ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

February 12, 2026

உடலில் நோய் இருந்தாலும் மகரிஷிகள் உணர்வைப் பெற வேண்டும் என்று எண்ண வேண்டும்

உடலில் நோய் இருந்தாலும் மகரிஷிகள் உணர்வைப் பெற வேண்டும் என்று எண்ண வேண்டும்


இன்று விஞ்ஞான அறிவு கொண்டு ஒருவருக்குக் கண் இல்லையென்றால் மாற்றுக் கண்ணைப் பொருத்திக் கண் பார்வை கொடுக்கின்றனர்.
 
செவித் தன்மைக்கு இப்படி ஒரு மாற்று ஏற்பாடு இல்லை என்றாலும் அவர்களுக்கு உணர்வின் உணர்ச்சிகளை (சைகை மூலம்) தெரியும்படிக் கொண்டு வருகின்றார்கள்.
 
இருதயம் பழுதாகி விட்டால் பழுதான இருதயத்தை அகற்றிவிட்டுச் செயற்கை இருதயம் பொருத்துகின்றனர்.
 
நோயாளியின் உடலிலும் மற்றவர் உடலிலும் உள்ள சில செல்களைக் கழித்துப் பழுதான உறுப்பு போன்றே மோல்டு…” செய்யப்பட்டு அந்த உணர்விற்குள் சேர்க்கப்பட்டு அதே போன்ற புது உறுப்புகளை உருவாக்குகின்றனர்.
 
இந்த உடலுக்கும் மற்ற உடலுக்கும் என்ன இருக்கிறதென்று ஆய்ந்து உணர்வின் செல்களை உருவாக்கி உறுப்புகளை எடுத்து இணைக்கின்றனர்.
 
இப்படி இணைத்தபின் இரத்தத்தில் வருவதைச் சமப்படுத்த வேண்டும். எதிர் நிலையானால் கழன்று கொள்ளுகின்றது. மாற்று இருதயம் பொருத்தினாலும் அல்லது மாற்றுச் சிறுநீரகம் பொருத்தினாலும் இதே தான்…! இரத்தம் சீராக இருக்க வேண்டும்.
 
1.இரத்தத்தை வடிகட்டிச் சுத்தப்படுத்துவதற்காகச் சில மருந்துகளை டாக்டர்கள் கொடுப்பார்கள்.
2.கொடுக்கப்பட்ட மருந்துகளைச் சாப்பிட்டால் தான் இரத்தத்திற்கும் பொருத்தப்பட்ட உறுப்பிற்கும் பொருந்தி வரும்.
3.ஒரு நாளைக்கு மருந்து சாப்பிடவில்லை என்றால் பொருத்தப்பட்ட உறுப்பின் இயக்கம் தோற்றுவிடும்.
 
ஆகையால் இரண்டையும் சமப்படுத்திச் சீராக இருந்தாலும் ஒருவர் காய்ச்சலுடன் வருகின்றார். அவருடைய காய்ச்சலின் வீரியம் கண்டு அதன் உணர்வை நுகர்ந்து விட்டால் உடலில் கிருமிகளாகின்றது.
 
அன்றைக்கு இவர்களுக்கு ஆபத்து…! ஆபத்து என்று வந்துவிட்டால் அதற்கென்று மருந்துகளைச் சாப்பிட வேண்டும்.
 
அது சமயம் சாதாரண டாக்டரிடம் சென்றால் பொருத்தப்பட்ட உறுப்பு கழன்றுவிடும். இப்படியெல்லாம் விஞ்ஞானிகள் அதற்கென்று பருவத்தைச் பார்த்து செயல்படுத்துகின்றனர்.
 
ஆனால் இப்படி ஒவ்வொன்றையும் பார்த்துப் பார்த்துச் செய்தும் நாம் எத்தனை நாள் வாழுகின்றோம்?  சிறிது நாள் தான் வாழுகின்றோம். 
 
1.நமக்கு இப்படி ஆகிவிட்டதே…!
2.மருந்தையும் சுவையில்லா உணவையும் தான் சாப்பிட்டு வாழ்கின்றோம்என்ற வேதனை அதிகமாகின்றது.
3.மக்கள் எல்லாம் சந்தோஷமாக இருக்கின்றார்கள்நம் காலம் இப்படியாகி விட்டதே…!என்று
4.நாம் நல்லவர்களாக இருந்தாலும் வேதனையின் உணர்வைத்தான் அதிகமாக்க முடிகின்றதே தவிர மாற முடிகின்றதா?
 
ஆகவே நாம் நமது உடலில் இருக்கும் காலத்தில் எதைச் சேர்க்க வேண்டும்?
 
