ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

December 10, 2025

போகாப்புனல்

போகாப்புனல்


நாம் எண்ணிய எண்ணங்கள் கூர்மையாக விண்ணை நோக்கி ஏகி அந்த மகரிஷிகளின் அருள் சக்தியை உடலுக்குள் நாம் அடிக்கடி சேர்க்கப்படும் பொழுது அது நன்கு வலுப்பெறுகின்றது.
 
இவ்வாறு நமக்குள் வலுப்பெறச் செய்வதைத்தான் விண்ணை நோக்கி ஏகுவதைக் கூர்மை என்றும்கூர்மை அவதாரம் வராக அவதாரம்என்பது.
 
அந்த வலுப்பெற்ற சக்தியின் துணை கொண்டு அந்த ஞானிகள் எவ்வாறு  ஒளிச் சரீரம் பெற்றார்களோ அதே போல நமக்குள் வலுப்பெறச் செய்து வராக அவதாரமாக நாம் எதைக் கூர்மையாக எண்ணி அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று எண்ணுகின்றோமோ அதன் நிலையாக நாம் கல்கியின் பத்தாவது அவதாரமாக ஒளிச்சரீரம் பெற முடியும்.
 
இதை நமது வாழ்க்கையில் கடைப்பிடித்து விண் சென்ற அந்த மகரிஷிகளின் அருள் சக்தியை நாம் பருகினால்தான் விண் செல்ல முடியும்.
 
இல்லையென்றால்
1.இன்று நாம் நமது வாழ்க்கையில் பக்தி மார்க்கங்களில் எண்ணியபடி
2.இந்தத் தெய்வம் செய்யும் அந்தத் தெய்வம் செய்யும் இந்த மனிதர் செய்வார் அந்தச் சாமியார் செய்வார் என்ற நிலையை
3.நம் எண்ணத்தில் வளர்த்துக் கொண்டால் உடலுக்குள் இது சாகாகக் கலையாக இந்தப் பூமியிலேதான் நாம் சுழல முடியும்.
 
ஆனால் வேகாக்கலை என்றும் போகாப்புனல்…” என்ற நிலையை அடைய வேண்டுமென்று வள்ளலார் பாடல்களிலே பாடியுள்ளார்.
 
1.அந்த மகரிஷிகள் பெற்ற உணர்வினை நமக்குள் செலுத்தினால்வேகாக்கலை  அடைந்து
2.னிப் பிறவியில்லா  போகாப்புனல்” அதாவது இன்னொரு பிறவியில் நாம் பிறக்காத நிலையை அடைய முடியும்.
 
ம் ஈஸ்வராஎன்று நம் உயிரைப் புருவ மத்தியில் எண்ணி விண்ணிலே நினைவைச் செலுத்தி துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற வேண்டும்என்று ஏங்கி  அதை உயிர் வழி கவர்ந்து அவ்வாறு கவர்ந்த உணர்வுகளை நம் உடல் முழுவதற்கும் செலுத்தும் பொழுது இதற்கு ஆத்ம சுத்திஎன்று பெயர்.  அந்த எல்லா மகரிஷிகளின் அருள் சக்தியை நம் உடலுக்குள் சேர்ப்பிக்கும் நிலை.
 
உங்கள் வாழ்க்கையில் துயரங்களோ வேதனையோ சலிப்போ சஞ்சலமோ சங்கடமோ வெறுப்போ பயமோ ஆத்திரமோ அவசரமோ இதைப் போன்ற நிலைகள் ஏற்படும் பொழுதெல்லாம் நம் குருநாதர் காட்டிய அருள் வழிப்படி முதலில் சொன்ன மாதிரி விண்ணை நோக்கி ஏகி அந்த மகரிஷிகளின் அருள் சக்திகளைப் பெற வேண்டும் என்ற ஏக்கத்துடன் நம் உடலில் உள்ள ஒவ்வொரு குணங்களிலும் உணர்வுகளிலும்  அந்த மகரிஷிகளின் அருள் சக்திகளை நாம் அடிக்கடி சேர்த்து வரவேண்டும்.
 
