ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

January 27, 2012

அருள் ஒளி பெறும் அருள் வாழ்க்கை

சாமி புத்தகம்  அருள் ஒளி பெறும் அருள் வாழ்க்கை
(பக்கம் 5-9)
ஓம்  ஈஸ்வரா குருதேவா"
என்று   சொல்லும்  பொழுதெல்லாம்நமது  உயிரை  ஈசனாகவும்   நம்   உடலுக்குள்  இருக்கும்   அனைத்துகுணங்களுக்கும்,   உடலுக்கும்,   நமது    உயிரே   குருவாக   இருக்கின்றதுஎன்று   மதிக்க வேண்டும்.  நமது     உயிரே   நம்மை  ஆளுகின்றது.

நாம் எண்ணியதுபார்த்ததுகேட்டதுநுகர்ந்தது அனைத்தையும்
நமது உயிர்,  என்று ஜீவ  அணுவாக  மாற்றி,
ம் என்று  நம் உடலாக மாற்றிக்  கொண்டே  உள்ளது.
நமது வாழ்க்கையில்காலையிலிருந்து  இரவு வரை  நாம்  பார்த்ததுகேட்டது,  இவை  அனைத்தையும்சதாசிவமாக்கிக்  கொண்டே  உள்ளதுநமது உயிர்சிவமென்றால்நமது உடலாக்கிக் கொண்டே உள்ளது.

நமது உயிருக்கு ஆதிமூலம்  என்று  ஒரு பெயருண்டு.  அந்த  உயிர்ஒரு தாவர இனச் சத்தை நுகர்ந்துநுகர்ந்த  உணர்வுகளை உடலாக்கிமுதன்முதலில் புழுவாகின்றதுபுழுவிலிருந்து மனிதனாக வரும் வரையிலும்உயிர்எதெனதன்    உணர்வை     உணவாக     எடுத்துக்    கொண்டதோ,   அதை,     தன்  உணவிற்காகத் தேடிச்செல்கின்றது.

உதாரணமாகதவளைகள் பல பூச்சிகளையும்புழுக்களையும் உணவாகஉட்கொள்ளுகின்றது.       அந்தப்         பூச்சிகளின்        உடல்கள்,      தவளைக்கு   உடலாகின்றது.   தவளைகளின்   உடலில்,    சிக்குண்ட  பூச்சிகள்    அனைத்தும்,அந்தஉணர்வின்    சத்துகள்   உடலானாலும்,   அந்தப்   பூச்சிகளின்    உயிர்கள் அனைத்தும்  தவளையை  எண்ணி,    அந்த  உணர்வை   நுகரப்படும்  பொழுதுவேதனையுடன்      தன்னை     விழுங்கிவிட்டதே       என்ற     வேதனையான உணர்ச்சிகள் கொண்டுஅந்த  உயிர்  வெளிவரப்படும்  பொழுதுதவளையின் ஈர்ப்பிற்குள் வந்துவிடுகின்றது.

தவளையின்      ஈர்ப்பிற்குள்     வந்தபின்,      தவளை     வளர்த்த உணர்வின்  சத்தைஇந்தப்பூச்சியின்  உயிரணு  நுகர்ந்து, அதன்    கருவாக    உருவாகின்றது.    அதன்  முட்டையாக    மாறிவிடுகின்றதுமுட்டையாக மாறியபின்இதே தவளைதான்அடைகாக்கின்றது.முட்டைகள் பொறித்து வெளிவரும் பொழுதுபூச்சிகளாக  இருந்தது அனைத்துமேதவளைகளாக ரூபம் பெறுகின்றது.

இதே   மாதிரி,    பாம்பு   தன்   உணவிற்காக,    தவளையின்   மீது,   தன் விஷத்தைப்  பாய்ச்சி  விழுங்குகின்றது.அதன் விஷங்கள்தவளையின்  உடல்முழுவதும்  படர்கின்றதுஅந்த விஷத்தின்   தாக்குதலால்,   அந்தத்  தவளை பாம்பை   எண்ணுகின்றது.    தவளையின்    உடல்,    விஷத்தின்    தன்மையால்கரைந்துபாம்பிற்கு   இரையாக  மாறினாலும்பாம்பின்  விஷத்தின்   தன்மை,தவளையை உருவாக்கிய  அணுக்களில் படர்ந்துபாம்பின் ரூபமாக  மாற்றத் தொடங்கிவிடுகின்றது.

உதாரணமாக, இன்று நாம் குளவியைப் பார்க்கின்றோம். தன் உமிழ்நீரால், மண்ணைப் பிசைந்து எடுத்து, கூடு கட்டுகின்றது. புழுவை எடுத்து, அதைத் தன் விஷத்தால் தாக்கி, கூட்டிற்குள் செலுத்திவிடுகின்றது. குளவியின் விஷங்கள், புழுவின் உடல் முழுவதும் பரவுகின்றது.

அவ்வாறு பரவியபின், கொட்டிய குளவியின் நினைவு, புழுவின் உடலுக்குள் உருவாகின்றது.
புழுவின் உடலுக்குள், குளவியின் நினைவுகள் வந்து,
இந்த உணர்விற்கொப்பத் துடிப்பின் நினைவுகள்,
உணர்வுகளை மாற்றி, 
அந்தப் புழு குளவியாக மாறுகின்றது.

இதே மாதிரிதான், தவளையின் உடலை உருவாக்கிய அணுக்களில், விஷத்தின் நிலைகள் பாய்ச்சப்படும் பொழுது, பாம்பின் விஷம் தவளையின் அணுக்களில் பட்டபின், அது அனைத்திலும், பாம்பின் உணர்ச்சிகளை ஊட்டும் கருத்தன்மை, உருவாகிவிடுகின்றது.

தவளையின் உயிர் வெளிவந்தபின், எது தாக்கியதோ அதன் உடலுக்குள், தவளையின் உயிர் போய்விடுகின்றது. அவ்வாறு போனபின், அந்த விஷத்தின் தன்மை கொண்டு, பாம்பின் உணர்வைக் கருவாக்கி, ஒரு முட்டையாக உருவாகின்றது. அந்த முட்டையிட்டபின், எந்த பாம்பு விழுங்கியதோ, அந்த பாம்பின் குட்டியாக வெளிவருகின்றது. பாம்பு, தன் உடலில் உள்ள விஷத்தைப் பாய்ச்சியது. ஆனால், தவளையின் உடலில் விஷத்தின் தன்மை மாறும் பொழுது, தவளை பாம்பாக மாறுகின்றது.

