ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

July 10, 2012

குரு வழியில் ஞானகுரு (2)


சாமி புத்தகம்  குரு வழியில் ஞானகுரு  (2)
(பக்கம் 1-5)
மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் அருளிய அருள்வழிப்படி, “ஓம் ஈஸ்வரா குருதேவா” என்றால், காலையில் இருந்து இரவு வரையிலும்
நாம் எதைப் பார்க்கின்றோமோ,
எதைக் கேட்கின்றோமோ,
எதை நுகர்கின்றோமோ,
அவை அனைத்தையும், நமது உயிர் “ஓ” என்று இயக்கி “ம்” என்று உடலாக மாற்றுகின்றது.

நமது உயிர், நமது உடலிலே “ஓ” என்று இயங்கிக் கொண்டே உள்ளது. நாம் எதையெல்லாம் எண்ணி நுகர்கின்றோமோ, நுகர்ந்த உணர்வை அறிகின்றோம். இவ்வாறு நமக்குள் எத்தனை வகை குணங்களை நுகர்ந்தறிகின்றோமோ, அக்குணங்களின் செயலாக்கங்களை அறிந்து கொள்கின்றோம்.

ஆனால், அறிந்த அவ்வுணர்வுகளை, நமது உயிர் “ஓ” என்று ஜீவ அணுவாக மாற்றி, ”ம்” என்று நம் உடலோடு இணைத்து விடுகின்றது. இவ்வாறு இணைப்பதைத்தான், “ஓ...ம் நமச்சிவாய” “ஓ...ம் நமச்சிவாய” என்று மாமகரிஷிகள் உபதேசித்த சாஸ்திரங்களில், தெளிவாக்கப்பட்டு உள்ளது.

இவ்வாறு காலையிலிருந்து, இரவு வரையிலும் நாம் பார்த்தது எதுவோ, கேட்டது எதுவோ, இந்த உணர்வுகளை நமக்குள், சதா உடலாக மாற்றிக் கொண்டே உள்ளது, நமது உயிர். இதைத்தான் “சதா சிவம்” என்று தெளிவாக்கினர் ஞானியர்.

ஆகவே, நம் உடலுக்குள் இருக்கும் அனைத்து குணங்களுக்கும், நம் உயிரே குருவாக இருக்கின்றது. அதைத்தான் “ஓம் ஈஸ்வரா குருதேவா”  என்று ஞானிகள் உணர்த்தினர்.

அதாவது மனிதனானபின், எனக்குள், அனைத்து அருள் ஞானத்தின் உணர்வைப் பதியச் செய்து,
இதற்கெல்லாம் நீயே குருவாக இருக்கின்றாய்,
உருவாக்கி இருக்கின்றாய்,
உணர்த்திக் கொண்டு இருக்கின்றாய் என்று,
நம்மை  இயக்கிக் கொண்டிருக்கும் உயிரான ஈசனை, குருவை, நாம் அறிந்து கொள்ளும்படி செய்தனர் மகரிஷிகள்.

நாம் எண்ணிய உணர்வுகள் அனைத்தும், நம் உடலுக்குள் “ஊழ்வினை” என்ற வித்தாக மாறுகின்றது. உயிர் ஈசனாகின்றது. உடல் சிவமாகின்றது. உடலுக்குள் இருக்கும் நாம் நுகர்ந்த உணர்வுகள் அனைத்தும் “வினை” ஆகின்றது, “விநாயகா”, நுகர்ந்த உணர்வின் இயக்கங்களே “வினை”.

நாம் கோபப்படுவோரை உற்றுப் பார்த்தால், அந்த உணர்வின் தன்மை நுகரப்படும் பொழுது, அந்தக் கோப உணர்ச்சிகள் நமக்குள்ளும் தூண்டப்பட்டு, அந்த உணர்வுகள் நம் இரத்த நாளங்களில் கலந்து, நம் உடலுடன் ஐக்கியமாகி விடுகின்றது. அது நாளடைவில் திரும்பத் திரும்ப எண்ணும் பொழுது, கருவாகி விடுகின்றது. ஆகவே, உயிரின் பாகம் “ஈஸ்வரலோகம்”.

அவ்வாறு, சிரசின் பாகம் நமது உயிர், அணுவாக உருவாக்கும் கருவாக உருவாக்கி விட்டால், அது இரத்தங்களிலே கருத்தன்மை அடையும் பருவம் வரும் பொழுது, “இந்திரலோகம்”.

