
அண்டம் – பிண்டம் - ஒளி
1.புவியின் ஈர்ப்புக்குள் நிற்காது இதனின்று விடுபட விண்ணை நோக்கி ஏகி அண்டத்தின் ஆற்றல் மிக்க சக்தியைப் பெற வேண்டும் என்று
2.இந்த மண்ணுலகில் தோன்றிய பிண்டத்தின் உணர்வுக்குள்
3.அந்த அண்டத்தின் உணர்வலைகளைச் சக்தி வாய்ந்ததாக மாற்றும் எண்ணங்களை உருவாக்கினார்கள்
4.அன்று கடும் தவத்தால் தன் எண்ண வலிமையால் சந்தர்ப்பத்தால் கிடைத்த உணர்வின் துணை கொண்டு.
1.பேரண்டத்தின் சக்தியைத் தனக்குள் கூட்டி… அது நஞ்சு கொண்டதாக அது இருப்பினும் அதனின் வலு துணை கொண்டு
2.புவியில் விளைந்த நஞ்சின் தன்மையை அடக்கி அந்த ஆற்றல்மிக்க உணர்வின் தன்மை தனக்குள் வளர்த்துப் புவியின் பிடிப்பை அறுத்து
3.விண்ணின் ஆற்றலைத் தனக்குள் பெருக்கி உயிருடன் ஒன்றிய உணர்வின் சத்தாக ஒளியின் சிகரமாக உணர்வை மாற்றினார்கள்.
2.அதனின் திறன் கொண்டு மண்ணுலகில் தோன்றிய இந்தப் பிண்டத்தில் அண்டத்தின் உணர்வுகளைப் பிண்டத்திற்குள் மாற்றி
3.இன்றும் விண்ணுலக ஆற்றலைத் தனக்குள் பெருக்கி உடலை விட்டு உயிரான்மா சென்றபின்
4.அண்டத்தின் உணர்வின் சத்தை அது இங்கே மண்ணுலகிற்கு மாற்றி வருவதற்கு முன் அதனையே அடக்கி அதைக் கணங்களுக்கு அதிபதியாக்கி
5.இந்தப் பிண்டத்திற்குள்ளேயே அதை உருவாக்கினான் மகரிஷி.
1.விண்ணின் ஆற்றல் புவியின் ஈர்ப்புக்குள் நுழையும் தருவாயில் அதனையும் தனக்குள் நுகர்ந்தறிந்து அதை ஒளியாக மாற்றி
2.இந்த மனித உடலில் இப்பொழுது நாம் இருப்பது போன்று உயிருடன் ஒன்றி உணர்வின் சத்தை ஒளியின் சரீரமாக மாற்றி
3.அதனின்று வெளிப்படும் உணர்வின் ஆற்றல் மற்றதை அடக்கி அடக்கிடும் ஆற்றல்மிக்க நிலைகளை அவர்கள் கணங்களுக்கு அதிபதி ஆக்கி
4.மற்ற உணர்வை அடக்கி ஒளியின் தன்மையில் பொருளைக் கண்டிடும் சக்தியாக விளைந்திட்ட
5.அந்த உணர்வின் ஆற்றல் மிக்க அருள் ஞானியின் உணர்வுகள் நம்முன் தோன்றிக் கொண்டிருக்கும் இந்நிலையில்
6.உபதேசத்தின் வாயிலாகக் கேட்டுணரும் பொழுது ஊழ்வினையாகப் பதிவாகி
7.அதனையே நினைவு கொண்டு அதனின் ஆற்றலை நீங்கள் பருகும் நிலைக்கு அதைப் பெருக்கும் தன்மைக்காக
8.கூட்டுத் தியானங்கள் மூலம் அதனை ஆற்றல்மிக்க சக்தி வாய்ந்த வித்தாக உங்களுக்குள் ஊழ் வினையாகப் பதிவாகி
9.தீமைகள் அறியாது நமக்குள் புகுந்தாலும்… அப்போது நினைத்த மாத்திரத்தில் மகரிஷிகள் அருள் ஒளியைக் கவர்ந்து நம் உடலுக்குள் செலுத்தி
10.தங்கத்திற்குள் திரவகத்தை ஊற்றினால் செம்பு பித்தளையை அது பிரிப்பது போன்று
11.நமக்குள் அந்த அருள் மகரிஷிகள் உணர்வைக் கணங்களுக்கு அதிபதி ஆக்கினால்
13.ஒளியின் சரீரமாக நம் உடலை அது காத்து அதுவே குருவாக நின்று நல்வழிப்படுத்தும் நிலையாக
14.இந்த மண்ணுலகில் அந்த அண்டத்தின் உணர்வை மாற்றிட்ட
15.அது இந்தப் பிண்டமான உடலுக்குள்ளேயே இருந்து அண்டத்தை எட்டிடும் ஒளியாக அதைப் பற்றி
16.அதனின் நிலைகள் கொண்டு நாம் அங்கே சென்று இந்தப் பிண்டத்தின் உணர்வுக்குள் விளைந்த நஞ்சினை அறுத்து நஞ்சினை ஒடுக்கி
17.விண் சென்ற அருள் மகரிஷிகளின் அருள் வட்டத்தில் நாம் இணைந்திடும் நிலைக்குத் தான் யாம் சொல்லும் இந்த உபதேசம்.
1.அண்டத்தின் நிலையைப் பிண்டத்தில் சேர்ப்பித்த அந்த மகரிஷிகளைப் போன்று
2.அவர்கள் விளைய வைத்த உணர்வின் தன்மை அண்டத்தின் ஆற்றலை அவர் அடக்கிடும் நிலையும்
3.அவர்கள் உணர்வின் துணை கொண்டு அண்டத்தின் ஆற்றலை நம் பிண்டத்திற்குள் சேர்த்து இந்த உடலை விட்டுச் சென்றாலும்
4.அண்டத்தின் உணர்வின் தன்மை தீமைகள் இருப்பினும் ஒளியின் சுடராக மாற்றிடும் செயலாக