
மனிதனால் செயற்கையாக உருவாக்கப்பட்ட கதிரியக்கப் பொறிகளின் பின் விளைவுகள்
சூரியன் எலக்ட்ரிக்கை உருவாக்குகின்றது. மற்ற நட்சத்திரத்தின் அளவுகோல் வரும் பொழுது அதன் வழி மோதி
எலக்ட்ரிக் என்ற நிலையும் மோதலின் உணர்வுகளை நமது பிரபஞ்சம் முழுவதும் பரவுகின்றது… மற்ற
கோள்களையும் இயக்கும் தன்மை பெறுகின்றது.
பிரபஞ்சத்தில் இந்தக் காந்தப்புலனறிவு தான் உருவாகின்றது. பிரபஞ்சமே அதன் வழி தான்
இயங்குகின்றது.
இருப்பினும் மனிதனால் உருவாக்கப்பட்ட கதிரியக்கப் பொறிகள் வானிலே வீசப்படும்
பொழுது அது சூரியனில் மோதும் பொழுது என்ன நடக்கிறது…?
ஒரு மேக்னட் (டைனமோ) அதிகமாகச் சுழன்றால் காந்த சக்தி அதிகமாக உருவாக்கப்பட்டு அந்தக் காந்தத்தின் பவர் அதிகமாகி அதில் இணைக்கப்பட்ட சிறு பல்பின் தன்மை
ஃபியூஸ் ஆகி விடுகிறது.
இதைப் போல தான் நமது உயிர் எலக்ட்ரிக் என்று இயக்கிக் கொண்டிருக்கும் பொழுது
சூரியன் எலக்ட்ரிக்கை உருவாக்கிக் கொண்டிருக்கும் பொழுது
1.அதிலே வரக்கூடிய உணர்வினை அணுகுண்டின் கதிரியக்கப்
பொறிகள் சூரியனில் தாக்கப்படும் பொழுது
2.ஒரு நொடிக்குள் இரு மடங்கு எலெக்ட்ரிக் அதிகமாகிவிடும்.
3.அதனுடன் தொடர்பு கொண்ட அனைத்திலும் அந்த இயக்கச் சக்தி பாய்கின்றது.
ஒரு அணுவின் தன்மை ஒன்றுடன் ஒன்று மோதும் பொழுது எப்படி மின்னலாக மாறுகின்றதோ… இதைப் போல சூரியனில் மனிதனால் செயற்கையால்
உருவாக்கப்பட்ட கதிரியக்கப் பொறிகள் அதிகமாக மோதும் காலம் வந்து கொண்டே
இருக்கின்றது.
1.அதனால் நம் உயிரில் உருவாக்கப்படும் எலக்ட்ரிக் வேகமாகச் சுழன்று
2.அந்த உணர்வு வரும் பொழுது நம் உடலில் உருவாக்கப்பட்ட அணுக்களின் தன்மை
அனைத்தும் ஃப்யூசாகிவிடும்… நினைவுகள் இழந்து விடும்.
3.அசுர குணங்களே வரும்… உயிர் மடியாது… உணர்வுகள் மடிகின்றது… உணர்வுகள் மாறுகின்றது.
4.மனிதனாக உடலில் இருப்பினும் உணர்வுகள் சிதைந்து விட்டால் சிந்தனையற்ற நிலை
ஆகிவிடும்.
இன்றும் சிலரை நாம் பார்க்கின்றோம். பித்துப் பிடித்தது போல் இருக்கின்றார்கள். மற்றவர் தாக்கினால் அவனுக்குத் தெரிவதில்லை.
உடலில் பல காயங்கள் இருப்பினும் ஈ எறும்பு அதைக் கடித்தாலும் அதை அவன்
உணர்வதில்லை.
இதைப் போன்ற நிலைகளில் உடல்கள் சிதைந்து மடிந்து மனிதனல்லாத உருவைப் பெரும்
தகுதி தான் உருவாகும். உணர்வின்
இயக்கத்திற்கொப்ப உணர்வினை உடலாக மாற்றும் தன்மையே வருகின்றது.
இதைப் போன்ற கொடுமையிலிருந்து நாம் மீள நமது குருநாதர் காட்டிய அருள் வழிப்படி
அந்தத் துருவ நட்சத்திரத்தின் சக்திகளை நுகர்தல் வேண்டும்.
நாம் நுகர்ந்த உணர்வுகள் எந்த ஞானத்தின் தன்மை பெற்றோமோ அந்த அருள் ஒளியாகப் பெருகுகின்றது.
1.“எண்ணத்தால் தான்” இதை எடுக்கின்றோம்.
2.சூரியன் தனக்குள் துருவ நட்சத்திரத்தின் சக்திகளைக்
கவர்ந்து வரும் பொழுது நாம் நுகர்ந்தால்
3.அந்த உணர்வின் எண்ணங்கள் நமக்குள் வருகின்றது.
எண்ணத்தின் தன்மை வரப்படும் பொழுது எதை எண்ணி ஏங்குகின்றோமோ அந்த உணர்வின்
தன்மை அது நமக்குள் கருவாகிறது. துருவ நட்சத்திரத்திலிருந்து வருவதைப் பெற வேண்டும் என்று ஏங்கும்போது
அதன் உணர்வின் தன்மை நமக்குள் கருவாகி அது உருவாகின்றது. “அது எப்படித் தீமைகளை வென்றதோ அந்த ஞானம் நமக்குள் வருகின்றது…”
அந்த உணர்வின் தன்மை உடலாகும் பொழுது சிவமாகின்றது.
1.அகஸ்தியன் எப்படி ஒளியாக மாறினானோ… அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை நாம் எடுத்தால்
2.மின் கதிர்கள் பாய்ந்தாலும் அதனை எளிதில் பாய்ச்சி நம் உடலுக்குள் அந்தச் சக்தியைப் பெருக்குகின்றது… “மின்
அணுக்களாக” மாற்றுகின்றது.
எப்படி மின்னட்டாம் பூச்சி தனக்குள் எடுத்துக் கொண்ட நிலைகள் அதனுடைய
துடிப்பில் மோதும் பொழுது “அதன் உடலின்
பின் பகுதியில் வெளிச்சம் வருகின்றதோ” இதைப் போல
1.நம் உயிரின் துடிப்பின் தன்மை மின் கதிர்களாக மாற்றுகின்றது.
2.இந்த நிலையில் மனிதனான நாம் அருள் ஒளியின் உணர்வை நுகர்ந்து நமக்குள்
உருவாக்கினால்
3.இந்த உடலுக்குப் பின் இனி உடல் இல்லை… மனித உடலின்
ரூபம் மாறி ஒளியின் நிலையைப் பெறுகின்றோம்.
கணவன் மனைவி இருவருமே இதை ஏங்கிப்
பெற்று இந்த உணர்வின் தன்மை அறிவாக மாற்றி அருள் ஒளியாக மாற்றிப் பேரொளியாக மாறும்
நிலை வருகின்றது.
அந்த வழியினைப் பெற்றவர்கள் தான் சப்தரிஷி மண்டலங்களாக வாழ்ந்தும் வளர்ந்தும் கொண்டுள்ளார்கள். “நாமும் அவர்களுடன் இணைய முடியும்…”