
என் குடும்பத்தைச் சிரமப்பட வைத்துத் தான் உலக மக்கள் வாடுவதைப் பற்றி எனக்கு உணர்த்துகிறார் குருநாதர்
ஆரம்பத்திலே என் மனைவி நோயால் வாடியது… பின் குரு அருளால் நலம் அடைந்து எழுந்தது.
அதற்கு அப்புறம் குருநாதர் காட்டிய
அருள் வழியில் உலக அனுபவம் பெறுவதற்கு நான் வெளியிலே சென்று
விடுகிறேன்.
ஆனால் குடும்பத்தில் எத்தனையோ கஷ்டங்கள் வருகிறது. இந்த உணர்வுகள் உன்னை எப்படித் தாக்குகிறது…? நான் கொடுத்த சக்தி கொண்டு அதிலிருந்து குடும்பத்தை எப்படி மீட்ட வேண்டும்…? என்று குரு காட்டுகின்றாற்.
நான் வெளியில் சென்ற பின்
என் குடும்பத்தில் எத்தனையோ அவஸ்தைகள் பட்டார்கள். ஆனால்
அன்று அவர்களுக்கு நான் எதையும் செயல்படுத்த முடியவில்லை.
1.ஒவ்வொரு மனிதரும் வாழ்க்கையில் சந்தர்ப்பத்தில் எத்தனையோ அவஸ்தைகள் படுகின்றார்கள்.
2.அது எல்லாம் எப்படி ஏற்படுகின்றது…? அதிலிருந்து அவர்களை மீட்டும் வழி என்ன…? என்பதைத் தெரிந்து கொள்வதற்குத்தான்
3.என் குடும்பத்தை இப்படிச்
சிரமப்பட வைத்து…
அதை வைத்து எம்மை அறியும்படி
செய்கின்றார் குருநாதர்.
ஆசை என்ற நிலையில் என் குடும்பத்தைக் காப்பாற்ற வேண்டும் என்றால் குருநாதர் கொடுத்த
சக்தியை நான்
சுயநலத்திற்குப் பயன்படுத்த வேண்டும்… மற்றவர்களை ஏமாற்ற வேண்டும். ஆனால் அப்படி நான் செய்யவில்லை…!
வீட்டிலே பட்டினியாக இருக்கின்றார்கள். இன்றைக்கும் அதையெல்லாம் யாம் எண்ணினோம் என்றால் அழுகை தான் வரும்.
சுற்றுப்பயணம்
செய்துவிட்டு வீட்டிற்கு வருகின்றேன்.
1.பார்த்தால் மூன்று நாட்கள் நான்கு நாட்கள் பட்டினியாக இருக்கின்றார்கள்.
2.அனைவருமே அப்படியே இறுகிப் போய் இருக்கின்றார்கள் யாரிடம் பணம் கேட்பது…? என்ற நிலை இல்லாதபடி…!
நான் மங்களூரில் இருந்து வரும் பொழுது அங்கே எனக்கு உதவி செய்பவர்கள்
பணத்தைக் கொடுப்பார்கள்.
பஸ்ஸிலே வந்து கொண்டிருந்தேன். ஒருவன் பணம் இல்லை என்றான்.. அவனிடம் அதைக் கொடுத்து விட்டேன்.
மற்றவர்கள் கேட்கும் பொழுது கொடுத்து
விடுகின்றேன்.
1.என் வீட்டுக்குப் போக வேண்டும் அவர்களுக்குக் கொடுக்க வேண்டும் என்ற நினைப்பு வரவில்லை.
2.ஏனென்றால் குரு அவ்வாறு செயல்படுத்திக்
காசை அங்கேயே கொடுக்கும்படி செய்கின்றார்.
நான் வீட்டிற்கு வந்தால் வெறும் பாக்கெட்டாகத்
தான் வருகின்றேன். வீட்டிற்கு வந்து தான் நான் சாப்பிட வேண்டும்.
