ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

February 11, 2026

உடலைக் காக்கும் சக்தி சிவ தனுசு… உயிரான்மாவை ஒளியாக்கும் சக்தி விஷ்ணு தனுசு

உடலைக் காக்கும் சக்தி சிவ தனுசு… உயிரான்மாவை ஒளியாக்கும் சக்தி விஷ்ணு தனுசு


பரசுராமனுக்கும் சீதாரமனுக்கும் போர் நடந்து கொண்டே இருக்கும் என இராமாயணக் காவியம் கூறுகின்றது.
 
ஏனென்றால் சிவ தனுசுஎனும் பொழுது
1.உடலில் உருவான உணர்வின் தன்மை கொண்டு
2.இந்த உடல் வாழ்க்கையில் வரும் தீமைகளிலிருந்து காக்கவே அந்த உடலின் உணர்வுகள் வருகின்றது,
 
ஆனால்விஷ்ணு தனுசுஎனும் பொழுது தீமைகளை அகற்றி ஒளி என்ற உணர்வைக் கொண்டு வருகின்றது. 
1.நாம் துருவ நட்சத்திரத்தின் உணர்வை நுகருகின்ற பொழுது
2/துருவ நட்சத்திரத்தின் உணர்வுகள் நமக்குள் "விஷ்ணு தனுசு" ஆகின்றது.
 
அதாவது துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளை நாம் நுகரப்படும் பொழுது துருவ நட்சத்திரத்தின் உணர்வுகள் நமது உடலில் இருக்கும் உணர்வுகளை ஊடுருவுகின்றது.
 
அப்பொழுது தான் விஷ்ணு தனுசிற்கும் சிவ தனுசிற்கும் போர் முறை வருகின்றது. 
 
ஏனென்றால்சீதா என்றால் சுவை கொண்டதுமகிழ்ச்சி கொண்டதுமகிழ்ந்து வாழக்கூடியதுமகிழ்வான செயல்களைச் செய்வது…! மகிழ்ச்சி என்ற உணர்வுகள் நமக்குள் வரும் பொழுது மகிழ்ச்சியூட்டும் சக்தி பெற்றது.
 
நமக்குள் சமப்படுத்தும் உணர்வுகள் இருப்பினும் எந்தெந்தக் குணங்களை நமக்குள் பெற்றோமோ அதைத்தான்…” அது நமக்குள் சமப்படுத்திக் கொண்டிருக்கும்.
 
உதாரணமாக
1.நாம் கோபப்படுகின்றோம் என்றால் அந்தக்  கோபமான நிலைகளை எடுத்துத்தான் நம்மைப் பாதுகாத்துக் கொள்ள இந்த சிவ தனுசுஉதவும்.
2.நாம் ஒருவர் மேல் வெறுப்பு கொண்டிருப்போமானால் இரு உன்னை நான் பார்க்கிறேன்எனும் எண்ணம்தான் நமக்கு வரும்.
 
இது பரசுராமன் கையிலுள்ள சமப்படுத்தும் உணர்வு பெற்ற நம் உடலில் வளர்த்துக் கொண்ட சிவ தனுசு
 
இப்படி நாம் கோபப்படும் பொழுதோ சஞ்சலப்படும் பொழுதோ பிறருடைய நிலைகளால் நம்மில் உருவான தனுசை எடுத்துத் தான் பயன்படுத்துகின்றோம். தேடிச் சேர்த்த செல்வத்தைப் பாதுகாக்க வேண்டும்என்று சிவ தனுசைத்தான் நாம் பயன்படுத்துகின்றோம்.
 
நம் குழந்தை மேல் எந்த அளவு பாசம் கொண்டோமோ அதற்கொப்பத்தான் அவனைப் பாதுகாக்க வேண்டும் என்ற நிலை வருகின்றது. ஆனால் அவன் செய்யும் தவறினை நாம் காண்பதில்லை. அவன் செய்யும் குற்றங்களைப் புரிந்து கொள்வதில்லை.
 
