ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

December 7, 2025

குரு காட்டிய வழியில் “மெய் உலகைப் படைப்போம்…”

குரு காட்டிய வழியில் “மெய் உலகைப் படைப்போம்…”


இன்றைய நிலையில் பூமியில் வாழும் உயிரினங்கள்… மிருகங்களிலிருந்து மனிதன் வரை மிகவும் சிரமமான நிலைகளில் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். காற்று மண்டலமோ நச்சுத்தன்மையாக மாறிக் கொண்டு வருகின்றது.
 
அதே சமயம்
1.மனிதனுடைய எண்ண அலைகள் அனைத்தும் சிந்தனையற்றதாகி
2.மனித உடலில் விளைய வைத்த அந்தச் சிந்தனையற்ற உணர்வுகள் இங்கே படர்ந்து கொண்டிருக்கின்றது.
3.அத்தகைய உணர்விலிருந்து நாம் மீள வேண்டும்.
 
 நாம் அனைவரும் அந்த மகரிஷிகளின் அருள் வட்டத்தில் இணைந்து நம்மையறியாது சேர்ந்த தீமைகள் நீங்கி நம்முடைய மூச்சும் பேச்சும் உலக நன்மை பயக்கும் சக்தியாக நாம் எண்ணிய உணர்வுகள் நமக்குள் தீமையை அடக்கும் சக்தியாகவும் நன்மை பயக்கும் சொல்லாகவும் செயலாகவும்நமக்குள் வளர வேண்டும்.
 
நம்முடைய உணர்வுகள் எண்ணங்கள் அனைத்தும் உலக மக்களைக் காத்திடும் நிலையாகவும் சகோதர உணர்வை வளர்த்திடும் நிலையாகவும் அது வளர்ந்திட வேண்டும். 
 
1.ன்றைய மெய்ஞானிகள் எல்லோரும் எவ்வாறு ஒன்று கலந்து உறவாடினார்களோ
2.அதைப் போன்று நம் உணர்வுகள் அனைத்தும் ஒன்றுபட்ட உணர்வாகச் செயல்பட வேண்டும்.
 
ஆகாத உணர்வுகள் வந்தாலும் சகோதர உணர்ச்சியுடன் ஒன்றுபட்டுச் சேர்த்துத் தீமையற்ற நிலையாக வளரும் நிலைக்கு வர வேண்டும்.
 
நாம் தனித்த சரீரங்களாக இருந்தாலும்
1.சகோதர உணர்வுடன் வாழ்ந்திடும்  உணர்வாக நாம் இடும் மூச்சலைகள் இங்கே படர்ந்து
2.அதன் வழிகளில் நம் பூமியான பரமாத்மாவும் பரிசுத்தப்படும் நிலை ஏற்படும்.
3.இந்தப் பரமாத்மாவில் இருந்து நுகர்ந்து எடுக்கும் அனைத்து உயிரான்மாக்களுக்கும் மெய்வழி பெறும் நிலை ஏற்படும்.
 
நாம் எந்தத் தாவர இனச்சத்தை நுகர்ந்து உணவாக உட்கொண்டு உடலாக ஆனோமோ இந்த மனித உடலுக்குள் எண்ணிய உயர்ந்த எண்ணங்கள் சூரியனின் காந்த சக்தியால் கவரப்பட்டுப் படர்ந்து… அதாவது
1.நாம் எந்த உணர்வின் தன்மை உணவாக எடுத்துக் கொண்டோமோ அதை உணவாக்கிய நம் உணர்வின் எண்ண அலைகள் படர்ந்து
2.நாம் செல்லும் இடங்களில் பரவியுள்ள நஞ்சு கொண்ட உணர்வுகளைத் தாக்கி
3.நஞ்சு கொண்ட தாவர இனமே வளராது மனிதனை வீழ்த்திடும் நிலையைத் தடுக்கும்.
 
அதன் மூலம் தாவர இனங்களும் சத்தான நிலைகளில் வளர்ந்து தை உணவாகப் புசிக்கும் மக்கள் அனைவரும் மெய் உணர்வினைப் பெறும் தகுதியாக உங்களுடைய மூச்சுகள் அமைய வேண்டும்.
 
