ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

January 17, 2026

தியானம் தான் செய்கிறேன்… “எனக்கு மட்டும் ஏன் கஷ்டம் வருகிறது…? என்ற எண்ணம் சரியா…!”

தியானம் தான் செய்கிறேன்… “எனக்கு மட்டும் ஏன் கஷ்டம் வருகிறது…? என்ற எண்ணம் சரியா…!”


நான் தியானம் பண்ணிக் கொண்டே இருக்கின்றேன்என் வீட்டுக்காரர் இப்படித் திட்டுகின்றார்.
 
நானும் தியானம் பண்ணிக் கொண்டே இருக்கின்றேன். கொடுத்த கடன்காரன் கொடுக்கவே மாட்டேன் என்கிறான் என்று விட்டுவிட்டால் என்ன்வாகும்…? இது எல்லாம் சவாரி பண்ணி விடும்.
 
தியானம் பண்ணிக் கொண்டே இருக்கின்றேன்… நோய் வந்துவிட்டது என்று நினைத்தால் இதை (சக்தி எடுப்பதை விட்டுவிட்டு அதை (நோயை) எடுத்துக் கொள்கிறீர்கள்.
1.கெட்டதுக்குத்தான் நீங்கள் சக்தி வளர்க்கின்றீர்கள்.
2.ஆக எதற்கு ஜீவன் ஊட்டுக்கின்றீர்கள்…? எண்ணங்கள் எதில் வருகின்றது…?
 
நம்முள் உள்ள அணுக்கள் அதற்குண்டான பசியைத் தூண்டும் பொழுது நல்லதை எடுக்க விடாமல் தடுக்கின்றது.
 
அந்த மாதிரி தடுக்கின்ற நேரத்தில் நாம் என்ன செய்ய வேண்டும்…?  ஆன்மாவைச் சுத்தப்படுத்திப் பழக வேண்டும்.
 
ஈஸ்வராஎன்று உயிரை எண்ணி அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற வேண்டும். என் உடல் முழுவதும் படர வேண்டும். என் ஜீவான்மா பெற வேண்டும் என்று
1.துருவ நட்சத்திரத்தின் உணர்வை உடலை உருவாக்கிய அணுக்களுக்கு நல்ல உரமாகக் கொடுத்து
2.அந்த ஞானத்தை நாம் பெருக்க வேண்டும்.
3.அப்போது தீமையான உணர்வு நமக்குள் போகாமல் தடுக்க முடியும்.
 
இப்படிச் சுத்தப்படுத்த வேண்டும்.

மனதைச் சமப்படுத்தும் பக்குவநிலை

மனதைச் சமப்படுத்தும் பக்குவநிலை


ஆறறிவு கொண்ட மனிதரான நாம் பல விதமான உடல் உறுப்புகளைக் கொண்ட உயிரினங்களைப் புதிதாக உருவாக்குகின்றோம். விஞ்ஞான அறிவால் இதை நாம் அறிந்து கொண்டோம். இப்படி அறிந்து கொண்ட உணர்விலிருந்து நாம் என்ன செய்ய வேண்டும்…? நமக்குள் எப்படிச் சமைத்தல் வேண்டும்…?
 
ஒருவர் நமக்குத் தீமை செய்தார் என்று அறிகின்றோம். ஆனால் அந்தத் தீமையின் உணர்வு நமக்குள் வளராது தடைப்படுத்துதல் வேண்டும்.
 
அவ்வாறு தடைப்படுத்த வேண்டுமென்றால்
1.“ஈஸ்வரா…” என்று உயிரை எண்ணித் “துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாம் பெற வேண்டும்என்று எண்ணி ஏங்கி
2.அந்தத் தீய உணர்வினை நமக்குள் வராது தடைப்படுத்தி அருள் உணர்வினைச் சேர்க்கப்படும் பொழுது
3.தீய உணர்வுகளின் வீரியத்தை அது குறைக்கின்றது.
 
உதாரணமாக மிளகாய் தனித்துக் காரமாகத்தான் இருக்கும். ஆனால் மற்ற பொருள்களுடன் இணைக்கப்படும் பொழுது சுவையாக மாறுகின்றது…
 
ஒருவர் தவறு செய்கிறார்என்று நாம் அறியும் பொழுது நாம் அருள் ஒளியின் உணர்வினை நுகர்ந்து
1.அவருடைய அறியாமை நீங்க வேண்டும்
2.அருள் ஞானம் அவர் பெற வேண்டும்
3.அருள் சக்தி அவர் பெற வேண்டும்
4.தெளிந்த மனம் அவர் பெற வேண்டும் என்று எண்ண வேண்டும். 
 
