
அகஸ்தியரும் அவருடைய மனைவியும் இரு உயிரும் ஒன்றி வாழ்ந்த அருள் வாழ்க்கை
அகஸ்திய மாமகரிஷி அவர்கள் தம்முள்
உள்ள நஞ்சினை அடக்கிப் புவியின் துருவத்தின் வழியாக விண்ணின் ஆற்றலைத் தம்முள் நுகர்ந்து…
1.எதை எல்லையாக
வைத்து எதனை நுகர்ந்தாரோ அதனின் ஆற்றலை தம்முள் பெற்றவர்.
2.புவியில்
வாழ்ந்த காலத்தில் ஒவ்வொன்றின் உணர்வையும் அவர்
நுகர்ந்தறிந்து
3.அதனைத் தம்முள் விளைய வைத்து அதனின் ஆற்றலைத் தம்முள் பெருக்கிக் கொண்டவர்.
அகஸ்தியர் தம்முள் விளைய வைத்து
வளர்த்துக் கொண்ட பேராற்றல்களை தம் மனைவியின் பால் பாய்ச்சித் தமது மனைவியும் மெய்யுணர்வின் தன்மை பெற வேண்டும்…
அதன் வழி கொண்டு இருளைப் போக்கி பொருள் காணும் திறன் பெற வேண்டும்
என்றும் தம் மனைவி தம்முள் அறியாது சேர்ந்த நஞ்சை அடக்கி தம்முள் சேர்த்த உணர்வுகளை ஒளியின் உணர்வின் தன்மையாக மாற்ற வேண்டும்
என்றும் அந்த அருள் உணர்வுகளைத் தன் மனைவிக்கு ஊட்டினார்.
அகஸ்தியரின் மனைவி… தமது கணவர் தமக்கு ஊட்டிய அருள் உணர்வின்
தன்மைகளைத் தமக்குள் இணைத்து வளர்த்து அதன் நிலை கொண்டு பேரானந்தத்தின் உணர்வின்
தன்மைகளை அறிந்து இவைகளைத் தாம் தன் கணவராலேயே பெற்றோம் என்று உணர்ந்து கொண்டார்.
அவ்வாறு உணர்ந்த பின்
1.தாம் பெற்ற
பேரானந்தத்தின் உணர்வின் தன்மைகள் தமது கணவரிடத்தில் மென்மேலும் வளர வேண்டும்
2.அவர் உயர்ந்த
ஆற்றல்களைப் பெற வேண்டும்.
3.அவருடைய அருள்
துணை கொண்டு தம்முள் அருள் ஆற்றல்கள் பெருக வேண்டும் என்ற உணர்வை வளர்த்து
4.தமது கணவரின்
உணர்வுகளுடன் தமது உணர்வுகளை இரண்டற இணைத்து இரு உணர்வுகளையும் ஒரு உணர்வாக
ஒன்றிணைத்து
5.இவ்வாறு அந்த இருவருமே துருவத்தின் ஆற்றல்களைத் தம்முள் வளர்த்துக் கொண்டார்கள்.
அகஸ்தியரும் அவரும் மனைவியும்
தங்களுடைய உணர்வுகளை ஓர் உணர்வாக்கி விஷத்தை
அடக்கி நல் ஒளியின் உணர்வினை தங்களுக்குள் வளர்த்து… இரு
உயிரையும் ஒரு உயிராக்கித் துருவத்தின் ஆற்றலை நுகர்ந்து தங்களுக்குள் விளைய வைத்துத் துருவ நட்சத்திரமாக எதையும் அடக்கிடும் உருவாக்கிடும் நிலையாக உருவானார்கள்.
அவர்கள் இன்றும் விண்ணிலே நம் பூமியின் துருவப் பகுதியில் துருவ
நட்சத்திரமாக என்றும் பதினாறாக அழியா ஒளிச் சரீரமாக
வாழ்ந்து வளர்ந்து கொண்டுள்ளார்கள்.
பொதுவாக ஆண்பால் என்பது ஆதிக்க
உணர்வும் பெண்பால் என்பது அரவணைத்து இயக்கும் நிலையும் கொண்டது. இதில் தனித்து
இயங்கும் நிலையானால் ”முனியாகத்தான்” ஆக முடியும் என்ற உண்மையின் தன்மைகளை உணர்த்தியவர்கள் மெய் ஞானிகள்.
