ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

March 10, 2012

உணர்வுகளின் இயக்கங்கள்

Inline image 3       Inline image 2

சாமி புத்தகம்  உணர்வுகளின் இயக்கங்கள்
(பக்கம்4-8)

சூரியனில் இருந்து வரக்கூடிய, ஒரு வெப்பகாந்தம் ரோஜாப்பூவின் மணத்தைக் கவர்ந்து கொள்ளும் பொழுது,  ஐந்தாவது புலனறிவை  அடைகின்றது. ஆக சூரியனில் இருந்து வரக்கூடிய,  வெப்பத்தை பராசக்தி என்றும், அதனுடன் இணைந்து வரக்கூடிய காந்தத்தை  லட்சுமி   என்றும்,  நமது  ஞானிகள் பெயரை வைத்துள்ளனர்.

ஆதிசேஷன் என்பது விஷத்தின் துடிப்பால்,  மற்றது அனைத்தையும்  இயக்கச் சக்தியாக மாற்றியது. ஆகவே, ஒரு வெப்பகாந்தம் சூரியனைக்  கடந்து, வெளியில் வரும்பொழுது, அது விஷத்தின் நிலையைத் தன் காந்தப் புலனால் கவர்ந்து, அவை மூன்றாக இயங்குகின்றது.

அடுத்த நிமிடம், அது மற்ற கோள்களின் சக்தியைத்  தனக்குள் கவர்ந்து மணமாகிறது. இவ்வாறு,  தனக்குள் இணைத்துக் கொண்டதை  காயத்ரி  என்றும்,  இந்த இந்து சாஸ்திரங்களின்படி,  இந்திய முறைப்படி ஓர் அணுவின் தன்மை,  ஐந்து புலனறிவு என்று வைத்துள்ளளனர், ஞானிகள்.

இதையே,
1) வெப்பம் (பராசக்தி),
2) காந்தம் (லட்சுமி),
3) விஷம் (இயக்கும் சக்தி),
4) மணம் (அறியும் சக்தி) இவை அனைத்தும் ஒன்று சேர்ந்து,
5) உணரும் சக்தியாக மாறுகின்றது
என்பதை, மெய்ஞானிகள் அன்று பெயர் வைத்து, நமக்குத் தெளிவாகக் காட்டியுள்ளார்கள்.
ஆகவே,  உணர்வு என்ற நிலை வரும் பொழுது,  அனைத்தும் சேர்ந்து, ஒன்றாக மாறுகின்றது.

சூரியனில் இருந்து வரும் வெப்பகாந்தம், உள் நின்று அந்த உணர்வின் சக்தியை தன்னுடன் அணைத்துச் செல்லும் பொழுது,
அந்த உணர்வுக்குள் இருக்கும்  
அந்த இயக்கச் சக்தியாக, மாறும் நிலையே, கடவுள்.

இப்பொழுது, எந்த மணத்தின் சக்தியை எடுத்துக் கொள்கின்றதோ,  அது விஷமான சத்தாக இருந்தால், நாம் மணத்தால் நுகரப்பபடும் பொழுது, அந்த விஷத்தின் தன்மை,  இயக்கச் சக்தியாக இறையாகின்றது. 
நமக்குள் இயக்கத்தின் தன்மை,
உயிர் இயக்கும் பொழுது, நெகடிவ், பாசிடிவ். 
ஆக பூமி சுழலும் பொழுது ஏற்படும் வெப்பமும், 
அதனால் ஏற்படும் காந்தப்புலனை,
இன்று ஒரு மேக்னட் சுழலும் பொழுது,
அது தனக்குள் எப்படி கரண்டை உற்பத்தி செய்கின்றதோ,
இதைப் போலத்தான் நமது பூமிக்குள்,
ஒவ்வொரு அணுவிலும் காந்தப்புலன் இருக்கின்றது.
அது சுழலும் பொழுது, தன் எதிரிலே படும் காந்தப்புலனுடன் உராயப்படும் பொழுது, கரண்டை உற்பத்தி செய்கின்றது. அதனால்,  அதனதன் நிலைகளுக்கொப்ப பூமியின்  ஆற்றலை,   அது பெறுகின்றது. இதைப் போல,
நமது உயிரின் தன்மை,  நெகடிவ்,  பாசிடிவ்  என்ற,  எதிர்மறையான இயக்கங்களில் இயக்கும் பொழுது,  இயக்கச் சக்தியாக மாறுகின்றது.

நமக்குள் வெப்பமாக இயங்குவது கடவுள் என்றும், இயக்கத்தின் சக்தி ஈஸ்வரா என்றும் பெயரை வைத்துள்ளனர். ஏனெனில்,  வெப்பம் எதனுடன் சேர்ந்தாலும்,  உற்பத்தி செய்யும் நிலைகள் பெற்றது. நமது ஞானிகள் இதை  நாம் தெளிவுறத் தெரிந்து கொள்வதற்காக,  தெளிவான நிலைகளில் கண்டுணர்ந்து,  அந்தப் பேருண்மைகளை,  நமக்கு எடுத்துரைத்துள்ளார்கள்.

நமது உயிர், இயக்கமாகும் பொழுது,
இயக்கத்தை ஈஸ்வரன் என்றும்,
இயக்கத்துக்குள் எற்படும் வெப்பம், விஷ்ணு என்றும்,
வெப்பம் எற்படும் நிலையில், ஈர்க்கும் சக்தி வரும்பொழுது,
விஷ்ணுவின் மனைவி லட்சுமி என்றும்,
விஷ்ணுவின் மனைவி லட்சுமியானாலும்,
காந்தம், இந்த உயிருடன் இணைந்து,
இயக்கச் சக்தியாகும் பொழுது துடிப்பாகின்றது. 

ஒரு நெருப்புக்குள், ஒரு பொருளைப் போட்டவுடன் அதனின் மணம் வெளிப்படுகின்றது. ஆகவே,  எந்த உணர்வின் சத்தை அது கவர்கின்றதோ,  கவர்ந்த உணர்வுகள் உயிருடன்  உராயும் பொழுது,  நாம் எண்ணிய அந்த உணர்வுகள்,  ஜீவன் பெறுகின்றது. 

இதைப் போல், உயிருக்குள் இருக்கும் பொழுது,  ஜீவ சக்தியாக அது மாற்றுகின்றது. இதுதான்   என்ற உணர்வின் சத்து, உயிருடன் ஒன்றி உராயும் பொழுது  ம்  பிரணவமாகி,  (சிவம்) உடலாகின்றது. சிவத்துக்குள் அது சக்தியாக மாறுகின்றது.

நாம் எண்ணும் எண்ணத்தை நமக்குள் ஜீவனாக்கச் செய்வது, நம் உயிரின் வேலை.  அதனால்தான்,  கோயில்களில்  ஓம்  என்று அந்த தெய்வத்தின் பெயரைச் சொல்லிப்  போட்டிருப்பார்கள்.

ஆகவே, நாம் அந்த தெய்வத்தைப் பார்க்கும் பொழுது,
அந்த தெய்வகுணத்தை நான் பெற வேண்டும்,  என்று எண்ணினால்,
அது  ஓம்  என்று ஜீவனாகி
அந்த தெய்வ குணத்தின் சக்தி,  நமக்குள்ளாகும் பொழுது, அந்த தெய்வகுணத்தின் செயலாக,  நமக்குள் செயலாற்றும்.

 (பக்கம் 8-12)

நமக்குள் உள் நின்று, ஒவ்வொரு அணுவிற்குள்ளும் அந்த உணர்வின் இயக்கமாக,  எப்படி இயங்குகின்றது?  என்று, அன்று மெய்ஞானிகள் உணர்த்தியதைப் பார்ப்போம்.

இப்பொழுது,  ஓர் உயிரணு நமது பூமிக்குள் இயக்கமாக வரும் பொழுது,  ஓர் கடலைச் செடியில் படுகின்றது என்று வைத்துக் கொள்வோம்.  அந்தக் கடலைச் செடியிலிருந்து வரும் மணத்தை, இந்த உயிரணு ஈர்க்குமேயானால், அதை, இந்த உயிரின் ஆன்மாவாக மாற்றிக் கொள்கின்றது. எந்தக் கடலைச் செடியின் மணத்தை,  இந்த உயிர் தனக்குள் எடுக்கின்றதோ, அது புழுவின் உடலாக, சிவமாகின்றது.

ஆகவே, உயிரின் இயக்கத்தை ஈசன் என்றும், அந்த உயிருக்குள் ஏற்படும் வெப்பத்தை விஷ்ணு என்றும் கூறினாலும்,
கடலைச் செடியில் இருந்து வரும் மணத்தை,
உயிர் தனக்குள், இந்தக் காந்தம் கவர்ந்து,
அது இணையச் செய்யும் பொழுது அது ஓம்.

அது இணைந்த நிலையில் அதற்குப் பெயர் சிவம் என்றாலும், அந்தக் கடலைச் செடியை நுகர்ந்து, அந்த மணத்தின் தன்மை அதன் இயக்கச் சக்தியாகும் பொழுது, பிரணவம். ஆனால், பிரணவத்திற்கு உரியவன் விநாயகன் என்று, நாம் இன்று பாடல்களைப் பாடுகின்றோம்.

இந்தக் கடலைச் செடியின் மணம்,
இந்த உயிரின் ஈர்ப்புக்குள் சிக்கி,
அது வினையாக மாறுகின்றது.
அதன் பின் வந்த மணத்தின் தன்மை
உயிருக்குள் இயக்கும் பொழுது,
அது ஜீவன் பெறும் சக்தியாக, மாறுகின்றது.

சிவனுக்கு முந்தியவன் விநாயகன் என்று தத்துவங்களாக, நமது சாஸ்திரங்களில் கூறப்பட்டுள்ளது. நாம் எதை எண்ணினாலும், அந்த மணத்தின் தன்மை தம் உடலாகும் பொழுது வினை. அந்தக் கடலைச் செடியின்  மணத்தை ஓர் உயிரணு நுகர்ந்து  அது உடலாகும் பொழுது, அது வினைக்கு நாயகனாக உடலாகின்றது. அந்த மணமே வினையாகின்றது. 

ஆகவே, இந்த மணத்தை அந்த உயிரணு சுவாசிக்கும் பொழுது, அந்த மணமே ஜீவனாகி, அந்த உணர்வின் சத்து, உடல் ஆக்குவதையே, சிவனின் பிள்ளை விநாயகன் என்று கூறுகின்றார்கள்.

ஆனால், சிவனுக்கு முந்தியவன் என்கிற பொழுது, கடலைச் செடியின் மணத்தை, இந்த உயிரணு தனக்குள் நுகரப்படும் பொழுது, சிவனுக்கு முந்தியதாக ஆகின்றது. ஆக உயிருக்குள் பட்டவுடன், -பிரணவம், ம் - பிரம்மம். அது சிருஷ்டியின் தன்மையாகின்றது. ஆனால், பிரணவத்தைப் புரிந்து கொண்டவன் விநாயகன் என்று சொல்வார்கள். பிரணவத்திற்கு உரியவன், விநாயகன் என்றும் சொல்வார்கள்.
வினைக்கு நாயகன் என்கிற பொழுது,
அந்தக் கடலைச் செடியின் மணம்தான், நாயகனாகி,
அந்த உடலையே இயக்கும். 

