ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

June 19, 2025

நல்லவர் கெட்டவராக மாறுவதற்குக் காரணம் என்ன…?

நல்லவர் கெட்டவராக மாறுவதற்குக் காரணம் என்ன…?


மனிதனின் வாழ்க்கையில் நல்லவர் கெட்டவராவதும் கெட்டவர் நல்லவராவதும் சந்தர்ப்பங்களில் தான்…” கெட்டவர் நல்லவர் என்றாலும்
1.”அந்தக் கெட்டவர் நல்லவரின் நல்ல போதனைகளைக் கேட்கப்படும் பொழுது கெட்டதின் பலனைச் சிந்திக்கின்றார்.
2.நாம் கெடுதல் செய்தோம் நாம் அதிலிருந்து இப்பொழுது மகிழ்ச்சி என்ற நிலைகள் வரப்படும் பொழுது சிந்திக்கத் தொடங்குகின்றார்.
3.நல்லவரின் உபதேசத்தை ஏற்றுக் கொண்ட பின் தன்னை அறிந்து எப்படிப் பக்குவமாக நடந்து கொள்வது…? என்று அவருக்குள் சிந்தனை தோன்றுகின்றது.
4.சிந்தனை தோன்றும்போது அதன் வழி தனக்குள் தீமையிலிருந்து விடுபடும் உணர்வுகளும் (தீமையால் பட்ட அனுபவத்தால்)
5.பிறருக்குத் தீமை செய்து அவர்கள் தொல்லைப்பட்ட உணர்வுகள் நுகர்தறிந்ததால் ஞானங்களும் அங்கே அவருக்கு வருகின்றது.
 
இதைப் போன்று அவன் வாழ்க்கையில் நல்லவன் செயலை அதிகமாகக் கூர்மையாகக் கவனித்தால் அந்த உணர்வின் வளர்ச்சியாகி தன் வாழ்க்கையில் வியாபாரத்தை எப்படிப் பெருக்க வேண்டும்…? உயர்ந்த ஞானங்களை எப்படிப் பெருக்க வேண்டும்…? என்ற உணர்வுகள் அங்கே விளைகின்றது. “அவன் வாழ்க்கையிலே செல்வந்தன் ஆகின்றான்…”
 
அதே சமயத்தில் நல்லதைச் செய்து அதனால் எதிர்பார்த்த நிலைகள் வரும் பொழுது இரக்கம் ஈகை கொண்ட உணர்வுகளை நுகர்ந்து நல்லவர் பிறர்படும் கஷ்டத்தினை நுகர்ந்து விட்டால் அந்த உணர்வுகள் அவருக்குள் வலிமை பெற்ற பின் பதட்டமும் பயமும் வந்து விடுகின்றது.
 
ஏனென்றால் பிறிதொரு உணர்வின் தன்மை அச்சுறுத்தும் உணர்வுகளை இவர் பார்த்தாலும்
1.பரிவு மனம் கொண்டு இதனை நுகரப்படும் பொழுது
2.தன் உடலில் உள்ள நல்ல குணங்களில் இது பட்டபின் உணர்வுகள் எதிர்நிலையாகின்றது.
 
எவ்வாறு…?
 
நாம் நுகரும் உணர்வுகள் நம் உடலில் உள்ள நிலையும் அந்த அணுக்கள் இணைந்து புது விதமான அணுக்களாக மாறுகின்றது…” அவ்வாறு உருமாறி விட்டால் அதனால் அடிக்கடி பயப்படுவதும் சிந்திக்கும் திறன் இழப்பதும் கவனக் குறைவுகள் ஆவதும் பயத்தின் உணர்வு கொண்டு தன் வாழ்க்கையைச் சீராகப் பயன்படுத்த முடியாத நிலைகள் ஏற்படுகின்றது.
 
ஆகவே வாழ்க்கையில் சந்தர்ப்பத்தால் நுகர்ந்த உணர்வுகளால்
1.நல்லவர் கெட்டவராவதும் சந்தர்ப்பத்தால் கடும் நோயாக ஆவதும்
2.இதைப்போல பண்பும் அன்பும் கொண்டோர் உணர்வுகள் இவ்வாறு இயங்குகின்றது.
 
கண் கொண்டு பிறருடைய துயர்களை உற்றுப் பார்த்துக் கேட்டறிந்த பின் ம் நமச்சிவாய…” என்று இந்த உடலுக்குள் அணுக்களாக உருப்பெற்று விடுகின்றது.
 
இப்படி இருக்கும் இந்த நிலையில் நல்லவரை காக்க வேண்டும் அல்லவா. காரணம் இந்த விஞ்ஞான உலகில் அனைத்தையுமே நிரூபித்துக் காட்டுகின்றார்கள்.
 
மனிதன் கல்வியில் கற்றுக் கொண்ட உணர்வு கொண்டு இதன் இதன் உணர்வுகள் இவ்வாறு இயக்கும் என்று பதிவு செய்து கொண்டால் பதிவினை நினைவுக்குக் கொண்டு வரும் பொழுது சிக்கலை நீக்கும் தன்மை வருகின்றதுவாழ்க்கையின் சிக்கலை நீக்க உதவுகின்றது.
 
ஆனால் வாழ்க்கையில் சிக்கல் கொஞ்சம் கடினமாகி விட்டால் வேதனையாகி அந்த வேதனை வளர்ந்து விட்டால் சிக்கலை நிவர்த்திக்கும் உணர்வுகள் வந்தாலும்
1.வேதனைப்பட்டபின் தன்னையே சிந்திக்கும் தன்மை இழந்து விடுகின்றது.
2.அப்போது சோர்வடைகின்றதுஅந்தச் சோர்வடைந்த நிலையில் ஒருவர் நல்லதைச் சொன்னால்
3.அந்த உணர்வுகள் தாங்காது கோபம் வருகின்றது உணர்ச்சிவசப்படுகின்றார்.
 
இவ்வாறு நம் உடலுக்குள் சந்தர்ப்பத்தால் நுகர்ந்த உணர்வுகள் ஒவ்வொரு நொடிகளிலும் உணர்வு மாறிக் கொண்டே உள்ளது…!”
 