ஆனால், பாம்பை கருடன் தூக்கிச் சென்று, உயிரோடு, சிறிது சிறிதாகக் கொத்தி சாப்பிடுகின்றது. அப்பொழுது கருடனிடமிருந்து தப்பிக்க, பாம்பு பல மாயாஜாலங்களைச் செய்யும். அது தன் வாலைக் கொண்டு இருக்கி, என்ன செய்தாலும், உயிர் போகின்ற வரையிலும், பாம்பைக் கருடன் பிய்த்துத் திங்கும்.

பாம்பின் கண்கள், கருடனை உற்றுப் பார்த்தவுடன், அந்த கருடனின் ரூபமும், கருடனின் விஷத்தின் தன்மையும், பாம்பின் உடலுக்குள், அத்தனை அணுக்களிலும் சேருகின்றது. 

அந்தப் பாம்பின் உயிரான்மா எதை உற்றுப் பார்த்ததோ, அந்த கருடனின் ஈர்ப்பிற்குள் சென்று, கருடனின் உணர்வை நுகர்ந்து, கருடனின் முட்டையாக மாறுகின்றது.  அதன் முட்டையாக மாறும் பொழுது, அதன் வழிகொண்டு கருடனாக ரூபம் பெறுகின்றது.

மான் புல்லை மேய்கின்றது. புலி அதைக் கண் கொண்டு பார்த்தவுடனே, அந்த மானைச் சாப்பிட எண்ணுகின்றது. புலியிடமிருந்து தப்ப, மானின் கண்கள் உதவுகின்றது. இருந்தாலும், புலி விடாமல் துரத்தி வருகின்றது. அதனிடமிருந்து தப்பிக்க வேண்டுமென்று, மான் ஓடுகின்றது.

மானின் உடலுக்குள், புலியின் உணர்வுகள் அந்த உடலை உருவாக்கிய அணுக்களுக்குள் பெருகுகின்றது. மான் புலிக்கு இரையானாலும், அல்லது இயற்கையாக மடிந்தாலும், மானின் உடலைவிட்டுப் பிரிந்த உயிரான்மா, புலியின் உடலுக்குள் சென்று, புலியின் உணர்வை நுகர்ந்து, கருவாகி, புலிக் குட்டியாகப் பிறக்கின்றது.

இப்படித்தான், பலகோடி சரீரங்களில் வலுவான நிலைகளை நுகர்ந்து, யானையாக உருவாக்குகின்றது, உயிர்.
யானை, உடல் வலு பெற்றது.
யானையானபின், ஞானங்கள் அதற்குள் தோன்றி,
எண்ண வலு பெற வேண்டும் என்ற உணர்வுகள்
யானையின் உடலுக்குள் தோன்றி,
உடல் சிறுத்து, பன்றியாக,
நல் உணர்வுகளை, பன்றியின் உடலில் நுகர்ந்து,
பின், மனிதனாக உருவாக்குகின்றது உயிர்.

முன் ஜென்மங்களில், நாம் மிருக நிலைகளில் இருந்தோம் என்பதைக் காட்ட, யானையின் தலையை, மனித உடலில் பொருத்திக் காட்டி, உயிர், தான் சேர்த்துக் கொண்ட வினைகளுக்கு நாயகனாக, இந்த மனித உடலைத் தந்தது, என்பதை நாமெல்லாம் புரிந்து கொள்ள, கோவில்களில் விநாயகரை, சிலையாக வைத்துக் காட்டினார்கள்.

விநாயகரை ஆதிமுதல்வன், சிவனின் பிள்ளை, முழுமுதற் கடவுள் என்று சொல்லுவார்கள். மனிதனான பின், எதையும் உருவாக்கி, இருளை நீக்கி, ஒளி என்ற உருவை, உருவாக்குபவன் மனிதன்.  அதுதான் முழுமுதற் கடவுள்.  நாம் மிருக நிலையிலிருந்து மனிதனாக வந்தபின், நாம் எதைச் சேர்க்க வேண்டும்? என்பதற்குத்தான், விநாயகரை வைத்திருக்கின்றார்கள்.

(பக்கம் 13-14)

அனைத்தையும் வேக வைத்தவன் துருவ நட்சத்திரம். நாம் புல்லைத் தின்றோம். தழைத்தாம்புகளைத் தின்றோம். சுவை மிக்க நிலைகளில், கொழுக்கட்டையைப் படைத்துச் சாப்பிடும் இந்த மனித உடலைப் பெற்றோம்.
இந்தப் பிள்ளை யார்? நீ சிந்தித்து பார்.
உயிரால் வளர்க்கப்பட்டது, இந்த மனித உடல்,  
நீ சிந்தித்துப் பார்,
என்று சொல்கின்றார்கள்.

வேதனை என்ற உணர்வை நுகரும்பொழுது, உடல் நலிவடைகின்றது. நம் உடலை உருவாக்கிய, உயிரான ஈசனுக்கு, துரோகம் செய்கின்றோம். மனிதனாக உருவாக்கிய, ஈசனை மதிக்கவில்லை என்று அர்த்தம்.

ஈஸ்வரன் கோவிலில் அபிஷேகம் செய்வதால், ஒன்றும் பிரயோஜனம் இல்லை.
உயிரான ஈசனிடம், வேதனை என்ற உணர்வை நுகர்ந்தால்,
கையில் அழுக்குப் பட்டால்,
நல்ல தண்ணீரை விட்டுச் சுத்தப்படுத்துகின்ற மாதிரி,
ஈஸ்வரா, அந்த துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெறவேண்டும்,  என்று இதை விட்டுச் சுத்தப்படுத்த வேண்டும்.

நுகர்ந்த வேதனையின் உணர்வுகள் நம் உடலில் எல்லா அணுக்களிலும் படும். அதனால், துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எங்கள் உடல் முழுவதும் படரவேண்டும், ஜீவாத்மா, ஜீவ அணுக்கள் பெறவேண்டும் என்று சுத்தப்படுத்த வேண்டும். இது தான், நம் ஞானிகள் காட்டிய, அருள் வழி.

(பக்கம் 22-24)

ஒரு சமயம், உண்மையில் நடந்த நிகழ்ச்சியை, குருநாதர் காட்டினார். நாங்கள் குழந்தைகளாக இருந்தபொழுது, ஒரு மரத்தைச் சுற்றி இருந்த திட்டில், அமர்ந்து விளையாடிக் கொண்டிருந்தோம். அந்த திட்டிற்குக் கீழ், சந்தும் பொந்துமாக இருந்தது.

