ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

January 30, 2026

“தங்கத்தைப் போன்று…” எங்கள் மனம் மங்காத அந்த அருள் சக்தி பெற அருள்வாய் ஈஸ்வரா

“தங்கத்தைப் போன்று…” எங்கள் மனம் மங்காத அந்த அருள் சக்தி பெற அருள்வாய் ஈஸ்வரா


தியானமிருந்து பழகிக் கொண்டவர்கள் ஆத்ம சுத்தியைக் கடைப்பிடிக்க வேண்டும். எப்பொழுது நாம் வீட்டைவிட்டு வெளியில் சென்றாலும் கண்டிப்பாக ஆத்ம சுத்தி செய்ய வேண்டும்.
 
உதாரணமாகநம்முடைய நண்பர் ஒருவர் நம்மிடம் அவருடைய கஷ்டத்தைச் சொல்கிறார் என்று வைத்துக் கொள்வோம். நாம் காது கொடுத்துக் கேட்கிறோம். அவருடைய கஷ்டத்தை நாம் கேட்கும் பொழுது நமது உடல் சுருங்குகின்றது… நம்மையறியாமலேயே முகம் வாடுகின்றது.
 
அவ்வாறு அவருடைய கஷ்டத்தையெல்லாம் நாம் கேட்டுணரும் பொழுது
1.அந்த உணர்வுகள் நம் உடலுக்குள் சென்று
2.அது உமிழ் நீராக மாறி நம் ஆகாரத்துடன் கலந்து
3.நாம் எந்த நல்ல குணத்துடன் கேட்டோமோ அந்த உணர்வான சத்து ஆகாரத்துடன் கலந்து
4.நாம் எண்ணிய நல்ல எண்ணங்களுக்குள் கஷ்டமான உணர்வு கலந்து விடுகின்றது.
 
அவருக்கு நாம் பணத்தைக் கொடுத்து உதவி செய்தாலும் கூட அவருடைய துன்பமான உணர்வுகள் உமிழ் நீராக வடிக்கப்பட்டு நம் ஆகாரத்துடன் கலந்து இரத்தத்துடன் கலந்து விடுகின்றது.
 
அப்படி இரத்தத்தில் கலந்து செல்லும்போது அதை நமது நுரையீரல் சுவாசப்பை எடுத்து
1.இரத்தத்தைச் சுத்தப்படுத்தும் உறுப்புகளுக்கு அனுப்பப்படும் பொழுது
2.அவர்கள் எப்படி வேதனைப்பட்டார்களோ அந்த உணர்ச்சிகள் நம் உறுப்புகளில் முதலில் ஏற்படும்.
 
அப்பொழுது இரத்தத்தைச் சுத்தப்படுத்தும் கிட்னி அதைச் சரியாகச் சுத்தப்படுத்தாது. அவ்வாறு சுத்தப்படுத்தாமல் அனுப்பும்போது
1.நம் உடல் முழுவதற்கும் அந்த இரத்தம் செல்லும் பொழுது
2.நமது உடலுக்குள் வேதனையை உண்டாக்கும் நிலை வருகிறது.
 
அந்த வேதனையான உணர்வுகள் செல்லும்போது அந்த நல்ல குணத்துடன் இது இரண்டறக் கலந்து விடுகின்றது.
 
உதாரணமாகஒரு தொட்டியில் நீரை ஊற்றி ஒரு தங்கக் கட்டியை எலக்ட்ரானுடன் இணைக்கப்பட்டு நீருக்குள் போட்டுவிடுவார்கள். அதே சமயம் ஒரு செம்புக் கட்டியுடன் எலக்ட்ரானிக்கைக் கலக்கச் செய்து நீருக்குள் போட்டுவிடுவார்கள்.
 
1.செம்பில் எலக்ட்ரானிக்கை அதிகமாகக் கூட்டித் தங்கத்திலே குறைத்துக் கொடுக்கும் பொழுது
2.தங்கத்திலிருக்கக்கூடிய (தங்கச்) சக்திகள் கரைந்து
3.அதிகமாகக் கூடிய செம்பின் எலக்ட்ரானிக் தைக் கவர்ந்து  
4.செம்புக்குள் தங்க முலாம் பூசிவிடும்.
 
உள்ளே இருக்கக்கூடிய செம்பு கறுப்பதை விடுத்து இந்தத் தங்கத்தின் முலாமாக ஆகிஅது தெளிவாகின்றது.
 
