ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

May 1, 2026

குருவிடம் வாங்கிய வாக்கை மதிக்க வேண்டும்

குருவிடம் வாங்கிய வாக்கை மதிக்க வேண்டும்


மகரிஷிகளின் அருளாற்றல் நாங்கள் பெற வேண்டும்எங்கள் பார்வையால் அனைத்தும் நலம் பெற வேண்டும் என்ற இந்த உணர்வினை இணைத்து விட்டால் இந்த உணர்வுகள் பிரம்மம் ஆகின்றது. அது கருவாகின்றதுஉருவாகின்றது…! தீமை என்ற உணர்வின் சக்தி நமக்குள் வராதபடி பாதுகாப்பாகின்றது.
 
அதற்குக் குரு பலம் வேண்டும்.
 
1.நமது குருநாதர் மிகவும் சக்தி வாய்ந்தவராக இருந்தார்.
2.அவரின் உணர்வை நுகர்ந்தேன்… நுகர்ந்த உணர்வை எனக்குள் வளர்த்தேன்.
3.வளர்ந்த உணர்வை உங்களுக்குள் பதிவாக்குகின்றேன்.
 
பதிவானதை மறந்து ஆசையின் நிலைகளை உங்களுக்குள் கூட்டினால்இந்த அரும் பெரும் சக்தியை இழந்து கொடுத்த வாக்கினை இழக்கும் தன்மை வரும்.
 
யாம் கொடுக்கும் வாக்கின் உணர்வுகள் அது கருவாகி அணுவாக விளைந்தாலும்
1.அதை வளரவிடாது உங்களின் ஆசையின் உணர்வுகள் தடுக்கும்.
2.குரு கொடுத்த வாக்கின் தன்மையையும் இழக்க நேரிடும்.
 
ஆகவே நீங்கள் எங்கே சென்றாலும் குரு பெற்ற உணர்வினை நாங்கள் பெற வேண்டும் என்று ஏங்குங்கள். பகைமையான உணர்வுகளை அகற்றிடும் வல்லமை பெறுவீர்கள்.
 
நாம் எண்ணி எடுத்த உணர்வின் தன்மையே நமக்குள் தெய்வமாகின்றது. நாம் எண்ணிய எண்ணங்களை அது எக்குணமோ அந்தத் தெய்வமாகின்றது.
 
அருள் ஒளி பெறும் அருள் ஞானத்தை நமக்குள் உருவாக்கினால் மற்றவைகள் வலுவை இழக்கச் செய்து சிந்திக்கும் தன்மையைக் கொடுக்கும்.
 
1.குருவின் வலிமை கொண்டு மற்றவர்களை ஏமாற்றுபவர்கள் உண்டு.
2.குருவின் நிலைகளில் ஏமாற்றிப் பிழைப்போர் நிலைகளில் கடைசி நிமிடம் உயிர் எதையுமே மறக்காது.
3.அந்த வினைகளை அனுபவித்தேதான் ஆகவேண்டும்.
 
ஆனால்…
1.குரு பலம் கொண்டு குருவினை நினைத்தால் தீமையின் உணர்வுகள் தனக்குள் வராது தடுக்கலாம்.
2.இதை மறந்திடலாகாது… மதி மயங்கிடலாகாது.
 
குருவை எவரொருவர் நிந்திக்கின்றனரோ அருளொளி காட்டும் உணர்வை எவர் இருளச் செய்கின்றனரோ அவர்கள் வாழ்க்கையில் குருவின் தன்மையை இழந்து இருளின் தன்மை அடைவர்.
 
வாழ்க்கையின் கடைசி நிமிடத்தில் சிந்திக்கும் தன்மை வந்தாலும் எதுவும் வலிமை பெறாது.
 
1.குருவின் வலுவை எவ்வாறு இயக்க வேண்டுமென்றும்
2.குருவின் தன்மை கொண்டு நம்மை அறியாது வந்த இருளை எப்படி நீக்க வேண்டும்…? என்றும் அதைச் செயலாக்குதல் வேண்டும்.
 
