
விண்ணுக்குப் போகும் உந்து விசை
விண் வெளியில் உள்ள கதிரியக்கப் பொறிகள் மற்ற மண்ணுடன் கலந்திருப்பதைப் பிரித்து அணுக்கதிரியக்கமாக மாற்றி அதன் உணர்வின் வலிமை கொண்டு அதன் சேர்க்கையில் பல கலவை கொண்டு "உந்து விசையாக மாற்றி" விண்ணிலே ராக்கெட்டை ஏவுகின்றார்கள்.
அதனின் தொடர் கொண்டு... பூமியின் ஈர்ப்பின் அழுத்தத்தைப் பிளந்து பூமியைக் கடந்து சென்று... ஈர்ப்பற்ற நிலைகளில் சுழன்று கொண்டிருக்கின்றது ராக்கெட்டின் செயலாக்கங்கள் விஞ்ஞான அறிவால்.
இதைப் போன்று தான்
1.விண்ணுலகில் எவ்வாறு உயிரின் தன்மை உருப்பெற்றதோ மண்ணுலகில் அது ஈர்க்கப்பட்டு
2.பல நட்சத்திரங்களில் இயக்கப்படும் பொறிகள் கோள்களாக மாறி அந்த உணர்வின் அலைகள் படர்ந்து வருவதைத் துருவத்தின் வழி பூமி நுகர்ந்து
3.அதன் வழி தாவர இனங்களாக வளர்ச்சி பெற்று அதன் உந்து விசையாக அதனின் உணர்வு இயக்கப்பட்டு
4.அதன் தொடர் வரிசையில் அதனதன் எடுத்துக் கொண்ட உணர்வுக்கொப்ப ரூபங்கள் மாறி மனிதனான பின் மனிதன் தன்னிலை அடைகின்றான்.
5.துருவத்தை நுகர்கின்றான்... நுகர்ந்ததைத் தனக்குள் ஒளிசுடராக மாற்றுகின்றான்.
அகஸ்தியன் இதையெல்லாம் பெற்ற பின் தன் மனைவிக்கும் இதை ஓதுகின்றான்... மனைவி பெற வேண்டும் என்று விரும்புகின்றான்.
மனைவியோ தன் கணவனுக்குப் பெற வேண்டும் என்று அவர்கள் இரு உணர்வும் ஒன்றாகி... அது கருவாகி ஒளியாக மாற்றும் திறன் பெறுகின்றார்கள் அகஸ்தியனும் அவன் மனைவியும்.
அதன் வழி விண் சென்ற அவர்கள் துருவ நட்சத்திரமாக வாழ்ந்து வளர்ந்து கொண்டுள்ளார்கள். ஆகவே கடவுள் எப்படி இருக்கின்றான் என்பதை நீங்கள் தெளிவாகத் தெரிந்து கொள்ளுங்கள்.
அதனை நாம் நுகர்ந்தால் அதன் வழியில் நாமும் அங்கே செல்ல முடியும்.
அகஸ்தியன் கண்ட பேருண்மைகளை எல்லாம் உங்களுக்குள்ளும் இப்பொழுது பதிவாக்கும் நிலை வருகின்றது.
1.பேரண்டத்தைக் கண்டுணர்ந்த அகஸ்தியன் உணர்வை நமது குரு தனக்குள் கவர்ந்தார்.
2.ஒளியின் சுடராக விண்ணின் ஆற்றலை அவன் கண்டான்... பூவுலகின் நிலையையும் அறிந்தான்… உயிரியலின் தத்துவத்தை அறிந்தான்.
3.பேரண்டத்திலிருந்து எவ்வாறு நுகர்ந்தது என்று மாமகரிஷி ஈஸ்வரபட்டாய குருதேவர் அகஸ்தியன் தொடர்வரிசையை அறிந்தான்.
4.அதைத் தனக்குள் உருவாக்கினான்... கருவின் வித்தாக உருவாக்கினான்.
5.அந்த வித்தினைத் தான் எனக்குள்ளும் பதிவு செய்தான்
6.அவன் உணர்வின் துணை கொண்டு அந்த எண்ணங்களை எடுக்கப்படும் பொழுது விண்ணின் ஆற்றலை நான் நுகர முடிகின்றது.
அதில் விளைந்த உணர்வின் எண்ணங்களை வித்தாக ஊழ்வினையாகப் பதிவு செய்ய முடிகின்றது.
இதை நீங்கள் நினைவு கொள்வீர்கள் என்றால் அந்த உணர்வின் துணை கொண்டு மண்ணுலகை வென்று வானுலகின் உணர்வை நீங்கள் நுகர்ந்து கணவன் மனைவியாக இதை வளர்த்துக் கொண்டால்
1.உடலை விட்டுச் சென்ற பின் அதே விண்ணுக்கு உங்களை அழைத்துச் செல்லும்.
2.இது நிச்சயம்…!