில் அது ஒளி சரீரமாக வளர்கின்றது. 
இன்று இராக்கெட்டை விண்ணிலே ஏவி, அதன் அலைவரிசையில், தரையிலிருந்து அந்த செய்திகளை அறிந்து, அந்த உண்மைகளை அறிவது போன்று,  அந்த உயிராத்மாக்கள் அங்கே வளர, நாம் அடிக்கடி எண்ணும்போது, அந்த உணர்வின் சக்தியை நாமும் பெறுகின்றோம்.

ஆக, இதை நாம் முறைப்படி செய்தால், நாம் இந்த பூமியின் நிலையை விட்டு, அடுத்து நாம் இந்த சரீரத்தை விட்டுச் சென்றபின், அவர்கள் உணர்வலைகளுடன் தொடர்பு கொண்டு,
அந்தக் காந்த அலைகள், முன் சென்றிருக்கின்றது.
நம் உணர்வின் நிலைகளில்
இந்தப் புவியின் நிலைகளிலே, தொடர்பு கொள்ளும்.
மறந்து விடவேண்டாம்.

இப்பொழுது, நாம் எப்படி ஒருவருக்கொருவர் வெறுப்பான நிலைகளில் எண்ணி இறந்தவுடன், அவர் உடலுக்குள் போய்ச் சேர்ந்து, அவரைத் துன்புறுத்துகின்றோம். அதே உணர்வை, அங்கே பெருக்குகின்றோம்.

ஆக, இந்த உயிராத்மாவுக்குச் செயலில்லை. அந்த உணர்வுக்குள் அந்த மணத்தின் தன்மை கொண்டுதான், ஈர்ப்பின் சக்தி அங்கே போய்ச் செயல்படுவது.

ஆக இந்த உடலில் இருக்கும்போது, ஆற்றல் மிக்க சக்தியை நாம் இந்த வழிமுறைப்படி, நம் உயிராத்மாவுக்குள் செலுத்தி
நாம் விண்ணை நோக்கி, நம் எண்ணங்களை செலுத்தி
மூதாதையர்களை செலுத்தச் செய்து,
அந்த உணர்வின் எண்ணங்களை, அங்கே சுழலவிடவேண்டும்.

இந்த உடலைவிட்டு இந்த உயிராத்மா சென்றபின், அந்த உணர்வுடன் நாம் ஒளியாக பெறவேண்டும். அதை, நாம் இப்போதிருந்தே பழகிக் கொள்ள வேண்டும்.
(பக்கம் 47-49)
தாய் தந்தை மூதாதையர்களின் உயிராத்மாக்களை விண் செலுத்தினால்,
அந்த உயிராத்மா விண்ணிலே இருக்கும்போது,
நம் உடல் இங்கிருந்தாலும்,
நம் மேலே இருக்கக்கூடிய,  இந்தப் பாசம்
விண்ணிலே இருக்கக்கூடிய நிலைகளை, 
நாம் பெறமுடியும். 

நாம் இப்போதிருந்தே செய்து கொண்டால்தான்,  நாம் உடலை விட்டுச் சென்றபின்,  தாயின் ஈர்ப்பின் அணைப்பிலே, ஒளியின் சரீரமாக அங்கே போய்ச் சேருவோம்.

அம்மா அப்பா, சொத்துக் கொடுத்தார்கள், நன்றாக இருக்கிறோம் என்போம். அதன்பின், ஏதாவது சொன்னால், எவ்வளவு ஏசுகிறோம். எத்தனை பேசுகிறோம், எப்படா தொலைந்து போகும், என்று எண்ணுவோம். செத்தபின், நல்ல ஆடம்பரமாகச் செய்வோம். ஊர், புகழுக்காக வேண்டி எல்லாத்தையும் செய்வோம். அம்மா அப்பாவை மட்டும் உதைப்போம், திட்டுவோம், எனக்கு என்ன சொத்து வைத்திருக்கின்றாய்? என்று கேட்போம்.

இதைத் தான், நாம் பேசக் கற்றுக் கொண்டுள்ளோம். ஏனென்றால், நாமும் அப்படி, நமக்கு முன்பும் அப்படித்தான், நம்மையறியாமலேயே,
எல்லாம் தெய்வம் செய்யும்!
சாமி செய்யும்! சாமியார் செய்யும்!
ஜோசியம் செய்யும்! யாகம் செய்யும்!
இயந்திரம் செய்யும்! மந்திரம் செய்யும்!
என்ற எண்ணத்திலே செய்கிறோம்.

ஏதாவது குறை வந்துவிட்டால், இப்படித்தான் செய்கின்றோமே தவிர, நம் உயிரைக் கடவுளாக மதித்து, நாம் எண்ணிய உணர்வுகளை ஆற்றல் மிக்க உணர்வின் சக்தியாக வளர்த்து, நம் சொல்லுக்குள் அந்த செயலாக வேண்டும், என்று  மெய்ஞானிகள் காட்டிய நிலையை, யாரும் பின்பற்றவில்லை.

அந்த மெய்ஞானிகள் காட்டிய அருள்வழிப்படி, மெய்ஞானிகள் உணர்த்திய ஆற்றல்கள் காற்றிலே உண்டு. நீங்கள் சுவாசித்து எடுக்க முடியும், என்று ஞானியர்கள் காட்டியிருந்தாலும், காலத்தால் அவை அனைத்தும் மறைக்கப்பட்டுவிட்டது. மறைந்தாலும், இன்று நினைவுபடுத்தி எடுக்கச் சொன்னால், எங்களுக்கு நேரமில்லை என்று சொல்கிறீர்கள், இதுதான் இன்று நாம் சொல்லும் நேரம்.

ஏனென்றால், விஞ்ஞான அறிவின் நிலைகள் கொண்டு, துரித நிலைகளுக்கு கொண்டுவரப்படும்போது, யாராவது அதிகமாகச் சொன்னால், விஞ்ஞானத்தில் எல்லாம் சொல்லியிருக்கிறார்கள் என்கிறார்கள். சிலர். 

ஏட்டிலே படித்துக் கொள்வோம். அதை மனதிலே இருத்திக் கொள்வோம். எண்ணங்களைச் சிதற விடுவோம். மெய்ப்பொருளை நாம் அறிய மாட்டோம். ஆனால்,  அதை வியாக்யானப்படுத்துவோம். 

உட்பொருளை நினைவில் கொண்டு, சுவாசிக்கும் நிலையை இழந்துவிடுவோம்.  இவைகள் தான், இன்றைய பாடநிலைகளின் தன்மைகள்.

இதைப் போன்ற நிலைகளிலிருந்தெல்லாம், நம்மை மீட்டுக் கொள்வதற்கு, உங்களை நீங்கள் நம்புங்கள். உங்கள் உயிரை ஈசனாகக் கருதுங்கள். நீங்கள் எண்ணும் உணர்வுகள் அனைத்தையுமே, பிரம்மமாக சிருஷ்டித்துவிடுகின்றது, உங்கள் உயிர்.

தியானவழி அன்பர்கள் அனைவரும், நமது குருநாதர் அருளால் எல்லா மகரிஷிகளின் அருள் சக்தியைப் பெற்று, இந்த பிறவியில், பிறவியில்லா நிலை என்னும் "அழியா ஒளி சரீரம்" பெற எமது அருளாசிகள்.


(பக்கம் 52-56)
மெய் ஞானிகளின் அருள்ஒளி, என்றுமே அழிந்துவிடவில்லை. அந்த உணர்வின் ஆற்றல் கொண்டு, எல்லா மனிதருடைய எண்ணத்திற்குள்ளும் மறைந்திருக்கின்றது. குப்பைக்குள் மாணிக்கம் கிடந்தாலும், அதைக் கிளர்ந்து எடுக்கும் போது, ஒளியின் சுடர் நிச்சயம் வரும்.

நமக்குள் இருக்கக் கூடிய, 
மறைந்த உணர்வின்,
ஆற்றல் மிக்க ஒளியின் தன்மையைக் கிளர்ந்து, 
அந்தக் குப்பைக்குள் மறைந்து கொண்டிருக்கக்கூடிய நிலைகளைக் கிளர்ந்து வெளிப்படுத்தும் நிலைதான், நாம் மகரிஷிகளின் அருள் சக்தியை தியானத்தாலே வெளிப்படுத்தி, நமக்குள் உணர்வின் தன்மையை எண்ணச் செய்து,  அந்த மெய் ஒளியின் சுடருடன், இந்த உடலை விட்டுச் சென்றவுடன், என்றும் வெளிச்சம்.

ஏனென்றால், இந்த உடலை விட்டு, உயிர் ஒளி சரீரம் பெறவில்லை என்றால் இன்னொரு உடலை நாம் பெற்று, இருளுக்குள் தான் சிக்குவோம். இதுதான் சிவன்ராத்திரி. சிவம் என்பது, உடலுக்குள் இந்த உணர்வுகளை மறந்துவிட்டால், சிவன்ராத்திரியாகத்தான் ஆகிறது. இருளுக்குள் தான், நாம் சிக்குவோம்.

சிவன்ராத்திரியினுடைய தத்துவம் எண்ன?  இந்த உடலான நிலைகள், இருளுக்குள் நின்றுதான், நாம் பேசுகின்றோம், செயல்படுகின்றோம்.  இதை ஒளியாகக் கொண்டு வரவேண்டும். அந்த ஒளியின் சரீரத்தைக் கொண்டு வருவதற்குத்தான்,  நாம் செய்யும் இந்த நிலைகள்.

ஒவ்வொரு நாளும் சட்டை போடுவது போன்று, 
அழுக்கைத் துடைப்பது போன்று
வாழ்க்கையிலே நாம், நம் எண்ணத்திற்குள் வரும் அழுக்கைத் துடைப்பதற்கு ஆத்ம சுத்தியைப் பயன்படுத்தி, மகரிஷிகளின் அருள் சக்தியை, ஒவ்வொரு நிமிடமும் நமக்குள் செலுத்தி,  இந்த உடலை விட்டுச் செல்லும்போது,  ஒளி சரீரமாக ஆக வேண்டும்.

உடலுக்குள் நின்றே, உயிராத்மாவை ஒளி சரீரமாக்க ஆகவேண்டும். இந்த உடலைவிட்டுச் சென்றால், நாம் ஒளி சரீரம் பெறுவோம் என்ற உறுதியுடன், இந்த தியானத்தை மேற்கொண்டு, ஒவ்வொருவரும் பெறவேண்டுமென்று, எல்லா மகரிஷிகளையும் வேண்டிப் பிரார்த்திக்கின்றேன்.

நாம், இன்று எவ்வாறு கோயிலுக்கோ, ஞானியரையோ, தேடிச் செல்கின்றோமோ, அதைப் போல, ஞானியர் ஒவ்வொருவரும் சாதாராண மக்களைத் தேடி வருவதனுடைய உட்போருளே,
ஒரு மனிதன்,  எவ்வளவு துன்பத்தில் ஆழ்ந்திருக்கின்றானோ,
அந்தத் துன்பத்தை நீக்கி,
அந்தத் துன்பத்தை உருவாக்கிய
அந்தக் காரமான தீய உணர்வின் சக்தியை,
விலக்கச் செய்து, ஆற்றல்மிக்க,  உள் உணர்விலே தோன்றிய, நல்ல உணர்வின், அணுவின் ஆற்றலை  உருவாக்கச் செய்வதற்குத்தான்.

