
புது மனை புகுகிறோம் என்றால் அங்கே அருளைப் பெருக்கும் மனையாக அனைவரும் சேர்ந்து உருவாக்க வேண்டும்
பெரும்பகுதியானவர்கள் புதிதாக்க் கட்டிய வீட்டிலே
பெரிய யாகத்தை நடத்துகின்றார்கள்… அதன் மூலம் தோஷத்தை எல்லாம் போக்குகிறோம் என்பார்கள்.
நெருப்பை உண்டாக்கிப் பல பொருள்களைப் போட்டு புகையை மூட்டுவார்கள். வீட்டிற்குள் இருக்கும் மற்றவர்கள் கண்ணைக் கசக்கிக் கொண்டிருப்பார்கள். எப்படா இது முடியும்…? என்று எண்ணுவார்கள்.
காசைக் கொடுத்துத் தான் யாகத்தை நடத்துகின்றார்கள். மந்திரம் சொல்கின்றார் என்றாலும் அதை யாராவது
நினைக்கின்றார்களா என்றால் இல்லை.
1.அங்கே உட்கார்ந்து இருப்பவர்கள் ஒவ்வொருவருக்கும்
எத்தனையோ விதமான எண்ணங்கள் செல்கின்றது.
2.வீடு கட்டி இருப்பதைப் பார்த்த பின்… எப்படிக் கட்டி இருப்பார்கள்…? என்ற இந்த உணர்வு வரும்.
3.கடன் வாங்கிக் (லோன்
வாங்கி) கட்டியிருப்பார்கள் போல என்று அடுத்தவரிடம் பேசுவார்கள்.
4.எவ்வளவு கடன் வாங்கி இருப்பார்கள்…? என்று தெரியவில்லை…!
வீட்டிற்குள் வந்தபின் இந்த நினைவெல்லாம்
வருகின்றது.
நானும் வீடு கட்டலாம் என்று நினைக்கின்றேன்… முடியவில்லை…! பெண்கள் மத்தியிலே இந்த உணர்வுகளை உருவாக்கி விடுகின்றார்கள்… ஆண்களும் அதே மாதிரித் தான்.
ஆனால் புதிதாக வீட்டைக் கட்டி இருக்கின்றார்கள்
1.அதை வாழ்த்த வந்திருக்கின்றோம் என்று தெரிவதில்லை.
2.அங்கே யாகத்தை வளர்த்து அவர்கள் சொல்லிக்
கொண்டிருப்பார்கள்.
3.ஆனால் இங்கே இந்த யாகத்தை நடத்தி வேண்டாத்தை எல்லாம் சிந்தனை பண்ணிக் கொண்டிருப்போம்.
கண் எரிகிறது என்று ஒரு சிலர் வெளியிலே
உட்கார்ந்து இருப்பார்கள். சொந்தபந்தங்கள் எல்லாம் கண்ணைக் கசக்கிக் கொண்டு உள்ளே உட்கார்ந்து இருப்பார்கள்.
ஞானிகள் நமக்குக்
காட்டியது உயிர் ஒரு நெருப்பு.
1.புது மனையிலே அமர்ந்து குருநாதர் காட்டிய வழியில் அகண்ட
அண்டத்தின் உணர்வுகளை இந்தப் பிண்டத்திற்குள் கொண்டு வருகின்றோம்.
2.இந்தப் பிண்டத்திற்குள் ஒளியாக மாற்றிய உணர்வின்
தன்மையை உங்களிடம் செவிகளில் படும்படிப் பதிவு செய்கின்றோம்.
இதைப் பதிவு செய்த நிலையில் உங்கள் உடலில் கை கால் வலியோ மற்ற நிலைகளோ குறைந்திருக்கும். மனதில்
ஒரு நிம்மதி இருக்கும்.