என் பிள்ளை…” என்ற நிலையில் இந்த உடலில் எதை வளர்த்துக் கொண்டோமோ அதனின் உணர்வைப் பாய்ச்சித்தான் அவனைக் காக்கும் நிலைக்கு வருகின்றோம்.
 
இதில் நாம் வேதனையின் உணர்வை நுகர்கின்ற பொழுது நமது உயிர் விஷ்ணுவரம் கொடுத்து விடுகின்றார். பின் நுகர்ந்த உணர்வுகள் உடலுக்குள் வருகின்றது.
 
நுகர்ந்த உணர்வுகள் இரத்தத்தில் கலக்கப்படும் பொழுது உயிர் நுகர்ந்த உணர்வின் தன்மையை அணுக்கருவாக உருவாக்குகின்றது.
 
உணர்வின் கரு நமது இரத்த நாளங்களில் கலக்கப்படும் பொழுது இந்திரியமாக மாறுகின்றது. இதற்குத்தான் இந்திரலோகம் என்று காரணப் பெயர் வைத்தார்கள் ஞானிகள்.
1.இரத்த நாளங்களில் சேமிக்கப்பட்ட அணுக்கரு நமது உடலில் சுழன்று கொண்டேயிருக்கும்.
2.குறிப்பிட்ட காலப் பருவம் வரும் பொழுது தான் அணுக்கரு வெடிக்கின்றது.
3.அப்படி வெடித்தபின் அதன் உணர்வின் தன்மை எதுவோ அதற்கொப்ப அணுத்தன்மை வெளிப்படுகின்றது.
4.இப்படி உருவான அணு இவ்வுடலில் சேர்ந்து இயக்கத் தொடங்கி விடுகின்றது.
5.உடலில் உருவான இவ்வணு தன் இனத்தைப் பெருக்கத் தொடங்கிவிடுகின்றது.
 
ஒரு வித்தை நிலத்தில் ஊன்றினால் அந்த வித்து எந்த இனச் செடியின் வித்தோ அதே இனச் செடியைத் தான் உருவாக்குகின்றது. கடைசியில் அதே இன வித்தைத்தான் உருவாக்குகின்றது.
 
கவே… நாம் சுவாசித்த உணர்வின் தன்மை அணுவாகி உடலாக்கப்படும் பொழுது என்ன செய்கின்றது? உடலாகும் பொழுது சிவமாகின்றது. உணர்வின் தன்மை சொல்லாக வரப்படும் பொழுது சிவ தனுசு என்ற நிலை வருகின்றது.
 
ஒருவர் தவறு செய்கின்றார் என்ற உணர்வை நாம் நுகர்ந்தோம் என்றால் அவருடைய உடலில் விளைந்த உணர்வுகள் நமக்குள் வரப்படும் பொழுது இதற்கும் நமது உடலிலுள்ள நல்ல குணங்களுக்கும் போர் என்ற நிலை நமது உடலில் நடைபெறுகின்றது.
 
அது சமயம் நாம் கோபத்தின் தன்மை கொண்டு தனுசைப் பாய்ச்சினோம் என்றால் அதனின் உணர்வின் கூட்டமைப்பு தன்னில் ஒரு படையையே உருவாக்குகின்றது.
 
சிறுகச் சிறுக கோபத்தின் உணர்வுகள் வளரப்படும் பொழுது கோபம் அதிகமாகிகோபக்காரர் என்ன செய்கிறார் என்றால் தன்னைக் காத்துக் கொள்வதற்கு இரு உன்னை நான் பார்த்துக் கொள்கிறேன்என்ற கோப உணர்வு கொண்டு பிறிதொருவரைத் தாக்குகின்றார்.  
 