சந்தர்ப்பத்தால் நுகர்ந்த உணர்வுகள் நமக்குள் குருவையே மறக்கச் செய்யும். நண்பன் என்று இருப்பினும் அவன் தவறு செய்கின்றான் என்று தெரிய வரும் போது
1.குருவின் தன்மை கொண்டு தவறைத் திருத்தத் தவறினால் தவறுக்கே உதவி செய்தால்
2.தவறின் உணர்வின் அலைகள் சிறிது காலம் நிலைக்கும்.
3.பின் அவர் வாழ்க்கையே சீர்கெடுக்கச் செய்யும் என்பதை மறந்திடலாகாது.
 
ஆகவே மற்றவர்களிடம் குறைகள் இருப்பினும் குருவின் துணை கொண்டு குறைகளைக் களைய வேண்டும்.
 
புகழ் பாடும் நிலைகள் கொண்டு
1.ஆகா! உன்னுடைய வலிமைப்படிப்பட்டது…? என்று போற்றுவோர் உணர்வுகளுன் இணைந்து விட்டால்,
2.சிறிது காலத்தில் உயிர் அதனுடைய உணர்வை உணர்த்தியே தீரும்.
3.உயிரிடமிருந்து எவரும் தப்ப முடியாது.
 
குருவிடம் வாக்கு வாங்கினால் அது எளிதாக இருக்கலாம். ஆனால் குரு வாக்கின் பலன் மிக மிகச் சக்தி வாய்ந்தது. அதில் எவரொருவர் தவறுகின்றனரோ அந்தத் தவறின் நிலைகள் நிச்சயம் அது இயக்கிக் காட்டும்.

”நான் உடலிலேயே இருப்பேன்…” என்று எந்த மகரிஷியும் இருந்ததில்லை

”நான் உடலிலேயே இருப்பேன்…” என்று எந்த மகரிஷியும் இருந்ததில்லை


நாம் ஒரு பாம்பைக் கொன்றால் பாம்பின் உயிரான்மா நமக்குள் வந்து விடுகின்றது. ஆனால் ஒரு பாம்பு நம்மைத் தீண்டி விட்டால் அந்த விஷம் உடல் முழுவதும் பரவும் பொழுது பாம்பின் நினைவே நமக்குள் வருகின்றது. அந்த விஷம் அதன் நினைவுக்கே அழைத்துச் செல்லும்.
 
எத்தனையோ கோடிச்ரீரங்களைக் கடந்து இன்று நாம் மனிதனாக வந்தாலும் அதன் உணர்வு நம் நினைவாற்றல் அனைத்தையும் மறையச் செய்து விடுகின்றது.
1.உடலை விட்டுச் சென்றால் அதனின் ஈர்ப்புக்குள் சென்று
2.நாம் பாம்பாகத்தான் பிறக்க நேரும்.
 
எத்தனையோ காலம் பல உடல்களைக் கடந்து மனிதனாக உருப்பெற்று வந்திருந்தாலும்
1.இத்தகைய விஷத்தை வென்ற… விஷத்தை ஒளியாக மாற்றிய
2.அந்தத் துருவ மகரிஷி துருவ நட்சத்திரமான அந்த நிலைகளை நாம் நுகர்ந்தோமென்றால்
3.பாம்பின் நினைவு மறந்து நஞ்சை வென்ற நினைவு வரும்.
 
அந்தப் பாம்பினத்திற்குள் செல்லாது தடைப்படுத் நம் உணர்வின் நினைவலைகளும்
1.கண் எதைக் கடைசியில் நினைவு கொண்டதோ
2.அங்கே ந்த உணர்வின் துணை கொண்டு நாம் விண்ணுக்குச் செல்ல முடியும்.
 
அதனால் தான் கண்ணன் முதலில் பார்த்தசாரதி. பின் எதன் வலுவைப் பெற்றதோ அந்த உணர்வின் தன்மை வரும் பொழுது பாம்பின் உணர்வு வலுவாகிவிட்டால் நாம் கூர்மையாக உற்றுப் பார்க்கும் பொழுது இந்தக் கண் எது தன்னைத் தீண்டியதோ அந்த உணர்வும் அந்த விஷத்தின் தன்மை பட்டபின் அதன் வலுவின் தன்மை கொண்ட பின்… இதே கண்கள் பாம்பின் உடலுக்குள் அழைத்துச் சென்று விடுகின்றது.
 
