ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

August 23, 2026

கணவனும் மனைவியும் சிவசக்தியின் ஸ்வரூபமாகும் வழி

கணவனும் மனைவியும் சிவசக்தியின் ஸ்வரூபமாகும் வழி


கணவனும் மனைவியும் ஆத்ம சுத்தி செய்து கொண்டு மகரிஷிகளின் அருள் சக்தியை அவர் ஜீவாத்மா பெற வேண்டும் என்று கணவன் மனைவியை நினைக்க வேண்டும்மனைவி, கணவனை நினைக்க வேண்டும். இருவரும் ஒரு நிலை கொண்டு சரியான தியானத்தைச் செய்தால் இதில் நீங்கள் சொர்க்க பூமியைப் பார்க்கலாம்.
 
1.ஒரு குடும்பத்திற்குள் கணவன் மனைவி இரண்டு பேருமே மகிழ்ச்சியாக இருந்தால்தான் அது ஒரு சொர்க்கலோகம்.
2.கணவன் மனைவிக்குள் ஒவ்வொரு நிமிடமும் வேற்றுமை உணர்வு வந்தால் நரகலோகம்தான்.
 
ஆனால் அருள் ஞானம் பெறக்கூடிய இந்தப் பாக்கியமான உணர்வை நீங்கள் பெற்றபின் குடும்பத்தில் ஒவ்வொருவரும் ஒற்றுமையான நிலைகளில்  இருப்பதற்கு யாம் கொடுக்கும் இந்த வாக்கின் நிலைகளைப் பயன்படுத்தி அந்த மகரிஷிகளின் அருள் ஒளிகளை நீங்கள் சேர்த்துக் கொள்ளுங்கள்.
 
நீங்கள் தவறு செய்யவில்லை என்றாலும் முந்தைய சாப நிலைகளிலிருந்து அவர்களுடைய உணர்வின் அணுக்கள் நமக்குள் உண்டு.
1.நல்ல குணங்களைச் சிதறடிக்கும் அந்த உணர்விலிருந்து உங்களை நீங்கள் மீட்டு
2.ஒவ்வொருவரும் இந்த மகிழ்ச்சியின் தன்மை பெற வேண்டுமென்று யாம் எல்லா மகரிஷிகளையும் வேண்டி அந்த அருள் ஒளியைக் கேட்கின்றோம்.
 
யாம் அந்த மகரிஷிகளின் அருள் ஒளியைப் பெற்று இந்த உணர்வின் தன்மை எம் உடலுக்குள் சேர்த்ததனாலே எமக்கும் மகிழ்ச்சி ஏற்படுகின்றது.
 
இந்த மகிழ்ச்சியான உணர்வுகள் இந்த உடலுக்குள் செலுத்தப்படும் போது நீங்கள் பெற வேண்டுமென்ற இந்த ஆசையினாலே உங்களுக்குள் இந்த உணர்வின் தன்மையைப் பதியச் செய்கின்றோம்.
 
இதன்படி நீங்கள் செய்தீர்களென்றால் நீங்கள் அந்த மகரிஷிகளின் அருள் ஒளியைப் பெற்று உங்களுக்குள் சொர்க்க பூமியை மகிழ்ச்சியான எண்ணங்களைப் பார்க்கலாம்.
 
1.உங்கள் மூச்சும் பேச்சும் கணவரிடத்திலே மகிழ்ச்சியை ஊட்டும்.
2.கணவருடைய உணர்வும் உங்களுக்கு மகிழ்ச்சியை ஊட்டும்.
3.இரண்டு சரீரமும் ஒன்று சேர்ந்து இந்த உணர்விலே சொர்க்கத்தைக் காண்பீர்களென்றால்
4.இந்த உடலை விட்டுச் சென்றபின் உங்கள் உயிராத்மாக்கள் இரண்டுமே விண் செல்லும்.
 
இன்று துருவ நட்சத்திரம் சிவசக்தியின் ஸ்வரூபம் கொண்டுதான் துருவத்தில் இருக்கின்றார்கள். அதைப் போன்று என்றும் 16 என்ற நிலையை நீங்கள் எல்லோரும் பெறலாம்.

மும்முனையாக நமக்குள் இயக்கும் சில உணர்வின் இயக்கங்கள்

மும்முனையாக நமக்குள் இயக்கும் சில உணர்வின் இயக்கங்கள்


ஒருவரை நண்பன் என்று நாம் கருதிக் கொண்டிருக்கும் பொழுது அவனில் விளைந்த உணர்வு நாம் ஏற்றுக் கொண்ட உணர்வு இவை இரண்டும் கலந்து ஊழ் வினையாகப் பதிவாகும் பொழுது அந்த நண்பனை அணுகி அவனுக்கு நாம் என்ன செய்ய வேண்டும்…? என்று எண்ணுகின்றோம்.
 
