ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

January 29, 2026

“ஒரேடியாக தியானமிருந்து அருளைப் பெறுவேன்…” என்று சொன்னால் அது நடக்காது

“ஒரேடியாக தியானமிருந்து அருளைப் பெறுவேன்…” என்று சொன்னால் அது நடக்காது


உதாரணமாக சில வருடங்களுக்கு முன் ஒருவன் நமக்குக் கெடுதல் செய்திருப்பான். அதனால் நம் குடும்பமே நஷ்டம் அடைந்திருக்கும். இல்லாததைச் சொல்லி ருப்பான்.
 
மீண்டும் அவனைப் பார்த்தவுடன் கஷ்டமான நிலைகள் நமக்குள் ஏற்கனவே பதிவானது இழுத்து நம் ஆன்மாவில் வந்துவிடும். அப்பொழுது அவனை வெறுக்கும் நிலைகள் நமக்குள் உருவாக ஆரம்பித்துவிடும்.
1.சிறிது நாள் அதற்குச் சாப்பாடு இல்லாமல் இருந்தது.
2.சாப்பாடு கிடைத்ததும் வீரியம் அடைய ஆரம்பித்துவிடும்.
 
மண்ணுக்குள் எத்தனையோ வித்துகள் மறைந்து இருக்கின்றது. சிறிது காலம் மழை இல்லையென்றால் வறண்டு போய்விடுகின்றது. ஒரு நாள் மழை பெய்து விட்டால் தளதள…என்று வெளியில் வரத் தொடங்கி விடுகின்றது.
 
இதைப் போன்றுதான் பகைமை கொண்டு அவன் செய்த தவறான நிலைகள் நமக்குள் பதிவானாலும்
1.அவனைப் பார்த்தவுடனே அந்த இனத்தைத் தனக்குள் கவர்ந்து
2.அதனின் செயலாகத் தனக்குள் ஆகாரம் தேட ஆரம்பித்துவிடும்.
 
அப்பொழுது நாம் இவ்வளவு தியானம் எடுக்கின்றோம்… “அவனைப் பார்த்தவுடனே கோபம் வருகின்றதே…!” என்று நினைப்போம்.
 
இந்த உணர்வு இங்கு வந்தபின் இரவு தூங்கினால் கெட்ட கனவாக வரும். அந்த வெறுப்பின் உணர்வுகள் நமக்குள் வரும் பொழுது எப்படியெல்லாம் இருந்தோமோ நம் எண்ணத்திற்கு அவன் நினைவு வராது.
 
கெடுதல் செய்தவனைப் பார்த்து அந்த உணர்ச்சி நமக்குள் தூண்டப்பட்டாலும் அவன் உரு நமக்குள் நினைவிற்கு வராது. அந்த நேரத்தில்மற்ற மனிதர்களிடத்தில் உருவான கெடுதல் செய்த உணர்வின் தன்மை நமக்கு எதிரில் இருந்தால் அது வந்துவிடும்.
 
1.இரவில் தூங்கும் பொழுது யாரோ கெடுதல் செய்கின்ற மாதிரி இன்னொரு உரு நமக்குள் தெரியும்.
2.நாம் முன்பின் பார்த்திருக்க மாட்டோம் அந்த மனிதனின் உருவம் நமக்குள் தெரியும்.
3.அப்பொழுது நம்மை அறியாமலே இரவு வேளைகளில் தீமையின் உணர்வுகள் நம் தூக்கத்தைக் கெடுக்கும்.
 
நாம் இரவில் தூங்கும் பொழுது அத்தகைய உணர்வுகள் வரும் பொழுதெல்லாம் ஈஸ்வரா…”  என்று உயிரை வேண்டி நம் நினைவைத் துருவ நட்சத்திரத்துடன் இணைத்து அதைப் பெற வேண்டும் என்று எண்ணி உடலுக்குள் பல முறை செலுத்த வேண்டும்…”
 
அதைச் செலுத்தியவுடன் தன்னை அறியாமலே தூக்கம் வரும்.
 
