ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

April 1, 2026

ஆதியிலே அகஸ்தியன் எவ்வாறு விண்ணுலகம் சென்றானோ அந்த வழியில் நாமும் செல்ல வேண்டும்

ஆதியிலே அகஸ்தியன் எவ்வாறு விண்ணுலகம் சென்றானோ அந்த வழியில் நாமும் செல்ல வேண்டும்


அன்னை தந்தையர் அருளாசி பெற வேண்டும் என்று அனு தினமும் நாம் எண்ணி அவர்களிடம் அதைப் பெற வேண்டும்.
 
1.பேரண்டமும் பேருலகமும் உன் அன்னை தந்தையர் தான் என்ற உணர்வு கொண்டு
2.இந்த இணைப்பின் பிணைப்பின் நிலைகள் வரப்படும் பொழுது தான் முழுமை அடைய முடியும் என்று
3.அதை முதலில் வினையாகச் சேர்க்கச் சொல்லிநமக்குள் ஊழ்வினையாக
4.”அந்த வினைக்கு நாயகனாக நீ ஆக வேண்டும்…” என்று நாரதன் ஞானக் கனியைக் கொடுக்கின்றான் என்று ஞானிகள் அன்று காட்டினார்கள்.
 
நம் அன்னை தந்தையர் உடலை விட்டுப் பிரிந்து சென்று விட்டால் விநாயகரைப் பார்க்கப்படும் பொழுது எவ்வாறு எண்ண வேண்டும்…? என்ற நிலையையும் அன்று ஞானிகள் உணர்த்தி உள்ளார்கள்.
 
உடலை விட்டுப் பிரிந்து சென்ற என் அன்னை தந்தையரின் உயிரான்மாக்கள் எங்கள் குலதெய்மான உயிரான்மாக்கள்  
1.அந்தச் சப்தரிஷி மண்டலத்துடன் அந்த அகஸ்திய மாமகரிஷியின் அருள் வட்டத்திலே இணைந்து
2.என்றும் அழியா ஒளிச் சரீரம் பெற வேண்டும் என்று இந்த உணர்வினை அங்கே உந்தி
3.இன்னோரு உடல் பெறும் நிலைகளை மாற்றிப் பிறவாநிலை பெறச் செய்வதற்கு
4.அந்த இணைப்பின் தன்மையைக் கொண்டு வரச் சொன்னார்கள்.
 
இதை உணர்த்திய ஞானி விண்ணிலே இருக்கின்றான். அவன் உணர்வை நமக்குள் கூட்டி இந்த உணர்வினை நினைவுபடுத்தி இணைத்துக் கொண்டபின் இந்த உயிரான்மா பிறவா நிலை பெற வேண்டும் என்று முதலில் செயல்படுத்தும் முறையைச் சொன்னான்.
1.ஆகவே அந்த வினையை வினைக்கு நாயகனாக ஆக்கி அதனின் உணர்வு கொண்டு
2.”ஒளியின் சரீரமாக வினைக்கு நாயகனாக நீ ஆகு…” என்ற நிலையை உணர்த்தினார்கள்.
 
உடலை விட்டுச் பிரிந்து சென்ற உயிரான்மாக்கள் ஒளிச் சரீரம் பெற வேண்டும். என்றும் பதினாறு என்ற நிலையை அடைய வேண்டும். குழந்தையாக வாழும் காலத்தில் எங்களுக்கு வழி காட்டியது போன்று
1.பொருளறிந்து செயல்படும் உணர்வின் சுடராக எங்கள் உணர்வுக்குள் நின்று
2.”எங்களுக்கு என்றென்றும் வழி காட்ட வேண்டும்…” என்று இப்படித்தான் இந்த வினையை வினைக்கு நாயகனாக்க வேண்டும்.
 
மனித வாழ்வில் விண் சென்ற மெய் ஞானி எங்கே அடைந்தானோ எங்கள் அன்னை தந்தையர் அந்த எல்லையை முதலில் அடைய வேண்டும் என்று காட்டி அதற்குப் பின் தான் நாம் அங்கே செல்ல முடியும்…” என்பதையும் உணர்த்தினார்கள்.
 
அன்னை தந்தையர் முதலிலே மனிதனாக ஆனார்கள். அடுத்து நம்மை மனிதனாக உருவாக்கினார்கள். மனிதனான பின்
1.மனித நிலையிலிருந்து உணர்வினை ஒளியாக மாற்றித் தான் முதல் மனிதன் அகஸ்தியன் விண் சென்றான்.
2.அணுவின் ஆற்றலை அறிந்தான் உணர்வின் தன்மை ஒளியாக மாற்றினான்.
 
தே வினையைத் தன் அன்னை தந்தையருக்கு அது வினைக்கு நாயகனாக ஆக்க வேண்டும் என்று அவர்களையும் இணைத்தே விண் சென்றான்… ஒருக்கிணைந்து செயல்படும் தன்மையை அங்கே உருவாக்கினான்.
 
