ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

March 11, 2026

நற்குணங்களின் உணர்வை நாம் சுவாசமாக்க வேண்டும்

நற்குணங்களின் உணர்வை நாம் சுவாசமாக்க வேண்டும்


இரண்டு நண்பர்கள் சேர்ந்திருக்கும் நிலையில் அதிலே ஒரு நண்பன் தவறு செய்தாலும் அதைப் பற்றி நாம் சொல்லப்படும் பொழுது… “கூட இருக்கும் அந்த நண்பன் அதை ஏற்றுக் கொள்ள மாட்டான்.
 
காரணம்…
1.அவருடைய உணர்வு அவனுக்குள் அது முன் பகுதியில் வலுவாகச் சேர்ந்திருக்கப்படும் பொழுது
2.நம் உணர்வை நுகர்ந்தவுடனே குற்றப் பெருக்குகளைக் கூட்டி நம்மைத் தான் குற்றவாளியாகச் சொல்லச் செய்யும்.
 
அப்போது நாம் நுகர்ந்த உணர்வுவன் உணர்வை வலு சேர்க்கப்படும் பொழுது நல்ல உணர்வுகள் அதை ஏற்பதில்லை. இருந்தாலும் நம் ரத்தங்களில் இதைப் போன்ற உணர்வுகள் இணைந்து விடுகின்றது.
 
இதனால் நம் உடலில் இருக்கக்கூடிய நல்ல குணங்களுக்கும் நல்ல குணங்களை உருவாக்கும் அணுக்களுக்கும் எதிர்ப்பான நிலைகள் வந்து ஒடுங்குகின்றது.
1.நல்ல உணர்வை ஈர்க்கும் சக்தி இழக்கின்றது.
2.கார உணர்ச்சிகளும் வேதனை உணர்ச்சிகளும் தூண்டப்படும் பொழுது ஒடுங்குகிறது… அதை ஏற்றுக் கொள்வதில்லை.
 
ஏற்கவில்லை என்றாலும் உணர்வின் அழுத்தம் அதிகமாகும் பொழுது கூட கொஞ்ச நேரம் நிலைநிறுத்தி விட்டால் அதற்குச் சாப்பாடு தேவை.
 
நாம் எப்படிச் சுவாசத்தின் மூலம் “மூச்சு விடுகின்றோமோ…” அதே மாதிரி
1.அந்த இயக்கத் தொடருக்கு பிரணவம் அந்த இயக்கம் வேண்டும் என்றால்
2.உடலில் ஏற்படும் உஷ்ணத்தினால் வாயு உண்டாகின்றதுஅதனுடைய அழுத்தம் உண்டாகிறது.
 
சமையல் செய்யும் போது எப்படிப்பட்ட வாசனைகள் வருகிறது? எந்தெந்தப் பொருளை அதிகமாகப் போடுகின்றோமோ அந்த மாதிரி வாசனைகள் அதிலிருந்து வருகின்றது.
 
அது போலத் தான்
1.உடலுக்குள் இருக்கும் நல்ல அணுக்கள் நெளிகிறது… உடலில் மாறுபட்ட உணர்ச்சிகள் தோன்றும்... இதையெல்லாம் எது இயக்குகின்றது…?
2.நம் உயிர் எலெக்ட்ரிக்காக இருக்கிறது. நுகரும் உணர்வுகள் எலக்ட்ரானிக்காக எதிர்நிலையான அந்த உணர்ச்சியை ட்டுகின்றது.
 
இப்படி எதன் உணர்வை நாம் சந்திக்கும் சந்தர்ப்பம் ஆகின்றதோ ஒவ்வொரு நிமிடமும் இந்த வாழ்க்கையில் நம் ரத்த நாளங்களில் பல கலக்கங்கள் ஆவதும் பல விதமான அணுக்களின் மாற்றங்கள் ஆவதும் நிகழ்கிறது.
 
நல்லவரிடம் பேசப்படும் பொழுது அதற்குத்த நிலையில் அமைதியாகிறது. ஆனால் அடுத்து ஒரு சண்டை போடுபவர் வெறுப்பாகத் தாக்குபவர் திட்டிப் பேசியவர்களின் உணர்வை நுர்ந்தால்
1.மிகவும் இக்கட்டான நிலைகள் ஆகி இந்த உடலுக்குள் ஒன்றுக்கொன்று போர் முறையாகின்றது.
2.நம் உடலிலே சலனங்களும் சஞ்சலங்களும் ஏற்படுகிரது.
 
ஆக… நல்ல அணுக்கள் இதையெல்லாம் ஏற்றுக்கொள்ள மறுக்கப்படும் பொழுது உடல் சோர்வடைகின்றது உணர்ச்சிகள் மாறுவதையும் பார்க்கலாம்.
 
