ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

August 24, 2025

எந்தச் சந்தர்ப்பத்திலும் அதிர்ச்சி அடைய வேண்டியதில்லை

 

எந்தச் சந்தர்ப்பத்திலும் அதிர்ச்சி அடைய வேண்டியதில்லை


ஒரு விலை உயர்ந்த பொருளை வாங்கிக் கொண்டு வருகின்றோம் திடீரென்று தவறிக் கீழே விழுந்து விடுகின்றது. உடனே நமக்கு அதிர்ச்சி வருகின்றதுவேதனை வருகின்றது.
 
சந்தர்ப்பத்திலே இந்த வேதனை அதிகமாக நுகரப்படும் பொழுது இந்த உணர்வு நம் ஆகாரத்துடன் கலக்கின்றது.
1.அந்த அதிர்ச்சியான உணர்வுகள் நம் இருதயத் துடிப்பிலே பட்டு விட்டால் அங்கே படபடப்பு அதிகமாகி
2.நம் சுவாசத்தை கட்டுப்படுத்தும் பயத்தின் தன்மையாக வரும் பதட்டம் வந்து விடுகின்றது.
 
பதட்டாமன உணர்வுகள் சிறிது காலம் அது இருந்தால் உமிழ் நீராகி ஆகாரத்துடன் கலந்து அதே உணர்வு வளரப்படும் பொழுது நடுக்கவாதம் வரும்.
 
இது எல்லாம் நம்மை அறியாமல் வரக்கூடிய நிலைகள். இதைப் போன்ற நிலையில் இருந்து தப்புவதற்கு என்ன செய்ய வேண்டும்…?
 
கை தவறிப் பொருள் கீழே விழுந்து விட்டாலும் அந்த ஆசையினால் பொருள் போய்விட்டதே…” என்ற அந்த வேதனை உணர்வைத் தடுப்பதற்கு ஈஸ்வரா என்று துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்று எண்ணி அதைத் தடுத்துப் பழகுதல் வேண்டும்.
 
1.சுவாசத்திற்கு மேலே செல்லாதபடி (உயிரிலே படாதபடி) தடுத்து நிறுத்தும் நிலையாக
2.துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும்
3.எங்கள் ஜீவான்மா ஜீவணுக்கள் பெற வேண்டும் என்று மன உறுதி கொண்டு அந்தச் சக்தியை எடுத்து
4.சரி நாளை சிந்தித்துச் செயல்படும் அந்த அருள் சக்தி பெற வேண்டும் என்று சாந்தப்படுத்திக் கொள்ள வேண்டும்…”
 
இப்படி நமது வாழ்க்கையில் எத்தனை தீமைகள் வந்தாலும் அதை மாற்றி அமைக்கக்கூடிய வல்லமையை நாம் பெறுதல் வேண்டும்.
 
நம் பிள்ளை மீது பிரியமாக இருப்போம். பையன் சொன்னபடி கேட்கவில்லை என்றால் வேதனைப்படுவோம். அவன் வேதனைப்படுகிறான் என்றால் நமது சிந்தனையும் குறைந்து விடுகின்றது வேதனையுடன் சொல்லப்படும் பொழுது அவனும் சிந்தனை இழந்து விடுகின்றான்.
 
எல்லாம் ஆனபின் நமக்குக் கோபம் வருகின்றது. இப்படி நமக்குள் ஒன்றின் பின் ஒன்று தொடராக நாம் சுவாசிக்கும் உணர்வுகள் நம் உடலில் தீய விளைவுகளை உருவாக்கும் தன்மையாக வந்து விடுகின்றது.
 
புழுவிலிருந்து மனிதனாக வரும் வரையிலும் பரிணாம வளர்ச்சியில் தீமைகளை நீக்கிய நாம்… சந்தர்ப்பத்தால் இதைப் போல் வாழ வேண்டும் என்று எண்ணிச் செயல்படும் பொழுது “மேலே சொன்னது போன்ற தீமைகள் வந்து விடுகின்றது.
 
இது போன்ற சந்தர்ப்பங்களில் எல்லாம் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் ஈஸ்வரா…! என்று உயிரான ஈசனிடம் வேண்டி விட்டு அந்தச் சக்தி நம் உடல் முழுவதும் படர வேண்டும் என்று இந்த உணர்வைச் செலுத்தி உள்ளுக்குள்ளே வலிமை ஆக்கினால் தீமை செய்யும் சக்திகள் நமக்குள் உருவாகாதபடி தடுத்துக் கொள்ளலாம்.
 
வேதனையா உணர்வைச் சுவாசிக்கும் பொழுது அது வாலி. உடலுக்குள் அந்த வேதனையான அணுக்கள் நல்ல அணுக்களுடன் சேர்ந்து விட்டால் இரண்யன்.
 
அந்த இரண்யனை மடி மீது வைத்து வாசல் படி மீது அமர்ந்து நர நாராயணன் பிளக்கின்றான். சூரியன் எப்படித் தன் மீது மோதும் நஞ்சினைப் பாதரசத்தால் பிளக்கின்றதோ அதைப் போல்
1.கார்த்திகேயா என்று மனிதன் தன் ஆறாவது அறிவின் துணை கொண்டு
2.ஒளியாக இருக்கும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வைப் பெறுவோம் என்றால் தீமைகளைப் பிளக்க முடியும்.
 
நம் உடலுக்குள் துருவ நட்சத்திரத்தின் சக்தி வலுவாகும் போது தீமைகள் அனாதையாகி விடுகின்றது ஈர்க்கும் சக்தி குறையும் பொழுது சூரியன் அந்த தீமைகளைக் கவர்ந்து சென்று மாற்றி அமைத்து விடுகின்றது. நம் ஆன்மா பரிசுத்தமாகின்றது…!
 
ஆகவே நல்ல சந்தர்ப்பங்களை உருவாக்கி நாம் எதையுமே நல்லதாக மாற்றிட முடியும்.

மூகாம்பிகையில் வந்து நாம் எந்த ஞானத்தைப் பெற வேண்டும்?


1.கோலமாமகரிஷியின் அருள் சக்தியைப் பெறுவோம்
அவரவர்கள் அம்மா அப்பாவை மனதில் எண்ணி, மிகவும் சக்தி வாய்ந்த சப்தரிஷிகளின் அருள்சக்தி, கோலமாமகரிஷி அவர் வளர்த்த இச்சக்தி, நம்முன் படர்ந்து கொண்டிருப்பதை நாம் கவர்ந்து, நாங்கள் அனைவரும் பெற அருள்வாய் ஈஸ்வரா, என்று நமக்குள் இணைப்போம்.

அவ்வாறு, நமக்குள் இணைத்து, அந்தத் தத்துவ மகரிஷி, உலகவியல்களை எவ்வாறு கண்டுணர்ந்தார்? அவருக்குள் எப்படி விளைய வைத்தார்? அதைப்போன்று, அந்தக் கோலமாமகரிஷி, அவருக்குள் விளைந்த, அருள்ஞான வித்தை உங்களில் பதிவு செய்து, உண்மையான மெய் உலகில், நாம் அவர்கள் சஞ்சரித்த அவ்விடங்களில் நாமும் சென்றடைய இது உபயோகமாக இருக்கும்.

ஆகவே, இங்கே கொல்லூரில் வந்து நாம் தியானிக்கிறோம். ஏனென்றால், அகஸ்தியன் சந்தர்ப்பத்தால் தனக்குள் கண்டுணர்ந்தான். ஆனால், கோலமாமகரிஷியோ
1.“அழியாப் பெருவாழ்வு என்ற நிலை பெற வேண்டும்”,
2.“அவர் எண்ண வலுவால், தனக்குள் நுகர்ந்தறிய வேண்டும்”,
3.“இன்னொரு சரீரம் வேண்டியதில்லை” என்ற வலுவான எண்ணத்தை அவர் கொண்டு,
4.“என்றும் அந்த சப்தரிஷிகளுடன் நாம் இணைந்திடல் வேண்டும்” என்று தன் எல்லையை வகுத்து
5.அவர் தன் வாழ்க்கையில் வரும் தீமைகளை அகற்றி, மெய்ஞானிகளின் உணர்வைத் தனக்குள் வளர்த்து, அவர் விண்ணுலகம் சென்றார், மிகக் குறுகிய காலங்களில்தான்.

இவையெல்லாம், 3000 ஆண்டுகளுக்குள் நடந்த நிகழ்ச்சி. ஆகவே சமீபத்தில் அவருக்குள் விளைந்த உணர்வுகள், அவர் எங்கெங்கு தவமிருந்தாரோ, அந்த அலைகளின் தன்மை இங்கே படர்கிறது.

