ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

January 7, 2012

உயிரே கடவுள் – மெய்ஞான மாத இதழ் -- 2002

   

உயிரே கடவுள் – மெய்ஞான மாத இதழ்   டிசம்பர் 2002 (15.12.2011)
.ஒரு சமயம், யாம் வசித்த ஊரில் காலரா எனும் வியாதி பரவியது. ஊரில் உள்ள பலர், காலரா வியாதியால் தாக்கப்பட்டு இறந்தனர். அது சமயம், எமக்கு தைரியம் அதிகம் இருந்தது. அதனால், காலரா வியாதியால் தாக்கப்பட்டு இறந்த பலரை, அதாவது சுமார் 20 அல்லது 30 பிணங்களைத் தூக்கி சுடுகாட்டில் போட்டு வந்தோம். ஆனால் அது சமயம், இது போன்ற பணிக்குப் பயந்து யாரும் வரவில்லை.

அது சமயம், எமது தந்தையைப் பெற்ற அம்மாவிற்கு, அதாவது எம்முடைய பாட்டிக்குக் காலரா நோய் வந்துவிட்டது. உறவினர்கள் சிலர் அவரை தூக்கிக் கொண்டு ஆஸ்பத்திரிக்குப் போய்விட்டார்கள்.

பாட்டிக்குக் காலரா நோய் வந்துவிட்டது. அவரை, ஆஸ்பத்திரிக்குத் தூக்கிக் கொண்டு போய் விட்டார்கள் என்று யாம் கேள்விப்பட்டதும், எமக்கு வயிற்றுப் போக்கு ஏற்படத் தொடங்கியது.

காலராவில் இறந்த 30 பிணங்களைத் தூக்கிப் போட்டோம். அப்பொழுது எமக்கு ஒன்றும் ஆகவில்லை. எம்முடைய பாட்டிக்குக் காலரா நோய் வந்துவிட்டதே, என்று எமது உணர்வில் சிறிது இடம் கொடுத்தவுடனே, எமக்கும் காலரா வந்துவிட்டது.

குருநாதர் இந்த சம்பவத்தை எமக்கு நினைவுபடுத்தி, “நீ தைரியத்துடனும் வலிமையுடனும் காலராவில் இறந்தவர்களைத் தூக்கிக் கொண்டு போய் போட்டாய். உனக்கு ஒன்றும் ஆகவில்லை. ஆனால், உன்னுடைய பாட்டிக்குக் காலரா நோய் வந்துவிட்டதே என்று எண்ணியவுடனே, உனக்கும் காலரா நோய் வந்துவிட்டது.

மனிதரிடத்தில், உணர்வு என்ன வேகமாக வேலை செய்கின்றது என்று பார்த்தாயா?” என்று கேட்டார்.

ஆனால், காலராவால் தாக்கப்பட்ட பாட்டியின் மீதான எண்ணம் வந்தபின் தான், எமக்கும் காலரா நோய் வந்தது, என்று குருநாதர் சொன்ன பின் தான் யாம் தெரிந்து கொண்டோம்.

மதுரை சுப்பிரமணியபுரத்தில், ஒரு வாய்க்கால் இருக்கும். இப்பொழுது, அந்த இடத்தில் மேம்பாலம் கட்டியிருக்கின்றார்கள். அந்த வாய்க்காலில் தண்ணீர் ஓடிக் கொண்டிருக்கும். எமக்கு வயிற்று போக்கு ஏற்பட்டதுமே, யாம் அந்த வாய்க்காலுக்குச் சென்று விட்டோம்.

வாய்க்காலில், கால் கழுவி விட்டு வரலாம் என்று நினைத்தால், அது நடக்காத காரியமாக இருந்தது. ஏனென்றால், வயிற்றுப் போக்கு நிற்காமல் போய்க் கொண்டிருந்தது. பிறகு, ஒருவாறாகச் சமாளித்து, ஹோட்டலுக்குச் சென்று “தயிர் சாதம் கொடுங்கள்” என்று சொல்லி தயிர் சாதம் வாங்கி சாப்பிட்டோம். மனதில் யாம் ஒரு பயில்வான் என்று எண்ணி, தயிர் சாதத்தை ஒரு பிடி பிடித்துக் கொண்டிருந்தோம்.

ஆனால், தயிர் சாதத்தை சாப்பிட்டுக் கொண்டிருக்கும் பொழுதே, எமக்கு வயிற்றுப் போக்கு ஏற்பட்டுவிட்டது. ஹோட்டலுக்குள்ளேயே நடந்துவிட்டது, பிறகு, மறுபடியும் வாய்க்காலுக்கு வந்து அமர்ந்து அலசி கொண்டிருந்தோம்.

ஒரு சந்தர்ப்பத்தில், எமக்கு தைரியம் சிறிது குறைந்து. ஆனாலும் தைரியத்தை வரவழைத்துக் கொண்டு “என்ன பண்ணிவிடும், பார்க்கலாம்” என்று இருந்தோம். பசித்தால், இன்னும் கொஞ்சம் தயிர்சாதம் சாப்பிடலாம் என்று எண்ணினோம். ஏனென்றால், தயிர் குளிர்ச்சி, தயிர் சாதம் சாப்பிட்டால் சரியாகிவிடும் என்று இருந்தோம். அதனால், தயிர் சாதம் வாங்கி சாப்பிட்டோம். ஆனால், சாப்பிட்ட சாதம் வயிற்றுப் போக்கால் முழுது முழுதாக வெளியே சென்றது.

எமது கண் முழியெல்லாம் உள்ளே சென்றுவிட்டது. சரி நாம் இந்த தண்ணீரிலேயே உள்ளே சென்றுவிடுவோம் போலிருக்கின்றது. பாட்டியையும் பார்க்க முடியாது போலிருக்கின்றது, என்று எண்ணினோம். நடந்த நிகழ்ச்சி இது.

காலரா வியாதி பரவியதால், ஊரை விட்டே நிறைய பேர் ஓடிவிட்டனர். பண்டம் பாத்திரங்களை அப்படி அப்படியே போட்டுவிட்டு, தாம் தப்ப்பித்தால் போதும் என்று ஓடிவிட்டனர்.

வாய்க்காலை ஒட்டி ஒரு பாலம் இருந்தது. அதில் போய் அமர்ந்து கொண்டோம். அப்பொழுது, அந்த பாலத்தின் வழியாக வண்டி ஓட்டிக் கொண்டு ஒருவர் வந்தார். அவர் எம்மைப் பார்த்து, “என்னய்யா… இப்படி உட்கார்ந்திருக்கின்றாய்"... என்று கேட்டார்.

“காலராவில் இறந்தவர்களைத் தூக்கிப் போட்டு வந்தேன், இப்பொழுது எனக்கே காலரா வியாதி வந்துவிட்டது” என்று அவரிடம் கூறினோம்.

“அட.. நீ என் வண்டியில் ஏறி உட்கார்…” என்று கூறி, எம்மை அவருடைய வண்டியின் பின் சீட்டில் அமரச் செய்து, அவருடைய கரும்புக் காட்டிற்கு அழைத்துச் சென்றார். கரும்பைப் பிழிந்து ஜூஸ் எடுத்துக் கொடுத்து, “நன்றாக மூக்கு பிடிக்கச் சாப்பிடு” என்று கூறினார்.

அவர் கொடுத்த கரும்புச் சாறைக் குடித்தபின், எமக்கிருந்த காலரா நோய், எங்கே போனதென்றே தெரியவில்லை. யாம், பூரண குணம் அடைந்தோம். காலராவிற்கு மருந்து, கரும்புச் சாறு. இன்னும் கரும்புச் சாறு கொடுக்கச் சொல்லி, குடித்து விட்டு அங்கிருந்து வந்தோம்.

எமது உடல்நிலை குணமானவுடனே, சும்மா இருக்க்வில்லை. ஊர் முழுவதும் சுற்றி, மக்களிடம் யாசகம் கேட்டு பெற்று, காசு சேர்த்து, கரும்புச் சற்றை வாங்கி, காலராவால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் கொடுத்தோம்.

ஏனென்றால், யாம் அப்பொழுது தேசிய இயக்கத்தில் இருந்ததால், பொது சேவையில் ஆர்வமுடன் ஈடுபட்டு, “நீ குடி, நீ குடி” என்று எல்லோருக்கும் கரும்புச் சாறு வாங்கிக் கொடுத்தோம். அதன் பின், காலரா நோயும் ஊரை விட்டே ஓடிப்போயிற்று.

இது ஒரு சந்தர்ப்பம். அப்பொழுது தான் சொன்னார் குருநாதர், “டேய்…, உன்னைக் காப்பாற்றுவதற்கு அப்பொழுது நான் தான்டா வண்டியில் வந்தேன், நீ செத்துப் போவாய்… என்று எண்ணினாய், ஆனால், நீ சாகக் கூடாது என்று நான் வந்தேன்” என்று கூறினார்.

எமக்கிருந்த காலரா நோய் நீங்கிய பின், ஆசனம் செய்வது, பயில்வான் தனம் செய்வது என்பதெல்லாம், எம்மால் முடியாமல் போய்விட்டது. யாம் சாதரணமாக, மதுரையில் ஆண்டாள்புரத்திலிருந்து திருப்பரங்குன்றம் வரை, உடல் பயிற்சிக்காக ஓடுவோம்.

ஓடியபடியே திருப்பரங்குன்றத்திலிருந்து ஆண்டாள்புரம் வரை திரும்பி வருவோம். ஆண்டாள்புரத்திலிருந்து திருப்பரங்குன்றம் 6 மைல் இருக்கும். அதன் பிறகு, காலை 6 மணிக்கு மில்லிற்கு வேலைக்குப் போவோம்.

இது போன்று இருந்த யாம், காலரா நோய் தாக்கியவுடனே எமக்கும் காலரா நோய் வந்துவிட்டது. “பாட்டியை எண்ணினாய், என்ன ஆனது உனக்கு?” என்று கேட்டார் குருநாதர்.

குருநாதர் சொன்ன பின் தான், உணர்வின் இயக்கத்தை யாம் அறிந்தோம். பிறகு தான் எமக்கு தெரிந்தது. குருநாதர் சொல்லவில்லை என்றால், எமக்கு ஒன்றும் தெரியாது.

"இறந்தவர்களைத் தைரியமாக தூக்கிக் கொண்டுபோய் போட்டாய். ஆனால், உன்னுடைய பாட்டிக்குக் காலரா நோய் தாக்கிவிட்டதே, என்று ஏங்கினாய்.

உடனே, இதன் உணர்வு, உன்னிடத்தில் என்ன வேலை செய்தது என்று தெரிந்து கொண்டாயல்லவா” என்று கேட்டார் குருநாதர். இது போன்ற உணர்வுகள், ஒவ்வொன்றையும் எமக்கு அனுபவபூர்வமாகக் காட்டினார், குருநாதர்.

குருநாதர் காண்பித்த அருள் வழியில், தங்களுள் மெய்ஞானம் பெற்று, மெய்வழியில் வாழ்ந்து, மெய்பொருள் காணும் திறனை தங்களுக்குள் வளர்த்து வரும் அன்பர்கள் அனைவரும், துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற்று, உங்களுடைய வாழ்க்கையில் உணர்வின் இயக்கங்களை அறியும் ஆற்றல் பெற்று, அருள் ஞானம் பெற்று, சர்வ தீமைகளிலிருந்து விடுபடும் ஆற்றல் மிக்க அருள் சக்தி பெற்று, இந்தப் பிறவியில் பெருவீடு பெரு நிலை பெறும் நிலையாக, என்றும் பதினாறு என்ற  அழியா ஒளி சரீரம் பெறும் நிலையாகபேரின்ப பெருவாழ்வாக  வாழ்ந்து வளர்ந்திடஎமது அருளாசிகள்.
உயிரே கடவுள் – மெய்ஞான மாத இதழ்   டிசம்பர் 2002
யாராவது நம்மைப் பற்றிக் குறை கூறுவதை நமது காதால் கேட்க நேர்ந்தால், நமது மனம் மங்கிவிடுகின்றது. நமது மனம் மங்கிவிட்டால், நாம் தெளிவான நிலைகள் பெறுவது கடினம். ஆகவே, நமது மனம் மங்காது இருக்க வேண்டுமென்றால், நாம் என்ன செய்ய வேண்டும்?

“துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நான் பெற அருள்வாய்… ஈஸ்வரா... துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் என் உடல் முழுவதும் படர்ந்து, என் இரத்த நாளங்களில் கலந்து என் உடலிலுள்ள ஜீவான்மா ஜீவ அணுக்கள் அனைத்தும் பெற அருள்வாய்… ஈஸ்வரா…” என்று எண்ணி ஏங்கி நம்முள் வந்த நஞ்சான உணர்வுகளைத் துடைத்துப் பழகுதல் வேண்டும்.

“நம்மைப் பற்றி குறை கூறியவர் பொருளறிந்து செயல்படும் திறன் பெறவேண்டும். அவர் அறியாது சேர்த்த இருளிலிருந்து விடுபட வேண்டும்” என்று நாம் எண்ணி ஏங்கினால், அவருடைய குறையின் உணர்வுகள் நமக்குள் வருவதில்லை. இதனால், நம்மிடத்திலுள்ள நல்ல உணர்வுகளை வளர்த்துக் கொள்ள ஏதுவாகின்றது.

மாறாக, “இப்படி நம்மைக் குறை கூறுகின்றாரே” என்ற உணர்வுகளை நம்முள் வளர்த்தால், நாளடைவில் நம்முடைய நல்ல உணர்வு, நம்மை குறை கூறிய உணர்வுக்குத் தக்கவாறு மாற்றிவிடும். குறை உள்ளவராகவும், குற்றங்கள் செய்பவராகவும், அடிக்கடி சலிப்பு அடைபவராகவும், சங்கடப்படுபவராகவும் நம்மை மாற்றிவிடும்.

ஆகையினால், “பிறர் நம்மைக் குறை கூறிய, குற்றங்கள் சொல்லிய உணர்வுகள்”, நமக்குள் வந்து செயலாவதைத் தடைப்படுத்துதல்  வேண்டும். இதற்குத் தான், ஆத்ம சுத்தி என்ற ஆயுதத்தை உங்களுக்குக் கொடுத்துள்ளோம்.

ஆத்ம சுத்தி என்பது இதுதான். அதாவது, “துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நான் பெற அருள்வாய்… ஈஸ்வரா... துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் என் உடல் முழுவதும் படர்ந்து, என் இரத்த நாளங்களில் கலந்து என் உடலிலுள்ள ஜீவான்மா ஜீவ அணுக்கள் அனைத்தும் பெற அருள்வாய்… ஈஸ்வரா…” என்று எண்ணி ஏங்கும் பொழுது, பிறர் நம்மை குறை கூறிய உணர்வுகள், நம்முள் செயலாவதைத் தடைப்படுத்துகின்றோம்.

பிறர் குறை உணர்வுகளை, நமது கண் கவர்கின்றது. அதன் வழிதான் (கண்கள் வழி), நாம் கவர்ந்த உணர்வுகள் நமது நரம்பு மண்டலங்களுக்குச் செல்கின்றது. நமது உடலிலுள்ள உறுப்புகளிலெல்லாம் இணைக்கின்றது.

அப்போது அந்த உணர்வுகள் இழுக்கப்பட்டு நம் முன்னால் வரும்பொழுது, நம்முள் குறை உணர்வுகளே வலுப் பெறுகின்றது. அப்போது, நுகர்ந்த குறை உணர்வின் இயக்கத்திற்கு நம்முடைய நிலை சென்றுவிடுகின்றது. அதாவது, நுகர்ந்த குறை உணர்வுதான் நமது உடலை இயக்க ஆரம்பிக்கின்றது.

ஆக, பிறிதொருவர் செய்யும் தவறை நமக்குள் ஏற்று, அவர் வழியில் நாம் செயல்படும் நிலை உருவாகின்றது. ஏனென்றால், அது வாலி, வலிமையானது. நம்முடைய நல்ல குணங்களை இயக்கவிடாது, தடைப்படுத்துகின்றது. ஆக, இத்தகைய தீமைகளிலிருந்து விடுபடுவது எங்ஙனம்?

ஒருவரின் குறை உணர்வின் செயலை, நாம் நமது கண்ணால் தான் பார்க்கின்றோம். நமது கண் கருவிழியில் மோதியபின் தான், அதன் உணர்ச்சிகளை உடலினுள் அனுப்புகின்றது.

ஆகவே, நமது கண் கருமணியில் குறை உணர்வின் அழுக்கின் தன்மை இருக்கும். அது சமயத்தில், நாம் நமது உயிரான ஈஸ்வரனை “ஈஸ்வரா..” என்று எண்ணி, துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நான் பெறவேண்டும் என்று கருமணியில் நாம் நினைக்கும் பொழுது,
நம்மை குறை கூறிய உணர்வுகள்,
கண்ணின் கருமணியில் இல்லாதபடி துடைக்கப்படுகின்றது,
சுத்தப்படுத்தப்படுகின்றது.

“துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் என் உடல் முழுவதும் படர்ந்து, இரத்த நாளங்களில் கலந்து, என் உடல் உறுப்புகளை உருவாக்கிய அணுக்கள் அனைத்தும் பெறவேண்டும் ஈஸ்வரா”, என்ற வலுவைச் சேர்த்து விட்டால்,
நாம் கண்ணால் பார்த்த குறையின் உணர்வுகள்,
நமது உடல் உறுப்புகளை இயக்குவதை நிறுத்தி,
குறையின் உணர்வுகளை,
நம்முள் இழுக்காதபடி தடைப்படுத்துகின்றோம்.
நமது ஆன்மாவைச் சுத்தப்படுத்துகின்றோம்.

