ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

August 16, 2014

எல்லோரையும் ஒருங்கிணைக்கும் ஞானகுரு

சிறு துளி பெரு வெள்ளம் ஆவது போன்று, ஒரு செடி பல விதைகளை அளித்து அது பல நூறு  செடிகள் உருவாவதற்குக் காரணமாகின்றது.

அதைப் போன்று, மகரிஷிகள் அருள் சக்தியை உங்கள் உணர்வில் சத்தாக விளைய வைத்து உலகம் முழுவதும் படர்ந்து வரும் நஞ்சின் தன்மையில் இருந்து நம்மையும், மக்களையும், இந்த பூமியின் தன்மையும் வாழவைக்கச் செய் வேண்டும்.

அப்படி வாழ வைக்கச் செய்யும் நிலையாக மனிதனின் தன்மைகளை நிலைக்கச் செய்திடும் செயலாக, அவ்வுணர்வின் தன்மை வளரச் செய்வதற்கும், மற்றும் மகா ஞானிகளின் உணர்வுகள் நமக்குள் சென்றபின், இந்த உடலில் ஒளிசரீரம் பெறும் தன்மைக்காக நாம் இயங்க வேண்டும் என்ற நோக்கத்திற்காக, 
எல்லோரையும் ஒருங்கிணைத்து,
தீமைகள் எவ்வழியில் எவ்வுருவில் வந்தாலும்
அதைத் தடை செய்யும் ஆற்றலை  நீங்கள் பெறுவதற்குத்தான்,
இந்த உபதேசத்தின் வாயிலாக, 
எமது செயல்கள் நடைபெறுகின்றது.

உலகத்தை அழித்துக் கொண்டிருக்கும் விஷத்தன்மை படர்ந்து மனிதனுடைய எண்ணத்தையும் அழித்துக் கொண்டிருக்கிறது.

அதை மீட்க வேண்டும் என்ற நிலையில், மது குருநாதர் காட்டிய அருள் வழியில், நமக்குள் எடுத்துக் கொண்ட உணர்வின் சக்தியை, உலகம் முழுவதற்கும் பரவச் செய்யமுடியும்.

அப்படிப் பரவச் செய்ய முடியும் என்ற நம்பிக்கையில், அருள் ஞானிகளின் உணர்வுகள் நான்கு திசைகளிலும் பரவி, இப்பொழுது அதுவும் வளர்ச்சியாகி வருகின்றது. 

நாம் மட்டுமல்ல. அந்த மகரிஷிகள் தியானம் என்ற நிலையில்  உலகில் ஒவ்வொரு பாகத்திலும் இதைச் செயல்படுத்தி வருகின்றனர்.