இன்றைய நிலை நாளை இல்லை…!
 
அதனால் தான் சிவன் ஆலயத்தில் நந்தீஸ்வரன் சிவனுக்குக் கணக்குப்பிள்ளை என்று தெளிவாகக் கூறுகின்றார்கள். அதே சமயத்தில் விநாயகருக்கு முன் எலியைப் போட்டு மூஷிகவாகனா என்று காட்டுகின்றார்கள்.
 
1.நாம் நல்லவர்களைப் பார்த்து அந்த உணர்வை அதிகமாக நேசித்தால்
2.நமக்குள் இருக்கும் கெட்ட குணங்களை அந்த நல்லது அடக்குகின்றது. அது தான் மூஷிகவாகனா…!
 
சுவாசித்த உணர்வுகள் இயக்கினாலும் வேதனையும் துன்பமும் படும் உணர்வினை ஒரு நல்லவர் பண்புள்ளவர் அந்த நல்ல சொல்லைக் கேட்டு நடந்தால் (சாதாரண நிலைகளில்) அதை நுகரப்படும் பொழுது கேட்டறியும் தன்மை வந்தால் இது பெருகுகின்றது ஓம் நமச்சிவாய என்று…!
 
கெட்ட குணங்களுக்குள் அந்த நல்ல உணர்வுகளைச் சேர்க்கப்படும் பொழுது அது குறைகின்றது. ஆகவே
1.இயற்கையின் நியதிகளைசந்தர்ப்பத்தில் நாம் சுவாசித்தது
2.அந்தந்த உணர்வின் இயக்கங்களாக நம்மை எப்படித் திசை மாற்றுகிறது…? என்பதை அறிந்து கொள்ள வேண்டும்.
 
இதை எல்லாம் நாம் தெரிந்து தெளிந்து ஞானிகள் காட்டிய அருள் உணர்வுகளைஅந்த ஒளியான உணர்வுகளை நமக்குள் சேமித்து இருள் சூழச் செய்யும் நிலையிலிருந்து நாம் விடுபடுதல் வேண்டும். நம் நல்ல குணங்களைக் காக்க வேண்டும்.
 
ஞானிகள் காட்டிய வழியில் அருள் வாழ்க்கை வாழ வேண்டும்.

June 18, 2025

நன்மை செய்ய வேண்டும் என்றால் “மன உறுதி” வேண்டும்

நன்மை செய்ய வேண்டும் என்றால் “மன உறுதி” வேண்டும்


இன்றைய உலகத்தில் நாம் செய்யக்கூடிய நன்மைகளுக்கு எவ்வளவு தூரம் அதனுடைய பலன் நமக்குக் கிடைக்கும்…? என்று பார்த்துக் கொள்ளலாம்.
 
நீங்கள் நன்மை செய்தீர்கள் என்றால்
1.அதற்காக வேண்டித் தவறுகளை எல்லாம் ஒத்துக் கொள்ள வேண்டும்
2.இந்தக் காலத்தில் சாட்சியங்கள் எல்லாம் அப்படித்தான் வரும்.
 
ஏனென்றால் நன்மைகள் பல செய்யத் துணிவு வேண்டும்…!” இது குருநாதர் நமக்கு உணர்த்தியது.
1.நன்மை செய்ய வேண்டும் என்றால் மன உறுதி வேண்டும்.
2.பின் விளைவுகள் வராதபடி பாதுகாக்கக்கூடிய அந்தத் திறனும் ஞானமும் வேண்டும்.
3.நன்மை செய்பவர்களுக்குக் கெடுதல்கள் நிறைய வரும்
4.அதையெல்லாம் சமாளிக்கக் கூடிய வலிமை வேண்டும்.
 
து எல்லாம் சாதாரண அனுபவத்தில் நான் (ஞானகுரு) தெரிந்து கொண்டது.
 
ஆகவே இந்த வாழ்க்கையில் மிகவும் ஜாக்கிரதையாகவும் சிந்தனையுடனும் இருத்தல் வேண்டும். எதையுமே பரிசீலனை செய்து வழி நடத்துதல் வேண்டும்
1.அன்பை மட்டும் செலுத்தினால் அந்த அன்பைக் காக்கக்கூடிய சக்தி வேண்டும்.
2.ஆகவே பண்பை நமக்குள் எப்படி உயர்த்த வேண்டும் என்ற நிலையைச் சிந்திக்க வேண்டும்.
3.அவசரப்பட்டோ த்திரப்பட்டோ உணர்வுகள் வெளிப்பட்டால் அது பகைமை உணர்வுகளையே தூண்டும்.
4.கைமை என்ற உணர்வு தோன்றி விட்டால் வெறுப்பு என்ற உணர்வுகள் தோன்றும்.
5.வெறுப்பு என்ற உணர்வுகள் தோன்றி விட்டால் நமக்குள் வெறுக்கும் உணர்வே வளரும்.
 
ஓம் நமச்சிவாய என்று இந்த உணர்வுகள் வேலை செய்யும்.கைமை என்ற உணர்வுகள் வரும் பொழுது ஓம் நமச்சிவாய என்று உடலுக்குள் உருவாகும். அந்த அணுக்கள் நமக்குள் பெருக எந்த வகையில் அந்த அணுக்கள் உருவானதோ அதுவாகவே நம்மை இயக்கும்.
 
உதாரணமாக ஒரு விஷச் செடியின் அணுக்கள் உருவாகிவிட்டால் நல்ல செடிக்கு வரக்கூடிய சத்தினை அது கெடுத்து விடுகின்றது. அது போல் நாம் நுகரும் வேதனை உணர்வுகள் அணுக்களாக உருப்பெற்று விட்டால் அந்த உணர்ச்சிகள் அதிகமாகும் பொழுது அதனுடைய வலிமை ஜாஸ்தி.
1.நம்மிடம் இருக்கும் நல்ல குணங்களுக்கு அதற்குண்டான சத்து கிடைக்காதபடி தடைப்படுத்தும்.
2.நல்ல குணங்கள் வாடும். நல்ல குணத்தை உருவாக்கி அணுக்கள் அது சுருங்கத் தொடங்கும் நோயாக மாறும்.
3.இந்த விஷத்தன்மை அதிகமாக மாறி நம்மை அறியாமலே நல்ல பண்புள்ளவர்களை மாற்றி அமைத்துவிடும்.
 
