ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

December 1, 2025

இறைவனை அடைய வேண்டும் என்று “ஒரே நிலையில் மந்திரத்தைச் சொல்லிக் கொண்டுள்ளவர்கள் நிலை…”

இறைவனை அடைய வேண்டும் என்று “ஒரே நிலையில் மந்திரத்தைச் சொல்லிக் கொண்டுள்ளவர்கள் நிலை…”


ஆண்டவனின் நாமத்தையே மீண்டும் மீண்டும் ஜெபித்துக் கொண்டிருந்தால் இறைவனை அடையலாம்…” என்று பலர் அக்காலத்தில் முயற்சி செய்துள்ளார்கள்.
 
 சிவ தத்துவத்தில் எடுத்துக் கொண்டால் ம் நமச்சிவாய…!ம் நமச்சிவாய…! என்று தொடர்ந்து அந்த ஒலிகளை எழுப்புகின்றார்கள். இந்த உணர்வின் இயக்கத்தின் தொடர் கொண்டு
1.தன் உடலில் உள்ள அணுக்களை தன்னுடன் இணைந்து இயங்கக் கற்றுக் கொள்கின்றார்கள்.
2.அந்த உணர்வின் ஒளி கற்றைகளாக ஆன நிலையில் சரீரத்தை மூடிவிட்டாலும்
3.அதே உணர்வுகள் நுகரப்பட்டு வெப்பத்தின் துணை கொண்டு உடலில் அது இயங்கிக் கொண்டே இருக்கும்.
4.அந்த உணர்வுகள் கடைசி நிமிடத்தில் எதுவோ எல்லாவற்றிலும் இந்த உயிரைப் போலவே இந்த உணர்வுகள் அடங்கி விடுகின்றது.
5.ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய என்ற இந்த ஒலி மீண்டும் அது வந்து கொண்டே இருக்கும் அதன் இயக்கமாக அது மாற்றி விடுகின்றது.
6.இந்த உணர்வின் ஒலி அதிர்வுகள் தன் உடலில் உள்ள அணுக்களுக்கு ஆன பின்
7.உடல் இருக்கும் ரசங்கள் குன்றும்… உடல் நலியும் உயிர் உள்ளேயே இருக்கும்.
 
இதை நேரடியாக எனக்குக் காட்டுவதற்காக இமயமலைச் சாரலில் இரண்டு மூன்று இடங்களுக்கு அழைத்துச் சென்றார் குருநாதர்.
 
முதலிலேயே ஹரித்வார் அருகில் மரத்துக்கடியிலே ஜெபித்துக் கொண்டிருந்தவரைக் காட்டினார். பெரிய வெள்ளத்தை வரவழைத்து கரைக்கச் செய்தார். கரைந்த பின்ம் நமச்சிவாய…! என்று அங்கே சப்தம் வருகின்றது
 
அதை ஜெபித்தாலும் இந்த உடலுக்குள் தான் சிறைப்பிடித்து இருக்கின்றார். அதற்கு மேல் அவர் விண் செல்லவில்லை. உடலின் உணர்வுக்கே செல்கின்றார்.
 
ஆனால் கரைத்த பின் வேறு வழி இல்லை அடைப்பட்ட நிலையில் இருந்து எதிரொலி… உணர்வின் லி வரப்பப்படும் பொழுது அவருக்கு மிகக் கஷ்டமாகி விட்டது.
 
அப்பொழுது குருநாதர் நேரடியாக நீ அவரைப் பார்க்கக் கூடாது என்றார். ஏனென்றால் அவர்கள் மிகவும் சக்தி வாய்ந்தவர்கள். நீ அவரை எண்ணி அந்த சப்தரிஷி மண்டல உணர்வை எடுத்தாய் என்றால் இது அவருக்குள் சேரும் என்றார்
 
காலை நான்கு மணிக்கு துருவ நட்சத்திரத்தின் உணர்வை அவர் பெற வேண்டும்…” என்று இந்த உணர்வின் ஒலிகளை அங்கே பரப்பப்படும் பொழுது
1.அதன் ஈர்ப்பால் அந்த ஆன்மா வெளி வருகின்றது.
2.ஒளியின் சரீரமாக இருளுக்குள் அடைப்பட்டிருந்த நிலை ஒளியாக மாறி விண் செல்லும் சந்தர்ப்பம் உருவாகின்றது.
3.அதன்படி அந்த ஆன்மாவை நீ விண் செலுத்து என்றார் குருநாதர்.
 
