ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

May 18, 2017

ஞானகுருவின் ஒலிப்பதிவு உபதேசம்

கீழே கொடுக்கப்பட்டுள்ள தலைப்புகளில் உள்ள AUDIO LINKகளை உபயோகித்து சாமிகள் உபதேசத்தைக் கேட்கலாம்.

தாய் தந்தையே முதல் தெய்வங்கள்
1. தாய் கருவில் பெற்ற பூர்வ புண்ணியம்தான் என்னை ஞானம் பெறச் செய்தது
2.அன்னை தந்தையருக்குச் செலுத்த வேண்டிய காணிக்கை
https://tmblr.co/ZJ7rjl2LihwiL
3.அம்மா என்ற மந்திரச் சொல்லின் மகிமை
https://soundcloud.com/ahileswaran-thangamani/sixcuuzr4fzj
மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர்
1.குருநாதர் யார் என்று கேட்டேன், நீ சீக்கிரம் தெரிந்து கொள்வாய் என்றார்
2.மாமகரிஷி ஈஸ்வராய குருதேவரின் சரித்திரம்
https://tmblr.co/ZJ7rjl2L-UsJm
3.குருநாதர் ஏன் பைத்தியமாக இருந்தார் - விளக்கம்
4.ரிக் வேதத்தைத் தலைகீழாகவும் பாடிக் காட்டினார் குருநாதர்

தெய்வ விளக்கம்
1.சுடலை மாடன், கருப்பணச்சாமி - விளக்கம்
2.ஊருக்கு ஊர் மாரியம்மனும் விநாயகரும் வைத்ததன் நோக்கம்
3.இராஜ கணபதி சங்கட கணபதி விளக்கம்
4.குரு பிரம்மா, குரு விஷ்ணு, குரு சாட்சாத் மகேஸ்வரா
5.சிவனைச் சக்தி காலால் மிதித்து திரிசூலத்தால் தாக்குகிறது விளக்கம்
6.சிவன் கையில் கழுத்தில் ஏன் பாம்பைக் காட்டியுள்ளார்கள்
7.காளிக்கு முன்னாடி புலியை ஏன் போட்டுள்ளார்கள்
8.கோவில் பள்ளி வாசல் சர்ச் குருத்வார் விகாரை - விளக்கம்
https://tmblr.co/ZJ7rjl2MJIkXS

சாஸ்திரங்களில் காட்டப்பட்டுள்ள பேருண்மைகள்
1.வைகுண்ட ஏகாதசி - பரமபத விளையாட்டு ஞானிகள் காட்டிய பேருண்மை
https://tmblr.co/ZJ7rjl2MicqPn
2.காயத்ரி மந்திரம் - விளக்கம்
https://tmblr.co/ZJ7rjl2Mrigxy 
3.ஊன் உடல் ஆலயம்
4.துவைதம், அத்வைதம், விசிஷ்டாத்வைதம் -சாஸ்திரங்களில் கூறப்பட்ட பேருண்மை
5.மூன்றாம் பிறை விளக்கம்
https://tmblr.co/Z-3Eud2MrjjTr

உயிரே கடவுள்
1.உயிரிலே பட்டு விட்டால் அது இயக்கத்தான் செய்யும் - விளக்கம்
2.வாஸ்து சாஸ்திரம் - வாசுதேவன் - ஞானிகள் சொன்னது
3.உயிரின் ஆசை வேண்டும் உடலின் ஆசை வேண்டாம்
https://tmblr.co/Z-3Eud2MrkviR
4.உயிர் - அவனின்றி அணுவும் அசையாது, உயிர் இருக்கும் வரை தான் மதிப்பு
https://tmblr.co/Z-3Eud2MrlaPF

5.உயிரின் இயக்கத்தை அனுபவபூர்வமாக உணருங்கள்
6.நமக்குள் நின்று இயக்கும் ஈசனை உணராது தெய்வத்தை வெளியில் தேடுகின்றோம்
7.கடவுள் யார்? அவர் தண்டனை கொடுப்பாரா...!
8.உயிர் ஜீவ அணுக்களை உருவாக்கி உடலாக்கும் நிலை
9.உயிர் - அவனின்றி அணுவும் அசையாது, உயிர் இருக்கும் வரை தான் மதிப்பு

