ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

December 15, 2025

“உயிரைப் போன்றே…” உணர்வுகளை எப்படி ஒளியாக்குவது…?

“உயிரைப் போன்றே…” உணர்வுகளை எப்படி ஒளியாக்குவது…?


பாம்பினங்கள் தன் உணவிற்காக மற்றொன்றின் மீது விஷத்தினைப் பாய்ச்சி உணவாக எடுத்தாலும் மற்றதிலுள்ள விஷங்கள் இதனுடன் கலந்து அது பல வித வண்ணங்களாக உறையப்படும் பொழுது நாகரத்தினமாக மாறுகின்றது…  அது கல் மயமாக மாறுகின்றது.
 
1.நமது உயிரின் துடிப்பு மின் மயமாக இருக்கின்றது
2.அதைப் போன்று நம் உடலில் உள்ள அணுக்கள் அனைத்தையும் உயிரைப் போன்று மின் மயமாக்க வேண்டும்…
 
எப்படித் தேனீக்கள் ஒன்றாகச் சேர்த்துத் தேனை உருவாக்கி ஒரு கூட்டினை அமைத்துக் கொள்கின்றதோ இதைப் போன்று நமது உயிரும் இந்த உடலில் வளர்த்துக் கொண்ட உணர்வுகள் தேனைப் போன்று இணைந்து திடப் பொருளாகி விட்டால் அது கல்லாக மாறிவிடும் வைரங்களாகிவிடும். கோள்களைப் போன்று பாறைகளாகிவிடும்.
 
மின் இயக்கத் துடிப்பாக அதன் உணர்வின் இயக்கம் வரும் பொழுது கோள்கள் தன் சுழற்சியில் நடு மையம் வெப்பமாகி அதன் உணர்வினை கவர்ந்து கொண்டு வருகின்றது.
 
ஆனால் உயிரணு தோன்றி நட்சத்திரமாக்கப்படும் பொழுது தேனீயைப் போன்று தன் உணர்வின் தன்மை ஒளியின் உணர்வுகளை ஒன்றாக எடுத்து ஒளிக்கதிர்களைப் பாய்ச்சிக் கொண்டே உள்ளது. 
 
நாம் தேனை எடுத்து உணவாக உட்கொள்ளும் பொழுது எப்படி அது சுவை மிக்கதாக உள்ளதோ அதைப் போன்று துருவ நட்சத்திரத்தின் உணர்வினை நாம் நுகர்ந்து
1.நம் உடலில் உள்ள அணுக்களுக்கு அதை ஆகாரமாகச் சேர்த்து அதன் உணர்வினை வளர்ச்சி செய்யப்படும் பொழுது
2.இந்த உடலில் உள்ள விஷத்தை மாற்றி இனிமை…” என்ற உணர்வை ஊட்டும்.
 
இந்த உணர்வினை வளர்த்துக் கொள்வதுதான் ஆறாவது அறிவின் தன்மை.
 
நாம் சந்தர்ப்பத்தால் நுகர்ந்தறிந்த உணர்வுகள்தான் பரிணாம வளர்ச்சிக்கே காரணமாக இருந்தது. ஆனால் ஆறாவது அறிவான பின் நாம் தீமைகளை நீக்கும் சந்தர்ப்பத்தை உருவாக்கி நமக்குள் இயங்கிக் கொண்டிருக்கும் ஜீவ அணுக்களை உயிரணுக்களாக மாற்றிஉலக இருளை நீக்கி ஒளி என்ற உணர்வின் அறிவாக ஒருங்கிணைந்து இயக்கும் தன்மை பெற வேண்டும்.
 
இந்த உயிர் உணர்வின் அறிவாக இந்த உடலை இயக்குகின்றது. ஆனால் இந்த உடலிலே உயிரைப் போலவே ஒளியின் உடலாக மாற்றிச் சென்றவர்கள் மகரிஷிகள்.
1.இந்தப் பிரபஞ்சத்தில் சூரியனே அழிந்தாலும் சூரியனிலிருந்து வெளிப்படும் விஷத்தன்மையைக் கூட
2.ஒளியாக மாற்றிக் கொள்ளும் திறன் பெற்றவர்கள் தான் மகரிஷிகள்.
 
2000  சூரிய குடும்பத்துடன் இணைந்து வாழ்கின்றது நமது சூரியன். இதைப் போன்று இந்த 2000 சூரிய குடும்பங்களும் அகண்ட அண்டத்தில் மற்ற கோள்களுடன் ஒன்றுடன் ஒன்று இணைந்தே வாழ்கின்றது.
 
