I. வான இயல்
1. கடவுள் என்ற தன்மையும், அணுவின் இயக்கங்களின்
காரணப் பெயர்களும்
ஆதியிலே, அகண்ட அண்டம் இருண்ட நிலைகளில் இருக்கப்படும் பொழுது, அதாவது, சூரியனோ, கோள்களோ எதுவுமே இல்லாத இருண்ட பேரண்டம். அத்தகைய பேரண்டத்தில்,
சிறுகச் சிறுக வெப்பமாகி,
வெப்பத்தால் ஆவியின் தன்மை அடைந்து,
ஆவியின் தன்மை, நாளடைவில் விஷத் தன்மையாக மாறுகின்றது.
இயற்கையில் விளைந்த நிலைகள். உதாரணமாக, இன்று ஒரு வீட்டை நாம் மூடிவிட்டோமென்றால், மூடிய வீட்டிற்குள் வெப்பங்கள் வரும். ஆவியின் நிலைகள் காற்றாக மாறும்.
நாளடைவில் அடர்த்தி அதிகமாகும் பொழுது, அது விஷமாக மாறுகின்றது. அந்தப் பூட்டிய வீட்டிற்குள் சென்ற பின், அதில் வரும் நெடியை, நாம் சுவாசித்தபின் தும்முகின்றோம். நம்மையறியாமலேயே, அது இயக்குகி ன்றது.
இதைப் போன்று, இயற்கையில் அகண்ட பேரண்டம், இருண்ட நிலையை இருக்கப்படும் பொழுது,
வெப்பத்தின் தன்மை முதலில் உருவாகின்றது,
ஆவியாக மாறுகின்றது,
நாளடைவில் ஆவி, நஞ்சாக (விஷம்) மாறுகின்றது.
விஷத்தின் தன்மை அடர்த்தியாகும் பொழுது
முதல் நிலை ஆகும் வெப்பத்தினால் ஏற்படும், ஆவியின் தன்மைகளுடன் கலக்கப்படும் பொழுது,
இந்த விஷம் தாக்கி, மீண்டும் வெப்பமாகி, நகர்ந்தோடும் தன்மை பெறுகின்றது.
விஷத்தின் தாக்குதலால் வெப்பமடைந்து,
அணுக்களாக சிதறி ஓடுகின்றது.
சிதறி ஓடும் பொழுது, ஈர்க்கும் சக்தி வளர்ச்சி பெற்று,
அணுக்களாக உருவாகின்றது.
இன்று விஞ்ஞான அறிவு கொண்டு ஒரு பொருளைக் கண்டுபிடித்து, பின் அந்த பொருளுக்கு தக்கவாறு, எவ்வாறு பெயர் வைத்து அழைக்கின்றனரோ, இதைப் போன்று மகரிஷிகள், இயற்கையில் விளைந்த சக்தியின் நிலைகளை, தனக்குள் கண்டுணர்ந்து காரணப் பெயரிட்டு அழைத்தனர்.
விஷத்தை “ஆதிசக்தி” என்றும்
தாக்குதலால் ஏற்படும் வெப்பத்தை “ஆதிபராசக் தி என்றும்,
வெப்பத்தால் உருவாகும்,
ஈர்க்கும் சக்தி காந்த சக்தியை “ஆதிலட்சுமி” என்றும்
காரணப் பெயரிட்டு அழைத்தனர் மகரிஷிகள்.
2. பரப்பிரம்மம், காயத்ரி
ஆங்காங்கு, அகண்ட அண்டத்தில்,
மேலும் வெப்பத்தினால் உருவாகும் நிலைகள்,
மற்ற மற்ற விஷமாக மாறிய நிலைகள்,
பல உணர்வுகள், பல சுவை கொண்டதாக வெளிப்படுகின்றது.
இதைப் போன்று, புதிது, புதிதாக உருபெறும் பற்பல ஆவிகள்,
ஒவ்வொரு விதமான நிலைகளில் உருவாகும் அந்த சக்தியினை,
அணுக்கள் கவர்ந்து அதனதன் வலுவாக இயக்கத் தொடங்குகின்றன.
அதாவது விஷம், வெப்பம், காந்தம் என்ற மூன்றென்ற அந்த நிலை அடையும் அணுக்கள்,
ஆங்காங்கு உருவாகும் உணர்வின் சத்தை, தனக்குள் கவர்ந்தால்,
காந்தம் இழுத்து, வெப்பத்துடன் இணைக்கப்படும் பொழுது,
விஷத்தால் உணர்ச்சிகளை இயக்கும் தன்மை வருகின்றது.
அப்பொழுது, ஓர் அணுத் தன்மையின் இயக்கச் சக்தியாக மாறுகின்றது. இதனை “பரப்பிரம்மம்” என்ற காரணப் பெயர் வைத்து அழைத்தனர்.
தன்னுடன் இணைந்து கொண்ட மணத்தை, விஷம் இயக்கி, வெளிப்படுத்தும் பொழுது,
ஞானம், “சரஸ்வதி” (பிரம்மாவின் மனைவி) என்று பெயரை வைத்தனர்,
விஷம் இல்லை என்றால், அந்த சத்தின் இயக்கத்தை இயக்க முடியாது. இந்த காந்தம் இழுத்து, வெப்பத்தில் மோதவில்லை என்றால், அந்த உணர்வின் தன்மை, அணுவுடன் சேர்ந்து இயக்க முடியாது.
இதை நாம் தெரிந்து கொள்வதற்காக, விஷம், வெப்பம், க ாந்தம் என்ற மூன்றையும் “மும்மலம்” என்று காரணப் பெயரிட்டு, கவர்ந்து கொண்ட உணர்வை “பரப்பிரம்மம்” என்று காரணப் பெயரிட்டு அழைத்தனர்.
பிரம்மம் ஆகும் பொழுது நான்கு, அதே சமயத்தில்
எந்த சத்தின் தன்மையோ, அது மணமாக வெளிப்படுத்தும் பொழுது
அதன் ஞானமாக இயக்கும், இது “காயத்ரி”
“காயத்ரி” என்றால் எந்த உணர்வினை கவர்ந்ததோ,
அதன் வலுவாக இயக்கும் என்று பொருள் புலனறிவு ஐந்து.
இதனைத்தான் “காயத்ரி” என்று பெண்பால் பெயரை வைத்து, அதன் சக்திகள் எவ்வாறு உருவாகின்றது என்பதை, சூட்சமத்தில் நடப்பதை, உருவம் அமைத்து, அருவ நிலையை அறியச் செய்தனர் மகரிஷிகள்.
அந்த மகரிஷிகள் கண்டுணர்ந்த உண்மைகளையும், அவர்களுக்குள் விளைந்த நிலைகள் அனைத்தையும், நாம் அனைவரும் தெரிந்து கொள்வதற்காக, காரணப் பெயர் வைத்தார்கள் மகரிஷிகள்.
இவ்வாறு, வான்வீதியில் இயக்க அணுக்களாக மாறும்பொழுது, உதாரணமாக, ஒரு கசப்பின் உணர்வின் தன்மை பெற்ற அணு, துவர்ப்பின் உணர்வின் தன்மை பெற்ற அணு, விஷத்தின் உணர்வின் தன்மை பெற்ற அணு,
கசப்பின் அணுவைக் கண்டபின், துவர்ப்பின் அணு இதை அணுகாது ஓடுவதும்,
ஓடும் வேகத்தில், விஷ அணுவில் மோதிய பின்,
விஷத்தின் தன்மையை தாங்காது சுழற்சியின் தன்மை அடைகின்றது.
அவ்வாறு சுழற்சியின் தன்மை அடையும் பொழுது,
அந்த கசப்பின் அணுவை தன்னுடன் இனைத்து,
மோதலில் ஏற்படும் வெப்பம், ஆவியாக மாறுவதும்,
மோதலில் ஏற்பட்ட வெப்பத்தால், மூன்றும், இரண் டறக் கலப்பதும்,
இவ்வாறு, அணுப் பரிமாணம் வித்தியாசமான நிலைகள் அடைகின்றது,
அணுக்கள் மாறுகின்றது.
கசப்பும், துவர்ப்பும், அரிப்பு ம் ஒன்றாகக் கலந்து ஒரு அணுப் பரிமாணம் ஆகின்றது.
இவ்வாறு ஆகும்பொழுது, தன்னில் வெப்பமாகும் நிலைகள்,
இவ்வாறு, வான் வீதியில் இத்தகைய நிகழ்ச்சிகள் நடந்து,
அணுக்களின் பரிணாம மாற்றங்களும் அதிகமாகின்றன.
இவ்வாறு அதிகமாகி, மேகத்துக்குள் இணைந்து,
அதற்குள் போர்முறை வரப்படும் பொழுது, நீராக மாறுகின்றது.
நீரானபின், எடை கூடி ஓடும் நிலைகள் வருகின்றது.
பல அணுக்கள், கூட்டமைப்பாக பல உணர்வு கொண்ட நிலைகள்,
இந்த நீருக்குள் சிக்குண்டு, இந்த உணர்வின் தன்மை
எடை கூடி ஓடும் தன்மைகள் வருகின்றது.
எடை கூடி, நகர்ந்து ஓடும் பொழுது உராய்வாகி,
உராய்வினால் வெப்பமாகி, நீர் ஆவியாகின்றது.
இந்த பற்பல அணுக்களின் கூட்டமைப்பு, ஓர் ரூபமாகின்றது.
ஓர் எல்லையாகின்றது, ஓர் பரமாகின்றது.