து தான்ண்ணன் அர்ஜுனனுக்குச் சாரதியாகச் சென்றான். கண்களின் நினைவு… அதாவது ந்தப் பாம்பின் உணர்வுகள் நம் உடலுக்குள் வலிமை ஆகிவிட்டால் அர்ஜுனன்.
 
அந்தப் பாம்பிடமிருந்து தப்பிக்க நம் கண் எத்தனை உபாயங்களைச் சொல்கின்றது. இருப்பினும் இந்தக் கண் அந்தப் பாம்பின் உணர்வை வலுவாக்கி விட்டால் அர்ஜுனன் ஆகின்றது.
 
அர்ஜுனன் ஆனபின் எந்த உடலின் தன்மை கொண்டதோ இது தீண்டினாலும் அதன் உடலுக்குள் சென்ற பின் அது பாதுகாப்பு தருகின்றது.
1.ஆகவே கண்கள் எதனின் உணர்வை நுகர்ந்ததோ
2.அதன் வழியிலேயே நம்மை அழைத்துச் சென்று அதன் வழியிலே நம்மைப் பாதுகாக்கின்றது.
 
மனிதனான பின் பிறவியில்லா நிலை அடைந்தது துருவ நட்சத்திரமும் சப்தரிஷி மண்டலமும். இதைப் போன்று ஒன்று தீண்டி விட்டால் அந்த வலுக்கொண்ட எண்ணத்துடன் நாம் அதை எண்ணும் பொழுது
1.இந்த உடலில் நஞ்சுகள் பாய்ந்தாலும் நஞ்சின் உணர்வு இதற்குள் கலந்தாலும்
2.நாம் பாதுகாப்பான இடங்களை (துருவ நட்சத்திரத்தையும் சப்தரிஷி மண்டலத்தையும்) எண்ணும் பொழுது
3.அந்த உணர்வின் தன்மை வலுப் பெற்று உடலை விட்டு வருகின்றோம்.
 
உடலை விட்டு வந்தாலும் இது அர்ஜுனன் ஆகி அந்த உணர்வுக்கு நம்மை அழைத்துச் செல்லும். இங்கே நஞ்சினை ஒடுக்குகின்றது.
1.ஆனால் உடலை விட்டுச் செல்லும் பொழுது
2.அதன் அருகிலே (ஈர்ப்பு வட்டத்திற்குச்) செல்கின்றோம்.
 
நஞ்சின் உணர்வுகள் கரைகின்றது மனிதன் என்ற உணர்வின் ஒளிகள் நமக்குள் மிச்சமாகின்றது. அது தான் பிறவி இல்லாத நிலை…”
 
எந்தச் சந்தர்ப்பத்தில் இந்த உடலை விட்டு உயிரான்மா சென்றாலும்
1.எது நம்மைத் தாக்கியதோ அந்த உணர்வின் வலுவாகி அதற்குள் செல்வதற்கு முன்
2.இந்த வலுவை இழக்கச் செய்து “அருள் ஒளியின் உணர்வை” நாம் பெறும் தகுதியைப் பெற வேண்டும்.
 
அந்தத் தகுதியை நாம் காலையில் துருவ தியானத்தில் நாம் வலுப்பெறச் செய்ய வேண்டும்.
 
நாம் எப்படி எந்த நிலையில் ஒளியின் உணர்வை எடுத்தாலும் ஒளியின் உணர்வுகள் அதிகரிக்க அதிகரிக்க அந்த ஒளி பட்டு இந்த உடலும்” கரையத்தான் செய்யும்.
 
1.இது கரைந்தால் தான் உயிருடன் ஒன்றி ஒளியாக மாற முடியும்.
2.”நான் இந்த உடலிலேயே இருப்பேன்…” என்று எந்த மகரிஷியும் இருந்ததில்லை.
3.அவன் எதனின் உணர்வு கொண்டு உடலை விட்டுச் சென்றானோ ஒளியின் சரீரமாக மாறுகின்றான்.