இதனால் அவருடைய உணர்வுகள் நமக்குள் வந்தாலும்… “அவரை இயக்கும் தீய உணர்வுகள்நமக்குள் விளையாது…”
 
அவர் தவறு செய்கிறார் என்று நாம் அறிந்தாலும் அவர் வேகத் துடிப்பாக இருக்கும் பொழுது நன்மை தரும் சொல்களை நாம் சொன்னால்  அவர் கேட்கமாட்டார்.
 
சில நிமிடங்களுக்குப் பிறகு அதாவது சாந்தமாக இருக்கப்படும் பொழுது நீங்கள் இப்படிச் செய்தால் உங்களுக்கு நன்மைஎன்று நாம் சொல்லும் பொழுது அவர் ஏற்றுக் கொள்ளும் பருவம் வருகின்றது.
 
அப்போது நாம் சொல்லும் சொல்லின் உணர்வுகள் அவரிடத்தில் உருவாகும் தன்மை வருகின்றது.
 
எண்ணெய் நன்றாக கொதிக்கும் முன் வடையைத் தட்டி எண்ணெயில் போட்டால் என்னவாகும்…? வடை சீராக வேகாது. எண்ணெயை அதிகமாக விழுங்கும்.
 
பின்அது சூடேறச் சூடேற வடையில் சுவையும் மாறிவிடும். ஆனால் எண்ணெய் அதிகமாகக் கொதித்து அதில் வடையைத் தட்டிப் போட்டால் வடையின் மேல் பாகம் கருகிவிடும். உள் பாகம் மாவாக இருக்கும்.
 
சமப்படுத்தும் பக்குவப்படுத்தும் உணர்வின் தன்மை கொண்டுதான், பதார்த்தங்களை உருவாக்க வேண்டும்.
 
இதைப் போன்றுதான் நமது வாழ்க்கையில் குழந்தை ஒன்று தவறு செய்யும் பொழுது… “தருணம் பார்த்துத்தான்…” நல் உணர்வின் தன்மையைக் குழந்தைக்குச் சொல்ல வேண்டும்.
 
1.ஏற்றுக் கொள்ளும் பருவம் வரும் பொழுதுதான் நல் உணர்வுகளை ஊட்ட வேண்டும். 
2.ஏற்றுக் கொள்ளும் பருவம் இல்லை என்றால் சொல்லிய நல் உணர்வுகள் அங்கே விளையாது.
3.நல் உணர்வின் தன்மை விளையும் பருவம் அங்கே இழக்கப்படுகின்றது.
 
ஆனால் தவறைச் சுட்டிக் காட்டி,  நல் உணர்வை ஊட்டத் தவறினால் வெறுப்பின் உணர்வே வரும்.  வெறுப்பின் நிலை வளர்ந்து விட்டால் ஏற்றுக் கொள்ளும் பண்பே வராது. 
 
ஆகவே நாம் இது போன்ற நிலைகளை எல்லாம் அறிந்து
1.எதனை
2.எவ்வாறு
3.எதன் வழியில் நாம் உருவாக்க வேண்டும்…?  என்ற நிலையில்
4.“நாம் பக்குவப்படுத்தும் நிலையில்சமப்படுத்துதல் வேண்டும்.
 
ஒவ்வொரு நிமிடமும் மனதைச் சமப்படுத்தினால்பக்குவப்படுத்தும் பண்பும்…” வருகின்றது.
 
அருள் ஞானத்தின் உணர்வுகள் நமக்குள் விளைந்தால் நம் வாழ்க்கையில் வரும் விஷத் தன்மைகளை கார உணர்ச்சிகளை அடக்கும் தன்மை வருகின்றது.
 
இப்படி அடக்கும் தன்மை வந்தால் சிந்திக்கும் தன்மை…” வருகின்றது. சிந்திக்கும் தன்மை வந்தால் நம் செயல் சீராக…” அமைய இது உதவும்.
 
நாம் நமது வாழ்க்கையில் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியின் உணர்வைப் உருவாக்கி பேரின்பப் பெரு வாழ்க்கை என்ற நிலையை நமக்குள் உருவாக்குதல் வேண்டும். 
 