இதே மாதிரி இன்னொரு இடத்திலே ஜோஸ்மெட்டுக்கு மேலே ஒருவர் புதையுண்டு இருக்கின்றார். அங்கே இராணுவப் பாதுகாப்பு இருக்கின்றது.
 
ஒரு பெரிய ஓடை வருகின்றது. அந்த ஓடைக்குள் திட்டுகள் இருக்கின்றது. மழை பெய்தால் தண்ணீராக வரும். ஆனால் கரையின் ஓரத்தில் திட்டுக்குள் அடங்கி இருக்கின்றார்.
 
ஹரி ஓம் நமோ நாராயணா…! ஹரி ஓ…ம் நமோ நாராயணா…! என்று இதையே சொல்லிக் கொண்டிருக்கின்றார். அதாவது ஹரி ஓம் நமோ நாராயணா என்றால் சூரியனின் இயக்க நிலை…”
 
அந்த உணர்வின் தன்மையை எடுத்து ஒளியின் உணர்வாக அவரும் இந்த உடலுக்குள் தான் அடங்கி இருக்கின்றார்.
 
அதை எல்லாம் நேரடியாகவே எமக்குக் காட்டுகின்றார். உடலுக்குள் அடங்கியிருக்கின்றது… செவி கொண்டு அந்தச் சப்தத்தை நீ கேள் என்றார் குருநாதர்.
 
இராணுவ வீரர் ஒருவர் என்னிடம் வந்து என்ன செய்கின்றீர்கள்…?ன்ன பார்க்கின்றீர்கள்…? என்று கேட்கின்றார்.
 
அங்கே நான் காதை வைத்து அந்தச் சப்தத்தைக் கேட்டுக் கொண்டிருக்கின்றேன் அல்லவா. ஆனால் இதையெல்லாம் அவரிடம் சொல்ல வேண்டாம் என்று குருநாதர் சொல்லி விட்டார்.
 
நான் ஊரைச் சுற்றி பார்க்க வந்தேன். இங்கே மலைப்பிரதேசமாக இருக்கின்றது நிலநடுக்கம் ஏதும் வருகின்றதா…? என்று சும்மா பார்க்கின்றேன் என்று சொன்னேன்.
 
அதிலே தமிழர் ஒருவர் இருந்தார். அப்படிங்களா…! என்றார்.
 
ஆனால் அங்கே குளிர் அதிகமாக இருக்கின்றது அவர்களெல்லாம் சட்டை போட்டிருக்கிறார்கள். நான் வெறும் கோத் துணியைத் தான் கட்டி இருக்கின்றேன்.
 
என்னுடைய நிலையைப் பார்த்து அந்த மிலிட்டரிக்காரர்கள் எல்லாம்சீர்வாதம் கேட்கின்றார்கள். என்னிடம் விபூதி எதுவும் இல்லை. அங்கிருக்கும் மண்ணை எடுத்துப் பிரார்த்தனை செய்து அதைத் தான் அவர்களுக்குக் கொடுத்தேன். நீங்கள் வைத்துக் கொள்ளுங்கள் உங்களுக்குத் தக்க உபாயமாகும் என்று சொன்னேன்.
 
ஏனென்றால் பேரீச்சம் பழம் பிஸ்கட் மட்டும்தான் ங்கு கொண்டு சென்றேன். விபூதியைக் கொண்டு செல்லவில்லை. ஆனால் நான் கொடுத்ததை அவர்கள் சந்தோஷமாக வாங்கிச் செல்கின்றார்கள்.
 
