ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

January 14, 2026

அசைவம் சாப்பிடுவதால் வரும் தீமைகள்

அசைவம் சாப்பிடுவதால் வரும் தீமைகள்


இப்பொழுது ஊரில் ஆட்டை அறுக்கின்றார்கள்… ஆட்டை அறுப்பவர்கள் ஆட்டினை ஈகையுடனா பார்க்கின்றார்கள்?  அதைக் கொல்ல வேண்டும்…! என்ற உணர்வுடன் பார்க்கின்றார்கள்.
 
கறிக் கடைக்குச் சென்று கறி வாங்கச் செல்கின்றவர்கள் கடைக்காரர் ஆட்டை அறுப்பதைப் பார்த்தால் கறி வாங்கச் சென்றவர்களுக்கு எச்சில்…” ஊறிக் கொண்டே இருக்கும்.
 
ஆடு அறுக்கப்பட்டு ஆட்டின் கறி தமது கைக்கு வருவதற்கு முன்னால் ஆடு அறுக்கப்படுவதை ரசித்து வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பார்கள்.
 
ஆனால் இப்படி ஆடு அறுக்கப்படுவதை வேடிக்கை பார்க்கப்படும் பொழுது என்ன நடக்கின்றது…? என்பதை நேரடியாக அனுபவபூர்வமாகக் காண்பித்தார் குருநாதர். 
 
கறி சாப்பிடுகின்ற ஆர்வத்தில்,  ஆடு அறுக்கப்படுவதை வேடிக்கை பார்த்து இரசித்துக் கொண்டிருப்பார்கள்.
1.அறுக்கப்படும் ஆடோ கத்திக் கொண்டிருக்கும்.
2.ஆடு அறுக்கின்றவரைப் பார்த்து அவனை  ஏங்கி "இந்த மாதிரிக் கொல்கின்றானே" என்ற  உணர்வோடு வேதனைப்படுகின்றது. 
 
கடைக்காரரோ… ஆட்டை வேதனைப்படுத்திக் கொன்று,  தான் காசு சம்பாதிக்க வேண்டும் என்றிருக்கும் பொழுது இதனின் உணர்வுகள் அவருக்குள் கவர்ந்தபின் இந்த ஆன்மா அடுத்தவரின் உடலில் எப்படிச் செல்கின்றது…? என்பதனைக்  காண்பித்தார் குருநாதர்.
 
அதே சமயத்தில் ஆட்டுக் கறி வாங்கப் போன  இடத்தில் ஆட்டின் இரத்தத்தை வாங்குவதற்காக நின்று கொண்டிருப்பார்கள். ஆட்டை அறுப்பதை இரசித்துக் கொண்டு இரத்தம் எப்பொழுது கொடுப்பார்கள் என்று காத்திருப்பார்கள். ஆட்டை அறுத்து முடித்தவுடனே, இரத்தத்தை தான் தான் முதலில் வாங்க வேண்டும் என்று காத்திருப்பார்கள். 
 
ஆட்டை அறுக்கும் பொழுது ஆட்டினிடத்தில் உருவான வேதனையை நாம் இரசித்து பார்க்கும் பொழுது
1.நுகர்ந்த வேதனையின் உணர்வுகள் நமது உயிரில் பட்டு நம்முள் உமிழ் நீராக மாறி நமது சிறுகுடலில் கலக்கின்றது. 
2.நுகர்ந்த  வேதனையின்  உணர்வுகள் உமிழ் நீராக மாறினாலும் அந்த உமிழ் நீருடன் இயக்க அணுக்கள் கலந்து
3.இரத்தமாக மாறும் பொழுது இயக்க அணு "ஜீவ அணுவாக" மாறுகின்றது.  
4.ஆடு எத்தகைய வேதனைகளை அனுபவித்ததோ அந்த வேதனையின் உணர்ச்சியின் அணுக்கள் உடல் முழுவதும் படர்கின்றது.
5.அந்த உறுப்புகளில் எந்த வேதனை வருகின்றது…? என்பதைச் சுட்டிக் காண்பித்தார் குருநாதர் 
 
நாம் புழுவிலிருந்து மனிதராக வரும் வரையிலும் கொடுமைகளில் இருந்து தப்ப வேண்டும் என்ற உணர்வின் வலிமைகளைச் சேர்த்துச் சேர்த்துப் பரிணாம வளர்ச்சி அடைந்து வந்தோம் என்பதைப் பார்த்தோம்.
 