உபதேச உணர்வுகளை நீங்கள் காதிலே கேட்டு அதனின் மூச்சலைகள் இந்த வீட்டிற்குள் படர்ந்தால் எப்படி இருக்கும்…?
இந்தத் தியானத்தை எடுத்து
1.இந்த வீட்டிலே மகரிஷிகளின் அருள் சக்தி படர வேண்டும்.
2.தொழில் வளம் பெறுக வேண்டும்
3.இங்கே வசிப்போர் எதிர்காலம் நன்றாக இருக்க
வேண்டும் என்று எல்லோரும் சொன்னால்
4.இந்த வீட்டிலும் பதிவாகின்றது… இந்த வீட்டுக்காரர்கள் செவிகளிலும் படுகின்றது.
5.இந்த உணர்வை அவர்கள் நுகர்கின்றார்கள்… அவர் ரத்தத்தில் கலக்கின்றது.
6.இந்த வலுவான சக்தியை நாம் அனைவரும் சேர்ந்து
அவர்களுக்குக் கொடுக்கின்றோம்.
இது தான்
உண்மையான யாகம் என்பது. அது புறத் தீ… இது அகத் தீ…! அகத்திற்குள் இருக்கும் தீயிற்குள் (உயிறுக்குள்)
அருள் சக்தியைப் பாய்ச்சி அந்த உணர்வலைகளை ஊட்ட வேண்டும்.
இதையெல்லாம் நாம் தெரிந்து கொள்ள வேண்டும்.
காசைக் கொடுத்து யாகத்தைச் செய்து
பாவத்தைப் போக்கிவிடலாம் என்று நினைத்தால் அப்படி முடியாது. பாவத்தைச் சேர்க்கும் நிலையாகத் தான் ஆகும்.
ஆசை என்ற நிலைகள் வளரும்.
இருளைப் போக்கும் தன்மை நமக்குள் இருக்காது.
ஈஸ்வரா…! என்று உயிரை எண்ணி தீமை புகாது தடுக்கும் அந்தச் சக்தி பெற வேண்டும் என்பதற்குத்தான் இந்த
இல்லத்தில் அமர்ந்து யாம் இதை
உபதேசிப்பது.
ஆகவே குறைகளை நிவர்த்தி செய்ய வேண்டும் அருள் ஞானத்தைப் பெருக்கி அருள் உணர்வுகளைக் குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் ஊட்ட வேண்டும்.
1.பொறுமையுடன் பொறுத்திருந்து அருள் மணம் கமழும் வாக்கினை இந்தப் புது மனையிலே வெளிப்படுத்த வேண்டும்.
2.உலகிற்கு எடுத்துக்காட்டும் ஞானக் குடும்பமாக நாம் அனைவரும் வளர வேண்டும்.
3.அதை வளர்ப்பதற்குத் தான் இந்தப் பதிவும்…
நினைவும்… மீண்டும் நினைவும்…!
இது தான்
உண்மையான யாகம்.
ஆனால் யாகத்தை வளர்த்து மந்திரங்களைச் சொல்கின்றார்கள். இந்த மந்திரத்தை நாம் நுகர்ந்தால் உடலுக்குள் பதிவாகின்றது. இறந்த
பின் அதே மந்திரத்தைச் சொல்லி நமது ஆன்மாவைக் கைகவல்யப்படுத்த உதவும்.
மந்திரத்தின் உண்மை
நிலை இது தான்.
ஆனால் அருளைப்
பெற வேண்டும் என்று அந்த மகரிஷிகளின் உணர்வுகளைச்
செவி வழி உணர்ச்சிகளை உந்தி இரத்தத்தில் கலந்தால்
1.துருவ நட்சத்திரத்தின் உணர்வுகள் இந்த இல்லத்தில் பெருக்கப்பட்டு
2.இருளைப் போக்கி உணர்வின் தன்மை ஒளியாக மாற்றும் தன்மை வருகின்றது… பகைமையை அகற்றுகின்றது.