அகஸ்தியர்
1.அகஸ்தியன் பாதம் பட்ட இடங்களில் பதிந்துள்ள ஆற்றல்கள்
2.அகஸ்தியன் பெற்ற அருள் மணங்களை நுகரும் தியானம்
https://eswarapattar.tumblr.com/post/160769901732
3.விஞ்ஞானிகள் உபயோகிக்கும் கதிரியக்கங்களும் அதை ஒளியாக மாற்றும் அகஸ்தியனின் ஆற்றல்களும்
4.விஞ்ஞானிகள் உபயோகிக்கும் கதிரியக்கங்களும் அதை ஒளியாக மாற்றும் அகஸ்தியனின் ஆற்றல்களும்
5.அகஸ்தியனுக்குப் பின் அவனைப் போன்ற சக்தி பெற்ற ஞானிகள் தோன்றவில்லை
https://tmblr.co/Z-3Eud2MeB95E
6.பூமியின் ஈர்ப்பு எல்லையை அறிந்த அகஸ்தியனும் அவர் மனைவியும்
https://tmblr.co/Z-3Eud2MeBglI
7.படிப்பறிவில்லாத அகஸ்தியன் பெற்ற ஆற்றல்மிக்க சக்திகள்
https://tmblr.co/ZJ7rjl2MUuF97
8.அகஸ்தியன் பாதம் பட்ட இடங்களில் உள்ள ஜீவ சக்தியான நீர்

மாமிசம் சாப்பிடலாமா
1.ஆட்டைச் சாப்பிட்டால் மே…, கோழியைச் சாப்பிட்டால் கொக்கரக்கோ…,
ஜாதகம் ஜோதிடம்
1.மனிதனுக்கு ஜாதகம் இல்லை
மந்திரத்தை  நம்பலாமா யந்திரத்தை நம்பலாமா
1."மையை வைத்து வித்தை செய்யும்" மகான்களைப் பற்றித் தெரிந்துகொள்ளுங்கள்
https://tmblr.co/Z-3Eud2Loug6B


நாம் தெரிந்து கொள்ள வேண்டியது
1.நான் தர்மம் செய்கிறேன், எனக்குப் பாவங்கள் வருமா - விளக்கம்
2.கடவுளைத் தேடுகிறேன் என்று குகைக்குள் அடைபட்டுள்ளோர் பலர்
3.என்னை உன்னிடமே அழைத்துக்கொள் என்று தெய்வத்திடம் வேண்டுவார்கள் -அருளாடுபவர்கள்
குருவிடம் யாம் பெற்ற அனுபவங்கள்
1.குமாரபாளையத்தில் மந்திரவாதிகளிடம் - குருநாதர் எமக்குக் கொடுத்த அனுபவம்
https://sages-world.tumblr.com/post/160980996677
2.தரித்திர நேரத்தில் தங்கம் எப்படிச் செய்வது என்று காட்டினார் குருநாதர். உன் மனதைத் தங்கமாக ஆக்க வேண்டும் என்றார்
https://tmblr.co/ZJ7rjl2LuyVCf
3.திருப்பதியில் குருநாதர் கொடுத்த அனுபவம் - இராஜத்தேள் பாம்பு
4.மரத்தையே தூக்கியெறியும் சக்தி கொடுத்தார் குருநாதர். மலைப் பாம்பு மற்றும் மந்திரவாதிகளிடம் குருநாதரின் பரீட்சை
5.ஆனைமலைக் காட்டிற்குள் யானைகளுக்கு மத்தியில் குருநாதர் எமக்குக் கொடுத்த அனுபவம்
6.தர்மம் செய்தால் தலை காக்கும் என்பார்கள். தர்மம் செய்வது எப்படி என்று குருநாதர் எமக்குக் காட்டினார்
https://tmblr.co/ZJ7rjl2MEuoyJ
7.கரடிகள் குகையில் குருநாதர் கொடுத்த அனுபவம்
https://tmblr.co/ZJ7rjl2MSJG3o

