ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

February 10, 2026

தீய வினைகள் அனைத்தும் பாசத்தால் வருவது தான்…! - கண்ணன் சொன்னது

தீய வினைகள் அனைத்தும் பாசத்தால் வருவது தான்…! - கண்ணன் சொன்னது


புழுவிலிருந்து மனிதனாக வரும் வரையில் ஒவ்வொரு உடலிலும் காத்துக் கொள்ளும் உணர்வினை எடுத்து மனிதனாக வளர்ச்சி அடைந்ததைக் குறிப்பிடுவதற்குத்தான்
1.அர்ச்சுனன் சகலகலா வல்லவன்சகல வித்தைகளையும் கற்றுக் கொண்டவன்
2.வல்லமை பெற்றவன்…! என்று ஞானியர்கள் உணர்த்தினார்கள்.
 
கண்ணன் கீதா உபதேசம் செய்வதாகத் தத்துவங்களைச் சொல்கின்றனர். அன்று ஞானியர்கள் உணர்த்திய அந்த உண்மைகளைப் பார்ப்போம்.
 
தன் சகோதரர்கள் எதிர் நிலையில் இருந்து போர் செய்கின்றார்கள். சகோதர பாசம் என்ற உணர்வுகள் அர்ச்சுனனுக்குள் இருந்ததினால் சகோதரர்களைப் பார்த்ததும் அவர்களைக் கொல்ல அவனுக்கு மனம் வரவில்லை. 
 
அவர்களை விட்டு விட்டால் அவர்கள் உன்னை அழித்து விடுவார்கள்.  ஆகையால் நீ உன்னைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்று கண்ணன் அர்ச்சுனனுக்கு உபதேசித்தாகச் சொல்வார்கள்.
 
அதன் விளக்கம்…! ஒருவன் தவறு செய்கிறான் என்றால் அந்தத் தவறான நிலைகளை நாம் கூர்ந்து கவனித்தால் அந்தத் தவறான உணர்வுகள் நமக்குள் இயக்குகின்றது…
 
ஒருவன் வேதனைப்படுகின்றான் என்றால் அந்த வேதனையான உணர்வை நம் கண் கொண்டு பார்க்கப்படும் பொழுது அந்த உணர்வுகள் நமக்குள் மாறி நமது நல்ல குணங்களைச் செயலற்றதாக ஆக்கிவிடும்…
 
ஆகையால் நீ சகோதரன் என்று பார்த்தாலும்
1.அந்த இரக்க உணர்வால் நீ இதைச் செயலாக்கவில்லை என்றால் அது உன்னை அழித்துவிடும்
2.நீ கற்றுணர்ந்த வல்லமை அப்போது எங்கே செல்கின்றது…? என்று கண்ணன் அர்ச்சுனனுக்கு உபதேசிக்கின்றான்.
 
கண்ணன் சொன்னதன் நிலைகள் தீய வினைகள் அனைத்தும் பாசத்தால் வரக்கூடியது தான்…!” தன் சகோதரன் என்று உணர்ந்தாலும் தீய விளைவுகளிலிருந்து அவர்கள் தீயவர்கள் என்று உணர வேண்டும்.
 
அவர்கள் செய்யும் தவறான உணர்வுகளைத் தனக்குள் எடுத்துக் கொண்டால் நமது நல்ல குணங்களை இங்கு அழித்து விடுகின்றது.
 
1.ஒருவன் செய்யும் தவறான உணர்வை உன் உடலுக்குள் சேர்க்கா வண்ணம் அதைத் தடுத்து நிறுத்த வேண்டும்.
2.அவன் செய்யும் தவறான உணர்வை எண்ணாதபடி அவனுக்குள் உனது நல் எண்ணத்தைச் செலுத்த வேண்டும்.
3.அவன் அறியாத இருள்களிலிருந்து மீள வேண்டும்… இதை உணர்த்தவே அங்கு அம்பாக எய்யச் சொன்னது.
4.அதாவதுஇந்த எண்ணத்தைக் கொண்டு மகரிஷிகளின் அருள் உணர்வுகளை அவர்களுக்குப் பாயச் செய்வது.
 