உதாரணமாக ஒருவர் சாக்கடையில் விழுந்து விட்டால் அவரை அங்கேயிருந்து மீட்க நினைக்கின்றோம். அவரைக் கை கொடுத்துத் தூக்குகின்றோம். அவரும் நம்மைக் கட்டித் தாவி மேலே வருகின்றார்.
 
இதனால் நம் மீதும் அசுத்தம் ஆகிவிடுகின்றது. உடனே அசுத்தத்தை நீரால் நீக்குகின்றோம். இது புறத்தால் நிகழ்வது.
 
ஆனால் பிறிதொருவரின் வேதனையின் உணர்வை நாம் நுகரும் பொழுது நம் அகத்திற்குள் வந்த அந்த அசுத்தத்தை நீக்க வேண்டுமல்லவா…? (இதைப் பற்றி அதிகமாக நாம் எண்ணுவதில்லை).
 
யாம் அருள் வாக்கினை வழங்குகின்றோம். எம்மை நீங்கள் பார்க்கின்றீர்கள். யாம் பேசும் உணர்வுகளை நீங்கள் நுகர்ந்தபின் அது உங்களுடைய உயிரினில் பட்டு இதனின் உர்வை அறிய நேருகின்றது.
 
இதை உங்களால் பார்க்க முடிகின்றதா…? இல்லை…! ஆனால் உணர முடிகின்றது.
 
நீங்கள் எம்மைப் பார்க்கின்றீர்கள்… பார்த்து நீங்கள் “எதைப் பெற வேண்டும்…?” என்று எண்ணி ஏங்குகின்றீர்களோ உயர்ந்த எண்ணங்களை எண்ணும் பொழுது…” அதனின் உணர்வின் தன்மை உங்களுக்குள் இயக்குகின்றது.
1.அப்படி இயக்கப்படும் பொழுது உங்களுக்குள் அறிய முடியாத சில சலனங்கள் ஏற்பட்டு…”
2.அது எப்படி நம்மை இயக்குகிறது…? என்று அறியும் பருவம் வருகின்றது. 
 
அறியும் பருவம் வந்தாலும் நீங்கள் அதை அடக்க வேண்டுமென்ற உணர்ச்சிகளைத் தூண்டுகின்றது. அப்போது தீமைகள் தம்முள் வராது தடுக்க வேண்டும்…” என்ற உணர்வுகள் உங்களிடத்தில் வருகின்றது.
 
1.அருள் ஞானியின் அருள் உணர்வுகள் வலிமை கொண்டது.  அதே சமயத்தில் வேதனையின் உணர்வுகளும் வலிமை கொண்டது.
2.ஆனால் அருள் ஞானியின் உணர்வுகள் சிந்தனையைத் தூண்டும்… வேதனை உணர்வுகள் சிந்தனையை இழக்கச் செய்யும்.
 
நல்ல மனிதராக இருந்தார்இன்று அவருடைய நிலை அவருடைய  குடும்பத்தினர்களே அவரை எதிர்க்கும் நிலை ஆகிவிட்டதே…!” என்று உங்களிடத்தில் சிந்தனையின் தன்மை மாற்றப்பட்டுவேதனை பற்றிய சிந்தனையை உங்களிடத்தில் வளர்க்கச் செய்கின்றது. அப்போது அவரிடத்தில் இருந்த அந்த வேதனையின் வலு உங்களிடத்தில் வளர்கின்றது.
 
தீமைகளின் உணர்வை அடக்கும் ஆற்றல் கொண்டது துருவ நட்சத்திரம். அதன் உணர்வை எடுத்து உங்களுக்கு யாம் உபதேசிக்கும் பொழுது தீமைகளை அடக்கும் ஆற்றல் உங்களிடத்தில் வலிமை பெறுகின்றது.
 
1.தீமை என்று ஒன்றை அறியும் பொழுது… அந்தத் தீமையிலிருந்து விடுபடும் நிலையை நாம் பெற வேண்டும். 
2.தீமையிலிருந்து விடுவிக்கும் உணர்வுகள் எது…? விடுபட்டவர் யார்…? துருவ நட்சத்திரம்.
3.துருவ நட்சத்திரத்திலிருந்து வெளிப்படும் உணர்வுகளை நமக்குள் கவரும் பொழுது
4.அது நம்முள் உள்ள தீமைகளை ஒடுக்குகின்றதுதீமைகள் வராது காக்கின்றது.
 
