ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

December 12, 2025

நாம் ரிஷியாக வேண்டும் என்றால் முதலில் “நம் முன்னோரை ரிஷியாக்க வேண்டும்”

நாம் ரிஷியாக வேண்டும் என்றால் முதலில் “நம் முன்னோரை ரிஷியாக்க வேண்டும்”


நாம் சிறு வயதினராக இருக்கும் பொழுது நமது முன்னோர்கள் நாம் அனைத்துத் துறையிலும் சிறந்து இருக்க வேண்டும் என எண்ணி நமக்குப் பல வகைகளிலும் பாசத்தைக் காட்டி நல் அறிவினை ஊட்டி வளர்க்கின்றனர்.
 
ஆனால் நமது முன்னோர்கள் நமக்கு எடுத்துச் சொல்லும் உயர்ந்த சிறந்த அறிவுரைகளை ஒதுக்கிவிட்டு மாற்றுக் கருத்துக்களில் நாட்டம் செலுத்தி அதன் வழி செல்லும் பொழுது நமது முன்னோர்கள் வேதனை அடைகின்றனர்…”
 
1.“நாம் சொன்னபடி செய்யவில்லைதவறான பாதையில் செல்லுகின்றானேஉருப்படுவானா…?” என்று
2.கோபமும் வேதனையும் கலந்த சொற்கள் அவர்களிடமிருந்து வெளிப்படுகின்றன.
 
நாம் எல்லா நிலைகளிலும் உயர்ந்து சிறப்புற வேண்டும் என்ற அவர்களுடைய பாச உணர்வுகளும் நம்மிடத்தில் பதிவாகின்றன.
 
அதே சமயத்தில் அவர்கள் சொல்லை மதிக்காது செயல்பட்ட நிலைகளில் அவர்கள் வெளிப்படுத்திய கோப உணர்வுகளும் நம்மிடத்தில் பதிவாகின்றன.
 
ஒரு செடி எதிர்மறையான சூழ்நிலையைச் சந்திக்கின்ற பொழுது தன்னுடைய வளர்ச்சியை இழக்கின்றது.
 
அது போன்றே நமது முன்னோர்கள் நம் மீது பற்று பாசத்துடன் இருந்தாலும் அவர்களுடைய அறிவுரைகளை மறுத்து இயங்குகின்ற பொழுது அவர்கள் கோப உணர்வு கொண்டு நம்மைப் பார்க்கும் பொழுதெல்லாம் சலிப்பு வேதனை வெறுப்பு கோபம் ஆத்திரம் போன்ற உணர்வுகள் அவர்களிடம் உருவாகின்றன.
 
இவ்வாறு நம் மீது பாசமாக இருக்கும் அவர்களின் உடலில்
1.பாசம் கோபம் ஆத்திரம் என உணர்வுகள் மாறி மாறி இயங்கி
2.உடலில் சீரற்ற நிலைகளை உருவாக்கி நோய்களை அவர்களிடத்தில் உண்டாக்கி விடுகின்றது.
 
மேலும் நம்மைப் பார்க்கும் பொழுதெல்லாம் கலக்கம் வேதனை சஞ்சலம் என்ற உணர்வுகளை அவர்கள் சுவாசிக்க நேர்ந்து
1.அவர்களுடைய சரீரத்தில் இத்தகைய எண்ண அலைகளே அதிகமாக விளைகின்றது.
2.நல்ல உணர்வுகள் விளைவதே இல்லை.
 
உதாரணமாக நல்ல வயலைப் பண்படுத்தி நல்ல விதைகளை ஊன்றினாலும் அதனிடையே களைகள் உருவாகி ஓங்கி வளர்வது போன்றுதான்
1.பாச உணர்வுகள் உள்ள இடத்தில் சிறிதளவு வெறுப்பிற்கு இடமளிக்கும் பொழுது
2.அங்கே வெறுப்பான உணர்வுகளே அதிகமாகிப் பாச உணர்வுகளை மங்கச் செய்துவிடுகின்றன.
 
இவ்வாறு நம் குடும்ப வாழ்க்கையில் வேதனையுறச் செய்யும் சந்தர்ப்பங்களை அறிந்து அவற்றை விலக்கப் பழகிக் கொள்ள வேண்டும்.
1.அருள் ஞானிகளின் சக்தி நாங்கள் பெற வேண்டும் ஈஸ்வரா
2.எங்களை அறியாது சேர்ந்த இருள் நீங்க வேண்டும் ஈஸ்வரா
3.நாங்கள் பார்ப்பவரெல்லாம் நலம் பெற வேண்டும் ஈஸ்வரா என்று நாம் எண்ணி
4.இந்த உணர்வின் சக்தியை நம்மிடத்தில் வளர்க்க வேண்டும். 
 