பக்தியில் உள்ளவர்கள் கோயிலுக்குச் சென்று எல்லோருக்கும் நன்மை தானே செய்தேன் என்னைச் சோதிக்கின்றாயே…? என்று இந்த வேதனையைத் தான் நுகர முடிகின்றது. வேதனையிலிருந்து மீளும் நிலை இல்லாது போய் விடுகின்றது.
 
இயற்கையிலே ஒன்றை ஒன்று பார்த்து உணர்வின் தன்மை நுகர்ந்து நம்மை மனிதனாக உருவாக்கியது இந்த உயிர் தான். மனிதனாக ஆன பின் நல்ல உணர்வுகளை அருள் உணர்வுகளை சீராக நுகரவில்லை என்றால்
1.நுர்ந்த உணர்வுகள் இந்த உடலுக்குள் மாற்றத்தை ஏற்படுத்தி நோயாகி
2.மனிதனல்லாத ருவையும் அடுத்து உருவாக்கி விடுகின்றது.
 
இதை நாம் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டும்.

மனிதனுக்குள் விளைந்த உணர்வின் தன்மை

மனிதனுக்குள் விளைந்த உணர்வின் தன்மை


உதாரணமாக
1.யாகம் நடக்கும் இடங்களில் மந்திரத்தை ஓதுகிறார்கள் நாம் அதை உற்றுக் கேட்டோம் என்றால் அந்த மந்திரங்கள் நமக்குள் பதிவாகி விடுகின்றது.
2.சோமபானம் என்ற நிலையை இணைத்தால் நம் சிந்திக்கும் தன்மை இழக்கப்படுகின்றது.
 
எதனை எண்ணினோமோ அதன் வழி செல்கின்றது இதன் வழி நாம் செல்லும் இந்த உடலின் உணர்வுகள் பதிந்த பின் கேட்டறிந்த நிலைகள் பிறிதொரு உணர்வின் இயக்கமாகவே வருகிறது.
 
ஆலயங்களில் இந்தத் தெய்வம் தான் எல்லாவற்றையும் காக்கும் என்று சொல்லும் பொழுது யாகத் தீயிலே பல பொருள்களைப் போட்டு மணத்துடன் அந்த எண்ணத்தைப் பரப்புகின்றனர்.
 
நாம் நுகர்ந்தறிந்த நிலையில் தெய்வம் நல்லது செய்யும் நம்பிக்கையில் அதை நுகர்கின்றோம். நுகர்ந்த உணர்வுகள் நமக்குள் பட்டபின் இதன் வழி அந்தத் தெய்வத்தைக் கண் கொண்டு உற்றுப் பார்க்கின்றோம்.
 
அங்கே வைத்திருக்கும் சிலையின் உருவமும் அங்கே அலங்கரித்த நிலைகளும் பதிவாகி நமக்குள் வருகின்றது அதிலிருந்து வரக்கூடிய மணத்தையும் மற்றதையும் சூரியனுடைய காந்த சக்தி கவர்ந்தது அலைகளாக வருகின்றது.
 
அந்த அலையை நுகரப்படும் பொழுது உருவத்தைக் காண முடிகின்றது அங்கே இருக்கக்கூடிய நிறங்களையும் காண முடிகின்றது. அதனின் மணத்தையும் உணர முடிகின்றது.
 
இப்படி நாம் உணர்ந்த உணர்வின் தன்மை நம் உடலுக்குள் வந்தபின் மடிந்தோம் என்றால் என்ன நடக்கிறது…?
 
இந்த மந்திரத்தை ஜெபித்தால் நீ முருகனைக் காணலாம் என்று சொல்லியிருப்பார்கள். எந்தெந்த குணங்களின் தன்மையோ அதற்குண்டான பதார்த்தங்களை வைத்து அவர்கள் ஜெபிக்கின்றனரோ
1.மனித உடலுக்குள் இந்த உணர்வுகள் கலந்த பின் இறந்தான் என்றால்
2.சூட்சும சரீரத்தில் முருகனைப் போன்று காட்சி தரும் காளியைப் போன்று காட்சி தரும்.
3.காளியைப் போன்று அசுர உணர்வு கொண்டு செயல்பட்டால் இவன் குணமும் அதே நிலைகள் மாறும் அசுர செயல்களையே செயல்படுத்துவான்.
4.கருப்பண்ணசாமியோ மாடசாமியோ போன்ற கொடூர உணர்வுகளை நுகர்ந்தால் அதனுடைய செயல்களே நமக்குள் வரும் பார்க்கலாம்.
5.அருளாடும் போது அசுரத்தனமாக உணர்வுகள் பாய்ச்சப்பட்டு இயக்கும்.
 
ஆனால் அந்த உணர்வுகள் அவனுக்குத் தெரியாது. அது வேதனை என்ற நிலையாகி பல துன்புறுத்தும் நிலைகளையும் பார்க்கலாம். அவன் அறிய முடியாது. அவன் உடலுக்குள் இருக்கும் உணர்வுகள் அதைத் தாங்கிக் கொள்ளும்.
 
1.தீமிதி என்ற நிலை வரும் பொழுது அந்த அக்கினியைத் தனக்குள் நுகர்ந்தால்
2.யாகத் தீயைப் போட்டு அதன் வழி இன்னொரு மனிதன் மடிந்திருந்தால் அந்த உணர்வை நுகர்ந்தால்
3.தீயைப் போட்டு மிதித்து இருப்பான் (இறந்தவன்) என்றால் இவன் அந்தத் தீமிதியைத் தாங்கும் நிலை வருகின்றது.
 
