
எதைப் பற்றியும் “இப்படி ஆகிவிட்டதே…!” என்ற அந்த சிந்தனை வேண்டாம்
எதைப் பற்றியும் “இப்படி ஆகிவிட்டதே…!” என்ற அந்த சிந்தனை வேண்டாம்
நான்
சம்பாதித்தேன்… பிள்ளையை வளர்த்தேன்… நாளை
அவன் என்ன செய்வானோ…! இப்பொழுதே என்னை ஏமாற்றிக்
கொண்டிருக்கின்றான்…! என்று உணர்வுகளைச் சேர்த்து விட்டால் அவன் உடலில் விளைந்த “ஏமாற்றும் உணர்வுகள்…” இந்த உடலிலே நோயாக மாறும்.
நோய் முற்றி
இறந்த பின் பிள்ளையின் உடலுக்குள் தான் செல்வோம். ஆக… மீண்டும் இன்னொரு உடலுக்குள் தான் செல்ல
வேண்டி வருகின்றது. விண் செல்லும் உணர்வை
இழந்து விடுகின்றோம்.
அது போன்று
ஆகாதபடி
1.இந்த வாழ்க்கையில் ஒவ்வொரு நொடிப் பொழுதும் எத்தகைய சிரமங்கள் வந்தாலும் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை எடுத்துப் பாருங்கள்.
2.அதை உங்களால் மாற்றிக் கொள்ள முடியும்.
3.எதைப் பற்றியும் “இப்படி ஆகிவிட்டதே…!” என்ற அந்த சிந்தனை வேண்டாம்.
4.அருளைப் பெறுவேன் இருளை நீக்குவேன் அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வைப் பெறுவேன் என் இரத்த நாளங்களிலே அதைக் கலக்கச் செய்வேன்.
5.உடலில் இருக்கக்கூடிய ஜீவான்மாக்கள் ஜீவணுக்கள் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெறச் செய்வேன் என்று எண்ணுங்கள்.
அகஸ்தியன் தன்
வாழ் நாளில் பல பல
விஷத்தன்மைகளை முறித்து வலுப்பெற்றவன். அவன்
உடலில் இருந்து வெளிப்பட்ட அந்தச் சக்திகள் நமக்கு முன் பரவி
உள்ளது. உங்களுக்குள்
அதைத்தான் இப்பொழுது பதிவு செய்கின்றேன்.
அதை உங்கள் எண்ணத்தால்
மீண்டும் கவர முடியும்.
அகஸ்தியன் பெற்ற “மூலிகை மணங்களையும்
அவன் பெற்ற நஞ்சினை வென்றிட்ட அந்த அருள் சக்தியும்…” நாங்கள் பெற வேண்டும் ஈஸ்வரா என்று கண்களைத் திறந்தே ஏங்குங்கள்.
உங்கள் உயிரான
ஈசனிடம் வேண்டுங்கள். அந்த ஏக்கத்துடன் கண்களை மூடுங்கள்.
1.அப்படி
மூடும் பொழுது அந்த அகஸ்தியன் பெற்ற மூலிகைகள் உங்கள் வாயிலே
உமிழ் நீராகச் சுரப்பதைக் காணலாம்.
2.உடலுக்குள் செல்லப்படும் பொழுது ஆகாரத்தில் கலந்து இரத்தத்தில் கலந்து விடுகின்றது.
3.விஷத்தன்மைகளை மாற்றும் சக்திகளை நீங்களே பெறுகின்றீர்கள். காற்றிலே உண்டு… நீங்கள் அதை நுகர்கின்றீர்கள்.
ஒருவன் வேதனைப்படுத்துகின்றான்.
அந்த உணர்வுகள் நமக்குள் வந்து இரத்தங்களிலே
கலந்து விஷத்தன்மை ஆகி நம் நல்ல
அணுக்கள் செயலிழக்கின்றது. அப்பொழுது வெறுப்பும் வேதனையும் வருகின்றது.
இதைப் போலத் தான் அகஸ்தியன் துருவனாகி துருவ மகரிஷியாகி துருவ நட்சத்திரமான அந்தப் பேரருளை உங்களுக்குள்
ஆழமாகப் பதிவு செய்கின்றேன். அதை
உபதேசமாகக் கொடுத்துக் கொண்டு வருகின்றேன்.
1.இதை
நீங்கள் நினைவுக்குக் கொண்டு வந்து மீண்டும்
மீண்டும் எண்ணிச் சுவாசித்தால் போதுமானது.
2.எத்தகைய தீமையையும் நீங்கள் நீக்க முடியும்… துருவ நட்சத்திரத்தின் பேரருளைப் பெற முடியும்.
3.தன்னம்பிக்கையுடன் செயல்படுங்கள்… உங்களால் நிச்சயம் முடியும்…!
1.இந்த வாழ்க்கையில் ஒவ்வொரு நொடிப் பொழுதும் எத்தகைய சிரமங்கள் வந்தாலும் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை எடுத்துப் பாருங்கள்.
2.அதை உங்களால் மாற்றிக் கொள்ள முடியும்.
3.எதைப் பற்றியும் “இப்படி ஆகிவிட்டதே…!” என்ற அந்த சிந்தனை வேண்டாம்.
4.அருளைப் பெறுவேன் இருளை நீக்குவேன் அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வைப் பெறுவேன் என் இரத்த நாளங்களிலே அதைக் கலக்கச் செய்வேன்.
5.உடலில் இருக்கக்கூடிய ஜீவான்மாக்கள் ஜீவணுக்கள் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெறச் செய்வேன் என்று எண்ணுங்கள்.
2.உடலுக்குள் செல்லப்படும் பொழுது ஆகாரத்தில் கலந்து இரத்தத்தில் கலந்து விடுகின்றது.
3.விஷத்தன்மைகளை மாற்றும் சக்திகளை நீங்களே பெறுகின்றீர்கள். காற்றிலே உண்டு… நீங்கள் அதை நுகர்கின்றீர்கள்.
2.எத்தகைய தீமையையும் நீங்கள் நீக்க முடியும்… துருவ நட்சத்திரத்தின் பேரருளைப் பெற முடியும்.
3.தன்னம்பிக்கையுடன் செயல்படுங்கள்… உங்களால் நிச்சயம் முடியும்…!