மகரிஷிகளின் அருள் சக்தியால் எங்கள் அன்னை தந்தை காட்டிய நல்வழி அனைத்தையும் நாங்கள் செயலாக்கிஅவர்கள் எண்ணிய நல் உணர்வுகள் எங்களுக்குள் விளைந்துஆக்கமான எண்ணங்கள் எங்களுக்குள் விளைந்து
1.எங்கள் சொல்லிலும் செயலிலும் புனிதம் பெறும் தன்மையாகவும்
2.அவர்கள் காண்பித்த நல்வழியின் நிலைகள் எங்களுக்குள் ஓங்கி  வளர வேண்டுமென நாம் தியானிக்க வேண்டும்.
 
எங்கள் குலதெய்வமான மூதாதையர்களின் உயிரான்மாக்கள் சப்தரிஷி மண்டலத்துடன் இணைந்து என்றும் நிலையான ஒளிச்சரீரம் பெற வேண்டும் என்றும் சப்தரிஷிகளின் அருள் சக்தி எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் என்று நமது சரீரத்தில் உயிரில் இந்த உணர்வுகளைச் சேர்க்க வேண்டும்.
 
 நீ எதை நினைக்கின்றாயோ அதுவாகின்றாய்…”  என்ற கீதையின் தத்துவப்படி நம் முன்னோர்கள் எதைப் பெற வேண்டும் என்று ஏங்குகின்றோமோ அதனை நாமும் பெறுகின்றோம். 
 
நம்முடைய முன்னோர்கள் சப்தரிஷி மண்டலத்தின் ஒளிவட்டத்தில் கலந்து  நிலையான ஒளிச்சரீரம் பெற வேண்டும்…”  என்று உந்தித் தள்ளும்  பொழுது
1.நமது முன்னோர்களும் ஒளிச்சரீரம் பெறுகின்றனர்.
2.அதனின் பயனாக நாமும் அடுத்து அங்கே செல்ல ஏதுவாகும்.
 
நம் உணர்வின் சக்தியை விண்ணை நோக்கிச் செலுத்தினோமானால்
1.ம் முன்னோர்களின் உயிரான்மாக்களை விண் செலுத்த உதவிநம்முடைய நினைவுகள் துரித நிலையில் இயங்கி
2.மகா ஞானிகளின் உணர்வைத் துரித நிலையில் நாம் ஈர்க்கவும்
3.நம்மிடத்தில் வருகின்ற தீமைகளை அந்த விநாடியே அகற்றவும்
4.மெய்ஞானிகளின் உணர்வை நம்மிடத்தில் வளர்க்கவும்
5.அந்த உணர்வுகள் ஒளியின் சரீரமாக வளரவும் உதவி செய்கின்றன.
 
மேலும் ஒளி கண்டு இருள் விலகுவது போன்றுஇருளுக்குள் இருக்கக்கூடிய பொருள் தெரிவது போன்று நமது வாழ்வில் பொருளறிந்து செயல்படும் திறனைப் பெறுகின்றோம்…”
 
சப்தரிஷி என்பவர் யார்…? 
 
ஆறாவது அறிவின் துணை கொண்டு தீயவுணர்வுகளை மாய்த்து நல் உணர்வுகளை வளர்க்கச் செய்யும் தன்மை வாய்ந்த ஏழாவது அறிவினைத் தன்னிடத்தில் பெற்றவர்களைச் சப்தரிஷி என்று நாம் அறிந்துணர வேண்டும்.
 
அத்தகைய தன்மை வாய்ந்த சப்தரிஷிகளின் சிறப்பை நம் முன்னோர்கள் பெற வேண்டும் என்று நாம் தியானிக்கும் பொழுது நாமும் அத்தகைய ரிஷியின் தன்மையைப் பெறுகின்றோம்.
 
சிறிது காலத்திற்காவது நமது முன்னோர்களை எண்ணித் தியானித்திடும் பொழுது
1.அவர்கள் சப்தரிஷித் தன்மை பெற்று விடுகின்றனர்.
2.அதைத் தொடர்ந்து நீங்களும் ரிஷித்தன்மையைப் பெறுகின்றீர்கள்.
3.நீங்கள் ரிஷியாக வேண்டும் என்றால் முதலில் உங்கள் முன்னோரை ரிஷியாக்க வேண்டும்என்பதை உணர வேண்டும்.
 
விஞ்ஞானி ஒரு இராக்கெட் மூலம் செயற்கைக் கோளை விண்வெளிக்கு அனுப்புகின்றார். பின் அந்தச் செயற்கைக் கோளின் துணைக் கொண்டு விண்ணின் நிலையைப் பூமியில் பெறுகிறார்.
 