மூஷிகவாகனா என்கிற பொழுது, அந்தக் கடலைச் செடி, அந்த உயிருக்குள் உடலானாலும், அந்த மணமே நாயகனாகின்றது.  அப்படி உருவான அந்தப் புழு, அது கடலைச் செடியின் இலையைத்தான் சாப்பிடச் செல்லும். மற்ற உணர்வு, அதற்குத் தெரியாது. ஞானம் இல்லை.

எந்த மணத்தைத் தனக்குள் எடுத்து உடலானதோ, அந்த மணத்தை நுகர்ந்து, அந்தச் செடி இருக்கிற பக்கம் இந்த உடலை நகர்த்திச் செல்லும். அங்கே சென்று, கடலைச் செடியை நுகர்ந்து, உணவாக எடுத்துக் கொள்ளும். இதுதான் மூஷிகவாகனா என்று எலியை, விநாயகருக்கு முன் போட்டது.

சிவனுக்கு முன்னாடி, காளையைப் போட்டு வைத்திருப்பார்கள். ஒரு விஷத்தின் தன்மை, தனக்குள் உடலையொத்த வலுக் கொண்ட நிலைமை கொண்டது.
நாம் சுவாசிக்கும் உணர்வின் வலுதான்,
இந்த உடலை இயக்கி, அந்த உணர்வின் சக்தியாக
நமக்குள் இயக்குகின்றது என்ற நிலை தான் நந்தி ஈஸ்வரா.
அதற்குத்தான், சிவனுக்கு முன் காளையைப் போட்டது.

நம் உயிர் ஈஸ்வரனாக இயக்கினாலும்,  நாம் சுவாசிக்கும் அந்த வலுவான உணர்வுகள், தனக்குள் உட்சென்று, அது உருவாக்கும் நிலைகள் பெற்றது. அதுதான் "நந்தி ஈஸ்வரா என்பது.

ஏனெனில், இயற்கையின் சக்தி ஒன்றுடன் ஒன்று இணைக்கப்படும் பொழுது, அதன் செயலாக்கங்கள் எவ்வாறு? என்ற நிலையை, நாம் அறிந்து கொள்ளும் வண்ணம், அன்று மகரிஷிகள் தன் உடலில் விளைய வைத்த இந்த உண்மையை, மக்களுக்குக் கிடைக்க வேண்டும் என்று வெளிப்படுத்தியதை, சூரியனின் காந்த சக்தி கவர்ந்து, இந்த பூமியிலே படர்ந்து கொண்டுதான் இருக்கின்றது.

அவ்வாறு, அந்த மகரிஷிகள் வெளிப்படுத்திய அருள் சக்திகளை நாமும் பெற்று, அவர்கள் பிறவியில்லா நிலை என்னும் அழியா ஒளிச் சரீரம் பெற்றது போன்று, நாமும் பெறுவோம். இந்தப் பிறவியில் மகிழ்ந்து மகிழ்ந்து வாழ்வோம். எமது அருளாசிகள்.

 (பக்கம் 17,18)

இந்த உலகில், நஞ்சின் தன்மை சக்தி கொண்டதாக வளர்ந்து கொண்டிருக்கும் இந்த நிலையில்,
மகரிஷிகள், தங்களின் சக்தி வாய்ந்த எண்ண உணர்வுகளால், விண்வெளியின் ஆற்றலைத் தங்களுக்குள் கண்டுணர்ந்து, இப்பூமியிலே வளர்ந்த மனித இனத்தைக் காத்திடும் வண்ணம் அவர்கள் உமிழ்ந்து கொண்டிருக்கும் இயக்கமேதான், இப்பொழுது யாம் உபதேசிப்பது.

ஆக, பேசுவது யாம் அல்ல. இந்த உணர்வின் இயக்கங்கள்,
நமது   குரு காட்டிய நிலைகள் கொண்டு,
அந்த உணர்வை ஏங்கி எடுக்கும் சந்தர்ப்பம்,
எம்மைப் பேச வைப்பதும், 
அந்த உணர்வின் இயக்கங்கள்தான். 
யாம் படிக்கவில்லை. 

படிக்காத நிலைகள் இருந்தாலும், அந்த உணர்வின் இயக்கத்தில், குரு காட்டிய நிலைகள் கொண்டு, யாம் இயக்கப்படுகின்றோம்.

அதே சமயம், கேட்டுணரும் உங்களுக்கும் அது கிடைக்க வேண்டுமென்ற நிலைக்காகத்தான், இதை யாம் உங்களுக்கு உபதேசித்துக் கொண்டிருப்பதும், உங்களுக்குள் ஊழ்வினையாகப் பதிவு செய்து கொண்டிருப்பதும்.

வினைக்கு நாயகனாக, உங்கள் எண்ணத்தை இயக்கும் பொழுது, நமக்குள் நம்மையறியாது சேர்ந்த, தீய உணர்வுகளை நீக்கிடும் ஆற்றலாக, மெய்ஞானிகளின் உணர்வுகள் இன்று நஞ்சினை அடக்கி, உணர்வினை ஒளியாக மாற்றி, விண் சென்ற அந்த நிலையை அடைவதற்குத்தான், இந்தப் பிள்ளை யார்? என்று கேள்விக் குறி போட்டு, விநாயகனை வைத்து, நமக்குத் தெளிவாக எடுத்துரைத்துள்ளார்கள்.

இந்த உயிர் புழுவிலிருந்து மனிதனாக ஆனாலும், இந்தப் பிள்ளையார்? என்று மிருகத் தலையைப் போட்டு, மனிதனின் உடலைப் பொருத்தி, முன் சேர்த்துக் கொண்ட வினைக்கு நாயகனாக, மனித உடலானாலும், ஆதி மூலம் என்ற உயிரும், முன் சேர்த்துக் கொண்ட வினைக்கு நாயகனான, நம் உடலில் இருக்கக் கூடிய கணங்களுக்கு ஈசன், கணேசா என்றும்,  அனைத்திற்கும் மூலமாக இருந்தது உயிர் என்றும்,  அதே சமயம், கணங்களுக்கு அதிபதி கணபதி.

நாம் பலபல சரீரங்கள் பெற்று, அதில் தன் உணர்வின் தன்மை காத்திடும் உணர்வுகளாகி, எல்லாக் கணங்களுக்கும் அதிபதியாகி, எல்லாவற்றையும் அடக்கி ஆட்சி புரியும் மனித உடல் பெற்று,  நம் உடலில் இருக்கக்கூடிய குணங்கள் அனைத்தும், எதையும் அடக்கி ஆட்சி புரியும் அதிபதியாக, உணர்வின் எண்ணங்கள் ஓங்கி வளர்ந்துள்ளன.

அப்படி, ஓங்கி வளர்ந்திட்ட
இந்த உயிரின் நிலைகள் கொண்டு,
இந்தப் பிள்ளை யார்? என்று கேள்விக் குறி போட்டு,
இன்று நாம் மனிதனாக இருக்கின்றோம்,
இதை நாம் எப்படி தெளிந்து செயல்படுத்த வேண்டும்? என்ற நிலையைக் காட்டுவதற்காகத்தான், பிள்ளையார் சுழி போட்டது.

ஆக, நாம் அனைவரும் அந்த மகரிஷிகள் காட்டிய அருள் வழியில் சென்று, நம்மை நாம் அறிந்து, உணர்வின் இயக்கங்களை அறிந்து, அணுவின் ஆற்றலை அறிந்து, அகண்ட அண்டத்தையும் அறிந்து, இந்த வாழ்க்கையில், பிறவியில்லா நிலை அடையும் அருள் வாழ்க்கை வாழ்ந்து, உயிரோடு ஒன்றி ஒளியின் சரீரம் பெறுவோம்.

உலக மக்கள் அனைவரும் அந்த மகரிஷிகளின் அருள் வட்டத்தில், மகிழ்ந்து வாழ்ந்திடத் தவமிருப்போம்.
(பக்கம் 19-23)

 உதாரணமாகஓர் உயிரணு தன் உணர்வின் சத்தைஅதாவது ஒரு கடலைச் செடியின் சத்தைஅந்த உணர்வின் சத்தாக உயிர் தனக்குள் எடுத்து உடலானலும்அந்த நிலையை நாம் புரிந்து கொள்வதற்குசிவன் ராத்திரி என்று கொண்டாடுகின்றோம். ஆகமாதத்தில் ஒரு சிவன் ராத்திரி வருகின்றது.

ஒரு உயிரணுதாவர இனத்தை நுகர்ந்து உடலாகும் பொழுது,
உடலுக்குள் இந்த உயிரின் ஒளி மறைந்து, அது
உடலின் இயக்கத் துடிப்பாக மாறுகின்றது.
அதனால்தான்அந்த நாள் சிவன் ராத்திரி. ஆகவேநாம் உடல் பெற்ற நாளை அறிந்து கொள்வதற்காகத்தான் சிவன் ராத்திரி  என்று பெயர் வைத்துள்ளனர்.

அதே சமயம் நாம் மூஷிகவாகனா என்கின்ற பொழுதுஎந்தக் கடலைச் செடியின் சத்தை நுகர்ந்ததோஅந்த உணர்வின் சத்து தனது உடலுக்குள் பட்டபின்,  அது வினையாகச் சேர்ந்து,  அந்த மணமே அதற்கு ஞானம். ஆகஅந்த மணத்தை நுகர்ந்தறிந்துகடலைச் செடி இருக்கின்ற பக்கம்தான்,  அந்தப் புழு  நுகர்ந்து செல்லும்.

கடலைச் செடியை உணவாக எடுக்கஅந்த ஞானத்தின் வழி கொண்டுஅந்த உணர்வு இந்த உடலை அழைத்துச் செல்லும். அவ்வாறு அழைத்துச் சென்றாலும்,
தன் பசியைப் போக்கத் தன் அருகிலே இருக்கக் கூடிய செடியை
அது நுகர்ந்து பார்க்கும். நுகர்ந்து பார்க்கும் பொழுது,
எந்தக் கடலைச் செடியின் மணத்தைக் கொண்டு உடலானதோ,
அதில்மற்ற செடியின் மணம் பட்டவுடனே,
அந்தப் புழுவின் உடலுக்குள், 
கடலைச் செடியின் மணம் குறைகின்றது.

இன்று நாம் ஓரு குழம்பை வைக்கின்றோம் என்றால்எல்லாப் பொருளையும் போட்டு, சுவை மிக்கதாக வைத்தாலும் உப்பு கொஞ்சம் அதிகமாகிவிட்டால்கரிப்பின் சுவை மிகுந்து விடுகின்றது.

ஆகவேபுழுவின் உடலுக்குள் கடலைச் செடியின் சத்து குறைந்தவுடன்தான் நுகர்ந்த மற்ற செடியின் மணங்கள் எதிர்நிலை ஆகின்றது. மற்ற செடியை இது நுகர்ந்தபின்அதுவும் இதுவும் சேர்ந்துகடலைச் செடியின் மணம் சிறுகச் சிறுகக் குறைந்து விடுகின்றது.

இன்று சந்திரன் எப்படி குறைந்துவிடுகின்றதோஅது போல முதலில் கடலைச் செடியின் சத்தை தனக்குள் எடுத்துக் கொண்டபின்மற்றதை நுகர்ந்துமற்ற செடியின் சத்து பட்டவுடன்இந்த உணர்வின் சத்தைப் பெற்றுஅது முழுமை அடைந்தபின்இந்தக் கடலைச் செடியின் சத்து குறைந்து விடுகின்றது.

