
என்னிடமிருந்து உயர்ந்த சக்தியைப் பெறும் சரியான முறை
அருள் ஞானத்தின் உணர்வை நீங்கள் எடுத்தால்
உங்களுக்குள் தீமை விளைவிக்கும் நிலைகளை அது தூய்மைப்படுத்தும். இது தான் விநாயகர் சதுர்த்தி.
1.உங்களை
அறியாது
வந்த தீமையான உணர்வுகளை நீக்கும் ஆற்றல் - நீங்கள் அந்த சக்தி பெற வேண்டும் என்பதற்குத்தான்
2.என்
குருநாதர் காட்டிய நிலைகளை உணர்வுகளை நான் பெற வேண்டும் பெற வேண்டும் என்ற உணர்வை
வளர்த்து
3.அந்த
உணர்வின் எண்ணங்களை இரவிலும் சரி இன்றும் சரி இப்போதும்
சரி அந்த நினைவு கொண்டு தான் அலைகளைப் பரப்புகின்றேன்.
4.எல்லா நேரத்திலும் இரவிலும் இன்றும் அதைத் தான் செயல்படுத்துகின்றேன்.
பல ஆயிரம்
பேர் எம்மைச் சந்திக்க வருகின்றீர்கள்… சாமி எனக்குக் கஷ்டமாக இருக்கின்றது… தலை
வலிக்கின்றது…
மேல் வலிக்கின்றது என்றெல்லாம் உணர்வைப் பாய்ச்சுவீர்கள்.
என் உணர்வு உங்களிடம் இருப்பதால் எந்த வகையில்
நீங்கள் எம்மை பதிவுப் செய்கின்றீர்களோ அந்த வகையில் தான்
உங்களிடம் வரும்.
சாமி கஷ்டத்தை எல்லாம் தீர்ப்பார் என்று எண்ணிப்
பதிவு செய்து விட்டால் அதைத்தான் நீங்கள் திரும்ப நினைவுக்குக் கொண்டு வருவீர்கள்.
1.சாமி…! நாங்கள் மகரிஷிகளின் அருள்
சக்தி பெற வேண்டும்
2.அந்த
உயர்ந்த சக்தி நாங்கள் பெற வேண்டும் என்று எண்ணினால்
3.என்னிடம்
இருந்து அந்த சக்தி உங்களுக்குக் கிடைக்கும்… அது வளரும்.
ஆனால் அதற்கு மாறாக… என்
கஷ்டம் எல்லாம் இப்படி இருக்கிறது… தலைவலி எனக்கு இப்படியே தொல்லை கொடுத்துக் கொண்டே
இருக்கின்றது என்றால் அதைத் தான் வளர்க்கின்றீர்கள் என்று பொருள்.
அதே சமயத்தில் என்னிடம் பேசி இதே வேதனையான உணர்வைப் பதிவு செய்து விட்டால்… நீங்கள் எண்ணும் போதெல்லாம் “என்
ஆன்மாவிலே அந்த உணர்வுகள் வந்து மோதும்…”
இதையெல்லாம் தடுத்து நிறுத்துவதற்கு அந்த
1.மகரிஷிகளின்
அருள் சக்திகளை நான் வளர்த்துக் கொண்டே இருக்க வேண்டும்.
2.கொஞ்சம் ஏமாந்தால்
உங்களை மாதிரி என்னையும் கொண்டு வந்து விடும்.
3.24 மணி நேரமும்
மகரிஷிகளின் அருள் வட்ட்த்திலேயே என் நினைவுகளைச் செலுத்திக் கொண்டே இருக்க வேண்டும்.
சிறிது ஏமாந்தாலும்
போய்விடும். ஒரு நாளைக்கு அந்த மாதிரி ஆகிவிட்டால் அதைக் கழி[ப்பதற்கு
நான் படும் சிரமம் எனக்குத் தான் தெரியும்.
குருநாதரிடம் கூட… அவர் என்னைக் காட்டிற்குள் அழைத்துச் செல்லும்
பொழுது கூட அத்தகைய சிரமம் எனக்குத் தெரியவில்லை முதலில் ஏதேதோ சொல்வார். அப்போது
அந்த உணர்வுகளை வளர்த்துக் கொண்டபின் தீமையிலிருந்து விடுபடும் சந்தோஷம்
வரும்.
1.கொஞ்ச நேரத்திற்குக் கஷ்டமாக இருக்கும் அதற்குப் பின் சந்தோசம் தான்
வரும்.
2.எவ்வளவு
நேரம் வருத்தப்பட்டேனோ அந்த அளவிற்கு சந்தோஷத்தை உருவாக்கும்.
குருநாதர் எம்மை அப்படித்தான் வளர்த்தார்.