ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

January 16, 2026

ஞானிகள் ஒவ்வொருவரும் சாதாரண மனிதனையே தேடி வருகின்றனர்

ஞானிகள் ஒவ்வொருவரும் சாதாரண மனிதனையே தேடி வருகின்றனர்

நாம் இன்று எவ்வாறு கோயிலுக்கோ ஞானியரையோ தேடிச் செல்கின்றோமோ அதைப் போல ஞானியர் ஒவ்வொருவரும் சாதாரண மக்களைத் தேடி வருகின்றனர்.
 
அவர்கள் அவ்வாறு வருவதனுடைய உட்போருளே
1.ஒரு மனிதன் எவ்வளவு துன்பத்தில் ஆழ்ந்திருக்கின்றானோ அந்தத் துன்பத்தை நீக்கி
2.அந்தத் துன்பத்தை உருவாக்கிய அந்தக் காரமான தீய உணர்வின் சக்தியை விலக்கச் செய்து
3.ஆற்றல்மிக்க உள் உணர்விலே தோன்றிய நல்ல உணர்வின் அணுவின் ஆற்றலை அவர்களிடம் உருவாக்கச் செய்வதற்குத்தான்.
 
உதாரணமாககருணைக் கிழங்கு விஷத்தின் தன்மை கொண்டிருந்தாலும் அதிலுள்ள விஷத்தை நீக்கிய பின் ஆற்றல் மிக்க நிலைகள் கொண்டு நம் சரீரத்திற்குள் சத்தாக ஆகின்றது.
 
அதைப் போன்று அரிசி உருவாவதற்கு அந்த உமியே பிரதானமாகின்றது. இவ்வாறு கடினமான உணர்வின் ஆற்றல்களாக இருந்தாலும் அதே ஆற்றல் உடலுக்குள் சென்று விட்டால் தீயதை விளைவிக்கும்.
 
கடுமையான அந்தச் சுவாசத்தைச் சுவாசித்தாலும் நாம் சுவாசித்த அந்த உணர்வின் அலைகள் நம் உடலுக்குள் கலந்து விடுகின்றது.
 
நெல்லின் உமியை நீக்கிவிட்டு உள்ளே இருக்கக் கூடிய அரிசியை நாம் எவ்வாறு பெற்றோமோ அதைப் போன்று அந்த மகரிஷிகள்
1.விஷத்தின் ஆற்றலுக்குள் இருக்கக்கூடிய இயக்கும்…”
2.அந்த உணர்வின் ஆற்றலைச் சுவாசிப்பதற்குத்தான் அவர்கள் பெற்று
3.அவர்கள் பெற்ற அந்த உண்மையினுடைய நிலைகளை மனிதன் உடலிலே செலுத்தி
4.அங்கே துன்புறுத்தும் உணர்வலைகளை நீக்கினார்கள்.
 
ஏனென்றால் அந்த உடலுக்குள் தான் துன்புறுத்தும் உணர்வான அணுக்கள் விளைகின்றது. அந்த விளைந்த அணுவின் தன்மையை அதை நீக்குவதற்கு அந்த மெய் ஞானியின் அருள் சக்தியினை
1.யார் துன்புற்றுக் கொண்டிருக்கின்றனரோ அவர் உடலிலே
2.அந்தச் சுவாசத்தைப் பாய்ச்சி உணரச் செய்தார்கள்.
 
அங்கே இருக்கக்கூடிய துன்பத்தின் உணர்வலைகளை நெல்லின் உமியை நீக்கி அரிசியை எடுப்பது போன்று
1.மனித உடலுக்குள் துன்புறுத்திக் கொண்டிருக்கும் அந்தத் துன்பத்தை நீக்கி (உமியை நீக்குவது போன்று)
2.நல்ல வித்தான சத்தை அங்கே உருவாக்கினார்கள் மகரிஷிகள்.
 
உதாரணமாகதங்கத்திற்குள் திரவகத்தை ஊற்றியவுடன் அதிலே கலந்திருக்கக் கூடிய பித்தளை மற்ற மட்டமான சரக்குகள் எல்லாம்  ஆவியாக மாறுகின்றது.
 