அதன் வழி எதிரிகளிடம் இருக்கும் உண்மையின் நிலைகளைத் தெளிவாக எடுத்துச் சொல்ல வேண்டும். எதிரியுடன் இருந்து நின்று அவர்கள் போர் செய்யும் பொழுது தவறான உணர்வுகளில் சிக்கித் தவிக்கும் நிலைகளில் இருந்து அவர்களை மீட்க வேண்டும். அதை எவ்வாறு மீட்க வேண்டும்? என்ற நிலையைக் கண்ணன் உபதேசித்ததாகவும் கீதையிலே எழுதுகின்றனர்.
 
உடலுக்குள் நடக்கும் இத்தகைய “உணர்வின் இயக்க நிலைகளைத் தான்அன்று ஞானியர்கள் கண்ணன் சொன்னதாக உணர்த்தினார்கள்.

கௌரவம் பார்ப்பதற்குப் பதிலாக உயிருக்குள் ஒளியைப் பெருக்கினால் “மதிப்பு…”

கௌரவம் பார்ப்பதற்குப் பதிலாக உயிருக்குள் ஒளியைப் பெருக்கினால் “மதிப்பு…”


நமக்குள் இருக்கக்கூடிய உயிரான ஈசன் இந்த உடலை விட்டுப் போய்விட்டது என்றால் இந்த நீசத்திற்கு வேலையே இல்லை.
 
எத்தனை கௌரவம் எத்தனை துணி எத்தனை அலங்காரம் எத்தனை சுகமான நிலை எத்தனை பஞ்சு மெத்தை எல்லாம் நாம் போட்டு வைத்திருந்தாலும் உயிரான ஈசன் போய்விட்டால்…” குப்பையில் போய் எரித்து விடுவார்கள்.
 
நாம் இங்கே பார்க்கும் கௌரவமெல்லாம்இப்படி இருந்தார்கள் என்றா பார்க்கின்றோம்…! ஆனால்
1.இழுத்துக் கொண்டு கட்டையில் வைக்கும் போதும்
2.மண்ணைக் கொட்டும் போதும் பார்த்துக் கொண்டே தான் இருக்கின்றோம்,
 
ஏண்டா இப்படிச் செய்கின்றாய்?  என்று கேட்கின்றோமா!  ஒரு நாளைக்கு மேல் வைத்திருந்தால் நாற்றம் அடிக்கும்…” என்று தூக்கிச் சென்று விடுகிறோம்.
 
இப்படிப்பட்ட நிலையில்…
1.இந்த உடலில் ஈசன் இருக்கும் போதே
2.நீங்கள் கௌரவத்தைப் பார்ப்பதைக் காட்டிலும் அந்த மெய் ஞானியின் உணர்வை எடுத்து
3.இந்த நீசமான உணர்வு நமக்குள் வளராதபடி அதை வளர்த்துக் கொள்ளுங்கள்.
 
கௌரவப் பிரச்சினை என்று சொல்கிறோமே… அது நமக்குள் நிறைய உண்டு. ஏனென்றால் நாம் அல்ல…!
 
அரசன் தன் கௌரவத்தில் என்ன செய்கிறான்? யார் என்ன தப்பு செய்தாலும் உடனே போர் முறைதான்…! நான் சொன்னேன் கேட்கவில்லை உடனே போர் முறை…!  
 
நான் வலுவான நிலையில் இருக்கிறேன்…! நான் சொன்னதைக் கேட்கவில்லை என்றால் உடனே எதிர்த்துவிட வேண்டும்.
1.என்னை எதிர்த்துப் பழகி விட்டால் உன்னைச் சும்மா விட மாட்டேன் என்று
2.அடுத்து யார் என்ன சொன்னாலும் அங்கே கேட்க மாட்டார்கள்.
 
இது எல்லாம் அந்த உணர்வினுடைய வேலைஎதிர் நிலைகளில் வேலை செய்து கொண்டேதான் இருக்கும். எந்தெந்த உணர்வுகள் நமக்குள் முன்னனியிலே நிற்கிறதோ அது வேலை செய்து கொண்டே இருக்கும். 
 
