
தியானப் பயிற்சி
அம்மா அப்பா அருளால் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் அருள் சக்தியால் அகஸ்தியன் துருவனாகி துருவ மகரிஷி ஆகித் துருவ நட்சத்திரமாக வாழ்ந்து வளர்ந்து கொண்டிருக்கும் அதனின்று வெளிப்படும் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று ஏங்கி உங்கள் நினைவைத் துருவ நட்சத்திரத்தின் பால் செலுத்துங்கள்.
1.கண்ணின் நினைவை அங்கே கொண்டு செல்லுங்கள்... கண்ணால் ஈர்க்கும் சக்தி வரும்.
2.இந்த உணர்வுகள் நெஞ்சின் எலும்புக்குள் ஊழ் ஊழ்வினை என்ற வித்தாக இப்பொழுது பதிவாகின்றது.
3.உங்கள் நெஞ்சில் பதிவாகும் உணர்வுகள் தெரிய வரும்.
கண்களால் துருவ நட்சத்திரத்தின் உணர்வைக் கவரும் சக்தி வருகின்றது. கருமணிகளில் ஈர்க்கும் சக்தி கிடைக்கும். கண் கனமாக இருக்கும். கருமணியில் கவரப்படும் பொழுது நெஞ்சிலே ஊழ் வினை என்ற ஞானவித்து பதிவாகும்.
கண்களை மூடுங்கள். புருவ மத்தியில் இயங்கிக் கொண்டிருக்கும் உயிரான ஈசனிடம் நினைவைச் செலுத்துங்கள். துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று கண்ணின் நினைவை உயிருடன் இணையுங்கள்.
இப்பொழுது உயிரால் கவரப்படும் சக்தியாக மாறுகின்றது.
முதலில் கண்களிலே கவர்ந்தோம். கவர்ந்த உணர்வு நுகரப்படும் போது உயிரில் பட்டுத் தான் அது இயங்கும்.
ஆனால் கண்ணில் கவர்ந்த நிலைகள் ஈர்க்கும் சக்தி பெறச் செய்து ஊழ்வினை என்ற வித்தாகப் பதிவாகி துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று உயிரான ஈசனிடம் வேண்டி ஏங்கித் தியானியுங்கள்.
1.உயிர் வழி துருவ நட்சத்திரத்தின் சக்தியை ஈர்க்கும் சக்தி பெறுகின்றீர்கள்.
2.உங்கள் புருவ மத்தியில் கனமாக அந்த ஈர்ப்பு நிலைகள் தெரிய வரும்.
3.துருவ நட்சத்திரத்தின் சக்தி உயிரில் மோதும் பொழுது சில வெளிச்சங்களும் தெரிய வரும்.
இப்பொழுது உங்கள் கண்ணின் நினைவினை உங்கள் ரத்த நாளங்களில் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்று நினைவைச் செலுத்துங்கள்.
இரத்த நாளங்களில் எத்தனையோ கோடி உணர்வுகள் உண்டு. அந்த உணர்வுகளை இயக்கும் கருத்தன்மை உண்டு. ஜீவணுக்கள் உண்டு.
துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி ரத்தங்களில் உள்ள ஜீவான்மா ஜீவணுக்கள் அனைத்தும் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று ஏங்கித் தியானியுங்கள்.
எறும்பை நசுக்கினாலும் அந்த ஆன்மா ரத்தத்தில் தான் இருக்கும் மனிதன் மேல் பண்பு கொண்டு வாழ்ந்திருந்தாலும் அந்த ஆன்மா நமக்குள் வந்தால் அதனுடைய இயக்கத்தை உண்டாக்கும்.
எறும்பின் உயிரான்மா மனிதனாக உருப் பெறும் கருத்தன்மை அடைகின்றது.
1.ஆனால் மனிதனுடைய ஆள்மா வந்தால் அவனுக்குள் ஈர்க்கப்பட்ட துயரம் எதுவோ அந்த உணர்வை நமக்குள் இயக்கும்.
2.அத்த இயக்கம் நமக்குள் வராதபடி தடுக்க துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி ரத்த நாளங்களில் கலந்து
3.அதில் உள்ள ஜீவான்மா ஜீவணுக்கள் அனைத்தும் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற அருள்வாய் ஈஸ்வரா என்று
4.கண்ணின் நினைவை ரத்தத்தில் செலுத்தி ஏங்கித் தியானியுங்கள்.
இப்பொழுது இரத்த நாளங்களிலே புது உணர்ச்சிகள் தோன்றும். உடலிலேயே உற்சாகம் ஊட்டும் உணர்வு வரும்.
துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி எங்கள் ரத்தங்களிலே கலந்து எங்கள் உடல் முழுவதும் படர்ந்து எங்கள் உடல் உறுப்புகளை உருவாக்கிய அணுக்கள் அனைத்தும் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற வேண்டும் என்று ஏங்கித் தியானியுங்கள்.
