ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

January 18, 2012

உயிரே கடவுள் - மெய்ஞான மாத இதழ் -- 1998


உயிரே கடவுள் – மெய்ஞான மாத இதழ்  
(பிப்ரவரி 1998)
ஞானிகள் காண்பித்த கார்த்திகைத் தீபத் திருநாளில், நாம் நமது வீட்டு வாசல்படியில் தீபங்களை வைக்கின்றோம். வீட்டிற்குள் இருந்தாலும், புற நிலைகளில் தீபங்களை வைக்கும் பொழுது, அங்கே இருள் விலகிப் பொருள் தெரிகின்றது.

இதைப் போன்று,  நாம் எப்பொழுதுமே பொருளறிந்து செயல்படும்திறன் பெறவேண்டும், என்னும் உண்மையை உணர்த்துவதற்குத்தான், கார்த்திகை தீபங்களை வீட்டு வாசல்படியில் ஏற்றச் செய்தனர், ஞானிகள்.


கார்த்திகை தீபம் என்கிறோம். ஏனென்றால், நமது பிரபஞ்சத்தில், கார்த்திகை நட்சத்திரத்திலிருந்து வெளிப்படக்கூடிய உணர்வுகள்,
எந்தப் பொருளில் கலக்கின்றதோ,
அந்த பொருளின் தன்மையை
பிரகாசிக்கச் செய்யும் தன்மை கொண்டது.

உதாரணமாக, கசப்பான பொருள் ஒன்று இருக்கிறதென்றால், கசப்பின் தன்மையை,  உணர்ச்சியின் மூலம் வெளிப்படுத்தும் அறிவாக  அங்கு இருக்கும்.

ஆகவே, கார்த்திகை நட்சத்திரம், நமது பிரபஞ்சத்திற்கு ஒரு முக்கியமான நட்சத்திரம். நாம் வெளிச்சத்தை வைத்து, பொருளைக் காண்பதைப் போன்று கார்த்திகை நட்சத்திரத்தின் உணர்வுகள், அதிகமாக எந்தெந்த குணங்களில் கலந்துள்ளதோ, அந்த குணத்தின் சிறப்பு மிக்க நிலையை வெளிப்படுத்தும், அறியச் செய்யும் ஆற்றல் மிக்கவராக, அந்த எண்ணங்களைப் பிரதிபலிக்க செய்யும்.

கார்த்திகை மாதத்தில், நமது வீட்டு வாசல்படிகளில் விளக்குகளை ஏற்றி வைக்கிறோமென்றால், அந்தக் கார்த்திகைக்கு என்றில்லாமல், அறிவின் ஒளியின் சுடராக, நாம் பொருளறிந்து செயல்படும் திறன் பெறவேண்டும் என்பதை, நமக்கு நினைவுபடுத்துவதற்காக ஞானிகளால் உருவாக்கப்பட்ட நிலைதான், அது.

நாம் அவசரப்பட்டு, ஒரு தொழில் செய்யவேண்டும், பொருள் சேர்க்க வேண்டும் என்று விரும்புகின்றோம். அந்த ஆசையின் தன்மை நமக்குள் வளர்ந்துவிட்டால், அதையே முழுமூச்சாக செயல்படுத்தத் தொடங்குகின்றோம்.

ஆனால், அந்தச் சந்தர்ப்பத்தில், நாம் அறிவின் தெளிவாகத் தெரிந்து கொள்ளும் ஆற்றலை இழந்து விடுகின்றோம். ஏனெனில், அவசரம் எனும் உணர்வால்,  நாம் சீராக சிந்திக்காது எடுத்த முடிவால், விளைந்த நிலையிது.

உதாரணமாக, நாம் ஒருவரைச் சந்தித்து, வியாபாரத்தைப் பற்றிப் பேசப்போகிறோம் அல்லது அவர் மூலம், வியாபாரம் சம்பந்தமான விஷயங்களைத் தெரிந்து கொள்ளப் போகிறோம் என்று செல்லும் பொழுது,  அவருடைய சூழ்நிலை எவ்வாறு? என்று சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

அவரிடம் பேசும் பொழுது, அவருடைய முகத்தை உற்றுப்பார்த்தால், அவருடைய நிலை தெரியும். அப்பொழுது நமக்குள் இருக்கும் அறிவு என்பது, அவரின் உணர்வின் தன்மைகளைநமக்குள் தெளிவாக்கும்.

தீபத்தைப் பொருத்தியபின், அதனின் வெளிச்சத்தில் நாம் எப்படிப் பொருள்களைக் காண்கின்றோமோ, அதைப் போன்று, 
நாம் சிந்திக்கும் அறிவினைப் பயன்படுத்தி,
சிறிது நேரம் சிந்தித்து, 
அவருடைய செயலாக்கங்களை அறிந்து கொண்டபின், நாம் இந்தச் சொற்களைச் சொல்லவேண்டும். அப்பொழுது, அது நமக்கு துணையாக இருக்கும்.

ஆனால் நாம், நம்முடைய காரியத்திற்காக அவரைப் பார்க்கப் போய், அவருடைய சூழ்நிலை தெரியாது, அவசரத்தில் அவரிடம் போய்ப் பேச்சு கொடுக்க ஆரம்பித்தால், அவர் தன் சலிப்பால், சஞ்சலத்தால், நமக்கு சீரான பதிலைக் கொடுக்க மாட்டார்.

நாம் விரும்பிப் போய் சந்திக்கும் பொழுது, அவர் சரியான பதிலை கொடுக்கவில்லை என்றால், அவரைக் குற்றவாளியாகக் கருதுவோம்.

அவர் கர்வம் உள்ளவராக இருக்கிறார், நாம் கேட்டால், பதில் சொல்லமாட்டேனென்கிறார் என்ற உணர்வுகள் வந்து,  நம்முடைய அவசரத்திற்கு, அவரைக் குற்றவாளியாக்கும் நினைவினை ஊட்டுகின்றது. 

இதற்கு மாறாக, அவர் சந்தோஷமாக இருக்கும் பொழுது அவரைச் சந்தித்தோம் என்றால், அவர் நம்மை வரவேற்று, அதற்குண்டான சொல்களைச் சொல்லுவார்.

எப்படி நாம் தீபத்தை ஏற்றி, அதனின் வெளிச்சத்தைக் கொண்டு, மற்ற பொருள்களைத் தெரிந்து கொள்கின்றோமோ, அதைப் போன்றுதான், கார்த்திகை நட்சத்திரத்தின் இயல்புகள், உணர்வின் ஒளியலைகள் ஒன்றோடொன்று மோதும் பொழுது, அதன் அறிவின் தன்மை அறிவிக்கும் சக்தி பெற்றது. ஆகவே, நாம் ஒரு முறை, ஒரு காரியத்தை சாதிக்க வேண்டும் என்று எண்ணினால், சூழ்நிலைகளுக்கொப்பச் சொற்களைச் சொல்லவேண்டும். அது நமக்கு நல்ல பலனைக் கொடுக்கும்.

நாம் எப்படியும், இன்றைக்கு இந்தக் காரியத்தை முடித்து விடவேண்டும், என்ற அவசர உணர்வுடன் ஒருவரிடம் தொடர்பு கொள்ளப்படும் பொழுது, அவருடைய சூழ்நிலைக்கொப்பதான், நமக்கு பதில் வரும். நமது காரியமும் சித்தியாகாது.

அதே சமயம், நாம் அவரைச் சந்தித்ததால், அவர் மேல் வெறுப்படையும் தன்மையும், அதற்குண்டான சூழ்நிலையும் உருவாகும்.  அவரைக் குறை கூறும் உணர்வுக்கே, நமது உணர்வு வலு பெறும்.

ஆக, குறையான உணர்வுகளை நாம் நம்முள் பதிவாக்கிவிட்டால்,
அதன்பின், அவரைச் சந்திக்கும் பொழுது,
சூழ்நிலை சமமாக இருந்தாலும்
அவரை உற்றுப் பார்த்தாலே, பழைய நினைவுகள் தோன்றி,
வெறுப்பின் உணர்வைத் தோற்றுவிக்கும்.
அப்படிப்பட்ட நிலையில் நம்முடைய சொல், அவரிடம் சீராகப் பேசும் தன்மையை இழந்துவிடுகின்றது.

ஒருவர் மேல், உங்களுக்கு வெறுப்போ அல்லது பயமோ ஏற்பட்டுவிட்டால், நீங்கள், அவரிடம் ஏதாவது ஒன்றைச் சொல்ல வேண்டுமென்றால்கூட, உங்களிடத்தில், ஒருவிதமான பதட்ட நிலைகள் ஏற்படும். இதைப் போன்று, நமது வாழ்க்கையில், நம்மையறியாமலே சில சந்தர்ப்பங்கள் நமது நல்ல குணங்களைப் பாழ்ப்டுத்தும்.

ஆகவே, நாம் தீபத்தின் வெளிச்சத்தில் எப்படி பொருள்களைக் காண்கின்றோமோ, இதைப் போன்று,  நாம் ஒவ்வொரு காரியத்திற்குச் சென்றாலும், முதலில் நமக்குள் அறிவின் ஒளியைப் பொருத்திக் கொள்ள வேண்டும். அந்தச் சுடரின், உணர்வின் அலைகளைப் பரப்ப வேண்டும்.

அவ்வாறு நாம் பரப்பினோம் என்றால், நாம் செல்லக்கூடிய காரியமும் பயன்பெறும். நம்முடைய சொற்களும், கேட்போரின் உணர்வுகளில் தெளிவை ஏற்படுத்தும். இவைகளெல்லாம் நாம் அறிந்து கொள்வதற்குத் தான், கார்த்திகை தீபத்தை ஏற்றி வைப்பது.

நமது உணர்வுகள் எப்படி மாறுபடுகிறதென்றால்,
நாம் ஒருவரைச் சந்தித்துவிட்டுத் திரும்பி வரப்படும் பொழுது,
நம்முடைய உணர்வுக்குத் தக்க
அவருடைய செயலாக்கங்கள் இல்லையென்றால்,
அவரைக் குறை கூறும் தன்மைக்கு, வந்துவிடுகின்றோம்.

நாம் ஒருவருடன் பிரியமாக பேசிக் கொண்டிருப்போம். இருந்தாலும், நமக்குள் நம் உணர்வின் துணை கொண்டே அவரிடம் பேசப்படும் பொழுது, அவருக்குள் பதில் இருக்கலாம். ஆனால் நாம், நம் மனதிற்குள் ஒரு குற்றவாளி என்ற உணர்வைக் கலந்தே நாம் சுவாசிப்போம்.

ஆனால், இந்த எண்ணத்தை அவரிடம் வெளிப்படையாக தெரிவிக்காத நிலைகள் இருப்பினும், இந்த உணர்வுகளை நமது முகமும், கண்களும் காட்டிக் கொடுத்துவிடும்.

ஒருவரை நாம் சந்திக்கும் பொழுது, இத்தகைய உணர்வுகள் இரண்டையும் சுவாசிக்கும் பொழுது, அந்த உணர்வுகள்
கண்களின் ஒளி அலைகளாகப் பார்க்கும் பார்வையும்,
அந்தப் பார்வைக்கொப்ப உணர்வும் இணைந்து,
சொற்களாக வெளிவரும். ஆகவே, நம்மையறியாமலேயே
நம்முடைய நினைவாற்றலை  வெளிப்படுத்தும்.
ஆக, அவர் அன்புடன் பேசினாலும், அதை நாம், நமக்குள் நம்முடைய எண்ணங்களுக்கொப்ப மாற்றி, நாம் அவரைக் குறை கூற வேண்டிவரும்.

இதைப் போன்று, குறை கூறும் உணர்வுகளை வெளிப்படுத்தும் முகத்தையும், சொல்லையும் பார்த்தபின், அவரிடத்திலும் குறையான உணர்வுகள் ஏற்பட்டு, அவருடைய சொல்லும் சீராக இல்லாமல், தடுமாற்றமான நிலைகளில்தான் பதில் வரும்.