அதைப் போல மகரிஷிகள் அவர்கள் எடுத்துக் கொண்ட ஜெபத்தின் தன்மை கொண்டு
1.ஒரு மனிதன் துன்புற்றுக் கொண்டிருக்கும் போது அவர்களுடைய சுவாசத்திலே
2.”இவர்கள் பெற்ற ஆற்றலைச் செலுத்தி…” அங்கே இன்புறச் செய்கின்றார்கள்.
 
அவ்வாறு அவர்களை இன்புறச் செய்து அந்த மகிழ்ச்சியான எண்ணங்களை உருவாக்கச் செய்து அந்த உடலிலிருந்து வெளிப்படும் மகிழ்ச்சியான உணர்வலைகளை இவர்கள் சுவாசித்து தன் உடலிலே ஆற்றல் மிக்க  சக்திகளாகப்  பெற்றார்கள்.
 
ஆகவே…
1.அந்த மகரிஷிகளைப் போன்றே நாமும் விஷத்தை அடக்கி அதை ஆற்றல்மிக்க சக்தியாக மாற்றி
2.உயிருடன் ஒன்றும் உணர்வுகளை ஒளியாக மாற்றி… அழியா ஒளிச் சரீரம் பெறுவோம்.

எண்ணிலடங்காத தெய்வ ரூபங்களை ஞானிகள் நமக்குக் காட்டியதன் உட்பொருள்

எண்ணிலடங்காத தெய்வ ரூபங்களை ஞானிகள் நமக்குக் காட்டியதன் உட்பொருள்


ஒவ்வொரு குத்திற்கும் ஒரு சக்தி உண்டு. அதைக் காட்டுவதற்குத் தான் காளி மாரி சாமுண்டீஸ்வரி சண்டாளேஸ்வரி என்றார்கள். கொடிய தீமைகளை உருவாக்கும் குணங்களை "சண்டாளேஸ்வரி..." என்று கூட அதற்குக் காரணப் பெயரை வைத்துள்ளார்கள்.
 
அதன் இனத்தைப் பெருக்கும் சக்தியைப் பெறுகிறது என்று சிவனுக்குள் சக்தியாக உருவாக்குகின்றது. அதாவது… உடலான சித்திற்குள் அணுக்களின் தன்மைகள் கொடூர உணர்வுகளைக் கொடூரம் என்று உணர்ந்து நுகர்ந்தாலும் நல்ல உணர்வுகள் விலகிச் செல்லக் காட்டினாலும்… ந்த உணர்வு இயக்கி உணர்ச்சியைத் தூண்டி நம்மை மாற்றும் நிலைக்கு…” உருவாக்கி விடுகிறது.
 
இப்படி நுகர்ந்த உணர்வுகள் கடினமாக்கப்படும் பொழுது
1.இந்த உடலான சிவத்தையும் நுகர்ந்த அந்தச் சண்டாள உணர்வுகள் சக்தி சிவனை வீழ்த்தி விடுகின்றது.
2.இதைத்தான் சிவனைத் திரிசூலத்தால் தாக்கிக் கீழே காலில் மிதித்து வைத்திருக்கிறார் என்று கூறுவார்கள்.
 
நாம் நுகர்ந்த உணர்வே சிவமாகின்றது என்ற நிலையும் செயலற்ற நிலையில் நாம் அதன் கீழ் அடங்கி விடுகின்றோம். அதன் வழி கொண்டு நாம் செயல்பட முடியாதபடி ஒடுங்கப்படும் பொழுது எதன் உணர்வின் தன்மையோ அதனை நம் உயிர் உருவாக்கி விடுகின்றது என்ற நிலை தெளிவாக்கப்படுகின்றது.
 
சற்று சிந்தித்துப் பாருங்கள். ஞானிகள் காவியங்களைப் படைத்தாலும் ஒவ்வொரு குத்திற்கும் உருவத்தைக் கொடுத்து அதற்குண்டான நிறத்தைக் கொடுத்து அதனுடைய செயலாகங்களைக் காவியமாக படைத்து அதனை உற்று நோக்கப்படும் பொழுது ஒவ்வொன்றையும் நாம் அறியும் வண்ணமாகக் காட்டி உள்ளார்கள்.
 
1.நம்மை அறியாது நுகர்ந்த தீமையின் உணர்வுகள் நமக்குள் விளைந்து விட்டால் என்ன செய்யும்…?
2.அதனுடைய ரூபங்கள் எப்படி மாறும்…?
3.நுகர்ந்த நிறங்கள் எப்படி மாறும்…? என்று அவர்கள் காட்டிய வழிகளில் நாம் நுகர்கின்றோமா…?
 
