ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

February 17, 2013

தீமைகளைப் புடமிட்டு, தீயவிளைவுகளை நீக்கும் மெய்ஞானியின் ஆற்றல்

இரும்பு இருக்கின்றது என்றால், இன்று விஞ்ஞானி கடினமான பாறைகளையும், இந்த இரும்பைக் கொண்டு மிக எளிதாக அறுத்து எறிகின்றான். ஒரு மரத்தை, நாம் ரம்பம் கொண்டு அறுக்க கடினமாக இருக்கின்றது.

ஆனால், விஞ்ஞானியோ, இரும்பைச் செறிவு ஏற்றி, அதை மிகவும் ஆற்றல்மிக்கதாக மாற்றி, மிகக் கடினமான பாறைகளையும் எளிதில் அறுத்து எறிகின்றான். எவ்வளவு எளிதாகச் செய்ய முடியுமோ, அவ்வளவு எளிதாகச் செய்துவிடுகின்றான் விஞ்ஞானி.
 
இன்றைக்கு மிக எளிதாக வளைக்கக்கூடிய, சற்று வலுவாகத் தட்டினால் வளைந்து, நெளிந்துவிடக் கூடிய உலோகமான அலுமினியத்தை, விஞ்ஞான அறிவு கொண்டு, இரும்பு – எஃகு எந்த அளவுக்கு வலுவாக இருக்கின்றதோ, அதைப் போன்று இந்த அலுமினியத்தைச் செருகேற்றி, வலுகொண்டதாக மாற்றுகின்றான் விஞ்ஞானி.

இதைப் போல கரும்பிலே வரும் அழுக்கின் தன்மையை, சில உலோகத்தின் நிலைகளை அந்தக் கரும்புச் சாற்றுக்குள் கலந்து, அதனின் அழுக்கைப் பிரித்து, சர்க்கரையாக, சுவை கொண்டதாக மாற்றுகின்றான்.

இயற்கையில் விளைந்து,
அதற்குச் சுவை கொண்ட நிலைகள் கொண்டும்,
சுவையைப் பாதுகாக்கும் நிலையை,
மற்றொன்று அழித்திடாதவண்ணம்
காத்திட்ட அந்தச் சக்தியினை,
விஞ்ஞானி செயற்கையில் செய்யப்பட்ட இந்த அமோனியம் சல்பேட், அதற்குள் பொட்டாசியம் கலக்கப்படும் பொழுது, அதிலிருந்து பிரித்து இந்த அழுக்கை நீக்க்குகின்றான்.

அப்படி அழுக்கை நீக்கினாலும், இந்த அழுக்கான கழிவை விஞ்ஞான அறிவால், மற்ற பொருள்களைச் சேர்த்து பிளாஸ்டிக்காக உருப்பெறச் செய்கின்றான். அவ்வாறு உருப்பெறச் செய்தால், இந்த பிளாஸ்டிக் அழிவதில்லை.

ஆக, இந்த இனிப்பான சத்தைக் கவர்ந்து கொள்ளும் இச்சக்தியினை, விஞ்ஞானி பிரித்து, அதை மற்ற பொருள்களுடன் இணைக்கப்படும் பொழுது, இணைந்த நிலைகளில், அதைப் பிளாஸ்டிக்காக மாற்றி, அதை மண்ணிலே போட்டாலும் மக்குவதில்லை.

ஆனால், இரும்பு உலோகமோ மண்ணிலே போட்டால் அது மக்கிவிடுகின்றது. ஆனால், இரும்புக்குள் மற்ற உப்புச் சத்தின் நிலைகள் பட்டாலோ, இரும்பு மண்னைப் போல ஆகிவிடும்.

ஆனால், அதையும் தனக்குகந்த அமிலத்தின் தன்மையை, காற்றலைகளாக மாற்றி, அந்த காற்றலையின் அழுத்தத்தை இரும்புக்குள் பாய்ச்சி, இரும்பு துருப்பிடிக்கும் நிலையை இழக்கச் செய்து, அதை “எவர்சில்வர்” ஆக மாற்றுகின்றான் விஞ்ஞானி.

ஏனென்றால், யாம் இதையெல்லாம் புத்தகத்தில் படிக்கவில்லை. பார்க்கிறோம், படிக்கவில்லையென்றாலும், நமது குருநாதர் காட்டிய நிலைகள் கொண்டு பார்த்தோம்.
 
அதை எவ்வாறு செயல்படுத்துகின்றனர்? அந்த உணர்வின் தன்மை எவ்வாறு மாறுகின்றது? என்பதை குருகாட்டிய வழியில், அவரின் ஆற்றல்மிக்க அந்தச் சக்தியின் துணைகொண்டு, அந்த உணர்வின் தன்மை கொண்டுதான், இதை யாம் அறிந்திட முடிகின்றது.

உங்களுக்கு அதை உபதேசிக்கவும் முடிகின்றது. உங்களுக்கு உணர்த்திடவும் முடிகின்றது. ஆகவே, விஞ்ஞானிகள் மிகச் சக்திவாய்ந்த நிலைகளைச் செய்கின்றனர். இதைத்தான், அன்று சாதரண மனிதனாக இருக்கும் பொழுது, பிறிதொரு மனிதனின் நோயை நீக்கச் செய்தான் மெய்ஞானி.

ஒவ்வொரு கட்டத்திலும், அந்த மனிதன் சந்திக்க நேரும் குணங்கள், சந்தர்ப்பத்தால் மனிதனாக வளர்ந்திட்ட பண்பையும், பாசத்தையும், பரிவையும், அன்பையும், அறிவையும், துணிவையும், ஞானத்தையும் இழக்கச் செய்யும் விஷத்தின் தன்மை, அது மனிதனின் உடலில் தீய விளைவுகளை விளைவிக்கின்றது.

அந்தத் தீயவிளைவுகளை நீக்க, அன்று சித்தனாகச் சிந்திக்கச் செய்யும், சிந்தனையுடைய நிலைகள் கொண்டு சிந்தித்து, அந்தத் தீயவிளைவுகளின் நிலையை புடமிட்டு, அதை நீக்குவதற்கு தன் எண்ணத்தைக் கூட்டி, அந்த விண்ணின் ஆற்றலைத் தனக்குள் பெற்று, அந்த ஆற்றலின் வலுகொண்டு, அந்த விண்ணின் ஆற்றலால், தாவர இனச்சத்துக்களின் கூட்டமைப்பால், அந்த வீரிய செயல்கள் எவ்வாறு செயல்படுகின்றது என்றும், கண்டுணர்ந்தான் மெய்ஞானி.

அந்த வீரிய செயலுக்குள் தாவர இனத்திற்குள்
இந்த உலோகங்களின் அமைப்புகள் எவ்வாறு உள்ளது என்றும்,
இந்த உலோகத்திற்குள் பிறிதொன்றாக மாற்றிடும்
அந்த விரிய சக்தியைக் கண்டுணர்ந்து, நுகர்ந்து,
அதனின் ஆற்றலைத் தனக்குள் எண்ண வலுவாகக் கூட்டிக் கொண்டு, அதைக் கொண்டுதான் .தாவர இனச் சத்தை இந்த உலோகங்களுடன் கலந்து, புடமிட்டு, அதன் தரத்தை வலுவுடையதாக்கி, பிறிதொரு மனிதனின் நோயை நீக்குகின்றார் மெய்ஞானி.

(புடமிடுதல் – மறைமுகமாக வெப்பமாக்கி, சுட்டு இணைத்தல்)