
“உங்கள் மூச்சலைகளால்…” விஷக் கதிரியக்கங்கள் மாய வேண்டும்
இன்று கெமிக்கல் கலந்த
அணுக்களை…
“செல்கள்… அதாவது சிலிகன்களைப் போன்று…” நமக்குள் உணர்வின்
எண்ணங்களைப் பதியச் செய்து விட்டனர்.
1.விஞ்ஞான அறிவு கொண்ட கெமிக்கல் கலந்த உணர்வின் ஆற்றல்
2.நமக்குள் இருக்கும்
ஒவ்வொரு உணர்வுக்குள்ளும் இன்று
அதிகமாகப் பதிந்து விட்டது.
3.அதிலிருந்து நாம்
திசை திரும்பவே இல்லை.
4.மனிதன் என்ற எண்ணமே இங்கே போய்விட்டது,
5.இயந்திர வாழ்க்கை வாழும்
நிலைக்கு
இன்று நாம் வந்து விட்டோம்.
சிலிகனைப் போன்று நமக்குள்
பதிவு செய்த நிலைகளில் “இருந்த இடத்திலே இருந்து கொண்டே… ஆட்டிப்படைக்கும் தன்மைக்கு வந்து விட்டது இன்றைய விஞ்ஞானம்…! (இதை யாரும் மறுக்க முடியாது)
மனிதனுடைய சிந்தனைகள்
சிதறுண்டு போகும் நிலைகளும் சூரியனே சுக்குநூறாகிக் கரையும் நிலைக்கும் இந்தப் பூமியினுடைய நிலைகளும் பொசுங்கிப் போகும் நிலைக்கு வருகின்றது அல்லது இருள்
சூழ்ந்த நிலைக்கு வருகின்றது.
பூமியில் அணுகுண்டுகள் வெடித்தால் இவன் நீருக்குள்ளும் நீர் நிலைகளுக்குள்ளும் பதித்து
வைத்திருக்கின்ற லேசர் கதிரியக்கங்கள் அணுக்கள் வெடிக்கும். அதை அப்புறப்படுத்துவதற்கு முயற்சி எடுக்கின்றனர்.
அவ்வாறு எடுத்தாலும் அணு நீர் மூழ்கியின் தன்மையில் அந்த இயந்திரத்திற்குள்
பாய்ச்சி இருந்தாலும் ஒவ்வொரு
இயக்கத்திற்குள்ளும் அந்த அணுக்
கதிரியக்கங்கள் தாக்கிடாதபடி அதை நீர் நிலைகளில்தான் மறைக்க
வேண்டும்.
அல்லது வேறொரு மண்ணுக்குள்
பதிய வைத்தாலும்
பூமியின் வெப்ப அலைகள் கலக்கப்பட்டு இந்த அணுக்கள் மண்ணுக்குள் பூமிக்குள் வெகுதூரம் ஊடுருவி வரும் நிலைகள்
வருகின்றது.
அணு உலைகள்… அது போன்ற மற்ற இடங்களிலிருந்து வருவதை
1.அந்தக் கசிவுகளை… கழிவுகளை எல்லாம் மண்ணுக்குள்ளே மறைக்க வேண்டுமென்று இவன் எண்ணுவான்.
2.ஆனால் இந்த அணுக்கதிரியக்கங்கள் பூமிக்குள் சென்றவுடன்
3.இயற்கையின் துடிப்பு
கொண்டு
கதிரியக்கச் சக்தியை அதிகமாகக் காட்டும்.
4.எதிர்நிலையான நிலை
வரப்படும்போது பூமியில் நிலநடுக்கம் ஏற்படும்… எல்லாமே போய்விடும்.
இந்த அளவுக்குத்தான்
இன்றைய உலகின் நிலை இருக்கின்றது.
