
கூட்டமைப்பாக இருந்து… ஒவ்வொரு குடும்பத்திற்கும் “நாம் செய்ய வேண்டிய அருள் சேவை…”
அகஸ்திய மாமகரிஷிகளின் அருள் சக்தியும் துருவ மகரிஷிகளின் அருள் சக்தியும்
துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் சப்தரிஷி மண்டலங்களின் பேரருளும் பேரொளியும்
மேகங்களில் படர்ந்து மேகங்கள் அனைத்தும் ஒன்று கூடி நல்ல மழை பெய்து ஏரி குளங்கள்
நிரம்பி தாவர இனங்கள் செழித்து வளர்ந்து ஊரும் உலகமும் உலக மக்களும் நலமும் வளமும்
பெற அருள்வாய் ஈஸ்வரா.
மனிதர்களாக வாழக்கூடிய நாம்…
1.பல கோடித் தாவர இனங்களை உணவாக உட்கொண்டு உடலை வளர்த்த உணர்வுகள்
2.அந்த நினைவின் ஆற்றல் கொண்டு மேலே சொன்ன உணர்வின் ஒலி அலைகளைப்
பரப்பப்படும் போது இது அனைத்திலும் கலந்து
3.எந்தெந்தத் தாவர இனங்களை உணவாக உட்கொண்டோமோ அதற்குள் மகரிஷிகளின் உணர்வைக் கவர்ந்து சர்வ
தீமைகளையும் அகற்ற உதவும்.
தீமைகள் வரப்படும் பொழுது… அது எப்படி
நமக்குள் கலக்கின்றதோ… அந்தத் தீமை எப்படி இயக்குகின்றதோ… இதைப் போன்றே
1.அந்தத் தீமை செய்யும் உணர்வுகளுக்குள் அருள் ஞானிகளின் உணர்வுகளைக் கலக்கப்படும் பொழுது
2.மழை மேகங்களுக்குள் அருள் சக்திகளைப் பரப்பப்படும் போது அந்தத் தீமைகள் அகற்றப்படுகின்றன.
அதே சமயத்தில் ஆங்காங்கு கூட்டுத் தியானங்கள் இருக்கப்படும் பொழுது நாம் செய்ய வேண்டியது என்ன…?
ஒருவர் நோயினால் அவதிப்பட்டுக் கொண்டிருந்தாலும் தியானமிருப்போர் அனைவரும்
ஒன்று சேர்த்து மகரிஷிகளின் அருள் உணர்வுகள் அவர் உடலில் படர்ந்து… அவரை அறியாது
தீயவினைகளால் விளைந்த நோய்கள் நீங்கி… அவர்
உடல் நலம் பெற்று மகரிஷிகளின் அருள் சக்தி பெற்று மகிழ்ந்து வாழ
வேண்டும் என்று “பல முறை சொல்லுங்கள்…”
1.இந்த உணர்வின் ஒலிகளைப் பரப்பப்படும்
பொழுது இந்த உணர்வு எல்லோருடைய செவிகளிலும் பட்டு…
2.இந்த உணர்வை அவரும் நுகரப்படும் பொழுது
அவர் நோயின் கடுமை குறைவதைப் பார்க்கலாம்.
இதை மீண்டும் மீண்டும் அவர் எண்ணத் தொடங்கினால்… அனைவரும் சேர்ந்து அவர் உடல் நலம் பெற செய்ய வெளிப்படுத்திய அருள் உணர்வுகள் அவருக்குள் ஓங்கி வளர்ந்து அந்த கடுமையான நோயைத் தணிக்க இது உதவும்.
இதையெல்லாம் நாம் அவசியம் செயல்படுத்த வேண்டும்.
தியானம் செய்து கொண்டிருந்தாலும்… ஒவ்வொரு குடும்பத்திலும் எத்தனையோ
சாப அலைகள் உண்டு. நாம் தியானத்திற்குச் செல்லும்
போது
1.அங்குள்ள சாப அலைகள் நீங்கி தீய வினைகள் நீங்கி அந்தக் குடும்பம் நலம் பெற வேண்டும் என்ற உணர்வைப்
பதிவாக்க வேண்டும்.
2.நாம் இப்படி வலுவான நிலைகள் கொண்டு பதிவாக்கும் இந்த உணர்வலைகளை வீடுகளில் உள்ள காந்தப்புலனறிவு கவர்ந்து கொள்ளும்.
3.இந்த உணர்வுகள் அந்த வீட்டில்
உள்ளோருக்கு மீண்டும் நினைவூட்ட உதவும்….
4.தீமை அகற்றும் எண்ணங்கள் அங்கே தோன்றுகின்றது.
அ\ந்தக் குடும்பத்தைச் சார்ந்தவர்களும்
இந்த உணர்வுகளைப் பதிவாக்கப்படும் பொழுது “ஒவ்வொரு நிமிடத்திலும் நன்மை பயக்கும் சக்தியாக மாறுகின்றது…”
ஒரு குடும்பத்தில் அதிகமான சிரமம் என்று கேள்விப்பட்டால் தியானம்
செய்யும் இருபது பேர் அங்கே சென்று அமர்ந்து தியானித்து மகரிஷிகளின் உணர்வுகளைப் பாய்ச்ச வேண்டும்.
அப்போது அவர்கள் தொழில் வளம் பெறவும் கடும் பிணிகளில் இருந்து மீளவும் அருள் ஞானம் பெருகவும் ஞானத்தின் வழியில் அவர்கள் வழி நடக்கவும் இது உதவும்.
அந்த வலிமையான உணர்வுகளை நாம் அவர்களுக்குக் கிடைக்கச் செய்ய வேண்டும். “குடும்பம்
நலம் பெற வேண்டும்…” என்ற உணர்வின் ஏக்கம் கொண்டு ஆங்காங்கு கூட்டமைப்பாகச் செயல்படுத்துங்கள்… நன்மை பயக்கும்.
ஒவ்வொரு குடும்பத்திலும் இதைச் செயல்படுத்தி… அவர்கள் மகிழ்ந்து வாழ்வதைக் கண்டு “மகிழ்ச்சியான உணர்வுகளை நமக்குள் வளர்க்க வேண்டும்…”
1.இதை அனைவரும் செயல்படுத்துங்கள்
2.அருள் ஞானம் பெறுங்கள்… அருள் மகரிஷிகளின் அருள் வட்டத்தில் இணையுங்கள்.
3.அருள் வழிகளிலே இந்த வாழ்க்கையை
வழிநடத்துங்கள்.
4.அருள் ஞானிகளுடன் ஒன்றி வாழ்வோம்
5.அருள் ஞான உணர்வுடன் ஒன்றி வாழ்ந்து அந்த மகரிஷிகள்
சென்ற அந்த இடத்திற்கு நாமும் செல்வோம்.
அனைவரும் பிறவி இல்லா நிலைகள் அடைய வேண்டும் என்று
பிரார்த்திக்கின்றேன்.