அதை நாம் பருகுவோமென்று பிரார்த்தித்து, உயிரான ஈசனை வேண்டி, நாம் அனைவரும் தியானிப்போம்.

2.கொல்லூருக்கு நாம் எதற்கு வருகிறோம்...? 
நாம் மனிதனாக இருக்கிறோம். கூட்டாக இருக்கிறோம். கூட்டாக இருக்கும்போது, எதைப் பெறுகின்றோம்? அந்த மெய் ஒளியை எப்படிப் பெற வேண்டுமென்று எண்ணுகிறோம்?

மெய்வழி எப்படி என்ற நிலையை, அறிய முற்படுகிறோம். அப்பொழுது இங்கேயும் தேடி வருகிறோம். நாம் நமக்குள் தீமைகளை நீக்க வேண்டும், மெய்யுணர்வைப் பெறவேண்டுமென்ற நிலைக்குத்தான், இங்கே தேடி வருகிறோம்.

இதைப்போலத்தான் கோலமாமகரிஷி அவர்கள் கண்டுணர்ந்த நிலைகளை,  துருவத்தை உற்று நோக்கினார்கள். அதன் வழிகளில் துருவத்தின் ஆற்றல் பெற்ற, அந்த துருவ மகரிஷியின் உணர்வுகளை இவர்கள் அறிகின்றார்கள். அதன்வழி கோள்களைப் பார்க்கின்றார்கள், இல்லையென்றால் இவர்கள் அறிய முடியாது.

நாமும் இந்த உணர்வை நுகரப்படும்போது, அகஸ்தியன் அணுவின் ஆற்றலை கோள்களக மாற்றிச் சென்றபின், இந்த உணர்வின் அலையை, நாம் அதனுடன் தொடர்பு கொண்டு வருவதற்குத்தான், எல்லாவற்றையும் கலந்து, ஒவ்வொரு உணர்வையும் கொடுக்கிறோம்.

துருவத்தை நுகர்ந்து பழகிக்கொண்டால், அதனின் ஆற்றலில், விண்ணின் ஆற்றல்களை நாம் பார்க்க முடியும்.

விண்ணின் ஆற்றலைப் பார்க்க முடியுமென்றால், நம் உணர்வின் தன்மை, சப்தரிஷி மண்டலத்தின் உணர்வின் தன்மையுடன் நாம் ஒன்றுகிறோம்.  அப்பொழுது, இந்த உடலைவிட்டு நாம் சென்றோமென்றால் நமக்கு இருப்பிடம் அதுதான். அதை எல்லையாக வைக்கிறோம். 

யாம், குறைந்தது ஆறு வருடங்கள் இங்கே இருந்தோம். முதலில், 1½ வருடம் இங்கே வந்து போய்க் கொண்டிருந்தோம். பின் இங்கே தங்கியிருந்த காலங்களில்தான், பாக்கி விஷயங்களைத் தெரிந்து கொள்ள முடிந்தது. இவைகளெல்லாம் சொல்வது, உங்களுக்குள் பதிவு செய்வதற்குத்தான்.

ஏனென்றால் அவர் பெற்ற உணர்வுகள் இங்கே இருக்கிறது. இருந்தாலும், இங்கு வந்து உபதேசிக்கும் போது, எளிதில் நீங்கள் இதைப் பெற முடியும்.

நாம் இங்கிருந்து சொல்கிறோம் என்றால், இந்த உணர்வுகள் இங்கே பதிந்து இருக்கின்றது. அப்படி அவரைப் பற்றி சொல்லும் போது, உங்களுக்குள் பதிவாகின்றது. மூலமாகின்றது.

நஞ்சுக்கு மிக சக்தி வாய்ந்த நிலை உண்டு. ஆனால், மனிதனுக்குள் உள்ள மிகச்சக்தி வாய்ந்த உயர்ந்த எண்ணத்தைக் கொண்டு, அந்தச் சக்தியை நீக்க முடியும். இதைப் பயன்படுத்தவேண்டும்.

மனிதனுக்குள் விளைந்த சக்தி, ஆறாவது அறிவு, மிக சக்தி வாய்ந்தது. ஆனால் நஞ்சுக்கோ மிக சக்தி உண்டு. நஞ்சின் சக்தி மிக அதிகமாக இருப்பினும், மனிதனின் ஆறாவது அறிவின் சக்திக்கு, எல்லாமே அடிமை. அதைச் சீராகப் பயன்படுத்தினால், நஞ்சினையும் நாம் ஒடுக்க முடியும்.

அணுகுண்டை உருவாக்கியவனும் மனிதன்தான். அதே சமயத்தில், அதை அடக்கி வைத்து வெடிக்கச் செய்வதும் மனிதன்தான். இதைப்போல அன்று அரசனாக இருந்த “கோலமாமகரிஷி” தன் தவத்தின் நிலைகள் வரப்படும்போது, இவன் செய்த தவறுகள் எத்தனையோ. அவை அனைத்தும் இவனுள் அலைகளாக வருகின்றது.

இவர் யாக வேள்விகள் நடத்தப்படும்போது, பல அசுரர்கள் பல நிலைகளில் இடையூறு செய்தார்கள் என்று காவியத்தில் சொல்வார்கள். அதற்காகத்தான், இந்தக் கோவிலில் ஒரு பக்கம் முருகனும், இன்னொரு பக்கம் வீரபத்திர சாமியும், காவல் தெய்வமாக இருக்கிறார்கள்.

ஆக, வலுவான என்ணங்கள் கொண்டு, நஞ்சினை நீக்கிப் பழகவேண்டும். இந்த தத்துவமெல்லாம் புரிந்துவிட்டது அல்லவா! முருகன் காவல் தெய்வமாக இருக்கிறார் என்று சொன்னால், அர்த்தம் என்ன? கோவிலில் ஒரு பக்கம் முருகன், மறு அக்கம் வீரபத்திரசாமி.

ஆறாவது அறிவின் (முருகன்) துணை கொண்டு, தனக்கு இணையாக, வலுவின் (வீரபத்திரன்) துணை கொண்டு, எதற்குமே அஞ்சாநெஞ்சன், துணை கொண்டு வெல்ல வேண்டும்.

ஆகவே உயர்ந்த நிலைகள் எதுவோ, அதைத்தான் அவர் கைப்பற்றினார் என்ற நிலையும் அதிலே கண்டுணர்ந்த சக்திதான் இங்கே ஆறாவது அறிவு, என்று தெளிவாகக் காட்டினார். இங்கே கோவிலில் பார்த்தால், அதுதான் இருக்கும்.

இதைப்போல அரசனாக இருக்கும்போது, பல கொடூரச் செயல்கள் செய்தது இங்கே பதிந்திருக்கிறது. தன் ஆன்மாவில் வந்து, பல எதிர்ப்பு சக்திகள் கொடுக்கிறது.

தவம் என்பது உயிர். யாகம் என்பது, உயிரின் நெருப்பில், தன் எண்ணத்தால் விண்ணின் ஆற்றலைப் போடும்போது, இந்த அசுர குணங்கள் தனக்குள் வராது தடுப்பது எவ்வாறு? என்பதுதான், அவர் சொன்ன சாஸ்திர விதிகளில் ஒன்று.

3.மூகாம்பிகையில் வந்து நாம் எந்த ஞானத்தைப் பெற வேண்டும்?
மூன்று சக்தியின் நிலைகள் – வெப்பம், காந்தம், விஷம். நமக்குள் ஈர்க்கப்பட வேண்டியது எது? நம்முடைய மனதில், ஞானம் பெற வேண்டியது எது? என்கிற நிலையை அறிவற்குத்தான், எமது குருநாதர் இங்கே அழைத்துவந்தார். 

இங்கே வந்து அமர்ந்து தியானிக்கும்போதுதான், அதற்கான விளக்கங்கள் கிடைப்பதற்கும், மனிதனின் உணர்வுக்குள் என்ன செய்கிறது? அது எதற்காக வேண்டி, கோலமாமகரிஷி செயல்பட்டார் என்ற நிலையும், தெரிய வந்தது.

அவரின் செயலாக்கத்தில், மனிதனுக்குள் சேர்ந்த உணர்வுகளை ஆட்சி புரிவதற்காக, பலகாலம் தனக்குள் பதிந்துகொண்ட நிலைகளை, இது பிளக்க, ”துருவத்தின் நிலைகளை” அதிகமாக எடுத்துத் தவமிருந்தார், கோலமாமகரிஷி.