அதுதான்எலியைப் போட்டு மூஷிகவாகனா என்றது. எலி தனக்கு வேண்டிய வசதி கொண்டுவளைகள் தோண்டிதன் வசதியைப் பெருக்கிக் கொள்ளும். இருப்பினும்இது அனைத்தும்புழுவின் உடலிலே வினையாகச் சேருகின்றது. அந்த வினையின் சக்தியனைத்தும்சிவனாக மாறுகின்றது.

ஆகவேஇது எதை எதையெல்லாம் நுகர்ந்ததோஅவையனைத்தும் சிவமாகின்றது. இவ்வாறு நுகர்ந்த உணர்வுகளின் சத்து முழுவதும்புழுவிற்குள் வினையாகின்றது.

நாம் பல சரக்குகளை போட்டுக் கொதிக்க வைக்கும் பொழுதுஅது அனைத்தும் ஒன்று சேர்ந்துஒரே ருசியாக மாறுகின்றது. அதே சமயம்மற்ற செடிகளின் மணத்தை இந்த உயிரணு சேர்த்தபின்,
இது தனக்குள் நுகர்ந்துநுகர்ந்து பார்த்த இந்த உணர்வுகள்,
இதற்குள் இணைவதற்கு முன்னால்,
இதற்குள் நோயாகி,
புழுவின் உயிரின் இயக்கத் துடிப்பு அதிகமாகி,
இந்த உணர்வின் சத்து இரண்டறக் கலக்கின்றது.

அந்த மணத்தின் உணர்வும்அதனுடைய இயக்கமும்  அறிந்து கொள்வதே ஞானம்.  இதுதான்,  விநாயகன் ஞானவான்  என்று சொல்வதின் உண்மை நிலை. 

மெய்ஞானிகள் அன்று இதைத் தெளிவாகஇது எந்தெந்த உணர்வின் தன்மை தனக்குள் எடுத்துஅந்த மணம் அனைத்தும் ஞானமாகிஅது எவ்வாறு உணர்வின் செயலாக உடலை இயக்குகின்றதுஎன்பதை உணர்த்தியுள்ளார்கள்.

ஆகையால்இதைத் தெளிவாக எடுத்துரைத்த நிலையை,  நாம் புரிந்து கொள்ளாவண்ணம் எதை எதையோ சொல்லிதிசை திருப்பிவிட்டார்கள். இதைப் போல அது தனக்குள் எடுத்துக் கொண்ட உணர்வுக்கொப்பஅடுத்து மாற்று உடல்கள் ஏற்படுகின்றது. இதைத் தான் திரேதாயுகத்தில்சீதா ராமன் தோன்றினான் என்று குறிப்பிடுவது.

திரேதா என்பது சரீரம்.
இந்த சரீரத்திற்குள், அந்தச் செடியின் மணம் வரும் பொழுதுசீதா ராமா அதனுடைய மணத்தின் உணர்வின் எண்ண அலைகள் அதற்குள் இயக்கிஅந்த மணத்தால், இந்த உணர்வின் தன்மைஅந்த உடலுக்குள் ஊடுருவச் செய்து,
அதைத் தனக்குள் விளைய வைத்து
தன் இனத்தால் அது கவர்ந்து,
தன் உணர்வின் சத்தால்எண்ணங்கள் உருவாகி
இது தன் உடலை நகர்த்திச் சென்று வளருகின்றது
என்பதையே சீதா ராமனாக மெய்ஞானிகள் குறிப்பிடுகின்றார்கள்.

சூரியனிலிருந்து வெளிப்படும் உணர்வின் ஆற்றல்,
அதற்குள் இருக்கும் வெப்பம்
இணைத்திடும் சக்தியிலும்வளர்த்திடும் சக்தியிலும்
சூரியனிலிருந்து வெளிப்படும் நஞ்சு இயக்கச் சக்தியாக மாறி,
அது இயக்கத் தொடராக வளர்கின்றது. ஆகவேவெப்பத்தைப் பராசக்தி என்றும்காந்தத்தை லட்சுமி வளரும் நிலை என்றும்விஷத்தின் இயக்கத்தை காந்தம் தனக்குள் கவர்ந்துஇயக்கச் சக்தியாக மாறுவதை லட்சுமணா என்றும்பெயரை வைத்தார்கள்.

ஆகவேஓர் அணுவிற்குள் இந்த மூன்று இயக்கத்தின் தன்மையைத் தெளிவுறத் தெரிந்து கொள்வதற்காகத்தான்ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும்ஒவ்வொரு நொடியிலும் எப்படி மாறுகின்றதுஎன்று நாம் தெரிந்து கொண்டால்,  நாம் யார்எப்படி மனிதனாக ஆனோம்என்று புரிந்து கொள்ள ஏதுவாக இருக்கும்.

மது குருநாதர் காட்டிய அருள்வழிகொண்டு,
உங்கள் உணர்வின் நிலைகளில்
எப்படியும் நாம் சொல்வது ஆழமாகப் பதிய வேண்டும்.
அதனின் நிலைகள் ஊழ்வினையாகப் பதிவு செய்ய வேண்டும்
என்ற இந்த உணர்வு கொண்டு,
அந்த மகரிஷிகள்  எவ்வளவு உயர்ந்த குணங்கள் கொண்டிருந்தார்களோ
அந்த உணர்வின் தன்மை மாறாதவண்ணம்,
உங்கள் உயர்ந்த நிலைகள் நிலைத்து இருக்க,
மெய்ஞானியின் உணர்வு உங்களுக்குள் ஈர்க்க,
அதனைத் தெளிந்து,  தெரிந்து கொள்வதற்காகவே இதனை மிகவும் வேண்டி,
உங்கள் உயிரைக் கடவுளாக மதித்து,
உங்கள் உடலுக்குள்,  சிவனாக ஏற்றுக்கொண்ட உணர்வின் தன்மைக்குள்
நல்ல உணர்வின் சக்திகளாக இயங்க வேண்டும் என்று
எனது குருநாதர் காட்டிய அருள்வழியில்,
மெய்ஞானிகளின் உணர்வுகள் தெளிவாக உங்களுக்குள் ஊடுருவி, நன்மையின் பலன்கள் நீங்கள் என்றும் அனுபவிக்க வேண்டும்.

நீங்கள் நன்மை செய்ய, பிறருடைய தீமையான உணர்வுகள் உங்களுக்குள் கலந்து,  அந்த நல்ல உணர்வுகளைக் கெடுத்துக் கொண்டு இருக்கும், அந்தத் தீமையான உணர்வுகள் அனைத்தும் மாற வேண்டும்.

அதனின் நிலைகளை மாற்றவேண்டும் அது மாற வேண்டும் என்ற நோக்கத்தில்தான் யாம் உங்களுக்குப் பதிவு செய்யும் வண்ணம், இதை உபதேசித்தது.

 (பக்கம் 23-27)

ஒரு புழுவினைக்கு நாயகனாக ஆனாலும்அதற்குள் ஞானங்கள் வளர்கின்றது. ஆகவே ஒரு அணுஎந்த மணத்தை நுகர்ந்து கொண்டதோஅந்த மணத்தின் தன்மை கொண்டுதான்அணுவின் இயக்கம் இருக்கும்.

ஒரு செடிக்குள்கசப்பின் தன்மை இருக்கிறது என்றால்அந்த மணம்தான் அதற்கு ஞானமாகின்றது. அந்த ஞானத்தின் நிலைகள் கொண்டுதான்அந்த உணர்வின் நிலைகள் இயக்கமாகதன் உணர்வை எடுத்து வளர்கின்றது ஆகையால்ஞானம் சரஸ்வதி. ஒரு பொருளுடன் இணையும் சந்தர்ப்பம் பிரம்மம். அது தன்னுடன் இணைந்து செயல்படும் பொழுது பிரம்மாபிரம்மாவின் மனைவி சரஸ்வதி.

இன்று நாம் எப்படி மூச்சு விடுகின்றோமோஅதைப் போல ஒரு மரம் அதிலிருந்து தன் மணத்தைமூச்சாக வெளிப்படுத்தும். உதாரணமாக வேப்ப மரத்தின் மணத்தைசூரியனின் காந்த சக்தி கவர்ந்து கொண்டால்அது கசப்பின் உணர்வலைகள் கொண்ட சத்தாகஅலைகளாக மிதக்கும்.

ஆனால்ரோஜாப்பூ நல்ல நறுமணங்கள் கொண்டிருந்தாலும்தன் மணத்தால்இந்த கசப்பான சத்தைத் தன் அருகிலே வராதபடிதன் மணத்தைக் கொண்டுதன்னைப் பாதுகாத்துக் கொள்கின்றது.

ஒரு வேப்ப மரம் கசப்பின் மணத்தால்தன் இனமான கசப்பின் சத்தைப் பாதுகாத்துமற்ற செடிகளின் மணம் தனக்குள் வராதபடி செயல்படுகின்றது.

அதே மாதிரிஒரு நமநமப்பான நிலைகள் கொண்ட விஷச் செடிதன் உணர்வின் சத்தை வெளிப்படுத்திதன் மணத்தால் மற்ற செடியின் சத்து தனக்குள் வராதபடிஅது தன்னை வளர்த்துக் கொள்கின்றது.

இவையனைத்தும் சூரியனின் காந்த சக்தியால் கவரப்பட்டுஅலைகளாக வெளிப்படும் நிலையில்வேப்ப மரத்தின் கசப்பான உணர்வலைகள் ரோஜாப்பூவின் உணர்வலைகளைப் பார்த்தவுடனேஇதற்கும்  அதற்கும் ஒத்துக் கொள்வதில்லை.

செடியாக இருக்கும் பொழுதுஒதுக்கித் தள்ளிவிடுகின்றது.
ஆனால்,  அலைகளாகச் செல்லும்போது,
இந்தக் கசப்பின் நிலைகள் உந்த,
அந்த உந்தலால் ரோஜாப்பூவின் மணம் ஓடும் தன்மை அடைகின்றது. அது வேகமாக ஓடும் பொழுதுசீரான காற்று நமக்குக் கிடைக்கின்றது. ஆகவே,  காற்று உற்பத்தி இதுதான்.

ஆகஇந்த உணர்வின் தன்மை தனக்குள் ஏற்படும் பொழுதுஅதே சமயம் இந்த விஷச் செடியிலிருந்து வரக் கூடிய மணம்ரோஜாப்பூவின் மணத்துடன் மோதியவுடனேஇந்த நறுமணத்திற்கும்அந்த நமநமப்பான நிலைக்கும் அணுவுக்குள் உண்டான மோதல்சுழல் காற்றாக உருவாகின்றது.

சுழல் காற்று முதலில் வரும் பொழுதுசிறியதாக இருக்கும். வரவர வேகம் கூடுகின்றதைப் பார்க்கின்றோம்.
இந்த ரோஜாப்பூவின் உணர்வலைகள்,
விஷ உணர்வுகளின் அணுக்களுடன் மோதியவுடன்,
தாங்காது சுழற்சியின் தன்மை அடைந்து,
இதைத் துரத்திக் கொண்டு வந்தவேப்ப மரத்தின் உணர்வலைகள் இதற்குள் சிக்கிவெகு வேகமாகச் சுழலும் நிலை வரும். வேகத் துடிப்பின் நிலை கொண்ட,  வெப்ப காந்தங்கள் இரண்டறக் கலந்து விடுகின்றது.