தீமிதி விழா என்று நாம் கொண்டாடும் பொழுது இதன் வழி விளைந்து அந்தத் தாய் மீது பற்று கொண்டோர் உணர்வுகளும் அதன் வழி மடிந்தால் இந்த உணர்வை மற்றவர்கள் நுகர்ந்தால்
1.தீமிதி விழா என்று வரும் பொழுது அந்த உணர்வின் தன்மை கொண்டு அவனுக்குத் தீயைத் தாங்கும் வல்லமை உண்டு.
2.இது எல்லாம் மனிதனுக்குள் விளைந்த உணர்வின் தன்மை இங்கே வருகின்றது.
 
ஒரு ஆவியின் தன்மை உடலில் இணைந்து இயக்கப்பட்டால் நெருப்பிலே மிளகாயைப் போட்டோம் என்றால் அந்த நெடியைச் சுவாசித்து நாம் தான் எழுந்து வர வேண்டுமே தவிர ஆவி பிடித்த அந்த உடலுக்குத் தும்மலும் வராது எதுவும் செய்யாது…”
 
இதைப் போன்ற இயற்கையின் நிலைகள் மாறி வரும் இந்நிலையில் நாம் இதையெல்லாம் உணர்ந்தால் நாம் எதனைப் பெற வேண்டும்…? எந்த வழியில் வாழ வேண்டும்…? இந்த உடலுக்குப் பின் என்ன…? என்ற நிலையை நாம் சிந்தித்துச் செயல்படுவது மிகவும் நலம்.
 
குரு காட்டிய அருள் நெறி கொண்டு அவரிடம் 20 வருடம் பெற்ற அனுபவத்த
1.ஒரு உயிர் தோன்றி மனிதன் வரை எவ்வாறு வளர்ச்சி பெற்று வந்தது…?
2.சூரியன் தோன்றிய பின் உயிரணுக்கள் எவ்வாறு உருவானது…? என்று குரு காட்டிய அருள் வழியில்
3.அவர் கண்ட நிலையில் உயிரணுக்களின் தோற்றங்களும் மாற்றங்களும் என்ற நிலையைத் தெளிவாகக் கூறியதைக் கண்டுணர்ந்த பின்பு தான்
4.நீங்களும் இதைப் பெற முடியும் அறிய முடியும் என்று உணர்த்துகின்றேன்.
 
இந்த வாழ்க்கையில் இனி எது வேண்டும்…? பிறவி இல்லா நிலை வேண்டும் பிறவா நிலை வேண்டும். அந்த அருள் பெறுவதற்குத் தான் துருவ நட்சத்திரத்தின் சக்தியை ஒவ்வொரு நொடிப் பொழுதும் எடுத்துப் பழக வேண்டும் என்று சொல்வது.
 
அந்தச் சக்திகளை நாம் ஏங்கிப் பெறுவோம். அதை நமக்குள் கூட்டுவோம். வாழ்க்கையில் தன்னை அறியாது வரும் நஞ்சுகளை மாற்றுவோம்.
1.தீமை வரும் பொழுதெல்லாம் துருவ நட்சத்திரத்தின் உணர்வு கொண்டு அதை இடைமறித்து
2.இருள் சூழச் செய்யும் உணர்வினை மாற்றி நமது வாழ்க்கையில் பேரருளை உருவாக்கும் அழியா ஒளிச் சரீரம் பெறுவோம்.

June 17, 2025

செல்வம் நம்மைக் காப்பதில்லை என்று சொன்னால் ஏற்றுக் கொள்வோமா…?

 

செல்வம் நம்மைக் காப்பதில்லை என்று சொன்னால் ஏற்றுக் கொள்வோமா…?


வேதனை வெறுப்பு என்ற உணர்வுகளை நாம் எண்ணினால் அதற்குத் தக்க உடலுக்குள் அணுக்கள் உருவாகின்றது. மீண்டும் எண்ணும் பொழுது அதனுடைய இனத்தைப் பெருக்குகின்றது.
 
அது அனைத்தும் பெருகிவிட்டால் நல்ல குணங்களை இழக்கச் செய்கின்றது.
1.வேதனை அதிகமாகும் பொழுது உடல் சுருங்குகின்றது எண்ணங்களும் சுருங்குகின்றது.
2.இந்த உடலையே மாற்றி அமைக்கும் தன்மையும் இந்த உடலுக்குப் பின் மனிதனல்லாத உடலைத் தான் பெறச் செய்கின்றது.
 
கோடிச் செல்வம் இருப்பினும் நமக்குள் நாடி வருவது எதுவும் இல்லை. கோடிச் செல்வம் இருப்பினும் அதனால் நாடி வருவது எது…?
1.தீமை என்ற நிலையில் செல்வத்தைக் காத்திடும் அச்சமும் பயமும் வருகின்றது.
3.அதைக் காத்திடும் நினைவு வரப்படும் பொழுது காக்கும் உணர்வே வருகின்றது.
3.அதனால் வேதனை என்ற உணர்வும் தோன்றுகின்றது.
4.வெறுப்பை ஊட்டும் உணர்வுகள் பெருகுகின்றது.
5.நம் உடலுக்குள் அந்தச் செல்வமே நமக்கு எதிரியாகிறது.
6.செல்வம் நம்மைக் காப்பதில்லை. மனித உருவைச் சீர்குலைக்கும் ஆசையை ஊட்டுகின்றது.
7.பிறர் துன்பப்படுவதைக் கண்டு ரசிக்கச் செய்கின்றது தனக்கு எதிரி என்ற நிலைகள் பணம் கொண்டு கொலை செய்யச் சொல்கிறது.
 
துன்பப்படும் பொழுது அவன் சாபமிடுகின்றான். எனக்கு இவ்வாறு செய்கின்றான் அவன் உருப்படுவானா…? என்ற சாப அலைகள் பாய்ந்தால் இந்தச் செல்வத்தினால் சாபத்தைத் தேடுகின்றான்.
 