ஒருவன், தன் காலை ஆட்டிக் கொண்டு இருந்தான். அந்தப் பொந்திற்குள் நல்ல பாம்பு இருந்தது. அது அவனைத் தீண்டிவிட்டது. அது கடித்தது அவனுக்குத் தெரியவில்லை. ஏதோ பூச்சி கடித்துவிட்டது என்று இருந்துவிட்டான்.

இரண்டு மாதம் கழித்து, அதே இடத்திற்கு விளையாடச் சென்றோம். உட்கார்ந்து இருந்த இடத்திலிருந்து, பாம்பு தலையை நீட்டியது.
அன்றைக்கு, இந்த பாம்புதான் கடித்தது என்று எண்ணினான்.
அப்படியே மயங்கி விழுந்துவிட்டான்
அந்த உணர்வு வேகமாக இழுத்து, உடலில் பரவுகின்றது.
சிறு பிள்ளையாக இருந்த பொழுது, எனக்குத் தெரியாது. ஆனால், குருநாதர் நினைவுபடுத்துகின்றார்.

அன்று, திட்டு மேல் அமர்ந்து, காலை ஆட்டிக் கொண்டிருந்தான், இரண்டு, மூன்று முறை கொட்டியிருக்கின்றது. எறும்பு கடிக்கின்றது, என்று சொல்லிக் கொண்டிருந்தான். ஆனால், அதே இடத்தில், இரண்டு மாதம் கழித்து பாம்பை பார்த்தவுடன், இதுதான் அன்றைக்கு,  நம்மைக் கடித்தது என்று எண்ணியவுடன், அப்படியே கீழே விழுந்துவிட்டான்.  கண்கள் நீல நிறமாகிவிட்டது.  அது வரையிலும் அவனை ஒன்றுமே செய்யவில்லை. அந்த எண்ணம் வந்தவுடன், வேகமாக இழுத்து அதைச் செய்தது.

அதிலிருந்து, மேடை மேல் உட்காருவதை விட்டுவிட்டேன். நீ சிறுவனாக இருந்த பொழுது, இந்த நிகழ்ச்சி நடந்தது என்று, குருநாதர் எம்மிடம் சுட்டிக் காட்டுகின்றார்.  எண்ணங்களைப்பற்றிச் சொல்லும் பொழுது, இதைச் சொல்லுகின்றார்.

விபத்தான நேரங்களில் சிக்கிக் கொண்டபின், ரொம்ப பதட்டப்படுகின்றோம். அந்த நேரத்தில், ஏதாவது சந்தோஷமாக பேசிக் கொண்டு இருக்கும்பொழுது, அந்த நிகழ்ச்சியைச் சொல்ல ஆரம்பித்தால், அந்த சமயம் மயக்க நிலை வரும். உடனே, அந்த அணுக்கள் பெருக ஆரம்பிக்கும்.

பஸ்ஸில் போகும்பொழுது, விபத்துகளைப் பற்றி யாராவது சொன்னால், அதை நீங்கள் கேட்டால், அதே உணர்வுகள், காற்றில் அலையப்படும் பொழுது, பஸ் டிரைவரையும் தாக்கும். 

எப்பொழுதும் பஸ்ஸில் போகும் பொழுது, விபத்துகளைப் பற்றி பேசக்கூடாது. பேசினால், கேட்பவருக்கும் பயமாக இருக்கும். அந்த உணர்வுகள், டிரைவரையும் தாக்கும். அதே மாதிரி, பஸ்ஸில் இடம் மாறி உட்கார்ந்து கொண்டாலும், அதற்குத் தக்க விபத்தாகி, இவர்களைத் தூக்கி எறியும். அந்த உணர்வுகள், ரிமோட் (remote) செய்து கொண்டேயிருக்கும். இந்த உணர்வுகளின் இயக்கம் அப்படி, என்று குருநாதர் சொல்லுகின்றார்.
எப்படியெல்லாம் உணர்வு இருக்கின்றதோ,
அதற்குத்தக்க மாதிரி, நமது வாழ்க்கையில்
அந்த உணர்வுகள், உணர்ச்சிகளாக நம்மை மாற்றி
என்ன செய்யச் சொல்லுகின்றது.
சொன்னது, எப்படி நமக்குள் உணர்ச்சிகளாக மாறுகின்றது,
விபத்துகளில் சிக்குவதையெல்லாம், குருநாதர் காட்டுகின்றார். அதனால், பஸ்ஸில் போகும் பொழுது, விபத்துக்களைப் பற்றிப் பேசாது, நல்ல விஷயங்களைப் பற்றித்தான், பேசிக் கொண்டு போகவேண்டும்.

(பக்கம் 32,33,34)
இப்பொழுது,  TV நிகழ்ச்சிகளை ஒளிபரப்புச் செய்கின்றார்கள். எந்த அலைவரிசை என்று தெரிந்துகொண்டு அந்த அலைவரிசையை வைத்தால்,  உடனே அதை எடுத்து,  வேலை செய்கின்றது. அதே போன்று,  நம் உடலில் ஒவ்வொரு குணங்களையும் பதிவாக்கி இருக்கின்றோம். என்னைத் திட்டினான் என்று எண்ணியவுடன், அந்த அலைவரிசை வந்தவுடன்,  கோபம் வரும்.

கோபமான நிலைகளில், கணக்குப் போட்டால் தப்பாக வரும். அதே சமயத்தில் வீட்டில் சண்டைக்கு போவோம். எது இருந்தாலும்,  அந்த உணர்ச்சிக்குத் தக்கவாறுதான் வேலை செய்ய ஆரம்பிக்கும். அதே சமயத்தில் கோபமாக இருந்து,  இந்த மாதிரி, அவன் எனக்கு தீங்கு செய்தான் என்று எண்ணினால்அவனும் அங்கு கெடுகின்றான். அங்கு அவனுக்கு புரை ஓடும்.

பாசத்தால், பையன் லெட்டர் போடவில்லை, 
என்று தாய் எண்ணி வேதனைப்பட்டால், 
அந்த வேதனையான உணர்வு, பையனைப் பாதிக்கும். 

அவன் அந்த நேரத்தில் கணக்குப் போட்டால், அந்த வேதனை, அவன் சிந்தனையைக் குறைத்து, கணக்கு தப்பாகும். கெட்ட பெயர் வாங்கி விடுவான். அலுவலகத்தில் வேலை செய்து கொண்டிருக்கின்றான் என்றால், என்னை எதிர்க்கின்றார்கள்என்று அங்கிருந்து லெட்டர் வரும்.