இப்போது மனிதரானபின் இரக்கமற்ற நிலைகளில் ஆட்டைக் கொல்லும் பொழுது அப்படிக் கொன்று,  ஆட்டின் உயிரான்மா வெளி வரும் பொழுது கொன்றவரின் உடலிலோ அல்லது கொல்லத் தூண்டியவரின் உடலிலோ ஆட்டின் உயிரான்மா இணைந்து விடுகின்றது.
 
ஏனென்றால்
1.ஆட்டினுடைய எண்ணங்கள் இன்னார்தான் நம்மைக் கொல்லச் சொல்லித் தூண்டினர்  என்றும்
2.இவர்தான் நம்மைக் கொன்றார் என்றும் அந்த உணர்வுகள் அங்கே வந்து
3.அவருடைய  உடலுக்குள் ஆட்டின் உயிரான்மா புகுந்து விடுகின்றது. 
 
ஆனால் ஆட்டைக் கொன்றவரிடத்தில் இரக்கம் ஈகை சிறிதும் இல்லை. ஆகவே அவரிடத்தில் இரக்கமற்றுக் கொல்லும் உணர்வின் வலிமை அதிகமாகின்றது. அந்த மனிதரிடத்தில் பரிவு பண்பு என்பது துளியும் இல்லை.
 
இத்தகைய நிலை வரும் பொழுது
1.இந்த மனித உடலின் முதுமைக் காலத்தில் மிருக உணர்வின் தன்மையே  மிஞ்சும்.
2.மனித உடலின் உணர்வுகள் அனைத்தும் அழுகிவிடும்.
3.பின் மனித உடலை  விட்டுப் பிரியும் உயிரான்மா மிருகப் பிறவிக்கே போகின்றது.
 
நுகர்ந்த உணர்வுக்கொப்ப இன்று மனிதராக இருக்கின்றார்நாளை மனிதரல்லாத நிலைகளில் எப்படிச் சேர்கின்றார்…? என்பதனையும், இது காண்பிக்கின்றது.
 
1.நீ வேடிக்கை பார்க்கின்றாய் நுகர்ந்த உணர்வு உமிழ்நீராக மாறுகின்றது.
2.உமிழ்நீர் ஆகாரத்துடன் கலந்து சிறு குடலில் கலந்தபின் அந்தச் சிறு குடலின் அணுக்கள் எப்படி இயக்கமாகின்றது.
3.பின் பெருங்குடலுக்குப்  போகும் பொழுது வேதனை உணர்வுகள் ஆகாரத்தை ஜீரணிக்க மறுக்கின்றது.
4.நாம் சத்துள்ள ஆகாரங்களைச் சாப்பிட்டாலும் ஜீரணிக்க முடியாத நிலை எப்படி ஆகின்றது…?
5.ஆகாரம் இரத்தமாக மாறி கல்லீரல் மண்ணீரலுக்கு வந்து சேரும் பொழுது இரத்தத்துடன் எப்படி ஜீவ அணுக்களாக மாற்றுகின்றது. 
6.முதலில் இயக்க அணுவாக இருக்கின்றது… உடலுக்குள் போனவுடன் ஜீவ அணுவாக மாறுவதும்
7.அதனுடைய மலம் உடலில் சேரும் பொழுது ஏற்கனவே நல்ல அணுக்களால் உருவாக்கப்பட்ட மலங்களில் பட்டபின், 
8.அது நல்ல அணுக்களின் தசைகளைஉறுப்புகளை எப்படிக் குறைக்கின்றது…? என்பதை அனுபவபூர்வமாகக் காண்பித்தார் குருநாதர். 
 