உதாரணமாகஆயிரம் அணுக்கள் கொண்ட வேப்ப மரத்தின் கசப்பான நிலைகள்ஒரு நூறு அணுக்கள் கொண்ட ரோஜாப்பூவின் மணத்தைக் கவர்ந்து கொண்டால்ஒரு பத்து விஷச் செடியைக் கவர்ந்த அணுக்கள்இது மூன்றும் ஒன்றுடன் ஒன்று மோதும் பொழுது, 
விஷச் செடியின் தன்மை இயக்கச் செய்து, 
ஆனால்மூன்றும் கலந்த,  புதுவித குணத்தின் கருவின் தன்மை அடைந்துவிடுகின்றது. 

இவ்வாறுஅது சுழல் காற்றாக மாறிஒன்றுக்கு ஒன்று தாங்காதுஇந்த அணுக்களின் தன்மை ஒன்றாகச் சேர்ந்துஒரு அணுவாக மாறிவிடுகின்றது.

இன்று நாம் பலசரக்குகளைப் போட்டு வேக வைக்கும் பொழுதுஅதற்குத் தகுந்த வெப்பத்தில் வேகும் பொழுதுஒன்றாக இணைந்து ஒரு சுவையாகின்றது. இந்தச் சுழற்சியின் தன்மை கொண்டுஅணுவின் தன்மை வெப்பம் அதிகமாகும் பொழுதுசரியான வெப்பம் கிடைத்தபின்இந்த மூன்று அணுக்களும் ஒன்றாகிஒரு அணுவின் தன்மையாகும் பொழுது,
ஆயிரம் காந்தங்கள் ஒன்று சேர்க்கும் பொழுது,
ஈர்க்கும் சக்தி அதிகமாகின்றது.

பூமியின் ஈர்ப்பு சக்தி அதிகமாகும் பொழுதுஇந்த அணுவின் தன்மை பூமியின் ஈர்ப்புக்குள் சிக்கி விடுகின்றது. இன்று சுழிக்காற்று ஆனவுடனேஅது சுழன்று மேலே செல்வதுஅப்படியே இழுத்து பூமிக்குள் அடங்குவதைப் பார்க்கலாம்.

இந்தக் காந்தத்தின் செயல்கள் தனக்குள் அடங்கியபின்பூமியின் ஈர்ப்புக்குள் வேப்ப இலையின் அமைப்பானது பல் பல்லாக வளைந்திருக்கின்றதோஅதனின் நிலைகளுக்கொப்ப அதனின் நரம்பு ஓட்டங்கள் இருக்கும். ஆனால்ரோஜாப்பூ இந்த விஷச் செடியின் உணர்வுடன் கலந்தவுடன்கறிவேப்பிலை ஆகிஅதனின் நரம்பு ஓட்டப் பகுதி வேறு விதமாக இருக்கும்.

இவ்வாறுகாற்றிலிருந்து தன் இனத்தை உருவாக்கிய நிலைதான்,
செடியிலிருந்து வித்தாவித்திலிருந்து செடியா?
என்று முடிவு தெரியாத நிலையில் தான் இன்றுள்ளோம். அன்று இயற்கையின் தன்மைகளில்  வித்து எவ்வாறு உண்டானது? என்று மெய்ஞானிகள் கண்டுணர்ந்தார்கள்.

இவ்வாறுமூன்று நிலைகள் கொண்ட அந்த வித்து
பூமியில் சிக்கியவுடன்அடுத்து
மழைக்காலங்களில் மின்னல் பட்டு,
அந்த ஒளியின் கதிரைக் காந்தம் அதிகமாக ஈர்ப்பதால்,
ஈர்த்துத் துடிக்கும் நிலைகள் கொண்டு
அது இயங்கத் தொடங்கியபின்,
அது கறிவேப்பிலைச் செடியாக உருப்பெற்றுஜீவன் பெறுகின்றது.

இதையெல்லாம், யாம் உங்களிடத்தில் புத்தகத்தில் படித்துச் சொல்லவில்லை. 

எமது குருநாதர் எமக்கு குருவாக இருந்துஅவரைப் பின்பற்றிஅவர் உணர்வை யாம் பெறக் கூடிய நிலைகளில்எமது குரு எமக்குக் காட்டிய நிலைகள் கொண்டு,
இப்பொழுது நமது குரு என்ற நிலையில்
நீங்களும் பெற வேண்டும் என்ற ஆசையினால்,
இங்கு யாம் உபதேசிக்கின்றோம்.

ஆகவேஒரு உணர்வின் தன்மை எவ்வாறு மாறுகின்றதுஎன்பதை நேர்முகமாகப் பார்க்கச் செய்துஇயற்கையின் மாற்றங்களும்இயற்கையின் ஒன்றிய நிலைகள் கொண்டு செயல்படுவதைநமது குருநாதர் எமக்கு உபதேசித்துணர்த்திய நிலைகள் கொண்டுஇயற்கையின் ஆற்றலை நீங்களும் அறிந்து உணர்ந்து செயல்படும் நிலைக்கே, யாம் இப்போது உபதேசிப்பதும்அதன் வழிகளில் ஊழ்வினையாகப் பதிவு செய்வதும்.

 (பக்கம் 29)

நாம் எவ்வளவு அழகான உடலாக இருந்தாலும்அது மகிழ்ச்சிக்குரிய எண்ணங்களாக இருந்தாலும்பிறருடைய உணர்வுகள் நமக்குள்ளாகி விட்டால்அது நமக்குள்நம் உடலுக்குள் இருக்கும் நல்ல குணங்களுடன் கலந்து,  இரண்டும் போராடிக் கொண்டே இருக்கும்.

இந்த உடல் முழுவதற்கும் போராட்டங்கள் வரும் பொழுது,
உடலில் உள்ள உணர்வுகள் அனைத்தும் எதிர் நிலையாகி,
உடல் உறுப்புக்கள் அனைத்திலும் நெளிவு சுழிவு ஏற்படும்.
ஆகவேஇது நமக்குள் செயல்படும் பொழுதுவாயு உற்பத்தியாகின்றது.

இன்று சுழிக்காற்று எவ்வாறு படர்கின்றதோஅதைப் போல இம்மனித வாழ்க்கையில்ஒரு நண்பனின் நிலைகளை நாம் கூர்ந்து பார்க்கும் பொழுதுஅது உயிரான குருக்ஷேத்திரத்திற்குள் கலந்துஅந்த உணர்வின் தன்மை நமக்குள்ளாகிஅதற்கேற்ப நம் உடல் அங்கங்களை அசைக்கச் செய்வதும்அந்த உணர்வால் நம்முடைய நிலைகள் என்னவென்ன ஆகின்றதுஎன்றும் புரிந்து கொள்ளும் நிலைக்கேயாம் இப்பொழுது தெளிவுபட எடுத்துக் கூறுவது.

ஏனெனில்நாம் யாரும் தெரிந்து தவறு செய்வதில்லை. சந்தர்ப்பம் நம்மை எவ்வாறு இயக்குகிறதுஎன்று புரிந்து கொள்ளும் நிலைக்கேஉங்களுக்குள் இதைத் தெளிவாக எடுத்துக் கூறுவது.

 (பக்கம் 30,31)

நாம் ஒரு வேலை செய்யும் பொழுது, கையிலே அழுக்குப்படுகின்றது. ஆனால் அதைத் துடைத்துவிட்டுத்தான்,  உணவு உட்கொள்ளுகின்றோம். அடுத்த காரியத்தைத் தொடர்கின்றோம். ஏனெனில்,  நாம் கையிலே அழுக்கானபின், தொழில் செய்தபின்,  அதைத் துடைக்காதபடி,  மற்றொரு இடத்தில் செயல்பட்டால், அதுவும் மாசு பட்டுவிடும்.

இதைப்போல, ஒருவருடைய நிலைகள் நாம் பார்த்துக்கொண்ட பின்,  அவர்களைக் காப்பாற்றும் எண்ணம் கொண்டு காப்பாற்றினாலும்,  அதைத் துடைக்கும் நிலை நமக்கு வரவேண்டும்.  ஆகவே, அதைத் துடைத்திடும் உணர்வு நமக்குள் உண்டு.

அதை அடுத்து, நாம் எடுக்கும் ஆற்றல் ஆறாவது அறிவு, ஒரு குழந்தைக்குத் தலைவலி வந்துவிட்டால், பச்சிலை இங்கிருக்கின்றது என்றால்,  நாம் எப்படி தேடிச்சென்று,  கொண்டு வந்து,  அதைக் குழந்தைக்குக் கொடுக்கின்றோம்.

இதைப்போல,  தன் உணர்வின் எண்ணத்தால்,  மகரிஷிகளின் அருள்சக்தி நாம் பெற வேண்டும்,  என்ற ஏக்க உணர்வு கொண்டு ஏங்கும் பொழுது,  நமக்கு முன் சுழன்று கொண்டு இருக்கும்,  அருள்ஞானியின் உணர்வை தனக்குள் எடுத்துத் துடைத்துப் பழக வேண்டும்.

அந்த மெய்ஞானிகள் அனைவரும் தன் வாழ்க்கையில் எதிர்கொண்ட நிலைகள் கொண்டு தனக்குள் தீமைகள் விளைவித்த அந்த சக்தியை அவர்கள் துடைத்துப் பழகி,  நஞ்சினை அடக்கி, உணர்வினை ஒளியாக்கி, ஒளியின் சிகரத்தால்,
பொருள் கண்டு உணரும் நிலையிலும்
மற்ற எந்த சக்தியானாலும், 
தெரிந்திடும் ஆற்றல் பெற்று,  தெரிந்து கொள்ளும்
உணர்வின் தன்மையை வளர்த்து,
தமக்குள், உணர்வை ஒளியாக மாற்றிச் சென்றவர்கள் ஆவார்கள்.

ஏழாவது அறிவு,  இதைத்தான் சப்தரிஷி என்று சொல்வது. இதை  சப்தரிஷி மண்டலம்  என்று சொல்வார்கள். மனிதனாக வளர்ந்து அந்த மெய்ஞானி,  அவன் தெளிந்து, நஞ்சினை வென்று,  உணர்வினை ஒளியாக மாற்றி,
அவன் உடலிலே விளைய வைத்த ஆற்றல்களும்,
அவன் உடலில் வெளிப்பரப்பிய மணமும், மூச்சலைகளும்,
அவன் எண்ணத்தால் வெளியிட்ட உணர்வும்
இந்த சூரியனின் காந்த சக்தி கவர்ந்துள்ளது.

இப்பொழுது, உங்களுக்கு  யாம் உபதேசிக்கும் பொழுது,  அவர்கள் உடலில் விளையவைத்த  மணங்களை,  நீங்கள் நுகர நேருகின்றது. 

அந்த மணங்களை நீங்கள் நுகரும் பொழுது, உங்கள் வாழ்க்கையில் அறியாது சேர்ந்த வேதனைகளையும், மனக்கவலையையும், நீக்கிடும் சக்தியாக அமையும்.

மேலும், அந்த மகரிஷிகளின் அருள் மணங்கள், ஆற்றல்மிக்க சக்தியாக உங்களுக்குள் இணைந்து, உங்கள் வாழ்க்கையில் அறியாது சேர்ந்த தீய வினைகளை, சாப வினைகளை, பாவ வினைகளை, பூர்வ ஜென்ம வினைகளை நீக்கிடும்.

உங்களுக்கு மன ஆறுதலும், மன பலமும், மனத் தெளிவும் ஏற்பட்டு, மகிழ்ந்த உணர்வுகளை உங்களுக்குத் தூண்டிக் கொண்டே இருக்கும்.

