ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

September 19, 2026

விக்கல்

விக்கல்


நம்முடைய நண்பர்கள் பலராக நாம் இருப்பினும் அமெரிக்காவில் ஒருவர் இருக்கிறார் என்றால் நம் நட்பின் தன்மை அவர் உடலிலே பதிவாகி இருக்கும்.
 
அப்படிப் பதிவாகி இருந்தால் அந்த நண்பன் நமக்குத் தக்க நேரத்தில் உதவி செய்தான் என்று நாம் எண்ணும் பொழுது இந்த உணர்வுகள் அங்கே மோதி விக்கல் ஆகின்றது.
 
ப்பொழுது அவர் நினைப்பார் யாரோ என்னை நினைக்கிறார் என்று. இப்படி நட்பினால் விக்கல் ஏற்படுவது ஒன்று.
 
அதே சமயத்தில் தன் ஆசைகளால் ஏற்பட்ட உணர்வின் அணுக்களின் தன்மை அது அதிகமாகி விட்டால் இந்த நினைவின் தன்மை அந்த அணுக்கள் மோதும் பொழுது ஈர்க்கும் சக்தி அதற்கு அதிகமாகும்.
 
அப்பொழுது சிலருக்கு அது விக்கலாக அடிக்கடி வந்து கொண்டே இருக்கும். அதை நிறுத்துவதற்காக வைத்தியத்திற்குச் செல்வார்கள்.
 
நண்பன் என்று வரும் பொழுது இவரின் நினைவின் ஆற்றல் அங்கே விக்கலாகின்றது. ஆனால்
1.ஆசையின் உணர்வுகள் அதைப் பெற வேண்டும் இதைப் பெற வேண்டும் என்று இப்படி அதிகரித்து விட்டால்
2.இடைறித்து அந்த ஆசைகள் நிறைவேறவில்லை என்றால் இந்த உணர்வுகள் இரண்டும் மோதும் பொழுது
3.ஒன்று இதனுடைய ஆசைக்கு இழுப்பதும் மற்றொன்று அதனுடைய ஆசைக்கு இழுப்பதும் இத்தகைய நிலை வரும்பொழுது
4.அந்த க்க நிலைகளில் இரண்டும் அதனுடைய உணர்வுகள் எதிர்மறையாகி இழுக்கப்படும் பொழுது விக்கல் அதிகமாகும்.
 
அப்போது அதை நீக்க மருத்துவரைத் தான் தேடிச் செல்வார்கள். இந்த விக்கல் வேறு… நட்பினால் ஏற்படும் விக்கல் வேறு.
 
இயற்கையின் இயக்க நிலைகள் எவ்வாறு இருக்கிறது…? என்றும் நாம்  நுகர்ந்த உணர்வுகளை உயிர் எவ்வாறு இயக்குகிறது…? என்பதையும் குருநாதர் காட்டுகின்றார்.

நமக்குள் இயங்கிக் கொண்டிருக்கும் சில விஞ்ஞான அலைவரிசைகள்

நமக்குள் இயங்கிக் கொண்டிருக்கும் சில விஞ்ஞான அலைவரிசைகள்


இன்று விஞ்ஞான அறிவின் துணை கொண்டு எத்தனையோ பல நிலைகளை இருந்த இடத்திலிருந்தே காணுகின்றோம். எங்கோ ஒலி/ஒளி அலைகள் ஒளிபரப்பு செய்வதை வீட்டிலிருந்து நாம் டிவி மற்றும் எத்தனையோ சாதனங்கள் மூலம் காணுகின்றோம்.
 
அதைப் போன்று எத்தனையோ உணர்வுகள் நம் உடலுக்குள் உண்டு. அதுவும் அலை வரிசையில் தான் இயங்குகின்றது. அதில் எந்த ஸ்டேஷனைத் திருப்பி வைக்கின்றோமோ அந்த அலைவரிசையை நாம் காணுகின்றோம்.
 
உலகில் யார் யாரையெல்லாம் நாம் சந்திக்கின்றோமோ இந்த உணர்வுகள் அது எல்லாம் ஒவ்வொரு ஸ்டேஷனாக அமைகின்றது. தீங்கு செய்தவரை எண்ணினால் அவரின் உணர்வலைகள் படர்ந்து இருப்பதை நுகர்ந்து அவர் மேல் வெறுப்பும் வேதனையும் கொள்கின்றோம்.
 
அந்த வேதனைப்பட்ட உணர்வுகளை நாம் அறிந்து கொண்டால் அதே உணர்வுகள் பதிவாக்கிய பின் அந்த ஸ்டேஷனைத் திறந்து வைத்தால் அந்த வேதனை உணர்வுகள் நமக்குள் வருகின்றது.
 