ஆனால் அதே சமயம்,
1.தங்கத்திற்குள் எலக்ட்ரானிக்கை அதிகமாகச் சேர்த்து செம்பில் குறைவான எலக்ட்ரானிக்கைச் சேர்த்தால்
2.செம்பின் சக்திகள் கரைந்து தங்கத்திற்குள் முலாம் பூசிவிடும்
3.அடிக்கடி செம்பு எப்படிக் கருக்கின்றதோ அதே மாதிரி தங்கம் கறுத்துவிடும்.
 
அதே போல் தான் நல்ல எண்ணங்கள் கொண்டு ஒருவருடைய துன்பமான உணர்வைக் கேட்டறியும் போது அந்த உணர்வுகள் நம் இரத்தத்துடன் கலந்து அது உடலுக்குள் செல்லும்போது
1.நாம் எந்த குணம் கொண்டு கேட்டுக் கொண்டிருந்தோமோ
2.அந்த நல்ல குணத்தில் துன்ப உணர்வுகள் முலாமாகப் பூசிவிடும்.
 
ஏனென்றால் நல்ல குணம் கொண்டு நாம் பேசினாலும் அவர் படும் துன்பத்தின் மேல் எண்ணங்களை அதிகமாகச் செலுத்தி
1.“உனக்கு எப்படி இப்படிக் கஷ்டம் வந்தது…?” என்று கேட்கப்படும் போது
2.அந்த நல்ல உணர்வுகளுடன் அவரின் நோயான உணர்வுகள் முலாம் பூசிவிடும்.
 
முதலில் ம் நல்ல குணங்கள் நோயற்ற நிலையும் தெளிவான நிலைகளும் உடலில் தெம்பாக இருந்தது. ஆனால் கஷ்டத்தைக் கேட்டவுடன் மங்கிவிடுகிறது.
 
அதாவது… தங்கம் எப்படிப் பளப்பளப்பாக இருந்ததோ அதைப் போல நமது தெளிவான எண்ணங்களில் அவருடைய துன்ப உணர்வுகள் கலக்கப்படும் பொழுது நம்மை அறியாமலேயே சோர்வடைந்து விடுகின்றோம்.
 
இது நாளாக நாளாகநமக்குள் நோயாக வந்து சேர்ந்து விடுகின்றது. நமது எண்ணமும் தெளிவற்றதாகப் போய்விடுகின்றது. நாம் துன்பத்தைக் கேட்டறிந்தோம் அதை உடனே துடைக்க வேண்டுமல்லவா?
 
அதைத் துடைப்பதற்குத்தான் இந்த ஆத்ம சுத்தி என்ற ஆயுதத்தை உங்களுக்குக் கொடுக்கின்றோம். துன்பத்தைக் கேட்டறிந்தபின்,…
1.உடனே ஈஸ்வரா என்று நம் உயிரை எண்ணி
2.துருவ நட்சத்திரத்தின் பேரருளை நுகர்ந்து நம் உடலுக்குள் செலுத்தி
3.நம் உடலில் உள்ள இரத்தங்கள் முழுவதும் படர வேண்டும் என்று எண்ணித் தியானித்து அதைச் சுத்தப்படுத்த வேண்டும்.
 
பின்… துன்பப்பட்டவர்கள் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற்றுத் துன்பத்திலிருந்து விடுபடும் அருள் சக்தி அவர்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று நாம் தியானித்து அந்த அருள் சக்திகளை அவர்களுக்குப் பாய்ச்ச வேண்டும்…!”
 
இப்படி ஆத்ம சுத்தி செய்து நம் நல்ல குணங்களை மங்காது நாம் காத்துக் கொள்ள வேண்டும்.

ஈசனுக்கு மகிழ்ச்சி

ஈசனுக்கு மகிழ்ச்சி


நாம் இங்கே கற்றுக் கொண்ட நிலைகள் நம் குடும்ப வாழ்க்கையிலும் சரிநம் எதிரியாக இருந்தாலும் சரிநம் சொல்லின் நிலைகள் அங்கே இனிமைப்படுத்த வேண்டும்.
 
