ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

May 11, 2026

உடல் உறுப்புகள் சீராக இயங்க அடிக்கடி ஆத்ம சுத்தி செய்ய வேண்டும்

உடல் உறுப்புகள் சீராக இயங்க அடிக்கடி ஆத்ம சுத்தி செய்ய வேண்டும்

 

இந்த மனித வாழ்க்கையில் அடிக்கடி சஞ்சலம் சலிப்பு சங்கடம் என்ற உணர்வுகளை நுகர நேர்ந்தால் ரத்தங்களில் அத்தகைய தீமைகள் அதிகரித்து விடுகின்றது. சலிப்பு சஞ்சலம் என்று வரும் பொழுது நாம் உணவாக உட்கொள்ளும் உணவை ஜீரணிக்கும் தன்மை இழந்து விடுகின்றது.

1.சிறிது நேரத்தில் புளிப்படைந்து உடல் வலு குறைந்து எண்ணங்கள் குறைந்து நமது செயலும் சீராகச் செயல்படுத்த முடியாது போய் விடுகின்றது.
2.புளிப்பின் தன்மை அதிகரிக்கும் பொழுது வாயுவின் தன்மை உருவாகி சோர்வடைகின்றோம்... சிந்திக்கும் தன்மையும் குறைகின்றது
3.தொழில் செய்ய வேண்டும் என்றாலோ மற்ற வேலை செய்ய வேண்டும் என்றாலோ ஒரு கணக்கைப் பார்க்க வேண்டும் என்றாலோ நம்மால் முடியாது போய் விடுகின்றது.

இப்படி நாம் எடுத்துக் கொண்ட உணர்வுகள் அனைத்தும் ரத்தத்தில் கலக்கப்படும் பொழுது நம்மை அறியாதபடி உணவாக உட்கொள்ளும் உணவுக்குள் மறைந்திருக்கும் நஞ்சினைப் பிரித்துப் பரிசுத்தமாக்கும் நிலையை ரத்தம் சுத்தமாவது இழந்து விடுகின்றது.

பாலில் சிறிதளவு உப்புப் பட்டால் எப்படிப் பிருத்து விடுகின்றதோ கெட்டுப் போய் விடுகின்றதோ இதைப் போல ரத்தங்களில் தீமையின் நிலைகள் அதிகரிக்க சுத்திகரிக்கும் சிறுநீரகங்கள் பாழடைந்து விடுகிறது.

அதே சமயத்தில் உணவுக்குள் கலந்து வரும் பித்த சுரபி விஷத்தின் தன்மையை அதிகரித்து விட்டால் வாந்தி மயக்கம் தலை சுற்றல் போன்று அதிகரித்து விடுகின்றது.

காரணம் விஷத்தைப் பிரிக்கும் நிலை இழந்து பித்தம் அதிகமாகி ரத்தத்துடன் அதிகமாகக் கலந்து விட்டால் மயக்கம் வருகின்றது.
1.பித்தத்தை உறிஞ்சும் அந்த உறுப்புகளுக்கு கவலை சோர்வு என்ற நிலை அதிகரிக்கப்படும் பொழுது
2.பித்த சுரப்பி சரியாக இயங்கும் நிலை குறைந்து விடுகின்றது. ரத்தங்கள் மாசுபடத் தொடங்குகிறது.

இதைப் போன்று நமது வாழ்க்கையில் வேதனை கோபம் வெறுப்பு ஆத்திரம் போன்ற உணர்வுகளை அடிக்கடி நுகர நேர்ந்தால் கல்லீரல் வீக்கம் அடைகின்றது. பல உணர்வுகளை வடித்துத் தெளிவாக்கும் விரிவாக்கம் தன்மை இழக்கப்படுகிறது.

இதே போன்று உடலில் உள்ள உறுப்புகளில் விஷத்தின் தன்மை அதிகரிக்கும் போது உடல் உறுப்புகள் சீராக இயங்காத நிலை ஆகிறது. நஞ்சினைப் பிரிக்கும் செயலை இழந்து விடுகின்றது.