வான் வீதியில், ஆவியாக இருக்கும் பொழுது எல்லை இல்லை. ஆனால், திடப் பொருளாக மாறும் பொழுது, எல்லையாகின்றது. அது தான் “பரம்பொருள்”, ஓர் ரூபமாகின்றது என்பதை நாமெல்லாம் தெரிந்து கொள்வதற்கு, மகரிஷிகள், “உலகம் எவ்வாறு உருவானது?” என்பதைத் தெளிவாக்கி உள்ளார்கள்.
இவ்வாறு, அணுக்களின் சக்தியைத் தனக்குள் சேர்த்துக் கொண்டபின், பரம்பொருளாகி, அதற் குள் அடைபட்ட உணர்வுகள் அனைத்தும்
பரம்பொருள் சுழலும் பொழுது, சுழற்சியில் வெப்பமாகி,
வெப்பத்தின் தன்மை ஈர்க்கப்பட்டு,
தன் அருகில் உள்ள பொருள்களை,
உருகச் செய்து ஒன்றாக மாற்றுகின்றது.
பொருள்களின் உணர்ச்சிகள் மாறுகின்றது.
இப்படிப் பாறைகளாகவும், கற்களா கவும் மாறுகின்றது. அப்பொழுது உள் நின்று இயக்குவது யார்? இந்தப் பொருளின் தன்மை கலந்து, உருப்பெறும் தன்மை வரப்படும் பொழுது, உள் நின்று இயக்குவது “கடவுள்”
இவ்வாறு அந்த பரம்பொருள், தன் அருகில் உள்ள காந்தப்புலனில் உராயும் பொழுது, சுழற்சியாவதும், சுழற் சியால் வெப்பம் உருவாகி, ஈர்க்கும் சக்தி பெற்று, தான் ஈர்க்கும் பொருள்கள் மேலே விழுந்தாலும், சுழற்சியால் ஏற்படும் வெப்பம், ஊடுருவி, பரம்பொருளின் நடு மையம் அடைகின்றது.
அந்த வெப்பத்தால் தன் அருகிலே இருப்பது அனைத்தும், உருகுகின்றது, ஆவியா க மாற்றுகின்றது, வெளி வருகின்றது. மீண்டும் இதனுடைய ஈர்ப்பு வட்டத்தில், மேல் எழுந்தவாறே சுழல்கின்றது.
கோளின் சுழற்சி வேகம் கூடும்பொழுது,
வெப்பத்தின் தணல் கூடுகின்றது.
வெப்பத்தின் தணல், நடு மையம் அதிகமாக,
தன் அருகிலே இருப்பதனைத்தையும் அமிலமாக மாற்றுகின்றது.
இவ்வாறு, பல கலவைகள் ஒன்றாகி, ஒரே ரூபமாக, ஒரே அமில சக்தியாக மாறுகின்றது. முதலில் நீரானது, பின் அமிலத் தன்மை அடைகின்றது.
அமிலத்தன்மை அடைந்தபின், அதிலிருந்து உமிழ்த்தும் நிலைகள்
அதனின் ஈர்ப்பு வட்டத்தில் சுழல்கின்றது.
இதைக் கடந்து வெளிச் சென்றபின், உறைவதும்,
உறைந்த பின், அதனின் ஈர்ப்பில் சுழல்வதும்
உதாரணமாக, நூலம்படைப் பூச்சி எவ்வாறு தான் உணவாக உட்கொள்வது அனைத்தையும், அது நூலாம்படை போல, தனக்குள் மலங்களை வெளியிடும் பொழுது, கூடாக அமைத்து விடுகின்றது.
அதிலே எப்பொருள் சிக்கினாலும், உணவாக எடுத்துக் கொள்கின்றது. சிலவற்றை, தனக்குள் பெற்ற விஷத்தின் சக்தியைப் பாய்ச்சுகின்றது. அப்படிப் பாய்ச்சப்படும் பொழுது, அதற்குள் அணுக்கள் மாற்றமாகி, அந்த நூலாம்படைப் பூச்சி போல கருவாக உருவாகின்றது.
இதைப் போன்றுதான்,
நட்சத்திரம் தன் மலங்களை வீசப்படும் பொழுது,
வீசியது அனைத்தும் அதன் ஈர்ப்பு வட்டத்தில் சுழலும் பொழுது,
தூசிகளும் துகள்களும் அதற்குள் சிக்கி விடுகின்றது.
இது பால்வெளி மண்டலங்களாக மாறுகின்றது.
இருப்பினும், அதனுடைய சுழற்சியின் வேகத்தில்,
மீண்டும் இது தூசிகளாக மாறுகின்றது.
இதன் சுழற்சியில் தனக்குள் உணவாக உட்கொண்டு,
இந்த உணர்வின் தன்மை தனக்குள் உருவாகும் சக்தி பெறுகின்றது.
நட்சத்திரம் இவ்வாறு சுழன்று வளர்ந்து வரப்படும் பொழுது,
பேரண்டத்தில் தனக்குள் ஈர்த்துக் கொண்ட சக்தியை,
சிறுகச் சிறுக தனக்குள் சேர்த்து,
எடை கூடிய நிலைகள் கொண்டு,
பாதரசமாக உருவாகும் சக்தி பெறுகின்றது.
அவ்வாறு சக்தி பெற்று, முழுமை அடைந்ததுதான் “சூரியன்”.
சூரியன் தன் சுழற்சியில் வெளிப்படுத்தும் பொழுது,
தனக்குள் விளைந்த பாதரசத்தின் தன்மை கொண்டு,
தான் கவர்ந்த அனைத்திலும் மோதி,
வெப்பமாக்கி, விஷத்தைப் பிரிக் கின்றது.
ஈர்க்கும் காந்தம் உருவாகின்றது.
பேரண்டத்தில், மற்றதோடு மோதும் பொழுது ஏற்படும் வெப்பமே, சூரியனுக்கு வெளிப்புறமாகத் தோன்றுகின்றது.
அவ்வாறு, வெளிப்படுத்தும் இந்த சத்தின் தன்மைகள், அது பரவி
பல சத்தின் தன்மைகள் ஒன்றுக்கொன்று மோதி,
பல அணுக்களின், பல உணர்வின் சத்துகள்
ஒன்றுடன் ஒன்று கலந்து, அது கலக்கப்படும் பொழுது,
அதற்குள் சேர்த்துக் கொண்ட நிலைகளுக்கொப்ப,
கோள்களாக உருவாகி,
சூரியனின் ஈர்ப்பு வட்டத்தில் சுழலச் செய்கின்றது.
ஆதியில் ஒரு நீரின் சத்து, தனக்குள், தனக்குள் பல அணுக்களின் தன்மை வளர்த்து, எப்படி ஒரு பரமாகி வந்ததோ, அதைப் போன்று, தன் உடலில் ஆற்றல் மிக்க நிலைகள் வளர்ந்து, சூரியனாக வளர்ந்தபின், அது வெளிப்படுத்தும், இந்த அணுக்களின் சக்தி, ஒன்றுடன் ஒன்று இணைந்து, கோள்களாக உருவாகின்றது.
அந்தக் கோள்களின் வளர்ச்சி,
சூரியனின் அமைப்பிலேயே வளரப்படும் பொழுது,
நட்சத்திரங்களாக விளைந்து, விரிவடைகின்றது.
நட்சத்திரங்கள், பிற மண்டலங்களிலிருந்து அது கவர்ந்து, அதனுடைய பால்வெளி மண்டலங்களாக அமைத்து, தூசிகளாக மாற்றுகின்றது. அந்தத் தூசிகளை, சூரியன் தனக்குள் இழுக்கப்படும் பொழுது, இடைமறித்து, தனக்குள் கவர்ந்து கொண்டு, வளர்ச்சி பெற்றது கோள்கள். அப்படி வளர்ச்சி அடைந்ததுதான், நமது பூமியும், செவ்வாய், புதன், வி யாழன் போன்ற மற்ற கோள்களும்.
இப்படி, நமது சூரியன், தனது உணவாக எடுத்து வளரும் நிலைகளில் பிரபஞ்சத்தை உருவாக்கும் முதல் “கடவுள்” ஆகி ன்றது. அதனைத்தான் “நாராயணன்” என்று பெயரை வைத்தனர் மகரிஷிகள்.
இந்த பிரபஞ்சத்தை உருவாக்கும் சக்தி பெறும் பொழுது “சர்வேஸ்வரன்” என்று காரணப் பெயரை வைத்தார்கள்.
“கடவுள் என்ற தன்மையில், தனி த்து எதுவும் வளர்ந்ததில்லை, வ ாழ்வதில்லை, வாழப்போவதும் இல்லை”
எதனின் உணர்வுகள் அதனுள் கவர்ந்ததோ, பாதரசமாக உருவாகின்றது. சூரியனிலிருந்து வெளிப்படும் இந்தப் பாதரசம், மற்றதோடு மோதும்பொழுது, அதிலே வரும் விஷத்தன்மையைப் பிரித்து, தூசி களாக மாறும் பொழுதுதான். (இப்பொழுது நாம் காணும்) ஒன்றுடன் ஒன்று மோதி, மின் அணுக்களாக மாறுகின்றது.
கோள்களாக வரப்படும் பொழுது, நடுமையத்தில் ஏற்படும் வெப்பத்தால், அது கவரும் ஒவ்வொன்றையும், பாறைப் படிவங்களாகவும், மற்ற தாதுப் பொருள்களாகவும் உருப் பெறச் செய்கின்றது.
சுழற்சியின் வேகத்தில், வெப்பம் அதிகமாகி, அது எடுத்துக் கொண்ட பொருள்கள் அனைத்தும், உருகச்செய்து, எல்லா உலோகப் படிவங்களையும் உருகச்செய்து, அமிலமாக்குகின் றது. கோள் நட்சத்திரமாகின்றது.