1.மற்றவர்கள் காரமான நிலைகளில் பேசினாலும் நாம் எடுத்துக் கொண்ட ஜெபத்தின் பலன்
2.பிறர் காரமாகப் பேசக்கூடிய உணர்வுகளைத் தடுத்து நிறுத்தும் ஆற்றலாகப் பெற வேண்டும்.
 
ஒவ்வொரு நிமிடமும் உங்களுக்குள் அந்த ஆற்றல் பெறுவதற்கு சதா நீங்கள் ஆத்ம சுத்திஎன்ற ஆயுதத்தை எடுத்து உங்கள் உயிரை ஈசனாக மதித்துச் செயல்படுத்திப் பாருங்கள்.
 
1.ஆலயங்களில் அந்த ஈசனுக்குப் “பாலாபிஷகம்செய்வது போன்று
2.உங்கள் ஈசனுக்கு அந்த மெய் ஞானியின் அருள் சக்தியை நீங்கள் சுவாசித்து அபிஷேகிக்க வேண்டும்.
 
அந்த மெய் ஞானிகளின் உணர்வின் மணங்கள் உங்களுக்குக் கிடைக்கச் செய்வதற்காக உங்கள் உயிரைக் கடவுளாக மதித்து அந்த அபிஷேகத்தை யாம் செய்து கொண்டே இருக்கின்றோம்…”
 
ஆகையினாலே ஒவ்வொரு நிமிடமும் ஆத்ம சுத்தியைச் செய்து அந்த மகரிஷிகளின் அருள் ஒளியைச் சுவாசித்து உங்கள் உயிரான நிலைகளை மகிழச் செய்யுங்கள்.
 
ஆத்ம சுத்தி என்ற ஆயுதத்தை நாம் எடுத்துப் பயன்படுத்தி பிறருக்குச் சொன்னாலும்
1.நாம் வெளிப்படுத்தும் இந்த உணர்வுகளை அவர்கள் சுவாசித்து
2.அவர் உடலில் இருக்கக்கூடிய உயிரான ஈசனிடம் ஒலிகள் பட்டு அதே உணர்வுகள் தூண்டப்படுகின்றது.
 
நாம் பேசிய உணர்வுக்கொப்ப அந்த உணர்வின் நிலைகள் அந்த உடலை இயக்கச் செய்து நம்மைப் பக்குவப்படுத்துவதோ நல்ல சொல்லைச் சொல்வதோ போன்ற நிலைகள் ஏற்படுகின்றது.
 
இதையெல்லாம் கண்டுணர்ந்த நாம் ஒவ்வொரு நிமிடமும் இதைப் பாச அணைப்புடன் செயல்படுத்த வேண்டும்.
 
குழந்தை தவறு செய்தாலும் பாசத்துடன் அணைத்துக் கொள்கின்றோம். நம் உடலிலே வேதனையாகும் பொழுது ஒரு அசுத்தம் பட்டு விட்டால் அசுத்தம் என்ற நிலைகளை எண்ணாதபடி அதைத் துடைக்க முற்படுகின்றோம்.
 
அதைப் போன்று
1.பிறருடைய எண்ணங்களில் அசுத்த சொற்கள் வந்தாலும்
2.நாம் எண்ணத்தாலே துடைக்கும் பக்குவம் கொண்டு செயல்பட வேண்டும்.
 
பிறரிடம் அசுத்த உணர்வின் எண்ணங்கள் தோற்றுவித்தாலும் நாம் ஆத்ம சுத்திஎன்ற ஆயுதத்தைப் பயன்படுத்தி அவருடைய அசுத்தத்தை நீக்கும் ஆற்றலை நாம் செய்து பழகுவோமேயானால் நமக்குள் ஐக்கியமாகும் நிலைகள் பிறக்கும்.
 
1.இதன் மூலம் நாம் அனைவரும் ஏகாந்தமாக மகிழ்ந்து வாழலாம்.
2.அந்த மகரிஷிகள் சென்ற எல்லையை அனைவரும் எளிதாக அடைய முடியும்.
 
எமது அருளாசிகள்.

தீமைகளைப் பற்றித் தெரிந்து கொள்வது பெரிதல்ல… தெரிந்த பின் உடனே அதை நீக்க வேண்டும்

தீமைகளைப் பற்றித் தெரிந்து கொள்வது பெரிதல்ல… தெரிந்த பின் உடனே அதை நீக்க வேண்டும்


நாம் எவ்வளவு உயர்ந்தவர்களாக இருப்பினும்… ஒருவர் வேதனைப்படுவதைப் பார்க்காமல் இருக்க முடியாது. அவர் சொல்லைக் கேட்காமல் இருக்க முடியாது.
 
