
தியானத்தைக் கடைப்பிடிப்பவர்கள் செயல்படுத்த வேண்டியது
எலக்ட்ரானிக் என்ற நிலைகளை வைத்திருக்கின்றார்கள்… நாம் அருகிலே சென்றவுடன் கதவு திறக்கின்றது. மனிதன் இவ்வாறு கொண்டு வருகின்றான்.
அதே போன்றுதான் வேதனை என்ற உணர்வு ஆன பிற்பாடு உடலுக்குள் சிக்கலை ஊட்டி விடுகின்றது. காரணம் நாம் நுகரும் உணர்வு
தான் நம்மை இயக்குகின்றது… அந்த உணர்வுகள்
அதிகமாகின்றது.
இதை மாற்ற வேண்டும் அல்லவா…!
எலக்ட்ரிக் எலக்ட்ரானிக் என்று விஞ்ஞானம் தெளிவாகக் கொடுக்கின்றது…
நிரூபிக்கின்றது. ஆனால் மெய் ஞானிகள் காட்டியது…
1.பிறருடைய உணர்வுகளை வேகமாக
எடுக்கப்படும் பொழுது
2.நம் நல்ல உணர்வுகளை உடைத்து விட்டு உள்ளே செல்வது போல் ஆகிவிடுகின்றது.
ஆகையினால் நாம் எங்கிருந்தாலும் இந்த உணர்வின் அழுத்தம்… “அந்தக் கோபம் நமக்குள்
வராது தடுக்க என்ன செய்ய வேண்டும்…?”
மகரிஷிகளின் அருள் சக்திகளை அடிக்கடி நம் உடலுக்குள் சேர்த்து இணைக்கப் பழக வேண்டும். அப்போது மகரிஷிகள்
உணர்வு சார்ஜ் அதிகமாகிறது.
துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி நாங்கள் பெற
அருள்வாய் ஈஸ்வரா. என் கணவருக்கு அந்த அருள் சக்தி கிடைக்க வேண்டும். அவர் வேலை செய்யும்
இடங்களிலே பேரும் புகழும் பெற வேண்டும்… நல்ல முறையில் அவர்
வேலை செய்ய வேண்டும் என்று இந்த உணர்வை எடுத்து வளர்க்க
வேண்டும்.
1.துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்று
இந்தச் சார்ஜை அடிக்கடி ஏற்றிக் கொண்டே
வர வேண்டும்.
2.இது பாதுகாக்கும் சக்தியாக வரும்.
ஏனென்றால் தியானம் என்பது ஒவ்வொரு நொடியிலும் தீமைகள் புகாது தடுத்துப் பழகுவது தான். துருவ
நட்சத்திரத்தின் உணர்வை இப்படிச்
சேர்க்கும் பொழுது வாழ் நாளில் எல்லா அணுக்களுக்கும்
சேர்க்கின்றோம்.
புழுவிலிருந்து மனிதனாக வளர்ச்சி பெற்று வரும் போது தீமையிலிருந்து
விடுபட்டுத் தான் வந்திருக்கின்றோம். மனிதனாக வளர்ச்சி
பெற்ற நிலையில் தீமையெல்லாம் நீக்கிய துருவ நட்சத்திரத்தின் சக்தியை உங்களுக்குள் பதிவு செய்கின்றோம்.
அந்தச் சக்தி காற்றில் இருக்கின்றது… அதை எடுத்து பயன்படுத்தி அந்த உணர்வை வளர்த்துக்
கொண்டு வந்தோம் என்றால்
1.துருவ நட்சத்திரத்துடன் ஆயுள் மெம்பராக இணைகின்றோம்.
2.மெம்பர்கள் வாழ்க்கையில் தன்
குடும்பத்தில் இதைக் கடைப்பிடித்தாக வேண்டும்.
எத்தகைய தீமை வந்தாலும் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி கொண்டு அதை அடக்கி
பையனுக்கு அந்த அருள் சக்தி கிடைக்க வேண்டும் அருள் ஞானம்
கிடைக்க வேண்டும் என்று எண்ண வேண்டும்.
