ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

February 10, 2013

விஷத்தன்மைகளைக் கிழித்தெறியும் மெய்ஞானிகளின் அலைவரிசை

‘’ஓங்காரக்காளி’’ என்று யாம் சொன்ன ஓசோன் திரையையும், இன்று அணு குண்டினால் சிதறடித்துவிட்டார்கள். இதனால், விஷத்தன்மைகள் பூமியில் வந்து படர்ந்து கொண்டிருக்கின்றது.

விஞ்ஞானக் கருவிகள் கொண்டு, விண்ணிலே பல அலைகளைப் பாய்ச்சிக் கொண்டிருக்கிறார்கள். விண்ணிலே பாய்ச்சினால், இங்கே பாதிக்காது என்பது அவர்களுடைய எண்ணம். 

விண்ணிலேயும் விஷத்துகள்கள் பரப்பப்படும்போது, புவியின் ஈர்ப்புக்குள் சுழற்சியில் வரப்படும்போது, அந்த அலைகள் பூமிக்குள் வருகிறது.
அப்படி அலைகள் வரப்படும்போதுதான்,
விஷத்தின் தன்மையை முறியடிக்ககூடிய சக்தி இருந்தாலும்,
மனிதன் விஞ்ஞானத்தினால் செய்யப்பட்ட நிலைகள்
ஒன்றை அழித்துவிட்டு ஒசோன் திரையைக் கிழித்துவிடுகின்றது.

ஆக விண்ணிலே இருக்கக்கூடிய ஆற்றல்கள், துரித நிலைகளில் நம் பூமிக்குள் வரக்கூடிய நிகழ்ச்சிகள், நடந்து கொண்டிருக்கின்றது. அவ்வாறு வரக்கூடிய நிகழ்ச்சிகளினாலே, மனிதனுடைய சிந்தனைகள் குறைந்து கொண்டிருக்கின்றது.

நாமெல்லாம், ஆனந்தமாக இருக்கவேண்டுமென்று எண்ணுகின்றோம். ஆனால், உணர்வுக்குள் வேதனை தாண்டவமாடிக் கொண்டிருக்கின்றது. இந்த மாதிரி நிலைகளிலிருந்து மீட்டிக்கொள்வதற்கு, நாம் செய்யவேண்டிய ஒரே முறை, அந்த மெய்ஞானியரின் அருளை நாம் பெற வேண்டும்.

இன்று எப்படி ஓசோன் திரை கிழிந்து வருகிறதோ, அதைப்போன்று  மற்ற விஷத்தின் தன்மையை கிழித்தெறியும் தன்மை நாம் பெற வேண்டும். 
நாம் சாதாரண மனிதர்கள் என்று எண்ண வேண்டாம். இவையெல்லாம் சாதாரணமானவைதான். நம்மிடமிருப்பது சாதாரண ஆயுதம்தான், பணவசதியுள்ளவர்கள் யாருமில்லை.

நமக்குள், எண்ணத்தின் வலுவின் தன்மைகளை நாம் பெற வேண்டும். நாம் மெய்ஞானியரின் அருள் சக்திகளைப் பெற வேண்டும்.
நம் எண்ணத்தின் வலுகொண்டு,
தீயசக்திகள் நம்மை அணுகாது
நாம் பாதுகாக்கவேண்டும்.
அந்த உர்வின் ஆற்றல் மிக்க சக்திகளை
நாம் பெற வேண்டும்.
நமக்குள் பெருக்கவேண்டும்.

ஒவ்வொரு நிமிடமும், அலைவரிசையினாலே மனிதனை இயக்க முடியும் என்று விஞ்ஞானிகள் சொல்லுகின்றனர்.. அதைப்போல
மெய்ஞானிகள் அருள்வழிப்படி,
அந்த மெய்ஞானியரின் அருள்ஒளியை நமக்குள் கூட்டி,  
இந்த அலைவரிசைகளை
நமக்குள் பெருக்கிப் பழகவேண்டும். 
அப்படிப் பழகுவதற்குத்தான் இந்த ஆத்மசுத்தியும், பயிற்சியும் கொடுத்தது. எமது அருளாசிகள்.
ஒவ்வொருவரும் குடும்பத்தில் வேற்றுமையில்லாத நிலைகளில், நாம் இங்கே ஒருங்கிணைந்து, முதலில் குடும்பத்தில் ஒற்றுமையான நிலைகளில் செயல்படவேண்டும். குடும்பத்திற்குள் தாய் தந்தையரை வணங்க, குழந்தைகளுக்குப் பழகிக் கொடுக்க வேண்டும்.

இந்த முறைப்படி நாம் ஓரிடத்திலிருந்து பதிவு செய்து, இந்த ஆற்றலின் சக்தியை, நாம் ஒவ்வொருவரும் கூட்டிக் கொள்ள வேண்டும்.