உடலில் சிறிய புண்ணாக உருவாக்கி சீழ் பிடித்ததென்றால் வட்டமாக அப்படியே கரைத்துக் கொண்டே போகும்.
 
அதாவது வேதனை உணர்வால் விளைந்த அணுக்கள் தசைகளைக் கரைத்து எப்படிச் சீழாக மாற்றுகின்றது என்பதனையும் நமது உடலின் உறுப்புகள் தேய்ந்து மறுபடியும், நம்முள் விஷத்தன்மைகள் எப்படி வளர்ச்சி அடைகின்றது…? என்பதனையும் குருநாதர் அங்கே அனுபவபூர்வமாக அறியச் செய்தார்.
 
ஏனென்றால் எத்தனயோ கோடி  உடல்களைக் கடந்து மனிதராகப் பிறந்தபின் இரக்கமற்ற செயல்கள் செய்து மற்றவர்களைத் துன்புறுத்தி வாழ்கின்றார் என்ற நிலையும் பார்க்கின்றோம்.
 
தெய்வங்களின் பெயரைச் சொல்லி ஒன்றுமறியாத ஜீவன்களைப் பலியிட்டு எனக்குச் சுகம் வேண்டும் என்று வேண்டி பிழைகள் செய்து வாழ்ந்து கொண்டிருக்கின்ற நிலையும் பார்க்கின்றோம்.
 
1.இது போன்ற பிழைகளைச் செய்து
2.தம்முள் தீமைகளையும் விஷத்தையும் வளர்க்கும் நிலையைத் தவிர்த்து
3.நம்முள் அருள் ஞானிகளின் அருள் உணர்வுகளை வளர்த்தோம் என்றால்
4.இதற்கு முன் அறியாது சேர்த்த இருளை அகற்ற முடியும்…. தீமைகள் வராது காக்க  முடியும்.

நம்மை இயக்கும் ஆன்மாக்களால் வரும் தீமைகள்

நம்மை இயக்கும் ஆன்மாக்களால் வரும் தீமைகள்

(1)
 
ஒரு முறை யாம் குருதேவருடன் சென்னையிலிருந்து மும்பைக்கு இரயிலில் சென்று கொண்டிருந்தோம். அப்பொழுது இரயிலில் ஒரு நோய்வய்ப்பட்ட பெண்மணியை அவர்களுடைய உறவினர்கள் வேலூர் ஆஸ்பத்திரியிலிருந்து மும்பைக்கு அழைத்துச் சென்று கொண்டிருந்தார்கள்.
 
நோய்வாய்ப்பட்ட பெண்மணி வேதனை தாளாமல் உறவினர்களிடம் தண்ணீர் கொடு அது கொடு இது கொடு…!என்று கேட்டுக் கொண்டே இருந்தார்.
 
ஆனால் உறவினர்களோ மருத்துவர் சொன்னபடி உணவோ தண்ணீரோ ஒரு அளவிற்கு மேல் கொடுக்கக் கூடாதுஎன்பதைக் கடைப்பிடித்துக் கொண்டிருந்தார்கள்.
 
ஆனால் நோய்வாய்ப்பட்ட பெண்மணியோ… “அடப்பாவிகளா…! எனக்கு நாக்கு இழுத்துக் கொண்டிருக்கின்றதுஉண்ணுவதற்கு எதுவும் கொடுக்கமாட்டீர்களா?” என்று சாபமிட்டுக் கொண்டிருந்தார்.
 
உறவினர்கள் நோயாளியைப் பார்த்து நீ சும்மா இருக்க மாட்டாயா…?என்று மிரட்டுகிறார்கள்.
 
அங்கே இரயிலில் உடன் வந்தவர்கள்… அந்த நோயான பெண்மணியைப் பார்த்துஉனக்கு என்ன வேண்டும் அம்மா…?என்று இரக்கமாகக் கேட்டார்கள்.
 