எந்தெந்த வகையில் தீமைகள் வந்தாலும் இப்படி நாம் எடுத்துக் கொண்டால்தான் நமக்குள் தூய்மைப்படுத்த முடியுமே தவிர
1.ஒரேடியாக ஜெபமிருந்து அருளைப் பெறுவேன் என்று சொன்னால் நடக்காது. 
2.ஒவ்வொரு நிமிடத்திலும் உணர்ச்சிகளைத் தூண்டிக் கொண்டே இருக்கும்.
3.அவ்வப்பொழுது அந்த அருள் ஞானிகளின் அருள் உணர்வை நமக்குள் இணைத்துக் கொண்டே இருக்க வேண்டும்.
4.அதை அடக்கிக் கொண்டே வரவேண்டும்.
5.இப்படி ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் அதை அடக்கிக் கொண்டே வரவேண்டும்.
6.அப்படி அடக்கிக் கொண்டே வந்தோம் என்றால் அது அப்படியே உறைந்துவிடும்.
7.எல்லா உணர்வுகளிலும் அந்த மகரிஷிகளின் உணர்வைச் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
 
இப்படித் தான் இந்தப் பூமியில் எத்தனையோ விதமான விஷங்கள் கோபங்கள் வெறுப்புகள் இவைகளை எல்லாம் மனிதன் அடக்கினான். அவ்வாறு அடக்கி அந்த உணர்வைச் சேர்த்துக் கொண்டு வரும் பொழுது “பேரானந்தப் பெரும் செல்வம்கிடைக்கின்றது.
 
ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் மகரிஷிகளின் அருள் சக்தியை நமக்குள் இணைத்துப் பழக வேண்டும். இல்லையென்றால்
1.நான் எல்லாம் செய்கின்றேன்ஆனால் உலகில் எங்கு திரும்பிப் பார்த்தாலும் இப்படித்தான் இருக்கிறது என்று
2.மற்ற உணர்வுகளுக்கு இதற்கு வலு கொடுத்து விடுகின்றோம்.
3.அப்பொழுது நாம் புவியின் ஈர்ப்பிற்கு வந்து விடுகின்றோம்.
 
எது எப்படி இருந்தாலும் எவ்வளவு கடுமையான நிலைகளை நாம் பார்த்துணர்ந்தாலும்ஒவ்வொரு நொடியிலும் நம் ஆன்மாவில் கலக்கும் நிலையை அந்த மகரிஷிகளின் அருள் சக்தியைப் பெறச் செய்து தூய்மைப்படுத்திக் கொண்டே இருக்க வேண்டும்.
 
இது தான் ஆத்ம சுத்தி என்பது.
 
இதை முறைப்படி நம் வாழ்க்கையில் செய்து கொண்டே இருக்க வேண்டும். காற்று பலமாக அடிக்கும் பொழுது தூசி வருகின்றது. அதிகமாகத் தூசி வரும்போது ஒதுங்கிக் கொள்கின்றோம்.
 
இதே மாதிரி
1.தீமையான உணர்வு வரும் பொழுது அந்த எண்ணத்தில் இருந்து விலகி நிற்க
2.அந்த மகரிஷிகளின்\ உணர்வை ஆதாரமாக வைத்து திலிருந்து சிறிது நேரமாவது விலகி நிற்க வேண்டும்.
 
நாம் எப்படியும் ஒரு இடத்திற்குப் போக வேண்டும் என்று நினைக்கின்றோம். அங்கு வெயில் குறைவாக இருந்தது. போகப் போக வெயில் சூடு அதிகமாகின்றது. அதிகமான அந்த நேரத்தில் விலகி நிற்கின்றோம்.
 
இதைப் போன்று
1.நம் வாழ்க்கையில் கடுமையான நிலைகள் வரும் நேரத்தில்
2.மகரிஷிகளின் அருள் சக்தி நாம் பெற வேண்டும் என்று ஆத்ம சுத்தி செய்து
3.அந்த எண்ணத்திலிருந்து விலகி இருக்க வேண்டும்.
 
ஆத்ம சுத்தியின் மூலக்கூறு இது தான்.