இதுதான், கீதையில், நீ எதை எண்ணுகின்றாயோ அதுவாகின்றாய் என்ற நிலைகளில் உணர்த்தப்படுகின்றது. நாம் என்ணும் உணர்வுகள், நமது கண்வழி பாய்வதும், உடலிலிருந்து வெளிப்படும் மணமும், இவை இரண்டும் கலந்து, நாம் சொல்லும் உணர்வின் தொனிகளும், ஒலிகளும், வித்தியாசமான நிலைகளில் வெளிவரும். இதுவெல்லாம்,  நம் அன்றாட வாழ்க்கையில், நடக்கக்கூடிய சம்பவங்கள்.

எனவே, நமக்குள் வரும் தீமைகளில் இருந்து விடுபடும் நிலையாக, வெளிச்சத்தில் பொருள் எப்படி தெரிகின்றதோ, அதைப் போன்று,  நமது வாழ்க்கையில் தெரிந்து, தெளிந்து, தெளிவான வாழ்க்கை வாழ்ந்திடுவோம். 

நாம் அனைவரும், நமது குருநாதர் காட்டிய அருள்வழியில்,  ஆறாவது அறிவைச் சீராக்கும் நிலையாக, ஒளியின் சுடராக இருக்கும் அந்த மகரிஷிகளின் அருள் சக்தியை நமக்குள் பெருக்கி, நம் உணர்வுகள் அனைத்தையும் ஒளியாக மாற்றுவோம்.

மகரிஷிகள் உபதேசித்து உணர்த்திய அருள் நெறிகளை வாழ்க்கையில் கடைப்பிடிப்போம். மகரிஷிகளின் அருள் சக்தியை, நாம் நமக்குள் ஒளியின் சுடராக ஏற்றி மகிழ்ந்து வாழ்வோம்.
பொருளறிந்து செயல்படுவோம்,
சிந்தித்து செயல்படுவோம்.
பேரருளைப் பெறுவோம், பேரொளியாக மாற்றுவோம். நாம் அனைவரும், மகரிஷிகள் சென்ற பாதையில் செல்வோம். இந்த உலகை, மகரிஷிகளின் உலகமாக மாற்றுவோம்.


இப்பொழுது விஞ்ஞான அறிவு கொண்டு, காந்தப் புலனறிவுகளைக் கவரும் முலாம்களை, கம்ப்யூட்டர் நாடாக்களில் பூசுகின்றனர். அதில் பூசிய, உணர்வின் அதிர்வுகளுக்கொப்ப உருவங்களை அமைப்பதும், மற்ற நிலைகளையும் உருவாக்குகின்றனர். 

கம்ப்யூட்டரில் எதைப் பதிவு செய்கின்றோமோ, அந்தப் பதிவின் நிலைகொண்டு ஒரு இயந்திரத்துடன் இணைக்கப்படும் பொழுது, இயந்திரத்தின் அதிர்வை, கம்ப்யூட்டர் எலெக்ட்ரானிக்காக மாற்றி, அதனின் அதிர்வை மாற்றி, இயந்திரத்தை இயக்குகின்றது.

இதைப் போன்று, நமக்குள் இருக்கும் பிறிதொருவர் பற்றிய குறை உணர்வும், ஆனால், அதை மறைத்து வெளிப்படுத்தும் உணர்வுகளும் வெளிப்படுத்தும் பொழுது, நம்முடைய சொற்கள் எலெக்ட்ரானிக்காக மாறுகின்றது.

ஒருவரிடம் நாம் பேசும் பொழுது, நம்முடைய சொற்கள் குறையோ, அல்லது ஏமாற்றும் நிலையோ, அல்லது புகழ் தரும் நிலையோ, இத்தகைய உணர்வாகி விட்டால், அவருடைய செவிகளில் படும்பொழுது, அவருடைய கண், இந்த உணர்வின் ஒலி அதிர்வுகளைப் பார்க்கும். 

இதில் குறைகள் இருந்தால், அவருடைய கண்ணில் ஒரு மாற்றமாகி, நாம் சொல்லும் உணர்வுகளை உற்றுப் பார்க்கச் சொல்லும். இதைத்தான்  கண்ணன் துகிலை உரிந்தான்  என்று காவியங்களில் உரைத்திருப்பார்கள்.

உணர்வின் ஒலி அலைகளைப் பரப்பி, பதிப்பாக்கி, பிறிதொருவரின் உணர்வின் தன்மைகளை தமக்குள் நுகர்ந்து, உயிருடன் ஒன்றச் செய்யும் பொழுது எலெக்ட்ரானிக்காக மாறுகின்றது. ஆக, நம்முடைய உணர்வின்  இயக்கத்திற்கொப்ப, நமது உடலில் செயலாகின்றது, சொற்களும் வெளிப்படுகின்றது.

அதே போன்று, நாம் எந்த உணர்வின் தன்மையை ஏற்றுக் கொண்டுள்ளோமோ, அதற்குத் தக்கவாறு பிறிதொருவர் சொல்வாரென்றால், அது நமக்குள் ஒத்த நிலை இருந்தால், நமது செவி ஏற்றுக் கொள்ளும்.

அவ்வாறு இல்லை என்றால், செவி ஏற்றுக் கொள்ளாது. இருப்பினும், சொல்லில் வெளிப்படுகின்ற உணர்வின் தன்மைகளை, கண் உற்று நோக்கச் சொல்லும்.

எதிர்பார்ப்பின் நிலைகள் கொண்டு, அவரின் உடலிலிருந்து வெளிப்படக்கூடிய உணர்வின் அலைகள் கண்டு, கண்கள் அசையும், ஒளிகள் மங்கும், இதைப் போன்ற சில உணர்வுகளை ஏற்படுத்தும். 

அப்பொழுது, நமது கண்ணின் நிலைகள், அவருடைய உணர்வின் எண்ணங்களுடன் மோதப்படும் பொழுது, இவை நம்முள் கலந்து, உயிரில் மோதி, கலந்த உணர்வின் தன்மை எலெக்ட்ரானிக்காக மாறி, அந்த உணர்வின் அதிர்வுகள் உடல் முழுவதும் பரவுகின்றது. அப்பொழுது நமது சொற்களின் தன்மையும், தொனியும் சிறிது மாறுகின்றது.

இவை எல்லாம்,கம்ப்யூட்டர் ஒரு இயந்திரத்தை இயக்குவது போன்று, நம்முடைய உயிர், நம்முள் ஏற்கனவே பதிவு செய்துள்ள உணர்வுகளும், மற்றொரு மனிதரின் உணர்வுகளும் இரண்டும் மோதப்படும்பொழுது, இவைகளுடைய வித்தியாசமான உணர்வலைகள் நமக்குள் கலந்து அதற்கொப்ப, அங்கங்களை இயக்குவதும், கண்களின் பார்வையின் நிலைகளும், சொற்களின் தன்மைகளும் வித்தியாசமாக வெளிப்படுவதைக் காணலாம்.

IMG_5533.JPG

(மார்ச் 1998)
ஒரு கம்ப்யூட்டரை எடுத்துக் கொண்டால், எலெக்ட்ரிக், எலக்ட்ரானிக் என்ற நிலையில்,  ஒலியின் அதிர்வுகளுக்கொப்ப இயந்திரங்களை இயக்குவதைப் போன்று, சொல்லின் வலிமையும் மனிதனை இயக்குகின்றது.

இன்று, விஞ்ஞானம் கம்ப்யூட்டரில் கையால் பட்டனைத் தட்டி, எலெக்ட்ரிக், எலக்ட்ரானிக் என்ற நிலையில் ஒலி அதிர்வுகளைக் கொடுத்துச் செயல்படுவதைக் காட்டிலும், சொல்லால் இந்த உணர்வின் உணர்ச்சிகளைத் தூண்டி, கம்ப்யூட்டரை இயக்கும் நிலை, இப்பொழுது உருவாக்கிக் கொண்டுள்ளது. யாம் இப்பொழுது சொல்வதை (1997),  சிறிது காலத்தில் நீங்கள் காணலாம்.

ஆக, அவன் அறிவின் தெளிவை இயந்திரத்தில் பதிவு செய்கின்றான். அதன் பதிவின் தன்மை கொண்டு, ஒரு சொல்லின் தன்மையை ஒரு கேசட்டில் பதிவாக்கிப் போட்டுவிட்டால், அந்த உணர்வின் அலைகள் ஒரு இயந்திரத்தை இயக்கவும், ஒரு தொழிலை நிர்வகிக்கவும் வருகின்றது.

இதற்கு ஆதாரபூர்வமாக, ரோபட் (ROBOT) என்ற நிலைகளில், ஒரு இயந்திரத்தை உருவாக்கி, அதற்குண்டான கட்டளைகளைக் கேசட்டில் பதிவு செய்து, ரோபட்டில் இணைத்து, அதனின் ஒலி அதிர்வுகளின் துணைகொண்டு ரோபட்டை இயக்கி, மனிதனைப் போன்றே செயலாக்கும் தன்மைக்கேற்ப, மனித உருக் கொடுத்து, இன்று விஞ்ஞானிகள் இயந்திரத்தை உருவாக்கும் நிலை உள்ளது.

அதாவது, ஒலிகளின் உணர்வுகளை எழுப்பி, வீட்டு வேலைகளையும் மற்ற நிலைகளையும் செயல்படுத்தும் தன்மை, இன்று உருவாகியுள்ளது. இப்படி எலெக்ட்ரிக், எலக்ட்ரானிக் என்ற நிலையில் உணர்வின் அதிர்வுகளை வைத்து, ஒரு இயந்திரத்தை இயக்கும் தன்மையில், விஞ்ஞானம் இன்று முன்னேறிவிட்டது.

இதைப் போன்றுதான், இராமன் அம்பை எய்தான் என்றால், கணைகளைத் திரும்பி வாங்கிக் கொள்வான் என்று காவியங்களில் உரைத்திருப்பார்கள். அதாவது, தன்னுடைய சொல்லின் தன்மை கொண்டு, இனிமை கலந்த நிலைகளில், தன்னுடன் இயங்கி செயலாக்கும் தன்மைகள் கொண்டது.

ஒருவன், நம்மை வேதனைப்படும்படி சொன்னால், நாம் அதை உற்று நோக்கி, அழுத்தமாகக் கேட்போம். ஆனால், அந்த அழுத்த உணர்வுகள் நமது நல்ல குணங்களில் பதிவாகிவிட்டால், அந்த பதிந்த உணர்வுகள் நமது நல்ல குணங்களை செயலற்றதாக மாற்றிவிடுகின்றது. 

அவ்வாறு மாற்றி, அவன் எப்படி நமக்குக் கொடூரமான தீமைகளைச் செய்தானோ, அதை எண்ணி, இரு நான் பார்க்கிறேன், அவனை விடுவேனா என்று பதில் சொற்களைச் சொல்லப்படும் பொழுது, இந்த உணர்வுகள் நமது நல்ல குணத்தை மாற்றி விடுகின்றது. 

வாலி என்ற விஷத்தின் வலிமை, நமது நல்ல குணத்தைச் செயலற்றதாக மாற்றி, அவனைத் திருப்பித் தாக்கும்படி நம்மைச் செயல்படுத்துகின்றது.

நமது நல்ல குணங்களை வாலி என்ற நிலைகள் எப்படி வலுவிழக்கச் செய்கின்றது? நமது எண்ணங்கள் எப்படி மாறுபடுகின்றது?

நாம் ஒவ்வொரு நாளும்,  இப்படிச் செய்கின்றானே, இப்படிச் செய்கின்றானே என்ற எண்ணங்களை ஒவ்வொரு குணங்களிலும் இணைக்கப்படும் பொழுது, நம்முடைய நல்ல குணங்கள் அனைத்தும், அதனுடைய செயலாக்கங்களை இழந்து விடுகின்றன. 

ஆகவே, அதனுடைய வலிமை வரப்படும்பொழுது, நம்முடைய எதிர்காலத்தைப் பற்றிய சிந்திக்கும் திறனை, இழக்கச் செய்கின்றது.  இதிலிருந்து, நம்மை நாம் காத்துக் கொள்வது எப்படி?

நமக்கு இருளில் இருக்கும் பொருள் தெரிவதில்லை. ஆனால், வெளிச்சத்தில் இந்தெந்த பொருள் இருக்கிறது என்று அறிகின்றோம். இது போன்று, நமக்குள் அறிவின் உணர்வின் உணர்ச்சியைத் தூண்டி, ஒன்றை அறியச் செய்யும் ஆற்றல் நமது ஆறாவது அறிவிற்கு உண்டு. கார்த்திகேயா என்ற நிலை, நமது உடலில் இருந்து வரக்கூடிய, மணத்திற்கு இருக்கின்றது. 