பின், நம்மை குறை கூறிய நபரை எண்ணி, அவர் தன்னையறியாது சேர்த்த இருளிலிருந்து விடுபடவேண்டும். அவர் பொருளறிந்து செயல்படும் சக்தி பெறவேண்டும். பிறருக்கு நன்மை செய்யும் உணர்வுகள், அவரிடத்திலே தோன்ற வேண்டும். அவர் பண்பும், பரிவும் பெறக்கூடிய அருள் உணர்வு பெறவெண்டும் என்று நாம் எண்ணினால், இதன் உணர்வுகள் நம்முள் நல் உணர்வுகளை இயக்கும் சக்தி பெறுகின்றது.

பொதுவாக, மற்றவர்களைப் பற்றிக் குறை சொல்லும் உணர்வுகள் அநேக பேரிடம் உண்டு. உங்களிடமே காசை வாங்கிக் கொண்டு, “சும்மா கொடுக்கின்றானா” என்று கூட சொல்வார்கள். நீங்கள் மற்றவர்களுக்குத் தர்மம் செய்தீர்கள் என்றால், “சும்மாவா கொடுக்கின்றார்கள், நம்மை ஏமாற்றுவதற்கு கொடுக்கின்றார்கள்” என்று கூறுவார்கள். 

இதை, நாம் கேட்க நேரும் பொழுது, அவர்கள் மீது வெறுப்பும், நம்முடைய நல்ல குணங்களின் மீது நமக்கு வெறுப்பும் வந்துவிடுகின்றது. இது போன்ற நிலைகள், நம்முள் வராதபடி நமது நல் உணர்வுகளை நாம் காத்துக் கொள்ள வேண்டும்.

புழுவிலிருந்து மனிதராக வரும் வரையிலும், ஒவ்வொரு உடலிலும், தாம் கொடுமைகளிலிருந்து தப்பவேண்டும் என்ற உணர்வின் வலிமையைச் சேர்த்துச் சேர்த்து, பரிணாம வளர்ச்சியில், இன்று தீமைகளிலிருந்து விடுபடச் செய்யும் “ஆறாவது அறிவு கொண்ட மனிதராக” நம்மை உருவாக்கியுள்ளது நமது உயிர். 

இந்த மனித வாழ்க்கைக் காலத்தில், துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி உணர்வுகளை சேர்த்துச் சேர்த்து, அருள் உணர்வுகளை நம்முள் வலிமை பெறச் செய்து, நமது உயிரில் ஒன்றும் உணர்வுகளை என்றும் நிலையான, அழியாத பேரின்ப உணர்வுகளாக உருவாக்குதல் வேண்டும். இது தான் “ஏகாதசி விரதம்” என்பது.

காலையில் நாம் துருவ தியானத்தில் அமர்ந்து, யாருடைய பகைமையும் நம்முள் வராதபடி தடுத்து, பத்தாவது நிலை பெறக்கூடிய உணர்வை நமக்குள் சேர்த்து, நமக்குள் நல் உணர்வின் அணுக்களை வளர்த்துக் கொள்வது தான், ஏகாதசி விரதம் என்பது.

இதனால், தீமை என்ற உணர்வுகள் நமக்குள் செல்லாதபடி, தீமையான அணுக்கள் நமக்குள் வளராதபடி தடைபடுத்துகின்றோம். இதை நம்முடைய பழக்கத்திற்குக் கொண்டுவர வேண்டும். எமது அருளாசிகள்.
உயிரே கடவுள் – மெய்ஞான மாத இதழ்  
நவம்பர் 2002
அன்பர் ஒருவர், தம் உடலில் பல இன்னல்களை அனுபவித்துக் கொண்டு, இன்னல்களிலிருந்து தாம் விடுபடவேண்டும் என்ற எண்ணத்துடன் எம்மைச் சந்திக்க வந்தார்.

அதாவது, அவருக்கு வாய் பேச வரவில்லை, கை கால்களும் சரியாக இயங்கவில்லை. இதற்காக வேண்டி, பல நாட்கள் பல வைத்தியர்களிடம், போய் வைத்தியம் பார்த்திருந்தார்கள். வைத்தியங்கள் அவருக்கு உதவில்லை.

இந்தச் சூழ்நிலையில், அவருடைய நண்பர் ஒருவர் சொன்னார் என்று எம்மைத் தேடி வந்தார். எப்படியும் தான் குணமாக வேண்டும் என்ற ஒரே ஆர்வத்தில், நோக்கத்தில் வந்தார். அப்போது, அவர் குணமாக வேண்டும், அருள் ஞானம் பெறவேண்டும் என்று அதற்குண்டான அருள் உணர்வுகளை அவரின்பால், யாம் பாய்ச்சினோம்.

இந்நிலையில், யாம் பாய்ச்சிய அருள் உணர்வின் பால் அவருக்கு பற்றானது. அப்போது, அவருக்குள் அருள் உணர்வுகளைத் தம்முள் வளர்த்துக் கொள்ள வேண்டும், என்ற எண்ணம் அவருக்கு ஏற்பட்டது.

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியின் உணர்வை, அவர் தம் உடலிலுள்ள உறுப்புகளை உருவாக்கிய அணுக்கள் அனைத்தும் பெறவேண்டும் என்று எண்ணும் பொழுதெல்லாம், அவருக்குள் உற்சாகம் வருகின்றது. 

அவர் தாம் பூரண குணம் அடைந்த பின், அதே ஆர்வ உணர்வில், துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியின் உணர்வுகளை எண்ணி, ஏங்கி, தியானிக்கத் தொடங்கினார்.

இப்படி, அவர் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியின் உணர்வுகளை எண்ணி, ஏங்கி தியானிக்கின்ற பொழுதெல்லாம், புவியில், காற்றில் கலந்துள்ள துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியின் உணர்வுகள், அவருடைய சுவாசத்தில் கலந்து அவருக்குள் இணைவதால், அவருக்கு ஆனந்த வாழ்க்கையும், சிந்திக்கும் ஆற்றலும், தீமைகளை அகற்றும் தன்மையும் வருகின்றது.

இதைத் தொடர்ந்து அவரிடத்தில் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியின் உணர்வுகளை அனைத்து மக்களும் பெறவேண்டும் என்ற ஆசை வருகின்றது. தனக்கு என்று நினைக்கவில்லை. எல்லோரும் பெறவேண்டும் என்ற ஆசையில், சுயநலம் இல்லாதபடி பொது நலத்திற்கு வருகின்றார்.

அனைத்து மக்களும் அருள் ஞானம் பெறவேண்டும், அருள் உணர்வுகள் பெறவேண்டும் என்ற ஆசையின் காரணத்தினால் தான், அவர் பேருண்மையின் உணர்வுகளை உணர முடிந்தது.

அதன் வழியே, அவர் எண்ணிய காரியங்களும், அதாவது, இதை இப்படிச் செய்தால், நன்றாக இருக்கும் என்று எண்ணி செயல்படுத்தினால், அந்த காரியம் அவர் எண்ணியது போன்றே சிறப்பாக அமைந்தது. 

அவர் எடுத்துக் கொண்ட, வலுவான உணர்வின் தன்மை கொண்டுதான், இதன் நிலையானது. இதுதான் வசிஷ்டர் பிரம்மகுரு.

குரு கொடுத்த உணர்வுகளை, தாம் பெறவேண்டும் என்ற ஆசையுடன் அருள் உணர்வுகளை அவர் தமக்குள் எடுக்கப்படும் பொழுது, அவருக்குள் பிரம்மமாகின்றது. பிரம்ம குருவின் மனைவி அருந்ததி.

எல்லோரும் அருள் ஞானம் பெறவேண்டும், மெய்ப்பொருளைக் காணும் சக்தி பெறவெண்டும் என்ற உணர்வுடன், யாம் வெளிப்படுத்திய அருள் உணர்வுகள் அவருடைய உடலுக்குள் சென்று, அவருக்குள் நலமாகும் பொழுது, அவர் எண்ணி ஏங்கிய உணர்வெல்லாம், உயர்ந்த சக்திகளைப் பெறக்கூடிய ஆற்றல் பெறுகின்றது.


இது போன்று, ஆத்ம சுத்தி என்றால், தியானம் செய்யும் பொழுது மட்டுமல்ல ஆத்ம சுத்தி. நாம் ஒரு வியாபாரம் செய்து வருகின்றோம். அப்படி நாம் வியாபாரம் செய்து வரும் காலத்தில், “எங்களிடம் பொருள் வாங்கிச் செல்வோர்களின் குடும்பத்தினர் அனைவரும், துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெறவேண்டும், அவர்களுடைய குடும்பம் நன்றாக இருக்க வேண்டும்” என்று எண்ண வேண்டும்.

துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் என் உடல் முழுவதும் படர்ந்து, என் இரத்த நாளங்களில் கலந்து, என் உடல் உறுப்புகளை உருவாக்கிய அணுக்கள் அனைத்தும் பெறவேண்டும் ஈஸ்வரா, என்று ஏங்கவேண்டும்.

பின், நாம் வியாபாரம் செய்யும் பொருள்களை நமது கண்ணால் பார்த்து, “இந்தப் பொருள்களை பயன்படுத்துவோரின் குடும்பத்தினர் அனைவரும், மகரிஷிகளின் அருள் வட்டத்தில் இணைந்து வாழ்ந்து, தெய்வீக அன்பும், தெய்வீக பண்பும், தெய்வீக அருளும், பெறக்கூடிய அருள் குடும்பமாக வளரவேண்டும்” என்று எண்ணவேண்டும்.

இவ்வாறு எண்ணினோம் என்றால், இதன் உணர்வுகள் நமது உயிரில் மோதி, நமக்குள் உமிழ்நீராக மாறுகின்றது. இந்த உணர்வின் உமிழ்நீர் நமது சிறு குடல் பெருங்குடலுக்கு சென்று இரத்தமாக மாறுகின்றது.





நாம் எடுத்துக் கொண்ட நல் உணர்வுகளால் நமக்கு நன்மையாகின்றது. ஒவ்வொரு பொருளிலும் காந்தப் புலன் உண்டு. நமது நல் உணர்வின் ஏக்கப் பார்வையின் தன்மை கொண்டு, நாம் அங்கே தெய்வமாக மாறுகின்றோம். செய்யும் தொழிலே தெய்வம். இப்பொழுது, நாம் அங்கே தெய்வமாகின்றோம்.

நம்முடைய கடைக்கு, தங்களுக்கு தேவையான சரக்குகளை வாங்குவதற்கு எத்த்னையோ பேர் வருகின்றனர். வருகின்ற வாடிக்கையாளர்களின் குடும்பங்களில் எத்தனையோ சிக்கல்கள் இருக்கும், எத்தனையோ பிரச்னைகளுடன் வருவார்கள். ஒவ்வொரு குடும்பத்திலும், உணர்வுகள் எத்தனையோ மாற்றமான நிலைகளில் இருக்கும். அப்போது, அவர்களுடைய கவலைகளுடன், சரக்கு வாங்குவதற்காக நம்முடைய கடைக்கு வருகின்றனர்.

வந்தவரகள், தம்முள் எடுத்துக் கொண்ட கஷ்ட உணர்வுகள் கொண்டு, “நம்மிடம் இந்தச் சரக்கு வேண்டும்” என்று கேட்பார்கள். உதாரணமாக நம்முடைய கடையில் சரக்கு கேட்பவர்கள் சந்தோஷமாகக் கேட்பதையும் பார்க்கலாம், சோர்வாகக் கேட்பதையும் பார்க்கலாம். வீட்டில் கஷ்டமாக இருக்கும் பொழுது, இங்கே வந்து சோர்வாகக் கேட்பார்கள். 

இது போன்ற நேரங்களில், நாம் மற்றவர்களுடைய உணர்வுகளை நுகர நேருகின்றது. மற்றவர்களுடைய கவலையான வேதனையான உணர்வுகள் நம்முள் வந்து விடுகின்றன.


இப்படி, பிறருடைய வேதனை உணர்வுகள் நம்முள் நம்மை அறியாது வந்து சேரும் நிலையில், அந்த தீய உணர்வுகளை, உடனுக்குடன் நம்மிடமிருந்தது நீக்கும் சக்தி பெறவேண்டும்.

அதற்கு முன்னால், துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் என் உடல் முழுவதும் படர்ந்து, எனது இரத்த நாளங்களில் கலந்து, என் உடல் உறுப்புகளை உருவாக்கிய அணுக்கள் அனைத்தும் பெறவேண்டும், என்று அருள் உணர்வின் வலுவை, நம்முள் அதிகரித்துக் கொள்ள வேண்டும். 

அருள் உணர்வுகள் நம்முள் வலுவான நிலையில் இருக்கும் பொழுது, மற்றவர்களுடைய வேதனை உணர்வுகள் நம்முள் வராதபடி தடுத்து, நம்மை நாம் பாதுகாத்துக் கொள்ள முடியும்.

விஞ்ஞானிகள் ரோபாட் என்ற இயந்திரத்தை உருவாக்கியுள்ளனர். இந்த இயந்திரம் தவறான, குற்ற உணர்வுகளுடன் வரும் மனிதர்களைக் கண்டு எச்சரிக்கை செய்கின்றது.

இது போன்று, துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியின் உணர்வுகளை, நமக்குள் சேர்த்து வலுவாக்கும் பொழுது, மற்றவர்களின் வேதனையுணர்வுகளை நம் அருகில் வரவிடாது தடுத்து, தீய உணர்வுகளைத் தள்ளிவிடுகின்றது.

“நம்மிடம் பொருள்கள் வாங்குபவர்கள் மகரிஷிகளின் அருள் சக்தியால் நன்றாக இருக்க வேண்டும்” என்று நீங்கள் மனதார நினைத்து பொருள்களைக் கொடுங்கள்.

அப்பொழுது அருள் உணர்வுகள் உங்களில் வலு பெற்று, உங்களிடம் பொருள் வாங்குபவர்களும் நனமை அடைகின்றார்கள். வியாபாரமும் நன்றாக நடைபெறுகின்றது. நீங்கள் எண்ணும் உணர்வு, உங்களுக்கு நன்மை தருகின்றது.

நாம் புழுவிலிருந்து மனிதராக வரும் வரையிலும் தீமைகளிலிருந்து விடுபடவேண்டும், தீமைகளிலிருந்து விடுபடவேண்டும் என்ற உணர்வுகளைச் சேர்த்து சேர்த்து, இன்று தீமைகளிலிருந்து விடுபடச் செய்யும் ஆறாவது அறிவு கொண்ட மனிதராக நம்மை நமது உயிர் உருவாக்கியுள்ளது.

நஞ்சு என்று தெரிந்தால், நஞ்சை நீக்கும் ஆற்றல் நமது ஆறாவது அறிவிற்கு உண்டு. இந்த ஆற்றலை, நாம் சரியான முறையில் பயன்படுத்த வேண்டும். 

சரியான முறையில் பயன்படுத்த வேண்டுமென்றால், நம்முடைய வாழ்க்கையையே தியானமாக்க வேண்டும்.

ஆகவேஅருள் ஞானிகள் காண்பித்த அருள் வழியில்தம்முள் அருள் உணர்வுகளை வளர்த்து வரும் அன்பர்கள் அனைவரும் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியைப் பெற்று, உயிரைப் போன்றே உயிரில் ஒன்றும் உணர்வுகள்  அனைத்தையும் ஒளியாக உருவாக்கும் நிலை பெற்று துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியால் இந்த வாழ்க்கையில் உடல் நலம்உடல் பலம்மன நலம்,  மன பலம்மன வளம்செல்வம், செல்வாக்குசொல்வாக்கு பெற்றுதொழில் வளம் பெருகிஇந்தப் பிறவியில் பெருவீடு பெரு நிலை பெறும் நிலையாக, என்றும் பதினாறு என்ற  அழியா ஒளி சரீரம் பெறும் நிலையாக, பேரின்பப் பெருவாழ்வாக  வாழ்ந்து வளர்ந்திடஎமது அருளாசிகள்.
உயிரே கடவுள் – மெய்ஞான மாத இதழ்  
நவம்பர் 2002
ஒரு ஏழைத் தொழிலாளி வெறும் சோற்றுக் கஞ்சியும், வெங்காயமும் சாப்பிட்டு விட்டு, காலை முதல் மாலை வரை கடப்பாரை, மண்வெட்டி சகிதமாக கடுமையாக உழைக்கின்றார்.

பாதாமும், பிஸ்தாவும் சாப்பிட்டு உடலை வளர்த்து, அலுவலகத்தில் வேலை பார்க்கும் ஒருவரிடம் கடப்பாரையை கொடுத்து, வேலை செய் என்று கூறினால், அவரால், ஒரு அரை மணி நேரத்திற்கு மேல் வேலை செய்ய முடியாது. வேர்த்து விறுவிறுத்துப் போய்விடுவார்.

ஆக, ஏழைத் தொழிலாளிக்கு, அன்று வேலை பார்த்தால் தான் சம்பளம். சாப்பாடு எனும் பொழுது, வேலை பார்த்தே ஆகவேண்டும் எனும் கட்டாயம். பணக்காரருக்கு, அப்படிக் கஷ்டப்பட வேண்டும் என்று அவசியமே இல்லை. அதனால், அவரால் சிறிது நேரத்திற்கு மேல் கடின வேலை செய்ய முடிவதில்லை. ஆக, “உடலுக்கு வலு கொடுப்பது, நமது எண்ணங்களே” என்று நாம் உணர வேண்டும்.