துருவத்தின் ஆற்றலைத் தனக்குள் பருகும்போதுதான், தான் வளர்ந்து வர வர, இவர் வயதும் முதிர்ந்து விடுகிறது. அதிலிருந்து இவர் ஆன்மா வெளிவந்தபின், அவர் அதற்குத் தகுந்த உடலாக, அன்றைக்கு “ஆதிசங்கரர்” உடலைத் தேர்ந்தெடுத்தார்.

மற்றவர்கள் உடலின் இச்சை கொண்டு, ஆதிசங்கரரை கங்கையிலே மூழ்கடிக்கும் போது, இந்த உடலின் பற்று இல்லாதபடி, எதைப் பற்றியதோ, ஆதிசங்கரர் உடலுக்குள் சென்ற கோலமாமகரிஷியின் உயிரான்மா, விண்வெளி செல்கிறது. ஆதிசங்கரரின் உடலிலிருந்துதான் விண் சென்றது.

ஆகவேதான், எமது குருநாதர் எம்மைக் காசிக்குப் போகச் சொன்னார். அந்த காசியிலே இருக்கப்படும்போது, அன்று, ஆதிசங்கரருக்கு ஏவல் செய்து அவருக்கு வயிற்றுவலி வரவைத்து, ஒரு விநாயகர் கோவிலில் “அர்ச்சனை, அபிஷேகம், யாகங்கள் செய்ய வேண்டும் என்றும்,  வேள்விகள் செய்தால்தான், உன்னுடைய வயிற்றுவலி நீங்கும்” என்றும், அதிலிருந்து “நீ யாகத்தைச் செய்யவில்லையென்றால் தப்பமுடியாது” என்று துவைதவாதிகள், ஆதிசங்கரரை மிரட்டிய நிலைகளை எமக்குக் காண்பித்தார், மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர்.

ஏனென்றால், ஆதிசங்கரர் அத்வைதத்தைப் பற்றிப் பேசுகிறார். சூட்சும நிலைகள் எப்படி இயக்குகிறது? எந்த மணத்தை நுகர்கின்றாயோ, அது ஞானம். அது சூட்சமத்தில் உனக்குள் எவ்வாறு இயங்குகின்றது? என்ற நிலையையும், வசிஷ்டாத்வைதத்தையும் அங்கே எடுத்துரைக்கிறார்.

“வசிஷ்டாத்வைதம்” என்பது, தான் கவர்ந்து கொண்ட சத்து, தனக்குள் மறைந்து எவ்வாறு இயங்குகிறது என்ற நிலை தான்.

இவர் அத்வைதத்தை எடுத்தாலும், நீ கவர்ந்து கொண்ட “வசிஷ்டாத்வைதம்”, உனக்குள் எப்படி இயங்குகிறது? என்று உணர்த்தினார்.

அவ்வாறு சொல்லப்படும்போதுதான், அன்று அரச காலங்களில் துவைதத்தை வைத்து வணங்கியவர்கள், சிலையை வைத்து வணங்கி, யாக வேள்விகளைச் செய்யக் கூடியவர்கள் அனைவரும் சேர்ந்து, இவர் யாகம் வளர்த்து, மற்ற வேள்விகளைச் செய்தால்தான், உண்மையான பக்தி என்று அவர்கள் சொல்கிறார்கள்.

ஆதிசங்கரர், இம்முறையைச் செய்வது தவறு என்று வாதிட்டார். உண்மையான நெருப்பு உயிர் என்று உபதேசித்தார். ஆக இது வசிஷ்டாத்வைதம். தனக்குள் நெருப்பின ஈர்ப்பான அந்தக் காந்தத்தால் கவரக்கூடிய நிலையையும், கவர்ந்து கொண்ட நிலையையும் என்றார்.
     
1.நாம் எதை எண்ணுகின்றோமோ,
2.அதனின் உணர்வு நமக்குள் கவரப்படும்போது, தன்னுள்,
3.தனக்குத் தெரியாமலே அதன் இயக்கங்கள் இருக்கும்... "வசிஷ்டாத்வைதம்" என்ற நிலையை அவர் உணர்த்துகின்றார்.

இவ்வாறு அந்த நிலையை உணர்த்தினாலும், “இது உண்மையல்ல” இந்தச் சிலையிலிருந்துதான் நீ எல்லா நிலைகளும் பெறுகின்றாய். இந்தச் சக்தியை, இந்த தெய்வத்தின் நிலைகளிலிருந்துதான் நீ  பெற முடிகின்றது” என்று இவர்கள் சொல்கிறார்கள்.

ஆதிசங்கரர், இதுவல்ல உண்மை,
1."உயிர் நெருப்பு”
2.புறத்தீயிட்டு நீ வேகவைப்பது உன்னுடைய இச்சைக்கு இருக்கும். இந்த இச்சையை எண்ணினால், “உனக்குள் எரிக்கும் சக்திதான் வரும்”.
3.“தீமைகளினுடைய நிலைகளைத்தான் உனக்குள் வளர்க்க முடியும்”,
4.“இந்த நல்ல ஜீவனுள்ள அணுக்களை இழக்கின்றாய், அழிக்கின்றாய்”
5.“நல்ல வாசனையான பொருட்களைப் போட்டு, நீ அழிக்கின்றாய்”.

ஆக, உயிரான நிலைகளில், உன்னுள் தீமையான உணர்வுகளைப் போட்டு உனக்குள் பொசுக்கு என்று விவாதிக்கிறார், அன்று ஆதிசங்கரர்.

“உயிர்களைப் பலியிடப்படுவது யாகம்” அதிலிருந்து உணர்வுகளை வெளிப்படுத்தி எடுப்பது தனக்குச் சாதகம் என்ற நிலைகளில், அந்த இடத்தில் வாக்குவாதம், பட்டிமன்றம் நிறைய நடக்கிறது.

காசிக்குச் சென்று கங்கைக்கரையில், விநாயகர் கோவிலில் அமர்ந்து யாம் தியானிக்கும்போது, இவருள் இருந்து என்ன செய்கிறது என்பதை உணர முடிந்தது.

இவர்களுக்குள் வாதிக்கும்போது, ஆதிசங்கரரை “நாஸ்தீகன்” என்ற நிலைகளில் பட்டம் கட்டினார்கள். இதனுடைய உண்மை நிலைகளைத் தெரிந்து கொண்டபின் தான், யாம் அங்கு சென்றோம்..

அவ்வாறு பட்டிமன்றம் நடக்கும்போது “இது உண்மையில்லை”, இது உன்னையும் “நாஸ்தீகனாக்கும்” எந்த மனிதன் உணர்வைக் கொண்டு நீ எடுத்தாயோ, அது உன் சொல்லைக் கேட்போரையும், நாஸ்தீகனாக்கும் என்ற நிலைகளில், ஆதிசங்கரரை நாஸ்தீகன் என்று பட்டம் சூட்டினார்கள்.

1.“புறத்தீயிட்டு, எந்த நிலைகளில் நீ வேக வைக்கின்றாயோ” இங்கே பொருட்கள் கருகுகின்றது. நறுமணம் அழிகின்றது.
2.இதனுடன் நெருப்பில் இடப்படும்போது அதனின் உணர்வு அங்கே கருக்கப்படுகின்றது.
3.ரோஜாப்பூ போட்டாலும், கருகத்தானே செய்கிறது எந்த நறுமணத்தைப் போட்டாலும் கருகுகின்றது.

ஆனால், உயிரான நெருப்பில், நாம் அந்த நறுமணங்களைப் போடும்போது, இது அலைகளாகப் படருகின்றது. இது வசிஷ்டாத்வைதம். அந்த நறுமணத்தின் தன்மையை நீ கவரப்படும் பொழுது, இந்த உணர்வுகள் உனக்குள் நறுமணமடைகின்றது.

இதை உணர்த்துவதற்கு, கண்ணால் கவரப்படும் உணர்வுகளுக்குக்  காட்சியாக வைத்ததுதான். 
1.ஆனால், எண்ணத்தால் எவ்வாறு எடுப்பது? என்ற அளவில் 
2.அங்கே பட்டிமன்றம் நடக்கின்றது... அந்த அளவுக்கு வாக்குவாதம் நடக்கிறது. 

அங்கே தியானத்தில் அமரும்போதுதான், குருநாதர் எமக்கு இதை ஏல்லாம் உணர்த்திக் காட்டினார்.

August 23, 2025

புலஸ்தியர் அகஸ்தியர்

புலஸ்தியர் அகஸ்தியர்


தாய் கருவிலே பெற்ற சக்தியின் துணை கொண்டு அவன் வளர்ச்சி அடையும் பொழுது காரணப்பெயராக கஸ்தியன்” என்று வைக்கின்றார்கள்.
 