உதாரணமாக, ஒரு கருணைக் கிழங்கு, விஷத்தின் தன்மை கொண்டிருந்தாலும் அந்த விஷத்தை நீக்கிய பின், ஆற்றல் மிக்க நிலைகள் கொண்டு, நம் சரீரத்திற்குள் எப்படி சத்தாக ஆகின்றதோ, அதைப் போன்று, 
அரிசி உருவாவதற்கு,
அந்த உமியே பிரதானமாகின்றது.  இவ்வாறு, கடினமான உணர்வின் ஆற்றல்களாக இருந்தாலும், அதே ஆற்றல், உடலுக்குள் சென்றுவிட்டால், தீயதை விளைவிக்கும்.

நாம் நெல்லின் உமியை நீக்கியபின், அரிசி எவ்வாறு இருக்கின்றதோ, அதைப் போன்று, கடுமையான அந்த சுவாசத்தை நாம் சுவாசித்தாலும், நாம் சுவாசித்த அந்த உணர்வின் அலைகள் நம் உடலுக்குள் கலந்துவிடுகின்றது.

நெல்லின் உமியை நீக்கிவிட்டு, உள்ளே இருக்கக் கூடிய அரிசியை நாம் எவ்வாறு பெற்றோமோ,  அதைப் போன்று, 
அந்த மகரிஷிகள் 
விஷத்தின் ஆற்றலுக்குள் இருக்கக்கூடிய,
இயக்கும், அந்த உணர்வின் ஆற்றலை 
நாம் சுவாசிப்பதற்குதான்,  அவர்கள் பெற்று,
பெற்ற அந்த உண்மையினுடைய நிலைகளை,
மனிதன் உடலிலே செலுத்தி,
அந்தத் துன்புறுத்தும் உணர்வலைகளை நீக்கினார்கள்.

ஏனென்றால், அந்த உடலுக்குள்தான், அந்த துன்புறுத்தும்  உணர்வான அணுக்கள் விளைகின்றது. அந்த விளைந்த அணுவின் தன்மையை, அதை நீக்குவதற்கு அந்த மெய்ஞானியின் அருள் சக்தியின் தன்மையை,
யார் துன்புற்றுக் கொண்டிருக்கின்றனரோ
அவர் உடலிலே அந்த சுவாசத்தைப் பாய்ச்சி,  உணரச் செய்தார்கள்.
அங்கே இருக்கக் கூடிய துன்பத்தின் உணர்வலைகளை,
நெல்லின் உமியை நீக்கி, அரிசியை எடுப்பது போன்று,
மனித உடலுக்குள், துன்புறுத்திக் கொண்டிருக்கும்
அந்த உமியை நீக்கியது போன்று,
அந்தத் துன்பத்தை நீக்கி,
அந்த நல்ல வித்தான சத்தை,
அங்கே உருவாக்கினார்கள், மகரிஷிகள்.

உதாரணமாக, தங்கத்திற்குள் திரவகத்தை ஊற்றியவுடன், அதிலே கலந்திருக்கக் கூடிய பித்தளை, மற்ற மட்டமான சரக்குகள் எப்படி ஆவியாக மாறுகின்றதோ, அதைப் போல மகரிஷிகள் அவர்கள் எடுத்துக் கொண்ட ஜெபத்தின் தன்மை கொண்டு, ஒரு மனிதன் துன்புற்றுக் கொண்டிருக்கும் போது, அவர்களுடைய சுவாசத்திலே இதைச் செலுத்தி, அங்கே இன்புறச் செய்து, அந்த மகிழ்ச்சியான எண்ணங்களை உருவாக்கச் செய்து, அந்த உடலிலிருந்து வெளிப்படுத்தி, அதிலிருந்து வெளிப்படும் உண்மையான உணர்வலைகளை இவர்கள் சுவாசித்து, தன் உடலிலே ஆற்றல் மிக்க  சக்திகளாகப்  பெற்றார்கள்.

(பக்கம் 72-74)
நாம் சந்தர்ப்பத்தை ஏற்படுத்துவதைப் பொறுத்துத்தான், மனித நிலைகளிலிருந்து, நாம் விண் செல்லும் நிலை.

இன்று, நாம் எவ்வளவு கோடிக்கணக்கான பொருள் வைத்திருந்தாலும், பிறருக்கு நாம் தர்மத்தைச் செய்தாலும், புண்ணியத்தைச் செய்தாலும், பிறர் நன்றாக இருக்க வேண்டுமென்று தர்மம் செய்து பொருளைக் கொடுக்கின்றோம். உதவி செய்கின்றோம்.
அவ்வாறு உதவி செய்தும், அவருடைய சந்தர்ப்பம் முன்னேற்றத்திற்கு வரவில்லையென்றால், அவர் சோர்வடையும் போது, நாமும் சோர்வடையத் தான் செய்வோம். 

நாம் எவ்வளவு செய்தும், அவர் முன்னேற்றத்திற்கு வழி இல்லையே என்று நம்மை அறியாமலேயே, நாம் சோர்வடைந்துவிடுவோம். ஆக, அவர் அடிக்கடி அந்தத் துன்பத்தினுடைய நிலைகளைச் சொல்லச் சொல்ல, நாம் கேட்கக் கேட்க, நமக்குள் வந்துவிடும்.ஒரு பாலுக்குள் விஷத்தைப் போட்டவுடன், உடனே மாய்க்கச் செய்துவிடும்.

ஒரு மனிதன் மகிழ்ச்சியான நிலைகள் இருக்கும்போது, திடீரென்று ஒரு பயத்தை உண்டாக்கும் ஒரு உணர்வைப் பாய்ச்சி விட்டால், நல்ல எண்ணங்கள் மறைந்து, பயத்தின் உணர்வலைகளில் துடித்துக் கொண்டிருக்கும். ஆனால், பயத்தால் துடித்துக் கொண்டிருக்கும் நிலைகளில், நீங்கள் மகிழ்ச்சியான செய்திகள் எவ்வளவு சொன்னாலும் ஏற்றுக் கொள்ளும்நிலை அங்கே இருக்காது. ஏனென்றால்,  விஷத்தின் ஆற்றல், அத்தகைய நிலை பெற்றது.

இதைப்  போன்றுதான், மனிதனுடைய வாழ்க்கையில் வரக்கூடிய எத்தகைய இன்னல்களாக இருந்தாலும், அதை மாற்றிமைக்கக்கூடிய சக்தியாக நமக்குள் பெற வேண்டும். 

இந்த சந்தர்ப்ப நிகழ்ச்சியை நாம் பெறுவதற்குத்தான், நாம் தவறே செய்யாதபடி, தர்மங்கள் ஆயிரம் நாம் செய்தாலும், அந்த தர்மம் செய்த அந்த உணர்வின் தன்மையை என்றும் நிலைக்கச் செய்ய வேண்டுமென்றால், நாம் முறைப்படி அந்த மகரிஷிகள் காட்டிய அந்த அருள்வழிப்படி, மகரிஷிகளின் அருள் சக்தியைப் பெற்று, அந்த ஆற்றல்மிக்க நிலைகளை நமக்குள் வளர்த்துக் கொண்டபின், எந்த நிமிடம் நமக்கு தொல்லைகளோ, மற்ற நிலைகளோ வந்தாலும், ஆத்ம சுத்தி செய்ய வேண்டும்.

நமது உடலுக்குள், பிறருடைய துன்பத்தை நுகர்ந்து பார்க்கும் போதுதான், அவருடைய துன்பத்தை நாம் அறிகின்றோம். அதன் பின் தான், அவருக்கு நல்லதைச் செய்கின்றோம். அவரது துன்பமான உணர்வுகள் நமக்குள் வந்து, அதை உணர்ந்தபின், நாம் உதவி செய்தாலும், அந்த உணர்வின் அலைகள் நமக்குள் தேங்கிவிடுகின்றது. அதை நாம் சுத்தப்படுத்தவில்லை என்றால், அவர் உடலில் விளைந்த அந்த உணர்வின் நிலைகள், நம் உடலிலேயும் விளைந்து விடுகின்றது.

ஏனென்றால், இயற்கை ஒன்றுக்குள் ஒன்று, உணர்வின் ஈர்ப்பு காந்தம், எல்லாவற்றிலும் காந்தங்கள் கலந்துள்ளது.  நாம் எந்த உணர்வின் தன்மையை நினைவுபடுத்துகின்றோமோ, அந்த உணர்வின் தன்மையை இழுத்துவிடும்.


(பக்கம் 81-87)
அன்று வியாசகன் தன்னையறியாமல் பயத்தாலே, தான் வாழ்வதற்காக வேண்டி, தான் அலறும் துடிப்புகொண்டு, ஆவி என்று பயந்தான். 
அந்த பயத்திற்குள், துடிப்பான கரண்ட் உற்பத்தியாகி,  அதே சமயம், தனக்கு அந்த மீன் உதவி செய்த, இந்த இரு உணர்வின் அலைகளும்  சேர்த்துத்தான், இந்த ஆற்றல் மிக்க சக்திகள்  அவருக்குள் விளைகின்றது.

அதைப் போன்று, அந்த சக்தியின் துணை கொண்டுதான், அதை எடுக்கின்றார்கள். இதைப் போல,
யாம் உங்களுக்குள் உணர்த்திய
இந்த ஆற்றல்மிக்க நிலைகளைத் தூண்டச் செய்து,
இந்த உணர்வுக்குண்டான,  பயத்தால் அல்ல
தன் எண்ணத்தாலே புலனறிவுக்குள்
அந்த மெய்ஞானிகள் கண்ட, அந்த உணர்வின், அணுவின் தன்மையை
உங்களுக்குள் உணர்வின் சக்தியை ஊட்டி
அந்த உணர்விற்குள், 
குருநாதர் அருள் சக்தியை,
உங்களுக்குள் பெறச்செய்வதற்குத்தான், 
இதைச் செய்கின்றோம்.  நீங்கள், இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

இன்று மனித வாழ்க்கையில் நாம் எவ்வளவு திடசாலியாக இருந்தாலும், நாம் எதையும் சாதிப்பேன்  எப்படியும் செய்வேன் என்று வலுகொண்ட மனிதனாக இருந்தாலும், ஒரு சமயம் அச்சுறுத்தும் தன்மை கொண்டு, ஒரு பயத்தைப் பற்றிய கதையை பேசிக் கொண்டிருக்கின்றோம், என்று வைத்துக் கொள்ளுங்கள்.

அவர் மிகவும் தைரியசாலிதான், கெட்டிக்காரர்தான், இருந்தாலும், நாம் இங்கே பேச்சுவாக்கிலே இரண்டு மூன்று பேர் ஒரு மரத்திற்கு அடியில் போனவுடன், திடீரென்று ஒரு ஆவி வந்து, இவர் உடலிலே புகுந்து, பல இம்சைகள் செய்தது  என்று நாம் பேசிக் கொண்டிருக்கின்றோம்.

