ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

December 9, 2025

வேகா நிலை

வேகா நிலை


நிறையப் பேர் சொல்வார்கள். நாங்கள் சாகாக் கலையைக் கற்றுக் கொண்டிருக்கின்றோம். உங்களுக்குச் சாகாக் கலை தெரியுமா? என்று எம்மிடமே கேட்டார்கள்.
 
போகர் சொன்னாராம் சாகாக் கலையைப்பற்றி…! சில பேர் காயகல்பத்தைப் போட்டுச் சாப்பிட்டு அதையெல்லாம் நான் வைத்திய ரீதியில்  சாகாக் கலையைக் கற்று இருக்கின்றேன். ஆகையால்
1.அந்த மருந்தெல்லாம் போட்டு மந்திரங்களைச் சொல்லி
2.போகர் காட்டிய வழியில் நான் சாகாக்கலை கற்றிருக்கின்றேன்.
 
உங்களுக்கு என்ன தெரியும்? என்றார்கள்.
 
இவ்வாறு நான் சாகமாட்டேன் என்று சொன்னவர் மருந்திலே எதிர்நிலை ஆகிவிட்டால் என்னமோ எதிலோ குறையாகி விட்டது,.. எனக்கு இப்படி வந்து விட்டது…!” என்பார்கள். இது சாகாக் கலை.
 
யார் இதை உணர்த்தினாரோ அவர் இறந்த பிற்பாடு இன்னொரு உடலில் பிடித்துக் கொண்டு இதே ஆசையில் இருப்பார். இதே உணர்வை எண்ணி அந்த மந்திரம் எல்லாம் கற்றுக் கொண்டு அடுத்தரும்` போவார்.
 
அங்கு போனவுடன் சாகாக் கலையில் அவரும் இதே கதியா அதைச் செய்தேன்இப்படியாகி விட்டதே…! என்று பைத்தியம் பிடித்த மாதிரி ஆகி… இரண்டு உணர்வும் சேர்ந்தவுடனே இருக்கின்றவனை எல்லாம் பைத்தியமாக்கி விடும்.
 
அவர்களிடம் மருந்து வாங்கிச் சாப்பிடுபவர்களெல்லாம் கடைசியில் என்ன ஆவார்கள்?
 
இதைக் கண்டுபிடித்தேன் என்று கடைசியில்
1.நெகடிவ் பாசிட்டிவ் என்ற நிலையில் மருந்து சாப்பிடுபவர்களையும் சாகாக் கலையாக
2.நீயும் வாயேன் என்று இழுத்துக் கொண்டு போகும்... இது சாகாக் கலை.
 
யாம் இப்பொழுது உபதேசிப்பதுவிஜய தசமி…!  பத்தாவது நிலை.. அடுத்து ஒளியாகி விட்டால் பிறவி இல்லை. இது வேகாக்கலை…!
 
ஒரு மனிதன் எவ்வளவு முழுமையாக இருக்கட்டும். தீயில் குதித்து விட்டால் என்ன ஆகின்றது? சரீரம் கருகுகிறது… ஆனால் உயிர் அழிகிறதா…? இல்லை. உயிர் வேகா நிலை பெற்றது.
 
அணு குண்டு போட்டுக் கூட வெடிக்கச் செய்கின்றான். ஒரு அணுவின் ஆற்றல் கதிரியக்கம். 
 
பாறைக்குள்ளிருக்கும் கதிரியக்கத்தினால்தான் தன் சக்தி அதாவது… தன் இனமான சத்து எதனுடன் கலந்து இருக்கின்றதோ அந்த உணர்வைத் தனக்குள் எடுத்து அது பாறையாக விளைகின்றது.
 
அதற்குள் தன் இயக்கத்தின் வலுக்கொண்டு அதனுடன் எது விளைந்து உருவானதோ அதே கதிரியக்கச் சக்தியால்தான் இரும்பு உலோகமும் உருவாகின்றது.
 
இதுவே நட்சத்திரங்களில் இருந்து வரக்கூடிய மற்ற பொருட்களுடன் கலந்து மற்ற பொருள் உருவாக்கப்படும் பொழுது அந்த அணுவின் தன்மையைப் பிளந்து… அந்தக் கதிரியக்கத்தைத் தனக்குள் எடுத்துக் கொண்டவன் விஞ்ஞானி.
 
அந்தக் கதிரியக்கத்தை எடுத்துச் சேமித்து மீண்டும் அணுகுண்டாக வெடிக்கச் செய்யப்படும் பொழுது சூரியனின் காந்த சக்தி கவர்ந்து தன் இனமான நிலைகள் எதுவோ அதிலெல்லாம் மோதும்.
 