தாய் எண்ணியது, என்று அவனுக்கு தெரியாது. அதே சமயத்தில் ரோட்டில் நடந்து போகும் பொழுது,  தாய் இம்மாதிரி எண்ணினால், விபத்தில் கொண்டு போய் விட்டுவிடும். தாயின் நினைவு இப்படி வந்துவிடும். இதையெல்லாம், நாம் மாற்ற வேண்டும்.
இதெல்லாம் காற்றில் இருக்கின்றது.
அதே சமயத்தில் ஊழ்வினை என்ற வித்தாக
நமக்குள் பதிவாகி இருக்கின்றது.
நாம், யாரை எண்ணுகின்றோமோ,
உடனே அது வேலை செய்யும்.
மனிதனுக்கு   மனிதன், நாம் கலந்துதான் இருக்கின்றோம்.   யாரும் தனித்து இருக்க முடியாது.
சமுதாய அமைப்பில், மனிதன் ஒன்றோடொன்று இணைந்துதான் வாழுகின்றான். நமக்குள்,  நமது உடலுக்குள் எது எது எல்லாம் பதிவாகி இருக்கின்றதோ, அவைகள் இந்த காற்று மண்டலத்திலும் உண்டு.
 நமது உடலுக்குள் பதிவானவைகளில்,
எதை நாம் நினைக்கின்றோமோ,
அவைகள், காற்றிலிருந்து நம் ஈர்ப்பிற்கு வந்து,
அந்த அலைகள் நம்மை இயக்கத்தான் செய்யும்.
இதுவெல்லாம், இயற்கையின் சில நியதிகள்
இந்த மாதிரி நாம் எதை எண்ணினாலும்
உடனே மாற்றுகின்ற  சக்தி வேண்டும்.
      
 இன்றைக்கு,  நாம் விஞ்ஞான யுகத்தில் வாழுகிறோம். மனிதன்,  எலக்ட்ரிக்எலக்ட்ரானிக் என்ற நிலைகளில்,  ஏதேதோ செய்கின்றான். நமது ஞானிகள்,  இயற்கையின் உண்மையின் உணர்வுகளை, தெளிவாகக் காட்டியிருக்கிறார்கள்.

இதையெல்லாம் தெரிந்து கொண்டீர்களென்றால், 
நாம் எப்படி இயங்குகின்றோம்
நமது உயிர் எப்படி இயங்குகின்றது? என்பதைத் தெரிந்து கொள்ளலாம்.
      
 எந்த உணர்வும் நம்மை இயக்காமல், அதை நமக்கு உதவியாக மாற்றிக் கொள்வதற்கு, ஒரு சக்தி தேவை. அதற்கு சக்தி ஊட்டுவதுதான், துருவ நட்சத்திரம்.

(பக்கம் 44-46)
அகஸ்தியன் தான் பெற்ற சக்தியை, மனைவிக்குச் சொல்லுகின்றான். அது அதை க் கவர்ந்து, உயர்ந்த நிலை பெறுகின்றது.
கணவர் உணர்வுடன் இணைந்து, அது ஒன்றாகின்றது.
ஒன்றாகப்படும் பொழுதுதான்,
அந்த உணர்வின் சக்தி, அணுத்தன்மை பெறுகின்றது.
தான் பெற்ற உண்மையின் உணர்வை,
இரண்டு பேரும் சேர்ந்து, தான் பெற்ற உண்மை,
கணவன் உயரவேண்டும் என்றும்
கணவன், தன் மனைவி உயரவேண்டும் என்றும்,
கல்யாணம் ஆனபின், உண்மையை உணர்ந்து
துருவ மகரிஷியாகின்றார்கள்.

துருவ மகரிஷியாகி, சிருஷ்டிக்கும் தன்மை பெறுகின்றார்கள். எப்படிக் கணவன் மனைவி சேர்ந்தபின், குழந்தைகளைப் பெற்றுக் கொள்கின்றார்களோ,
கணவன், மனைவி இரண்டு உயிரும்,
அந்த உணர்வை எடுத்து, நுகர்ந்து,
உடலுக்குள் ஒளியாக மாற்றுகின்றார்கள்.
இதுதான், எமனிடமிருந்து சாவித்திரி தன் கணவனை மீட்டினாள் என்பது.

கணவனும் மனைவியும், வசிஷ்டரும் அருந்ததி போன்று வாழ்ந்து, நளாயினி போன்று, கணவனை உயர்த்தி எண்ணுவதும், கணவன் மனைவியை மதித்து நடப்பதும், ஆக, இரண்டு பேரும் மதித்து நடந்தால், அந்த அணுவின் தன்மை சாவித்திரியாகின்றது.

இவ்வாறு, அகஸ்தியரும் அவருடைய மனைவியும் துருவ மகரிஷியாகி, சிருஷ்டிக்கும் தன்மை பெற்று, தங்களுக்குள் உணர்வுகளை பேரொளியாக மாற்றுகின்றார்கள். 

இருவர் உடலை விட்டுப் பிரிந்த உயிரான்மாக்கள், ஈருயிரும் ஒன்றாகி, உணர்வுகள் அனைத்தும் ஒளியாகி, உயிருடன் ஒன்றி, இன்றும் விண்ணில் துருவ நட்சத்திரமாக, வாழ்ந்து வளர்ந்து கொண்டுள்ளார்கள்.

நாம், இன்று மனித வாழ்க்கையில் கணவனும் மனைவியும் இணைந்து, குழந்தைகளை பெற்றுக் கொள்வது போல், அவர்கள் இருவரும் இணைந்து, துருவ நட்சத்திரமாகி,  விண்ணில் இருந்து வரும் விஷத்தினை ஒளியாக்கி, ஒளி அணுக்களை உமிழ்த்திக் கொண்டுள்ளார்கள்.

நம் குருநாதர் விஷத்தை நீக்கி, கடைசியில் ஒளியான துருவ நட்சத்திரத்தைக் காட்டினார். எல்லாவற்றையும் நீக்கி, ஒளியானது துருவ நட்சத்திரம். நம் குருநாதரும் அதே வழியில் ஒளியானார். அதன்பின், நாம் போகும் பொழுது, அந்த உணர்வை நாம் எடுக்கின்றோம்.

அந்த உணர்வை நீங்களும் பெறவேண்டும், என்று சொல்லுகின்றோம். விரும்பி வருபவரகள், இந்த உணர்வைப் பதிவு செய்து கொள்கின்றார்கள். யாம் பேசுவதை, நீங்கள் கேட்டுக் கொண்டிருக்கின்றீர்கள். நல்லதைப் பெறவேண்டுமென்று கேட்கின்றீர்கள். உணர்வுகள் எதைச் செய்கின்றது, என்று சொல்லுகின்றோம்.
ஏற்கனவே, துருவ நட்சத்திரத்தின் உணர்வை,
எமது உணர்வுகளுக்குள், யாம் கலந்து வைத்திருக்கின்றோம்.
உங்களுக்குள் இதை கலந்து, உண்மையின் உணர்வை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என்றும், அதை வளர்க்கவேண்டும் என்றும், எண்ணி யாம் சொல்லுகின்றோம்.