அப்படி அடிக்கடி சேர்த்து வந்தோமென்றால்
1.வாடிய பயிருக்குள் உரம் சேர்த்தால் அது எவ்வாறு காற்றிலிருந்து தன் சக்தியைச் சேர்த்து மணி முத்துக்களை விளையச் செய்கின்றதோ
2.அதைப் போன்று ஒவ்வொரு நிமிடமும் நமக்குள் அறியாது சேரும் தீமைகள் அனைத்தையும் நீக்கி
3.மகரிஷிகளின் அருள் சக்திகளை எண்ணத்தால் எடுத்துச் சேர்த்து ஒளியான அணுக்களாக நமக்குள் வளர்த்துக் கொள்ள முடியும்.
 
இவ்வாறு நீங்கள் அந்த நல்ல எண்ணங்ககளுக்கு மகரிஷிகளின் அருள் சக்திகளை உரமாகச் சேர்த்தீர்கள் என்றால் அது வலுப் பெற்று ஒளியின் முத்தாக உங்கள் உணர்வுகள் விளைந்து…” உயிருடன் ஒன்றிய ஒளிச் சரீரமாகப்பெருவீடு பெருநிலைஎன்ற நிலையடைவீர்கள். கல்கி அவதாரமான பத்தாவது நிலையை அடைவது திண்ணம்.
 
வேகாக்கலை போகாப்புனல்…” என்று வள்ளலார் பாடியது போல நீங்கள் அனைவரும் அந்த நிலை அடைய முடியும். உங்களை நீங்கள் நம்ப வேண்டும்.
 
இதைக் கேட்டுணர்ந்தோர் அனைவருமே உங்களுக்குள் எத்தகைய குறைகள் நேரினும் இதற்கு முன் உங்கள் உடலிலே வளர்த்துக் கொண்ட கடும் நோயோ மனக்கவலையோ மன வேதனையோ இதைப் போன்ற நிலைகளிலிருப்போர் ஆத்ம சுத்தி செய்ய வேண்டும்.
 
அந்த மகரிஷிகளின் அருள் சக்தி எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும். எங்கள் உடலில் உள்ள அனைத்து உயிரணுக்களிலும் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரோளியும் படர வேண்டும்என்ற இந்த உரத்தினை நீங்கள் செலுத்துங்கள்.
 
இது வலுப் பெற்றதாகி இதைப் போல உங்கள் வீட்டிலும் நீங்கள் இதனைப் பின்பற்றுங்கள். அந்த அருள் ஒளியின் உணர்வுகள் உங்களுக்குள் விளைய உங்கள் வாழ்க்கையில் உங்களை அறியாது சேர்ந்த இருள்கள் அனைத்தும் உங்களை விட்டு விலகிவிடும்.
 
நீங்கள் மெய்ப் பொருள் கண்டுணர்ந்து உங்கள் வாழ்க்கையைச் சீர்படுத்தும் வலுவான எண்ணங்கள் உங்களுக்குள் தோன்றி உங்கள் எண்ணமே நற்செயலாகச் செயல்படும் நிலையும் உங்கள் வாழ்க்கையை உயர்த்திடும் நிலையாக அடைய முடியும்.
 
அந்த நிலையை உலக மக்கள் அனைவரையும் அடையச் செய்வதற்குத்தான் ஞாபகப்படுத்துகின்றோம்.
 
1.நமது குருநாதர் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் காட்டிய அருள் வழியில்
2.அவர் இத்தகைய நிலைகளை உருவாக்கும்படி எமக்கிட்ட அந்த ஆணைப்படித்தான் இதைச் செய்திருக்கின்றோம்.
3.அவர் எமக்கு உபதேசித்த அருள் வழிப்படித்தான் உங்களுக்குள் உபதேசிக்கின்றோம்.
 
கூட்டமைப்பாக இருந்து கூட்டுத் தியானங்கள் செய்யும் பொழுது அதன் வழியாகத்தான்  அனைத்து மகரிஷிகளின் அருள் சக்தியைப் பெறுகின்றீர்கள்.
 
ஆகையினால்… எல்லா மகரிஷிகளின் அருள் சக்தி உங்கள் அனைவருக்கும் கிடைக்கச் செய்ய வேண்டும் என்பதற்காக யாம் சதா தவம் இருந்து கொண்டிருக்கின்றோம்.

ஞான வித்தை உங்களுக்குள் ஊன்றுகின்றேன்… அதை நீங்கள் வளர்க்க வேண்டும்

ஞான வித்தை உங்களுக்குள் ஊன்றுகின்றேன்… அதை நீங்கள் வளர்க்க வேண்டும்


சாப்பாடு போடுகிறார்கள்…ன்றாகத் தான் இருக்கிறது என்று மட்டும் சொல்லி விட்டால் போதுமா…?
1.அந்தச் சுவையான உணவை உட்கொண்டால் தானே நல்லது.
2.ஆகவே போடக்கூடிய உணவை நல்ல முறையில் சாப்பிட வேண்டும்.
3.அப்பொழுது அந்த ருசியின் தன்மை தெரியும்.
 