அவருடைய தாய் தந்தையர் செடி கொடியின் த்தைப் புலனறிவால் நுகர்ந்து அறிந்ததனால் புலஸ்தியர் வம்சத்தில் வந்தவர்கள் அவர்கள்.
 
ஆனால் தாய் கருவிலே சக்தி பெற்றுப் பிறந்ததால்
1.அணுவின் இயக்கத்தை அறியும் ஆற்றல் பெறுகின்றான்
2.அகத்தின் இயக்கங்களை அறிந்ததனால் அகஸ்தியன்.
 
செடியின் மத்தை நுகரப்படும் பொழுது அந்த உணர்வின் அதிர்வுகளைத் தெரிந்து கொள்கின்றான்… “இந்தச் செடி இன்னது தான் செய்யும் என்று…” அதனுடைய விஷத்திற்கு எல்லா விஷத்தையும் இயக்கத் தெரிந்தாலும் உணர்வின் அதிர்வுகளைத் தெரிந்து கொள்கின்றான்…”
 
மனிதனின் சிறுநீரை எடுத்து அதிலே சில கெமிக்கல்களைப் போட்டால் அதில் ரத்தத்தில் இருக்கக்கூடிய பலவிதமான சத்துக்களை விஞ்ஞான அறிவு கொண்டு இன்று அறிகின்றார்கள்.
 
ரத்தக் கொதிப்பிற்குண்டான அணுக்கள் இருக்கின்றதா…? சளி இருகின்றதா…? உப்புச் சத்து இருக்கின்றதா…? சர்க்கரைச் சத்து இருக்கின்றதா…? என்று பிரித்துக் காணுகின்றார்கள்.
 
ஆனால் அகஸ்தியன் எல்லாவற்றையும் கடந்து தாய் கருவிலேயே ஆற்றல்களைப் பெற்றதனால் ஒவ்வொரு தாவர இனத்தையும் அறிந்திடும் ஆற்றல் பெறுகின்றான்.
 
அப்படிப் பெற்ற ஆற்றல் தான் அவன் வாழ்நாளில் அவன் வளர வளர
1.நோய் வந்தவர்களுக்கு ஒரு பச்சிலையைக் கொடுத்து முகர்ந்து பார்க்கும்படி சொல்கின்றான்
2.நோய் நீங்குகிறது. அகஸ்தியன் குழம்பு என்று சொல்வார்கள்.
3.அவன் அறிந்த உணர்வு கொண்டு அக்காலங்களில் பல நோய்களைப் போக்கவும் காரணமாகின்றான்.
4.அதே சமயத்தில் இவனைக் கண்டாலே மற்ற மிருக இனங்கள் இவன் அருகில் வராது விலகிச் சென்று விடுகிறது.
 
பச்சையாக வேப்பிலைகளைச் சாப்பிட்டால் உடலில் கசப்பின் மம் வரும். வெங்காயத்தைப் பச்சையாகச் சாப்பிட்டால் உடலில் வெங்காய வாசனை வரும். கத்திரிக்காயைச் சாப்பிட்டால் அந்தக் காரல் வாசனை வரும்.
 
இது எல்லாம் இயற்கையின் உண்மையின் உணர்வுகள். உயிரின் இயக்கத்தால் அறியும் ஆற்றல் வந்து விடுகின்றது.
 
இதை எல்லாம் அகஸ்தியன் அறிந்ததனால் அன்று மனிதனுக்குகந்த புதுப்புது தாவர இனங்களை உருவாக்குகின்றான்.
1.உருவாக்கினாலும் அதை வேக வைத்துச் சாப்பிடும் பழக்கத்தையும் ஏற்படுத்துகின்றான்.
2.வேக வைக்கப்படும் பொழுது தனின் இயக்கங்கள் மாறுகின்றது என்று உணர்கின்றான்.
 
அதே சமயத்தில் மற்ற பொருள்களை இணைத்து அதைச் சுவையாகவும் உருவாக்க முடியும் என்றும் காணுகின்றான். அத்தகைய சக்தி பெற்ற முதல் மனிதன் அகஸ்தியன் உணவை எப்படிச் சமைக்க வேண்டும்…?” என்று தெரிந்து கொள்கின்றான்.
 
ன்றைய விஞ்ஞானிகள் செய்வது போன்று அக்காலத்திலே மனிதனுக்குகந்த பல பயிரினங்களையும் அகஸ்தின் உருவாக்குகின்றான்.
 
இப்படி அவன் வாழ் நாளில் அவன் வளர்ச்சி அடையப் படும்போது தாவர இனங்களுக்கு எங்கிருந்து எப்படி உணவு கிடைக்கின்றது…? என்று அவன் அறிகின்றான்.
 
பிரபஞ்சத்திற்குள் இருந்து வரும் சக்திகளை நமது பூமி துருவத்தின் வழி கவர்ந்து பூமிக்குள் பரவச் செய்து நீராகவும் மண்ணாகவும் கல்லாகவும் வளர்ந்து அதனுடைய கலவை கொண்டு தாவர இயல்கள் உருவாகி தாவரவியல் உருவாக்கப்படும் பொழுது அதை உயிரினங்கள் உணவாக உட்கொண்டு உடல்கள் பெற்று மனிதனாக எப்படி உருவாக்கியது…? என்று இந்த பூமிக்குள் வளர்ச்சியா சகலத்தையும் அறிகின்றான்.
 
இதையெல்லாம் அறிந்து கொண்ட முதல் மனிதன் அகஸ்தியன் மனிதனான பின்
1.வாழ்க்கையில் வரும் தீமைகளை வென்று பழகியவனும் அவனே.
2.இந்த உண்மைகளை எல்லாம் தனக்குள் அறிந்து பூமிக்குள் வரும் விஷத்தை அடக்கும் தன்மையும் பெறுகின்றான்.
 
பிரபஞ்சத்தில் இருக்கும் விஷத்தன்மைகள் துருவத்தின் வழி பூமிக்குள் வந்தாலும் தாவர இனங்களில் அது இணைந்து விடுகின்றது. ஆனால் மனிதனாகி விஷத்தை ஒடுக்கியதால் துருவத்தின் ஆற்றலை நுகர்ந்து அந்த விஷத்தை ஒடுக்கும் தன்மை வரும் போது விஷத்தின் இயக்கத்தையும் அறிந்து கொண்டான்.
 
அவனுடைய வளர்ச்சியில் காலப்பருவம் வரும் பொழுது திருமணம் ஆகின்றது. தான் கண்ட அனைத்தையுமே தன் மனைவிக்கு எடுத்து உணர்த்துகின்றான்.
 
மனைவிக்குள் இது பதிவான பின் கணவன் தெரிந்து கொண்ட நிலையைத் தானும் அறிய வேண்டும் என்று அதன் வழி பெற்று
1.மேலும் தன் கணவன் உயர்ந்த நிலை பெற வேண்டும் என்றும்
2.அதே போன்று அகஸ்தியனும் தன் மனைவி அந்த உயர்ந்த நிலை பெற வேண்டும் என்று எண்ணுகின்றான்.
 
அவர்கள் இருவரும் வசிஷ்டர் அருந்த்தியும் போன்று வாழ்ந்து தான் தெரிந்த உண்மையை மனைவிக்கும் மனைவி தெரிந்த உண்மையைக் கணவனுக்கும் இருவரும் ஒன்றாக இணைந்து வானுலக ஆற்றலை அறியும் பருவம் பெறுகின்றனர்.
1.எதை எல்லையாகக் குறி வைத்து அந்த ஆற்றல்களை எல்லாம் வளர்த்துக் கொண்டார்களோ
2.அங்கேயே அவர்கள் சென்று துருவ நட்சத்திரமாக இன்றும் வாழ்கின்றார்கள் வளர்கின்றார்கள் அழியாத நிலைகள் கொண்டு…!
 
அதிலிருந்து வரும் ஆற்றல்மிக்க சக்திகளை நீங்கள் பெற வேண்டும் என்பதற்குத் தான் இதை எல்லாம் சொல்லிக் கொண்டு வருகின்றேன்.

கோலமாமகரிஷி

கோலமாமகரிஷி

1. கடும் தவமிருந்து சக்தி பெற்றவர்
கோலமாமகரிஷி, கர்நாடகா கொல்லூர் என்ற ஊருக்கு அருகில், “குடசாஸ்திரி” இறக்கத்தில் காட்டுக்குள் போய் தனித்து ஜெபமிருக்கிறார். ஜெபம் செய்து கொண்டிருந்தாலும், இவர் சேர்த்துக் கொண்ட நிலைகளுக்கு இந்த அணுக்கள் ஆவியின் நிலைகள் எதிர்ப்பணுக்கள் அதிகமாயிற்று.