பல பல நிறங்கள் சிவப்பு கருப்பு நீம் மஞ்சள் என்று வந்தாலும் அவைகள் ஒன்றுடன் ஒன்று கலக்கப்படும் பொழுது அதனுடைய நிறங்கள் மாறுகின்றது. அதிலே உருவாகும் உணர்ச்சிகள் மாறுகின்றது.
 
வித்தியாசமான நிற ஆடையை அணிந்தால் உடனே சோர்வாகும். நீலக் கலரைப் பார்த்தால் இருட்டடையும் நிலை வருகின்றது. மஞ்சள் நிறத்தைப் பார்த்தால் பளிச் ன்று இருக்கும் இளம் மஞ்சளைப் பார்த்தால் கொஞ்சம் வெளிச்சம் ஆகின்றது. அது ஒளியாகக் காட்டும் போது தெளிவாகின்றது மனம்.
 
வெள்ளைத்துணி அணிந்து இருப்பவரைப் பார்த்தால் பளிச்சென்று தெளிவாகும். இளம் மஞ்சளைப் போட்டிருந்தால் மகிழ்ச்சியூட்டும் நிலைகள் வரும்.
 
பளிச் ன்று வெள்ளை நிறம் வந்தாலும் கண் கூசும் நிலையும்  வருகின்றது.
 
ஆடையில் கருப்பும் சிவப்பும் வெள்ளையும் கலந்து இருந்தால் உற்றுப் பாருங்கள். அவர் முகத்தையும் பாருங்கள்ருண்ட நிலை இருக்கும் நுகரும் பொழுது நம் மனமும் இருண்டு விடுகின்றது.
 
கருப்புச் சட்டையைப் போட்டுக் கொண்ட பின் திரும்பிப் பார்த்தால் சிந்திக்கும் திறன் இழந்து அந்த உணர்வின் நிலை கொண்டே நம் எண்ணங்களும் செயல்படுவதைப் பார்க்கலாம்.
 
ஆடைகளின் நிறத்திற்குள் இவைகள் எல்லாம் அடங்கியுள்ளது.
 
இதைத்தான் கீதையில் நீ எதை நினைக்கின்றாயோ அதுவாகின்றாய்.  
1.றுப்பு நிறத்தைப் பார்த்தபின் நம் மனதை இருளடையச் செய்யும் நிலை வருகின்றது. சிந்திக்கும் திறனை இழக்க செய்கின்றது.
2.நுகர்ந்ததை இருள் சூழும் உணர்வின் அணுவின் கருவாக உடலுக்குள் உருவாக்கி விடுகின்றது நம் உயிர்.
 
ணுவின் இயக்கம் அதனின் வளர்ச்சி எவ்வாறு…? என்று ஞானிகள் தெளிவாக்கியுள்ளார்கள். இதை எல்லாம் உங்களிடம் இப்போது சொல்கிறேன் என்றால் எனது பாக்கியம் குருநாதரால் நான் அறிய முடிந்தது…”
1.அவர் உணர்த்தியதை உங்களிடம் வெளிப்படுத்தும் போது
2.உங்களுக்குள் இயக்கும் உணர்ச்சியின் நிலைகள் எப்படி உருப்பெறுகிறது…? என்பதை உங்களை நீங்கள் அறிகின்றீர்கள்.
 
கவே… ஆறாவது அறிவின் துணை கொண்டு இதையெல்லாம் தெளிவாக்கப்படும் பொழுது “இதைப் பெற வேண்டும்…” என்ற ஏக்கம் கொள்வோருக்குள்து பதிவாகின்றது.
 
மீண்டும் நினைவு கொண்டால் அதனுடைய ஞானத்தை உங்களுக்குள் பெருக்க முடிகின்றது.

அடிக்கடி உணர்ச்சி வசப்படுவதை அருள் ஞானத்தால் பக்குவப்படுத்தும் வழி

அடிக்கடி உணர்ச்சி வசப்படுவதை அருள் ஞானத்தால் பக்குவப்படுத்தும் வழி


வியாபாரங்களில் கொடுத்தது வரவில்லை என்றால் கொடுத்தேன், வரவில்லை…!என்ற இந்த உணர்வை எடுத்து இந்த உணர்வோடு சேர்த்து இன்னொருவரைச் சேர்த்தால் கடன் வாங்குவார்கள் பின் போய் விடுவார்கள்.
 