அவ்வாறு நட்சத்திரம் ஆன பின்,
அதன் சுயேச்சையான ஒளி, எதனுள்ளும் ஊடுருவுகின்றது.
ஆனால், இதற்குள் எதுவும் ஊடுருவுவது கடினமாகின்றது.
இப்படி திரவ சக்தியாகி (அமிலங்களாகி),
நடு மையம் திடப் பொருளாகி விடுவதும் உண்டு. இப்படி,
அதாவது சில பூமிகளில், நடு மையம் வெப்பத்தில் திரவமாகி,
மேலே பாறைகள், நீர் நிலைகள் இருப்பது போன்று.
இந்த அமில சக்திகள், ஆவியாக வெளிப்படுத்திய நிலைகள்,
கதிரியக்கச் சக்தியாக மாறி,வளர்ச்சி பெறும் பொழுது
மறுபடியும் இறுகி, பாதரசத்தை உருவாக்கும் பொழுது
குளிர்ச்சியாகின்றது, சூரியனாகி ன்றது.
சுழற்சியின் மோதலில், சூரியனின் வெளிப்புறமே, வெப்பம் உருவாகின்றது. நாம் வெயிலாகக் காண்பதும் அதுதான். மற்ற கோள்களின் சுழற்சியில், சூரியனின் நிலைகள் தாக்கப்படும் பொழுது, இரவிலே வெளிச்சமாக, மின் அணுக்களாகத் தெரிகின்றது.
சூரியனானபின், அதன் வரிசை அமைப்பில் இது எப்படி கோளாகி, நட்சத்திரமாகி, சூரியனா னதோ,
அதைப் போல கூட்டமைப்பின் தன்மை கொண்டு,
தன் ஈர்ப்பு வட்டத்தில் 27 நட்சத்திரங்களும்,
அதைத் தொடர்ந்து நவக் கோள்களும்,
அந்த கோள்களுக்கு உப கோள்களும் அமைத்து, இப்படி
ஓர் “பிரபஞ்சம்” (சூரிய குடும்பம்) என்ற நிலைகள் அடைகின்றது.
இது எப்படி ஒரு சூரியக் குடும்பமாக விளைந்ததோ, இதைப் போன்று, பேரண்டத்தில் எண்ணிலடங்கா சூரியக் குடும்பங்கள் உருவாகி இருக்கின்றன.
இப்பொழுது நமது சூரிய குடும்பம் ஒரு பிரபஞ்சமாக, 27 நட்சத்திரம், நவ கோள்களும், உப கோள்களும் கொண்டிருப்பதைப் போன்று, 2000 சூரிய குடும்பங்கள், ஒன்றை ஒன்று தழுவிய நிலையில் இயங்கிக் கொண்டு உள்ளன.
இதைப் போன்று, பேரண்டத்தில் எத்தனையோ சூரிய குடும்பங்கள், 2000 சூரியக் கு டும்பங்களாகவும், 1000 சூரியக் குடும்பங்களாகவும், ஒன்றுடன் ஒன்று பிணைந்து, பெரும் சுழற்சி வட்டமாகச் சுழல்கின்றது.
II. புவி இயல்
பூமியின் ஈர்ப்பு வட்டத்துக்குள் துருவப் பகுதியில் ஈர்த்து, கலக்கும் உணர்வின் அணுக்கள், பூமியின் நிலப்பரப்பின் மேலே படுகின்றன. அதே சமயத்தில், சுழற்சியில் ஏற்படும் வெப்பம், நடு மையம் சென்றடைகின்றது.
நடு மையம் கொதிகலனாகி, தன் அருகில் இருப்பது உருகுவதும், மாற்றங்கள் ஏற்படுவதும் ஆகி, உருவாகும் ஆவியின் தன்மை, அடர்த்தி அதிகமாகும் பொழுது, வாயுத்தன்மை வெடித்து (உதாரணமாக ஒரு பாத்திரத்தில் வெப்பம் அதிகரிக்கும் பொழுது வாயுக்கள் உருவாகி, திடீரென்று வெடிப்பது போன்று) மற்ற பக்கம் கலந்து ஊடுருவி, கலவைகள் ஆவியாக மாறுவதும், ஒரு பக்கம் எரிமலையாக வெடித்துக் கக்கி வெளிவருகிறது. பூமியில் நில நடுக்கங்களும் வருகின்றது.
அதே சமயத்தில், பூமியில் வட துருவத்தில், கவரும் ஆற்றல் மிக்க சக்திகள் அனைத்தும் பனிப் பாறைகளாக உறைகின்றது. பனிப் பாறைகளாக உறைந்தாலும், வெப்பத்தின் நிலைகளுக்கு ஒப்ப உருகி, நீராக கடலாக பரவுகின்றது.
இவ்வாறு உருவாகும் கடலுக்குள், எரிமலைகளும் நில நடுக்கங்களும் ஏற்பட்டு. கடலுக்குள்ளும் மாற்றங்கள் ஏற்படுகின்றன. கடலில் மலைகளாக எழுவதும், ஒரு பக்கம் ஆவியின் அடர்த்தியின் காரணமாக, சில பகுதிகள் ஆழப்பகுதியாக செல்லும் நிலையாகின்றது.
வான் வீதியில் நட்சத்திரங்கள் உமிழ்த்தும் உணர்வுகளை, நமது பூமி கவரும் பொழுது, இந்த உணர்வுகள் கலவையாகி, பல விதமான பாறைகள் உருவாகின்றன.
நட்சத்திரங்கள், ஆண் பெண் என்ற நிலைகளில் வரும்பொழுது,
கீழே இருக்கும் வெப்பத்தினால்,
இது இணைந்து மண்ணாகவும், மணலாகவும் மாறுகின்றது.
இவை இரண்டும் இணையும் பொழுதுதான்,
அந்த மண்ணின் கருத்தன்மை கூடி,
தன் இனத்தைச் சேர்த்து, விருத்தி ஆகின்றது.
அதே சமயத்தில், விளைந்த உணர்வின் தன்மை,
சூரியனின் காந்தப்புலனறிவு கவர்ந்து அலைகளாக மாற்றி,
இதனுடைய கருக்கள் மேற்பரப்பில் வீழ்வதும்,
அதனதன் இனத்தைக் கவர்ந்து,
ஒரு சில அடி வித்தியாசத்தில் கூட மண்ணின் தன்மை மாறி,
நிறத்தின் தன்மை மாறி உருவாகின்றது.
அதனதன் கருவிற்குத் தக்கவாறு
அதனதன் இனதைக் கவர்ந்து மணலாக விளைகின்றது.
உதாரணமாக செம்மண்ணாக இருந்தால்,
வெங்கச் செங்கலாக மாறுகின்றது.
ஒத்த உணர்வின் நட்சத்திரத்தின் தன்மை, அதிகமாக அதற்குள் கலந்திருந்தால், மின்னல்கள் வரப்படும் பொழுது, ஈர்க்கும் ஆற்றல் பெற்று, கருவாகி, உருவாகி, அந்த நட்சத்திரத்தின் தன்மை எதுவோ, அதன் கலராக இதற்குள் உருவாகி, வைரக் கல்லாக மாறுகின்றது. தாவர இனங்களுக்கு சத்து கொடுக்காது, வறண்ட நிலைகளில் இருக்கும்.
கடல் அலைகளிலிருந்து வெளிப்படும் ஆவியின் தன்மை, ஈர்க்கப்பட்டு, கடல் வாழ் பாறைகளில், பல சத்தின் தன்மைகள் ஒன்றுடன் ஒன்று மோதி, பல உணர்வின் சக்திகளாகி, ஒரு அழுக்கைப் போன்று தேங்குகின்றது.
அது சீக்கிரம் கரைகின்றது. அதன் சக்திகள் மற்றதோடு கலந்து, ஒரு விஷத்தன்மை வாய்ந்த செடி, அதாவது பாசம் போன்று அடர்த்தியின் நிலைகளில் விளைகின்றது.
இவ்வாறு விளைந்த ஒவ்வொன்றும் அணுக் கருக்களாக உருமாறி, பல செடி கொடிகளாக உருவாகி, அதன் வளர்ச்சியின் தன்மை பெறுகின்றன.
2. பிரபஞ்சத்தில் உயிரணு உருப்பெறுதல்
இப்படி வளர்ச்சி அடையும் தன்மை வரப்படும் பொழுது தான்,
வான் வீதியில் ஆண்பால் என்ற நட்சத்திரமும்,
பெண்பால் என்ற நட்சத்திரமும்
உமிழ்த்தும் உணர்வின் தன்மை,
சூரியனால் வெப்ப காந்தங்களால் கவரப்பட்டு
அணுக்களாக பரவி வருகின்றது.
இவ்வாறு, 27 நட்சத்திரங்களிலிரு ந்து வரக்கூடிய துகள்கள், மற்றது எதிலேயும் மோதாதபடி, வியாழன் கோளின் ஈர்ப்புக்குள் வரப்படும் பொழுது,
உதாரணமாக,
கார்த்திகை நட்சத்திரத்தின் துகள் முதலில் வந்து விடுகிறது என்றால்,
அதன்பின் ரேவதி நட்சத்திரத்தின் துகள் பிண்ணனியில் வரப்படும் பொழுது,
வியாழன்கோள் ஈர்ப்பு வட்டத்திற்குள்மோதுகின்றது.
மோதும்பொழுது மின்னலாக மாறுவதில்லை,
துடிப்பின் தன்மை பெறுகின்றது.
இப்படி, துடிப்பின் தன்மை வந்ததினால், பெண்பால், ஆண்பால் என்ற இந்த நட்சத்திரங்களின் உணர்வலைகள் ஒன்றாகச் சேர்ந்து “உயிரணுவாக” மாறுகின் றது.
