ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

March 29, 2026

எல்லா அணுக்களிலும் தீமையை நீக்கும் அருள் சக்தியைப் பெறச் செய்வோம்

எல்லா அணுக்களிலும் தீமையை நீக்கும் அருள் சக்தியைப் பெறச் செய்வோம்


1.உங்களையெல்லாம் யாம் எங்கே கொண்டு போகின்றோம்?
2.அந்த அகஸ்தியன் உணர்வு கொண்டு துருவ நட்சத்திரத்துடன் இணைக்கின்றோம்.
3.குருநாதர் என்னை இப்படித்தான் கொண்டு சென்றார்.
 
அவர் காட்டிய நிலைகளில் தான் யாம் உங்களையும் அங்கே இணைக்க முடியும்.
 
ஒவ்வொன்றையும் சேர்த்து உங்கள் உடலில் எத்தனை விதமான குணங்கள் இருந்தாலும் அதனுடன் இணைத்து இணைத்து அதனின் உணர்வை உங்களுக்குள் பாய்ச்சுகிறேன். 
 
உங்கள் கண்ணின் நினைவு உடலிலுள்ள ஒவ்வொரு அணுக்களுக்கும் இதைச் சேர்க்கும்.
1.அப்படிச் சேர்க்கும் பொழுது நம் உடலிலுள்ள அணுக்கள் துருவ நட்சத்திரத்தின் உணர்வை ஏற்கும் பருவம் வருகின்றது. 
2.அதை ஏற்கக்கூடிய பருவத்தைச் செய்தால் தான் ஈர்க்கும்இல்லையென்றால் எடுக்காது.
 
அதனால் தான் அந்த உணர்ச்சியின் தன்மை கொண்டு நமது குருநாதர் கொடுத்த அருள் வழியில் இதை உங்களிடம் சேர்க்கின்றோம். இதைப் பக்குவப்படுத்துதல் உங்கள் கையில்தான் இருக்கின்றது. ஆனாலும்  உங்களை ஆயுள் மெம்பராகச் சேர்த்துக் கொண்டோம்.
 
வீட்டில் ஏதாவது சலிப்பு சஞ்சலம் வந்து விட்டால் ஈஸ்வரா என்று புருவ மத்தியில் எண்ணி அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எங்கள் இரத்த நாளங்களில் படர்ந்து எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் என்று சுத்தப்படுத்திக் கொள்ளுங்கள்… உற்சாகம் ஊட்டும்.
 
குழந்தைகள் ஏதாவது குறும்புத்தனம் செய்தால் இதே போல ஆத்ம சுத்தி செய்து விட்டு என் பிள்ளை ஞானியாக வேண்டும்…. அவன் கல்வியில் உயர்ந்தவனாக வேண்டும் உயர்ந்த நிலைகள் பெற வேண்டும் என்று எண்ணுங்கள்.
 
யாராவது எதிரியாகப் பேசுகிறார்கள் என்றால் உடனே ஈஸ்வரா என்று எண்ணி அதைத் தடுத்துவிடுங்கள்.
1.அவர்கள் பொருளறிந்து செயல்படும் சக்தி பெற வேண்டும்.
2.அவர்கள் செய்வது யாருக்கும் தொல்லையில்லாத நிலை பெற வேண்டும்
3.அவர்களது பகைமையூட்டும் இந்த நிலைகள் மாற வேண்டும் என்று எண்ணுங்கள்.
 
இவ்வாறு நாம் எண்ணும் பொழுது அவர்கள் உணர்வுகள் நமக்குள் வருவதில்லை.
 
ஏனென்றால்… “ஈஸ்வரா என்று எண்ணி நம் உடலுக்குள் பெறச் செய்து விட்டு அந்த உணர்வின் தன்மையைச் சொல்லப்படும் பொழுது இந்த உணர்வு (நாம் எடுக்கும் அருள் உணர்வுகள்) இரத்தத்தில் கலந்து செல்லும். இந்த அருள் உணர்வுகள் நம் ஆன்மாவாக மாறுகின்றது… வலுவாகிறது.
 
அப்பொழுது ந்த உணர்வுகள் கொஞ்சம் கொஞ்சமாக அங்கே போய்ச் சேரும். அவன் திருந்தும் நிலை வரும். 
1.அவன் திருந்த எண்ணினால் அவனுக்கு நல்லதாகிறது. 
2.நம்மைத் திட்டும்போது நம் உடலுக்குப் பாதுகாப்பாக இருக்கும். 
 