ஒன்றில்லையேல் ஒன்று இல்லைஒன்று என்றுமே தனித்து இருந்ததே இல்லை.
1.விஷம் தாக்கும் பொழுதுதான் வெப்பம் உருவாகின்றது
2.வெப்பம் உருவாகும் பொழுதுதான் ஈர்க்கும் சக்தியாக இயக்கச் சக்தியாக மாறுகின்றது.
 
யாம் உபதேசிப்பதை ஒவ்வொரு நொடியும் கூர்ந்து கவனிக்கும் பொழுது நீங்கள் நுகர்ந்த உணர்வுகள் உங்கள் உடல் உறுப்புகளிலுள்ள ஜீவ அணுக்களின் முகப்பில் உயிரில் மோதுவது போன்று அந்த அணுக்களும் இந்த உணர்வினைப் பெறும் தகுதி பெறுகின்றது.
 
அப்படி எல்லா அணுக்களிலும் சக்தி பெறச் செய்வதற்குத்தான் இந்த உபதேசம். 
 
எனக்கு எப்படி குருநாதர்… என் நினைவினை விண்ணுக்கு அழைத்துச் சென்றாரோ…? அதைப் போன்று
1.உங்கள் உடல் உறுப்புகளை உருவாக்கிய அணுக்கள் அனைத்தும் அந்தத் துருவ நட்சத்திரத்துடன் தொடர்பு கொண்டு
2.அதை ஈர்க்கும் அந்த அருள் சக்தியைப் பெறச் செய்கிறோம்.
 
இதை எல்லாம் ஏன் முன்பே எங்களுக்குச் சொல்லவில்லை…? என்று கேட்பீர்கள்.
 
விதையைப் போட்டு முளைத்து… அது வளர வளர அதன் நிலை வேறு விதமாக இருக்கும். அது வளர்ந்த பின்பு அதனுடைய வளர்ச்சியில் வரும் பொழுது எந்த வித்தோ அதைப் போன்றுபின்னாடி தான் உருவாகின்றது.
 
முதலில் ஏன் சொல்லவில்லை…? என்று கேட்டால்
1.செடி ஓரளவிற்கு வளர்ந்தபின் உரம் போட்டால் தாங்கும்.
2.ஆனால் செடி சிறிதாக இருக்கும் பொழுது உரம் போட்டால் கருகிவிடும்.
3.விஷத்தை ஒளியாக மாற்றும் இந்த உணர்வுகள் சரியான பருவம் வரவில்லை என்றால்
4.நீங்கள் வளரும் பருவத்தை மாற்றிக் கருக்கிவிடும்செயலற்றதாக்கி விடும்.
 
ஆகவே… குருநாதர்க்கு எந்தெந்தப் பருவத்தில் எதெனெதன் சந்தர்ப்பங்களில் எப்படிக் கொடுத்தாரோ அதைப் போன்று உங்களுக்குள் மனப்பக்குவம் பெறும் நிலையும்… அந்த வளர்ச்சிக்குத் தகுந்தவாறு இந்த உணர்வினை வெளிப்படுத்துவது.
 
மனப்பக்குவமான பின் இந்த உணர்வுகள் உங்களுக்குள் விளைந்தால் உங்களுடன் பழகும் நண்பர்களுக்கும் உங்களில் விளைந்த உணர்வுகள்…” நன்மை பயக்கும் சக்தியாக மாறும். 
 
இனி வருவோர்க்கு…” உங்கள் மூலமாக அவர்களுக்கும் கிடைக்கும். ஏனென்றால் வளர்ச்சி பெற்ற பருவம் ஒன்றுடன் ஒன்று தொடர்பு கொண்டு, அது விளைகின்றது என்பதனை நாம் அறிதல் வேண்டும்.
 
நாம் இவ்வளவு காலம் 15 - 20 வருட காலமாகச் சாமியிடம் தொடர்பு கொண்டு இருந்தோமே நமக்கு இதெல்லாம் தெரியாமல் போயிற்றே…! என்று இருக்கலாம். 
 
1.உங்களில் விளைந்ததுதான் னி வருவோர்க்கு அதன் உணர்வின் சக்தி கொண்டு அவர்கள் உடலில் விளையச் செய்கின்றோம். 
2.நீங்கள் குருவுடன் தொடர்பு கொண்டஉங்களில் விளைந்த உணர்வுகள்தான்
3.பிந்தி வருவோர்க்கு இந்த உரமான சத்தும் கிடைக்கப் பெறுகின்றது என்பதனை உணர்தல் வேண்டும்.

