ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

November 7, 2012

சாமி உபதேசங்கள் புத்தக வடிவில் - FLIP BOOK

கீழே கொடுக்கப்பட்ட LINK ஐ தொடர்பு கொண்டால், வரும் "EXE FILE"ஐ DOWNLOAD செய்து, ZOOM செய்து, எளிதாக புத்தக வடிவில் படிக்க முடியும். 

Pl click the following link and download the appropriate "exe" file. Then start playing that. You can view it as book reader. If you slightly zoom that, the logo will disappear. You can read pleasantly.

1. உங்கள் உயிரை நீங்கள் நம்புங்கள்
https://www.box.com/s/rjybm6mxeezbkfafmvof

1A. உங்கள் உயிரை நீங்கள் நம்புங்கள் (with saamigal song music)

2. மனமே இனியாகிலும் மயங்காதே
3. சப்தரிஷி மண்டலமும் ஒளிச்சரீரமும்
https://www.box.com/s/fcypmsz1iiwx6labyl6b

4. அகத்தியம் 

5. ஞான காண்டம் 
https://www.box.com/s/1kl69jpytegbc6f8vcm9

6. ஞானகுரு வெளிப்படுத்திய பேருண்மைகள் 

7. ஈஸ்வராய குருதேவர் -  ஞானகுருவைக் காட்டிற்குள் அழைத்துச் 
சென்று உணர்த்திய அனுபவங்கள்
https://www.box.com/s/32xnu3ad11fjamjq2ujc

8. துன்பத்தை நீக்கும் அருள் ஞான முத்துக்கள்
https://www.box.com/s/5d35it9un9ht6em2u0ia

9. சற்குருவின் அருள்ஞானம்
https://www.box.com/s/hvc2pjuu7cq0b2y6sosq

10. ஞானகுருவின் அருளுரைகள்
https://www.box.com/s/sprua82g9guyqwdqv2ba

11. தன்னைத்தான் அறிதல்
https://www.box.com/s/ze9dqi1a809c0bz13yca

12. தியான பயிற்சியும் பலன்களும்
https://www.box.com/s/xup5rk1wre1jfbrftwtk

13. அகஸ்தியன் வழியில் விண் செல்லும் ஆற்றல்
https://www.box.com/s/dm5vrssxb6a46ezxqbwx

14. குருவின்றி ஒரு அணுவும் அசையாது
https://www.box.com/s/s2lykshwfxsddrmauawo

15. துருவ தியானம்
https://www.box.com/s/7hub08oivfs0shq04y0z

16.தெளிந்து வாழ்ந்திட குருவின் அருள்ஞானம்

17.நாராயணனின் அவதாரம் பத்து

18.பிருகு மகரிஷி

19.பேரண்டமும் பெருவீடும்
https://www.box.com/s/yvq2b1y1fg9kcbhyx049

20.பேரின்பத்தை தரும் பேரொளி

21.மகா சிவன் இராத்திரி
https://www.box.com/s/ov35ykhc4nnkcr298wvw

22.தியானம் - படங்களுடன்
https://www.box.com/s/ev7ggrxppoh2hjez7h03

23.மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் 1

24.தியானத்தைக் கடைப்பிடிப்பவர்களுக்கு ஞானகுருவின் வேண்டுகோள்

25.துருவ நட்சத்திரத்தின் பேரொளியை நம் ஆன்மாவிற்குள் கொண்டு வரும் முறை
                               https://app.box.com/s/h22awhvxo0nnq5vb9u9s

26.ஞானகுருவின் மருத்துவக் குறிப்புகள்

27. Meditating method and it's sequences (ENGLISH)

28. கணவன் மனைவி மகிழ்ந்து வாழ ஞானகுரு காட்டும் வழி முறை

November 1, 2012

தியானவழி அன்பர்களின் அனுபவம்


1. “சாமிகள் உபதேசத்தைஎழுத்து வடிவில் எழுதும் பொழுது, மதுரை அன்பர் ஒருவருக்கு ஏற்பட்ட அனுபவம்
(23.10.2012)
நான் பல வருடங்களுக்கு முன்பே, என்னுடைய சிறிய வயதில் சாமிகளைச் சந்தித்திருக்கின்றேன். இப்பொழுது, சுமார் பத்து மாதங்களாகத் தான், தியானத்தை ஓரே சீராகக் கடைப்பிடித்து வருகின்றேன்.