இயற்கையின் நிலைகளை அசுத்தப்படுத்திக் கொண்டு… மனித உணர்வுக்குள்ளும் அதைப் பதியச் செய்து…
இன்று மனிதன் என்ற நிலையே கூண்டுடன் அற்றுப்போகும் நிலை
வருகின்றது.
ஏகக் காலத்தில் குண்டுகள்
வெடித்தாலும்… வெடித்த நிலையில்
புகை மண்டலங்களாகக் குவியப்பட்டுச்
சூரியனுடைய ஆற்றல்மிக்க சக்தி வாய்ந்த கதிரியக்கங்கள்
படாதபடி
1.பூமியில் இருக்கக்கூடிய நீர் வளங்கள் அனைத்துமே உறையும் தன்மை பெறும்.
2.இங்கே நாம் இருக்ககூடிய நிலைகள் அனைத்துமே உறையும் தன்மை வருகின்றது.
இதிலிருந்து வெளிப்படும் கதிரியக்கச் சக்திகள் சூரியனுடைய கதிர் வெப்பங்கள் கலந்தவுடன் இதிலிருந்து ஆவியாக வெளிப்படுத்தி இதே உணர்வின் தன்மைகள் சூரியனே மாறுபடும் காலம்
வருகிறது. மனிதனாலே இந்தப் பிரபஞ்சமே சூனியமாகும் காலம்
வந்துவிட்டது.
1.யாம் சொல்வது உங்களுக்குப் புதிராக இருக்கலாம்.
2.ஆனால் விஞ்ஞானிகள் கணக்குப் போட்டு நாளைக்கு இப்படி வரப்போகிறது என்று சொல்வார்கள்.
3.எழுதி வைத்துக்
கொள்ளுங்கள்… யாம் சொல்வது (1989 ஆம் வருடம்) உங்களுக்குச் சாதாரணமாகத் தெரியலாம்.
நமது குருநாதர் ஒவ்வொரு அணுவிற்குள்ளும் ஊடுருவி மனிதனுடைய நிலைகள்
எவ்வாறு இருக்கின்றது…?
அதிலே நீ எவ்வாறு செயல்பட
வேண்டும்…?
என்று
எமக்கு உபதேசித்தார்.
ஆகையினாலே இன்று மனித வாழ்க்கையினுடைய நிலைகளை விடுத்து “இது சரி…
இது தப்பு…!” என்று வரவேண்டாம். குறைகளைக்
காண வேண்டாம்.
நாம் அனைவரும் மெய்
ஒளியைக் காண வேண்டும். மெய்யைக் காண்போம். மெய்யுணர்வின் தன்மையை நாம் பெறுவோம்.
இதிலே நாம் அனைவரும் “ஓரே குடும்பம்… ஓரே நிலை தான்…”
எத்தகைய இருள் வந்தாலும் உடனடியாக அதை மாற்ற வேண்டும். அதாவது மகரிஷிகளின்
அருளாலே
அந்த இருள் நீங்க வேண்டும்… நாம் அனைவரும் ஒளி நிலை
பெற வேண்டும் என்ற உணர்ச்சிகளைக் கூட்டுவதற்குத் தான் குருநாதர் ஆணையை யாம் செயல்படுத்துகிறோம்.
நாம் எடுக்கும் எண்ணங்கள்
அனைத்தும்
ஒன்றாக இருக்க வேண்டும். இந்த உணர்வின் ஒளிகள் நமக்குள் ஒன்றாக இருக்க
வேண்டும்.
1.நாம் இடும்
மூச்சலைகள்
மழை நீராகக் கொட்ட வேண்டும்.
2.அப்படிப் பெய்யும் மழை நீரால்
விஷக் கதிரியக்கங்கள் மாய வேண்டும்.
3.அத்தகைய விஷத்
தன்மைகளை
நீக்கும் ஆற்றல்களை ஒவ்வொருவரும் பெற வேண்டும்
4.அந்த மெய் உணர்வைத்
தூண்டும் நிலைகளுக்குத் தான் இதை உபதேசிக்கின்றோம்.