ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

May 28, 2026

வாழ்க்கையில் நாம் பொருளறிந்து செயல்பட வேண்டியதன் முக்கியத்துவம்

வாழ்க்கையில் நாம் பொருளறிந்து செயல்பட வேண்டியதன் முக்கியத்துவம்

 

மனிதனாக இருக்கும் பொழுது ஒன்று சேர்த்த உணர்வுகள் நமக்குள் இல்லை. பலவிதமான உணர்வுகள் மோதும் பொழுது தான் மேல் வலி தலைவலி காய்ச்சல் இடுப்பு வலி தசைவலி வருகின்றது. ஒன்றிணைந்த உணர்வுகள் இல்லாததால் தான் கடும் நோய்கள் வருகின்றது.

1.அந்த ஒன்று சேர்த்த உணர்வின் தன்மையை வளர்க்க உணர்வுகளை ஒன்றென இணைக்க
2.ஒவ்வொருவர் உயிரையும் ஈசனாக நாம் மதித்தல் வேண்டும்... உடலை ஆலயமாக மதித்தல் வேண்டும்.
3.மனிதனாக உருவாக்கிய அரும்பெரும் குணங்களை மிக மிக சக்தி வாய்ந்த நிலையாக மதித்தல் வேண்டும்.

உங்களை நான் துதிக்கிறேன் என்றால் என்னை நான் மதிக்கின்றேன் என்று பொருள். அதற்குத் தான் ஆலயத்திலே தெய்வ குணங்களைப் பெற வேண்டும் தெய்வ நிலையாக இருக்க வேண்டும் ஆலயம் வருவோர் அந்தத் தெய்வ குணத்தைப் பெற வேண்டும் என்று நாம் எண்ணும்படி ஞானிகள் காட்டியுள்ளார்கள்.

தீப ஆராதனை காட்டுகின்றார்கள் என்றால் அப்போது அந்த வெளிச்சத்தால் அங்கிருக்கும் பொருள்கள் தெரிகின்றது. "பொருளறிந்து செயல்படும் இச்சக்தி பெற வேண்டும்..." என்று அப்போது நாம் எண்ண வேண்டும்.

1.பொருளறிய வேண்டிய நிலைகள் இந்த வாழ்க்கையில் ஏராளம் இருக்கின்றது.
2.ஆனால் "அறிந்து விட்டோம்..." என்ற நிலையில் தான் நாம் இருப்போம்.

நம் குழந்தை மீது அன்பும் பண்பும் பாசத்தையும் செலுத்தி இருப்போம். அவனை எங்கேயாவது ஒரு வேலைக்கு அனுப்பி... அவன் வரத் தாமதம் ஆனால் ஏன்டா இப்படி நேரமாகிவிட்டது...? என்று கேட்கின்றோம். அந்த இடத்திலே "அழுத்தம்" அதிகமாகக் கொடுக்கின்றோம்.

ஆனால் வாங்கி வருவதற்கு முன் இப்படிச் சத்தம் போடுகின்றார்கள் என்று அவனுடைய உணர்வு மாறுகின்றது. அப்படி மாறினால் இருவருக்குமே நிச்சயம் பொருளறியக்கூடிய நிலை இல்லாது போகின்றது.

ஆகவே நாம் சொல்லக்கூடிய சொல்லில் பொருளறியும் நிலைக்கு வர வேண்டும். நமது சொல் அவனைத் தெளிவாக்கும் நிலைக்கு வர வேண்டும்.

1.சிறிது நேரத்திற்கு முன்பாக நீ வந்திருந்தாய்...! என்றால் நன்றாக இருந்திருக்கும்.
2.ஏனென்றால் வந்த விருந்தளிகள் ஊருக்குப் புறப்பட்டார்கள்... என்று சொன்னால் இந்த உணர்வுகள் தெளிவாகும்.

