ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

December 11, 2025

தாய் தந்தையரை விண் செலுத்திய பின் தான் விண்ணின் ஆற்றலைப் பெற முடிந்தது

தாய் தந்தையரை விண் செலுத்திய பின் தான் விண்ணின் ஆற்றலைப் பெற முடிந்தது


யாம் குருநாதர் காண்பித்த அருள் வழி கொண்டு பல ஊர்களுக்கும் சுற்றுப் பிரயாணம் செய்து கொண்டிருந்த சமயம் எமது தாய் வாழ்வின் இறுதிக் கட்டத்தில் இருந்து கொண்டிருந்தார். குருநாதர் அதை எமக்கு உணர்த்தினார்.
 
1.உனது அம்மாவைப் பழைய நிலைகளுக்குச் செல்லும்படி விட்டுவிடாதே…!
2.அவர்களை முதலில் விண் செலுத்த வேண்டும்.
3.அதன் பிறகு தான் நீ விண்ணுக்குப் போக முடியும் என்று நினைவுபடுத்தினார்.
 
ஆகையால் எமது தாயைச் சந்திக்கச் சென்றோம். அங்கு அவர்களைப் பார்க்கும் பொழுது அவர்களால் சாப்பிட முடியவில்லை. கண் பார்வை முழுவதும் மங்கி விட்டது, உடல் வீங்கியிருந்தது, எழுந்திருப்பதற்கும் மிகவும் சிரமப்பட்டார்கள்.
 
யாம் அது சமயம் சாமியம்மா அவர்களையும் உடன் அழைத்துச் சென்றிருந்தோம். ஆகையால் எமது தாய் சாமியம்மாவை வீரம்மாஎன்று பெயர் சொல்லி அழைத்து ஒரு முட்டையை எடுத்து வேக வைத்து இரண்டு மிளகு சிறிது உப்பு வைத்து என் நாக்கில் வைவீரம்மாஎன்றார்கள்.
 
ஏனென்றால் எமது தாய் முட்டை கோழிக்கறி போன்றவைகளை விரும்பிச் சாப்பிடுவார்கள். யாமும் முன்பு முட்டை கோழி என்றெல்லாம் சாப்பிட்டோம்.
 
எமது தாயால் அந்த இறுதிக் கட்டத்தில் சாப்பிடவே முடியாது. ஆனால் வேக வைத்த கோழி முட்டையில் இரண்டு மிளகும் சிறிது உப்பும் வைத்துக் கொண்டுவா என்றால்
1.எமது தாயின் நினைவு எங்கிருக்கிறது?
2.கோழியின் மேல்தான் இருக்கின்றது.
 
உனது அம்மா முட்டையும் கோழிக் கறியும் நிறையச் சாப்பிட்டிருப்பார்கள், அதனின் அணுக்கள் அவர்கள் உடலில் விளைந்திருக்கின்றது என்று குருநாதர் கூறினார்.
 
எமது தாய்க்கு உதவியாக சாமியம்மாவை இருக்கச் செய்துவிட்டு யாம் தாரமங்கலம் வந்து விட்டோம். ஏனென்றால், யாம் தாரமங்கலம் வருவதாக உரைத்து ஊர் முழுவதும் விளம்பரமும் செய்து விட்டார்கள்.
 
இதனால் தாரமங்கலத்திற்குத் தவிர்க்க முடியாமல் வர வேண்டியதாகி விட்டது. சேலத்தில் உள்ள அன்பர்களிடம் இந்தச் சூழ்நிலையைச் சொல்லிவிட்டுத்  தாரமங்கலம் வந்து விட்டோம்.
 
சேலத்து அன்பர்கள் தாரமங்கலம் அன்பர்களிடம் ஞானகுரு அவர்களின் தாயின் உடல்நிலை மிகவும் குன்றியிருக்கிறது. ஆகவே ஏதேனும் தகவல் வந்தால் ஞானகுரு அவர்களை உடனே வழியனுப்பி வையுங்கள்  என்று கூறியிருந்தார்கள்.
 