அது போன்று நாம் நம்முடன் வாழ்ந்து வளர்ந்து உடலை விட்டுப் பிரிந்து சென்ற முன்னோர்களின் உயிரான்மாக்களை நமது எண்ணத்தின் வலுக்கொண்டு விண்ணிற்கு அனுப்பும் பொழுது அந்த ஆன்மாக்கள் பெறும் ஆற்றலை நாம் பெற முடியும்.
 
அதே சமயத்தில்…
1.நம்முடைய முன்னோர்களின் நினைவு நாட்களைக் கொண்டாடி விட்டோம்.
2.அவர்களுடைய உயிராத்மாக்களைச் சப்தரிஷி மண்டலத்துடன் இணைய வேண்டும் என்று தியானித்து விட்டோம்.
3.அதன் மூலம் அவர்களுக்குச் செய்ய வேண்டிய கடமைகளை நிறைவேற்றி விட்டோம் என்று கருதுவோமேயானால்
4.அதன் பிறகு நாம் வளர்வதே இல்லை.
 
பதிலாக
1.நம்மிடத்தில் முன்னோர்களின் உயிராத்மாக்களை விண் செலுத்திய நினைவுகளும்
2.அவர்கள் சப்தரிஷி மண்டலங்களுடன் இணைய வேண்டும்  என்ற ஏக்கமும்
3.நம்மிடம் என்றுமே… இருந்து கொண்டே இருக்க வேண்டும்…!

விஷம் முக்கியத்துவம் வாய்ந்தது…!

விஷம் முக்கியத்துவம் வாய்ந்தது…!


அன்றாட வாழ்க்கையில் நாம் எப்படித்தான் இருந்தாலும் பிறருடைய துன்பங்களைப் பார்க்கவோ கேட்கவோ நேர்கின்றது. சுவாசத்தின் வழி அந்த உணர்வுகள் நமக்குள் வந்து விடுகிறது. அதை நீக்குவது யார்…?
 
1.எதிலே எடுத்துக் கொண்டாலும் விஷம்…” எல்லாவற்றிலுமே ஊடுருவி இயக்கும்.
2.நல்ல குணங்களாக இருந்தாலும் ராமா லட்சுமணா என்று தான் ஞானிகள் காட்டியுள்ளார்கள்.
3.லட்சுமணா…! என்றால் விஷத்தின் இயக்கச் சக்தி.
 
மனித உடலுக்குள் விஷத்தை நீக்கி விட்டு இந்த உணர்வின் சத்தான நிலைகள் சீதா ராமனாக நல்ல குணங்கள் இங்கே படைத்திருந்தாலும் அதே குணத்தைச் சுவாசிக்கும் பொழுது காற்றிற்குள் இருக்கக்கூடிய
1.அதாவது இந்த விஷம் கலந்திருந்தால்தான்
2.நாம் சுவாசித்து அந்த உணர்ச்சிகளைத் தூண்டும் நிலையாக வருகின்றது.
 
வேதனை என்ற உணர்வு லட்சுமணா என்ற இயக்கமாக வருகின்றது. இதைப் போல நமக்குள் அது இருக்கின்றது.
 
பேரண்டம் பெரும் நிலைகள் கொண்டு உருவானாலும்
1.இந்த அசுர சக்திகளால் தான் மற்றொன்றை இயக்க முடிகிறது.
2.பூமிக்குள் இருக்கக்கூடிய விஷத்தினுடைய ஆற்றல் தான் இந்தப் பூமியையே சுழலச் செய்கின்றது.
 
அதே போல சூரியன் இவ்வளவு பிரகாசமாக ஆக வேண்டுமென்றால்
1.விஷத்தின் தாக்குதல் கொண்டு தான் சூரியன் வேகமாக இயங்கி
2.ஒளிப் பிளம்பாக மற்றொன்றை ஊடுருவிச் செல்லும்…” அதாவது அந்த வேகம் துடித்து எழுகின்றது.
3.ஆகவே இந்த விஷம் முக்கியத்துவம் வாய்ந்தது…!
 
அதற்குத்தான் அன்று ஒரு சிறு கதையை எழுதிக் காட்டினார்கள் அசுரன் என்பவன் ஈரேழு பதினாலு லோகத்திலும் எனக்கு யாரிடத்திலும் இறப்பு வரக்கூடாது…” என்று வரம் கேட்கின்றார்.
 
ஈரேழு பதினாலு லோகம் என்றால் சூரியனிலிருந்து வரக்கூடிய ஆற்றல் ஏழு… மனித உடலுக்குள் ஏற்படும் உணர்வின் நிலைகள் ஏழு.
 
ஈரேழு பதினாலு லோகம் சூரியனால் உற்பத்தியாகும் எந்த நிலைகளிலிருந்தும் எனக்கு எந்த இடைஞ்சலும் வரக்கூடாது. மனிதனுக்குள் வரக்கூடிய விஷத்தின் தன்மை எதுவும் என்னை ழித்துவிடக் கூடாது என்று வரத்தைக் கேட்டு வாங்கிக் கொள்கின்றான்.
 