ஒருவன் குற்றம் செய்கிறான் என்றால் அதைப் பார்க்காமல் இருக்க முடியாது. குற்றம் செய்தவர்களால் நேர்முகமாகப் பாதிக்கப்பட்டவர்கள் வேதனைப்படுவதையும் நாம் பார்க்கத்தான் செய்கின்றோம்.
 
1.அதையெல்லாம் அறிவால் அறிகின்றோம். அறிந்த உணர்வு நமக்குள் பதிவாகின்றது.
2.எத்தகைய உணர்வுகளைப் பார்த்தாலும் அறிந்து தெரிந்து கொண்டாலும்
3.கார்த்திகேயா என்று தெரிந்திடும் அறிவு இருந்தாலும் அதை நீக்கிடும் அறிவு வேண்டும்…”
 
நம் உடல் ண்ஹாம் உணவாக உட்கொள்ளும் உணவுக்குள் இருக்கும் நஞ்சினை மலமாக மாற்றி விட்டு நல்ல உணர்வினை உடலாகச் சேர்க்கின்றது. அந்த நல்ல உணர்வால் நாம் இடும் மணத்தால் நல்ல எண்ணங்கள் கொண்டு தீமையை அகற்றிடும் நிலைகளை உருவாக்குதல் வேண்டும்.
 
1.நல்லவைகள் எதுவாக இருப்பினும்
2.தீமைகளைப் பற்றித் தெரிந்திடும் அறிவு இருந்தாலும்
3.தெரிந்த பின் அந்தத் தீமையை நீக்க வேண்டும் அல்லவா.
 
வேலை செய்கின்றோம் கை அழுக்காகின்றது. அதை நாம் கழுவாதபடி அடுத்து உணவை உட்கொள்வோமா…? அப்படி உட்கொண்டால் அழுக்கின் சுவையே தான் வரும் உணவு சுவையற்றதாக மாறி உடலுக்கும் தீங்கு விளைவிக்கின்றது.
 
இதைப் போன்று தான் மகிழ்ச்சி கொண்டு மற்றவர்கள் கஷ்டத்தைக் கேட்டறிந்தாலும் அதைத் தெரிந்து கொள்ளும் அறிவு இருந்தாலும்
1.அவருடைய தீங்கு நம் நல்ல அறிவுடன் இணையும் பொழுது
2.அதைத் துடைக்கவில்லை என்றால் அவரின் தீமையின்ணர்வே நமக்குள் விளையும்.
 
துடைக்கா விட்டால் உடலில் நோயின் தன்மையாகிவிடும். மீண்டும் நல்ல உணர்வை எடுக்க முடியாதபடி தவிக்கும். அப்பொழுது சிந்தனைகள் சிதறும். சிதறும் பொழுது உடலில் நடுக்கமும் நடுக்கத்தால் வரும் கோபமும் சிந்தனையற்ற செயல்களாக நம்மை இயக்கி விடுகின்றது.
 
இதைப்போன்ற நிலையில் இருந்து நாம் மீள்தல் வேண்டும்.
 
ஆகவே… சந்தர்ப்பத்தால் எத்தகைய தீமைகள் புகுந்தாலும் அந்தத் தீய வினைகளை உடனுக்குடன் துடைக்கக் கற்றுக் கொள்ள வேண்டும்.
 
அதற்குத்தான் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் காட்டிய அருள் வழியில் உங்களுக்குத் தியானமும் ஆத்ம சுத்தி பயிற்சியும் கொடுக்கின்றோம்.
 
எந்த நேரம் ஆனாலும்
1.அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று எண்ணி எடுத்து
2.உடனுக்குடன் தீமை செய்யும் உணர்வுகளை நீங்கள் அகற்றிட முடியும்.
3.உங்கள் நல்ல எண்ணங்களை உணர்வுகளை வலுப்படுத்திக் கொள்ள முடியும்.
 
அந்த ஞானிகள் பெற்ற அறிவின் ஞானத்தையும் நாம் நமக்குள் வளர்த்து இந்த வாழ்க்கையில் என்றுமே பொருளறிந்து செயல்படும் திறனாக அருள் வழியில் வாழ முடியும்.