தாரமங்கலத்தில் யாம் கூட்டத்தில் உபதேசம் கொடுத்து முடித்து தியானத்தில் இருந்து கொண்டிருந்தோம். அப்போது எமது தாயின் ஆன்மா வெளி வருகின்றது.
 
அது சமயம் எமது குருநாதர் சொன்னது போன்று எமது தாயை மனதில் நினைத்துத் தியானம் செய்தோம். அப்பொழுது அதனின் உணர்வின் நிலைகள் அங்கே தெரிந்தது. கூட்டத்தில் இருந்தவர்கள் யாரோ ஒரு பெரியம்மா போகின்றார்கள் என்றார்கள்.
 
இது தாரமங்கலத்தில் நடந்த சம்பவம்.
 
அம்மாவின் உருவம் அதனின் உடைகள் அதனின் உணர்வுகள் அங்கே தெரிந்தது. அப்பொழுது எமது தாயின் உயிரான்மாவைச் சப்தரிஷி மண்டலத்துடன் இணையச் செய்தோம்.
 
1.எமது தாயின் உயிரான்மாவைச் சப்தரிஷி மண்டலத்துடன் இணைத்து உடல் பெறும் உணர்வுகளைக் கரைத்தபின் தான்
2.அந்த உணர்வின் சக்தியின் துணை கொண்டு சப்தரிஷி மண்டலங்களின் ஒளிகாந்த சக்தியினை யாம் பெற முடிந்தது.
3.அதற்கு முன்பு வரையிலும் எம்மால் பெற முடியவில்லை.
4.அது வரையிலும் எந்த ஒரு உயிரான்மாவையும் விண்ணிற்கு ஏற்ற முடியவில்லை.
 
அன்னை தந்தையின் உணர்வுகள் உனது உடலில் இருப்பதனால் அவர்களின் உயிரான்மாக்களை முதலில் விண்ணிற்கு ஏற்ற வேண்டும் என்பதை எமது குருநாதர் எமக்கு உரைத்தார்.
 
நான் உனக்குக் குருவாக இருக்கலாம்அருள் ஞான உணர்வின் தன்மையை வளர்க்கலாம். இருந்தாலும்
1.உன் அன்னை தந்தையை நீ விண்ணிற்குச் செலுத்த வேண்டும்.
2.அதன் உணர்வின் தன்மை கொண்டு தான் என்னையும் அங்கே அழைத்துச் செல்ல முடியும் என்று குருநாதர் உபதேசித்தார்.
 
குரு வாக்கு தப்புவதில்லை. நாம் சாதாரண மனிதராக இருக்கின்றோம் என்று நினைக்கின்றோம். அது சமயம் தான் எமது தாயின் உயிரான்மாவை விண்ணிற்கு ஏற்றினோம்.
 
எமது தந்தையின் இறப்பின் பொழுது கூட யாம் அவர் அருகில் இல்லை. அப்போது கரூரில் கால் நடையாகச் சுற்றிக் கொண்டிருந்தோம். இராஜபாளையத்திலிருந்து கரூருக்குக் கால் நடையாக வந்திருந்தோம்.
 
அது சமயம் தான் எமது தந்தையின் உயிரான்மா உடலை விட்டுப் பிரிகின்றது. அப்போது அதனின் உணர்வுகள் காட்சிகளாகத் தெரிந்தது. அருகே ஒரு இடத்தில் போய் அமர்ந்தோம்.
 
அங்கே ஏற்கனவே அறிமுகமான ஒருவர் இருந்தார். அந்த நேரத்தில், அவருக்கும் காட்சி தெரிந்தது. ஐயோ.. உங்கள் அப்பா போகிறாரே…!என்றார்,
 
அருகிலிருந்த இன்னொருவர்யாரோ ஒரு பெரியவர் போகிறார்என்று சொன்னார். யாம் அங்கேயே அமர்ந்து எமது தந்தையின் உயிரான்மாவை விண்ணிற்கு அனுப்பினோம்.
 
எம்மை ஈன்றெடுத்த தாய் தந்தைதான் எமக்குக் கடவுள். எம்மை மனிதனாக உருவாக்கியவர்கள் அவர்கள் தான். குருநாதர் காண்பித்த அருள் வழியில் அவர்களை விண் செலுத்தினோம்.
 