நாம் ஒரு ஜவுளி வியாபாரத்திற்குப் போகின்றோம். ஜவுளி வியாபாரத்திற்குப் போகும் பொழுது, கடைகளில் ஆர்டர் சேகரிப்பதற்கு, சில மாதிரிகள் மட்டுமே எடுத்துச் செல்கின்றோம்.

கடைகளுக்குச் சென்று, நாம் எடுத்துச் சென்ற, "மாதிரித் துணிகளை"(சாம்பிள்) காண்பித்தவுடனே, கடைக்காரர்களும் மாதிரித் துணிகளைப் பார்த்துவிட்டு, ஒன்றிரண்டு மாதிரிகளைப் போன்று சரக்கு அனுப்பும்படி, நம்மிடம் கேட்கின்றனர்.

நாமும் கடைக்காரரிடம் ஆர்டர்களைச் சேகரித்துக் கொண்டு, நமது ஊருக்குக் கிளம்பி வந்து, கடைக்காரர் ஆர்டர் செய்த சரக்குகளைத் தயார் செய்து, அவரது கடைக்கு அனுப்புகின்றோம்.

சரக்கை அனுப்பி வைத்துவிட்டு, ஓரிரு நாள்கள் கழித்து பண வசூலுக்காக அவருடைய கடைக்குச் செல்கின்றோம். அவருடைய கடைக்குச் செல்ல வேண்டுமென்றால், (டவுன்) பஸ்ஸில் பயணம் செய்து தான் போக வேண்டும். ஆனால், பஸ் கிடைக்கவில்லை. அதனால், நடந்தே செல்கின்றோம்.

அப்போது சந்தர்ப்பம், ஒரு குடும்பத்தில் பலகாரம் செய்து கொண்டிருக்கின்றார்கள். பலகாரம் செய்து கொண்டிருந்த சமயத்தில், எண்ணெய் தீர்ந்துவிட்டது.

வீட்டிலிருந்த சிறுவனை அழைத்து, ‘சீக்கிரம் எண்ணெய் வாங்கி வாடா…” என்று அவசரப்படுத்தி அனுப்பி வைக்கின்றார்கள். சிறுவனும் எண்ணெய் வாங்கி வருவதற்காக, வேகமாக கடைக்குச் செல்கின்றான்.

சிறுவன் கடைக்குச் சென்று, “எண்ணெய் கொடுங்கள், எண்ணெய் கொடுங்கள்” என்று அவசரப்படுத்துகின்றான்.

ஆனால், கடைக்காரரோ இவனைப் பார்த்து, “பொறு, பொறு” என்று அடுத்தவர்களுக்கே சரக்கு கொடுத்து அனுப்புகின்றார். சிறுவனுடைய அவசரத்திற்குச் செவி சாய்க்க முடியாமல் போய்விடுகின்றது. சிறுவனுக்கோ, நேரம் கடந்து கொண்டிருக்கின்றது.

அது சமயம், சிறுவன் “நேரமாகிக் கொண்டு இருக்கின்றது, வீட்டில் பலகாரம் செய்து கொண்டிருக்கின்றார்கள், ஆகவே, எண்ணெய் சீக்கிரம் கொடுங்கள், தாமதமானால் வீட்டில் என்னைத் திட்டுவார்கள்” என்று கூறுகின்றான். இருந்தாலும், சிறுவனுடைய ஆவேச, அவசர உணர்வுகள் அங்கே எதிர்நிலையாகின்றது.

எலெக்ட்ரிக், எலெக்ட்ரானிக், அதாவது, கடைக்காரரின் உணர்வும் சிறுவனுக்கு, சீக்கிரம் சரக்கை தந்து அனுப்ப மறுக்கின்றது. 

இப்படித் தாமதமாகும் பொழுது, “நேரமாயிற்றே, நேரமாயிற்றே” என்ற இந்த பதட்டத்திலேயே சிறுவன் இருக்கின்றான். சிறிது தாமதத்திற்குப் பின், சிறுவனும் எண்ணெயை வாங்கிக் கொண்டு வீட்டிற்கு வேகமாக வருகின்றான்.

இப்படி சிறுவன் வேகமாக வரும் பொழுது, அவனுடைய எண்ணம் முழுவதும் “நேரமாகி விட்டதே, நேரமாகி விட்டதே” என்று செலுத்துகின்றான். இதனால், சாலையில் மேடு பள்ளங்கள் தெரியாதபடி சென்று, தவறி விழுந்து விடுகின்றான்.

ஏனென்றால், அவனுடைய எண்ணம் நேரமாகி விட்டதே, நேரமாகி விட்டதே” என்று இருக்கின்றது. இதனால், அவனுக்கு சாலையில் மேடு பள்ளம் தெரிவதில்லை.

எப்படியும், எண்ணெயைக் கொண்டு போய் சீக்கிரம் கொடுத்து விடவேண்டும் என்று இருக்கின்றான். இதன் அவசரத்தால், போகும் வேகத்தில் இவனும் தவறி விழுந்து, பாட்டில் நொறுங்கி, எண்ணெயும் வீணாகி விடுகின்றது.

சிறுவன், எண்ணெய் வீணான வருத்தத்தில், உடைந்த பாட்டிலை சாலை ஓரமாகத் தள்ளிவிடாதபடி, சாலையில் அப்படியே விட்டுவிட்டுச் சென்றுவிடுகின்றான்.

அதே சமயம் நாம், அதே சாலை வழியில், (ஜவுளி) சரக்கை அனுப்பிய கடைக்கு நடந்து செல்கின்றோம். போகும் வழியில், நாம் நமது வியாபாரம் பற்றிய எண்ணத்துடனே செல்கின்றோம். ஆகவே, நமது நினைவு முழுவதும் வியாபாரம் பற்றிய சிந்தனையில் இருப்பதால், சாலையில் உடைந்து கிடக்கும் பாட்டிலைக் கவனிக்காமல், உடைந்து கிடக்கும் பாட்டிலை நம்மை அறியாமலே உதைக்கின்றோம்.

உடைந்த பாட்டில் காலில் பட்டவுடன் ”பாவிப் பயல்கள்.., நடக்கும் ரோட்டில் பாட்டிலைப் போட்டு உடைத்துள்ளார்களே” என்று வெறுப்பான உணர்வுகள் வருகின்றது.

உடைந்த பாட்டில் நம் கால் மோதிய போதும், நமது காலில் காயம் எதுவும் இல்லை. ஆனால், “இந்நேரம், உடைந்த பாட்டில் காலில் குத்தியிருந்தால் என்னவாயிருக்கும்…?” என்ற உணர்வுகள் வருகின்றன.

சரி… நாம் தான் உடைந்த பாட்டிலைப் பார்த்தோம். உடைந்த பாட்டில்களை ஓரமாகத் தள்ளிவிடுவோமா? என்றால், செய்ய மாட்டோம். இதே பாட்டில், அடுத்தவரின் காலில் குத்த வாய்ப்பிருக்கின்றது.

ஆகவே, உடைந்த பாட்டிலை ஓரமாகத் தள்ளிவிடுவோம் என்று, உடைந்த பாட்டிலை ஓரமாகத் தள்ளி விட்டிருந்தால், நம்மிடம், சிறிது நல்ல மனம் இருக்கின்றது என்று இருக்கும்.

ஆனால் நாம் என்ன செய்கின்றோம்? வியாபார நோக்கத்திலேயே போகின்றோம். ரொம்ப அறிவு கெட்டதனமாக இருக்கின்றது” என்று மற்றவர்களைக் குறை கூறும் உணர்வுகளை, எடுத்துக் கொண்டு போகின்றோம்.

இப்படி இதன் உணர்வுகளுடன் கடைக்குச் சென்றபின், “சரக்கு அனுப்பியிருந்தோம், சரக்கைப் பார்த்தீர்களா?” என்று கடைக்காரரிடம் கேட்போம்.

நம்மை, கடை முதலாளி பார்க்கின்றார். ஆது சமயம், சாலையில் நடந்த சம்பவத்தால் உண்டான வெறுப்பின் மணம், நமது உடலிலிருந்து வெளிப்படும் நிலையில், இதன் மணத்தை, முதலாளி நுகர நேருகின்றது. நுகர்ந்த பின், நாம் அனுப்பியிருந்த சரக்குக் கட்டுகளைப் பிரித்துப் பார்க்கின்றார்.

கீதையில் நீ எதை எண்ணுகின்றாயோ, அதுவாகின்றாய். வெறுப்பின் உணர்வுகளை நுகர்ந்து, சரக்கைப் பார்க்கும் பொழுது, வித்தியாசமாகத் தெரிகின்றது. 

உடனே கடை முதலாளி, “அன்று, மாதிரி ஜவுளி (சாம்பிள்) காண்பிக்கும் பொழுது ஒரு விதமாக இருந்தது, ஆனால், இன்று சரக்கு வேறு விதமாக இருக்கின்றதே” என்று கூறுவார்.

ஏனென்றால், நுகர்ந்த வெறுப்பின் உணர்வின் மணத்திற்கொப்ப, அங்கே வெறுப்பு உணர்ச்சியையே காண்பிக்கின்றது. ஆனால், அன்று காண்பிக்கப்பட்ட மாதிரி பொருளும், இன்று காண்பிக்கும் சரக்கும் ஒன்றுதான். ஆனால், நுகர்ந்த உணர்வுகள், இன்று வேறு விதமாகக் காண்பிக்கின்றது.

நாம், “நான் அனுப்பியது நல்ல சரக்குதான்.., நன்றாகப் பாருங்கள்” என்று கூறுவோம்.

உடனே கடை முதலாளி, எனக்கு கண் இல்லையா, நன்றாகப் பார்த்துவிட்டுத் தான் சொல்கின்றேன்” என்று கூறுகின்றார்.

நாமும், இரண்டு தரம் “நல்ல சரக்குதான்” என்று கூறுவோம்.

அதற்கு கடை முதலாளி, “இப்படி நாணயம் (நேர்மை) கெட்டுவிடக் கூடாது” என்று கூறுவார்.

ஏனென்றால், நாம் நுகர்ந்த உணர்வுகளின் இயக்கம் இப்படி இருக்கின்றது. இதை மாற்றுவதற்கு வழி என்ன?

சந்தர்ப்பத்தால் வரும் தீமைகளை துடைப்பதற்குத் சக்தி வேண்டுமே, அதற்குத் தான் தியானத்தை கடைப்பிடிக்கச் சொல்வது. 

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியின் உணர்வுகளை நமக்குள் சேர்த்து, அறியாது வரும் தீமைகளை, உடனுக்குடன் நீக்கிப் பழக வேண்டும்.

மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் அவர்கள் அருளிய அருள் வழியில், துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை நம்முள் பெற்று, மெய்பொருள் காணும் திறனை நமக்குள் வளர்த்துக் கொண்டால்,
நமது வாழ்க்கையில், ஒவ்வொரு சந்தர்ப்பத்திற்கொப்ப, 
நல் ஞானங்கள் உதயமாகி, 
நம்மை வழி நடத்திச் செல்லும். 

இதன் தொடர் கொண்டு அகண்ட அண்டத்தின் இயக்கமும் நமது உடலான பிண்டத்திற்குள் எப்படி இயக்குகின்றதென்றும்,
உணர்வுகள் எப்படி எண்ணங்களாக ஆகிறதென்றும் 
எண்ணங்கள் எப்படி உணர்ச்சிகளாக மாறுகிறதென்றும் 
உணர்ச்சிகள் எப்படி நம்மை இயக்குகிறதென்றும்
 நமக்கு நாமே அறிந்து கொள்ளக்கூடிய ஆற்றலை, 
குருவின் வழியில் நாம் எல்லோரும் பெற வேண்டும். நீங்கள் அனைவரும் அதைப்பெறுவதற்கு, எமது அருளாசிகள்.

உயிரே கடவுள் – மெய்ஞான மாத இதழ் 
அக்டோபர் 2002    
குருநாதர் யாம் தீமைகளிலிருந்து தப்புவதற்கு, துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியின் உணர்வுகளை, எமக்குள் பெறச் செய்ததைப் போன்று, உங்களுக்குள்ளும் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியின்  உணர்வுகளை, யாம் பதிவு செய்கின்றோம்.

துருவ நட்சத்திரத்தின் அருளாற்றலின் உணர்வுகளை நீங்கள், உங்களுக்குள் வளர்த்துக் கொண்டால், உங்களிடத்தில் அறியாது சேர்ந்த தீயவினைகள் நீங்கும், புதிதாக தீயவினைகள் உங்களிடத்தில் வராது தடுத்து, உங்களை நீங்கள் காத்துக் கொள்ளலாம்.

ஒரு வித்தை நிலத்தில் ஊன்றி விட்டபின், அதற்கு நாள்தோறும் நீர் ஊற்றி வந்தால் தான், வளரும். நான் வித்தை ஊன்றிவிட்டேன், என்று சும்மா இருந்தால் வளருமா? 

அருளுணர்வுகளை யாம் உங்களிடத்தில் பதித்துவிட்டோம் என்றால், அதன் உணர்வுகளை நாளும் நீங்கள் வளர்த்து வர வேண்டும். 

உயிரின் வாழ்க்கையில் எத்தனையோ கோடி உடல்களைப் பெற்று, சந்தர்ப்பத்தால் எடுத்துக் கொண்ட உணர்வுகளுக்கொப்ப, மனித ரூபத்தைக் கொடுத்தது நமது உயிர்.

அகஸ்தியர் தம்முள் பல விஷத்தன்மைகளை அடக்கி, மனித உடலின் உணர்வின் தன்மைகளை மாற்றி, ஒளியின் உடலைத் தாம் பெற்றார்.
அவரிடமிருந்து வெளிப்படும் அருளுணர்வினை,நமது உடலிலுள்ள ஒவ்வொரு அணுவிலும், பெறக்கூடிய தகுதி பெற்றால்,
அகஸ்தியரைப் போன்று,
நாமும் நமது உடலில் உள்ள அணுக்களை
சிறுகச் சிறுக மாற்றியமைக்க முடியும்.
நம்மிடம் உள்ள முந்தைய தீயவினைகளைத் தணித்து, புது தீயவினைகள் நமக்குள் சேராமல் தடுத்து, நம்முள் நல் உணர்வினை வலுவாக்க முடியும்.

இயற்கையின் உண்மையின் உணர்வை நாம் நுகர்ந்து கொண்ட பின், நமது உணர்வுகள் என்ன செய்கின்றது? ஒரு உணர்வை நமது உடலில் வளர்த்துக் கொண்டபின், நம்மை நமது நண்பர்கள் பார்க்கும் பொழுது, நமக்கு வெறுப்போ, அல்லது பாசமோ எப்படி நமக்குள் வருகின்றது? 

இதெல்லாம் நமது உடலில் உள்ள “உணர்வுக்கொப்பத் தான் வரும்” என்பதனை, நீங்கள் ஒவ்வொருவரும் அனுபவரீதியாக உணரவேண்டும். 

தெரிந்து, தெளிந்து, தெளிவாக  வாழ்ந்திடும் வாழ்க்கையாக, உங்கள் வாழ்க்கையை அமைத்திடல் வேண்டும்.

எல்லோரும் எல்லோரிடத்திலும் பழகியிருக்கின்றோம். நமக்குக் கோபம் எப்படி வருகின்றது? வெறுப்பு எப்படி வருகின்றது? என்பதை அறிய வேண்டும். நம்மை வெறுப்படையச் செய்வது எது? வெறுப்பான பின்னால், குடும்பத்தில் என்னென்ன வேதனையாகின்றது? வெறுப்பை நீக்குவது எப்படி? என்பது போன்றவைகளை, நாம் அனுபவப்பூர்வமாகக் கொண்டு வர வேண்டும்.

ஏனென்றால், இத்தனை நிலைகளையும் யாம் கஷ்டப்பட்டுத் தான் தெரிந்து கொண்டோம்.கஷ்டத்திலிருந்து உங்களைக் காப்பதற்குதான்,  உயர்ந்த சக்திகளை உங்களிடம் சொல்லி, பதிய வைக்கின்றோம்.

தீமைகளை நீக்க வேண்டும் என்ற சக்தியை, நீங்கள் பெறுவதற்காகத்தான், யாம் உபாயங்களைக் கூறுகின்றோம்.  யாம் அப்படிச் செய்து விடுவோம், இப்படிச் செய்து விடுவோம் என்று சொல்லவில்லை.

மான், ஆடு போன்ற விலங்கினங்கள் புல் போன்ற தாவர இனங்களைச் சாப்பிட்டுப் பழக்கப்பட்டவைதான். அவைகளைப் புலி கொன்று சாப்பிடுகின்றது. சாந்தமான விலங்கினங்கள் புலியினால் கொல்லப்படும் பொழுது, அவைகளுடைய உயிரான்மா வெளியேறி, புலியின் ஈர்ப்பில் சிக்கி, புலியின் வீரியத் தன்மைக்கு மாறிவிடுகின்றது.

ஒரு புலி இறந்துவிட்டால், சிறிது நாளில் அதனுடைய உடல் அழுகி, அதனுடைய உடலிலிருந்து, தீய நாற்றம் வெளிப்படும். இப்படி, 
புலியின் உடலிலிருந்து வெளிப்படும், வீரிய உணர்வின் தன்மையை
வெப்பம், காந்தம் விஷம், என்ற இயக்க அணு
தனக்குள் கவர்ந்து,
அதன் சத்தை, தனது இயக்கமாகக் கொண்டு
வெளி வருகின்றது என்பதை உணர்த்தினார் குருதேவர்.