நம் சாமிகளின் உபதேசத்தை, தினசரி, அடிக்கடி கேட்டுக் கொண்டே இருப்பேன். அதில் சாமிகள் முக்கியமாகச் சொல்லும்பொழுது, அதை அப்படியே, உடனடியாக ஒரு நோட்டில் எழுதிவிடுவேன்.

சாமிகள் உபதேசங்களில், ஒரு இரண்டு மணி நேர உபதேசத்தை அப்படியே எழுத்து வடிவில் எழுதசிறிது நாட்களுக்கு முன்ஒரு வாய்ப்பு கிடைத்தது.

தொடர்ச்சியாக, அதை எழுதிக் கொண்டிருக்கும் பொழுதே, உற்சாகம் ஊட்டக்கூடிய, பல பேரானந்தமான உணர்வுகள் என்னையறியாமலேயே, எனக்குள் வந்து கொண்டே இருந்தது.

ஆரம்பத்தில் சாமிகள் பழனியில் இருக்கும் பொழுது, பல பேருண்மையின் உணர்வுகளை, குருதேவர் அனுபவபூர்வமாக சாமிகளுக்கு (ஐவர் மலையில்) உணர்த்தியுள்ளார். அந்த அனுபவங்களை, ஒரு ஒன்றரை மணி நேரம் சிதம்பரத்தில் பேசியுள்ளார். அதை நான் பல முறை கேட்டுவிட்டேன். மேலும், நான் எழுதிக் கொண்டிருந்தது, சாமிகள் சிதம்பரத்தில் வைத்துக் கொடுத்த, அந்த உபதேசங்களைத்தான்.

ஆயுத பூஜை அன்று, (23.10.2012) தியான வழி அன்பர்களுடன் நம் ஞானகுரு அவர்கள்சற்குருவிடம் பெற்ற மற்ற அனுபவங்களையும் பகிர்ந்து கொள்ளும் சந்தர்ப்பம் ஏற்பட்டது. சுமார்எட்டு மணி நேரம் பேசி இருப்போம். அன்று இரவு வீட்டிலும் குடும்பத்தினருடன் ஞானகுருவின் உணர்வுகளைப் பற்றியே பேசினோம். இரவு தூங்கச் செல்லும் பொழுதும்குருவின் உபதேசம் கேட்பது எனக்கு வழக்கம்.

இந்த உணர்வுடனே இரவு தூங்கிக் கொண்டிருக்கும் பொழுதுஎங்கள் வீட்டில் உள்ள தபோவன சாமிகள் உண்டியலில் இருந்து, வெண்மை நிறத்தில் ஒளி அலைகள் அருவி போன்றுவந்து கொண்டே இருந்தது,

அதில்ஒரு புள்ளி அளவு இருக்கும் ஒளிஎன்னை நோக்கி வந்தது. ஆனால்நான் அதை கவனிக்காமல் மற்ற வேலையில் இருந்தேன். வீட்டில் இருக்கும் விருந்தாளிகளை கவனிக்கும் நிலையாக உபசரிக்கும் பொழுது, ஒரு பாத்திரத்தில் இருந்தும், அருவி போன்று அதே வெண்மையான ஒளி வந்தது. அது மேலும் கீழே பட்டு பந்து போல் எம்பி, என்னை நோக்கி வந்தது

அப்பொழுதுதான், நான் அதை உற்றுப் பார்த்தேன். உற்று  கவனிக்கும் போது, ஈஸ்வராய குருதேவர் காட்சியாகத் தெரிந்தார்.  ஒரு நோட்டில், அவர் ஏதோ  ஹிந்தி, மற்றும் என்னவென்றே தெரியாத பல மொழிகளிலும் எழுதி இருந்தார்.

என்னை அழைத்து,  “நீ கேட்பது கிடைக்கும்இதை அப்படியே எழுது” என்று சொல்லி என் கையைப்பிடித்து எழுதுகின்றார்.

அப்படி அவர் என்னிடம் சொன்னவுடன்எனக்கு மிகவும் சந்தோசமாக இருந்தது.  என்  அம்மாவிடம் சொல்லப்  போனேன்அதற்கு குருநாதர், என் கையை இன்னும் இறுக்கமாகப்  பிடித்து, “சொல்லக் கூடாது என்று சொல்லி இருக்கின்றேன்” என்றார்.

அன்று இரவு முழுவதுமே, வார்த்தையால் சொல்ல முடியாத அளவிற்கு மகிழ்ச்சியான உணர்வுகளாகவே இருந்தது. தூங்காமல் தூங்குவது போன்று இருந்தது. அதிகாலையில் எழுந்திருக்கும் பொழுதும், அந்த மகிழ்ச்சி ஊட்டும் உணர்வாகவே இருந்தது.


