ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

January 23, 2026

குரு வழியில்… மகிழ்ச்சியான உலகை நாம் உருவாக்குவோம்

குரு வழியில்… மகிழ்ச்சியான உலகை நாம் உருவாக்குவோம்


விஷத்தை வென்றிட்ட துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை நாம் பெற்று நமக்குள் வளர்த்து
1.இனி வரக்கூடிய ஆண்டுகளை மகிழ்ச்சி பெறும் ஆண்டுகளாக குரு வழியில் நாம் உருவாக்குவோம்
2.உடலில் பேரின்பத்தைப் பெருக்கும் அணுக்களாக உருவாக்குவோம்
3.பெருக்கி உலக மக்கள் அனைவரும் அதைப் பெறும் தகுதியாக வளரச் செய்வோம் வளர்ப்போம்.
5..உலக மக்கள் தெளிந்து வாழ வாழ்த்துவோம்… தியானிப்போம்… தவமிருப்போம்
6.மகரிஷிகளின் அருள் உணர்வுகளை அனைவரையும் பெறச் செய்வோம்
7.மலரைப் போன்ற மம் பெற்று மகிழ்ச்சி பெறும் நிலையினை அனைவருக்குள்ளும் உருப்பெறச் செய்வோம்
8.இந்த உலகம் முழுவதும் அதைப் பரவச் செய்து எல்லோருக்குள்ளும் வளர்க்கச் செய்து
9.அவர்களிடம் இருந்து வெளிப்படக்கூடிய அந்த உணர்வுகளை இந்த பூமி முழுவதும் பரவச் செய்வோம்.
10.அதன் மூலம் இந்தக் காற்று மண்டலத்தை பரிசுத்தப்படுத்துவோம்… அந்த பரிசுத்தமான உணர்வுகளை நமக்குள் வளர்ப்போம்
11.ஒன்றி வாழும் நிலையும் சகோதர தத்துவமும் சமத்துவமும் .மக்களுக்குள் வளர அருள் ஞானத்தைப் பெருக்குவோம்.
 
ஒன்றுபட்டு வாழ்வோம் தீமையை அகற்றுவோம் உலக மக்களைக் காக்கும் உணர்வை நமக்குள் வளர்ப்போம்.
 
உலக மக்கள் என்று சொன்னாலும் அது உயிரான ஈசன் வீற்றிருக்கும் ஆலயம் தான்…”
 
“ஈசன் வீற்றிருக்கும் அந்த ஆலயம் பரிசுத்தமாக வேண்டும்…” என்று நாம் அன்பு கொண்டு செய்தால் மனிதன் என்ற பகைமைகளை அகற்றி ஒன்றுபட்டு வாழ்ந்திடும் உணர்வினை வளர்த்திட அரும்பெரும் சக்தியாக நமக்குள் அது வளரும்.
 
இதற்கு வலிமை சேர்க்க கணவனும் மனைவியும் ஒன்று சேர்ந்து தியானத்தில் வலுப்பெற்றால் அது அனைத்தும் கூடி வரும். பகைமை வராது தடுக்கலாம். உலக இருளை நீக்கும். நஞ்சினை மாற்றிடும் அருள் ஞான உணர்வுகள் உருப்பெறும்.
 
அருள் ஞானத்தைப் பெருக்கிடும் அந்த அருள் சக்தியை நாம் பெறுகின்றோம். அருள் சக்தி பெற மெய் ஞானிகள் காட்டி அருள் வழியில் நாம் ஒவ்வொரு நொடிப் பொழுதும் தியானிப்போம்.
 
1.மூதாதையர்களின் உடலை விட்டுப் பிரிந்து சென்ற ஆன்மாக்களைச் சப்தரிஷி மண்டலத்துடன் நாம் இணைப்போம்
2.அவர்கள் உடல் பெறும் நஞ்சினை அங்கே கரைத்து உணர்வை ஒளியாக மாற்றும் நிலையைச் செயல்படுத்துவோம்.
 
அவர்கள் ளியான உணர்வுகளை நாமும் நுகர்வோம். நமக்குள் பேரருளைப் பெருக்குவோம். அறியாது சேர்ந்து இருளை மாற்றுவோம். ஒளியான உணர்வை உருவாக்குவோம். பிறவி இல்லாத நிலை அடைவோம். பேரருளை நமக்குள் ஏங்கிப் பெறுவோம்.
 
நம் உடலுக்குள் மகிழ்ச்சி பெறும் உணர்வுகளைப் பெருக்கி
1.நம் உயிரான ஈசனுக்கு அந்த மகிழ்ச்சியை ஊட்டுவோம்.
2.அவன் அருளை நாம் பெற்று
3.அவனுடன் என்றும் பிரகாசமாக… என்றும் ஏகாந்தமாககோபித்த நிலையாக உயிருடன் ஒன்றி
4.அவன் எவ்வாறோ… அவன் வழியே நாமும் உடல் பெறும் உணர்வுகள் ஒளியாக மாறி
5.ஏகாந்த நிலையை ஏகாதசி என்ற நிலையை பத்தாவது நிலையை… அந்த முழுமையை நாம் அடைவோம்.