ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

April 22, 2026

துருவ நட்சத்திரத்திற்குச் சென்று பழகும் நிலை

துருவ நட்சத்திரத்திற்குச் சென்று பழகும் நிலை


பரிணாம வளர்ச்சியடைந்து மனிதனாக இன்று நாம் வந்திருக்கிறோம். இனி நாம் எப்படி இருக்க வேண்டும்? என்பதை அறிதல் வேண்டும்.
 
1.அகஸ்தியனும் பரிணாம வளர்ச்சியில் வந்தவன் தான்.
2.அகஸ்தியன் கதிரியக்கங்களை தனக்குள் நுகர்ந்து உடல் பெறும் உணர்வை மாற்றி உயிரைப் போல உணர்வின் அணுக்களை மாற்றி
3.ஒளியின் சரீரமாகத் துருவ நட்சத்திரமாக இன்றும் நிலை கொண்டிருப்பவன்.
4.மனிதனில் அவன் வளர்ச்சி பெற்றவன்.
 
அவ்வாறு ஆன அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை நாம் ஒவ்வொரு நேரத்திலும்… அதாவது வெறுப்போ வேதனையோ சலிப்போ பகைமையோ இதைப் போன்ற உணர்வுகள் வரும் போதெல்லாம் அந்தத் தவறின் உணர்வுகள் இயங்குவதைத் தடுத்து அதனை அடக்க வேண்டும்.
 
காரம் புளிப்பு உப்பு என்று தனித்தனித் தன்மையாக இருக்கும்போது அந்தந்த உணர்ச்சிகளைது ஊட்டுகின்றது, அதனதன் வழியில் செயலாக்குகிறது. இவை அனைத்தையும் மனிதனின் ஆறாவது அறிவு ஒன்றாகச் சேர்த்து கலவையாக்கிச் சுவையா உணவாக்கி அதை உட்கொள்கின்றோம்.
 
ப்படிப்பட்ட அந்தச் சுவையாக மாற்றும் தன்மையை நம் வாழ்க்கையில் நாம் பெறுதல் வேண்டும்.
 
நாம் நமது வாழ்க்கையில் எப்பொழுதெல்லாம் பகைமை உணர்வு வருகின்றதோ அதை அடக்க உங்களுக்குள் துருவ நட்சத்திரத்தின் ஆற்றலைப் பதிவு செய்கின்றோம்.
 
1.துருவ நட்சத்திரத்தின் ஆற்றலை யாம் பதிவு செய்தை அதன் நினைவு கொண்டு நீங்கள் எடுக்க வேண்டும்.
2.நினைவு கொண்டு எடுத்தால் உங்களைக் காக்க அந்த உங்கள் எண்ணம் உதவும்.
 
திட்டியவனின் உணர்வை நுகர்ந்தபின் அந்த உணர்ச்சியின் எண்ணங்கள் வருகின்றது. அதன் வழி   எண்ணும் பொழுது அவனை வெறுக்கும் தன்மை, வருகின்றது.
 
அந்த வெறுக்கும் தன்மை உங்களுக்குள் வரும் பொழுது ஒரு நல்ல காரியத்தைச் செய்ய முடியாதபடி அது தடையாக வருகிறது.
 
த்தகைய தடைகள் வருவதைத் தடுப்பதற்கும் அந்த உணர்வின் தன்மையை அடக்குவதற்கும் தான் அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை இப்பொழுது உங்களுக்குள் ஆழமாகப் பதிவு செய்வது.
 
அப்பொழுது இந்த உணர்வை எடுத்தால் அந்தத் தீமைகளை மாற்றி அமைக்க முடியும்.
 
என்னுடைய ஜெபமே என்னுடைய தியானமே யார் யார் இதைக் கேட்டறிந்தனரோ
1.அவர்கள் எண்ணும் பொழுதெல்லாம் அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வலைகள்
2.அவர்களுக்குக் கிடைக்க வேண்டும் என்று உணர்வின் வலுவை ஊட்டிக் கொண்டிருக்கின்றேன்.
3.இதை நீங்கள் எடுத்து வளர்ந்தால் தான் நாட்டுக்கும் நல்லதுநம் அனைவருக்கும் நல்லது.
 
னென்றால் நாளை வரும் எதிர்காலம் மிகவும் விஷத்தன்மையாக மாறும் பொழுது அதைக் கழித்து வடித்துநாம் இந்த உடலில் வளர்ச்சியான நிலைகள் கொண்டு… எந்த நிமிடம் அது நடந்தாலும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்திற்குள் நாம் சென்று விடலாம். 
 
இல்லையென்றால் இந்தப் பூமியில் மாற்றங்கள் துரித நிலைகள் ஆகிப் பூமி கொஞ்சம் நகர்ந்தால் ஐஸ் பாறையாக மாறிவிடும். அந்த ஐஸ் பாறையாக மாறியபின் விஞ்ஞான அறிவில் உள்ளவர்களும் சிலர் தப்பலாம்.
 