அரச காலங்களில் பேருண்மையினுடைய நிலைகளை கற்றுக் கொண்டதினாலே, அதையே பற்றி தன் வலிமையினாலே
1.இந்த உடலை விட்டுச் சென்றால்...
2.ஒளிச் சரீரம் பெறவேண்டும் என்ற உணர்ச்சிகள் தூண்டிய பின்தான்
3.அவர் சிந்திக்கத் தொடங்குகின்றார்.

அப்படிச் சிந்திக்கத் தொடங்கும் போதுதான், “மூகாம்பிகை” என்று, கொல்லூரில் அந்தச் சிலையை வடித்தார்.
நமது பூமி சுழலும் போது வரக்கூடிய வெப்பம் “விஷ்ணு”. நமது பூமியை சிவம், சீவலிங்கம் என்றார். அதாவது, நமது பூமி சுழலும்போது எடுக்கக்கூடிய காந்தமும் பிரபஞ்சத்திலேயுள்ள காந்தமும் இரண்டும் உராயப்படும்போது ஏற்படக்கூடியது வெப்பம்.

அந்த வெப்பத்தால் வரக்கூடிய உணர்வின் தன்மை, நாதம், “ஓ” என்று வந்தாலும் “ம்” என்று பூமியின் ஈர்ப்புக்குள் வந்து, பூமிக்குள் இருக்கக்கூடிய மற்ற சத்துக்களுடன் இருக்கக்கூடிய வெப்பகாந்தங்களுடன் மோதியவுடன், இந்த பூமி வெப்பமாகிறது.

அப்போது அந்த வெப்பம், சுழற்சியிலே பூமியின் நடுவிட்டத்திற்குச் செல்கின்றது.

ஒரு தம்ளரில் தண்ணீர் வைத்து, ‘கிர்’ என்று சுற்றினால், கடைசி பாகம் ஒட்டிய இடத்திலேயே நிற்பது போல, விண்ணிலே தோன்றக்கூடிய 
1.இந்த வெப்பத்தின் நிலைகள் பூமியின் நடுமையத்தில் தேங்கி
2.வெப்பத் தணல்கள் அதிகமாகக் கூடிக் கொண்டே வரும்.

அப்படிக் கூடும்போது, அதன் அலைகள் சிறுகச் சிறுக மேலே வரும்போது பூமிக்குள் இருக்கக்கூடிய மற்ற பொருட்கள் அனைத்துமே, ஜீவன் பெறக்கூடிய சக்தி உண்டாகிறது.

அதனால்தான் “ஓம்” என்ற பிரணவத்தை அங்கே சொல்லி, இது ஜீவன் உண்டானாலும், சிவலிங்கம் இந்த பூமி ஜீவன் உள்ளது. எல்லாவற்றையும் இயக்கக்கூடிய சக்தி பெற்றதும், சீவலிங்கம் என்று பெயர் வைத்தார்கள்.

கொல்லூரில் வைத்திருப்பது சிவலிங்கம்தான். அந்த சிவலிங்கத்தில் சரிபாதி விஷ்ணுசக்தி, சரிபகுதி சிவசக்தியினுடைய நிலை என்று  சொல்வார்கள்.

கோலமாமகரிஷி என்ற பெயர் வந்ததின் காரணமே, கோள்களின் ஆற்றலின் பேருண்மையை நிலையை அறிந்தவர் அவர். ஆகையினாலேதான் கோலமாமகரிஷி.

2. கோலமாமகரிஷி இப்பொழுது பாய்ச்சும் ஆற்றல்
கோலமாமகரிஷி கடும் ஜெபமிருந்து, அந்த ஆதிசங்கரருடைய இளமைப் பருவத்திலே அவருக்குள் புகுந்திருக்கும் பொழுது, அவர் எண்ணத்தால் சுழன்று வந்த நிலையைத்தான் இப்பொழுது எடுத்து உபதேசிக்கின்றோம்.

ஆதிசங்கரர், அன்று காசியிலிருந்து, ஒவ்வொரு பாகமும் யாத்திரை செய்யப்படும் பொழுது, தன் உயிரை வேண்டி அந்த உணர்வை எடுத்து, ஒவ்வொரு மக்களையும் வருந்தி அந்த ஆற்றல் மிக்க சக்திகளைப் பற்றிப் பேசினார்.

ஏனென்றால், மக்கள் அனைவரும், அவர்கள் எண்ண அலைகளாலே, அவர் அறியாத நிலைகள் மனிதனால் வளர்க்கப்பட்ட இந்த ஆசை அலைகள் உள்ளே சென்று 
1.அவர்கள் நல்லதை எண்ணினாலும் கூட,
2.முடியாத நிலைகளில் ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கும் அந்தச் சக்தியை மாற்றுவதற்காக,
3.அத்வைதத்தின் தத்துவத்தை (சூட்சமம் - கண்ணுக்குப் புலப்படாத நிலை) ஒவ்வொரு மக்களுடைய நிலைகளிலும் ஊடுருவச் செய்தார்.

மக்கள் அனைவரும் எத்தனையோ அவஸ்தைகள்பட்டு, தொல்லைகள்பட்டு, அவர்கள் சிந்திக்க முடியாத நிலைகளில் இருக்கின்றார்கள். நல்லதை நினைக்கின்றார்கள், நல்லதைச் செயல்படுத்த முடியவில்லை.

பக்தியின் நிலையில் இருக்கப்படும் பொழுது, அந்த உணர்வலைகளால் ஈர்க்கப்பட்டு, அது திடீரென்ற நிலைகளில் அவர்களைச் சிந்திக்க முடியாத நிலைகள் செய்துவிடுகின்றது.

இதைப் போன்று, எந்தெந்த பக்தியின் வசத்தில் நாம் சிக்கினோமோ, இந்த உணர்வின் தன்மை கொண்டு, நம்மையறியாமல் ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கின்றது என்ற நிலையும், அந்த உணர்வின் நிலையில் சிக்கி, நாம் எந்தெந்த உணர்ச்சி வசப்பட்டோமோ, அந்த உணர்வுகளே நம்மை இட்டுச் செல்கின்றது.

நாம் ஆசாபாசத்துடன் இருக்கப்படும் பொழுது, அந்தப் பாசத்திற்குள் நமக்குத் தெரியாத நிலைகளில் நம்மை அறியாமலேயே, சில நிலைகளில் தவறுகள் செய்ய வைத்துவிடுகிறது.

1.நாம் தவறு செய்யவில்லை.
2.அந்தத் தவறு இல்லாத நிலைகளில் எத்தனையோ இன்னல் பட்டுக் கொண்டிருக்கின்றோம்.

ஒரு சொல்லின் தொடர் வந்துவிட்டதென்றால், அதைப் பின் தொடர்ந்து முடியாத நிலைகளில், பலர் அவஸ்தைப்பட்டுக் கொண்டிருக்கின்றனர்.
அவர்களெல்லாம் மீள வேண்டுமென்றுதான், இந்தக் கோலமாமகரிஷியினுடைய அருள் சக்தியின் நிலைகள் எடுத்து, அவர் எந்த அலையின் தன்மை கொண்டு எல்லோரும்  பெறவேண்டுமென்று, விரும்பினாரோ, அதை யாம் வெளிப்படுத்திக் கொண்டிருக்கின்றோம்.
இப்பொழுது யாம் பேசுகின்றோம் என்று எண்ண வேண்டாம்.

1.இவை அனைத்துமே, அன்று கோலமாமகரிஷி எப்படி ஆதிசங்கரருடைய உடலிலிருந்து வெளிப்படுத்தினாரோ
2.அதே உணர்வின் தன்மையை அவர்கள்தான் வெளிப்படுத்துகின்றார்கள்.
3.அந்த உணர்வின்  ஆற்றலைத்தான், யாம் உங்களுக்குள் இப்பொழுது பாய்ச்சிக் கொண்டிருக்கின்றோம்.

ஆக, பாய்ச்சும் இந்த உணர்வினை நீங்கள் துருவ தியானத்தின் நிலைகள் கொண்டு ஆத்ம சுத்தி செய்யும் பொழுது, உங்கள் உடலில் இருக்கக்கூடிய எத்தகைய நோயானாலும், எந்தக் கவலையானாலும், குடும்பத்தில் எந்தச் சிக்கல் இருந்தாலும் அது நிவர்த்தியாகும்.

கோலமாமகரிஷி, ஆதிசங்கரருடைய உடலிலிருந்துதான் மெய் ஒளியைப் பெற்று, விண் சென்றார். ஆதிசங்கராச்சாரியருடைய உயிராத்மாவும் விண்வெளி சென்றுவிட்டது.