இதை மாற்றுவதற்குத்தான்
1.வாழ்க்கையில் எப்பொழுது தீமை வருகிறதோ ஆத்ம சுத்திஎன்ற ஆயுதத்தை வைத்து
2.அந்த மகரிஷிகளின் அருள் சக்திகளைச் சேர்த்து உடனே அதை நிவர்த்தித்துப் பழக வேண்டும் என்று சொல்கிறோம்.
 
உடலை விட்டுச் சென்றால் அவனுடன் அவனாகி அவனாக நாம் ஆக வேண்டும். (உயிரான ஈசனுடன்)

போற்றுதல் என்பது புறத்திலே தள்ளுவது… “ஏங்குவது என்பது தன் அகத்திற்குள் விளையச் செய்வது…”

போற்றுதல் என்பது புறத்திலே தள்ளுவது… “ஏங்குவது என்பது தன் அகத்திற்குள் விளையச் செய்வது…”


பல செடிகளின் உணர்வுகள் காற்றிலே படர்ந்து வரப்படும் பொழுது சந்தர்ப்பத்தால் ஒன்றுடன் ஒன்று மோதும் பொழுது தன் அளவுகோல் அதிகமாக ஏற்கின்றதோ அது கருவாகி ஒரு வித்தாகிறது.
 
மனிதனுக்குள் இருக்கக்கூடிய நல்ல குணங்கள் கொண்டு மற்றவர்கள் தீமை விளைவிக்கும் செயல்களை உற்றுப் பார்க்கப்படும் போது
1.அது நம் நல்ல குணத்துடன் இணைந்து விட்டால் அடுத்து இந்த உணர்வின் இயக்கம்
2.எங்கே சண்டை போடுகின்றார்களோ அதை எல்லாம் பார்க்கும்படி செய்யும்.
3.அடிக்கடி அதனை எண்ணினால் சண்டையிட்ட உணர்வுகள் நமக்குள் அது விளையும்.
 
ஒருவன் கொடூரமான செயல்களைச் செய்கின்றான் என்று பார்த்து அவனை வெறுக்கின்றோம். நல்லதைப் பாதுகாக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் நாம் இருந்தாலும் அந்தக் கொடூர உணர்வுகள் அந்த நல்லதுடன் இணைந்த பின் நல்ல உணர்வைக் காக்கக் கொடூரச் செயலைச் செயல்படும் உணர்வுகள் நமக்குள் விளைந்து விடுகின்றது.
 
ஆன்மாவிலே இது அதிகமாகப் பரவப்படும் பொழுது இந்த உணர்வின் செயலாக்கமாக இது உருவாக்கப்பட்டு அதனின் உணர்வின் குணங்கள் நமக்குள் விளைகின்றது.
 
இதைப் போலத் தான்
1.தினந்தோறும் அடிக்கடி மகரிஷிகளின் உணர்வின் சத்தை உங்களைக் காத்திடும் உணர்வுகளில் இணைத்துக் கொண்டே வருகின்றோம்.
2.உங்கள் வாழ்க்கையில் இடர்படும் உணர்வுடன் எமது உபதேச உணர்வுகள் இடைமறித்து இணைக்கப்பட்டு
3.அந்த உணர்வின் நினைவாற்றல் கொண்டு அதிலே துருவ நட்சத்திரத்தின் சக்தியை இணைத்து இணைத்து
4.தாவர இனங்களுக்கு உரமிடுவது போல உங்கள் நல்ல எண்ணங்களைக் காத்திட அதை இணைத்து இணைத்துப் பதிவு செய்கின்றேன்.
 
அப்படிப் பதிவு செய்த நிலைகள் கொண்டு உங்களுக்குள் அது வளர்ச்சியாகும்.
 
ஒரு செடி தழைத்து வளர்ந்தாலும் அது குறுகிய காலத்தில் இறந்து விடுகின்றது. ஆனால் தற்குள் விளைந்த வித்துக்கள் அந்தச் செடி மடிந்தாலும் விளைந்த வித்து காற்றிலே கலந்திருக்கும் தன் இனமான சத்தைக்வர்ந்து இனத்தை மீண்டும் பெருக்குகின்றது. அது மடிவதில்லை…!
 
ஆனால் வித்து முழுமையாக மடிந்து விட்டால் செடியை மீண்டும் நாம் கொண்டுவர முடியாது.
 
