
உலக மக்களை அருள் ஒளியின் சுடராக மாற்றும் சக்தி பெறுங்கள்
எந்தச்
செல்வமும் நமக்குச் சொந்தமாக வருவதில்லை. ஆனால்
1.அருள் ஞானத்தை நமக்குள் சொந்தமாக்கி விட்டால் இருளை வென்று ஒளியின் உணர்வாக ஆக்கும் தன்மை பெறுகின்றோம்.
2.அதையே இந்த மனித வாழ்க்கையில் நாம் சொந்தமாக்கிப் பயன்படுத்த வேண்டும்.
எந்த நிலையில் வாழ்ந்தாலும் இந்த உடலும்
சொந்தம் ஆவதில்லை. இந்த உடலால் சம்பாதித்த செல்வமும் நிலைத்ததில்லை.
கோடிக் கோடிச்
செல்வங்களைப் பெற்றாலும் பல ஆயிரம் பேரைக் கொன்று குவித்து நான் சுகமாக வாழ்வேன்
என்றாலும் அப்படிப்பட்ட அரசனும் இன்று இருந்ததில்லை.
பேய் மனமாக அவன் சென்று விட்டான்.
அவன் உணர்வுகளும் பேய் மனமாக
மாறி விட்டது.
1.அவன் ஆசையைப்
பின்பற்றிய அனைவரும் அவன் வழியிலே சென்று மதம் என்ற வெறி கொண்டு
2.மனிதனை மனிதனே அழித்துக் கொண்டு கொன்று குவித்து அதைக் கண்டு மகிழும் நிலையை இன்று
உருவாகிவிட்டது.
அரசன் சென்ற நிலையை இன்று உருவானது.
அதன் உணர்வு கொன்று குவிக்கும் உணர்வாக வளர்ந்து விட்டது. மதம் என்ற போர்வையை அவன் உருவாக்கினான்.
அதே மதத்தின் அடிப்படையில் இன்று நஞ்சு கலந்த
உணர்வாக மதத்திற்குள் இனமென்று வளர்ந்து விட்டது. தன் இனமே பெரிது என்றும் மற்ற இனத்தைப் பழித்துப் பேசினான்.
பழி தீர்க்கும் உணர்வுகளே இங்கு வளர்ந்தது.
மனிதனுக்கு மனிதனே உருக்குலையச்
செய்யும் நிலையாகச் சிந்தித்து வாழும் நிலைகள் செயலிழந்து சிந்தனையற்ற செயலாகவே செயல்பட்டு… சிந்தனையற்ற செயல்களை நாம் நுகரும் பொழுது
நஞ்சான உணர்வுகளை வளர்த்து நஞ்சை உணவாக உட்கொள்ளும் நஞ்சின் செயலாக்கங்களாக உருப்
பெற்றுவிட்டது.
நஞ்சை வளர்த்திடும் நிலையே நமக்குள் வளர்கின்றது.
இதைப் போன்ற நிலையில் இருந்து நாம் மீள வேண்டும்.
1.அதற்குத்தான் எனது குரு அருளை உங்களுக்குள்
பதிவு செய்கிறேன்…
நமது குரு என்ற நிலையில் அனைவரும் வாழ வேண்டும்.
2.முதலில் எமது குருவாக இருந்தார். இந்த உணர்வின்
தன்மையை நீங்கள் நுகர்ந்தறிந்து இந்த உணர்வின் வழி சென்றால்
3.”நமது குரு…”
என்று நமக்குள் ஒன்று சேர்த்து வாழும் நிலை வரும்.
சாமியையும் குருவையும் பிரித்து விடாதீர்கள்…! நமது குரு என்று அருள் வழியில் ஒன்றி வாழ்தல் வேண்டும்.
இந்த உணர்வின்
துணை கொண்டு உலக மக்கள் நஞ்சிலிருந்து விடுபட வேண்டும். அருள் ஞானம் பெறுதல் வேண்டும். இந்த உணர்வைத் தியானித்து அதை நாம் பெருக்க வேண்டும்.
பகைமை கொண்ட உணர்வுகள் இங்கே வந்தாலும் இந்தப் பகைமை வளராது தடுக்க அருள் ஒளியைப் பெற்று உலக மக்கள் அருள் ஞானத்தைப் பெற்று வாழ்ந்திட வேண்டும்.
1.இந்தப்
பூமியை அருள்
ஞானத்தை வளர்த்திடும் பூமியாக ஆக்கிட
வேண்டும்.
2.அருள் ஞானிகள் பிறந்த பூமியில் அருள் ஒளியின் சுடரை எண்ணி வளர்த்து
3.இந்த இந்தியா என்ற எல்லையை எண்ணும் பொழுதெல்லாம் உலக மக்கள்
மனம் மாறி
4.அருள் ஒளியின் சுடராக மாறும் நிலைக்கு வர வேண்டும்.