ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

December 6, 2025

தியானம் செய்பவரின் கடமைகள்

தியானம் செய்பவரின் கடமைகள்


நாம் எதைச் சொந்தமாக்க வேண்டும்…?
1.நமது உயிருடன் ஒன்றி வாழ்ந்து
2.இந்த உயிருடன் ஒன்றி வாழும் அந்த ஒளியின் சரீரத்தை நாம் நமக்கு சொந்தமாக்க வேண்டும்.
 
ஆகையால் தியான வழி அன்பர்ள் ஒவ்வொருவரும் உலகுக்கு எடுத்துக்காட்டாக…” இருக்க வேண்டும். நமது கடமைகளிலிருந்து தவறக் கூடாது.
 
அருள் ஒளி என்ற உணர்வுகளை நமது உடலிலுள்ள அணுக்களுக்குக் கொடுத்து
1.துருவ நட்சத்திரத்தின் உணர்வைக் குரு வழியில் பாய்ச்சி அதைக் கடமையாக அமைத்து
2.அந்த அருள் வழியில் ளியாக மாற்றும் உணர்வைப் பெற வேண்டும்.
 
இந்த உடல் நமக்குச் சொந்தமல்லஉயிர்தான் நமக்குச் சொந்தம். உணர்வை எல்லாமே ஒளியாக மாற்றி விட்டால்தனுஷ்கோடி…”
 
இதை நமக்குள் எடுத்து லட்சம் என்கிற பொழுது அந்த லட்சம் இந்த லட்சம் என்றும் ஒன்று இரண்டு மூன்று என்ற நிலைகள் வரும்போது, பல லட்சம் ஆகிறது.
 
அப்பொழுது எல்லாவற்றையும் சேர்த்து ஒன்றாக்கும் போது கோடி என்ற நிலைகளில் தனுஷ்கோடி கின்றது…” எவ்வளவு அழகாக இராமாயாணத்தில் கொடுத்திருக்கின்றார்கள்.
 
ஆகையால் நாம் அனைவரும் இதனுடைய உணர்வுகளை வளர்த்து அந்தத் துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பில் ஆயுள் மெம்பராகச் சேர்ந்துஅதனுடன் சேர்த்த உணர்வின் தன்மை ஒன்றாக இணைத்துக் காற்றில் வரும் விஷ உணர்வுகளை நீங்கள் விடும் மூச்சலைகளால் மாற்றியமைத்து நாளை வரும் விஞ்ஞான அழிவிலிருந்து எல்லோரையும் காக்க வேண்டும்.
 
1.நியூட்ரான் என்ற நிலைகள் வரப்படும் பொழுது அது எப்படி எல்லாவற்றையும் விரட்டுகின்றதோ இதே போல்
2.துருவ நட்சத்திரத்தின் அருள் உணர்வை நீங்கள் அனைவரும் பரப்பித் தீமைகளை எல்லாம் விரட்ட வேண்டும்.
 
ஒரு கிராமத்தில் இருக்கின்றோம் என்றால் அங்கே நோயோ, கலவரங்களோ இதைப் போன்ற சில நிலைகள் இருந்தால் அனைவரும் கூட்டுத் தியானமிருந்து அந்தத் துருவ நட்சத்திரத்தின் ஆற்றல் மிக்க சக்திகளைக் கவர்ந்து அந்த மூச்சலைகளை அங்கே பரப்புங்கள். அப்பொழுது அந்தக் கிராமத்தில் உள்ள தீமை செய்யும் உணர்வின் அணுக்கள் மாறுகின்றது.
 
சில ஊர்களில் விவசாயம் மிக மோசமாக இருக்கிறது என்று தெரிந்தால் நீங்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து
1.துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற வேண்டும் என்று கூட்டுத் தியானமிருந்து
2.பயிரினங்களில் ந்தச் சக்தி படர வேண்டும் என்றும்
3.இதில் உருவாகும் அணுக்கள் தாவர இனத்தை வளர்க்கும் அணுவாக வளர வேண்டும் என்று
4.அந்த அருள் உணர்வுகளைப் பரப்ப வேண்டும்.
 
