ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

April 6, 2026

தீமை தரக்கூடிய அணுக்களை நன்மை செய்யும் அணுக்களாக மாற்ற வேண்டும்

தீமை தரக்கூடிய அணுக்களை நன்மை செய்யும் அணுக்களாக மாற்ற வேண்டும்


ஒருவன் தீமையைச் செய்கிறான் என்றால் அவனிடம் உள்ள தீமையின் உணர்வுகளை வீழ்த்துவதற்குப் பதில் தீமை செய்தவனின் உடலையே சாய்த்துவிடும் நிலை வருகிறது என்று தெளிவாகக் காண்பித்தருளினார் நமது குருநாதர்.
 
தீமை தரக்கூடியவைகளாக இருந்தாலும் மனிதன் அவைகளைத் தனக்குச் சாதகமாக மாற்றிக் கொள்ளும் வல்லமை வாய்ந்தவன். இன்றைய விஞ்ஞானம் அதை நிரூபிக்கின்றது.
 
அதே போன்று தீமை செய்வோரின் உணர்வுகள் நமது உணர்வில் கலந்து விட்டால் அந்தத் தீமையை விளைவிக்கும் உணர்வுகள் நமக்குள் விளையாது தடுத்துச் சமப்படுத்தும் நிலை பெற வேண்டும்.
 
1.மகரிஷிகள் தம்மிடத்தில் தீமையின் உணர்வுகள் வந்து மோதும் பொழுது அவைகளைச் செயலற்றதாக்கித் தீமையின் உணர்வுகளை ஒடுக்கி
2.அவைகளுடைய செயலாக்கங்களை மாற்றித் தம்முள் நல்லுணர்வினை  வலிமை மிக்கதாக மாற்றியவர்கள்.
 
அவர்களைப் போன்று நாம் நம்முள் தீமையின் உணர்வுகளை ஒடுக்குகின்ற பொழுது ஒருவன் நமக்கு எத்தகைய தீமைகளைச் செய்து கொண்டிருந்தாலும் அது நம் உடலுக்குள் தீமை விளைவிக்கும் அணுக்களை உருவாக்குவதில்லை.
 
மகரிஷிகளின் அருளுணர்வுகள் நமது உடலில் கலக்கப்படும் பொழுது
1.நமது உடலில் தீமைகளை உருவாக்கும் அணுக்கள் விளைந்திருப்பினும்
2.அவைகளை நமக்குள் நன்மை பயக்கும் அணுக்களாக மாற்றுகின்றன.
 
உதாரணமாக உடலுக்கு ஆரோக்கியம் தரும் நல்ல மருந்துடன் சிறிது விஷத்தைக் கலக்கப்படும் பொழுது விஷம் நல்ல மருந்திற்கு ஊட்டச்சக்தியாக மாறுகின்றது.
 
எந்த மருந்தைச் சிறிது விஷத்துடன் கலந்து கொடுக்கின்றோமோ அந்த விஷம் ஊடுருவி இந்த நல்ல மருந்தின் தன்மையை உடலெங்கும் பரவச் செய்கின்றது.
 
நோய்வாய்ப்பட்ட மனிதனின் உடலில் மருந்தினைச் செலுத்தும் பொழுது மருந்துடன் கலந்துள்ள விஷம் மருந்தினை எடுத்துச் சென்று உடலில் உள்ள வேதனையை உருவாக்கும் உணர்வின் அணுக்களை உணவாக உட்கொண்டு தன் இனத்தை உருவாக்கும் தன்மையால் நல்ல மருந்தின் தன்மை அடர்த்தியாகி வேதனையை உருவாக்கும் அணுக்களை வளரவிடாமல் தடுக்கச் செய்கின்றது மருந்துடன் கலந்துள்ள விஷம்.
 
இதைப் போன்று ஞானிகள் காண்பித்த வழியில் அருள் ஞானியின் உணர்வை நம் எண்ணத்துடன் கலந்து கொண்டே வர வேண்டும். அதனால்
1.நாம் எத்தகைய தீமையின் உணர்வைக் கண்டறிந்தோமோ அதனுடன்
2.மகரிஷியின் ஆற்றல் மிக்க சக்தி நாம் பெற வேண்டும் எனும் உணர்வினை இணைத்து ம் உடலுக்குள் செலுத்தி விட்டால்
3.அருள் ஞானியின் உணர்வுகள் இந்த விஷமான நிலையை ஒடுக்கிவிட்டு நமக்குள் வலு கொண்ட நிலையாக மாறுகின்றது.
 