1.கோபம் உள்ளவர் சிவ தனுசைத் தனக்குள் எடுத்துக் கொண்டு கோப உணர்வுகளைத் தமக்குள் எடுத்துச் சமப்படுத்துகின்றார்.
2.இதே போன்று வேதனை என்ற நிலை வரும் பொழுது வேதனை உணர்வுகளைத் தனக்குள் எடுத்துச் சமப்படுத்துகின்றார்.
 
பரசுராம்…!நாம் சுவாசித்த உணர்வுகள் எந்தக் குணமோ அதைச் சமப்படுத்தும் எண்ணங்கள் தான் வருகின்றது.
 
உதாரணமாக ஒவ்வொரு உயிரினமும் தன்னைப் பாதுகாத்துக் கொள்ள விழைகின்றது. இவை எல்லாம் சிவ தனுசு.
 
இதைப் போன்று, மனிதரிடத்தில் எனும் பொழுது மனிதர் தாம் எதை முன்னிலையில் வைத்துள்ளாரோ அது சிவ தனுசு.
1.அதாவது உடலைப் பாதுகாத்துக் கொள்ளும் நிலை வருவதுதான் சிவ தனுசு.
2.உயிர் என்ற ஒளியின் தன்மையை என்றும் ஒளியாக வைத்து இருள் சூழாத நிலையில் இருப்பதுதான் "விஷ்ணு தனுசு"
 
மனித வாழ்க்கையில் கணவனும் மனைவியும் வசிஷ்டரும் அருந்ததியும் போன்று வாழ்ந்து நளாயினியைப் போன்று கணவனும் மனைவியும் ஒருவரை ஒருவர் மதித்து நடந்து சாவித்திரியைப் போன்று இரு மனமும் ஒன்றி இரு உயிரும் ஒன்றி இரு உணர்வும் ஒன்றி, உணர்வினை ஒளியாக மாற்றிச் சிருஷ்டித்துக் கொண்ட நிலை ரிஷி…! அது தான் துருவ நட்சத்திரம்.
 
அந்தத் துருவ நட்சத்திரத்திலிருந்து வெளிப்படும் உணர்வின் சத்தைச் சூரியனின் காந்தப்புலனறிவு கவர்ந்து புவிக்குள் கொண்டு வருகின்றது. ஆகவே இதனை ரிஷியின் மகன் நாரதன்என்றும் நாராயணனின் அபிமான புத்திரன்என்றும் காவியங்களில் குறிப்பிட்டனர்.
 
துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியினை நாம் நுகர்ந்தோம் என்றால்
1.“நாரதன் என்னும் உணர்வுகள்உயிரான விஷ்ணுவிடமும் செல்கின்றது.
2.மற்றும் உடல் பாகங்கள் அனைத்திற்கும் சென்று
3.பகைமை உணர்ச்சிகளை மாற்றுவதற்கான நிலை எதுவோ அதைச் சொல்லி பகைமையைத் தணிக்கச் செய்கின்றது.
4.உண்மையை விளங்கச் செய்கின்றது இந்த நாரதர் என்னும் உணர்வுகள்.
 
எனவே நாம் துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளைத் திரும்பத்  திரும்ப நுகர்ந்தால் அதன் உணர்வுகள் நம் உடலுக்குள் வந்து பகைமை உணர்ச்சிகள் நமக்குள் எப்படி இயக்குகின்றது…? என்ற நிலையை நமக்குள் தெளிவாக்கி நம்மை நல்வழிப்படுத்தும்.
 
ஆகவே தான்
1.ரிஷியின் மகன் நாரதன் என்றும் நாராயணனின் அபிமானப்  புத்திரன் என்றும்
2/“நாரதர் நன்மைகள் தான் செய்வார்…” என்றும் காவியங்களில் காண்பித்தார்கள் ஞானிகள்.
 
நமது உயிரால் உருவாக்கப்பட்ட உணர்வுகள் விஷ்ணு தனுசுஉயிருடன் ஒன்றி ஒளியாக இருக்கின்றது. ஒளியின் உணர்வுகளை நாம் நுகர்ந்தோம் என்றால் சீதாமகிழ்ச்சியான உணர்வை நமக்குள் ஊட்டும்.
 