இது சொல்லி, அந்த உணர்வுகள் சிறிது சிறிதாக பாயும் பொழுது, எதையும் மாற்றியமைக்கும் சக்தி, தன்னாலேயே வந்துவிடுகின்றது. 

எப்படித் தன்னாலேயே வந்துவிடுகின்றதென்றால், காலையில் துருவ தியானத்தில், துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாம் பெறவேண்டும் என்று நினைக்க வேண்டும்.

அந்த துருவ நட்சத்திரத்தின் உணர்வு, நம் அணுக்களில் சிறிது இருக்க வேண்டும். அப்படி நம் அணுக்களில் அந்த உணர்வு இருந்தால், துருவ நட்சத்திரத்தின் உணர்வை, இது எடுத்து, அதை ப் பெருக்க ஆரம்பித்துவிடும்.

துருவ நட்சத்திரத்தின் உணர்வுகள் நம் உடலுக்குள் பெருகிவிட்டால், நம் உடலில், எந்த நோயையும் சரி செய்துவிடும். அதை எடுப்பதற்கு சக்தி வேண்டும் என்பதற்குத்தான்,  உங்களுடன் பேசி, இதை இணைத்துக் கொடுக்கின்றேன். 

குணங்களைப் பற்றி ஏன் பேசுகின்றேன் என்றால், ஒரு குணத்துடன் இருக்கும் பொழுது,  அந்த குணத்தைப்பற்றி சொல்லப்படும் பொழுது,  அதில் துருவ நட்சத்திரத்தின் உணர்வைச் செருகிவிட்டு விடுகின்றேன்.

இந்த உணர்வான சக்திகள் நீங்கள் எடுக்கும்பொழுது, உங்களை சீர்படுத்தும். கம்ப்யூட்டரில், எலக்ட்ரானிக் என்ற நிலைகளில் எப்படி சீர்படுத்துகின்றானோ, அதே மாதிரி குருநாதர் கொடுத்த நிலைகளில், 20 ஆண்டுகள் அனுபவித்து, நீங்கள் தெளிவான நிலைக்கு வரவேண்டும் என்பதற்குத்தான், இதைச் செய்வது.

(பக்கம் 49,50)
இப்படி, நமது வாழ்க்கையில் எந்த நேரமானாலும், துருவ நட்சத்திரத்தின் உணர்வை சேர்த்துக் கொண்டு வந்தோமானால், இதுவெல்லாம் தனுசுகோடி.

முதலில், எல்லாம் சேர்த்து, கோடிக் கரையில் இருக்கின்றோம். இராமேஸ்வரத்தில், இராமன் நேரமாகிவிட்டது என்று மணலைக் குவித்து, லிங்கமாக்கி, பூஜிக்கத் தொடங்கிவிடுகின்றான்.

நாம் என்ன செய்யவேண்டும் என்றால், ஒவ்வொரு நாளும், தீமைகளை நீக்க வேண்டும். நமது உடலில் சேர்த்துக் கொண்ட உணர்வு சிவதனுசு. அதே சமயத்தில்
துருவ நட்சத்திரத்தின் உணர்வுகள்,
உயிருடன் ஒன்றியது, அது விஷ்ணு தனுசு.
இந்த உடலுக்குள், அதை எடுத்துப் பாய்ச்ச வேண்டும். அந்த விஷ்ணுதனுசு, இதற்குள் ஊடுருவி, உடலில் விளைந்த உணர்வுகளை அடக்குகின்றது.

இதே மாதிரி, ஒவ்வொரு நாளும் செய்யப்படும் பொழுது, தனுசுகோடி ஆகின்றது. வாழ்க்கையில் கடைசி நிமிடத்தில் இருக்கும் பொழுது, அருள் ஒளி பெறவேண்டும் என்று முழுமையாக்கி வந்தோமானால், இந்த உடல் என்ற கோடிக்கரையில் இருந்து, தனுசுகோடி என்ற துருவ நட்சத்திரத்திற்கு அழைத்து செல்கின்றது.

இல்லையென்றால், இந்த உடலில்  பாவி எனக்கு இப்படி செய்தானே  என்று எண்ணுவீர்கள் என்றால், இந்த உணர்வின் தன்மை கோடியாகின்றது. இந்த கோடிக்கரையிலிருந்து இன்னொரு உடலுக்குத் தான் தாவுகின்றோம்.  இதிலிருந்து தப்பவேண்டும்.

அதற்குத் தான், துருவ நட்சத்திரத்தின் உணர்வை, நீங்கள் எப்பொழுதும் எடுக்க வேண்டும். எந்த நிமிடமானாலும், துருவ நட்சத்திரத்தின் உணர்வை அடிக்கடி சேர்த்துக் கொண்டு வந்து, தீமையை நீக்கினோம் என்றால், அதைப் பற்றுடன் பற்றும்.

இந்த உடலைவிட்டுப் போனோம் என்றால், துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்தில், ஆறாவது அறிவு கொண்டு, ஏழாவது நிலை பெற்றவர்கள் உண்டு. அங்கு போய்ச் சேரவேண்டும். துருவ நட்சத்திரம் பிற மண்டலங்களின் விஷத்தை நீக்குகின்றது. ஒளியாக மாற்றுகின்றது.

இந்த மனித உடலில், அதை எடுத்துப் பழகுகின்றோம். அங்கே சென்றால் அதை எடுத்து உணர்வை ஒளியாக மாற்றும்.
துருவ நட்சத்திரத்தின் சக்தி
மனிதனை மாற்றியமைக்கக் கூடிய சக்தி.

அந்த பேரருள் என்ற உணர்வை, எடுத்தோம் என்றால், ஒளியை நமக்குள் வளர்க்கும்,  மற்றதை நீக்கும்.   துருவ நட்சத்திரத்துடன் இணைக்கும்.

அகஸ்தியன் சென்ற பாதையில், அவன் திருமணமானபின், தான் பெற்ற சக்தியை, மனைவிக்குப் பாய்ச்சுவதும், அகஸ்தியனுடைய மனைவி, தான் கணவனால் கண்ட உண்மைகள் கொண்டு, கணவன் மேலும் உயரவேண்டும் என்று எண்ணுகின்றது. இப்படி உணர்வு ஒளியாகி, துருவத்தில் எல்லை கொண்டு, உணர்வை ஒளியாக மாற்றிக் கொண்டு இருக்கின்றார்கள்.