1.முதலில் எமது தந்தை விண் சென்றார்… அடுத்து எமது தாயையும் விண் செலுத்தினோம்
2.இருவரையும் சேர்த்துச் சிவசக்தியின் உணர்வுகளாக அங்கே வளர்க்கச் செய்ய வேண்டும்.
3.அப்பொழுது தான் ஒளியின் சரீரமாக வளர்க்க முடியும் என்று குருநாதர் உணர்த்தினார்.
 
அதன் பிறகு
1.இதன் உணர்வின் ஒளி கொண்டு உன் உணர்வுடனே வருகின்றேன்… உணர்வின் ஒளியை உணர்த்துகின்றேன்.
2.என்னை விண்ணில் செலுத்திவிடு உணர்வின் ஒளியாக இயக்கிவிடு…! என்று குரு சொன்னார்.
 
எம் அன்னை தந்தையர் விண் சென்றபின்தான் குருவின் உணர்வின் ஒலிகளை அவர் காண்பித்த அறநெறிகள் கொண்டு அவர்களையும் விண்ணிற்குச் செலுத்தினோம்.
 
உடலை விட்டு பிரிந்த ஆன்மாக்களை விண் செலுத்துவதற்காக விண்ணின் ஆற்றளைப் பெறுவதற்கு கேதார்நாத் பத்ரிநாத் போன்ற இடங்களுக்கு எம்மைப் போகுமாறு செய்தார் குருநாதர். 
 
அங்கே கடும் தவம் இருந்த ஆன்மாக்கள் உணர்வின் தன்மை எடுத்துத் தம் உணர்வுக்குள் ஒளியாக மாற்றியது எப்படி…? என்பதை எம் அன்னை தந்தையை விண்ணிற்கு உயர்த்தியபின்தான் யாம் அந்தப் பேருண்மைகளை அறிய முடிந்தது.
 
ஆகவே இன்றைய நிலைகளில் யாம் உங்களுக்கு உபதேசிப்பது அனைத்தும்  பேருண்மையின் உணர்வுகள்…
 
அருள் ஒளியின் உணர்வுகளை உங்களுக்குள் வளர்த்துக் கொள்ளுங்கள்.
 
உங்கள் முன்னோரின் உயிரான்மாக்கள் இன்னொரு உடலுக்குள் சென்றிருந்தாலும் பரவாயில்லை. நீங்களும் உங்களுடைய குடும்பத்தைச் சேர்ந்தவர்களும் ஒன்றாக அதிகாலை துருவ தியானத்திலும் பௌர்ணமி நாட்களிலும் தியானத்தில் அமர்ந்து
1.எங்களுடன் வாழ்ந்து வளர்ந்து உடலை விட்டுப் பிரிந்து சென்ற எங்கள் குலத் தெய்வங்களான முன்னோரின் உயிரான்மாக்கள்
2.சப்தரிஷி மண்டலத்துடன் இணைய வேண்டும்உடல் பெறும் உணர்வுகள் கரைய வேண்டும்
3.அழியா ஒளிச் சரீரம் பெற வேண்டும் பேரின்பப் பெரு வாழ்வு பெற வேண்டும் என்று எண்ணி உந்தித் தள்ளுங்கள்.
 
முன்னோர்கள் பாசத்துடன் உங்களைக் காத்தார்கள். ஆகவே அவர்களை விண் செலுத்தினால் அவர்களுடைய உணர்வின் தொடர், உங்களுக்குள்ளும் வரும்.
 
அவர்கள் விண்ணில் இருக்கப்படும் பொழுது உங்களுடைய எண்ணத்தை அங்கே செலுத்தினால் சப்தரிஷிகளின் அருள் சக்தியை ஆறாவது அறிவின் துணை கொண்டு ஏழாவது நிலையை அடைந்தவர்களின் அருள் சக்தியை நீங்கள் எளிதில் பெற முடியும். 
 
1.உங்களை வளர்த்து வழிகாட்டிய உணர்வுகள் ஒளியாக நிலைக்கின்றது.
2.இதன் உர்வின் தன்மை கொண்டு உங்கள் உணர்வுகளும் ஒளியாக மாறுகின்றது.
 