அது என்ன செய்கின்றது? நமக்கு ஒன்றை இது நன்மை, இது தீமை என்ற நிலைகளை அறியச் செய்கின்றது. கார்த்திகேயா என்று அறிந்து உணர்ந்து, தீமைகள் புகாத நிலைகள் கொண்டு, நாம் தடுக்கும் நிலை வரப்படும் பொழுது, சேனாதிபதி என்றும், இந்த உடலைப் பாதுகாக்கும் சக்தி பெற்றது என்றும், ஆறாவது அறிவைத் தெளிவாகக் கூறுகின்றனர்.

கார்த்திகைத் திருநாள் அன்று, திருவண்ணாமலை  என்று உயிரின் நிலையைக் காட்டப்படும் பொழுது, நாம் அறிவின் தன்மையாக, ஒளியின் சுடரைத் தெரிந்து கொள்ள வேண்டும்  என்பதற்குத் தான், நமக்குக் கார்த்திகை தீபத்தை ஏற்றி வைத்துக் காண்பித்தார்கள்.

நமது உயிரின், ஒளியலைகள் பிரகாசிக்கப்படும் பொழுது,  நமது வாழ்க்கையில் தீமைகள் சாடாத நிலைகள் கொண்டு, உணர்வின் தன்மை ஒளியாக இருக்கின்றது.  திருவண்ணாமலை என்னும் பொழுது, இந்த உடலான திருவுக்குள் உயர்ந்த நிலைகள் கொண்டு,  உயிர் ஒளியாக நின்று, இயக்கும் இடம்  என்று, காண்பிக்கப்படுகின்றது. 

ஆகவே,  நமக்குள் உள்ள, உயிரின் ஒளியின் உணர்வின் தன்மையைப் பரப்பி, இருளை நீக்கி, மெய்ப்பொருளைக் காணும் உணர்வின் எண்ணங்களை, தனக்குள் கொண்டு வரவேண்டும், என்பதுதான் ஞானிகள் காண்பித்தது.

நாம் நமது நண்பர்களிடத்திலோ,
மற்றவர்களிடத்திலோ பகைமை கொண்டிருந்தால்,
பகைமை மறைய வேண்டும், அனைவரும்
துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெறவேண்டும்,
அனைவரும் பொருள் காணும்  நிலை பெறவேண்டும்,
ங்களுகுள் அறியாது சேர்ந்த இருள் நீங்கவேண்டும்,
ங்களுக்குள், மகரிஷிகளின் அருள் ஒளி பெருகவேண்டும்,
ங்கள் சொல்லைக் கேட்போரின் உணர்வுகளில்,
இருள் நீங்க வேண்டும்,
மெய்பொருளின் தன்மை நாங்கள் பெறவேண்டும்
என்று இதன் வழி தொடர்கொண்டு இந்த ஜோதிச் சுடரை ஏற்றினால், அது கார்த்திகை என்று, ஆறாவது அறிவின் தன்மை கொண்டு, சேனாதிபதி என்ற நிலைகளில் நமது அறிவு, நம்மைப் பாதுகாப்பான நிலைகளில் இயக்கும்.
(மே 1998)
நீங்கள் ஏதேனும் வேலையாக, வீட்டிலிருந்து வெளியே செல்கின்றீர்கள், அல்லது ஒரு தொழிலைத் தொடங்குகின்றீர்கள் என்றால், அது சமயம்,
அகஸ்திய மாமகரிஷிகளையும்,
அவர் துருவ மகரிஷியான நிலையையும்,
துருவ நட்சத்திரமான நிலையையும்,
இந்த மூன்று நிலைகளையும் ஏங்கி எண்ணுங்கள்.
அதனின் உணர்வுகளை நாங்கள் பெறவேண்டும்
என்று எண்ணியபின், உங்கள் தொழிலைச் செய்யத் தொடங்குங்கள்.

இந்த முறையில், உங்களில் நீங்கள் பதிவு செய்யும் ஞானவித்துக்கள், உங்கள் உடலில் உள்ள இரத்தங்களில் கருவாக வளர்ச்சி பெற்று, நீங்கள் உங்களில் எண்ணிப் பதிவு செய்ததைப் பெறக்கூடிய தகுதியான நிலைகளை, அந்த உணர்வின் அணுக்களை, உங்கள் இரத்த நாளங்களில் பெருக்குகின்றது. முதலில் கரு முட்டையாகின்றது. பின், அதனின் உணர்வின் தன்மையை எண்ண, எண்ண, அவைகள் அணுக்களாக வளர்ச்சியடைகின்றது.

உதாரணமாக, ஒரு கோழி முட்டையிட்டு அதை அடைகாத்து, அதன் உணர்வின் தன்மை கொண்டு அங்கே வெப்பமாக்குகின்றது. அதன்பின், அந்த அணுவின் தன்மை, வெப்பத்தின் துடிப்பு கொண்டு, கருவின் துணை கொண்டு, குஞ்சாக விளைகின்றது.

குஞ்சாக வெளிவந்த பின், தாய்க் கோழி எதைத் தன் உணவாக எடுத்துக் கொண்டதோ, அதே உணவைக் குஞ்சும் தன் உணவாக, உட்கொள்ளத் தொடங்குகின்றது.

            இதைப் போன்று, யாம் இப்பொழுது உங்களுக்குள், உபதேசத்தால் நுகரச் செய்த உணர்வுகள் அனைத்தும், உங்களிடத்தில் கருவாக உருவாகின்றது. அதனின் உணர்வுகளை நீங்கள் மீண்டும், மீண்டும், உங்களில் நினைவுபடுத்தும் பொழுது, உங்களிடத்தில் அந்த உணர்வின் அணுக் கருமுட்டைகள் வளர்ச்சி பெறுகின்றது.

நீங்கள், இதே எண்ணத்தைத் திரும்பத் திரும்ப எண்ணும் பொழுது,  அது உங்களுக்குள் அடைகாக்கப்படுவது போன்றதாகி விடுகின்றது.

கோழி, தான் இரை தேடுவதற்கு வெகு தூரம் சென்றிருந்தாலும், தன் குஞ்சின் நினைவு கொண்டு, தான் முட்டையிட்ட அதே இடத்திற்கு வந்து, அடைகாப்பதைப் போன்று, நீங்கள் எந்த தொழிலுக்குப் போவதாக இருந்தாலும்,  மகரிஷிகளின் அருள் ணர்வை உங்களுக்குள் விளையச் செய்து, அடிக்கடி இந்த நிலைகளை எடுத்து பழகிக் கொண்டால், நீங்கள் வளர்த்துக் கொண்ட இந்த உணர்வுகள், உங்களுக்குள் அடிக்கடி நினைவு படுத்தி அந்த சக்தியை நீங்கள் உங்களுக்குள் வளர்க்கும் திறனும், அடைகாப்பது போன்று மகரிஷிகளின் அருள் சக்தியும், விளைகின்றது.

கோழி தான் இரை தேடும் பொழுது, தன் குஞ்சுகளைக் கூவி அழைத்து, தன் குஞ்சுகளுக்கு இரை கொடுப்பதைப் போன்று, நமக்குள் அருள் சக்தியின் உணர்வுகள் அணுக் கருவாகிவிட்டால், இதனின் உணரச்சியின் கிளர்ச்சிகள் நமது இரத்த நாளங்களில் கிளம்பும் பொழுது,
நமது உயிர் அந்த உணர்வுகளை இயக்கி,
காற்றில் கலந்துள்ள, அருள்மகரிஷிகளின் அருள் உணர்வுகளைக்
கண்கள் வழியும்,
காதுகள் வழியும்,
உடல் வழியும்,
நாம் சுவாசிக்கும் அந்த உணர்வு வழியும்
நமக்குள் சுவாசித்து, நமது உடலுக்குள் பரவச் செய்து, அந்த ஒளியான அணுக்களாக உருவாக்குகின்றது.
நாம் அருள் மகரிஷிகள் காண்பித்த அருள் வழியில் நடந்தால், அது நமக்குள் வளர்ச்சி பெற்று, பின், நம்முடைய நினைவாற்றல், மாமகரிஷி அகஸ்தியன் சென்ற பாதையில் செல்லும்.

நமது வாழ்க்கையில் எத்தகைய விருப்பு, வெறுப்புகளை நுகர்கின்றோமோ, அது நமக்குள் கருவாகி விடுகின்றது. உதாரணத்திற்கு, நாம் ஒன்றுமே செய்யவேண்டாம். ஒருவர் தாக்கப்படுவதை உற்று நோக்கி, அதனின் அச்ச உணர்வை நாம் நுகர்ந்துவிட்டால், அந்த அச்சத்தின் உணர்வுகள் நமது உடலில், ஊழ்வினை என்ற வித்தாகப் பதிவாகிவிடுகின்றது.

நாம் நுகர்ந்தறிந்த உணர்வுகள், நமது இரத்த நாளங்களில் கருவாக உருப் பெற்றுவிடுகின்றது. இப்படி பதிவாகி,  பதிவானதை மீண்டும் நினைவுபடுத்தினால், அதனின் உணர்வுகளை நாம் நுகரும் சக்தி பெறுகின்றோம். அப்படி நுகரும் சக்தி பெற்றபின், அந்த உணர்வுகளை, நமது உயிர் உடல் முழுவதும் சுழலச் செய்கின்றது.

அந்த உணர்வுகள் நமது இரத்த நாளங்களில் கலக்கப்படும்பொழுது, அணுக்கருக்களின் தன்மையினை அடைகின்றது. நமது உடலில் கருவான அணுக்களுக்கு, வீரியம் ஊட்டுகின்றது.

வேதனைப்படுவோருடைய நிலைகளை நமக்குள் பதிவாக்கிவிட்டால்,
முதலில் சில காலம் தெரியாது.
இந்த அச்சுறுத்தும் உணர்வுகள்
நமக்குள் முதலில் நுகர்ந்து,
அடைகாப்பது போன்று, அந்த அணுக்கருக்கள் வளர்ந்துவிட்டால்.
குஞ்சு தன் இரைக்காக கத்தும் பொழுது,
தாய் கோழி கூற்று பரப்பி,
தன் குஞ்சுக்கு இரை கொடுப்பது போன்று
நமது உயிர், உணர்வின் ஒலி அலைகளை எழுப்பி,
நமது சிறுமூளை பாகத்திற்கு எட்டச் செய்கின்றது.

பின், அந்த உணர்வின் தன்மை கொண்டு,
கண்களுக்கும், செவிகளுக்கும், மூக்கிற்கும்,
உடலுக்கும் கிளர்ச்சிகளை உந்தி
அதன்வழி சுவாசிக்கச் செய்து,
அதனின் எண்ணத்தை நமக்குள் பெறச் செய்து,
நமது இரத்த நாளங்களில் கலக்கச் செய்து,
நமது உடலில் உள்ள அணுக்கருக்களுக்கு, ஆகாரத்தைக் கொடுத்து உதவுகின்றது.

இப்பொழுது, நாம் அருள் மகரிஷிகளின் அருளுணர்வுகளை நமக்குள் பெறவேண்டும், என்ற உணர்வினை, நமது இரத்த நாளங்களில் அணுக்கருவாக உருவாக்கி, காலையில், நாம் தொழிலுக்கு செல்லும் பொழுதோ, தொழில் ஆரம்பிக்கும் பொழுதோ, இந்த உணர்வினை அடிக்கடி கூட்டினோம் என்றால், அதை அடைகாத்தது போன்றதாகின்றது.

அவ்வாறு அடைகாத்து, அந்த உணர்வின் தன்மை குஞ்சாகப்படும் பொழுது, நம்மையறியாமலே நமக்குள் அந்த எண்ணங்கள் வரும்.

இதனின் உணர்வுகளை நமக்குள் வளர்த்துவிட்டால்.
நாம் எண்ணுவதற்கு முன்பே,
அந்த உணர்வைக் கூட்டி,
நமக்குள் மகரிஷிகளின் அருள் உணர்வுகளை,
அந்த எண்ணங்களைத் தோற்றுவிக்கும்.

