
மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் விண் சென்ற வழி
துருவ மகரிஷி எவ்வாறு… எதன்
வழியில் விண்ணுலகம் சென்றார்…? என்பதை “நமது குருநாதர் மாமகரிஷி ஈஸ்வரப்பட்டாய குருதேவர்…” அவருள் அறியும் ஆற்றல் பெற்றபின் அந்த வழியினை… “விண் செல்லும் மார்க்கங்களை…”
எமக்கு உபதேசித்தார்.
அவர் உடலை விட்டுப் பிரிந்த பின்… நான் அவரை உற்றுப் பார்க்கப்படும்போது
1.சப்தரிஷி மண்டலத்துடன் அவர் இணையும் ஆற்றலும்
2.அவர் உடலிலிருந்து… இந்த உடல் பெற்ற நிலையை உடல் பெறா நிலைகள் கரைவதையும் காட்டுகின்றார்
இவர் தற்காலத்தில் விண் சென்றவர் தான். அதாவது 1970 என்று எண்ணுகின்றேன். ஆனால் சரியாக நினைவில் இல்லை.
1970ல் உடலை விட்டுச் சென்றபின் அவர் உயிரான்மா எவ்வாறு விண்
செல்கிறது…? என்றும்
1.விண்
செல்வதற்கு… அவரை விண் செலுத்துவதற்கு என்ன உபாயங்கள்
செய்ய வேண்டும்…? என்றும்
2.அவரைப் பின் தொடர்ந்து செல்லும் நிலையினை… எனக்குள் எப்படிப் பெருக்க வேண்டும்…? என்றும்
3.அவர் காட்டிய அருள் வழிப்படித் தான்
அதைச் செய்தது.
பின் சப்தரிஷி மண்டலங்களிலிருந்து சக்திகளைப் பெறும் தன்மையையும் எமக்கு உபதேசித்தருளினார்.
அன்று அகஸ்தியன் துருவனாகும்
போது பெற்ற “விண்ணுலக ஆற்றல்கள்…” அவனிடமிருந்து வெளிப்பட்ட உணர்வுகள்
இங்கே உண்டு.
அதை எப்படிப் பெற
வேண்டும்…? என்று குருநாதர் கூறிய அந்த
அருள் வழிப்படி அதை நுகர்ந்தறிந்து… எமக்குள் அது விளையச் செய்து… அதன் உணர்வின் எண்ண அலைகளை உங்களுக்குள்ளும் இப்பொழுது பதியச் செய்கின்றேன்.
உங்கள் செவிப்புலனறிவில் அது ஈர்க்கப்பட்டு… அதன் துணையால்
1.உங்களுக்கும் அந்த
விண்ணுலக ஆற்றலைப் பெறும் தகுதியை ஏற்படுத்துவது தான் இந்த நிலை.
2.குருநாதர் விண் சென்ற உணர்வுகள் தான் இப்பொழுது உங்களுக்குள் நுகரும் இந்த ஆற்றல்
அனைத்தும்…!