வியாழன் கோள், எவ்வாறு இந்தப் பிரபஞ்சத்திற்குள்,
இணைக்கும் பாலமாக,
பல கோள்களை உருவாக்குவதற்கோ,
கோள்களை வளர்ப்பதற்கோ, மாற்றி அமைப்பதற்கோ,
குருவாக இருப்பது போன்று,
நம் உயிரின் தன்மை, வியாழன் கோளிலிருந்து உருவாக்கப்பட்டு, உயிரணுக்கள் அதிலிருந்து வெளிப்படுகின்றன.
இவ்வாறு, பல நட்சத்திரங்கள் ஆண், பெண் என்ற நிலைகளில் ஒவ்வொன்றின் கலவைகள் கொண்டு, பல நட்சத்திரங்களின் உயிரணுக்கள் உருவாகின்றன.
ரேவதி நட்சத்திரத்தின் தன்மை அதிகமாக இருப்பின், அது பெண்பாலாக உருவாக்கும் உயிரணுவாக உருவாகின்றது. கார்த்திகை நட்சத்திரத்தின் உணர்வுகள் அதிகமானால், ஆண்பாலா க உருவாக்கும் அணுவாக உருவாகின்றது.
மகரிஷிகளின் அருள் வட்டத்தில், நாம் அனைவரும் இணைந்து, மகிழ்ந்து மகிழ்ந்து வாழ்வோம்.
III. தாவர இயல்
நிலவாழ் தாவர இன வளர்ச்சி
வான்வீதியில் உருப் பெற்ற உயிரணுக்கள், பூமியின் சுழற்சியில் கவரப்பட்டு, பூமியின் ஈர்ப்பிற்குள் வரும்பொழுது, இந்தக் கடல் வாழ்நிலைகளில் உருவாகும், தாவர இனங்களில் பட்டவுடனே, தனது துடிப்பின் ஈர்ப்பால், அதன் சத்தைக் கவர்ந்து, மீனினங்களாக உருவாகின்றது.
அது எந்தெந்தத் தாவர இனங்களை உணவாக உட்கொண்டதோ, அதற்குத் தகுந்த ரூபம் பெறுகின்றது. தான் கவர்ந்த உணர்வுகள், அந்தத் தாவர இனங்கள், எந்தெந்த நிறங்களில் இருக்கின்றதோ, இதைப் போல இந்த மீனினங்களில் வண்ணங்கள் மாறி, மாறி வருகின்றது.
சனிக் கோள், எவ்வாறு தனக்குள் கவர்ந்து கொண்ட உணர்வுகளை உறை பனியாக்குகின்றதோ, இதைப் போல, சனிக்கோளின் சுழற்சி, இதன் மேல் (கடலில்) வரப்படும்பொழுது, சூரியனில் வெளிப்படும் ஆவியின் தன்மையும் கலந்து, சுழற்புயலாக வானிலே இழுக்கப்பட்டு, மேகக் கூட்டங்களாக மாறி, மழையாகப் பெய்கின்றது.
அப்பொழுது, இந்த கடலுக்குள் ஏற்பட்ட மற்ற தாவர இன வித்துகளும், மழை நீருடன் கலந்து, நிலப்பகுதியில் வாழும் தாவர இனங்களாக வளர்ச்சி பெறுகின்றது.
நிலப்பரப்பிலும், ஒன்றுடன் ஒன்று கலந்து,
புதுப் புது தாவர இனங்களாக,
கடல் வாழ் நிலைகளைப் போலவே வளர்ச்சி பெறுகின்றது.
நமது பூமியில் உள்ள தாவர இனசத்துக்கெல்லாம், முதன்முதலி ல் உருவான “காளான்” தான் “குரு”.
சூரியன் கவர்ந்து அலைகளாக மாற்றிய, மற்ற பாறைகளின் சத்துடன்,
இந்த காளானிலிருந்து வெளிப்படும் சத்து,
சூரியனின் காந்தப் புலனறிவால் கவர்ந்து
அலைகளாக மாறும்பொழுது, ஒன்றுடன் ஒன்று கலந்து,
புல், பூண்டு, மற்ற தாவர இனச் செடிகளாக மாறுகின்றது.
செடி கொடிகளிலிருந்து வெளிப்படும் சத்தின் தன்மையை, சூரியனின் காந்தப் புலனறிவு கவர்ந்து, இப்புவியில் அலைகளாகப் படர்கின்றது.
செடியில் விளைந்த வித்து, நிலத்தில் படும்போது,
அந்த வித்து புவி ஈர்ப்பின் துணை கொண்டு,
தாய்ச் செடியிலிருந்து வெளிப்பட்ட உணர்வை,
தான் நுகர்ந்து, செடிகளாக விளைகின்றது.
சூரியனில் உருவாகும் வெப்பம் காந்தம், விஷம் இந்த மூன்றும் சேர்ந்து, புவியின் ஈர்ப்பில் படரும் பொழுது, ஒரு செடியிலிருந்து வெளிப்படக்கூடிய, அந்த செடியின் சுவையின் சத்தை, காந்தம் கவர்ந்து அலைகளாக மாற்றப்படும் பொழுது “சீதாலட் சுமி” என்ற காரணப் பெயரிடுகின்றனர்.
சூரியன், அந்த செடியின் சத்தைக் கவர்ந்து, அதில் விளைந்த வித்திற்கு உணவாகக் கொடுத்து, வளர்க்கச் செய்கின்றது. அதே சமயத்தில்,
ஒரு ரோஜாச் செடியிலிருந்து வெளிப்படும் பூவின் மணமும்,
ஒரு மாமரத்திலிருந்து வரக்கூடிய இலையின் சத்தையும்,
சூரியன் கவர்ந்து அலைகளாக படரச் செய்கின்றது.
இன்னொரு பக்கம், ஒரு விஷச் செடியின் உணர்வுகள் அதிகமாகி,
அது உமிழ்த்தப்படும் போது, விஷத்தின் தன்மை அதிகரிக்கின்றது.
மாமரத்தில் இருந்து வெளிப்பட்ட
துவர்ப்பான உணர்வுகள் நகர்ந்து ஓடுகின்றன.
இதைக் கண்டு, ரோஜாப் பூவிலிருந்து வெளிப்பட்ட
துவர்ப்பான உணர்வுகள் நகர்ந்து ஓடுகின்றன.
ஓடும் பாதையில், இன்னொரு
விஷச் செடியிலிருந்து வெளிப்படும்
உணர்வுகளோடு மோதும் பொழுது சுழற்சியாகின்றது.
இந்த நான்கும் ஒன்றாக இணைகின்றன.
அவ்வாறு இணைந்து, “அரளிச் செடியாக” விளைகின்ற வித்தாக உருப் பெறுகின்றது. இதைப் போல, பலவிதமான, எண்ணிலடங்காத செடி கொடிகள், மரங்கள் உருவாகின்றது.
IV. உயிரியல்
பிரபஞ்சத்தில் தோன்றிய உயிரணு, நம் பூமியினால் ஈர்க்கப்பட்டு, ஒரு செடியிலிருந்து வெளிப்படும் சத்துக்குள் பட்டவுடன், அந்த செடியின் சத்தை உயிரணு தனக்குள் கவர்ந்து, கருவாகி அந்த சத்தின் தன்மை கொண்டு, ஒரு புழுவாக உருவாகின்றது.
எந்தச் செடியின் சத்தை உண்டு வளர்ந்ததோ, அந்தச் செடியின் மணத்தை நுகர்ந்து, நகர்ந்து செல்லுகின்றது. கண்ணால் பார்க்க முடிவதில்லை. நகர்ந்து செல்லும் பொழுது, உடலில் ஏற்படும் உராய்வினால் வேதனையான உணர்வுகளைச் சுவாசிக்க நேருகின்றது.
பசியின் உந்தல்கள் அதிகமாக, எந்த இலையைப் புசித்துப் பழகியதோ, அந்த மணத்தை நாடி, “பார்க்கவேண்டும்” என்ற உணர்வை உந்துகின்றது.
அவ்வாறு, சுவாசித்த உணர்வின் சத்துக்கள், புழுவின் உடலில் உமிழ்நீராக மாறுகின்றது, உடலில் சேருகின் றது,
பார்க்க வேண்டும் என்ற உணர்வின் உந்தலுக்கு ஒப்ப, புது உணர்வின் ஆற்றல்கள் கலந்து வளர்கின்றது. அவ்வாறு வளர்ந்த நிலை, அந்த புழுவின் உயிராத்மாவாக வளர்ச்சியாகின்றது.
புழு மடிந்த பின், புழுவின் உயிராத்மா இந்த பரமாத்மாவில் கலக்கின்றது. பராமாத்மாவில் கலக்கப்படும் பொழுது,
இந்த உயிரில் எந்த உணர்வின் சத்தை,
மணத்தை எடுத்துக் கொண்டதோ,
அந்த மணத்தின் தன்மைக்கு ஒப்ப
இன்னோரு தாவர சத்து வெளிப்படும் பொழுது,
அதன் மேல் பட்டு,
அந்த உணர்வின் சத்தை தனக்குள் எடுத்து
புது உடல் பெற்று வளர்கின்றது.
அது சமயம், கண் உள்ள புழுவாகத் தோன்றுகின்றது.
முன் சரீரத்தில், தன் உணவைப் பார்க்க வேண்டும் என்ற உணர்வின் எண்ணங்களுக்கொப்ப, உயிரில் இணைந்து உணர்வின் கருவாகி, ”கருவிழியும்”, உற்று ப் பார்த்து, உணர்வின் அலைகளைக் கவரும், கண் உள்ள புழுவாக உருவாகின்றது.