அந்தச் சாபத்தினால் இவன் செல்வத்தைக் காக்கும் நிலையே அற்று விடுகின்றது.. இதைப் போன்ற கொடுமைகள் மனிதனை மாற்றிக் கொண்டிருக்கும் நிலையில்
1.தீமைகளை அகற்றும் உணர்வு பெற்றும் தீமைகளை வளர்த்திடும் உணர்வுகளே நமக்குள் வளர்ந்து
2.நம்மை அறியாதபடி அந்த இழி நிலை என்ற உணர்வுகளுக்கே செல்கின்றது.
 
இதைப் போன்ற நிலைகளில் இருந்து நல்ல நிலை பெற வேண்டும். அதற்காகத்தான் பிறருடைய உணர்வுகள் தனக்குள் வளராது தடுக்க துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை அருள் செல்வமாக அழியாச் செல்வமாகச் சேர்க்க வேண்டும் என்று அடிக்கடி சொல்வது. நமக்குள் அறியாத புகுந்த தீமைகளை அது மாற்றி அமைக்கும்.
 
மனிதருக்குள் மனிதர் ஒன்று சேர்ந்த உணர்வுகள் ஒன்றாக இணைத்து கூட்டுத் தியான்ங்களின் மூலம்
1.உணர்வினை ஒலியாகப் பாய்ச்சப்படும் பொழுது செவி வழி உணர்வுகள் உடலுக்குள் செல்கின்றது.
2.அந்தத் துருவ நட்சத்திரத்தின் சக்தியைப் பெற வேண்டும் என்ற ஏக்கத்தின் நிலை கொண்டு கண் வழி நுகர்கின்றது.
3.நமது ஆன்மாவாக மாற்றுகின்றது அந்த உணர்ச்சிகளை ஊட்டுகின்றது.
4.உணர்வின் தன்மை உடலுக்குள் அனைவரது ஆதரவும் நமக்குக் கிடைக்கின்றது
5.அறியாத வந்த பகைமைகளை மாற்றிடவும் முடிகின்றது.

June 16, 2025

மனிதனால் செயற்கையாக உருவாக்கப்பட்ட கதிரியக்கப் பொறிகளின் பின் விளைவுகள்

மனிதனால் செயற்கையாக உருவாக்கப்பட்ட கதிரியக்கப் பொறிகளின் பின் விளைவுகள்


சூரியன் எலக்ட்ரிக்கை உருவாக்குகின்றது. மற்ற நட்சத்திரத்தின் அளவுகோல் வரும் பொழுது அதன் வழி மோதி எலக்ட்ரிக் என்ற நிலையும் மோதலின் உணர்வுகளை நமது பிரபஞ்சம் முழுவதும் பரவுகின்றது மற்ற கோள்களையும் இயக்கும் தன்மை பெறுகின்றது.
 
பிரபஞ்சத்தில் இந்தக் காந்தப்புலனறிவு தான் உருவாகின்றது. பிரபஞ்சமே அதன் வழி தான் இயங்குகின்றது.
 
இருப்பினும் மனிதனால் உருவாக்கப்பட்ட கதிரியக்கப் பொறிகள் வானிலே வீசப்படும் பொழுது அது சூரியனில் மோதும் பொழுது என்ன நடக்கிறது…?
 
ஒரு மேக்னட் (டைனமோ) அதிகமாகச் சுழன்றால் காந்த சக்தி அதிகமாக உருவாக்கப்பட்டு அந்தக் காந்தத்தின் பவர் அதிகமாகி அதில் இணைக்கப்பட்ட சிறு பல்பின் தன்மை ஃபியூஸ் ஆகி விடுகிறது.
 
இதைப் போல தான் நமது உயிர் எலக்ட்ரிக் என்று இயக்கிக் கொண்டிருக்கும் பொழுது சூரியன் எலக்ட்ரிக்கை உருவாக்கிக் கொண்டிருக்கும் பொழுது
1.அதிலே வரக்கூடிய உணர்வினை அணுகுண்டின் கதிரியக்கப் பொறிகள் சூரியனில் தாக்கப்படும் பொழுது
2.ஒரு நொடிக்குள் இரு மடங்கு எலெக்ட்ரிக் அதிகமாகிவிடும்.
3.அதனுடன் தொடர்பு கொண்ட அனைத்திலும் அந்த இயக்கச் சக்தி பாய்கின்றது.
 
ஒரு அணுவின் தன்மை ஒன்றுடன் ஒன்று மோதும் பொழுது எப்படி மின்னலாக மாறுகின்றதோ இதைப் போல சூரியனில் மனிதனால் செயற்கையால் உருவாக்கப்பட்ட கதிரியக்கப் பொறிகள் அதிகமாக மோதும் காலம் வந்து கொண்டே இருக்கின்றது.
1.அதனால் நம் உயிரில் உருவாக்கப்படும் எலக்ட்ரிக் வேகமாகச் சுழன்று
2.அந்த உணர்வு வரும் பொழுது நம் உடலில் உருவாக்கப்பட்ட அணுக்களின் தன்மை அனைத்தும் ஃப்யூசாகிவிடும் நினைவுகள் இழந்து விடும்.
3.அசுர குணங்களே வரும் உயிர் மடியாது உணர்வுகள் மடிகின்றது உணர்வுகள் மாறுகின்றது.
4.மனிதனாக உடலில் இருப்பினும் உணர்வுகள் சிதைந்து விட்டால் சிந்தனையற்ற நிலை ஆகிவிடும்.
 
இன்றும் சிலரை நாம் பார்க்கின்றோம். பித்துப் பிடித்தது போல் இருக்கின்றார்கள். மற்றவர் தாக்கினால் அவனுக்குத் தெரிவதில்லை. உடலில் பல காயங்கள் இருப்பினும் ஈ எறும்பு அதைக் கடித்தாலும் அதை அவன் உணர்வதில்லை.
 
இதைப் போன்ற நிலைகளில் உடல்கள் சிதைந்து மடிந்து மனிதனல்லாத உருவைப் பெரும் தகுதி தான் உருவாகும். உணர்வின் இயக்கத்திற்கொப்ப உணர்வினை உடலாக மாற்றும் தன்மையே வருகின்றது.
 
