ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

January 31, 2026

“வாழ வைக்க வேண்டும்…” என்ற எண்ணம் தான் நமக்கு வர வேண்டும் என்றார் குருநாதர்

“வாழ வைக்க வேண்டும்…” என்ற எண்ணம் தான் நமக்கு வர வேண்டும் என்றார் குருநாதர்


யாம் ஒரு முறை குருதேவர் ஆணைப்படி இமயமலைக்குச் சென்றோம். அப்பொழுது உடலில் கோவணம் மட்டுமே அணிந்திருந்தோம். வேறு எந்தத் துணியும் எம்மிடம் இல்லை.
 
அங்கே நிலவும் குளிரில் குருதேவர் அருளிக் கொடுத்த உணர்வுகளை யாம் நுகர்ந்து கொண்டிருந்ததால் எம் உடலில் வெப்பம் உருவாகி குளிர் எதுவும் தாக்காத வண்ணம் அங்கே நடந்து சென்று கொண்டிருந்தோம்.
 
அந்த பனிமலைப் பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்த பொழுது யாம் ஒரு இடத்தைக் கடந்திருப்போம். சற்று நேரத்தில் கால் வைத்து நடந்த பகுதி இடிந்து தகர்ந்து விழுந்தது. தகர்ந்து விழுந்த இடத்தைப் பார்த்தால் பெரிய பாதாளமே அங்கே இருந்தது.
 
அதைப் பார்த்தவுடன் எமது சிந்தனைகள் எங்கே சென்றது…?
1.எமது குழந்தைகள் எமது குடும்பம் எவ்வாறு இருக்கின்றதோ?
2.யாம் மீண்டும் அவர்களைச் சந்திக்க முடியுமா? அல்லது இங்கேயே விழுந்து இறந்துவிடுவோமா?
3.இந்த பாதாளத்தில் விழுந்திருந்தால் என்ன ஆகியிருக்கும்? என்றுதான் எமது சிந்தனைகள் சென்றன. 
 
உடல் மீது தான் ஆசை தோன்றியது. குரு கொடுத்த உணர்வுகளை அந்த நேரத்தில் மறந்துவிட்டோம்.
 
இதனால் எமது உடலில் குளிரெடுத்தது. இதயம் படபட எனத் துடித்து இரைச்சலாகிசற்று நேரத்தில் இறந்தே விடுவோம்என்ற நிலை எம்மிடத்தில் உருவானது.
 
அப்பொழுது குருதேவர் எமக்கு முன்னால் உதயமானர்.
 
மனமே இனியாகிலும் மயங்காதே,
பொல்லா மானிட வாழ்க்கையில் தயங்காதே.
பொன்னடி பொருளும் பூமியில் சுகமோ?
மின்னலைப் போல மறைவதைப் பாராய்.
 
நேற்று இருந்தார் இன்று இருப்பது நிஜமோ?
நிலையில்லா இவ்வுலகம் உனக்குச் சதமா?
மனமே இனியாகிலும் மயங்காதே
பொல்லா மானிட வாழ்க்கையில் தயங்காதே…!
என்ற இந்த பாடலைப் பாடினார்.
 
சோதனையான சமயத்தில் இப்படி ஆகின்றதேஎன்று வருந்தி உன் குழந்தைகளையும் மற்றவர்களையும் எண்ணிப் படபடப்பாகி மயங்குகின்றாய்.
 
ஆனால் சற்று நேரத்திற்கு முன் உனது உயிர் போயிருந்தால் இந்தப் பொன்னடி பொருளை எங்கே காணப் போகின்றாய்? என்று கேட்கிறார் குருதேவர்.
 
ஆகவே
1.ஆசையின் உணர்வை விடுத்து அருள் ஒளியின் உணர்வை எடுத்து
2.என் குழந்தைகள் அருள் ஞானம் பெற வேண்டும்இருளை அகற்றி மெய்ப் பொருள் காண வேண்டும்
3.அவர்கள் வாழ்க்கை நலம் பெற வேண்டும் என்ற உணர்வினை எடுத்தால் அவர்களை வாழ வைக்கலாம்.
 
நமக்குள் அருள் உணர்வைக் காக்கலாம் என்றார் குருதேவர்.
 
1.மனிதருக்கு வாழ வைக்க வேண்டும் என்ற எண்ணம்தான் வரவேண்டுமே தவிர
2.“இப்படி ஆகி விட்டதேஎன்று எண்ணக் கூடாது.
 