ஆனால், அதே சமயம் இன்னொருவர் வலுவானவர், அது உங்களுக்கு தேவையே இல்லை, எதை எடுத்தாலும் பேய் இருக்கிறது, எந்த பேய்யா இருக்கின்றது? என்று, தன் வலுவான உணர்வுடன் கலந்து பேசிக் கொண்டிருப்பார்.

இல்லை ஐயா, அங்கே போனவுடன், சல சல என்று சத்தம் கேட்கின்றது. கேட்டவுடன், அப்படி வந்து ஆவி பிடிக்குதுங்க. இப்படி நிறைய பேரைப் பார்த்தோமுங்க, என்பார்.

அடப் போய்யா, எங்களுக்கெல்லாம் தெரியாதாக்கும், என்று வலுவானவர் சொல்லிக் கொண்டே வருவார்.  இவர் சொல்லச் சொல்ல,  இங்கே ஏறிக் கொள்ளும்.

இந்த உணர்வு அதிகமான பின், இவர் எந்த மரத்தைச் சொன்னாரோ, அந்த மரத்திற்கு அருகில் போனவுடன், சும்மா எலியோ, அல்லது ஏதாவதொன்று, சல சல என்று சத்தம் கேட்டால் போதும், உடனே இவருக்கு, அவர் சொன்ன நினைவு வந்துவிடும்.

திடுக் திடுக். என்று, அந்த நினைவின் மேலே எண்ண ஓட்டத்தைச் செலுத்திவிடும். அப்பொழுது எதிர்பார்க்காமல், சத்தம் வந்தால், என்றால் போதும்,
ஆக, இவர் எவ்வளவு வலுகொண்டு இங்கே மறுத்தாரோ,
வலுகொண்டு மறுத்த அந்த உணர்வுகள்,
அவருக்குள் இந்த பயத்திற்குள்
இந்த காந்தம், அந்த உணர்வுக்குள்
துடுக் துடுக். என்கிறபோது,
கரண்டில், எர்த் பாஸான மாதிரி
அந்த ஆவி இங்கே வந்துவிடும்.

நான் என்ன சொன்னேன்? இந்த மாதிரிப் பண்ணிவிட்டார்கள் என்று வீட்டிலே சொந்தக்காரர்களோ, மற்றவர்களோ அதை எண்ணும்போது, இதே எண்ணத்திலே இருக்கும்போது, அவர்கள் எண்ணினால், அந்த உயிராத்மா என்ன செய்யும்? அவர்கள் உடலுக்குள் போய்விடும்.

அவர்கள் எண்ணும்போது, எனக்கு இப்படிச் செய்தார்களே, பாவி என்று உணர்வைக் கூட்டி இறந்துவிடுவார்கள். ஆனால், உடலுடன் இருப்பவர்கள் நான் என்ன சொல்லிவிட்டேன்? இந்த மாதிரி பண்ணிவிட்டது, என் மேலே பழியைப் போட்டுப் போய்விட்டானே என்று அவர்கள் எண்ணுவார்கள்.

ஆக, உணர்வின் நிலைகளுடன் போனவுடன், அந்த ஆத்மா அங்கே போய், பழிதீர்க்கும் உணர்வுடன், அங்கே ஆட்டிப்படைக்கும். சொல்லிவிட்டுச் செத்தவுடன், அதே மாதிரி பல உணர்வின் அலைகள் இங்கே வந்தவுடன், காந்தம் இழுத்து, அந்த ஆத்மா அங்கே போய் என்ன செய்யும்?

அதையும் பிழைக்கவிடாதபடி, அழித்துவிடும். ஏனென்றால், மனிதனுக்குள் சேர்த்துக் கொண்ட இந்த உணர்வின் அலைகள், அப்படித் தான் இயக்கும்

ஏனென்றால், உயிரின் துடிப்பு கொண்டு, இந்த உடலிலே எதை வளர்த்துக் கொண்டோமோ, இந்த உணர்வின் அலைகள் நாம் எப்படி கம்ப்யூட்டர், சூப்பர் கம்ப்யூட்டர் என்று சொல்கின்றோமோ,
ஒரு உயிரான துடிப்பிற்குள்
உயிரணுக்கள், நாம் புழுவிலிருந்து மனிதனாக வரும் வரையிலும்,
மனிதனுக்குள் எடுத்துக் கொண்ட
ஒவ்வொரு உணர்விலும் வளர்த்துக் கொண்ட,
அந்த எண்ண அலைகள்
தனக்குள் சமைத்த, அந்த உணர்வின் அணுவின் திசுக்கள்
அதை அலைகளாக மாற்றி,
இப்பொழுது இருப்பது, ஒரு அலையாக இருக்கின்றது.

ஆனால், அதே சமயம் அணுக்களின் நிலைகள், சிலிக்கானுடைய தன்மைகளை, கம்ப்யூட்டரில் போட்டவுடன், எதை எதையெல்லாம் பதிவு செய்வதற்காக வேண்டி, இந்த உணர்வலைகளை பாய்ச்சப்பட்டு, சிலிகான்களாக பதிவு செய்கிறோமோ, அதேபோல,
எண்ணத்தின் உணர்வலைகள்
நமக்குள்  சிலிகான்களாக  மாறுகின்றது.
ஆனால், அதே சமயம் உயிருடன் துடிப்பு கொண்டிருக்கும்போது அதே உணர்வலைகள் கொண்ட, ஒரு காந்தத்தின் அலைகள் மோதியவுடன், இந்த அலைகளில் தொடர் கொண்டு அந்த ஆத்மாவை இழுத்துவிடும். ஏனென்றால்,  இந்த அலைகள் தொடர்ந்து போய்க் கொண்டே இருக்கும்.

இதைப் போன்று தான், இன்று விஞ்ஞானத்தில் எப்படி இருக்கின்றதோ, அன்று மெய்ஞானிகள் கண்டுணர்ந்த அந்த உணர்வின் தன்மைகளும் இதுவே. இப்படித்தான், அது மாறிக் கொண்டிருக்கின்றது.

இப்பொழுது, மனித வாழ்க்கையில் நாம் எப்படி இருந்தாலும், சண்டை போடாதவர்கள் இல்லை, வெறுப்பில்லாதவர்கள் இல்லை. ஏதாவதொரு பயத்திலிருப்போம். ஒவ்வொரு வீட்டிலும் பல நிலைகள் வரப்படும்போது, ஒருத்தர் மேல் பழி சுமத்திக் கொண்டே இருப்பார்கள்.

இன்று வரதட்சணை கொடுமைகளை எடுத்துக் கொண்டால், இதை விட ஜாஸ்தி, குடும்பமே ஏகமாக, அந்த வேதனையும் சங்கடமும் பட்டிருப்பார்கள். எனக்கு இப்படியெல்லாம் ஆகிவிட்டதே என்று அந்த உயிராத்மா இறந்தால், இந்த உயிராத்மா அந்த உடலுக்குள் போனால், அந்த குடும்பத்தை சின்னா பின்னப்படுத்தும். அதிலிருந்து தப்ப முடியாது.
இப்படியெல்லாம் விஷங்கள் வளர்ந்து, ஒரு குடும்பத்திற்குள் மதத்தின் அடிப்படையில் எவ்வளவுதான் வளர்ந்தாலும், எவ்வளவு கோடிக்கணக்கான பொருளை வைத்திருந்தாலும், அவர்களுக்குள் உண்மை இருக்காது.

காரணம், நாம் பதிவு செய்துகொண்ட "சிலிகானுடைய நிலைகள்" அந்த அலைகள் நமக்குள் ஓடிக் கொண்டே இருக்கும்.
இந்த உணர்வின் சத்துக்கள் உமிழ்நீராக மாறி,
நம் உயிராத்மாவுடன் சேர்க்கும்போது,
சிலிகான்களாக மாற்றிவிடும்.
அந்த உணர்வுக்கொப்பத் தான்
அடுத்த உடல் எடுக்கும் தன்மையை, நிச்சயம் மாற்றிவிடும்.

மனிதர்களிலே, நாம் யாரும் தவறு செய்ய வேண்டுமென்று எண்ணுவதில்லை.  நல்லதைச் செய்யும் எண்ணத்தை யார் ஒருவர் வைத்திருக்கின்றாரோ, அவர்கள் பிறர் செய்யும் துன்பத்தைப் பாசத்துடன்,  இப்படி ஆகிவிட்டதே  என்று ஏங்கினால் போதும், அவருடைய துன்ப அலைகள் இவருக்குள் எல்லை கடந்து, இவருக்குள் வியாதியாகி,  நல்லவர்களாக இருப்பவர்களும் புலம்ப ஆரம்பித்துவிடுவர்.
இதை காப்பதற்கு, நமக்கு காப்பு வேண்டுமல்லவா?
தயவு செய்து சிந்தித்துப் பாருங்கள்.
யாரும் கெட்டவர்கள் அல்ல.
நல்லவர்களாக எண்ணி நாம் இருக்கும்போது,
சந்தர்ப்பங்கள், அந்த பாசம் என்ற நிலைக்கு வரப்படும்போது,
விஷம் என்ற தன்மை, நமக்குள் ஊடுருவி,
இந்த பாசம் அதற்குள்தான் துடிக்குமே தவிர, விஷத்திற்குள் அடிமைப்பட்டதுதான்.

ஆக,  இந்த விஷத்தை முறிக்கும் இந்த ஆற்றலின் நிலைகள்,  வியாசகரைப் போன்று, அந்த சந்தர்ப்ப நிகழ்ச்சியை நிகழ்த்துவது,  மெய்ஞானியின் அருள் ஒளிதான். 
ஆக அந்த சந்தர்ப்பத்தை நாம் ஏற்படுத்தி, மெய் ஒளியை நாம் பெற வேண்டுமென்றால், நாம் இந்த தியானம் செய்யவேண்டும். அந்த சந்தர்ப்பத்தை, நாம் ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். எமது அருளாசிகள்.

(பக்கம்  89-92)
ஒவ்வொரு நிமிடமும், நமது குருநாதர் அருள்வழி கொண்டு, அவரின் ஆற்றலின் துணை கொண்டு மகரிஷிகளின் அருள் ஒளியைப் பெற்று, அருள் ஒளிகளினுடைய நிலைகளை நீங்கள் பெறுவதற்கு, இந்த சந்தர்ப்பத்தை நிகழ்த்துகின்றோம்.

இதை நல்ல சந்தர்ப்பமாக பயன்படுத்தி, சாதாராண வாழ்க்கையில் சொன்னது போல என்னத்த  என்ற சோர்வை விடுத்து உங்கள் நல்ல உணர்வுகள் அழிந்துவிடாதபடி நாம் நிச்சயம் மகரிஷிகளின் அருள் ஒளியை பெறுவோம் என்றும், இந்த மனித வாழ்க்கையில் சேர்த்த இருளை நீக்கிவிட்டு நிச்சயம் அந்த ஒளி நிலை பெறுவோம்  என்ற ஏக்க உணர்வுடன் இருக்கப்படும்போது,
வாழ்க்கையில் எத்தகைய துன்பங்களை சந்தித்தாலும்,
துன்பங்கள் வரும் நேரங்களில் தான்
அந்த மெய் ஒளியின் உணர்வை, நாம் கூட்டுவதற்கு, இந்த சந்தர்ப்பம் ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்.