பிரச்சினைகளையும் சங்கடங்களையும் சந்திக்கும் நேரத்தை “நன்மை பயக்கும் நேரம்” என்று எடுத்துக் கொள்ளுங்கள்

பிரச்சினைகளையும் சங்கடங்களையும் சந்திக்கும் நேரத்தை “நன்மை பயக்கும் நேரம்” என்று எடுத்துக் கொள்ளுங்கள்


ஒரு உணர்வின் தன்மை ஒரு அணுவின் தன்மை சேர்க்கப்படும் போது அது எந்தெந்தக் குணத்தின் தன்மை அதிகமாகச் சேர்க்கின்றதோ அது ஆற்றல் பெறுகின்றது. இதைப் போன்றுதான் இயற்கையின் உண்மையினுடைய நிலைகள்.
 
நாம் மெய்யுணர்வின் தன்மையை அறிந்துணர்ந்தபின் அந்த மகரிஷிகள் அருள் வழியைக் காட்டியபின் இந்த உடலில் இருக்கப்படும் பொழுதே யாம் சொல்லும் நிலைகளில்
1.எப்பொழுதெல்லாம் உங்கள் வாழ்க்கையில் பிரச்சினைகளையும் சங்கடங்களையும் எதிர் கொள்கின்றீர்களோ
2.அதையெல்லாம் உங்களுக்கு நன்மை பயக்கும் நேரம்” என்று எடுத்துக் கொள்ளுங்கள்.
 
எப்படி…?
 
‘’இப்படி என்னைத் திட்டிவிட்டானே இரு நான் பார்க்கின்றேன்…!’’ என்றால் துன்பத்தைக் கொடுக்கும் நாள். அல்லது நம் பையனே இப்படிப் பேசிவிட்டானே…” என்ற உணர்வுகள் ஆத்திர உணர்வுடன் தீர்க்கப்படும்போது அது நமக்குக் ‘’கெட்ட நாள்…” நமக்குள்  அந்த உணர்வின் தன்மையைக் கூட்டுகின்றது.
 
நம்மை யாராவது திட்டினால் இந்த உணர்வின் தன்மை கொண்டு, உணர்ச்சிவசப்பட்டு ஏசும் நிலை வந்தாலும்
1.‘’ஓம் ஈஸ்வரா’’ என்று உயிரை எண்ணுங்கள்.
2.“மகரிஷிகளின் அருள் ஒளி நாங்கள் பெற வேண்டும்’’ என்று ஏங்குங்கள்
3.”ங்கள் ஜீவாத்மா அந்த சக்தி பெற வேண்டும்’’ என்று உங்கள் உடலுக்குள் செலுத்துங்கள்.
 
அப்பொழுதே இது அடங்கும்.
 
அதாவது ஒருவர் உணர்ச்சிவசப்படும்படியாக நம்மைத் தூண்டும் நேரத்திலும் நாம் அந்த ஆத்ம சுத்தி என்ற ஆயுதத்தைக் கையில் எடுத்துக் கொண்டால்
1.அவர்களால் சங்கடமாக ஏற்படுத்திய உணர்வுகள் நம்மை ஆட்டிப் படைக்காதபடி
2.அதை அடக்க இந்த ஆயுதம் உதவும்… “அப்போது உயர்ந்த சக்தியையும் நமக்குள் பெறுகின்றோம்…”
 
அடுத்து யார் நமக்கு தவறு செய்தார்களோமகரிஷிகளின் அருளால் அவர்கள் நாளை செய்வது நல்லதாக வேண்டும்…” என்று ஆணையிடுங்கள். உங்களுக்குள் இந்த உணர்வுகளைத் தடுக்கச் செய்யுங்கள்.  
 
இப்படி ஒவ்வொரு நிமிடமும் மகரிஷிகளின் அருள் ஒளிகளைச் சேர்க்கக் கற்றுக் கொள்ளுங்கள்.
 
மனித வாழ்க்கை அது  எந்த நிமிடமென்று சொல்ல முடியாது. மனிதருடன் வாழப்படும் பொழுது குறைகளைக் காணாமல் இருக்க முடியாது. இன்றைய விஞ்ஞான உலகத்தில் குறைகள் கண்டு கொண்டுதான் இருக்கிறது.
 