2. அமெரிக்காவில் (நியூ ஜெர்ஸி – HUDSON நதி அருகில்) உள்ள நம் தியானவழி அன்பரின் அனுபவம்
இயற்கையுடன் இயற்கையான ஒரு அனுபவம்
“உங்களை நீங்கள் நம்புங்கள், உங்களைக் காக்க உங்கள் எண்ணம் உதவட்டும்” என்ற நம் ஞானகுருவின் வாக்கின்படி, நாம் எண்ணும் எண்ணம் நம்மையும், நம்மைச் சார்ந்தோரையும், காக்கும் சந்தர்ப்பத்தை உருவாக்கியது “Sandy” புயல்.

அதாவது, துருவ நட்சத்திரத்தின் பேரருள் துணை கொண்டு, பிரபஞ்சத்திலிருந்து வரும் எத்தகைய நஞ்சினையும் வெல்லக் கூடிய ஆற்றல், இந்த மனிதனுக்குள் உண்டு, என்று ஞானகுரு நமக்களித்த பதிவினை நினைவு கூர்ந்தேன்.
          
29.10.2012 அன்று, காலையிலிருந்து ஒவ்வொரு நிமிடமும் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நான் பெற வேண்டும், என் உடல் முழுவதும் படர வேண்டும், என் ஜீவான்மா ஜீவ அணுக்கள் அனைத்தும் பெற்று, நஞ்சினை வென்றிடும் மகரிஷிகளின் உணர்வுகள், பாதுகாப்புக் கவசமாக அமைந்திட ஆத்ம சுத்தி செய்தேன்.

சாயங்காலம், புயலின் வேகம் குறைய வேண்டும் என்று தியானிக்க, உணர்வு தோன்றியது. நல்லுணர்வை வெளிப்படுத்தும், அனவரது உணர்வையும், கூட்டு தியான உணர்வாக எண்ணி, குருவின் அருளால், துருவ நட்சத்திரத்திலிருந்து வெளிப்படும் ஆற்றல் மிக்க சக்தி, இந்தக் காற்று மண்டலம் முழுவதும் படர்ந்து, இங்கு வாழும் மக்கள் அனைவரும், எல்லா நலமும், வளமும் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று, உணர்வின் ஒளியை எழுப்பினேன்.

மகரிஷிகளின் அருள் சக்தி நாம் பெறுவோம்; என்றும் பிறவா நிலை என்னும் அழியா ஒளி நிலை பெற தியானிப்போம்; துருவ நட்சத்தின் பேரருள் பேரொளி, உலக மக்கள் அனைவரும் பெற தவமிருப்போம். இந்த எண்ணத்துடனே உறங்கிவிட்டேன் (இரவு 06.45 முதல் 08.40 வரை).

அன்று இரவு 10 மணி அளவில், புயல் கடந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது. இனி மறு நாள் காலை, கடல் மட்டம் மட்டும் உயரும், என்று வானிலை அறிக்கை தெரிவிக்க, எங்கள் கட்டடத்தில் உள்ள அனைவரும் சிறிதளவு கூட பாதிப்பில்லாமல், பாதுகாப்புடன் இருக்கும் செய்தியை அறிந்தோம்.

இந்த சந்தர்ப்பம், ஒரு தவ வலிமையை உணரச் செய்தது.

3. தியானவழி அன்பர் ஒருவரின் அனுபவம் -- திருமங்கலம்
பத்தாவது நிலையை அடைய, எனக்கு உரு தந்த எனது தாய் தந்தையையும், எனது உயிர் உயர்வடைய, மெய் உணர்வை ஊட்டி வளர்த்த நமது ஞானகுருவையும், மாமகரிஷி ஈஸ்வராய குருதேவரையும், எனக்குள் ஒளியாக நின்று உணர்வின் தன்மையை அறியச் செய்யும், உணரச் செய்யும், இயக்கச் சக்தியாக உள் நின்று இயங்கிக் கொண்டிருக்கும் எனது உயிரான ஈசனையும் வணங்கி, சமீபத்தில் குருவின் அருளால் எனக்குள் பெற்ற அனுபவத்தினை, நாளைய மகரிஷிகளான நம் அன்பர்களிடம் பகிர்ந்து கொள்ள விரும்புகின்றேன்.