ஆக, நமக்குள் வரக்கூடிய துன்பத்தை மறந்து, நாம் மெய்ஞானியின் அருள் ஒளியைப் பெறுவோம் அந்த அருள் ஒளியாலே, வரக்கூடிய நிலைகளை நம் சொல்லும் செயலும், நம் பேச்சும் மூச்சும், உலகத்தை ஒளியின் சுடராக்கச் செய்யும். ஒருவரை மகிழச் செய்யும் எண்ணங்களாக, நம் பேச்சும் மூச்சும் இருக்கும்,

அந்த நிலைகளை நாம் பெறுவோம் என்ற நிலைகளில், எத்தகைய துன்பங்கள், எந்த நேரத்தில் வந்தாலும், நமது குருநாதர் அருள் ஒளி கொண்டு,  நாம் அதைப் பெறுவோம் என்று உறுதி கொண்டு,
அந்த உறுதியான நிலையைப் பெறுவதற்குண்டான சந்தர்ப்பம்
எந்த மகரிஷிகள், அவர்கள் எதை விளைய வைத்தார்களோ, அந்த உணர்வலைகளை, சிலிகான்களை, உங்களுக்குள் பதியச் செய்திருக்கின்றோம். இனி, இதைக் கூட்டிப் பெருக்குவது, உங்கள் கையில்தான் இருக்கின்றது. 

நீங்கள் பெறவேண்டுமென்ற ஆசை எனக்கிருக்கிறது. அதை யாம் பதிவு செய்கின்றோம். நீங்கள் அனைவரும் அதைப் பெற வேண்டுமென்ற ஆசையில், யாமும் ஒளி நிலை பெறுகின்றோம்.

என் பேச்சும், மூச்சும், உலகம் நன்மை பெறச் செய்யும்.  யாம் எடுத்துக் கொண்டது, என் பேச்சும் மூச்சும் உலகம் நன்மை பெறவேண்டும் என்ற எண்ணத்தைச் செலுத்தி, அதை யாம் பரப்புகின்றோம்.

இதையே நீங்களும் எடுத்து, உங்கள் உடலுக்குள் இதன் நிலைகளைப் பெருக்கும்போது, உங்களுக்குள்ளும் உங்கள் பேச்சும் மூச்சும் பிறருடைய நிலைகளை அது நன்மை பெறச்செய்யும்

(பக்கம் 96-105)
ஆக மனிதனின் கடைசி நிலை ஒளி சரீரமே.  எனவே, அதை விட்டுப் பரிணாம வளர்ச்சியில் நாம் மனிதனாக வளர்ந்தாலும், நமக்குள் ஆசாபாசமும், அரச மோகத்தின் நிலைகள் கொண்டு, நம்மையறியாமல் விஷம் சூழ்ந்து கொண்டால், அதை துடைக்காத வண்ணம் விஷத்திற்குள் சிக்கிவிட்டால், விஷத்தின் சரீரமாக ஆரம்ப நிலையாக, மிருக நிலைகளை நாம் பெற்றுவிடுவோம்.

அதிலிருந்து மீள்வதற்கு, இதைத் தவிர வேறு சிறந்த வழி இல்லை. நீங்கள் அனைவரும், அந்த ஒளி சரீரம் பெறவேண்டுமென்று, உங்கள் எண்ணத்தைக் கொண்டு, தியானியுங்கள்.
யாரிடத்திலும் பிரதிபலனை எதிர்பார்க்க வேண்டாம்.
நம்மைப் புகழ வேண்டாம்.
புகழுக்காகச் செய்கிறோமென்று எண்ண வேண்டாம்.
மனதார, நம் உள்ளத்திற்குள் எடுக்கின்ற உணர்வின் சக்தி,
இந்த மகிழ்ச்சியின் நிலைகளில், பிறர் மகிழ
நம்மை அறியாமலே பிறர் மகிழ,
அந்த மகிழ்ச்சியை சுவாசித்து
நாம் அந்த ஆனந்தத்தை நமக்குள் பெற, இந்த எண்ணத்தைத் தோற்றுவிக்க வேண்டும்.

இதுதான் மனிதனின் கடைசி நிலைகள். ஆக,  நாம் இதையெல்லாம் பெறுவோம் என்று உறுதிப்படுத்திக் கொண்டு, இனியும் பெறவேண்டும் என்று எல்லா மகரிஷிகளை வேண்டி, யாம் பிரார்த்தித்துக் கொள்கின்றோம்.

நாமும் இத்தகைய வாழ்க்கையில், எத்தகைய இன்னல்கள் இருந்தாலும் அத்திரி மகரிஷியைப் போன்று, இந்த வாழ்க்கையில் வரக்கூடிய நிலைகள்,
நமக்குள் அது பெரிது, இது பெரிது
என்ற நிலையை உதறித்தள்ளிவிட்டு, 
நாம் பெறும் மெய்வழியே பெரிது  என்றும்,
நாம் செயல்படுத்தும் நிலைகளில், பிறருடைய நிலைகள் மகிழ, நாம் பார்ப்பதே நமக்குப் பெரிது.  அந்த மகிழ்வான உணர்வு,  நமக்குள் விளைந்த அந்த ஒளியின் தன்மையே நமக்குப் பெரிது, என்ற இந்த மகிழ்ச்சியின் ஓட்டத்தை நீங்கள் பெறவேண்டும். இந்த எண்ணத்துடன் வாழ்க்கையைத் தொடங்குங்கள்.

உணர்வைத் தனக்குள் ஒளியாக மாற்றி, கடைசி நிலை பெறத் தகுதியானதுதான் மனிதனின், இந்தக் கடைசி சரீரம். நாம் அனைவரும் அதை விரும்ப வேண்டும்.

ஏனென்றால், விஷத்தைத் தனக்குள் அடக்கி, ஒளியாக மாற்றும் எண்ணம் வேண்டும். நாளை இந்த உடலை விட்டு, இந்த உயிராத்மா சென்றுதான் ஆகவேண்டும்.

ஆக இந்த முறைப்படி பழக்கிவிட்டால், நாம் உடலை விட்டுச் சென்றபின், நம் குழந்தைகள் இதைப் போன்று, சப்தரிஷி மண்டலத்துடன் இணைந்து, அந்த உயிராத்மா ஒளி சரீரம் பெறவேண்டுமென்று, உந்தி அவர்கள் தள்ளலாம்.

நாம் இதைப் போன்று, மூதாதையரகளின் உயிராத்மாக்களை விண்ணிலே செலுத்தி, அந்த சத்தின் நிலையை நாம் பெற்றுக் கொண்டால், நமது உணர்வின் எண்ணம், அந்த சப்தரிஷி மண்டலங்களுடன் தொடர்பு கொள்கின்றது.

நாம் இந்த உடலைவிட்டுச் சென்றபின், கடைசி நிமிடம் வரையிலும், அந்த எண்ணங்கள் நமக்குள் ஓடிக் கொண்டேதான் இருக்கும். 

இந்த உணர்வின் துடிப்பலைகள் கொண்டு, நாம் இதைப் போல அந்த சப்தரிஷி மண்டலத்துடன் இணைய வேண்டுமென்று, அந்த உயிராத்மாக்களை உந்தித் தள்ளினால்தான், அந்த உயிராத்மாக்கள் அங்கே செல்ல முடியும்.

(பக்கம் 114-116)

கணவன் மனைவி இருவரும், ஒருவருக்கொருவர் நமது குருநாதர் காட்டிய அருள்வழியில், ஆத்ம சுத்தி செய்து கொண்டு, இதைப் பழகிக் கொண்டால், இப்பொழுது, சரீரங்கள் இரண்டாக இருந்தாலும், பெண்களுக்குண்டான அமில சக்திகள் அதிகம். ஆக, இருவருமே அடிக்கடி அந்த எண்ணங்கள் கொண்டு இருந்தால், அந்த ஆற்றல்மிக்க சக்திகளை பெறமுடிகின்றது.

ஆக, இந்த உடலை விட்டு இவர்களது உயிராத்மாக்கள் சென்றாலும், ஒரே சரீரமாக அங்கே இயங்கி,  அதாவது, ரிஷி சக்தியின் தன்மையில் ஒரு கோளாக, ஒரு நட்சத்திரமாக இயங்கி,  பேரண்டத்தையும் தனக்குள் சிருஷ்டிக்க முடியும்.

இன்று ஒரு பிரபஞ்சத்தை, சூரியன் எப்படி தான் எப்படி ஆட்டிப்படைக்கின்றதோ, அதைப் போல, இந்த சப்தரிஷிமண்டலம் என்பது,  ஒரு கணவன் மனைவியினுடைய நிலைகளில், இரு உயிராத்மாக்களும் ஒரே உயிராத்மாவாக ஆகும் பொழுதுதான், அந்த ரிஷியின் சிருஷ்டிக்கும் தன்மை பெறுகின்றது.

ஆக, பேரண்டத்தின் பேருண்மையினுடைய நிலைகளை, இப்பொழுது நாம் எப்படி, நட்சத்திரங்களிலிருந்து பல அலைகள் தெரிகின்றதோ, இதைப் போன்று வெளிப்படும் உணர்வலைகள், மண்டலங்களாக சுழன்று கொண்டு, புறத்திலிருந்து வரக்கூடிய பல உணர்வின் ஆற்றல்களை அது மாய்த்து, அதற்குள் நின்று,  தனக்குள் பாதுகாப்பான நிலைகளை அது செயல்படுத்தும்.

மனிதர்களாக இருக்கக்கூடியவர்கள்,
கோபமான உணர்வை செலுத்திவிட்டால்,
இந்த உணர்வலைகள்,  நம் ஆத்மாவின் முன் நின்று
அந்த குணத்தின் தன்மையைக் காக்க,
அந்த உணர்வை சுவாசித்து,
அந்த உணர்வு கொண்டே, நாம் செயல்படுகின்றோம்.

இதைப் போன்றுதான், வேப்பமரம் கசப்பின் தன்மையைத் தனக்குள் எடுத்துக் கொண்டால், அந்த மணம், அந்த மரத்திற்கு முன்பு அதிகமாக வரும்போது, கசப்பின் தன்மையைத் தவிர, மற்ற அலைகளைத் தனக்குள் வராதபடி, பாதுகாப்பாக வளர்த்துக் கொள்கின்றது.

