
கௌரவம் பார்ப்பதற்குப் பதிலாக உயிருக்குள் ஒளியைப் பெருக்கினால் “மதிப்பு…”
நமக்குள் இருக்கக்கூடிய உயிரான ஈசன் இந்த உடலை விட்டுப் போய்விட்டது என்றால் இந்த நீசத்திற்கு வேலையே இல்லை.
எத்தனை கௌரவம் எத்தனை துணி
எத்தனை அலங்காரம் எத்தனை சுகமான நிலை எத்தனை பஞ்சு மெத்தை எல்லாம் நாம் போட்டு வைத்திருந்தாலும் “உயிரான ஈசன்
போய்விட்டால்…” குப்பையில் போய் எரித்து விடுவார்கள்.
நாம் இங்கே பார்க்கும் கௌரவமெல்லாம்…
இப்படி இருந்தார்கள் என்றா பார்க்கின்றோம்…! ஆனால்
1.இழுத்துக் கொண்டு கட்டையில் வைக்கும் போதும்
2.மண்ணைக் கொட்டும் போதும் பார்த்துக் கொண்டே தான் இருக்கின்றோம்,
ஏண்டா இப்படிச் செய்கின்றாய்…? என்று கேட்கின்றோமா…! ஒரு நாளைக்கு மேல் வைத்திருந்தால் “நாற்றம்
அடிக்கும்…”
என்று தூக்கிச் சென்று விடுகிறோம்.
இப்படிப்பட்ட நிலையில்…
1.இந்த உடலில் ஈசன் இருக்கும் போதே
2.நீங்கள் கௌரவத்தைப் பார்ப்பதைக் காட்டிலும் அந்த மெய் ஞானியின் உணர்வை எடுத்து
3.இந்த நீசமான உணர்வு நமக்குள் வளராதபடி அதை வளர்த்துக் கொள்ளுங்கள்.
கௌரவப் பிரச்சினை என்று சொல்கிறோமே… அது
நமக்குள் நிறைய உண்டு. ஏனென்றால் நாம் அல்ல…!
அரசன் தன் கௌரவத்தில் என்ன செய்கிறான்…? யார்
என்ன தப்பு செய்தாலும் உடனே போர்
முறைதான்…!
நான் சொன்னேன்… கேட்கவில்லை
உடனே போர் முறை…!
நான் வலுவான நிலையில் இருக்கிறேன்…! நான் சொன்னதைக் கேட்கவில்லை என்றால் உடனே எதிர்த்துவிட வேண்டும்.
1.என்னை எதிர்த்துப் பழகி விட்டால் உன்னைச் சும்மா விட மாட்டேன்
என்று
2.அடுத்து
யார் என்ன சொன்னாலும் அங்கே கேட்க மாட்டார்கள்.
இது எல்லாம் அந்த உணர்வினுடைய வேலை… எதிர் நிலைகளில் வேலை செய்து கொண்டேதான் இருக்கும். எந்தெந்த உணர்வுகள் நமக்குள்
முன்னனியிலே நிற்கிறதோ அது வேலை செய்து கொண்டே இருக்கும்.
இதை மாற்றுவதற்குத்தான்
1.வாழ்க்கையில் எப்பொழுது தீமை வருகிறதோ… “ஆத்ம சுத்தி”
என்ற ஆயுதத்தை வைத்து
2.அந்த மகரிஷிகளின் அருள் சக்திகளைச் சேர்த்து உடனே அதை நிவர்த்தித்துப் பழக
வேண்டும் என்று சொல்கிறோம்.
உடலை
விட்டுச் சென்றால் அவனுடன் அவனாகி அவனாக நாம் ஆக வேண்டும். (உயிரான ஈசனுடன்)