சொல்வது உங்களுக்கு அர்த்தமாகிறதல்லவா.
 
இதே மாதிரி வாழ்க்கையில் நாம் ஒவ்வொரு நிமிடத்திலும்
1.ஒவ்வொரு குணங்களிலும்
2.ஒவ்வொரு உணர்விலும்
3.ஒவ்வொரு செயல்களிலும் துருவ நட்சத்திரத்தின் உணர்வைக் கலந்து கொண்டே வரவேண்டும்.
 
பல விதமான குழம்பு வைக்கிறோம், பல விதமான பலகாரம் செய்கின்றோம். தே மாதிரி நமக்குள் அந்தத் தீமை செய்யும் உணர்வைச் சுவை மிக்கதாக மாற்றிவிடுகிறோம்.
 
இப்படி நம் இரத்தத்தில் கலக்கும் பொழுது நம் உடலிலுள்ள எல்லா அணுக்களுக்கும் சேர்கின்றது. கொஞ்சம் இதில் பொறுமை தேவை…
 
ஏனென்றால் மனிதனுடைய உணர்வுகள் ஒருவர் மேல் வெறுப்பாகி விட்டால் ரோட்டில் போகும் பொழுது பார்த்தால்போகின்றான் பார்…” என்ற இந்த உணர்வை வளர்த்துக் கொள்கின்றோம்.
 
இதே மாதிரி ஒருவன் யாருக்கோ தவறு செய்கின்றான். அதை நாம் பார்த்து விடுகின்றோம். பார்த்தவுடன் அவனின் நினைவு வருகின்றது. அதே உணர்வை எடுத்துத் தவறு செய்யும் அணுக்களைத்தான் நாம் வளர்க்கின்றோம்.
 
ஒருவன் சாபம் விடுகின்றான் அவன் எதைப் பார்த்தாலும் சாபம் விட்டுக் கொண்டே இருப்பான். அவனைப் பார்த்தவுடன் பதிவு செய்து விடுகின்றோம். இந்த சாப அலைகள் அடுத்து நமக்குள் எதை எடுத்தாலும் தீமை செய்யும் அணுக்களாக வளர்ச்சி பெறுகின்றது.
 
அந்த மாதிரி உணர்வுகள் வரும் பொழுது
1.அந்தக் கணமே ஈஸ்வராஎன்று துருவ நட்சத்திரத்தின் உணர்வைப் புருவ மத்தியில் கொண்டு வரவேண்டும். 
2.துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி எங்கள் உடலிலுள்ள ஜீவ அணுக்கள் ஜீவ ஆன்மாக்கள் பெற வேண்டும் என்று எண்ண வேண்டும்.
 
நம் வாழ் நாளில் இதைப் பழக்கத்திற்குக் கொண்டு வரவேண்டும். இவ்வாறு செய்து அந்தத் தீமையான உணர்வுகளை நம் ஈர்ப்பு வட்டத்திலிருந்து தள்ளிப் பழக வேண்டும்..
 
ஒருவர் திட்டினார் என்று வைத்துக் கொள்ளுங்கள். திட்டியவர்களை எண்ணினால் புரை ஓட வைக்கின்றது. இங்கிருந்து தானே போகின்றது. யார் உடலில் விளைந்ததோ அங்கே போகிறது.
 
அப்படி உங்களை நினைக்கும்போது அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை நாங்கள் பெற வேண்டும் என்று நீங்களே இதைப் பெற்றிட வேண்டும்.
 
அதாவது மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும். எங்கள் உடல் முழுவதும் பெற வேண்டும் எங்கள் ஜீவாத்மா பெற வேண்டும் என்று எண்ணிவிட்டு
1.அவர்களுக்குள் அறியாது சேர்ந்த இருள் நீங்க வேண்டும்
2.அவர்கள் பொருளறிந்து செயல்படும் திறன் பெற வேண்டும் என்று நாம் எண்ணும் போது இந்த உணர்வு நமக்குள் வருகிறது.
3.அவர்கள் உணர்வு பதிவாகிறது… இதனுடன் கலந்து தை நாம் மாற்றி விடுகின்றோம்.
 
அப்பொழுது துருவ நட்சத்திரத்தின் பேரருளை இங்கே இணைத்து விடுகிறோம். உள்ளே கெட்டது போகாமல் மாற்றி விடுகிறோம். இந்த உணர்வு இரத்தத்தில் கலக்கிறது. இரத்தத்தில் கலந்தவுடன் அதை எடுப்பதற்கு வழிவேண்டுமல்லவா! 
 