விநாயகரைக் காட்டப்படும் பொழுது அருகிலே அரச மரத்தையும் வைத்திருப்பார்கள். அந்த அரச மரம் விண்வெளியில் தன்னிச்சையாகத் தன் சத்தை எடுத்து வளர்கின்றது. அதே போல்…
1.மனிதன் நீ அரசைப் போல் என்றும் நிலையான நிலையில் நீ ஒங்கி வளர வேண்டும்.
2.அந்த மகரிஷிகளின் ஒளி வட்டத்தில் நீ இணைய வேண்டும் என்று உணர்த்துவதற்கு
3.சூட்சும நிலையில் நடப்பதை உருவத்தைக் காட்டிச் சொல்லின் உணர்வு கொண்டு வினையாகப் பதிவு செய்து
4.வினைக்கு நாயகனாகச் சுவாசித்து அதை உடலாக உனக்குள் சேர்த்துக் கொள் என்று காட்டினான்.
 
ம் நமச்சிவாய சிவாய நம ஓம் என்று மனிதன் எண்ணிய உணர்வுகள் இங்கே இயங்கினாலும் அதைச் சிவமாக்கி சிவத்தின் தன்மை ஒளியின் சுடராக என்றும் நிலையாக ஒளியின் சரீரம் பெற வேண்டும்.
 
அன்னை தந்தையரை நினைத்து நீ இதைச் செயல்படுத்த வேண்டும் என்று காட்டுகின்றார்கள். கீதையிலே நீ எதை எண்ணுகின்றாயோ நீ அதுவாகின்றாய்.
 
1.அன்னை தந்தையர் அங்கே ஒளிச்ரீரம் பெற வேண்டும் என்று எண்ணினால் தான் அது சரியாக இருக்கும்.
2.அவர்கள் முன் செல்கிறார்கள்… அவர்கள் வழியில் அடுத்து நாமும் ஒளிச்ரீரம் பெறுகின்றோம்.

March 31, 2026

கணவன் மனைவி தியானத்தால் ஒளிகள் பாய்ந்து குடும்பத்திற்குள் இருள் நீங்கும்

கணவன் மனைவி தியானத்தால் ஒளிகள் பாய்ந்து குடும்பத்திற்குள் இருள் நீங்கும்


ரோட்டிலே ஒருவன் யாரையோ கோபமாகப் பேசுகின்றான்… நாம் பார்க்க நேருகின்றது. “நடு ரோட்டில் இந்த மாதிரிப் பேசுகின்றானேஎன்ற உணர்வு வந்தவுடனே உயிரில் பட்டவுடனே நமக்கும் அந்த உணர்ச்சியைத் தூண்டுகிறது.
 
அவன் உணர்வு நம்மை இயக்குகின்றது. அப்பொழுது நாம் என்ன செய்ய வேண்டும்?
 
1.“ஈஸ்வராஎன்று கண்ணின் நினைவை உயிருக்கு புருவ மத்திக்குக் கொண்டு போகவேண்டும்.
2.துருவ நட்சத்திரத்தின் பேரருளும், பேரொளியும் நாங்கள் பெற வேண்டும்.
3.எங்கள் உடலில் படர வேண்டும் எங்கள் ஜீவாத்மா பெற வேண்டும் என்று உள்ளுக்குள் செலுத்த வேண்டும்.
4.இந்த வலுவான நிலைகள் இங்கே வந்தவுடனே தைத் தள்ளிவிட்டு விடுகிறது.
5.புருவ மத்தியில் அடைத்து வலுக்கூட்டி நாம் ஆன்மாவைச் சுத்தப்படுத்துகின்றோம்.
 
துணியில் அழுக்குப் பட்டவுடன் சோப்பைப் போட்டவுடன் நுரை உள்ளுக்குள் போய் அழுக்கை வெளியே தள்ளிவிட்டு விடுகிறது. சோப்புப் போடாமல் என்னதான் துவைத்தாலும் இருட்டடித்த மாதிரிதான் இருக்கும். வெள்ளையாக வருவதில்லை.
 
அது போல நம் ஆன்மாவைத் தூய்மை செய்ய வேண்டும்.
 
இவ்வாறு ஆன்மாவைத் தூய்மைப்படுத்துவதற்கு நம் எண்ணத்திற்கு வலு கொடுப்பதற்குஜீவன் ஊட்டுவதற்கு என்ன செய்ய வேண்டும்?
 
காலையில் எழுந்தவுடனே அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற வேண்டும் ங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் ங்கள் இரத்த நாளங்களில் கலக்க வேண்டும் ங்கள் ஜீவான்மா ஜீவனுக்கள் அனைத்தும் பெற வேண்டும் என்று முதலில் எண்ண வேண்டும்.
 
