ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

January 26, 2026

உயிர் - மெய் - மெய்ப்பொருள்

உயிர் - மெய் - மெய்ப்பொருள்


சாஸ்திரங்களில் காட்டப்பட்டுள்ள மெய்ப்பொருளை நாம் உணர்வோம். ம் ஈஸ்வரா குருதேவா…” என்று நாம் அடிக்கடி முழக்கம் இடுகின்றோம். இந்த முழக்கத்தின் உட்பொருளைப் புதிதாக வந்தவர்களும் ஏற்கனவே உள்ளவர்களும் தெளிந்து கொள்ள தெரிந்து கொள்வதே நல்லது நலமும் கூட…!
 
உயிர் நமக்குள் ஓ என்று இயங்கிக் கொண்டே உள்ளது எத்தகைய குணங்களை எண்ணுகின்றோமோ
1.அந்தக் குணங்கள் அனைத்தையும் ஓ என்று பிரணவமாக்கி
2.ம் என்று நம் உடலாக்கி ஜீவணுக்களை இயக்கிக் கொண்டே உள்ளது நம் உயிர்.
3.அதனால் தான் ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய.
 
நாம் எத்தகைய எண்ணங்களை எண்ணுகின்றோமோ அவை அனைத்தையும் என்று பிரணவமாக்கி ம் என்று நம் உடலாக நம் உடலுக்குள் உறைச் செய்து கொண்டே உள்ளது.
 
நாம் எண்ணியது அனைத்தையும் ஜீவ அணுவாக மாற்றிக் கொண்டே உள்ளது. நாம் எத்தகைய குணங்களை எண்ணுகின்றோமோ உயிரின் இயக்கத்தால் அந்த உணர்வினைப் பிளந்து அதனின் அறிவின் இயக்கத்தையும் நம்மை அறியச் செய்கின்றதுமெய்ப்பொருளாக…!
 
கோபப்படுகிறோம் என்றால் அந்தக் கோபத்திற்குண்டான உணர்வின் செயலை அதன் உணர்வின் உண்மையை உணர்த்துகின்றது நமது உயிர்.
 
அதே போல்
1.மெய்ப்பொருளை எத்தகைய பேரண்டத்தின் இயக்கமாக இருப்பினும்
2.நமது உயிர் அதனின் உள்பொருளையும் அகப்பொருளையும் மூலப் பொருளையும் பிரித்து
3.நமக்குள் அறிவின் இயக்கமாக இயக்கி நம்மை அறியச் செய்கின்றது உணரச் செய்கின்றது இயக்கச் செய்கின்றது
4.உடலாக்கிக் கொண்டே உள்ளதுமெய் நமது உயிர்.
 
இதை நாம் தெளிவாகத் தெரிந்து கொள்வதே மிகவும் நலம்.
 
அதே சமயத்தில் அன்னை தந்தையரை எண்னி முதல் தெய்வமாக வணங்கிட வேண்டும். ஏனென்றால் அவர்கள் தான் முதலில் நம்மை மனிதனாக உருவாக்கியவர்கள். நமக்கு அறிவும் தெளிவும் ஊட்டியது நம் அன்னை தந்தையே. நமக்கு குருவாக இயக்கிக் கொண்டிருப்பதும் அன்னை தந்தையரே.
 
1.அன்னையின் உயிரே மெய்ப்பொருளாகி அதனின் வாழ்க்கையைக் கண்டுணர்ந்து மனிதனாக உருவாக்கி
2.அந்த மனிதன் நிலையில் தனக்குள் தன் இனம் வளர வேண்டும்…” என்ற ஏக்க உணர்வின் உண்மைப் பொருளை உணர்த்தி
3.அதன் வழியில் நம்மை மனிதனாக உருவாக்கியது நமது தாய் தந்தை.
 
உயிர் கடவுள் என்றும் உணர்வால் அறிந்துணர்ந்த தன்மை கொண்டு தன் இனம் என்ற நிலைகள் தன் மக்கள் உயிர் என்று அறிவுறுத்தப்பட்டு நம்மைக் காத்து நல்வழி காட்டி நல் உணர்வுகளை ஊட்டி நமது வாழ்க்கையை உயர்த்துவதற்கும் மகிழ்ந்திடவும்… மனிதன் என்ற உண்மையை உணர்த்துவதற்கும் நம் தாய் தந்தையே உயிர் கடவுளாக இருந்து தெய்வமாக இருந்து நமக்கு நல்வழி புகட்டியது… அவர்கள் தான் முதல் குரு
 
ஆகவே நாம் ஓம் ஈஸ்வரா குருதேவா…! என்று முழக்கமிட்ட நிலைகளில் அவரவர்கள் தாய் தந்தையரை எண்ணி அவருடைய அருள் பெற வேண்டும்…” என்று ஏங்குதல் வேண்டும்.