(பக்கம் 33-36)

 ஒரு நாடாவைப் பதிவு செய்யும் பொழுது,
அதில் இருக்கக்கூடிய காந்தப்புலனும்,
அதற்குள் பூசிய முலாமும் அதற்குள் கவர்ந்துகொள்கின்றது.

மீண்டும், காந்தப்புலனால், அதற்குள் உராயச் செய்யும் பொழுது,
அதற்குள் இணைந்த நாத ஒலிகள் வெளிப்படுவதும்,
நாதத்தைப் பெருக்கும் மைக்கிரோஃபோன்,
அதனுடைய உணர்வுகளைப் பெரிதாக்கிக் காட்டுவதும்,
பெரியதாக்கும் நுண்ணிய அலைகளை,
சூரியனின் காந்தச் சக்தி கவர்ந்து கொள்வதும்,
அந்தக் கவர்ந்த நிலைகளை, மீண்டும் ரிக்கார்டு செய்துவிட்டால்,
இதே உணர்வுகள், இயந்திரத்தில் பதிவு செய்து இயந்திரத்தில், கெமிக்கல்   கலந்த அந்த முலாமுக்குள் ஊடுருவி வெளிவருவதை சூரியனின் காந்த சக்தி கவரும் பொழுது, எந்த இயந்திரத்தின் துணை கொண்டு கலந்ததோ, அதே இயந்திரத்திற்குள்,  அது ஈர்க்கும் உணர்வலையை வைத்து,
இன்று "விஞ்ஞானக் கருவிகள்" செய்கின்றனர்.

இதைப்போல  மனிதனுக்கு மனிதன்,  இணைந்து கொண்ட உணர்வுகள் பதிவானபின், அந்த அலைகள் தொடர்ந்து இந்த பூமியில் படர்ந்து கொண்டு இருப்பதும்,
அதை மீண்டும் நினைவு கூர்ந்தவுடன்,
அந்த அலைகள் நமக்குள் வந்து,
அடுத்தடுத்து நினைக்கும்பொழுது, 
நம்மை எப்படி இயக்குகின்றது? என்ற நிலையை, நமது குருநாதர் தெளிவாக எடுத்துரைத்தார்.

 இன்று விஞ்ஞானக் கருவியால் எதைச் செய்தாலும், மனமகிழ்ச்சிக்கு நாம் எத்தகைய நிலைகள் செய்தாலும், மனித உடலுக்குள் அவன் எடுத்துக் கொண்ட உணர்வு, மனிதனுக்குள் விளையவைத்த உணர்வலைகள்தான் அது, இயந்திரக் கருவியில் பதிவு செய்யப்பட்டு, முலாமை   இணைக்கச்  செய்து,  அது வெளிப்படுத்தும் பொழுது,  அதே முலாமின் உணர்வு கொண்டு,  சூரியனின் காந்த சக்தி கவர்ந்தால் எத்தகைய முலாமைப் பூசினானோ,  அதன் உணர்வின் துணை கொண்ட நிலையை, இன்று திருப்பி வைக்கும் பொழுது, காந்தப் புலன்கள் ஈர்க்கின்றது.

அதைப் போலத்தான், சம்பந்தமே இல்லாதபடி ஒரு நண்பனிடத்தில் நாம் பேசும்பொழுது, அந்த உணர்வின் தன்மைகள்,  நல்ல எண்ணங்கள் பதிவானலும்,  பாலுக்குள் ஒரு துளி விஷம் பட்டபின்,  விஷத்தின் தன்மையாக அது இயக்கும். 

ஒரு வேதனை கொண்ட உள்ளங்களில், நாம் மிகத்தெளிவான நிலைகளில் தெளிந்து,  மகிழ்ச்சியூட்டும் சொற்களைப் பேசினாலும், பாலுக்குள் விஷத்தைக் கலந்தால் எப்படியோ,  அதைபோல,  நாம் சொல்லும் நிலைகள் வேதனைப்படுவோர்களின் உணர்வுகளில் ஏறாது. அவர்களுக்குள் புரியும் நிலையோ, சிந்திக்கும் நிலையோ அற்றுப்போய்விடும்.

நீங்கள் வேதனைப்பட்டுக் கொண்டிருக்கும் நேரத்தில், யாம் சாதாரணமாகப் பேசிக் கொண்டிருந்தால்,
உங்களுக்குள்  சாமி என்னமோ சொல்கின்றார்,
நமக்குப் புரியவில்லை என்ற நிலையாகக் கலக்கத்தை ஏற்படுத்தி,
அதே நேரத்தில், சிந்தனையின் நிலைகளும்,
உணரும் நிலைகளைப் பதிய விடாத நிலைகளும்
உங்களுக்குள் கலக்கத்தை ஏற்படுத்திக்கொண்டுதான் இருக்கும்.

ஆனால், அதனை 
யாம் அந்த மெய்ஞானியின் உணர்வு கொண்டு,
அதை உங்களுக்குள் பதிவு செய்யவேண்டும்
என்ற நினைவினைக் கூர்மையாக்கி,
இந்த உணர்வின் நிலைகளை, உங்கள் ஆன்மாவில் சேர்ப்பதற்காக
எமது குருநாதர் காட்டிய அருள்வழிகொண்டு,
உங்கள் உணர்வின் நிலைகளில்,
எப்படியும்  யாம் சொல்வது,  ஆழமாகப்  பதிய வேண்டும். அதனின் நிலைகளை  ஊழ்வினையாகப் பதிவு செய்ய வேண்டும். என்பதற்காகவே இதைச் செய்கின்றோம். எமது அருளாசிகள். 

(பக்கம் 41,42)

நியூமராலஜி என்று சொல்வார்கள். அந்த எழுத்தை இப்படி மாற்றி வைத்தால், இப்படி வருமென்று சொல்வார்கள். நமக்கு ஏற்கனவே அப்பா, அம்மா பெயர் வைத்திருப்பார்கள். தலைகீழாக மாற்றி வைத்தால், நன்றாக இருக்கும் என்பார்கள்.
அதனைக் கேட்டுணர்ந்து சிறிது காலம் இருந்தால்,
நமது உணர்வின் ஆசை கொண்டு, எதைப் பதிவு செய்கின்றோமோ,
அதுதான் நமக்குள் இயங்குகின்றது.

காலத்தால் உருவானாலும், இந்த உணர்வின் எண்ணத்தால் உருவாகும், இந்த உணர்வுகள் எவ்வாறு விளைந்தது? என்ற நிலையைத் தெளிவாக நமது குருநாதர் கூறினார். எவ்வாறு இயற்கையின் நிலைகள் மாறுகின்றது? மனிதனின் நிலைகள் சீர்குலைகின்றது, இதிலிருந்து மீட்டுக் கொள்ள, நீ என்ன செய்யப் போகின்றாய்?

நீ ஒருவன் ஒன்றும் செய்ய முடியாது. ஆகவே, இதைப்போல உணர்வின் தன்மை கொண்டு, ஒரு கடினமான தேரை, கனம் கொண்டதை நாம் அனைவரும் சேர்ந்து, எப்படி இழுக்கின்றோமோ, இதைப் போல, ஊரில் வாழும் நாம் அனைவரும் சேர்ந்து எப்படி இழுக்கின்றோமோ, இதைப் போல,
இந்தப் பூமியில் வாழும் நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து
ஞானியின் உணர்வின் எண்ணத்தை வலுவேற்றி,
அந்த மகரிஷிகளின் அருள் சக்தியை
நாம் அனைவரும் பெறவேண்டும் என்று,
அந்த ஏக்க உணர்ச்சிகளைத் தூண்டி,
எல்லோரும் ஏக்க உணர்வுடன் இழுக்க வேண்டும்.

ஏனென்றால், அந்த மகரிஷிகள் பிழையற்ற நிலையில் அன்று சென்றவர்கள்.
அவர்கள் உணர்வை நாம் எடுக்க, உணர்வை நினைவு கூட்ட,
அதனின் ஆயிரம் பேரின் வலுக் கொண்டு,
அந்த உணர்வின் அலைகளைக் குவித்து
கேட்டுணர்ந்த அனைவருக்கும் அதைப் பெறச் செய்
என்று நமது குருநாதர் இப்படிச் சொன்னதினால்தான், இதை உங்களுக்குள் உபதேசித்து, இந்த உணர்வின் ஆற்றலை நினைவு கூர்ந்து, அந்த மகரிஷிகளின் அருள் வட்டத்தில் உங்கள் நினைவினைச் செல்லச் செய்து, இந்த நினைவின் ஆற்றல் மிக்க நினைவலைகளை, உங்களுக்குள் ஊடுருவச் செய்கின்றோம்.

எப்படி காச நோய்க்கு, (TB) எதிர்நிலையான உணர்வுகளைக் காட்டியபின், அந்த அணுக்கள் சாகின்றதோ, இதைப் போல நோய் வரச் செய்யும் சிந்தனையற்ற நிலைகளை மாற்ற, அந்த மாமகரிஷி காட்டிய அருள் வழியில், இப்பொழுது உபதேசிக்கப்பட்டு, அந்த மெய்ஞானிகளின் உணர்வுகளை உங்களுக்குள் சேர்க்கச் செய்து, அணுவின் வளர்ச்சியை உங்களுக்குள் வளர்க்கச் செய்வதையே, யாம் செய்கின்றோம். இது மெய்ஞானம்.

மெய்ஞானிகள், இந்த மனித வாழ்க்கையில், நஞ்சினை ஒடுக்கி, ஒளியாகச் சென்ற, வேகாநிலை என்ற நிலைக்கு நாம் அனைவரும் செல்கின்றோம். எமது அருளாசிகள்.

 (பக்கம் 44-48)

அந்த மெய்ஞானிகளின் உணர்வு கொண்டு, ஒளி பெற்ற நாம், என்றும் ஒளியாக மாற்றிடும் நிலைகொண்டு, பிறர் எண்ணம் நம்மை இயக்காவண்ணம், ஒளியின் சிகரமாக மாற்றிய அந்த மெய்ஞானிகளின் ஆற்றல் உங்களுக்குக் கிடைக்க வேண்டும் என்பதற்காகத்தான், திரும்பத் திரும்பச் சொல்லி, இந்த உணர்வின் ஆற்றலை, உங்களுக்குள் பதிய வேண்டி உபதேசிப்பது. ஆக, மகரிஷிகளின் அருள், ஆற்றல் மிக்க இந்த நிலையை, நீங்கள் பூரணமாக அடைவதே  மெய்.

ஆகவே, இதைப் பருகும் பாதை, ஒரே பாதைதான். நமது குருநாதர் காட்டிய அருள்வழி கொண்டு தியானிப்போம். உங்களுடன் வாழ்ந்து வளர்ந்த அன்னை தந்தையோ, தாத்தா பாட்டியோ, அத்தனை பேரும் நாம் மக்களாகப் பிறந்தபின்,
குழந்தைகளை வளர்க்க வேண்டுமே என்ற எண்ணம் கொண்டு,
குழந்தைகள் உயர்ந்த நிலைகளில் இருக்க வேண்டுமென்று
பல வேதனைகளை அனுபவித்து,
அதனால், நோயாகி சாகப் போகும் பொழுது,
அய்யோ, இவ்வளவு சம்பாதித்து வைத்திருக்கின்றேனே?,
என்ன பண்ணப் போகின்றானோ? என்ற வேதனை கொண்டு,
யார் மேல் அந்த ஏக்கத்தைக் கொண்டார்களோ, அந்த வேதனையை உருவாக்கிக் கொண்டு, உடலை விட்டுப்போன பின்பு, யார் மேல் எண்ணம் கொண்டார்களோ, அவர்கள் உடலிலே இந்த ஆன்மாக்கள் போய்விடும்.