விஞ்ஞான அறிவிற்கும் இதற்கும் நாம் நுகர்ந்து கொண்ட உணர்வுகள் அணுவாக விளைகின்றது.... அந்த அணுவினைப் பெருக்கி விடுகின்றது.
 
சாதனங்கள் மூலம் அதை அறிய முடிகின்றது இயக்கும்போது உணர முடிகின்றது பின் அழிந்து விடுகின்றது. ப்படி ஒளிபரப்பும் உணர்வுகள் இயந்திரத்தில் தான் இயக்குகின்றார்கள்.
 
இயந்திரத்தில் உருவாக்கிய உணர்வின் தன்மை நாம் அதை நுகர்ந்து பதிவாக்கி விட்டால் அதை உடலுக்குள் ணுவாக மாற்றி விடுகின்றது உயிர்.
 
தீமைகள் எங்கெல்லாம் நடக்கின்றதோ அவை ஒளிபரப்பாகிவிட்டால் இந்த உணர்வின் தன்மை கொண்டு தீமை என்று அதை எண்ணினாலும் அது வேதனை உணர்ச்சியைத் தூண்டுகின்றது.
 
வேதனையைத் தூண்டும் போது வேதனையை உருவாக்கும் அணுவாகவே உருவாகி விடுகின்றது. பின் அதனின் உணர்வை நமக்குள் வளர்க்க எதன் அலைவரிசையில் எதை வெளிப்படுத்தினார்களோ அதை மீண்டும் நாம் நுகர நேர்கின்றது.
 
உதாரணமாக உலகில் எங்கோ நடக்கும் அதிர்ச்சியான செய்திகளைப் படமாக்கி அதன் வழி வெளிப்படுத்தும் போது அதே அதிர்ச்சியான உணர்வைக் கண் கொண்டு பதிவாக்கும் பொழுது அதிலிருந்து வெளிப்பட்ட அலைகளை நாம் நுகர முடிகின்றது. தே அதிர்ச்சியின் உணர்வுகள் நமக்குள் விளைகின்றது.
 
அவ்வாறு வெளி வரும் பொழுது அழியும் சரீரங்களை நாம் பார்க்கப்படும் பொழுது உடலுக்குள் அழித்திடும் அணுக்களாக டி.பி. போன்ற கொடூர நோய்கள் உருவாகக் காரணமாகின்றது.
 
அதே போல வைரஸ் நோய்களும் ஊடுருவி உடலில் உள்ள அணுக்களைச் செயலாற்றதாக மாற்றும் நிலை வருகின்றது. எலக்ட்ரானிக் சாதனங்கள் மூலம் இது போன்று ஏற்படுகிறது.
 
விஞ்ஞான அறிவால் இதையெல்லாம் நாம் கண்டு வந்தாலும் அலைவரிசையில் வெளிப்படுத்தும் போது அதிலிருந்து நுகர்ந்த உணர்வு நமக்குள் அணுவின் தன்மையாக அடையச் செய்கின்றது நம் உயிர்.
 
1.இதை வென்றிட்ட அருள் மகரிஷிகள் உணர்வைக் காலை துருவ தியான நேரங்களில் கணவனும் மனைவியும் எடுத்து
2/.அதைக் கணவனுக்குக் கிடைக்க வேண்டுமென்று மனைவியும் மனைவிக்குக் கிடைக்க வேண்டும் என்று கணவனும்
3.யாரெல்லாம் இதைச் சீராகச் செயல்படுத்துகின்றார்களோ இந்த உணர்வுகள் கூர்மையாக
4.துருவ நட்சத்திரத்திலிருந்தும் சப்தரிஷி மண்டலத்தில் இருந்தும் அந்த சக்திகளை எடுக்கப்படும் பொழுது
5.அதன் அவதாரமாக இந்த உடலை விட்டு நாம் சென்ற பின் ஒளிச் சரீரமாகப் பிறவி இல்லாத நிலை அடைய உதவும்.
 
குரு வழியில் அருள் மகரிஷிகள் அருள் சக்திகளை நீங்கள் பெற்று வாழ்க்கையில் வரும் இருளை வென்று இருளை வென்றிடும் உணர்வுகளை நீங்கள் பெற்று இருளை வென்றிடும் சக்தியாக உயிருடன் ஒன்றிய உணர்வுகள் அனைத்தும் ஒளியின் சுடராக ஆகி வாழ்ந்து வளர்ந்திட எமது அருளாசிகள் உங்களுக்கு உறுதுணையாக இருக்கும்.
 
மகரிஷிகள் அருள் சக்தியும் குரு அருளும் நீங்கள் பெற எமது அருள் உங்களுக்கு உறுதுணையாக இருந்து வாழ்க்கையில் என்றென்றும் மகிழ்ந்து வாழ்ந்திடப் பிரார்த்திக்கின்றேன்.