ஆனால் ஒவ்வொரு நிமிடமும் நாம் இந்த ‘’ஆத்ம சுத்தி’’ செய்து மகரிஷிகளின் அருள் ஒளியை நமக்குள் சேர்க்கும் “அந்த புனிதப் பயணமாக இருக்க வேண்டும்…
 
உங்களிடம் யாம் கேட்பது என்ன?
 
நீங்களெல்லாம் மகிழ்ந்திருந்தால் தான் நீங்கள் மகிழ்ச்சியான சொல்களைச் சொன்னால்தான் க்கும் மகிழ்ச்சி ஏற்படுகின்றது.
 
அதைப் போல நீங்கள் ஆத்ம சுத்தி செய்து கொண்டுயாராவது துன்புற்று வந்தாலும் அவர்களுக்கு நன்றாகிப் போகும் என்று நீங்கள் சொல்லுங்கள். அவர்களுக்கு உடல் நலமாகிவிடும். அந்த மகிழ்ச்சியான எண்ணங்களை உங்களுக்குச் சொந்தமாக்குங்கள்.
 
இப்பொழுது நான் எப்படி உங்களுக்கு நல்லதாக வேண்டுமென்று எண்ணுகின்றேனோ அதைப் போன்று நீங்கள் ஒவ்வொருவரும் இந்த ‘’ஆத்ம சுத்தி’’ செய்து கொண்டு இந்த எண்ணத்தைப் பரப்புங்கள்.
 
1.நம்முடைய மூச்சு பிறருடைய துன்பங்களைப் போக்க உதவ வேண்டும். 
2.துன்பமான உணர்வுகளை காதிலே கேட்டு நம் உடலுக்குள் அந்தத் துன்பங்கள் வந்து நம்மை ஆட்டிப் படைத்துவிடக் கூடாது.
 
ஏனென்றால் நாம் எவ்வளவு நல்லவர்களாக இருந்தாலும் பிற துன்ப அலைகள் எல்லாம் விஷம். அது ஊடுருவி நம்மைக் கெடுக்கத் துரித நிலைகளில் செயல்படும். அதை மாற்றுவதற்கு நமக்குள் மெய் ஞானிகளின் அருள் ஒளி இருந்தால்தான் முடியும். 
 
1.மெய் ஞானிகளின் அருள் ஒளி நெருப்பு… அந்த நிலையினை நாம் பெற வேண்டும்.
2.ஆனால் இதற்குக் குருவின் துணை வேண்டும்.
 
குருவின் இணைப்பு கொண்டு அன்று மகரிஷிகள் எவ்வழிகளில் எடுத்தார்களோ அந்த உணர்வின் ஆற்றல் கொண்டு அதைப் பின்பற்றி நடப்போர் அந்தச் சக்தியைப் பெற முடியும்.
 
ஆகவே… உங்களை அறியாமலே உங்களைத் துன்பப்படுத்திக் கொண்டிருக்கும் நிலையை மாற்றுவதற்குத்தான் தக்க ஆயுதமாக ”மிஷின் கண்” (MACHINE GUN) போன்று ‘’ஆத்ம சுத்தி’’ என்ற ஆயுதத்தைக் கையில் கொடுக்கிறோம்.
 
நீங்கள் ஒவ்வொருவரும் ஆத்ம சுத்தி செய்து இந்த வாழ்க்கையில் புனிதம் பெறுவதற்கு எடுத்துக் கொள்ளும் முயற்சி உங்களுக்கு வெற்றியைத் தரும்.
 
உங்கள் குடும்பத்தில் யாருக்கு எந்தச் சிக்கல் வந்தாலும் இதே மாதிரி ஆத்ம சுத்தி செய்து கொள்ளுங்கள்,. எல்லாமே நல்லதாக வேண்டுமென்று எண்ணுங்கள்.
 
1.இதைப் போன்று சிறிது நாளைக்கு முயற்சி எடுத்துப் பாருங்கள்.
2.இந்த உண்மை நிலைகளை நீங்கள் உங்கள் உடலுக்குள்ளும் உணர்வுக்குள்ளும் பார்க்கலாம்.
 
எமது அருளாசிகள்.