அவர்களெல்லாம், இன்று விண்வெளியில் நட்சத்திரமாக இருக்கின்றார்கள். அவர்கள் உணர்த்திய இந்த அருள் வழியை, நாம் ஒவ்வொரு நிமிடமும் பெற வேண்டும்.

3. கொல்லூரில் எடுத்து வளர்த்த சக்தி
நம்மை அறியாமலேயே, நம்மைத் துன்புறுத்திக் கொண்டிருக்கும் நிலையை மாற்றுவதற்குத்தான், தக்க ஆயுதத்தை “மிஷின் கண்” (MACHINE GUN) போன்று, உங்களுக்கு ஆத்ம சுத்தி என்ற ஆயுதத்தைக் கையில் கொடுக்கிறோம்.

ஏனென்றால், இதை உங்களுக்கு யாம், வாக்குடன் கூடி, கொடுக்கும் நிலைகள். நீங்கள் எல்லாம் கடும் ஜெபமிருந்து இந்தச் சக்தியைப் பெறுவதென்றால் அவ்வளவு சாதாரணமானதல்ல.

இந்த ஆத்ம சுத்தி என்கிற எண்ண உணர்வின் எண்ண வாக்கை, சரியான முறைகளில், உங்களுக்குக் கொடுப்பதற்கு, இந்த உணர்வின் தன்மையை, யாம் கொல்லூரில் 16 வருடங்கள் எடுத்து, வளர்த்து, “அந்த வாக்கின் ஒலியை” உங்களுக்குள் பதியச் செய்கின்றோம்.

இப்படிப் பதியச் செய்ததை,
1.யாம் சொல்லும் இந்த முறைப்படி யார் ஒருவர் தியானத்தில் இருக்கின்றார்களோ,
2.அவர்களுக்கு இந்த வாழ்க்கையிலே எத்தகைய துன்பமிருந்தாலும், நிச்சயம் நீங்கிவிடும்.

August 22, 2025

பழனியம்பதியின் தத்துவம்

பழனியம்பதியின் தத்துவம்


மாமகரிஷி போகன் இந்தப் பிரபஞ்சத்தின் நிலையில் மனிதனாக உருப்பெற்ற நிலையைக் கருவாக உருவாக்கினான்.
 
சூரியனிலிருந்து வெளிப்படக்கூடிய பாதரசத்தை அவன் கவர்ந்து 27 நட்சத்திரங்கள் உமிழ்த்தும் சக்தி வைரக்கல்களாக ருப்பெற்றதை எடுத்து நவக்கோளின் பாசாணக் கற்களையும் பூமியில் விளைந்ததைத் தனித்துப் பிரித்து எடுத்து “அனைத்தையும் ஒன்று சேர்த்து ஒரு சிலையாக மனிதனைப் போன்று உருவாக்கினான்.
 
புழுவிலிருந்து நாம் மனிதனாக உருவாகும் வரையிலும் எந்தெந்தத் தாவர இனத்தை உணவாக எடுத்து வளர்த்துத் தன்னை அது காத்திட்டதோ
1.தீமையை அகற்றிடும் நிலையாக வளர்ச்சி பெற்ற அந்தத் தாவர இனங்களை எல்லாம்
2.முருகன் சிலைக்குள் அதையும் சாரணையாக ஏற்றினார் அந்த மாமகரிஷி.
 
இந்தப் பிரபஞ்சத்தில் உருவான உணர்வின் சத்து உயிரணுவாகித் தோன்றி மனிதன் வரை வளர்ச்சி பெற்ற நிலையில் தீமைகளை நீக்கிடும் ஆறாவது அறிவின் தன்மை கொண்டு வாழ்ந்தாலும் நம்மை அறியாது புகுந்த தீமைகளை அகற்றிட அருள் ஞானி அவன் கண்டுணர்ந்த நிலைகளை வெளிப்படுத்தினான்.
 
ஒவ்வொரு மனிதனின் உயிரையும் கடவுளாக மதித்து அவன் அமைத்த ஆலயம் என்று இந்த உடலை மதித்து அந்த ஆலயத்தில் தீமைகள் புகுந்தால் அதை அகற்றிடும் சக்தியாக முருகன் சிலையை உருவாக்கி
1.எண்ணிலடங்காத தாவர இனச் சத்துக்களை அதற்குள் சாரணையாக்கி
2.மனிதனின் ஆறாவது அறிவில் புகுந்த தீமைகளை அகற்றிட சிலையாக அவன் வடித்து வைத்தான்.
 
அக்காலங்களில் அந்தச் சிலை மீது சொட்டு சொட்டாக நீரை விழும்படி செய்திருப்பார்கள்.
1.நெகட்டிவ் பாசிட்டிவ் என்று அதற்குள் இது எதிர்மறையாக இயக்கப்படும் பொழுது அந்த நீரின் தன்மை ஆவிகளாக வெளிப்படும்.
2.நம் உடலில் வெப்பத்தால் எப்படி வியர்க்கின்றதோ அதைப் போன்று ந்த முருகன் சிலையிலிருந்து “உயர்ந்தங்கள் வெளிப்படும்.
3.அதை நுகரப்படும் போது தீமைகளை அகற்றிடும் சக்தியாக அது நமக்குள் வரும்.
 
கீழிருந்து நாம் படியேறி அங்கே மேலே செல்லப்படும் பொழுது நம் எண்ணங்கள் அந்த ஆறாவது அறிவின் தன்மை கொண்டு நம்மைக் காத்திடும் நிலையாக போகன் தனக்குள் விளைய வைத்த உணர்வினைப் பெறும் நிலையாக விண்ணை நோக்கி ஏகி அந்த நினைவினைப் பற்று கொண்டு வெளியில் இருந்து வரும் தீமைகளுக்கோ நஞ்சுகளுக்கோ இடம் கொடுக்காது விண்ணிலிருந்து வரும் உணர்வின் சத்தைப் பெறும்படி செய்தான் போகன் பழனிம்பதியில்.
 
அதே சமயத்தில் இடைமறித்துச் சோர்வடையப்படும் நேரத்தில் தீமைகள் வரும் போது அதை அகற்றிட இடும்பன் என்றும் அங்கே வைத்தார்.
 
தொழில் செய்யும் பொழுது வலுக் கொண்டு செயல்பட்டாலும் சோர்வடையும் சமயத்தில் டைமறித்துத் தீமைகள் நமக்குள் வந்து விடுகிறது என்ற நிலையை உணர்த்துவதற்காக இடும்பனை வைத்துக் காட்டியுள்ளான்.
 
நமக்கு எப்பொழுதெல்லாம் சோர்வு வருகின்றதோ அப்போது அமர்ந்து ஈஸ்வரா என்று உயிரை எண்ணி போக மாமகரிஷியின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும் என்று எண்ணி ஏங்கி அவன் ஊட்டிய உணர்வை உடலுக்குள் வலு சேர்த்து ஆறாவது அறிவைக் காத்திட்ட அந்த அருள் ஞானியின் உணர்வைப் பெற வேண்டும்.
 
1.அறிவின் தன்மையாக இருக்கும் “முருகு” மாற்றி அமைக்கும் அந்தச் சக்தியை
2.ளிச் சுடராக உருவாக்கும் நிலை நாம் பெற வேண்டும் என்ற எண்ணத்துடன் மேல் நோக்கிச் செல்லும்படி செய்தான் போகன்.
 
ஒரு மனிதன் வேதனைப்படுவதைப் பார்த்தபின் அது நம்மைச் சோர்வடையச் செய்கின்றது. அதே சமயத்தில் அந்தச் சோர்வான உணர்வுகள் நம் நல்ல உணர்வுடன் கலந்து விடுகின்றது.
 
தைப் போன்ற தீமைகளை அகற்றிடும் நிலையாக முருகன் சிலையை உற்றுப் பார்த்து அந்த உணர்வின் சத்தைப் பெற வேண்டும் என்று ஏங்கி அந்த அழுக்கினைத் துடைக்க தீமைகளை அகற்றிட அத்தகைய நிலைகளைச் செய்தான் போகன்.
 
மெய்ப்பொருள் காணும் திறன் பெற வேண்டும் ஈஸ்வரா என்ற இந்த நினைவுடன் கண் கொண்டு அந்தச் சிலையைக் கூர்ந்து நோக்குவோம் என்றால் அவன் டித்த உணர்வின் தன்மையை நாமும் நுகர முடியும்.
 
