ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

April 26, 2026

பகைமையை அகற்றினால்தான் மகிழ்ந்து வாழ முடியும்

பகைமையை அகற்றினால்தான் மகிழ்ந்து வாழ முடியும்


ஒன்றுடன் ஒன்று இணைந்து இயங்கும் தன்மை பேரண்டத்தில் இல்லையென்றால் இந்தப் பிரபஞ்சமே இல்லை.
 
அதே போல் மனிதனின் வாழ்க்கையில் ஒருவருக்கொருவர் சகோதரத் தத்துவத்துடன் வாழவில்லை என்றால் மகிழ்ச்சியும் இல்லை என்பதை அனைவரும் உணர வேண்டும்.
 
ஒன்றை நாம் நன்கு தெரிந்து கொள்ள வேண்டும்.
1.ஒருவர் மிகவும் நெருக்கமாக இருப்பினும் அதில் சிறு பகைமை ஏற்பட்டு விட்டால் அது கடும் விஷ வித்தாக நம்முள் பதிந்து
2.நம்மை றியாமலே அவர்களைப் பகைத்து தீமையின் உணர்வாக நம்முள் வளர்ந்து கொண்டிருக்கும்.
 
இவ்வாறு பகைமையுணர்வுகள் நம்முள் வளரும் பொழுது அது நம்முள் உள்ள நல்ல குணங்களையும் பகைமையாக்கிக் கொண்டே இருக்கும். 
 
1.நமது உடலுக்குள் உணர்வுகள் ஒன்றுக்கொன்று பகைமையாகும் பொழுது
2.நமது உடலின் தன்மை குன்றுகின்றது.. நம்முடைய எண்ணங்களும் மாறுகின்றது.
 
எனவே சூரியக் குடும்பம் ஓர் ஒழுங்குடன் அமைதியாக இயங்குவதைப் போன்று நாமும் பகைமை உணர்வுகள் இல்லாமல் ஒற்றுமை உணர்வுடன் மகரிஷிகளின் அருள் சக்தியின் துணை கொண்டு வாழத் தெரிந்து கொள்ள வேண்டும்.
 
நாம் வாழும் தெருவில் உள்ள அனைவரையும் நமது குடும்பத்தினரைப் போலக் கருதி
1.அவர்களும் மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும்,
2.இருள் நீங்கிப் பொருள் காணும் திறன் பெற வேண்டும்,
3.வாழ்வில் என்றும் மகிழ்ந்த நிலை பெற வேண்டும் என்று எண்ணி
4.நமது தெருவில் வாழும் மற்ற குடும்பத்தினருக்காகத் தியானிக்கும் பொழுது
5.அவர்களும் நம்முடன் ஒன்றுபட்டு வளரும் நிலை உருவாகிறது.
 
நாம் அனைவரும் ஒன்று கூடிக் கூட்டுத் தியானமிருந்து இதனின் எண்ண அலைகளை ஒருமித்த நிலையாக வெளியிடும் பொழுதுஇதனைச் சூரியனின் காந்த சக்தி கவர்ந்து இந்த பூமியில் படரச் செய்கின்றது…
 
மேலும் இந்த உணர்வின் அலைகள் இவ்வுலக மக்களின் உணர்வில் கலந்து அவர்களிடத்தில் மகிழ்ச்சியின் தன்மையை வளர்க்கின்றது. பகைமையற்ற மனிதர்களாக அவர்களை மாற்றுகின்றது.
 
பேரண்டத்திலும் பூமியிலும் மனிதரிடத்திலும் நடைபெறும் இயற்கையின் இயக்கங்களை மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் காண்பித்த அருள் வழியில் உங்களுக்கு உபதேசித்து வருகின்றோம். 
 
இதில் உங்களின் கருத்தினைச் செலுத்தி உணர்வின் ஆற்றலை உங்களுக்குள் வளர்த்துக் கொள்ளுங்கள். இந்த ஊரும் நாடும் உலகமும் என்றும் மகிழ்ந்த நிலையாக இருக்க வேண்டும் என்ற உணர்வினை வளர்த்துக் கொள்ளுங்கள்.
 