அதற்கு உறவினர்கள் ஏனம்மா…! என்ன கொடுக்க வேண்டும் என்று எங்களுக்கு தெரியாதா? நீ ஏன் கேட்கிறாய்?” என்று சொன்னவுடன் நோயான பெண்மணி பார்…! உதவி செய்பவர்களைக் கூட திட்டுகிறார்களேஎன்று எண்ணுகின்றார். 
 
சந்தர்ப்பம்இது போன்ற உணர்வுகளை நுகரும் பொழுது உயிர் அதை ஜீவ அணுவாக அவர்களுக்குள் உருவாக்குகின்றது. குருநாதர் இதைக் காண்பித்தார்.
 
ஆனால் அங்கு யாரும் தவறு செய்யவில்லை. 
 
1.மருத்துவர் கூறிய அறிவுரையை உறவினர்கள் கடைபிடிக்கிறார்கள்
2.எதற்காக? நோயான பெண்மணியைக் காப்பாற்ற வேண்டும் என்று…!
 
ஆனால் நோயான பெண்மணியோஇப்படி அவஸ்தைப்படுகிறேனே… கேட்டதைக் கொடுக்க மாட்டேன் என்கிறார்களே…! கொஞ்சம்கூட இரக்கம் இல்லையே…?என்று எண்ணுகின்றார்.
 
இந்த உணர்வின் சொல்லைக் கேட்டவுடனே உறவினர்கள் வேகம் கொண்டு நீ பேசாமல் இரு…!என்கிறார்கள்.
 
இதனால் நோயான பெண்மணி… “நாம் இவர்களுக்கு எத்தனை செய்திருப்போம்என்னுடைய நோயின் தன்மை தெரியாமல் இப்படிச் சீறிப் பாய்கிறார்களேவேதனைப்படுத்துகிறார்களே…!என்று நோயாளியின் உணர்வுகள் மாறுகின்றது. 
 
இதெல்லாம் சந்தர்ப்பங்கள்…!
 
இரயிலை விட்டு இறங்கியவுடன் நோயான பெண்மணியின் வீடு வரை எம்மை சென்று வரச் சொல்லிவிட்டு குருநாதர் ஒரு இடத்தில் இருந்து விட்டார்.
 
யாம் அவர்களை பின் தொடர்ந்து அவர்கள் வீடு வரை சென்றோம். இரண்டு நாள் அங்கே இருந்தோம். மூன்றாம் நாள் நோயான பெண்மணியின் உயிராத்மா பிரிந்தது.
 
இரயிலில் வரும் பொழுது
1.நோயான பெண்மணிக்காக யார் பரிந்து பேசினார்களோ அவர்களுடைய நினைவு
2.இந்த நோயான பெண்மணிக்கு சாகும் தருவாயில் வருகிறது…  மகராசி…! எனக்கு உதவி செய்தாளேஎன்ற எண்ணம் வந்தது.
 
ஆனால் உறவினர்களை நினைத்து என்னுடைய எல்லாச் சொத்துக்களையும் வைத்துக் கொண்டு துரோகம் செய்தார்களேஎன்று சாபமிட்டது.
 
இத்தகைய சாப அலைகளை நுகர்ந்த உறவினர் குடும்பத்தில் சாப உணர்வுகள் விளைந்து பெருகி அவர்கள் குடும்பத் தொழில் நசுங்கியது.. குடும்பத்தில் பல குழப்பங்கள் விளைந்தது.
 
இதையெல்லாம் பார்க்கும்படியாக
1.குருநாதர் எம்மை “48  நாட்கள் அந்த வீட்டிற்கு அருகாமையில் இருந்து பார்க்கும்படி செய்தார்.
2.ஒரு பக்கத்தில் அமர்ந்து இங்கே என்ன நடக்கிறது…? என்று பார்த்துக் கொண்டிருந்தோம்.
 
அதே சமயத்தில் நோயான பெண்மணிக்கு யார் பரிந்து பேசினார்களே அவர்கள் நோயான பெண்மணியின் வீட்டுப் பக்கம் வந்து பார்த்தவுடனே நோயான பெண்மணியின் உயிராத்மா, இவருடைய உடலுக்குள் புகுந்து விட்டது.
 
