ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

May 10, 2026

மாமகரிஷி ஈஸ்வராய குருதேவரின் அருள்

மாமகரிஷி ஈஸ்வராய குருதேவரின் அருள்

மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் அவர்கள் காண்பித்த அருள் வழியில் யாம் அருள் உணர்வுகளைப் பெற்றோம். ஆகவே யாம் குரு அருளைத்தான் போற்றுகின்றோம்.

குருநாதர் காண்பித்த அருள் வழியில் யாம் நுகர்ந்து கொண்ட அருள் உணர்வுக்குத் தக்க யாம் நன்மைகள் அடைந்தோம்.

அதே போன்று தியானவழி அன்பர்களும் குரு காண்பித்த அருள் வழியில் தாம் நுகர்ந்து கொண்ட அருள் உணர்விற்குத் தக்க நற்பயன்களைப் பெற முடியும்.

1.யாம் சந்திக்கும் அனைவருமே அருள் ஞானம் பெற வேண்டும் அருள் சக்தி பெற வேண்டும் என்று எண்ணி
2.இதற்காக அனைவரையும் தயார்ப்படுத்த வேண்டும் என்ற ஆசையில்தான் யாம் செயல்படுகின்றோம்.

இது எவ்வளவு பெரிய சக்தி…!

எத்தனையோ வருடம் கஷ்டப்பட்டு என்னென்ன வழியில் செயல்பட்டு எத்தனை சிரமங்கள் அனுபவித்து… அத்தனை சிரமங்களையும் தாங்கித் தாண்டி வருகின்றோமென்றால் எதற்காக…?

அனைவரும் இந்த அரும் பெரும் சக்தியைப் பெற வேண்டும் என்ற ஆசையில்தான்.

தபோவனம் வளர வேண்டும். தபோவனம் எம்மால் வளரவில்லை… குருநாதரால்தான் வளர்கின்றது.
1.குருநாதருடைய உணர்வு தான் நம் அத்தனை பேருக்கும் அமைந்துள்ள நல் சந்தர்ப்பம் ஆகும்.
2.“எல்லோருக்கும் அருள் ஞானம் கிடைக்க வேண்டும்” என்ற ஆசை உங்களுக்கு வர வேண்டும்.

நமது வாழ்க்கையில் எந்த நிலைகள் இருந்தாலும் உத்தராயணம் என்ற அந்த நிலைகள் வரவேண்டும். அந்த வலிமை நமக்குள் வர வேண்டும். குரு காட்டிய அருள் வழி கொண்டு உயிரை ஈசனாக மதித்து அவனால் உருவாக்கப்பட்ட உடலைச் சிவனாக நாம் மதித்தல் வேண்டும்.

1.இந்த உடலில் பகைமை புகாது… எதிரி வராது… அருள் உணர்வை நீங்கள் ஒவ்வொருவரும் கூட்டி
2.இனி “பிறவியில்லா நிலை பெறும் நிலையாக” பேரின்பப் பெரு வாழ்வாக வாழ்ந்து வளர்ந்திட எமது அருளாசிகள்.

மனிதனின் எண்ண வலு

மனிதனின் எண்ண வலு

 

நாம் இச்சைப்படுவது எதுவாக இருக்க வேண்டும்...? தீமையை நீக்கும் உணர்வை நாம் இச்சைபட்டால் உயிரிலே பட்டு அது கிரியை ஆகித் தீமையை நீக்கும் ஞானங்கள் வந்து அதுவாக நாம் ஆவோம்.

அதனால் தான் வலிமை மிக்க சக்தி வள்ளி. எத்தனையோ கோடி உடல்களில் பெற்ற தீமையை நீக்கும் அந்த வலிமையான சக்தி நம் ஆறாவது அறிவிற்கு உண்டு. தெரிந்து தீமையை நீக்கும் வலிமையான நிலை பெற்றது.

ஒரு விஞ்ஞானி ஆறாவது அறிவை வைத்துத் தான் எத்தனையோ வேலைகளைச் செய்கின்றான். ஒரு கல்லை நம்மால் தூக்க முடியவில்லை
1.ஆயிரம் டன் 2000 டன் எடையுள்ள பொருளைத் தூக்கிச் செல்லும் அளவிற்கு ராக்கெட்டைச் செய்து மேலே பறக்க விடுகின்றான்.
2.அது அவனின் எண்ண வலு தானே.

தன் எண்ண வலுவைச் செலுத்தி அதனால் தூக்கக் கூடிய சக்தியை கண்டுபிடித்து இருக்கின்றான். அப்போத்து அந்த எண்ண வாலு தானே காரணம் ஆகிறது.

1.நமக்குள் அந்த எண்ண வலுவைக் கொண்டு துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை அந்த வலுவைக் கூட்டப்படும் பொழுது
2.எத்தகைய நிலையையும் நாம் சமாளிக்க முடியும்.
3.அதற்குத் தான் உங்களுக்கு அடிக்கடி பழக்கப்படுத்துவதற்கு ஆத்ம சுத்தியைக் கொடுக்கின்றோம்.
4.எந்த நிமிடம் எது வந்தாலும் துருவ நட்சத்திரத்தின் சக்தியை எடுத்து ஆத்ம சுத்தி செய்து கொள்ளுங்கள்.

இந்த உடலுடன் யார் இருக்கின்றார்கள்...? நம் குருநாதர் இருக்கின்றாரா...? திருமூலர் இருக்கின்றாரா...? ஆதிசங்கரர் இருக்கின்றாரா...? சொல்லுங்கள் பார்க்கலாம்.

ராமலிங்க அடிகள் இருக்கின்றாரா...? உலகுக்கெல்லாம் போதித்தாரே விவேகானந்தர் அவர் இருக்கின்றாரா...? அவருடைய குரு எல்லாத் தத்துவத்தையும் தெரிந்தாரே ராமகிருஷ்ண பரமஹம்சர் அவர் இருக்கின்றாரா...?

யாரும் உடலுடன் இல்லை. இன்றைய செயல் நாளைய சரீரம் இன்றைய நிலையில் ஒளியின் உணர்வாக நாம் பெறப்படும் பொழுது நாளை ஒளி உடல் பெறலாம்.

அதை விடுத்து விட்டு
1.நாளைக்கு என்ன செய்யப் போகின்றோம்...?
2.இத்தனை ஆசை வைத்திருக்கிறேன்... உடலை விட்டுச் சென்று விட்டால் என்ன ஆவது...? என்று எண்ணினால் மீண்டும் இங்கேதான் சுழல வேண்டி வரும்.

இந்த உயிர் என்றுமே அழிவதில்லை வேகாநிலை பெற்றது இந்த உடல் மாறி மாறி வரும். உணர்வுக்குத் தக்க உயிர் உடலை மாற்றிக் கொண்டே தான் இருக்கும். ஒவ்வொரு ரூபத்திலும் தான் எடுக்கும் தன்னைக் காப்பாற்றிக் கொள்ளும் உடலை தான் எண்ணியதை உயிர் உருவாக்குகின்றது.

உயிருக்கு வேறு வேலை இல்லை ஆக இந்த ஆறாவது அறிவு கொண்டு உணர்வை ஒளியாக மாற்றினால் என்றைக்கும் நிரந்தரமான நிலையாக விஷத்தை ஒளியாக மாற்றிடும் சக்தி கிடைக்கும்.

1.ஆறாவது அறிவு ஏழாவது ஒளி என்ற நிலை அடைவதை விஜயதசமி
2.வான் வீதியிலே தோன்றிய உயிர் மனிதரான பின் பத்தாவது நிலை பெற வேண்டும்.