அது கலந்தவுடன் இதை மாற்றிவிட்டுத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எங்கள் உடலிலுள்ள ஜீவான்மா ஜீவ அணுக்கள் பெற வேண்டும் என்று இதை முந்திக் கொடுத்துவிடுகிறோம்.
1.அதைக் கொடுத்தவுடன் நாம் கலந்து போவதை எடுத்துப் பழக வேண்டும்.
2.ஒன்றில்லாது ஒன்றில்லை…! எதுவுமே ஒன்று இணைந்தால் தான் அது வளரும்.
 
வட துருவத்தில் இருப்பது இழுக்கும். தென் துருவத்தில் இருப்பது தள்ளும். ஏனென்றால்
1.தென் துருவம் சூரியனைப் பார்த்து இருக்கின்றது.
2.வட துருவம் மேலே இருந்து இழுக்கிறது.
3.அதாவது காந்தத்தில் மற்றொரு காந்தத்தை வைத்தால் தள்ளிக் கொண்டே போகும்.
 
இதைப் போன்று நாம் நமது வாழ்க்கையில் எத்தகைய தீமைகள் வந்தாலும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி உணர்வுகளை நமக்குள் கலந்து கொண்டே இருக்க வேண்டும்.
 
1.நம் உடலில் உள்ள இரத்தத்தில் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி உணர்வுகளைக் கலந்து கொண்டே இருக்க வேண்டும்,
2.நம் உடலை உருவாக்கிய அனைத்து அணுக்களிலும்
3.துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி உணர்வுகளைக் கலந்து கொண்டே இருக்க வேண்டும்.
 
அந்த மகரிஷிகள் சென்றடைந்த எல்லையை நாம் அடைய வேண்டும், அதற்குத் தான் இதை உணர்த்துகின்றோம்.

நாம் அனவரும் ஒன்று சேர்ந்து துருவ நட்சத்திரத்தின் சக்தியை உலகமெங்கும் பரவச் செய்வோம்

நாம் அனவரும் ஒன்று சேர்ந்து துருவ நட்சத்திரத்தின் சக்தியை உலகமெங்கும் பரவச் செய்வோம்


அருள் ஞானச் சக்கரத்தை தினமும் உற்றுப் பாருங்கள். அதிலிருந்து துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி வரும்.
 
என்னென்ன காரியங்கள் நல்லபடியாக நடக்க வேண்டும் என்று விரும்புகிறீர்களோ அதை எல்லாம் எண்ணுங்கள்.
1.குடும்பத்தில் ஒன்றுபட்டு வாழ வேண்டும்
2.விவசாயம் செழிக்க வேண்டும்
3.தொழில் பெருக வேண்டும் வாடிக்கையாளர்கள் நலமாக வாழ வேண்டும்.
4.நோயுற்றவர்களுக்குத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி கிடைத்து
5.அவர் நோய் நீங்கி உடல் நலம் பெற வேண்டும் என்று எண்ணுங்கள்.
 
சக்கரத்தை வைத்துப் பயபக்தியுடன் செயல்படுங்கள். பாலோ பமா பதார்த்தத்தையோ வைத்துத் தியானம் இருந்துவிட்டு நீங்களும் உட்கொள்ளுங்கள் குழந்தைகளுக்கும் கொடுங்கள்.
 
எல்லோரும் உடல் நலம் பெற வேண்டும் அருள் ஞானம் பெற வேண்டும் என்று இந்த வழியைக் கடைப்பிடித்து வாருங்கள்.
 
எங்கள் ஊர் நன்றாக இருக்க வேண்டும் தெரு நன்றாக இருக்க வேண்டும் வீடு நன்றாக இருக்க வேண்டும் அடிக்கடி இந்த உணர்வுகள் இங்கே படர வேண்டும் என்று சக்கரத்தை உற்றுப் பார்த்து இந்த ணர்வுகளைப் பரப்புங்கள்.
 
1.ஊரில் உள்ள அனைவரும் ஒன்றுபட்டு வாழ வேண்டும்
2.ஊரிலே விவசாயம் செழிக்க வேண்டும்
3.மக்கள் ஒற்றுமையாக வாழ வேண்டும் என்று
4.”சக்கரத்திற்கு முன்…” இதை எல்லாம் சொல்லிக் கொண்டே வாருங்கள்.
 