கடன் கொடுத்தோம் இன்னும் வரவில்லை என்று எண்ணும்போது அதைச் சமாளிக்க இருந்த பணத்தைக் கொண்டு சரக்கை வாங்கச் சென்றால் மட்டமான சரக்கை வாங்கி வந்துவிடுவோம்.
 
அந்த மட்டமான சரக்கு எப்படி விற்கும்? என் வியாபாரமே நின்று போய்விட்டது என்போம். இது எல்லாம் சந்தர்ப்பங்கள். உணர்வுக்கொப்ப எண்ணங்களை மாற்றி நல்லவை என்றாலும் மறந்துவிட்டுச் செய்து விடுவோம்.
 
எப்படியும் லாபத்தைப் பெறுவோம்…! என்று செய்தாலும் முதலில் லாபம் வரும். பின்அது தடை என்ற உணர்வுகளை ஊட்டிவிடுகின்றது. நம் எண்ணம் நமக்கே எதிரியாக உருப்பெற்று நம்முடைய நினைவும் நல்லதைப் பெறாது நமக்குள்ளே எதிரியை உருவாக்கி விடுகின்றது.
 
இதைக் கேட்டுணர்ந்தோர் உங்களுக்குள் இந்த அறிவின் தன்மை வளர்கின்றது. தீமைகள் வரும் பொழுது அதை மாற்ற உங்கள் நினைவின் ஆற்றலைத் துருவ நட்சத்திரத்தினுள் செலுத்தி அதை எடுத்து வலுவாக்கிக் கொள்ளுங்கள். வியாபாரத்தைச் சீர்படுத்த முடியும்.
 
ஒரு பக்கம் இப்படி இருந்தாலும் “இத்தகைய தியானம் செய்வோரை…” மற்றவர்கள் எப்படிப் பார்க்கிறார்கள்…!
 
தியானத்தில் சிறிது நேரம் அதிகமாகி விட்டால்
1.“இவனுக்கு வீட்டுக் கவலை இருக்கின்றதா?
2.”எவனோ சாமியார் சொன்னான் என்று எண்ணிக் கொண்டே உட்கார்ந்திருக்கிறான்என்பார்கள்.
 
இது மாதிரிப் புலம்ப ஆரம்பித்து விடுவார்கள்.
 
சில வீட்டில் ஆண்கள் தியானம் செய்யாது பெண்கள் இந்தத் தியானத்தைச் செய்வார்கள். அப்போது தன் கணவரை எண்ணி… எப்படியோ இவர் தொழிலுக்காகப் பாடுபடுகின்றார்… ஆனால் உணர்வுகள் அவரை அறியாமல் இயக்குகின்றது…!
1.நாம் எப்படியாவது அவருக்கு மன வலிமை பெறச் செய்ய வேண்டும்  என்று தியானமிருந்தால்
2.”சும்மா (தியானத்தில்) உட்கார்ந்து கொண்டிருந்தால் கஷ்டத்தை மாற்றிவிட முடியுமா?” என்ற உணர்வுகளை
3.அந்த வீட்டிலிருக்கும் கொளுந்தியாலோ நாத்தனாரோ யாராவது ஊட்டுவார்கள்.
 
குடும்பத்தின் நிலை அறிந்து எப்படியும் நல்லதாக மாற்ற வேண்டும் என்று வீட்டிற்குள் சென்றாலும்… அங்கே சுழன்ற இருளுக்குள் அந்த அடர்த்தியின் நிலைக்குள் சென்றபின் ஒளியின் தன்மை வெளிப்படாதபடி மங்கி விடுகின்றது.
 
இப்படி… தியான வழியில் நல்வழிப்படுத்த வேண்டுமென்றாலும் கூட… உலக இயல்புகள் விஷத்தன்மை கொண்ட நிலைகளில் மாறி வரும் போது
1.பக்தி கொண்ட உள்ளங்கள் அதைப் பற்றிக் கொண்டுஅந்தப் பக்தி என்ற ஒன்றையே நம்பும் நிலை இருகின்றது.
2.ஆண்டவன்தான்…! அந்தத் தெய்வம்தான் காக்கும்…! என்ற நிலைகளில் இருக்கின்றனர்.
3.ஆனாலும் நான் உன்னையே தான் வணங்கினேன்… எனக்கு இந்தத் துன்பம் வருகின்றதே…! என்ற இதுவும் வருகின்றது.
 