பின் தன் கணவருக்கு அந்தச் சக்தி கிடைக்க வேண்டும் என்று எண்ணி அவர் உடல் முழுவதும் படர வேண்டும் அவர் ஜீவாத்மா பெற வேண்டும் என்று எண்ண வேண்டும்.
 
அதே போல ஆண்களும் தன் மனைவி பெற வேண்டும் என்று எண்ண வேண்டும்.
 
இரண்டு பேர் சண்டை போட்டார்கள் என்றால் அமெரிக்காவில் இருந்தாலும் புரையோடுகின்றது. நன்மை செய்தான் என்று எண்ணினால் விக்கலாகின்றது.
 
இங்கே குடும்பத்தில் பாசத்துடன் இருந்து “என் குழந்தைக்கு என்ன ஆனதோ…?’என்று எண்ணிப் பாருங்கள், அங்கே தொல்லை கொடுக்கும்.
 
கணவர் ரொம்ப உழைத்துக் கொண்டேயிருக்கிறார். அங்கே இருக்கிறவர்கள் எல்லாம் அவரை இப்படிப் பேசுகிறார்களே…! என்று மனைவி எண்ணினால்ஆண்கள் எவ்வளவு திறமைசாலியாக இருந்தாலும் செயலற்றதாக ஆக்கிவிடும்.
 
அப்பொழுது நாம் என்ன செய்ய வேண்டும்?
 
அந்த மகரிஷிகளின் அருள் ஒளி பெற வேண்டும். என் கணவர் உடலில் ஜீவான்மா முழுவதும் படர வேண்டும். நாங்கள் இரு மனமும் ஒன்றி இரு உயிரும் ஒன்ற வேண்டும்.
 
வாழ்க்கையில் இருளை அகற்றும் அந்த அருள் சக்தி பெற வேண்டும் என்று அதிக நேரம் இல்லையென்றாலும்கொஞ்ச நேரமாவது இரண்டு பேரும் எண்ண வேண்டும். இராத்திரியிலே விழிப்பு வரும் பொழுது இந்த மாதிரிச் செய்து பழக வேண்டும்.
 
1.தியானத்திலே இருக்கிறவர்களுக்குக் காலை 4 மணியில் இருந்து 6 மணிக்குள் இந்த உணர்வுகள் தட்டி எழுப்புவதை நீங்கள் பார்க்கலாம்.
2.உங்களை றியாமலேயே விழிப்பு வரும். அந்த நேரத்திலே அந்த அருள் சக்திகளை நுகருங்கள்.
3.அப்பொழுது பெண்கள் தன் கணவனுக்குக் கிடைக்க வேண்டும்
4.ஆண்கள் தன் மனைவிக்குக் கிடைக்க வேண்டும் என்று எண்ண வேண்டும்.
 
எண்ணியபின்குரு அருளைப் பெற வேண்டும். என் கணவர் பார்வையில் தீமைகள் அகற்றும் அந்தச் சக்தி பெற வேண்டும். அவர் செயலிலே புனிதம் பெற வேண்டும், அவரைப் பார்ப்போரெல்லாம் புனித நிலை பெற வேண்டும் என்று மனைவி எண்ண வேண்டும்.
 
அதே மாதிரி கணவன் மனைவியை ஓர் 5 நிமிடம் எண்ணிப் பழக வேண்டும். இப்படி நீங்கள் எண்ணினால் காலையில் விழித்தெழும் பொழுது ஓர் ஆனந்தமான நிலை வரும்…”
 
இந்த மாதிரி எண்ணும் பொழுது பார்த்தால் உங்கள் உடலில்பளீர் பளீரென்றுவெளிச்சம் வரும்.
1.ஏனெனில் நுகரப்படும் பொழுது இது பட்டவுடன் மோதி இருளை நீக்கி
2.வீட்டிற்குள் ஒரு வெளிச்சம் வருவதைப் பார்க்கலாம்.
 
சூரியன் தான் எடுத்துக் கொண்ட பாதரசத்தால் தன் அருகில் வந்தவுடன் மோதிப் பளீரென்று உலகம் முழுவதும் ஓர் வெளிச்சத்தைக் கொடுக்கிறது.
 
அதே மாதிரி நம் மூச்சலைகள் பட்டவுடன் நமது வீட்டிற்குள் இவ்வாறு எண்ணும் பொழுது நம் உடலில் எடுத்துக் கொண்ட சக்தி தீமை என்ற நிலையில் மோதியவுடனே அது விலகிப் போகும். உடலில் ஒரு விதமான வெளிச்சம் வரும். உடலில் மகிழ்ச்சி ஏற்படும்.
 
இதை நீங்கள் ஒவ்வொரு நாளும் காலையில் 4 மணிக்கெல்லாம் செய்து பழக வேண்டும்.
1.அப்படிச் செய்தால் யாம் பதிவு செய்கின்ற ஞான வித்திற்கு
2.அப்பொழுதுநீங்கள் சக்தி ஊட்டுகிறீர்கள்என்று அர்த்தம்.