அந்த நண்பன் பால் நாம் ஒருங்கிணைந்த நிலைகள் கொண்டு பற்றுடன் பதிவு செய்த உணர்வுகள் அந்த நண்பன் ஒரு தவறு செய்திருப்பான் என்றால்
1.அதாவது இன்னொருவனுக்கு எதிர்நிலையான தவறுகளைச் செய்திருப்பார்
2.அவர் எனக்கு இப்படித் துரோகம் செய்தார் என்று அவர் நம்மிடம் சொன்னாலும்
3.நண்பன் துரோகி அல்ல எனக்கு நல்லவனாகத் தான் இருக்கின்றான் அவன் நல்லவனே…! என்று
4.இந்த உணர்வின் தன்மை வினைக்கு நாயகனாக அவன் உணர்வு நமக்குள் பதிவு செய்தது இவ்வாறு தான் இயக்கும்.
 
இன்னொருவன் கூறிய கூற்றை ஏற்றுக் கொள்ளாது.
 
ஆனாலும்… அவன் பேசி உணர்வுகள் நமக்குள் பதிவான பின் அவனை ஏற்றுக் கொள்ளாத நிலைகள் கொண்டு அவனை நினைக்கும் போதெல்லாம் நண்பனைக் குற்றவாளியாகப் பேசினான் என்ற உணர்வுகள் நமக்குள் பதிவாகும்.
 
இருந்தாலும் நம் நண்பன் ஒரு சந்தர்ப்பத்தில் ஏதோ அவருடைய சூழ்நிலை காரணமாக நாம் சொன்னதை அந்த நண்பன் செய்யவில்லை என்றால் என்ன ஆகிறது…?
 
அந்த இன்னொருவன்… வேண்டாதவன் நம்மிடம் கூறினான் அல்லவா…! அந்த உணர்வு நம் ஆன்மாவில் கலந்தே இருக்கும்.
1.ழ் வினையாக நமக்குள் வித்தானாலும் ஆன்மாவில் கலந்து இருக்கும்.
2.இது இரண்டையும் கலந்து நாம் சுவாசிக்கும் போது அவன் கடுமையாக நண்பனைக் குற்றம் கூறிய உணர்வு கலந்த பின்
3.நண்பனைக் குற்றவாளி என்று நாமும் கருதும் நிலைக்கு வந்து விடுகின்றோம்.
4.அப்படி வந்து விட்டால் சிறிதளவு அந்த எதிர்ப்பு நிலைகள் பதிவாகி விட்டது என்றால் மும்முனையாக…” அது இயங்கத் தொடங்கி விடும்.
 
பாலுக்குள் பாதாமைப் போட்டாலும் சுவையாகத் தான் இருக்கின்றது. அதில் சிறிதளவு காத்தை இணைத்து விட்டால் இந்தக் காத்தின் சுவையைத் தனித்துப் பிரித்தே காட்டுகிறது.
 
1.ஒருவன் தவறு செய்யும் உணர்வுகள் அவன் நண்பன் என்று இருந்தாலும்
2.நண்பன் மீது குறை கூறிய உணர்வுகளோ நண்பனுடன் பற்று கொண்டதுடன் இணைத்த உணர்வுகள்
3.மும்முனையால் இயக்கப்பட்டு மாற்று வித்தாக ஊழ்வினையாகப் பதிவாகின்றது.
 
பதிவான உணர்வுகள் அந்த நண்பன் வெளியிட்ட உணர்வலைகளைச் சூரியனுடைய காந்த சக்தி கவர்ந்து வைத்திருக்கிறது. நம்முடன் நட்பு கொண்ட உணர்வும் இங்கே பதிவாகி இருக்கின்றது.
 
ஆனால்
1.நட்பின் நிலைகள் ஓங்கி இருப்பினும்
2.சந்தர்ப்பத்திற்கு எதிர்ப்பு உணர்வுகள் ஏற்பட்டிருந்தால்
3.அதைச் சொல்லி இதனுடன் இணைத்து நாம் கேட்டிருந்தால்
4.அப்படிப் பதிவான நிலைகள் வந்து விடுகின்றது பகைமையாக நமக்குள் உருவாக்கி விடுகின்றது.
 
இதையெல்லாம் நாம் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டியது மிகவும் அவசியம்.