அப்பொழுது நாம் எதன் மேல் பக்தி கொள்கின்றோம்?
 
யாராவது நல்லவர்களைப் பார்த்தால் சந்தோஷம் அடைவதற்குப் பதிலாகப் பெருமூச்சு விடுவார்கள். நாம் இத்தனையும் செய்யஆண்டவன் நமக்குக் கொடுக்க மாட்டேன் என்கின்றான்…!” என்பார்கள்.
 
இது மாதிரிச் சொல்லி ஒருவரைக் குற்றவாளியாக்குவோம்.
 
வசதி இருப்போரைப் பார்க்கும் பொழுதெல்லாம்
1.இவர்கள் எதை நினைக்கின்றார்களோ அந்த உணர்வின் தன்மையாகி
2.அவன் அவர்களுக்குத் துன்பம் செய்கின்றான்இவர்களுக்குத் துன்பம் செய்கின்றான்ஏமாற்றிக் கொண்டே உள்ளான்
3.ஆனால் “தெய்வம் வனுக்குத் தான் கூரையைப் பிய்த்துக் கொட்டிக் கொண்டே இருக்கின்றது…” என்பார்கள்.
 
இவைகளெல்லாம் சந்தர்ப்பம். இது எதை உருவாக்குகின்றது? இப்படி மாற்றும் உணர்வுகள் உருப்பெற்று விடுகின்றது.
 
நாம் நன்மை செய்ய வேண்டும் என்றால் ம்முடைய நல்ல எண்ணங்கள் வலு இழந்து விடுகின்றது. அதற்கு வலுக் கூட்ட என்ன செய்ய வேண்டும்…? யாம் வெளியிட்ட அருள் ஞானப் புத்தகங்களைச் சிறிது நேரம் படிக்க வேண்டும். 
 
மற்றவர்கள் நினைப்பதை மாற்ற வேண்டுமென்றால்சாமி என்ன சொல்லி இருக்கின்றார்கள்…? தீமைகள் நம்மை எப்படியெல்லாம் தாக்குகின்றது? என்று சிறிது நேரம் படித்தால் இவர்களின் மாறான உணர்வும் இணைக்கப்படும் பொழுது அவர்களுக்கும் இந்த நினைவு வரும்…”
 
என்னடா படிக்கிறாய்? என்பார்கள். முதலில் படிக்காதே…” என்று சொல்வார்கள். விடாமல் படிக்கும் பொழுது
1.நல்ல உதாரணங்களைச் சொல்லும் பொழுது உற்றுக் கேட்பார்கள்.
2.சிறிது சிறிதாக நம் மேல் இருக்கும் வெறுப்புகள் மாறும்.
3.நல்லணவைகளை அவருக்குள் புகுத்தி அந்த நிலையை மாற்ற முடியும்.
 
இந்தத் தியான வழியில் சில பேர்வைராக்கியமாக…” சாமி சொன்னதை எடுத்துக் கொள்வார்கள். “என்னை விடமாட்டேன் என்கிறார்களே…” என்று திருப்பிப் படித்தால் என்னால் புத்தகமும் படிக்கவில்லைஎதுவும் செய்ய முடியவில்லை…” என்ற உணர்வுகள் கலந்து மனச்சோர்வும் மனச்சஞ்சலமும் வந்துவிடுகின்றது.
 
1.நாம் நல்லவைகளுக்குத் தானே போகின்றோமஇப்படிச் செய்கின்றார்களே என்ற விஷத்தின் உணர்வுகளை
2.நமக்குள் மாற்றப்படும் போது நம் செயலாக்கங்களும் செயலற்றதாக மாறிவிடுகின்றது.
 
ஆகவே… நாம்  ஒவ்வொரு நொடியிலும் நமக்குள் அருள் ஞானத்தைப் பெற வேண்டும். அவர்கள் செயல்களில் உண்மையை உணரும் பருவம் வரவேண்டும் என்ற ஏக்கத்தைச் சிறிது நேரம் எடுத்துவிட்டு அந்த உணர்ச்சியைக் கண்களால் பார்த்து உணர்வின் அலைகளைப் பரப்ப வேண்டும்.
 
