ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

March 28, 2026

நம் உடலுக்குள் இருக்கும் தீமையை அகற்றிடும் அணு செல்கள்

நம் உடலுக்குள் இருக்கும் தீமையை அகற்றிடும் அணு செல்கள்


பல கோடிச் சரீரங்களில் தீமை என்று உணர்ந்து அதிலிருந்து தன்னைக் காத்திடும் உணர்வுகளைச் செயலாக்கிப்  பெற்ற மனிதச் சரீரத்தில்
1.“அனைத்துத் தீமைகளையும் அகற்றிடும் அணு செல்கள் உள்ளன.
2.ஆகையினால்தான் கார்த்திகேயா என்றும் ஆயிரம் கண்ணுடையாள்…” என்றும் ஞானிகள் உரைத்தனர். 
 
மனிதனின் நிலையில் ஆயிரம் குணங்களின் சத்து நமது உடலில் இருக்கின்றது. இதனால் நாம் எத்திசையிலும் எந்நிலையையும் நமது உணர்வின் அறிவு கொண்டு அறிந்து கொள்கின்றோம்.
 
ஆலயங்களில் 1008  அபிஷேகங்கள் செய்வார்கள். மனிதரிடத்தில் 1008  குணங்கள் உள்ளன. பகைமை உணர்வுகள் வரும் பொழுது அதிலிருந்து மீண்டிடும் நிலையாக அறிவைக் கூட்டிப் பகைமையிலிருந்து விடுபடுகின்றோம்.
 
பல கோடிச் சரீரங்களில் சேர்ந்துள்ள தீமைகளை வென்ற உணர்வுகள் நமக்குள் இருக்கப்படும் பொழுது பகைமை ணர்வுகளைக் கண்ணால் பார்க்கப்படும் பொழுது நமது உடலில் இருக்கும் அறிவு இது பகைமை கொண்டது என்று உணர்த்துகின்றது. அறியும் தன்மை வருகின்றது.
 
தீமையை வென்றவர் துருவ மகரிஷி… அவர் துருவ நட்சத்திரமானார்.
 
ஈஸ்வராஎன்று நம் கண்ணின் நினைவை உயிருடன் ஒன்றி அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை நாம் நுகர்ந்தால் இதன் வழி கொண்டு தீமைகளை வென்றிடும் சக்தியினை நமக்குள் உருவாக்குகின்றது நமது உயிர்.
 
1.ஏனென்றால் கண்ணால் காக்கும் நிலை பெற்றிருந்தாலும்
2.கண்ணின் நினைவை உயிருடன் ஒன்றும் பொழுது உணர்வினை உயிர் வழி கொண்டு உடலில் பரப்புகின்றது.
3.உடலில் பரப்பிய உணர்வுகள் உந்தி மூக்கின் வழி சுவாசிக்கும் உணர்வின் தன்மையினை இடைமறித்து
4.அருள் ஒளி என்ற உணர்வுகள் இணையும் பொழுது தீமை என்ற நிலை வராது தடுக்கின்றது.
 
அருள் ஒளியின் உணர்வின் தன்மை, நமக்குள் வலு பெறும் பொழுது பகைமையை உட்புகாது தடுக்கும் நிலை வருகின்றது. இதைத்தான் கார்த்திகேயா என்று உணர்த்தினர் ஞானிகள்.
 
ஏனென்றால் நாம் நமது ஆறாவது அறிவால் அனைத்தையும் அறிந்திடும் தன்மை இருந்தாலும் ஆறாவது அறிவு சேனாதிபதியாக நின்று தீமைகளிலிருந்து நம்மைப் பாதுகாக்கவும் செய்கின்றது.
 
1.எண்ணத்தால் உணர்வின் ஒளியை நமக்குள் உருவாக்கினால்
2.உயிரென்ற நிலைகள் இணைந்து அருள் ஒளி எனும் பேரொளியின் தன்மையை நம்முள் உருவாக்கும்.
3.இவையனைத்தும் எதிர்காலத்தில் உங்களைப் பகைமையுணர்வு தாக்காது
4.அதனின்று பாதுகாக்கும் சேனாதிபதியாக உருப்பெறுகின்றது. 
 
அத்தகைய பாதுகாப்புக் கவசத்தின் உணர்வின் அணுக்களைப் பெறுவதற்குத் துருவ நட்சத்திரத்திலிருந்து வெளிப்படும் உணர்வினை நீங்கள் நுகர்ந்து உங்களுக்குள் உருவாக்கினால் இந்த உணர்வின்  எண்ணம் உங்களைக் காக்கும். இதுவே சேனாதிபதி…!
 
ஞானிகளின் தத்துவக் கருத்துக்கள் மனிதன் தீமைகளிலிருந்து மீளும் மார்க்கத்தைத்தான் உரைக்கின்றன. அதற்காகத்தான் விநாயகரை வணங்கச் செய்தது.
 