கருத்தன்மை அடைந்து அணுத்தன்மையாகி வெளிப்படும் பொழுது, “பிரம்மலோகம்”. அதாவது சூட்சுமமாய் இருந்த ஆவித்தன்மை, ஒரு அணுத்தன்மை அடையும் பொழுது “பிரம்மலோகம்”.

நாம் கோப குணத்தின் உணர்வின் தன்மை பெற்று, அணுவாக வெடித்து விட்டால், அந்த அணு
உயிரைப் போன்றே இயக்கம் “ஈசன்”,
ஏற்படும் துடிப்பு “விஷ்ணு”,
ஈர்க்கும் காந்தம் “லட்சுமி”.

எந்த குணத்தின் தன்மை கொண்டு, இயக்க குணமாக ஜீவ அணுவாக உருவாகியதோ, அந்த உணர்வின் தன்மை கொண்டு, கார உணர்ச்சியைத் தூண்டும், கார உணர்வுகளை, உணவாக உட்கொள்ளும் அத்தகைய அணுத்தன்மை. அடைகின்றது. அவ்வாறு அணுவாகி விட்டால், அது தன் இனத்தையே உருவாக்குகின்றது.

ஒரு வித்தினை ஊன்றி, செடியினை வளர்த்தால், அதில் பல வித்துக்கள் வருவது போல, இந்தக் கார உணர்வுகளை ஊட்டக்கூடிய அணுக்கள், தன் இனத்தையே பெருக்கி விடும்.

இதைத்தான் மாமகரிஷிகள், ஓர் அணுத்தன்மை அடைந்தால் “பிரம்மம்” என்றும், பிரம்மாவின் மனைவி “சரஸ்வதி”. அந்த அணு கார உணர்வு கொண்டு உடலானால், அதன் சக்தி, காரத்தின் உணர்ச்சியை வெளிப்படுத்தி, அதன் ஞானமாக விளையச் செய்யும் என்று பொருள்படும்படி உரைத்தனர்.

சுவையின் உணர்வு உடலாக்கப்படும் பொழுது “பார்வதி பஜே நமச்சிவாய”. அந்த உணர்வின் இயக்கமாக இயக்கி, உடலாக மாற்றுகின்றது.

தன் பார்வையில் பட்ட உணர்வுகள் பதியாக,
தன்னுடன் இணைந்து வாழ்கிறதென்றும், 
பார்வையில் பட்ட சக்தி என்ற நிலைகள்
சிவமாகின்றது, என்றும் தெளிவாக்கினர்.

உதாரணமாக, நாம் கோபத்தின் உணர்வை நுகரப்படும் பொழுது, அந்த உணர்ச்சிதான் நம்மை ஆளும். அதைத்தான், “ஆண்டாள்” என்று காரணப் பெயரிட்டு அழைத்தனர்.

அந்த உணர்வுகளைத் திரும்பத் திரும்ப எண்ணி, அணுவானால் அதே உணர்வுகள் நம்மை ஆளும். அதைத்தான், “நம்மாள்வார்” என்று காரணப் பெயரை வைத்தனர்.

ஆகவே, நாம் இந்த வாழ்க்கையில், “கோபம், கோபம்” என்று,
அடிக்கடி இந்த உணர்வை நுகர நேர்ந்தால்,
நம் உடலில் அந்தக் கணக்கின் பிரகாரம்
இரத்தக் கொதிப்பு வருகின்றது.

“வேதனை, வேதனை” என்று சந்தர்ப்பத்தால் நுகர நேர்ந்தால்,
நம் உடலில், வாத சம்பந்தப்பட்ட நோய்கள் வருகின்றது. .

அதீத வேதனையை நுகர நேர்ந்தால்,
கேன்சர் என்ற நோய் வந்து விடுகின்றது.

“வேதனை, சஞ்சலம், சலிப்பு” என்று எண்ண நேர்ந்தால்,
T.B போன்ற நோய்கள் வந்து விடுகின்றன.

இப்படி, நம் குணங்களில் எதை நாம் அதிகமாகச் சேர்க்கின்றோமோ, இதன் கூட்டமைப்பில், நம் உடலுக்குள் சேர்க்கப்படும் பொழுது, அத்தகைய நோயாக மாறுகின்றது. இதை எப்படி நாம் மாற்றுவது?