உயிரைக் கடவுளாக மதித்து உடலை ஆலயமாக மதித்து அதற்குள் இருக்கும் நல்ல குணங்களைத் தெய்வமாக மதித்து
1.ஆன்மாவில் அறியாது புகும் தீமைகளைச் சுத்தப்படுத்தும் மார்க்கமாகத் தன்னை வணங்கும்படி அந்தச் சிலையை உருவாக்கினான் அன்று போகன்.
2.அவன் காட்டிய வழிப்படி அதைச் செய்தோம் என்றால் இது தான் “பஞ்ச அபிஷேகம் என்பது.
 
கண் காது மூக்கு இவைகள் கொண்டு ஒருங்கிணைந்து அந்த அருள் சக்திகளைப் பெற வேண்டும் என்று ங்கும் பொழுது ஒலி கொண்டு அதைக் கேட்டாலும் கண் புலனறிவால் உற்று நோக்கப்படும் பொழுது அதிலிருந்து வெளிப்படும் மங்களைச் சுவாசிக்கும் போது நறுமணமும் இந்த உணர்வுகள் உமிழ் நீராக மாறும் பொழுது சுவையாகவும்… நம் உயிரான ஈசனுக்கு அபிஷேகம் செய்து இந்த உணர்வின் ஆற்றலைப் பருகும் நிலையாக அந்தச் சிலையை உருவாக்கினான் போகன்.
 
பல கனிகளை அபிஷேகித்து அதை உணவாக உட்கொண்டால் நம் தீமை அகலும் என்று எண்ணுகின்றோமே தவிர இது புறநிலைக்கு உகந்தது அகநிலைக்கு உதவாது.
 
அகநிலைகளுக்குள் எடுக்கும் சக்தியை உணர்ந்து அறியாமல் புகுந்த தீமைகளை அகற்றிட… பல லட்சம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த அகஸ்தியன் அதைச் செய்தாலும் அதே போன்று…
1.ஆறாவது அறிவின் தன்மையை இயல்பாகக் கொண்டு தனக்குள் ஞானத்தைக் கண்டுணர்ந்து
2.தீமைகளை அகற்றிடும் சக்தியாக ஒவ்வொன்றிலும் உயர்ந்த சக்திகளைப் போகித்தான் மோகித்தான்
3.இந்த உணர்வினைத் தனக்குள் இணைத்தான் போகன் ஒவ்வொரு சக்தியாக.
 
இன்னொரு உடலுக்குள் செல்லாதபடி அவன் கண்டறிந்த உணர்வின் சத்தைத் தனக்குள் தெரிந்து… சரீரத்தையும் காத்து முழுமை அடைந்து உயிருடன் ஒன்றி சப்தரிஷி மண்டலத்துடன் இணைந்தான்.
 
அவன் வாழ்ந்த காலம் 5000 ஆண்டுகளுக்கு முன். ஆனால் காலத்தால் இது மறைக்கப்பட்டு விட்டது.
 
பல கோடித் தாவரங்கள் மூலிகைகளைப் பச்சிலைகளை நுகர்ந்தான். அந்தச் சத்தியினைத் தனக்குள் இணைத்தான் உணர்வினை அறிந்தான் தீமை அகற்றிடும் ஆற்றலை கண்டான் அந்தச் சக்திகளைத் தான் சிலைக்குள் சாரணையாக ஏற்றினான்.
 
1.நல்லதைக் காத்திடும் நிலையாக தீமைகளை அகற்றிடும் ரிமோட் கண்ட்ரோல் போன்று
2.அந்தச் சிலையை உற்று நோக்கப்படும் பொழுது நம்மை அறியாது வந்த தீமைகளை அகற்றிடும் நிலைக்கே அதை உருவாக்கினான்.
 
பழனிம்பதியின் தத்துவம் இதுதான்.
 
அவன் வெளிப்படுத்திய உணர்வலைகள் இங்கே படர்ந்துள்ளது. தை நுகர்ந்தால் இந்த மனிதப் பிறவியின் முழுமையை அடையலாம்.. தீமைகளை அகற்றலாம்.
 
ன்று விஞ்ஞானிகள் தாவரங்களின் சத்தை இணைத்துப் புது விதமாக எப்படி உருவாக்குகின்றார்களோ அதைப் போன்று
1.மெய் ஞானிகள் உணர்வுகளை நமக்குள் இணைத்திடும் சக்தியாக அந்த அரும்பெரும் சக்திகளை ஆலயத்தில் வணங்கிப் பெற முடியும்
2.போக மாமகரிஷியின் அருளை இணைத்து நமக்குள் உருவாக்க முடியும்.

August 21, 2025

நான் தியானிப்பது யாரை…?

நான் தியானிப்பது யாரை…?


குருநாதர் பித்தரைப் போன்று இருந்து சாக்கடை அருகே எம்மை அமரச் செய்து…
1.அந்தச் சாக்கடையை நீக்கி நல்ல ணர்வுகளை எவ்வாறு பெற வேண்டும்…? என்று
2.உபதேசித்த அருளைத் தான் நீங்களும் நிச்சயம் பெற முடியும் என்று உபதேசித்து வருகின்றோம்.
 
அந்த அருள் ஞானிகள் அவர்களுக்குள் விளைய வைத்த ஆற்றல்கள் இங்கே நமக்குன் முன் படர்ந்திருப்பதை நிச்சயம் நீங்கள் பெற முடியும்.
 
நாம் எண்ணியதை நம் உயிர் படைக்கின்றது என்ற நிலையில் நாம் தை எண்ணுகின்றோமோ அதுவாகின்றோம். கீதையில் சொன்னது போன்று நீ எதை எண்ணுகின்றாயோ அதுவாகின்றாய்.
 
கண் காட்டிய வழியில் நிச்சயம் அந்த அருளை நீங்கள் பெற முடியும்.
 
1.யாம் உபதேசித்த உணர்வை நீங்கள் பெற வேண்டும் என்று நான் தியானிப்பது யாரை என்றால் உங்கள் உயிரைத் தான்…!”
2.உயிரால் அமைக்கப்பட்ட இந்த உடலான ஆலயத்திற்குள்
3.மனிதனாக உருவாக்கப்பட்ட அரும்பெரும் சக்திகள் நல் உணர்வுகளாகத் தெய்வமாக இருக்கும் நிலையில்
4.அறியாத உட்புகந்து தீமைகள் செய்யும் அந்த நிலையை அகற்ற வேண்டும் என்பதற்குத்தான் இந்தத் தியான பயிற்சி.
 
ஒருக்கிணைந்த நிலையில் தியானிக்கப்படும் பொழுது உங்களுடைய நினைவலைகள் மகரிஷிகளின் அருள் சக்திகளைப் பெற வேண்டும் என்று எண்ணும் போது… உங்கள் உயிரை நான் தியானிக்கின்றேன்…”
 
1.என் குரு காட்டி நிலைகள் கொண்டு உங்களுக்கு உறுதுணையாக
2.உங்கள் உயிரை ஈசனாக மதித்து அவன் கட்டிய ஆலயத்திற்குள் அந்த மகரிஷிகளின் அருள் சக்தி படர வேண்டும் என்று தியானிகின்றேன்.
 
மனிதனாக உருவாக்கிய அரும்பெரும் சக்தியான அந்தத் தெய்வ நிலைகள் மகரிஷிகளின் அருள் ஒளி பெற வேண்டும்… அங்கே அறியாத இருள்கள் நீங்க வேண்டும் என்று தான் உங்களை நான் தியானிக்கின்றேன்.
 
நீங்கள் இதை எண்ணித் தியானித்து அந்த ஆற்றல்களை வளர்த்துக் கொள்ளலாம்.
 
இந்த உபதேச வாயிலாக உங்கள் உணர்ச்சிகளைத் தூண்டச் செய்து… அந்த மகரிஷிகளின் அருள் சக்திகளை நீங்கள் பெற உங்கள் உயிரைக் கடவுளாக மதித்து உங்கள் உடலைக் கோவிலாக மதித்து அந்த மகரிஷிகளின் அருள் சக்தி உங்கள் உடலில் இணைய வேண்டும் என்று உங்களை தியானிக்கும் பொழுது
1.நீங்களும் அதே போன்று எண்ணினால் மகரிஷிகளின் அருள் சக்திகளை நீங்கள் கவரும் சக்தி பெற்று
2.உங்கள் ஆன்மாவிலே கலக்கப்பட்டு உங்களுக்குள் சக்தி வாய்ந்த ஞான வித்துக்களாக ஊன்றப்படுகின்றது.
 
இந்த உணர்வின் நினைவு கொண்டு நாம் அனைவரும் ஒன்று சேர்த்து தியானத்தில் அமர்ந்திருக்கும் அனைவரும் அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்ற வாக்கினைப் பதியச் செய்கின்றோம்.
 