அப்பொழுது நல்ல ஆகாரங்களை உட்கொண்டாலும் உயர்ந்த சத்துள்ள ஆகாரங்களைச் சாப்பிட்டாலும்
1.அந்தச் சத்தை நஞ்சாகத்தான் மாற்றுகின்றதே தவிர அந்த சத்தினை உடலுக்குள் நல்லதாக மாற்றுவதில்லை.
2.காரணம் அதை ஜீரணிக்கும் திறன் கொண்ட நல்ல அமிலங்கள் இயங்கது போவதால் ஜீரணிக்கும் இயல்புகளை மாறி விடுகின்றது.
3.உடல் உறுப்புகள் இயக்கங்களைத் தடைப்படுத்துகின்றது.

இதைப் போன்ற நிலைகள் வராது தடுக்க உடனுக்குடன் நாம ஆத்ம சுத்தி செய்ய வேன்டும்.

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்று புருவ மத்தியில் நிறுத்த வேண்டும். அடுத்து கண்ணின் நினைவை உடலுக்குள் செலுத்தி… துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி எங்கள் இரத்த நாளங்களில் கலக்க வேண்டும்… உடல் உறுப்புகளை உருவாக்கி அணுக்கள் பெற வேண்டும் என்று “இப்படிப் பழக்கப்படுத்தி வைத்துவிட வேண்டும்…”

நம் உடல் உறுப்புகளை இப்படி வலுப்படுத்திக் கொண்டே வர வேண்டும்.
1.சந்தர்ப்பத்தில் தீமைகள் வந்தால் உடனே ஈஸ்வரா… என்று உயிரிடம் வேண்டி
2.துருவ நட்சத்திர்த்தின் வலுவை ஏற்றித் தீமை உள்ளே போகாதபடி தடைப்படுத்த வேண்டும்.

குரு சொன்னதை நாம் செயலுக்குக் கொண்டு வர வேண்டும்

குரு சொன்னதை நாம் செயலுக்குக் கொண்டு வர வேண்டும்

இப்பொழுது யாம் உங்களுக்கு மத்தியில் பேசிக் கொண்டு இருக்கிறோம் என்று வைத்துக் கொள்ளுங்கள். அது சமயம் நீங்கள்
1.நம்முடைய வீட்டில் செய்ய வேண்டிய வேலை என்ன…?”
2.வீட்டில் மகன் என்ன செய்து கொண்டிருக்கின்றானோ…! ஏதாவது செய்து விட்டால் என்னவாகும்…?” என்று எண்ணிக் கொண்டிருப்பீர்கள் என்றால்
3.யாம் சொல்லும் உணர்வுகள் உங்களிடத்தில் பதிவாகாது.

அதைப் போல்… ஒருவர் நம்மிடம் தீமை தரும் உணர்வுகளையோ வேதனை தரும் உணர்வுகளையோ சொல்வாரே என்றால் அது சமயம் துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளை நம்முள் இணைப்போமேயானால அத்தீய உணர்வுகளை நம்முள் புகாது தடுக்கலாம்.
1.அவர்கள் சொல்லும் உணர்வுகள் செவிகளில் கேட்கும்… ஆனால் ஈர்க்காது. 2.இதனை ஒரு பயிற்சிக்குக் கொண்டு வரவேண்டும்.

எத்தனையோ பேர் எம்மிடம் கஷ்டங்களை நிவர்த்திக்க வருகின்றார்கள், அவர்களுடைய வேதனைகளைச் சொல்கின்றார்கள். யாம் அதை ஈர்ப்பதில்லை.

யாம் எம்மைத் துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளுக்குள் இணைத்துக் கொள்வதால் அவர்கள் என்ன சொன்னாலும் கேட்டுக் கொள்வோம்.

1.அதன் பிறகு யாம் கோபமாக என்ன சொல்வோம்…?
2.“போங்கள்… உங்களுக்கு ஒன்றுமில்லை போங்கள்…” என்று சொல்வோம்.

அப்படி யாம் சொன்னால்… “சாமி திடீரென்று நம்மைக் கோபிக்கின்றாரே…” என்று எண்ணினால் என்னவாகும்…?

ஏனென்றால் அவர்கள் சொல்லும் வேதனையின் உணர்ச்சிகளை உடனே தாங்கி “மடக்கி” அனுப்புகின்றோம்.

நீங்கள் சாமி நம்மைக் கோபித்துக் கொண்டார் என்று சொன்னால் யாம் என்ன பண்ணுவது…? அப்படியானால், அவர்கள் சொல்லும் கஷ்டத்தை யாம் ஈர்க்க வேண்டுமா…?