மீண்டும் இந்த பூமியின் ஈர்ப்புக்குள் சென்று, நாம் எடுத்துக் கொண்ட நிலையை அங்கே மறைக்கச் செய்து, இந்த மனித உடலுக்குள்ளேயே, சாகாக்கலை என்ற நிலையில் இங்கே வந்துவிடுகின்றோம். விஷம் சாவதே இல்லை, எதிலேயும் கலந்து, அது வளர்ந்து கொண்டேதான் இருக்கும்.

ஒவ்வொன்றிலும் வேகாக்கலை  என்ற நிலையைப் பெற,  ஒவ்வொரு நிமிடமும், மகரிஷிகளின் அருள் சக்தியை நமக்குள் சேர்த்து, நம்முடன் வாழ்ந்து வளர்ந்து உடலைவிட்டுப் பிரிந்து சென்ற, அந்த முன்னோர்களின் உயிரான்மாக்களை, விண் உலகமான சப்தரிஷி மண்டல ஒளி அலைகளுடன், கலக்கச் செய்ய வேண்டும்.

இன்று விஞ்ஞான அறிவு கொண்டு, ஒரு இயந்திரத்தை உருவாக்கி, அதே சமயத்தில், விண்ணிலே இராக்கெட்டை உந்தி ஏவுகின்றனர்.
அந்த விண்வெளியின் உணர்வின் தன்மைதான்,
நமக்குள் எடுத்து, சக்திவாய்ந்த எண்ணங்களாக மாறி,
நாம் அந்த உணர்வின் வலுக் கொண்டு,
நம்முடன் வாழ்ந்து வளர்ந்த இந்த உயிரான்மாக்களை,
இராக்கெட்டை ஏவுவது போல,
அந்த உணர்வின் தன்மை கொண்டு, விண் செலுத்த வேண்டும்.

இன்று, இராக்கெட்டை ஏவியபின், ஆண்டெனா T.Vக்களில் சாதாரணமாக வைத்துள்ளார்கள்.
இராக்கெட்டில் செலுத்திய,
"இயந்திரத்தில் பதிவு செய்து",
அங்கே ஏவிய அந்த உணர்வுகள்,
மற்ற கோள்களின் நிலைகளை உணர்ந்து,
கவர்ந்து கொண்டாலும், இயந்திரத்திற்குள் அது, பதிவு செய்கின்றது. அது அலைகளை ஒளிபரப்பு செய்யும் பொழுது, தரையில் இருக்கும் இயந்திரத்திற்குள், ஆண்டெனா பவர் வெகு தொலைவில் இருப்பதை அது கவர்ந்து, உணர்ந்து, இங்கே தரையில் இருக்கக் கூடிய இயந்திரத்திற்குள் பாய்ச்சியபின், மனிதன் விஞ்ஞான அறிவால், தான் கணக்கிட்ட வழிப்படி, அவன் எடுத்து, விண்ணின் ஆற்றலை அறிகின்றான்.

நம்மை உருவாக்கிய முன்னோர்கள், எத்தனையோ வேதனைகள் எடுத்து, அந்த உடல்கள் அழுகினாலும், அவர்கள் உடலுக்குள் நம்மைக் காத்திடும் உணர்வுகள் உண்டு. 

நாம் மெய்ஞானிகளின் உணர்வுகளை நமக்குள் வளர்த்து, நாம் இதைப்போல உணர்வின் நிலை வலுக்கொண்டு, நாம் அனைவரும் ஒன்றாகச் சேர்ந்து, அந்த ஞானிகளின் உணர்வின் வலுக்கொண்டு, உடலை விட்டுப் பிரிந்து சென்ற நம் முன்னோர்களின் உயிராத்மாக்கள், "சப்தரிஷி மண்டலங்களுடன் இணைய வேண்டும்", என்று சக்தி வாய்ந்த எண்ணத்தைக் கொண்டு,  உந்தித் தள்ளுவதே பவுர்ணமி தியானம்.

அவ்வாறு உந்தித் தள்ளியபின், உங்களுடன் வாழ்ந்து வளர்ந்து, உங்களைக் காத்திட்ட நல்ல உணர்வுகள், அங்கே விண்ணிலே சென்றபின், இன்னொரு உடலாகப் பெறும் உணர்வுகள், அதிலே கலந்த நஞ்சினை வென்ற மகரிஷிகளின் அருள் வட்டத்திற்குள் சென்றவுடனே,
அது பஸ்பமாகி, அந்த ஒளிக் கடலிலே, 
ஒளிச் சரீரமாக மாறிவிடுகின்றது.

அவ்வாறு நம் முன்னோர்கள் அங்கே ஒளியின் சரீரமாக ஆனபின், இங்கு உடலிலே இருக்கும் நாம், மீண்டும் அங்கே விண்ணை நோக்கி எண்ணங்களை செலுத்தும் பொழுது,
நம் நினைவின் அலைகளுக்கு, கண்களின் உணர்வுகளுக்கு,
சக்திவாய்ந்த ஆண்டெனா பவர் கிடைக்கின்றது.

இதைப் பல ஆயிரம் பேர் கூடி, உணர்வின் தன்மை பெறவேண்டும் என்று நாம் கூட்டுத் தியானங்களில் ஒருங்கிணைந்து, இந்த எண்ணங்களை ஒலிபரப்புச் செய்யும் பொழுது, சூரியனின் காந்த சக்தியால் கவர்ந்து, 
அந்த உணர்வின், சக்தி வாய்ந்த நிலைகள்,
அணுவின் ஆற்றலாகப் பெருகுகின்றது.

உதாரணமாக, பாடகர் ஒருவர் இருக்கின்றார். அவர் பாடல்கள் பாடும் பொழுது, பக்க வாத்தியங்கள் இசைக்கின்றனர். இவையனைத்தும் ஒருங்கிணைந்து சேர்ந்து, அந்த உணர்வின் ஒருங்கிணைந்த ஆற்றல், அது சூரியனின் காந்த சக்தி கவருகின்றது. அதை நுகர்ந்து, நம் செவிப்புலனில் தாக்கப்படும் பொழுது, அங்கு ஒலிபரப்பாகும் உணர்வின் நிலைகள்,  நமக்குள் மகிழ்ச்சியூட்டும் நிலைகளாக, இயங்குகின்றது.

இதைப் போலத்தான், அந்த மெய்ஞானியின் உணர்வின் சக்தியைத் தூண்டச் செய்யும் பொழுது, இந்த உணர்வின் தன்மை, புலனறிவால் கண்ணின் நினைவலைகளுக்கு அது ஓட்டச் செய்து,
விண்ணுலகம்,
உங்கள் நினைவுகளுக்கு எட்டச் செய்வது.
ஆனால், அவர்களை உந்தித் தள்ளியபின்,
அவர்களுடைய உணர்வுகளே, நாம்.
இதே நினைவினை, விண்ணை நோக்கிச் செலுத்தும் பொழுது, அந்த உணர்வின் ஆற்றலை நாம் நுகர நேருகின்றது.

அந்த உணர்வின் தன்மை, நமக்குள் நினைவலைகளால் இயக்கும் பொழுது, இந்த பூமியிலே வாழ்ந்த அந்த மகரிஷிகள், அவர்கள் உடலிலே தீமையை விலக்கிடும் உணர்வுகள் விளைந்து, இந்த உணர்வுகளை சூரியனின் காந்தசக்தி கவர்ந்திருப்பதால்,  இங்கு படர்ந்திருப்பதை ல்லாம்,  நாம் நுகரும் தன்மை வருகின்றது.

அந்த மகரிஷிகள் அவர்கள் வாழ்க்கையில் நஞ்சினை வென்ற நிலைகளும், வாழ்க்கையைச் சீராக ஓட்டிய நிலைகளும், இந்த உணர்வுக்குள் வந்தபின், அந்த ஆற்றல்மிக்க சக்தியை நாம் நுகர நேருகின்றது. அதன்வழி நாம் விண் செல்வது எளிதாகின்றது. எமது அருளாசிகள்.

   (பக்கம் 52-54)

உங்களுடைய மூதாதையர்கள் விண் செல்ல வேண்டும், அதனுடைய மார்க்கத்தைக் காட்டியபின்தான், உங்களின் நினைவலைகள் கொண்டு, மகரிஷிகளின் அருள் சக்தியை நினைவு கூர்ந்து, உங்களுக்குள் ஆக்கச் சக்தியாகக் கொடுத்தது.

பிறருடைய நலம் காக்க, அவர்கள் மகரிஷிகள் அருள் சக்தி பெறவேண்டும், என்ற எண்ணத்தை உருவாக்கினால், உங்களுக்குள் அந்த நலம் காக்கும் சக்தி வளர்கின்றது. தீமையை உருவாக்கும் உணர்வுகள் வளராது, தடைப்படுகின்றது. இதுதான், கீதையிலே நீ எதை நினைக்கின்றாயோ, அதுவாகின்றாய் என்று சொன்னது.

நஞ்சினை வென்றிடும், அருள் ஞானிகளின் அருள் உணர்வை உங்களுக்குள் வளர்த்து, நீங்கள் இடும் மூச்சலைகள், மனித உடலில் விளைய வைத்த, அந்த நஞ்சினை வென்றிடும் சக்தியாக மலரவேண்டும்.

எப்படி, வேப்ப மரத்தின் கசப்பான தன்மைகள், ஒரு ரோஜாப்பூவின் நல்ல நறுமணத்தின் தன்மை கொண்டு, அது தனது வலுவான நிலைகொண்டு, மற்றதை விலக்கித் தள்ளுகின்றதோ,  இதைப் போல
உங்கள் மூச்சின் அலைகள் வெளிப்படுவது,
மனித உடலுக்குள்,
நஞ்சு கொண்ட நிலைகளைத் துரத்தி, வெளியேற்றி,
அதனைச் செயலற்றதாக ஆக்கி,
உங்கள் உணர்வினை வலுவாக்கி,
அதனை மாற்றும் நிலையாக, ஆக வேண்டும்.

அதே உணர்வுகள், நமக்குள் வந்தால், நாம் வேகாக்கலை என்ற நிலையை அடையும் தன்மை வருகின்றது. வேகாக்கலை என்ற நிலை அடைந்த, மகரிஷிகளின் அருள் சக்தி நீங்கள் அனைவரும் பெறவேண்டும். இந்த உணர்வின் சக்தி, உங்களுக்குள் வளர்ந்திட வேண்டும். உங்கள் மூச்சலைகள் உலகைக் காத்திட வேண்டும். விஞ்ஞான அழிவிலிருந்து, உங்கள் உடலுக்குள் இருக்கும் நல் உணர்வைக் காத்திட வேண்டும். எமது அருளாசிகள்.

 (பக்கம் 59-65)

ஒரு குடம் பாலுக்குள், ஒரு துளி விஷம் பட்டால், அதைப் பிரித்துவிட முடியாது. அந்த விஷம், ஒரு குடம் பாலையும் தன் இனத்தால் தன்னுடைய சாகாக் கலையாக மாற்றிவிடும்.
ஒரு குடம் பாலில்,
பல ஆயிரம் குடம் பாலை விடும் பொழுது,
இதனின் சக்தி ஓங்கி, நஞ்சின் தன்மை சிறுத்து,
ஆனால், ஆக்கச் சக்தியான வலுவை ஊட்டும்.