ஆகவே… “மெய் உலகைப் படைக்கும் உணர்வாக உங்களுக்குள் விளைந்து நீங்கள் இடும் மூச்சலைகள் உலகில் உள்ள தீமைகளை நீக்கிடும் சக்தியாக மலர வேண்டும்.
 
எல்லாம் வல்ல குருநாதர் அருள் வழியில் அந்த மெய் ஞானியின் அருள் வட்டத்திற்குள் நம் எண்ணங்கள் சென்று அதன் வழிகளிலே நல் வினைகளைச் சேர்த்து அது வினைக்கு நாயகனாக ஆகி  
1.அந்த மெய் ஞானியின் அருள் வட்டத்தில் நாம் அனைவரும் இணைந்து
2.என்றும் நிலையான பெருவீடு பெருநிலைஎன்ற நிலையடைந்து மங்காத ஒளிச்சரீரத்தைப் பெறுவோம்.
 
மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் எமக்கு உணர்த்தியருளிய அருள் வழியை நீங்களும் பெற வேண்டுமென்ற இந்த ஆசையில்தான் இதை உணர்த்துகின்றோம்.
 
நீங்கள் எண்ணும் பொழுதெல்லாம் அந்த மகரிஷிகளின் அருள் சக்தி உங்களுக்குக் கிடைத்து… உங்களை அறியாது புகுந்த தீமைகளை நீக்கி நல்லுணர்வின் தன்மையாக நீங்கள் வளர வேண்டும் என்று பிரார்த்திக்கின்றேன்.
1.நமது குருநாதர் வழியில் நாம் அனைவரும் ஒருங்கிணைந்து செயல்படுவோம்.
2.மெய் உலகைப் படைப்போம்…!

“உங்கள் மூச்சலைகளால்…” விஷக் கதிரியக்கங்கள் மாய வேண்டும்

“உங்கள் மூச்சலைகளால்…” விஷக் கதிரியக்கங்கள் மாய வேண்டும்


இன்று கெமிக்கல் கலந்த அணுக்களைசெல்கள் அதாவது சிலிகன்களைப் போன்று…” நமக்குள் உணர்வின் எண்ணங்களைப் பதியச் செய்து விட்டனர்.
 
1.விஞ்ஞான அறிவு கொண்ட கெமிக்கல் கலந்த உணர்வின் ஆற்றல்
2.நமக்குள் இருக்கும் ஒவ்வொரு உணர்வுக்குள்ளும் இன்று அதிகமாகப் பதிந்து விட்டது.
3.அதிலிருந்து நாம் திசை திரும்பவே இல்லை.
4.மனிதன் என்ற எண்ணமே இங்கே போய்விட்டது,
5.இயந்திர வாழ்க்கை வாழும் நிலைக்கு இன்று நாம் வந்து விட்டோம். 
 
சிலிகனைப் போன்று நமக்குள் பதிவு செய்த நிலைகளில்இருந்த இடத்திலே இருந்து கொண்டே… ஆட்டிப்படைக்கும் தன்மைக்கு வந்து விட்டது இன்றைய விஞ்ஞானம்…! (இதை யாரும் மறுக்க முடியாது)
 
மனிதனுடைய சிந்தனைகள் சிதறுண்டு போகும் நிலைகளும் சூரியனே சுக்குநூறாகிக் கரையும் நிலைக்கும் இந்தப் பூமியினுடைய நிலைகளும் பொசுங்கிப் போகும் நிலைக்கு வருகின்றது அல்லது இருள் சூழ்ந்த நிலைக்கு வருகின்றது.
 
பூமியில் அணுகுண்டுகள் வெடித்தால் இவன் நீருக்குள்ளும் நீர் நிலைகளுக்குள்ளும் பதித்து வைத்திருக்கின்ற லேசர் கதிரியக்கங்கள் அணுக்கள் வெடிக்கும். தை அப்புறப்படுத்துவதற்கு முயற்சி எடுக்கின்றனர்.
 