எனென்றால் காற்றிலிருந்து விஷத்தின் தன்மையை நுகர்ந்து அது அணுவாகி அதைச் சாப்பிடுகிறது. அதே சமயத்தில் நாம் எடுக்கும் உணர்வு கொண்டு அந்த விஷத்தன்மையை எடுத்தாலும் இது காற்றிலிருந்து வெளிப்படும் செடியின் சத்தை நுகர்ந்து அந்த உணர்வின் மலத்தை இடும்போது அது உரச் சத்தாக மாறும். அந்த அணுவும் வளரும்…! சொல்வது அர்த்தமாகிறதல்லவா. 
 
நீங்கள் விடும் மூச்சலைகள் நல்ல அணுக்களாகின்றது. எனவே இதைப் போன்ற நிலைகளில் நாம்
1.நம்மைக் காக்க வேண்டும்.
2.நம் குடும்பத்தைக் காக்க வேண்டும்
3.நம் ஊரைக் காக்க வேண்டும்
 
இதைப் போல் நாம் அனைவரும் செயல்பட வேண்டும்.
 
உலகுக்கு எடுத்துக் காட்டும் நிலைகளில்…” நமது குருநாதர் காட்டிய அருள் நெறிகளைப் பெறச் செய்து இதற்கு முன்னால் அறியாமல் சேர்ந்த நிலைகள் நம்மை இயக்கினாலும் அதையெல்லாம் தடுத்துப் பழக வேண்டும்.
 
ஏனென்றால் ஒரு பொருள் கெட்டுப் போய்விட்டது என்றால் மறுபடியும் அதை திருப்பிச் செய்கிறோம்.  ஒரு கட்டத்தில் குறையானால் அதை நிறுத்தி நாம் செயல்பட வேண்டும்.
 
ஒரு செடியின் வளர்ச்சி குன்றினால் அதற்கு என்ன பக்குவம் வேண்டும்…? என்று மீண்டும் வளர்க்கச் செய்கின்றோம். இதைப் போல நாம் ஒவ்வொன்றிலும் பக்குவப்பட வேண்டும்.
 
வாழ்க்கையில் இப்படிச் செய்தேனேஇப்படி இருந்தேனே…! என்பதையெல்லாம் மறந்து விடுங்கள்.
 
நாம் எப்படி இருக்க வேண்டும்…?
1.நல்ல உணர்வுகளை வளர்க்க வேண்டும்
2.இருளை அகற்றும் அருள் சக்தி பெற வேண்டும்.
3.நம் குரு அருளால் அந்த மெய்ப்பொருளைக் காணும் நிலை நமக்குள் வரவேண்டும்.
4.அனைவரும் அந்த மெய்ப்பொருள் கண்டு அவர்கள் வாழ்க்கையில் மகிழ்ந்திடும் சக்தி பெற வேண்டும்.
 
இதை உங்களுக்குச் சொந்தமாக்குங்கள்.
 
இன்றைய விஞ்ஞான உலகில் எத்தனையோ விஷத் தன்மையான நிலைகளை நாம் காணசுவாசிக்க நேருகின்றது. விஞ்ஞான அறிவால் உலகைக் காக்க வேண்டும் என்ற நிலை இல்லாமல் தன்னைக் காக்கத் தன் நாட்டைக் காக்க என்று பிழை கொண்ட உணர்வுகளைத்தான் இன்று செய்கின்றார்கள்.
 
ஆகவே இப்போது நாம் உலக மக்களின் உணர்வுகளை எடுத்துக் கொண்டாலும் நமக்குள் வீரிய உணர்வின் தன்மை இருந்தாலும் நாம் நல்லதை எண்ணும் போது இதனுடைய (விஷதன்மைகளின்) அழுத்தம் நல்ல குணங்களைச் சிந்திக்கும்படி செய்வதோநல்ல குணங்களைச் செயல்படுத்தும் நிலையோ இல்லாது போகும்.
 