இறந்த புலியின் உடலிலிருந்து வெளிப்படும் மணத்தைக் கண்டு, மற்ற செடி கொடிகளிலிருந்து வெளிப்படும் சத்துகள் அஞ்சி ஓடும். ஓடும் பாதையில், விஷ செடிகள் உமிழ்த்தும் உணர்வுகளால் வழிமறிக்கப்படும் பொழுது, அங்கே சுழல் காற்று போல் அடிக்கின்றது.

சுற்றினவுடனே, புலியின் உடலிலிருந்து சத்தை எடுத்துக் கொண்ட இயக்க அணுக்களும் அதில் சிக்குகின்றன. புலியின் உணர்வின் அணுக்களும், சாந்தமான செடியின் சத்தும், விஷச் செடியின் சத்தும் மூன்றும் ஒன்றோடு ஒன்று மோதி சுழல்கின்றன.

மோதலில் மேலே ஆவியாகப் போகின்றன. அதே சமயத்தில், மோதிய உணர்வுகளின் அணுக்கள் ஒன்றோடு ஒன்று கலந்து, இணைந்து, பூமியில் படர்கின்றன.

இப்படி பூமியில் விழுந்த பின், புலியின் உடலில் எத்தகைய உணர்வின் சக்தி பெற்றதோ, எந்த நட்சத்திரத்தின் நிலைகள் இதில் குறைவாக இருக்கின்றதோ, அதற்கு எதிர் நிலையான நட்சத்திரங்களின் அலைகள், நமது புவியில் மின்னலாக மாறும் பொழுது, மின்னலின் ஒளிக்கற்றைகள் புவியில் படிந்த உணர்வின் அணுக்களில் மோதி துடிப்பாகின்றது.

இவ்வாறு துடிப்பான பின், அங்கே எப்படி ஒரு செடியாக உருவாகின்றது என்றும், அந்தச் செடியில் கலந்த உணர்வுகள், தன் சத்தை எப்படிக் கவர்கின்றது என்றும் குருநாதர் காண்பித்தார்.

இதன் நிலைகளைக் காண்பதற்காக, யாம் இரண்டு மூன்று மாதமாக அங்கேயே தங்கியிருந்தோம். புவியில் விழுந்த உணர்வின் அணுக்கள், மின்னலின் ஒளிக்கறைகளை எப்படி ஈர்க்கின்றது என்றும், ஒரு விதையை நிலத்தில் ஊன்றியவுடனே, அதன் உணர்வுகள் எப்படி இருக்கின்றது, என்றும் குருநாதர் உணர்த்தினார். இதை தான் வேதங்கள் கூறுகின்றது.

அதாவது, புலியின் உடல் “ரிக்”,
அதிலிருந்து வரக்கூடிய மணம், “சாம இசை.
கொடூரமான உணர்வுகள் வரும் பொழுது, சாந்தமான செடியின் தன்மை இதைக் கண்டு, அஞ்சி ஒடுகின்றது. ஓடும் பாதையில், ஒரு விஷச் செடியின் மணத்தில் மோதியவுடனே, அங்கே மூன்றும் சுழல்கின்றன.

சுழற்சியின் மோதலில், மூன்றும் ஒன்றாகச் சேர்கின்றன. இந்த மோதலின் இணைப்பில், புலியினுடைய வீரியத் தன்மையும், விஷ செடியின் வீரியத் தன்மையும், சாந்தமான செடியின் வீரியத்தன்மையும் மறைந்து விடுகின்றன, அதர்வண”.

அதன் மூன்று குணங்களும் மாறிப் போகின்றது. இந்த மூன்றும் ஒன்றாகச் சேர்த்து, புதுவிதமான வித்தாக கருவாகின்றது,  “யஜூர்”.

 வித்தான நிலையில், மின்னலின் ஒளிக்கற்றைகள் தாக்கப்படும் பொழுது, உணர்ச்சியால் இயக்க அணுவாக மாறி, புதுப்புது செடி கொடிகள் உருவாகின்றது, என்பதனை உணர்த்தினார் குருநாதர்.

இரண்டு, மூன்று மாதங்களாக அங்கேயே தங்கியிருந்து, சிறு சிறு செடிகளாக வரும் வரை பார்த்திருந்தோம். பிறகு, குருநாதர் நாம் வேறு இடத்திற்குப் போய் வரலாம் என்று கூப்பிட்டுப் போனார். வேறு பகுதிகளுக்குச் சென்றுவிட்டு, திருப்பி, ஆறு மாதம் கழித்து வந்து பார்த்தால், இது கொடியாக வளர்ந்திருக்கின்றது.

அந்த கொடிக்கருகில் எம்மை உட்காரச் சொல்லி, ஒரு கத்தியை கையில் கொடுத்து விட்டார் குருநாதர். அந்தக் கத்தியைக் கையில் வைத்துக் கொண்டு,  அந்த கொடிக்கருகில் அமர்ந்தேன்.

அமர்ந்தவுடனே, அந்தக் கொடியின் ஒரு கிளை எம்மை நோக்கி நகர்ந்து வந்தது. நகர்ந்து வந்து எமது உடலில் பட்டவுடனே, “கரண்ட் ஷாக்” அடித்தமாதிரி இருந்தது.

உடனே, “அந்த கொடியைக், கத்தியை வைத்து வெட்டு” என்று குருநாதர் கூறினார்.

குருநாதர் சொல்லியபடி, அந்தக் கொடியை வெட்டினோம். வெட்ட, வெட்ட மீண்டும் நெருங்கி வந்தது. மீண்டும் நெருங்க முடியாத அளவிற்கு வெட்டியவுடனே, விட்டு விட்டது. ஆக, அந்தக் கொடி இரத்தத்தை, இரத்தம் கொண்ட உயிரினத்தை எப்படி உணர்கின்றது, என்பதை குருநாதர் அங்கே தெளிவாக விளக்கினார்.

இதே போன்று, சில இடங்களில் சில உணர்வுகள், சுழற்சியில் மற்ற செடிகளின் உணர்வுகளுடன் இணைந்து, புதுவித செடியாகின்றது. அதில் இரத்தம் உள்ள குருவியோ, அல்லது மற்ற உயிரனங்களோ உட்கார்ந்தால் அப்படியே “டப்” என்று மூடிக்கொள்கின்றது. மூடிக் கொண்டவுடன், அந்த உயிரினத்தின் இரத்தம் முழுவதையும் உறிஞ்சுகின்றது. சிக்கிய உயிரினம் இறந்தபின், அதனுடைய உடலை விட்டுவிடுகின்றது.

இது போன்றுதான், இயற்கையின் உணர்வுகளுக்கொப்ப ஒவ்வொன்றும் எப்படி இயங்குகின்றன? எப்படி இயக்குகின்றன? எப்படி விளைகின்றன? என்பதை குருநாதர் எமக்கு அனுபவபூர்வமாக உணர்த்தினார். 

குருநாதர் உணர்த்திய அருள் வழியில், யாம் இயற்கையின் இயக்க பேருண்மைகளையும், அருளுணர்வுகளையும் உங்களிடம் பதிவு செய்கின்றோம்.

குருநாதர் உணர்த்திய அருள் வழியில், தங்களிடம் அருளுணர்வுகளை வளர்த்து வரும் அன்பர்கள் அனைவரும், துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற்று, தங்களிடத்தில் அறியாது சேர்ந்த தீயவினைகளை வென்று, புதிதாக தீய வினைகள் எதுவும் தங்களிடத்தில் வராது காத்து, இந்த வாழ்க்கையில் எல்லா நலமும் வளமும் பெற்று, தெளிந்த ஞானமும், மகிழ்ந்து வாழ்ந்திடும் அருள் சக்தியும் பெற்று, இந்த வாழ்க்கையில் பிறவியில்லா நிலை பெறும் நிலையாக, அழியா ஒளி சரீரம் பெறும் நிலையாக, பேரின்ப பெருவாழ்வாக வாழ்ந்து வளர்ந்திட எமது அருளாசிகள்.
உயிரே கடவுள் – மெய்ஞான மாத இதழ்  
செப்டம்பர் 2002
இப்பொழுது ஊரில் ஆட்டை அறுக்கின்றார்கள். ஆட்டை அறுப்பவர்கள் ஆட்டினை ஈகையுடனா பார்க்கின்றார்கள்அதைக் கொல்லவேண்டும் என்ற உணர்வுடன் பார்க்கின்றார்கள். கறிக்கடைக்குச் சென்று கறி வாங்கச் செல்கின்றவர்கள் கடைக்காரர் ஆட்டை அறுப்பதைப் பார்த்தால்கறி வாங்கச் சென்றவர்களுக்கு எச்சில் ஊறிக் கொண்டே இருக்கும்.

ஆடு அறுக்கப்பட்டு, ஆட்டின் கறி தமது கைக்கு வருவதற்கு முன்னால்ஆடு அறுக்கப்படுவதை ரசித்து வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பார்கள். ஆனால்இப்படி ஆடு அறுக்கப்படுவதை வேடிக்கை பார்க்கப்படும் பொழுது என்ன நடக்கின்றது என்பதை நேரடியாக,   அனுபவப் பூர்வமாகக் காண்பித்தார் குருநாதர். 

கறி சாப்பிடுகின்ற ஆர்வத்தில்ஆடு அறுக்கப்படுவதை வேடிக்கை பார்த்து, இரசித்துக் கொண்டிருப்பார்கள். அறுக்கப்படும் ஆடோகத்திக் கொண்டிருக்கும். ஆடு அறுக்கின்றவரைப் பார்த்தவுடனேஅவனை ஏங்கி, "இந்த மாதிரிக் கொல்கின்றானே" என்ற உணர்வோடு வேதனைப்படுகின்றது. 

கடைக்காரரோ, ஆட்டை வேதனைப்படுத்திக் கொன்றுதான் காசு சம்பாதிக்க வேண்டும் என்றிருக்கும் பொழுதுஇதனின் உணர்வுகள் அவருக்குள் கவர்ந்தபின்இந்த ஆன்மா, அடுத்தவரின் உடலில் எப்படிச் செல்கின்றது என்பதனைக்  காண்பித்தார் குருநாதர்.

அதே சமயத்தில்ஆட்டுக் கறி வாங்கப் போன இடத்தில், ஆட்டின் இரத்தத்தை வாங்குவதற்காக நின்று கொண்டிருப்பார்கள். ஆட்டை அறுப்பதை இரசித்துக் கொண்டு,இரத்தம் எப்பொழுது கொடுப்பார்கள் என்று காத்திருப்பார்கள். ஆட்டை அறுத்து முடித்தவுடனே, இரத்தத்தைத் 'தான் தான்' முதலில் வாங்க வேண்டும் என்று காத்திருப்பார்கள். 

ஆட்டை அறுக்கும் பொழுது
ஆட்டினிடத்தில் உருவான வேதனையை  
நாம் இரசித்து பார்க்கும் பொழுது
நுகர்ந்த வேதனையின் உணர்வுகள் நமது உயிரில் பட்டு,
நம்முள் உமிழ்நீராக மாறிநமது சிறுகுடலில் கலக்கின்றது.
நுகர்ந்த வேதனையின்  உணர்வுகள் உமிழ்நீராக மாறினாலும்,
அந்த உமிழ்நீருடன், இயக்க அணுக்கள் கலந்து,
இரத்தமாக மாறும் பொழுது,
இயக்க அணு, "ஜீவ அணுவாக" மாறுகின்றது.

ஆடு எத்தகைய வேதனைகளை அனுபவித்ததோ, அந்த வேதனையின் உணர்ச்சியின் அணுக்கள் உடல் முழுவதும் படர்கின்றது. அந்த உறுப்புகளில், எந்த வேதனை வருகின்றது என்பதைச் சுட்டிக் காண்பித்தார் குருநாதர் 

நாம் புழுவிலிருந்து மனிதராக வரும் வரையிலும்கொடுமைகளில் இருந்து தப்ப வேண்டும் என்ற உணர்வின் வலிமைகளை சேர்த்துசேர்த்து பரிணாம வளர்ச்சி அடைந்து வந்தோம்  என்பதைப் பார்த்தோம்.

இப்போது மனிதரானபின்இரக்கமற்ற நிலைகளில் ஆட்டைக் கொல்லும் பொழுதுஅப்படிக் கொன்று  ஆட்டின் உயிரான்மா வெளிவரும் பொழுது, கொன்றவரின் உடலிலோ, அல்லது கொல்லத் தூண்டியவரின் உடலிலோ, ஆட்டின் உயிரான்மா இணைந்து விடுகின்றது.

ஏனென்றால்ஆட்டினுடைய எண்ணங்கள் இன்னார்தான் நம்மைக் கொல்லச்  சொல்லித் தூண்டினர்  என்றும்இவர் தான் நம்மைக் கொன்றார்  என்றும் அந்த உணர்வுகள் அங்கே வந்துஅவருடைய உடலுக்குள் ஆட்டின் உயிரான்மா புகுந்து விடுகின்றது. 

ஆனால்ஆட்டைக் கொன்றவரிடத்தில் இரக்கம் ஈகை சிறிதும் இல்லை. ஆகவே, அவரிடத்தில் இரக்கமற்றுக் கொல்லும் உணர்வின் வலிமை அதிகமாகின்றது. அந்த மனிதரிடத்தில் பரிவுபண்பு என்பதுதுளியும் இல்லை.

ஆனால்இத்தகைய நிலை வரும் பொழுது, இந்த மனித உடலில்முதுமைக் காலத்தில்மிருக உணர்வின் தன்மையே மிஞ்சும். மனித உடலின் உணர்வுகள் அனைத்தும் அழுகிவிடும். பின்மனித உடலை விட்டு பிரியும் உயிரான்மா மிருகப் பிறவிக்கே போகின்றது.



நுகர்ந்த உணர்வுக்கொப்ப, இன்று மனிதராக இருக்கின்றார்நாளை மனிதரல்லாத நிலைகளில் எப்படிச் சேர்கின்றார் என்பதனையும் இது காண்பிக்கின்றது.

அனுபவப்பூர்வமாக இதை தெரிந்து, நீ வேடிக்கை பார்க்கின்றாய். நுகர்ந்த உணர்வு உமிழ்நீராக மாறுகின்றது. உமிழ்நீர் ஆகாரத்துடன் கலந்து, சிறு குடலில் கலந்த பின்அந்த சிறு குடலின் அணுக்கள் எப்படி இயக்கமாகின்றது.

பின்பெருங்குடலுக்கு போகும்பொழுது,வேதனையுணர்வுகள் ஆகாரத்தை ஜீரணிக்க மறுக்கின்றது. நாம் சத்துள்ள ஆகாரங்களைச் சாப்பிட்டாலும்ஜீரணிக்க முடியாத நிலை எப்படி ஆகின்றது?

 பின்ஆகாரம் இரத்தமாக மாறிகல்லீரல் மண்ணீரலுக்கு வந்து சேரும் பொழுதுஇரத்தத்துடன் எப்படி ஜீவ அணுக்களாக மாற்றுகின்றது?
முதலில் இயக்க அணுவாக இருக்கின்றது. உடலுக்குள் போனவுடன் ஜீவ அணுவாக மாறுவதும், அதனுடைய மலம் உடலில் சேரும் பொழுது நல்ல அணுக்களால் உருவாக்கப்பட்ட மலங்களில் பட்டபின்அது நல்ல அணுக்களின் தசைகளைஉறுப்புகளை எப்படிக் குறைக்கின்றது? என்பதைக் காண்பித்தார் குருநாதர். 

உடலில் சிறிய புண்ணாக உருவாக்கி சீழ் பிடித்ததென்றால், வட்டமாக அப்படியே கரைத்துக் கொண்டே போகும். அப்போது வேதனை உணர்வால் விளைந்த அணுக்கள், தசைகளை கரைத்து சீழாக மாற்றுகின்றது என்பதனையும்நமது உடலின் உறுப்புகள் தேய்ந்து, மறுபடியும் நம்முள் விஷத்தன்மைகள் எப்படி வளர்ச்சி அடைகின்றது, என்பதனையும் குருநாதர் அங்கே அனுபபூர்வமாக அறிய செய்தார்.

ஏனென்றால்எத்தனயோ கோடி உடல்களை கடந்து மனிதராக பிறந்த பின்இரக்கமற்ற செயல்கள் செய்துமற்றவர்களை துன்புறுத்தி வாழ்கின்றார் என்ற நிலையும் பார்க்கின்றோம்.



இதைப் போன்றுதெய்வங்களின் பெயரைச் சொல்லிஒன்றுமறியாத ஜீவன்களை பலியிட்டு, எனக்குச் சுகம் வேண்டும் என்று வேண்டி, பிழைகள் செய்து வாழ்ந்து கொண்டிருக்கின்ற நிலையும் பார்க்கின்றோம்.

ஆகவே, இது போன்ற பிழைகளைச் செய்து, தம்முள் தீமைகளையும்விஷத்தையும் வளர்க்கும் நிலையைத் தவிர்த்துநம்முள் அருள் ஞானிகளின்  அருள் உணர்வுகளை வளர்த்தோம் என்றால்நம்முள் அறியாது சேர்த்த இருளை அகற்ற முடியும். தீமைகள் வராது காக்க  முடியும்.

ஆகவேஅருள் ஞானிகள் காண்பித்த அருள் வழியில்தம்முள் அருள் உணர்வுகளை வளர்த்து வரும் அன்பர்கள் அனைவரும், துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை பெற்றுஉயிரைப் போன்றே உயிரில் ஒன்றும் உணர்வுகள்  அனைத்தையும், ஒளியாக உருவாக்கும் நிலை பெற்று, துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியால் இந்த வாழ்க்கையில் உடல் நலம்உடல் பலம்மன நலம்மன பலம்மன வளம்செல்வம்,செல்வாக்குசொல்வாக்கு பெற்றுதொழில் வளம் பெருகிஇந்த பிறவியில் பெருவீடு பெரு நிலை பெறும் நிலையாக, என்றும் பதினாறு என்ற  அழியா ஒளி சரீரம் பெறும் நிலையாக,பேரின்ப பெருவாழ்வாக  வாழ்ந்து வளர்ந்திடஎமது அருளாசிகள்.

