
சொர்க்கத்திற்கு அழைத்துச் செல்லும் உயிருடன் நாம் ஒன்ற வேண்டும்
நான் படிக்காதவன் தான் இத்தனையும் பேசுகின்றேன். இயற்கையின் பேருண்மைகளை
அறியும் தகுதியை குருநாதர் எமக்குக் கொடுத்தார்.
நீங்கள் படித்திருந்தாலும் படிக்கவில்லை என்றாலும்
1.இந்த உபதேசத்தின் வாயிலாக உணர்வினைப்
பதிவாக்கிக் கொண்ட பின் உங்கள் நினைவாற்றல் கொண்டு
2.அண்டத்தையும் அளந்தறிந்த அகஸ்தியனின் உணர்வினை உங்களுக்குள் கருவாக உருவாக்க முடியும்.
3.இருளை அகற்றிடும் ஆற்றல்மிக்க சக்தியையும் நீங்கள் பெற
முடியும்
அந்த நம்பிக்கையில் தான் இதைப்
போதிக்கின்றேன். கேட்டறிந்ததை நினைவுக்குக்
கொண்டு வந்து அதை நீங்கள் வளர்த்துக் கொள்ள முடியும்.
காடு மேடெல்லாம் நான் அலைந்தேன்… திரிந்தேன்… அறிந்தேன்… துன்புறுத்தப்பட்டேன்… துன்பத்திலிருந்து மீண்டிடும் உணர்வை குருநாதர்
உணர்த்தினார்… அதைக் கவர்ந்தேன்.
துன்பத்தை அகற்றும் உணர்வுகளை வளர்க்கும் படி செய்தார். அதில் வளர்த்த
உணர்வின் ஞானத்தைத் தான் உங்களுக்குப்
போதிக்கின்றேன்.
1.நீங்கள் இதை நினைவு கொண்டு வந்து வளர்த்தால்
2.உங்கள் வாழ்க்கையில் அறியாது வந்த இருளைப் போக்க முடியும்.
இந்த உடல் நீடித்த நாள் நம்முடன் இருக்கப் போவதில்லை. ஆகவே உடலில் இருக்கும்
பொழுதே அருள் ஒளியை வளர்த்துக்
கொள்ளுங்கள்.
அனைவரும் நலம் பெற வேண்டும் என்ற எண்ணத்தை உங்களுக்குள் வளர்த்துக்
கொள்ளுங்கள். நாம் பார்ப்போர் நம்
சொல்லைக் கேட்டோர் அனைவரையும் நலம் பெறச் செய்ய முடியும்.
நீங்கள் வெளிப்படுத்தும் உணர்வுகளை அவர்கள் எடுத்துக் கொண்டால் அவர்களும் அதைப் பெறுவார்கள்.
எடுத்துக் கொள்ளவில்லை என்றால் வளர்ச்சிக்கு வர முடியாது.
அனைவரும் நலம் பெற வேண்டும் என்று அருள் ஞானத்தைப் போதியுங்கள். அருள் ஒளியை நுகருங்கள். அருள் ஞான அணுக்களை உருவாக்குங்கள். பிறவி இல்லா நிலையை அடைய
முற்படுங்கள். நம் எல்லை எது…? என்று
தீர்மானித்துக் கொள்ளுங்கள். அதை மையமாக வைத்து வாழுங்கள்.
மையம் எது…?
1.இந்த உடலுக்குப் பின் நாம் அந்தச் சப்தரிஷி
மண்டலத்துடன் இணைய வேண்டும்… மனிதனின் கடைசி எல்லை
அது தான்.
2.அங்கே ஒளியாக மாறிவிட்டால் அகண்ட அண்டத்தில்
எங்கு வேண்டுமென்றாலும் சுழலாம்… என்றும் 16 என்று நிலை அடையலாம்.
மனித உடல் பெற்ற நிலையில் அறியும் ஆற்றல் ஆறாவது அறிவாக உள்ளது கார்த்திகேயா…! உயிர் தான் இதையெல்லாம்
உருவாக்குகின்றது. அவனுடன் நாம் ஒன்றிட
வேண்டும்.
உயிர் எப்படி நம்மைத் தெளிவாக்குகின்றதோ இந்த உணர்வின் தன்மை ஒளியாக மாற்றும் திறன் ஆறாவது அறிவுக்கு
உண்டு. அதன் துணை கொண்டு அருள் சக்திகளை வளர்த்துக் கொண்டால் அடுத்துப்
பிறவி இல்லை.
சொர்க்க பூமி சொர்க்கவாசல் என்று நாம் எண்ணும் உணர்வின் தன்மை அருள் ஒளி கொண்டு இங்கே வளர்த்தால் அங்கே
விண் செல்ல முடியும்… சப்தரிஷி
மண்டலத்துடன் இணைய முடியும்.
1.சொர்க்க பூமியாக இருக்கும் இந்த நிலையை சொர்க்கலோகமாக மாற்ற வேண்டும்.
2.சொர்க்க வாசலை நாம் நாட வேண்டும்.
3.சொர்க்கத்திற்கு அழைத்துச் செல்லும் உயிருடன் ஒன்ற வேண்டும்
4.அருள் ஒளிச் சுடரை நாம் வளர்க்க
வேண்டும்… அதன் வழி அது நம்மை அங்கே அழைத்துச் செல்லும்.