ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

March 25, 2026

தீமைகளைக் கிழித்தெறியும் மெய் ஞானிகளின் அலைவரிசை

தீமைகளைக் கிழித்தெறியும் மெய் ஞானிகளின் அலைவரிசை


‘’ஓங்காரக்காளி’’ என்று நாம் சொன்ன ஓசோன் திரையையும் அணு குண்டினால் சிதறடித்து விட்டார்கள். இதனால் விஷத்தன்மைகள் பூமியில் வந்து படர்ந்து கொண்டிருக்கின்றது.
 
விஞ்ஞானக் கருவி கொண்டு விண்ணிலே பல அலைகளைப் பாய்ச்சிக் கொண்டிருக்கிறார்கள்.
1.விண்ணிலே பாய்ச்சினால் இங்கே பாதிக்காது என்பது அவர்களுடைய எண்ணம். 
2.ஆனால் விண்ணிலே விஷத் துகள்கள் பரப்பப்படும்போது புவியின் ஈர்ப்புக்குள்
3.”சுழற்சியில் வரப்படும்போதுஅந்த அலைகள் பூமிக்குள் வருகிறது.
 
அப்படி அலைகள் வரப்படும்போது தான் விஷத்தின் தன்மையை முறியடிக்கக் கூடிய சக்தி அதற்கு இருந்தாலும் மனிதன் விஞ்ஞானத்தினால் செய்யப்பட்டது அந்த ஒசோன் திரையைக் கிழித்து விடுகின்றது.
 
விண்ணிலே இருக்கக்கூடிய ஆற்றல்கள் துரித நிலைகளில் நம் பூமிக்கு வரக்கூடிய நிகழ்ச்சிகள் நடந்து கொண்டிருக்கின்றது.
1.அவ்வாறு வரக்கூடிய நிகழ்ச்சிகளினாலே மனிதனுடைய சிந்தனைகள் குறைக்கப்பட்டு விட்டது.
2.நாம் ஆனந்தமாக இருக்க வேண்டும் என்று எண்ணுகின்றோம்.
3.ஆனால் உணர்வுக்குள் வேதனை தாண்டவமாடிக் கொண்டிருக்கின்றது.
 
இந்த மாதிரி நிலைகளிலிருந்து மீட்டிக் கொள்வதற்கு நாம் செய்ய வேண்டிய ஒரே முறை அந்த மெய் ஞானியரின் அருளை நமக்குள் பெருக்குவது தான்.
 
ஓசோன் திரை எப்படிக் கிழிந்து வருகிறதோ அதைப் போன்று  மற்ற விஷத்தின் தன்மையைக் கிழித்தெறியும் தன்மை நாம் பெற வேண்டும். 
 
1.நாம் சாதாரண மனிதர்கள் என்று எண்ண வேண்டாம்.
2.நம்மிடமிருப்பது சாதாரண ஆயுதம்தான்பணம் வசதி ள்ளவர்கள் யாருமில்லை.
3.எண்ணத்தின் வலுவை நாம் பெற்று மெய் ஞானியரின் அருள் சக்திகளைப் பெற வேண்டும்.
 
அதனின் வலுக்கொண்டு தீயசக்திகள் நம்மை அணுகாது நாம் பாதுகாக்க வேண்டும். அந்த உர்வின் ஆற்றல் மிக்க சக்திகளை நாம் பெற வேண்டும் நமக்குள் பெருக்க வேண்டும்.
 
எப்படி அலைவரிசையினாலே மனிதனை இயக்க முடியும் என்று விஞ்ஞானிகள் சொல்கின்றனரோ அதைப் போல அந்த மெய் ஞானியரின் அருள் ஒளியை ஒவ்வொரு நிமிடமும் நமக்குள் கூட்டி இந்த அலைவரிசைகளை நமக்குள் பெருக்கிப் பழக வேண்டும். ..”
 
அப்படிப் பழகுவதற்குத்தான் ஆத்ம சுத்தியும் பயிற்சியும் கொடுத்தது.
 
1.ஒவ்வொரு நொடிப் பொழுதும் நாம் அந்த மெய் ஞானியரின் அலைவரிசையின் தொடர் கொண்டு
2.நமக்குள்ளும் இந்த உலகிற்குள்ளும் வரும் எத்தகைய தீமைகளையும் நீக்கிடும் அருள் சக்தி பெறுவோம். எமது அருளாசிகள்.