புழுவிலிருந்து மனிதராகும் வரையிலும் மனிதராக ஆன பின்னும் ஒவ்வொரு சரீரத்திலும் தீமைகளை நீக்கிடும் ஆற்றல் பெற்றது கண்கள். கண்களின் துணை கொண்டு தீமைகளை அகற்றிடும் ஆற்றல் பெற்றது துருவ நட்சத்திரம்.
 
துருவ நட்சத்திரத்தின் அருளுணர்வின் தன்மையை நாம் நுகர்ந்தால் ஞானிகள் அறிந்த உணர்வின் அறிவு நமக்குள் விளைகின்றது, பகைமை ணர்வுகளை நீக்குகின்றது… தீமைகள் வராது காக்கின்றது.
 
ஆகவே நாம் எதைச் செய்ய வேண்டும்…? ஒருவர் வேதனைப்படுகிறார் கஷ்டப்படுகின்றார் என்றால் நாம் அதை நீக்கிடும் நிலையைப் பெற வேண்டும்.
 
உதாரணமாக ஒருவர் சாக்கடையில் விழுந்து விட்டால் அவருக்குக் கை கொடுத்து அரவணைத்துச் சாக்கடையிலிருந்து மீட்கிறோம். பின் அவரைக் குளிக்கச் செய்கின்றோம். நாமும் குளித்துக் கொள்கின்றோம்.
 
இதைப் போன்று வேதனையின் உணர்வினை நாம் நுகர்ந்தால் முதலில் நம்முள் சுத்தப்படுத்திக் கொள்ள வேண்டும். பின் மகரிஷிகளின் அருள் உணர்வுகளை அவர் பெற வேண்டும்வேதனைகள் அவரிடத்திலிருந்து நீங்க வேண்டும் என்று எண்ணுதல் வேண்டும். 
 
இதனின் உணர்வின் தன்மையினை நமக்குள் வளர்த்துக் கொண்டால் அருள் உணர்வின் ஆற்றல் நம்மிடையே பெருகும் நிலை வருகின்றது.
 
1.இதனைப் பின்பற்றி வரும் அனைத்து அன்பர்களும் மகரிஷிகளின் அருள் சக்தி பெற்று சர்வ தீமைகளில் இருந்தும் விடுபட்டு
2.மன பலம் பெற்று உடல் நலம் பெற்று செல்வம் செல்வாக்கு பெற்று
3.வாழ்க்கையில் எல்லா நலமும் வளமும் பெற்றிட எமது அருளாசிகள்.

கண்களால் உருவான அணுக்களுக்கு அதே கண் கொண்டு துருவ நட்சத்திரத்தின் சக்தியை எளிதில் பெறச் செய்ய முடியும்

கண்களால் உருவான அணுக்களுக்கு அதே கண் கொண்டு துருவ நட்சத்திரத்தின் சக்தியை எளிதில் பெறச் செய்ய முடியும்


துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எங்கள் ரத்த நாளங்களில் கலக்க வேண்டும் ரத்தங்களில் உள்ள ஜீவான்மாக்கள் ஜீவணுக்கள் அந்தச் சக்தி பெற வேண்டும் என்று நாம் அடிக்கடி கண்ணின் நினைவை உடலுக்குள் செலுத்த வேண்டும்.
 
அதாவது மற்ற உணர்வுகள் நம் உடலுக்குள் அணுவாக உருவாகாதபடி முந்தி இதைச் செய்ய வேண்டும்.
1.காரணம் உடலுக்குள் உருவான அணுக்கள் அனைத்துமே கண்கள் பதிவானது தான்…
2.கண்கள் வழி நுகர்ந்து தான் உடலில் அணுக்கள் உருவானது.
 
அதே கண்ணின் நினைவு கொண்டு துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை ரத்தங்களிலே இணைக்கப்படும் பொழுது அது வலுவாகின்றது.
1.கண்கள் மூலம் எளிதில் அந்த அணுக்களுக்கு அந்த ஆற்றலைப் பாய்ச்ச முடியும்.
2.ரத்தத்தில் துருவ நட்சத்திரத்தின் உணர்வுகள் வட்டமாக வலுவாக அமைத்து விடுகின்றது.
 