இன்று மருந்தை நாம் உட்கொண்டாலும், அது பல நோய்களை நீக்க உதவி செய்தாலும், அதற்குள், வீரியத் துடிப்பான நஞ்சினைக் கலந்துதான், உங்களுக்குள் வரும் நோயினை நீக்கக் கொடுப்பார்கள். அந்த நோயினை நீக்க,
மருந்துக்குள் நஞ்சினைப் பாய்ச்சி,
அதை எதிர்த்திடும் இந்த உணர்வின் மணத்தால்
இந்த நஞ்சு, வீரிய உணர்வு கொண்டு செல்லும் பொழுது
இந்த உணர்வுகள் ஊடுருவி
எங்கே நஞ்சு கொண்ட வேதனை இருக்கின்றதோ
அதனுடைய செயலை, இந்த மணம் ஊடுருவி
வேகமாகச் சென்று, அதனை அடக்கும்.

இப்படி, நாம் உணவாக உட்கொள்ளும் நிலையானாலும், இன்று வைத்திய ரீதியில் விஞ்ஞான அறிவு கொண்டு, நமக்குள் இன்று சர்க்கரைச் சத்து இருக்கின்றது என்றால், நாம் இன்சுலின் செய்து, நமக்குள் சர்க்கரைச் சத்திற்கு எதிர்ப்பு உணர்வாக அதைக் காட்டி, அதனை அடக்கிடும் உணர்வாக செயல்படுத்துகின்றது.

ஆனால், அதை நாம் சிறுகச் சிறுக போட்டுக் கொண்டு இருந்தோமேயானால், இன்சுலின் இல்லை என்றால், வேறு எந்த மருந்து போட்டாலும் ஆகாது.  நமக்குள் அது மாற்ற முடியாத நிலைகளும், ஒவ்வொரு நாளும் அந்த நரக வேதனையான நிலைகளில், நமக்கு நாமே ஊசி குத்திக் கொண்டு, குறைத்திடும் நிலை வரும்.

ஆகவே, சிறுகச் சிறுக சர்க்கரை சத்து வரும். அதை மாற்றுவதற்காக மருந்து கொடுப்பார்கள். இது சிறுகச் சிறுக சேர்ந்து, சர்க்கரை மருந்து கூடும். சர்க்கரையை முறிக்க முடியாத நிலையில், நமக்கு நரம்புத் தளர்ச்சி வரும். நாம் எடுக்கும் உணர்வுகள்,  சர்க்கரையை ஜீரணிக்காத நிலை வரும், தளர்ந்து விடும். அதன்பின், கல்லீரல், மற்ற உறுப்புக்களைப் பாதிக்கும் நிலை வருகின்றது.

நாம் தவறு செய்யவில்லை. மனிதனாக வாழவேண்டும் என்று பொருள் சேர்த்தபின், இந்த உடலிலே நாம் சேர்த்துக் கொண்ட நஞ்சின் தன்மை, சிறுகச் சிறுக சேர்ந்து, எனக்கு இப்படி வந்துவிட்டதே, இவ்வளவு செல்வத்தைச் சேர்த்தேன் என்று நலிவடைந்து வரும் பொழுது, ஒருவருக்குக் கடன் கொடுத்து, அவர் சரியாகக் கொடுக்கவில்லை என்றால்,
நலிந்த நிலைகளில் அவர் மேல் எண்ணத்தைச் செலுத்தும் பொழுது,
நான் இவ்வளவு சிரமப்பட்டுக் கொண்டிருக்கின்றேன்,
எனக்குப் பணம் கொடுக்க மாட்டேன் என்கின்றாரே
என்ற இந்த நிலையில்,
இந்த உணர்வை வளர்த்துக் கொண்டால்,
இந்த உடலை விட்டுச் சென்றபின்,
அவர் உடலுக்குள் செல்லத் தயாராகி விடுகின்றோம்.

அந்த வேதனையின் உணர்வுகள் எடுத்து, உடலைவிட்டு அந்த உடலுக்குள் சென்றவுடன், இதே இன்சுலின் போடக்கூடிய நிலைகளில், அந்த உணர்வின் தன்மை அங்கே நஞ்சாக விளைவிக்கச் செய்து, அது சாகாக்கலையாக, மனித உடலுக்குள் நஞ்சினை வளர்த்து, இதனுடைய நிலைகள், சிறுகச் சிறுக நஞ்சு கொண்ட உணர்வுகளாக மாறி,
நஞ்சினை நீக்கிடும் உடல் பெற்ற நாம்,
நஞ்சினை நீக்கிடும் ஆறாவது அறிவாக
நஞ்சினை நீக்கி, நல்ல உயர்ந்த நிலைகளை இணைத்து,
நமக்குள் படைத்திடும் திறன் கொண்ட, ஆறாவது அறிவை,
நமக்குள் இழக்கச் செய்யும் பொழுது, எந்த நிலைகள் அடைகின்றது?
என்ற நிலையை, இன்று விஞ்ஞான அறிவில் தெரிந்து கொண்டாலும், எப்படி ஆகின்றது? என்று நமது குருநாதர் காட்டுக்குள் சென்று, தாவர இனத்துக்குள், அது எப்படி மாற்றமாகிறது?என்பதையும், எமக்குத் தெளிவாகக் காட்டினார்.

இதைப் போல, இன்று ஒவ்வொரு இடங்களிலும் எல்லாம் செழிப்பாக இருந்தாலும், நான் போடுகிற வெள்ளாமையே சரியில்லையே, ராசியாகின்றதில்லையே, என்று சொல்லும் பொழுது,
நம்முடைய மூச்சின் உணர்வே இயக்கமாகி,
நாம் எடுத்துக் கொண்ட உணர்வுகள்
நம்மையறியாமலேயே இயக்குகின்றது, 
என்ற நிலையைப் புரிந்து கொள்வதற்கே,
இதைச்சொல்லுகின்றோம்.

உங்களுக்குள், ஆறாவது அறிவின் தன்மை துணைகொண்டு,
மெய்ஞானியின் உணர்வை நீங்கள் நுகர்ந்தறிந்து,
உங்களிடம் தீமையை விளைய வைக்கும், நிலையை அடக்கி,
அதை அடக்கும் உணர்வின் தன்மையையே, 
யாம் இப்பொழுது இங்கே வெளிப்படுத்துகின்றோம்.

நாம் உணவாக உட்கொண்ட, தாவர இனத்தை கண்ணுற்றுப் பார்க்கும் பொழுது, அதனை மகிழ்வு கொண்டு நாம் பார்க்கும் பொழுது, அந்த உணர்வின் தன்மையை ஊடுருவி பாய்ச்சும் பொழுது, அது நல்ல விளைச்சலாக, நல்ல ராசியாக, நல்ல மகசூல் பெறுவதை நீங்கள் பார்க்கலாம். ஏனெனில்,
அதிலிருந்து பெற்றதுதான், புற உலகின் மணம்.
நமக்குள் அது வரும் பொழுது,
சரீரத்திற்குள், அந்த நிலைகள் எண்ணங்களாக மாறுகின்றது.
இந்த எண்ணத்தின் வலுவின் தன்மை, இயக்கச் சக்தியாக மாறுகின்றது.

இதைத்தான், நாராயணன் பூலோகத்திற்கு வந்து, சீதாராமனாகப் பிறக்கிறான் என்று காவியங்களில் தெளிவாக எடுத்துரைத்தனர்.

இராமனோ, தான் எய்த அம்பைத் திரும்ப வாங்கிக் கொள்வான். நான் ஒருவரைக் கெடுதல் செய்ய வேண்டுமென்று எண்ணுகின்றேன், இது சீதா-சுவை. அது சொல்லாக எனக்குள் வரும் பொழுது, உங்கள் மேல் பாய்ச்சுகின்றது.
கெடுக்க வேண்டும் என்ற அந்த உணர்வு, அம்பாகப் பாய்ந்தவுடனே,
இரு உன்னை நான் பார்க்கிறேன் என்று
திரும்பி அந்த அம்பு எனக்குள் வரும்
என்று காவியங்களில் தெளிவாக எடுத்துரைத்துள்ளனர்..

அதே சமயம், வாலி மிகவும் வலிமை பெற்றவன். ஆனால், வாலி பிறரைப் பார்த்தானென்றால், பிறர் எவ்வளவு வலிமை கொண்டிருந்தாலும், வாலி தன் கண் கொண்டு பார்ப்பானேயானால், அவனுடைய வலுவில், சரிபகுதி வலு பெற்றுவிடுவான் என்பார்கள்.

ஒரு போக்கிரி, தன்னுடைய வலு அதிமாக இருக்கும் பொழுது, நீங்கள் எவ்வளவுதான் உயர்ந்த குணங்கள் கொண்டிருந்தாலும், எத்தனை ஆயிரம் பேரை சமாளிக்கக் கூடிய திறன் இருந்தாலும், அவன் மேல் பார்வை பட்டவுடனே, என்ன பலம் இருந்தாலும், அனைத்தையும் இழக்கச் செய்து, நமது வலு பூராவும் அங்கே சென்றுவிடுகின்றது.

இன்று சென்னையில் பார்க்கலாம். ஒரு கராத்தே மாஸ்டர், அவர் பல அடுக்கு ஓடுகளை ஒரே சமயத்தில் வெட்டிவிடுவார். ஆனால் அவர் வீட்டிலே, வெறும் தடியைக் கொண்டு கதவை உடைத்து, அவரை அடித்து, எல்லாப் பொருளையும் எடுத்துக் கொண்டு போகும் நிலை உள்ளது.

ஆக, நாம் எத்தகைய வலுகொண்டு,
அசுர உணர்வு கொண்டு,
அதை வளர்த்துக் கொண்டோமோ,
அதற்குத் தகுந்த, முரட்டுப் புத்தி வரும்.
எதைச் சொன்னாலும், அலட்சிய புத்தி வரும்.

ஆக, இதே மாதிரி எடுத்துக் கொண்ட உணர்வின் தன்மை, யாராவது எதையாவது சொன்னால், இரு உன்னைப் பார்க்கின்றேன் என்ற இந்த உணர்வுதான் வளரும். இதைப் போன்று நாம் எண்ணினால்
நமக்குள் வரும் நிலையையே,
முரடனின் நிலையை,  வாலியாகச் சித்தரித்தார்கள் ஞானிகள்.

எண்ணங்கள்,  பிறருடைய நிலைகளைக் கவரும் சக்தி கொண்டது. ஆகவேதான், நஞ்சு கொண்ட உணர்வு கொண்டு, வாலியை வெல்வது முடியாது, என்று, இராமாயணத்தில் மிகத்தெளிவாக எடுத்துக் கூறியுள்ளார்கள்

ஆகவே, ஒருவர் தீமையாகப் பேசினால், நேரிடையாகப் பார்க்கும் பொழுது, நல்ல குணங்கள் அனைத்தும் அழிந்துவிடுகின்றது.

நான் ஒன்றுமே செய்யவில்லை, இப்படிப் பேசுகின்றான் பாவி, என்று அவர்களுடைய உணர்வை எடுத்துக் கொண்டபின், நஞ்சின் தன்மை கொண்டு, பதட்டத்தில் நான் ஒன்றுமே செய்யவில்லை, பாவிப்பயல், இப்படிச் செய்கின்றான் என்றவுடன்
அவன் அடக்கிக் கொண்டு இருப்பான்.
ஆக, இந்த வலுவின் தன்மை அங்கே சென்று,
இப்படிப் பேசினால், நான் சும்மா இருப்பேனா?
என்று கூறும் நிலையும், அங்கே வருகின்றது.