அதற்குப் பதிலாக... கடைக்குப் போய் எவ்வளவு நேரம் ஆனது... ஏன்டா இப்படிச் செய்கிறாய்...? என்று விருந்தாளிகளுக்கு முன் சொல்லும் பொழுது அவனுக்கு அவமரியாதை ஆகி விடுகிறது.

இப்பொழுது அப்படிச் சொல்லிவிட்டாலும் அடுத்து... நாம் எதையாவது சொல்லி விடுவோமோ...! இது எதற்கு வம்பு...? வரவில்லை என்றால் திட்டுவார்கள்...! என்று அவனுக்குள் இந்த மனநிலை வந்து விடும்.

அதனால் தான் கோவில்களில் தீபத்தை வைத்து ஆராதனையாகக் காட்டுகின்றார்கள். எந்த நிலையாக இருந்தாலும் "பையன் வெளியிலே சென்றான்... சரி நேரம் ஆகிவிட்டது..." என்று அந்தப் பொருளை அறிய முடியும்.

விருந்தாளிகள் வந்துள்ளார்கள் என்ற அன்பு மிகுதியால் அவர்களைக் கவனிக்க வேண்டும் என்று பொருளை வாங்கச் சொல்லிப் பையனை அனுப்புகின்றோம். சீக்கிரம் வாங்கிக் கொண்டு வா...! என்று தான் சொல்லி அனுப்புகின்றோம்.

ஆனால் நேரமாகி விடுகிறது.

நேரம் ஆகிவிட்டது நாங்கள் ஊருக்குப் போகிறோம்...! என்று விருந்தாளிகள் சொல்கின்றார்கள். அப்படிச் சொல்லும் போது நமக்கு உணர்வு மாறுகின்றது. அந்த நேரம் வெறுப்பு வருகின்றது... நம் பையன் மீது கடுகடுப்பாகிறது.

எப்பொழுது பார்த்தாலும் இப்படிச் செய்கின்றான் என்று இந்த உணர்வு வருகின்றது.
1.வந்தவர்களைப் பார்க்கும் பொழுது பாசம் வருகின்றது.
2.ஆனால் பையன் மீது வெறுப்பு வருகின்றது.

அவன் தாமதமாக வந்த பின் ஏண்டா இந்த மாதிரி நேரமாக்குகின்றாய்...? என்று இவர்களை நாம் மெச்சப் பார்க்கிறோம்.

நான் வேகமாகத் தான் வாங்கி வரச் சென்றேன். கடைக்காரன் தாமதப்படுத்தி விட்டான்... ஆனால் என்னை வீட்டிலே இப்படிப் பேசுகின்றார்களே...! என்று அவனுக்கு நம் மீது வெறுப்பு வருகிறது.

அந்த இடத்தில் நாம் பொருளை அறிய முடியாது போய் விடுகின்றது... வெறுப்பு வளர்கின்றது. அதற்குத்தான் கோயிலில் விளக்கைக் காட்டுகின்றார்கள்.

இந்த வாழ்க்கையில் எத்தகைய நிலை வந்தாலும் பொருளறிந்து செயல்படும் அந்த உயர்ந்த ஞான சக்தி பெற வேண்டும் என்று நாம் எண்ண வேண்டும். அப்படி எண்ணினால் அந்த விளக்கின் வெளிசத்தால் பொருள் தெரிவது போன்று நல்ல உணர்வு கொண்டு நாமும் செயல்பட முடியும்.

1.பையன் போன இடத்திலே என்னமோ தெரியவில்லை... ஏதோ நேரமாகிவிட்டது... சரி பரவாயில்லை...! என்று சொல்லிவிட்டு
2.விருந்தாளிகளிடம் "நேரம் ஆகிவிட்டால் நீங்கள் போய் வரலாம்..." என்று சொன்னால் அது உசிதமாக இருக்கும்.