ந்த உணர்ச்சியின் தன்மையைக் கூட்டுகின்றோமோ கண் வழி எந்த உணர்வை அதிகமாக்குகின்றமோ கண்கள் நுகர்ந்து உயிரிலே மீண்டும் அநத உணர்ச்சிகள் அதிகமாக ரத்த நாளங்களில் சேர்க்கப்படுகின்றது.
1.அதனால் பதட்டமும் பயமும் வருகின்றது அவர்கள் இருவருக்குள்ளும் எப்படிச் சண்டை போட்டுக் கொள்ளப் போகின்றார்களோ என்று…!
2.சண்டையை வேடிக்கை பார்ப்பவர்களுக்கு இந்தப் பதட்டம் வரும்.
 
நல்லதைச் சொல்லத் துணிவு வந்தாலும் அவர்களைச் சிந்திக்கும்படிச் செய்யும் பதிலைச் சொல்லத் தெரியாது. அப்போது நம்மை அறியாதபடி பகைமை உணர்ச்சிகள் உடலிலே வந்து விடுகின்றது.
 
இது அனைத்துமே ரத்தங்களில் தான் முதலில் கலக்கின்றது.
 
நாம் நுகரும் அந்த உணர்ச்சிகள் உடல் முழுவதும் பரவி அதன் வழியே நம்மை வாழச் செய்து அந்த உணர்வுகளே நம்மை ஆளுகின்றது என்பதை நாம் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டும்.
 
ஆகவே நம்மை இயக்கும் அந்த ஆண்டவனுக்கு என்ன செய்ய வேண்டும்…?
1.நற்குணங்களின் உணர்வை நாம் சுவாசமாக்க வேண்டும்.
2.நம் உடல் முழுவதும் இந்த உணர்ச்சிகளைப் பரவச் செய்யப்படும் பொழுது
3.நம்மை ஆளும் ஆண்டவனுக்கு ஒரு நிம்மதியும் சாந்தமும் இயக்க முடிகின்றது.
 
ந்த உணர்வுகள் உணர்ச்சிகளை உயிர் உடலுக்குள் ரவச் செய்து தீமையான உணர்வுகளை அமைதிப்படச் செய்கின்றது.
 
ஆனால் சாதாரண மனிதனின் உணர்வை வைத்து...” அதை அமைதிப்படுத்த முடியாது.
 
உங்களுக்குள் பதிவு செய்த அந்த மகரிஷிகள் உணர்வை எண்ணி எடுத்து ஈஸ்வரா என்று உயிரிடம் நினைவைச் செலுத்தி அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியும் எங்கள் ரத்த நாளங்களில் கலக்க வேண்டும் ண்ணின் நினைவு உடலுக்குள் செலுத்த வேண்டும்.
 
அப்பொழுது
1.ஏற்கனவே பார்த்துப் பதிவு செய்த ஊழ்வினை என்ற அந்த வித்திலே (தீமையான வித்தில்) இணைக்கப்படும் பொழுது
2.கொஞ்சம் கொஞ்சமாக இதனுடைய வலு கூடும் பொழுது அதை அடக்கக் கூடிய சக்தியாக அது மாறுகின்றது.

நாட்டுக்கு நாடு போர் செய்யும் இன்றைய காலகட்டத்தில் நாம் செய்ய வேண்டியது

நாட்டுக்கு நாடு போர் செய்யும் இன்றைய காலகட்டத்தில் நாம் செய்ய வேண்டியது


இன்றைய நிலையில் பூமியில் வாழும் நாம் மிகவும் சிரமமான காலகட்ட்த்தில் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். காற்று மண்டலமோ நச்சுத்தன்மையாக மாறிக் கொண்டு வருகின்றது.
 
அதே சமயம் மனிதனுடைய எண்ண அலைகள் அனைத்தும் சிந்தனையற்ற நிலைகள் கொண்டு மனித உடலில் விளைய வைத்த இந்த உணர்வுகள் இங்கே படர்ந்து கொண்டிருக்கின்றது. அதிலிருந்து நாம் மீள வேண்டும்.
 
நாம் அனைவரும் அந்த மகரிஷிகளின் அருள் உணர்வுகளைப் பெற்று அவர்கள் அருள் வட்டத்தில் இணைந்து நம்மையறியாது சேர்ந்த தீமைகளை நீக்கி நம்முடைய மூச்சும் பேச்சும் உலக நன்மை பயக்கும் சக்தியாக உருவாக வேண்டும்.
1.நாம் எண்ணும் அந்த உயர்ந்த உணர்வுகள் தீமையை அடக்கும் சக்தியாகவும்
2.நம்முடைய உணர்வுகள் எண்ணங்கள் அனைத்தும் உலக மக்களைக் காத்திடும் நிலையாகவும் சகோதர உணர்வை வளர்த்திடும் நிலையாகவும்
3.உலக மக்களுக்கு நன்மை பயக்கும் சொல்லாகவும் செயலாகவும் அது வளர்ந்திட வேண்டும்.
 
