
வராகன்
1.இப்பொழுது உங்கள் எண்ணங்கள் மகரிஷிகள் காட்டிய மெய் உணர்வுகளைக் கூர்மையாகக் கவர
2.உங்களின் நினைவின் ஆற்றலை விண்ணை நோக்கிச் செலுத்துவதற்கே இந்த உபதேசம்.
வராக அவதாரம் என்றால் என்ன…?
அதாவது… தன் உடலிலிருந்து கெட்டதை நீக்கிவிட்டு நல்லதைப் பெற வேண்டுமென்ற ஞானத்தின் எண்ணங்களை அங்கே அது கவருகின்றது.
1.மூன்று உணர்வின் நிலைகள் ஆயுதங்களாக ஒவ்வொரு உடலிலும் இயங்கியதை (வெப்பம் காந்தம் விஷம்)
2.அதை உணர்த்த ஆயுத பூஜை என்று வைத்தது.
மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் எம்மைச் சாக்கடையில் உட்கார வைத்துத் தான் உபதேசித்தார். இப்பொழுது, நீங்கள் சாக்கடையில் உட்காரவில்லை. நல்ல இடத்தில் மகிழ்ச்சியான இடத்தில் உட்கார்ந்து இருக்கின்றீர்கள்.
ஏனென்றால் அங்கே உட்கார்ந்திருந்த நிலையில்… எம்மை டீ காபி வாங்கி வரச் சொல்லி, சாக்கடையில் இருந்த கழிவைப் போட்டு “நீ குடி…!” என்கிறார் குருநாதர்.
“அய்யய்ய…” என்று யாம் மறுக்கின்றோம்.
கூர்மை அவதாரம் வராக அவதாரம் எவ்வாறு இருக்கும்…?
ஆனால் இந்தப் பன்றி என்ன செய்கின்றது…? நாற்றத்தைப் பிளந்து நல்ல உணர்வை எடுத்தது.
1.அது நாற்றத்தை எண்ணவில்லை… நீ நாற்றத்தை எண்ணுகின்றாய்.
2.அடுத்தவன் என்ன சொல்கின்றான்…? என்று எண்ணுகின்றாய்.
இப்போது இதைச் சேர்த்துக் கொள்கிறாயா…? அல்லது அதைச் சேர்த்துக் கொள்கிறாயா…?
2.நாற்றத்தை நீக்க வேண்டும் என்று எண்ணுகின்றாயா…?
நாற்றம் என்கிற பொழுது நாற்றத்தை ஈர்த்துப் பார்க்கச் செய்கின்றது. அதை (என் கண்கள்) இழுத்தவுடனே… நாற்றம் என்றவுடனே அதிகமாகி விடுகின்றது. அந்த நாற்றம் உடலினுள்ளே சென்றவுடன் விளைந்து விடுகின்றது.
“நீ எதை எண்ணுகின்றாயோ அதுவாகின்றாய்…!” நாற்றத்தை நீக்கி நல்ல பொருளை எடுக்க வேண்டும் என்று எண்ணினால் நீ அதுவாகிறாய். இதைத்தான் கண்ணன் கீதையிலே சொன்னது.
அதைப் போல, என்னைக் கேவலமாகப் பேசுவார்களோ…? என்று மற்றவர்களைப் பார்க்கின்றேன், நாற்றத்தில் எவ்வாறு இருக்கும்…? என்று எம்மைச் சாக்கடையில் வைத்துத்தான் நமது குருநாதர் உபதேசம் கொடுக்கின்றார்.
சாக்கடை அருகில் உட்கார்ந்தால் நீங்கள் என்ன சொல்வீர்கள்…? “பாரு… எல்லாம் காசு ஆசை பிடித்துப் போய், சாமியாரிடம் வித்தையைக் கற்றுக் கொள்வதற்காக வேண்டி உட்கார்ந்துள்ளார் என்பீர்கள்.
இப்பொழுது என் கூர்மை என்ன செய்கின்றது…? அவர்கள் என்ன நினைப்பார்கள்…? இவர்கள் என்ன நினைப்பார்கள்…? என்று அதை வலுவாக எடுக்கும் பொழுது… இந்த நாற்றத்தை எனக்குள் சேர்த்து விடுகின்றது.
வராகன் என்ன செய்கின்றது…? என்று காட்ட இவ்வாறு, பல நிலைகளில் என்னைச் சாக்கடைக்கு அருகில் அல்லல்பட வைத்தார் குருநாதர்.
கூர்மையாக நாற்றத்தைப் பார்க்கின்றாய்.. அதனின் உணர்வு வலுவாகச் சுவாசித்தால் வராக அவதாரம். அதனுடைய வலிமை கொண்டு “நாற்றம்… நாற்றம்…” என்று நீ போகின்றாய்.
அவ்வாறு சென்று கூர்மை அவதாரத்திற்கும் வராக அவதாரத்திற்கும் இரண்டுக்கும் இணை சேர்த்து அதிலே நீ எதைக் கூர்மையாக எண்ணுகின்றாயோ அதனின் உணர்வு உனக்குள் சென்றவுடன்
1.உன் ஈசனான உயிர் அதை வலுவாக்கி அதனின் நிலைகள் கொண்டு
நீ எதை நினைக்கின்றாயோ அதுவாகின்றாய். இந்தச் சாக்கடையை விட்டு விலகிச் செல்ல வேண்டும் என்று எண்ணுகின்றாய். ஆனால் எடுத்துக் கொண்ட உணர்வே சாக்கடையாக சுவாசத்தின் வழி உள்ளே வருகின்றது.