எதிர்த்துத் தாக்கும் உணர்வு கொண்டால் நம்மைக் காக்கும் நல்ல உணர்வுகளை இழந்துவிடுவோம்

எதிர்த்துத் தாக்கும் உணர்வு கொண்டால் நம்மைக் காக்கும் நல்ல உணர்வுகளை இழந்துவிடுவோம்


நாம் எந்தத் தவறும் செய்ய வேண்டியதில்லை. ஒரு குழந்தை தவறிக் கீழே விழுந்து விட்டால் பாசத்தாலே அதை உற்றுப் பார்க்கின்றோம். அவன் அடிபட்டு வேதனைப்பட்டு வெளிப்படுத்தும் மூச்சலைகளைக் கண் கொண்டு பார்க்கும் பொழுது
1.அந்த உணர்வுகளை நம் சுவாசத்தின் வழி இழுத்துக் கொள்ள நேர்கின்றது.
2.அவன் பட்ட வேதனை நமக்குள் வந்தபின் அவன் அடிபட்ட உணர்ச்சி நம்மை இயக்கி நம்மையும் வேதனைப்படச் செய்கின்றது.
 
காரணம் அவன் வெளிப்படுத்தும் மூச்சலைகளைச் சூரியனுடைய காந்த சக்தி கவர்கின்றது. நினைவு கொண்டு அதைப் பார்க்கப்படும் பொழுது அந்த உணர்வு எனக்குள் ஊடுருவி வேதனையைத் தூண்டச் செய்து அதைக் காட்டி அவனைக் காக்கும்படிச் செய்கின்றது.
 
அதே சமயத்தில் அங்கே ஒரு போக்கிரி வருகின்றான் என்று வைத்துக் கொள்வோம்அவன் அசுர குணங்கள் கொண்டு இந்தக் குழந்தை அடிபட்டதைப் பார்த்தபின் மகிழ்ச்சி அடைகின்றான். இவனுக்கு இப்படித்தான் வேண்டும் என்று சொல்கின்றான். நல்லதைக் காக்கும் எண்ணம் அவனுக்கு இல்லை.
 
ஆனால் அதைப் போல எண்ணம் கொண்டவன் ரோட்டிலே நடந்து செல்கின்றான் என்று வைத்துக் கொள்வோம். எதிர்பாராது திடீரென்று ஒரு பஸ் வேகமாக வருகின்றது. இவனை மோதி விடும் என்ற நிலை வரும் பொழுது
1.இவனுக்குள் இருக்கும் அசுர சக்தி என்ன செய்கின்றது…?
2.அவன் என்னை ஏற்றி விடுவானா…? என்று முரட்டுத்தனமாகப் பார்ப்பான்.
3.ஆனால் அந்த பஸ் இவன் மீது மோதி அடித்த பிற்பாடு தான் இவன் உணர்வான்.
4.ஏனென்றால் எதிர்த்து நிற்கும் சக்தி தான் இதுதன்னைக் காக்கும் சக்தி அங்கே இருக்காது.
 
முரட்டு குத்தின் தன்மை கொண்டு இரக்கமற்ற நிலைகளைச் செய்யும் பொழுது அந்த இரக்கமற்ற உணர்வு இவனைக் காக்க அவன் எண்ணமே உதவாது…!”
 
ஆனால் பாசத்தால் குழந்தையில் பால் இக்கப்பட்டு அவன் வேதனையைச் சுவாசித்து உதவி செய்தாலோ வேதனையான சத்து இங்கே உடலுக்குள் வந்து விடுகின்றது.
 
இந்த உடல் நாம் உணவாக உட்கொள்ளும் உணவிற்குள் மறைந்து வரும் விஷத்தை மலமாக மாற்றுகின்றது. கெட்டதை நீக்கி நல்லதை உருவாக்கும் சக்தி பெற்றது தான் ஆறாவது அறிவு.
 
அதைச் செம்மையான நிலைகள் பயன்படுத்துவதற்குத் தான் யாம் சொல்லும் இந்தத் தியானம். மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும் ஈஸ்வரா என்று ஏங்கி அதை உடலுக்குள் கண்ணின் நினைவு கொண்டு நாம் செலுத்தக்கூடிய நிலைதான் ஆத்ம சுத்தி என்பது.
 
தியானம் என்பது ஒரு நாளைக்கு பத்து நிமிடம் இருந்தால் கூடப் போதுமானது. ஆனால்
1.எப்பொழுது துன்பம் நேருகின்றதோ அந்தத் துன்பம் உடலுக்குள் புகாதபடி
2.அதை நாம் இந்த வாழ் நாள் முழுவதும் சுத்தி செய்து மகரிஷிகள் உணர்வு கொண்டு அதைத் தடுத்துப் பழக வேண்டும்
 
நரசிம்ம அவதாரம் என்பது இதுதான்.
 