1.உடல் நலக் குறைவாக இருந்தாலும் அருள் மகரிஷிகளின் உணர்வைப் பெற வேண்டும்.
2.ஒளியின் சரீரம் பெற வேண்டும் என்று நம் உணர்வுகளை மாற்றினால்…” நாம் பிறவியில்லா நிலை அடைகின்றோம்.
 
இவையெல்லாம் குருநாதர் எமக்குக் காண்பித்த உண்மைகள். 

எதையும் தாங்கக்கூடிய சக்தியை குருநாதர் கொடுத்தார்

எதையும் தாங்கக்கூடிய சக்தியை குருநாதர் கொடுத்தார்


குருநாதர் எம்மைத் தேடி வந்து கொடுத்தார். ஏன் கொடுத்தார்? மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும்எல்லாவற்றையும் தாங்கும் சக்தி பெறச் செய்ய வேண்டும் என்று கொடுத்தார். 
 
1.ஆகவே எதையும் தாங்கக்கூடிய சக்தியும்
2.நன்மை செய்வதற்கு ஆற்றலைப் பயன்படுத்த வேண்டிய நேரத்திற்குப் பயன்படுத்த வேண்டும் என்றும் செயல்படுத்தச் சொன்னார்.
 
அதைத்தான் யாம் இப்பொழுது செய்கின்றோம்.
 
நமது உடல் நமக்குச் சொந்தமாகின்றதா? நாம் தேடிய செல்வங்கள் தான் நமக்குச் சொந்தமாகின்றதா? நாம் நல்ல அழகான துணிகளை உடுத்துகின்றோம். சுத்தமாக இருக்க வேண்டும் என்று முகப் பவுடர் அது இது என்று பூசுகின்றோம்.
 
ஆனால் உடலில் ஒரு நோயிருந்து அதனால் வேதனையை அனுபவித்துக் கொண்டிருக்கும் பொழுது ஒருவர் உங்களிடம் வந்துபவுடர் பூசிக் கொள்ளுங்கள்என்று சொன்னால்என்ன…? கிண்டலா செய்கின்றீர்கள்…! அலங்காரம் செய்து கொள்ளும் நிலையிலா நான் இருக்கிறேன்…?என்று கேட்பீர்கள்.
 
நீங்கள் சந்தோஷமாக இருந்து பாருங்கள். உங்களுடைய முகத்தில் அழகு கூடும். அதே சமயத்தில் நல்ல ஆடம்பர உடையினை உடுத்தி பவுடர் பூசி அலங்காரப்படுத்தி இருந்த போதிலும் மனது சரியில்லை, வேதனை என்ற நிலையானால் முகம் சுருங்கிவிடும்.
 
ஆகையால் பார்ப்பவர்கள் என்ன கேட்பார்கள்…?என்னங்க ஏன் ஒரு மாதிரியாக இருக்கிறீர்கள்? ஏதேனும் கவலையா?” என்று கேட்பார்கள்.
 
ஆகவே நம்மை எது செயல்படுத்துகிறது?
 
அருள் உணர்வை நமக்குள் பெருக்கி இருளை அகற்றி மகிழ்ச்சியூட்டும் உணர்வினை நம் உடலுக்குள் செலுத்தி நமது அங்கங்களைப் பொலிவுறச் செய்ய வேண்டும்.
 
1.சாதாரணமாக இருக்கும் பொழுது எம்மைப் பாருங்கள். எமது முகத்தில் வித்தியாசமாக இருக்கும்.
2.அருளைப் பாய்ச்சும் பொழுது வித்தியாசமான தோற்றங்கள் வரும்.
3.இது போன்று நல் உணர்ச்சிகளால் முகம் விரிவடைவதும் மகிழ்ச்சியாவதும் போன்ற நிலைகள் பெறுகின்றது.
 
உதாரணத்திற்கு நீங்கள் அருள் ஞானத்தை எடுத்துப் பேசிப் பாருங்கள். அந்நேரத்தில் உங்களிடத்தில் மகிழ்ச்சியின் உணர்வு இருக்கும்.
 
ஒருவர் உங்களைத் தேடி வந்து தம்முடைய கஷ்டத்தையெல்லாம் கூறுவார். நீங்கள் அது சமயம் ஞானத்தின் நிலை கொண்டு அவருக்கு அறிவுரை கூறுவீர்கள்.
 
ஆனால் இரண்டாவது தரம் தனது கஷ்டத்தைச் சொன்னால்என்ன இது…? இவ்வளவு தூரம் கூறியும் தனது கஷ்டத்தைத் தானே கூறிக் கொண்டிருக்கின்றார்என்று அப்பொழுதே உங்களுடைய முகம் மாறும்.
 
