ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

December 17, 2025

தண்டாயுதபாணி – கோவணாண்டியாகக் காட்டியதன் உண்மைத் தத்துவம்

தண்டாயுதபாணி – கோவணாண்டியாகக் காட்டியதன் உண்மைத் தத்துவம்


தண்டபாணி என்கிற போது இந்த உடலின் வாழ்க்கையின் நிலைகளை தண்டாயுதபாணி என்று சிலையில் "கோவணாண்டியாகக் காட்டினார்கள்"
 
அதாவது மனித வாழ்க்கையில் வரும் ஆசை கோபம் வெறுப்பு இத்தகைய உணர்வின் தன்மை தனக்குள் எடுத்து இந்த உடலுக்குள் கொடுக்கப்படும் பொழுது இரு… நான் உன்னைப் பார்க்கிறேன்…!” என்ற நிலை ஏற்படுகின்றது.
 
இந்த மாதிரி இன்னொரு உடலுக்குள் முற்றிடும் உணர்வை நம் உடலுக்குள் சுவாசிக்கக் கூடாது.
1.அதாவது, நமக்குள் எடுக்க வேண்டிய ஆயுதம் – “நிராயுதம்…”
2.இந்த உடலுக்குள் உண்டான எண்ணங்களை…” (உடல் பெறும் உணர்வுகள்) எடுக்கக் கூடாது என்பதற்குத்தான்
3.தண்டாயுதபாணியாக நிராயுதபாணியாக வைத்துள்ளார்கள்.
4.துருவ நட்சத்திரத்திலிருந்து வரும் பேரருள் பேரொளியை எடுத்துச் சுவாசித்து நமக்குள் ஊன்றுகோலாக…” வைக்க வேண்டும்.
5.அதன் வழியில் நமக்குள் வரும் தீமைகளைத் தடுத்துக் கொள்ள வேண்டும்
6.அதற்காகத் தான் ப்படி உருவகப்படுத்திக் காட்டியுள்ளார்கள் ஞானிகள்.
 
குறிப்பு:-
ஞானிகள் இப்படித் தெளிவாகக் காட்டியிருந்தாலும்…
1."அவன் ஆண்டி..! நீ பார்க்காதே.." கோவணத்தோடு பார்த்தால் உனக்குச் சோறு கிடைக்காது…!
2.ஆண்டி வேஷம் போட்டிருக்கும் பொழுது பார்த்தால் தொழில் போய்விடும் என்று திசை திருப்பி விட்டார்கள்.
 
அதற்காக வேண்டி "இராஜவேஷம் எப்பொழுதோ…" அப்பொழுது மலைக்குப் போவார்கள். இது மாதிரியெல்லாம் நம்மை அறியாமலே "நமக்குள் ஆசையை வளர்த்துள்ளார்கள்..."

மலை மீது ஆலயங்களை ஞானிகள் ஏன் வைத்தார்கள்…?

மலை மீது ஆலயங்களை ஞானிகள் ஏன் வைத்தார்கள்…?


போகன் கண்டறிந்த தத்துவங்களை நாம் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டும்பழனியில்… மலை மீது நாம் ஏறுகின்றோம். ஏறும் போது மேல் நோக்கி எப்படி எண்ண வேண்டும் என்ற நிலையை சற்று நாம் தெரிந்து கொள்ள வேண்டும்
 
1.படியின் கீழ் இருந்து நாம் மேல் நோக்கிச் செல்லும் நிலையில்
2.அந்த போக மாமகரிஷியை எண்ணி அவன் அருளைப் பெற வேண்டும் என்ற க்க உணர்வுகள் மேல் நோக்கி வருகின்றது…”
 