அப்படிச் செய்யும் பொழுது அவர்களும் அதைக் கேட்க நேருகின்றது. இப்படிச் சில நாள் சிறிது நேரம் மட்டும் படிக்க வேண்டும்.
 
அதையே படித்துக் கொண்டிருந்தால் அவர் சங்கடமாக இருக்கும் பொழுது அதைச் செய்தால்… “ஏண்டா கத்திக் கொண்டிருக்கிறாய்…? இருக்கிற துன்பத்தில்…!” என்ற நிலைகளில் இதுவும் வந்துவிடும்.
1.அமைதி கொண்டு இருக்கும் நேரத்தில் இதனைச் சிறிது வெளிப்படுத்தி
2.படிப்பதை உற்று நோக்கிக் கேட்கும் சந்தர்ப்பத்தை நாம் உருவாக்க வேண்டும்.
 
நெல் பதரினை நீக்க… “சொவுகளில்…எடுத்துத் தூவுவார்கள். காற்று இருக்கும் சந்தர்ப்பத்தில் தூவினால் பதர்கள் நீங்கும். காற்று இல்லாத சந்தர்ப்பத்தில் தூவினால் போகவே போகாது. திரும்பத் திரும்ப தூவ வேண்டும்.
 
திரும்பத் திரும்பச் செய்யும் பொழுது சுத்தப்படுத்த முடியாதபடி சோர்வடைந்து விடுவோம். பதர் அதிகமாகி பிரியாத நிலையில் அடைப்பட்டுவிடும்.
 
இவைகளெல்லாம் சந்தர்ப்பத்தால் நம்மை அறியாமல் தவறுகள் கூடுகின்றது. இதைப் போன்று குடும்பத்தின் நிலைகளில் தவறுகளை நீக்கும் நிலைகளைச் செயல்படுத்த வேண்டும்.
 
ஆகவே தான் உங்களைத் தெளிவாக்க இதை எல்லாம் நினைவுபடுத்துகின்றேன்.
1.சந்தர்ப்பங்கள் நாம் நல்லது பெறாதபடி எப்படித் தடைபடுத்துகின்றது? என்று
2.அந்தச் சுற்றுப்புறச் சூழ்நிலையை உணரச் செய்கின்றது.
3.அதற்குத்தக்க சந்தர்ப்பத்தில் படும் பொழுது செயல்படுத்துகின்றது.
4.ஆக மற்றவர்கள் உடல்களில் உள்ள பதர்களை நீக்கும் சக்தியாக நம் சொல் ஆகின்றது.
 
மதில் சுவர் மறைத்தால் அப்பகுதியில் பதரை நீக்கினால் என்னவாகும்? அந்தக் காற்று புகாது. அதே மாதிரி வாகனங்கள் தொடர்ந்து செல்கின்றது. கரை ஓரத்தில் பதரை நீக்குகின்றீர்கள். ஆனால் அங்கே வரும் காற்றினைத் தடைப்படுத்தினால் பதர் நீங்காது.
 
அது போல் தான்
1.பிறருடைய உணர்வுகள் பல வகையிலும் உணர்ச்சிகளைத் தூண்டி வெறுப்பென்ற நிலைகள் வருகின்றது.
2.அந்த வெறுப்பென்ற உணர்வுகளை மாற்றபுத்தகத்தைப் படித்தால் நல்ல சொற்கள் நமக்குள் பதிவாகாதபடி
3.அவர்கள் உணர்ச்சிகள் நமக்குத் திரை மறைவாகி விடுன்றது.
 
ஆகவேதிரை மறைவுபடுத்தும் உணர்வினை நீக்க அருள் ஒளி என்ற உணர்வை நமக்குள் சேர்த்துக் கொண்டால் நமக்குள் வரும் தீமையின் பதர்களை நீக்க இது உதவும்.
 
1.தியான வழியில் உள்ள அனைவரும் உங்கள் வாழ்க்கையில் தெரிந்துதெளிந்து
2.தெளிவாக வாழச் செய்யும் அந்த அருள் ஞானத்தைப் பெற்று அருள் சக்தி பெற்று
3.என்றென்றும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்தில் மகிழ்ந்து வாழ்ந்திட எமது அருளாசிகள்.