நுகர்ந்த உணர்வின் இயக்கங்கள்

நுகர்ந்த உணர்வின் இயக்கங்கள்


ஒருவருடைய செயலைப் பார்த்து மோசமானவர்…” என்று அவரை நினைக்கின்றோம் அந்த மோசமான உணர்வு நமக்குள் வளர்ந்த பின் நாமும் அதை போன்ற செயலைச் செய்ய தொடங்கி விடுகின்றோம்.
 
நம்மை அறியாமலே அது இயக்கும்…!
1.நாம் தவறு செய்யவில்லை என்று நினைக்கின்றோம்.
2.ஆனால் தவறு செய்கின்றான்…” என்று எண்ணியவுடன் அந்தத் தவறின் இயக்கம் நம்மை இயக்கி விடுகின்றது.
 
அதை மாற்றும் சக்தி இருந்தாலும் முடியாத நிலை ஆகி விடுகிறது.
 
அந்தத் தவறிலிருந்து விடுபடும் முறைக்கே உங்களுக்குள் ஞானிகள் உணர்வைப் பதிவாக்குகின்றோம். எண்ணியவுடனே அந்த அருள் சக்திகளைப் பெற முடியும்.
 
நாம் பல விதமான உணர்வுகளைப் பதிவாக்கியுள்ளோம். அதிலே வேதனைப்படும் சொல்களைக் கேட்டவுடன் ந்த உணர்வுகள் உந்திய பின் அதைச் சுவாசித்து நம் உடல் சோர்வடைந்து விடுகின்றது. வேதனையான அணுக்கள் வளர்ந்து விடுகின்றது.
1.இரண்டு நாளைக்கு இந்த உணர்வுகள் சேர்த்தால்
2.இரத்த நாளங்களில் இது கலக்கப்படும் பொழுது மற்ற அணுக்களையும் செயலற்றதாக மாற்றும்.
 
நாம் நுகரும் உணர்வுகள் அனைத்தும் இரத்த நாளங்களில் தான் கலக்கின்றது. காற்று மண்டலத்தில் எப்படிக் கலக்கின்றதோ இதைப் போன்று தான் ரத்தத்தில் கலக்கப்படுகிறது.
 
இரத்தம் தான் உடலில் இருக்கக்கூடிய அணுக்களுக்கு உணவை எடுத்துச் செல்கின்றது. அதில் இருக்கும் உணர்வின் சத்தை எடுத்துத்தான் உடலில் உள்ள அணுக்கள் விளைகின்றது.
 
நாம் நுகர்ந்தது உயிரிலேவியின் தன்மை அடைந்த பின் நம் உடலில் ரத்தத்தில் கலந்த பின் இந்த ணர்வின் தன்மை கொண்டு செயலாகிறது.
 
நாம் உணவாக உட்கொள்ளும் போது அதிலே நீரைப் பிரித்து விட்டு அதில் இருக்கக்கூடிய சத்தை ரத்தமாக மாற்றுகின்றது நம் உடல் உறுப்புக்கள்.
 
ரத்தத்தின் தன்மை கொண்டு வரும் பொழுது அணுக்களின் ஆகாரம் அதன் வழியில் பெறப்படுகிறது. நல்ல உணவைப் படைத்துச் சாப்பிட்டாலும் நல்ல உணர்வை எண்ணினால் நல்ல அணுக்களுக்கு ஆகாரமாகச் சேர்கிறது.
 
அதே சமயத்தில் நல்ல உணவை உட்கொண்டாலும்
1.வேதனையான உணர்வைச் சுவாசித்தால் இந்த உணர்வின் தன்மை இதற்குள் ஆன பின்
2.வேதனை உணர்ச்சிகள் தூண்டப்படும் பொழுது நல்ல உணவையே உட்கொள்ள முடியாதபடி ஒதுக்கிவிடும்.
 
ஏனென்றால்
1.நாம் எண்ணும் உணர்வுகளை உயிர் அதை அணுக்களாக மாற்றுவதும்
2.உணர்வின் செயலாக்கங்களாக நம்மை மாற்றிக் கொண்டே உள்ளது என்பதையும் நாம் தெரிந்து கொள்ள வேண்டும்.