மகரிஷிகளின் அருள் உணர்வுகளைப் பெறவேண்டும் என்று எண்ண, எண்ண, அதனின் உணர்வுகள் நமக்குள் விளைகின்றது. அடைகாப்பது போன்று காத்து, (திரும்பத் திரும்ப நுகர்ந்த உணர்வுகள்) அந்த கருக்கள் நமக்குள் விளைந்து கொண்டேயிருக்கும்.

ஏனென்றால், நாம் நுகரும் உணர்வுகளெல்லாம், நம்முள் குஞ்சுகள் ஆனாலும், அடுத்தடுத்து நாம் தியானத்தில் எடுக்கும் பொழுது, இவைகளெல்லாம் கருக்களாகின்றன. பின், நினைவாக்கப்படும் பொழுது, அது வளர்ச்சி அடைந்து கொண்டே, இருக்கும்.
இப்படி நமது வாழ்க்கையில்,
ஒவ்வொரு நொடியிலும்,
ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும், 
ஒவ்வொரு குணத்திலும்,
ஒவ்வொரு உணர்விலும், 
அந்த மகரிஷிகளின் அருள் உணர்வுகளை, இணைத்துக் கொண்டே வரவேண்டும்.

அந்த மகரிஷிகள் தங்களுக்குள் வளர்த்துக் கொண்ட, அந்த விண்ணின் ஆற்றல் மிக்க சக்திகளை, அவர்கள்  எவ்வாறு உயிருடன் ஒன்றிய உணர்வுகளை, ஒளியின் சுடராக மாற்றி, இன்று சப்தரிஷி மண்டலத்தில் இணைந்து, வாழ்ந்து வளர்ந்து கொண்டிருக்கின்றார்களோ, அந்த அரும் பெரும் சக்திகளை, நமக்குள் அணுக்கருக்களாக மாற்றிக் கொண்டே இருக்க வேண்டும்.  அதற்குத்தான் இதை உபதேசிப்பது, அந்த நிலைகளை அனைவரும் அடைவதற்கு,  எமது அருள் ஆசிகள்.  


(மே 1998)
உதாரணமாக, நாம் ஒருமுறை திடுக் என்று பயந்துவிட்டால், அதனின் உணர்வின் கரு நம்முள் உருவாகிவிடும். மீண்டும் நினைவு கொண்டால், அது உணர்வின் அணுவாக, நமது இரத்த நாளங்களில் விளைந்து, நமது உடல் முழுவதும் சுழலப்படும் பொழுது, உடலில் அந்த அணுக்கள் இணைந்து குஞ்சாகப் பெருகி விட்டால், நம்மையறியாமலேயே திடுக் திடுக் என அஞ்சும் உணர்வு வரும். இதை நீங்கள் அறிய முடியும்.

இவைகளெல்லாம், யாம் உங்களுக்கு நினைவு படுத்துவதற்கு காரணம், நாம் நமது வாழ்க்கையில் இத்தகைய அஞ்சும் உணர்வோ, வெறுக்கும் உணர்வோ, தொழில் நஷ்டமோ, இவைகளை எண்ணி நுகரும் பொழுது, நாம் நுகர்ந்தது அனைத்தும் நம் உடலில் இரத்த நாளங்களாக, கருவாக உருவாகிவிடுகின்றது.

நஷ்டமாகிவிட்டது, நஷ்டமாகிவிட்டது என்று திரும்பத் திரும்ப எண்ணினால், அது அடைகாத்தது போன்று ஆகிவிடுகின்றது. அது உடலில் குஞ்சாக விளைந்து விட்டபின், இவர்களிடம் போய்  
நீங்கள் நல்லது எது சொன்னாலும்,
எனக்கு நஷ்டம், நஷ்டம் என்றுதான்
சொல்லிக் கொண்டிருப்பார்கள். நஷ்டத்திலிருந்து மீளவேண்டும் என்ற எண்ணங்களே இவர்களுக்கு வராது. ஏனென்றால், எடுத்துக் கொண்ட உணர்வுகள்தான் பேச வைக்கின்றது.

கடல்வாழ் மீன்கள் எங்காவது ஒரு துளி இரத்தத்தினுடைய மணத்தை நுகர்ந்துவிட்டால் போதும், விரைந்து அந்த இடத்திற்கு வந்துவிடும். தொலைவில் இருக்கக்கூடிய மீன்களை, அருகே வரச்செய்து பிடிக்க விரும்பினால், தூண்டிலில் இரையை வைத்துச் சிறிது ஒலி எழுப்பினால், தொலைவில் இருக்கும் மீன்கள், தூண்டில் இருக்கும் பக்கம் வந்துவிடும்.

இதைப் போன்று, 
நமது உடலிலுள்ள உணர்வின் அணுக்கள்,
உணர்ச்சிகளை எதன்வழி தூண்டுகிறதென்றால்,
நமது இரத்த நாளங்களின் வழிதான்.

இராமயாணக் காவியத்தில், இராமன், குகனை நண்பனாக ஆக்கிக் கொண்டான் என்று உரைத்திருப்பார்கள். அதில், குகன் ஆற்றில் படகையோட்டி வாழ்க்கை நடத்தி வருபவன் என்றும் உரைத்திருப்பபார்கள்.

ஆக, நமது உடலில் உள்ள இரத்த நாளங்களை ஆறாகவும்,
நம் எண்ணங்களால் உருவாக்கிய, உணர்வுகள் எதுவோ,
அவைகள், நமது இரத்த நாளங்களில் சுழன்று வருவதை
உணர்த்துவதற்குத்தான் இராமயாணத்தில்,
இராமனின் நண்பன் குகன் என்று உரைத்தார்கள்.

ஆக,  நமது இரத்த நாளங்களில் நட்பு உள்ள உணர்வுகளாக, நமக்குள் சேர்த்துவிட்டால்,  நமக்குள் வெறுப்பை உண்டாக்கும், நோய்களை உண்டாக்கும் உணர்வுகளை, நாம் ஒவ்வொன்றாகச் சமப்படுத்திவிடலாம் என்பதை உணர்த்துவதற்குத்தான், இவ்வாறு காவியங்களைப் படைத்தார்கள்.

இப்பொழுது, நாம் எண்ணும் எண்ணங்களில் பகைமை உணர்வை கலந்து, அதன்வழி செல்லபடும் பொழுது, நமது உடலில் நல்ல அணுக்களை உருவாக்கியவைகளுக்குப் பகையாகி, அவைகளுக்கு நல்ல உணர்வுகள் கிடைக்காவிடாமல் தடைப்படுத்துகின்றது. தீய உணர்வின் அணுக்கள், நல்லுணர்வின் அணுக்களை விழுங்க எண்ணும்.

ஏனென்றால், அவைகளுக்கு வரும் நல்லுணர்வுகளைத் தடைப்படுத்தும் பொழுது, நல்ல அணுக்கள் மடியும். இதனை உணர்த்துவதற்குத்தான், முதலில் குகன் என்ற நிலையை உருவாக்கினார்கள்.

இதில்,  இராமன், குகனை நட்பாக்கினான் என்று, அதாவது, நமக்குள் இருக்கும் இரத்த நாளங்களில், அருள் மகரிஷிகளின் உணர்வை கருவாக்கி, உருவின் தன்மை பெறச் செய்து, உயர்ந்த அந்த மகரிஷிகளின் அருள் உணர்வுகளை, நமக்குள் அணுக்களாக விளையச் செய்தால்,  அது உடலில் பதிந்திருக்கும் பகைமையுணர்வுகளை நீக்கி, மகரிஷிகளின் அருள் வட்டத்திற்கு அழைத்து செல்லும். 

ஆக, இன்று அழியா ஒளிச் சரீரமாக வாழ்ந்து வளர்ந்து கொண்டிருக்கும், மகாஞானிகளின் அருளுணர்வின் ஒளியலைகளை நமக்குள் பெருக்கி,  நம்மை அருள்வழியில் அது  அழைத்துச் செல்லும்.


(ஜூலை 1998)
            மனிதராகப் பிறந்த நாம், இன்று எவ்வாறு வாழ்ந்து கொண்டிருக்கின்றோம்? என்று சற்றுச் சிந்தித்துப் பாருங்கள். பெரும்பாலான குடும்பங்களைப் பார்த்தோமென்றால், மருமகளிடம் கடுமையாகப் பேசுபவர்கள் நிறையப் பேர் இருக்கின்றார்கள், அல்லது மருமகள், மாமியாரிடம் கடுமையாகப் பேசும் நிலை இருக்கின்றது.

இந்த உணர்வுகளெல்லாம் எப்படி வளர்ந்தது என்பது பற்றி, ஏற்கனவே,  உயிரே கடவுள்  எனும் தனிப் புத்தகத்தில் ஏழுதியுள்ளோம்.

இன்று குடும்பங்களில், சிறுசிறு சர்ச்சைகள் இருந்து கொண்டிருக்கின்றன. இவைகளெல்லாம் எதனால் வருகிறதென்றால், மருமகளாக வருபவள் 50 பவுனுடன் வரவேண்டும் என்று நினைக்கின்றார்கள்.
ஆனால், தன் மகளைக் கலயாணம் செய்து கொடுக்கும் பொழுது, 10 பவுனைக் குறைத்துவிடலாமா, அல்லது 20 பவுனைக் குறைத்துவிடலாமா, என்று நினைக்கின்றார்கள்.

மருமகள் வந்தால், இத்தனை பவுன் வேண்டும் என்று கேட்கின்றோம். ஆனால், இதனின் உணர்வுகளை நமக்குள் வளர்த்துக் கொண்டால், அந்த ஆசையின் எண்ணங்கள்தான் வருகின்றதே தவிர, மனிதரைத் தெளிவாக்கும் நிலைகள் வருகின்றதா? என்றால், இல்லை. ஆகவே, இத்தகைய உணர்வின் தன்மைகளை வளர்த்துக் கொண்டால், நமது உயிர், அதனின் அணுக்கருக்களைத்தான் நமக்குள் உருவாக்கும்.

நியாயம், தர்மம் அனைத்தும் பேசுவார்கள். ஆனால், மகனுக்கு மனைவியாக வருபவள், இவ்வளவு கொண்டு வந்தால் நன்றாக இருக்கும், என்று ஏராளமாக எண்ணிக் கொண்டிருப்பார்கள். மகனைப் பார்த்து, ஏன்டா ராஜா, உன்னுடைய மனைவி இவ்வளவு தானே கொண்டு வந்தாள் என்று விஷத்தை ஊட்டுவார்கள்.

ஆனால், விஷத்தின் தன்மை கொண்டு, நான்கு தரம் சொன்னால் வெறுப்பாகும். அந்த வெறுப்பின் தன்மை கொண்டு, தனது அம்மாவின் மனதை அடக்க, ஒரு பத்தாயிரம் வாங்கி வந்துவிடு என்று கூறுவார்கள். ஆனால், அங்கே உள்ள கஷ்டம் இவர்களுக்குத் தெரியாது.

இப்படி வேதனைப்படுத்தி வாங்கிய காசை, இவர்கள் அனுபவிக்க முடியாது. எதற்குச் செல்வழிப்பார்கள் என்றால், இவர்களுக்குள் வேதனைப்படுத்தியதின் உணர்வால் விளைந்த நோயை, நீக்கச் செலவழிப்பார்கள். யார், யாரோ, தின்பதற்குக் கொடுத்துவிட்டு வருவார்கள். இவர்களுக்கு எதற்காவது உதவுகிறதா என்றால், இல்லை. நரகவேதனை மட்டும்தான் மிச்சமாகும்.

சற்றுச் சிந்தித்துப் பாருங்கள். மற்ற மிருகங்கள், தான் வாழப் பிறரிடம் பணம் கேட்கின்றதா? இல்லை. மனிதராகப் பிறந்த நாம் மட்டும், பணம், பொருள் வேண்டும் என்று பிறரை வேதனைப்படுத்துகின்றோம்.

நம்முள், மனமொத்த உயர்ந்த நற்குணங்களைப் பெறும்பொழுது, அது நமக்குள் மகிழ்ச்சியை உருவாக்குகின்றது, தொழில் எண்ணங்களைப் பெருக்கச் செய்கின்றது. இதன் வழி கொண்டு செல்வத்தை ஈட்டுவோர் எவரோ, அவரே மனிதராக முடியும்.