அங்கே ஜெபித்துக் கொண்டிருப்பவர்கள் சூரியனுடைய இயக்கமாக இருந்தாலும் கூட்டை விட்டு வெளியே வந்தால் இதே சூரியனால் கவரப்பட்டுத் தான் சுழல முடியும்.
 
அப்படிக் கவரப்படும் போது அவர் ந்த ஒலியினைத் தனக்குள் ஓங்கி வளர்த்தாரோ எப்படி இங்கே கூட்டுக்குள் டுங்கினாரோ இன்னொரு உடலுக்குள் சென்றாலும் அவரையும் இது போன்றுதான் உட்கார வைக்கும்.
 
நாராயணன் செயல் என்ன…? என்று அங்கே தியானமிருக்கும்படி சொன்னார் குருநாதர்.
1.அதன்பின் சில உணர்வின் ஒலிகளை எடுத்து அங்கே பரப்பும்படி செய்தார் குருநாதர்.
2.அந்த உணர்வுகளை அவர்கள் எடுத்தார்கள் என்றால் அதைச் சுவாசித்து அவர்களும் விண் செல்ல உதவும் என்று
3.உணர்வின் எக்கோவாக (ECHO) அங்கே அதைப் பரப்பச் சொன்னார்.
4.அவர் சொன்ன முறைப்படி செயல்படுத்தினேன்.
 
ஏனென்றால் அந்த இமயமலைச் சாரலில் இது போன்று ஏராளமானோர் உண்டு. இன்னும் ந்தக் கூட்டுக்குள் தான் இருக்கின்றார்கள்.
 
தையெல்லாம் நீங்கள் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டும்.

சத்தியவான் சாவித்திரி

சத்தியவான் சாவித்திரி


வீட்டில் கணவன் மனைவி வாழுகின்றார்கள். கணவனுக்கு அலுவலகத்தில் யாராவது இடைஞ்சல் செய்யும் நிலைகள் அதிகமாகி விட்டால் வீட்டில் மனைவி என்ன செய்ய வேண்டும்?
 
மனைவி ந்த மாதிரி நேரங்களில் ஈஸ்வராஎன்று உயிரை எண்ணித் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் என் இரத்தத்தில் கலந்து என் உடல் முழுவதும் படர்ந்து ஜீவான்மா ஜீவ அணுக்கள் பெற வேண்டுமென்று எண்ண வேண்டும்.
 
பின் துருவ மகரிஷிகளின் அருள் சக்தி என் கணவர் பெற வேண்டும். அவர் உடல் முழுவதும் படர வேண்டும். அவரைப் பார்ப்பவர்கள் எல்லோருக்கும் நல்ல எண்ணங்கள் வரவேண்டும் என்று இதை உடலுக்குள் சமைத்துக் கணவரிடம் நல்லது நடக்கும்…” என்று சொல்லிப் பாருங்கள்.      
1.அவரால் இதை எண்ண முடியவில்லை… மனைவி இதைச் செய்ய வேண்டும்.
2.இரண்டு உயிரும் ஒன்றானால் இரு மனமும் ஒன்றி இரு உணர்வும் ஒன்றாகின்றது. 
3.உணர்வு ஒன்றியபின் கணவரைப் பாதுகாக்கும் உணர்வை மனைவி செய்யவேண்டும்.
4.இது தான் எமனிடமிருந்து சாவித்திரி தன் கணவனை மீட்டினாள்  என்பது.
 
சங்கடம் வேதனை, என்ற உணர்வுகள் வரும் பொழுது அது நோயாக மாறி மனிதனை முடித்துவிடும் எமனாக மாறுகின்றது. இதை மாற்ற வேண்டும்.
 
எத்தகைய குறைபாடுகள் இருந்தாலும் வசிஷ்டரும் அருந்ததியும் போல் வாழ வேண்டும். அப்படியென்றால் கணவனும் மனைவியும், “துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியைக் கவர வேண்டும். ..”
 