ஆனாலும் இங்கே அசுத்தமான நிலைகள் பனிப்பாறைகள் மூடி உள்ளுக்குள் சென்று விட்டால் யார் காப்பாற்றுவது?  அந்த நிலைகள் சீக்கிரம் வரத்தான் செய்யும்.
 
அதற்குள் நாம் என்ன செய்ய வேண்டும்…?
 
1.பூமியை விட்டுத் தப்பிச் சென்ற அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை நமக்குள் பெருக்கி
2.நாமும் உடலை விட்டுச் செல்லும் பொழுது (துருவ நட்சத்திரம்  சென்று பழகும் தன்மை வர வேண்டும். 
 
இன்றைய உலக சூழ்நிலையில் எந்த நிலையானாலு சரி இந்த உடல் நமக்குச் சொந்தமல்ல. உயிருடன் ஒன்றிடும் உணர்வை ஒளியாக மாற்றும் தன்மை பெற வேண்டும்,
 
அதற்குத்தான் இந்த உபதேசமே…!
 
நான் சொத்தைச் சம்பாரிக்க வேண்டும் இதைச் செய்தேன் என் பிள்ளை இப்படி இருக்கிறது என்று எண்ணிக் கொண்டிருந்தால் அந்தப் பிள்ளையின் தவறின் உணர்வை நாம் வளர்த்தால் தவறின் உணர்வுகள்தான் நமக்குள் விளைகின்றது.
 
அவன் செய்யும் தவறின் தன்மை வீரியத்தன்மை பெற்றது, இப்படிச் செய்கிறான் என்று, பாசத்தால் நுகரப்படும்போது இங்கே நல்ல குணங்கள் அனைத்தையும் வீழ்த்தி விடுகின்றது. 
 
நாம் அந்த துருவ நட்சத்திரத்தின் உணர்வை நமக்குள் எடுத்து அவன் உணர்வு நம்மை இயக்கிடாது…”
1.அவனுக்கு அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி கிடைக்க வேண்டும்
2.அவனுக்குள் நல்ல உணர்வுகள் வர வேண்டும்; அவன் சிந்திக்கும் ஆற்றல் பெற வேண்டும் என்று
3.அவன் உடலிலே இந்த உணர்வின் தன்மையைப் பாய்ச்சி அவனை மாற்றி அமைக்க வேண்டும்.  
 
சிந்தித்துப் பாருங்கள் பிற தீமைகளின் உணர்வுகள் நம்மை இயக்கிவிடக் கூடாது. ஏனென்றால் உங்களைப் பக்குவப்படுத்துவதற்காகத் தான் யாம்  தைச் சொல்வது.
 
ஆகவே
1.நமக்குள் இதைப் பேணிக்காக்கும் திறன் வர வேண்டும்.
2.அந்தப் பேணிக் காக்கும் திறன் இருக்கும் போது தான் ஞானிகள் மற்றவர்களுக்கு இதைக் கொடுப்பார்கள். 
 
அவ்வாறு இந்த அருள் உணர்வுகளை நீங்கள் அனைவரும் ஒவ்வொரு நாளும் வளர்த்து… அதைப் பேணிக் காக்கும் திறன் பெற்றிட எமது அருளும் குரு அருளும் உறுதுணையாக இருக்கும்.

ஆறாவது அறிவைச் சீராகப் பயன்படுத்த வேண்டும்

ஆறாவது அறிவைச் சீராகப் பயன்படுத்த வேண்டும்


நாம் எத்தனையோ பேருக்கு உதவி செய்கின்றோம். ஒரு சந்தர்ப்பத்தில் ரோட்டில் நாம் சென்று கொண்டிருக்கின்றோம். நம்மிடம் நல்ல உதவிகளைப் பெற்றவர் அங்கே செல்கின்றார்… பார்க்கின்றோம். அதே சமயத்தில் அவர் அவசரமாகப் போகின்றார்.
 
நாம் அவர் பெயரைச் சொல்லி “இங்கே வாப்பா…” என்று கூப்பிடுகின்றோம்.  இருங்கள் கொஞ்சம் நான் வந்து விடுகிறேன்…! என்று அவர் சொல்கின்றார்.
 
1.பார்…! அன்று காசு வாங்குவதற்கு நம்மைத் துரத்தி துரத்தி வந்து வாங்கிச் சென்றான்.
2.இன்று நாம் கூப்பிடுகின்றோம் வரமாட்டேன் என்கிறான்.
3.காசு வாங்குவதற்காக அன்றைக்கு என்னை மதித்தான்.
4.இப்பொழுது கூப்பிடுகிறேன் அவன் ஓடுகின்றான்…! என்று நாம் சொல்வோம்.
 