இதைப் போன்ற கொடுமையிலிருந்து நாம் மீள நமது குருநாதர் காட்டிய அருள் வழிப்படி அந்தத் துருவ நட்சத்திரத்தின் சக்திகளை நுகர்தல் வேண்டும்.
 
நாம் நுகர்ந்த உணர்வுகள் எந்த ஞானத்தின் தன்மை பெற்றோமோ அந்த அருள் ஒளியாகப் பெருகுகின்றது.
1.“எண்ணத்தால் தான் இதை எடுக்கின்றோம்.
2.சூரியன் தனக்குள் துருவ நட்சத்திரத்தின் சக்திகளைக் கவர்ந்து வரும் பொழுது நாம் நுகர்ந்தால்
3.அந்த உணர்வின் எண்ணங்கள் நமக்குள் வருகின்றது.
 
எண்ணத்தின் தன்மை வரப்படும் பொழுது எதை எண்ணி ஏங்குகின்றோமோ அந்த உணர்வின் தன்மை அது நமக்குள் கருவாகிறது. துருவ நட்சத்திரத்திலிருந்து வருவதைப் பெற வேண்டும் என்று ஏங்கும்போது அதன் உணர்வின் தன்மை நமக்குள் கருவாகி அது உருவாகின்றது. அது எப்படித் தீமைகளை வென்றதோ அந்த ஞானம் நமக்குள் வருகின்றது…”
 
அந்த உணர்வின் தன்மை உடலாகும் பொழுது சிவமாகின்றது.
1.கஸ்தியன் எப்படி ஒளியாக மாறினானோ… அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை நாம் எடுத்தால்
2.மின் கதிர்கள் பாய்ந்தாலும் அதனை எளிதில் பாய்ச்சி நம் உடலுக்குள் அந்தச் சக்தியைப் பெருக்குகின்றது மின் அணுக்களாக மாற்றுகின்றது.
 
எப்படி மின்னட்டாம் பூச்சி தனக்குள் எடுத்துக் கொண்ட நிலைகள் அதனுடைய துடிப்பில் மோதும் பொழுது அதன் உடலின் பின் பகுதியில் வெளிச்சம் வருகின்றதோ இதைப் போல
1.நம் உயிரின் துடிப்பின் தன்மை மின் கதிர்களாக மாற்றுகின்றது.
2.இந்த நிலையில் மனிதனான நாம் அருள் ஒளியின் உணர்வை நுகர்ந்து நமக்குள் உருவாக்கினால்
3.இந்த உடலுக்குப் பின் இனி உடல் இல்லை மனித உடலின் ரூபம் மாறி ஒளியின் நிலையைப் பெறுகின்றோம்.
 
கணவன் மனைவி இருவருமே இதை ஏங்கிப் பெற்று இந்த உணர்வின் தன்மை அறிவாக மாற்றி அருள் ஒளியாக மாற்றிப் பேரொளியாக மாறும் நிலை வருகின்றது.
 
அந்த வழியினைப் பெற்றவர்கள் தான் சப்தரிஷி மண்டலங்களாக வாழ்ந்தும் வளர்ந்தும் கொண்டுள்ளார்கள். “நாமும் அவர்களுடன் இணைய முடியும்…”

June 15, 2025

கணவன் மனைவி ஒன்றிணைந்த நிலையில் விண் செல்வதே வளர்ச்சி

கணவன் மனைவி ஒன்றிணைந்த நிலையில் விண் செல்வதே வளர்ச்சி


கணவன் மனைவி இல்லாது தனித்த மனிதனாக விண் சென்றால் அது வளர்ச்சி இல்லாதது. “முனிஎன்ற நிலையையே அடைகின்றது.
1.அப்படி முனி என்ற நிலையில் வளர்ச்சி இல்லை என்றால் கடுகளவே இருக்கும். நாளடைவில் அது தேய்பிறை ஆகிவிடும்.
2.தேய்பிறையாகி அந்த ஒளிக்கற்றைக்குள் அது கலந்து மற்றதற்கு உணவாக ஆகும் தன்மையே அங்கேயும் வருகின்றது…”
 
கணவன் மனைவி என்ற இரண்டற இணைந்தால் உணர்வின் தன்மை ஒளியாக மாற்றி என்றும் மகிழ்ந்திடும் உணர்வுகள் வருகின்றது. இங்கே எப்படி மகிழ்ந்து வாழ்கின்றோமோ நாம் இப்போது விண் செலுத்தும் ஆத்மாக்கள் அங்கே இரண்டறக் கலந்தாலும்
1.மனைவியுடன் கலந்தால் அது வளர்ச்சிக்கு பெறும்.
2.இணைந்து வாழும் வளர்ச்சியாகி என்றும் ஜீவனுடன் இருக்கும்.
 
சாமியார்கள் என்று சொல்பவர்கள் திருமணம் ஆகாத நிலையில் அவருக்குப் பின் இனவிருத்தி இல்லை. எந்த உணர்வின் தன்மையைப் பெற்றார்களோ அதன் வழியில் அவன் மடிவான். அவன் வளரும் தன்மை இல்லை. அவன் வார்த்தைகளைக் கேட்ட மற்றவர்களும் மனைவி இழக்கும் நிலை தான் வரும். இவனும் அதற்குமேல் வளராத நிலையைத் தான் அடைய முடியும்.
 
சாதுக்களாக இருந்து திருமணம் ஆகாதபடி நான் பெரிய முனிவனாக இருக்கின்றேன். குடும்பப் பந்தம் இல்லாது செல்கின்றேன் என்று சொன்னாலும் அவர்கள் யாரும் மீள முடியாது.
 
மடாதிபதிகள் திருமணமாகாது இருக்கலாம். அன்று அரசன் காட்டிய வழியில் அவன் இயற்றிய சட்டத்தைக் காக்கும் காவலாளிகள் தான் மடாதிபதிகள்.
 
