ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

August 11, 2026

அகஸ்தியரும் அவருடைய மனைவியும் இரு உயிரும் ஒன்றி வாழ்ந்த அருள் வாழ்க்கை

அகஸ்தியரும் அவருடைய மனைவியும் இரு உயிரும் ஒன்றி வாழ்ந்த அருள் வாழ்க்கை


அகஸ்திய மாமகரிஷி அவர்கள் தம்முள் உள்ள நஞ்சினை அடக்கிப்  புவியின் துருவத்தின் வழியாக விண்ணின் ஆற்றலைத் தம்முள் நுகர்ந்து
1.எதை எல்லையாக வைத்து எதனை நுகர்ந்தாரோ அதனின் ஆற்றலை தம்முள் பெற்றவர்.
2.புவியில் வாழ்ந்த காலத்தில் ஒவ்வொன்றின் உணர்வையும் அவர் நுகர்ந்தறிந்து
3.அதனைத் தம்முள் விளைய வைத்து அதனின் ஆற்றலைத் தம்முள் பெருக்கிக் கொண்டவர்.
 
 அகஸ்தியர் தம்முள் விளைய வைத்து வளர்த்துக் கொண்ட பேராற்றல்களை தம் மனைவியின் பால் பாய்ச்சித் தமது மனைவியும் மெய்யுணர்வின் தன்மை பெற வேண்டும்அதன் வழி கொண்டு இருளைப் போக்கி பொருள் காணும் திறன் பெற வேண்டும் என்றும் தம் மனைவி தம்முள் அறியாது சேர்ந்த நஞ்சை அடக்கி  தம்முள் சேர்த்த உணர்வுகளை ஒளியின் உணர்வின் தன்மையாக மாற்ற வேண்டும் என்றும் அந்த அருள் உணர்வுகளைத்  தன் மனைவிக்கு ஊட்டினார்.
 
 அகஸ்தியரின் மனைவிதமது கணவர் தமக்கு ஊட்டிய அருள் உணர்வின் தன்மைகளைத் தமக்குள் இணைத்து வளர்த்து அதன் நிலை கொண்டு பேரானந்தத்தின் உணர்வின் தன்மைகளை அறிந்து இவைகளைத் தாம் தன் கணவராலேயே பெற்றோம் என்று உணர்ந்து கொண்டார்.
 
அவ்வாறு உணர்ந்த பின்
1.தாம் பெற்ற பேரானந்தத்தின் உணர்வின் தன்மைகள் தமது கணவரிடத்தில் மென்மேலும் வளர வேண்டும்
2.அவர் உயர்ந்த ஆற்றல்களைப் பெற வேண்டும்.  
3.அவருடைய அருள் துணை கொண்டு தம்முள் அருள் ஆற்றல்கள் பெருக வேண்டும் என்ற உணர்வை வளர்த்து
4.தமது கணவரின் உணர்வுகளுடன் தமது உணர்வுகளை இரண்டற இணைத்து இரு உணர்வுகளையும் ஒரு உணர்வாக ஒன்றிணைத்து
5.இவ்வாறு அந்த இருவருமே துருவத்தின் ஆற்றல்களைத் தம்முள் வளர்த்துக் கொண்டார்கள்.
 
அகஸ்தியரும் அவரும் மனைவியும் தங்களுடைய உணர்வுகளை ஓர் உணர்வாக்கி விஷத்தை அடக்கி நல் ஒளியின் உணர்வினை தங்களுக்குள் வளர்த்து இரு உயிரையும் ஒரு உயிராக்கித் துருவத்தின் ஆற்றலை நுகர்ந்து  தங்களுக்குள் விளைய வைத்துத் துருவ நட்சத்திரமாக எதையும் அடக்கிடும்  உருவாக்கிடும் நிலையாக உருவானார்கள்.
 
அவர்கள் இன்றும் விண்ணிலே நம் பூமியின் துருவப் பகுதியில் துருவ நட்சத்திரமாக  என்றும் பதினாறாஅழியா ஒளிச் சரீரமாக வாழ்ந்து வளர்ந்து கொண்டுள்ளார்கள்.
 
பொதுவாக ஆண்பால் என்பது ஆதிக்க உணர்வும் பெண்பால் என்பது அரவணைத்து இயக்கும் நிலையும் கொண்டது. இதில் தனித்து இயங்கும் நிலையானால் முனியாகத்தான் ஆக முடியும்  என்ற உண்மையின் தன்மைகளை உணர்த்தியவர்கள் மெய் ஞானிகள்.
 