ஒளி என்ற உணர்வை ஊட்டும் நாரதன் தீமைகளை நீக்கிச் சமப்படுத்தும் நிலைகளை உருவாக்கி உணர்வின் நிலையைத் தெளிவாக்குவார் என்பதுதான் பொருள்.
 
ஆகவே அரும்பெரும் ஞானிகள் காண்பித்து உணர்த்திய உண்மைகளைத் தம்முள் உணர்ந்து அதன்வழி இயங்கி ஒளி என்ற உணர்வைக் கொண்டு வரும் விஷ்ணு தனுசினைக் கைக்கொண்டு தம்முள் பகைமை உணர்வுகளை அகற்றி மகிழ்ச்சி தரும் உணர்வை தம்முள் வளர்த்து வரும் அன்பர்கள் அனைவரும் உடல் நலம் உடல் பலம் மன நலம் மன பலம் மன வளம் செல்வம் செல்வாக்கு பெற்றுப் பேரின்பப் பெருவாழ்வாக வாழ்ந்து வளர்ந்திட எமது அருளாசிகள்.

வாலியை இராமன் மறைந்திருந்து தாக்கினான்

வாலியை இராமன் மறைந்திருந்து தாக்கினான்


எண்ணத்தின் வலிமையான நிலைகளைக் காட்டுவதற்கு இராமாயணத்தில் வாலியைக்காட்டுகின்றனர்.
 
வாலி வலிமை பெற்றவன். அவனிடம் யார் நேரடியாகப் போர் செய்தாலும் அவர்களிடமிருந்து பாதி பலத்தை வாலி எடுத்துக் கொள்வான்…! என்று காவியத்தில் உணர்த்தியுள்ளார்கள்.
 
உதாரணமாகஒரு மனிதன் கோபத்துடனோ அல்லது வேகத்துடனோ வேதனைப்படும் சொல்லாகச் சொல்லப்படும் பொழுது அவர்களை நேரடியாகப் பார்த்து அவர்கள் சொல்வதைக் கேட்டறிந்தால்
1.அந்த வேதனை உணர்வுகள் நமது நல்ல உணர்வுக்குள் இணைந்து நமக்குள்ளும் ஆட்சி புரியத் தொடங்கிவிடும்.
2.நம் நல்ல குணத்தைச் செயலாக்க முடியாது.
3.பாதி நல்ல குணம்வலு இழக்கப்படுகின்றது.
 
வாலி என்ற நஞ்சான செயல்களை நாம் பார்க்கப்படும் பொழுது அந்த உணர்வுகள் நம்மை வீழ்த்திவிடும். அதை அடக்க என்ன செய்ய வேண்டும்…?
 
மனித வாழ்க்கையில் வந்த நஞ்சினை வென்று இன்றும் ஒளியின் சரீரமாக விண்ணிலே சுழன்று கொண்டு இருக்கும் துருவ நட்சத்திரம் சப்தரிஷி மண்டலங்களில் இருந்து வெளிப்படும் உணர்வலைகளை நம் எண்ணத்ததால் அதைக் கவர்ந்து நுகர்ந்து அந்த உணர்வலைகளை நம் உடலுக்குள் சேர்க்க வேண்டும்.
 
1.மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும்
2.அது எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும்
3.எங்கள் உடலில் உள்ள ஜீவான்மா ஜீவ அணுக்கள் மகரிஷிகள் அருள் சக்தி பெற வேண்டும் என்று உடலுக்குள் செலுத்த வேண்டும்.
 
பிறகுமகரிஷிகளின் அருள் சக்தி அந்த வேதனைப்பட்டவர்கள் பெற வேண்டும். அவர்கள் உடல் முழுவதும் படர வேண்டும். அவர்கள் அறியாத இருள்கள் நீங்க வேண்டும் என்று நாம் மறைமுகமாக நம் எண்ணத்தின் வலுவின் தன்மை கொண்டு அலைகளைப் பரப்பவேண்டும்.
 