ஊரும் நாடும் உலகமும் மகிழ்ந்த நிலை பெற வேண்டும் எனும் பொழுது மகிழ்ச்சியின் உணர்வுகள் உங்களிடத்தில் பெருகுகின்றது.
 
மகிழ்ந்த உணர்வின் துணை கொண்டு
1.மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும்.
2.துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்தில் சப்தரிஷி மண்டல ஒளி வட்டத்துடன் நாங்கள் அனைவரும் இணைய வேண்டும் என்று
3.இவ்வாறு இந்த உணர்வின் எண்ணங்களை நாளும் வளர்த்துக் கொள்ளுங்கள்.
 
நாளும் நல்ல உணர்வுகளை வளர்ப்போர் அனைவருக்கும் எமது ஆசீர்வாதங்கள்.

விஷத்தை ஒளியாக மாற்றும் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி

விஷத்தை ஒளியாக மாற்றும் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி


விஷ்ணுவின் மறு அவதாரம் சீதாராமா…!
1.உயிர் எப்படி ஒளியாக இருக்கின்றதோ அந்தச் சுவைக்கொப்ப ஜீவ அணுவாக மாறி
2.தனதன் எண்ணங்களை இயக்குகின்றது என்பது காவியத்தின் முக்கியத் தொகுப்பு.
3.அதாவது எந்தச் சுவையோ அதைப் போல் ஜீவ அணுக்களாக” உயிர் உருவாக்குகின்றது என்பதை நாம் அறிந்திடல் வேண்டும்.
 
நட்சத்திரங்களுடைய சக்திகள் பூமியில் மண்ணுடன் கலந்து புவியின் ஈர்ப்பால் சிறுகச் சிறுக விளைந்து வைரமான பின் வெடித்துத் தனித்தன்மையாக வெளிவந்து விடுகிறது.
 
அதைப் போல் நம் உயிரால் உருவாக்கப்பட்ட ஜீவ அணுக்கள் நாளுக்கு நாள் அது வெளிப்படும் பொழுது
1.அறிவின் வளர்ச்சி அறிந்திடும் வளர்ச்சி இங்கே வருகின்றது.
2.ஒரு வெளிச்சத்தைக் கண்டபின் அதற்குள் பொருள் தெரிவது போல நமது ஜீவணுக்களின் துணை கொண்டு
3.நம் கண்ணின் வளர்ச்சி கொண்டு அதன் உணர்வின் அறிவை அறிந்திடும் ஞானமாக வளர்கின்றது.
 
நட்சத்திரங்களுடைய துகள்கள் ஒன்றுடன் ஒன்று மோதி மின்னலாக மாறி பூமியிலே பட்டபின் சிறுகச் சிறுக வைரமாக விளைகிறது. அது ஜீவ அணு அல்ல ஒளியின் உடலாகப் பெறுகின்றதுநட்சத்திரம் எப்படி மின்னுகின்றதோ தைப் போல.
 
நமது உயிரோ மின்னணு போன்று அது இயங்கிக் கொண்டே இருக்கின்றது அந்த உயிரின் இயக்கத்தைக் கொண்டு நமது ஜீவ அணுக்கள் மின்னணுவின் துணை கொண்டு இயங்குகின்றது.
 
எப்படி மின் நிலையத்திலிருந்து வரும் மின்சாரத்தை நம் வீட்டிற்குள் எந்தெந்த இணைப்புகளுடன் சேர்க்கின்றோமோ அந்த மின் அணுக்கள் அதை இயக்கி அதன்வழி நாம் பயன்படுத்துகின்றோமோ இதைப் போல
1.சூரியன் இயக்கத் தொடரில் நாம் ளர்ந்தாலும் நம் உயிரே சூரியனின் தொடர்பு கொண்டு தான் அதுவும் இயங்குகின்றது.
2.நாம் எப்படி ஊருக்கு ஒருப்ஸ்டேசனை வைத்திருக்கின்றோமோ அதைப் போன்று நமது உயிரும் அந்த நிலை பெறுகின்றது.
3.சூரியன் துணை கொண்டு அந்த மின் கதிர்கள் உடலில் உள்ள அணுக்களை அது இயக்குகின்றது.
 