அவ்வாறு எடுத்தாலும் அணு நீர் மூழ்கியின் தன்மையில் அந்த இயந்திரத்திற்குள் பாய்ச்சி இருந்தாலும் ஒவ்வொரு இயக்கத்திற்குள்ளும் அந்த அணுக் கதிரியக்கங்கள் தாக்கிடாதபடி அதை நீர் நிலைகளில்தான் மறைக்க வேண்டும்.
 
அல்லது வேறொரு மண்ணுக்குள் பதிய வைத்தாலும் பூமியின் வெப்ப அலைகள் கலக்கப்பட்டு இந்த அணுக்கள் மண்ணுக்குள் பூமிக்குள் வெகுதூரம் ஊடுருவி வரும் நிலைகள் வருகின்றது.
 
அணு உலைகள்… அது போன்ற மற்ற இடங்களிலிருந்து வருவதை
1.அந்தக் கசிவுகளை… கழிவுகளை எல்லாம் மண்ணுக்குள்ளே மறைக்க வேண்டுமென்று இவன் எண்ணுவான்.
2.ஆனால் இந்த அணுக்கதிரியக்கங்கள் பூமிக்குள் சென்றவுடன்
3.இயற்கையின் துடிப்பு கொண்டு கதிரியக்கச் சக்தியை அதிகமாகக் காட்டும்.
4.எதிர்நிலையான நிலை வரப்படும்போது பூமியில் நிலநடுக்கம் ஏற்படும் எல்லாமே போய்விடும். 
 
இந்த அளவுக்குத்தான் இன்றைய உலகின் நிலை இருக்கின்றது.
 
இயற்கையின் நிலைகளை அசுத்தப்படுத்திக் கொண்டு மனித உணர்வுக்குள்ளும் அதைப் பதியச் செய்து இன்று மனிதன் என்ற நிலையே கூண்டுடன் அற்றுப்போகும் நிலை வருகின்றது.
 
ஏகக் காலத்தில் குண்டுகள் வெடித்தாலும் வெடித்த நிலையில் புகை மண்டலங்களாகக் குவியப்பட்டுச் சூரியனுடைய ஆற்றல்மிக்க சக்தி வாய்ந்த கதிரியக்கங்கள் படாதபடி
1.பூமியில் இருக்கக்கூடிய நீர் வளங்கள் அனைத்துமே உறையும் தன்மை பெறும்.
2.இங்கே நாம் இருக்ககூடிய நிலைகள் அனைத்துமே உறையும் தன்மை வருகின்றது.
 
இதிலிருந்து வெளிப்படும் கதிரியக்கச் சக்திகள் சூரியனுடைய கதிர் வெப்பங்கள் கலந்தவுடன் இதிலிருந்து ஆவியாக வெளிப்படுத்தி இதே உணர்வின் தன்மைகள் சூரியனே மாறுபடும் காலம் வருகிறது. மனிதனாலே இந்தப் பிரபஞ்சமே சூனியமாகும் காலம் வந்துவிட்டது.
 
1.யாம் சொல்வது உங்களுக்குப் புதிராக இருக்கலாம்.
2.ஆனால் விஞ்ஞானிகள் கணக்குப் போட்டு நாளைக்கு இப்படி வரப்போகிறது என்று சொல்வார்கள்.
3.எழுதி வைத்துக் கொள்ளுங்கள்… யாம் சொல்வது (1989 ஆம் வருடம்) உங்களுக்குச் சாதாரணமாகத் தெரியலாம்.
 
நமது குருநாதர் ஒவ்வொரு அணுவிற்குள்ளும் ஊடுருவி மனிதனுடைய நிலைகள் எவ்வாறு இருக்கின்றது? அதிலே நீ எவ்வாறு செயல்பட வேண்டும்? என்று எமக்கு உபதேசித்தார்.
 
ஆகையினாலே இன்று மனித வாழ்க்கையினுடைய நிலைகளை விடுத்து இது சரிஇது தப்பு…!” என்று வரவேண்டாம். குறைகளைக் காண வேண்டாம்.
 
