
ஒரு கட்டுப் பீடி… 10 சிகரெட்டை வைத்து நோயை நீக்கும் சக்தி கொடுத்தார் குரு - சூடு போட்ட பூச்சியினிடம் அனுபவம்
குருநாதர் எமக்குக் கொடுத்ததை நீங்களும் பெற வேண்டும் என்ற ஆசையில் தான்
குரு காட்டிய அருள் ஒளிகள் அந்த
ஒளி பெறும் உணர்வின் ஆற்றல் உங்களுக்குள் பெருக வேண்டும்.
நீங்கள் செய்த நன்மையின் தன்மை இருள்
சூழச் செய்யும் விஷத்தின் தன்மை அகல வேண்டும். நீங்கள் இடும் மூச்சுலைகள்
இங்கே படர்ந்துள்ள நஞ்சின் தன்மையை அகற்ற வேண்டும்.
இதைக் கேட்டுணர்ந்தோர் உள்ளங்களிலும்
இந்த அரும்பெரும் சக்தி ஊடுருவி அவர் அறியாது இருள்
சூழச் செய்யும் நிலைகள் விலக வேண்டும்… மெய்ப்பொருள் காண வேண்டும்.
அந்த மெய்ப்பொருளை அறிய வேண்டும் என்ற உணர்வினை நீ எப்படிப் பருக
வேண்டும் என்று தான் காட்டுக்குள் என்னை அழைத்துச் சென்று உணர்த்துகின்றார்.
வேஷ்டி தான் கட்டி இருக்கின்றேன். ஆனால்
காட்டிற்குள் கொசு அதிகமாக உண்டு. யானையே அந்த இடத்தில் நிற்காது. அது
போன்ற கொசுக்களை எம்மீது தாக்க வைக்கின்றார்.
அது மட்டுமல்லாதபடி அங்கே ஒரு எறும்பு இருக்கின்றது.
ஊறிக்கொண்டே செல்லும்/ பேசாமல் விட்டால் அது பாட்டுக்குப் போகும். ஆனால்
தொட்டு விட்டால் போதும்… லபக் என்று அப்படியே கடிக்கும்.
விஷமான எறும்பு கடித்த பின் அந்த இடத்திலே தடிப்பாகிவிடும். பத்து
இருபது எறும்பு கடித்தால் போதும் மயக்கம் போட்டு கீழே விழுந்து விடுவோம்.
அத்தகைய எறும்புகள் ஊறி வரும் பொழுது அது எம்மைக்
கடிக்கின்றது கை கால் எல்லாம் வீங்குகிறது. இப்படிச் செய்து விட்டாரே என்று குருவை எண்ணி ஏங்குகிறேன்.
வேதனை பொறுக்காதபடி என்ன
வாழ்க்கை…? என்று உடலில் எல்லை கடந்த துன்பம் வரப்படும் பொழுது சிந்தனையற்ற நிலைகள்
வருகின்றது.
இதைக் காட்டிலும் இன்னொரு பூச்சி இருக்கின்றது. அது மேலே
பட்டால் சூடு போட்டது மாதிரி ஆகிவிடும். அந்தப் பூச்சியில் இருக்கும் விஷத்தின் தன்மை உடலில் பட்டால் சூடு கோலால் சுட்டது
போன்று வார் வாராக
அச்சு விழுகின்றது..
எரிச்சல்… நெருப்பு
மேலே பட்டால் எப்படி எரியுமோ அப்படி எரிகின்றது. அந்த
இடத்திலே எம்மை அமரச் செய்து போகனைப் பற்றியும் காட்டுகின்றார். அந்தச்
சித்தர்கள் அதைப் போக்க ஆற்றல்மிக்க நிலைகள் எடுப்பதையும்
காட்டுகின்றார்.
சிறு பூச்சி தான்… அது உன் மீது ஊர்ந்து செல்லப்படும் பொழுது உன்னுடைய உணர்வின் ஆற்றலுக்கும்
அந்தப்
பூச்சியின் உணர்வுக்கும் எதிர் நிலையாகும் பொழுது அது எப்படிச் சூடாகி…
நெருப்பில் இட்டால் எப்படியோ அது போல மேலே பட்டால் கருகுகின்றது.