அப்போது நமக்குள் இந்த எதிர்மறையான உணர்வுகளால் நல்ல உணர்வுகளைத் தூண்டும் நல்ல அணுக்களின் செயலைத் தடைப்படுத்தும். 
 
இதை மாற்ற வேண்டுமென்றால்
1.திசை திருப்புவது போல
2.சக்தி வாய்ந்த நிலைகளில் குருநாதர் எமக்குக் கொடுத்த அரும்பெரும் அருள் சக்தியை
3.அப்படியே உங்களுக்கு கொடுத்திருக்கிறோம்.
 
ஒவ்வொரு நொடியிலும் நீங்கள் தை வளர்க்க வேண்டும்,..! எமது அருளாசிகள்.

“எல்லோரும் உயர வேண்டும்…” என்ற எண்ணத்திற்கு நாம் வந்தால் தான் நாமும் உயர முடியும்

“எல்லோரும் உயர வேண்டும்…” என்ற எண்ணத்திற்கு நாம் வந்தால் தான் நாமும் உயர முடியும்


தும்கூர் அருகே ஒரு மலைக் காடு இருக்கின்றது கரடி இருக்கின்றது. ஆரம்பத்தில் நான் உலக அனுபவம் பெறுவதற்காகச் சுற்றுப்பயணம் சுற்றிக் கொண்டு வந்த இடத்தை எல்லாம் காட்டி
1.இந்த உணர்வுகள் எப்படி இருக்கின்றது…?
2.அந்த உணர்வை நுகந்தால் நீங்களும் எப்படி உலகை அறிய முடியும்…? என்ற காட்சிகளைக் கொடுத்தேன்.
 
ஆரம்பத்தில் குரு வழியில் இந்த உண்மைகளை வெளிப்படுத்தி அவர்களுக்கு (சத்தியத்தின் சக்தி நிலை) தைக் காட்டித்தான் செயல்படுத்தியது. அதே போன்று
1.ஐவர் மலையில் பழைய காலக் குகைகள் எப்படி இருக்கின்றது…?
2.அங்கிருக்கக்கூடிய சில உண்மைகளையும் பிரார்த்தனை பண்ணித் தெரியும்படி செய்தேன்.
3.அந்த இடத்தில் மின்கதிர்கள் பாயப்படும் பொழுது அது எப்படி…? என்றும்
4.மின் ஒளிகள் எப்படியெல்லாம் அங்கே வருகின்றது…? என்றும்
5.அங்கே ஒளி வட்டங்களை எல்லாம் சுற்றும்படி செய்தேன்.
 
இத்தனை வேலைகளையும் செய்தேன். ஆரம்பத்தில் இதை எல்லாம் செய்து காட்டினாலும்… ஒன்றுக்கும் பயனில்லாது போய்விட்டது. இதெல்லாம் மனித உடல் இச்சைக்குத்தான் சென்றது.
 
பல அற்புதங்களைக் காட்டினாலும் உடல் ஆசை ந்து விடுகின்றது. நான் தெரிந்து கொண்டேன்…!” என்ற நிலை வந்து விடுகின்றது,
 
அதை எல்லாம் விடுத்து விட்டு இப்பொழுது உங்களை அனைவரையும் அருள் வழியில் அழைத்துச் செல்கின்றேன்.
1.சிறிது பேராவது நீங்கள் தயாராகி விட்டால்
2.கோடிக்கணக்கான மக்களை நல் வழியில் நீங்கள் வளர்க்க முடியும்.
 
அருள் உணர்வு கொண்டு நீங்கள் அதைப் பெற வேண்டும் என்பதற்குத் தான் ஞாபகப்படுத்துகின்றேன். காரணம் குறுகிய காலமே நாம் வாழ்கின்றோம் இந்த உடலுக்குப் பின் நாம் எந்த நிலை அடையப் போகின்றோம்…? என்பதைச் சற்று சிந்திக்க வேண்டும்.
 