எல்லா உறுப்புகளிலும் நினைவைச் செலுத்துங்கள். இவ்வாறு செய்வதனால் உயிர் வழி உடலுக்குள் செல்லும் தீய உணர்வுகளைத் தடைப்படுத்துகின்றோம்.
அதே சமயத்தில் உடல் உறுப்புகளை உருவாக்கிய அணுக்கள் அனைத்திலும் துருவ நட்சத்திரத்தின் வலுவைச் சேர்க்கின்றோம்.
1.நமது ஈர்ப்பு வட்டத்தில் உள்ள தீய அணுக்களுக்குண்டான உணர்வுகளை
2.உடலில் ஈர்ப்பு வட்டத்திலிருந்து நகர்த்திச் சென்று விலக்கி விடுகின்றது... அல்லது ஒதுக்கி விடுகின்றது.
3.இப்பொழுது நல்ல அமைதி கிடைக்கும். தீய உணர்வுகள் அனைத்தும் நம் ஈர்ப்பு வட்டத்திலிருந்து அகன்று சென்று விடுகிறது.
துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எங்கள் சிறுகுடல் பெருங்குடலை உருவாக்கிய அணுக்கள் அனைத்தும் அந்தச் சக்தி பெற வேண்டும் என்று எண்ணுங்கள்.
முதல் முகப்பில் உள்ள அந்தச் சிறுகுடலில் தான் முதலில் ஆகாரங்கள் செல்கின்றது. அந்த ஆகாரத்தை ஜீரணிக்கும் சக்தி அந்த அணுக்களுக்குத் தான் உண்டு.
துருவ நட்சத்திரத்தின் வீரிய சக்தியை அந்த அணுக்களுக்குப் பெறச் செய்யுங்கள். அதன் கீழ் உள்ள பெருங்குடலை உருவாக்கிய அணுக்கள் அனைத்தும் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று ஏங்கித் தியானியுங்கள்.
இப்படித் தியானித்து வந்தால் அந்த உறுப்புகள் உங்களுக்குத் தெளிவாகத் தெரிய வரும். இதை எடுக்க எடுக்க அதை உணர முடியும் அறிய முடியும் உங்கள் உடல் உறுப்புகளில் என்ன நடக்கிறது…? என்று.
1.சிறுகுடல் பெருங்குடல் உருவாக்கிய அணுக்கள் வீரியமடையும் பொழுது குடலில் உள்ள குறைபாடுகள் நீங்கும்.
2.வயிற்று வலியோ மற்ற கோளாறுகளோ அது எல்லாம் நீங்கும்.
துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி எங்கள் கணையங்கள் முழுவதும் படர்ந்து கணையங்களை உருவாக்கிய அணுக்கள் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற அருள்வாய் ஈஸ்வரா.
சிறுகுடல் பெருங்குடல் ஆகாரத்தின் சத்துகளை அது உருவாக்கி அமிலமாக மாற்றி வெளி வருவதை உங்கள் உடலில் உள்ள கணையங்கள் மூன்று விதமாகப் பிரிக்கின்றது.
துருவ நட்சத்திரத்தின் சக்தியை அங்கே செலுத்தப்படும் பொழுது ஆகாரத்தில் கலந்து வரக்கூடிய விஷத்தன்மைகளை மாற்றி நல்ல உணர்வை உருவாக்கும் தன்மை கணையங்களுக்கு ஏற்படுகின்றது.
1.உடலை ஒட்டி இருக்கக்கூடிய கணையங்களின் உணர்ச்சிகளை...
2.அந்த உறுப்பின் இயக்கத்தை உணர முடியும்... அறிய முடியும்.
துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி எங்கள் கல்லீரல் மண்ணீரல் முழுவதும் படர்ந்து கல்லீரல் மண்ணீரலை உருவாக்கிய அணுக்கள் அனைத்தும் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று கண்ணின் நினைவைச் செலுத்தி ஏங்கித் தியானியுங்கள்.
கல்லீரலை மண்ணீரலை உருவாக்கிய அணுக்கள் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெறும் பொழுது உற்சாகமடையும். அங்கிருக்கும் குறைகளை நீக்கும் அரும்பெரும் சக்தியாக மாறும்.
துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எங்கள் நுரையீரல் முழுவதும் படர்ந்து நுரையீரலை உருவாக்கிய அணுக்கள் அனைத்தும் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று கண்ணின் நினைவை நுரையீரலில் செலுத்துங்கள்.
நுரையீரலை உருவாக்கிய அணுக்கள் உற்சாகம் அடையும். இந்த வீரிய சக்தியை நீங்கள் உருவாக்குகின்றீர்கள்.
துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி எங்கள் சிறுநீரகங்கள் முழுவதும் படர்ந்து சிறுநீரகங்களை உருவாக்கிய அணுக்கள் அனைத்தும் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற அருள்வாய் ஈஸ்வரா. கண்ணின் நினைவைக் கிட்னியில் செலுத்தி ஏங்கித் தியானியுங்கள்.