அதை நாம் கவர்ந்தோம் என்றால், கணவனும் மனைவியும் எடுத்து, கணவன் பெறவேண்டும், மனைவி பெறவேண்டும் என்று இருவரும் வளர்த்தால், அந்த அருள் ஒளி என்ற கருவை, நமக்குள் உருவாக்கலாம்.

இப்படி ஒவ்வொரு நேரத்திலும், ஒன்றாகச் சேர்க்கப்படும் பொழுது, தனுசுகோடி என்ற நிலையை அடையலாம். பிறவி இல்லா நிலை என்னும் அழியா ஒளி சரீரம், அனைவரும் பெறலாம். எமது அருளாசிகள்.

(பக்கம் 53-57)

நம் குடும்பத்தில் எதிர்பாராத நிலைகள் வரும்பொழுது, ஒருவர் வெறுப்பு, வேதனையான செயலைச் செய்வார். அவரை நாம் உற்றுப் பார்த்தபின், உணர்வை நுகர்ந்து அறிவோம். இப்படிச் செய்கின்றானே? என்ற நிலை வந்துவிடும். அது வந்தபின், அதைச் சுத்தப்படுத்தாமல் விட்டுவிடக் கூடாது.

அந்த மாதிரி செய்கின்றானென்றால், உடனே நம் குரு காட்டிய முறைப்படி, ஈஸ்வரா என்று உயிரை எண்ணி, துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நான் பெறவேண்டும், என்று சுத்தப்படுத்திக் கொள்ள வேண்டும்.

அவர் செய்யும் தவறான உணர்வு,
நம் உயிரில் பட்டு, உடல் முழுவதும் பரவுகின்றது.
நம் ரத்தங்களில் முழுவதும் கவரப்படுகின்றது.
ரத்தங்களில் கலந்த பின்,
நம் உடலில் உள்ள நல்ல அணுக்களை,
நல்ல உணர்வை ஈர்க்க விடாதபடி,
தடைப்படுத்தி விடுகின்றது.
ரத்தத்திலுள்ள உணர்வுகளை
நல்ல அணுக்கள், ஏற்றுக்கொள்ள மறுக்கின்றது.

அப்படி ஏற்றுக்கொள்ள மறுக்கும் பொழுது, கொதிப்பென்ற நிலைகள் வருகின்றது.

அந்த வெறுப்பென்ற நிலைகள் வரும்பொழுது, நமக்கு ஒருவிதமான நடுக்கம் வரும்.

ஏனென்றால், அந்த அணுக்களுக்கு சரியான ஆகாரம் இல்லையென்றால், அது பதறும். நமக்கு பதட்டம் வரும்.

அப்படி நடுக்கம் வரும்பொழுது,  சிறிதேனும் அந்த அணுக்களில் சேர்ந்துவிட்டால், அந்த அணுக்களில், அந்த உணர்வுகள் இணைந்து கொள்ளும்.

அடுத்து, தவறு செய்யும் உணர்வுகளை நுகர்ந்து, அது வளர்ந்துவிடும்.

நல்ல அணுக்களின் மலங்களால் உருவானதுதான், நம் உறுப்புகள். அப்பொழுது உறுப்பின் வளர்ச்சி குறைகின்றது. 

அதுவும் சேர்ந்து, அந்த அணுக்களின் தன்மையும் சேர்ந்து, ஒன்றுக்கொன்று போர் முறை செய்து,  வலி எடுக்கின்றது.

நாம் தப்பு செய்யவில்லை. ஒருவருக்கொருவர் சண்டையிடும் உணர்வை நுகர்ந்தோமென்றால், இந்த நிலையாகின்றது. அதே சமயத்தில், இந்த வெறுப்பின் உணர்வு கொண்டு, வீட்டுக்கு வருகிறோம் என்று வைத்துக் கொள்வோம். அந்த வெறுப்பின் உணர்வுகள், நமது ஆன்மாவில் அதிகமாகப் பெருகியிருக்கும். வீட்டில், சின்ன குழந்தை ஒரு பாத்திரத்தை போட்டால் போதும், அல்லது குழந்தை ஏதாவது சத்தம் போட்டு பேசினால் போதும். இது எதிர் நிலை ஆகும்.
மனைவியைப் பார்த்து, பிள்ளையை வளர்த்திருப்பதைப் பார், என்று அந்த வெறுப்பின் உணர்வுகள், வெறுப்பான நிலைகளில் பேசச் சொல்லும். சில நேரங்களில் வீட்டில் ஏதாவது நடந்தால், உங்களை அறியாமலே கோபித்துக் கொள்வீர்கள்.

இதிலிருந்து, நாம் என்ன தெரிந்து கொள்கின்றோமென்றால், 
நாம் நுகர்ந்த உணர்வுதான், நம்மை இயக்குகின்றது.
அப்படி இயக்கும் அந்த உணர்வை, 
நாம் கொடுத்த அருள் சக்தி கொண்டு, 
ஆயுள் மெம்பர் அனைவரும், அந்த நிமிடமே, 
புருவ மத்தியில் ஈஸ்வரா என்று எண்ணி, 
துருவ நட்சத்திரத்தின் பேரருளை பேரொளியை நாம் பெறவேண்டும்
என்று,  நம் இரத்தத்தில் கலக்கச் செய்யவேண்டும். 
இரத்தத்தில் கலந்தபின்,
அவர்கள் இருவருமே, பொருளறிந்து செயல்படும் சக்தி பெறவேண்டும்,
தெளிந்த மனம் பெறவேண்டும்,
ஒன்றுபட்டு வாழும் சக்தி பெறவேண்டும், என்று எண்ண வேண்டும்.
அந்த உணர்வின் உணர்ச்சிகளை, நம் இரத்தத்தில் சேர்க்கும் பொழுது,  அவன் சண்டை போட்ட உணர்வை, தணிக்கின்றது.

அவன் ஒன்று சேர்ந்து வாழவேண்டும், என்ற உணர்வு கலக்கின்றது.

உணர்வின் தன்மையை, உயிர் உருவாக்குகின்றது.

உணர்வின் தன்மை கருவாகின்றது. நம் இரத்தத்தில் சுழல ஆரம்பிக்கின்றது

இது, நம் அணுக்களுடன் சேரும் பொழுது, நமக்கு ஒத்த நிலையாக மாறுகின்றது.