ஏனென்றால் அவர் சொன்ன வேதனையின் உணர்வு வலுப் பெறுகின்றது. உங்களுடைய ஞானம் இங்கே அடிபடுகின்றது. உணர்வை மாற்ற முடியவில்லை.
 
ஆனால் இந்நிலையை மாற்றி உங்களுக்குள் அருள் உணர்வைப் பெற வேண்டும்.
1.துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி அவர் பெற வேண்டும்,
2.அவருக்கு நல்ல காலம் வரவேண்டும் சிந்திக்கும் தன்மை அவர் பெற வேண்டும்
3.பொருளறிந்து செயல்படும் திறன் அவர் பெற வேண்டும் என்று எண்ண வேண்டும்.
 
அது சமயம் உங்களுடைய உயிர் என்ன செய்யும்? அருள் உணர்வை எடுத்து உங்கள் உடலில் உள்ள எல்லா அணுக்களுக்கும் பங்கிட்டுத் தெளிந்த ஞானத்தை ஊட்டும் நிலையும் வழியறிந்து செயல்படும் பக்குவத்தையும் உங்களுக்குள் பெறச் செய்கின்றது.
 
நமக்கு ஆகாதவர் யாராவது இருந்தால்… “இவனால் தான் எனக்குத் தலைவலிஎன்பார்கள். அவர்கள் வந்தாலேஆகா வந்துவிட்டான் தலைவலியும் வந்துவிட்டதுஎன்று கூறுவார்கள்.
 
இன்று நல்ல மன நிலையில் இருந்தேன். “இவனைப் பார்த்தேன், எல்லாக் காரியமும் கெட்டு விட்டது…” என்று கூறுவார்கள். மனிதரின் வாழ்க்கையில் இது போன்ற நிலைகள் வருகின்றன.
 
தலைவலியால் அவதிப்படுபவர்களுக்கு இந்தத் தியான வழியில் உள்ளவர்கள் மகரிஷிகளை எண்ணி…” அவர் குணமடைய வேண்டும் என்று சொல்லிப் பாருங்கள். அவருக்குத் தலைவலி நீங்கும்.
1.அடுத்து முறை தலைவலி என்று சொல்ல வரும் பொழுது
2.உங்களை நினைத்து வந்தேன்தலைவலி போய்விட்டது…! என்று கூறுவார்கள்.
 
இதை உங்கள் அனுபவத்தில் பார்க்கலாம். ஏனென்றால் உணர்வின் எண்ணம் கொண்டு சுவாசித்தபின் நோய்களை நீக்கும் சக்தி வருகின்றது.
 
ஆனால் ஒருவர் வந்தாலே தனக்குத் தலைவலி வருவதாக எண்ணுபவரின் உடல் பதட்டமடைகின்றது. தலை சுற்றுகின்றதுசிந்திக்கும் தன்மையை இழக்கச் செய்கின்றது,
 
ஒருவரைப் பார்த்தாலே தனக்குத் தலை சுற்றுகின்றது, தலை வலிக்கின்றது எனும் பொழுது ஈஸ்வரா..என்று உயிரை எண்ணித் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி அவர் பெற வேண்டும் அவர் நன்மை செய்யும் நிலை பெற வேண்டும் என்று எண்ணினால் அவருடைய உணர்வுகள் நமக்குள் வருவதில்லை. 
 
காரணம்… நுகர்ந்த உணர்வை உயிர் இயக்குகின்றது. உயிர் ஈசனாக இருக்கின்றது. 
1.மனிதர் தாம் உயர்ந்த ஞானத்தின் தன்மை பெற்று
2.பிறவி இல்லா நிலை பெறுவதற்குத் தான் இத்தனை உபாயங்களையும் கொடுப்பது

உயிருடன் ஒன்றிடும் உணர்வை ஒளியாக மாற்றுவது தான் நமக்கு நல்லது

உயிருடன் ஒன்றிடும் உணர்வை ஒளியாக மாற்றுவது தான் நமக்கு நல்லது


ஒரு ஆடு புலியைப் பார்க்கின்றது புலியோ அதைக் கொன்று தின்னும் நிலை பெற்றது.தனிமிருந்து தப்பிக்கும் சிந்தனை ஆட்டிற்கு வருகிறது.
 
புலியின் உணர்வே நினைவாகின்றது. நினைவின் உணர்வே உடலாகின்றது… ஆட்டின் உடலில் அது வலுப்பெறுகின்றது. அந்தச் சிந்தனை கொண்டு அதனிடமிருந்து தப்பிக்க அதனின் வலுப்பெறுகின்றது அதுவாகின்றது.
 