இதைப்போன்றுதான்,  இந்த மனித உடலுக்குள்
இரு சரீரங்களும், ஒரு சரீரமாக ஆக்கப்படும்போது,
சப்தரிஷி மண்டலங்களாக செயல்படும்போது,
இந்த உணர்வுகள், பாசத்துடன்
ஒரே குடும்பமாக, ஒரே எண்ணமாக
அது வளர்ச்சி பெறும் நிலைகள் வரும்போது,
இரு சரீரங்களும் ஒன்று சேர்ந்து,
தான் எடுத்துக் கொள்ளும் இந்த உணர்வலைகள்
தனக்குள் ஆத்மாவாகப் படைக்க செய்து,
விண்ணிலிருந்து வரும் ஆற்றலின் தன்மையை
அணு சக்தியாக மாற்றி,
தன் உணர்வின் ஆகாரமாகத் தேடி,
அதனின் கூட்டுக்குள்
எப்படி ஒரு சூரிய குடும்பம், ஒரு பிரபஞ்சமாகத் தோன்றி, அகண்ட நிலைகள் பெற்றதோ, இதைப் போன்று, நம் உயிராத்மா விண்ணிலே வரக்கூடிய உணர்வின் ஆற்றல்மிக்க தன்மையை, தனக்குள் பிரபஞ்சமாக அமைத்துக் கொண்டு,
விண்ணின் ஆற்றலை, நுண் அணுக்களாக மாற்றி,
அந்த அணுவிற்குள் அணுவாக நின்று,
ஆற்றல்மிக்க சக்தியாக, என்றும் பதினாறு 
என்ற நிலையான நிலைகள், நாம் அனைவரும் பெறமுடியும்.


(பக்கம் 132-134)
இன்று கெமிக்கல் கலந்த அணுக்களை, அதாவது செல்கள், அதாவது சிலிகான்களைப் போன்று, நமக்குள் உணர்வின் எண்ணங்களைப் பதியச் செய்து, நமக்குள் ஒவ்வொரு உணர்வுக்குள்ளும், இன்று, விஞ்ஞான அறிவு கொண்ட, கெமிக்கல் கலந்த உணர்வின் ஆற்றல் நமக்குள் பதிந்தபின், அதிலிருந்து நாம் திசை திரும்பவே இல்லை.
மனிதன் என்ற எண்ணமே, இங்கே போய்விட்டது,
இயந்திர வாழ்க்கை வாழும் நிலைக்கு,
இன்று நாம் வந்துவிட்டோம். 
இவ்வாறு, நாம் அந்த நிலைகள் கொண்டு, இதை நமக்குள் பதிவு செய்தபின், இருந்த இடத்திலே இருந்துகொண்டே, ஆட்டிப்படைக்கும் தன்மைக்கு வந்துவிட்டது, இன்றைய விஞ்ஞானம்.

ஆக, மனிதனுடைய சிந்தனைகள் சிதறுண்டு போகும் நிலைகளும், சூரியனே சுக்குநூறாகிக் கரையும் நிலைக்கும், இந்த பூமியினுடைய நிலைகளும், அணுக்களாக பொசுங்கிப் போகும் நிலைக்கு வருகின்றது அல்லது இருள் சூழ்ந்த நிலைக்கு வருகின்றது.

இன்று, பூமியினுடைய நிலைகளில் அணுகுண்டு வெடித்தால், இவன் பதுக்கி வைத்திருக்கும், லேசர் கதிரியக்கங்கள், நீருக்குள்ளும், நீர் நிலைகளுக்குள்ளும் பதித்து வைத்திருக்கின்ற அணுக்கள் வெடிக்கும். இதை அப்புறப்படுத்துவதற்கு முயற்சி எடுக்கின்றனர்.

அவ்வாறு எடுத்தாலும், அணு நீர் மூழ்கியினுடைய நிலைகளை ஒரு இயந்திரத்திற்குள் பாய்ச்சி இருந்தாலும், அது ஒவ்வொரு இயக்கத்திற்குள்ளும் அணு கதிரியக்கங்கள் தாக்கி, அதை நீர் நிலைகளில்தான் மறைக்க வேண்டும்,

அல்லது வேறொரு மண்ணுக்குள் பதிய வைத்தாலும், பூமியின் வெப்ப அலைகள் கலக்கப்பட்டு, இந்த அணுக்கள் மண்ணுக்குள் பூமிக்குள் ஊடுருவி,  வெகுதூரம் ஊடுருவி வரும் நிலைகள் வருகின்றது.

அவ்வாறு வந்தாலும், இன்று வரக்கூடிய நிலநடுக்கங்கள் இவன் அணு உலையாலே, இவன் அணுக்களைக் கண்டுபிடித்து,  மண்ணுக்குள்ளே மறைக்க வேண்டுமென்று, இவன் எண்ணுவான்.

ஆனால், இந்த அணுக்கதிரியக்கங்கள் பூமிக்குள் ஆனவுடன், இந்த இயற்கையின் துடிப்பு கொண்டு, தன் கதிரியக்கச் சக்தியை அதிகமாக காட்டும். அங்கே எதிர்நிலையான நிலை வரப்படும்போது, பூமியில் நிலநடுக்கம் ஏற்படும்,  எல்லாமே போய்விடும்.  இந்த அளவுக்குத்தான்,  உலகின் தன்மைகள் இருக்கின்றது.

ஆக, இயற்கையின் நிலைகளில் ஒவ்வொரு நிமிடமும், மனிதனின் உணர்வுக்குள் எட்டியதை அசுத்தப்படுத்திக் கொண்டு, மனித உணர்வுக்குள்ளும் பதியச் செய்து, இன்று மனிதன் என்ற நிலையே கூண்டுடன் அற்றுப்போகும் நிலை வருகின்றது.

ஆனால், இதுபோன்று வெடித்தாலும், வெடிக்கும் நிலைகள் கொண்டு, புகை மண்டலங்களாகக் கூட்டப்பட்டு, சூரியனுடைய ஆற்றல்மிக்க சக்திவாய்ந்த கதிரியக்கங்கள் படாதபடி, பூமியில் இருக்கக்கூடிய, நீர் வளங்கள் அனைத்துமே, உறையும் தன்மை பெறும். இங்கே, நாம் இருக்ககூடிய நிலைகள் அனைத்துமே,  உறையும் தன்மை வருகின்றது.

இதிலிருந்து வெளிப்படும் இந்த கதிரியக்க சக்தியின் தன்மைகள் சூரியனுடைய கதிர் வெப்பங்கள் கலந்தவுடன், இதிலிருந்து ஆவியாக வெளிப்படுத்தி, இதே உணர்வின் தன்மைகள், சூரியனிலே மாறுபடும் காலங்கள் வருகின்றது. மனிதனாலே இந்தப் பிரபஞ்சமே, இன்று சூனிய நிலைகளாக ஆகும் காலம் வந்துவிட்டது.

யாம் சொல்வது, உங்களுக்குப் புதிராக இருக்கலாம்.  ஆனால், விஞ்ஞானிகள் கணக்குப் போட்டு, நாளைக்கு உங்களுக்கு வரப்போகிறது என்று சொல்வார்கள். இன்று  எழுதி வைத்துக் கொள்ளுங்கள். யாம் சொல்வது (1989 ஆம் வருடம்) உங்களுக்கு சாதாரணமாகத் தெரியலாம்.

நமது குருநாதர், ஒவ்வொரு நிமிடமும்,
ஒவ்வொரு அணுவிற்குள்ளும் ஊடுருவி,
மனிதனுடைய நிலைகள் எவ்வாறு இருக்கின்றது? அதிலே, நீ எவ்வாறு செயல்பட வேண்டும்? என்ற நிலைக்கு,  எமக்கு உபதேசித்தார். ஆகையினாலே, இன்று மனித வாழ்க்கையினுடைய நிலைகளை விடுத்து, 
இது சரி,  இது தப்பு, என்று வரவேண்டாம்.

இந்த தபோவனத்தில், நாம் அனைவரும் மெய் ஒளியைக் காணவேண்டும். குறைகளைக் காண வேண்டாம், மெய்யைக் காண்போம். மெய்யுணர்வின் தன்மையை நாம் பெறுவோம். இதிலே நாம் அனைவரும் ஓரே குடும்பம், ஓரே நிலைகள் தான்.

நமக்குள், இருளான நிலைகள் வந்தாலும் உடனடியாக மாற்றிச் சென்று, மகரிஷிகளின் அருளாலே, இந்த இருள்கள் நீங்கவேண்டும், நாம் அனைவரும் ஒளிநிலைகள் பெறவேண்டும் என்ற உணர்ச்சிகளைக் கூட்டுவதற்கு தான்,
நமது குருநாதர் ஆணைப்படி,
இதை யாம் செயல்படுத்தினோம்.
நாம் எடுக்கும் எண்ணங்கள் அனைத்தும், ஒன்றாக இருக்க வேண்டும்.
இந்த உணர்வின் ஒளிகள், நமக்குள் ஒன்றாக இருக்க வேண்டும்.

நாம் இடும் மூச்சலைகள்,
நாளை,  மழை நீராகக் கொட்டவேண்டும்.
அப்படிப் பெய்யும் மழை நீருக்குள், இந்த விஷத்தன்மைகள் 
(விஷக் கதிரியக்கங்கள்) மாயவேண்டும்.

அந்த விஷத்தின் தன்மைகளை, நீக்கும் ஆற்றல்களை,
ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் தூண்டும் நிலைகள்தான்,
யாம் செயல்படுத்தும், இந்த தபோவனத்தின் தத்துவம்.


(பக்கம் 137, 141-143)
பேரண்டத்தினுடைய பேருண்மையினுடைய நிலைகளை, யாம் சொன்ன பின்னும், இதை அலட்சியப்படுத்தாதபடி, காலத்தை விரயப்படுத்தாதபடி, ஒவ்வொருவரும்  துருவ தியானத்தை  பத்து நிமிடமாவது செய்யவேண்டும். 

அதற்குப் பின், ஆத்ம சுத்தியை நாம் பயன்படுத்தி, வாழ்க்கையில் வரக்கூடிய, எத்தகைய இன்னல்களானாலும் துடைத்துப் பழகவேண்டும்.

இந்த ஆத்ம சுத்தியினுடைய எண்ணமே,  துருவ நட்சத்திரத்துடன் உங்கள் எண்ணங்களைத் தொடர்பு கொள்ளச் செய்து,  அந்த உணர்வை உங்களுக்குள் சிறுகச் சிறுக, சேர்க்கச் செய்வது தான்.

யாம் உபதேசிக்கும் இந்த நிலைகள், அந்த துருவ நட்சத்திரத்தின் அருள் ஒளியுடன் கலந்து, மெய்ஞானிகள் நமது குருநாதர் காட்டிய அருள்வழி கொண்டு, அந்த காந்த அலைகளுடன் தொடர்பு கொண்டு, சப்தரிஷி மண்டல ஒளி உணர்வுடன் தொடர்பு கொண்டு,
குருநாதர் இட்டுச் சென்ற நிலையை,
 அந்த உண்மையின் உணர்வின் தன்மையை,
உங்கள் செவிப்புலனறிவாலே ஈர்க்கச் செய்து,
இந்த உணர்வின் சத்தான அமுதை,
உங்கள் ஈசனான உணர்வுக்குள் உராயச் செய்து,
இந்த உணர்வின் தன்மையை,
உங்கள் உடலான சிவத்திற்குள், அமுதாக சுரக்கச் செய்து,
சிவனுக்குள் இருக்கக் கூடிய, அந்த ஈசனின் வெப்பத் துடிப்பாலே,
இந்த உணர்வின் சத்துக்களை, அணுத்திசுக்களாக மாற்றி,
அணுத்திசுவான நிலைகளில்,
உங்கள் உயிராத்மாவில் சேர்க்கும் தன்மையும்,
இந்த உடலை விட்டு  நாம் சென்றாலும்,
மெய் ஒளியின் உணர்வுக்குள் நாம் சேரும் நிலையைத்தான், யாம் செய்வது.