விஷ்ணுவும் சரி என்று கொடுத்து விடுகின்றார்.
 
மிருகத்தாலும் மனிதனாலும் பரந்த வெளியிலும் பேரண்டத்தில் எது இருந்தாலும் இந்த ஈரேழு பதினாலு லோகத்தில் எங்கேயுமே எனக்கு இறப்பு வரக்கூடாது என்ற வரத்தை வாங்குகிறான்.
 
1.நாம் சுவாசிக்கும் சுவாசத்திற்குள்ளும் இந்த அரக்க குணம் உண்டு.
2.அந்த உணர்வின் வேகம் இல்லை என்றால் துடிப்பு இல்லை.
3.எந்த இடத்திலும் விஷத்தின் தன்மை படரவில்லை என்றால் இயக்க முடியாது.
4.அப்படிப்பட்ட ஆட்சி புரியக்கூடிய நிலைகள் தான் அது.
 
நரசிம்ம அவதாரம்… என்று வாசல்படியில் வைத்து அசுரனைக் கொல்வதாகக் காட்டுகின்றார்கள். சிங்க முகத்தையும் மனித உடலையும் வைத்து நரசிம்ம அவதாரம் என்று காட்டுகின்றார்கள்.
 
உதாரணமாக ஒருவர் கெடுதல் செய்கின்றனர்… என்னைத் திட்டுகின்றார். அதை நாம் சுவாசித்தால் என்ன செய்கிறது…?
 
என் உடலுக்குள் அந்த அசுர சக்திகள் சேர்ந்து… அந்த வேகத்தைக் கூட்டி அவருடைய கெட்ட குணத்தை எனக்குள் உண்டாக்கி.. என்னை அதன் வழிக்கு இழுத்துச் செல்கிறது.
 
இதைத் தடுப்பதற்கு
1.ஈஸ்வரா என்று உயிர் வழியாக மெய் உணர்வுகளைச் சேர்க்கப்படும் பொழுது அது வாசல்படி ஆகிறது.
2.முன்னாடி இருக்கும் அந்தக் கெட்ட சக்தி உள்ளே புகாதபடி தடுக்கும் ஆற்றல் வருகிறது.
 
இதைத்தான் நரசிம்ம அவதாரம் என்பது.
 
வராகன் கெட்டதை எண்ணாது நல்லதை எப்படி எடுத்துக் கொண்டதோ அதைப் போல் அந்த மகரிஷிகளின் அருள் சக்தி கொண்டு கெட்டதை நீக்கிவிட்டு நல்லதை உருவாக்க வேண்டும்.
 
கெட்டது தனக்குள் வராதபடி எவர் ஒருவர் இப்படித் தடுக்கின்றார்களோ அது நரசிம்ம அவதாரம். கேட்டது அழிக்கப்பட வேண்டும் என்று வாசல்படியில் வைத்து அழித்து விடுகின்றார்கள்.
 
பிறர் யார் எப்படித் திட்டினாலும் கேவலமாகப் பேசினாலும் அந்த உணர்வு அப்படியே இயக்கினால் “இனி என்ன வாழ்க்கை…!” என்று நம்மை அது அழித்து விடுகிறது. அந்த அசுரனிடம் சிக்கிவிடுகின்றோம்.
 
அதே சமயத்தில் திட்டுகிறார் என்று கோபம் நமக்கு வந்தால் இரு நான் உன்னைப் பார்க்கிறேன்…!” என்று அவரை அங்கே அழிக்கச் செல்வோம். ஆனால்ழிக்க வேண்டும் என்ற உணர்வை எடுத்தால் நல்ல குணங்களை அழித்து உடலில் நோயாக மாற்றுகின்றது.
 
ஆகவே…
1.அந்த அசுர சக்தி இப்படித் தான் எல்லா வகைகளிலும் ஊடுருவும் என்று
2.அவன் எங்கேயும் எனக்கு சாவு வரக்கூடாது என்ற வரத்தை வாங்கி அந்த அசுர சக்தி மற்றதைக் கொல்வதாகச் சாஸ்திரம் காட்டுகின்றது.
 
ஆனால்
1.நம் கண்ணின் நினைவைப் புருவ மத்தியில் வைத்து
2.அந்தத் துருவ நட்சத்திரத்தினை எண்ணி அந்தச் சுவாசத்தை எடுக்கப்படும் பொழுது அசுர சக்திகள் செயலிழக்கப்படுகின்றது.
 
நமக்குள் இருக்கக்கூடிய நல்ல குணங்களைக் காப்பதற்குத் தான் நரசிம்ம அவதாரத்தை அன்று காட்டினார்கள் ஞானிகள்.