குரு அருள்
1.உங்களைச் சுற்றியிருக்கும் தீமைகளை அகற்றவே உபதேசிக்கின்றோம்
https://tmblr.co/Z-3Eud2LsnV6L

ஞானகுருவின் உபதேசத்தைப் பதிவாக்க வேண்டிய முறை
1.குருநாதர் பெற்ற சக்திகளை நம்மால் பெற முடியுமா…! என்பார்கள்

சுவாச நிலையின் முக்கியத்துவம் – உண்மையான பிராணயாமம்
1.நாம் சுவாசிக்கும் உணர்வு உடலுக்குள் எப்படி விளைகின்றது

நம் கண்களுக்குண்டான சக்தி
1.கண் திருஷ்டி

இரத்தநாளங்கள், கரு, முட்டை அடைகாத்தல் அணுவாகும் நிலை
1.நுகர்ந்த உணர்வை - நாம் சுவாசிப்பதை உயிர் இரத்தத்திலிருந்து அணுவாக எப்படி மாற்றுகின்றது? தெரிந்து கொள்ளுங்கள்

புருவ மத்தியின் சூட்சமம் என்ன?
1.ஒளிப் பிளம்பாக மாற்றும் புருவ மத்தி தியானம்
https://tmblr.co/Z-3Eud2Lsd9Q3
2.முதுமக்கள் தாழி, புருவ மத்தியில் உருவாகும் வைரம்
https://tmblr.co/Z-3Eud2LscM97

ஞானகுருவின் உபதேசத்தைப் பதிவாக்க வேண்டிய முறை
1.”சாமி சொன்னார்… நடக்கவில்லை” என்பார்கள், நடக்கக்கூடிய அந்தப் பக்குவம் எது

தியானிக்க வேண்டிய முறை 
1.தியானம் செய்யும் முறை - ஒவ்வொரு உறுப்புக்கும் சக்தி ஏற்றிக் கொடுக்க வேண்டும் - விளக்கம்
https://sages-world.tumblr.com/post/160794879297


ஆத்ம சுத்தி
1.நாம் உருவாக்க வேண்டிய பாதுகாப்புக் கவசம்
2.ஆன்மாவைச் சுத்தம் செய்ய நேரம் இல்லை என்று சொல்கின்றார்கள்
3.துருவ நட்சத்திரத்தின் உணர்வை நமக்குள் அணுக்களாக விளையை வைக்கும் முறை
https://tmblr.co/Z-3Eud2L--kcI

சந்தர்ப்பத்தால் வரும் தீமைகளை நீக்க வேண்டும்
1.பணத்திற்காகவும் பொருளுக்காகவும் வேதனைப்படுத்தும் மாமியாரின் (மற்றவரின்) கடைசி வாழ்க்கை நிலைகள்
https://tmblr.co/ZJ7rjl2MX6yds 

ஞானிகள்
1.அருணகிரிநாதர் ஞானம் எப்படிப் பெற்றார்?
https://sages-world.tumblr.com/post/160760542052
2.பதஞ்சலி முனிவர் திருமூலர் ஆக ஆனதன் சந்தர்ப்பம்
https://tmblr.co/ZJ7rjl2MgCxnb

பழனி முருகன் சிலை
1.போகர் உருவாக்கிய முருகன் சிலை - மனோசீலை
https://tmblr.co/ZJ7rjl2MQ46zZ 

வேதனையிலிருந்து விடுபடுங்கள் 
1.அறியாமல் செய்யும் தவறால் ஏற்படும் வேதனையை நீக்கும் வழி

உணர்வின் இயக்கம்
1.நடனக் கலையின் முக்கியத்துவம் என்ன
https://tmblr.co/Z-3Eud2LsaONC
2.ஒரு இலட்சம் லாட்டரியில் கிடைத்தால் நம் உணர்வின் இயக்கம் எப்படி எல்லாம் இருக்கும்
https://tmblr.co/Z-3Eud2LsbP7Q


நல்லதைக் காக்கும் சக்தி
1.நல்ல குணங்களைக் காக்கும் வழியைக் காட்டியவர்கள் ஞானிகள்
https://tmblr.co/ZJ7rjl2MZ65f4