ஆனால்... பையன் வரட்டும்... வரட்டும்...! என்றே நாம் சொல்லிக் கொண்டிருந்தால் விருந்தாளிகளைத் தடைப்படுத்துவது போன்று ஆகிவிடும். ஏனென்றால் இப்படி ஆக்கிவிட்டால்... அடுத்தாற்போல் "இந்த வீட்டிற்குச் சென்றாலே நம்மைத் தாமதப்படுத்துவார்கள்..." என்ற எண்ணம் தான் அவர்களுக்கு வரும்.

ஆகவே இது போன்ற சந்தர்ப்பங்களில் வெறுப்பாகாதபடி
1.அந்த உயர்ந்த பண்பினை வளர்க்க வேண்டும்.
2.அன்பினைப் பேணிக் காக்க வேண்டும்.
3.பரிவான உபகாரத்தைப் பன்புடன் செயல்படுத்த வேண்டும்

ஆகவே வாழ்க்கையின் சந்தர்ப்பங்களில்... நாம் எப்படித் தெரிந்து தெரிந்து தெளிவான நிலைகள் கொண்டு செயல்பட வேண்டும்...? என்பதை "ஞானிகள் காட்டிய அந்த அருள் வழிப்படி நாம் செயல்படுவதே மிகவும் நல்லது..."

மின்னலுக்குள் இருக்கும் வீரிய சக்தியும்... நம் உயிரின் இயக்கச் சக்தியும்

மின்னலுக்குள் இருக்கும் வீரிய சக்தியும்... நம் உயிரின் இயக்கச் சக்தியும்

 

எதிர்நிலையான நட்சத்திரங்கள் மோதலாகும் பொழுது மின்னலாகிறது. அந்த மின்னல் மரத்திலே பட்டால் அதற்குள் ஊடுருவித் தன் இனத்தை எடுத்துக் கருக்கி விடுகின்றது.

நிலத்தில் பட்டால் பூமியின் நடுமையம் சென்று அடைகின்றது. இப்படி அதீதமான நிலைகளில் உள் சென்று எதிர்மறையான நிலைகள் கொண்டு பூமியின் நடு மையத்திற்குள் சென்றால் எந்தப் பகுதியில் ஆகின்றதோ அங்கே கொதிகலாகி அங்கே பாறைகள் உருகுகின்றது.

மேல் பகுதி உருகி ஆவியாக மாறும் போது பூமி வெடிக்கின்றது. மேல் பாறைகள் கீழே வருகின்றது. நிலநடுக்கம் என்று அடிப்பாகத்தில் செல்கின்றது. இதற்குள் அடக்கி விடுகின்றது.

1.இந்த மின் அணுக்களின் கதிர்கள் கடலிலே பதியப் படும் பொழுது மணலாக மாறுகின்றது.
2.கடல் நீருக்குள் இருக்கும் ஹைட்ரஜன்... உப்பின் சத்து அதனுடைய வீரியத்தைத் தணிக்கிறது.
3.கடல்களில் பாயும் நிலைகள் மணலாக மாறி வருவது... மின் அணுக்களின் துகள்கள் வரப்படும் பொழுது யுரேனியம் என்று எடுக்கிறர்கள்.
4.எந்தெந்த நட்சத்திரத்தின் கலவையாகி எதிர்நிலையாக ஆனதோ அந்த மணலில் உருவாக்கப்படுகின்றது.

அந்த மணலை எடுத்து அணுவைப் பிளக்கின்றான் விஞ்ஞானி. அது மற்றொன்றை அடக்கப்படும் பொழுது அதிலே வருவதைப் பிளந்து எடுக்கின்றான். அதிலே சிதைந்த உணர்வின் தன்மையைத்தான்
1.கம்ப்யூட்டரில் இந்த உணர்வைப் பாய்ச்சி ஒலி அதிர்வுகளைக் கண்டு உணர்வின் செயலாக்கங்களுக்கு
2.அந்த நுண்ணிய கதிரியக்கப் பொறிகளை மாற்றும் போது தான் கம்ப்யூட்டர் என்று வருகின்றது.