ஆதிசக்தியான பேரண்டத்தில் ஒவ்வொன்றும், ஒன்றின் தொடர் கொண்டுதான் இயங்கிக் கொண்டிருக்கின்றது, வாழ்ந்து கொண்டிருக்கின்றது, வளர்ந்து கொண்டிருக்கின்றது. அதன் அடிப்படையில், அகஸ்தியன் விண்ணிலிருந்து வரும் ஆற்றலைத் தனக்குள் நுகர்ந்தறிந்து, உணர்வின் தன்மையை ஒளியாக மாற்றி, துருவனாகி, துருவ மகரிஷியாகி, துருவ நட்சத்திரமாக வாழ்ந்து வளர்ந்து கொண்டுள்ளான்.

அந்த துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்தில், இந்தப் பூமியில், பரிணாம வளர்ச்சியில் மனிதனாகத் தோன்றி, ஆறாவது அறிவின் தன்மை கொண்டு, ஏழாவது அறிவாக, தனக்குள் ஒளியின் தன்மையை சிருஷ்டித்து, உடலை விட்டு அகன்று, ஒளியின் சரீரமாக, முப்பத்து முக்கோடி தேவர்கள் என்ற நிலையில், சப்தரிஷி மண்டலங்களாக இன்றும் வாழ்ந்தும் வளர்ந்தும் கொண்டுள்ளார்கள்.

அந்தச் சப்தரிஷி மண்டலங்களிலிருந்தோ, அல்லது துருவ நட்சத்திரத்திலிருந்தோ வெளிவரும் உணர்வின் ஒளி அலைகளை, எந்த ஒரு மனிதன் சுவாசிக்கின்றானோ, அவன், உணர்வின் தன்மையை ஒளியாக மாற்றிடும் அருள் சக்தியைப் பெற்று, விண் செல்லும் தகுதியைப் பெறுகின்றான்.

அந்தத் தகுதியைப் பெறுவதற்குதான், நமது ஞானகுரு பல அரிய சந்தர்ப்பங்களை ஏற்படுத்தி, உபதேசங்கள் மற்றும் தியானங்கள் மூலமாக, அருள்ஞான வித்துக்களை நமக்குள் பதியச் செய்துள்ளார்.

கடந்த 1988ஆம் வருடம், நமது ஞானகுருவிடம், “சாமி எனக்குள் சக்கரம் போன்று ஒளிப் பிரவாகம் ஒன்று, சுழன்று கொண்டுள்ளது என்றும், அது அகத்திலும், புறத்திலும் தெரிந்து கொண்டேயுள்ளது. அதற்கு விளக்கம் வேண்டும்” என்று வேண்டினேன்.

அதற்கு அவர், “இந்த ஒளியின் நிலைகள் சப்தரிஷி மண்டலத்திலிருந்து வந்த ஒளிகள் என்றும், அதனை நமக்குள் சிரத்தையுடன் வளர்த்திடல் வேண்டும்” என்று என்னிடம் கூறினார்.

அதற்குப் பின், குரு காட்டிய அருள்வழியில் பல வருடங்களாக, பல சந்தர்ப்பங்களில், சப்தரிஷி மண்டலங்களை விண்ணில் பார்க்க நேரிடும் போதெல்லாம், அது ஒவ்வொன்றையும் உற்றுப் பார்த்து, அதிலிருந்து வரும் அருள் ஒளியைப் பெற வேண்டும் என்றும், மகரிஷிகளின் அருள் உணர்வுகள் எனக்குள் பரிபூரணமாகப் பெற்று, மகரிஷிகள் நம்மை ஆட்கொள்ள வேண்டும் என்றும் தியானித்து வருகின்றேன்.

மேலும், இவ்வாறு பெறும் இந்த உயர்ந்த சக்திகள் அனைத்தும், அனைவரும் பெறவேண்டும் என்றும் குரு காட்டிய அருள் வழியில் தியானித்து வருகின்றேன்.

ஓரிரு மாதங்களுக்கு முன்பு, ஒரு நாள் தியானத்தில், நான் இராமலிங்கம் என்ற நிலையில், என் எண்ணங்கள் அனைத்தையும் உயிருடன் ஒன்றாகக் குவித்து, உணர்வால் சப்தரிஷி மண்டலங்களுக்குள் ஊடுருவி, மகரிஷிகளின் பேரருள் பேரொளி பெறவேண்டும் என்ற அவாவினாலும், மகரிஷிகள் என்னை ஆட்கொள்ள வேண்டும் என்ற பேரவாவினாலும், சாமி, சற்குருவை வணங்கித் தியானிக்கும் பொழுது, வான்மீகி மகரிஷியின் உணர்வின் ஒளி அலைகள் எனக்குள் ஊடுருவியது. அப்பொழுது அந்த சமயத்தில், எண்ணங்களாக உணர்ச்சிகளாக உணர்ந்ததை பகிர்ந்து கொள்ள விரும்புகின்றேன்.

