
ஞானிகள் உணர்வை மிக வீரியமான வித்தாக உங்களுக்குள் உருவாக்குகின்றோம்
உதாரணமாக… பால் மாடு அது பால் குறையாகக் கறப்பினும் விஞ்ஞான அறிவு கொண்டு மற்ற மாடுகளின் அணு செல்களை எடுத்து...
1.பாலை அதிகமாக உற்பத்தி செய்யும் அந்த ஜீன்களை அதிகமாக அதனுடன் சேர்த்து அந்தக் கருவுடன் இணைக்கப்படும் பொழுது...
2.ஒரு லிட்டர் கறப்பதை 20 லிட்டர் கறக்கும் சக்தியாக அந்த அணுக்களை உருவாக்கி விடுகின்றார்கள்.
இதைப் போன்று தான் நோயின் தன்மையை மாற்றுவதற்காக இதைப் போல சில அணுக்களை உருவாக்கி நோயை மாற்றிடும் சக்தியையும் விஞ்ஞான அறிவு கொண்டு செயல்படுத்துகின்றார்கள்.
இந்த மனித வாழ்க்கையில் ஒரு நோயாளியைப் பற்றி நாம் கேட்டறிந்தால் அதை உயிர் ஓ என்று ஜீவ அணுவாக மாற்றும் திறன் பெறுகின்றது. அணுவாக மாறும் இந்திரீயமாக கருவாக உருவாகின்றது.
அதே சமயத்தில் அது அணுவாக உருவாவதற்கு முன் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் சப்தரிஷி மண்டலங்களின் பேரருளும் பேரொளியும் பெற வேண்டும் என்று நாம் இதனுடன் இணைத்து விட்டால் அந்த நோயை உருவாக்கும் தன்மை குறைத்துவிடும்.
1.ஆக நோயை அடக்கிடும் அருள் ஞானிகள் உணர்வை உடலில் விளைவிக்கும் பொழுது
2.நமக்குள் நோயின் தன்மை உருவாகாது அறியும் தன்மை வரும்.
3.நம் பார்வையில் அடுத்தவருக்கு நோய் நீங்க வேண்டும் என்று சொன்னால்
4.கேட்டறிந்த உணர்வுகள் அவருக்குள்ளும் சென்று "நோயை நீக்கிடும் உணர்வின் அணுக்கள்...” அங்கே உருவாகின்றது.
5.திரும்பத் திரும்ப அவர்கள் அதை எண்ணினால் நோயை நீக்கும் அருள் சக்தி அவர்கள் பெறுகின்றார்கள்.
இந்த உணர்வை நாமும் அடிக்கடி எண்ணி வளர்த்துக் கொண்டால் நோய் வராது தடுப்பதும் அருள் ஞானத்தின் உணர்வைப் பெருக்கவும் இந்த வாழ்க்கையில் வரும் துன்பங்களை மாற்றி அமைக்கும் திறனும் நாம் பெறுகின்றோம்.
ஒவ்வொரு நிமிடமும் சிந்தித்துச் செயல்படும் சக்தியும் நாம் பெறுகின்றோம். இந்த வாழ்க்கையில் சிரமமில்லாத வாழவும் சிரமங்கள் வரும் பொழுது சிந்திக்கும் ஆற்றலும் நமக்குள் அது உருவாகின்றது.
ஆகவே கோபப்படுவார்களையோ வெறுப்படைவோரையோ வெறுப்புடன் பார்ப்பவர்களையோ பார்த்தால் கேட்டறிந்தால் அந்த உணர்வு நமக்குள் இந்திரீகமாக மாறிவிடுகிறது.
ஆனால் அடுத்த கணம் அதனுடன் அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று இணைத்து விட்டால் அதனுடைய வீரியத்தைத் தணித்து நமக்குகந்த நிலையில் மாற்றி அமைத்துக் கொள்ள முடியும்.
இது ஒரு பழக்கத்திற்கு நாம் வரவேண்டும்.
1.அதற்குத் தான் மகரிஷிகள் உணர்வை இந்த உபதேசத்தின் வாயிலாக அடிக்கடி பதிவு செய்கின்றோம்... பதிவாக்கிக் கொள்ளுங்கள்.
2.தீமைகள் வராது பாதுகாத்துக் கொள்ள இது உதவும்.