ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

December 7, 2012

கணவனும் மனைவியும் குருகாட்டும் வழியில் எப்படி நடக்க வேண்டும்

உதாரணமாக எலெக்ட்ரிக் இன்ஜினியராக இருக்கின்றீர்கள். அதிலே ஒரு நொடி தவறினால், என்ன செய்யும்? சரியில்லாமல் போய்விடும்..

அதைப் பார்த்துவிட்டு வந்து, “இந்த மாதிரி ஆகிவிட்டதுஎன்று வீட்டில் சொல்வார்கள். அதைச் சொல்லும் பொழுது, அந்தக் கருத்தும் உங்களுக்கு தெரியும் அதனால், இதன் வழி வரப்போகும் போது, அதனதன் உணர்வு கலந்து, அதன் உணர்வு சிந்திக்கும் ஆற்றல் வரும்.

அங்கே வேலை பார்க்கும் இடத்தில், ஒருவர் எலெக்ட்ரிக் வேலை செய்யும் போது, இந்த மாதிரி எர்த் ஆகிவிட்டது. இந்த மாதிரி ஆனதால், அது ரொம்பவும் சங்கடமாகப் போய்விட்டது, என்று வீட்டில் பெண்கள் கேள்விப்பட்டால், என்ன ஆகின்றது?

”... அப்படியா?.., என்று சொல்லி, இந்த உணர்வை எடுத்தோம் என்றால், அதே தன் கணவரிடத்தில் நினைக்கும் பொழுது, இந்த நேரத்திலே அவருக்குத்தான், அவர் மேல் இந்த உணர்வுகள் பாய்கின்றது.

அவருக்கு இப்படியெல்லாம் ஆகி இருந்தால் என்ன ஆகும்? அப்படி என்ற இந்த உணர்வு, மனைவிக்கு வரக்கூடாது.

ஆகவே, நாம் அந்த இடத்தில் என்ன செய்ய வேண்டும்? மகரிஷிகளின் அருள் சக்தியால், அந்த மாதிரியெல்லாம் என் கணவருக்கு எதுவும் ஆகக்கூடாது என்ற, அந்த நிலை வரவேண்டும்.
மன உறுதியோடு, அந்த  மகரிஷிகளின் அருள் உணர்வோடு
தொடர்பு கொள்ளப் போகும் பொழுது,
இந்த உணர்வுகள் உறுதியாகின்றது.

இந்த உறுதி வந்தால் என்ன செய்யும்? கணவரை அந்த மாதிரி சந்தர்ப்பத்தில், அவரை அங்கே போக விடாமல் தடுத்துவிடும். இதுதான், “எமனிடம் இருந்து சாவித்திரி தன் கணவனை மீட்டினாள்என்று சொல்வது..

ஆக, துயரம் என்ற நிலையிலிருந்து,
துயரத்தை நீக்கும் உணர்வை எடுக்கும் பொழுது,
அது அவருக்கு நல்ல உயர்ந்த சந்தர்ப்பமும்,
அதிலிருந்து தப்பிக்கக் கூடிய நிலையும்,
நல்ல மன உறுதியும் பெற வேண்டும் என்ற உணர்வை,
மனைவி பதிவு செய்தால்,
நிச்சயம் காக்கக் கூடிய சக்தியாகும்.

அதாவது, “எலெக்ட்ரிக் எலெக்ட்ரானிக்”. சாதாரணமாக நண்பர்களாக இருக்கின்றவர்கள் சண்டை போட்டார்கள் என்றால், அந்த உணர்வு அமெரிக்காவில் இருப்பவரையும் எப்படி இயக்குகின்றது?

நாம், அடிக்கடி ஒரு நோயாளியை எண்ணும் பொழுது, நோயாளி என்று சொல்லிப் பதிவு செய்து கொள்கின்றோம். பிறகு, அந்த நோயாளி அங்கே என்னென்ன வலு பெற்றாரோ, அவர் இறந்த பின்பு, அந்த ஆன்மா நம்மிடம் வந்துவிடும், துவெல்லாம் உணர்வுகள். இந்த காந்தப் புலன்தான் இணைக்கின்றது.

ஒவ்வொரு பொருளிலும், உதாரணமாக கத்தரிக்காயில் அந்த காந்தப் புலன் இருப்பதனால்தான், அதன் உணர்வு கொண்டு, கத்தரிக்காயாவிளைகின்றது..

தே போல, ஒவ்வொரு மிளகாயிலும் அதில் உள்ள காந்தப் புலன்  எதன் உணர்ச்சியைக் கண்டதோ, செடியின் தன்மை அதைக் கவர்ந்து, அந்த உணர்வின் ரூபத்துக்கொப்ப, அந்த ரூபத்தை உண்டாக்குகின்றது.

வாழ்க்கையில், கணவன் மனைவி ஒன்று சேர்ந்து வாழ்ந்தாலும், குறைகளை கணவன் வெளியில் செய்துவிட்டு வருகின்றார்கள். அப்பொழுது, எப்படியோ அதிர்ச்சி, பயம் இதைப் போன்று தோற்றுவிக்கின்றது.

கணவன் மனைவியிடம் சொல்லும் போது, மனைவி என்ன செய்யவேண்டும்? உடனே, ஈஸ்வரா என்று உயிரை எண்ணி, இந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எடுத்து, ன்  உணர்வுகளில் படரவேண்டும்.

என் கணவர், மகரிஷிகளின் அருள் உணர்வுகள் பெற வேண்டும். அவ்வப்பொழுது சிந்திக்கும் திறன் அவருக்கு வரவேண்டும். இந்த மாதிரி சந்தர்ப்பங்களில், அவருக்கு ஒரு நல்ல மன வலு பெறவேண்டும்..

அந்த சந்தர்ப்பங்கள் அனைத்தும், அவருக்கு நல்லதாக்கும் உணர்வுக்கு அழைத்துச் செல்ல வேண்டும், என்று இப்படி எண்ணிப் பாருங்கள் அப்பொழுது உங்கள் உணர்வுகள் என்ன செய்கின்றது?

அதாவது, வாழ்க்கையில் திடீரென்று, சிக்கல்கள் வருகின்றது. இந்த சிக்கலிலிருந்து வரக்கூடிய நிலைகள் அது வராதபடி, இந்த முறைப்படி  செய்ய வேண்டும்..

அப்படிச் செய்யும் பொழுது, அந்த மனைவியின் உணர்வுகள், இது மேக்னெட்டாஇயக்கி, “எலெக்ட்ரிக் எலெக்ட்ரானிக்”, தீமைகளிலிருந்து விடுபடச் செய்கின்றது. இதை நீங்கள் அனுபவத்தில் தெரிந்து கொள்ளலாம்.

கணவன் ஆபீசுக்கே போனாலும் கூட, பஸ் ஏறவிடாது, அந்த பஸ் ஆக்சிடன்ட் ஆகப்போகிறது என்றால், அந்த உணர்வலைகள் இங்கே வலுவாகி, அந்த வண்டியில் ஏற விடாது. உங்கள் அனுபவத்திலே நீங்கள் பார்க்கலாம்.