இந்த உண்மைகளை எமது குருநாதர் எமக்கு உணர்த்தி எம்முள் உணர்ச்சிகளைத் தூண்டச் செய்து எமக்குள் இதனின் நினைவின் ஆற்றலை பதியச் செய்து துருவ மகரிஷிகளின் ஆற்றலை நீ பருகு…” என்றார்.
 
யாம் காட்டினுள் இருந்த பொழுது பல உயிரினங்கள் தன் பசியைத் தணிப்பதற்காக மற்ற உயிரினங்களைத் துரத்துவதும் மற்றவைகள் அஞ்சி ஓடுவதும் சிக்கிக் கொண்டவைகள் ஓலமிடுவதும் போன்றவைகளைக் கண்டு யாம் அச்சப்படும் நிலை உண்டானது.
 
அவைகள் செய்த துயர நிலைகளால்
1.துயரத்தை உருவாக்கும் அணுக்கள் எமக்குள் எப்படி விளைகின்றது…? என்றும்
2.இதை உடனடியாக மாற்றுவதற்கு யாம் எவ்வாறு செயல்பட வேண்டும்? என்றும் எமக்கு குருநாதர் உபதேசித்தார்.
 
மகரிஷிகள் தமக்குள் வளர்த்துக் கொண்ட உணர்வை உன்னிடத்தில் வளர்த்துக் கொண்டால் மற்றொன்றைக் கொன்று புசிக்கும் அந்த உயிரினங்கள் உன்னைப் பார்த்தாலும் உன்னுள் வளர்த்துக் கொண்ட உணர்வின் மணம் கண்டு அது அஞ்சி ஓடும்.
 
அச்சுறுத்தும் உணர்வுகள் உனக்குள் வந்தாலும் அதை அடக்கி ஒளியாக உனக்குள் மாற்றுகின்றாய்.
 
1.எதனின் உணர்வை உனக்குள் அடக்குகின்றாயோ அதனின் உணர்வுகள் உனக்குள் வலு பெறும் பொழுது
2.வெளிப்படும் நுண்ணிய அலைகளை நுகரும் ஆற்றல் மற்ற உயிரினங்களுக்கு உண்டு.
3.இதனை நுகரும் உயிரினம் இவன் நம்மை அடக்கி விடுவான் என்ற உணர்வு கொண்டு
4.அது அஞ்சி ஓடும்…! என்ற நிலைப்படுத்தி அதை நிதர்சனமாகக் காண்பித்தார் குருநாதர்.
 
ஆகவே மகரிஷிகளின் அருள் சக்தி எங்கள் உடல் முழுவதும் படர்ந்து எங்கள் உடலில் உள்ள ஜீவான்மா ஜீவ அணுக்கள் அனைத்தும் பெற வேண்டும் ஈஸ்வரா…” என்று எண்ணி ஏங்கித் தியானிக்க வேண்டும்.
 
நமக்குள் இருக்கும் துன்புறுத்தும் உணர்வின் அணுக்களுடன் மகரிஷிகளின் அருள் சக்தியை இணைக்கப்படும் பொழுது அது நம்முள் தீமைகளைக் கவர்ந்திடும் நிலைகளை மாற்றி அருள் மகரிஷிகளின் இனங்களைக் கவர்ந்திடும் நிலை வருகின்றது.
 
இப்படி மகரிஷிகளின் அருளுணர்வுகளை நம்முள் இணைக்கப்படும் பொழுது நமக்குள் தீமைகளை அடக்கிடும் தன்மை வருகின்றது.
1.நம்முள் அஞ்சிடும் நிலை மாறுகின்றது.
2.தெளிந்த மனதின் தன்மை நம்மில் உருவாகின்றது.

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்று ஒரு நாளைக்கு நூறு முறையாவது சொல்லுங்கள்

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்று ஒரு நாளைக்கு நூறு முறையாவது சொல்லுங்கள்


பூமிக்குள் மாற்றங்கள் ஏற்பட்டுக் கொண்டுள்ளது கொதிக்கும் தருணத்தில் இருப்பதால் கடல்கள் பெருகுகின்றது. நிலங்கள் குறையப் போகின்றது.
 
மனிதனுடைய உணர்வுகள் வெறி கொண்டு தாக்கிடும் நிலையாக நஞ்சு கொண்ட பிராணிகள் மற்றொன்றைக் கொன்று புசிப்பது போன்று
1.இரக்கமற்ற உணர்வுகள் நஞ்சின் தன்மையாக மனித உணர்வுக்குள் கலந்து
2.மனிதனைக் கொன்று புசிக்கும் நிலை வந்து கொண்டிருக்கின்றது.
 