விஞ்ஞானத்தின் விளைவுகள்
1.விவசாயம் செய்ய பண்டைய கால உரங்கள் - வண்டல் சாம்பல் சாணம் உப்பு இவைகளை வைத்துத்தான் விஷத்தை முறித்தார்கள்


ஆன்மாக்களை விண் செலுத்தும் முறை
1.முன்னோர்களின் உயிரான்மாக்கள் யார் உடலிலிருந்தாலும் விண் செலுத்தலாம்
https://tmblr.co/ZJ7rjl2LgLbWK

மகரிஷிகள் உலகம் - மகரிஷிகளின் தொடர்பு
1.மெய்ஞானிகளின் உணர்வை நாம் கவர்ந்தால் மெய்ஞானிகள் நம்மை அழைத்துக் கொள்வார்கள்
2.மகரிஷியும் நானும், நான் தான் அவன் அவன் தான் நான்

அழியாச் சொத்து
1.நீங்கள் உங்களுக்குள் வளர்க்கும் அருள் சக்தியை யாராலும் அழிக்க முடியாது

2.செல்வம் அதிகம் உள்ள குடும்பத்தில் வரும் தொல்லைகள்
https://tmblr.co/Z-3Eud2MHSCW3

இராமேஸ்வரம் இராமலிங்கம்
1.இராமலிங்கமாக வாழகின்றது துருவ நட்சத்திரமும் சப்தரிஷி மண்டலங்களும்
மின்னலுக்குள் இருக்கும் அற்புதங்களும் ஆற்றல்களும்
1.அகஸ்தியன் கண்ட மின்னலின் ஆற்றல் - விளக்கம்
https://tmblr.co/Z-3Eud2MF8bFX

வேகா நிலை
1.தீமையான உணர்வுகளை வேக வைக்க வேண்டும்

விண் செல்லும் ஆற்றல்
1.விண் சென்றவர்களைப் பார்த்து நாமும் ஏன் அந்த நிலை பெற முடியாதா என்று ஆசைப்படுங்கள்

2.அகஸ்தியன், ஈஸ்வராய குருதேவர் வழியில் நட்சத்திரத்தின் ஆற்றலால் விண் செல்லுங்கள்


பிறவியில்லா நிலை
1.பிறவிக் கடனை அறுத்துச் சென்றவர்கள் ஞானிகள்
2.உடலுக்குப் பின் எங்கே செல்ல வேண்டும் என்று நிர்ணயம் செய்து கொள்ளுங்கள்

தவம்
1.மக்களுக்கு நல்வழி காட்டும்படி குருநாதர் சொன்னார்
2.நீங்கள் அருள் சக்தி பெறவேண்டும் என்று தவமிருப்பதே என் பொழுது போக்கு
மழை பெய்யச் செய்யும் ஆற்றல்
1.மழை நீர் மூலம் தாவரங்களையும் நம்மையும் காக்கும் தியானம்

நாஸ்டர்டாமஸ்
1.உலகைக் காக்கும் சக்தி தென்னாட்டில் தோன்றும் நிலைகள் 
https://tmblr.co/ZJ7rjl2MNwrzZ 

உலகுக்கு எடுத்துக்காட்டாக நீங்கள் வர வேண்டும்
1.குருவிற்குச் செலுத்த வேண்டிய காணிக்கை எது

பண்பை வளர்த்து அன்பைப் பெருக்கி அருளை வளர்த்து மக்களை ஒன்றுபட்டு வாழச் செய்வதே நம் குரு காட்டிய "அருள் வழி"

இன்றைக்கு எடுத்துக் கொண்டால் ஒரு கிராமத்திலிருந்து இன்னொரு கிராமத்துக்குப் போனாலே அதற்குள் “அங்கிருந்து இங்கே வந்துவிட்டான்..,” என்ற நிலை வருகிறது.

மைசூருக்கு இங்கிருந்து தமிழ்நாட்டுக்காரன் அங்கே சென்றால் உதைக்கிற மாதிரி ஒரு கிராமத்திலிருந்து மற்றொரு கிராமத்திற்குச் சென்றால் “எங்கே இருந்து இங்கே வந்து நாட்டாமை செய்கிறான் பார்..,” என்பார்கள்.