புகுந்த பின்…  தான் அது எப்படியெல்லாம் நோயால் அவஸ்தைப்பட்டதோ அதே வேதனையின் உணர்ச்சிகளை புகுந்து கொண்ட உடலுக்குள் ஊட்டுகின்றது.
 
குருநாதர் இதையும் பார்க்கச் சொன்னார்…! ஆன்மா இன்னொரு உடலுக்குள் செல்கின்றது… இவரை எப்படிச் சிரமப்படுத்துகின்றது என்று…!
 
தொடர்ந்து வருடைய வீட்டில் ஒருவருக்கொருவர் குழப்பமாகி வியாபார மந்தம் தங்களை அறியாமலே குழந்தைகளிடம் சீறிப் பேசுவது, தவறான நிலையில் பேசுவது சங்கடங்கள் போன்ற பல இயக்கங்க நடப்பதை எல்லாம் அங்கே எம்மைக் கண்டுணரும்படி செய்தார். 
 
இயற்கையின் இயக்கத்தில்
1.சந்தர்ப்பம், மனிதர்களை எப்படிக் குற்றவாளியாக ஆக்குகின்றது?
2.சந்தர்ப்பத்தால் நோய் எப்படி விளைகின்றது? என்பதையெல்லாம் குருநாதர் தெளிவாகக் காண்பித்தார்.
 
(2)
கோலமாமகரிஷி ரிஷி நிலை எப்படிப் பெற்றார்…? என்று அறிவதற்காக மங்களூர் அருகில் உள்ள கொல்லூரில் யாம் தியானமிருந்து வந்தோம்.
 
அதற்காக மங்களூரில் நண்பர் வீட்டில் தங்கியிருந்தோம். அப்பொழுது அங்கிருந்து இன்னொரு வீட்டிற்குப் போய் வருமாறு குருநாதர் கூறினார். அங்கு போனோம்.
 
அந்தக் குடும்பத்தில் ஒரு ஆண் குழந்தை பிறந்தது. பையன் பிறந்த பின் சந்தர்ப்பத்தால் பையனுடைய அப்பா இறந்து போனார். அப்பா இறந்தவுடன் பையனுடைய அம்மா வேதனை கொள்கின்றார்.
 
பையனுக்கு ஏற்கனவே மூத்த சகோதரி இருக்கிறார். அந்த இரண்டு குழந்தைகளையும் விட்டு விட்டுத் தன் கணவர் இறந்து விட்டாரே இரண்டு குழந்தைகளையும் என்ன செய்வது…?என்று அம்மா எண்ணினார்கள்.
 
இப்படித் தன் கணவருடைய உணர்வையே எடுத்துக் கொண்டபின் சிறிது நாட்களில் பையனுடைய அம்மாவும் இறந்து போனார்கள்.
 
இந்தப் பையனுடைய அம்மாவின் அம்மாஅதாவது பையனுடைய பாட்டி தான் தொழில் செய்து குடும்பத்தைப் பராமரித்து வந்தார்கள்.
 
இப்படிப்பட்ட நிலையில் பாட்டி தன் பேரனைப் பார்த்து, “நாசமாகப் போகிறவன்…! இவன் பிறந்தான் இரண்டு பேரைக் கொன்று விட்டான்…! தொலைந்து போடா நாசமாகப் போகிறவனே…!என்று பேரனைக் கண்டாலே விரட்டினார்கள்.
 
பையனுடைய அக்காவோ… “அவன் என்ன செய்வான் பாட்டி…? அவர்கள் இறந்து போனால் இவன் என்ன செய்வான்…! இவனா அவர்களைக் கொன்றான்…?என்று பையனுடைய சகோதரி தன் சகோதரனை அரவணைத்துப் பேசினாள்.
 
ஆனால் பாட்டிஅவனுக்குச் சோறு போடாதே…! வெளியே தள்ளிவிடுஎங்கேயாவது பிச்சையெடுத்துச் சாப்பிடட்டும்…!என்று சொல்கிறது.
 
