
“உயிரைப் போன்றே…” உணர்வுகளை எப்படி ஒளியாக்குவது…?
2.அதைப் போன்று நம் உடலில் உள்ள அணுக்கள் அனைத்தையும் “உயிரைப் போன்று மின் மயமாக்க வேண்டும்…”
எப்படித் தேனீக்கள் ஒன்றாகச் சேர்த்துத் தேனை உருவாக்கி ஒரு கூட்டினை அமைத்துக் கொள்கின்றதோ இதைப் போன்று நமது உயிரும் இந்த உடலில் வளர்த்துக் கொண்ட உணர்வுகள் தேனைப் போன்று இணைந்து திடப் பொருளாகி விட்டால் அது கல்லாக மாறிவிடும்… வைரங்களாகிவிடும். கோள்களைப் போன்று பாறைகளாகிவிடும்.
ஆனால் உயிரணு தோன்றி நட்சத்திரமாக்கப்படும் பொழுது தேனீயைப் போன்று தன் உணர்வின் தன்மை ஒளியின் உணர்வுகளை ஒன்றாக எடுத்து ஒளிக்கதிர்களைப் பாய்ச்சிக் கொண்டே உள்ளது.
1.நம் உடலில் உள்ள அணுக்களுக்கு அதை ஆகாரமாகச் சேர்த்து அதன் உணர்வினை வளர்ச்சி செய்யப்படும் பொழுது
2.இந்த உடலில் உள்ள விஷத்தை மாற்றி “இனிமை…” என்ற உணர்வை ஊட்டும்.
நாம் சந்தர்ப்பத்தால் நுகர்ந்தறிந்த உணர்வுகள்தான் பரிணாம வளர்ச்சிக்கே காரணமாக இருந்தது. ஆனால் ஆறாவது அறிவான பின் நாம் தீமைகளை நீக்கும் சந்தர்ப்பத்தை உருவாக்கி நமக்குள் இயங்கிக் கொண்டிருக்கும் ஜீவ அணுக்களை உயிரணுக்களாக மாற்றி… உலக இருளை நீக்கி ஒளி என்ற உணர்வின் அறிவாக ஒருங்கிணைந்து இயக்கும் தன்மை பெற வேண்டும்.
1.இந்தப் பிரபஞ்சத்தில் சூரியனே அழிந்தாலும் சூரியனிலிருந்து வெளிப்படும் விஷத்தன்மையைக் கூட
2000 சூரிய குடும்பத்துடன் இணைந்து வாழ்கின்றது நமது சூரியன். இதைப் போன்று இந்த 2000 சூரிய குடும்பங்களும் அகண்ட அண்டத்தில் மற்ற கோள்களுடன் ஒன்றுடன் ஒன்று இணைந்தே வாழ்கின்றது.
1.விஷம் தாக்கும் பொழுதுதான் வெப்பம் உருவாகின்றது
2.வெப்பம் உருவாகும் பொழுதுதான் ஈர்க்கும் சக்தியாக இயக்கச் சக்தியாக மாறுகின்றது.
1.உங்கள் உடல் உறுப்புகளை உருவாக்கிய அணுக்கள் அனைத்தும் அந்தத் துருவ நட்சத்திரத்துடன் தொடர்பு கொண்டு
இதை எல்லாம் ஏன் முன்பே எங்களுக்குச் சொல்லவில்லை…? என்று கேட்பீர்கள்.
1.செடி ஓரளவிற்கு வளர்ந்தபின் உரம் போட்டால் தாங்கும்.
2.ஆனால் செடி சிறிதாக இருக்கும் பொழுது உரம் போட்டால் கருகிவிடும்.
3.விஷத்தை ஒளியாக மாற்றும் இந்த உணர்வுகள் சரியான பருவம் வரவில்லை என்றால்
4.நீங்கள் வளரும் பருவத்தை மாற்றிக் கருக்கிவிடும்… செயலற்றதாக்கி விடும்.
ஆகவே… குருநாதர் எமக்கு எந்தெந்தப் பருவத்தில் எதெனெதன் சந்தர்ப்பங்களில் எப்படிக் கொடுத்தாரோ அதைப் போன்று உங்களுக்குள் மனப்பக்குவம் பெறும் நிலையும்… அந்த வளர்ச்சிக்குத் தகுந்தவாறு இந்த உணர்வினை வெளிப்படுத்துவது.
நாம் இவ்வளவு காலம் 15 - 20 வருட காலமாகச் சாமியிடம் தொடர்பு கொண்டு இருந்தோமே நமக்கு இதெல்லாம் தெரியாமல் போயிற்றே…! என்று இருக்கலாம்.
2.நீங்கள் குருவுடன் தொடர்பு கொண்ட… உங்களில் விளைந்த உணர்வுகள்தான்
3.பிந்தி வருவோர்க்கு இந்த உரமான சத்தும் கிடைக்கப் பெறுகின்றது என்பதனை உணர்தல் வேண்டும்.