ஆனால், பொருள் எளிதாக வருகிறதென்று, பிறரை வேதனைப்படுத்தி, பொருள் சம்பாதிக்க எண்ணினால், அவர்கள் நொந்திடும் உணர்வுகள் இங்கே வந்து விடுகின்றது, இது போன்ற தீய நிலைகளிலிருந்து, மனிதர், தாம் விடுபடும் எண்ணம் பெறவேண்டும்.

      எத்தனை பவுன் போட்டீர்கள்? எத்தனை பவுன் வாங்கினீர்கள்? என்று யாம் கூடச் சிலரிடம் கேட்போம். எதற்காகக் கேட்போம் என்றால், இவர்கள் இவ்வளவு பவுன் வேண்டும் என்று, மற்றவர்களிடம் கேட்டார்களா, இல்லையா, என்பதைத் தெரிந்து கொள்வதற்காகக் கேட்போம்.

அப்படி இவர்களைக் கேட்கும்பொழுது, என்னவோ போட்டார்கள், எங்களுக்கு ஒன்றும் தெரியாது, எங்களிடம் ஒன்றும் இல்லை, பத்து பவுன்தான் போட்டார்கள் என்று கூறினால், இவர்கள் நகையைப் பற்றிக் கேட்டிருப்பார்கள் என்று, யாம் அறிந்து கொள்வோம். இவர்கள் எம்மிடம் சிக்கிக் கொள்வார்கள். ஏனென்றால், இவர்களுடைய  உணர்வைச் சோதிக்க, இதையெல்லாம் யாம் கேட்போம்.


ஏனென்றால், மனிதர்களான நமக்குப் பணம் தேவையில்லை,
உயர்ந்த மனம் தேவை.
இரு மனமும் உயர்ந்த நிலை கொண்டு, என் கணவர்
மகரிஷிகளின் அருள் சக்தி பெறவேண்டும்.
அவர் பார்ப்பதெல்லாம் நலம் பெறவேண்டும்,
அவர் அருள் ஞானம் பெறவேண்டும்.
செய்யும் தொழில் ல்லாம் உயர்வாக வேண்டும்,
அவரை அனைவரும் போற்றவேண்டும்,
என்று,  மனைவி தன் மனதை உயர்த்தினால், அங்கே செல்வம் கொட்டும்.

செல்வத்தின் பெயரில், இன்னும் ஏன் பணம் கொண்டு வரவில்லை? என்று பிறரை வேதனைப்படுத்தி, செல்வத்தைக் கொண்டு வந்தால், அங்கே சிரமம் வரும். பிறகு கொண்டு வந்ததெல்லாம், அடகு வைத்துச் சாப்பிட வேண்டிய நிலை வரும். 
வேதனைப்படுத்திக் கொண்டு வந்த பணம் தங்காது. அதன்பின், இதனின் வேதனையின் உணர்வுகளைச் சுவாசித்து, நம்மையறியாது, நமக்குள் தண்டனை கொடுக்கும் உணர்வுகளைச் சுவாசிக்கின்றோம்.  நாம் எண்ணியது எதுவோ, அதுவாக, நம் உணர்வின் தன்மை அங்கே உருவாக்கிவிடும்.

வேதனை என்ற உணர்வை நுகர்ந்தால், உதாரணமாக, நாம் மனைவியை அடித்து, உதைத்து, உன் தாய் தந்தையிடம் போய்ப் பணம் வாங்கி வா என்று சொன்னால், அதற்கு மனைவி. ஐயோ என்று அழுது கொண்டிருக்கும்.

எப்படியாவது கொண்டுவா என்று துன்புறுத்துவோம், அல்லது மாமியார் இதைச் செய்வார். அதை ரசித்தால், உடல் முழுவதும் வேதனைகளை உருவாக்கும் அணு செல்கள், நிச்சயம் உருவாகும். இதிலிருந்து யாரும் தப்பமுடியாது.

அப்படி, வேதனைகளை உருவாக்கும் அணுக்கருக்களாக உடலில் உருவாகிவிட்டால், கொஞ்ச நாளில் நோய் வரும். அதன்பின், இந்த டாக்டரிடம் போனேன், இந்த நகையை அடமானம் வைத்தேன், அந்த நகையை அடமானம் வைத்தேன் என்ற நிலை வரும் பொழுது, வெறுப்பின் உணர்வுகள் தோன்றும், தொழிலும் குன்றும், மனவேதனையும் கூடும்.

இதுபோன்று, பிறரை வேதனைப்படுத்திப் பணம், பொருள், கேட்டு வாங்கிய குடும்பங்களின் நிலையை, நீங்கள் காணலாம். பணம் வந்தால், பின்னால் நோயும் வரும். உடலில் நோய் வந்தால், நரக வேதனையைத் தான் உடலில் வளர்க்கும் நிலை வரும்.

இந்த மனித உடலில் விஷத்தன்மை கூடிய பிறகு, உடலை விட்டு வெளியே செல்லும் உயிரான்மா, அடுத்து விஷம் கொண்ட கீழான பிறவிகளுக்கே சென்று சேரும்.

  இதைத்தான்  கீதை, நீ எதை எண்ணுகின்றாயோ, அதுவாகின்றாய் என்று நமது வாழ்க்கையின் ரகசியத்தை, ஒரு சொல்லுக்குள் அடக்குகின்றது, உணர்த்துகின்றது.
மனிதர்களான நாம், நம்மையறியாது நமக்குள் வந்து சேரும், தீமைகளை அகற்றிடும் அல்லது மாற்றிடும் நிலைகள் பெறவேண்டும்.  ஆறாவது அறிவின் துணை கொண்டு, கார்த்திகேயா என்ற நிலை பெறவேண்டும்.

தீமைகளை அகற்றுவதற்கு, அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளையும் பேரொளியையும் நாம் நுகரவேண்டும். அவ்வாறு, அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை நுகரவேண்டும் என்றால், அதனின் உணர்வின் வலுவின் தன்மையை, நமக்குள் பதிவாக்குதல் வேண்டும்.

இன்று, பிரபஞ்சமே தூய்மையற்ற நிலையில், நஞ்சின் தன்மை பெருகியதாக உள்ளது. நஞ்சின் தன்மைகளை அகற்றி, ஒளியின்  சுடராக மாற்றி, இந்த பிரபஞ்சத்தில் பரவிக் கொண்டிருக்கும் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை, நாம் அனனைவரும் நமக்குள் பெருக்குதல் வேண்டும். இதுதான் தியானம்.

நமது இரத்த நாளங்களில் கலந்துள்ள விஷத்தன்மைகளை அகற்றி, ஒவ்வொரு நொடியிலேயும், நம்முள் துருவ மகரிஷிகளின் அருள் சக்திகளைச் சேர்க்கவேண்டும்.

நம் குடும்பத்தில் உள்ளவர்கள், நம்மைச் சார்ந்தோர், நாம் அன்றாடம் சந்திக்கும் அனைவரும், அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியைப் பெறவேண்டும், என்று நாம் தியானிக்க வேண்டும். இதைத் தலையாயக் கடமையாகச் செய்யவேண்டும்.

இவ்வாறு நாம் செய்துவர, அனைவரும் வாழ்க்கையில் உடல் நலம், மன பலம் பெற்று, நோய் நீக்கிடும் அருள் சக்தி பெற்று, செல்வம் செல்வாக்கு பெற்று, மகிழ்ந்து வாழ்ந்திடும் அருள் சக்தி பெற்று, அந்தத் துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்தில் இணைந்து, மகிழ்ந்து மகிழ்ந்து வாழ்ந்திட முடியும். உயிருடன் ஒன்றிய உணர்வுகளை, ஒளியின் சுடராக மாற்றிட முடியும்.


(ஜூலை 1998)
யாம், நமது குருநாதர் காண்பித்த அருள்வழி கொண்டு, பல ஊர்களுக்கும் சுற்றுப் பிரயாணம் செய்து கொண்டிருந்த சமயம், எமது தாய், வாழ்வின் இறுதிக் கட்டத்தில் இருந்து கொண்டிருந்த பொழுது, குருநாதர் அதை எமக்கு உணர்த்தி, உனது அம்மாவைப் பழைய நிலைகளுக்குச் செல்லும்படி விட்டுவிடாதே, 
அவர்களை முதலில் விண் செலுத்த வேண்டும்,
அதன் பிறகுதான், நீ விண்ணுக்குப் போக முடியும்
என்று நினைவுபடுத்தினார்.

ஆகையால், எமது தாயைச் சந்திக்கச் சென்றோம். அங்கு அவர்களைப் பார்க்கும் பொழுது, அவர்களால் சாப்பிட முடியவில்லை, கண் பார்வை முழுவதும் மங்கிவிட்டது, உடல் வீங்கியிருந்தது, எழுந்திருப்பதற்கும் மிகவும் சிரமப்பட்டார்கள்.

யாம் அது சமயம், சாமியம்மா அவர்களையும் உடன் அழைத்துச் சென்றிருந்தோம். ஆகையால், எமது தாய், சாமியம்மாவை, வீரம்மா’… என்று பெயர் சொல்லி அழைத்து, ஒரு முட்டையை எடுத்து வேக வைத்து, இரண்டு மிளகு, சிறிது உப்பு வைத்து என் நாக்கில் வை வீரம்மா என்றார்கள்.

ஏனென்றால், எமது தாய் முட்டை, கோழிக்கறி போன்றவைகளை விரும்பிச் சாப்பிடுவார்கள். யாமும், முன்பு முட்டை, கோழி என்றெல்லாம் சாப்பிட்டோம்.

எமது தாயால், அந்த இறுதிக் கட்டத்தில் சாப்பிடவே முடியாது. ஆனால், வேக வைத்த கோழி முட்டையில், இரண்டு மிளகும், சிறிது உப்பும் வைத்துக் கொண்டுவா என்றால்,
எமது தாயின் நினைவு எங்கிருக்கிறது?
கோழியின் மேல்தான் இருக்கின்றது.

இதைத்தான், குருநாதர், உனது அம்மா முட்டையும், கோழி கறியும் நிறையச் சாப்பிட்டிருப்பார்கள், அதனின் அணுக்கள் அவர்கள் உடலில் விளைந்திருக்கின்றது என்று கூறினார்.

எமது தாய்க்கு உதவியாக, சாமியம்மாவை இருக்கச் செய்துவிட்டு, யாம் தாரமங்கலம் வந்துவிட்டோம். ஏனென்றால், யாம் தாரமங்கலம் வருவதாக உரைத்து, ஊர் முழுவதும் விளம்பரமும் செய்துவிட்டார்கள். இதனால், தாரமங்கலத்திற்குத் தவிர்க்க முடியாமல் வரவேண்டியதாகி விட்டது. சேலத்தில் உள்ள அன்பர்களிடம் இந்தச் சூழ்நிலையைச் சொல்லிவிட்டுத்  தாரமங்கலம் வந்துவிட்டோம்.

சேலத்து அன்பர்கள் தாரமங்கலம் அன்பர்களிடம், ஞானகுரு அவர்களின் தாயின் உடல்நிலை மிகவும் குன்றியிருக்கிறது, ஆகவே, ஏதேனும் தகவல் வந்தால், ஞானகுரு அவர்களை உடனே வழியனுப்பி வையுங்கள்  என்று கூறியிருந்தார்கள்.

தாரமங்கலத்தில், யாம் கூட்டத்தில் உபதேசம் கொடுத்து முடித்து, தியானத்தில் இருந்து கொண்டிருந்தோம். அப்போது, எமது தாயின் ஆன்மா வெளிவருகின்றது.

அது சமயம், எமது குருநாதர் சொன்னது போன்று, எமது தாயை மனதில் நினைத்து, தியானம் செய்தோம். அப்பொழுது, அதனின் உணர்வின் நிலைகள் அங்கே தெரிந்தது. கூட்டத்தில் இருந்தவர்கள், யாரோ ஒரு பெரியம்மா போகின்றார்கள் என்றார்கள்.

இது, தாரமங்கலத்தில் நடந்த சம்பவம். அம்மாவின் உருவம், அதனின் உடைகள், அதனின் உணர்வுகள் அங்கே தெரிந்தது. அப்பொழுது, எமது தாயின் உயிரான்மாவை,  சப்தரிஷி மண்டலத்துடன் இணையச் செய்தோம்.