மெய் ஞானிகள் உணர்த்திய அருள் வழி கொண்டு ஒவ்வொரு குடும்பத்திலும் கணவனும் மனைவியும் இரு உணர்வும் ஒரு உணர்வாக ஒன்றுபட்டுஒருவர் மற்றவரை எண்ணி துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற வேண்டும் உயர்ந்த ஆற்றல்களைப் பெற வேண்டும்என்று ஒருவருக்கொருவர் எண்ண வேண்டும்.
 
1.இப்படிக் கணவனும் மனைவியும் ஒன்றிணைக்கும் பொழுது வலுவாகின்றது.  
2.துருவ மகரிஷிகளின் அருளுணர்வுகளை எளிதில் ஈர்க்கும் ஆற்றல் கிடைக்கின்றது.
 
வாழ்க்கையில் சந்தர்ப்பத்தால் வரும் தீமைகளை நீக்கும் நிலையாககணவனும் மனைவியும் தங்களுடைய உணர்வுகளை ஒன்றிணைத்துத் துருவ மகரிஷிகளின் அருள் உணர்வுகளை எண்ணி ஏங்கித் தியானித்து அதனின் உணர்வுகளை தங்களுடைய இல்லம் முழுவதும் படரச் செய்ய வேண்டும்.
 
அப்படிப் படரச் செய்யும் பொழுது அந்த இல்லத்தில் வசிப்பவர்களிடத்திலும் அந்த இல்லத்திற்கு வருகை புரிபவர்களிடத்திலும் அங்கே பதிந்துள்ள மகரிஷிகளின் அருள் உணர்வுகள் இணைந்துஅவர்களிடத்தில்  தீமைகளைப் போக்கும் நிலையாக மலரைப் போன்று நறுமணமும் மகிழ்ச்சியும் பெறும் நிலையாக விளைகின்றது.
 
ஆகவே கணவன் மனைவி இருவரும் அதிகாலை 4.00 மணியிலிருந்து 6.00  மணிக்குள் துருவ தியானத்தில் ஒன்றாக அமர்ந்து துருவ மகரிஷிகளின் அருள் ஆற்றலின் உணர்வுகளை எண்ணி ஏங்கித் தியானித்துத் தங்களுக்குள் இணைத்து  சந்தர்ப்பங்களால் வந்து சேரும் தீமைகளை நீக்கிப் பொருள் காணும் திறன் பெற்று நஞ்சை அடக்கி ஒளியின் உணர்வுகளாக வளர்க்கும் நிலை பெறுதல் வேண்டும்.
 
அதைப் போன்று நீங்கள் பார்ப்பவர்களும் உங்களைப் பார்க்கின்றவர்களும் மகரிஷிகளின் அருள் வட்டத்தில் இணைந்து தெளிந்த சிந்தனையுடன் மலரைப் போன்ற மணத்துடன் மகிழ்ந்து வாழ்ந்திடும் அருள் சக்தியும் பெறுதல் வேண்டும்.
 
1.கரண்ட்டில் பாசிடிவ் நெகடிவ்  என்ற இரு இணைப்பையும் கொடுக்கப்படும் பொழுது எப்படி விளக்கு ஒளி பெறுகின்றதோ அதே போன்று
2.கணவன் மனைவி இருவரும் தங்களுடைய உணர்வுகளை ஒருங்கிணைத்து
3.புவியில் படரும்  துருவ மகரிஷிகளின் அருள் உணர்வுகளைத்  தங்களிடத்தில் இணைத்துப் பெருக்க வேண்டும். 
4.அப்படிப் பெருக்கித் தங்களிடத்தில் நஞ்சான தீமைகளுக்கு இடமில்லாது செய்து அருள் உணர்வின் அணுக்களைப் பெருக்க வேண்டும். 
 
இதைப் படிப்போர்… நீங்கள் கணவனும் மனைவியும் மகரிஷிகளின் அருள் வட்டத்தில் இணைந்து  பிறவியில்லாத நிலையான அழியா ஒளிச் சரீர வாழ்வைப் பெறும் நிலையாக  இரு உயிரையும் ஒரு உயிராக்கிப் பேரின்பப் பெருவாழ்வாக வாழ்ந்து ஒவ்வொரு நாளும்  அருள் ஆற்றலைத் தங்களிடத்தில் வளர்த்துக் கொள்ளுதல் வேண்டும்.  எமது அருளாசிகள்.