மரம், செடி, கொடிகள் அனைத்தும், தான் இருந்த நிலைகளிலேயே தன் இனத்தின் சக்தியைப் பெறுகின்றது. மற்ற கோள்களோ, சூரியனோ தான் போகும் பாதையில் தனக்குக் கிடைப்பதை, எடுத்துக் கொள்கின்றது.
ஆனால், தேகத்தைக் கொண்ட உயிரணுவோ, தனக்குள் எண்ணி ஏங்கி, தான் விரும்பியதைத் தேடிச் சென்று எடுக்கின்றது. போகும் பாதையில், நுகரும் உணரச்சிகளுக்கொப்ப எண்ணங்கள் தோன்றும் பொழுது, உயிரனங்களில், அது எடுத்துக் கொண்ட உணர்வுக்கொப்ப வளர்ச்சி பெறுகின்றது.
நமது பூமி வான் வீதியில், ஓர் பரமாக இருந்து, விண்ணிலே சுழலும்பொழுது, போகும் பாதையில் அது துருவப் பகுதியில் கவரும் உணர்வின் அலைகளை “பரமாத்மாவாக” மாற்றும் பொழுது, பல விதமான செடி கொடிகளை அதன் மேற்பரப்பில் வளர்த்துக் கொள்கின்றது.
அதைப் போல உயிர், உடலுக்குள் பல உணர்வின் குணங்களை வளர்க்கின்றது. அதிலே எந்த குணங்களை வளர்க்கின்றதோ, அந்த உணர்வுக்கொப்ப, உடலை மாற்றிச் செயல்படுத்துகின்றது.
கண் உள்ள புழுவாகி, பார்க்கக்கூடிய திறன் ஏற்பட்டபின்,
ஒரு செடியின் சத்து சாப்பிட்டுத் தீர்ந்த பின்,
அடுத்த செடியைப் பார்க்கும் பொழுது,
சீக்கிரம் தாவிச் சென்று சாப்பிட வேண்டும்
என்ற வேட்கையினால், உந்தப்பட்டு,
அந்த உணர்வுக்கொப்ப உமிழ்நீர் உருவாகி,
உணர்வின் தன்மை உயிரிலே இணைந்தபின்,
அடுத்த சரீரம் “விட்டில் பூச்சியாக” பிறக்கின்றது.
அதேபோல், ஒரு கண்ணுள்ள புழு, பாறைகளின் வெப்பத்தின் தன்மை தாங்காது, நிழலைத் தேடி தன்னைப் பாதுகாத்துக் கொள்ளும் எண்ணம் கொண்டு சுவாசிக்கும் பொழுது, தனக்குள் எதை எண்ணி ஏங்கியதோ, அந்த உணர்வின் சத்து உடலுக்குள் விளைந்து, “ஆமையாக” மேல் ஓடு கடினமாக உடல் பெறும் தன்மை பெறுகின்றது.
பரிணாம வளர்ச்சியில் ஒன்றை ஒன்று விழுங்கி, ஒன்றுக்குள் ஒன்று சென்று, ஒன்றின் சத்தைக் கைப்பற்றி, தனக்குள் வளர்ச்சி பெறுகின்றது.
அதாவது தாவர இனம் “சைவம்”, உயிரணு நுகர்ந்து உடல் பெறும் பொழுது, தசைகளாகும் பொழுது நகர்ந்து செல்லும் நிலை பெறுகின்றது, “அசைவம்”. சாந்த குணத்தின் சத்தை நுகர்ந்து உடல் பெற்ற அணுக்களில், விஷச் செடியின் உணர்வுகள் படும் பொழுது, சாந்த அணுக்களைக் கொன்று புசிக்கத் தொடங்கி விடுகின்றது.
உதாரணமாக,
ஈ, பல்லியாகின்றது:
பல்லி, வண்டாகின்றது;
வண்டு அடுத்த ஆன்மா தவளையாகின்றது;
தவளை விஷத்தன்மையான பாம்பினங்களுக்கு இரையாகும்போது
தவளை, பாம்பாக பிறக்கின்றது;
பாம்பு, பருந்தாக உருப்பெறும் தன்மை பெறுகின்றது
தாவர இனங்களை உணவாக உட்கொண்டு, சாந்த குணம் பெற்ற மானின் உயிரான்மா, புலிக்கு இரையாகும் பொழுது, புலியாக உருப் பெறுகின்றது.
மானின் தசைகள், புலியின் உடலில் அணுத்திசுக்களாக விளைந்து, புலியின் உயிராத்மாவில் சேர்க்கப்படும் பொழுது, புலி இறந்தபின், புலியின் உயிராத்மா மணங்கள் மாறி, ஞானத்தைக் கொண்ட, சாந்தத்தை தழுவிய நிலைகள் கொண்ட ஓர் உடலைப் பெறுகின்றது.
இவ்வாறு பலகோடி உடல்களில்
கண்கள் கொண்டு, கூர்மையாக
தன்னைக் காட்டிலும் வலுவான உணர்வுகளை நுகர்ந்து,
இந்த உடலைப் பாதுகாக்கும் உணர்வுகள் விளைந்து,
தீமையான உணர்வுகளைப் பிளந்து,
நல்ல மணத்தை நுகர்ந்திடும் வலுப்பெற்று,
பன்றியாக உருப் பெறுகின்றது.
“வராகன்”, வலிமை மிக்க சக்தி.
பன்றியான பின், அதன் வாழ்நாள் முழுவதுக்கும் சாக்கடைக்குள் இருக்கும் நாற்றத்தைப் பிளந்துவிட்டு, தீ மைகளைப் பிளந்திடும் அணுக்கள் விளைந்த பின், பன்றியின் உடலை விட்டு வந்த உயிர், மனிதனாக உருவாக்குகின்றது.
வான இயல்,
புவி இயல்,
தாவர இயல்,
உயிர் இயல் என்ற நிலைகளில்
“தன்னைத் தான் அறிதல்”
இயற்கை எப்படி வளர்ந்தது, நாம் எப்படி பரிணாம வளர்ச்சியில் இப்பொழுது மனிதனாக உருப் பெற்றோம் என்று, நம் குருகாட்டிய நிலைகள் கொண்டு, மனிதனாகத் தோன்றிய நாம் முழு முதல் கடவுள்,
இந்த பாக்கியத்தை நழுவ விடாதபடி, இந்த மனிதனுக்கு அடுத்த நிலை, “பிறவி இல்லா நிலை” என்ற நிலையை நாம் அனைவரும் அடைவோம், அழியா ஒளிச் சரீரம் பெறுவோம்.
துருவ நட்சத்திரத்தின் பேரருளும் நாம் அனைவரும் பெறுவோம். உலக மக்கள் அனைவரும், துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற தவம் இருப்போம்.
(பக்கம் 56-59)
நம் கண்ணுக்குப் புலப்படாத உணர்வினை, நாம் சுவாசிக்கின்றோம்.
உயிரிலே அந்த உணர்வுகள் படுகின்றது.
இந்த உணர்ச்சிகள் உடல் முழுவதும் படருகின்றது.
எண்ணம், சொல், செயல் என்ற நிலைகளில் இயங்குகின்றது.
இருப்பினும், இவை உமிழ்நீராக மாறி, நம் உணவுடன் கலந்து, நாம் எத்தகைய குணத்தை நுகர்ந்தோமோ, அந்த குணத்திற்கொப்ப உமிழ்நீராக மாறுகின்றது.
மகிழ்ச்சி பெறும் குணங்களாக இருப்பின், அந்த உமிழ்நீர் உணவாக உட்கொள்ளும் உணவில் கலக்கப்படும்பொழுது, ஒரு நல்ல சத்துள்ள இரத்தமாக மாற்றுகின்றது. அந்த மகிழ்ச்சியூட்டும் உணர்வின் அணுக்களாக, நம் இரத்தத்தில் உருவாகின்றது.
அப்பொழுது, அந்த இரத்தத்தில் கலந்துள்ள அணுக்கள், நம் உடல் முழுவதும் படரப்படும்பொழுது, எல்லா உறுப்புக்களுக்கும் போய்ச் சேருகின்றது. எல்லா உறுப்புக்களை உருவாக்கிய அணுக்களுக்கும் இந்த இரத்தத்தின் வழிதான் உணவு கிடைக்கின்றது.
அந்த உணவைச் சத்தாக தன் நிலைகளில் இயக்கப்பட்டு, அதன் மலத்தை, அந்த உறுப்பாக மாற்றிவிடுகின்றது. இவ்வாறு நம் உடலிலுள்ள உறுப்புகளில், நாம் புழுவிலிருந்து மனிதனாக மாறும் வரையிலும், எத்தனையோ வகை உறுப்புகளாக மாறி, மாறி இன்று, மனிதனுடைய உடல் உறுப்புக்கள் வித்தியாசமாக இருக்கும் தன்மை பெற்று, உருவாகி உள்ளது.
அதாவது, தீமைகளை நீக்கி, நல்லவைகளை உருவாக்கும் இந்த உறுப்புக்களாக அமைந்துள்ளது இந்த மனித உடலில், நாம் காலையிலிருந்து இரவு வரையிலும் எடுக்கும் எல்லா உணர்வுகளும் நமக்குள் உமிழ்நீராகச் சேறுகின்றது.
உதாரணமாக, இருவர் சண்டையிடுவதையோ, அல்லது வெறுப்பாகப் பேசுவதையோ, அதாவது அவர்கள் வாழ்க்கையில் பட்ட கஷ்டங்களைச் சொல்லப்படும் பொழுது, கேட்டு நுகர்ந்து அறிகின்றோம்.