எமது தாயின் உயிரான்மாவைச் சப்தரிஷி மண்டலத்துடன் இணைத்து, உடல் பெறும் உணர்வுகளைக் கரைத்தபின்தான்,  அந்த உணர்வின் சக்தியின் துணை கொண்டு, சப்தரிஷி மண்டலங்களின் ஒளிகாந்த சக்தியினை, யாம் பெற முடிந்தது. அது வரையிலும், எம்மால் பெற முடியவில்லை.

அதுவரையிலும், எந்த ஒரு உயிரான்மாவையும் விண்ணிற்கு ஏற்ற முடியவில்லை. அன்னை, தந்தையின் உணர்வுகள் உனது உடலில் இருப்பதனால், அவர்களின் உயிரான்மாக்களை முதலில் விண்ணிற்கு ஏற்றவேண்டும், என்பதை எமது குருநாதர் எமக்கு உரைத்தார்.

நான் உனக்கு குருவாக இருக்கலாம்,
அருள்ஞான உணர்வின் தன்மையை வளர்க்கலாம்.
அதனால், உன் அன்னை, தந்தையை விண்ணிற்குச் செலுத்த முடியும்.
அதன் உணர்வின் தன்மை கொண்டுதான்,
என்னையும் அங்கே அழைத்துச் செல்லமுடியும் என்று குருநாதர் உபதேசித்தார்.

குருவாக்குத் தப்புவதில்லை, நாம் சாதாரண மனிதராக இருக்கின்றோம், என்று நினைக்கின்றோம்.. அது சமயம்தான், எமது தாயின் உயிரான்மாவை விண்ணிற்கு ஏற்றினோம். எமது தந்தையின் இறப்பின் பொழுதுகூட,  யாம் அவர் அருகில் இல்லை.

அது சமயம், கரூரில் கால் நடையாகச் சுற்றிக் கொண்டிருந்தோம். இராஜபாளையத்திலிருந்து, கரூருக்கு கால் நடையாக வந்திருந்தோம். அது சமயம்தான், எமது தந்தையின் உயிரான்மா, உடலை விட்டுப் பிரிகின்றது. அப்போது, அதனின் உணர்வுகள் காட்சிகளாகத் தெரிந்தது. அருகே, ஒரு இடத்தில் போய் அமர்ந்தோம்.

அங்கே, ஏற்கனவே அறிமுகமான ஒருவர் இருந்தார். அந்த நேரத்தில், அவருக்கும் காட்சி தெரிந்தது. ஐயோ, உங்கள் அப்பா போகிறாரே என்றார், அருகிலிருந்த இன்னொருவர், யாரோ ஒரு பெரியவர் போகிறார் என்று சொன்னார். யாம் அங்கேயே அமர்ந்து, எமது தந்தையின் உயிரான்மாவை விண்ணிற்கு அனுப்பினோம்.

எம்மை ஈன்றெடுத்த தாய், தந்தைதான், எமக்குக் கடவுள். எம்மை மனிதனாக உருவாக்கியவர்கள் அவர்கள்தான், அதன் துணை கொண்டுதான், குருநாதர் காண்பித்த அருள்வழியில், அவர்களை விண் செலுத்தினோம்.

முதலில், எமது தந்தை விண் சென்றார். இருந்தாலும் எமது தாயையும் விண்ணிலே சேர்த்து, சிவசக்தியின் உணர்வுகளாக அங்கே வளர்க்கச் செய்யவேண்டும். அப்பொழுதுதான், ஒளியின் சரீரமாக வளர்க்க முடியும், என்று குருநாதர் உணர்த்தினார்.

அதன் பிறகு, இதன் உணர்வின் ஒளிகொண்டு, உன்னுடைய உணர்வுடனே வருகின்றேன். உணர்வின் ஒளியை உணர்த்துகின்றேன். என்னை விண்ணில் செலுத்திவிடு, உணர்வின் ஒளியாக இயக்கிவிடு என்று, குரு சொன்ன வாக்கின்படி, எம் அன்னை தந்தை விண் சென்றபின்தான், குருவின் உணர்வின் ஒலிகளை, அவர் காண்பித்த அறநெறிகள் கொண்டு, அவர்களையும் விண்ணிற்குச் செலுத்தும் நிலையாக,  சில நிலைகளைச் செய்தோம்.

உடலை விட்டு பிரிந்த ஆன்மாக்களை, விண் செலுத்துவதற்காக, விண்ணின் ஆற்றலின் உணர்வின் தன்மையைப் பெறுவதற்கு, எம்மை கேதார்நாத், பத்ரிநாத் போன்ற இடங்களுக்குப் போகுமாறு செய்தார் குருநாதர். 

அங்கே, கடும் தவம் இருந்த ஆன்மாக்கள் உணர்வின் தன்மை எடுத்து, தம் உணர்வுக்குள் ஒளியாக மாற்றியது எப்படி? என்பதை, எம் அன்னை தந்தையை விண்ணிற்கு உயர்த்தியபின்தான், யாம் பேருண்மையின் உணர்வுகளை அறிய முடிந்தது. ஆகவே,  இன்றைய நிலைகளில், யாம் உங்களுக்கு உபதேசிப்பது அனைத்தும்,  பேருண்மையின் உணர்வுகள்.

அருள் ஒளியின் உணர்வுகளை, உங்களுக்குள் வளர்த்துக் கொள்ளுங்கள். உங்கள் முன்னோரின் உயிரான்மாக்கள் இன்னோரு உடலுக்குள் சென்றிருந்தாலும், பரவாயில்லை.

நீங்களும், உங்களுடைய குடும்பத்தை சேர்ந்தவர்களும், ஒன்றாக துருவ தியானத்திலும், பௌர்ணமி நாட்களிலும் தியானத்தில் அமர்ந்து, எங்களுடன் வாழ்ந்து, வளர்ந்து, உடலைவிட்டுப் பிரிந்து சென்ற எங்கள் குலத் தெய்வங்களான முன்னோரின் உயிரான்மாக்கள், சப்தரிஷி மண்டலத்துடன் இணைய வேண்டும். உடல் பெறும் உணர்வுகள் கரைய வேண்டும் அழியா ஒளிச் சரீரம் பெறவேண்டும் பேரின்பப் பெருவாழ்வு பெறவேண்டும் என்று எண்ணி, ஏங்கி தியானிக்க வேண்டும்.

முன்னோர்கள் பாசத்துடன் உங்களைக் காத்தார்கள். ஆகவே, அவர்களை விண் செலுத்தினால், அவர்களுடைய உணர்வின் தொடர், உங்களுக்குள்ளும் வரும்.

அவர்கள் விண்ணில் இருக்கப்படும் பொழுது, உங்களுடைய எண்ணத்தை அங்கே செலுத்தினால், சப்தரிஷிகளின் அருள் சக்தியை, ஆறாவது அறிவின் துணை கொண்டு, ஏழாவது நிலையை அடைந்தவர்களின் அருள் சக்தியை நீங்கள் எளிதில் பெறமுடியும். 

உங்களை வளர்த்து வழிகாட்டிய உணர்வுகள் நிலைக்கின்றது. இதனின் உனர்வின் தன்மை கொண்டு, உங்களுள் உணர்வின் ஒளியாக மாறுகின்றது. இதன் உணர்வின் தன்மையை, நீங்கள் எளிதில் பெறமுடியும். உங்களை நம்புங்கள். இதன் வழி செயல்படும் அனைவருக்கும், எமது அருள் ஆசிகள்.


(ஆகஸ்ட் 1998)
ஆன்மா நலம் ஆனால் எண்ணம் நலமாகும் 
ஆன்மா நலம் ஆனால் சொல் நலமாகும் 
ஆன்மா நலம் ஆனால் செயல் நலமாகும் 
ஆன்மா நலம் ஆனால் உடல் நலமாகும் 
ஆன்மா நலம் ஆனால் உயிரான்மா நலமாகும் 
ஆத்மசுத்தி செய்வோமானால் ஆன்மா நலமாகும்.

ஒரு நூலுக்கு வலு குறைவு. பல நூலை ஒன்றாக திரித்து, கயிறாக மாற்றும் பொழுது அதனின் வலு கூடுகின்றது. இதைப் போன்று,  நாம் அனைவரும் மகரிஷிகளின் அருளுணர்வின் வலிமையை நமக்குள் ஏற்றிக் கொண்டு, நம்முடன் வாழ்ந்து, வளர்ந்து, உடலைவிட்டுப் பிரிந்து சென்ற முன்னோர்களின் உயிரான்மாக்களை, சப்தரிஷி மண்டலத்திற்கு உந்தித் தள்ளவேண்டும். 

அப்படியில்லாது, நாம் சப்தரிஷி மண்டலத்திற்குச் செல்வதற்கு, வேறு மார்க்கம் கிடையாது.

எவருக்கோ காசு கொடுத்து, முன்னோரை மோட்சத்திற்கு அனுப்புவேன் என்றால், அது முடியாது. நீங்கள்தான், உங்கள் உணர்வின் துணைகொண்டு, அருள்ஞானிகள் காண்பித்த அருள்வழி கொண்டு, மூதாதையர்களின் ஆத்மாக்களை விண்செலுத்த வேண்டும்.

ஒருவர் உங்களுடன் வாழ்ந்து, பின், உடலை விட்டுப் பிரிந்திருந்தால், 1 - லிருந்து  48  நாட்களுக்குள் அந்த ஆன்மாவைக் குறித்து, மகரிஷிகளின் அருள் உணர்வின் துணை கொண்டு, அந்த ஆன்மா சப்தரிஷி மண்டலத்துடன் இணைய வேண்டும் என்று எண்ணி, தியானித்தல் வேண்டும்.

ஒரு இராக்கெட், உந்து விசையின் ஆற்றலால் விண்ணில் தன் எல்லையை அடைகின்றது. பின், அங்கிருந்து தான் கவரும் உணர்வுகளைத் தரை மார்க்கத்திற்கு அனுப்புகின்றது. 

நட்சத்திரங்கள், விண்ணின் ஆற்றலைத் தனக்குள் கவர்ந்து, பெருக்கி, விஷத்தன்மை கொண்ட கதிரியக்கப் பொறிகளை உருவாக்கும், வல்லமை பெற்றது. இப்படி உருவாக்கப்பட்ட கதிரியக்கப் பொறிகள், மற்ற பொருள்களுடன் கலந்து, புவிக்கு வருகின்றது. இவைகளைத்தான் விஞ்ஞானி பிரிக்கின்றான், சக்தி வாய்ந்ததாக இணைத்து, இராக்கெட்டில் ஏவுகின்றான்.

உணர்வின் அதிர்வுகளில் இருக்கும் மின்னணுவின் கதிர்களை, தனியாகச் சேமிக்கின்றான். உணர்வின் அதிர்வுகளை அதற்குள் இணைக்கின்றான். எப்படி,  மின்னல், ஒளியாக்கும் உணர்வுகளை பூமிக்கு அழைத்து வருகின்றதோ,  இதைப் போன்று, அது இயக்கும் தன்மை கொண்டு இங்கே ஈர்க்கப்பட்டு, அந்த உணர்வின் தன்மை கொண்டு,  விண்ணின் ஆற்றலை அறிகின்றான் விஞ்ஞானி.

இதைப் போன்றுதான், நம்முடைய முன்னோரின் உயிரான்மாக்களை சப்தரிஷி மண்டலத்துடன் இணையச் செய்தல் வேண்டும். ஆனால், சாதாரணமாக சொல்லிக் கொண்டிருந்தால், போக முடியாது.

முதலில், உங்களிடத்தில் அருள் ஞானத்தின் நினைவாற்றலைப் பெருக்குதல் வேண்டும். அதனின் உணர்வாக, ஏங்கித் தியானிக்க வேண்டும்.

இதன் உணர்வின் வலுவின் துணைகொண்டு, நம்முடன் வாழ்ந்து, வளர்ந்து, உடலைவிட்டு பிரிந்து சென்ற உயிரான்மாக்களை, இன்னொரு உடலுக்குள் சென்றிருந்தாலும் பரவாயில்லை, நாம் தொடர்ந்து தியானிப்பதன் மூலம், அந்த உயிரான்மா இன்னொருவரின் உடலை விட்டு வந்தபின், விண் செலுத்தி, இன்னொரு உடல் பெறாத நிலைகளை உருவாக்கலாம்.