ஆனால் அவருடைய சூழ்நிலை எது…? ஒரு முக்கியமான காரியத்திற்கு இரயிலுக்குச் செல்பவர்கள் அதற்குண்டான டிக்கெட்டை மறந்து வைத்துவிட்டுப் போய் விட்டார்கள். அதை எடுத்துக் கொண்டு அந்த நேரத்திற்குள் கொண்டு போய்க் கொடுத்தால் தான் செல்ல முடியும்.
 
வண்டியில் ஏறிய பின் அங்கே அந்த டிக்கெட் இல்லை என்றால் அவர்கள் முழிப்பார்கள். ஆகையினால் வண்டி கிளம்புவதற்கு முன் அதைக் கொடுக்க வேண்டும் என்று அவசரமாகச் செல்கிறார்.
 
ஆனால் நாம் என்ன நினைக்கிறோம்…? கூப்பிட்டதற்கு மரியாதை செலுத்தாமல் செல்கின்றான் பார்…! என்ற இந்த உணர்வு தான் மனிதனுடைய வாழ்க்கையில் தூண்டுகிறது.
 
ஒரு தடவை நாம் உதவி செய்தால்
1.இரண்டாவது அவரை நாம் கூப்பிடும் பொழுது வரவில்லை என்றால் உடனே அவர் மேல் பகைமை ஆக்கிக் கொள்கின்றோம்.
2.ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் இது மாதிரி நடந்து கொண்டுதான் இருக்கின்றது.
3.எதிர்பார்த்தது நடக்கவில்லை என்றால் உடனடியாக அங்கே பகைமை ஆக்கி விடுகின்றோம்.
 
இதற்குக் காரனம் என்ன…?
 
நாம் நுகர்ந்த உணர்வு தான் நம்மை அப்படி இயக்குகிறதே தவிர “நம் ஆறாவது அறிவை அங்கே சரியாகப் பயன்படுத்தவில்லை…” என்று தான் பொருள்.
 
அதை எப்படிச் சீராகப் பயன்படுத்த வேண்டும்…? என்பதற்குத்தான் ஞானிகள் எத்தனையோ காவியப் படைப்புகளைக் கொடுத்துள்ளார்கள்.
 
இச்சா சக்தி கிரியா சக்தி ஞான சக்தி…!
1.தீமையை நீக்கி அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று இச்சைப்பட்டால்
2.உயிரிலே பட்டுக் கிரியை ஆகி
3.அந்த ஞானத்தின் வழி நம் உடலை அது இயக்கும்.
 
சிவனுக்கே ஓதினான் ஓம் என்ற பிரணவத்தை…! இந்த உடலிலே பிறந்தது தான் ஆறாவது அறிவு கார்த்திகேயா சித்திற்குள் விளைந்தது தான். ஆனால் வேதனை என்ற உணர்வை நுகர்ந்த பின் அந்த உணர்ச்சிகள் பிரணவமாகி அதுவே நம்மை இயக்குகின்றது.
 
ஆறாவது அறிவு படைத்தவன்…
1.“இது நமக்குத் தீங்காகும் இருள் சூழ்ந்த நிலையாகும் வேதன என்ற நிலையாகும் என்று தெரியக்கூடிய நிலையான கார்த்திகேயா
2.இந்த உடலில் விளைந்த அந்த உணர்வுகள்… இந்த உடலுக்குத் தீங்கு வராது பாதுகாக்கச் செயல்படுகின்றது.
 
தீமையை நீக்கிய அருள் மகரிஷிகள் உணர்வைப் பெற வேண்டும் என்று இச்சைப்பட்டால் அதை நுகர்ந்தால் நம் உயிரிலே பட்டுக் கிரியை ஆகின்றது. அதன் வழி நம் எண்ணம் சொல் செயலாகி தீமையை நீக்கி வாழ்க்கை ஒழுங்குபடுத்த இது உதவும்.
 
ஆகவே ஒவ்வொரு நிமிடமும் ஞானிகள் காட்டி அருள் வழியில் அந்த அருள் சக்திகளைப் பெற வேண்டும் என்று நாம் இச்சைப்பட வேண்டும். இது ஒரு பழக்கத்திற்கு வந்தால் உயிரிலே பட்டுக் கிரியை ஆகி
1.நாம் சிந்தனை இழந்து இருந்தாலும் சிந்திக்கும் ஆற்றலைக் கொடுத்து அதன் வழி செயல்படும் சக்தி கிடைக்கும்.
2.குறைகள் கூறுவதை விட்டுவிடலாம் மன நிறைவு என்றுமே நமக்குள் வளரத் தொடங்கும்.
 
உயர்ந்த சக்தியை உங்களுக்குக் கொடுத்திருக்கின்றேன் கொடுக்கின்றேன்.
1.யாருமே செய்யாததை உங்களுக்குச் செய்து கொடுத்துள்ளோம்.
2.எப்பொழுது வேண்டுமென்றாலும் அந்தச் சக்தியை நீங்கள் எண்ணி எடுக்கலாம்… தீமைகளைப் போக்கலாம்.