பல கோடிச் சரீரங்களில் தீமைகளில் இருந்து விடுபட வேண்டும் என்ற உணர்வைப் பெற்றுத் தன்னைக் காட்டிலும் வலு கொண்ட உணர்வைச் சுவாசித்து நம்மை மனிதனாக உருவாக்க மூலமாக இருந்தது நமது உயிர்.
 
தீமையிலிருந்து விடுபடும் உணர்வைச் சேர்த்துச் சேர்த்து எண்ணத்தின் வலிமை பெற்றது மனித உடல்,
 
இன்றைய மனிதன் தன் எண்ண வலுவின் உணர்வின் துணை கொண்டு
1.1000 டன் எடை உள்ள இராக்கெட்டை விண்ணில் செலுத்துகின்றான்.
2.பெரும் பாறைகளைச் சிறு கடப்பாரை கொண்டு நகர்த்தி இடம் மாற்றுகின்றான்.
 
இது மனிதனின் எண்ண வலு.
 
எண்ணத்தின் வலுக் கொண்டு இவன் சுவாசிக்கும் பொழுது அதனின் உணர்வின் யுக்தியின் அணுக்கள் உருவாகி…” அது காலத்தால் தனக்கேற்ற உணர்வை உருமாற்றிக் கொண்டேயிருக்கும்.
 
எண்ணத்தின் வலுக் கொண்டு தீமைகளை அகற்றும் உணர்வை நமக்குள் சேர்க்கும் பொழுது அந்த உணர்வினை வலுப் பெறச் செய்யும் வளர்க்கச் செய்யும் உணர்வினைச் செயல்படச் செய்கின்றது.
 
ஆகவே நாம் அருள் ஞானிகள் காண்பித்த அருள் நெறிப்படி துருவ நட்சத்திரத்தின் பேரருளையும் பேரொளியையும் நமக்குள் சேர்ப்போம்.
1.“ஈஸ்வராஎன்று உயிர் வழி கொண்டு தீமைகளை வெல்லும் அருள் உணர்வினைக் கவர்ந்து உடல் முழுவதும் அதைப் பரப்பி
2.அறியாது நமக்குள் சேர்ந்துள்ள தீமைகளைப் பிளந்திடும் நிலை பெறுவோம்.. 
 
இதன் வழியைப் பின்பற்றும் அன்பர்கள் அனைவரும் தம்முள் தீமைகளை வென்றிடும் நிலையாக ஒளியின் உணர்வுகளைப் பெற்று இவ்வாழ்வில் பேரின்பப் பெரு வாழ்வாக பெரு வீடு பெருநிலை பெறும் நிலையாக வாழ்ந்து வளர்ந்திட எமது அருளாசிகள். 

குருவினுடைய உதவி அவசியம் தேவை

குருவினுடைய உதவி அவசியம் தேவை


27 நட்சத்திரங்களின் சக்தியை எடுத்துச் சூரியன் ஒளியாக மாற்றித் தன் ஈர்ப்பு வட்டத்தில் உள்ள கோள்களை வளர்த்துக் கொண்டிருக்கின்றது. சூரியனின் ஈர்ப்பு வட்டத்தில் தான் நட்சத்திரங்களும் வாழ்கின்றது. பிற மண்டலத்திலிருந்து எடுத்துத்தான் இந்தப் பிரபஞ்சத்திற்கு நட்சத்திரங்கள் கொடுக்கிறது.
 
அது போல்…
1.நாம் இந்த உடலில் எந்தெந்த உணர்வுகளை எடுக்கின்றோமோ இதில் எது வலுவோ (நாம் எடுக்கும் அருள் சக்திகள்)
2.இரத்தத்திலிருந்து தசை மண்டலத்தில் இருந்து எலும்பு மண்டலத்தில் இருந்து எல்லாவற்றையும் கொண்டு வருகின்றோம்.
3.எல்லாவற்றிலும் அந்த வலுவைச் சேர்த்துக் கொண்டு வரும் பொழுது
4.இந்த வலுவின் தன்மை காற்றிலிருந்து உயர்ந்த உணர்வுகளை எடுத்துக் கொடுக்கின்றது பிரித்தெடுக்கின்றது.
 
அதே சமயத்தில் வேதனைப்பட்டவரின் உணர்வுகள் நமக்குள் வந்து விட்டால் எல்லாவற்றிலும் விஷம் கலந்து விடுகிறது. காற்றிலிருக்கக்கூடிய விஷத்தை எடுத்து அடிக்கடி கவலைப்படும்படி செய்வதும் நோயாக்குவதும் வெறுப்படையச் செய்வதும் எல்லாம் செய்கின்றது. மற்ற உயிரினங்களுக்கு இது எல்லாம் தெரியாது.
 