தொழில் ரகசியம்

தொழில் ரகசியம்


தொழிலைப் பற்றிய ரகசியங்களை உங்களுக்கு வேண்டிய நண்பர்களுக்குச் சொல்வதற்கு முன்பு அவர் எப்படி உங்களுடன் பழகுகின்றார்…?” என்று தெரிந்து கொள்ள வேண்டும்.
 
தொழிலில் என்றைக்குமே கை மூடியே வைக்க வேண்டும். வாழ்க்கையை ஓட்டுவதற்கு ஓரளவுக்கு வருவாய் வந்து கொண்டிருக்கின்றது என்று இதை மட்டும் சொல்லலாம்.
 
நடப்பது அனைத்தையும்
1.நான் இந்தப் பக்கம் போய்த் தொழில் செய்தேன்பின் இந்தப் பக்கம் சென்றேன்
2.எனக்கு அதில் வருமானம் இப்படி எல்லாம் வந்தது என்று சொல்லக் கூடாது.
 
ஆனால் உங்கள் கூட்டாளியாக இருப்பவரிடம் போகும் பாதைகளை இப்படி இருக்கின்றது இதை எப்படி வழி நடத்தலாம்…? என்று இரண்டு பேரும் சிந்தனை செய்து செயல்படுத்துவது நல்லது.
 
இருவரும் கூட்டாளியாக இருந்து செயல்படுத்தும் போது ஒரு சிறு விஷயத்தை மறைத்து விட்டால் அவருக்கு உடனே நம்மிடம் மறைக்கின்றார் என்ற சந்தேகம் வந்துவிடும். ஆகவே அவரிடம் விஷயங்களைச் சொல்லக்கூடிய கடமைகள் உண்டு.
 
அதே சமயத்தில் மனைவியிடம் இந்த உண்மைகளை வெளிப்படுத்தி அவர்களுக்கு சந்தோஷத்தை ஊட்டலாம் தொழில் உயர வேண்டும் என்ற உணர்வை ஊட்டலாம்.
 
ஆனால் மிக முக்கிய நண்பராக இருந்தாலும்
1.ஏதோ உங்கள் ஆசியினால் தொழில் நன்றாக இருக்கின்றது
2.உங்கள் ஆசி மீண்டும் தேவைப்படுகிறது என்று அவர்களை உயர்த்தி நாம் இப்படிக் கொண்டு வர வேண்டும்.
 
 ஆனால் பப்ளிக்காக நாம் இதைச் சொல்ல தொடங்கினால் ஒருத்தருடைய உணர்வு விஷத் தன்மையாக இருக்கும். நாம் சொல்லும் பொழுதே அப்படியா…! என்று அவர்கள் கண்ணின் பார்வையும் உற்று நோக்குவதும் இந்த நினைவாற்றலை அதற்குள்ளேயே நாம் தெரிந்து கொள்ளலாம்.
 
ஆகவே தொழிலின் ரகசியங்களை நாம் சொல்லவே கூடாது.
 
உலகிலேயே ஒரு புதிய தொழிலில் ஒரு பொருளைக் கண்டுபிடிக்கிறார்கள் என்றால் அதில் என்னென்ன சரக்கைப் போட்டிருக்கின்றோம்…? என்று விளம்பரப்படுத்துவார்கள். ஆனால் முக்கியமான பொருளைக் காட்டவே மாட்டார்கள்.
 
1.அரசாங்கம் கட்டாயப்படுத்தினாலும் அதில் ஒரு முக்கியமான பொருளையும்
2.அதனுடைய கலவை விகிதம் எவ்வளவு என்று சொல்ல மாட்டார்கள்.
3.மற்றதையெல்லாம் இன்னென்ன அளவு என்று எழுதியிருப்பார்கள்.
 
ஆனால் முக்கிய பொருளை மாற்றி விடுவார்கள். அதிலே போட்டிருப்பது போன்று மற்றவர்கள் கலவை செய்து பொருளை உற்பத்தி செய்தால் தரம் சரியாக வராது வித்தியாசமாகிவிடும்.
 
அரசின் சட்டப்படி சொன்னாலும் அதற்காக வேண்டி இவர்கள் அளவுகோல்களை மாற்றி விடுவார்கள். அதிலே இல்லாத சரக்கையும் சேர்த்து விடுவார்கள். மற்றவர்கள் செய்து பார்த்தால் கடைசியில் வராது. அவர்கள் கொண்டு வரும் தரத்தை இங்கே கொண்டுவர முடியாது.
 