அது மோதியபின் புயலைப் போன்று தான் எதனை உருவாக்கியதோ அதனுள் இருக்கும் உணர்வைக் கரியாக்கிவிட்டுத் தன் கதிரியக்கச் சக்தியுடன் இணைந்து சத்தை ஒளியாக எடுத்துக் கொள்ளும். ஆக இது கதிரியக்கச் சக்தி.
 
1.விஞ்ஞானிகள் அணுவைப் பிளந்து அணுவின் தன்மை கொண்டு வந்தாலும்
2.அதைப் போலத்தான் மெய்ஞானிகள் உணர்வுக்குள் இருக்கும் அணுவைப் பிளந்துவிட்டு ளியாக மாற்றி
3.எத்தகைய உணர்வு வந்தாலும் அதைப் பிளந்து உயிருடன் ஒன்றிய ஒளியாக நிற்பது
4.அதுவேவேகாக் கலை…!” – வேகா நிலை.
 
இப்பொழுது தீயிலே ஒரு மனிதன் இறந்து விட்டால் தீயிலே கருகி விட்டாலும் அணுகுண்டு ஒன்றை வெடிக்கச் செய்து அதனின் உணர்வு தசைகளைக் கருகச் செய்தாலும் அந்த உடலில் இருக்கும் உயிரை ஒன்றும் செய்ய முடியாது. உயிர்வேகாக் கலை பெற்றது.
 
அணுவைப் பிளந்து அதனை வெடிக்கச் செய்யும் பொழுது அது தன் இனத்தைப் பெருக்குவது போல அந்த மெய் ஞானி தன் உணர்வினை ஒளியாக மாற்றி
1.உயிருடன் ஒன்றிய நிலைகள் கொண்டு வேகாக் கலையாக
2.எத்தகைய நஞ்சுகள் வந்தாலும் அதனைப் பிளந்து அதனை ஒளியாக மாற்றி
3.என்றும் பதினாறு என்ற நிலையில் (வேகாநிலை அடைந்து) சப்தரிஷி மண்டலமாக வாழ்ந்து வளர்ந்து கொண்டுள்ளார்கள்.
 
அணு குண்டை வெடித்தபின் எந்த உலோகமாக இருந்தாலும் அதைப் பிளக்கச் செய்து தன் இனத்தின் தன்மையை அது வளர்த்துக் கொள்கிறது.
 
இதைப் போலத்தான் அந்த மெய் ஞானிகள் தன் உணர்வின் ஆற்றலை உணர்வுக்குள் இருக்கும் நஞ்சினைப் பிளந்து அணுவின் தன்மையை ஒளியாக மாற்றியவர்கள்.
1.எத்தகைய அணுகுண்டும் அவர்களை அசைக்காது
2.எத்தகைய நஞ்சு கொண்ட நிலைகள் வந்தாலும் தீயில் இட்டாலும் அவர்களைப் பாதிக்காது.
 
அவ்வாறு ஒளிச் சரீரமாக என்றும் நிலைத்து இருக்கும் வர்கள் துணை கொண்டு நாம் அனைவரும் அந்த வேகாக்கலை என்ற உணர்வின் சக்தியைப் பெற நினைவு கூறும் நன்னாள்தான் விஜயதசமி… பத்தாவது நிலை பெறுவதை நினைவுபடுத்தும் நன்னாள்.
 
ஒவ்வொருவரும் இந்த மனித உடலில் இருந்துதான் பத்தாவது நிலை அடைய முடியும்.
 
மாமகரிஷி ஈஸ்வரப்பட்டாய குருதேவர் எமக்கு உபதேசித்து அருளியதை  யாம் உங்களுக்கும் உபதேசிக்கின்றோம். இதைக் கேட்டறிந்த அனைவரும் கூட்டுத் தியானங்கள் இருந்து இந்த துருவ மகரிஷியின் அருள் சக்தியைப் பெறுங்கள்.
 
அனைவரும் உயிருடன் ஒன்றி வேகா நிலை பெறுங்கள்…!

இராமனின் பக்தன் ஆஞ்சநேயன்

இராமனின் பக்தன் ஆஞ்சநேயன்


ஒருவர் வேதனைப்படுகிறார் என்றால் அந்த வேதனையான உணர்வு தனக்குள் புகாது தடுத்தல் வேண்டும். தடுப்பதற்கு என்ன செய்வது…?
 