இதைப்போல நமக்குள் இருக்கும் தீமையான ணர்வின் சத்தை முழுமையாக மடியச் செய்ய முடியும்.ருள் ஞானிகள் உணர்வை இணைத்து விட்டால் தீமைகள் மறைகின்றது. முளைக்காத நிலைகள் தடைப்படுத்த முடியும்.
1.தடைப்படுத்தும் அந்த அருள் ஞானிகள் உணர்வைத் தான் உங்களுக்குள்  இணைத்துக் கொண்டே வருகின்றேன்.
2.அவ்வாறு இணைத்திடும் நிலைகள் கொண்டு தீமைகளுக்கு ஆகாரம் கிடைக்காது தடைப்படுத்திக் கொண்டிருந்தால் அது விளையாது.
 
ஒரு மனிதன் நம் மீது கோபப்படுகின்றான் என்று வைத்துக் கொள்வோம். இரு நான் உன்னை என்ன செய்கின்றேன்…? என்ற நிலையில் ந்த உணர்வினை எனக்குள் இணைத்து விட்டால் என்னை இப்படிச் சொன்னான் சொன்னான்…! என்று அதுவும் சேர்ந்து வளர்கின்றது.
 
அவனை அழித்திடும் உணர்வே செல்கிறது. நம்மைக் காத்திடும் நினைவுகள் நமக்குள் வளர்வதில்லை. அவ்வாறு காத்திடும் நிலைகளை இழந்து அழித்திடும் நிலையாகச் சென்று விட்டால் தனக்குள் இருக்கும் நல்ல குணத்திற்கு ஊட்டம் கொடுக்காது அதைத் தடைப்படுத்தி விடும்.
 
அழித்திடும் உணர்வுகளே மேலோங்கி மற்றொன்றை அழித்து உணவாக உட்கொள்ளும் மிருக உணர்வுகள் இங்கே விளைந்து விடும். உடலை விட்டுச் சென்றால் அடுத்து மனிதனல்லாத உடலாகத்தான் பிறக்க நேரும்.
 
அதே சமயம் மகரிஷிகள் மனித உடலிலேயே இருளைப் போக்கி ஒளியின் தன்மையாகச் சேர்த்து வளர்த்துக் கொண்டவர்கள். அதை இப்பொழுது உங்களுக்குள் இணைக்கின்றோம்.
 
சிறிது காலத்திற்கு உங்களுடைய நினைவை
1.றாவது அறிவின் துணை கொண்டு துரு நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்று உடலுக்குள் செலுத்தி
2.பதிவான ணர்வின் சக்திக்கு ட்டம் கொடுத்து அதனை நாம் கூட்டிப் பழகுதல் வேண்டும்.
3.அவ்வாறு சேர்த்தால் சிறிது காலத்தில் கவரும் சக்தியை அது பெற்றுவிடும்.
4.அவ்வாறு பெற்று விட்டால் நமது ஞானம் அதன் வழியிலேயே செயல்படுத்தும்.
 
செடிக்கு அதற்குண்டான சத்தான நிலைகள் கொடுத்து மிட்டு அந்த வித்தினைத் திறன்பட உருவாக்கி விட்டால் அதை ஊன்றினால் மீண்டும் அதனுடைய இனமாக அது வளரத் தொடங்குகிறது.
 
இதைப் போலத்தான் அருள் ஞானிகளுடைய வித்தினை உரமாக உங்களுக்குள் இடப்பட்டு உயர்ந்த சக்தியினை அவர்கள் பெற்ற நிலையினை உங்களுக்குள் இணைக்கச் செய்து வளர்க்கின்றோம்.
 
அதிலே ங்கள் நினைவு கூர்மையாக இருந்தால் தான் அது நன்றாக முளைத்து வளரும்.
 
மேலெழுந்த வாரியாகப் போட்டுவிட்டால் எறும்புகளோ மற்ற பறவைகளோ தின்றுவிடும்.
1.கேட்ட உபதேசங்களை மேல் மட்டத்தில் மட்டும் ஆகா…! என்று போற்றி விட்டால் து முளைக்காது.
2.போற்றுதலை விடுத்து விட்டு அதைப் பெற வேண்டும் என்று க்கத்தினைக் கொண்டு வந்தால் அது நன்கு வளர்ச்சி பெறும்.
 