ஆனால் பையனுடைய அக்காதம்பி என்ன செய்வான்…?என்று கூடுமான வரையில் தன் தம்பியைப் பாதுகாத்து வளர்த்து வந்தாள்.
 
பாட்டியோ… “பையன் பிறந்தவுடன் அப்பா இறந்தார், மூன்று வருடங்களில் அம்மாவும் இறந்தார். வியாபாரமும் கெட்டதுஇருக்கின்ற சொத்தும் போனது…!என்ற உணர்வுகளை வளர்த்துக் கொண்டபின் தன் பேரனை வெடுக்வெடுக்என்று கடுமையாகத் திட்டிப் பேசினார்கள். 
 
1.தன் பேரன் மேல் பாட்டிக்கு வெறுப்பு அதிமான அதே நேரத்தில் தன் பேத்தி மீது அதிகமான பாசத்தைக் காண்பித்தார்கள்.
2.இதனின் தொடர் கொண்டு பாட்டி இறந்த பின்பாட்டியின் உயிராத்மா அந்தப் பேத்தியின் உடலுக்குள் சென்றுவிட்டது.
 
பேத்தியின் உடலுக்குள் பாட்டியின் உயிராத்மா சென்றபின் என்ன நடக்கிறது…?
 
பாட்டி பையனை எப்படித் திட்டிப் பேசினார்களோ அதே போன்று பையனின் சகோதரியும்
1.தன்னுள் பாட்டியின் உயிராத்மா இணைந்துள்ள நிலையில்
2.தம்பியைப் பார்த்து, “தோலைந்து போடாநாசமாகப் போடாஎன்று சொன்னாள். 
 
அதன்படியே தம்பியையும் விரட்டினாள்.
 
ஒரு உடலில் வளர்த்துக் கொண்ட உணர்வுகள் மற்றொரு உடலுக்கு மாறுவதும் இதனின் உணர்ச்சிகள் வந்ததும் செயலாக்கங்கள் எப்படி அமைகின்றதென்றும் யாம் அறிந்து கொள்ளவே குருநாதர் எம்மை மங்களூருக்கு அனுப்பினார்.
 
அதற்கான இடத்தைக் காண்பித்து
1.“இன்னின்ன நிகழ்ச்சிகள் நடக்கும்… அதனை நீ பார்என்று சொல்லியிருந்தார் குருநாதர்.
2.அவர் சொன்னது போன்றே நடந்தது.
 
இதன் தொடர் கொண்டு பெண் பிள்ளையின் உடலில் வேதனை உணர்வுகள் வளர்ந்து நோய் வந்து பையனின் சகோதரியும் மடிந்து விட்டது.
 
பையனோஒதுக்கப்பட்ட நிலைகளிலிருந்து மற்றவர்களால் காக்கப்பட்டு அவன் தொழிலில் பெரியவனாக வளர்ந்து விட்டான்.
 
ஒதுக்கப்பட்டாலும்
1.தன் மீது பற்று கொண்டு தான் எப்படியும் வளர வேண்டும் என்று மற்றவர்களின் அன்பைப் பெற ஆரம்பித்தான்.
2.பாவம் பையன் என்ன செய்வான்…!என்று எண்ணிய உணர்வு கொண்டு மற்றவர்கள் அவனுக்கு உதவிகள் செய்தனர்.
 
அவன் சிறந்த விஞ்ஞானியாகவே ஆகிவிட்டான்…. அமெரிக்காவில் இருக்கின்றான். அவன் அனாதையாக இருந்தாலும் தன் உணர்வின் வேகத்தைக் கூட்டித் தன்னைக் காக்க வேண்டுமென்ற உணர்வை எடுத்து விஞ்ஞானி என்ற நிலை பெற்று விட்டான்…!
 
இது நடந்த நிகழ்ச்சி…! 

