ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

February 14, 2023

நம் பெரு மூளையிலே உருவாகும் “தீமையை வடிகட்டும் அமிலம்”

எத்தகைய தீமைகள் வந்தாலும் அதை எதிர்த்துத் தாக்கும் சக்தி நமக்கு வேண்டும். இயற்கையாகவே நமக்கு அது உண்டு.

எப்படி…?

1.நாம் உணவாக உட்கொள்ளும் உணவுக்குள் மறைந்து வரும் நிலையை அல்லது
2.நாம் சுவாசிக்கும் உணர்வுக்குள் வரும் தீமையை
3.”பெரு மூளை உருவாக்கும் திரவகத்தை” - சளி என்ற நிலையில் அதை முன் செலுத்தி
4.நாம் நுகரும் உணர்வுகளை வடிகட்டி மற்ற உணர்வுடன் கலக்கச் செய்து
5.தீமையிலிருந்து விடுபடும் சக்தியாக இயற்கையிலேயே பரிணாம வளர்ச்சியில் வந்த மனிதனுக்கு உண்டு.

ஆனால் மற்ற உயிரினங்களோ விஷத்தின் தன்மையைக் கவர்ந்து விஷமான அணுக்களை உருவாக்கும் சக்தியே பெறுகின்றது ஆனால் மனிதனுக்கு இந்த ஆற்றல் உண்டு.

பெரு மூளையிலிருந்து வரும் அந்த அமிலம் உடலுக்குள் எதிர்ப்படும் உணர்வுகளை அதை வடிகட்டிச் சளி வழியாக வெளியேற்றி விடுகின்றது

அதாவது
1.நமது மூக்கின் நேர் பகுதியில் நஞ்சு உள்புகாது தடுத்துக் கொள்ளும் சளி என்ற நிலை உருவாகிறது.
2.சுவாசத்தினை அதிலே வடிகட்டித் தான் உள்ளே அனுப்புகின்றது.

ஆனால் அப்படி வடிகட்டினாலும் சந்தர்ப்பத்தில் வெறுப்பு வேதனை சலிப்பு சங்கடம் அதையெல்லாம் அதிகமாக எடுக்கும் பொழுது இந்த உணர்வின் அழுத்தம் வடிகட்டும் நிலையைத் தடுத்து இது வலுப்பெற்று விடுகின்றது.

நாம் நுகர்ந்த அந்தத் தீமையின் உணர்வுகள் உமிழ் நீராக மாறி ஆகாரத்துடன் கலந்து அதற்குத் தக்க இரத்தமாக மாறி நம் இரத்த நாளங்களில் அது பெருகத் தொடங்கி விடுகின்றது.

அப்படிப் பெருகத் தொடங்கினால் பல கோடிச் சரீரங்களில் தீமைகளை நீக்கிடும் திறன் பெற்று வந்தாலும்… நம்மை அறியாது நுகர்ந்த உணர்வுகள் இரத்தத்தில் கலந்து நம் உடலில் நல்ல உறுப்புகளை உருவாக்கிய அணுக்களில் விஷத் தன்மையாகச் சேர்ந்து விடுகிறது.

1.அப்போது அந்த அணுக்கள் அனைத்தும் செயலிழந்து இந்த மனித உடலை உருக்குலையச் செய்து
2.உடலை விட்டுப் பிரிந்து செல்லும் பொழுது
3.எதனால் இந்த உடல் சுருங்கியதோ… எதன் உணர்ச்சிகளால் அது உருவானதோ… அதற்குத்தக்க உயிர் வெளியே சென்ற பின்
4.பரிணாம வளர்ச்சியில் தீமைகளை நீக்கி வளர்ந்து வந்த நிலையை மாற்றி
5.இன்று தீமைகளைச் சேர்த்திடும் தன்மை கொண்ட உடலாக மாற்றிவிடும் நமது உயிர்.

இதை எல்லாம் தெளிவாக அறிந்து கொண்ட ஞானி தான் அகஸ்தியன். அந்த அகஸ்தியன் துருவனாகி துருவ மகரிஷி ஆகி தன் உடலில் அப்படி வந்த நஞ்சினை மாற்றி… மாற்றி… உணர்வின் தன்மை ஒளியாக மாற்றிக் கொண்டான்.

அவன் ஒளியாக மாறக் காரணமானது “துருவத்திலிருந்து வரும் நிலை தான்…!”

1.விண்ணுலக ஆற்றலை பூமி அதன் வழியில் எவ்வாறு கவர்கிறது…? என்பதை உணர்ந்து
2.அந்த நஞ்சினை… துருவத்தின் ஆற்றலைத் தனக்குள் பெற்று அவனுக்குள் பெருக்கி
3.அதன் வலு அதிகமாகும் பொழுது இந்த நஞ்சினை வென்றிடும் ஆற்றல் பெற்றதனால்
4.மனித உடலை மாற்றியமைக்கும் சக்தி பெற்று ஒளியாக மாற்றுகின்றான் அகஸ்தியன்.

அவனுக்குத் திருமணம் ஆன பின் கணவன் மனைவி இரு உணர்வும் ஒன்றாகி இரு உயிரும் ஒன்றாக ஆன பின்…
1.விண்ணுலக ஆற்றலின் உணர்வின் தன்மையை உயிரைப் போல உணர்வின் அணுக்களை மாற்றி
2.எதிலிருந்து பூமி கவர்கின்றதோ அதை உற்று நோக்கி அதைத் தனக்குள் கவர்ந்து
3.விஷத்தைப் பிளந்து விஷத்தை ஒளியாக மாற்றிடும் ஆற்றலை இருவருமே பெறுகின்றனர்.

அதை நீங்களும் பெறக்கூடிய தகுதிக்குத் தான் இதைத் தெளிவாக உணர்த்துகின்றோம்.