இதைத்தான்
1.சீதாராமன் வாலியை நேரடியாகப் பார்க்காதபடி
2.அதைக் காட்டிலும் சக்தி வாய்ந்த கணையை மறைந்திருந்து ஏவினான்…”
3.வாலியின் செயலைத் தடுத்தான்…! என்று இராமாயணத்தில் உணர்த்தினார்கள். 

பெண்கள் துணை இல்லையென்றால் சப்தரிஷி மண்டலம் செல்வது மிகவும் கடினம்

பெண்கள் துணை இல்லையென்றால் சப்தரிஷி மண்டலம் செல்வது மிகவும் கடினம்


தான் கவர்ந்து கொண்ட சக்தி எதுவோ அதைப்போல உயிருடன் ஒன்றி ணைந்து வாழ்வதே வசிஷ்டரும் அருந்ததியும் என்பது.
 
உடலில் இருக்கும் பொழுது தான் ஆண்பால் பெண்பால். உடலை விட்டுச் சென்று விட்டால் றைந்தது ஆண்பால் தான்.
 
1.பெண்பால் என்பது உணர்வின் உணர்வுகள் இங்கே வருவது தான்.
2.அது ரண்ட இணைந்து விட்டால் ஆண்பால் பெண்பால் சேர்ந்து கலந்தே செயல்படும்… “சிவசக்தி…” என்பார்கள்.
 
ஆகவே பெண்கள் தான் ஆண்களைக் காட்டிலும் பெரும்பகுதி தனக்குள் சக்தி வாய்ந்த நிலையை உருவாக்கி ஏழாவது நிலை பெற்றுச் சப்தரிஷி மண்டலங்களாக உள்ளார்கள்.
 
ண்களைப் பற்றித் தான் பெரும்பகுதி சொல்கின்றார்கள் பெண்கள் ரிஷித் தன்மை பெற்றது பற்றிச் சொல்லவில்லையே…! என்று எல்லோரும் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்.
 
காரணம்… சாஸ்திர விதிகள் அனைத்துமே பெண்களைப் பற்றி இழுக்குப்படுத்தித் தான் வெளிப்படுத்தி இருப்பார்களே தவிர உயர்ந்த நிலைகளைச் சொல்வதில்லை.
 
பதிவிரதையாக இருக்க வேண்டும் உத்தமியாக இருக்க வேண்டும் என்று பெண்களுக்குத் தான் கட்டுப்பாடு ஆண்களுக்கு அப்படி இல்லை. எல்லா மதத்திலும் அப்படித்தான் பெண்களைத்தான் பழித்து பேசியிருப்பார்கள்.
 
ன்று ஆணாக இருக்கலாம்
1.ஆனால் உருவம் ஆகப்படும் போது பெண்கள் மீது மோகம் கொண்டால் அடுத்து இவர் பெண்ணாகத்தான் பிறப்பார்.
2.இன்று ஆண் பெண்ணாகப் பிறக்கின்றான்.
 
இதைப் போல சக்தி என்பது பெண்பால் தான். எது கவர்ந்து கொண்ட சக்தியோ வசிஷ்டரும் அருந்ததி போல கவர்ந்து கொண்ட சக்தியாகத்தான் இந்த உணர்வுகள் ஈர்க்கும்.
1.பெண்கள் தான் ஏராளமானோர் சப்தரிஷி மண்டலத்தில் (ஆண்பால் பெண்பால்) சிசக்தியாக உணர்வின் இயக்கமாக இயக்கி வருகின்றனர்.
2.தன் கணவனின் எண்ணம் கொண்டு இணைந்திட்ட உணர்வுகள் சிவ சக்தியாக இயங்கிக் கொண்டுள்ளார்கள்.
3.தான் எடுத்துக் கொண்ட உணர்வுகள் எதுவோ உயிருடன் ஒன்றி ஒளியின் சரீரமாக சிசக்தியாக இன்றும் இருக்கின்றார்கள்.
 