துருவ நட்சத்திரத்தின் பேரருளை நமக்குள் பெருக்கிப் பழக வேண்டும். அந்த நிலை அனைவரும் பெற வேண்டும்.
 
செல்வம் எவ்வளவு தேடி வைத்திருந்தாலும் அதைத் தட்டிப் பறிக்கக் கூடிய காலம் வந்துவிட்டது. கடைசியில் தேடிய சொத்தெல்லாம் போய்விட்டதே என்று வேதனையைத் தான் வளர்க்க முடியும்.
 
இதிலிருந்தெல்லாம் மீள வேண்டும் பேரருளை எப்படியும் நாம் பெற வேண்டும். நீங்கள் அனைவரும் தயாராகி விட்டால் எனக்கு கொஞ்சம் சிரமம் குறைவாக இருக்கும். இல்லையென்றால் நான் இன்னும் சிரமம்தான் பட வேண்டி வரும்.
 
அந்தச் சிரமத்திலிருந்து நான் மீள்வதற்கு
1.ஒவ்வொருவரும் உங்கள் பார்வையில் சர்வ பிணிகளும் போக வேண்டும்
2.உங்கள் பேச்சு மூச்சும் பிறருக்கு நல்ல வழிகாட்டியாக அமைய வேண்டும்.
3.மற்றவர் குடும்பத்திலே சிக்கலை நீக்கக் கூடிய சக்தியாக வளர்ச்சிக்கு வர வேண்டும்.
 
மற்றவர்களால் முடியவில்லை என்கிற பொழுது தியானம் செய்யக்கூடியவர்கள் செயல்படுத்தி உங்கள் பார்வையால் மூச்சால் எல்லா வகைகளிலும் மற்றவருக்கு வழிகாட்டியாக அமைய வேண்டும்.
 
அந்த நிலையத்தான் நாம் ஒவ்வொருவரும் பெற வேண்டும்…!
 
இதில் நான் பெரிது நீ பெரிது…” என்ற நிலை இல்லாதபடி
1.எல்லோரையும் பெரியவராக்க வேண்டும் என்று உணர்வுக்கு வரவேண்டும் அதன்படி நாமும் அந்த உயர் நிலை பெற முடியும்.
2.எல்லோரும் உயர வேண்டும் என்ற எண்ணத்திற்கு வந்துவிட்டால் நாமும் உயர்கின்றோம்.
 
திலே சிறு குறை கூட வராதபடி குரு காட்டி அருள் வழியில் நாம் வளர்ந்து காட்ட வேண்டும். அதைத்தான் நாம் செய்து கொண்டு வருகின்றோம்.
 
பல அற்புதங்களையும் நிகழ்ச்சிகளையும் காட்டத் தொடங்கினால் இந்த ஞானத்தையே கடைசியில் பேச முடியாதபடி அது தடையாகிவிடும்.
 
எமது அருள் உபதேசங்கள் ஒலி நாடாக்களில் வெளி வருகின்றது.
1.கூடுமான வரையிலும் ஒவ்வொருவரும் அதை எழுதுவதற்கு முயற்சி செய்யுங்கள்.
2.இந்த உணர்வின் ஞானம் உங்களுக்குள் வரட்டும்.
3.ணர்வின் தன்மை ஆழமாகப் பதிவாகும்உங்களுக்குள் மெய் ஞானம் வளரும்.
 
காலங்கள் மிகக் குறுகியதாக இருக்கின்றது அதற்குள் நாம் அனைவரும் வளர்த்து தயாராக வேண்டும். அழியாச் செல்வமான ஒளிச் சரீரம் பெறும் ஆற்றலை வளர்த்துக் கொள்ள வேண்டும்.
 
அதற்குத் தான் திரும்பத் திரும்ப உங்களுக்கு ஞாபகப்படுத்துவது.