நீங்கள் இதனை எளிதில் பெற முடியும். உங்களை நம்புங்கள்…! இதன் வழி செயல்படும் அனைவருக்கும் எமது அருளாசிகள்.

பிரம்மா – உருப்பெறச் செய்யும் சக்தி

பிரம்மா – உருப்பெறச் செய்யும் சக்தி


சூரியனிலிருந்து தோன்றிய அதீத வெப்பத்தை உண்டாக்கும் ஒரு அணுவும் நட்சத்திரத்திலிருந்து வரக்கூடிய கதிரியக்கமும் இரண்டும் ஒன்றுடன் ஒன்று மோதும் பொழுது
1.இயற்கையின் நிலைகள் ஒன்றாக இணைந்து உயிரின் துடிப்பாகும் பொழுது ஈஸ்வரா.
2.அந்த இயக்கத்திற்குள் இருக்கக்கூடிய வெப்பம் விஷ்ணு.
3.நாராயணன் விண்ணிலே சர்வேஸ்வரனாக ருப்பெறும் பொழுது ஒற்றைப்படையில் இங்கே ஈஸ்வரா என்று உருவாகின்றார்.
 
அதாவது நாராயணன் மறு அவதாரமாக விஷ்ணுவாகத் தோன்றுகின்றது.
 
பிரபஞ்சத்திற்குள் தோன்றிய இந்த உயிரணு தான் பூமிக்குள் வந்தபின் தாவர இனச் சத்தை இது சுவாசிக்கின்றது.
 
உயிரான ஒளி இதுவும் சக்தி தான் ஆனால் உற்பத்தி செய்யக்கூடிய சக்தி…! தாவர இனச் சத்தை இழுத்த உடனே அது உறைந்து சிவமாகிறது சிவசக்தி ஆகிறது.
 
இந்த உயிர் தாவர இனச்சத்தைச் சேர்த்து புழுவாகும் பொழுது அந்தப் புழுவிற்குள் அந்த உணர்வின் சக்தியாக வினையாகச் சேருகிறது. வினையாகச் சேர்த்த நிலையில் தான் எடுத்துக் கொண்ட வினைக்கு நாயகனாகப் புழுவாகத் தோன்றுகின்றது… “விநாயகா…”
 
தாவர இனத்தைத் தனக்குள் சேர்க்கும் பொழுது சக்தி சிவம் ஆகின்றது சிவத்திற்குள் சக்தி இயங்குகின்றது.
 
உதாரணமாக வேப்ப மரத்தின் சத்து இதற்குள் இணைந்து புழுவாகும் பொழுது சேர்த்துக் கொண்ட வினைக்கு நாயகனாக இந்த உடல் பெறுகிறது.
 
வினைக்கு நாயகனாக உடல் பெற்றாலும் வேப்ப மரத்தின் தன்மை கசப்பு. இந்த உயிரின் தன்மை தான் ஈர்த்து எடுத்துக் கொண்ட இந்தச் சக்தியோ லட்சுமி.
 
காந்தம்… “லட்சுமி நாராயணா என்று அங்கே சூரியனை வளர்த்தது. உயிருக்குள் இருக்கக்கூடிய இந்த இயக்கம் ஈஸ்வரன். இயக்கத்துக்குள் ஏற்படும் வெப்பம் விஷ்ணு. ஈர்ப்பு சக்தி லட்சுமி.
 
ஒரு பொருளின் தன்மை இதனுடன் இணைந்து ருப்பெறப்படும் பொழுது பராசக்தி…” எந்த மத்தை அதனுடன் இணைக்கின்றதோ அந்த மத்தை வெளிப்படுத்தும் போது ஞானம் “சரஸ்வதி…”
 
இணையக்கூடிய சந்தர்ப்பம் பிரம்மா…” ஆனால் ந்த மம் பிரணவம் ஜீவன்…! அந்தக் குணத்திற்குத் தக்கவாறு இயக்கம். இந்த உணர்வின் தன்மை ஊட்டுவதற்கு அந்த உயிர் தனக்குள் சேர்த்து ருப் பெறும் சக்தியாக மாறுகின்றது.
 