நமது மனம் எப்பொழுதும் சந்தோசமாக இருந்து கொண்டிருக்கும் பொழுதுநாம் சிறிதளவு உணவு உட்கொண்டாலும்உடல் செழிப்பாக ஆரோக்கியமாக இருக்கும். ஆனால், நமது மனம் வேதனையாலும்அழுத்தத்தாலும் நிறைந்திருக்கும் பொழுதுநாம் எவ்வளவு உணவு உட்கொண்டாலும்உடல் செழிப்பதில்லை. உடல்இளைத்தே காணப்படும். இதன் வழியில்நாம் உணர்வின் இயக்கத்தை அறியலாம்.

ஆனால்நாம் அருள் ஞானிகளின் அருளுணர்வுகளை நம்முள் நிறைத்தால்நம்மிடத்தில் அறியாது சேர்த்த, தீமைகள், பாவங்கள் அகலும்.

இமய மலையில் தவம் இருந்தால்ஈஸ்வரனைக் காணலாம் என்பார்கள்.  இரண்டு இமைகளுக்கு மத்தியில் உள்ள உயிரான ஈஸ்வரனை எண்ணி, தியானம் செய்ய வேண்டும் என்பதற்கே, இவ்வாறு உணர்த்தினார்கள மெய்ஞானிகள்.
உயிரே கடவுள்  மெய்ஞான மாத இதழ் 
ஆகஸ்ட் 2002 
உடலின் இயக்க உணர்வுக்கொப்ப, உயிரினம் ஒன்று தன் வழியில் வாழ்ந்து, அது தனக்குள் சேர்த்துக் கொண்ட உணர்வின் தன்மையின் வலுவானது, “இது நல்லது, இது கெட்டது” என்று உணர்வதற்கு உதவுகின்றது. அதனால், இந்தக் கண் எதன் உணர்வு கொண்டதோ, அதன் பிறகுதான் வளர்ச்சி அடைகின்றது.

ஆமையின் உயிரான்மா, நரியின் உடலுக்குள் போகும் பொழுது, நரியின் வியூகத்தைத் தகர்த்து. “நீ அதனுள் சென்று நீ அதுவாகு” என்று ஆமையின் உயிரில் சேர்ந்த உணர்வு, நரியின் ஈர்ப்பிற்குள் அழைத்துச் செல்கின்றது என்று நமக்கெல்லாம் புரியும்படி சொல்கின்றார்கள். நாம் புரிந்து கொண்டோமா? என்றால் இல்லை.

வியூகம் என்றால் நரியின் வியூகம். நீ அதனுடைய சுவாசத்திற்குள் சென்று, கவர்ந்த உணர்வை வளரச்செய், என்று,  இந்த சட்டையை (ஆமையின் உடலை) கழற்றிவிட்டு, புதிதாக உருவாக்குகின்றது.
உடல் தான் மாறுகின்றது,
உணர்வுகள் வளர்கின்றன, 
வளர்கின்ற உனக்கு இறப்பில்லை.

எத்தனையோ உடல்களுக்குப் பின், மனிதராகப் பிறக்கின்றோம். ஒரு பாம்பு கடித்துவிட்டால், உடலில் விஷம் ஏறுகின்றது. விஷம் தோய்ந்த பின், மனித நினைவு இழந்து விடுகின்றது. இறக்கும் தருவாயில், “பாம்பு என்னைத் தீண்டிவிட்டதே” என்று எண்ணினால், உடலை விட்டுப் பிரியும் உயிரான்மா என்ன செய்யும். பாம்பின் ஈர்ப்பிற்குத்தான் செல்லும்.

மனிதரின் உயிரான்மா பாம்பின் ஈர்ப்பிற்குள் சென்று, பாம்பின் வியூகத்தைத் தகர்த்து, பாம்பின் உடலுக்குள் சென்றுவிடும். அதன் பிறகு, தன் விஷத்தைப் பாய்ச்சி, தன் உடலை வளர்க்கும் தன்மை வரும். பாம்பு தன் விஷத்தைப் பாய்ச்சித் தான் தன் உணவை எடுக்கின்றது.

இப்படி, பரிணாம வளர்ச்சியில் ஆமையாக இருந்தது, நரியின் ஈர்ப்பிற்குள் சென்று, நரிக்குக் குட்டியாகப் பிறக்கின்றது. குட்டியாகப் பிறக்கும் பொழுது, தருமன்.

தருமன் எல்லாவற்றிற்கும் தலைமை தாங்கும். எத்தனை வந்தாலும் உள்ளுக்குள் சேர்த்துக் கொள்கின்றார். திட்டுவது, போவது, வருவது என்று எல்லாவற்றையும் ஏற்றுக் கொள்கின்றார். இத்தகைய உணர்வுகள் வந்த பிற்பாடு என்ன செய்கின்றது? தன்னைப் பாதுகாக்கத் தான் செயல்படுகின்றது.

காவியத்தில் தருமர் என்ன செய்கின்றார்? சூதாடுகின்றார், சூதாட்டத்தில் தோற்றுப் போகின்றார். அதாவது, நமக்கு, “ஒன்றைப் பெறவேண்டும்” என்ற ஆசை வருகின்றது. ஆசையைக் கூட்டினால், அதில் சிக்குகின்றோம்.



சூதாட்டத்தில் சொத்தெல்லாம் இழந்த பின், வேதனை வருகின்றது. அதே சமயத்தில் ஒவ்வொன்றும் தன் பிழைப்பிற்காக வேண்டிப் போகின்றது.


எதிரிகள் வராது, அதன் வலுவைச் சேர்க்கின்றது. இப்படி, ஒவ்வொரு உடலிலும், சூதாட்டம் நடந்து கொண்டுதான் இருக்கின்றது.

 நரியானாலும், புலியானாலும் ஏமாற்றித் தான், மற்றொரு உயிரினத்தை அடிக்கின்றது. வீட்டில் உள்ள பூனை என்ன செய்கின்றது? எலியைத் துரத்துகின்றது. எலி, ஒரு பொந்துக்குள் போய் ஒளிந்து கொள்கின்றது. பிறகு, பூனை போய்விட்டதா? இல்லையா? என்று பார்க்கின்றது.

ஆனால், பூனை எலி வரும் வரையிலும், அமைதியாகக் காத்திருந்து, எலி வெளியே வந்ததும் “லபக்” கென்று பிடித்துச் செல்கின்றது. இது போன்று, ஒவ்வொரு நிலையிலும் சூது நடந்து கொண்டுதான் இருக்கின்றது.

உதாரணமாக, கருடன் கடலுக்கு மேல் பறந்து கொண்டிருக்கும். கடல் நீருக்குள் மீன் இருக்கும். மீன் கடலுக்கடியில், உள்ளிருந்து மேலே நீர் மட்டத்திற்கு வருவதற்கு முன்னால், கருடன், மீனின் மணத்தை நுகர்ந்தறிந்து, அந்த மீனை “லபக்”கென்று கவ்விக் கொண்டு செல்கின்றது.

மீன் தண்ணீருக்குள் இருக்கின்றது. மீனின் உணர்வின் மணத்தை நுகர்ந்தவுடனே, சடாரென்று பாய்ந்து, மீனைப் பிடித்து செல்கின்றது. ஆனால், நாமோ கடலுக்குள் போனாலும், மீனைப் பிடிக்க முடிவதில்லை. ஆக, கருடனின் உணர்வுகள் எப்படி இருக்கும்?

இது போன்றுதான், நமது உணர்வின் இயக்கங்கள். எதன் வலிமையைச் சேர்த்ததோ, அதன் வலுவைப் பெருக்க உதவி செய்கின்றது. இதெல்லாம் நாம் புரிந்து கொள்ள வேண்டும். 

உதாரணமாக, மான், புலியைப் பார்க்கின்றது. புலியோ மானைத் துரத்துகின்றது. மான், “தீமையிலிருந்து தான் தப்ப வேண்டும்” என்று புலியின் வலுவான உணர்வை நுகர்கின்றது.

புலியின் தாக்குதலில் மானின் தசைகள் புலிக்கு இரையானாலும், மானின் உயிரான்மா புலியின் ஈர்ப்பிற்குள் சென்று, புலியின் உணர்வைக் கவர்ந்து, வளர்ந்து, புலியின் ரூபமாக, புலிக்குக் குட்டியாகப் பிறக்க நேருகின்றது. இது சந்தர்ப்பம்.

இப்படி, “தீமையிலிருந்து தப்ப வேண்டும்” என்ற உணர்வுகளை எடுத்து, எடுத்து, பரிணாம வளர்ச்சியில் தீமைகளை வென்றிடும் ஆறாவது அறிவு கொண்ட மனிதனாக உருவாக்கியது, நமது உயிர்.

கண்களால் பார்த்துத் தான், உணர்ச்சியின் தன்மையை வளர்க்கின்றது. ஆகையால், கண்ணன் பிரம்மத்தைச் சேர்ந்தவன் என்று கூறுகின்றனர். 

நீங்கள் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியைப் பெறவேண்டுமென்று, கண்ணின் நினைவைப் புருவ மத்தியில் செலுத்தி, எண்ணிப் பாருங்கள். அந்தப் பேரருள் உணர்வை, உங்களுடைய கண் உங்களிடத்தில் உருவாக்கும்.

ஆகவே, ஞானிகள் காண்பித்த அருள் வழியில், தம்முள் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை பெருக்கி, தீமைகள் தம்முள் வராது காத்து, பேரின்ப உணர்வுகளை வளர்த்து வரும் அன்பர்கள் அனைவரும், என்றும் பதினாறு என்ற பெருவீடு பெரு நிலை பெறும் நிலையாக, அழியா ஒளி சரீரம் பெறும் நிலையாக வாழ்ந்து வளர்ந்திட, எமது அருளாசிகள்.
உயிரே கடவுள் – மெய்ஞான மாத இதழ்  
ஆகஸ்ட் 2002  
வேதனைப்படும் ஒருவரை நாம் பரிவோடு பார்க்கும் பொழுது, அதனின் உணர்வுகள் மாறி, நமக்குள்  வந்து, அதே வேதனையை உருவாக்கி, தாயாக, நோயாக, நம்முள் விளைந்துவிடுகின்றது. இதை நமக்கு உணர்த்துவதற்கே, “மாரியம்மாள்” என்று காரணப்பெயர் வைத்தனர் ஞானிகள்.
மாரியம்மன் கோவிலுக்கு முன்னால்,
“அக்னி குண்டம்” வைத்திருப்பார்கள். அதற்குக் காரணம்,
நமது உயிர் ஒரு நெருப்பு, அந்த நெருப்பில்,
நம்மிடத்தில் அறியாது சேர்ந்த தீமைகளைப் போட்டு
சுட்டுப் பொசுக்க வேண்டும் என்பதே
ஞானிகள் உரைத்த உண்மையாகும்.

நம்மிடத்தில் அறியாது சேர்ந்த தீய வினைகள், பாவ வினைகள், சாப வினைகள் போன்ற தோஷங்களுக்கே, “பிரதோஷம்” என்று பெயரிட்டனர் ஞானிகள்.

நம்மிடத்தில் அறியாது சேர்ந்த பிற தோஷங்களை, அருள் ஞானிகளின் அருள் உணர்வின் துணை கொண்டு, அகற்றிடல் வேண்டும்.

ஒவ்வொரு உயிரினமும் தனது கண்களைக் கொண்டு, ஒவ்வொன்றையும் உற்றுப் பார்த்து, நுகர்ந்த உணர்வுக்கொப்ப அதனதன் வழிகளில் தன்னை வளர்த்துக் கொள்கின்றன. இதனை, நம்மைப் போன்ற சாதாரண மனிதர்கள் உணர்ந்து கொள்வதற்காக, ஆமையை உதாரணமாகக் காண்பித்து, நமக்கு உணர்த்துகின்றனர் ஞானிகள்.

ஆமை என்ன செய்கின்றது? தனது தலையை, ஓட்டிற்கு வெளியே நீட்டி தனது இரையை, புல்லைப் பார்த்தவுடனே மேய்கின்றது. அடுத்தாற் போன்று, இந்த ஆமையை ஒரு நரி பார்க்கின்றது.

நரியானது, இந்த ஆமையைச் சாப்பிடும் உணர்வுடன் நெருங்கும் பொழுது, ஆமை தனது தலையை, லபக்கென்று தனது ஓட்டிற்குள் இழுத்துக் கொள்கின்றது. நாம், உயிரின பரிணாம வளர்ச்சியைப் பற்றித் தெரிந்து கொள்வதற்காக உருவங்களைப் போட்டு, எவ்வளவு தெளிவாகக் கொடுக்கின்றனர் ஞானிகள்.

ஆமை, நரியின் கண்களை உற்றுப் பார்க்கின்றது. நரியின் வலுவைக் கண்டவுடனே, ஆமை தன் தலையை ஓட்டினுள் இழுத்துக் கொள்கின்றது. மீண்டும் தலையை வெளியே நீட்டி, நரி போய்விட்டதா? இல்லையா? என்று கூர்மையாகப் பார்க்கின்றது. இப்பொழுது, ஆமை தன் இரையை எடுக்க முடியவில்லை. ஏனென்றால், எதிரே நரி இருக்கின்றது.

ஆமை நரியைப் பார்த்த பின், ஆமையின் கண், நரியின் வலுவை உணர்த்துகின்றது. ஆகவே, ஆமை நரியிடம் இருந்து தப்பிக்க, தன் தலையை ஓட்டினுள் இழுத்துக் கொள்கின்றது. மறுபடியும் தலையை வெளியே நீட்டி, நரி போய்விட்டதா இல்லையா என்று பார்க்கின்றது.

சூரியனிலிருந்து வரக்கூடிய, வெப்பம், காந்தம், விஷம், நரியிடம் இருந்து வெளிப்படும் வலுவான உணர்வைச் சேர்த்துக் கொண்டால், பரப்பிரம்மம். அதனின் உணர்வின் மணமாக வரும் பொழுது, ஞானம் சரஸ்வதி, புலனறிவு ஐந்து. சரஸ்வதி எனும் பொழுது, நரி ஆமையைக் கொன்று தின்ன வேண்டும் என்ற உணர்வை வெளிப்படுத்துகின்றது.

நரி வலுவானது. நரியிடம் இருந்து வெளிப்படும் உணர்வின் தன்மையை, ஆமை உற்றுப் பார்த்த பின், நரியின் உணர்வுகளை, ஆமை நுகர்கின்றது.

நரியின் உணர்வுகள் ஆமையின் உயிரில் மோதுகின்றது. ஆமைக்கு உயிர் குரு. ஆக, ஆமையின் குருஷேத்திரத்தில், நரியின் உணர்வுகள் மோதுகின்றது. மோதலில், ஆமையினிடத்தில் போர் நடைபெறுகின்றது.

அதாவது, ஆமையைக் காத்து வந்த உணர்வுக்குள், எதிர் அலைகளின் மோதலால் கலக்கம் ஏற்படுகின்றது. ஏனென்றால், ஆமைக்கு நல்ல ஆகாரம் (நல்ல உணர்வுகள்) போகவில்லையல்லவா.

எதிர் நிலையான உணர்வுகள் வரும் பொழுது, ஆமையினிடத்தில் “இதிலிருந்து தப்ப வேண்டும்” என்ற உணர்வுகளை ஊட்டுகின்றது.

“தப்ப வேண்டும் என்ற உணர்வுகள்” வரும் பொழுது, ஆமை தன் தலையை உள்ளே இழுத்துக் கொள்கின்றது. அதன் பிறகு, நரி போய்விட்டதா? என்று தான் நினைக்கும். நுகர்ந்த உணர்வுகள் ஆமையின் இரத்தத்தில் கலக்கின்றது, “அர்ச்சுனன்”, ஏனென்றால்,
நுகர்ந்த உணர்வுகள், ஆமையின் உடலில்,
வெப்பம், காந்தம், விஷம், என்ற நிலைகளில்
இயக்க அணுவாக மாறிவிடுகின்றது.
உணர்வின் சத்து, ஜீவ அணுவாக மாறுகின்றது.
பரப்பிரம்மமாகின்றது,
நுகர்ந்த சத்தின் மணத்தின் தன்மை கொண்டு, அங்கே இயக்குகின்றது.

அர்ச்சுனன், குறி வைத்துத் தாக்குகின்றான். நரியின் வலிமையான உணர்வுகள், சாந்தமான ஆமைக்குள் ஊடுருவி, நரியின் வலிமையை ஆமையினிடத்தில் கொண்டு சேர்த்து, அங்கே நரியின் வலுவை உணர்த்துகின்றது.

அதே சமயத்தில், நரியின் உணர்வுகள் ஆமையின் அணுக்களுக்குள் போனவுடனே நாம் வலி வந்தால், ஐயோ.. அம்மா… என்று துடிக்கின்றோம் அல்லவா. நரம்பெல்லாம் வீங்குகின்றதல்லவா. இதைப் போன்ற உணர்வுகள், ஆமையினிடத்தில் உருவாகும் பொழுது,நகுலன்.

ஆக, நுகர்ந்த உணர்வுக்கொப்ப அணுத்தன்மை மாறுகின்றது. அந்த அணுக்களில் உள்ள காந்தம் சகாதேவன். இழுத்து, அதனுடன் இணைய வைக்கின்றது, சகாதேவன்.