இன்றைய நிலைகளில், முன்னோர்கள் மூதாதையர்களின் உயிரான்மாக்களை விண் செலுத்தியபின்,  அதன் வழி தொடர் கொண்டுதான், நாம் விண்ணின் ஆற்றலைப் பெறமுடியும். 

மூதாதையர்களின் உயிரான்மாக்களை விண் செலுத்திய பின், அதன் உணர்வின் துணை கொண்டு உங்கள் குடும்பத்தில் வரும் தீமைகளை அகற்றிவிட்டு, அருள் ஞானியின் உணர்வை  உங்களுக்குள் துணை கொண்டால், உங்களை, அங்கே அழைத்துச் செல்கின்றது, உங்களுடைய உயிர்.

அருள் மகரிஷிகளின் அருள் உணர்வுகளை, யாம் உங்களுக்குள் பதிவு செய்ததன் நிலை கொண்டு, அருள் மகரிஷிகளின் அருளை எண்ணி, உங்களுடைய மூதாதையர்களின் உயிரான்மாக்களை சப்தரிஷி மண்டலத்துடன் இணையச் செய்யுங்கள், உடல் பெறும் உணர்வைக் கரையச் செய்யுங்கள்.

இன்றைய காலத்தில், குலதெய்வங்களை வணங்கும் முறைகள் அனைத்தும், அரசர்கள் காண்பித்த நிலைகளிலேயே தொடர்கின்றது. முதல் மூலக் குலதெய்வம், எதுவென்று கேட்டுப் பாருங்கள்? சொல்வார்கள், தீயில் மாண்டவர், எங்களுக்கு குலதெய்வமாக இருந்து, உதவிகளைச் செய்கின்றார் என்று கூறுவார்கள்.

அரச காலத்தில், அரசர்கள் தாங்கள் போர்களுக்குச் செல்லும் பொழுது, மந்திரங்களைக் கையாள்வார்கள். கூட்டமைப்பாகப் போர்களுக்குச் செல்லும் பொழுது, அதில் யாராவது ஒருவர், தங்கள் குழந்தையைக் கொடுத்து உதவி செய்வார்கள். அதனுடைய தாய், தந்தையரும் அங்கு இருப்பார்கள். இவர்களை, குலதெய்வங்களுக்கு தாய் என்று கூறுவார்கள்.

இத்தகைய நிலைகளில் அவர்களை வளர்த்து, அதற்கு என்னென்ன சாங்கியங்களோ அதைச் செய்து, அதற்கிணையான உணர்வுகளையும் கொடுத்து, பழி தீர்க்கும் எண்ணங்களையும், எதிரிகளை வீழ்த்தும் முறைகளையும் அவர்களுடைய உணர்வில் ஏற்றுவார்கள். அதன்பின், அவர்களைத் தீயில் எரித்து, இந்த மந்திர ஒலிகளில் எடுத்து ஏவல், பில்லி, சூன்யம் என்று, எதிரிகளின் மேல் பாய்ச்சுவார்கள்.

படைகளுக்குத் தலைமை தாங்கியவர்கள், அவர்களுடைய குல வழியில் நிறையப் பிரிக்கப்பட்டு, பிரிக்கப்பட்டு, ஆக,  ஒவ்வொரு குடும்பத்திற்கும், ஒவ்வொரு குலதெய்வம் என்ற நிலையாகிவிட்டது. 

அதிலிருந்து பிரிக்கப்பட்ட உணர்வுகள்தான், சாதாரண மனிதனுக்குள் நுழைக்கப்பட்டு, இன்று நாம் குலதெய்வங்களாக வணங்கி வரும் நிலைகள். இதன் வழியில் உடலை விட்டுச் சென்றவர்களை, நாம் குடும்பப் பற்றுடன் ஈர்க்கப்படும்பொழுது, குடும்பத்தில் மீண்டும், அந்த உணர்வின் தன்மை நுழையும் பொழுது, பகைமை என்ற நிலைதான் வளர்க்கின்றது.

ஒரு சமயம் ஒரு பெண், தன் குலதெய்வத்தை வணங்கும் பொழுது, அந்தப் பெண்ணிடத்தில் அருளாடல் ஏற்பட்டு, கீழே விழுந்து, கை எலும்பு முறிந்துவிட்டது. இதனை, குருநாதர் எக்கு,க் காண்பித்து விளக்கினார். குலதெய்வம் என்று ஆட்டம் ஆடியது. அந்தக் குடும்பத்திற்கு, அருள் வாக்கு கொடுத்தது. ஆனால், அந்த ஆன்மா கால் பிசகி, கீழே விழும் பொழுதுதான், அந்தப் பெண்ணிற்குக் கை முறிந்தது.

எல்லோரையும் காக்க வந்த அந்த ஆன்மா, முதலில், அந்த பெண்ணைக் காக்க வேண்டுமல்லவா? என்று குருநாதர் வினாக்களை எழுப்பி, இதுவெல்லாம் எந்த வழியில் நடந்து கொண்டிருக்கின்றது? என்ற நிலையைக் காட்சிபூர்வமாகக் காண்பித்து, இந்த உணர்வுகள், எப்படி தொடர் வரிசை கொண்டு இங்கே புகுகின்றது, அவர்களுடைய எண்ணங்கள், எப்படி இங்கே செயல்படுகின்றது? என்ற நிலையைத்  தெளிவாக காண்பித்தார்.

மனிதன் ஒருவன் இறந்தபின், அவனுடைய நிலை என்னவென்று நீங்கள் அறிதல் வேண்டும். இதனின் நிலைகளை, நாம் கண்கூடாகவும் பார்க்கின்றோம். ஒருவன் உடலில் ஆவி புகுந்தபின், ஆவியை விரட்டுகிறோம் என்று, என்னென்னவோ செய்கின்றனர். ஆனால், முடிவதில்லை.

மனித உடலை விட்டுப் பிரிந்து சென்ற உயிரான்மா, இன்னொரு உடலுக்குள் புகுந்து, கொன்றிடும் நிலையும், புசிக்கும் நிலையும் அடைகின்றது. மனிதனின் உணர்வுகள் இப்படித்தான் மாற்றப்பட்டு, தேய்பிறை என்ற நிலைக்கே செல்கின்றது. ஆகவே, மனித வாழ்க்கையில், நாம் மீண்டும் தேய்பிறை என்ற நிலைக்குச் செல்லாது, நம் உணர்வுகளை அருள் மகரிஷிகளின் அருள் வட்டத்தில், செலுத்த வேண்டும்.

தியானவழி அன்பர்கள் அனைவரும், ஒருவருக்கொருவர், தைப் போ தியானத்தைக் கடைப்பிடித்து, மூதாதையர்களின் உயிரான்மாக்களை சப்தரிஷி மண்டலத்துடன் இணையச் செய்து, உடல் பெறும் உணர்வுகளைக் கரைத்திடும் நிலையைப் பழகவேண்டும். 

இதன் தொடர்கொண்டு, நம்முடைய எண்ணங்களும், அங்கே துரித நிலையில் செல்கின்றது. விண்ணின் ஆற்றலை நம்முள் கவர்ந்து, நம் இரத்த நாளங்களில் பெருக்க உதவுகின்றது.

ஆகவே, இதன்வழி கொண்டு,  நாம் மூதாதையர்களின் உயிராத்மாக்களை, விண் செலுத்துவோம். விண் சென்ற மூதாதையர்களின் அருள் துணை கொண்டு, நாம் நம்முள் விண்ணின் ஆற்றலைப் பெறுவோம். நாம் நம்முள் அறியாது சேர்த்த இருளை அகற்றுவோம். உடல் பெறும் உணர்வை நீக்கி, பிறவியில்லாப் பெருநிலை பெறுவோம்.

எவரொருவர், இதன் உணர்வு கொண்டு தம்முள் உயர்ந்த உணர்வின் தன்மையை வளர்க்கின்றனரோ, அவர் சப்தரிஷிகளின் அருள் வட்டத்தில் வாழ்ந்து, தெளிந்த மனதுடன், மகிழ்ந்திடும் உணர்வுடன், தொழில் வளத்துடன், மன நலத்துடன், மன பலத்துடன், உடல் நலத்துடன் வாழ்ந்து, மரணமில்லாப் பெருவாழ்வு என்ற, பெருவீடு பெருநிலையைப் பெறும் தகுதியைப் பெற்று, எல்லாக் காலத்திலும் பேரின்பப் பெருவாழ்வாக வாழ்ந்து வளர்ந்திட, எமது அருள் ஆசிகள்.


(செப்டம்பர்  1998)
ஒரு வகையான புழு இனம், ஒன்று இருக்கின்றது. அது, பல சிறு குச்சிகளைச் சேர்த்து,  அடுக்கடுக்காக வைத்து, கூடு போன்று வைத்து, அதனுள் அடைபட்டு  விடுகின்றது. கூட்டினுள் அடைபட்டபின்,  வெளியில் வரமுடியாத நிலையில், "வெளியில் வரவேண்டும்" என்ற உணர்வுகளால் தூண்டப்படுகின்றது.
இதனால்,  அந்தப் புழுவின் உணர்வுகள் மாறி மாறி,  அந்தப் புழுவே "தட்டான் பூச்சியாக" மாறுகின்றது. அதனின் உடல் சிறுத்து,  இந்த உணர்வின் தன்மை,  கூட்டை விட்டு  வெளியேறும் அளவிற்கு மாறுகின்றது.

நெற்பயிர்கள் அதிகமாக இருக்கிறதென்றால்,  அந்தப் பகுதியில் தட்டான் பூச்சிகள் அதிகமாக இருக்கும். பயிர்களில்  ஒரு வகையான பேன்கள் இருக்கும்.  அதை உண்பதற்காக,  ந்தச்  செடிகளில் தட்டான் பூச்சிகள் அமரும். அதன் உணர்வை நுகரும். அதே சமயத்தில்,  அந்த செடிகளில், தன் முட்டைகளை இட்டுவிடும். 

தட்டான் பூச்சிகள் தாம் பிறந்தபின், ஆண், பெண் என்ற தன்மை கொண்டு, இணைசேர்கின்றன. இதனின் தொடர் கொண்டு, பெண் தட்டான் பூச்சி, தன் முட்டையை நெல்  செடியில் இட்டதென்றால்,  அது நெல் பூச்சியாக வரும். நெல் செடியின் உணர்வினை நுகர்ந்து,  அந்த இலையின் நிலைகள் நெல்லின் தன்மை எப்படியோ, அதைப் போன்று, இறக்கைகள் கொண்ட பூச்சியாக மாறுகின்றது.

பூச்சியாக வளர்ந்தபின்,  நெல் செடியில் தேன் போன்ற சுவை உள்ளதைத் தின்றுவிட்டால்,  நெல்கள் கூகைகளாக ஆகிவிடுகின்றன.  

இதைப் போன்று,  வேறொரு செடிகளில் முட்டைகளை இட்டு விட்டால், அந்தக் கரு முட்டை,  அந்த வாசனையை நுகர்ந்து,  அதில் உள்ள வெப்பத்தின் தன்மை கொண்டு, அந்தச் செடியின் தன்மைக்கொப்ப  “பட்டாம் பூச்சியாக வெளிப்படுகின்றது.

அதாவது,  ஒரு செடியின் பூவில் முட்டையிட்டு விட்டால், அந்தக் கரு முட்டை,  பூவிற்குண்டான உணர்வினை எடுத்து,  அந்தப் பூ, எந்தக் கலரில் இருந்ததோ,  அதே கலரில் இந்த பட்டாம் பூச்சிகளினுடைய இறக்கைகளின் கலர்கள்,  "பள பள"வென இருக்கும். 
நாம் முகத்திற்குப் பூசும் பவுடர் எப்படி இருக்குமோ,  அதே போன்று பட்டம் பூச்சியின் இறக்கையைத் தொட்டால்,  மாவு போன்று உதிரும். ஆக,  பூவிற்கு வரும் உணர்வின் சத்தினைத் தன்னுள் எடுப்பதனால்,  அதனின் இறக்கையின் கலர்கள் அதே போன்றிருக்கும்.