அது அவரவர்கள் கண்டறிந்த உணர்வின் தன்மையை இயற்கையின் நிலைகள் எப்படி வருகிறது...? என்பதை
1.மின் அணுவின் கதிரியக்கங்களின் நிலைகளை ஒரு காந்தப் புலன் அறிவால் கவரப்பட்டு
2.அதையே கம்ப்யூட்டர் காந்தத்தால் கவரும் உணர்வின் தன்மையைப் பதியச் செய்து உணர்வின் அறிவான பின் எதிரொலி
3.மின் அணுவைப் போன்று தோன்றும்... அந்த உணர்வுக்கு ஒப்ப எது ஆகின்றதோ அந்த ஒவ்வொரு உணர்வுக்கொப்ப உருவத்தையும் காட்ட முடியும்.

100 ஆண்டுகளுக்கு முன் மனிதர்கள் இங்கே வாழ்ந்தார்கள் என்றால் அந்த வம்ச வழிகளிலே இருந்தால் "அந்த உருவங்கள் எப்படி இருக்கின்றது...?" என்பதைக் காணலாம்.

இந்த உணர்வின் தன்மை பதிவாக்கிக் கம்ப்யுட்டரில் எதிர் அலைகளை எடுத்துக் கொண்டால் ஒலியின் அதிர்வுகளை எடுத்துக் கொள்கின்றது. ஆயிரம் மடங்கு அதைக் கூட்டுகின்றான்.

மீண்டும் அந்த உணர்வின் எதிரொலிகள் வரப்படும் பொழுது அவர்கள் வாழ்ந்த உணர்வுகள் அங்கே பதிந்ததை எடுத்து மனித ரூபத்தையே கொடுக்கின்றது... விஞ்ஞானி அதைக் காட்டுகின்றான்.

இதைப்போன்று அன்றைய மெய் ஞானிகள் உணர்வையும் நாம் காண முடியும்.
1.அவனில் விளைந்த உணர்வை உங்களுக்குள் பதிவாக்கப்படும் பொழுது
2.அந்த உணர்வைத் தொடர்ந்து எடுத்தால் அவன் கற்றுணர்ந்த உணர்வின் தன்மை இங்கே வந்து
3.அவன் ஒளியான உணர்வைப் பெற்று நீங்களும் ஒளியாக முடியும்.

விஞ்ஞான அறிவு எங்கேயோ சென்று கொண்டிருக்கிறது... சாமி எதையோ சொல்லிக் கொண்டிருக்கிறார்...! என்று சிலர் நினைப்பார்கள்.

விஞ்ஞான அறிவு எப்படி இருக்கின்றது...? மெய்ஞான அறிவு எப்படி இருக்கின்றது...? குருநாதர் இந்த இயற்கையின் நிலைகளை அதனுடைய இயக்கத்தை எப்படி...? என்று எமக்கு உணர்த்தியதைத் தான் உபதேசிக்கின்றோம்.

1.காலம் வரும்போதெல்லாம் உங்கள் உணர்வுக்கொப்ப... காலத்தின் மாற்றத்திற்கொப்ப அதை நுகர்ந்து வரும் போது
2.அந்தந்தக் காலத்தின் உணர்ச்சிகள் அதைக் கவர்ந்து உங்களுக்குள் பதிவு செய்கின்றோம்.

முந்திச் சொன்னதெல்லாம் வேறு விதமாக இருக்கும். இந்த உணர்வின் வளர்ச்சி வரப்படும் பொழுது இயற்கையின் நிலைகள் உங்களை நீங்கள் அறியும் நிலைக்கு வர வேண்டும் என்பதற்குத்தான் இப்போது இதை உணர்த்துகின்றோம்.

என்றைக்கும் நிலையானது இந்த உயிர்.
1.அந்த உயிருடன் ஒன்றிய ஒளியான உணர்வின் தன்மை ஆக்கப்பட வேண்டும்.
2.பிறவியில்லா நிலை அடைந்த அருள் ஞானிகள் உணர்வைச் சேர்ப்பிக்கத்தான் இதை உபதேசிக்கின்றோம்.