இன்னொருவர் சாப்பிட்டுவிட்டு நன்றாகத் தான் இருக்கின்றது…!” என்று சொல்கிறார். எப்படி இருந்தது…? நன்றாக இருந்தது…!
 
நன்றாக இருந்தது என்றே சொல்லிக் கொண்டிருந்தால் எப்படி நன்றாக இருக்கிறது…? என்று சொல்லத் தெரியாமல் இருக்கின்றோம்.
 
ஏனென்றால் யாம் அடிக்கடி உபதேசித்உணர்வுகளில் உள்ள உட்பொருளை உணர்ந்து கொள்ள வேண்டும்.
 
உதாரணமாக உடலிலே ஒரு புண் வந்துவிட்டது என்று வைத்துக் கொள்வோம். வேதனையாக இருந்தாலும் மருந்தைப் போடுகின்றோம். முதலில் மருந்தைப் போட்டாலும் சிறிது வேதனையாகத் தான் இருக்கும்.
 
புண் ஆற வேண்டும் என்று ஆசையுடன் அந்த மருந்தைப் போடுகின்றோம்.
1.ஆனால் மருந்தைப் போட்ட பின் கடுகடுப்பாகிவிட்டால் என்ன இப்படி வேதனை வருகின்றது…? என்று
2.மருந்தைத் தூக்கி எறிந்து விட்டால் புண் ஆறுமோ…?
 
அது போல் தான் இந்த மனிதனின் வாழ்க்கையில் எத்தனையோ விதமான வேதனைகள் தோற்றுவிக்கின்றது. அது எத்தனை தோன்றினாலும் அதை மாற்றி அமைத்த அருள் ஞானிகள் உணர்வுகளை அடிக்கடி எடுத்து நுகர்தல் வேண்டும். அப்பொழுது அந்த வேதனையைப் போக்கும் சக்தி கிடைக்கின்றது.
 
நான் என்ன தான் இப்பொழுது உங்களுக்குச் சக்தியை கொடுத்தாலும்…”
1.அதை நீங்கள் எடுத்துக் கொள்ளக்கூடிய முறைகளில் தான் இருக்கிறதே தவிர…”
2.நான் கொடுத்தவுடனே நீங்கள் அதைப் பெறுவது என்பது அல்ல.
3.ஆனால் எவ்வளவு பெரிய சக்தியை உங்களுக்குக் கொடுக்கின்றேன்  என்பது உங்களுக்குத் தெரியாது. அவ்வளவு பெரிய சக்தியைக் கொடுக்கின்றேன்.
 
ஆனால் அந்தச் சக்தியைப் பற்றி அதன் வலிமையைப் பற்றி நான் சொல்ல ஆரம்பித்தால் நீங்கள் என்ன செய்வீர்கள்…? ஜீபூம்பா வேலை எல்லாம் செய்ய ஆரம்பித்து விடுவீர்கள்.
 
ஏனென்றால் ஆரம்பத்தில் நான் கொடுத்த நிலைகள் இப்படித்தான் ஆகிவிட்டது.
1.எனக்கே சக்தி இருக்கின்றது சாமியினுடைய தயவு என்ன வேண்டி இருக்கின்றது…? என்று
2.பெரும்பகுதியானர்கள் பிய்த்துக் கொண்டு சென்று விட்டார்கள்.
 
எல்லோருக்கும் இதைத் தெரிய வைக்க வேண்டும் என்பதற்காக இந்த அற்புதங்களை எல்லாம் அவர்களைச் செய்யும்படி செயல்படுத்தினேன்… அது உலகுக்கு எவ்வளவோ நன்மை பயக்கும்…! என்று நினைத்தேன்.
 
கடைசியில் எல்லோரும் ஆசையை வளர்க்கும் நிலையாகவே சென்று விட்டது. ஆக மொத்தம்
1.ஒருவருக்குப் புரியக்கூடிய சக்தியைக் கொடுத்தாலும்
2.அதை அடுத்தவர்கள் புரிந்துவிடக் கூடாது என்று மடக்கிக் கொண்டு வந்து விட்டார்கள்.
 