துருவ நட்சத்திரத்தின் சக்தியை அனைவருக்குள்ளும் பொங்கச் செய்வோம்

துருவ நட்சத்திரத்தின் சக்தியை அனைவருக்குள்ளும் பொங்கச் செய்வோம்


பொங்கல் நாளில் அருள் ஞானத்தை நமக்குள் பொங்கச் செய்வோம்.
 
இருளை நீக்கிடும் அருள் நாளாக அது அமைந்து அருள் வழியில் மகரிஷிகளின் உணர்வுகளை நம் உடலில் சேர்த்து அருள் உணர்வுகளை பொங்கச் செய்து இருளை அகற்றி நம் பேச்சும் மூச்சும் உலக மக்கள் அனைவரையும் நலம் பெறச் செய்யும் சக்தியாகவும் நமது குடும்பங்களில் அருள் உணர்வுகளைப் பொங்கி அருள் வழி வாழ்ந்து மகிழ்ந்து வாழும் உணர்வின் தன்மையை நமக்குள் வளர்ப்போம்.
 
சூரியன் இந்தப் பிரபஞ்சத்தை இருளை நீக்கிடும் நிலையாக எப்படி வளர்க்கின்றதோ இதைப் போல்
1.ம் உடலுக்குள் இருக்கும் எத்தனையோ கோடி உணர்வுகளையும் (அணுக்களில்)
2.துருவ நட்சத்திரத்தின் பேரருளைக் கொண்டு நமக்குள் சுவைமிக்க உணர்வின் ஞானத்தைப் பொங்கும்படி செய்து
3.அருள் வழி வாழும் பிறவி இல்லா நிலை அடையும் அருள் உணர்வுகளை நாம் பொங்குவோம்.
 
இன்றிலிருந்து…
1.அருள் ஞானத்தைப் பெருக்குவோம்
2.அருள் வழியில் வாழ்வோம்
3.இருளை அகற்றுவோம்
4.மெய்ப்பொருளைக் காண்போம் மெய் வழி வாழ்வோம்
5.னைவரையும் அரவணைத்து வாழ்வோம்
6.அன்புடன் வாழ்வோம் பண்புடன் வாழ்வோம்
7.பரிவுடன் வாழ்வோம் என்ற இந்த உணர்வுடன் நம் மனதை நிறைவுபடுத்தி அருள் வாழ்க்கை வாழ்ந்திடுவோம்.
 
இந்த நாளை அருள் ஞான நாளாக துருவ நட்சத்திரத்தின் உணர்வைச் சேர்த்துப் பொங்கும் மங்களமாக என்றும் நமக்குள் அது வளர்ந்து அருள் மம் தவழும் அருள் ஞானத்தை நமக்குள் பொங்கச் செய்வோம்.
 
நம் பேச்சும் மூச்சும் கேட்போரை மகிழ்ந்து வாழச் செய்வோம்.
1.நமது குரு அருள் நமக்குள் பரவி
2.அந்த உணர்வுகளை உலகம் முழுவதும் பரவச் செய்வோம்.
 
உலக மக்கள் அருள் ஞான வழியில் அருள் வழியில் வாழ்ந்திடும் மலரைப் போன்ற மன மகிழ்ந்து வாழ்ந்திடும் அருள் வாழ்க்கை வாழச் செய்யும் அந்தச் சக்தியை நாமும் பெறுவோம்.
 
நம் உடலில் அதை வளர்ப்போம். உலக மக்கள் அனைவரையும் அதைப் பெறச் செய்வோம். அவர்களை மகிழச் செய்வோம் உலக மக்களை மகிழ்ந்து வாழச் செய்வோம் என்று உறுதிப்படுத்துவோம்.
 
துருவ நட்சத்திரத்தின் பேரருளை நமக்குள் பெருக்குவோம்… பொங்கச் செய்வோம்.
1.எல்லோருக்குள்ளும் அதைப் பொங்கச் செய்வோம்
2.அந்த அருள் மத்தை எல்லோருக்குள்ளும் வளர்க்கச் செய்வோம்.
 
நாம் இதையே தியானிப்போம் தவமிருப்போம்…!