உங்களுடைய உயிரான ஈசனிடம் வரம் கேட்டுத்தான், இந்த உணர்வின் ஆற்றல்மிக்க அந்த சக்தியின் தன்மையை,  ஆராதனை எடுக்கும் முறையில்தான், யாம் இந்நேரம் வரையிலும் பிரார்த்தித்தோம். 

ஆக, உங்களுக்கல்ல இந்த உபதேசம். யாம் பிரார்த்தித்த இந்த உணர்வுகள், நீங்கள் செவி கொண்டு கேட்டுக் கொண்டிருக்கும் போது,  உங்கள் உயிரான ஈசனுக்கு, ஆராதனை.

இதை, நீங்கள் எந்த அளவுக்குத் தடைப்படுத்தாதபடி சுவாசிக்கின்றீர்களோ, இந்த உணர்வின் சத்தான நிலைகள், உங்கள் உடலான சத்தான நிலைகளில் மகிழ்ச்சி அமுது. ஆனால், உங்கள் சிவத்திற்குள் கூடியிருக்கக் கூடிய உணர்வுகள், தெய்வங்கள். அந்த நற்குணங்கள் அனைத்துமே மகிழ்ச்சியும், அதற்குள் ஒவ்வொரு அணுக்களின் தன்மையும், ஆற்றல்மிக்க தெய்வங்களாக உங்களுக்குள் ஊடுருவி, உங்கள் பேச்சும், மூச்சும்
அது ஒவ்வொன்றும், ஒவ்வொரு நிலைகளிலும், துன்பம் போகும் என்று நீங்கள் சொன்னால்,
கண் துன்பத்தை பார்த்தாலும், உனக்குத் துன்பமில்லை என்று நீங்கள் சொன்னாலும்,
பிறருடைய துன்பங்கள் அனைத்தும் நீங்கும்.

அதே சமயம், ஓம் ஈஸ்வரா என்று உயிரை எண்ணி, மகரிஷிகளின் அருளாலே, எனக்குள் நல்ல ஒளி பெறுகின்றேன், நலம் பெறுகின்றேன், எனக்கு வியாதியில்லை என்ற இந்த உணர்வை உங்களுக்குள் கூட்டிச் சென்றால், உங்களுக்குள் வரக்கூடிய துன்பமும் போகும்.

ஆக, அந்த மெய்ஞானிகள் காட்டிய அருள்வழிப்படி, இதை நீங்கள் செயலாக்குங்கள். உங்கள் பேச்சும் மூச்சும், உங்கள் உடலுக்குள் அதை நலம் பெறச் செய்யட்டும்.
உங்கள் மூச்சலைகள், இந்த உலகத்திற்கு உதவட்டும்.
உங்கள் குடும்பத்திற்கு உதவட்டும்.

எத்தொழில் செய்தாலும்,  எந்த வியாபாரம் செய்தாலும்,  நீங்கள் விடும் மூச்சலையாலே பிறருடைய துன்பங்களைப் போக்கி, உங்களுக்கு  அங்கிருந்து மகிழ்ச்சியான எண்ணங்கள் தோன்றும்.  அந்த மகிழ்ச்சியின் எண்ணங்கள் தோன்றி, நாம் ஒளி நிலைகள் பெறுவோம். 

பக்கம் 143-148)
அத்திரி மாமகரிஷி, அவ்வளவு பெரிய அரசன், தன் வாழ்க்கையில் இருக்கக்கூடியதைத் துறந்து,  அந்த மெய்ஞானியின் அருள் ஒளி பெறவேண்டுமென்று, மக்கள் மத்தியிலே வந்தான். 

அதைப் போல நாம் ஒவ்வொரு குடும்பத்திலும், இன்றைக்கு யாராவது குறை சொல்லிவிட்டால், இரு நான் பார்த்துக் கொள்கிறேன் என்று நாம் பேசுகின்றோம். இது அரசுக்குச் சமம்தான்.

நாம் நல்ல நிலையில் இருக்கும்போது ஒருவர் கேவலமாகப் பேசிவிட்டால், நாம் நல்ல மதிப்பாக இருக்கிறோம், குறைத்துப் பேசுகிறான், இவன் திமிரைப் பாரு, இரு நான் பார்க்கிறேன் என்போம்.

இந்த உணர்வுகளில் நாம் எண்ணும்போது, நம் உயிரான ஈசனுக்குள் பட்டவுடன், இரு நான் பார்க்கிறேன், என்று இந்த உணர்வுகள் வரும். நாம் சொல்லும்போது, இந்த உணர்வுகள் நமக்குள், ஈசனுக்குள் பட்டுத்தான், அந்த வேலையைச் செய்கின்றது.

ஆக, இதைபோன்று நமக்குள் வரும் இந்த நிலையை  அன்று அத்திரி மகரிஷி இதையெல்லாம் கண்டுணர்ந்து, தான் ஆணையிட்டால் எத்தனையோ செயல்படும் நிலைகள் இருந்தாலும், அவை அனைத்தையும் துறந்து,  தன் உணர்வின் தன்மையை மாற்றிக் கொள்வதற்கு, ஒவ்வொரு மனிதனையும் ஈசனாகக் கருதினான். ஆக ஈசனுக்கு அபிஷேகம்.

மகிழ்ச்சியாவதற்கு தான் எடுத்துக் கொண்ட ஜெபத்தின் தன்மை கொண்டு, மழை நீராக கொட்டச் செய்தான். ஆனால், ஒவ்வொருவரையும் பசியாறச் செய்து, ஒவ்வொருவருக்கும் மகிழ்ச்சியின் தன்மை வருவதற்கு வேண்டி, மக்களை நாடி வந்தான். அதைப்போல, நாம் ஒவ்வொருவரும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும், நமக்குத் துன்பம் என்று எப்பொழுது தோன்றினாலும் ஆத்மசுத்தி  என்ற ஆயுதத்தை எடுத்துக் கொள்ளுங்கள்.

நம்மைத் துன்புறுத்தும் நிலையோ, நம்மைக் கேவலப்படுத்தும் நிலையோ, நம்மை அசிங்கப்படுத்தும் நிலையோ, பிறர் பேசிவிட்டால், அசிங்கப்படுத்திவிடாதீர்கள். அதை உடனே தடைப்படுத்துங்கள். ஆக,  உயிரான ஈசனுக்குள், அதை நுழையவிடாதபடி தடைப்படுத்துங்கள்.

ஓம் ஈஸ்வரா என்று உயிருடன் தொடர்பு கொண்டு,  அவனிடமே கேளுங்கள். 

மகரிஷிகளின் அருள் ஒளியை, என் ஜீவாத்மா பெறவேண்டும், மகரிஷிகளின் அருள் ஒளியை, என் உடலுக்குள் இருக்கக்கூடிய ஜீவ அணுக்கள், இந்த உடல்  உறுப்புகளை உருவாக்கிய, அந்த அணுக்கள் ஒவ்வொன்றும், அந்த மகரிஷிகளின் அருள் ஒளியைப் பெறவேண்டும் என்று, நாம் எண்ணி ஏங்கி எடுக்க வேண்டும்.

ஏனென்றால், இந்த ஆலயத்திற்குள் நின்று, அந்த அணுவின் தன்மை கொண்டு, உயிரான நிலைகளில்தான் செயல்படுகின்றோம். ஆக, ஒவ்வொரு நிமிடமும், நமக்குள் இதைச் செயல்படுத்தும்போது, நமக்குள் தீய உணர்வுகள் வராது தடுப்பதோடு, நம் பேச்சும் மூச்சும், நமக்கு எந்தத் துன்பத்தை ஊட்ட எண்ணுகின்றனரோ, அவர்களிடம், நாம் இந்த எண்ணத்தைப் பாய்ச்சிவிடுவோம்.
அவர்கள் செய்வது நாளை நல்லதாக இருக்கட்டும், அவர்கள் பேச்சும் மூச்சும் நல்ல உணர்வுகளை ஊட்டட்டும் என்று நீங்கள் எண்ணுங்கள்.

இவ்வாறு, இதை நீங்கள் எண்ணினால், அவர் நம்முடைய எண்ணங்களை அவர் எடுத்தால் எடுத்துக் கொள்ளட்டும். எடுக்காவிட்டாலும் பரவாயில்லை.

ஆனால், நமக்குள் அவர்கள் அப்படி செய்கிறார்களே, என்று வேகமாக இழுத்து, உணர்வைக் கூட்டிவிட்டால், நமக்குள் அந்த வேலையைச் செய்துவிடும்.

ஏனென்றால், நாம் எதை எண்ணினாலும், அது, நமக்குள் வருகின்றது. நம் ஈசனைவிட்டு அகலுவதில்லை. கொடுப்பதைச் சமைப்பான். ஏனென்றால், நாம் எதை எண்ணுகின்றோமோ, இந்த உயிரில் நாம் சுவாசித்தவுடன்,  இதுவே பிரம்மமாகின்றது.

ஆக, நாம் எந்த சந்தர்ப்பத்திலேயும் அந்த மகரிஷிகளின் அருள் ஒளியைப் பெறும்போது, அந்த மகரிஷிகள் நல்லதை உருவாக்கும், பிரம்மத்தின் ஆற்றல் பெற்ற சக்தி பெற்றவர்கள்.

நாம் எண்ணிய உணர்வுகள், நமக்குள் அந்த பிரம்மத்தை உருவாக்குவதற்கு, அந்த துருவ நட்சத்திரத்தின் பேரருளை நமக்குள் பெற்று, அந்த மெய்ஞானியின் ஆற்றல் மிக்க சக்தியை, நமக்குள் சுவாசித்து இந்த உயிரான நிலைகளில் பிரம்மமாக்கும்போது, அது பிரம்மமாகி நமக்குள் ஜீவனாகின்றது.

இதனுடைய தத்துவத்தை, வெகுகால நிலைகளில் உங்களுக்கு கிடைக்கச் செய்துள்ளேன். இதை தவறவிடாதீர்கள். உங்களுக்குள் இதை கிடைக்கச் செய்வதற்கு,  ஆணித்தரமாக, அழுத்தமாக,  அந்த மெய் உணர்வின் மகரிஷிகளின் அருள் ஒளிகளை, உங்களுக்குள் பெருக்குவதற்கு, இந்த உணர்வை யாம் பதிவு செய்கின்றோம். எமது அருளாசிகள்.