1.தீமைகளை நீக்கியது துருவ நட்சத்திரம்.
2.அதை நுகர்ந்தால் உயிரிலேட்டு இயக்கச் சக்தியாக மாறுகின்றது.
3.ஈஸ்வரா…! என்று கண்ணின் நினைவைப் புருவ மத்தியில் வைக்கப்படும் பொழுது
4.அந்த உணர்ச்சிகள் இயக்கப்பட்டுத் தீமையிலிருந்து நம்மை விடுபடச் செய்கின்றது தீமை வராதபடி தடுக்கும் சக்தி பெறுகின்றது.
 
மற்றவர்கள் துயரப்படுவதை நாம் பாசத்தால் பார்க்கப்படும் பொழுது கண்ணின் கரு விழி அவர்களைக் கவர்ந்து படமாக்குகின்றது. பதிவான பின் கண்ணோடு சேர்ந்த காந்தப்புன் அந்த உடலிலிருந்து வரக்கூடிய உணர்வினை உயிரிலே மோதச் செய்கிறது. அப்போது நாம் வேதனையை அறிகின்றோம்.
 
அதனால் தான் கண்களை அதாவது கண்ணனைத் திருடன்…” என்று சொல்வது. எதை எடுத்தாலும் அவன் திருடிக் கொள்வான்.
 
ஒருவர் நோயால் அவதிப்படுகிறார் என்று வரும் பொழுது கண்ணிலே பதிவாக்கிய பின் அந்த உணர்வின் தன்மை தனக்குள் வடிக்கப்பட்டு உயிருடன் மோதப்படும் பொழுது அந்த வலிமை நம் உடலுக்குள் சென்று விடுகின்றது.
 
அவர் வேதனைப்படுகிறார் என்று தெரிந்து கொள்கின்றோம். ஆறாவது அறிவு கார்த்திகேயா…! தனக்குள் அது தீமையை விளைவிக்கும் என்று தெரிந்து கொண்டபின்
1.தீமையை நீக்கும் சக்தியை… துருவ நட்சத்திரத்தின் சக்தியை நம் ஆறாவது அறிவால் எடுத்து அதைத் தடுத்து நிறுத்த வேண்டும்.
2.அப்போது உள்ளே செல்லாதபடி அதைத் தடைப்படுத்துகின்றது.
 
கண்ணின் நினைவுகளை உயிருடன் ஒன்றச் செய்யப்படும் பொழுது
1.கண்களிலும் காந்தம் உண்டு… உயிரிலும் காந்தம் உண்டு…! கவரும் சக்தி கொண்டதுதான்.
2.கண்ணின் நினைவை உயிரிலே மாற்றி துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்று
3.உயிருடன் உராயப்படும்போது இந்த உணர்வுகள் உள்முகமாகச் செல்கின்றது.
4.துருவ நட்சத்திரத்தின் சக்திகள் உள்ளே சென்று அது அழுத்தமாகி
5.வெளியிலிருந்து வரக்கூடிய தீமை உள்ளே போகாதபடி அந்தத் தீமையைத் தள்ளி விடுகின்றது.
 
உடலில் உள்ள அணுக்களைத் தனித்தன்மை கொண்டு “இங்கே அடைத்து வைத்த பின்…” தீமையை ஈர்க்கும் சக்தி குறைகின்றது. பின் அதைத் தள்ளி விட்டு விடுகின்றது.
 
இப்படித் தள்ளிவிட்டால் நம் ஆன்மாவிலிருந்து அதனுடைய வேகமான இயக்கத்தைத் தடைப்படுத்துகின்றது…!”
 
துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி நாங்கள் பெற வேண்டும் எங்கள் உடல் முழுவதும் அது படர வேண்டும் எங்கள் ஜீவான்மாக்கள் ஜீவணுக்கள் பெற வேண்டும் என்று இந்த வலிமையை நாம் சேர்த்துக் கொண்டே வர வேண்டும்.
 
வலிமையான பின்… யாரையெல்லாம் நாம் பார்த்தோமோ துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி அவர்கள் பெற வேண்டும் அங்கே உடல் நோய் நீங்க வேண்டும் என்று இப்படி நாம் பாய்ச்சிப் பழகுதல் வேண்டும்.
 
தீமை என்று அறிந்து கொண்ட பின் இப்படி மாற்றி தனக்குள் அதை உருவாக்கி உயர்ந்த உணர்வின் சொல்லாக நாம் வெளிப்படுத்த வேண்டும்.
 
1.அதைத்தான் ராமனின் பக்தன் ஆஞ்சநேயன் என்று சொல்வது.
2.இந்த உணர்வுகள் வாயுவாகச் சென்று மற்றவர்களுக்குள்ளும் பாய்ந்து நன்மை பயக்கும் சக்தியாக மாறுகின்றது.