நான் சாமி, சற்குருவிடம் ஆசீர்வாதம் பெற்று, வான்மீகி மகரிஷியின் அருளைப் பின்பற்றி அணுகியபோது, அவர் “என்ன வேண்டும்?” என்று வினவினார்.

அப்பொழுது, “2014க்குள் மகரிஷிகள் உலகமாக மாறப் போகிறது” என்று நமது குருநாதர் உபதேசத்தில் வெளிப்படுத்தியதை நினைவில் கொண்டு, அவரிடம் நான் “மகரிஷிகள் உலகம் என்றால் என்ன? எவ்வாறு மாறப் போகிறது? என்று அறிய விரும்புகிறேன் சாமி” என்று வேண்டினேன்.

அதற்கு வான்மீகி மகரிஷி, “மகரிஷிகள் உலகம்” என்றால், குரு காட்டிய அருள் வழியைக் கடைப்பிடிக்கும் ஒவ்வொருவரின் உயிரையும், உடலையும், ஒவ்வொரு மகரிஷியும் பரிபூரணமாக ஆட்கொண்டு, அந்தந்த மகரிஷிகள், தன் அருள் உணர்வுகளை அவர்களின்பால் பாய்ச்சி, மகரிஷிகளின் செயலாக்கங்கள் அனைத்தும் மிக விரைவில் செயல்படப் போகின்றன என்றும், அதாவது உனது குருநாதர் உணர்த்தியது போல, 2014க்குள் இது நடைபெறப் போகின்றது என்று உணர்த்தி அருளினார்.

மேலும், ஒவ்வோரு மகரிஷியின் பெயரையும், நமது அன்பர்களின் பெயரையும் தொடர்புபடுத்தி, மகரிஷிகளின் உணர்வின் ஒளி அலைகளின் அலைவரிசைத் தொடர் இயங்க உள்ளது, என்பதையும் உணர்த்தியருளினார்.

மேற்கூறிவைகள் அனைத்தும், குருவின் அருளாசியால் எனக்குள் பெற்று, உணர்ச்சியாக “சீதாராமா” என்ற நிலையில், எண்ணங்களாக, உணர்வுகளாகத் தோன்றியதைத்தான், இதில் வெளிப்படுத்தியுள்ளேன்.

ஆகவே, நமது குருநாதர், சற்குரு மற்றும் எல்லா மகரிஷிகளின் ஆசைப்படி, அந்த அருள்வழியில் நமது எண்ணங்கள், சொல், செயல்களை, மெய்ஞானிகளின் உணர்வு கொண்டு பரிபக்குவமாக்குவோம்.

ஒவ்வொரு நொடிப் பொழுதும், குரு உபதேசித்ததை நினைவாக்கி, கூட்டுத் தியானத்தின் மூலம், துருவ நட்சத்திரத்திலிருந்து வரும் பேரருள் பேரொளியை, நமது உயிருக்குள் பெருக்க, பெருக்க, அகஸ்தியன் அவன் உடலில் விளைந்த மெய் உணர்வும், அவன் கண்ட பேரண்டத்தின் உணர்வும், சர்வ நஞ்சினையும் ஒளியாக மாற்றிடும், அருள் உணர்வுகளைப் பெறும் தகுதியைப் பெறவும், மாமகரிஷிகளின் அருள் உணர்வுகள் நமக்குள் ஆட்கொள்ள வேண்டும் என்றும், இந்த உலகம் மகரிஷிகளின் உலகமாக, 2014ல் உருவாக வேண்டும் என்றும் நாம் அனைவரும் தவமிருப்போம்.

நம் குரு சென்றடைந்த எல்லையை, நாம் அனைவரும் சென்று அடைய வேண்டும் என்று, எல்லா மகரிஷிகளையும் எண்ணிப் பிரார்த்திக்கின்றேன்.

ஓம் ஈஸ்வரா குருதேவா.


