
உடல் உறுப்புகள் சீராக இயங்க அடிக்கடி ஆத்ம சுத்தி செய்ய வேண்டும்
இந்த மனித வாழ்க்கையில் அடிக்கடி சஞ்சலம் சலிப்பு சங்கடம் என்ற உணர்வுகளை நுகர நேர்ந்தால் ரத்தங்களில் அத்தகைய தீமைகள் அதிகரித்து விடுகின்றது. சலிப்பு சஞ்சலம் என்று வரும் பொழுது நாம் உணவாக உட்கொள்ளும் உணவை ஜீரணிக்கும் தன்மை இழந்து விடுகின்றது.
1.சிறிது நேரத்தில் புளிப்படைந்து உடல் வலு குறைந்து எண்ணங்கள் குறைந்து நமது செயலும் சீராகச் செயல்படுத்த முடியாது போய் விடுகின்றது.
2.புளிப்பின் தன்மை அதிகரிக்கும் பொழுது வாயுவின் தன்மை உருவாகி சோர்வடைகின்றோம்... சிந்திக்கும் தன்மையும் குறைகின்றது
3.தொழில் செய்ய வேண்டும் என்றாலோ மற்ற வேலை செய்ய வேண்டும் என்றாலோ ஒரு கணக்கைப் பார்க்க வேண்டும் என்றாலோ நம்மால் முடியாது போய் விடுகின்றது.
இப்படி நாம் எடுத்துக் கொண்ட உணர்வுகள் அனைத்தும் ரத்தத்தில் கலக்கப்படும் பொழுது நம்மை அறியாதபடி உணவாக உட்கொள்ளும் உணவுக்குள் மறைந்திருக்கும் நஞ்சினைப் பிரித்துப் பரிசுத்தமாக்கும் நிலையை ரத்தம் சுத்தமாவது இழந்து விடுகின்றது.
பாலில் சிறிதளவு உப்புப் பட்டால் எப்படிப் பிருத்து விடுகின்றதோ கெட்டுப் போய் விடுகின்றதோ இதைப் போல ரத்தங்களில் தீமையின் நிலைகள் அதிகரிக்க சுத்திகரிக்கும் சிறுநீரகங்கள் பாழடைந்து விடுகிறது.
அதே சமயத்தில் உணவுக்குள் கலந்து வரும் பித்த சுரபி விஷத்தின் தன்மையை அதிகரித்து விட்டால் வாந்தி மயக்கம் தலை சுற்றல் போன்று அதிகரித்து விடுகின்றது.
காரணம் விஷத்தைப் பிரிக்கும் நிலை இழந்து பித்தம் அதிகமாகி ரத்தத்துடன் அதிகமாகக் கலந்து விட்டால் மயக்கம் வருகின்றது.
1.பித்தத்தை உறிஞ்சும் அந்த உறுப்புகளுக்கு கவலை சோர்வு என்ற நிலை அதிகரிக்கப்படும் பொழுது
2.பித்த சுரப்பி சரியாக இயங்கும் நிலை குறைந்து விடுகின்றது. ரத்தங்கள் மாசுபடத் தொடங்குகிறது.
இதைப் போன்று நமது வாழ்க்கையில் வேதனை கோபம் வெறுப்பு ஆத்திரம் போன்ற உணர்வுகளை அடிக்கடி நுகர நேர்ந்தால் கல்லீரல் வீக்கம் அடைகின்றது. பல உணர்வுகளை வடித்துத் தெளிவாக்கும் விரிவாக்கம் தன்மை இழக்கப்படுகிறது.
இதே போன்று உடலில் உள்ள உறுப்புகளில் விஷத்தின் தன்மை அதிகரிக்கும் போது உடல் உறுப்புகள் சீராக இயங்காத நிலை ஆகிறது. நஞ்சினைப் பிரிக்கும் செயலை இழந்து விடுகின்றது.
அப்பொழுது நல்ல ஆகாரங்களை உட்கொண்டாலும் உயர்ந்த சத்துள்ள ஆகாரங்களைச் சாப்பிட்டாலும்
1.அந்தச் சத்தை நஞ்சாகத்தான் மாற்றுகின்றதே தவிர அந்த சத்தினை உடலுக்குள் நல்லதாக மாற்றுவதில்லை.
2.காரணம் அதை ஜீரணிக்கும் திறன் கொண்ட நல்ல அமிலங்கள் இயங்கது போவதால் ஜீரணிக்கும் இயல்புகளை மாறி விடுகின்றது.
3.உடல் உறுப்புகள் இயக்கங்களைத் தடைப்படுத்துகின்றது.
இதைப் போன்ற நிலைகள் வராது தடுக்க உடனுக்குடன் நாம ஆத்ம சுத்தி செய்ய வேன்டும்.
துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்று புருவ மத்தியில் நிறுத்த வேண்டும். அடுத்து கண்ணின் நினைவை உடலுக்குள் செலுத்தி… துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி எங்கள் இரத்த நாளங்களில் கலக்க வேண்டும்… உடல் உறுப்புகளை உருவாக்கி அணுக்கள் பெற வேண்டும் என்று “இப்படிப் பழக்கப்படுத்தி வைத்துவிட வேண்டும்…”
நம் உடல் உறுப்புகளை இப்படி வலுப்படுத்திக் கொண்டே வர வேண்டும்.
1.சந்தர்ப்பத்தில் தீமைகள் வந்தால் உடனே ஈஸ்வரா… என்று உயிரிடம் வேண்டி
2.துருவ நட்சத்திர்த்தின் வலுவை ஏற்றித் தீமை உள்ளே போகாதபடி தடைப்படுத்த வேண்டும்.