ஆக, சாந்தமான ஆமையின் உணர்வுக்குள், நரியின் வலுவான உணர்வுகளை, இழுத்து இணைய வைத்த பின், நரியின் வலுவான உணர்வுகள் பீமன். ஆமையினிடத்திலுள்ள குணங்களை எல்லாம் அடித்து நொறுக்கி, தன் வசத்திற்குக் கொண்டு வந்துவிடுகின்றது.

அதே சமயத்தில், நரி, ஆமையைக் கொல்ல முடியவில்லை. மேலே ஓடு தான் இருக்கின்றது. நரிக்கு, இந்த ஆமை இரையாகக் கிடைக்கவில்லை என்றாலும், மற்ற உயிரினங்களை வேட்டையாடி, தனது உணவாக எடுத்துக் கொள்கின்றது.

ஆமை, உணவாக எடுப்பது இலை, தழைகளை. ஆனால், ஆமைக்கு இப்போது இரை இல்லை. ஆமை தன் தலையை நீட்டினால், நரி தன்னை கொன்றுவிடும் எனும் உணர்வால், இரை எடுக்க முடியவில்லை. 

ஆமைக்கு இரை இல்லை எனும் பொழுது, ஆமையின் உடலை விட்டு உயிர் வெளியே செல்கின்றது. எந்தக் "கண்" நரியைக் காண்பித்ததோ, அந்த வலுவான இடத்திற்கு (நரியின் உடலுக்குள்) ஆமையின் உடலை விட்டுப் பிரியும் உயிர் செல்கின்றது.

கண்ணன், அர்ச்சுனனுக்குச் சாரதியாகச் செல்கின்றான். ஏனென்றால், நரியின் உணர்வு வலுவானது. இதுதான் அர்ச்சுனன். குறி வைத்துத் தாக்கக்கூடியவன். குறி தவறவே தவறாது. ஏனென்றால், நரியின் உணர்வுகள் ஆமைக்குள் ஊடுருவிப் பதிந்துள்ளது.

ஆமையினிடத்தில், உணர்ச்சிகள் வலிமையான நிலைகளில் உணர்வுகள் நகுலனாக மாறுகின்றது.

காந்தம் சகாதேவன். அதனுடன் இணைத்து விடுகின்றது.

இணைத்துக் கொண்டபின், பீமனாக மாறிவிடுகின்றது. ஆமைக்குள் நரியின் உணர்வுகள், ஆமையின் குணங்களை அடித்து நொறுக்கி, தன் வசத்திற்கு கொண்டுக் வருகின்றது.

கண்ணன், அர்ச்சுனனுக்குச் சாரதியாக செல்கின்றான். மகாபாரத யுத்தத்தை நடத்துவது யார்? கண்ணன். ஒரு உடலுக்குள் எதிர் நிலையான உணர்வுகள் வந்தால், குருஷேத்திரப் போர். ஒவ்வொரு குடும்பத்திலும், ஒவ்வொரு உடலிலும், எத்தனை விதமான கலக்கம், எத்தனை போர்கள் நடந்து கொண்டிருக்கின்றது? உங்களால் மறுக்க முடியுமா? 

அர்ச்சுனன், கண் எனும் சாரதியால் எதைப் பார்த்ததோ, அந்த உணர்வின் அலைகள் உடலில் இருக்கின்றது. ஒன்றைக் கூர்மையாகப் பார்த்தவுடனே, அதன் வலிமையை கொண்டு வருகின்றது.

ஆகவே, இந்த வாழ்க்கையில் நாம், நமது குருநாதர் காட்டிய அருள் வழியில், துருவ நட்சத்திரத்திலிருந்து வரும் பேரருள் பேரொளியை கூர்மையாக உற்று நோக்கி, அதனின் உணர்ச்சியாக, அதை நமக்குள் ஊழ்வினை என்ற வித்தாக, நம் விலா எலும்புகளுக்குள் பதிவாக்கி, அந்த அருள் உணர்வுகளை நமது உடலில் உள்ள எல்லா அணுக்களுக்குள்ளும் இணையச் செய்து, தொடர்ந்து வலுவாக்கினோம் என்றால், நமது உயிர், அந்த துருவ நட்சத்திர ஈர்ப்பு வட்ட எல்லைக்கு, நம்மை அழைத்துச் செல்லும். எமது அருளாசிகள். 
உயிரே கடவுள் – மெய்ஞான மாத இதழ்  
ஜூலை 2002
குருநாதர் செய்வினைகளைப் பற்றியும், தோஷங்களைப் பற்றியும் கூறி வந்தார். அது சமயம், குருநாதர் ஒரு பிச்சைக்காரரைக் காண்பித்தார். அந்தப் பிச்சைக்காரர் காலை நொண்டிக் கொண்டு, குச்சியை ஊன்றிக் கொண்டு நடந்து வந்தார்.

அவர் ஒரு பத்து அடி நடப்பதற்கு, 15 நிமிடமாவது எடுத்துக் கொண்டார். உணவு பெறுவதற்காக, ஒரு டப்பாவை கையில் வைத்துக் கொண்டு, அல்லாடிக் கொண்டு வந்தார். அவர், காலையிலிருந்து மாலை வரை அலைவார். கடைகளில் கொடுத்த உணவை, அள்ளிச் சாப்பிடுவதற்குச் சிரமப்படுவார். யாம், அவரை அடிக்கடி சாலைகளில் பார்த்திருக்கின்றோம்.

பிச்சைக்காரர் நடந்து வருவதை சிறிது தூரத்திலிருந்து, குருநாதரும் யாமும் கவனித்துக் கொண்டிருந்தோம். குருநாதர் அவரைக் காண்பித்து, “திருடன் வருகின்றான் பார், திருடன் வருகின்றான் பார்” என்று கூறினார்.

“எங்கே சாமி வருகின்றார்?” என்று யாம் கேட்டோம்.

“இதோ வருகின்றான் பார்” என்று பிச்சைக்காரரைச் சுட்டிக் காண்பித்தார் குருநாதர்.

குருநாதர் சொல்லி, பிச்சைக்காரர் எங்கள் பக்கத்தில் வருவதற்கு அரை மணி நேரம் ஆகிவிட்டது. இவ்வாறு அந்த பிச்சைக்காரர் எங்கள் அருகில் வந்ததும், அவர் கையில் இருந்த கம்பைப் பிடுங்கிக் கொண்டு, பிச்சைக்காரரை அங்கே உட்கார வைத்துவிட்டார் குருநாதர்.

குருநாதர் அவரின் கையிலிருந்த தடியை எடுத்துக் கொண்ட பின், எம்மைப் பார்த்து, “காபி வாங்கி வா, மெதுவடை போன்ற சில திண்பண்டங்களை வாங்கி வா” என்று கூறினார். எல்லாவற்றையும் வாங்கி வரச் சொல்லி, பிச்சைக்காரரைச் சாப்பிடச் சொன்னார் குருநாதர்.

பிச்சைக்காரர் அனைத்தையும் சாப்பிட்டு முடித்தவுடனே, “அந்தக் கம்பை எடு” என்று கூறி, அந்த கம்பை வாங்கி, எமது கையில் கொடுத்தார் குருநாதர்.

“இந்த கம்பால், அவனின் மண்டையைப் பார்த்து, ஓங்கி அடி, அவனுடைய மண்டையை இரண்டாகப் பிளக்க வேண்டும்” என்று கூறினார். “திருடன் இவன், இவனுடைய மண்டையை இரண்டாக உடை” என்று எம்மிடம் கூறினார் குருநாதர்.

குருதேவரும், யாமும் பேசுவதைக் கேட்டு, பிச்சைக்காரர் அலறத் தொடங்கினார். இத்தனையும் வாங்கிக் கொடுத்து சாப்பிட்டவுடன், அடி என்றால் எப்படி இருக்கும்.

யாமும் குருநாதரிடம் இருந்து, கம்பை வாங்கிக் கொண்டு, மெதுவாக பிச்சைக்காரர் தலைக்கு நேராக கொண்டு போனோம். இலேசாக, வலி தெரியாதவாறு பிச்சைக்காரரின் தலையில் அடித்து விட்டு, “அடித்துவிட்டோம் சாமி” என்று யாம் கூறினோம்.

“மண்டை உடையவில்லையே” என்று கூறினார் குருநாதர்.

அந்தக் கம்பை வாங்கி, எமது முதுகில் “ஓங்கி அடித்தார்” குருநாதர். “மண்டையில் அடித்தால், இப்படி திடுமென்று சத்தம் வரவேண்டும், மண்டை உடைய வேண்டும்” என்று கூறினார். “இப்பொழுது அவன் மண்டையில் அடி” என்று கூறினார்.

“சாமி, நான் பிள்ளைக்குட்டிக்காரன், பிச்சைக்காரர் செத்துப் போனால், என்னைச் சிறையில் போட்டுவிடுவார்கள்” என்று கூறினோம். “எம்முடைய பிள்ளைகளெல்லாம் ரோட்டிற்கு வந்துவிடும்” என்று கூறினோம்.

எம்மை சும்மாவா விட்டார் குருநாதர். “அதெல்லாம் முடியாது, நான் சொன்னதைச் செய்கின்றேன் என்று கூறினாயல்லவா, நான் முதுகில் அடித்தேன், அதே போன்று, அவனின் மண்டையில் நீ அடி” என்று கூறினார்.

யாம், இரண்டு மூன்று தடவை மெதுவாக, மெதுவாக பிச்சைக்காரரின் தலையில், கம்பை வைத்து எடுத்தோம். இதனால், குருநாதர் எம்மைத் திரும்ப, திரும்ப அடித்தார்.

“சரி சாமி, பிச்சைக்காரர் அடி தாங்கமாட்டார், இப்பொழுது, இவரை அடித்துக் கொன்றே விடுகின்றேன்” என்று கூறிவிட்டு கம்பை ஓங்கிக் கொண்டு போய், அந்தப் பக்கம் தரையில் அடித்தோம்.
பிச்சைக்காரர், “ஐயய்யோ…அம்மா…” என்று கூறிக்கொண்டு எழுந்து ஓடினார். யாம் அவரைத் துரத்திக் கொண்டு ஓடிய அவசரத்தில், எமது வேஷ்டி கூட கழன்று விட்டது. எமது வேஷ்டியை, ஒரு கையில் பிடித்துக் கொண்டு ஓடினோம்.
எமது வீட்டு சந்திற்கு முன், ஒரு இரும்புக் கடை இருக்கின்றது. அந்தக் கடையிலிருந்த ஒருவர், “என்ன நைனா ஓடுகின்றீர்கள்?, அவன் நடக்க முடியாமல் இருந்தான், அவனும் ஓடுகின்றான், என்ன சமாச்சாரம்?’ என்று கேட்டார். 

அதற்கு யாம், “குருநாதர் அவனைத் திருடன் என்று கூறினார்” என்று சொன்னோம்.
யாம், அவரை ஒரு கையில் பிடித்துக் கொண்டு, குருநாதரிடம் இழுத்துக் கொண்டு வந்தோம்.

“அவர் என்னைக் கொன்று விடாதீர்கள்” என்று சொல்லிக் கொண்டு வந்தார். குருநாதரிடமும், “என்னைக் கொன்றுவிடாதீர்கள்” என்று கூறினார். குருநாதர், அவரின் கையில் 100 ரூபாயைக் கொடுத்தார்.

“இவனுடைய சொத்தைப் பறிப்பதற்காக வேண்டி, இவனின் உடலில் இன்னொரு ஆவியை ஏவல் செய்து, இவனைப் பைத்தியக்காரனாக ஆக்கிவிட்டார்கள். 

இப்படி பைத்தியக்காரர்களாகச் சுற்றுகிறவர்களுக்கெல்லாம், பைத்தியக்காரன் ஒருவன் மலையில் இருக்கின்றான். இது போன்று முக்கியமான கோவில் குளங்களுக்கெல்லாம் செய்வினை செய்யப்பட்டவர்கள், தோஷங்களானவர்கள், இப்படித்தான் வருவார்கள்”.
“ஏனென்றால், இவன் எடுத்துக் கொண்ட உணர்வுகளுக்கு, பிறிதொருவர் செய்த ஆவி நிலைகள் இவனுக்குள் வந்தாலும், இவனைப் போன்றவர்களை நல்ல இடத்திற்கே அழைத்து வரும்.

இருந்தாலும், இவன் பிச்சை எடுத்துதான் வாழமுடியும். நல்லதை எடுக்க முடியவில்லை. இவனால் பார்க்க முடியவில்லை, இப்படி அவஸ்தைப்படுகின்றான். ஆகையால், இவன் உடலில் இருந்த ஆவியைத்தான், உன்னைக் கொல்ல சொன்னது” என்று கூறினார் குருநாதர்.

 எனவே, அத்தனை நாடகங்கள் செய்து, ஆவி நிலை விலகியது. பிச்சைக்காரருடைய கை கால் எல்லாம் ஜம்மென்று ஆனது. அவரின் கையில் 100 ரூபாயை கொடுத்து, “உனது சொத்தெல்லாம் வந்து விடும், போடா” என்று கூறினார் குருநாதர்.
அந்த ஆள், விருதுநகர் பக்கம் ஏதோ ஒரு கிராமத்தைச் சேர்ந்தவர். அவருடைய சொத்தையெல்லாம் பறித்துக் கொண்டு, அவரை வெளியில் துரத்திவிட்டார்கள்.

அவருக்குக் குழந்தைகளோ, வேறு வாரிசுகளோ கிடையாது. அவருடைய சொத்தை அனுபவிப்பதற்காக, அவரைப் பைத்தியக்காரராக ஆக்கியுள்ளார்கள். இப்படியும் இருக்கிறது உலகம். இதை எல்லாம் அனுபவபூர்வமாக காண்பித்தார் குருநாதர்.
இது போன்று, நமது மனித வாழ்க்கையில் எத்தகைய நிலைகள் வந்தாலும், நமக்குள் தீமை புகாது தடுக்கும் சக்தி வரவேண்டும். இது தான்,
கடவுளின் அவதாரத்தில் நரசிம்மா,
மடி மீது இரண்யனை வைத்து
வாசல்படி மீது அமர்ந்து
நர நாராயணன், இரண்யனைப் பிளந்தான்.
அதாவது, நமக்குள் தீமை செய்யும் உணர்வினை,
நமது உடலை விட்டே அகற்ற வேண்டும்.
சூரியன் பாதரசத்தால் மோதி, விஷத்தைப் பிரிக்கின்றது. சூரியனில் இருந்து வெளிப்படும் கலர்கள் ஆறு. ஏழாவது ஒளியாகின்றது. இதே, மனிதருக்கு அறிவு ஆறு. விஷத்தை நீக்கிய உணர்வை எடுத்து, நம் உடலுக்குள் வலுவாக்கி, விஷத்தைப் பிளந்து தள்ளினால், இருள் நீங்குகின்றது. 


ஆறாவது அறிவு, ஏழாவது ஒளியாகின்றது. அதுதான், "ஈரேழு லோகத்தையும் வென்றவன், விண் சென்றான்" என்று காவியத்தில் தெளிவாக கொடுத்துள்ளனர், நமது ஞானிகள்
இதன் வழி கடைப்பிடிக்கும் அன்பர்கள் அனைவரும், தீமைகளை வென்றிடும் நிலையாக, துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை தமக்குள் பெற்று, ஆறாவது அறிவை ஏழாவது நிலையாக, ஒளியின் சரீரமாக பெற்று வாழ்ந்து வளர்ந்திட எமது அருளாசிகள்.
உயிரே கடவுள் – மெய்ஞான மாத இதழ்  
ஜூலை 2002
நமது உயிரணு பல கோடி உடல்களைப் பெற்று, அவ்வுடல்களில் உள்ள தீமைகளை நீக்கி, நீக்கி, இன்று ஆறாவது அறிவு கொண்ட மனிதராக உருவாக்கியுள்ளது.

சூதாடுவது, தீமை என்று தெரிகின்றது. ஆனால், சூதாடப் போகின்றோம். சூதாட்ட விளையாட்டில் தோற்க தோற்க, விளையாட்டில் இழந்த பணத்தை பிடித்துவிடலாம் என்று, திரும்பத் திரும்ப விளையாடி எல்லாவற்றையும் இழந்துவிடுகின்றோம்.
இதற்கு உதாரணமும் ஒன்று, குருநாதர் எமக்கு அனுபவப்பூர்வமாகக் காண்பித்தார். ஒரு பால் வியாபாரி, அடிக்கடி எம்மை வந்து சந்திப்பார்.

யாம், குருநாதருடன் சேர்ந்து சுற்றிக் கொண்டிருக்கும் காலத்தில், அந்தப் பால் வியாபாரி எம்மிடம் வந்து, “குருதேவரிடம் ஏதோ சக்தி இருக்கிறது என்று ஊரில் பெரும்பாலானவர்கள் பேசிக் கொள்கின்றார்கள். சற்குருதேவர் எனக்கு ஒரு ஆசீர்வாதம் கொடுத்தால் போதும்” என்று யாம் தனித்து இருந்த நேரத்தில் வந்து கூறினார்.
“என்ன ஆசீர்வாதம் வேண்டும்” என்று பால் வியாபாரியிடம் கேட்டோம்.

அதற்குப் பால் வியாபாரி, “நான் சீட்டு விளையாடியதில், என்னிடம் இருந்த எல்லா பணமும் போய்விட்டது, வேறு வழி இல்லை, இந்தச் சைக்கிளை வைத்து விளையாடலாம் என்று பார்க்கின்றேன். இதுவும் போய்விட்டதென்றால், பால் எடுத்து விற்பதற்கு வழி இல்லை. ஆகவே,   குருதேவரிடம் சொல்லி, நான் சீட்டு விளையாட்டில் ஜெயிப்பதற்கு ஆசீர்வாதம் வாங்கிக் கொடுங்கள்” என்று கூறினார்.