ஏனென்றால் இப்படி ஆகி விட்டதே…! என்று வேதனையை எடுக்கப்படும் பொழுதுதான் விஷத்தின் தன்மையைக் கவர நேருகின்றது. அதனால் மனிதரின் செயலாக்கத்தின் தன்மை குறைகின்றது.
 
இது போன்று யாம் செல்லும் பாதையில் விபத்துக்கள் நேரிடும் பொழுதெல்லாம் எமக்குக் குடும்பத்தின் ஞாபகம் வரும். அப்பொழுது இதிலிருந்து எப்படி காத்துக் கொள்வது…? என்று நினைவுபடுத்திக் கொண்டே இருப்பார் குருநாதர்.
 
ஆகவே குரு காண்பித்த அருள் வழியில்
1.நாம் அனைவரும் நம் உடல்  நமக்கு சொந்தமில்லை…! என்று உணர வேண்டும்.
2.உயிருடன் ஒன்றும் உணர்வை அருள் ஒளியின் உணர்வாக இணைத்துச் சொந்தமாக்குதல் வேண்டும்
3.மகரிஷிகளின் அருளைப் பற்றுடன் பற்றுதல் வேண்டும்.
4.நமது வாழ்க்கையில் வரும் தீமைகளைப் பற்றற்றதாக மாற்றுதல் வேண்டும்.
 
ஒவ்வொரு சமயத்திலும் மனிதர் தாம் சந்தர்ப்பத்தால் அறியாது வரும் தீமைகளில் சிக்கிக் கொள்வதை உணர்த்தி மனிதர் தாம் எவ்வாறு தீமைகளிலிருந்து மீள்வது?” எனும் நிலையை அனுபவரீதியாக எமக்கு உணர்த்தினார் குருநாதர்.

பித்து நிலையிலிருக்கும் இந்த உலகிலிருந்து “விடுபட்டுச் செல்கிறேன்” என்றார் குருநாதர்

பித்து நிலையிலிருக்கும் இந்த உலகிலிருந்து “விடுபட்டுச் செல்கிறேன்” என்றார் குருநாதர்


இந்த வாழ்க்கையில் பித்தனைப் போல் தான் இருந்தார் நமது குருநாதர்.
 
இந்த உலகமே பித்து நிலையில் இருக்கின்றதுஎன்பதை உணர்த்துவதற்கு இந்த உலகில் உள்ளோர்க்கு அவரைப் பார்த்தால் பித்தனாகத்தான் தெரியும்.
 
ஆனால் இந்த உலக மக்கள் பித்துப்பிடித்துப் பித்தனாக உள்ளனர். இதிலிருந்து நான் விடுபட்டே செல்கின்றேன் என்றார். இந்த உண்மையின் உணர்வின் இயக்கத்தை அவர் தெளிவாகப் பதிவு செய்து கொண்டார் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர்.
 
ஆகையினால்
1.மற்றவர்கள்யார் தவறு செய்கின்றார்கள்?
2.எப்படிச் செய்கின்றார்கள்? என்பதைச் சிந்திப்பதில்லை.
3.அதை அவர் ஏற்றுக்கொள்வதும் இல்லை.

உயிர் உணர்வு உடல் - இயக்கம்

உயிர் உணர்வு உடல் - இயக்கம்


ஒரு மரம் பட்டு அதனுடைய சத்தெல்லாம் இழந்தாலும்தில் விளைந்த சத்தினைச் சூரியனுடைய காந்த சக்தி கவர்ந்து சேமித்து வைத்துக் கொள்கின்றது.
1.சேமித்த உணர்வின் தன்மை பூமியின் பரத்தில் பரமாத்மாவில் அலைகளாகத் தொடர்கின்றது பரமாத்மாவாக இருக்கின்றது.
2.மண்ணிலே ஊன்றப்பட்ட வித்து தன் தாய் மரத்தின் உணர்வை நுகர்ந்து மரமாக விளைந்து மீண்டும் தன் இனத்தின் வித்தை உருவாக்குகின்றது.
 
இதைப் போல தான் சூரியனால் உருவான இந்த உணர்வுகள் அதனுடைய அலை வரிசைகள் தொடர்ந்து தன் எதன் வழிகளில் அது கவர்ந்ததோ அந்த இன வித்துக்கள் மாறுவதும் மரம் ஒன்றுடன் ஒன்று இணையப்படும் பொழுது மரத்தின் இனங்கள் மாறுவதும் தாவர இனங்களும் மாறுகின்றது.
 
