
தியானிக்கும் பொழுது என் நெற்றியைப் பார்க்கச் சொன்னதன் நோக்கம்
குரு காட்டிய
அருள் வழியில் என் உயிரான ஈசனிடம் வேண்டி என் குரு காட்டிய அருள் உணர்வை நான் ஏங்கிப் பெறுகின்றேன்.
1.அந்த அருள் பெற வேண்டும் என்ற ஏக்கத்துடன் நீங்கள் உங்கள்
உயிரை வேண்டும் பொழுது
2.கண்ணின் வழி குரு காட்டிய அருள் வழியில் “அந்தத் துருவ
நட்சத்திரத்துடன் உங்களை இணைக்கச் செய்கின்றேன்…”
குரு எனக்கு அதன் வழி தான் காட்டிக் கொண்டு வந்தார். அதன் வழியே உங்களுக்கும் குரு
வழியைக் காட்டி அந்த உணர்வினை எடுக்கும்படி
செய்வதற்காக உங்களுக்குள் பதிவு செய்கின்றேன்.
இப்பொழுது
என்னுடைய நெற்றியில் புருவ மத்தியைப் பாருங்கள்…! அம்மா அப்பா அருளால் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர்
அருளால் அகஸ்திய மாமகரிஷிகளின் அருள் சக்தியும் துருவ மகரிஷிகளின்
அருள் சக்தியும் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று ஏங்கி அப்படியே உற்றுப்
பாருங்கள்.
குரு காட்டிய அருள் வழியில் அவர் அருள் வழி காட்டிய அகஸ்தியனுடைய அருளும் அவன் துருவனான அந்த அருள் உணர்வும் துருவ நட்சத்திரமான அந்தப்
பேரருளும்
1.உங்களுக்குக் கிடைக்க வேண்டும் என்று என் உயிரான
ஈசனிடம் வேண்டி ஏங்கித் தியானிக்கின்றேன்.
2.அதன் வழி நீங்கள் ஏங்கும்போது
அந்த உணர்வுகள் அந்த அலைகள் இங்கே வந்து
3.உங்கள் உடலில் அந்த உணர்ச்சிகள் பரவி பேரருளைப்
பெறும் தகுதியைப் பெறுகின்றீர்கள்.
நாம் அதிலே
ஆயுள் கால மெம்பராக இணைகின்றோம். இதிலிருந்து
உறுதி பூண்டு யாம் உபதேசித்த உணர்வின் வழிப்படி வாழ்க்கையில் வழி நடத்துகின்றேன். அந்த வழி நடத்தும் அந்த அருள் சக்தி பெற வேண்டும் என்று நீங்கள் எண்ணுங்கள்.
அம்மா அப்பா அருளால் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் அருளால் அகஸ்திய மாமகரிஷிகளின் அருள்
சக்தியும் துருவ மகரிஷிகளின் அருள் சக்தியும் துருவ நட்சத்திரத்தின்
பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று
உங்கள் உயிரான ஈசனிடம் வேண்டி அதே உணர்வு கொண்டு கண்ணின்
நினைவைப் புருவ மத்தியில் எண்ணி உற்றுப் பாருங்கள்… அதை
ஏங்கிப் பெறுங்கள்.
உங்களுக்கு… உங்கள்
உயிரான ஈசனிடம் நான் வேண்டி…
1.ஈசன் வீற்றிருக்கும் ஆலயத்தில் அந்த அருள் உணர்வுகள் படர வேண்டும்
2.மாமகரிஷி
ஈஸ்வராய குருதேவர் அருள் படர வேண்டும்
3.அகஸ்திய
மாமகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும்
4.துருவ
மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும்
5.துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற
வேண்டும் என்று
6.உங்கள் உடலில் அந்த அருள் சக்தி படர வேண்டும் என்று உங்களைத் தியானிக்கின்றேன்.
நீங்களும்
அதன் வழி பெற வேண்டும் என்று ஏங்கித்
தியானியுங்கள்.
இப்பொழுது அந்த அருள் உணர்வுகள் நீங்கள் பெறுவதை உணர முடியும் உங்கள் உடலில் அது ஒளியலைகளாகப் பரவுவதையும் உணரலாம்.