மறுநாள், குருநாதரின் அருகில் யாம் இருக்கும் பொழுது பால் வியாபாரி எம்மிடம் வந்து, “அண்ணே, குருநாதரிடம் அந்த விபரம் கூறினார்களா?” என்று கேட்டார்.
“பால் வியாபாரி கேட்டதை ஏன் என்னிடம் சொல்லவில்லை?” என்று குருநாதர் எம்மைக் கேட்டுவிட்டு, “நீ (பால் வியாபாரி) ஜெயித்து வா என்று ஆசீர்வாதம் கொடு” எம்மை பார்த்து, “அவனுக்கு ஆசீர்வாதம் கொடு” என்று கூறினார் குருநாதர்.

யாம் அவ்வாறே பால் வியாபாரியை ஆசீர்வாதித்த பின். அவர் சீட்டு விளையாடச் சென்றார்.
சீட்டு விளையாட்டில் பால் வியாபாரி, ஒரே நாளில் 25,000 ரூபாய் சம்பாதித்தார். சீட்டு விளையாட்டில் 25,000 ரூபாய் சம்பாதித்து வந்தவுடனே, பால் வியாபாரி எமக்குப் புது வேஷ்டி, புதுச் சட்டை, பெட்ஷீட் வாங்கி வந்தார்.

குருநாதர் வெறும் கோவணத்துணி தான் கட்டியிருந்தார். எனவே அவருக்குப் படுத்து கொள்ள பெட்ஷீட் இல்லையாம். அதனால், அவருக்கு ஒரு பெட்ஷீட் வாங்கி வந்திருந்தார் பால் வியாபாரி.

குருநாதர், அதை வாங்கித் தார்தாராகக் கிழித்தெறிந்தார்.
சீட்டு விளையாட்டில், ஓரே நாளில் 25,000 ரூபாய் சம்பாதித்ததும், பால் வியாபாரிக்கு மேலும் ஆசை வந்துவிட்டது. இன்னும் பத்து நாளைக்கு விளையாடினால், தான் பெரிய பங்களாவே, காரே வாங்கி விடலாம்” என்று திட்டமிட்டார்.
பால் வியாபாரி, அன்று ரூபாய் 25,000 தான் சம்பாதிக்க முடிந்தது. அதையும் இங்கே கொண்டு வந்து செலவழிக்கின்றார். எங்களுக்குத் துணிமணியும் பெட்ஷீட்டும் வாங்கிக் கொடுத்துவிட்டு, அவருடைய நண்பர்களுக்கெல்லாம், “நீ காபி சாப்பிடு, நீ காபி சாப்பிடு” என்று கூறி அதில் ரூபாய் 5,000 வரை செலவழித்தார், 20,000 ரூபாய் மிச்சம்.
பால் வியாபாரி கொடுத்த பெட்ஷீட்டை, குருநாதர் கிழித்து எறிந்துவிட்டு, “பால் வியாபாரியினுடைய ஆசை எதிலே போகின்றது? ஜெயிக்க வேண்டும் என்று கேட்டான். அதைக் கொடுத்த பின், இவன் ஆசை எங்கே போகின்றது பார்.

ஏதோ ஜெயித்து கொடுத்தால், இனிமேல் சீட்டு விளையாடப் போக மாட்டேன் என்று தானே கூறினான். இழந்த பணத்தைச் சம்பாதித்தான், ஜெயித்த பணத்தை அனாவசியமாக செலவழிக்கின்றான், உனக்கும் எனக்கும் வேறு வாங்கிக் கொடுத்திருக்கின்றான். நாளை எப்படி வருவான் பார்?” என்று கூறினார்.

மறு நாள், பால் வியாபாரி சீட்டு விளையாடி, தன்னிடம் இருந்த சைக்கிளும் போய்விட்டது.
மறுநாள் பால் வியாபாரி எங்களிடம் வந்து, “என்ன சாமி இப்படி ஆகிவிட்டது” என்று கேட்டார். முதலில் ஆசி கொடுத்து ஜெயித்த பின், அவரின் ஆசை சீட்டு விளையாட்டின் மீதுதான் போகின்றது. 

இப்படி சமுதாயத்தில் மனிதர் சூதுகளில் ஆசையை வளர்த்துக் கொள்ளும் பொழுது, “போதும்” எனும் மனம் வருவதில்லை.

நம்முடைய தொழிலை முன்னேற்றி, பொருளைச் சம்பாதிக்கலாம் என்ற நிலையும் இல்லை. இப்படிச் சந்தர்ப்பங்கள் எப்படி வருகின்றது என்று அந்த இடத்தில் குருநாதர் காண்பித்தார்.
குருநாதர் சாதாரணமாக விடவில்லை. ஒவ்வொரு நொடியிலும் மனிதரது உணர்வுகள் எப்படி இயங்குகின்றது? அதிலிருந்து நீ எப்படித் தப்புவது என்று அங்கு சொன்னார்.
ஒருவர் கடலில் ஒரு தீவை குறி வைத்து, படகை துடுப்பின் உதவி கொண்டு செலுத்துகின்றார், கடலில் எதிர் அலைகள் வந்து கொண்டிருந்தாலும், அவர் எதிர் அலைகளைச் சமாளித்து படகைச் செலுத்துகின்றார். 

இதில் "தீவு என்பது துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டம்" என்று நாம் கருதிக் கொண்டு, துருவ நட்சத்திரத்தின் பேரருள் உணர்வுகளை நாம் துடுப்பாகப் பயன்படுத்திக் கொண்டு, இந்த உலக வாழ்க்கையில் வரும் தீமைகளை வென்று, நமது நல் ஞானப் பயணத்தை, நடத்தி வரவேண்டும்.
நாம் உடல் மீது பற்று வைத்தால், மீண்டும் பிறவியை அடைவோம். 
நாம் உயிர் மீது பற்று வைத்தால், பிறவி இல்லா நிலையை அடைவோம்.
உயிரே கடவுள் – மெய்ஞான மாத இதழ்  
ஜூன் 2002
நீங்கள், இராமாயணத்தைப் படித்து பாருங்கள். இதற்கு முன்பு இராமாயணத்தைப் படித்திருப்பீர்கள். ஆனால், யாம் உபதேசித்த அருள் உணர்வின் துணை கொண்டு, இராமாயணத்தைப் படித்தீர்களென்றால், அதில் எவ்வளவு மூலப் பொருள் பொதிந்து உள்ளது, என்பதை நீங்கள் அறியமுடியும்.
இராவணனிடமிருந்து, சீதாவை இராமன் மீட்டு வந்தாலும், மக்கள் சீதாவின் கற்பைப் பற்றி என்ன சொல்வார்களோ என்ற நிலை வரும் பொழுது, சீதாவை அக்னிபிரவேசம் செய்யச் செய்து, அதன் பிறகு அரண்மனைக்கு அழைத்துச் செல்கின்றான்.
ஆனால், சீதாவை அரண்மனைக்கு அழைத்துச் சென்ற சிறிது காலத்திலேயே, சீதா கருவுறும் பொழுது, மக்கள் எல்லோரும் சந்தேகப்படுகின்றனர். ஏனென்றால், சீதா அரக்கனிடத்தில் இருந்ததினால், அரக்க உணர்வின் கருவே அங்கே விளையும் என்று எல்லோரும் சந்தேகப்படுகின்றனர்.

ஆகவே, இராமன் லட்சுமணனைக் கூப்பிட்டார். ஏனென்றால், லட்சுமணன் விஷத்தின் இயக்கம். அதன் உணர்வின் துணை கொண்டு, சீதாவிடம் எதுவும் சொல்லாதபடி கர்ப்பிணி பெண்ணான சீதாவை அழைத்துப் போய், காட்டில் விடும்படி இராமன் சொல்கின்றார்.
இராமன்தான் கடவுள், எல்லாவற்றையும் காப்பாற்றுவார். எல்லோரையும் காப்பவர். இராமன் தான் எல்லோருக்கும் இறைவன், என்று சொல்கின்றோம். ஆனால், ஒரு கர்ப்பிணிப் பெண்ணை, தன்னந்தனியாகக் காட்டில் விடச் சொல்கின்றார்.

கர்ப்பிணி என்று கூட பாராமல், ஒரு அரக்கன்தான் கொடுமைகளைச் செய்வான். ஆனால், அரக்கனைக் காட்டிலும் கொடுமைகளைச் செய்யும் நிலையே இங்கு உள்ளது.

கருவுற்றிருக்கும் தாயை, காட்டு விலங்குகளுக்கு மத்தியில் விட்டுச் சென்றால், அரக்கனைக் காட்டிலும், பெரிய அரக்கனாகி விடலாமல்லவா? சற்றுச்  சிந்தித்துப் பாருங்கள். இதை எதற்காக நமக்குக் காண்பிக்கின்றார்கள்?

காட்டிற்குள் சீதா அனாதையாகத் தவிக்கின்றது. அப்போது சீதாவை ஒரு பெண் வான்மீகியின் ஆசிரமத்தில் கொண்டு சேர்த்துவிடுகின்றாள். வான்மீகி சீதாவைப் பார்த்தார். உண்மையின் உணர்வை அறிந்தார்.

அப்பொழுது வான்மீகி. கர்ப்பிணிப் பெண்ணின் செவிகளில் வான இயல் தத்துவத்தை ஓதினார். வான்மீகி ஓதிய உணர்வின் தன்மை, சீதாவின் கருவில் வளரும் குழந்தையிடம் விளைந்தது.
இது போன்று, வான்மீகி உணர்வின் எண்ண இயக்கங்களையும், உலக நிலைகள் எப்படி உருவாகின்றது என்பதையும் தெளிவாக்கினார். தெளிவான உணர்வுகள் சீதாவின் கருவில் வளரும் குழந்தையிடம் விளைந்தது. 

ஞானத்தின் உணர்வு கொண்டு, “லவா, குசா” என்ற இரு குழந்தைகள் சீதாவிற்கு பிறந்தன.
ஆனால். சீதாவை விட்டுப் பிரிந்திருக்கும் இராமனோ, தான் தனித்து வாழ முடியாது எத்தனையோ வேதனைப்படுகின்றார். ஆகவே, மக்களும், அரச சபையில் உள்ளவர்களும், எத்தனையோ வேதனைப்படுகின்றனர்.

ஆகவே, இந்தத் துன்பத்திலிருந்து மீள்வதற்காக, அன்று தசரத சக்கரவர்த்தி அசுவமேத யாகத்தை நடத்தியது போன்று, மீண்டும் ஒரு அசுவமேத யாகத்தை நடத்தி, நமது நாட்டைப் புனிதப்படுத்த வேண்டும் என்ற நிலையைக் கொண்டு வந்தார்.

அப்படிப் புனிதப்படுத்துவதற்காக, யாக சாலையைத் தயார் செய்தனர். யாகம் தொடங்குவதற்கான நாள் வரும் பொழுது, இதைப் பற்றி வான்மீகி அறிந்து கொண்டார்.
யாகம் நாளை தொடங்குகின்றதென்றால், இன்றே லவ குசாவை வான்மீகி அங்கே அனுப்பி வைத்தார்.  லவ குசா இருவரும் அங்கே சென்று. இராம நாம காவியங்களை பாடுகின்றனர். அவர்கள் பாடும் பொழுது, மற்றவர்களுக்கு லவ குசா யார் என்று தெரியவில்லை. ஆனால், இராமனுக்குப் புரிந்தது.
சீதாவிற்கும் எனக்கும் உண்டான தொடர்புகள், எங்கள் இருவரைத் தவிர யாருக்கும் தெரியாது. எங்கள் இருவருக்கும் மட்டுமே தெரிந்த இரகசியங்களை இந்தக் குழந்தைகள் எப்படிப் பாடுகின்றன?

இவர்கள் யார்? என்பதனைத் தெரிந்து கொள்வதறகாக, அவர்களை அணுகி இராமன்.கேட்கின்றார். அதன் பிறகு லவ, குசா இருவரும், இராமனை, வான்மீகியின் ஆசிரமத்திற்கு அழைத்துச் செல்கின்றனர்.

அப்போது, அங்கே இராமன் தமது மனைவி சீதாவைப் பார்க்கின்றார். சீதாவைப் பார்த்தபின், லவ, குசாவை தமது மகன்கள் தான் என்று அறிந்தார்.
அதன் பின் இராமன், “இனி கடந்த காலங்களை மறந்துவிடுவோம், இனி ஒன்று சேர்ந்து வாழ்வோம்” என்று சீதாவை அழைக்கின்றார்.

அப்போது பூமாதேவி சீதாவை பார்த்து, ‘பட்டது போதும், நீ பட்ட கஷ்டம்” என்று அழைத்ததால், அந்த தசைகள் அனைத்தும் பூமியில் கலந்து, மண்ணுடன் மண்ணாக மாறிவிடுகின்றது.

ஏனென்றால், எல்லா உணர்வும் இப்பூமியில் விளைந்து, தாவர இனங்களாக உருவாகி, தாவர இனங்களின் சுவைக்கொப்ப தான் எண்ணங்கள் உருவானது.

ஆகவே, இப்படி என்ணங்கள் உருவானாலும், உயிரணு, எத்தனையோ கோடி உடல்களை பெற்றபின் தான், இந்த மனித உடலை உருவாக்கியது. ஆகவே, உடலின் சுவையின் உணர்வுகள் எப்படி இருக்கின்றது, என்பதைத்தான் அங்கே காண்பிக்கின்றனர்.

ஏனெனில், தாவர இனங்கள் மண்ணிலே விளைந்தது. தாவர இனத்தின் உணர்வை எடுத்து வளர்ந்த உடலின் சத்து, மண்ணுடன் மண்ணாகப் போகின்றது.
மண்ணுடன் மண்ணாகப் போகும் இந்த உடலுக்காக வேண்டி, நாம் என்ன செய்கின்றோம்? எத்தனையோ பிரயத்தனங்கள் எடுக்கின்றோம். கோபம், வெறுப்பு, வேதனை, அடித்தல், கொல்லுதல் போன்ற உணர்வுகளை நம்மில் வளர்க்கின்றோம்.
ஒருவர் நம்மைத் திட்டிவிட்டால், “என்னை இப்படிப் பேசி விட்டார்களே, என்னை இப்படிக் கேவலப்படுத்தி விட்டார்களே” என்ற உணர்வின் தன்மையை எடுக்கும் பொழுது, நாம் மண்ணுடன் மண்ணாகப் போகும், இந்த உடலுக்குத்தான் முக்கியம் கொடுக்கின்றோம்.


ஆனால், உடலில் உணர்வுகளை ஒன்றாக்கி, இனி பிறவியில்லா நிலையை அடையும் உணர்வுகளை, நாம் நம்முள் இழந்திருக்கின்றோம் என்ற நிலையை இராமாயணத்தில் தெளிவாகக் கூறப்படுகின்றது.

நீங்கள் இராமாயணத்தைப் படித்துப் பாருங்கள். இதன் உண்மைகள் தெரிய வரும். பூமி வெடித்து சீதா மண்ணுக்குள் சென்றபின், இந்த உடலிலே விளைவித்த உணர்வுகள், உயிரான விஷ்ணுவிடம் சென்றடைகின்றது..
அப்போதுதான் விஷ்ணு கேட்கின்றார், “நீ உலகை அறிய விரும்பினாயே, புவியில் எத்தனை தொல்லைகள் வருகின்றது? உலக மக்களின் வாழ்க்கையில், எண்ணத்தால் எத்தனை துயரங்கள் இருக்கின்றது” என்று கூறியதாகக் காண்பித்து, இதிலிருந்து, உயிருடன் ஒன்றி இனிப் பிறவியில்லை என்ற நிலையில் சொர்க்கமடைகின்றது.
"உயிரான விஷ்ணு" என்ற உணர்வை எடுத்து, அதன் உணர்வின் அறிவாக நமக்குள் வளர்த்துக் கொண்டால், நாம் பிறவியில்லா நிலை என்ற நிலை அடைகின்றோம், என்பதனை இராமாயணத்தில் தெளிவாகக் காண்பிக்கப்படுகின்றது.
Ramayana.gif
உயிரே கடவுள் – மெய்ஞான மாத இதழ் 
ஜூன் 2002
நாம் நமது வாழ்க்கையில் தொழிலின் நிமித்தமாக வேதனைப்படுகின்றோம, சஞ்சலப்படுகின்றோம், கோபப்படுகின்றோம். இதன் நிலைகள் இருக்கும் பொழுது, அடுத்து நாம் ஒரு சந்தோசமான செயலைச் செய்ய முடிகின்றதா?
இதைத் தான், சீதாவைச் சிறை பிடித்தான் இராவணன், என்று காவியத்தில் காண்பிக்கப்படுகின்றது. சந்தோசத்தை உருவாக்கும் நிலையைச் சிறைபிடித்து, அதைச் செயலற்றதாக நமது உடலில் மாற்றுகின்றான். 

நமது பையன் மேல் பாசமாக, அன்பாக இருப்போம். அவன் நாம் சொன்னபடி கேட்கவில்லை என்றால், “அவனை உதைத்தால்தான் சரியாக வரும்” என்று எண்ணி, நமக்குள் சந்தோசத்தை அடக்கி, நல்ல குணத்தைச் சிறைப்பிடித்து விடுகின்றோம்.