 (பக்கம் 158-161)
ஒவ்வொரு உணர்வலைகளையும் நமக்குள் பதியச் செய்து, இன்று விஞ்ஞான அறிவு கொண்டு, எதையெல்லாம் வளர்த்துக் கொண்டோமோ, இன்று T.V., ரேடியோ நாம் எங்கிருந்தாலும், டெலிபதி வயர் இல்லாதபடி, சில நிலைகளில் தொடர்பு கொண்டு, பல கோடி மைல்களுக்கு அந்தப் பக்கம் இருப்பதை, T.V.யில் ஒலிபரப்பு செய்து,  கதிரியக்கச் சக்தியாலே,  அறிந்துணர்ந்து  செயல்படச் செய்யும் ஆற்றலினுடைய நிலைகள்,  இன்று வந்துவிட்டது.

ஆக, அதையெல்லாம் எடுத்து விண்ணின் ஆற்றலும், விஞ்ஞானி எதை எதைக் கொண்டு, எந்தெந்த உணர்வின் ஆற்றல்களை, எந்தெந்த அலைவரிசை கொண்டு இயக்கினானோ, அந்த அலைவரிசைகள் அனைத்துமே, மனித உணர்வலைகளுக்குள்ளும் கலந்துவிட்டது. மனித எண்ணத்திற்குள்ளும் கலந்துவிட்டது.

மனித எண்ணத்திற்குள் கலந்து உணர்வாகும் போதுதான், இவன் சிந்திக்கப்படும்போது, இந்த அணு ஆயுதங்களினுடைய தன்மையும், துரித நிலைகள் கொண்டு எலக்ட்ரானிக்கும், துரித வேக நிலைகளில் இந்த உணர்வலைகளைக் கண்டுணர முடிந்தது.

இப்படி  அலைவரிசைகளில், தான் கண்டுணர்ந்தாலும், அநேகமாக அணுகுண்டுகளினுடைய நிலைகளால் பூமியை நிர்மூலமாக்குவதற்கு, இந்த மணலைப் போன்றே, உலகம் முழுவதுமே உருகி, அப்படியே கரைந்து ஓடக்கூடிய நிலைகளுக்கு,  அணுகுண்டுகள் இந்த பூமியில் இருக்கின்றது.

ஆக, ஏக காலத்தில் அது வெடித்தால் போதும். ஒவ்வொரு மண்ணுக்குள்ளும் இருக்கக்கூடிய கதிரியக்கங்கள் அது உருகி, புயலாக மாறி, விண்ணிலே இது ஆவியாகப் பறக்கும் நிலைகளுக்கு, இன்று ஒவ்வொரு விஞ்ஞானியும் கண்டுபிடித்துவிட்டார்கள்.

இவையெல்லாம், விஞ்ஞானிகள் வெளியிலே சொல்லவில்லை. இன்று யாம் சொல்லியிருக்கின்றோம். குறித்துவைத்துக் கொள்ளுங்கள் இனி ஒவ்வொன்றாக வரிசையாக சொல்லிக் கொண்டு வருவார்கள். 

இப்படிச் சொல்கின்றாரே, என்று நினைப்பதற்குப் பதில்,  குறித்து வைத்துக் கொள்ளுங்கள். யாம் பத்து பதினைந்து வருடங்களுக்கு முன், சொன்னதெல்லாம் இன்று வந்துகொண்டே இருக்கின்றது. முதலில் சொன்னது சிறிதளவே.
ஆக, யாம் ஒவ்வொரு நிமிடமும்
உங்களைக் காப்பதற்காக வேண்டி,
நமது குருநாதர் காட்டிய முறைகொண்டு,
சில உணர்வுகளினுடைய நிலைகளில்,
தொடர்பு கொண்டே,  வந்து கொண்டிருக்கின்றோம்.

ஆக நம்முடன் இணைந்தவர்களுக்கு,
எப்படி குருநாதர், எமக்குத் தெரியாமல்
எமக்குள் பல சக்திகளைக் கூட்டினாரோ,
அதே மாதிரிதான்,  நமது அங்கத்தினர்களுக்கு ஒவ்வொரு நிமிடமும்,  உங்களுக்குத் தெரியாமலே, பல சக்திகளை, உங்களுக்குள் ஊட்டிக் கொண்டே இருக்கின்றேன்.

யாம் ஒவ்வொரு நிமிடமும் பேசுவது, வெறும் பேச்சல்ல. நமது குருநாதர் தொடர்பு கொண்ட, அந்த உணர்வின் தொடர்பு கொண்டு, அந்த ஒளிகளை உங்களுக்குள் பரப்பிக் கொண்டுதான் இருக்கின்றோம்.

ஆக, இந்த (கதிரியக்கம்) அலைவரிசையிலே, இன்று உலகம் முழுவதும் சிதறுண்டு போகக்கூடிய  நிலைகளுக்கு  வந்துவிட்டது. இன்று மனிதர்களாக இருக்கும் நாம், என்னதான் சத்தியத்தைப் பேசினாலும், தர்மத்தைப் பேசினாலும்,
எனக்கு தியானம் இருப்பதற்கு நேரமில்லை என்றுதான், சொல்லிக் கொண்டிருக்கின்றோம். அப்படியே தியானமிருந்து,  சக்தி கிடைத்தாலும்கூட,  அதையும், கொஞ்ச நாளில்  விட்டுவிட்டுச் செல்வதற்குத்தான் இருப்பார்கள். 
இப்படித்தான் இருக்கின்றோம்.

இங்கு, யாம் எவ்வளவு சிரமப்பட்டுக் கொடுத்தாலும்கூட, அதை விட்டுவிட்டுச் சென்று கொண்டிருக்கின்றார்கள்.

அதே சமயத்தில், நமது எண்ணங்கள் என்ன செய்கின்றது? இரு நிலையான உணர்வுகள் கொண்டு, நாம் பெறமுடியாத நிலைகளில், நம்மை தடைப்படுத்திக் கொண்டே இருக்கும்.
இன்று விஞ்ஞான அறிவின் தன்மை கொண்டு, பல நிலைகள் கொண்டு வருகின்றோம். இதையெல்லாம், நமது குருநாதர் ஒவ்வொரு நொடிக்கும் வேதனையைக் கொடுத்து, கஷ்டத்தைக் கொடுத்து, உணரச் செய்தார். அப்படி உணர்ந்த  உண்மைகளைத்தான், யாம் சொல்கின்றோம்.

எனவே,  நாம் அனைவரும் நமது குரு காட்டிய அருள் வழியில், அந்த துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை, ஒவ்வொரு நொடிப் பொழுதும், உயிர் வழி கவர்ந்து, நம் உடலுக்குள் சேர்த்து, பேரொளியாக மாற்றி,  இந்த விஞ்ஞான அறிவால் விளைந்துள்ள, விஷக்கதிரியக்கங்களில் இருந்து மீளுவோம். உலக மக்களையும் இதிலிருந்து விடுபடச் செய்ய, தவம் இருப்போம்.  எமது அருளாசிகள். 


(பக்கம் 161-169)
ஒரு சமயம், பாப்பம்பட்டி இராமசாமி நாயுடுவின் கரும்புத் தோட்டத்தில், யாமும் நமது குருநாதர், நாங்கள் இரண்டுபேரும் இருந்து கொண்டிருக்கின்றோம். 
நான் வித்தையைக் காண்பிக்கிறேன்டா,
வித்தையைக் காண்பிக்கிறேன்டா 
என்று சொல்லி விட்டு, குருநாதர் என்ன செய்தார்?

கரும்புச் சக்கை சுற்றி கிடக்கின்றது. கரும்பு ஆலை இயங்கி கொண்டிருக்கின்றது. கரும்பு ஆலையில் சக்கை சரியாக வரவில்லை என்றவுடன் இருவரும் சென்றோம். கரும்பு ஆலைக்குள் போனவுடன்,
சாறை எடுத்து குடிடா, என்றார்.

குடித்தேன், அந்த பாகு சரியாக வரவில்லை என்று சொல்லி, எம்மை அழைத்து சென்றார்கள். 

குருநாதர் நானும் வருகிறேன் என்றார். கூட்டிக் கொண்டு சென்றோம்.

உள்ளே சென்றவுடன், அங்கே மிஷினை நிறுத்தி விட்டார்கள். வெல்லம் எதுவுமே சரியாக வரவில்லை என்று சொன்னார்கள்.

குருநாதர், இரண்டு பேரும் போகலாம், என்றார். போனோம்.

போனவுடன், என்னிடம் மிஷினை ஓட்டுடா என்றார்.

ஆயிலும் இல்லை, ஒன்றும் இல்லை, மிஷினை ஓட்டச் சொன்னால், எப்படி ஓட்ட முடியும் என்றேன்?.

ஓட்டுடா என்கிறேன், சக்தியை வைத்துக் கொண்டிருக்கின்றான், திருட்டுபய ஓட்டுடா, என்று மீண்டும் எமது குருநாதர் சொன்னார். எல்லாமே வைத்துக் கொண்டிருக்கிறாய். சுவிட்சைப் போட்டு வைத்திருக்கிறாய், உதை என்கிறார்.

எனக்கு ஒன்றும் தெரியாது சாமி, என்கிறேன்.

இவன் என்னென்னமோ சொல்கிறான், இவன் என்னமோ பண்ணிவைத்துவிட்டான். இவன்தான் செய்து வைத்திருக்கிறான் என்று திட்டிவிட்டு, என்னென்னமோ பண்ணினார்.

கரும்புச் சாறும் வந்தது. கரும்புச் சாறு வந்தபின், முதல் தடவை வெல்லம் நன்றாக வந்தது. அடுத்து என்னை இழுத்துக் கொண்டு போனார்.

இராமசாமி நாயுடுவுக்கு, எல்லாம் தெரியும். இராத்திரி பனிரெண்டு மணிக்கு, நான் எடுத்துக் கொண்ட துணிமணிகளையெல்லாம், குருநாதர் ஒரு பையில் எடுத்து வைத்துவிட்டார். இராத்திரி கை கால் வராமல் முடங்கிக் கொண்டு, அவர் சில வேலைகளைச் செய்து கொண்டிருக்கின்றார்.

எங்களைச் சுற்றிக் கரும்புக் காடு. சோகைகள் நிறைய இருந்தது. தீயை வைத்துவிட்டார். இரண்டு பேரும்தான் உள்ளே இருக்கிறோம். எல்லோரும் வெளியிலே இருக்கிறார்கள். சுற்றி தீ எரிந்தால், கரும்புக் காடு எல்லம் எரிந்துவிடும்.

ஐய்யயோ, இவன் தீயை வைத்துவிட்டான், தீயை வைத்துவிட்டான் என்று என் பெயரைச் சொல்லி சத்தம் போடுகிறார். இப்படி சத்தம் போடுகிறார். என்னைக் காப்பாற்றுங்கள்,. என்னைக் காப்பாற்றுங்கள், என்னை நெருப்புக்குள் போட்டு வாட்டுகிறான், பாவிப்பயல் என்று சத்தம் போடுகிறார், கை கால்களை இழுத்துக் கொண்டே, சத்தம் போடுகிறார்.

