
வேகா நிலை
போகர் சொன்னாராம் சாகாக் கலையைப்பற்றி…! சில பேர் காயகல்பத்தைப் போட்டுச் சாப்பிட்டு அதையெல்லாம் நான் வைத்திய ரீதியில் சாகாக் கலையைக் கற்று இருக்கின்றேன். ஆகையால்
1.அந்த மருந்தெல்லாம் போட்டு மந்திரங்களைச் சொல்லி
2.போகர் காட்டிய வழியில் நான் சாகாக்கலை கற்றிருக்கின்றேன்.
இவ்வாறு நான் சாகமாட்டேன் என்று சொன்னவர் மருந்திலே எதிர்நிலை ஆகிவிட்டால் “என்னமோ எதிலோ குறையாகி விட்டது,.. எனக்கு இப்படி வந்து விட்டது…!” என்பார்கள். இது சாகாக் கலை.
யார் இதை உணர்த்தினாரோ அவர் இறந்த பிற்பாடு இன்னொரு உடலில் பிடித்துக் கொண்டு இதே ஆசையில் இருப்பார். இதே உணர்வை எண்ணி அந்த மந்திரம் எல்லாம் கற்றுக் கொண்டு அடுத்தவரும்` போவார்.
அவர்களிடம் மருந்து வாங்கிச் சாப்பிடுபவர்களெல்லாம் கடைசியில் என்ன ஆவார்கள்…?
1.நெகடிவ் பாசிட்டிவ் என்ற நிலையில் மருந்து சாப்பிடுபவர்களையும் சாகாக் கலையாக
2.நீயும் வாயேன் என்று இழுத்துக் கொண்டு போகும்... இது சாகாக் கலை.
யாம் இப்பொழுது உபதேசிப்பது “விஜய தசமி…!” பத்தாவது நிலை.. அடுத்து ஒளியாகி விட்டால் பிறவி இல்லை. இது வேகாக்கலை…!
ஒரு மனிதன் எவ்வளவு முழுமையாக இருக்கட்டும். தீயில் குதித்து விட்டால் என்ன ஆகின்றது…? சரீரம் கருகுகிறது… ஆனால் உயிர் அழிகிறதா…? இல்லை. உயிர் வேகா நிலை பெற்றது.
அதற்குள் அதன் இயக்கத்தின் வலுக்கொண்டு… அதனுடன் எது விளைந்து உருவானதோ அதே கதிரியக்கச் சக்தியால்தான் இரும்பு உலோகமும் உருவாகின்றது.
அந்தக் கதிரியக்கத்தை எடுத்துச் சேமித்து மீண்டும் அணுகுண்டாக வெடிக்கச் செய்யப்படும் பொழுது சூரியனின் காந்த சக்தி கவர்ந்து தன் இனமான நிலைகள் எதுவோ அதிலெல்லாம் மோதும்.
1.விஞ்ஞானிகள் அணுவைப் பிளந்து அணுவின் தன்மை கொண்டு வந்தாலும்
2.அதைப் போலத்தான் மெய்ஞானிகள் உணர்வுக்குள் இருக்கும் அணுவைப் பிளந்துவிட்டு ஒளியாக மாற்றி
3.எத்தகைய உணர்வு வந்தாலும் அதைப் பிளந்து உயிருடன் ஒன்றிய ஒளியாக நிற்பது
4.அதுவே “வேகாக் கலை…!” – வேகா நிலை.
இப்பொழுது தீயிலே ஒரு மனிதன் இறந்து விட்டால் தீயிலே கருகி விட்டாலும் அணுகுண்டு ஒன்றை வெடிக்கச் செய்து அதனின் உணர்வு தசைகளைக் கருகச் செய்தாலும் அந்த உடலில் இருக்கும் உயிரை ஒன்றும் செய்ய முடியாது. “உயிர்” வேகாக் கலை பெற்றது.
அணுவைப் பிளந்து அதனை வெடிக்கச் செய்யும் பொழுது அது தன் இனத்தைப் பெருக்குவது போல அந்த மெய் ஞானி தன் உணர்வினை ஒளியாக மாற்றி
1.உயிருடன் ஒன்றிய நிலைகள் கொண்டு வேகாக் கலையாக
2.எத்தகைய நஞ்சுகள் வந்தாலும் அதனைப் பிளந்து அதனை ஒளியாக மாற்றி
3.என்றும் பதினாறு என்ற நிலையில் (வேகாநிலை அடைந்து) சப்தரிஷி மண்டலமாக வாழ்ந்து வளர்ந்து கொண்டுள்ளார்கள்.
அணு குண்டை வெடித்தபின் எந்த உலோகமாக இருந்தாலும் அதைப் பிளக்கச் செய்து தன் இனத்தின் தன்மையை அது வளர்த்துக் கொள்கிறது.
1.எத்தகைய அணுகுண்டும் அவர்களை அசைக்காது
2.எத்தகைய நஞ்சு கொண்ட நிலைகள் வந்தாலும்… தீயில் இட்டாலும் அவர்களைப் பாதிக்காது.
அவ்வாறு ஒளிச் சரீரமாக என்றும் நிலைத்து இருக்கும் அவர்கள் துணை கொண்டு நாம் அனைவரும் அந்த வேகாக்கலை என்ற உணர்வின் சக்தியைப் பெற நினைவு கூறும் நன்னாள்தான் விஜயதசமி… பத்தாவது நிலை பெறுவதை நினைவுபடுத்தும் நன்னாள்.