ஞானிகள் கண்ட உண்மைகள் இது.
 
பின்… தீமையான உணர்வுகளை நாம் ஈர்க்க மறுக்கப்படும் பொழுது உடலுக்குள் இருக்கும் அந்த அணுக்களும் ஈர்க்க மறுத்தால் தீமைகள் அனாதையாகி விடுகின்றது. அனாதையாகி விட்டால் சூரியன் கவர்ந்து செல்கின்றது.
 
2000 சூரியக் குடும்பங்களில் ஒதுங்கிய தூசி மண்டலம் வால் நட்சத்திரமாக ஆவது போன்று நம் உடலில் இந்த மண்டலங்கள் ஏற்பட்டு ஒதுங்குகின்றது அதைச் சூரியன் ழுத்துக் கவர்ந்து கொண்டு சென்று விடுகின்றது.
 
நம் ஆன்மா பரிசுத்தம் ஆகின்றதுஜீவணுக்களும் ஜீவான்மாக்களும் பரிசுத்தம் அடைகின்றது. ஜீவான்மாக்கள் பரிசுத்தமானால் பரிசுத்தமான ஜீவணுக்களாக உருவாகி உயிரான்மா ஒளியாக ஆகிறது.
 
உயிருடன் ஒளியான உணர்வுகள் ஆன்மாவாகும் பொழுது
1.எந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வு ஒளியான அணுக்களாக ஆன்மாவாக மாறியதோ
2.உயிர் வெளியே சென்றால் ந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வலைகளைப் பெருக்கினோமோ அது பெருகி
3.துருவ நட்சத்திரத்திற்கே அழைத்துச் செல்கின்றது நம் உயிர்.
 
அங்கே சென்றபின் தொக்கியுள்ள விஷத்தைக்ரைக்கின்றது துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்தில் நிலை கொள்ளச் செய்கின்றது.
 
பிரபஞ்சத்திலும் சரி பிற மண்டலங்களிலிருந்து வரக்கூடிய நிலைகளும் சரி பூமியின் துருவத்திற்கு நேராக வரும் அவைகளைத் துருவ நட்சத்திரம் கவர்ந்து ஒளிமயமாக மாற்றி விடுகிறது. உயிரைப் போன்றே ஜீவணுக்களை உருவாக்கி ஒளியாக மாற்றி விடுகின்றது.
 
மனிதன் ஒருவன் தான் அந்தத் துருவ நட்சத்திரத்தின் சக்தியை எடுத்து வளர்க்க முடியும்.
 
1.குருநாதர் எனக்குள் இதைப் பதிவு செய்தார்.
2.எனக்குள் எடுக்கப் பழக்கச் செய்தார் எடுத்து எனக்குள் வளர்க்கச் செய்தார்
3.தன்ணர்வைத் தான் உங்களுக்குள் மீண்டும் மீண்டும் பதிவாக்குகின்றேன்.
 
அந்தப் பதிவை நினைவாக்கி உங்களுக்குள் வளர்த்து அந்தப் பேரருள் பேரொளியாக நீங்கள் அனைவரும் உருவாக வேண்டும் என்று வேண்டிக் கொள்கிறேன்.

நம் விலா எலும்புக்குள் இருக்கும்… “பதிவாக்கும் பவர் அதிகமானது…!”

நம் விலா எலும்புக்குள் இருக்கும்… “பதிவாக்கும் பவர் அதிகமானது…!”


சில பண்பற்ற குடும்பங்களை நாம் பார்க்க நேர்ந்தால் “என்ன இப்படிச் சண்டை போடுகிறார்கள்…?” என்று எண்ணுவோம்… அதைக் கவர்ந்து விடுவோம். ஆக… சந்தர்ப்பத்தால் நாம் எதை இப்படி உற்று நோக்குகின்றோமோ அதைக் கவர்கின்றோம்.
 
இதை இராமாயணத்தில் வசிஷ்டர்… பிரம்ம குரு என்று காட்டுவார்கள்.
1.நாம் எதை அறிந்து கொள்ள விரும்புகின்றோமோ அதைக் கவர்கின்றோம்.
2.உயிரிலே பட்டால் அந்த உணர்வின் தன்மை உடலுக்குள் பிரம்மமாகிறது… அது அணுவாக மாறுகிறது.
3.அணுவாகிவிட்டால் அது எந்தக் குணமோ அந்த உணர்வின் சக்தியாகத் தான் அது இயக்கும்து தான் அருந்ததி.
4.திருப்பி எண்ணும் பொழுது அவர்கள் எதைச் செய்தார்களோ அந்த உணர்வைத் திருப்பிச் செயல்படுத்தும் குரு தான் அது.
 