1.ன்றைய மெய் ஞானிகள் எவ்வாறு பேரன்பு கொண்டு ஒருவருக்கொருவர் கலந்து உறவாடினார்களோ
2.தே போன்று நாம் வெளியிடும் அனைத்து உணர்வுகளும் பேரன்பு கொண்ட உணர்வாகப் படர வேண்டும்.
 
நமக்குள் ஆகாத உணர்வுகள் வந்தாலும் சகோதர உணர்ச்சியுடன் ஒன்றுபட்டுச் சேர்த்து அதைப் பகைமையற்றதாக ஆக்க வேண்டும்.
 
நாம் தனித்த சரீரங்களாக இருந்தாலும் சகோதர உணர்வுகளுடன் வாழ்ந்திடும் உணர்வாக
1.நாம் இடும் அத்தகைய மூச்சலைகள் இங்கே படர்ந்து
2.அதன் வழிகளில் நம் பூமியான பரமாத்மாவும் பரிசுத்தப்படும் நிலை ஏற்படும்.
3.இந்தப் பரமாத்மாவில் இருந்து நுகர்ந்து எடுக்கும் அனைத்து மக்களும் மெய் வழி பெறும் நிலைகள் ஏற்படும்…
 
நாம் எந்தத் தாவர இனச்சத்தை நுகர்ந்து உணவாக உட்கொண்டு உடலாக ஆனோமோஇந்த மனித உடலுக்குள் எண்ணிய அருள் மகரிஷிகளின் உணர்வலைகள் சூரியனின் காந்த சக்தியால் கவரப்பட்டுப் படர்ந்து
1.நாம் செல்லும் இடங்களில் பரவியுள்ள நஞ்சு கொண்ட உணர்வுகளைத் தாக்கி
2.நஞ்சு கொண்ட தாவர இனமே வளராதுமனிதனை வீழ்த்திடும் நிலையைத் தடுக்கும்.
3.நீங்கள் இடும் அந்த மூச்சலைகள் மூலம் தாவரங்களும் சத்தான நிலைகளில் வளரட்டும்
4.தை உணவாகப் புசிக்கும் மக்கள் அனைவரும் மெய் உணர்வைப் பெறும் தகுதியாக உங்களுடைய மூச்சுகள் அமையட்டும்.
5.கேட்டுணர்ந்த உணர்வுகள் இங்கே படர்ந்து மெய் உலகைப் படைக்கும் உணர்வாக உங்களுக்குள் விளையட்டும்
6.நீங்கள் இடும் மூச்சலைகள் உலகில் உள்ள பகைமைளை நீக்கி மெய் உணர்வைப் பெறும் சக்தியாக மலரட்டும்.
7.எல்லாம் வல்ல குருநாதர் அருள் வழியில் அந்த மெய் ஞானியின் அருள் வட்டத்திற்குள் உங்கள் அனைவரின் எண்ணங்களும் செல்லட்டும்…!
 
அதன் வழிகளிலே தீமையை நீக்கி நல்வினைகளைச் சேர்த்துநல் வினைக்கு நாயகனாக மெய்ப்பொருள் கண்டுணர்ந்த அந்த மெய் ஞானியின் அருள் வட்டத்தில் உலக மக்கள் அனைவரும் இணைவோம்.
 
என்றும் நிலையான பெரு வீடு பெரு நிலை என்ற நிலையடைந்துஎன்றும் மங்காத ஒளிச்சரீரத்தைப் பெறுவோம்.
 
நமது குருநாதர் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் எமக்கு உணர்த்திய அந்த அருள் வழியை, நீங்களும் பெற வேண்டுமென்ற ஆசையினால்தான் இதை உபதேசிக்கின்றோம்.
 
நம் குருநாதர் காண்பித்த உணர்வுகளை உங்களுக்குள்ளும் விளையச் செய்து
1.அதை நீங்கள் எண்ணும் பொழுதெல்லாம் அந்த மகரிஷியின் அருள் சக்தியைப் பெற்று
2.உங்களை அறியாது புகுந்த தீமைகளை நீக்கி நல்லுணர்வின் தன்மையாக நீங்கள் வளர வேண்டும்
 
அத்தகைய நிலை அனவரும் பெற வேண்டும் என்று பிரார்த்தித்து… அதனின் சத்தை ஒருங்கிணைந்து விளையும் சத்தாகச் செயல்படுவோம்…” என்று வேண்டிக் கொள்கிறேன்.