உயிரில் இருக்கக்கூடிய காந்தம் தாவர இனச் சத்தை இழுக்கின்றது. லட்சுமி. இந்த வெப்பத்திற்குள் ஆனபின் உடலாக உருப் பெறச் செய்கின்றது பராசக்தி.
 
ஆனால் வேப்ப மரத்தின் கசப்பான சத்து வரப்படும் பொழுது மம் ஞானம். இது பிரணவம். அந்த மத்தின் நிலை கொண்டு இது ஜீவன் பெறுகின்றது.
 
1.தனக்குள் எடுத்துக் கொண்ட இந்த உணர்வின் நிலைகள் பிரணவம் என்கிற பொழுது ஓ
2.அந்த வாசனையை எடுத்து ம் என்று தனக்குள் சேர்க்கப்படும் பொழுது சிவம் ஓம் நமச்சிவாய…!”
 
அந்த உயிர் தனக்குள் அதனுடைய சக்தியாச் சேர்க்கின்றது. ஆனாலும் இதில் இருக்கக்கூடிய இந்த காந்தம் வேப்ப மரத்தின் சத்தை இழுத்து தனக்குள் இணைந்து வளர செய்யக்கூடிய சக்திக்குப் பெயர் சீதா ராமா…”
 
சீதா என்பது சுவை. லட்சுமிதான் தனக்குள் எடுத்துக் கொண்ட அந்த சுவையின் சத்தைத் தனக்குள் சேர்த்த வினையாக அந்த உடலுக்குள் விளைந்து உயிருடன் சேர்க்கப்படும் பொழுது சீதா ராமன் ஆகின்றது.
 
நாராயணன் மறு அவதாரம் விஷ்ணுவாகத் தோன்றி நான் ராமனாகப் பிறக்கப் போகின்றேன் என்ற நிலை வரப்படும் பொழுது இந்த ராமன் யார்…? சீதா ராமா.
 
தான் கவர்ந்து கொண்ட இந்தச் சக்திதன் உடலாகி உடலுக்குள் விளைந்து அந்த உணர்வின் சத்து உயிருடன் சேர்க்கப்படும் பொழுது சீதா ராமா. அந்தச் சுவையால் எடுத்துக் கொண்டு விளைந்த அந்த வித்து.
 
அத்வைதம் துவைதம் காயத்ரி என்று சொல்வார்கள். காயத்ரி என்றால் என்ன…?
 
இந்த பூமியானத்திற்குள் சகல சக்திகளும் இருக்கின்றது. ஒரு வேப்ப மரத்திலிருந்து வரக்கூடிய கசப்பான மணத்தைச் சூரியனிலிருந்து வரக்கூடிய வெப்ப காந்த அலைகள் தனக்குள் கவர்ந்து கொள்கின்றது.
 
வர்ந்து கொண்ட இந்த சக்தியை இதே வேப்ப மரத்திலிருந்து எடுத்துக் கொண்ட அந்தப் புழு இதைச் சுவாசித்து இந்த உணர்வின் தன்மை மோதி.. தான் அறியும் சக்தியாகப் பெறுகின்றது. புழுவிற்கு அது ஞானம்.
 
1.வேப்ப மரத்தின் கசப்பு சூரியனின் காந்த சக்தியால் கவரப்பட்டுப் பூமியின் பரத்திலே பரவச் செய்கிறது… இது பரமாத்மா…”
2.அதை இந்தப் புழு இழுத்துத் தன் உடலுக்கு அருகில் வரும் பொழுது அதனின் ஆத்மா…”
3.பரமாத்மாவிலிருந்து சுவாசித்து அதனின் ஆன்மாவாக்கிடலுக்குள் சென்ற உடனே ஜீவாத்மா…”
4.உடலுடன் சேர்த்து விளைந்தது உயிருடன் இணையும் போது “உயிரான்மா…!”
5.பிரம்மாவிற்கு நான்கு தலையைப் போட்டிருப்பார்கள்… நான்காக உருப்பெறச் செய்வது.
6.எடுத்துக் கொண்ட சக்தி அது முழுமையாகின்றது - காயத்ரி.