தியானிக்கும் பொழுது என் நெற்றியைப் பார்க்கச் சொன்னதன் நோக்கம்

தியானிக்கும் பொழுது என் நெற்றியைப் பார்க்கச் சொன்னதன் நோக்கம்


குரு காட்டிய அருள் வழியில் என் உயிரான ஈசனிடம் வேண்டி என் குரு காட்டிய அருள் உணர்வை நான் ங்கிப் பெறுகின்றேன்.
1.ந்த அருள் பெற வேண்டும் என்ற ஏக்கத்துடன் நீங்கள் உங்கள் உயிரை வேண்டும் பொழுது
2.கண்ணின் வழி குரு காட்டிய அருள் வழியில் அந்தத் துருவ நட்சத்திரத்துடன் உங்களை இணைக்கச் செய்கின்றேன்…”
 
குரு எனக்கு அதன் வழி தான் காட்டிக் கொண்டு வந்தார். அதன் வழியே உங்களுக்கும் குரு வழியைக் காட்டி அந்த உணர்வினை எடுக்கும்படி செய்வதற்காக உங்களுக்குள் பதிவு செய்கின்றேன்.
 
இப்பொழுது என்னுடைய நெற்றியில் புருவ மத்தியைப் பாருங்கள்…! அம்மா அப்பா அருளால் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் அருளால் அகஸ்திய மாமகரிஷிகளின் அருள் சக்தியும் துருவ மகரிஷிகளின் அருள் சக்தியும் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று ஏங்கி அப்படியே உற்றுப் பாருங்கள்.
 
குரு காட்டி அருள் வழியில் அவர் அருள் வழி காட்டிய அகஸ்தியனுடைய அருளும் அவன் துருவனான அந்த அருள் உணர்வும் துருவ நட்சத்திரமான அந்தப் பேரருளும்
1.உங்களுக்குக் கிடைக்க வேண்டும் என்று என் உயிரான ஈசனிடம் வேண்டி ஏங்கித் தியானிக்கின்றேன்.
2.அதன் வழி நீங்கள் ங்கும்போது அந்த உணர்வுகள் அந்த அலைகள் இங்கே வந்து
3.உங்கள் உடலில் அந்த உணர்ச்சிகள் பரவி பேரருளைப் பெறும் தகுதியைப் பெறுகின்றீர்கள்.
 
நாம் அதிலே ஆயுள் கால மெம்பராக இணைகின்றோம். இதிலிருந்து உறுதி பூண்டு யாம் உபதேசித்த உணர்வின் வழிப்படி வாழ்க்கையில் வழி நடத்துகின்றேன். அந்த வழி நடத்தும் அந்த அருள் சக்தி பெற வேண்டும் என்று நீங்கள் எண்ணுங்கள்.
 
அம்மா அப்பா அருளால் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் அருளால் அகஸ்திய மாமகரிஷிகளின் அருள் சக்தியும் துருவ மகரிஷிகளின் அருள் சக்தியும் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று உங்கள் உயிரான ஈசனிடம் வேண்டி அதே உணர்வு கொண்டு கண்ணின் நினைவைப் புருவ மத்தியில் எண்ணி உற்றுப் பாருங்கள்… அதை ஏங்கிப் பெறுங்கள்.
 
உங்களுக்கு உங்கள் உயிரான ஈசனிடம் நான் வேண்டி
1.ஈசன் வீற்றிருக்கும் ஆலயத்தில் அந்த அருள் உணர்வுகள்டர வேண்டும்
2.மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் அருள் படர வேண்டும்
3.அகஸ்திய மாமகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும்
4.துருவ மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும்
5.துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற வேண்டும் என்று
6.உங்கள் உடலில் அந்த அருள் சக்தி படர வேண்டும் என்று உங்களைத் தியானிக்கின்றேன்.
 
நீங்களும் அதன் வழி பெற வேண்டும் என்று ஏங்கித் தியானியுங்கள்.
 
இப்பொழுது அந்த அருள் உணர்வுகள் நீங்கள் பெறுவதை உணர முடியும் உங்கள் உடலில் அது ஒளியலைகளாகப் பரவுவதையும் உணரலாம்.