வெளியிலே நான் எந்த வீட்டிற்குச் சென்றாலும் சாமி வாருங்கள்.. நீங்கள் சாப்பிடுங்கள் என்று சொல்கின்றார்கள். எனக்குச்
சாப்பாடு கிடைக்கின்றது.
1.ஆனால் என் குடும்பத்தில் பட்டினியாக இருக்கின்றார்கள்… எல்லோரும் வாடுகின்றார்கள்.
2.அப்பொழுது இதை வளர்ப்பதா…? அதை வளர்ப்பதா…? நான் எதைச் செய்வது…? என்று சிக்கலான நிலையை குருநாதர் கொண்டு வருகின்றார்.
பட்டினியாக இருப்பதைப்
பார்த்தபின் என் உறவினர்களிடம் நண்பர்களிடம் சென்று “வீட்டிலே
பட்டினியாக இருக்கின்றார்கள் ஒரு ஐந்து ரூபாய் கொடுங்கள்…” என்று கேட்கின்றேன்.
எங்களுக்கும் அவர்கள் பணம் தர வேண்டும். இருந்தாலும் என்ன சொல்கிறார்கள்…?
ரூபாய் என்றால் நீ என்ன நினைக்கின்றாய்…? ஐந்து ரூபாய் என்றால் சும்மா வந்துவிடுமா…?
நாங்கள் நன்றாக இருக்கும் போது எங்களிடம் பணம் வாங்கி இருக்கின்றீர்கள். அதிலிருந்து
ஒரு ஐந்து ரூபாய் கொடுத்து உதவி செய்யலாம் அல்லவா என்று கேட்கின்றேன்.
நீ நினைத்தவுடன் ஐந்து ரூபாய் வந்துவிடுமா
என்று இப்படிக் கேட்கின்றார்கள். (குருநாதர் அங்கே உணர்த்துகிறார்)
குழந்தைகள் பட்டினியாக இருக்கிறார்கள்… ஒரு வேளை
சோறாவது சாப்பிட வேண்டும் அல்லவா. நான் வந்து இப்பொழுது தான் அதைப் பார்க்கின்றேன் என்று சொல்கின்றேன். எனக்குத் தெரிந்தவர்கள் எல்லோரிடம் இப்படிக் கேட்கின்றேன்.
நீங்கள் கேட்கும் பொழுது எங்களிடம் கொடுப்பதற்குப் பணம் இல்லையே என்று இப்படித்தான்
சொல்கின்றார். நீங்கள் கேட்டவுடன் ரூபாய் வந்துவிடுமா…?
நன்றாக இருக்கும் பொழுது எங்களிடம் வாங்கினீர்கள்.
இந்தக் கஷ்டமான நேரத்தில் அதைக் கொடுத்து உதவி செய்யலாம் அல்லவா என்று கேட்டால் இதெல்லாம் எங்களிடம் நீங்கள் கேட்கக் கூடாது
என்கிறார்கள்.
நாங்கள் கொடுக்கிறோம் என்று தான் சொல்கிறோம். ஆனால் இப்பொழுது எங்களிடம் பணம் இல்லை. நீங்கள் ஏன் சும்மா அதைக் கேட்கிறீர்கள்…?
யாராவது இதற்கு சிபாரிசு செய்து பணத்தைக் கொடுங்கள் என்று சொன்னால் நீங்கள் யார் இவருக்குப் பணம் கொடுக்கச் சிபார்சு செய்வது…?
என்று அவர்களுடன் சண்டைக்குச்
செல்கின்றார்.
காரணம்
1.இது எல்லாம் குருநாதர் அனுபவத்தில் காட்டிய
நிலைகள்.
2.ஒரு மனிதன் இயற்கையில் வாழ்க்கையில் வலுப் பெறும் பொழுது எப்படி வாழ்கின்றார்கள்…?
3.ஆனால் அதிலே தாழ்ந்த பின்
என்ன நடக்கிறது…?
4.மனிதன் வாழ்க்கையில் உண்மையின் உணர்வின் தன்மை தெளிவாக வேண்டும் என்றால் அது எப்படி…? என்று
எம்மை அறியும்படி செய்தார்.