மனிதர்களான நாம் இந்த உடலிலிக்கும் போது
1.எனக்கு இப்படிச் செய்தானே துன்பம் கொடுத்தானே என்ற இந்த சிந்தனை இந்த உணர்வின் தன்மை வருகிறது.
2.இந்த இடத்தை நாம் வலுவாக்குகின்றோம் அந்த உடலுக்குள் சென்று விடுகின்றோம்.
 
ஆனால் உடலிலே வந்த தீமைகளை அகற்ற மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும்…” என்று
1.அந்த உணர்வின் தன்மை… நம் சிந்தனையை அதற்குள் செலுத்தினோம் என்றால்
2.அதனின் உணர்வாகி அதனின் நிலைகள் கொண்டு மனித உடலில் ஒளியாக மாற்றிக் கொள்ள முடியும்.
 
இந்த உடலிலிருந்து தான் ஒளியாக மாற்றி அமைக்க முடியும்.ன்னொரு உடலுக்குள் இழுக்கப்பட்டு விட்டால் மீண்டும் வேறு ஒரு உருவாக உயிர் நம்மை மாற்றிவிடும்.
 
ஆனால் மகரிஷிகளின் அருள் சக்தியை எடுக்கப்படும் பொழுது ஒளியின் தன்மை பெறுகின்றோம்.
1.அங்கே உடல்கள் உருவங்கள் மாறுகின்றது.
2.இங்கே ஒளியின் தன்மை பெறுகின்றோம்.
 
உயிர் ஒளியானது மனிதனாபின் அறிவாக அறிந்து கொள்கிறோம். அறிந்திடும் ஒளியின் ணர்வாக விளைகின்றோம். மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று உடலில் சிந்தனை வந்த பின்பு தான்…” இதிலே உறைந்த உணர்வுகள் அதனின் இயக்கத்திற்கு வருகின்றது.
 
நான் கோபமாக இருக்கின்றேன் என்று வைத்துக் கொண்டால் எனக்கு அது சாதகமாக இருந்தால் நல்லது. நான் தவறு செய்கின்றேன் நண்பன் என்னுடைய தவறுக்கு ஒத்துழைத்தால் இது நல்லதாகின்றது.
 
ஆனால் மாறாக என் தவறைச் சுட்டிக் காட்டும் நிலை வந்தால் எனக்கு எதிரியாகின்றது. ஆக நல்லது நல்லதாக எண்ண முடியாது... கெட்டது கெட்டதாக எண்ண முடியாது.
1.தனக்கு ஒத்து வந்தால் நல்லது என்று எண்ணுகின்றோம்
2.ஒத்து வரவில்லை என்றால் எதிரியாக்குகிறோம்.
 
மிளகாய் காரமானது தான். அதை அளவுடன் இணைத்தால் நல்லதாகிது அதிகமாகப் போட்டுவிட்டால் ஏற்றுக் கொள்வதில்லை குறைத்துப் போட்டு விட்டால் சப்… என்று ஆகிவிடுகிறது.
 
ல்லது நல்லதும் அல்ல கெட்டது கெட்டதும் அல்ல.
 
1.ஒளியின் சரீரம் பெற்ற… என்றுமே நிலையாக இருக்கும் அந்த மகரிஷிகள் அருள் சக்திகளை எடுத்தால் அதுவே நமக்கு நல்லது.
2.உயிர் ஒளியாக நின்று தையெல்லாம் தனக்குள் அறிவிக்கின்றதோ “உயிருடன் ஒன்றிடும் உணர்வை ஒளியாக மாற்றுவது தான் நமக்கு நல்லது…”

புறநிலைகளைப் பற்றித் தெரிந்து கொள்ள விரும்பாதீர்கள்… விண் செல்லும் மார்க்கத்தை அறிய முற்படுங்கள்

புறநிலைகளைப் பற்றித் தெரிந்து கொள்ள விரும்பாதீர்கள்… விண் செல்லும் மார்க்கத்தை அறிய முற்படுங்கள்


அன்று ஆதிசங்கரரும் கோலமாமகரிஷியும் அவர்கள் உணர்வின் தன்மை கொண்டு தங்களுக்குள் விளை வைத்ததைத் தன் சீடர்களுக்குள் பதிவு செய்தார்கள்.
 
அவர் மீது பற்று கொண்ட சீடர்கள்
1.அவர்கள் எதை உணர்த்தினார்களோ அதைக் கொண்டு அந்த ஆன்மாவை உந்தித் தள்ளுகின்றார்கள்
2.இருவரும் சப்தரிஷி மண்டலம் அடைந்தார்கள்.
 