அப்படி என்னைச் சுடும்படி வைக்கின்றார். ஒன்றல்ல
பல…! அது மேலே
ஊறுகின்றது… என்னை இம்சிக்கின்றது… அலறுகின்றேன். குருநாதர் அதற்கு முன்
உபதேசித்த
உணர்வுகளை எல்லாம் மறந்து விட்டேன்… உடலில் இருந்து இதைத்தான் எண்ணுகின்றேன்.
போகன் இதையெல்லாம் எப்படி மாற்றி அமைத்தான்…? தனக்கு
வரும் துன்பங்களை நீக்க வலுக்கொண்ட உணர்வின் ஆற்றலைத் தனக்குள்
பெருக்கி அந்தத் துன்பத்தை நீக்கி அந்த உணர்வைத் தனக்குள்
வளர்த்துப் பிறர் துன்பத்தை எப்படிப் போக்கினான்…?
சீதா ராமா சுவை கொண்ட சொல்லாக வெளிவரும் பொழுது அந்த
உணர்வுகள் அம்பாகப் பாய்ந்து
அவர் உடலில் உள்ள தீய விளைவுகளை எப்படி மாற்றுகின்றது…?
காட்டுக்குள் அமர வைத்து இத்தகைய தொல்லைகளுக்கு மத்தியில் காட்டுகின்றார்.
இந்த நினைவை நான் ஏற்கப்படும் பொழுது… நீ
இப்படி வேதனைப்படுகின்றாய். ஆனால் அது போன்ற பூச்சிகளாகவும் நீ இருந்திருந்தாய… அந்த
எறும்பாகவும் நீ இருந்தாய்.
உன் உயிர் தான்
அதிலிருந்து படிப்படியாக வளர்த்தது. அந்தந்த உடல்களில் தன்னைக் காத்துக்
கொள்ள அந்த உணர்வின் ஆற்றல் வருகின்றது. காத்துக் கொண்ட உணர்வின் தன்மை அதற்குள் கலந்து உணர்வின் சத்தாக
விளைந்து மனிதனாக வரப்படும் பொழுது இவை அனைத்திலிருந்தும் மீட்டிடும் உணர்வே எண்ணங்களாக உனக்குள் எப்படி விளைந்தது…? என்று
காட்டுகின்றார்.
ஏனென்றால் இதெல்லாம் பாட நூல்களுக்கு வராது.
குரு காட்டிய அருள் வழியில் ஒரு மனிதனின் உடலுக்குள் எப்படி
இயக்குகின்றது…? என்ற நிலையில் ஒரு கட்டுப் பீடிகட்டைக்
கொடுக்கின்றார்… தொப்பி
சிகரெட் பத்தை ஒன்றாக வைத்து வாயில் வைத்து ஊது என்றார்.
அவர் சொன்ன முறைப்படி
குடிக்கப்படும் பொழுது அருள் மணங்களை எவ்வாறு சுவாசிக்க வேண்டும் என்று உணர்த்துகிறார்…? காற்றிலிருந்து
இப்பொழுது எப்படிச் சுவாசிக்கின்றாயோ…? இதை
எப்படி ரசிக்கின்றாயோ… இதை எப்படி வெறுக்கின்றாயோ…? இதைப் போல அது
எந்தெந்த நிலைகளுக்கு எப்படி எப்படி என்று நுகரும்படிச்
செய்கின்றார்.
அந்த வாசனைகளை நுகர்ந்த பின் என் உடலிலே அந்த சூடு போன்ற இருந்த நிலைகள் மாறுகிறது. அந்தச் சூடு
மாறும் பொழுது இதே உணர்வு கொண்டு அந்தப் பூச்சியினையும் நேர்கொண்டு பார் என்றார் குருநாதர்.
அப்போது அந்தப் பூச்சி
என்ன ஆகிறது…? அதை முறிக்கும் உணர்வை உனக்குள் எடுத்து உன் பார்வையை நீ அங்கே
செலுத்தப்படும் பொழுது அதனுடைய விஷத்தன்மைகள் எப்படிச் செயல்
இழக்கின்றது…?
விஷம் செயலிழந்த பின் பூச்சி
என்னாகின்றது…? என்று
காட்டிற்குள் அமைத்து இத்தனையும் காட்டுகின்றார் குருநாதர்.