ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

August 24, 2014

துருவ நட்சத்திரத்தின் உணர்வைத் துடுப்பாகப் பயன்படுத்தி எல்லையை அடையவேண்டும் - ஞானகுரு

நமது குருநாதர் சாதாரணமாக விடவில்லை. ஒவ்வொரு நொடியிலும் மனிதர்களின் உணர்வுகள் எப்படி இயங்குகின்றது? அதிலிருந்து நீ எப்படி தப்புவது? என்று எமக்கு (ஞானகுரு) உணர்த்தினார்.

ஒருவர் கடலில் ஒரு தீவைக் குறி வைத்து படகைத் துடுப்பின் உதவி கொண்டு செலுத்துகின்றார், கடலில் எதிர் அலைகள் வந்து கொண்டிருந்தாலும், அவர் எதிர் அலைகளைச் சமாளித்து படகைச் செலுத்துகின்றார்.

இதில் "தீவு என்பது துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டம்" என்று நாம் கருதிக் கொண்டு,  துருவ நட்சத்திரத்தின் பேரருள் உணர்வுகளை நாம் துடுப்பாக பயன்படுத்திக் கொண்டு,  இந்த உலக வாழ்க்கையில் வரும் தீமைகளை வென்றுநமது நல் ஞானப் பயணத்தை  நடத்தி வரவேண்டும்.

நாம் உடல் மீது பற்று வைத்தால்,
மீண்டும் பிறவியை அடைவோம். 
நாம் உயிர் மீது பற்று வைத்தால், 
பிறவி இல்லா நிலையை அடைவோம்.