
நாரதன் எனும் ஞானக் கனியை நாம் புசிக்க வேண்டும்
கந்த புராணத்திலே அன்று சொன்னது. பேரண்டமும் பெரு உலகமும் உன் அன்னை தந்தை தான். ஆகவே
1.நீ வேறு உலகம் சுற்ற வேண்டியதில்லை.
2.அன்னை தந்தையினுடைய எண்ண உணர்வலைகளுக்குள் நீ சுழன்று வந்தால் அதனின்
நிலைகள் நீ கனியாவாய் என்று
3.அந்தக் கனியைப் பெறும் தகுதியை யார் கொடுத்தது…?
4.நாரதன்…! அந்த நாரதன் யார்…?
ஏனென்றால் மனிதனாகித் தன் உயிராத்மாவை
ஒளியாக மாற்றிச் சென்று சப்தரிஷி மண்டலம் ஆகி
1.அதிலிருந்து வெளிவரும் மூச்சலைகள் - நான் பேசும் அந்த உணர்வின் அலைகள் தான்
2.அந்த வளர்ந்து கொண்ட அணு தான் நாரதன்.
அந்தக் கனியான
அருள் வித்தை “நாரதன் தான் இந்தக் கனி”
என்று சுட்டிக் காட்டுவதற்கு அவர்கள் சென்ற வழியில் செல்ல வேண்டும் என்றால் அன்னை
தந்தையின் சொல்லின் சுழற்சிக்குள் இன்று ஒருங்கிணைந்து அவர்கள் உயர வேண்டும் என்ற
உணர்வை கொண்டு நாம் சுழன்று வந்தால் இந்த உணர்வின் தன்மை கனியின் தன்மையை நீ
பெறுகின்றாய்.
இப்பொழுது நான் சொல்லும் நிலைகள்
கொண்டு “விண்ணை ஏகும் முறையை” அன்று
கந்த புராணத்தில் தெளிவாகக் காட்டப்பட்டது.
அந்த மெய் ஒளியின் உணர்வை நாம் சரியான நிலைகள் பெறுவதற்கு அந்த மெய் ஞானிகள்
காட்டிய அருள் வழிப்படி
வாரத்தில் ஒரு நாள் மூதாதையர்களான குலதெய்வங்களை விண் செலுத்த வேண்டும்.
1.அதை பழகிக் கொள்ள வேண்டும்… பழக்கிக் கொடுக்க வேண்டும்.
2.ஒவ்வொரு நாளும் அல்லது அந்த வாரத்தில் ஒரு நாள் ஆவது கூட்டுக் குடும்ப
தியானங்கள் இருந்து
3.குழந்தைகளையும் பழக்கி விண்ணின் ஆற்றலைப் வெறும் தகுதியை ஏற்படுத்தும் போது ஒரே
தொடர்பாகக் கூட்டமைப்பாக வருகின்றது..
ஆனால் இப்பொழுது நாம் குழந்தைகளை வளர்க்கப்படும் பொழுது அவன் சொன்னபடி
கேட்கவில்லை என்றால் என்ன செய்கிறோம்…? இவனுக்கு நல்ல நேரம் இருக்கின்றதா…
கெட்ட நேரம் இருக்கிறதா…? என்று ஜாதகக்காரனிடம் ஓடுகின்றோம்.
கெட்ட நேரம் இருக்கின்றது என்று சொல்லி யாகத்தை வளர்த்தால் சரியாகிப்
போய்விடும் என்று காசைக் கொடுத்துச் செலவழித்து அவன் சொல்வதைச் செய்வோம்.
யாகத்தைச்
செய்தால் அது எப்படி சரியாகும்…?
பையன் சொன்னபடி கேட்கவில்லை என்றால் நாம் இப்படித்தான் ஜாதகக்காரனிடம் கேட்டு “நல்ல
நேரம் இருக்கிறதா…” என்று தெரிய விரும்புகின்றோம்.
ஆனால் அங்கே அவன் கெட்டதைச் சொல்வான். அதை ஏற்றுக் கொள்வோம். கெட்ட நேரம்
இருக்கிறது என்று அவன் சொல்வான். அதை ஏற்றுக் கொள்வோம்.
1.பையனுக்கு நல்ல புத்தி சொல்வதற்குப் பதிலாக
2.கெட்ட நேரம் இருக்கிறது கெட்ட நேரம் இருக்கிறது என்று அவன் சொல்வதைத் தான்
நாம் ஆழமாகப் பதிவு செய்கின்றோமே தவிர
3.நல்லதை நினைத்து அதை எடுத்துச் செய்வதற்கு இல்லை.
ஆனால் ஜாதகத்தைப் பார்த்துத் தான் நான் இன்று எல்லாமே செய்து கொண்டிருக்கின்றோம்.