மெய் ஞானிகள் உணர்த்திய அருள் வழி
கொண்டு ஒவ்வொரு குடும்பத்திலும் கணவனும் மனைவியும் இரு உணர்வும் ஒரு உணர்வாக
ஒன்றுபட்டு… ஒருவர் மற்றவரை எண்ணி “துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற வேண்டும் உயர்ந்த
ஆற்றல்களைப் பெற வேண்டும்” என்று ஒருவருக்கொருவர் எண்ண வேண்டும்.
1.இப்படிக் கணவனும்
மனைவியும் ஒன்றிணைக்கும் பொழுது வலுவாகின்றது.
2.துருவ
மகரிஷிகளின் அருளுணர்வுகளை எளிதில் ஈர்க்கும் ஆற்றல் கிடைக்கின்றது.
வாழ்க்கையில் சந்தர்ப்பத்தால்
வரும் தீமைகளை நீக்கும் நிலையாக… கணவனும் மனைவியும்
தங்களுடைய உணர்வுகளை ஒன்றிணைத்துத் துருவ மகரிஷிகளின் அருள்
உணர்வுகளை எண்ணி ஏங்கித் தியானித்து அதனின் உணர்வுகளை தங்களுடைய
இல்லம் முழுவதும் படரச் செய்ய வேண்டும்.
அப்படிப் படரச் செய்யும் பொழுது
அந்த இல்லத்தில் வசிப்பவர்களிடத்திலும் அந்த இல்லத்திற்கு வருகை
புரிபவர்களிடத்திலும் அங்கே பதிந்துள்ள மகரிஷிகளின் அருள் உணர்வுகள் இணைந்து… அவர்களிடத்தில் தீமைகளைப் போக்கும் நிலையாக மலரைப் போன்று நறுமணமும் மகிழ்ச்சியும் பெறும் நிலையாக விளைகின்றது.
ஆகவே கணவன் மனைவி இருவரும் அதிகாலை 4.00 மணியிலிருந்து 6.00 மணிக்குள் துருவ தியானத்தில் ஒன்றாக அமர்ந்து துருவ மகரிஷிகளின்
அருள் ஆற்றலின் உணர்வுகளை எண்ணி ஏங்கித் தியானித்துத்
தங்களுக்குள் இணைத்து… சந்தர்ப்பங்களால் வந்து சேரும் தீமைகளை நீக்கிப் பொருள் காணும் திறன் பெற்று நஞ்சை அடக்கி ஒளியின்
உணர்வுகளாக வளர்க்கும் நிலை பெறுதல் வேண்டும்.
அதைப் போன்று நீங்கள்
பார்ப்பவர்களும் உங்களைப் பார்க்கின்றவர்களும் மகரிஷிகளின் அருள் வட்டத்தில்
இணைந்து தெளிந்த சிந்தனையுடன் மலரைப் போன்ற மணத்துடன் மகிழ்ந்து வாழ்ந்திடும்
அருள் சக்தியும் பெறுதல் வேண்டும்.
1.கரண்ட்டில் “பாசிடிவ் நெகடிவ்” என்ற இரு இணைப்பையும் கொடுக்கப்படும் பொழுது எப்படி விளக்கு ஒளி
பெறுகின்றதோ அதே போன்று
2.கணவன் மனைவி
இருவரும் தங்களுடைய உணர்வுகளை ஒருங்கிணைத்து
3.புவியில்
படரும் துருவ மகரிஷிகளின் அருள் உணர்வுகளைத்
தங்களிடத்தில் இணைத்துப் பெருக்க வேண்டும்.
4.அப்படிப் பெருக்கித்
தங்களிடத்தில் நஞ்சான தீமைகளுக்கு இடமில்லாது செய்து அருள் உணர்வின்
அணுக்களைப் பெருக்க வேண்டும்.
இதைப் படிப்போர்… நீங்கள் கணவனும் மனைவியும் மகரிஷிகளின் அருள் வட்டத்தில்
இணைந்து பிறவியில்லாத நிலையான அழியா ஒளிச் சரீர வாழ்வைப் பெறும் நிலையாக இரு உயிரையும் ஒரு உயிராக்கிப் பேரின்பப் பெருவாழ்வாக வாழ்ந்து ஒவ்வொரு நாளும் அருள் ஆற்றலைத் தங்களிடத்தில்
வளர்த்துக் கொள்ளுதல் வேண்டும்.
எமது அருளாசிகள்.