துன்பம் வரும் பொழுது அந்தச் சுவாசம் உடலுக்குள் சென்று அது உடலுக்குள் அந்த உணர்ச்சிகளைத் தூண்டும் நிலையைக் குறைப்பதற்கு ஒவ்வொரு நிமிடமும் ஆத்ம சுத்தியைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
 
அதை உங்களுக்கு வாக்குடன் கூடித்தான் ஆயுதமாகக் கொடுக்கின்றோம். எத்தகைய துன்பம் வந்தாலும் மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று ங்கும் பொழுது அந்த உணர்ச்சியைத் தூண்டச் செய்து அதை நீங்கள் சுவாசிக்க நேர்கின்றது.
 
சுவாசிக்க நேரும் பொழுது சங்கடமான எண்ணம் உடலுக்குள் தொல்லை கொடுத்துக் கொண்டிருப்பதை இது ஊடுருவி அதை அமிழ்த்துகின்றது.
 
அதற்கு இந்த ஆத்ம சுத்தி அவசியம் தேவை.
 
செடி கொடிகள் அனைத்தும் சூரியனின் காந்த சக்திகளை எடுத்துக் கொள்கின்றது. பாக்கி நாள் முழுவதும் காற்றில் இருக்கக்கூடிய தன் இனமான சக்திகளை எடுத்துத் தன் இனமாகப் பெருக்கிக் கொள்கின்றது.
 
இதைப் போல் தான்
1.அந்த மெய் ஞானிகள் அருள் சக்திகளை ஒவ்வொரு நொடியிலும் பெறுவதற்கு நமக்கு அந்த ஆற்றல் தேவை
2.அந்த ஆற்றலைப் பெறுவதற்குத்தான் இந்த உபதேச வாயிலாகப் பதிவு செய்கின்றோம்.

மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் விண் சென்ற வழி

மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் விண் சென்ற வழி


துருவ மகரிஷி எவ்வாறுஎதன் வழியில் விண்ணுலகம் சென்றார்…? என்பதைநமது குருநாதர் மாமகரிஷி ஈஸ்வரப்பட்டாய குருதேவர்…” அவருள் அறியும் ஆற்றல்  பெற்றபின் அந்த வழியினை… “விண் செல்லும் மார்க்கங்களை…” எமக்கு உபதேசித்தார்.
 
அவர் உடலை விட்டுப் பிரிந்த பின்… நான் அவரை உற்றுப் பார்க்கப்படும்போது
1.சப்தரிஷி மண்டலத்துடன் அவர் இணையும் ஆற்றலும்
2.அவர் உடலிலிருந்து இந்த உடல் பெற்ற நிலையை உடல் பெறா நிலைகள் கரைவதையும் காட்டுகின்றார் 
 
இவர் தற்காலத்தில் விண் சென்றவர் தான். அதாவது  1970  என்று எண்ணுகின்றேன். ஆனால் சரியாக நினைவில் இல்லை. 
           
1970ல் உடலை விட்டுச் சென்றபின் அவர் உயிரான்மா எவ்வாறு விண் செல்கிறது…? என்றும்
1.விண் செல்வதற்கு… அவரை விண் செலுத்துவதற்கு என்ன உபாயங்கள்  செய்ய வேண்டும்…? என்றும்
2.அவரைப் பின் தொடர்ந்து செல்லும் நிலையினை… எனக்குள் எப்படிப் பெருக்க வேண்டும்…? என்றும்
3.அவர் காட்டிய அருள் வழிப்படித் தான் அதைச் செய்தது.
 
பின் சப்தரிஷி மண்டலங்களிலிருந்து சக்திகளைப் பெறும் தன்மையையும் எமக்கு உபதேசித்தருளினார்.
 
அன்று அகஸ்தியன் துருவனாகும் போது பெற்ற “விண்ணுலக ஆற்றல்கள்…” அவனிடமிருந்து வெளிப்பட்ட உணர்வுகள் இங்கே உண்டு.
 
தை எப்படிப் பெற வேண்டும்…? என்று குருநாதர் கூறிய அந்த அருள் வழிப்படி அதை நுகர்ந்தறிந்துஎமக்குள் அது விளையச் செய்து அதன் உணர்வின் எண்ண அலைகளை உங்களுக்குள்ளும் இப்பொழுது பதியச் செய்கின்றேன்.
 
உங்கள் செவிப்புலனறிவில் அது ஈர்க்கப்பட்டுஅதன் துணையால்
1.உங்களுக்கும் அந்த விண்ணுலக ஆற்றலைப் பெறும் தகுதியை ஏற்படுத்துவது தான் இந்த நிலை.
2.குருநாதர் விண் சென்ற உணர்வுகள் தான் ப்பொழுது உங்களுக்குள் நுகரும் இந்த ஆற்றல் அனைத்தும்…!