ஆண்கள் அங்கே குறைவுதான் பெண்கள் தான் அங்கே அதிகமாக இணைந்துள்ளார்கள். ஆண்கள் ஒளி நட்சத்திரமாக ஆன நிலைகள் குறைவுதான். பெண்களுடைய சக்தி உறுதி கொண்டு தான் அவர்கள் வளர்ச்சி பெற்றுள்ளார்கள்.
 
தங்கள் உடலிலே ஒரு கஷ்டம் வந்தாலும் பெண்கள் அதை எண்ணுவதில்லை. விட்டுக் கஷ்டத்தைப் போக்க மில்லில் வேலை செய்கிறார்கள் என்று வைத்துக் கொண்டாலும் காலையில் எழுந்து குடும்பத்திற்கு வேண்டி அனைத்தையும் சமைத்து எல்லோருக்கும் சாப்பாடு போட்டு அவர்களும் சாப்பிட்டுவிட்டு வேலைக்கு முதலிலே வந்து உற்பத்தியையும் அதிகமாக எடுத்து விடுகின்றனர்.
 
பெண்களுக்கு வலிமை அதிகம் ஆண்களுக்குக் குறைவுதான். நான் தவறாகச் சொல்கிறேன் என்று யாரும் எண்ண வேண்டியதில்லை…! இயற்கையின் உணர்வின் சக்தி அதுதான்.
 
அவர்கள் உடலில் முடியவில்லை என்றாலும் வலுவான எண்ணங்கள் கொண்டு சப்தரிஷிகளின் அருள் சக்தி பெறக்கூடிய தகுதி அவர்களுக்குத் தான் உண்டு.
1.எந்த அளவுக்குப் பெண்கள் தனக்குள் அதை வளர்க்கின்றார்களோ இந்த எண்ணம் உலகைக் காக்கும் நிலைக்கே வரும்.
2.சக்தி இல்லை என்றால் சிவம் இல்லை.
 
மற்றதை வளர்த்திடும் நிலையாக தன் இனத்தை வளர்த்திடும் காத்திடும் நிலைகள் பெற்றவர்கள் தான் பெண்கள். எதனின் உணர்வு கொண்டு கருத்தன்மையாகிக் குழந்தையை உருவாக்குகின்றார்களோ அந்த மெய் உணர்வை வளர்க்கும் ஆற்றல் அவர்களுக்குத்தான் அதிகமாக உண்டு.
 
எதனின் பற்று அதிகமாகின்றதோ அதனின் தன்மை கொண்டு வளர்த்திடும் சக்தியும் சக்தி அதிகமாகின்றது. பெண்கள் தான் அதிக அளவில் சப்தரிஷி மண்டலத்தில் இணைந்துள்ளார்கள்.
 
வசிஷ்டரும் அருந்ததியும் போன்று இந்த உடல் தனக்குள் கவர்ந்து கொண்ட சக்தி எதுவோ அதுதான் விசிஷ்டாத்வைதம் என்று சொல்வது.ந்த உணர்வின் தன்மையை உடலாக ஆக்கியிருக்கின்றதோ சக்தியாக எடுக்கின்றோமா இது இணைந்தே அங்கே செயல்படும்.
 
ஆக பெண்களுக்கு தான் அதிகச் சக்தி உண்டு…! ஆனால் இதனின் விளக்கம் மதங்களிலே காண முடியாது… தரம் குறைத்துத் தான் காட்டி இருப்பார்கள் மற்றவர்களுக்கு அடிமையாக்கித் தான் காட்டியிருப்பார்கள். ஆனால்
1.அவர்கள் துணை இல்லை என்றால்
2.சப்தரிஷி மண்டலம் செல்வது மிகவும் கடினம்…!