இவையெல்லாம், நம் வாழ்க்கையில் எவ்வாறு வருகின்றது? என்பதை இராமாயணம், கந்தபுராணம், கீதை, இவைகளில் தெளிவாகக் கூறியிருந்தாலும், அவைகளைக் குப்பையில் போட்டுவிட்டு, நம்மை ஏமாற்றும் நிலையிலும், யாகங்கள் செய்தால், வேள்விகள் செய்தால், கடவுள் நமக்கு நேரிடையாகக் கொடுப்பான் என்ற இந்தத் தன்மை கொண்டு, உண்மையை நாம் அறியாது, மெய் உணர்வை நாம் அழித்துக் கொண்டு, இன்றைய நிலைகளில் உள்ளோம். 

நாம் விஞ்ஞான அறிவுக்கு முக்கியத்துவம் கொடுத்து, அந்த விஞ்ஞான நிலைகள் நமக்குப் பயன்பட்டாலும், அது உடலுக்கே.

ஆக உயிருடன் ஒன்றிய உணர்வின் தன்மை கொண்டு, என்றும் அழியாத சரீரம் பெறுவதே, வேகாக்கலை என்று மெய்ஞானிகள் காட்டியது. அதை நாம் அனைவரும் பெறுவோம், எமது அருளும், மாமகரிஷி ஈஸ்வராய குருதேவரின் அருளும், உங்கள் அனைவருக்கும் என்றென்றும் உறுதுணையாக இருக்கும். அருளாசிகள்.

 (பக்கம் 66-73)
இப்பொழுது, விஞ்ஞான அறிவு கொண்டு, கிருமிகளின் யுத்தங்களை உண்டாக்கி, TB என்ற நோயினைப் போக்குகின்றனர். அதே சமயத்தில், கேன்சர் என்ற நிலையில், மனிதனின் இந்த வாழ்க்கையில், அடிக்கடி வேதனை வேதனை என்ற நிலைகள் வந்தவுடன், நெகட்டிவ், பாசிட்டிவ் என்ற இந்த உணர்வுகள், நமக்குள் கொடிய நஞ்சினை உணவாக உட்கொள்ளும், அணுவாக விளைந்து விடுகின்றது.

அதனின் மணத்தை அது விழுதுகளாக்கி, அந்த மலம் எங்கெல்லாம் படுகின்றதோ, நல்ல உணர்வை மாய்த்து, உணர்வின் தன்மை நோயாக, நாம் தாங்க முடியாத நிலைகளில், வலுக்கொண்ட ஒரே அணு அதனுடைய மலத்தை ஊடுருவச் செய்யும் பொழுது, நஞ்சின் தன்மையாக பீய்ச்சிக் கொண்டு இருக்கின்றது.

உதாரணமாக, ஒரு விஷப் பூச்சி உண்டு. அதனை நாம் தொட்டுவிட்டால், அப்படியே சூடு போட்டுவிடும். இதைப் போலத்தான் TB என்ற நிலைகள், நமது உடலுக்குள் இருக்கும் அணுக்களை உணவாக உட்கொள்கின்றது. ஆனால், இதனுடைய மலமாகும் பொழுது, எலும்பு கரைகின்றது.

கல்லுக்குள் தேரை எவ்வாறோ,
அதாவது, அணுவின் உயிரணு கல்லுக்குள் சிக்கிவிட்டால்,
அதனின் உணர்வுகள், அது காலத்தில்,
வெப்பத்தால் அந்த உயிரணுவின் துடிப்பு இருந்தாலும்,
தாவர இனச் சத்துக்கள், அது நீருடன் கலந்து, அதே பாறையில் பட
அதற்குள் இருக்கக் கூடிய, காந்த அலைகள் அதை நுகர
இந்த நீரின் தன்மை,
உள்ளுக்குள் சென்ற பின் ஆவியாக மாறுகின்றது.
அந்தச் சத்தின் தன்மை ஆவியாக மாறும் பொழுது,
அந்தப் பாறைக்குள் இருக்ககூடிய அந்த உயிரணு,
இதை நுகர்ந்து, அந்த உணர்வின் தன்மை,
இந்தப் பாறையின் தன்மை கொண்டு,
அந்த உணவாக உட்கொள்கின்றது.

ஆக, அந்த அணு தனக்குள் இந்த சத்தான பின், மலமாக மாறுகின்றது. மலத்தின் தன்மை கல்லுக்குள் பட்டவுடனே, அது கரைகின்றது. கரைந்த நிலைகள் கொண்டு, இந்த பூமியின் வெட்கையில் ஆவியாக மாறுகின்றது. அதனின் உணர்வை, இந்த உயிரணு சுவாசிக்கும் பொழுது, தேரையாக வளர்கின்றது.

ஆகவே அந்தத் தேரைக்குள் நீர் எங்கிருந்து வருகின்றது? தேரையை எடுத்தால் பிசுக் பிசுக் என்று இருக்கும். அதற்குள் தண்ணீர் போக வழி இல்லை. காரணம்,
ஆவியாக வருவதை, தான் நீராக எடுத்துக் கொண்டு
உணர்வின் சத்தை தனக்குள் வளர்த்துக்கொண்டு
கல்லைக் கரைத்து, அதை ஆவியாக்கி
அந்த உணர்வை, உடலாக எடுத்து
அது உடலாக மறைத்து எடுத்துக்கொள்கின்றது.

இதைப் போலத்தான், நமது உடலுக்குள் இருக்கக் கூடிய, TB நோயும், கேன்சர் நோயும். மனித வாழ்க்கையில், நாம் எதிர்பாராத நிலைகள் கொண்டு, 
பிறருடைய வேதனைகளைக் கேட்டறிந்து,
அடிக்கடி வேதனை கொண்ட நாம், 
இந்த உணர்வின் தன்மை உருண்டு, திரண்டு, நஞ்சு கொண்ட உணவாக, கேன்சர் என்ற இந்த அணுவின் தன்மை, ஊடுருவும் பக்கமெல்லாம் தசைகளை நோகச் செய்து, நல்ல உணர்வினை தனக்குள் சத்தாக எடுத்து, அதனைக் கரைத்திடும் உணவாகி, அது உட்கொள்கின்றது.

நமது, உடம்புக்குள் இருக்கும் உணர்வுகள், எலும்புக்குள் இருக்கும் அணுக்கள், அது இடும் மலத்தால், எலும்புகளை உருகச் செய்து, அதனை ஆவியாக எடுத்து வரும்பொழுது, அது எலும்பை உருக்குகின்றது. இயற்கையின் நிலைகள் இவ்வாறு மாற்றமடைகின்றது.

வீட்டில் சங்கடமாக இருப்பீர்கள். அதே நேரத்தில் தபோவனம் வந்து இருப்பீர்கள். ஒரு நண்பனிடத்தில், பாசமாக இருப்பீர்கள். உயர்ந்த குணங்கள் கொண்டு இருப்பீர்கள். அதிலே, கொஞ்சம் நஞ்சு கலந்திருக்கும். அந்த நஞ்சு கலந்தவுடன், சுவை கெட்டுப் போயிருக்கும்.

அதே சமயம், இங்கே உபதேசம் கேட்டுக்கொண்டு இருக்கின்றீர்கள். அருள் ஞானியின் நிலைகளைப் புகுத்தியவுடன், இந்த ருசியின் தன்மையை அதிகமாக்கி, சுவை கொண்டதாக மாற்றும். சுவை அற்றதாக்கும், அந்த உணர்வினை வென்றவன் ஞானி.

அவனின் உணர்வை உங்களுக்குள் சேர்க்கப்படும் பொழுது, அந்த வேதனையான உணர்வின் தன்மையைக் குறைக்கச் செய்யும். குறைக்கச் செய்ய வேண்டும் என்பதற்காகத்தான், மணிக்கணக்கில் உபதேசிப்பது. 

மணிக்கணக்கில் உபதேசித்தாலும் சாமியிடம் வந்து, என்னுடைய கஷ்டம் நிவர்த்தியாக வேண்டும், மகரிஷிகளின் அருள் சக்தி பெறவேண்டும் என்று யாரும் கேட்பது கிடையாது.
காரணம் நாம் அல்ல.
நமக்குள் விளையவைத்த உணர்வுகள், நமக்குள் இயங்குகின்றது.
மாற்ற முடியவில்லை.
மாற்ற வேண்டும் என்பதற்காகத்தான் உபதேசிப்பது.
தீமையை வென்ற, உங்கள் மூச்சலைகள் இங்கே படரவேண்டும்.

எப்படி, வேப்பமரத்தின் கசப்பான நிலைகளைக் கண்டவுடன் ரோஜாப்பூவின் மணம் ஓடுகின்றதோ, ஓடும் நிலைகளில் விஷத் தன்மையான நிலைகள் சிக்கி, ஒரு புது உணர்வின் தன்மையாக மாறுகின்றது.
விஷமே இயக்கமானது.
தடுத்து நிறுத்துவதற்கும்,
இணைப்பதற்கும் விஷமே முக்கியமானது.

சப்தரிஷி மண்டலங்களும், அதே போல முதல் முதல் மனிதனான அகத்தியன், அணுவின் ஆற்றலை உணர்ந்து, உணர்வின் தன்மை தனக்குள் பெருக்கிய அந்த மாமகரிஷிதான், இன்றும் வேகாக்கலை என்ற நிலையில், இன்று துருவ நட்சத்திரமாக இருந்து கொண்டு இருக்கின்றார்.

அவன் உடலில் இருந்து வரும், உணர்வின் ஆற்றலை நீங்கள் பருக வேண்டும், உங்களையறியாது சேர்ந்த நஞ்சின் தன்மையை அடக்கி, எந்த உயர்ந்த குணங்கள் கொண்டீரோ, அந்த மெய்ஞானிகள் உணர்வின் தன்மையை, என்றும் உயிருடன் உணர்வுகள் அழியாத் தன்மை கொண்டு, வேகா நிலைகள் பெறும் தன்மையே,
இப்பொழுது உங்கள் அனைவருக்குள்ளும்,
நமது குருநாதர் ஊட்டிய உணர்வின் நிலைகள் பெற வேண்டும்.
உங்கள் மூச்சின் அலைகள் படர வேண்டும்.

நீங்கள் எதைப் படைக்கின்றீர்களோ, அந்த உணர்வு வெளிப்படும் பொழுது, சூரியனின் காந்த சக்தியால் கவர்ந்து, இதனின் அலைகளைப் பெருக்க வேண்டும்.

மெய்ஞானிகளின் உணர்வின் நிலைகள்,
இன்றும் சப்தரிஷி மண்டலங்களாக சுழன்று கொண்டு இருந்தாலும்,
அவர்கள் உடலுடன் இருந்த காலங்களில்,
அவர்கள் வெளிப்படுத்திய, 
"தீமையை வென்ற அரும்பெரும் சக்திகள்"
பூமியில் படர்ந்து கொண்டு இருப்பதை
சூரியனின் காந்த சக்தி கவர்ந்து கொண்டுள்ளது.

ஆகவே, இதைப் பருகச் செய்வதும், எடுக்கச் செய்வதும், மனித வாழ்க்கையில் வரும் இடையூறுகளையும், நஞ்சினையும் வென்று, நஞ்சினை அடக்கி, உணர்வின் தன்மை ஒளியாக மாற்றும் நிலையேதான், இப்பொழுது யாம் செய்வது. எமது அருளாசிகள்.

Inline image 3