அதைத்தான் வசிஷ்டர் பிரம்மகுரு அவரின் மனைவி அருந்ததி என்று சொல்வது.
 
அதாவது… யார் உணர்வை நுகர்ந்தோமோ அந்த உணர்வின் சக்தியை மீண்டும் எண்ணும் போது அதனுடைய இனத்தைப் பெருக்கும் பிரம்மமாகிறது. அந்த அசுத்தத்தை வளர்க்கும் சக்தியாகவே பெறுகின்றது.
 
ஆகவே… நாம் எதை ஆசைப்படுகின்றோமோ அதுவே வளர்கின்றது. ஆனால் நாம் ஆசைப்பட வேண்டியது எது…?
 
தீமைகளைப் பற்றித் தெரிந்து கொள்ள ஆசைப்படுவதை விடுத்து விட்டு
1.தீமைகளை நீக்கிய துருவ நட்சத்திரத்தின் உணர்வைப் பெற ஆசைப்பட்டால்
2.அது நமக்குள் பிரம்மாகி அதன் வளர்ச்சியில் நாம் அதுவாக மாறுகின்றோம்.
 
அதற்குத் தான் அடிக்கடி யாம் ஞானிகளைப் பற்றி உபதேசிக்கின்றோம் உங்களுக்குள் அதை நினைவுபடுத்துகின்றோம். எந்த அளவுக்கு இதை உற்று நோக்கிக் கவனிக்கின்றீர்களோ
1.உங்கள் நெஞ்சின் எலும்புக்குள் உள்ள ஊனுக்குள் இது பதிவாகின்றது ரெக்கார்ட் செய்கின்றது.
2.முதுகு பக்கம் இருக்கும் எலும்பின் நிலை வேறு முன்பக்கம் உள்ள எலும்புகளின் இருப்பது வேறு
3.விலா எலும்புகளில் முன்னாடி தான்… அதில் அனைத்தையும் ரெக்கார்ட் செய்கின்றது.
4.அதிலே உள்ள பவர் அதிகமானதுஎதைப் பதிவாக்குகின்றதோ அதைக் கவரும் சக்தி பெற்றது.
5.ஆகையினால் தான் அந்தத் துருவ நட்சத்திரத்தின்ணர்வுகளை அங்கே பதிவாக்குகின்றேன்.
6.அதை நினைவு கூர்ந்து கவரும்… அந்த வலிமை பெறும் சக்தியைத் தான் உங்களுக்குக் கொடுக்கின்றேன்.
 
துருவ நட்சத்திரத்தின் உணர்வை நாம் தியானத்தின் மூலம் பெறுவோம் உடலில் இருக்கக்கூடிய எல்லா அணுக்களுக்கும் அதைப் பாய்ச்சுவோம்… அந்த ஆன்மாவைப் பரிசுத்தப்படுத்துவோம்.
 
அதைச் சுத்தப்படுத்தும் போது நம் ஆன்மா தூய்மை அடைகிறது. நம் உடலில் இருக்கக்கூடிய அனைத்து அணுக்களின் ஆன்மாவையும் தூய்மைப்படுத்துவோம்.
 
இப்படித் தூய்மைப்படுத்திக் கொண்டே வந்தால் வாழ்க்கையில் எந்த நேரம் எது வந்தாலும் “உடனடியாக… ஈஸ்வரா என்று உயிரின்பால் நினைவைச் செலுத்தி…” அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும். அது எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும்.
 
நாங்கள் பார்ப்பவர்கள் அனைவரும் அந்த அருள் சக்தி பெற வேண்டும் குடும்பத்தில் ஒற்றுமையாக இருக்க வேண்டும். அவர்களை அறியாது சேர்ந்த பகைமைகள் அகல வேண்டும் என்று நாம் இதை எண்ணி எடுக்க முடியும்.
1.நமக்குள் பகைமை வராது தீமைகள் வராது தடுத்துக் கொள்ள முடியும்.
2.என்றென்றும் நாம் மகிழ்ந்து வாழ முடியும்.