தமிழ்நாட்டுக்காரர்கள் அங்கே சென்றால் உதைக்கின்றார்கள், தமிழ்நாட்டுக்குப் போ என்கிறார்கள்.

பகைமை உணர்வுதான் வருகிறது.

தமிழ்நாடுதான் என்றாலும் கிராமத்திற்குள் சென்றால் என்ன ஆகிறது?

அந்தக் கிராமத்துக்காரன் இங்கே வந்துவிட்டான், அவன் கொழுப்பைப் பார் என்கிறார்கள்.

ஆக, இப்படி ஒரு கிராமத்திற்கு கிராமம் தனித்து நிற்கும் நிலையும் பகைமை ஊட்டும் நிலைகள் இப்படி உலகம் முழுவதுமே இருக்கின்றது.

இனிமேல் அணுகுண்டு விழ வேண்டியதில்லை.

மனிதனுக்குள் இருக்கும் விஷத்தன்மை விளைந்தால் இவர்களுடைய உணர்வே மனிதனுக்கு மனிதன் கொன்று குவிக்கும் நிலை வருகிறது.

மனிதன் என்ற நிலைகளில் எத்தனையோ ஆலயங்கள், சாஸ்திரங்கள், சட்டங்கள் இருக்கிறது. இருந்தாலும் உலகம் முழுவதற்குமே இன பேதம், மொழி பேதம், மன பேதம் இருக்கிறது.

மக்களை ஒன்றுபடுத்த அரசாங்கமும் எத்தனையோ வேலைகளைச் செய்கிறது.

அரசாங்கம் மட்டும் ஒன்றும் செய்ய முடியாது. ஏனென்றால், மக்களுடைய நிலைகள் கொண்டுதான் அரசாங்கம்.

மக்களுக்கு நன்மை செய்யவேண்டும் என்று அரசாங்கம் எண்ணினாலும் கிராமத்திற்கு கிராமம் தகராறு ஏற்படுகிறது. மக்கள் (நாம்) ஒற்றுமையாக இல்லையென்றால் அரசாங்கம் ஒன்றும் செய்ய முடியாது.

அதே சமயத்தில், கிராமப்புறத்தில் தெய்வங்களை வணங்கும் பொழுதும் எங்கள் இனம் அது அவர்கள் இனம் என்ற நிலையில் நாம் பகைமை கொள்கிறோம்.

ஆக, இந்த மனித உடலில் விளைய வைத்த தீமையின் உணர்வின் எண்ண அலைகள் உலகம் முழுவதும் பரவி அணுக்களாக மாறுகின்றன.

தீமையான உணர்வுகளை விளைய வைக்கும் இந்த நிலைகள் அனைத்தும் வெளிப்பட்ட நிலைகளில் இந்த ஜீவ அணுக்கள் பட்டு அந்த உயிரின் தன்மை கொண்டு மீண்டும் அது புழுக்களாக மாறுகின்றது.

அந்த உணர்வின் அணுக்கள் வரும்போது அதனுடைய நிலைகள் கொண்டு தாவர இனங்கள் உலகெங்கிலும் அழிகின்றது. இதை உங்கள் அனுபவத்தில் பார்க்கலாம்.

1.பகைமையான உணர்வுகள் நமக்குள் விளைகின்றது.
2.விளைந்த இந்தத் தீமையான நிலைகள்தான் அணுக்களாக மாறி நம்மையே திருப்பித் தாக்குகின்றது.
3.உணவுக்காகத் திண்டாடும் நிலை கூட சில நாடுகளில் இருக்கின்றார்கள்.

இதைப் போன்ற நிலைகளில் இருந்து நாம் மீண்டிடல் வேண்டும், மற்றவர்களையும் மீட்டிடல் வேண்டும்.

ஆகவே, எந்தக் கிராமமாக இருந்தாலும் ஒரே கிராமம் என்று நாம் எண்ணவேண்டும். எந்த ஊரானாலும் மைசூர் வேறு இல்லை, ஆந்திரா வேறு இல்லை, உலகம் வேறு இல்லை.

