ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

February 6, 2013

நினைத்தவுடன் உங்களுக்கு அருள் சக்தி கிடைக்கும்

நீங்கள் நினைத்தவுடன் ஆத்மசுத்திக்கு ‘’ஓம் ஈஸ்வரா’’ என்று உயிருடன் தொடர்பு கொண்டு, அந்த மகரிஷிகளின் அருள் சக்தியை நாங்கள் பெறவேண்டும் என்று ஏங்கும்போது   அந்த அருள் சக்தியை நீங்கள் பெற முடியும் என்று யாம் உங்களுக்கு உறுதியாகச் சொல்கின்றோம்.

காரணம், மகரிஷிகள் அவர்கள் எடுத்துக்கொண்ட ஆற்றல்
எவ்வழிகளில் பெற்றார்களோ
அதை அவருடைய நிலைகளை உபதேசித்து,
உங்கள் உணர்வலைகளுக்குள் பதியச்செய்யும்போது,
இந்த உணர்வுகள் உங்களுக்குள் வித்தாக மாறுகின்றது.  
  
அந்த வித்திற்கு, நீங்கள் துருவ நட்சத்திரத்தின் பேரொளியை எடுத்து ஊட்டினால்தான் அந்த வித்திற்குச் சக்தி கூடும். 

அப்பொழுது அந்த ஞானியருடைய உணர்வலைகள், காந்தத்தின் பவர் கூடினால்தான் அந்த ஞானியருடைய எண்ண அலைகளுக்கு சக்தி கூடுகின்றது.

அப்பொழுது நாம் ‘’ஓம் ஈஸ்வரா’’ என்று உயிருடன் தொடர்பு கொண்டு, நாம் நினைவுபடுத்தி, அந்த மகரிஷிகளின் அருள் சக்தியை நான் பெற வேண்டுமென்று ஏங்கி, அந்த மகரிஷிகளின் அருள் சக்தியை என் ஜீவாத்மா பெற வேண்டுமென்று எண்ணி, நம் உடலுக்குள் எல்லா அணுக்களிலும் செலுத்த முடியும்.

அவ்வாறு எல்லா அணுக்களிலும் செலுத்தி, சர்வ தீமைகளையும் நீக்கி, அனைத்தையும்  ஒளியாக மாற்றி, நாம் மகிழ்ந்து வாழ முடியும், பிறவியில்லா நிலை என்ற அழியா ஒளிச் சரீரம், நாம் அனைவரும் பெற முடியும். 


மகரிஷிகள் காட்டிய கல்கி அவதாரத்தை அடைய முடியும் என்ற தன்னம்பிக்கை கொள்ளுங்கள்.


இந்த உடலே குப்பையானாலும், இந்தக் குப்பைக்குள் உணர்வின் தன்மையை மணியாக்கி, குப்பையை வயலில் போடும் பொழுது அதனின் சத்து மணியாவதைப் போன்று, பல உணர்வின் தன்மை நம் உடலுக்குள் வந்தாலும் நமது உடலுக்குள் வைரத்தைப் போல அதை மணியாக்க வேண்டும்.

எமக்கு குருநாதர் பதிவு செய்தது போன்று ஒவ்வொன்றையும் தொட்டுக் காண்பித்து அந்த உணர்வின் ஆற்றலை உங்களுக்குள் பெருக்கச் செய்து கொண்டிருக்கின்றோம்.

மகரிஷிகளுடைய அருள் என்றுமே ஒன்றுடன் ஒன்று தொடர்பு கொண்டது.


ஆக ஒன்றுடன் ஒன்று தொட்டு நம் சரீரம் இயங்கினாலும், நம் குருநாதர் காட்டிய அருள்வழியில் மகரிஷிகளுடன் தொடர்பு கொண்டு அந்த ஆற்றல்களை நீங்கள் நிச்சயம் பெறமுடியும். 

எமது அருளாசிகள்.