நாம் ஜெராக்ஸ் எடுக்கிறோம்.   அது எந்த நிலையில் இருக்கின்றதோ, அதை,  அந்த நிலையில் அப்படியே பதிவாக்குகின்றது. இதைப் போன்று, நமது உயிரின்  தன்மை எலெக்ட்ரிக்,  நுகர்ந்த உணர்வு எதுவோ, அந்த உணர்வின் பதிவாக மாற்றி விடுகின்றது. 

முட்டை பொரிந்து,  பூச்சியாக வெளி வந்தபின், அதன் இறக்கைகளில் பூவின் கலர்கள் எதுவோ,  அதன் கலர்கள் ஜெராக்ஸ் போன்று, பதிவாகி இருக்கும்.

பூச்சியின் உயிர்  எலெக்ட்ரிக். அதனில் நுகர்ந்து,  அந்த உணர்வின் தன்மை பெற்றபின்,  இந்தச் செடியின் சத்தை கவரும் தன்மை  பெறுகின்றது. அப்பொழுது,  அதனின்று வரக்கூடிய நிலையை எலெக்ட்ரானிக்காக  மாற்றி,  அதன் நிலையில் அது உருப்பெறுகின்றது. 

பூவில் வந்திணையும் அமுதின் உணர்வுகள், இதனின் கரு முட்டையில் வந்திணைந்து, இதனின் இறக்கைகளில், ஜெராக்ஸ் செய்துவிடும். 

இதனால், பலவித வண்ணத்துப் பூச்சிகளை நாம் காணலாம். இவையெல்லாம்,  ஒரு தட்டான் பூச்சி எந்தெந்தச் செடிகளில் முட்டையிடுகின்றதோ,  அதனதன் நிலை கொண்டு அதன் நிலை பெறுகின்றது.  

ஏனென்றால்,  இயற்கையில் உயிரின் இயக்கம்,  புற நிலை கொண்டு அகத்துக்குள் இயக்குகின்றது.  புற நிலையிலிருந்து  வருவதையெல்லாம் "ஓம்  நமசிவாய" என்று தன் உடலாக மாற்றிக் கொண்டே உள்ளது. 

உயிர் இயக்கச் சக்தியாக இருந்து,
தனது  ஈர்க்கும் தன்மை கொண்டு,
சேர்த்துக் கொண்ட உணர்வுக்கொப்ப இயக்கமாகவும்,
அதனின் எண்ணங்களாகவும்,  அதன்வழி  உணர்ச்சிகளாகவும்,
உணர்வுக்கொப்ப,  உடலின் அமைப்பாகவும் இயங்குகின்றது.

இவையெல்லாம் இயற்கையில் எவ்வாறு விளைகின்றது, என்பதன் உணமைகளை அறிந்தவர் அகஸ்தியர். அவர் தம்முடைய வாழ்நாளில், விஷத்தின் இயக்கத்தையும், அணுக்களின் தன்மையும் எத்தகையது என்பதை அறிந்து உணர்ந்தவர்.  

ஒரே தட்டான் பூச்சிதான், முட்டைகளை  இட்டது. ஆனால், செடிகளுக்கொப்ப,  அந்தக் கருக்கள் அதன் உணர்வின் தன்மையை நுகர்ந்து,  பல வண்ணங்களில், பலவிதமான பூச்சிகளாக உருவாகின்றது. இவையெல்லாம் இயற்கையின் விளைவுகள்.
இதைப் போன்றுதான், 
அகஸ்தியர் தாம் தாயின் கருவில்
சிசுவாக  இருந்த பொழுது,
விளைந்த உணர்வுகள் பலபல. 

இதனின் துணை கொண்டு,  அகஸ்தியர் தாம் வாழும் காலத்தில் இயற்கையின் இயக்கத்தின் உணர்வினையும்,  நஞ்சினை அடக்கிடும் தன்மையினையும் அறிந்துணர்ந்தார். 

அகஸ்தியர் நஞ்சினை வென்றிடும் உணர்வுகளை,  தம் எண்ண ஒலி கொண்டு வெளிப்படுத்தினார். இதனை, சூரியனின் காந்தப் புலனறிவுகள் கவர்ந்து, அலைகளாக மாற்றி வைத்துள்ளன. அவைகளை,  நாம் அனைவரும் நம் குருநாதர்   காட்டிய அருள்வழியில் கவர்ந்தோம் என்றால்,  நமது வாழ்க்கையில் வரும் சர்வ தீமைகளிலிருந்து விடுபட்டு,  நாமும் அந்த அகஸ்தியனைப்   போன்று, மகரிஷியாகலாம்.   

அழியா ஒளிச்சரீரம் பெறலாம். சப்தரிஷி மண்டலத்துடன் இணைந்து மகிழ்ந்து வாழலாம்  அவ்வாறு,  அந்த  அகஸ்தியன் பெற்ற நஞ்சினை வென்றிடும் ஆற்றல்,  நீங்கள் அனைவரும் பெறுவதற்கு எமது அருள் ஆசிகள். 

(அக்டோபர் 1998)
பல கோடிச் சரீரங்களில், தீமை என்று உணர்ந்து, தன்னைக் காத்திடும் உணர்வுகளைச் செயலாக்கிப் பெற்ற மனிதச் சரீரத்தில், அனைத்துத் தீமைகளையும் அகற்றிடும், அணு செல்கள் உள்ளன.

ஆகையினால்தான், கார்த்திகேயா என்றும், ஆயிரம் கண்ணுடையான் என்றும் ஞானிகள் உரைத்தனர்.  மனிதனின் நிலையில், ஆயிரம் குணங்களின் சத்து, நமது உடலில் இருக்கின்றது. 

இதனால், நாம் எத்திசையிலும், எந்நிலையையும் நமது உணர்வின் அறிவு கொண்டு, அறிந்து கொள்கின்றோம். ஆலயங்களில்,  1008  அபிஷேகங்கள் செய்வார்கள். மனிதரிடத்தில், 1008  குணங்கள் உள்ளன.

பகைமை உணர்வுகள் வரும்பொழுது, அதிலிருந்து மீண்டிடும் நிலையாக, அறிவைக் கூட்டி, பகைமையிலிருந்து விடுபடுகின்றோம். பலகோடிச் சரீரங்களில் சேர்ந்துள்ள, தீமைகளை வென்ற உணர்வுகள், நமக்குள் இருக்கப்படும் பொழுது, பகைமையுணர்வுகளைக் கண்ணால் பார்க்கப்படும் பொழுது, நமது உடலில் இருக்கும் அறிவு, இது பகைமை கொண்டது என்று உணர்த்துகின்றது. அறியும் தன்மை வருகின்றது.

தீமையை வென்றவர் துருவ மகரிஷி. அவர் துருவ நட்சத்திரமானார் என்ற நிலையில், அவருடைய உணர்வை நாம் நுகர்ந்து, ஈஸ்வரா என்று எண்ணி, கண்ணின் நினைவை உயிருடன் ஒன்றி, துருவ நட்சத்திரத்தின் உணர்வை நாம் நுகர்ந்தால், இதன்வழி கொண்டு, தீமைகளை வென்றிடும் சக்தியினை, நமக்குள் உருவாக்குகின்றது நமது உயிர்.

ஏனென்றால், கண்ணால் காக்கும் நிலை பெற்றிருந்தாலும், கண்ணின் நினைவை உயிருடன் ஒன்றும் பொழுது, உணர்வினை உயிர்வழி கொண்டு உடலில் பரப்புகின்றது.
ஆக, உடலில் பரப்பிய உணர்வுகள் உந்தி,
மூக்கின் வழி சுவாசிக்கும்
உணர்வின் தன்மையினை இடைமறித்து,
அருள் ஒளி என்ற உணர்வுகள் இணையும் பொழுது,
தீமை என்ற நிலை வராது தடுக்கின்றது.

அருள் ஒளியின் உணர்வின் தன்மை, நமக்குள் வலு பெறும் பொழுது, பகைமையை உட்புகாது தடுக்கும் நிலை, வருகின்றது. இதைத்தான், கார்த்திகேயா என்று உணர்த்தினர், ஞானிகள். ஏனென்றால், நாம் நமது ஆறாவது அறிவால், அனைத்தையும் அறிந்திடும் தன்மை இருந்தாலும், ஆறாவது அறிவு சேனாதிபதியாக நின்று, தீமைகளிலிருந்து நம்மைப் பாதுகாக்கவும் செய்கின்றது.

நம்முள் எண்ணத்தால், உணர்வின் ஒளியை உருவாக்கினால், உயிரென்ற நிலைகள் இணைந்து, அருள்ஒளி எனும் பேரொளியின் தன்மையை நம்முள் உருவாக்கும். ஆக, இவையனைத்தும், எதிர்காலத்தில், உங்களைப் பகைமையுணர்வு தாக்காது, அதனின்று பாதுகாக்கும் சேனாதிபதியாக உருப்பெறுகின்றது. 

உங்களுக்குள், பாதுகாப்பு கவசத்தின் உணர்வின் அணுக்களைப் பெறுவதற்கு, துருவ நட்சத்திரத்திலிருந்து வெளிப்படும் உணர்வினை நீங்கள்  நுகர்ந்து, உங்களுக்குள் உருவாக்கினால்,  இந்த உணர்வின்  எண்ணம் உங்களைக் காக்கும். இதுவே சேனாதிபதி.

ஞானிகளின் தத்துவக் கருத்துக்கள், மனிதன் தீமைகளிலிருந்து மீளும் மார்க்கத்தைத்தான் உரைக்கின்றன. அதற்காகத்தான், விநாயகரை வணங்கச் செய்தது.

நாம் பலகோடிச் சரீரங்களில், தீமைகளில் இருந்து விடுபடவேண்டும் என்ற உணர்வைப் பெற்று,  தன்னைக் காட்டிலும் வலு கொண்ட உணர்வைச் சுவாசித்து, நம்மை மனிதனாக உருவாக்க மூலமாக இருந்தது நமது உயிர். தீமையிலிருந்து விடுபடும் உணர்வைச் சேர்த்துச் சேர்த்து, எண்ணத்தின் வலிமை பெற்றது மனித உடல்,

இன்றைய மனிதன், தன் எண்ண வலுவின் உணர்வின் துணை கொண்டு, 1000 டன் கொண்ட ஒரு எடையை, விண்ணில் செலுத்துகின்றான். பெரும் பாறைகளைச் சிறு கடப்பாரை கொண்டு நகர்த்தி, இடம் மாற்றுகின்றான். ஆக,  இது மனிதனின் எண்ண வலு.

எண்ணத்தின் வலுகொண்டு இவன் சுவாசிக்கும் பொழுது,  அதனின் உணர்வின் யுக்தியின் அணுக்கள் உருவாகி,  அது காலத்தால் தனக்கேற்ற உணர்வை உருமாற்றிக்  கொண்டேயிருக்கும்.

எண்ணத்தின் வலுகொண்டு, தீமைகளை அகற்றும் உணர்வை நமக்குள் சேர்க்கும் பொழுது, அந்த உணர்வினை வலுப் பெறச்செய்யும், வளர்க்கச் செய்யும் உணர்வினைச் செயல்படச் செய்கின்றது.

ஆகவே, நாம் அருள் ஞானிகள் காண்பித்த அருள் நெறிப்படி, துருவ நட்சத்திரத்தின் பேரருளையும் பேரொளியையும் நமக்குள் சேர்த்து, ஈஸ்வரா என்று உயிர்வழி கொண்டு, தீமைகளை வெல்லும் அருள் உணர்வினைக் கவர்ந்து, உடல் முழுவதும் பரப்பி,  தம்மையறியாது நமக்குள் சேர்ந்துள்ள, தீமைகளைப் பிளந்திடும் நிலை பெறவேண்டும். 

இதன் வழியைப் பின்பற்றும் அன்பர்கள் அனைவரும், தம்முள் தீமைகளை வென்றிடும் நிலையாக, ஒளியின் உணர்வுகளைப் பெற்று, இவ்வாழ்வில் பேரின்பப் பெருவாழ்வாக, பெருவீடு, பெருநிலை பெரும் நிலையாக வாழ்ந்து வளர்ந்திட, எமது அருள் ஆசிகள்.