துன்பத்தை நீக்கி, மகிழ்ச்சியை விளைய வைக்கும் வழி

1. நமக்கு எப்படி துன்பம் வந்து சேர்கின்றது?
செம்பும் வெள்ளியும் கலந்து, ஒரு நகையைப் பற்ற வைக்கின்றோம். நெருப்பிலே காட்டும்போது, தங்கம் இளகுவதற்கு நேரமாகும். ஆனால்,
செம்பையும் வெள்ளியையும் கலந்து,
கொஞ்சம் பொடியாக வைத்தபின்,
அது சீக்கிரம் உருகிவிடுகின்றது. அதே சமயம்,
தங்கத்துடன் ஒட்டிக்கொள்கின்றது.

இதைப் போலத்தான், ஒருவர் துன்பமான நிலையைச் சொல்லுபோது, அது உடனடியாக நமக்குள் இயக்கச் சக்தியாகி, அந்த செம்பான நிலைகள் உருகுவது போல, நமக்குள் அவருடைய கஷ்டமான நிலைகள் சீக்கிரம் வந்து, நம்மிடம் ஒட்டிக் கொள்கின்றது.

தங்க நகை செய்யும்போது, ஒட்டவைத்துத்தான் ஆக வேண்டியிருக்கிறது. அப்பொழுதுதான் நகை ஆகின்றது. இதைப்போல, ஒரு மனிதனுக்குத் துன்பம் ஏற்படும்போது, அதை மற்றவர்களிடம் சொல்லும் பொழுது, நாம் கேட்டுணர்ந்துதான் ஆக வேண்டியதிருக்கிறது.

அவருக்கு வாழ்க்கையின் நிலைகளில், நாம் நன்மை செய்தால்தான், மனிதனின் நிலையும் ஆகும். நன்மையினுடைய நிலைகளை நாம் செய்தாலும், இந்த வாழ்க்கையில்,
இன்று ஒருவருக்கு நாம் உதவி செய்தால்தான்,
நாளைக்கு நமக்கு ஒருவர் உதவி செய்வார்.
இன்று உதவி இல்லை என்று சொன்னால்,
அவர் நாளைக்கு, நமக்கு எந்த உதவியும் செய்ய மாட்டார்.

அவருடைய துன்பத்தை, நாம் கேட்டறியவில்லை என்றால், நம்முடைய துன்பத்தையும் அவர் கேட்டறியமாட்டார். கேட்டறிந்தாலும் எப்படி நகை செய்யும்போது, செம்பும், வெள்ளியும் வைத்து நாம் பற்றவைக்கின்றோமோ, அதைப்போல வாழ்க்கையில் இந்தக் குறைகள் நிச்சயம் வரத்தான் செய்யும்.

ஆனால், இந்த வாழ்க்கை என்ற நிலைகளில் நாம் ஓட்டினாலும், அடுத்த நகை செய்யும்போது, தங்கத்திற்குள் திரவகத்தை ஊற்றி, அதைச் சுத்தப்படுத்திவிட்டு, அடுத்த நகையைச் செய்கின்றனர்.

அதைப் போல, ஒரு நண்பன் அவருடைய கஷ்டத்தைச் சொல்லும்போது, நாம் கேட்டறியும் போது, அதைக் கேட்டுணர்ந்து அவருக்கு உதவி செய்து விடுகின்றோம்.

தங்கத்துடன், செம்பும் வெள்ளியும் சேர்ந்து கொண்டபின், எல்லாமே ஒன்றாகிவிடுகிறது. அடிக்கடி இதே நகையை, அழித்து அழித்துச் செய்யும்போது, செம்பும் வெள்ளியும் அடிக்கடி சேர்ந்தால் என்னாகும்? அந்த செம்பின் தன்மை கூடி, அந்த தங்கத்தின் தன்மை குறைந்துவிடும்.

இதைப்போல, நாம் அடிக்கடி கவலையையும், சஞ்சலத்தையும் கேட்டுக் கொண்டேயிருந்தால், நமக்குள் நல்ல குணம் எல்லாம் குறைந்து, நமக்குள் அது நோயாக விளைந்து, நமக்குள் நல்ல குணமெல்லாம் கெட்டுவிடுகின்றது.

அப்படி கெடுவதோடு மட்டுமல்லாதபடி, நல்ல உடலும் கெட்டுவிடுகின்றது. நமது நல்ல சொல்லும், கெட்டுவிடுகின்றது. நமது சொல்லும்கூட, நமக்கு வெறுப்பாகத் தோன்றும்.