இன்று விஞ்ஞானிகள் எப்படி, தன்னைத் தற்காத்துக் கொள்வதற்கு பல நிலைகளை விஞ்ஞான ரூபத்தில் செய்கின்றனரோ, அதாவது தன் உணர்வின் அலைவரிசையில், பல விமானங்களையும் எதிர்த்துத் தாக்குகின்றனர். கடும் ஆயுதத்தையும் எதிர்த்து விடுகின்றனர்.

இந்த உடலின் அமைப்புக்குள், ஆத்மாவாக இயங்கும் ஒரு குறிப்பிட்ட தூரத்தின் அருகில் எந்த எண்ணங்கள் இருக்கிறதோ, அதன் அலைகள் நமக்குள் ஈர்க்கும். அப்படி ஈர்க்கப்படும் பொழுது, நாம் பிறருடைய எண்ணங்களைப் பாய்ச்சப்படும் பொழுது, இது ஊடுருவி நம் எண்ணங்களை அழித்துவிடுகின்றது.

ஆனால், அதைப் போல கடுமையான எண்ணங்கள் நம்மைச் சுற்றி சாய்த்தாலும், விஞ்ஞானத்தால் வரக்கூடிய எத்தகைய விஷ அணுத்தன்மையினுடைய நிலைகளையும்,
மகரிஷிகளின் அருள் ஒளியை நமக்குள் பெற்று,
இந்த அலைவரிசையின் உணர்வலைகளை
நாம் எண்ணியவுடன், அந்த அலைகள்
நமக்குப் பாதுகாப்புக் கவசமாக வரவேண்டும்.

நமது பூமி ஓசோன் திரையாக அமைத்து,
விஷத்தின் தன்மையினுடைய நிலைகள்
நம் பூமிக்குள் வராதபடி தடுத்து நிறுத்துகின்றது.

அதைப் போல, சூரியன் தான் எடுத்துக் கொண்ட உணர்வின் தன்மைகள் விஷத்தன்மையை எதிர்த்து, இது மோதும் அந்த அலைகள் மற்ற “ULTRA VIOLET” என்ற அந்த அலைகளானது
பொங்கியெழுந்து வீசும் அலைகள் கொண்டு
சூரியனை அணுகாதபடி
அது பிரபஞ்சத்திற்கே அனுப்பிக் கொண்டிருக்கின்றது.

இதைப் போல ஆற்றல்மிக்க நிலைகள் போல, நாம் எடுக்கும் இந்த ஆத்ம சுத்தி என்ற ஆயுதத்தினுடைய நிலைகள் கொண்டு, இன்று இந்த விஞ்ஞானத்தினால் வரக்கூடிய ஒவ்வொரு விஷத்தன்மையினுடைய நிலைகளையும், நாம் விடும் மூச்சலைகளால் மாற்றி அமைக்க முடியும்..

இதைப் போன்று, நம்மைப் பாதுகாக்கக்கூடிய சக்தியாக மெய்ஞானியருடைய உணர்வலைகளை நமக்குப் பாதுகாப்புக் கவசமாக, “ஆத்ம சுத்தி” என்ற அலைகளில் நம்மைச் சுற்றி அந்தக் கவசமாக மாற்றிக் கொள்ளக் கூடிய சக்தியாக, நாம் பயிற்சி செய்து கொள்ள வேண்டும்.
                   
எனென்றால், நாட்டில் யுத்தங்கள் எந்த நிமிடம் வேண்டுமென்றாலும் நடக்கலாம். இந்த அலைவரிசையிலே நாம் இரவில் படுத்துத் தூங்கப்படும்போதும் அந்த மகரிஷிகளை எண்ணி,
அந்த மகரிஷிகளின் அருள் சக்தியை நாங்கள் பெறவேண்டும்
என்ற நிலையான நிலைகளை
நம்மைச் சுழலவிட்டுப் பழகவேண்டும்.

அப்படி இருந்தால்தான், இரவிலே விஞ்ஞானிகள் அலைவரிசை என்ற நிலைகளைக் காட்டி, உலக மக்களைச் சூனியமாக்கச் செய்தாலும், நம்மைப் பாதிக்காதவண்ணம் நாம் தப்பித்துக் கொள்ள முடியும்.

இன்று சொத்து, சுகம் எல்லாமே நாம் நினைக்கலாம், ஒரு பிட்ஸ், காக்காய் வலிப்பு மாதிரியான நிலைகள் எல்லோருக்கும் வந்துவிட்டால், நாம் எதைச் செய்யப் போகின்றோம்? எந்த நிலைகளைச் செய்யப் போகின்றோம்? சற்று சிந்தனை செய்து பாருங்கள்.

ஆகவே, யாம் உபதேசிக்கும் இந்த அருள்ஞானிகளின் நிலைகளே, நமக்கு உண்மையான நிலைகள். நாம் சிந்தித்து எடுக்கக்கூடிய இந்த சந்தர்ப்பத்தை நழுவவிடாதபடி, ஆத்ம சுத்தி எனற ஆயுதத்தை எடுத்து, அனைவரும் பழக வேண்டும்.