அப்பொழுது என்னுடைய பார்வை என்ன செய்கின்றது…? இந்தச் சாக்கடையையும் பார்க்கின்றேன்… ஆள்களையும் நினைக்கின்றேன். இவரிடம் வசமாகச் சிக்கிக் கொண்டேன் என்று நினைக்கின்றேன். இந்தக் காபியை எவ்வாறு குடிப்பது…?? என்றும் என்ணுகின்றேன்.
கீதையிலே, நீ எதை எண்ணுகின்றாயோ அதுவாகின்றாய் என்று சொல்லப்பட்டது. அவர் சாக்கடையைக் குடி என்கிறார். அதை எண்ணியவுடனே எவ்வாறு குடிப்பது…? என்று விலக்கிச் செல்கின்றது.
இந்த எண்ணத்தால் அவ்வாறே திகைத்துக் கொண்டு இருக்கின்றேன். காபியில் இதை அள்ளிப் போட்டார். குடிக்க முடியவில்லை. எல்லோரும் நைனாவிற்குப் (சாமிகளுக்கு) பைத்தியம் பிடித்து விட்டது என்று சொல்கின்றார்கள். ரோட்டில் போகின்றவர்கள் பேசிக் கொண்டு இருக்கின்றார்கள். இதையும் கேட்கின்றேன்.
அப்பொழுது நான் நகர்ந்து செல்கின்றேன். போகப் போக, இந்தப் பக்கம் போகலாமா…? அந்தப் பக்கம் போகலாமா…? என்று இந்த மனம் அல்லல்பட்டுக் கொண்டு இருக்கின்றது.
“சரி… நீ போய் டபாரா செட்டைக் கொடுத்துவிட்டு வா…” என்றார் குருதேவர்.
கடையில் கொண்டு போய்க் கொடுத்தால்… வாங்கவா செய்வார்கள்…? நீ உன் வீட்டிலேயே வைத்துக் கொள் என்றார்கள். டபரா செட்டிற்குக் காசு கொடுத்தேன். வாங்க மாட்டேன் என்றார்கள். இவ்வாறாகி விட்டது.
நீ வரும் பொழுது, கொஞ்சம் முறுக்கு, கடலைப் பருப்பு, பொட்டுக் கடலை வாங்கிவா என்றார் குருநாதர். மூன்றையும் வாங்கிக் கொண்டு வந்தேன்.
அங்கிருந்து பன்றி வருகின்றது வந்தவுடனே ஒவ்வொன்றாக மோந்து பார்க்கின்றது. பொட்டுக் கடலை முன்னால் இருக்கின்றது. அதை விட்டுவிடுகின்றது.
அடுத்து… முருக்கு வேகமாக எணணெய் வாசனை வருகின்றது. நாற்றத்திற்குள் இதைக் கண்டுபிடித்து அந்த முறுக்கை எடுக்கின்றது.
அடுத்து, எண்ணெய் வாசனை உள்ள கடலைப் பருப்பைச் சாப்பிடுகின்றது. அடுத்துப் பொட்டுக்கடலை இருக்கின்றது. அதை விட்டுவிட்டது. மாற்றி அந்த வாசனையைத்தான் நுகர்ந்து எடுக்கின்றது.
சாக்கடைக்குள் பார்த்தாயா…? என்றார் குருநாதர். அது நாற்றத்தை எடுக்கவில்லை… நீ எதை எடுக்கின்றாய்…! என்றார்.
உன் உடலிலிருந்து, வரக்கூடிய ஆறாவது அறிவு, இதைப் பிரிக்கக் கூடிய சக்தியாக இருக்கின்றது நீ ஏன் இதைப் பிரிக்க முடியவில்லை…? என்று கேட்கின்றார் குருநாதர்.
1.நாற்றமான உடலில் கலந்து, நாற்றத்தை நீக்கிடும் உணர்வுகளை வளர்த்ததோ
2.அதே போல பல சரீரங்களைத் தனக்குள் எடுத்து இதே உயிர்தான், நம்மை மனிதனாக ஆக்கியிருக்கின்றது.
1.நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் சாக்கடையான காற்று மண்டலத்திலிருந்து,
2.நல்லவற்றை எடுக்கக் கற்றுக் கொடுத்தார் நமது குருநாதர் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர்.
1.அதை நீக்க வேண்டும் என்ற எண்ணத்தில் இருக்கும் பொழுது
2.கழிவுப் பொருளின் மணம் அவர்களுக்கு வருவதில்லை.
2.நாற்றத்தைக் கண்டு வெறுப்பின் நிலையில் எண்ணங்கள் உருவாகும் பொழுது யாரைப் பார்த்தாலும், அசிங்கமாகத் தெரியும்.
1.நாற்றத்தைப் பிடிக்கவில்லை என்று நாற்றத்தைத்தான் நுகருகின்றார்கள்.
2.இதுவெல்லாம் நாம் எடுத்துக்கொண்ட உணர்வின் இயக்கங்கள்,
ஆகவே… எதைக் கூர்மையாக எண்ணுகின்றோமோ அதனின் வலுக் கொண்டு அதனின் வலிமையாக அடுத்த உருவை நம் உயிர் உருவாக்குகின்றது என்ற நிலையை அங்கே காட்டுகின்றார் குருதேவர்.