நாம் அனைவரும் மெய் ஒளியைக் காண வேண்டும். மெய்யைக் காண்போம். மெய்யுணர்வின் தன்மையை நாம் பெறுவோம். இதிலே நாம் அனைவரும் ஓரே குடும்பம் ஓரே நிலை தான்…
 
எத்தகைய இருள் வந்தாலும் உடனடியாக அதை மாற்ற வேண்டும். அதாவது மகரிஷிகளின் அருளாலே ந்த இருள் நீங்க வேண்டும்நாம் அனைவரும் ஒளி நிலை பெற வேண்டும் என்ற உணர்ச்சிகளைக் கூட்டுவதற்குத் தான் குருநாதர் ஆணையை யாம் செயல்படுத்துகிறோம்.
 
நாம் எடுக்கும் எண்ணங்கள் அனைத்தும் ஒன்றாக இருக்க வேண்டும். இந்த உணர்வின் ஒளிகள் நமக்குள் ஒன்றாக இருக்க வேண்டும்.
 
1.நாம் இடும் மூச்சலைகள் மழை நீராகக் கொட்ட வேண்டும்.
2.அப்படிப் பெய்யும் மழை நீரால் விஷக் கதிரியக்கங்கள் மாய வேண்டும்.
3.அத்தகைய விஷத் தன்மைகளை நீக்கும் ஆற்றல்களை ஒவ்வொருவரும் பெற வேண்டும்
4.அந்த மெய் உணர்வைத் தூண்டும் நிலைகளுக்குத் தான் இதை உபதேசிக்கின்றோம்.

சூனிய மண்டலம் - சூனியக் காலம்

சூனிய மண்டலம் - சூனியக் காலம்


அண்ட சராசரங்களைக் கடவுள் எப்படி உருவாக்கினார்…? கடவுள் யார்…? என்ற இந்த உண்மைகளை எல்லாம் பல முறை சொல்லி உள்ளேன். எதன் வழி உலகம் உருவாகின்றது…? என்று வேத நூல்களில் இது தெளிவாகக் கூறப்பட்டுள்ளது.
 
அதனை அறிந்து கொள்ளும் பொழுது
1.நாம் யார்…? எப்படி மனிதனானோம்…?
2.மனிதரான பின் உயிரின் உணர்வுகள் எப்படி ளியாகின்றது…?ன்ற உண்மையையும் நாம் தெரிந்து கொள்ளலாம்.
 
ஒளியாகும் தன்மை பெற்றது தான் ஆறாவது அறிவு கார்த்திகேயா. நம் ஆறாவது அறிவைச் சீராகப் பயன்படுத்தினோம் என்றால் நாம் அறிந்து கொள்ளும் உணர்வுகளில் அடுத்து இந்த உடலுக்குப் பின் உயிரைப் போன்றே உணர்வின் அணுக்கள்ன்றாகின்றது.
 
இவை அனைத்தும்... அகஸ்தியனால் கூறப்பட்டு அவனுக்குப் பின் வந்த வரிசைத் தொடரில் ஞானிகளால் வெளியிடப்பட்ட பல உண்மைகள் இந்த உலகெங்கிலும் பரவி உள்ளது.
 
அகண்ட அண்டம் என்பது சூனியம் நிலைகள் கொண்டது. இது சூனியக்காலம் என்று சொல்வார்கள். குண்டலினி யோகா ராஜ யோகம் செய்பவர்கள்
1.சூனியக் காலத்திற்குப் போகிறோம் என்பார்கள்.
2.சூனியக்காலம் என்பது இருண்ட உலகம்.
3.ருண்ட உலகில் தான் சிவன் இருக்கின்றார் என்று அவர்கள் உணர்வைச் செலுத்துகின்றார்கள்.
 
சூனியக் காலம் என்றால் என்ன…? என்பதைப் பற்றி அகஸ்தியன் தெளிவாகக் கூறியுள்ளார்.
 
