ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

November 25, 2012

மெய்ஞான தியான வளர்ப்புத் திருச்சபையில் ஆயுள் கால அங்கத்தினராகச் சேரும் நிலை



மெய்ஞான தியான வளர்ப்புத் திருச்சபையில், ஆயுள் கால அங்கத்தினராகச் சேர ரூ 1500/- என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அப்படிச் சேரும் அன்பர்களுக்கு, அருள் ஞானச்சக்கரம் சாமி அம்மா நேரடியாக அளித்து, ஆசி வழங்குவார்கள்.

மேலும், தபோவனத்திலிருந்து மாதம் ஒரு முறை உயிரே கடவுள் எனும் மெய்ஞான இதழ், ஞானகுருவின் அருள்ஞான உபதேசங்களைத் தாங்கி வெளிவருகிறது. அந்த இதழ் தபால் மூலமாக, ஆயுள் கால அங்கத்தினருக்கு அனுப்பி வைக்கப்படும்.


மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் தபோவனம்
புஞ்சை புளியம்பட்டி  638 459
ஈரோடு மாவட்டம்
தமிழ் நாடு
இந்தியா
தொலை பேசி  04295 267318

ஆயுள் கால மெம்பர் எப்படி இருக்க வேண்டும்?
அந்த அருளைப் பெற வேண்டும், தெரிந்து கொள்ள வேண்டும் என்ற அந்த அறிவைப் பெறும்போது, ஒளிக்குப் போகின்றோம்.னென்றால், இந்த ஆயுள் மெம்பராஇருக்கக் கூடியவர்களுக்கு, இதைச் சொல்கின்றோம் ஆகவே, நமக்கு எது தேவை?

இது பெரும் சொத்து, கோடிக்கணக்கில் பணம் குவித்தாலும் கிடைக்காத சொத்து, அந்தக் கோடிக்கணக்கான உணர்வின் தன்மை, இந்த உடலுக்குப்பின் என்றும் ஏகாந்த நிலை, இங்கே ஏகாதசி, வைகுண்ட ஏகாதசி. நம்மை எதுவுமே அழித்திட முடியாது, என்றுமே நிலையானது.

, இந்த சரீரத்தைப் பெறுவதற்குத்தான்,ந்த மனிதனின் கடைசி நிலை இதுதான். அதனால்தான், ராமாணத்தில் தெளிவாகக் கொடுக்கின்றார்கள். சீதா எங்கே போகின்றது?

சாப்பிட்டதெல்லாம், சேமித்த சொத்தெல்லாம், இந்த உடலுக்கு. உடல் எங்கே போகின்றது? பூமியைப் பிளந்து, மறுபடியும் இங்க மண்ணிற்குள்தான் போகின்றது. மண்ணிற்குள் போகும் உடலுக்கு, ஏன் இந்த மாதிரி அவஸ்தைப்பட வேண்டும்? என்று ராமாயணத்தில் தெளிவாகக் கொடுக்கின்றார்கள்.

உணர்வின் தன்மை சீதா, உணர்வின் தன்மை ஒளியின் அறிவாகும், இருளுக்குள் சிக்காத தன்மை கொண்டு, விஷ்ணுவுடன் இருந்தது. அப்பொழுது, அங்கே போய் சொர்க்கம் அடைகின்றது.

அப்படி இதில் உணர்த்துகின்றார்கள். ஆனால், இராமாயணக் கதையே தெரியவில்லை. பிறகு, நாம் சொல்லி எதை நிரூபிக்கின்றது?

சீதா இவ்வளவு கஷ்டப்பட்டது. ராமன் இத்தனை சந்தேகப்பட்டான். அப்படி என்ற, சந்தேக உணர்வுகளைத்தான் கொடுக்கின்றார்களே தவிர, எத்தகைய மூலம் அதற்குள் இருக்கின்றது? என்று தெரியவில்லை.

அதனால், நீங்கள் ஒவ்வொருவரும் ஆயுள் கால மெம்பராக ஆக வேண்டுமென்றால், எப்படி இருக்க வேண்டும்? சும்மா பேருக்கு மெம்பராக இல்லை.

இயற்கையிலேயே, ஆயுள் கால மெம்பராக ஆக வேண்டும். உங்கள் குடும்ப வாழ்க்கையிலோ, நண்பர்களோட வாழ்க்கையிலோ, இப்படி வரப்போகும்போது அருளைப் பெற்று, இவர்கள் இருளைப் போக்க கூடிய சக்தி பெற்றவர்களாக நீங்கள் மாற வேண்டும்.

உங்கள் சொல்லின் தன்மை, பிறருடைய தீமைகளைப் போக்கக் கூடிய நிலையாக இருக்கவேண்டும். உங்கள் சொல்லின் தன்மை, அவர்களுக்குள் சிந்திக்கும் தன்மைய ஊட்டி, அவர்களைச் சிக்கலில் இருந்து மீட்டக் கூடிய சக்தியாக மாற வேண்டும். நீங்கள் ஒவ்வொரும் இந்த நிலை பெறவேண்டும்.

ஏனென்றால், இதுதான் ஆயுள் கால மெம்பர் பிறிதொரு தீமைகள் நமக்கு வராது, அருள் உணர்வை நமக்குள் பெருக்கும் சக்தி வரும். ஆகவே, நீங்கள் மன உறுதி கொண்டு, அருளைப் பெறுங்கள், இருளை அகற்றுங்கள், என்ற ஞானத்தைப் பேசி, ஒவ்வொரு குடும்பத்தையும் பரிபக்குவ நிலை பெறக்கூடிய சக்தியா நீங்கள் மாறவேண்டும்.

அப்பொழுது, அவர்களைப் பக்குவப்படுத்தும் போது, அதன் உணர்வுகள் நமக்குள் வராது, பாசத்தால், நாம் உதவி செய்ய வேண்டும் என்ற உணர்வு வந்தால், அந்த வேதனைகள் நிச்சயம் நமக்குள் வரும் ஆகவே, அந்த வேதனையை நீக்கக்கூடிய சக்திகளாக, நீங்கள் மாறவேண்டும்

அருளைப் பெற வேண்டும், இருளை நீக்க வேண்டும் என்ற நிலையாகத்தான், நீங்கள் எல்லோரும் ஆயுள் கால மெம்பராக அமைய வேண்டும். இணைய வேண்டும் எமது அருளாசிகள்.