நளாயினி போன்று என்கிற போது கணவருக்கு ஒரு சங்கடம் வரும் பொழுது அதை நிவர்த்திக்கக் கூடிய சக்தியாக…” அவர் உயர்ந்த ஞானம் பெற வேண்டும் என்ற உணர்வை மனைவி எடுக்க வேண்டும்.
 
சாவித்திரி போன்று இரு மனமும் ஒன்றி இரு உயிரும் ஒன்ற வேண்டும்.
1.கணவர் அருள் உணர்வு பெற வேண்டும் என்றும் அவருக்கு நல்ல எண்னம் வரவேண்டும் என்றும்
2.அவர் பார்ப்பது எல்லாம் நலமும் வளமும் பெற வேண்டும் என்றும்
3.அவர் சொல்லைக் கேட்போரெல்லாம் இனிமை பெற வேண்டும் என்றும் பெண்கள் எண்ண வேண்டும்.
 
அப்பொழுது அவருக்கு உற்சாகத்தை ஊட்டிக் கொண்டே இருக்கும். நல்ல சிந்திக்கும் தன்மை வரும்.
 
கணவன் மனைவி வேதனைப்படும் பொழுது, அந்த வேதனை என்ற உணர்வுகள் இருவரையும் சிந்திக்க முடியாமல் செய்யும். அந்த மாதிரியான நேரங்களில் எல்லாம் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி நாம் பெற வேண்டும் ங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் என்று எண்ண வேண்டும்.
 
அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எங்கள் உடல் முழுவதும் படர்ந்து உடல் உறுப்புகளை உருவாக்கிய அணுக்கள் பெற வேண்டும் என்று எண்ண வேண்டும். இவ்வாறு எண்ணி உடலுக்குள் சேர்த்தவுடன் கணவருக்கு, அதைப் பாய்ச்ச வேண்டும்.
1.அந்த மகரிஷிகளின் அருளால் அவர் சொல்வதெல்லாம் நலம் பெற வேண்டும்,
2.அவர் பிறர் போற்றும் நிலைகள் பெற வேண்டும் என்று மனைவி எண்ண வேண்டும்.
 
அந்தப் பழக்கத்திற்கு வரவேண்டும்.
 
தியானம் என்பதுஇதுதான் தியானம்.
1.உட்கார்ந்து சதா எண்ணுவது, தியானமல்ல.
2.அந்த அருள் சக்தி பெறுவதும் அதை இயக்குவதும்தான் தியானம்.
 
நமக்குள் வேதனை என்ற உணர்வுகள் ஆனபின் சிக்கலென்ற உணர்வு வருகின்றது. நுகரும் உணர்வுதான் நம்மை இயக்குகின்றது. அந்த உணர்வின் தன்மைதான் கூடும். எலக்ட்ரிக் எலக்ட்ரானிக் என்ற நிலைகளில் விஞ்ஞானம் இதை நிரூபிக்கின்றது.
 
மெய் ஞானிகள் காட்டியது
1.பிறரின் உணர்வுகள் வேகமாக இருக்கும் பொழுது நம் நல்ல உணர்வுகளை உடைத்து, உள்ளுக்குள் சென்று விடுகின்றது
2.அந்த வேகமான உணர்வுகள், நமக்குள் வராதபடித் தடுக்க வேண்டுமென்றால்
3.அருள் உணர்வை நாம் அடிக்கடி சேர்த்து இணைக்க வேண்டும்.
 
துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும், நாம் பெற வேண்டும் என்று செருகேற்றிக் கொள்ள வேண்டும். அப்பொழுது நமக்குப் பாதுகாப்பான நிலைகள் வரும்.
 
மக்குள் தீமை வராது, தடுத்துப் பழகுவதுதான் தியானம். துருவ நட்சத்திரத்தின் உணர்வை நமக்குள் எல்லா அணுக்களுக்குள்ளும் சேர்த்துவிட வேண்டும்.
 