இந்த மாதிரி, எல்லாவற்றையும் மாற்றிப் பழக வேண்டும். நாம் சாமி கும்பிட்டேன், தியானமிருந்தேன், இப்படி ஆகிவிட்டது என்று சொல்லக் கூடாது. சில பேர் தியானமிருந்து, பிறருடைய கஷ்டங்களைக் கேட்டுவிட்டு, சுத்தப்படுத்தாமல் இருந்தால் என்ன செய்வது?

சட்டையில் அழுக்குப்பட்டால், துவைத்துக் கொள்கின்றோம். ஒரு நாற்றமான பொருள் சட்டையில் பட்டால், உடனடியாக துவைத்துக் கொள்கின்றோம். அது போன்று, வெறுப்பென்ற நிலைகளை, உடனே சுத்தப்படுத்தியாக வேண்டும்.

எந்த நிலையிலும், எந்த சூழ்நிலையிலும், பிறருடைய தவறை, நாம் பார்த்துவிட்டால்,  அந்த உணர்வுகள் நம்மிடம் வந்த பின் தான்,  தவறு செய்கின்றான் என்று அறிகின்றோம். அந்த உணர்வின் தன்மை, நம் உடலுக்குள் உணர்ச்சிகளைத் தூண்டி, நம்மை அறியாமலேயே, இப்படி செய்கின்றான் என்று சொல்ல வைக்கின்றது.

நாம் நுகர்ந்த உணர்வுகள், இப்படிப் பேச வைக்கின்றது. இதை நாம் தடைப்படுத்த வேண்டும். அந்த நேரத்தில், ஈஸ்வரா என்று நம் உயிரை எண்ணி, நம் உடலுக்குள் போகாமல் தடைப்படுத்த வேண்டும். அந்த துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெறவேண்டும், என்று எண்ணி, கண்ணின் நினைவை, உள்ளுக்குள் செலுத்த வேண்டும்.

பின், அவன் பொருளறிந்து செயல்படும் திறன் பெறவேண்டும். நல்ல ஒழுக்கமுள்ளவனாக வரவேண்டும். பண்புடன் நடந்து கொள்ளும், சக்தி பெறவேண்டுமென்று எண்ண வேண்டும். இந்த உணர்வு,
நம் உடலுக்குள் இரத்தத்திலுள்ள,
அவன் உணர்வை, தணிக்கின்றது.
ஆக, தியானமென்றால், நாம் கடும் தவமிருந்து, 
எல்லா சக்தியும் பெறுவதல்ல.
ஒவ்வொரு நிமிடமும், நாம் 
அந்த அருள்சக்தி பெறவேண்டும்.
நல்ல குணங்கள் வரவேண்டும், என்று தியானித்து,
உணர்வை, உருமாற்றிக் கொண்டே இருக்க வேண்டும்.

(பக்கம் 79-84)

வீட்டில், கணவன் மனைவி வாழுகின்றார்கள். கணவனுக்கு, அலுவலகத்தில் யாராவது இடைஞ்சல் செய்யும் நிலைகள் அதிகமாகிவிட்டால், வீட்டில் மனைவி என்ன செய்யவேண்டும்?

மனைவி, இந்த மாதிரி நேரங்களில், ஈஸ்வரா என்று உயிரை எண்ணி, துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும், என் இரத்தத்தில் கலந்து, என் உடல் முழுவதும் படர்ந்து, ஜீவான்மா, ஜீவ அணுக்கள் பெறவேண்டுமென்று எண்ண வேண்டும்.

பின், துருவ மகரிஷிகளின் அருள் சக்தி, என் கணவர் பெறவேண்டும். அவர் உடல் முழுவதும் படரவேண்டும், அவரைப் பார்ப்பவர்கள் எல்லோருக்கும், நல்ல எண்ணங்கள் வரவேண்டும், என்று இதைச் சமைத்து, கணவரிடம், நல்லது நடக்கும் என்று சொல்லிப் பாருங்கள்.      

அவரால், இதை எண்ண முடியவில்லை. அதனால், மனைவி இதைச் செய்யவேண்டும். இதுதான், எமனிடமிருந்து, சாவித்திரி தன் கணவனை மீட்டினாள்  என்பது.

இரண்டு உயிரும் ஒன்றானால், இரு மனமும் ஒன்றி, இரு உணர்வும் ஒன்றாகின்றது.  உணர்வு ஒன்றியபின்,  கணவரைப் பாதுகாக்கும் உணர்வை, மனைவி செய்யவேண்டும்.

சங்கடம் வேதனை, என்ற உணர்வுகள் வரும்பொழுது, அது நோயாக மாறி, மனிதனை முடித்துவிடும் எமனாக மாறுகின்றது. இதை மாற்றவேண்டும். எத்தகைய குறைபாடுகள் இருந்தாலும், வசிஷ்டரும் அருந்ததியும் போல் வாழவேண்டும்.

அப்படியென்றால், கணவனும் மனைவியும், துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியைக், கவரவேண்டும். நளாயினி போன்று, என்கின்றபோது, கணவருக்கு ஒரு சங்கடம் வரும்பொழுது,  அதை நிவர்த்திக்கக் கூடிய சக்தியாக, அவர் உயர்ந்த ஞானம் பெறவேண்டும், என்ற உணர்வை, மனைவி எடுக்க வேண்டும்.

சாவித்திரி போன்று இருமனமும் ஒன்றி, இரு உயிரும் ஒன்ற வேண்டும். கணவர் அருள் உணர்வு பெறவேண்டுமென்றும், அவருக்கு, நல்ல எண்னம் வரவேண்டுமென்றும், அவர் பார்ப்பது எல்லாம், நலமும் வளமும் பெறவேண்டும் என்றும், அவர் சொல்லைக் கேட்போரெல்லாம், இனிமை பெறவேண்டுமென்றும், பெண்கள் எண்ண வேண்டும்.

அப்பொழுது, அவருக்கு உற்சாகத்தை ஊட்டிக் கொண்டே இருக்கும். நல்ல சிந்திக்கும் தன்மை வரும்.

கணவன் மனைவி வேதனைப்படும் பொழுது, அந்த வேதனை என்ற உணர்வுகள், இருவரையும் சிந்திக்க முடியாமல் செய்யும். அந்த மாதிரியான நேரங்களில் எல்லாம், துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி நாம் பெறவேண்டும், என் உடல் முழுவதும் படரவேண்டும் என்று எண்ண வேண்டும்.