காரணம் திருமணமானால் பிள்ளைகள் சொத்துக்கு உரிமை கொண்டாடுவார்கள் என்று இப்படிப் பிரித்து உருவாக்கி விட்டார்கள். அவர் வழியில் அமர்ந்து உணவை உட்கொள்ள வேண்டும் என்றும்
1.அருள் பெறத் தவம் இருக்கின்றேன் எனக்கு மனைவி வேண்டாம் மக்கள் இருந்தால் இந்த நிலை வராது என்று இருந்தால்
2.இவரைப் போன்று மடையர்கள் எவருமில்லை என்று தான் சொல்ல வேண்டும்.
3.நமது குருநாதர் அதைத் தான் சொல்வார்.
 
சொத்துக்காக சுகத்திற்காக வருகின்றார்கள். நாம் போற்றுகின்றோம்ஆட்சி புரியும் நிலையில் அந்தந்த மதத்திற்குக் குருவாக வரும் பொழுது குருவின் அருளைப் பெறுவதற்காக தவறுகள் பல செய்கின்றார்கள்.
 
நமது குருநாதர் உலகில் நடந்து கொண்டிருப்பதை எல்லாம் தெளிவாக எனக்குக் காட்டினார். மனிதனால் தன் உடலின் இச்சையைத் தான் வளர்க்க முடிகின்றது.
 
மதத்தின் அடிப்படையில் அவன் ஆட்சி புரிய எண்ணினால் அந்தச் சட்டத்தை இயற்றும் காவலன் தான். மதத்தைக் காக்கும் காவலாளிகளாகத் தான் அவர்கள் செயல்பட்டுக் கொண்டுள்ளார்கள். மக்களை அவர்கள் வழியில் வழிப்படுத்தும் நிலைகள் தான் வருகின்றது.
 
ஆனால்
1.இயற்கையின் உண்மையின் இயக்கத்தின் நிலையை அறிந்து
2.மனிதனுக்குப் பின் எங்கே செல்ல வேண்டும்…? என்ற நிலையை மதங்கள் சிந்திப்பதில்லை.
 
மதங்கள் காட்டிய நிலையில் அவன் காட்டும் ஆண்டவன் தான் கடைசி முடிவு. ஈகையும் இரக்கம் கொண்டு பிறருக்கு நீ உதவி செய் என்று சொல்லும் பொழுது அவன் இரக்க பாவத்தை ஈகையுடன் கேட்டறிந்தால் அந்த உணர்வுகள் அவனுக்குள் வந்தால் இந்த விஷங்கள் அவனுக்குள் மாறி இவன் அழியும் நிலையாக மீண்டும் இந்த புவிக்குள் சுழலும் நிலை தான் வருகின்றது. பிறவியில்லா நிலை அடைவதில்லை.
 
மதத்தின் அடிப்படையில் வருபவர்களால் தன் மதத்தைக் காக்க உதவும்.
 
ஆனால்
1.ஞானிகள் காட்டிய நிலைகள் மகரிஷிகள் காட்டிய நிலைகள் அவன் வளர்ந்து ஒளியின் சரீரமாகப் பெற்ற
2.அவனின் உணர்வை நாம் நுகர்ந்தோம் என்றால்
3.அந்த உணர்வின் துணை கொண்டு நஞ்சை ஒளியாக மாற்றிடும் நிலை பெற முடியும்.
 
அந்த நிலையை அடைவது தான் மனிதனின் கடைசி நிலை.

June 14, 2025

அன்றைய புலஸ்தியர்கள் நோய்களையும் வேதனைகளையும் நீக்கிய விதம்

அன்றைய புலஸ்தியர்கள் நோய்களையும் வேதனைகளையும் நீக்கிய விதம்


அன்று புலையர்கள் என்று மலைவாழ் மக்களாக காடுகளில் விலங்குகளுடன் வாழ்ந்தவர்கள் விஷத்தன்மைகளை முறிக்கும் ஆற்றல்களையும் தான் நுகரும் வேதனை கொண்ட சக்திகளிலிருந்தும் விடுபடும் சக்தி பெற்றிருந்தார்கள்.
1.மற்ற எதிர் நிலையான உணர்வுகள் எவ்வாறு இருக்கிறது…? என்றும்
2.மூலிகைகளின் மணத்தை நுகர்ந்து அதன் இயக்கம் எவ்வாறு…? என்றும் அறிந்துணர்ந்து
3.அதை வைத்து நோய்களை மாற்றி அமைத்தார்கள்.
 
ஆபரேஷன் செய்வதற்கு இன்று மனிதனை நினைவிழக்கச் செய்வது போன்று ஒரு பச்சிலையை எடுத்து உடலின் அந்தப் பாகத்தில் வைத்து தடவி விட்டால் அந்த இடத்தில் உணர்ச்சிகள் இருக்காது.
 
அதைக் கிழித்து அவன் எலும்பை இணைத்துக் கொண்டு வரும் வரையிலும் இப்படித் தப்பிக் கொண்டார்கள்.
 
காடுகளின் விலங்குகளுடன் விலங்குகளாக வாழ்ந்தவர்கள் மிக விபத்தான நிலைகள் ஏற்பட்டாலும் சில பச்சிலைகளின் சாறுகளை எடுக்கின்றார்கள்.
1.பெரிய எறும்புகளை எடுத்துப் பிண்ணை (PIN) வைத்துத் தைப்பது போன்று
2.இரண்டு குடலையும் வைத்து எறும்பை வைத்துக் கடிக்க வைக்கின்றார்கள்
3.அதற்குப் பின் எறும்பின் தலையைக் கிள்ளி விடுவார்கள்.
4.இது இறுக்கிப் பிடித்த பின் சேர்ந்து விடுகின்றது.
5.இன்று தையல் போடுகின்றோம்ஆனால் அக்காலங்களில் இந்த முறைப்படி செய்தார்கள்.
6.அந்த எறும்பின் உடலின் விஷத்தின் அமிலங்கள் இதனுடன் கலந்த பின் இரண்டறக் கலந்து விடுகின்றது.
7.இதனின் உணர்வுகள் அதனை இணைத்துக் கொண்டு பச்சிலை என்ற மூலிகைகள் ஒன்றுடன் ஒன்று தசைகளை இணைத்து விடும்.
 