நாம் புழுவிலிருந்து மனிதனாக வரப்படும் பொழுது தீமையிலிருந்து விடுபடும் உணர்வை சேர்த்துச் சேர்த்து வந்தோம். தீமையை நீக்கிய, துருவ நட்சத்திரத்தின் உணர்வை இப்பொழுது உங்களிடம் பதிவு செய்கின்றோம்.
1.இந்தப் பதிவு கொண்டு துருவ நட்சத்திரத்தை எண்ணி
2.காற்றில் கலந்துள்ள துருவ நட்சத்திரத்தின் உணர்வை எடுத்துப் பயன்படுத்தும் பொழுது
3.நாம் துருவ நட்சத்திரத்தின் ஆயுள் மெம்பராகச் சேருகின்றோம்.
 
ஆயுள் கால மெம்பர் குடும்பத்தில் யாம் சொன்ன மாதிரி கடைப்பிடிக்க வேண்டும். குழந்தை சுட்டித்தனமாக இருந்தால் உடனே துருவ நட்சத்திரத்தை எண்ணி மாற்ற வேண்டும்.
 
தொழிலில் நஷ்டம் ஏற்பட்டாலும் உடனே துருவ நட்சத்திரத்தை எண்ணினால் அதை எப்படிச் சரி செய்ய வேண்டுமென்ற நல்ல சிந்தனை வரும்.
 
கணவனும் மனைவியும் இந்தத் தியானத்தை எடுத்துக் கணவருக்கு உயர்ந்த ஞானம் கிடைக்க வேண்டும், சிந்திக்கும் ஆற்றல் கிடைக்க வேண்டும், தொழிலில் நல்ல வீரிய சக்தி பெறக்கூடிய உணர்வு வரவேண்டும் என்ற உணர்வைப் பாய்ச்சுங்கள்.
 
அவர் மனம் வலிமையாக இருக்க வேண்டும், எண்ணங்கள் சீராக இருக்க வேண்டும், அவர் செயல்களை அனைவரும் போற்றும் நிலைகள் வரவேண்டுமென்று எண்ணிப் பாருங்கள். எந்த வியாபாரமானாலும் அவரிடத்தில் பொருள் வாங்குவோர் எல்லாம் நன்றாக இருக்க வேண்டுமென்று எண்ணிப் பாருங்கள். 
 
மனைவி இப்படி எண்ணினால்
1.வேறு யாரிடத்திலும் யோசனை கேட்க வேண்டியதில்லை. 
2.இந்த உணர்வுடன் கணவர் எங்கு சென்றாலும் எல்லாக்  காரியத்திலும் வெற்றி பெறலாம்.
3.நாம் இந்த மாதிரி வாழ்ந்து காட்டவேண்டும்அதைச் செயலாக்கிப் பார்க்க வேண்டும்… வாழ்க்கையில் மகிழ்ச்சி வரும்.
 
மற்றவரிடத்தில் இதைச் சொல்லும் பொழுது இந்த உணர்வு அங்கேயும் விளைய வேண்டும். அவர்கள் குடும்பமும் நன்றாக இருக்க வேண்டும், அவர்கள் வெளிப்படுத்தும் மூச்சு நல் உணர்வாகப் படர வேண்டும்.
 
நம் தெருவிற்குள் நல்ல உணர்வலைகள் பரவ வேண்டும். அப்பொழுது ஒன்றுபட்டு வாழும் நிலை வரும். ஆயுள் கால மெம்பர்கள் அனைவரும் துருவ நட்சத்திரத்துடன் ஒன்றியே வாழ வேண்டும். ஒவ்வொரு குடும்பத்திலும் துருவ நட்சத்திரத்தை எண்ணி எடுத்துப் பழக வேண்டும்.
 
நமது குருநாதர் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் நமக்கு அருளினார்.
1.அவர் வழியில் அவர் காட்டிய நெறிப்படி அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை நாம் எடுக்க வேண்டும். 
2.அவர் துருவ நட்சத்திரத்தின் அங்கத்தினர்… அவர் வழியில் துருவ நட்சத்திரத்தின் ஒளி பட இருள் நீங்கும்.
3.ந்த அருளைப் பெற இருளை அகற்றும் சக்தியை நாமும் பெறலாம்.