அவர்களுக்கு எப்படி கஷ்டங்கள் ஆனதோ,
அதை நுகரப்படும் பொழுது, அதே உணர்வு உமிழ்நீராக மாறி,
நாம் ஜீரணிக்கும் உறுப்புக்களின் அணுக்களில் விஷத்தன்மைகள் கலந்து விட்டால், நம் குடலை இயக்கும் அந்த அணுக்கள், பலவீனமடைந்து விடுகின்றது.
அப்படி பலவீனமடையப்படும்போது, நாம் சத்தான ஆகாரத்தை உணவாக உட்கொண்டோமென்றால், அதை ஜீரணிக்கும் சக்தி இழந்து விடுகின்றது.
ஏனெனில், அணுக்களின் இயக்கம் தணிந்து விடுகின்றது. பின், சிறிது நேரம் மனிதனின் உடலில் உள்ள உஷ்ணத்தினால் அது ஆவியாக மாறி, புளிப்புத் தன்மை அடைந்து, எதிர்த்து நிற்கும் சக்தி வருகின்றது.
இப்படி புளித்த நிலைகள் அதிகரித்தால், நம் உடல் முழுவதற்கும் இந்த புளித்த விஷத்தின் தன்மை படரச் செய்து, நமக்குள் கை கால் வலி, மேல் வலி என்ற நிலைகளும் சோர்வடையும் தன்மையும் வருகின்றது. நாம் தவறு செய்யவில்லை. பிறருடைய உணர்வுகளை நாம் நுகரப்படும் போது, இப்படி நடந்து விடுகின்றது.
இதைப் போன்று, நமது உடலிலே காலையிலிருந்து இரவு வரையிலும் நல்லவைகள் எத்தனை செய்தாலும், பிறருடைய கஷ்டங்களைக் கேட்டு, வேதனையைப் பார்த்து நாம் நுகர்ந்து அறிந்துதான், அவர்களுக்கு உதவி செய்கிறோம்.
நம் கையிலே அழுக்கை ஏற்படுத்தும் பொருள்களுடன் வேலை செய்தால், கையைக் கழுவி சுத்தம் செய்கின்றோம்.
உடலிலே அழுக்குப்பட்டால் குளித்து விடுகின்றோம்.
உடையிலே அழுக்குப்பட்டால் துவைத்து விடுகின்றோம்.
தங்கத்திலே, திரவகத்தை ஊற்றி, செம்பையும், பித்தளையையும் ஆவியாக்கி, சுத்தப்படுத்துகின்றோம். இவைகள் புறத்தால் செய்யும் வேலைகள்.
ஆனால், நமது கண் அந்த வேதனைப்படுவோரை, கூர்மையாக உற்றுப்பார்க்கின்றது. கருவிழி ருக்மணி, வேதனைப்படும் மனிதனை “ஊழ்வினை” என்ற வித்தாக, நம் எலும்பிற்குள் இருக்கும் ஊனிற்குள் பதிவாக்கி விடுகின்றது.
வேதனைப்படும் சொல்லும், உணர்வும், உணர்வலைகளாக வெளி வருவதை, கண்ணின் காந்த புலனறிவு கவர்ந்து, நமது உடலின் ஈர்ப்புக்குள் நமது ஆன்மாவாக மாற்றுகின்றது.
நமது ஆன்மாவாக ஆனபின், பதிவான இதே உணர்வுகள் உயிர் வழி நுகர்ந்து, உயிரிலே படும்பொழுது, அதே உணர்ச்சிகள் வருகின்றது.
V. இராமாயணம்
ஞானிகள் உயிரின் இயக்கத்தை “ஈசன்” என்றும்,
இயக்கத்தால் ஏற்படும் வெப்பத்தை “விஷ்ணு” என்றும்,
ஈர்க்கும் காந்தத்தை “இலட்சுமி” என்றும்
காரணப்பெயரை வைக்கின்றனர்.
காந்தம் இழுத்து, உயிரிலே மோதப்படும் பொழுது அந்த சப்தம் வருகின்றது. அதைத்தான் “சங்கு”என்றும், அந்த உணர்ச்சிகள் நம் எண்ணம், சொல், செயலாக, இயக்கப்படும் பொழுது “சக்கரம்” என்றும் உணர்த்தினர்.
நமது உயிர், நமது உடலுக்குள் எவ்வழியில் இந்த உணர்வுகளை இயக்குகின்றது என்பதனை அறிவதற்குத்தான்,
நம் உயிரின் இயக்கத்தை உருவம் அமைத்து,
அருவ நிலைகளில் அது எப்படி இயங்குகின்றது என்பதனையும்,
நாம் நம் உயிரை அறிந்து,
தீமைகளை நீக்கி எவ்வாறு செயல்பட வேண்டும்
என்று உணர்த்துகின்றனர் ஞானிகள்.
(பக்கம் 64-67)
இராமாயணத்தில் தெளிவாக்குகின்றார்கள். நாம் புழுவிலிருந்து மனிதனாக வரப்படும்பொழுது,நமது உயிர் தசரதச் சக்கரவர்த்தி. பத்தாவது நிலையை அடையக் கூடிய தருணம் பெற்றது.
உயிர் இந்த உடலை ஆட்சி புரிந்தது. இருப்பினும், இந்த வாழ்க்கையில் வேதனைப்படும் உணர்வை, நாம் பாசத்தால் அறியப்படும் பொழுது, “வசிஸ்டர்”. நாம் கவர்ந்து கொண்ட அந்த சக்தி உயிரிலே பட்டு, நமக்குள் பிரம்மம் ஆகின்றது. பிரம்ம குருவின் மனைவி, அருந்ததி.
ஏனெனில், எத்தகைய வேதனையின் உணர்வு நமக்குள் அணுவாகின்றதோ,
அந்த வேதனையை உருவாக்கும் குருவாகின்றது.
குருவாக்கப்படும் பொழுது,
அந்த வேதனயின் உணர்ச்சியைத் தூண்டுவதுதான் அருந்ததி.
அந்த அணுவுடன் இணைந்து வாழும் சக்தி பெற்றது.
தசரதச் சக்கரவர்த்திக்கு வசிஸ்டர் பிரம்மகுரு. இப்படி உருவாகி, அணுவின் தன்மை உடலானால் இக்ஷ்வாகு வம்சம். எண்ணங்களால் உருவாக்கப்பட்ட, மனித உடலின் இயக்கங்கள் எவ்வாறு? என்று காட்டப்படுகின்றது. அணுவின் மலம் உடலாகும்போது, புலஸ்தியர் வம்சம்.
வேதனையிலிருந்து மீட்க வேண்டும் என்று இச்சைப்படுகின்றது. அந்த உணர்வின் தன்மை தனக்குள் ஆகும்போது, பிரம்ம குருவாகின்றது. அந்த பிரம்ம குருவானபின் அருந்ததி.
அந்த சக்தி அது போல இணைந்து, அந்த வேதனை உணர்வை இயக்குகின்றது.
எண்ணங்களால் இயக்கப்பட்டு, மனித உடலின் இயக்கங்களில்,
பத்தாவது நிலையை அடையும் உயிரின் தன்மை,
எவ்வாறு இயங்குகின்றது? என்பதைத் தெளிவாக்குகின்றனர்.
அதே சமயத்தில், இந்த உணர்வுகள் அணுவின் தன்மை அடைந்து, அதன் மலம் உடலாகின்றது புலஸ்தியர் வம்சம். அந்த வேதனைப்படும் உணர்வுகளை நமக்குள் செயலாக்கி, பிறரை வேதனைப்படுத்தும் செயலாகின்றது.
பிறரை மட்டும் அல்ல. அந்த வேதனை என்ற புலஸ்தியர் வம்சத்தைச் சேர்ந்த அணுக்கள்., நமக்குள் இருக்கும் நல்ல அணுக்களைக் கொன்றுவிட நேருகின்றது.
நல்ல மனதோடு, அவர்கள் நலமாக வேண்டுமென்று, நாம் கண் கொண்டு உற்றுப் பார்த்து, உணர்வின் தன்மை அறிந்து, நாம் அவருக்கு உதவி செய்தாலும், அது நம் உடலுக்குள் வந்தபின் நம் நல்ல குணங்களை எப்படிக் கொல்கின்றது என்பதைத்தான் “அரக்கன்” என்றும் “தசப்பிரியன்” என்றும் காட்டுகின்றனர்.
அப்படி, உடலின் நிலைகள் ஆனபின், இந்த உடலை வளர்க்க மற்றவைகளைக் கொன்று, எப்படி உணவாக உட்கொள்ளும்? என்பதனைத் தெளிவாகக் கூறுகின்றது இராமாயணம்.
இராமனின் தந்தை தசரதச் சக்ரவர்த்தி என்றுதான், இன்றைய நிலைகளில் கூறுவர். எவ்வகையில் அன்று ஞானிகள் நமக்கு உணர்த்தினார்களோ, அதை மாற்றி மெய்ஞானத்தின் மூலக்கூறை மாற்றி அஞ்ஞானத்தின் நிலைகளே இன்று உருவாகியுள்ளது.
எண்ணத்தின் உணர்வால் உருவானதுதான், பத்தாவது நிலையை அடையக்கூடிய உயிர். தீமைகளை நீக்கும் உணர்வின் தன்மை பெற்று, உணர்வினை உயிரைப் போன்று ஒளியாக்கும் நிலை பெற்றதுதான், மனித உடல்.
புலஸ்தியர் வம்சத்தில் வந்த இராவணனோ, உடலை நேசிக்கின்றான். சிவத்தை வழிபட்டு வல்லமை பெற்று, எதையும் அடக்கும் சக்தி பெற்றதைக் காண்பிக்கின்றனர்.