அந்த துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும், என் உடல் முழுவதும் படர்ந்து, உடல் உறுப்புகளை உருவாக்கிய அணுக்கள் பெறவேண்டும், என்று எண்ண வேண்டும். இவ்வாறு எண்ணி, உடலுக்குள் சேர்த்தவுடன், கணவருக்கு, அதைப் பாய்ச்ச வேண்டும்.
அந்த மகரிஷிகளின் அருளால், அவர் சொல்வதெல்லாம் நலம் பெறவேண்டும், அவர் பிறர் போற்றும் நிலைகள் பெறவேண்டும், என்று மனைவி எண்ண வேண்டும். அந்த பழக்கத்திற்கு வரவேண்டும்.
தியானம் என்பது, இதுதான் தியானம்.
உட்கார்ந்து சதா எண்ணுவது, தியானமல்ல.
அந்த அருள் சக்தி பெறுவதும்,
அதை இயக்குவதும்தான், தியானம்.

நமக்குள் வேதனை என்ற உணர்வுகள் ஆனபின், சிக்கலலென்ற உணர்வு வருகின்றது. நுகரும் உணர்வுதான், நம்மை இயக்குகின்றது. அந்த உணர்வின் தன்மைதான் கூடும். எலக்ட்ரிக், எலக்ட்ரானிக், என்ற நிலைகளில், விஞ்ஞானம் நிரூபிக்கின்றது.

மெய்ஞானிகள் காட்டியது, பிறரின் உணர்வுகள் வேகமாக இருக்கும் பொழுது, நம் நல்ல உணர்வுகளை உடைத்து, உள்ளுக்குள் சென்று விடுகின்றது. ஆகையால், அந்த வேகமான உணர்வுகள், நமக்குள் வராதபடி தடுக்க வேண்டுமென்றால், அந்த அருள் உணர்வை, நாம் அடிக்கடி சேர்த்து, இணைக்க வேண்டும்.

துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும்,
நாம் பெறவேண்டுமென்று, செருகேற்றிக் கொள்ள வேண்டும்.
அப்பொழுது, நமக்குப் பாதுகாப்பான நிலைகள் வரும்.
நமது தியான வழி அன்பர்கள், நமக்குள் தீமை வராது,
தடுத்துப்  பழகுவதுதான் தியானம்.
துருவ நட்சத்திரத்தின் உணர்வை,  
நமக்குள், எல்லா அணுக்களுக்குள்ளும்
சேர்த்துவிட வேண்டும்.

நாம் புழுவிலிருந்து வரப்படும் பொழுது, தீமையிலிருந்து விடுபடும் உணர்வை சேர்த்துச் சேர்த்து, வந்தோம். தீமையை நீக்கிய, துருவ நட்சத்திரத்தின் உணர்வை, உங்களிடம் பதிவு செய்கின்றோம். அந்தப் பதிவு கொண்டு, துருவ நட்சத்திரத்தை எண்ணி, காற்றில் கலந்துள்ள, துருவ நட்சத்திரத்தின் உணர்வை எடுத்துப் பயன்படுத்தும் பொழுது, நாம் துருவ நட்சத்திரத்தின் ஆயுள் மெம்பராகச், சேருகின்றோம்.

அந்த ஆயுள் கால மெம்பர் குடும்பத்தில், யாம் சொன்ன மாதிரி கடைப்பிடிக்க வேண்டும். குழந்தை சுட்டித்தனமாக இருந்தால், உடனே, துருவ நட்சத்திரத்தை எண்ணி, மாற்ற வேண்டும். தொழிலில் நஷ்டம் ஏற்பட்டாலும், உடனே துருவ நட்சத்திரத்தை எண்ணினால், அதை எப்படிச் செய்ய வேண்டுமென்ற சிந்தனை வரும்.

கணவனும் மனைவியும், இந்த தியானத்தை எடுத்து, கணவருக்கு, உயர்ந்த ஞானம் கிடைக்க வேண்டும், சிந்திக்கும் ஆற்றல் கிடைக்க வேண்டும், தொழிலில், நல்ல வீரிய சக்தி பெறக்கூடிய, உணர்வு வரவேண்டும் என்ற உணர்வைப் பாய்ச்சுங்கள்.

அவர் மனம், வலிமையாக இருக்க வேண்டும், எண்ணங்கள், சீராக இருக்க வேண்டும், அவர் செயல்களை, அனைவரும் போற்றும் நிலைகள் வரவேண்டுமென்று, எண்ணிப் பாருங்கள். எந்த வியாபாரமானாலும், அவரிடத்தில் பொருள் வாங்குவோர் எல்லாம், நன்றாக இருக்க வேண்டுமென்று, எண்ணிப் பாருங்கள். 

மனைவி இப்படி எண்ணினால், வேறு யாரிடத்திலும் யோசனை கேட்க வேண்டியதில்லை.  இந்த உணர்வுடன், கணவர் எங்கு சென்றாலும்,  எல்லாக் காரியத்திலும், வெற்றி பெறலாம்.
நாம், இந்த மாதிரி வாழ்ந்து காட்டவேண்டும்.
அதைச் செயலாக்கிப் பார்க்க வேண்டும்.
அப்பொழுது, வாழ்க்கையில் மகிழ்ச்சி வரும்.

மற்றவரிடத்தில், இதைச் சொல்லும் பொழுது,
இந்த உணர்வு, அங்கே விளைய வேண்டும்.
அவர்கள் குடும்பமும், நன்றாக இருக்க வேண்டும், அவர்கள் உடலில், விளையும் மூச்சு நல் உணர்வாக படரவேண்டும்.

நம் தெருவிற்குள், நல்ல உணர்வலைகள் பரவவேண்டும். அப்பொழுது, ஒன்றுபட்டு வாழும் நிலை வரும். நாம் ஆயுள் கால மெம்பர்கள் அனைவரும், துருவ நட்சத்திரத்துடன் ஒன்றியே வாழவேண்டும். ஒவ்வொரு குடும்பத்திலும், துருவ நட்சத்திரத்தை எண்ணிப் பழகவேண்டும்.

நமது குருநாதர், மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் நமக்கு அருளினார். அவர் வழியில், அவர் காட்டிய நெறிப்படி, அந்த துருவ நட்சத்திரத்தின் உணர்வை, நாம் எடுக்க வேண்டும். 

அவர் துருவ நட்சத்திரத்தின் அங்கத்தினர். அவர் வழியில் துருவ நட்சத்திரத்தின் ஒளி பட, இருள் நீங்கும். அதன் அருளைப் பெற. இருளை அகற்றும் சக்தி பெறலாம். இதையெல்லாம் நாம் பெற்றுப் பழகவேண்டும். இதை ஒவ்வொருவரும் கடைப்பிடிக்க வேண்டும்.