பாலில் பாதாமைப் போட்டு, அதில் ஒரு துளி விஷம் பட்டால், பாலுக்கும் திறனில்லாது, பாதாமிற்கும் திறனில்லாது போய் விடுகின்றது.

இதைப்போல நம் வாழ்க்கையில், ஆயிரம் நன்மைகளும், பல நல்ல  குணங்கள் கொண்டு, நாம் இயங்கினாலும், இவையனைத்தும் “சதாசிவம்” ஆக்கினாலும்,
நாம் வேதனை என்றோ, அல்லது
எதிர்பாராத விபத்துக்களைப் பார்க்கும் பொழுது,
“அதிர்ச்சி” என்ற நிலைகளையும் நாம் நுகர  நேரும் பொழுது,
நல்ல குணங்களின் செயலாக்கங்கள் இழந்து விடுகின்றது.

இதன் வழியில், நமது குணங்கள் அதிகரித்தால், நமது உடலில் பலவிதமான நோய்களும், சிந்தனையற்ற செயல்களும் உருவாகின்றது. இந்த வாழ்க்கையில் இவ்வாறு நிகழ நேர்ந்தால், இந்த உடலை விட்டுச் சென்றபின், நாம் கீழான பிறவிகளுக்குத்தான் செல்வோம்.

நாம் புழுவிலிருந்து மனிதனாக வரும் வரையிலும், பல விஷத்தன்மை கொண்ட பூச்சிகளாகவும், மிருகங்களாகவும் தாம் வாழ்ந்திருக்கின்றோம்.
பல விஷத்தன்மைகளையும்,
பல தீமைகளையும் நீக்கி நீக்கி,
சேர்த்துக் கொண்ட வினைகளுக்கு நாயகனாக, நமது உடலை உருவாக்கியுள்ளது, நமது உயிரான ஈசன்.

நாம் உணவாக உட்கொள்ளும், உணர்விற்குள் மறைந்து வரும் நஞ்சினை மலமாக மாற்றிவிட்டு, நஞ்சினை நீக்கிடும் உணர்வு கொண்ட, மனித உடலை உருவாக்குகின்றது, நமது உயிர்.

மற்ற மிருகங்களோ, தாம் உணவாக உட்கொள்ளும் உணவிற்குள் இருக்கும் நஞ்சினைக் கரைத்து, உணவாக உட்கொண்டு உடல் வலிமை பெறுகின்றது.

ஆனால் மனிதனோ, பல கோடி நஞ்சினை நீக்கிவிட்டு,
எண்ண வலிமை பெறுகின்றான்.
தன் எண்ணத்தைக் கொண்டு,
அகண்ட அண்டத்தையும் கடந்து சென்று,
அதையும், அறியும் ஆற்றலை உருவாக்குகின்றான்.

ஆகவே, இத்தகைய எண்ண வலிமை பெற்ற நாம், நமது குரு காட்டிய அருள் வழியில், அகண்ட அண்டத்திலிருந்து வரும் எத்தகைய நஞ்சினையும் உணவாக எடுத்து, ஒளியாக மாற்றிக் கொண்டிருக்கும், அந்த துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியைச் சுவாசித்து, அதன் ஈர்ப்பு வட்டத்தில் இணைந்து வாழ்வோம். எமது அருளாசிகள்.

(பக்கம் 10-14)
அகஸ்தியன் இப்புவியில் வாழும்பொழுது, தனது வாழ்நாளில் நஞ்சினை வென்றிடும் சக்தி பெற்று, விண்ணின் ஆற்றலை நுகர்ந்தறிந்து, அந்த உணர்வினை, நஞ்சினை வென்றிடும் பெரும் சக்தியாக மாற்றிக் கொண்டார்.

அவருக்குத் திருமணம் ஆகும்பொழுது, தன் மனைவிக்கு அதை போதித்து, அவர்கள் இருவருமே ஒன்றென இணைந்து, அகஸ்தியன், தான் கண்ட பேருண்மை அனைத்தும், தம் மனைவிக்குக் கூறி, அதைப் போன்று மனைவி, தன் கணவர் கூறிய அனைத்து உர்வுகளையும் கவர்ந்து, அதன் வழியில் அந்த மனைவியும் நுகர்ந்தறிந்து, தன் கணவருக்கு அந்த உயர்ந்த நிலை கிடைக்க வேண்டும் என்றும், அகஸ்தியன் தன் மனைவி மேலும் உயர வேண்டும் என்றும், அவர்கள் இருவரும் ஒன்றென இணைந்து, அவர்கள் நுகர்ந்தறிந்த உணர்வுதான், அவர்கள் இல்லற வாழ்க்கையில் இருளினை அகற்றி, நஞ்சினை வென்று, பேரருளைப் பெறும் தகுதி பெற்றனர்.