அங்கே நாம் செல்ல வேண்டும் என்றால்
1. நட்பு இருந்தால்தான் போக முடியும்.
2.நட்பு இல்லையென்றால் அங்கே போக முடியாது.
3.அவர்கள் வாழவேண்டும் என்று எண்ணினால்தான் நாம் வாழ முடியும்.
4.இல்லை இல்லை.., அவர்களைத் தொலைக்க வேண்டும் என்று நாம் எண்ணினால்,
5.நாம் போனால் நிச்சயம் நம்மைத் தொலைக்கத்தான் செய்வார்கள்.

இந்த உலகம் நமக்குள் அந்த எண்ணமே நம்மைத் தொலைத்து விடுகிறது.., தொலைந்து விடுகிறோம்.

நமது குருநாதர் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் காட்டிய அருள் வழியில்
இந்த ஊர்; இந்த உலகம்;
நாம் எல்லோருமே ஒரே குடும்பம், ஒரே இனம்.

அதாவது, உலகம் அனைத்தும் அதில் வாழும் நாம் அனைவரும் அந்தக் கடவுளின் பிள்ளைகள்தான். அவர்களுடன் நாம் இணைந்து வாழக்கூடியவர்கள் என்ற நிலையில் நாம் எண்ணவேண்டும்.

1.மதமும் இல்லை,
2.மொழியும் இல்லை,
3.இனமும் இல்லை.
4.இவைகள் எல்லாம்.., "நம்மைக் காப்பதே இல்லை".

ஊரும் உலகமும் நலமாக இருக்க வேண்டும் என்று எண்ணினால் “நலம் என்ற உணர்வுகள் நமக்குள் விளைகின்றது.

ஆக, அந்த மகரிஷிகளின் அருள் சக்தி எல்லோர் மீதும் படரவேண்டும். நாம் எல்லோரும் நலமாக இருக்க வேண்டும். எல்லோரும் சகோதர உணர்வுடன் ஒன்று பட்டு வாழ்ந்திடவேண்டும் என்ற இந்த மூச்சலைகளை நாம் படரச் செய்யவேண்டும். இதுதான் “தவம் என்பது.

1.பண்பை வளர்த்து அன்பைப் பெருக்கி, அருளை வளர்த்து
2.மக்களை ஒன்றுபட்டு வாழச் செய்வதே நம் குரு காட்டிய அருள் வழி.
3.அருள் வழி வாழுங்கள். ஆனந்த வாழ்க்கை வாழ்ந்திடுங்கள்.


அதன் வழி கொண்டு பேரின்பப் பெரு வாழ்வாக நீங்கள் வாழ்ந்திட எமது அருளும் குரு அருளும் உங்களுக்கு உறுதுணையாக இருக்கும்.

May 17, 2017

இரத்தக் கொதிப்பு வருவதற்குக் காரணம் என்ன?

சில குடும்பங்களில் குழந்தைகள் மேல் மிகவும் பற்றாக இருப்பார்கள். குழந்தைகள் சொன்னபடி கேட்கவில்லையென்றால் வேதனைப்படுவார்கள்.

அவ்வாறு வேதனைப்படும் பொழுது இந்த உணர்வுகள் அவன் “அய்யய்யோ…” என்று சொன்னால் கூட ஆங்காரம் தாங்காது அடிக்கும் தன்மைக்கே வந்துவிடும்.

உதாரணமாக, புலி தன்னுடைய உணவுக்காகப் பாய்ந்து தன் இரையைத் தாக்கும் பொழுது அது துடிப்பதைக் கவனிக்கின்றதா? இல்லை. தனது பசியை ஆற்றுவதற்காக கொடூரமான நிலையில் தாக்குகின்றது.