கீழிருந்து மேலே முருகனைப் பார்க்கின்றோம். ஏனென்றால் குன்று தோறும் அமர்ந்திருக்கும் முருகா…! என்று நாம் பாடலைப் பாடுகின்றோம் உயரமான குன்றில் சிலையை வைத்த நிலையில்… அவன் அருளைப் பெற வேண்டும் என்று ஏங்குகிறோம்.
1.சூரியனின் காந்த சக்தி ஞானிகள் உணர்வைப் புவியில் (தரையில்) படரச் செய்யாது மேலே மிதக்கச் செய்கின்றது.
2.நாம் மேல் நோக்கி எண்ணும் பொழுது அந்த மலை முகட்டில் இருக்கக்கூடிய காந்தப்புலறிவு
3.நம் உயிருடன் ஒன்றி இயக்கத் தொடங்கி விடுகின்றது.
4.இந்த உணர்வுகள் மூன்றும் சேர்த்து அதைப் பெற வேண்டும் என்று எண்ணும் பொழுது
5.தன்னிச்சையாகவே அந்த உணர்வை (நாம் எதை எண்ணுகின்றோமோ) உயிரின் வழி உள்ளுக்கே நுகரும் தன்மை வருகின்றது.
 
சாதாரண மனிதனும் எளிதில் அந்த உயர்ந்த சக்திகளைப் பெறும்படி வைத்துள்ளார்கள்.
 
நினைவை நாம் மேல் நோக்கி அந்த அருள் சக்தி பெற வேண்டும் என்று கூட்டப்படும் பொழுது அந்த வலிமை பெற்ற உணர்வுகள் நமக்குள் இணைந்து நம் உடலில் நோய் இருந்தாலும் அதை மறக்கச் செய்கின்றது…”
 
மலை மீது ஏறும் போது இந்த உணர்வின் வலிமை எல்லாம் அதற்குள் சென்று விடுகின்றது. நினைவின் ஆற்றலை விண்ணை நோக்கி அதனின் உணர்வைத் தனக்குள் சிறுகச் சிறுகச் சேர்க்கும் போது
1.உடலில் இருக்கும் எதிர்ப்புணர்வுகள்… அதாவது பகைமை கொண்ட உணர்வின் அணுக்களுக்கு
2.ஞானிகளின் உணர்வை ஈர்க்கப்படும் பொழுது பகைமை உணர்வுகள் தணிகின்றது.
 
அந்த அணுக்களின் வீரிய சக்தி ஒடுக்கப்படும் பொழுது இங்கே வலுக்கூட்டி மலை மீது ஏறும் தன்மை வருகின்றது.
 
சில பேர் தரையில் கூட நடக்க முடியாமல் இருப்பார்கள்ஆனால் மலை மீது போகும் பொழுது முருகா…! என்று அவன் காட்டிய நிலைகள் கொண்டு விண்ணை நோக்கி ஏகும் பொழுது அந்த உணர்வுகள் உள்ளே புகுந்த பின் நான்கு அடி எடுத்து வைக்கும் பொழுது ஒரு மாதிரியாக இருக்கும்.
 
இந்த உணர்வுகள் உள்ளே சென்ற பின் மனித உடலில் பகைமை ஊட்டக்கூடிய உணர்வுகளைத் தணியச் செய்கின்றது. பின் தாராளமாக ஏற முடியும். இதைப் பார்க்கலாம்.
 
1.ஏறும் போது மேலே நோக்கி மட்டும் எண்ணிப் பாருங்கள்.
2.மூட்டு வலி… என்னால் ஏற முடியவில்லை என்பதெல்லாம் மாறும்.
 
இதே மாதிரி அங்கு மட்டுமல்ல…! உங்கள் வீட்டின் மாடிப்படிகளிலோ மற்ற உயரமான இடங்களில் ஏற முடியவில்லை என்றாலும் ஈஸ்வரா…! என்று மேல் நோக்கி ஞானிகளை எண்ணி அந்த உணர்வை எடுத்தால் இரண்டு படி ஏறுவது சிரமமா இருக்கும் மூணாவது படி நாலாவது படி தாராளமாக ஏற வரும்.
 
விண்ணிலிருந்து வரக்கூடிய ஆற்றல் மிக்க சக்திகளைப் பெற்று மனிதன் உயர்ந்த நிலை அடைவதற்குத் தான் இத்தனை நிலைகளை ஏற்படுத்திக் கொடுத்தார்கள்.
1.நாம் எடுக்கக்கூடிய அந்த விண்ணினுடைய ஆற்றல்
2.நம் உடல் உறுப்புகளில் சேர்ந்து அதைச் சீராக இயங்கும்படி செய்கின்றது.
 
மலை மீது ஆலயங்களை ஞானிகள் ஏன் வைத்தார்கள்…? என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.