இத்தகைய நஞ்சினை நாம் பிளக்க வேண்டும்.
 
ஞானிகள் உணர்வை நுகர்ந்து விண் செல்லும் மார்க்கங்களைக் கற்றுக் கொள்ள வேண்டும். அழியாச் க்தியான அந்த ஞானிகள் உணர்வைச் சேர்த்து உணர்வை ஒளியாக மாற்றும் நிலைகளை இந்த வாழ்க்கையிலே பெற வேண்டும்… பெற முடியும்.
 
கஸ்தியன் எல்லாவற்றையும் தெரிந்து சக்தி பெறவில்லை வியாசகன் அறிந்து பெறவில்லை. எல்லாமே சந்தர்ப்பம் தான்…!
1.இதைப்போன்று தான் சந்தர்ப்பத்தால் நீங்கள் இந்த உபதேசத்தைக் கேட்டறிகின்றீர்கள்.
2.உங்களுக்குள் பதிவாந பின் அதைப் பெற வேண்டும் என்று இச்சைப்பட்டு மீண்டும் நினைவுக்குக் கொண்டு வந்தால்
3.அந்த ஞானிகள் உணர்வை நிச்சயம் பெற முடியும்.
 
உங்களுக்குத் தன்னம்பிக்கை வேண்டும்.
 
ஏனென்றால் எண்ணியதைத் தான் உயிர் இயக்குகின்றான்… உணர்வினை ஜீவனாக்குகின்றான் அணுவாக மாற்றுகின்றான் அணுவின் லமாக உடல் ஆக்குகின்றான்.
 
ந்த அருள் ஞானிகள் உணர்வுகளை நாம் ஏங்கிப் பெறும் பொழுது அதையே அணுவாக மாற்றுகின்றான். அணுவின் தன்மை ஒளியாக உருப்பெறுகின்றது. ஆகவே நாம் ஒளியாக வளர்த்துக் கொள்ள முடியும்.
 
அருள் ஞானிகள் உணர்வுகளை நுகர்ந்து நாம் இணைத்துக் கொண்டே வந்தால் தீமைகளை அகற்றும் உணர்வாக விஞ்ஞானத்தினால் வரக்கூடிய எத்தகைய நஞ்சுகளை மாற்ற முடியும்.
 
சூரியன் தான் சுழலும் பொழுது தன் மீது மோதும் நஞ்சினைப் பிரித்து இந்தப் பிரபஞ்சத்தையே ஒளிச் சுடராக ஆக்குவது போன்று உலகையே காத்து இரட்சிப்பது போன்று இனி வரக்கூடிய எத்தகைய நஞ்சினைப் பிளந்திடல் வேண்டும்.
 
ஞானிகள் உணர்வை உள் புகுத்தி அதைப் பிளக்க வேண்டும். துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி நாங்கள் பெற வேண்டும் என்று
1.ஒரு நாளைக்கு நூறு முறையாவது சொல்ல வேண்டும்.
2.துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் ஈஸ்வரா என்று
3.திரும்பத் திரும்பச் சொல்லும் பொழுது உடலுக்குள் அந்த ஆற்றல்மிக்க சக்திகள் சென்று
4.கேட்டறிந்த பார்த்துணர்ந்த காற்றுக்குள் மறைந்து வரும் தீய உணர்வுகளை ம்முடன் இரண்டறக் கலக்காது…” அதைப் பிரித்து விடுகின்றது.
 
அது ஓங்கி வளரும் பொழுது பிறிதொரு உணர்வு ஆன்மாவாக இருப்பதைப் பிளந்து விடுகின்றது. இதைத்தான் மடி மீது வைத்து நாராயணன் வாசல்படி மீது அமர்ந்து இரண்யனைப் பிளந்தான் என்று நரசிம்ம அவதாரமாகக் காட்டியுள்ளார்கள்.
 
அத்தகைய நரசிம்ம அவதாரமாக ஒவ்வொருவரும் மாறினால் தான் இனி வரும் இருளான நிலைகளிலிருந்து நம்மை மீட்க முடியும் மற்றவர்களையும் மீட்கும் சக்தியாக நாம் வளர முடியும்.
 
ஆகவே
1.உயிருடன் ஒன்றி ஒளியாக என்றுமே நிலைத்திருப்போம்
2.அந்த ஞானிகள் காட்டி வழியில் நாம் செல்வோம் அனைவரும் செல்ல வேண்டுமென்று வேண்டிக் கொள்கின்றேன்.