தொழிலிலே நஷ்டம் என்ற வார்த்தையை விடுத்துவிட
வேண்டும். துருவ நட்சத்திரத்தை
எண்ணினால் நல்ல சிந்தனை வரும்… எப்படிச் செயல்படுத்த வேண்டும்…? என்ற ஞானங்கள் வரும்.
அதற்குத் தக்க எண்ணங்கள் வரும்.
ஆனால் அடுத்தவரிடம் போய் என் தொழில்
நஷ்டமாக இருக்கிறது…! என்று சொன்னால்
அவர் ஒரு விதமாகச் சொல்வார் இன்னொருவர் இன்னொரு விதமாகச் சொல்வார்.
எல்லாவற்றையும் சேர்த்துக் குழப்பிவிட்டு “ஒன்றுமே தொழில் செய்ய முடியாது போல் இருக்கின்றது…” என்ற அந்த உணர்வு வந்து சோர்வடைந்து விடுவீர்கள். ஆக
நம்மையே நாம் தாழ்த்திக் கொள்கின்றோம்.
1.கணவன் மனைவி இருவரும் ஒன்று சேர்ந்து துருவ நட்சத்திரத்தின் சக்தியை எடுத்து
2.உயர்ந்த ஞானம் கிடைக்க வேண்டும்…
சிந்திக்கும் ஆற்றல் பெற வேண்டும்
3.தொழிலில் வீரிய சக்தி கிடைக்கும் அந்த
ஞானம் கிடைக்க வேண்டும் என்று
4.காலை துருவ தியானத்தில் எடுத்து இதைப் பாய்ச்சிப்
பாருங்கள்.
கணவர் மன வலிமை பெற வேண்டும்… அவருடைய
எண்ணங்கள் சீராக இருக்க வேண்டும்… அனைவரும் போற்றும் நிலை
பெற வேண்டும்… தொழில் செய்யும் இடங்களில் வாடிக்கையாளர்களும் மற்றவர்களும் நன்றாக இருக்க வேண்டும்… உயர்ந்த
பண்புகள் வளர வேண்டும் என்று மனைவி எண்ணிவிட்டால் “வேறு யாரிடம் யோசனை கேட்க வேண்டியதில்லை…”
நீங்கள் தொழிலுக்குச் செல்லுங்கள் எல்லாவற்றிலும் வெற்றி
கிடைக்கும்… நல்ல சரக்கைத்
தேர்ந்தெடுக்கும் சக்தி கிடைக்கும் வியாபாரம் பெருகும் என்று என்று மனைவி சொல்லி அனுப்ப வேண்டும்.
1.இத்தகைய நல்ல உணர்வுகளைக் கணவன்
மனைவிக்குள் உருவாக்க வேண்டும்.
2.அதைச் செயலாக்கிப் பார்க்க வேண்டும்… நாம் வாழ்ந்து காட்ட
வேண்டும்... மகிழ்ச்சியாக இருக்க முடியும்.
இதையே மற்றவர்களிடம் இதன் வழி செயல்படுத்துங்கள்
என்று சொல்ல வேண்டும்.
1.இந்த நல்ல உணர்வுகள் அங்கே விளைய
வேண்டும்… அவர்கள் குடும்பமும் நன்றாக இருக்க வேண்டும்.
2.அவர்கள் உடலில் விளையும் அந்த நல்ல மூச்சலைகள் இங்கே படர
வேண்டும்.
3.நம் வீட்டில் மட்டுமல்ல… நாம் சொல்லும் உணர்வுகளை நுகர்வோர் குடும்பத்திலும்
இது பரவி கஷ்டங்கள் அகல வேண்டும்.
4.நாம் வசிக்கும் தெருவிலும் நல்ல
உணர்வுகள் படர வேண்டும்… ஒன்றுபட்டு வாழும் நிலை வர
வேண்டும் என்று எண்ண வேண்டும்.
தியானத்தைக் கடைப்பிடிப்பவர்கள் இதைச் சீராக செயல்படுத்துங்கள்.