இவ்வாறு செலுத்தினோம் என்றால் உப்புச் சத்து சர்க்கரைச் சத்து வாதநீர் போன்ற நிலைகளைச் சுத்திகரித்து நல்ல ரத்தமாக மாற்றும் சக்தி பெறுகின்றது.
துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எங்கள் இருதயம் முழுவதும் படர்ந்து அதை உருவாக்கிய அணுக்கள் அனைத்தும் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற அருள்வாய் ஈஸ்வரா. இப்போது அந்த இருதயம் சுறுசுறுப்படைவதை உங்களால் உணர முடியும்
துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எங்கள் கண்களில் உள்ள கருமணிகள் இரண்டும் பெற அருள்வாய் ஈஸ்வரா.
1.கண்களிலே துருவ நட்சத்திரத்தின் சக்தி ஈர்க்கப்படும் பொழுது கருமணியில் வெளிச்சம் வந்து கொண்டே இருக்கும்.
2.நெஞ்சிலே உள்ள எலும்புக்குள் துருவ நட்சத்திரத்தின் உணர்வு பதிவாகிக் கொண்டே இருக்கும்.
குறைகளையோ வேதனைகளையோ மற்றவைகளைப் பார்த்தவுடனே அடுத்த நிமிடமே ஈஸ்வரா என்று துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி கருமணிகளில் படர வேண்டும் என்று ஏங்கித் தியானித்தால் கருமணிகளில் படும் விஷத்தன்மைகளைச் சுத்தப்படுத்தும்.
துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி எங்கள் நரம்பு மண்டலம் முழுவதும் படர்ந்து நரமபினை உருவாக்கிய அணுக்கள் அனைத்தும் அந்தச் சக்தி பெற அருள்வாய் ஈஸ்வரா என்று கண்ணின் நினைவினை நரம்பு மண்டலம் முழுவதும் செலுத்தி ஏங்கித் தியானியுங்கள்.
நரம்பு மண்டலத்தில் உள்ள வாதநீர் பித்த நீர் விஷ நீர் முடக்குவாதம் போன்ற நிலைகள் வராதபடி அந்த அணுக்களை வீரியமடையச் செய்யும் பொழுது நரம்பு மண்டலம் சீராகும். வாத சம்பந்தப்பட்ட பல நோய்களைத் தவிர்க்க இது உதவும்
துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி எங்கள் எலும்பு மண்டலம் முழுவதும் படர்ந்து எலும்பு மண்டலத்தை உருவாக்கிய அணுக்கள் அனைத்தும் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரருளும் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று ஏங்கித் தியானியுங்கள்.
துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எங்கள் நெஞ்சின் எலும்புக்குள் படர்ந்து அங்கிருக்கும் ஊன் முழுவதும் படர்ந்து ஊனை உருவாக்கிக் கொண்டிருக்கும் அணுக்கள் அனைத்தும் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற அருள்வாய் ஈஸ்வரா.
1.இவ்வாறு செய்யும் பொழுது துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை எளிதில் பெறக்கூடிய தகுதி பெறுகின்றோம்.
2.நாம் எண்ணும் பொழுதெல்லாம் துருவ நட்சத்திரத்திலிருந்து வரக் கூடிய சக்தியைப் பெறுகின்றோம்.
3.அந்த சக்தி அங்கே நெஞ்சின் ஊனுக்குள் படர்வதை இப்போது உணரலாம்.
துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எங்கள் தசை மண்டலம் முழுவதும் படர்ந்து தசைகளை உருவாக்கிய அணுக்கள் அனைத்தும் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற அருள்வாய் ஈஸ்வரா.
துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரழகும் எங்கள் தோல் மண்டலம் முழுவதும் படர்ந்து தோலை உருவாக்கிய அணுக்கள் அனைத்தும் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற அருள்வாய் ஈஸ்வரா.
தோல் மண்டலத்தை உருவாக்கிய அணுக்களுக்குள் துருவ நட்சத்திரத்தின் சக்தியைச் செலுத்தப்படும் பொழுது உடலிலே பெரிய வெளிச்சமே தோன்றும். உடலில் இருந்து வெளிச்சங்கள் வரும்.
1.துருவ நட்சத்திரத்தின் பேரருளை இவ்வாறு எடுத்து ஒரு பெரிய பாதுகாப்புக் கவசமாக அமைத்துக் கொண்டால்
2.விஞ்ஞானத்தினால் வரும் தீமைகளிலிருந்து விடுபட்டு நல்ல உணர்வுகளை வளர்த்துக் கொள்ள இந்தச் சந்தர்ப்பம் உங்களுக்கு உதவும்.
இந்தத் தியானத்தை அனுதினமும் காலையில் ஐந்தரை மணியிலிருந்து ஆறரை மணிக்குள் ஒரு அரை மணி நேரமாவது எடுக்க முடிந்தால் எடுங்கள். முக்கியமான நேரம் அது... அந்த நேரத்திலே அருள் சக்திகளைச் சேர்த்துத் தீமைகளைத் தூய்மைப்படுத்திக் கொள்ளுங்கள்.