தொழில் ரீதியிலே நாம் மறைத்துச் சொல்ல வேண்டி இருக்கின்றது.
 
ஆன்மீக ரீதியிலே நீங்கள் வளரக்கூடிய உண்மை நிலைகளைச் சொல்லலாம். அந்த ஆன்மீகத்திலும் கூட
1.எனக்கு இவ்வளவு பெரிய காட்சிகள் கிடைத்தது சக்திகள் கிடைத்தது என்று சொன்னால்
2.பார்…! அவருக்குக் கிடைக்கின்றது எனக்குக் கிடைக்கவில்லை…! என்று இதிலும் பொறாமை உணர்வு வரும்.
 
உங்களுக்கு எப்படி இவ்வளவு கிடைக்கிறது…?
1.சாமி உங்களுக்கு ஸ்பெஷலா கொடுக்கின்றாரா…? என்று ஒருவர் கிண்டலாகவும் கேட்பார்.
2.உனக்கு மட்டும் தெரிகின்றது எனக்கு ஏன் தெரியவில்லை…? என்று பொதுத் தன்மையில் வருபவர்கள் சிலர் இப்படியும் வந்து விடுவார்கள்
 
ஆகவே எதைச் சொல்ல வேண்டும்…? எதைப் பேச வேண்டும்…? என்று உணர்வின் தன்மை முழுமை அடைய நம் எண்னத்தைச் செலுத்துதல் வேண்டும்.
 
நாம் தெரிந்து கொண்ட உணர்வுகளைப் பக்குவப்படுத்த நாம் இப்படி இருக்க வேண்டும் இப்படிச் செய்ய வேண்டும் என்று
1.உங்களுக்குள் தெரிந்த கருத்தை நீங்கள் சொல்வதாக இருக்க வேண்டுமே தவிர
2.இந்தக் கருத்துக்கள் எனக்குத் தெரிந்தது என்று சொல்லக்கூடாது.
 
இதனால் பெரும் பிழைகளும் சந்தேகமும் அவமதிப்பும் சில நிலைகள் எல்லாம் ஏற்படும். இன்றைக்கு இருக்கும் சமுதாயத்திற்கு மத்தியில் இப்படி எல்லாம் நாம் வழி நடத்திச் செல்ல வேண்டி இருக்கின்றது.
 
பார்அவருக்கு மட்டும் எல்லாம் தெரிகிறது…! அவர் என்னமோ உளறுகின்றார்எல்லாம் தெரிந்த மாதிரிப் பேசுகிறார்…! என்று மற்றவரிடம் சொல்வார்கள்.
 
இதை நீங்கள் கேட்டால் என்ன செய்வீர்கள்…? ஆகவே உண்மை நிலைகள் தெரிந்தால்
1.அவர்களைப் பக்குவப்படுத்தக்கூடிய ஒரு ஞானத்தின் வழிகளிலே நீங்கள் சொன்னால்
2.நீங்கள் சொல்வதாகத் தெரிந்து கொள்வார்கள்.
 
எனக்குத் தெரிந்தது இப்படி நீங்கள் நடந்து பாருங்கள்…! என்று சொன்னால் பிழையாகும். ஆன்மீகத்திலும் இப்படி ஒரு நிலை. மனிதனின் உணர்வுகள் எலக்ட்ரிக் எலக்ட்ரானிக் உணர்வின் தன்மை அழுத்தமான பின் இன்னொரு மனிதன் இதைத் தாங்கும் நிலை இல்லை.
 
அவருக்கு அதைத் தாங்க முடியவில்லை என்றால் எதிர்மறை பொறிகளாகிவிடும் அவர் உடலுக்குள் அந்த எதிர்ப்புகள் ஏற்படும். ஆனால் அவர்களுடைய குற்றம் அல்ல.
 
யாரும் வேண்டுமென்று அவ்வாறு சொல்வதில்லை.
 
ஆனால் இந்த உணர்வின் அழுத்தங்களாகும் பொழுது உணர்ச்சிகள் மாறுபட்டுவிடும். அழுத்தமாகும் போது அவர் உடலுக்குள் எதிர்ப்பு நிலைகள் உருவாகும் பொழுது வித்தியாசமாக வந்துவிடும். இது எல்லாம் உணர்வின் இயக்கம் தான்.
 
ஆகவே நீங்கள் பக்குவப்படுத்தி நடந்து கொள்ளுங்கள்.