நமது சூரியக் குடும்பத்தில்,  27  நட்சத்திரங்களும், பிறமண்டலங்களில் ருந்து கவர்ந்து, பால்வெளி மண்டலங்களாக மாற்றி, அதிலிருந்து வரும் தூசியினையும், துகள்களையும் பிரபஞ்சத்தில் பரவச் செய்யும் பொழுது, சூரியன் தனக்குள் கவர்ந்து பேரொளியாக மாற்றுகின்றது.

சூரியன் இந்த பிரபஞ்சத்தையே ஒளிமயமாக்குகின்றது. அதே சமயத்தில், சூரியன் தனது அரவணைப்பில், ஓர் இயக்கச் சக்தியாகவும் மாற்றுகின்றது.

இதே போன்று, அந்த  27  நட்சத்திரங்களின் உணர்வினைப் பேரொளியாக மாற்றிக் கொண்டிருக்கும் சூரியனைப் போன்று,
அகஸ்தியன் துருவத்தை நுகர்ந்தறிந்து, 
நமது பூமி துருவத்தின் வழி கவர்ந்து
நமது பூமிக்குள் பரவச் செய்யும்,
உயர்ந்த சக்தியினைக் கவரும் ஆற்றல் பெற்றான். 

27 நட்சத்திரங்களும் அது தூசியாக மாற்றி, சூரியன் கவரப்படும் பொழுது, அது போகும் பாதையில், நமது பூமியும் இதைக் கவர்ந்து, நமது பூமிக்குள் இந்த நட்சத்திரங்கள் ஒன்றோடொன்று மோதும்பொழுது, இடி, மின்னலாகவும், மற்ற நிலைகளாகவும், தாவர இனங்களாகவும், பாறைகளாகவும், மேகக் கூட்டத்திற்குள் எதிர் நிலையான நட்சத்திரங்கள் மோதும்பொழுது, இடி, மின்னலாக மாறி, கூடியுள்ள மேகங்களைக் கலைத்து, மற்றொரு இடத்தில் மழையாக வருவதை, அகஸ்தியன் அறிந்துணர்ந்தான்.

அவ்வாறு, அந்த  துருவத்தின் ஆற்றலை,
27 நட்சத்திரங்களின் உணர்வினை அவனுக்குள் பெறப்பட்டு, 
அவன் உடலில், பேரொளியாக மாற்றும் அணுக்களை வளர்த்து,
கணவனும், மனைவியும் இரண்டறக் கலந்து அதை உருவாக்கி,
இந்த உடலை விட்டுச் சென்றபின்,  
எதன் முகப்பை அறிந்துணர்ந்து,
தமக்குள் உருவாக்கினரோ
துருவத்தின் எல்லையாக அமைந்து,
துருவ நட்சத்திரமாக இன்றும் அமைந்துள்ளார்கள்.

பிற மண்டலங்களிலிருந்து எடுக்கும், அந்த 27 நட்சத்திரங்கள் கவரும், அதிலிருந்து வரும் துகள்களை, சூரியனைப் போன்று, துருவ நட்சத்திரம் அதைக் கவர்ந்து, பேரொளியாக மாற்றிக் கொண்டே உள்ளது. 

சூரியன் ஒரு காலம் அழியலாம், உயிராகி உணர்வுகள் ஒளியானபின், இந்தச் சூரியக்குடும்பம் அழிந்தாலும், இந்த துருவ நட்சத்திரம் அழிவதில்லை, அதன் ஈர்ப்பு வட்டத்தில் இருக்கும் சப்தரிஷி மண்டலங்களும் அழிவதில்லை.

இதைத்தான்  வேகாநிலை என்று மாமகரிஷிகளும், ஞானிகளும், காரணப் பெயர் வைத்துக் கூறுகின்றனர். பரிணாம வளர்ச்சியில், அகஸ்தியன் இருளை அகற்றி, நஞ்சினை வென்று பேரொளியாக மாற்றியதைத்தான், “வேகாநிலைஎன்பது. 