நமது குருநாதர் எத்தனையோ கோடி நிலைகள் பெற்றிருந்தாலும்… “எனக்கு அந்தக் குருவின் ஆசி இருந்தால்…” மாட மாளிகைகளை கூட கோபுரங்களைக் கட்டி விடுவேன்
1.”அவருடைய நாமத்தை உலகமெல்லாம் பரப்புவேன்…!” என்ற பக்தர்கள் தான் சிஷ்யர்கள் தான் ன்று பெரும்பகுதி உண்டு.
2.அதனால் பலன் இல்லை…!
 
அறிந்து கொள்ளும் ஆற்றல்கள்…. இந்த வாழ்க்கையில் அவர் எப்படி மந்திரம் செய்கிறார்…? வர் என்ன செய்கிறார்…? வர் என்ன செய்கிறார்…? என்ற நிலைகளை அறிய உங்கள் நாட்டத்தைச் செலுத்த வேண்டாம்.
 
காரணம்… எம்மை நாடி வருவோரின் க்கம் எதுவோ அதன் வழி தான் அவருக்குள் உணர்வுகள் பதிவாகின்றது.
 
மந்திரத்தின் உணர்வைப் பதிவு செய்து கொண்டால் அதிலே தான் நோக்கம் இருக்கும் மந்திரத்தின் செயலைக் கேட்க வேண்டும் என்றால் அது ஆழமாகப் பதிந்திருக்கிறது என்று தான் பொருள்.
 
அதன் மேல் எண்ணம் கொண்டு விவரங்களைத் தெரிந்து கொண்டால் அது தான் வளரும். இதிலிருந்து விடுபடும் வழிமுறைகள் எப்படி…? என்று கேட்டால் விடுபடும் உணர்வுகள் வளரும்.
 
அதாவது…
1.என்னிடம் கேட்ட உணர்வு கொண்டு தான் உங்களுக்குள் அது பதிவாகும்.
2.“கஷ்டமாக இருக்கிறது…” என்று சொல்லிக் கேட்டால் அந்தக் கஷ்டத்தையே வளர்க்க உதவும்.
3.கஷ்டத்தை நீக்க வேண்டும் என்று கேட்டறிந்தால் கஷ்டத்தை நீக்கும் உணர்வுகள் விளையும்…”
 
கேட்டறிவோர் உணர்வின் தன்மை அது எதுவோ அதுதான் வளரும். அதனால் தான் கீதையில் நீ எதை எண்ணுகின்றாயோ அதுவாகிறாய் என்று சொன்னது.
 
என் கஷ்டம் என்ன விட்டுப் போகவே மாட்டேன் என்கிறது…! என்றால் அது வந்து விடும்.
1.இந்த மனித வாழ்க்கையில் இருந்து நான் நல்ல நிலை பெற முடியுமா மீள முடியுமா…? சந்தேகம்…!
2.மீள முடியாது என்ற நிலைகளில் “வலு இழந்து விட்டால்…” மீள முடியும் என்ற நிலை வராது.
 
ஆனால் மீள வேண்டும் என்ற எண்ணத்தை வலுப்பெற்றுக் கொண்டால் அந்த எண்ணம்… கொடுக்கும் வாக்கின் தன்மையைப் பதிவு செய்தால் அதன் வளர்ச்சிக்கு நிச்சயம் வரும்.
 
பெரும்பகுதியானவர்கள் இன்று கஷ்டத்தைப் பற்றித் தான் என்னிடம் கேட்டுத் தெரிந்து கொள்ள வேண்டும் என்று விரும்புகிறார்கள். இது எப்படி ஆனது…? என்ன ஆனது…? என்று கேட்கிறார்கள்.
 
உணர்வின் தன்மை இயக்கம் எப்படி ஆகிறது…! என்பதைப் பற்றி பல விளக்கவுரைகளை பல முறைகளில் கொடுத்துள்ளேன். இது அவர்களுக்குள் பதிவாகவில்லை என்று தான் பொருள்.
 
1.திலிருந்து விடுபட்டு நாம் மேற்கொண்டு விண் செல்லும் மார்க்கங்களை எண்ணி ஏங்கி அதைப் பெற்று
2.அது எல்லோருக்கும் கிடைக்க வேண்டும் என்று ஏங்கினால் அது பதிவாகும்.
3.அதன் உணர்வின் துணை கொண்டு தான் உடலுக்குள் அந்த நற்சக்திகள் விளையும் தன்மை வரும்.