இன்று அபூர்வமாகப் பல ஆபரேஷன்களைச் செய்கின்றேன் என்று சொல்கின்றார்கள். இதைக் காட்டிலும் அன்றே நுணுக்கமாகச் செய்துள்ளார்கள்.
 
கேன்சர் நோயாக இருந்தாலும் அதற்கு இதே பச்சிலைகளை எடுத்து கேன்சர் உண்டான இடங்களில் அதை நேராக பாய்ச்சப்படும் பொழுது
1.எங்கே அந்த விஷத்தின் வேர்கள் வருகின்றதோ அங்கே கறுக்கப்படுகின்றது.
2.இது சென்றபின் அந்த விஷத்தை முறித்து விடுகின்றது கேன்சர் நோயையும் நீக்கினார்கள்.
 
அந்தக் காலத்தில் ராஜ வைத்தியம் செய்தவர்கள் எல்லாம் அரசர்களுக்கு மட்டும் செய்வார்கள். மற்றவர்களுக்குச் செய்ய மாட்டார்கள். இப்படித்தான் அன்று செயல்படுத்தினார்கள்.
 
இதை எல்லாம் கண்டுணர்ந்த புலஸ்தியர்கள் அதைச் செய்தார்கள்.
1.ஆனால் நானும் பார்த்தேன் குருநாதர் உணர்வால்…!
2.அன்றைய மலைப் பகுதி மக்கள் எப்படி வாழ்ந்தார்கள்…?
3.மனிதனான பின் ஆறாவது அறிவின் துணை கொண்டு எப்படித் தீமைகளை நீக்கினார்கள்…?
4.எப்படி நோய்களைப் போக்கினார்கள்…? என்று அறிந்து கொண்டேன்.
 
ஆனால் ஆசையின் நிலைகள் கொண்டு தன் நாடு நான் அரசன் என்ற நிலை வரும் பொழுது இருப்பதை எடுத்துக் கொண்டால் தனக்கு வேண்டும் என்று போர் முறைகள் வந்தது. அரசர்கள் எல்லாம் இப்படித்தான் வாழ்ந்தார்கள்.
 
தன் ஆசையின் உணர்வால் மற்றொன்றை அழித்து மிருகங்களைப் போன்று மற்றவர்களுடைய நிலையைப் பறித்துத் தான் சுகமாக வாழ வேண்டும் என்று செயல்படுத்தினார்கள்.
 
அதன் வழிப்படித் தான் இந்த உலகமே இன்றும் மாயையில் சிக்கிக் கொண்டு மனித உடலின் இச்சைக்கே வருகின்றது. அரசன் தான் வாழப் பல முறைகளைக் கையாண்டான்.
 
அதன் வழிகளில் தான் இன்று வாழ்ந்து கொண்டிருக்கின்றோம் என்ற இந்த உண்மையை நீங்கள் உணர்ந்து கொள்ளுங்கள்.
 
விஞ்ஞானத்தால் பூமிக்குள் பல நச்சுத்தன்மைகள் அடைந்து விட்டது. சாக்கடையின் கழிவிற்குள் பன்றி தன் உணர்வைப் பாய்ச்சி நஞ்சினைப் பிளந்து அதற்குள் மறைந்த நல்ல உணர்வினை எவ்வாறு நுகர்கின்றதோ அதைப்போல
1.நீங்களும் இந்தக் காற்று மண்டலத்தில் உள்ள நஞ்சினைப் பிளந்து தீமைகளிலிருந்து விடுபட்டு
2.நல்ல உணர்வுகளை நுகரும் சக்தி பெற்று பேரருள் என்ற உணர்வுகளை உருவாக்கி
3.எந்த நிமிடம் இந்த உடலை விட்டுச் சென்றாலும் ஒளியின் சரீரமாக வேண்டும்.
 
பன்றி நஞ்சினை நீக்கி நஞ்சற்ற நிலைகளைச் சுவாசித்து நல்ல உணர்வுகளான பின் நஞ்சால் உடலான நிலைகளைப் பிளந்து விட்டு நஞ்சினைப் பிளந்திடும் உணர்வுகள் கொண்டு மனிதனாகப் பிறக்கச் செய்தது. மனிதனான பின்உணவாக உட்கொள்ளும் உணவிற்குள் வரும் நஞ்சினை மலமாக மாற்றுகின்றது மனித உடல்.
 
அதைப்போல நமக்குள் வரும் நஞ்சினை நீக்கும் ஆற்றலை நம் எண்ணத்தால் எடுத்து வளர்த்துக் கொள்ள முடியும். அப்படி நீக்கிப் பழகியவர்கள் துருவ நட்சத்திரமாக இன்றும் வாழ்ந்து கொண்டுள்ளார்கள்.
 
அதன் வழியைப் பெற… உங்களுக்குள் பதிவாக்கும் உபதேசத்தின் நிலை கொண்டு
1.இந்தப் பிரபஞ்சத்தில் கலந்த நஞ்சினை உங்கள் எண்ணத்தின் வலு கொண்டு பிளந்து
2.நஞ்சிற்குள் மறைந்திருக்கும் அருள் மகரிஷிகளின் உணர்வுகளை நீங்கள் நுகர்ந்து உங்களுக்குள் அதைச் சேர்த்து
3.நஞ்சால் கவர்ந்த உடலை நீக்கிய பின் உயிரான ஒளி கொண்டு ஒளியின் சரீரமாக இணைந்து வாழ்ந்திடவும் வளர்ந்திடவும் முடியும்.
 
கணவன் மனைவி இருவரும் இரு உயிரும் ஒன்றாக இணைந்து யார் ஒருவர் இந்த உணர்வினை வளர்க்கின்றார்களோஅவர்கள் முழுமையான வளர்ச்சி அடைய முடியும். அத்தகைய நிலையை நீங்கள் எல்லோருமே பெற மகரிஷிகளை வேண்டுகின்றோம்.