அதன் வழி ஓரளவுக்கு அனைவருக்கும் இந்த உணர்வுகள் பரும் பரவும். ஊரில் உள்ள குடும்பங்களும் நலமாகும் சக்தி பெறும். இந்த உணர்வுகள் பரவப்ரவ எல்லோரும் அதைப் பெறும் தகுதி ஏற்படும்.
 
டிவி ஸ்டேஷனில் எந்த ஒளிபரப்பு செய்கின்றார்களோ அந்த அலைவரிசையைத் திருப்பினால் அது தான் வரும். அதே போல
1.குருநாதர் காட்டிய அருள் வழியில் நாம் அந்த அல்லைவரிசையை எடுத்துப் பரப்பப்படும் பொழுது
2.மற்ற யாரிடமும் பேசினாலும் கூட அவர்களுக்குள்ளும் இது பதிவாகின்றது.
 
அவர்களுக்கு இந்த எண்ணம் வந்தால் அதை எடுத்து வளர்த்துக் கொண்டால் அவர்களும் அவர்களை அறிய முடிகின்றது. அறியாது வந்த கஷ்ட நஷ்டங்களைப் போக்க முடிகின்றது.
 
உலகம் நலம் பெற்று வாழ நாம் இந்த முறைப்படி தியானத்தைச் செயல்படுத்த வேண்டும். எல்லோரும் நன்றாக ஆகும்பொழுது நமக்குள் அருள் மகரிஷியின் உணர்வுகளை எளிதில் பெற முடியும்.
 
ஒவ்வொரு குடும்பங்களிலும் கூட்டுத் தியானமிருங்கள். ந்தக் குடும்பம் நன்றாக வேண்டும் குடும்பத்தில் குழந்தைகளும் மற்றவர்களும் தொழிலும் சீராக வேண்டும் என்று தியானமிருங்கள்.
 
நோயற்றவர்களுக்கும் அந்த அருள் சக்தி கிடைக்க வேண்டும் அவர்கள் நலம் பெற வேண்டும் என்று கூட்டுத் தியானத்தில் முயற்சி எடுங்கள் நலமாக வேண்டும் என்று ஒன்று சேர்ந்து சொல்லுங்கள். கூடுமானவரை சீக்கிரம் அவர்கள் உடல் நலம் பெறுவார்கள்.
 
என்ன தான் நோய் நீங்கினாலும் கூட நாம் வாழக்கூடிய காலம் குறுகியதுதான். எப்படியும் இந்த உடலை விட்டு நாம் பிரியத் தான் வேண்டும் இந்த உடல் நமக்குச் சொந்தம் இல்லை.
 
ப்பொழுது என்ன செய்ய வேண்டும்…?
 
1.எல்லோரும் நன்றாக இருக்க வேண்டும் என்று அருள் ஒளியை அங்கே பாய்ச்சப்படும் பொழுது
2.அந்த மகரிஷிகளின் அருள் உணர்வுகள் நமக்குச் சொந்தமாகின்றது.
 
உடல் நோய்வாய்ப்பட்டாலும் உடல் சுருங்கத் தான் செய்யும் அருள் உணர்வுகள் பெற்ற பின் தீய உணர்வுகள் தீய அணுக்கள் குறையப்படும் பொழுது உடல் சுருங்கத் தான் செய்யும். ஆனால்
1.பேரருள் என்ற உணர்வுகள் உயிரிலே பட்டு… ஒன்று சேர்த்து இணைந்த பின்
2.துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்திலிருந்து அதைக் கவர்ந்து
3.ந்த உணர்வை உணவாக எடுத்து ஒளியின் பிளம்பாக…” மாறும்.
 
எப்போதுமே பிறவியில்லா நிலை அடையும் அந்தச் சக்தி பெறுகின்றோம். அதைத்தான் ராமாயணத்தில் ராமன் நேரமாகிவிட்டது என்று மனதைக் குவித்துப் பூஜித்தான் என்று காட்டியிருப்பார்கள்.
 
நம்முடைய எண்ணங்கள் அனைத்தும் ஒன்று சேர்த்து பகைமை இல்லாத உணர்வுகளை வளர்த்து உடலில் இருக்கும் பொழுது ஒளியின் உணர்வைச் சேர்த்து உயிருடன் ஒன்றி ஒளியின் சரீரமாக மாற்ற வேண்டும். கடைசி நிலை அது தான்…!