1.சில குடும்பங்களில் பையன் சொன்னபடி கேட்கவில்லை என்றால்
2.கடினமாகத் தாக்கிப் பேசுவதும்
3.அவன் அலறினாலும் அதைப் பற்றிச் சிந்தனையே இருப்பதில்லை.
4.இந்த உணர்வுகள் நம் உயிரிலே பட்டபின் உணர்ச்சிகள் நம் உடலில் அங்கங்களை இயக்குகின்றது. அந்த எண்ணம் வலுப்பெறுகின்றது.
5.அதே உணர்வுகள் நம் இரத்தங்களில் செல்கிறது.

உடல்.., அந்த இரத்தத்தில் வருவதைத்தான் உணவாக உட்கொள்கிறது.

தாக்கும் உணர்ச்சிகள் நம் இரத்தத்தில் கலந்து கொண்டபின் உடலில் உள்ள அணுக்களில் சேர்ந்து “சிந்தனையை இழக்கின்றோம்.

இதைப் போன்று நம் உடலிலுள்ள இந்த அணுக்கள் கார உணர்ச்சிகளைத் தூண்டிய உடனே அது நமக்குள் துடிக்க ஆரம்பித்துவிடுகின்றது.

கோபம் வருபவர்களைப் பார்த்தால் “நடுக்கம் அதிகமாக இருக்கும்.

இதைப் போன்று அந்த அணுக்கள் தாங்காது அந்த உணர்ச்சிகளை அதிகமாகச் சேர்த்து அது பெருக ஆரம்பித்தால் அடுத்து நமக்குள்ளும் வேதனை என்ற செயல்களைச் செய்ய வைத்துவிடுகிறது.

அவ்வாறு வேதனைப்படுத்தி அதனை ரசிக்கும் தன்மையும் வந்துவிடுகின்றது.

நம் உடலில் இந்த உணர்வுகளை மாற்றிவிட்டால் நம் உடலிலுள்ள அணுக்கள் அனைத்தும், புலி எப்படி வெறி கொண்டு தாக்கி ஒன்றை வேதனைப்படுத்தி உணவாக உட்கொள்கின்றதோ அதுபோன்று வெறி கொண்டு பிறரைத் தாக்கிடும் உணர்வுகள்தான் வரும்.

1.பிறர் வேதனைப்படுவதைச் சிந்திக்காது
2.இத்தகைய உணர்வுகள் நம் இரத்தத்தில் கலந்தபின்,
3.மனிதனாக உருவாக்கிய நிலைகளை இது மாற்றி
4.இதனுடைய உணர்வுகள் குறையக் குறைய இரத்தக் கொதிப்பாக மாறிவிடும்.

நாம் சிந்திக்கும் மூளையில் இதன் உணர்ச்சிகளைக் கூட்டி இதன் உணர்வுகள் அனைத்தும் உடலிலே இயக்கங்களை மாற்றிக் கொண்டயிருக்கும்.

1.நரம்பு ஓட்டங்களில் பச்சைப் பசேல் என்று இறுக்கமாகிவிடும் (டென்சனாகிவிடும்).
2.கண்களில் பார்த்தால் செக்கச் செவேல் என்று இருக்கும்.
3.நகங்களில் சிகப்பின் ஓட்டங்கள் வரும்.

ஏனென்றால் “இரத்த நாளங்களில் வீரிய உணர்வு வரும்பொழுது அத்தகைய நிலைக்குச் செல்லும்.

நம் உயிரிலே பட்டவுடன் இந்த உணர்ச்சிகள் உடல் முழுவதும் பரவுகின்றது. அப்படிப் பரவப்படும் பொழுது “மிகப் பயங்கரமாகத் தாக்கவேண்டும் என்ற உணர்ச்சிகள் தோன்றுகின்றது.

அப்பொழுது “எது நம்மை இயக்குகின்றது?

நாம் “நுகர்ந்த உணர்வுகள் உயிரிலே பட்டபின் அந்த உணர்ச்சியின் வழியில் நம்மை இயக்குகின்றது.

அந்த உணர்ச்சிகள் நம் உடலிலே சேர்த்துக் கொண்டபின் உடலிலே உள்ள நல்ல அணுக்களிலும் இதை மாற்றி “இரத்தக் கொதிப்பு நோயாக வந்துவிடுகின்றது.

இதையெல்லாம் நாம் தெளிவாகத் தெரிந்து கொள்வது அவசியம்.