இருப்பினும் பல உணர்வின் தன்மையை அனைத்தையும் அறிந்திடும் உணர்வு கொண்டு மனித உடலில் வந்த விஷத்தை வென்றவன் அகஸ்தியன்.
 
அவன் திருமணமாகி கணவனும் மனைவியும் இரு மனமும் ஒரு மனதாகி அருள் மம் பெற்று உயிரைப் போன்றே உயிரணுக்களை வளர்த்து விஷத்தை ஒளியாக மாற்றிடும் சக்தி பெற்று” ஒளி உடலாகத் துருவ நட்சத்திரமாக ஆனார்கள்.
 
27 நட்சத்திரங்களும் கடும் விஷத் தன்மை கொண்டது,தனுடைய துகள்கள் பூமியிலே பட்டால் அதன் இனத்தின் தன்மை கொண்டு அந்த விஷங்கள் வளர்ந்து வைரங்களாக விளைகிறது.
 
அந்த வைரத்தை நாம் உட்கொண்டால் மனிதனை உடனடியாகச் சுருட்டி விடும் அவ்வளவு கடுமையான விஷம்.
1.ஆனால் அந்த விஷத்தின் உணர்வை ஒளியாகக் காண முடிகிறது… வெளிச்சமாகத் தெரிகின்றது.
2.இதைப் போன்று தான் விஷத்தை ஒளியாக மாற்றி ஒளியின் சுடராக துருவ நட்சத்திரம் இருக்கின்றது.
 
விஷமே உலகை இயக்குகின்றது. சூரியன் இயங்குகிறது என்றால் விஷத்தின் தாக்குதலால் தான் வெப்பத்தின் தன்மை கொண்டு அது இயக்குகின்றது.
 
நமது உயிரும் விஷத்தின் தாக்குதலால் தான் துடிப்பின் தன்மை ஏற்பட்டுக் கொண்டுள்ளது. இதைப் போல் ஒவ்வொரு அணுக்களிலும் விஷத்தன்மை கலந்திருப்பதால் தான் அது இயக்ணுக்களாகவும் ஜீவ அணுக்களாகவும் மாறிக் கொண்டுள்ளது என்பதனை நாம் அறிதல் வேண்டும்.
 
1.ஆறாவது அறிவால் ஒளியின் உடல் பெற்றது துருவ நட்சத்திரம்.
2.அந்தப் பேரருள் பேரொளியை நமக்குள் சேர்த்துக் கொண்டால் நாமும் இந்த விஷத்தை ஒளியாக மாற்ற முடியும்.
 
இருந்தாலும்… அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வினை யாரும்  பெறுவது என்றால் மிகவும் கடினம். குருவின் துணை…” இல்லாமல் எடுப்பதென்றால் மிக மிகக் கடினம்.
 
1.நமது குருவின் மூலம் எத்தகைய கடும் விஷத்தையும் ஒளியாக மாற்றிடும் அந்த்த் துருவ நட்சத்திரத்தின் சக்தியைப் பெற முடிந்தது.
2.நமது குரு அந்த விஷத்தையும் தாங்கி அதை ஏற்றுக் கொள்ளும் பருவத்தினை ஏற்படுத்தினார்.
3.ஆகவே தான் உங்களுக்கும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் சக்தியைப் பெறும்படிச் செய்து…
4.விஷத்தை ஒளியாக மாற்றும் பருவத்தை ஏற்படுத்துகின்றோம்..
 
நாம் ஒவ்வொரு நாளும் உயிரின் முகப்பில்ஈர்க்கப்படும் பொழுது  துருவ நட்சத்திரத்தின் உணர்வுகள் உங்கள் உடல் முழுவதும் பரவுகின்றது.
 
இதைப் போன்று உடல் உறுப்புகளை உருவாக்கிய அணுக்களின் முகப்பில்… உயிரின் துணை கொண்டு துருவ நட்சத்திரத்தின் உணர்வினை ஈர்க்கச் செய்யும் பொழுது… அதாவது
1.என் குரு எப்படிச் செய்தாரோ அதைப் போன்று உங்களில் ஈர்க்கச் செய்யும் பொழுது
2.நாம் அனைவரும் ஒளியின் சரீரம்பெறும் தகுதி பெறுகின்றோம்.