ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

August 8, 2026

வளரும் பிள்ளைகளை அருள் வழியில் அழைத்துச் செல்ல வேண்டும்

வளரும் பிள்ளைகளை அருள் வழியில் அழைத்துச் செல்ல வேண்டும்


நம் பிள்ளை படித்து நன்றாக இருக்க வேண்டுமென்று எண்ணுவோம். அவன் படிக்கவில்லை என்றால் இப்படிப் பண்ணுகிறானேஇப்படிப் பண்ணுகிறானே என்று ஜெபம் பண்ண ஆரம்பித்து விடுகிறோம்.
 
வீட்டுக்காரர் வந்தவுடன் பிள்ளைகளை நீங்கள் இப்படி வளர்த்துக் கெடுத்து விட்டீர்களே…! என்று ஜெபம். அவர்களையும் திட்டுவதற்கு ஆரம்பித்து விடுவார்கள். போனபின் தியானம்என்ன தியானம்…?
1.அவன் இப்படிப் பண்ணிக் கொண்டிருக்கிறான்இவன் அப்படிப் பண்ணிக் கொண்டிருக்கிறான்படிக்க மாட்டேன் என்கிறான்.
2.இவரும் கேட்க மாட்டேன் என்கிறார்…! என்று மனதிலே எண்ணித் தியானம்.
 
அந்த நேரத்தில் அவரது பேரப்பிள்ளை யாராவது வந்தால் தொலைந்து போ…” என்று அவனையும் சாபமிட ஆரம்பித்துவிடும். இந்த ஜெபம் என்ன செய்யும்…?
 
அந்தச் சாபம் வந்தவுடன் கோபம் வந்துவிடும். இரவு நேரத்தில் கை கால் குடைச்சல் மேல் வலி உடல் வலி என்று எல்லாமே வந்துவிடும்… சகிக்க முடியாது. ஏனென்றால் அவன் செயலையும் அதனால் வேதனையையும் எடுத்தவுடன் கை கால் குடைச்சல் வரும். இந்தத் தியானம் செய்கிறோம்.
 
ஆனால் இதற்கு நாம் என்ன செய்ய வேண்டும்…?
 
இரவில் படுக்கப்படும்போது மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும்... என் ஜீவாத்மா பெற வேண்டும் என்று ஆத்ம சுத்திசெய்யுங்கள்.
 
நீங்கள் யாம் கொடுத்த சக்திக்காக வேண்டித் தியானமிருக்கும் போது
1.ஒரு நாளில் பத்து நிமிடம் துருவ நட்சத்திரத்தின் பேரருளை எடுங்கள்.
2.அந்தச் சக்தியை எடுக்கும் போது அந்த ஞானியரின் சக்தியைப் பிரித்துக் கொடுக்கும்.
3.தை உங்களுக்குச் செய்து கொடுக்கிறோம்.
 
சாமி வந்தவுடன் எல்லாம் நன்றாகி விட்டதுநன்றாகி விட்டது என்கிறோம். அடுத்ததாக இரண்டு தரம் வந்து நல்லதாக ஆகிவிட்டது என்பார்கள். மூன்றாவது தடவை என்ன செய்கிறார்கள்…?
 
யாம் எத்தனை தடவை செய்து கொடுப்பது…? ஒரு தரம் இரண்டு தரம் மூன்று தரம் கூடச் செய்து கொடுக்கலாம். நான்காவது தரமும் யாமே செய்து கொடுக்க வேண்டும் என்று எண்ணுகிறார்கள்.
 
ஒன்றும் பலனில்லையென்றால் சாமி என்னத்தைச் செய்துவிட்டார்…?” என்று உடனே ஜோசியக்காரனிடம் சென்று நல்ல நேரம் வருகிறதா…? கெட்ட நேரம் வருகிறதா…? என்று பார்த்து அதற்கு யாகத்தைச் செய்து விட்டால் அல்லது ந்திரத்தைக் கொண்டு வைத்தால் நல்ல நேரம் வருமா…? என்றிருப்பார்கள்.
 
உங்கள் எண்ணத்திற்குள் எடுத்துச் சுத்தப்படுத்திக் கொள்ளுங்கள் என்றால் செயல்படுத்த மாட்டார்கள். ஆகையினால்தான் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு நிமிடத்திலும் ஆத்ம சுத்தி என்ற ஆயுதத்தைக் கொடுப்பது.
 
மனித வாழ்க்கையில் இன்று குடும்பத்தில் ஒரு பிரச்சனையால் பையன் தவறு செய்கிறான் என்றால்
1.அவன் செய்த தவறின் உணர்வுகள் நமக்குள் பட்டவுடன் நமக்குக் கோபம் வரத்தான் செய்யும்.
2.ஆனால் அதே கோபத்தால் நாம் சாபமிடும் நிலைகளுக்கெல்லாம் நாம் வாக்கைக் கொடுத்து விடுவோம்.
3.அந்தக் கெட்டது உடனடியாக வேலை செய்யும்.
 
நாம் குழந்தை மேல் பாசமாக இருப்போம். நம்மையறியாமலே இந்த உணர்வைப் பாய்ச்சியவுடன் நம் எண்ணமே துரித நிலைகளில் வேலை செய்து அவர்களுக்கு இடைஞ்சலாகும். அதனால் அவர்கள் சங்கடப்படும் போது அதை எண்ணி மீண்டும் வேதனைப்படுவோம்.
 