இது போன்ற நிகழ்ச்சிகள், ஒவ்வொரு நாளும் நடந்து கொண்டேதான் இருக்கின்றது. நாம், நமது குடும்பத்தில் அனைவரும் ஒற்றுமையாக இருந்து வந்தாலும், சில நேரங்களில் அசுர உணர்வுகள் நமக்குள் வந்த பின், நம்மிடத்தில் உள்ள நல்ல குணங்களைச் செயலற்றதாக மாற்றிவிடுகின்றது. இதைத் தான், சீதாவைச் சிறைப் பிடித்தான் இராவணன் என்று கூறுவது.
இந்த சீதாவை மீட்பதற்காக (சந்தோசத்தை மீட்பதற்காக),
இராமனுடைய எண்ணங்கள், அது தான் வானரப்படைகள்
என்ற நிலைகளில் பரவி செயல்படுகின்றன.

வானரப்படைகளைத் தலைமை தாங்கி நடத்துபவர்,
சுக்ரீவன், அதுதான் துருவ நட்சத்திரம் இராமன் சுக்ரீவனின் துணை கொண்டு, வானரப்படைகளை வைத்து சீதாவை, இராவணனிடம் இருந்து மீட்டான்.

அதாவது, துருவ நட்சத்திரத்தில் இருந்து வரும் பேரருளை, நாம் நுகர்ந்து,
நமது உடலுக்குள் தீமை என்ற உணர்வினை நீக்கி,
நம்முள் அரக்க சக்தியை, எப்படி நாம் மாற்ற வேண்டும்?
நமக்குள் சந்தோசத்தை எப்படிக் கொண்டுவர வேண்டும்?
என்பதை இராமாயணத்தில் காண்பிக்கின்றனர்.
உயிரே கடவுள் – மெய்ஞான மாத இதழ் 
ஜூன் 2002
நமது மனித வாழ்க்கைக் காலம் என்பது, மிகவும் குறுகியது. நாம் மனிதராகப் பிறந்து வளர்ச்சி ஆக, ஆக, நமது வாழ்க்கைக் காலமும் குறுகிக் கொண்டே வருகின்றது. ஆகவே, குறுகிய காலமே வாழும் நாம், நமது வாழ்க்கையில் எதைப் பெறவேண்டும்? என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டும்.
இதைத்தான் “இராமேஸ்வரம்” என்ற நிலையை ஞானிகள் காண்பித்தார்கள். இராமேஸ்வரம் எனும் நிலையை காண்பிக்கும் பொழுது,
“நேரமாகிவிட்டது”
அதாவது மனித வாழ்க்கை குறுகியது என்றும்,
இந்த மனித வாழ்க்கை காலத்தில்
நாம் பகைமைகளை மறத்தல் வேண்டும்.
நமது மனதை, ஒன்றாகக் குவித்தல் வேண்டும் என்று உணர்த்தினர் ஞானிகள்.

எண்ணத்தால் உருவாக்கப்பட்ட இராமேஸ்வரம் எனும் இந்த மனித உடலில், ஒளியின் உடல் பெற்ற துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியின் உணர்வைச் சேர்த்து, நம்முள் அறியாது சேர்ந்த இருளை நீக்கி, பொருளறிந்து செயல்படும் திறனைப் பெறவேண்டும்.

நாம் நமது ஊரில், அதிகாலையில் விநாயகரை வணங்கும் பொழுது, நட்சத்திரங்களின் நிலையைப் பார்க்க முடியாதவாறு, மரங்கள் மறைத்துக் கொள்கின்றன.

ஆகவே, நாம் துருவ நட்சத்திரத்தின் பேரருள் உணர்வைப் பெறுவதற்காகவும், நட்சத்திரங்களின் இயக்கங்களைக் காண்பதற்காகவும், கடலோரப் பகுதியில் ஸ்தலத்தைத் தேர்ந்தெடுத்து, இராமேஸ்வரம் எனப் பெயரிட்டுள்ளார்கள்.ஞானிகள்.


 எண்ணத்தால் உருவாக்கப்பட்ட மனித உடலில், எண்ணத்தால் ஒலி – ஒளியின் உடலாகப் பெற்ற நிலையை உணர்த்தி, சாதாரண மனிதர்களான நாமும், 
நமக்குள் ஒளியின் உணர்வைப் பெற்று,
நமக்குள் அறியாது சேர்ந்த இருள் என்ற நிலையை நீக்கி
அருள் சக்தி பெறும் ஸ்தலமாக,
அந்த இடத்தை மாற்றினார்கள் ஞானிகள்.
அங்கே கோயில்களை அமைத்து, நாம் குறுகிய காலமே வாழ்கின்றோம் என்ற நிலையில், நமது வாழ்க்கையில் துருவ நட்சத்திரத்தின் பேரருளை நமக்குள் பெறும்படி செய்தனர் ஞானிகள்.

அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் உணர்வுகளை நமக்குள் பெற்று, இந்த மனித உடலுக்குப் பின், பிறவியில்லா நிலை எனும் நிலையை அடையும் தருணத்தைத்தான், நமது ஆலயங்களில் காண்பிக்கப்பட்டுள்ளது.
ஆனால், நாம் கோவில்களுக்குக் காசைக் கொடுத்துவிட்டு, “நான் உனக்குக் காணிக்கை செலுத்துகிறேன், அர்ச்சனை செய்கின்றேன், ஆனால், எனது குடும்பம் கஷ்டத்தில் இருக்கின்றதே” என்று கும்பிடுவார்கள்.
இப்படியெல்லாம் காசு பணம் செலுத்தியவர்கள், எத்தனை பேர் இன்றும் உயிருடன் இருக்கின்றார்கள்?

பேருண்மைகளை உணர்த்திய வியாசர், இன்று இங்கே இருக்கின்றாரா?

 வான்மீகி மகரிஷி, இன்று இங்கே இருக்கின்றாரா?
வியாசரும், வான்மீகியும் உணர்வின் தன்மையை ஒளியாக மாற்றி, துருவ நட்சத்திரத்தின் இணைப்பில், ஒளியின் வட்டமாக இருக்கின்றனர்.

அகஸ்தியருக்குப் பின் தான், வான்மீகி வந்தார். வான்மீகி, வானின் உணர்வை தான் அறிந்து, அந்த உணர்வின் தன்மையை தம்முள் பெற்று, தாம் கண்டுணர்ந்த உணர்வுகளை வெளிப்படுத்தி, அவர் இன்று துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பில், ஆறாவது அறிவை ஏழாவது நிலையாக்கி ,சப்தரிஷி மண்டலமாக வாழ்கின்றார்.
இதைப் போன்று, வியாசரும் வானின் ஆற்றலைப் பெற்று, மேரு என்ற மலையை மத்தாக வைத்து, வாசுகி என்ற பாம்பைக் கயிறாக வைத்து, பாற்கடலைக் கடைந்தனர்.

அப்பொழுது எது, எது விளைந்ததோ, அதாவது தாவர இனங்கள் விளைகின்றது, அதை விழுங்கிய உணர்வுக்கொப்ப உணர்ச்சியும், எண்ணமும், உடலும், உயிரினங்கள் எப்படிப் பெற்றன? என்பதை வியாசர் தெளிவாகக் கூறியுள்ளார்.
பேருண்மைகளை உணர்த்திய வியாசர்,  உடலுடன் இருக்கின்றாரா?
இருக்கின்றார், ஒளியின் உடலாக இருக்கின்றார்.
புற உடல் இல்லை.
ஒளியின் உடலாக, சப்தரிஷி மண்டலத்தில் இருக்கின்றார்.
ஆகவே, உடலுடன் சொர்க்கம் செல்லவே முடியாது.

இதை உணர்த்துவதற்கு இராமாயணத்தில், “ஒருவன், தான் உடலுடன் சொர்க்கம் செல்வதற்காக, பல யாகங்களைச் செய்கின்றான். தான் உடலுடன் சொர்க்கம் செல்ல முடியும், என்று எண்ணுகின்றான்”.
ஆனால், உடலுடன் சொர்க்கம் செல்ல முடியாது,
உடலில், சொர்க்க உணர்வை வளர்க்க முடியும்.
என்பதை இராமாயண காவியத்தில், தெளிவாக ஞானிகள் உணர்த்தியுள்ளனர்.
அதே சமயத்தில், விசுவாமித்திரர், ஆத்திரமும், ஆணவமும் கொண்டு எதையும் பெறவேண்டும் என்ற ஆத்திர உணர்வு கொண்டவர். அவராலும், அந்த நிலையைச் செய்ய முடியவில்லை. பல யாகங்களைச் செய்து வீரிய உணர்வைப் பெற்றாலும், நாம் உடலுடன் சொர்க்கம் போகவேண்டுமென்றால், முடியாது.
ஆக, நாம், நமது உடலில் வாழும் காலத்தில்
“உயிருடன் ஒன்றிய உணர்வை,
ஒளியின் உணர்வாக ஒன்று சேர்க்கும் பொழுது தான்”
சொர்க்கமடைகின்றோம்.

எதன் நல் உணர்வுகளை நம்முள் சேர்க்கின்றோமோ, அதுவே நம்மை சொர்க்கலோகத்திற்கு அழைத்துச் செல்லும் என்பதைத்தான், இராமாயணத்தில் தெளிவாகக் காண்பிக்கப்படுகின்றது.
இவ்வாறு உயிருடன் ஒன்றும் உணர்வுகளை ஒளியின் உணர்வாக மாற்ற, துருவ நட்சத்திரத்தின் அருள் உணர்வுகளை, இந்த உடல் வாழ்க்கையில், தம்முள் ஒவ்வொரு நொடிப்பொழுதும் சேர்க்கும் அன்பர்கள் அனைவருக்கும் எமது அருளாசிகள்.
உயிரே கடவுள் – மெய்ஞான மாத இதழ் 
ஏப்ரல் 2002
நாம் ஒரு மனிதனிடத்தில், “நீ செய்யும் தவறுகளிலிருந்து விடுபட்டு, மீண்டு, இந்த வழியில் செல்” என்று கூறினால், உடனே அவரிடத்தில் எதிர் நிலையாகின்றது.


தனக்கு விரோதமாக ஒருவர் சொல்லும் பொழுது, அவர் தமது தாய் தந்தையராக இருந்தாலும் வெறுக்கின்றார். சகோதரனாக இருந்தாலும் வெறுக்கின்றார். நண்பராக இருந்தாலும் வெறுக்கின்றார்.
ஏனென்றால், மனிதர் தமக்குள் எடுத்துக் கொண்ட உணர்வுகள் எதுவோ, அதன் வழியே அவரை அழைத்துச் செல்கின்றது. ஆனால், அப்படி ஒருவர் மற்றவர்களை வெறுக்கும் தன்மைக்குக் காரணம் என்ன?
குழந்தைகள் விளையாட்டில் ஆர்வமாக இருப்பவர்கள். அதனால், நமது குழந்தையிடமும் விளையாட்டு குணம், அதிகமாக இருக்கின்றது. இதனால் அவன் விபத்தில் சிக்குவான், கல்வியில் ஞாபகம் இருக்காது. ஞானம் வராது என்று, நாம் அவனைத் திட்டினால், அப்போது அங்கே எதிர் நிலையாகின்றது.

நாம் கோபமாகப் பேசினால், அவன் நம்மை எதிர்த்துப் பேசும் நிலை வருகின்றது. இதைப் போன்று, அவன் நம்மை எதிர்த்துப் பேசும் நிலை வரும் பொழுது, நமக்குள் வெறுப்பின் தன்மை இயக்கி, அவனின் வெறுப்பைத் தணிப்பதற்கு மாறாக, நாம் வெறுப்பின் உச்சக்கட்டம் அடைந்து, அவனை உதைக்கும் தன்மை வருகின்றது.
ஆனால், நாம் தவறு செய்யவில்லை. நுகர்ந்த உணர்வுக்கொப்ப, நமது உயிர் நம்மை இயக்குகின்றது. நுகர்ந்த உணர்வுக்கொப்ப, உயிர் நம்மை இயக்கினாலும்,
நமது ஆறாவது அறிவால்,
நமது உயிரான்மாவை,
நம் வழிக்கு கொண்டு வரமுடியும்.
நாம் இதைக் காட்டிலும், வலுவான உணர்வுகளை நுகர்ந்தோம் என்றால், நமது உயிர் அவ்வுணர்வின் வழி, நம்மை வழி நடத்தும்.

தீமைகளை நீக்கும் உணர்வுகளை நாம் நுகர்ந்தறிந்தால், நமது உயிர், நம்மிடத்தில் தீமைகளை நீக்கும் உணர்ச்சிகளை ஊட்டி, நமது அங்கங்களைச் செயல்படுத்தும்.
தீமைகளை நீக்கும் அருள் உணர்ச்சிகள்,
நமது இரத்தத்தில் அணுவாக உருவாகும்.
இதைப் போன்று, தீமைகளை நீக்கும் அரும் பெரும் சக்திகளை நாம் நுகர்ந்து, அதன் உணர்ச்சிகளை நம்முள் இயக்கினால், நமது சொல்லில் நயமும், நமது சொல்லைக் கேட்பவரிடத்தில் இனிமையும், நமது சொல்லை ஏற்றுக் கொள்வோரிடத்தில் மகிழ்ச்சியும் வருகின்றது.
விஞ்ஞானிகள், தம் உணர்வின் தன்மைக்கேற்ப இயங்கும் “ரோபாட்” (robot) என்ற இயந்திரத்தின் தன்மையைக் கொண்டு வருகின்றனர். உதாரணமாக, பிரான்சு நாட்டில் நோயாளி இருக்கிறார் என்றால், அவரைக் குணப்படுத்துவதற்கு அமெரிக்காவிற்கு எடுத்து செல்ல முடியாது.

ஆனால், அந்த நோயாளிக்கு ஆபரேசன் செய்தாக வேண்டும். ஆபரேசன் செய்ய வேண்டிய டாக்டரோ அமெரிக்காவில் இருக்கின்றார். இதனால், விஞ்ஞானிகள் என்ன செய்கின்றார்கள்?

நோயாளியின் அருகில் ஒரு ரோபாட்டை வைத்து, அமெரிக்க டாக்டரின் கட்டளைகளை, சாட்டிலைட் (satellite, செயற்கை கோள்) மூலம் அனுப்பி, ரோபாட்டை இயக்கி, நோயாளிக்கு ஆபரேசன் செய்கின்றனர்.
நோயாளியின் உடல் உறுப்புகளிலுள்ள, நுண்ணிய அலைகளை ரோபாட் கவர்ந்து, தெளிவான நிலையில் செயல்படுகின்றது. 

மனிதர் கண் கொண்டு பார்த்து கூட, அவ்வளவு சீராகச் செயல்படுத்த முடியாது. ஆனால், ரோபாட் இயந்திரம் தெளிவான நிலையில் இயங்குகின்றது.
எலெக்ட்ரிக், எலெக்ட்ரான் என்ற நிலை கொண்டு, ரோபாட்டை இயக்குகின்றனர். ஆபரேசன் செய்யப்பட வேண்டிய, நோயாளியின் உடல் உறுப்புக்கு கீழ், நரம்பு மண்டலமோ, தசை மண்டலமோ இருக்கிறதென்றால், அதற்குத் தக்கவாறு கத்தியைப் பாய்ச்சி, குறிப்பிட்ட உறுப்புக்கு கீழ் கத்தி போகாதவாறு செயல்பட்டு, பிழை இல்லாத நிலையில், ரோபாட் ஆபரேசனைச் செய்கின்றது. 

ஆனால், ரோபாட்டை விஞ்ஞானிகள் அமெரிக்காவில் இருந்து இயக்குகின்றனர்.
இதைப் போன்று தான், நமது குழந்தைகள் நமது உணர்வின் தன்மை கொண்டுதான் வளர்கின்றன என்பதை நாம் உணரவேண்டும். நாம் அந்த குழந்தைகளுக்கு, நல் சக்தி ஊட்ட முடியும். அவர்களிடத்தில் உள்ள தவறுகளை நீக்க முடியும்.
அதாவது, “துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நான் பெற அருள்வாய்.. ஈஸ்வரா.. துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் என் உடல் முழுவதும் படர்ந்து என் இரத்த நாளங்களில் கலந்து, என் உடலில் உள்ள ஜீவான்மா, ஜீவ அணுக்கள் அனைத்தும் பெற அருள்வாய்… ஈஸ்வரா…” என்று எண்ணி, நமது உடலில் உள்ள உறுப்புகள் அனைத்திற்கும். வீரிய உணர்வை செலுத்திப் பழகுதல் வேண்டும்.
இப்படிச் செலுத்திய பின், நமது குழந்தையை எண்ணி, “துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் என் குழந்தை பெறவேண்டும், அவன் ஞான சக்தியும், ஞாபக சக்தியும் பெறவேண்டும்.

அவன் சிந்திக்கும் ஆற்றலும், தெளிவைத் தரும் உணர்வுகளையும் பெறவேண்டும்” என்று எண்ணி நாம் இதன் வழி செயல்பட்டால், அவனைப் பிழைகளில் இருந்து, தவறுகளில் இருந்து விடுவிக்க முடியும். அவனுக்குச் சிந்திக்கும் ஆற்றலையும் ஊட்ட முடியும்.
எப்படி அமெரிக்காவிலிருந்து, பிரான்சிலுள்ள ரோபாட்டை இயக்குகின்றனரோ, இதை போன்று, நாம் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியின் துணை கொண்டு, நாம் குழந்தைகளை முறைப்படுத்தி, திருத்தி வாழச் செய்ய முடியும். இதை உங்களுடைய அனுபவத்தில் உணர முடியும். எமது அருளாசிகள்.