இப்பொழுது நாம் காணும் அனைத்து நிலைகளும் சூனியத்திலிருந்து உருவானது…” அது இருண்ட நிலைகள் பெற்றது.
1.நாளடைவில் அது ஆவித்தன்மை அடைந்து அந்த ஆவித் தன்மை அடைவதற்கே முதலில் வெப்பம் என்ற நிலை வருகின்றது.
2.வெப்பம் என்ற நிலை வரும் பொழுது அசையும் நிலை அதாவது இயக்கும் தன்மை வருகின்றது.
3.வெப்பத்தன்மை வருவதற்கே சூனியம் தான் காரணம் சூனியம் உருவாவதற்கு விஷம் தான் காரணம்.
 
அகண்ட அண்டம் இருண்ட உலகமாக இருந்ததால் அதைச் சூனிய உலகம் என்று சொல்வார்கள். வேதங்களில் இதைத்தான் சூனிய உலகம் என்று குறிப்பிட்டுள்ளார்கள்.
 
நாளுக்கு நாள் நாளுக்கு நாள் அது விஷமாக மாறி
1.விஷம் அடர்த்தி அடையப் படும்பொழுது விஷமற்றதைத் தாக்கி மோதலாகி வெப்பம் உருவாகின்றது.
2.வெப்பம் என்ற நிலை வரும் போது… வெப்பமான பின் விரிந்து ஓடும் சக்தி பெறுகின்றது.
3.விரிந்து ஓடும் சக்தி வரும் பொழுது அதிலே ஈர்க்கும் காந்தமே வருகின்றது.
 
இதை உங்களிடம் பதிவு செய்கிறேன். பதிவு செய்ததை அடுத்து எண்ணி நீங்கள் தியானிக்கும் பொழுது
1.அந்த நேரத்தில் உங்கள் உணர்வுகள் எல்லாம் வான்வீதியில் அகண்ட காலத்திற்கு சூனியக் காலத்திற்குச் சென்று
2.சூனியம் எப்படி உருவானது…? என்பதை நீங்கள் அறிதல் வேண்டும்.
 
சூனியத்திலிருந்து எப்படி வெப்பமானது…? வெப்பத்திலிருந்து அணுக்கள் எப்படி சுக்கு நூறாகச் சிதறி ஓடுவதும் அதிலே ஈர்க்கும் காந்தம் எப்படி உருவானது என்ற நிலையை நீங்கள் அறியலாம்.
 
குருநாதர் எமக்குக் கொடுத்த உண்மையின் உணர்வினை உங்களுக்குள் பதிவாக்கி அந்த நினைவினை நீங்கள் கூட்டிச் செல்லும் பொழுது இந்த முயற்சி உங்களுக்கு வெற்றியைத் தரும்.
 
ஏனென்றால்
1.ஆதி… அந்த ஆரம்ப நிலையை நீங்கள் அறிந்து கொள்கிறீர்கள்.
2.உலக இயக்கத்தின் உண்மைகளை நீங்கள் அறியும் சந்தர்ப்பம் வருகின்றது.
3.அதே சமயத்தில் அந்தச் சூனியம் எப்படி ஒளிமயமாகின்றது…? என்பதையெல்லாம் நீங்கள் அறிய வேண்டும்.
 
இயற்கையின் உண்மை நிலைகளை நீங்கள் அறிய வேண்டும் என்பதற்கே இதைப் பதிவு செய்கின்றேன்.
 
காரணம் வாழ்க்கையின் நிலைகளை மட்டும் தான் அடிக்கடி பேசுகின்றோம்.
 
சூனியத்தைப் பற்றிப் பேசினாலும் அவ்வளவாக எடுத்துக் கொள்வதில்லை...! என்னமோ சாமி சொல்கின்றார்…! என்று சிலர் எண்ணத்தால் இதை மறுக்கின்றார்கள். மனத்தால் மறுத்து… சீக்கிரம் எதாவது சொன்னால் நாம் தெரிந்து கொள்ளலாம் அந்தச் சக்தியைப் பற்றித் தெரிந்து கொள்ளலாம் அந்தச் சக்தியைப் பெறலாம் என்று தான் மனதை ஓட்டுகின்றார்கள்.
 
ஆகவே… சூனியத்திலிருந்து தோன்றப்பட்டது தான் இயற்கையின் சக்திகள் அனைத்துமே…” என்பதை நாம் முதலில் உணர வேண்டும்.