அதன் வழியில் உடல் நலம் மன நலம் மன பலம் மன வளம் தொழில் வளம் பெறவும்… யாம் கொடுக்கும் வாக்கின் தன்மையால் ஒற்றுமையான உணர்வுகளை வளர்க்கவும் இது உதவும்.
 
இந்த உணர்வின் துணை கொண்டு உங்களுக்குள் அதை வலுப் பெறச் செய்வதற்கே குருநாதர் காட்டிய அருள் வழியில் மீண்டும் மீண்டும் உபதேசித்து உங்களுக்குள் அதை ஆழமாகப் பதிவாக்குகின்றோம்.
 
அந்த அருள் ஞானியின் சக்திகளைப் பருகும் தகுதி பெற வேண்டும் என்பதற்குத்தான் கூட்டுத் தியானத்தைச் செய்வது.
 
கூட்டுத் தியானம் இருக்கக் கற்றுக் கொண்டவர்கள்
1.மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று எந்த நிமிடத்தில் என்று எண்ணினாலும்
2.உடனுக்குடன் அதை நீங்கள் பெற முடியும்… தீமைகளிலிருந்து விடுபட முடியும்… மகிழ்ந்து வாழும் அருள் சக்தியைப் பெற முடியும்.

August 20, 2025

“உந்து விசை” இல்லை என்றால் என்றும் எப்பொழுதும் விண்ணுலகம் செல்ல முடியாது

“உந்து விசை” இல்லை என்றால் என்றும் எப்பொழுதும் விண்ணுலகம் செல்ல முடியாது


தாய் தந்தையர் நம்மைக் காத்திட எத்தனையோ வேதனைகளை அனுபவித்து உடலில் அதை நுகர்ந்துள்ளார்கள். அவ்வாறு நம்மைக் காத்திட நஞ்சின் தன்மையாக விளைய வைத்த நிலையில் ன்னை தந்தையர் உடலை விட்டுப் பிரிந்து விட்டால்
1.மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று நாம் விண்ணை நோக்கி ஏகி… அந்த உணர்வின் துணை கொண்டு
2.என் அன்னை தந்தைக்கு அந்த மகரிஷிகளின் அருள் ஒளிடர வேண்டும்.
3.உடலை விட்டுப் பிரிந்து சென்ற அந்த உயிரான்மாக்கள் மகரிஷிகளின் அருள் வட்டத்தில் இணைய வேண்டும்.
4.என்னை ஈன்ற அந்த அன்னை தந்தையர் பிறவா நிலை பெற வேண்டும்.
5.மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்தில் சென்று உடல் பெறும் அந்த நஞ்சு கொண்ட உணர்வுகள் அனைத்தும் கரைந்து விட வேண்டும்.
 
என்னை வளர்த்திட்ட உயர்ந்த உணர்வின் ஒலிகள் உயிருடன் ஒன்றி என்றும் நிலைத்திருக்கும் அருள் ஞானிகள் உணர்வுடன் ஒன்றி அழியா ஒளிச் சரீரமான பெரு வீடு பெரு நிலை என்ற நிலை அடைந்திட வேண்டும் என்று
1.”விண்ணை நோக்கி உந்தி இந்த உணர்வின் வேட்கை கொண்ட பின்
2.எந்தத் தாயின் சரீரத்தில் இருந்து நாம் உருவானமோ அவர்களை விண்ணை நோக்கி ந்தித் தள்ள வேண்டும்.
 
ஆகவே… தாய் தந்தையர் உடலை விட்டுப் பிரிந்தால் இன்னொரு உடலுக்குள் புகாது நஞ்சு கொண்ட உணர்வுகளை அவர்கள் வாழ்ந்த காலத்தில் சேர்த்திருந்தாலும்… அதிலே அவர்கள் சிக்காது அடுத்த கணமே விண் செலுத்தும் படி தான் ஞானிகள் நமக்குக் காட்டியுள்ளார்கள்.
 
அவ்வாறு செலுத்தி விட்டால் சப்தரிஷி மண்டலத்தில் அவர்கள் உயிரான்மாக்கள் இணைந்து “சப்தரிஷிகள் உமிழ்த்தும் உணர்வை உணவாக எடுத்து ஒளியின் சரீரமாக என்றும் நிலைத்திருப்பார்கள்.
 
ஆனால் இன்று ஐதீகம் என்று சொல்லி இறந்தவர்களின் சுட்ட சாம்பலைக் கங்கையில் கொண்டு கரைத்து விட்டால் “செய்த பாவம் போய்விடும் என்று இப்படித்தான் செய்து கொண்டிருக்கின்றோம்.
 
அவர்களுக்குப் பிரியப்பட்ட பதார்த்தங்களை எல்லாம் செய்து கொடுத்து விட்டால் அவர்கள் மகிழ்ந்து விடுவார்கள்… சொர்க்கத்திற்குச் சென்று விடுவார்கள்…! என்று தான் நமக்குக் காட்டியுள்ளார்கள்.
 
எது சொர்க்கம்…? எவ்வாறு அங்கே அனுப்ப வேண்டும்…? என்று ஞானிகள் காட்டிய உண்மைகள் காலத்தால் மறைந்து விட்டது.
 
ஆகவே ஞானிகள் காட்டிய வழிப்படி உடலை விட்டுப் பிரிந்த முன்னோர்களின் உயிரான்மாக்கள் அந்தச் சப்தரிஷி மண்டலத்துடன் இணை வேண்டும் என்று
1.உந்து விசை கொண்டு தான் அங்கே செலுத்த வேண்டும்.
2.உந்து விசை இல்லை என்றால் என்றும் எப்பொழுதும் விண்ணுலகம் செல்ல முடியாது.
 
ஈர்ப்பால் கவர்ந்த தாவர இனச் சத்து நம் உடலாக விளைந்த நிலைகள் கொண்டு புவியின் ஈர்ப்பிலே தான் இருக்கும். தேத்தின் துணை கொண்ட நிலையில் மனிதருடன் பற்று கொண்டால் “அந்தப் பற்றின் ஈர்ப்பின் நிலைகளுக்கே மீண்டும் உடல் பெறும் நிலைகளுக்கே வந்துவிடும்…”
 
தன் மீது பற்று அதிகமானதோ… அந்த நஞ்சு கொண்ட உணர்வு இணைக்கப்படும் பொழுது அதனின் நிலைகள் கொண்டே உயிரினங்களுடைய ரூபங்கள் மாத்தான் செய்யும்.
 
குருநாதர் இதையெல்லாம் நமக்குத் தெளிவாகக் காட்டியுள்ளார்.
 
ஆகவே அவர் காட்டிய அருள் வழிப்படி உடலை விட்டுப் பிரிந்து சென்ற முன்னோர்கள் மூதாதையரின் உயிரான்மாக்களை நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து ந்தித் தள்ளி அந்தச் சப்தரிஷி மண்டலங்களுடன் இணையச் செய்து அழியா ஒளிச் சரீரம் பெறச் செய்வோம்.
 
அதன் மூலமாக சப்தரிஷி மண்டலங்களின் அருள் சக்திகளை எளிதில் பெற்று மூச்சும் பேச்சும் பிறருடைய தீமைகளை அகற்றும் நிலையாக வருகின்றது.
 
நீங்கள் இதனைச் செயல்படுத்தும் போது… விஞ்ஞான உலகில் ஏற்பட்டுள்ள நஞ்சினை உங்கள் மூச்சலைகள் துரத்தி விட்டு மெய் ஞானிகள் உணர்வுகளைக் கூட்டச் செய்து மெய் உணர்வினை இந்த உடலுக்குள் சேர்த்து உடலை விட்டு அகன்றாலும் மெய் ஞானியின் உணர்வுடன் நாம் ஒன்றிட முடியும்.
 
ஆகவே… உங்களை நீங்கள் நம்ப வேண்டும்.
 
1.எண்ணியதை இயக்குவது உயிரே
2.எண்ணியதை இறையாக்குவதும் உயிரே
3.ண்ணியதை உடல் ஆக்குவதும் உயிரே
4.எண்ணியதை உடலுக்குள் விளையச் செய்வதும் உயிரே
5.நம்மை ஆண்டு கொண்டிருப்பதும் உயிரே
6.எண்ணியதைப் பிரம்மமாகச் சிருஷ்டிப்பதும் உயிரே
7.எடுத்துக் கொண்ட உணர்வின் ஞானமாக இயக்குவதும் அவனே.
 
இதனை நினைவு கொண்டு தையெல்லாம் நீங்கள் பெற வேண்டும் என்று பிரார்த்திக்கின்றேன்.