கஷ்டமாக இருப்பவர்கள் பிறரிடம் போய்ச் சொல்லும்போது, அந்த வேதனை கொண்டே சொல்வார்கள். எப்பொழுது பார்த்தாலும் நச்சு, நச்சென்றே சொல்லிக் கொண்டிருப்பார்கள். அவர்கள் சொல்ல வந்தாலே, நாம் ஓடுவோம். ஆனால், அந்த சங்கடமான உணர்வுகள் நோயாகவும் மாறிவிடுகின்றது.

நாம் தவறு செய்யவில்லை கேட்டுணர்கிறோம். ஒவ்வொரு நிமிடத்திலும், பிறர் செய்யும் தவறுகளைப் பார்க்கின்றோம். அவருடைய கஷ்டங்களைக் கேட்கின்றோம். அதைப் பார்க்கின்றோம்.

இன்று பத்திரிக்கை வாயிலாகப் பார்க்கப்படும் பொழுது, அடிக்கடி நம்மையறியாமலேயே, வேதனையும், துயரமும், பயமும், உங்களுக்குள் வந்து, சேர்ந்து கொண்டேதான் இருக்கின்றது. இதை எப்படிப் போக்கிக் கொள்வது? ஏதாவது வழி இருக்கிறதா?
2. துன்பத்தை நீக்க ஞானகுரு கொடுக்கும் கடுமையான ஆயுதம் ஆத்ம சுத்தி
நாம் கையிலே ஆயுதத்தை வைத்துக்கொண்டு, ‘’புலி வருது, புலி வருது’’ என்று சொன்னால்,
துப்பாக்கி எதற்கு வைத்திருக்கிறோம்?
‘’துப்பாக்கியைக் கையில் கொடுத்திருக்கிறோம்’’,
சுடுவதற்கும் சொல்லிக் கொடுக்கிறோம்.’’
‘’ஐய்யய்யோ!  புலி வருது, புலி வருது!’’  என்று, துப்பாக்கியை வைத்துக் கொண்டு, சுடாமல் இருந்தால் என்ன பண்ணும்? அது நம்மைத் தாக்கிவிடும்.

இதைப் போலத்தான், ஆத்மசுத்தி என்ற ஆயுதத்தை உங்களுக்குக் கொடுத்துள்ளேன். சந்தர்ப்பத்தில் நீங்கள் பிறருடைய கஷ்டமான நிலைகளைக் கேட்டு அறியத்தான் வேண்டும், ‘’நீங்கள் அவர்களுக்கு உதவி செய்துதான் ஆக வேண்டும்’’.

ஆக உதவி செய்தாலும், அவர்கள் சொன்ன துன்பமான உணர்வுகள், உங்களுக்குள் ஆட்டிப்படைக்காதபடி ‘’ஆத்மசுத்தி’’ என்ற இந்த ஆயுதத்தை எடுத்து ‘’ஈஸ்வரா’’ என்று புருவ மத்தியில் உள்ள உங்கள் உயிரை வேண்டி, அந்த துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும், நாங்கள் பெற வேண்டும் ஈஸ்வரா’’ என்று ஏங்கி தியானிக்க வேண்டும்.

‘’அந்த துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும், ங்கள் இரத்த நாளங்களில் கலந்து, உடல் முழுவதும் படர்ந்து, இரத்தங்களில் உள்ள ஜீவான்மா, ஜீவ அணுக்கள் அனைத்தும் பெற வேண்டும்’’ என்ற ஏக்க உணர்வுடன், கண் திறந்து ஒரு நிமிடமும், கண்ணை மூடி ஒரு நிமிடமும் நமக்குள் எடுத்துக் கொள்ள வேண்டும்.

அப்படி எடுத்துக் கொண்டபின், கண்ணைத் திறந்து, துன்பப்பட்டவர்களிடம், துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நீங்கள் பெறுவீர்கள், துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியால், உங்கள் துன்பங்கள் நீங்கும், நீங்கள் நலம் பெறுவீர்கள்’’ என்று சொல்லிவிட்டு, அந்தப் பொருளைக் கொடுத்துப் பாருங்கள். அவர்களது கஷ்டம், உங்களுக்குள் வராமல் தடுக்க முடிகின்றது,

நாம் நகை வாங்கிபின், அடுத்த நகை செய்யும்போது, அதில் உள்ள வெள்ளியையும், செம்பையும் எப்படிச் சுத்தப்படுத்திக் கொள்கிறோமோ, அதே போல அடுத்த நிமிடமே, கேட்டறிந்த பிறருடைய கஷ்டத்தைச் சுத்தப்படுத்திக் கொண்டு, நமது மனதைச் சுத்தப்படுத்திக் கொள்ள வேண்டும். இதுதான் ‘’தியானம்’’ என்பது.
     