ஆரம்பத்தில் பவானியில் இப்படித்தான் ஒரு அம்மாவிற்குக் காட்சிகளை எல்லாம் காண்பித்தேன். பெற வேண்டும் என்ற ஆசை அந்த அம்மாவிடம் இருந்தது.
 
அந்த அம்மா மூலமாகவே மற்றொருவருக்கு நோய்களைப் போக்கும்படிச் செயல்படுத்தியது. அங்கு ஆசையை ஏற்படுத்தியது. ஆசை ஏற்பட்ட பின் அதன் வழி தியானத்திற்கு வருகின்றது.
 
தோஷங்களை எப்படி நீக்குவது…? என்று தான் ஆரம்பத்தில் சொல்லிக் கொடுத்தது. அடுத்து என்னைக் கேட்காமலே பல வேலைகளைச் செய்யத் தொடங்குகிறது.
ஆனால் கடைசியில் தன்னிச்சையாக அதைச் செயல்படுத்திய பின் அணிந்திருக்கும் சேலை எல்லாம் ஓட்டை ஓட்டையாக விழுந்து விட்டதுஉடலில் காயமாகவில்லை.
 
அதற்குப் பின் அந்த அம்மாவிடம் சொன்னேன். ஆரம்பத்தில் உனக்கு எல்லாம் தெரிய வைத்தேன். அதை வைத்துத் தோஷங்களை நீக்க வேண்டும் என்று எண்ணுகின்றாய்.
1.ஆனால் அது எப்படி உன் வழியில் திரும்ப வருகின்றது பார்...
2.திலிருந்தெல்லாம் காக்கக்கூடிய குருவினுடைய சக்தி உனக்கு வேண்டும் அல்லவா என்று தெளிவாக்கினேன்.
 
உதாரணமாக… ஒருவருடைய நோயைப் பற்றிக் கேட்டு விசாரிக்கின்றோம். நமக்குள் பதிவாகி விட்டால் நம்மையும் அந்த நோயின் உணர்வு இயக்குகின்றது.
 
அதே போன்று
1.யாம் உபதேசிக்கும் அருள் உணர்வுகளைக் கூர்மையாக நீங்கள் கேட்டுப் பதிவாக்கிய பின் அதைப் பெறும் தகுதி உங்களுக்கு தகுதி வருகிறது.
2.அந்த தகுதி உங்களுக்கு வரவேண்டும் என்பதற்குத் தான் உபதேசிப்பது.
 
எல்லோருக்கும் அந்த மகிழ்ச்சி கிடைக்க வேண்டும் என்று எண்ணும் பொழுது அது எனக்குள் மகிழ்ச்சி வளர்கின்றது. அதே போன்று நீங்களும் செய்தீர்கள் என்றால் அந்த மகிழ்ச்சி உங்களுக்கும் தோன்றும்.
 
கடும் தவமிருந்த அந்த மகா ஞானிகளுடைய ஆற்றல்மிக்க சக்திகளைப் பெற வேண்டும் பேரின்பத்தைப் பெற வேண்டும்…! என்பதற்குத்தான் இதைச் செய்கின்றேன். அதை நீங்கள் எளிதில் பெற முடியும்.
 
1.ஒன்று பதிவு
2.மீண்டும் நினைவு…!
3.அந்த நினைவு கொண்டு நீங்கள் அதை வளர்க்க முடியும்.
4.ஞான வித்தை உங்களுக்குள் ஊன்றுகின்றேன் அதை நீங்கள் வளர்க்க வேண்டும்.
 
ஆக வாழ்க்கையில் எது வந்தாலும் அதை நான் சீர்படுத்துவேன் என்று வலுப் பெறுங்கள் அதைச் செம்மைப்படுத்த முடியும். ஆசை ஒரு பக்கம் எண்ணம் ஒரு பக்கமாக சென்று கொண்டிருந்தால் முழுமை பெறுவது கஷ்டம்.
 
ஆகவே கொடுத்த ஞான வித்தை வளர்க்கும் நிலைக்கு அந்த வளர்ச்சிக்கு நீங்கள் கொண்டு வர வேண்டும். இருளைப் போக்கும் அருள் சக்தியைப் பெருக்க வேண்டும்.
1.அந்த அருள் வழியிலேயே வாழ வேண்டும் என்று
2.நாம் என்றைக்குச் செயல்படுத்துகின்றோமோ அதை நிச்சயம் பெற முடியும்.