தைப் போன்றுநம் உடலுக்குள் இருக்கும் உயிர் நாம் எண்ணியது எதுவோ அதை ஜீ அணுக்களாக மாற்றி…”ந்த உணர்வின் லமாக உடலாக மாற்றி அமைக்கின்றது.
 
சூரியனைப் போல உயிர் மாற்றிக் கொண்டிருக்கும் நிலையில்
1.இந்தப் பூமியில் காற்றுடன் கலந்துள்ளது
2.ஆனால் நம் உடலில் ரத்தத்துடன் கலக்கின்றது.
 
நாம் எண்ணியது எதுவோ அது அனைத்தும் ஜீவ அணுக்களாக ரத்தங்களிலே ருப் பெறுகின்றது.
 
பல கோடி வித்துக்களாக உருப்பெற்றாலும் அந்தந்த மரம் காற்றிலே மிதந்து வரும் தன் இனத்தின் சத்தை எடுத்து விளைவது போல நமக்குள்ளும் விளைகின்றது.
 
ஒருவன் தீமையாகப் பேசுகின்றான்…! அவனிடமிருந்து சொல்லாக வருகின்றது அவனில் விளைந்த வித்தாக அது வெளிப்படுகின்றது. நாம் அதை உற்றுப் பார்க்கப்படும் பொழுது ஊழ்வினையாக நமக்குள் பதிவாகின்றது. வினை தான் வித்து என்பது.
 
ஒரு வித்து தன் சத்தைக் காற்றிலிருந்து எவ்வாறு கவர்கின்றதோ அதைப் போல்
1.நமக்குள் எண்ணங்களாகப் பதிவு செய்த ஊழ்வினை மீண்டும் தன் உணர்வின் சத்தை ஆன்மாவாக மாற்றுகிறது.
2.மாற்றிய பின் சுவாசித்து உயிரிலே பட்டு அது தான் எண்ணமாக மாறுகின்றது.
3.அது உடலுக்குள் செயல்படும்போது அந்த உணர்வின் ந்து விசையால் நம் உடல் அங்கங்கள் அதற்குத்தக்க அசைகிறது.
 
நாதத்தின் சுருதி கொண்டு வாத்தியங்களை இசைக்கிறார்கள். அதைக் கேட்டு… அந்த இனிமை கலந்த உணர்வுகளை ஒரு தரம் பதிவாக்கி விட்டால் ந்த ராக இணைப்பிற்கு அந்த இசையின் வாசிப்பிற்கு நம்முடைய அங்கங்கள் இசைந்து இயக்குகின்றது.
 
வாசிக்கத் தெரியவில்லை என்றால் சீராகப் பதிவு செய்யவில்லை என்றால் என்னதான் வாத்தியம் வாசித்தாலும் அது வராது.
 
இனிமை கொண்ட வாத்தியத்தின் உணர்வின் தன்மையை தனக்குள் பதிவு செய்யும் பொழுது அது பதிந்த பின் தன்னிச்சையாக அவருடைய அங்கங்களை அசைப்பதும் மீண்டும் ரசனையை அவர்கள் கூட்டும் பொழுது அதற்கு தகுந்தாற் போல் அந்த வாத்தியங்கள் மிகவும் நயமாகவும் பிறரை மகிழ்விக்கும் நிலையும் ஆட்டிப்படைக்கும் நிலைகளும் வருகின்றது.
 
இதைப் போன்று தான்
1.ஒரு மனிதன் கோபித்த உணர்வின் தன்மையைப் பதிவு செய்து கொண்டால்
2.அந்த உணர்வின் நாதங்கள் நமக்குள் கோப உணர்ச்சிகளைத் தூண்டி இந்த உணர்வுக்கொப்ப நம் ங்கங்களை இயக்குவதும்
3.தே உணர்வின் தன்மை கொண்டு நமக்குள் மற்றவரை அழித்திடும் நிலையோ இம்சிக்கும் நிலையாகவோ அது நமக்குள் தோன்றும்.
 
அவ்வாறு தோன்றிய உணர்வுகள் நம் உடலுக்குள் இம்சைப்படும் உணர்வுகளாகவே உருப்பெறுகின்றது.ப்பொழுது மகிழ்ச்சியாக உருவான இந்த உடல் நலியும் தருணம் வருகின்றது.
 
பிரபஞ்சத்தில் சூரியன் இயக்குவது போல
1.நாம் எண்ணிய உணர்வுகள் வையோ அவை அனைத்தையும்
2.உயிர் உடலுக்குள் அணுக்களாக மாற்றிக் கொண்டே இருக்கிறது.