நமக்குள் தீயது சேராது தடுக்கும், இந்த ஆற்றல் மிக்க சக்தியின் துணை கொண்டு, நமக்குள் தியானமிருக்க வேண்டும்.
‘’தியானம்’’ என்பது எது?  
நமக்குள் கெட்டதைச் சேரவிடாது,
வைராக்கியமான நிலைகள் பெறவேண்டும்.
இதுதான் தியானம் என்பது.
     
பக்தியில் என்ன செய்கின்றோம்? நல்லதை நினைத்துக் கொண்டிருக்க வேண்டும் என்பார்கள், ஆனால், தியானம் என்பது, நமக்குள் சேர்த்துக் கொள்ளும் திறனை வளர்த்துக்கொள்வது.
     
பக்தி என்பது நல்லதை நினைப்பது.
தியானம் என்பது, உயர்ந்த ஞானிகளின் சக்திகொண்டு, நமக்குள் நல்லதைக் காக்கச் செய்வது.  இந்த சக்தி இல்லையென்றால், செயல்படுத்தமுடியாது.

நமக்கு முன்னால் சுழன்று கொண்டிருக்கும், அந்த ஞானிகளின் அருள் சக்தியை, இந்த ‘’ஆத்ம சுத்தி’’ என்ற நிலைகளில் வலு கொண்டு உங்களுக்குள் பெறச் செய்து, வாக்கின் நிலையாக,  ஆத்ம சுத்தியை கடும் ஆயுதமாக, யாம் உங்களுக்குக் கொடுக்கின்றோம்.


 3. குரு வழியில் மகிழ்ச்சியை விளைய வைக்கும் முறை  
அதற்குத்தான், அந்த ஞானிகள் சொன்ன அந்த உண்மையின் சக்தியை, உங்களுக்குள் இந்நேரம் வரையிலும் யாம் உபதேசித்ததுஇந்தக் கூட்டுத் தியானத்தில், எல்லோருடைய அருள் வாக்கும், யாம் மட்டுமல்ல, உங்கள் அனைவருடைய அருள் வாக்கும் சேர்க்கப்படும் பொழுதுதான், அந்த வலு கூடுகின்றது, என்று நமது குருநாதர் சொன்னார்.

உன்னிடம் எவ்வளவு பெரிய சக்தி கொடுத்தாலும், ஒரு விதையைக் கொண்டு போய்ப்போட்டு, அந்த விதை பல விதைகளாக விளைந்தால் தான், சாப்பாட்டிற்கு உதவும். இல்லையென்றால், ஒரு விதை ஒன்றுக்குமே உதவாதுடா என்று, நமது குருநாதர் எம்மிடம் சொன்னார்.

ஒரு நெல்லை வைத்துக் கொண்டு, பசியைப் போக்கிவிடுவேன் என்று சொன்னால் முடியுமோ? முடியாது. ஒரு நெல்லை வைத்துச் சாப்பிட முடியாது. அந்த நெல்லை விளைய வைத்து, அது பல நெல்லாக ஆன பின் தான், சாப்பிட முடியும்.

அதே மாதிரிதான், உங்ககளிடம் உள்ள துன்பத்தையெல்லாம் போக்க வைக்கிறோம். 
நன்றாக இருக்கின்றேன்.
நன்றாக இருக்கின்றேன்,
நன்றாக இருக்கின்றேன்.
என்று நீங்கள் சொல்ல வேண்டும். அவ்வாறான சொல் வரவேண்டும்.

உங்கள் பேச்சையும், மூச்சையும் பார்த்து,  மகிழ்ச்சி அடைகின்றவர்களுக்கெல்லாம் நல்லது விளைய வேண்டும்.  அப்படித்தான், நல்லதை விளைய வைக்க முடியும். இதைத்தான் எமது குருநாதர் சொன்னார்.

ஆக, அவர்கள் நன்றாக இருக்க வேண்டும். என்ற எண்ணத்தை உனக்குள் வளர்த்து, நல்ல வித்தினை அவர்களுக்குள் பதியச் செய்து, அந்த வித்தினை நீ எப்படி வளர்க்க வேண்டும் என்று சொன்னார். அதைத்தான் யாம் செய்து கொண்டிருக்கின்றோம்.