ஆனால் கெட்டது என்று ஜாதகக்காரன் சொல்லிவிட்டால் அந்த உணர்வு வேகமாக பதிவாகி
விடுகிறது.
நல்லதாகும் என்று சொல்லி இருந்தால் அது நடப்பதில்லை.
1.காரணம் விஷம் வேகமாக வேலை செய்யும்
2.நல்லதாக வேண்டும் என்றால் திரும்பத் திரும்ப நல்லதை எடுத்து நல்லதையே எண்ணி
வளர்க்க வேண்டும். அது எங்கே இருக்கிறது…!
ஜாதகக்காரன் சொல்லும் நல்லது நடக்காது. ஆனால் “கெட்டது அனைத்துமே… ஜாதகக்காரன் சொன்னபடி நடக்கிறது…!” என்று
அப்படித்தான் நாம் எடுத்துக் கொள்கின்றோம்.
குழந்தை பிறந்த நேரத்தின்படி அவன் தாய்க்கு ஆகாது என்று அவன் ஜாதகப்படி சொல்வான். அந்த ஜாதகப்படி இத்தனாவது மாதத்தில் இத்தனாவது
வருடத்தில் “தாய்க்கு இந்த மாதிரி ஆகும்” என்று அவன் சொல்லி விடுவான்.
அதைக் கேட்ட உடனே ஆரம்பத்திலிருந்து அந்த வித்தை நமக்குள் பதிவு செய்து
வளர்க்க ஆரம்பித்து விடுகின்றோம்.
1.கொஞ்சம் கொஞ்சமாக அதை நினைத்து நினைத்து வளர்த்து அந்த வயது வரை
2.ஜாதகக்காரன் சொன்னான் ஜாதகக்காரன் சொன்னான் என்ற அதை நினைவைக் கொண்டு
வரும்பொழுது
3.காற்றிலிருந்து அதைச் சுவாசித்து அந்த நோயை நமக்குள் வரவழைத்துக்
கொள்கின்றோம்.
ஜாதகக்காரன் சொன்னான்…! சொன்னது சரியாகி
விட்டது. சொன்ன நேரத்தில் சரியாக நடந்து
விட்டது “ஜாதகம் பொய்யா…?” என்று தான்
நாம் வாதிப்போம்.
1.அது விளைந்த பிற்பாடு ஜாதகக்காரன் சொன்னது மெய்யாகி விட்டது
2.அப்பொழுது அவன் கடவுளாகி விடுகின்றான்… நன்றாக இதை
கவனித்துக் கொள்ளுங்கள்.
மனிதனுக்கு ஜாதகம் இல்லை சூரியனுக்கு பூமிக்கோ செடி கொடிகள் மற்றும் அனைத்திற்குமே ஜாதகம் உண்டு… சொல்ல முடியும்
1.காரணம் அவையெல்லாம் “நினைத்து”
எதையும் மாற்ற முடியாது
2.மனிதனுக்கோ… கெட்டது என்று வந்து விட்டால் அதை
நீக்கிவிட்டு நல்லதைச் செய்யக்கூடிய நிலைகள் உண்டு.
நாம் உணவாக உட்கொள்ளும் ஆகாரம் எத்தகைய சுவையாக இருந்தாலும் அதற்குள் மறைந்து இருக்கக்கூடிய விஷத்தை மலமாக மாற்றிவிட்டு நல்ல உணர்வின் சத்தை உடலாக மாற்றிடும்
சக்தி நம்முடைய அறிவு ஆறாவது அறிவுக்கு
உண்டு.
அந்த அறிவால்
தான் செடிகளில் விளைந்த காய்கறிகளில் அதில் உள்ள காரலை வேக வைத்து
நீக்கிவிட்டுப் பல பொருள்களை இணைத்துச்
சுவையாக மாற்றி உணவாக உட்கொள்கின்றோம்.
மனித வாழ்க்கையில் வரக்கூடிய துன்பங்களை நீக்கிவிட்டு
1.தனது ஆறாவது அறிவை ஏழாவது நிலையாக உணர்வை ஒளியாக
மாற்றிக் கொண்டவர்கள் சப்தரிஷிகள்
2.சப்தரிஷி
மண்டலமாக இன்றும் வாழ்கின்றார்கள்… அதிலிருந்து வெளிப்படும் ஒளியான
அணு தான் நாரதன் என்பது.
அந்தச் சக்திகளை
நமக்குள் வளர்த்தால் அவர்களைப் போன்று நாமும் எத்தகைய தீமைகளையும் மாற்றி அமைக்க முடியும். அவர்களைப் போன்று நாமும்
கனியின் தன்மையை (முழுமை) அடைய முடியும்.