
இரத்தத்தைச் சுத்திகரிக்கும் சிறுநீரகங்களுக்குத் துருவ நட்சத்திரத்தின் சக்தியை வலு ஏற்றிக் கொடுக்க வேண்டும்
சிறுநீர் கழிக்கின்றோம் என்றால் இந்த உடலில் மோதலால் ஏற்படும்
உணர்வுகள் கொஞ்சம் கொஞ்சமாக உறைந்து சுண்ணாம்புக்கல் மாதிரி
ஆகிறது. சிறுநீரகம் கழித்த இடங்களில் பார்த்தால் இது தெரியும்.
இதே போன்று நாம் எடுக்கும் ஒவ்வொரு உணர்வின் தன்மையும் ரத்த நாளங்களில் இது கலக்கும்..
இதைத்தான் கிட்னி என்ன செய்கிறது…?
1.விஷங்கள் வந்தால் அந்த ரத்தங்களைச் சுத்திகரிக்கின்றது.
2.அதிகமான வேதனை உணர்வுகள் வடிகட்டப்படும் பொழுது விஷங்கள்
அதிகமாகத் தாக்கித் தாக்கிச்
சிறுநீரகம் பலவீனமடைகிறது.
3.அப்படிப் பலவீனமடையப்படும் பொழுது ரத்த நாளங்களில் விஷத்தன்மைகள் அதிகமாகப்
பரவுகின்றது.
4.அதன் வழி கெட்ட அணுக்களுக்கு ரத்தத்தின் வழி கொண்டு சேர்க்கின்றது.
வேதனையை மீண்டும் சுவாசிக்கப்படும் பொழுது அது ரத்தத்திலே கலக்கின்றது. வடிகட்டி அனுப்பினாலும் இந்த வேதனை உணர்ச்சிகள் அதிகமாகும் போது அந்த உணர்ச்சிகள் தாங்காது
விரிவடைந்து “வடிகட்டும் தன்மை இழக்கப்படுகிறது…”
ஒரு சல்லடையில் ஓட்டை விழுந்து விட்டால் தொப்… தொப்… என்று அதன்
வழியில் எல்லாம் இறங்கி விடும். அதைப்
போல்
1.இயக்கச் சக்தியைப்
பிழியும் தன்மை இழக்கப்படுகின்றது.
2.வடிகட்டாத உணர்வுகள் உடல் முழுவதும் செல்லப்படும் பொழுது நல்ல
உணர்ச்சியைத் தூண்டும் நல்ல அணுக்களுக்கும்
3.மனித உடலை உருவாக்கிய அணுக்களுக்கும்
நல்ல சத்து கிடைப்பதில்லை.
நாம் ஆகாரம் உட்கொண்டாலும் அதிலும் சில
விஷத்தன்மைகள் வரும். அதையும் கிட்னி
வடிகட்டும். நுகர்ந்த உணர்வுகள்
ரத்தத்தில் கலக்கப்படும் போது சிறுநீரகம் அதையும்
வடிகட்டும்.
ஆனால் வடிகட்டும் தன்மை இழக்கப்படும் பொழுது எல்லாம்
தாராளமாகச் சென்று விடும்.
அப்பொழுது இருதய வால்வுகள் உடல் முழுவதும் இரத்தத்தை அனுப்பப்படும் (PUMP) நிலையில் என்ன ஆகிறது…?
1.கிட்னி கழிவுகளைக் கழிக்க தவறப்படும்
பொழுது
2.அந்த இடத்திலே அவைகள் சிறுக சிறுக உறையத் தொடங்கும்.
அந்த உறையின் தன்மை ரத்தம் போகும் பாதையில் அதிகமாகி ஒன்றுக்கொன்று வடிகட்டிச் செல்லப்படும் பொழுது இருதயத்திலே
தொல்லைகள் வரும். அங்கே உணர்வின் அழுத்தம் ஆகி இதயத்தில் லேசாக வலிக்கிற
மாதிரி இருக்கும்.
அழுத்தம் அதிகமாகும் பொழுது இரத்தத்தை ஈர்க்கும்
சக்தியும் குறைகின்றது. பம்பில் சிறு ஓட்டை இருந்தால் எப்படியோ அது போல் உறுப்புகளில் இருதய
வாயிலை மிகவும் பலவீனப்படுத்தும்.
அடிக்கடி மூச்சுத் திணறலும் நடந்து சென்றாலும் கூட எத்தனையோ தொல்லைகள் வரும்.
வேதனை உணர்வு வரப்படும் போதெல்லாம் சிறுநீரகத்தால் வடிகட்டத் தவறும்
போது அதை மாற்ற முடியாது இப்படி ஆகிவிடுகிறது.
வைத்திய ரீதியாக உங்களுக்குத் தெளிவாக்குகின்றேன்.
இதையெல்லாம் மாற்றி அமைக்க வேண்டும் என்றால்
1.ஒவ்வொரு நொடிப் பொழுதும் அந்தத் துருவ
நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியைப் பெற்று
2.நம்முடைய எல்லா குணங்களிலும் எல்லா
எண்ணங்களிலும் எல்லா உணர்வுகளிலும் அதை இணைக்க வேண்டும்.
அந்தந்தச் சந்தர்ப்பத்திற்கு ஆத்ம சுத்தி செய்து
கொண்டால் உடல் உறுப்புகளைச் சீராக இயக்கி நல்ல
வடிகட்டும் திறன் பெற்றுத் “தீமைகளை
அகற்றிடும் சக்தி வாய்ந்த உறுப்புகளாக அமையும்…”
நாம் என்றுமே அந்த அருள் வழியில் வாழ இது
ஏதுவாக இருக்கும்.