குருநாதர்தை எல்லாம் எனக்குள் பதிவு செய்தார் உணர்த்தினார். அதைத்தான் உங்களிடமும் இப்பொழுது பதிவு செய்கின்றேன்.
1.நீங்கள் இதையெல்லாம் பக்குவப்படுத்திக் கொள்ள வேண்டும்.
2.அதை வலுப்படுத்திச் செயல்படக்கூடிய சக்திகளாக வளர வேண்டும்.
 
மற்றவர்கள் என்னிடம் கஷ்டம் கவலை துயரம் நஷ்டம் எல்லாவற்றையும் சொல்கிறார்கள். இதை நான் எதிர்த்துப் போராடிச் சமாளிக்க வேண்டி இருக்கின்றது.
 
ஏனென்றால் பக்தியில் நாம் வழி வழியாக அதைத் தான் தெரிந்து வைத்திருக்கின்றோம்.
 
உங்களிடம் இதைப் போன்று கஷ்ட நஷ்டங்களைச் சொன்னால் உங்களுக்கும் அந்தக் கவலை வருகிறது அல்லவா. ஆனால் உங்களை அந்தக் கவலை தாக்காமல் நான் பாதுகாக்க வேண்டும்.
1.குருநாதர் எனக்கு எப்படிப் பாதுகாப்பு கொடுத்தாரோ உங்கள் ஒவ்வொருவரையும் நான் பாதுகாக்க வேண்டி இருக்கின்றது.
2.எத்தனை ஆயிரம் பேர் கூடி இருக்கின்றார்களோ அத்தனை பேருக்கும் நான் பாதுகாப்பு கொடுத்தாக வேண்டும்.
 
நீங்கள் இதை மாதிரிச் செய்யுங்கள் நன்றாக விடும் என்று மற்ரவர்களுக்குச் சொன்னாலும் அவருடைய கஷ்டம் அங்கே எப்படி இருக்கின்றது இங்கே இப்படி நடக்கின்றது எல்லாம் நஷ்டமாகி விட்டது என்று சொல்லும் போது கேட்டால் அது உங்களுக்குள் தீமையாக விளைந்து விடாது பாதுகாக்க வேண்டும் அல்லவா.
 
அவர்களை ஆத்ம சுத்தி செய்யச் சொல்லி நாம் நல்வழி காட்ட வேண்டும்.
1.காரணம் பொறுப்பு எனக்கு அதிகமாக இருக்கின்றது.
2.ஆகவே அந்த அருள் உணர்வுகளை வலுவாக்கி விட்டால் உங்களிடம் எதுவும் வராது.
 
தங்கத்தில் திரவத்தை ஊற்றிய பின் மற்ற கசடுகள் எல்லாம் ஆவியாக எப்படி மாறுகின்றதோ அதே போல உங்களுக்குள் அந்தச் சக்தி அதிகமான பின் மற்ற தீமைகளை மாற்றிவிடும்.
 
அது வரையிலும் குருவினுடைய உதவி அவசியம் தேவை.
1.எனக்கு குருநாதர் எவ்வளவு நாள் உதவியாக இருந்து வழி காட்டினாரோ அதே போல
2.அந்தக் குருவின் தன்மையை வளர்க்க வளர்க்க உங்களை அது பாதுகாக்கும்.
 
மற்றவர்கள் அனைவரும் உடலுக்குத் தான் சொல்கிறார்கள். உடலுக்குப் பின் என்ன…? என்பதை யாரும் சொல்லவில்லை. நாம் இந்த வாழ்க்கையில் நம் எண்ணங்களைப் பரிசுத்தப்படுத்தி இந்த உடலுக்குப் பின் பிறவி ல்லா நிலை அடைய வேண்டும்… கடைசி நிலை,
 
அது தான் விஜயதசமி உயிர் விண்ணுலகம் செல்ல வேண்டும் என்பதை நமது சாஸ்திரங்கள் தெளிவாகக் கூறுகின்றது.
 
அதைப் பெறச் செய்வதற்குத் தான் இத்தனை உபதேசங்களும் கொடுக்கின்றோம். எல்லோருக்கும் அந்த உற்சாகத்தை ட்டிக் கொண்டு செல்கின்றோம்.
 
ஒவ்வொரு உயிரும் கடவுள் ஒவ்வொரு உடலும் கோவில். மனிதனாக உருவாக்கிய அரும்பெரும் சக்திகள் காக்கப்பட வேண்டும்.
 
1.நீங்கள் நன்றாக இருக்க வேண்டும் என்று நான் அதைச் சொல்லும் பொழுது
2.அது உங்களில் வளர்ந்தால் எனக்கும் கிடைக்கின்றது மற்றவர்களுக்கும் அந்தச் சக்தி கிடைக்கின்றது.
 
அதற்குத்தான் இதைச் சொல்கிறோம்.