போற்றுதல் என்பது புறத்திலே தள்ளுவது. ஏங்குவது என்பது தன் அகத்திற்குள் விளையச் செய்வது.
 
இதைக் கேட்டுணர்ந்தோர் எந்த அளவுகோல் கொண்டு நீங்கள் தை ஏற்றுக் கொள்கின்றீர்களோ அந்த அருள் ஞானிகளின் வித்துக்கள் உங்களுக்குள் இணைந்து அதன் சத்தைக் கவரும் நிலையாக வளர்ச்சி பெற்று உங்களுக்குள் நல்ல முறையில் இது பலன் தரும்.
 
சாமியைப் பற்றிப் புகழ்ந்து பேசுவார்கள். ஆனால் புகழ்ந்த நிலைகள் கொண்டு ஏற்றுக் கொள்ளும் கவர்ந்திடும் நிலையற்றுப் போய்விடும்.
 
1.தனக்குள் கவர்ந்திடும் அந்த நிலை இருந்தால்தான் அது ஆழப் பதியும்
2.அந்த உணர்வின் துணை கொண்டு புவியின் ஈர்ப்பால் அந்த ஞானிகள் உணர்வினைக் கவர முடியும்.
 
இந்த உடலின் ர்ப்புக்குள் நாம் பதிந்து கொண்ட உணர்வு எதுவோ அதைக் கவர்ந்து அதன் நிலைகளில் இது விளையச் செய்யும். அதன் வழி செல்வது தான் சிறந்த நிலைகள்.
 
மகரிஷிகள் உணர்வை இணைத்து இணைத்துச் சிறிது காலம் செயல்படுத்தினால் தன்னிச்சையாக வளரும் தன்மையும் உடலை விட்டு அகன்ற பின் ந்த உணர்வின் வித்துக்கள் தீமை அகற்றி மெய் ஒளியின் உணர்வாக நம்மை அடையச் செய்யும்.
 
இந்த உடலில் இருந்து தான் நாம் இதைச் செயல்படுத்த வேண்டும்.
 
யாம் உபதேசித்ததை
1.நாள் முழுவதற்கும் உங்கள் எண்ணத்தால் அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும்.
2.சந்தர்ப்பத்தால் கேட்டறிந்த தீமைகள் விலக வேண்டும்
3.தூய்மையான நிலைகள் நமக்குள் வளர வேண்டும் என்று எண்ணுதல் வேண்டும்.
 
வேலை செய்யும் போது அழுக்குப்பட்டால் எப்படி உடனுக்குடன் அதைக் கழுவுகின்றோமோ தைப் போல மகரிஷிகளின் அருள் சக்தியைப் பெறும் தகுதி கொண்டு எண்ணத்தால் இணைத்துக் கொண்டே இருக்க வேண்டும். அந்தச் சத்தைக் கூட்டினால் தான் இது விளையும்.
 
ஒரு தரம் எண்ணினேன் பதிவாக்கிக் கொண்டேன் என்று தன்னிச்சையாக விளைவது வேறு. அதற்குப் பதில் எண்ணத்தால் நாம் கவர்ந்து அதை வளர்த்துக் கொண்டே இருக்க வேண்டும்.
 
உணர்வின் இயக்கமாக செடியில் கலந்த பின் (உரங்கள் இணைந்த பின்) அது எப்படி வளர்ச்சிக்கு வருகின்றதோ அதைப்போல
1.நம் உடலில் அது முழுமையாக விளையும் பருவம் எட்டும் வரையிலும்
2.எண்ணத்தால் நாம் மகரிஷிகளின் சக்திகளை இணைத்துக் கொண்டே வரவேண்டும்.
3.அதற்கு உணவை ஊட்டிக் கொண்டே இருக்க வேண்டும்.
 
இந்த உணர்வின் தன்மை கொண்டு தன் இனமாக அது பெருக்கி விட்டால் அதற்குப் பின் உங்கள் எண்ணம் தேவையில்லை தன்னிச்சையாக வளரத் தொடங்கும். தூய்மையான ஒளியின் உணர்வாக நமக்குள்து விளைந்து விடும்.