மற்றவர்கள் எல்லோரும் சுற்றி நின்று, பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். எனக்கு எங்கும் போகமுடியவில்லை. வேஷ்டியிலும் தீ பிடித்துவிட்டது. அணைப்பதற்கு தண்ணீர்கூட, அந்த இடத்தில் இல்லை.
சாமி, வேஷ்டி எல்லாம் தீ பிடித்துவிட்டது என்றால்,

ஏன்டா, தீயை நீ வைத்துவிட்டு, என்னை ஏன்டா சொல்கிறாய்? என்கிறார் குருநாதர்.

இப்படியெல்லாம் அவஸ்தைப்படுத்தினார். தீ சுற்றி சூழ்ந்துவிட்டது. இன்னும் ஒரு நிமிடம் தான் இருக்கிறது, அந்த அளவில் இருக்கப்படும்போது,

இந்த தீ எப்படி பரவுகிறது?
இந்தத் தீயிற்கு உண்டான ஆற்றல் என்ன?
அவனுடைய ஆசை, எப்படி இந்த கரும்புச் சாறுக்காக வேண்டி, எந்த ஆசையில் கொண்டு வந்து, இங்கே ஆலையை வைத்தான்? என்று,  இத்தனை உணர்வை அங்கே காட்டுகின்றார்.

அவன் பணத்திற்காக வேண்டி, ஆசைப்பட்டு வைத்தான். நீ, சக்தி பெறவேண்டுமென்ற நிலைகளில், இங்கே வந்து கொண்டிருக்கின்றாய். நெருப்பு வந்து சூழ்ந்து கொண்டிருக்கின்றது, நீ எங்கே தப்பப் போகின்றாய்? 

நீ, ஆசையின் நிலைகளில் இருந்து கொண்டிருக்கின்றாய். அவன், ஆசையில் அங்கே இருக்கிறான்.  ஆனால், அவன் வெளியே இருக்கிறான். நீ இங்கே இருக்கின்றாய்.

அந்த இடத்தில், உபதேசம் எப்படி கொடுக்கிறார் பாருங்கள். எல்லாவற்றையும் போட்டு, நசுக்கி, தீயை அணைக்க முற்படுகிறார்கள். எல்லாம் நசுக்கினாலும், சுற்றி அனல் தாங்க முடியவில்லை, சோகை முழுவதும் அனல் பிடித்திருக்கிறது. இவ்வளவு அவஸ்தையில், இருந்து கொண்டிருக்கிறேன்.

அவன் ஆசையில் வந்தான். சொன்னான், கரும்புச் சாறு சரியாக இருக்கிறது என்றான். உன்னைப் போற்றினான், நீயும் எல்லாம் பண்ணினாய். இப்பொழுது தீ பிடித்துக் கொண்டது. இப்பொழுது என்னை யாரடா காப்பாற்றப் போகிறார்கள். சக்தி என்ன ஆனது? என்று கேட்கிறார்.

தீ பிடிக்கிறது, எல்லாம் பண்ணிவிட்டு, என்னமோ மந்திர வேலை பண்ணிவிட்டான். என்னைத் தீயை வைத்துக் கொல்கிறான், என்னைக் காப்பாற்றுங்கள், என்றார் குருநாதர்.

அவர்கள், அங்கே அருகில் நெருங்க முடியவில்லை. என் கரும்புக் காடெல்லாம் போகிறதே, இங்கே தண்ணீர் ஊற்று, அங்கே தண்ணீர் ஊற்று, மோட்டாரைப் போடு என்றாலும்கூட, அங்கே கரண்ட் சுவிட்ச், தண்ணீராகி விட்டதால், மோட்டாரே பாயிலாகி போய்விடுவது போல இருக்கிறது. இந்த அளவுக்கு ஆபத்தான நிலைகளில் சிக்க வைத்துவிட்டு, நம்மைப் பார்க்கிறார். அப்படியெல்லாம் சிக்க வைத்து, நமக்கு உணர்த்தினார்.

அவ்வாறு உணர்ந்ததை நீங்கள் கேட்டுக் கொண்டிருக்கிறீர்கள். கஷ்டத்தைப் போக்குவதற்கு, கஷ்டம் வரும்போது,  அதை நிவர்த்தி செய்யச் சொன்னால்,  நேரம் இல்லை  என்கிறீர்கள்.

இப்படி, அந்த மாதிரி ஒரு சந்தர்ப்பத்தைப் புகுத்தி, எனக்கு அப்படியே மரணமடையும் நிலை வந்துவிட்டது. அப்படி மரணமடையும் நிலைகளில்தான்,
அவருடைய ஆசை என்ன செய்தது?
அந்த ஆசையில் உன்னைக் கூட்டிக் கொண்டு வந்தாலும்,
அந்த ஆசையிலிருந்து அவரகள் தப்பிப் போக முடிந்தது.

அவர்கள் அங்கே இருக்கிறார்கள். ஆனால், நீ எல்லா சக்திகளை பெற்றாலும், புகழுக்காக வேண்டி இதை செய்தாய். நீ இதற்குள் மாட்டிக் கொண்டிருக்கும்போது, உன் புகழ் எங்கே போகப்போகிறது? இவ்வளவு பெரிய சக்தியை வைத்துக் கொண்டு, நீ என்ன பண்ணப்போகின்றாய்? என்னையும் இழுத்துக் கொண்டு சிக்க வைத்துவிட்டாய். நான் என்னடா பண்ணட்டும்?  என்கிறார் குருநாதர்.

கொஞ்ச நேரம் கழித்து, ஹா.. ஹா. என்று சிரித்துவிட்டு, இந்த உணர்வின் நிலைகள் அத்தனையுமே மனிதனாகப் போகும்போது என்னவாகும்?  என்பதை உணர்த்தினார்.

என் வேஷ்டி தீ பிடித்து எரிகிறது. மரணமாகக் கூடிய தருணம், வேஷ்டி தீ பிடித்து எரிகிறது. வேறு வழியே இல்லை. அப்பொழுது நெருப்புக்குள் இருந்து, அந்த உணர்வின் அலையை எடுத்துக் காட்டுகிறார்.

ஆனால், நீ மரணமடையப் போகும்பொழுது எந்த நிலை? உன் உடலுக்குள் இருக்கக்கூடிய உணர்வின் அலைகள் என்னென்ன செய்கிறது? என்று சொல்லி, அந்த உணர்வைக் காட்டினார்.

என் உடலில் தீ பிடிக்க வைத்து, அந்த மாதிரிச் செய்தார்.  அணுக்களின் செயலும், உன் ஆசையின் நிலைகளும், உன் உடலுக்குள் வளர்ந்த முந்தைய அணுவின் நிலை எப்படி? என்று உணரச் செய்தார்.

இதையெல்லாம் முதல் புத்தகத்தில் கொடுக்கவில்லை. கொடுத்தால், பயந்துவிடுவீர்கள். இப்படியும் இருக்கிறதா? என்று கொடுக்கவில்லை. இப்படியெல்லாம் உணர்ந்து இதை வெளிப்படுத்தியபின், அப்பொழுதுதான் அணுவின், ஆற்றலின் தன்மையைக் காட்டுகின்றார்.

இப்படிக் கண்டுணர்ந்த நிலை போல, இன்று உலகத்தின் நிலைகளில் விஞ்ஞான அறிவு இப்படி வந்துவிட்டது. அவனுடைய ஆசையில், தன்னைத் தற்காத்துக் கொள்ளக்கூடிய உணர்வுகளிலேயே இன்று, அவன் அதற்குள்ளேயே போய் சிக்கிக்கொண்டான். இது, இன்றைய விஞ்ஞான அறிவு.. 

ஏனென்றால், இன்று விஞ்ஞானிகள் மனிதனுக்குள் இயற்கையின் நிலைகளில், இதனுடைய அலைகளை வைத்து, ஒரு நொடிக்குள் அனைவரையும் மாய்க்க வந்துவிட்டார்கள்.

மனிதன், அந்த சூரியனிலிருந்து தோன்றிய உணர்வின் அணு கொண்டு வளர்ந்தான். இதையெல்லாம், பின்னாட்களில் இந்த விஞ்ஞானிகள் அறிவிப்பார்கள். ஒவ்வொரு நிமிடத்திலும், யாம் காலத்தை விரயம் செய்யவில்லை.

ஒவ்வொருவருடைய உள்ளங்களிலும், உயிரையும் ஈசனாக மதித்து, அந்த உடலுக்குள் இருக்கக்கூடிய உயிரை மதித்து, 
அந்த அணுவின் இயக்கங்களுக்குள்,
உங்களுடன் இரவும் பகலும் தொடர்பு கொண்டு,
உடலின் நிலைகளில் பதிவு செய்கின்றோம். 
இந்த உணர்வின் அலைகளை, நீங்கள் பெறவேண்டுமென்று, நமது குருநாதர் காட்டிய அருள்வழி கொண்டு, சதா ஜெபித்துக் கொண்டிருக்கின்றோம்.

ஆனால், எவ்வளவு சிரமப்பட்டு உங்கள் நிலைகளையும், நீங்கள் விஞ்ஞான அழிவிலிருந்து மீளுவவதற்கு, இந்த உணர்வைப் பாய்ச்சச் செய்து, உங்களுக்குள் ஆற்றல் மிக்க சக்தியைப் பெருக்கினாலும், இதை சிந்திப்பார் யாரும் இல்லை.

ஆனால்,  நமக்குள் எடுத்துக் கொண்ட, இவ்வளவு பெரிய ஆற்றல்களையும், நமது குருநாதர், எப்பொழுதும் இயக்கிக் கொண்டிருக்கின்றார்.

ஆனால், இந்த உடலிலிருந்து எவ்வளவு காலம் யாம் இயங்கமுடியும்? அதற்குள், இதை பெருக்கிக் கொண்ட நிலைகள் கொண்டு, நாளை வரக்கூடிய விஞ்ஞான உலகத்திலே, நாளைய எதிர்காலத்தை சிந்தித்து, ஒவ்வொருவரும் இந்த நிலைகளைச் செயல்படுத்திக் கொள்ளுங்கள். அதற்காகத்தான் இவ்வளவு பாடுபடுகின்றேன்.

என் குருநாதர் இட்ட கட்டளைப்படி, ஒவ்வொருவரது உடலிலும் இதைப் பதிவு செய்திருக்கின்றோம். ஆகவே, தவறான நிலைகள் கொண்டு, இன்று விஞ்ஞான நிலைகள் கொண்ட அலைகள், உலகையே கரைக்கும் நிலைகள் வரும்போது, அதை மாற்றும் நிலைவேண்டும்.

அதற்குத்தான், துருவ நட்சத்திரத்தின் பேரருளை, ஒரு பத்து நிமிடமாவது எடுத்துக் கொள்ளூங்கள். அதே துருவ நட்சத்திரத்தின் பேரருளை தனக்குள் கூட்டியபின், மகரிஷிகளின் ஒளியை நீங்கள் பெறுங்கள். அந்த அத்திரி மாமகரிஷியின் அருள்சக்தி, நீங்கள் பெறுவதற்கு, எமது அருளாசிகள்.

DSC00114.JPG