இதைப் போன்று
1.நம்மை அறியாமலேயே பின்னிப் பிணைத்துத் துன்பப்படுத்திக் கொண்டிருக்கும் நிலையை மாற்றுவதற்குத்தான் தக்க ஆயுதத்தை
2.“மிஷின் கண்” (MACHINE GUN) போன்று ஆத்ம சுத்தி என்ற ஆயுதத்தை உங்களுக்குக் கொடுக்கிறோம்.
 
அதைப் பயன்படுத்தினால் இருள் சூழும் நிலையை நிச்சயம் மாற்றியமைக்க முடியும்.

உலக மக்களை அருள் ஒளியின் சுடராக மாற்றும் சக்தி பெறுங்கள்

உலக மக்களை அருள் ஒளியின் சுடராக மாற்றும் சக்தி பெறுங்கள்


ந்தச் செல்வமும் நமக்குச் சொந்தமாக வருவதில்லை. ஆனால்
1.அருள் ஞானத்தை நமக்குள் சொந்தமாக்கி விட்டால் இருளை வென்று ஒளியின் உணர்வாக ஆக்கும் தன்மை பெறுகின்றோம்.
2.அதையே இந்த மனித வாழ்க்கையில் நாம் சொந்தமாக்கிப் பயன்படுத்த வேண்டும்.
 
எந்த நிலையில் வாழ்ந்தாலும் இந்த உடலும் சொந்தம் ஆவதில்லை. இந்த உடலால் சம்பாதித்த செல்வமும் நிலைத்ததில்லை.
 
கோடிக் கோடிச் செல்வங்களைப் பெற்றாலும் பல ஆயிரம் பேரைக் கொன்று குவித்து நான் சுகமாக வாழ்வேன் என்றாலும் அப்படிப்பட்ட அரசனும் இன்று இருந்ததில்லை.
 
பேய் மனமாக அவன் சென்று விட்டான். அவன் உணர்வுகளும் பேய் மாக மாறி விட்டது.
1.அவன் ஆசையைப் பின்பற்றிய அனைவரும் அவன் வழியிலே சென்று மதம் என்ற வெறி கொண்டு
2.மனிதனை மனிதனே அழித்துக் கொண்டு கொன்று குவித்து அதைக் கண்டு மகிழும் நிலையை இன்று உருவாகிவிட்டது.
 
அரசன் சென்ற நிலையை இன்று உருவானது. அதன் உணர்வு கொன்று குவிக்கும் உணர்வாக வளர்ந்து விட்டது. மதம் என்ற போர்வையை அவன் உருவாக்கினான்.
 
அதே மதத்தின் அடிப்படையில் இன்று நஞ்சு கலந்த உணர்வாக மதத்திற்குள் இனமென்று வளர்ந்து விட்டது. தன் இனமே பெரிது என்றும் மற்ற இனத்தைப் ழித்துப் பேசினான். பழி தீர்க்கும் உணர்வுளே இங்கு வளர்ந்தது.
 
மனிதனுக்கு மனிதனே ருக்குலையச் செய்யும் நிலையாகச் சிந்தித்து வாழும் நிலைகள் செயலிழந்து சிந்தனைற்ற செயலாகவே செயல்பட்டு… சிந்தனையற்ற செயல்களை நாம் நுகரும் பொழுது நஞ்சான உணர்வுகளை வளர்த்து நஞ்சை உணவாக உட்கொள்ளும் நஞ்சின் செயலாக்கங்களாக ருப் பெற்றுவிட்டது.
 
நஞ்சை வளர்த்திடும் நிலையே நமக்குள் வளர்கின்றது. இதைப் போன்ற நிலையில் இருந்து நாம் மீள வேண்டும்.
1.அதற்குத்தான் எனது குரு அருளை உங்களுக்குள் பதிவு செய்கிறேன்…  நமது குரு என்ற நிலையில் அனைவரும் வாழ வேண்டும்.
2.முதலில் எமது குருவாக இருந்தார். இந்த உணர்வின் தன்மையை நீங்கள் நுகர்ந்தறிந்து இந்த உணர்வின் வழி சென்றால்
3.”நமது குரு…” என்று நமக்குள் ஒன்று சேர்த்து வாழும் நிலை வரும்.
 
சாமியையும் குருவையும் பிரித்து விடாதீர்கள்…! நமது குரு என்று அருள் வழியில் ஒன்றி வாழ்தல் வேண்டும்.
 
இந்த உணர்வின் துணை கொண்டு உலக மக்கள் நஞ்சிலிருந்து விடுபட வேண்டும். அருள் ஞானம் பெறுதல் வேண்டும். இந்த உணர்வைத் தியானித்து அதை நாம் பெருக்க வேண்டும்.
 
பகைமை கொண்ட உணர்வுகள் இங்கே வந்தாலும் இந்தப்கைமை வளராது தடுக்க அருள் ஒளியைப் பெற்று உலக மக்கள் அருள் ஞானத்தைப் பெற்று வாழ்ந்திட வேண்டும்.
 
1.இந்தப் பூமியை அருள் ஞானத்தை வளர்த்திடும் பூமியாக ஆக்கிட வேண்டும்.
2.அருள் ஞானிகள் பிறந்த பூமியில் அருள் ஒளியின் சுரை எண்ணி வளர்த்து
3.இந்த இந்தியா என்ற எல்லையைண்ணும் பொழுதெல்லாம் உலக மக்கள் மனம் மாறி
4.அருள் ஒளியின் சுடராக மாறும் நிலைக்கு வேண்டும்.