இக்ஷ்வாகு வம்சத்தில் பிறந்த தசரதனோ, பத்தாவது நிலை அடையும் தருணம் பெற்று, விஷ்ணுவை நேசிக்கின்றான் என்று காட்டுகின்றனர்.
அதே சமயத்தில், ஆசைப்பட்டு நுகரப்படும் உணர்வுகள் இந்த உடலுக்குள் வலிமை கூட்டி, அதன் இயக்கச் சக்தியாக நம்மை எப்படி இயக்குகின்றது?.
உணர்வுகள் உணர்ச்சியைத் தூண்டுவதையும்,
எண்ணத்தின் உணர்ச்சிகள் உடலை இயக்குவதும்,
அதன் செயலாக அமைகிறது என்பதனையும், எண்ணத்தின் அடிப்படையில் இராமாயணத்தைத் தெளிவாக்குகின்றனர்.
நம் உடலுக்குள், இந்த வேதனை உணர்ச்சிகள் வேகம் அதிகரிக்கும் பொழுது, தசரதன் பத்தாவது நிலையை அடையும் பருவம், மனப்போர் வருகின்றது. நல் உணர்வின் அணுக்களை, இயக்கும் எண்ணம் இல்லாது போய் விடுகின்றது.
தசரதச் சக்ரவர்த்தி பத்தாவது நிலையை அடையும் தருணத்தை இழந்து, மீண்டும் பிறவிக்கு வருகின்றதைக் காண்பிக்கின்றனர்.
நாம் ஞானிகள் கொடுத்த உணர்வினை விடுத்து,
இந்த உடலின் இச்சையைக் கூட்டி,
அதன் வழி வரப்படும் பொழுது,
ஞானிகள் கொடுத்த உண்மையின் உணர்வுகளை
அறியமுடியாது போய்விடுகின்றது.
நம் உடலின் இச்சையே வருகின்றது.
ஆகவே, நாம் இந்த உடலுக்காக வாழாமல், ஞானிகள் நமக்கு உணர்த்திய அந்த அருள் வழிப்படி, உயிருக்காக வாழ்ந்து, உயிரோடு ஒன்றி, துருவ நட்சத்திரத்திலிருந்து வரும் பேரருள் பேரொளி உணர்வுகளைச் சேர்த்து, ஒளியின் சரீரம் பெறுவோம். அந்த மகரிஷிகள் சென்றடைந்த எல்லையை அடைவோம். எமது அருளாசிகள்.
எண்ணத்தால் நாம் உருவானாலும், ஒருவர் வேதனைப்படுகின்றார் என்று கண்ணுற்றுப் பார்க்கும் பொழுது, அவர் மேல் பாசம் கொண்டு, அவரைக் காக்கவேண்டும் என்று எண்ணுகின்றோம்.
அவரிடமிருந்து வெளிப்படும் வேதனையான உணர்வினை, நம் கண்ணின் கருவிழி பதிவாக்கி, கவர்ந்து, உயிரிலே மோதப்படும் பொழுது, “கண்ணன் குருக்ஷேத்திரப் போரை” வழி நடத்துகின்றான்.
நம் உடலுக்குள் இருக்கும் அனைத்திற்கும் உயிர்தான் குரு. கண்கள் அந்த வேதனைப்படும் உணர்வுகளை நுகரப்படும் பொழுது, அந்த உணர்ச்சிகள் நம் உடல் முழுவதற்கும் படர்ந்தவுடன், நடுக்கமாகின்றது.
அவரைக் காக்கவேண்டும் என்ற எண்ணங்கள் வருகின்றதே தவிர,
நம்மைக் காக்கும் நிலை இழக்கப்படுகின்றது.
அதைத்தான் கண்ணன் குருக்ஷேத்திரப் போரை நடத்துகின்றான் என்றும், கண்ணனின் சகோதரி “திரௌபதை” என்றும் பெயர் வைக்கின்றனர். கண்கள் புறத்தால் பார்க்கச் செய்கின்றது. உணர்வைக் கவர்கின்றது.
உயிரிலே பட்டபின், அந்த உணர்வை நமக்குள் உணர்த்துகின்றது.
அதைத்தான் கண்ணனின் சகோதரி என்று,
அதாவது உயிரால் உணரவில்லை என்றால்
நாம் தெரிய முடியாது என்று உணர்த்துகின்றனர்.
சூரியனிலிருந்து வரும் “வெப்பம், காந்தம், விஷம்”, வேதனை உணர்வைக் கவரப்படும் பொழுது, “அர்ச்சுனன்”. அந்த உணர்ச்சிகளை இயக்கப்படும் பொழுது, “நகுலன்”.இணைந்த காந்தங்கள் சேர்க்கப்படும் பொழுது, “சகாதேவன்” என்ற நிலைகள் ஆகின்றது.
வேதனை என்ற உணர்வுகள் உயிரிலே பட்டபின், குருக்ஷேத்திரப்போர் நடக்கின்றது. அந்த வேதனை என்ற உணர்வுகள் உடலுக்குள் பாய்ந்தபின், துரிதமாக அதனுடைய குறிக்கோளின் தன்மை கொண்டு செயல்படும் பொழுது,
குறிவைத்துத் தாக்குவதில் வல்லவன் அர்ச்சுனன்.
அதனுடன் இணைந்து வரக்கூடிய, வேதனை என்ற உணர்வு நகுலன்.
இதனுடன் சேர்த்துக் கொண்ட காந்தம் இணைந்து, சகாதேவன்.
நம் உடலுக்குள் சென்று, உடலுக்குள் இருக்கக்கூடிய அணுக்களோடு இணைந்துவிட்டால் “பீமன்”,அது வலுவாகின்றது. இவ்வாறு, அந்த வேதனைப்பட்ட உணர்வின் தன்மையை நமக்குள் அதிகமாகச் சேர்த்துக் கொண்டு, “பீமன்” என்றாலும், நமக்குள் நல்ல குணங்களை எல்லாம் இயக்கவிடாது தடைப்படுத்தி, அதன் நிலைக்கே மாற்றிவிடுகின்றது.
எல்லாவற்றிற்கும், ““திரௌபதை” இணங்கி நடக்கின்றாள் என்பதனை, கண்ணனின் சகோதரி திரௌபதை என்று காரணப் பெயர் வைக்கின்றார்கள் ஞானிகள்.
இயற்கையின் இயக்கங்கள் எப்படி இயங்குகின்றது? என்பதை அறிந்த ஞானிகள், வைத்த பெயர் சாதாராணமானது அல்ல.
”மனிதன் தன்னை அறிந்து, எப்படி வாழவேண்டும் என்று உணர்த்தியுள்ளார்கள்”.
எத்தனையோ கோடி சரீரங்களீல், தீமைகளை நீக்கிடும் உணர்வுகளைச் சேர்த்து, சேர்த்து, தீமைகளை நீக்கிடும் உணர்வுக்கொப்ப பன்றியாகி, நாற்றத்தைப் பிளந்து, நல் உணர்வினை நுகர்ந்து, நஞ்சை நீக்கிடும் உறுப்புகளை உருவாக்கி, இந்த உயிர் மனிதனை உருவாக்கியதைத்தான் மனிதனானபின், அறிந்து கொள்ளச் செய்கின்றனர் ஞானியர்கள்.
அதைத்தான், “கடவுளின் அவதாரம் பரசுராம்” என்று மனித உடலைப் போட்டு, கோடாலியைக் கையில் வைத்து, தீமைகளை நீக்கக்கூடிய சக்தி பெற்றது என்று உருவம் அமைத்து, அருவ நிலைகளில் எப்படிச் செயல்படுகிறோம் என்பதனைக் காட்டுகின்றனர்.
(பக்கம் 70,71)
கோள்கள் அனைத்தும், தான் எதைச் சேர்த்துக் கொண்டதோ “கிரேதாயுகம்”. மரம் செடி, கொடிகள் எல்லாம் எதைக் கலந்து உருப்பெற்றதோ, அதைக் காற்றிலிருந்து கவர்ந்து கொள்ளும் யுகமாக மாறுகின்றது.
கல், மண், பாறையானாலும், எதன் உணர்வின் தன்மை தன் காந்தப்புலனில் பெற்றதோ, புவியின் ஈர்ப்பின் துணை கொண்டு அதனதன் நிலைகளில் கவர்ந்து கொள்கின்றது, கிரேதாயுகம்.
அதைப் போன்று, ஓர் உயிரணு அது சேர்த்துக் கொண்ட உணர்வுக்கொப்ப உடலாகும் பொழுது, அதுவும் கிரேதாயுகம்தான். நாம் மனிதனாக இருப்பினும், எதெனெதன் உனர்வின் தன்மை கவர்ந்தது, அவை கிரேதாயுகம்தான்.
கிரேதாயுகத்தில், நாம் நுகர்ந்து கொண்ட உணர்வுகள் “திரேதாயுகத்தில்” சுவைக்கொப்ப எண்ணங்களாகத் தோன்றுகின்றன.
நாராயணன், திரேதாயுகத்தில் இராமனாகத் தோன்றுகின்றான். சுவையின் உணர்வு எதுவோ, அந்த எண்ணத்தின் உணர்ச்சியாக விஷ்ணுவின் மறு அவதாரமாக நம்மை இயக்குகின்றான்.
இந்த உடலுக்குள் உயிர் எப்படி இயக்குகின்றதோ, அதைப் போல ஜீவ அணு உருவாகி, அந்தச் சுவையின் உணர்வுகளை எப்படி இயக்குகின்றது என்பதை நமது சாஸ்திரங்கள் தெளிவாக்குகின்றது.