யாம் உங்கள் கஷ்டத்தை நீக்குவதற்குத்தான் அப்படிச் சொல்கின்றோம்.

மற்றவர்கள் அனுபவிக்கும் கஷ்டத்தையெல்லாம் நீங்கள் உற்றுக் கேட்பீர்கள் என்றால் என்னவாகும்…? அந்த உணர்வுகள் உங்களுக்குள் இந்திரீகமாக மாறும். ஆகையால் இந்தத் தீய உணர்வுகளை நீங்கள் உங்களிடத்தில் வராது தடைப்படுத்தக் கற்றுக் கொள்ள வேண்டும்.
ஆரம்பத்தில் யாம் அநேகம் பேருக்குப் பல நிலைகளைச் சொல்லிக் கொடுத்தோம். ஆனால் அவர்கள் சொல்லிக் கொடுத்ததின் நிலைகளைத் தோல்வி அடையச் செய்து விட்டனர்.

மனிதரின் இயக்கம் எப்படி இருக்கின்றது…? அதை நாம் எப்படிக் கொண்டுவர வேண்டும்…? என்று உணர்த்துகின்றோம்.

ஆனால் பெரும் பகுதியானவர்கள் என்ன செய்து விட்டார்கள்…?
1.நாளை என்னவோ நடக்கட்டும்.
2.இன்று நாம் தொழிலில் முன்னேற வேண்டும்.
3.தான் ஒன்றைச் சொன்னால் அவ்வார்த்தையையும் தன்னையும் மற்றவர்கள் மதிக்க வேண்டும் என்று இப்படித்தான் தலைகீழாகப் போகிறார்கள்.
4.அருளைப் பெருக்கி இருளைப் போக்கும் தன்மையை யாம் எவ்வளவுதான் கொடுத்தாலும் எடுபட மாட்டேன் என்கிறது.

ஆகையால் யாம் மற்ற நிலைகளை நிறுத்தி விட்டு இப்பொழுது தியானவழி அன்பர்களைத் துருவ நட்சத்திரத்துடன் ஒன்றச் செய்யும் நிலைக்குக் கொண்டு வருகின்றோம்.

அந்த உணர்வோடு கொண்டு போகப்படும் பொழுது அவ்வுணர்வின் ஒளிக்கற்றைகளை உங்களில் சேர்த்துப் பழகுங்கள். ஆனால் சாதாரண மின்னல் வருகின்றதே அதை நீங்கள் பார்க்கக் கூடாது.

மின் கதிர்களை எண்ணிச் சுவாசிக்கப்படும் பொழுது அதன் உணர்வின் தன்மையினை உங்களிடத்தில் ஒவ்வொரு அணுவிலும் சேர்க்க உதவும். நாம் நுகர்ந்த உணர்வுகள் இரத்தத்தில் கலந்து மற்ற அணுக்களில் சேர்கின்றது. இவையெல்லாம் குரு தன்மையால் வருவது.

1.“சாமி (ஞானகுரு) சொன்னார் இதையெல்லாம் பெற வேண்டும்” என்று எண்ணப்படும் பொழுது
2.நீங்கள் எண்ணிய ஆற்றல் பெறுவதற்கு உறுதுணையாக இருக்கும்.

நான் தனித்தன்மையில் செல்வேன் என்று எண்ணினால் முடியாது.

குரு இல்லாத வித்தை எதுவுமே வித்தையாகாது. ஆகையால் “குருநாதர் சொன்னார்” என்ற நிலையில் ஒன்றை இணைத்துப் பார்க்கும் பொழுது தனக்குள் உருவாகும்.

ஆகவே இதன் வழியில்தான் நாம் அறிய முடியும். அப்படியில்லாமல் நமது எண்ணங்களை பலவீனமடையச் செய்தால் அந்த உணர்வின் அணு உங்களைத் திசை திருப்பிவிடும்.

ஏனென்றால்
1.“நாம் இம்மனித உடலுக்குப்பின் பெற வேண்டியது எது…?” என்பதை
2.உங்கள் எல்லோருக்கும் தெளிவாக்கும் தன்மைக்குத்தான் கொண்டு வருகின்றோம்.