திரேதாயுகத்தில், துவாரகா, அதாவது கண்ணில்லாத பொழுது, வேதனையின் உணர்வுகள் உடலுக்குள் வரும் பொழுது, வேதனை உணர்ச்சியின் எண்னங்கள் வரும் பொழுது, வேதனையிலிருந்து தப்ப வேண்டும், அதனை முன் கூட்டியே அறிய வேண்டும் என்ற உணர்வுகள் சேர்க்கப்படும் பொழுது, அதனுடைய மோதலில் தனக்குள் பார்க்க வேண்டும் என்ற உணர்ச்சிகள் தோன்றுகின்றது.
அந்த உணர்வுகள் நுகர்ந்து கொண்டபின், வாசுதேவனுக்கும், தேவகிக்கும், சிறைச்சாலைக்குள் கண்ணன் பிறந்தான் கம்சனை வெல்ல. இருளை நீக்கி, தாய்தந்தையைக் காக்கின்றான்.
அதாவது, இந்த உடலில் உருவாகிய உணர்வுகள் இந்த உடலைக் காக்ககண்ணின் உணர்வுகள் பெற்றது என்பதை “துவாரகா யுகத்தில் கண்ணன் பிறந்தான் என்பதை அழகாகத் தெளிவுற உணர்த்தினர்.
நாம் நல்லதையே எண்ணி, செயல்பட்டாலும் வேதனை என்ற உணர்வுகள் நமக்குள் நுகர்ந்து வலிமையானால் ”கலி”, நாம் எந்த வேதனையை எடுத்துக் கொண்டோமோ, அதற்கொப்ப உருமாற்றுகின்றது. இதே உயிர் கலியுகமாக மாற்றுகின்றது.
விஷத்தின் தன்மை கொண்டு நல்ல குணங்களைக் கொல்லுகின்றது, அழித்துவிடுகின்றது. இதிலிருந்து “கல்கியாக” வேண்டுமென்றால் என்ன செய்யவேண்டும் என்பதை வேதங்கள் தெளிவாகக் கூறுகின்றது.
இந்த உயிரின் தன்மையில்
உணர்வின் தன்மையாகும் பொழுதுதான்
அந்த விண்ணுலக ஆற்றலால்,
மண்ணுலகில் வாளால் வீசி,
குதிரையில் பறக்கின்றான்,
ஆக, வாளைக் கையில் வைத்தான் என்று கல்கியைக் காட்டுகிறார்கள் ஞானிகள். இந்த புவியின் ஈர்ப்பை வீழ்த்திவிட்டு, அந்த உணர்வின் தன்மை கொண்டு, அங்கே செல்கிறான் என்று உருவமாக்கிக் காட்டுகிறார்கள்.
நாம் எண்ணக் கூடியதை, நமது உயிர் இயக்குகின்றது. நாம் எதை எண்ண வேண்டும்? இந்த புவியின் ஈர்ப்பைக் கடந்து சென்ற, ஞானிகளின் உணர்வை நமக்குள் இணைத்தல் வேண்டும். அதை நமக்குள் பெருக்க வேண்டும். எமது அருளாசிகள்.
VIII. இராமேஸ்வரம்
(பக்கம் 88-94)
நாம் புழுவிலிருந்து மனிதனாக வரும் வரையிலும், தீமைகளிலிருந்து நீக்க வேண்டும் என்று எண்ணித்தான் பரிணாம வளர்ச்சியில் வந்தோம். அப்படி நாம் எண்ணியதை, உயிர் ஈசனாக இருந்து. அதையெல்லாம் உருவாக்கியது என்பதைத்தான், எண்ணத்தால் உருவானது “இராமேஸ்வரம்” என்று ஆலயத்தை வைத்தனர்.
பல கோடி தீமைகளை நீக்கிய உணர்வின் எண்ணங்கள், “சீதாராமா”, மகிழ்ச்சியூட்டும் உணர்வின் தன்மை பெற்றதுதான் “இராமேஸ்வரம்”. நாம் புழுவிலிருந்து மனிதனானபின், கடைசிக் கரையாக இருக்கின்றோம் என்பதைக் காட்டுவதற்குத்தான், “கோடிக்கரை” என்று பெயர் வைத்தனர்.
மனிதனானபின், அகஸ்தியன் துருவனாகி, துருவ மகரிஷியாகி, துருவ நட்சத்திரமான நிலைகள் “தனுஷ்கோடி”. கடல்பகுதியில், வடகிழக்கில் துருவ நட்சத்திரம் உதயமாகின்றது.
அதைக் காட்டி, இந்தக் கடைசிக் கரையான உடலுக்குப்பின்
எங்கே செல்லவேண்டும்?
ஒளியின் உடல் பெறவேண்டும் என்று
கோடிக்கரையை வைத்தனர்.
அங்கே நின்று, “துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும், நாங்கள் பெறவேண்டும் ஈஸ்வரா” என்று, அந்த உணர்வின் தன்மையைப் புருவ மத்தியில் எண்ண வேண்டும்.
துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும், எங்கள் இரத்த நாளங்களிலே கலந்து, எங்கள் உடல் உறுப்புகளில் உள்ள அனைத்து அணுக்களும் அதைப் பெறவேண்டும் என்று, இங்கே பெருக்க வேண்டும்.
வேதனைப்படுவோரைப் பார்த்தால், அந்த உணர்வுகள் வேகமாக நம் உடலுக்குள் படருகின்றது. எல்லா அணுக்களிலும் ஊடுருவுகின்றது. நம்மை மயங்கச் செய்கின்றது.
இதைப் போன்றே விஷத்தை நீக்கி, ஒளியின் உடலாக இருக்கும் துருவ நட்சத்திரத்திலிருந்து,காலையில் 4.00 மணிக்கெல்லாம் அந்த பேரருள் பேரொளி வெளிப்படுகின்றது.
அந்த உணர்வின் தன்மையை புருவ மத்தியில் உயிரை எண்ணி, துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெறவேண்டும் என்று நுகர்ந்து, தீமைகள் புகாது தடுத்து, துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எங்க்ள் உடல் முழுவதும் படர வேண்டும் என்று எண்ணும் பொழுது, வலிமை கூடுகின்றது. தீமையின் உணர்வினை இழுக்கும் சக்தி குறைகின்றது.
உடலின் அணுக்களில் இவை வலிமை பெறும் பொழுது,
விஷத்தின் உணர்வுகள் அனாதையாகி விடுகின்றது.
நாம் அனாதையாக்கியதை, சூரியன் கவர்கின்றது.
2000 சூரியக்குடும்பங்களில் ஒதுங்கும் தூசிகள், நமது சூரியக் குடும்பத்தின் ஈர்ப்புக்குள் வரும் பொழுது, நமது சூரியன் கவரும் பாதையில் பூமியின் துருவப் பகுதியில் கவர்ந்தால், அவை காற்றழுத்த மண்டலத்தில் மோதியபின், ஆவியாக மாறுகின்றது, சேதங்களை உருவாக்குகின்றது.
இதைப் போலத்தான், ஒரு மனிதனுக்கு மனிதன் ஒரு பிரபஞ்சம்தான். 2000 மண்டலங்கள் எனும் பொழுது, நாம் 2000 பேருடன் பழகியிருக்கின்றோம், என்று வைத்துக் கொண்டால், இதே போன்று எத்தனையோ விதமான உணர்வுகள் நமக்குள் உண்டு.
துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாம் பெறவேண்டும் என்று எண்ணி, இத்தகைய உணர்வுகளை நாம் ஈர்க்க மறுத்தால், இந்த வேதனை என்ற உணர்வுகளை, சூரியன் கவர்ந்து கொள்கின்றது.
இதனைத்தான் கடவுளின் அவதாரத்தில், “மடி மீது இரண்யனை வைத்து வாசல்படி மீது அமர்ந்து நரநாராயணன் இரண்யனைப் பிளந்தான்” என்று கூறுவார்கள்.
சூரியன் தனக்குள் விளைந்த பாதரசத்தை வைத்து, விஷத்தைப் பிரிக்கின்றதோ, வெப்ப காந்தங்களை உருவாக்கி, பிரிந்து செல்லும் விஷத்தின் தன்மையைக் கவர்ந்து, அணுக்களை உருவாக்குகின்றது.
இதைப் போன்று, நமது உயிர் ஜீவ அணுக்களை உருவாக்கி, ஆறாவது அறிவின் தன்மை பெருகின்றது. துருவ நட்சத்திரத்தின் பேரருளைப் பெறவேண்டும் ஈஸ்வரா என்று கண்ணின் நினைவைச் செலுத்தும் பொழுது வலிமையாகி, வேதனை உணர்வுகள் உட்புகாது தடுக்கின்றது. அதுதான் கடவுளின் அவதாரத்தில், நரசிம்ம அவதாரம்.
இயற்கையின் உண்மையின் உணர்வை அறிந்து ஞானிகள் வெளிப்படுத்திய சாஸ்திரங்களின் தெளிவின்படி, துருவ நட்சத்திரத்தின் உணர்வை எடுத்துப் பழகுவதற்குத்தான் காலை 4.00 மணிக்கெல்லாம் “பிரம்ம முகூர்த்தம்” என்று வைத்து, தீமைகளை வென்றிட்ட உணர்வுகளை நாம் கவர்ந்து, பிரம்மமாக்கும் நேரம் என்று வைத்தனர்.
பிரம்ம முகூர்த்தம் என்பது, நாம் எண்ணி எந்த நல்ல குணத்தை எடுகின்றோமோ, அதை உயிர் எப்படி நுகர்ந்த உணர்வின் அறிவைத் தெளிவாக்குகின்றதோ, அதைப் போன்று தெளிவான உணர்வை உருவாக்கும் நேரம்.