துருவ நட்சத்திரம், நம் பிரபஞ்சம் மட்டுமல்ல, அகண்ட அண்டத்தில் எத்தகைய இடி, மின்னல்கள் வந்தாலும், அதைத் தனக்குள் கவர்ந்து, பேரொளியாக மாற்றிக் கொண்டே உள்ளது. 

அதனைப் பின்பற்றிச் சென்றவர் அனைவரும், அது சமைக்கும் உணர்வுகளை உணவாக உட்கொண்டு, இன்று சப்தரிஷி மண்டலம்ஆறாவது அறிவு, ஏழாவது நிலையாகப் பெற்றுள்ளனர். இதைத்தான் ஞானிகள் சப்தரிஷி மண்டலம்என்று காரணப் பெயர் வைத்துக் கூறுகின்றார்கள்.

           நமது வாழ்நாளில் எத்தகைய செல்வமோ, நமது உடலோ, கூட வருவதில்லை. எனவே, அருள் ஞானிகள் பெற்ற உணர்வை நமக்குள் வளர்த்து விட்டால், 
            இந்த உடலை விட்டுச் சென்றபின்,
      துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்திற்கு அழைத்துச் சென்று,
      நம் கூட வருவது, நமது உயிர் ஒன்று மட்டுமே.
      ஆகவே அந்த ஒளியின் உணர்வாக நம்மை வளர்த்து, நாம் வேகாநிலைஅடைகின்றோம், இது உயிரின் கடைசி நிலை.

            ஆகவே, நாம் அத்தகைய சக்தி பெற, நமது குரு மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் காண்பித்த அருள் வழியில்,
(1)அகஸ்தியன் தாய் கருவில் பெற்ற சக்தியும்

(2)அகஸ்தியனாக இருந்த பொழுது  கண்டுணர்ந்த, விளைய வைத்த உணர்வுகளும்

(3)துருவத்தின் ஆற்றலை நுகர்ந்து, துருவனானபின், தனக்குள் அறிந்த வானுலக ஆற்றல்களும்

(4)துருவன் கண்ட, பிரபஞ்சத்தின் இயக்கமும், அகண்ட அண்டத்தின் ஆற்றலை, அறிந்திட்ட நிலையும்

(5)“திருமணமான பின், துருவ மகரிஷியாகி,  இரு உணர்வும் ஒன்றி, இரு உயிரும் ஒன்றி, உருப்பெறச் செய்த உணர்வின் ஒளி அலைகளும்
வெளி வந்ததை, “சூரியனின் காந்த சக்தி கவர்ந்து, அலைகளாகமாற்றி வைத்துள்ளது
     
  நமது பூமியில். இவ்வாறு அகஸ்தியனில் கண்டுணர்ந்த, வெளிப்பட்ட மூச்சலைகள், சூரியனால் கவரப்பட்டு நம் பூமியில் படர்ந்துள்ளதை, நமது குரு, எனக்குள் நுகரும்படி செய்தார்.

இன்று “TV”, ரேடியோக்களில் நாம் பார்க்கிறோம் என்றால், எதை, எந்தெந்த ஸ்டேஷனில் ஒலிபரப்பு செய்கின்றனரோ, அந்த அலைகளைக் குவித்து, அங்கே ஒலிபரப்பப்படும் நிகழ்ச்சிகளைப் பார்க்கின்றீர்கள்.

இதைப்போல, அகஸ்தியன் தனக்குள் விளைய வைத்த உணர்வுகளை, உங்களுக்குள் பதிவு செய்கின்றேன்.  இந்த ஸ்டேஷனை நீங்கள் வலுவாக்கி,
அகஸ்தியன் துருவனாகி,
துருவ மகரிஷியாகி,
துருவ நட்சத்திரமாகி
அதனின்று வெளிப்படும் பேரருளும் பேரொளியும்
நுகர்ந்தறிய வேண்டும் என்று,
உங்கள் நினைவனைத்தையும், துருவ நட்சத்திரத்தின் பால் செலுத்தி, உங்கள் எண்ணங்களை ஊடுருவிச் செலுத்தினால், அதனைக் கவர்ந்து, உணர்வின் ஒளி அலைகளைக் கவர்ந்து, உங்கள் உயிர் உணர்த்தும்.

(பக்கம் 14-16,22,23)
உயிர் நமது உடலுக்குள் ஈசனாகஇருந்து,
அதாவது மோதலில் வெப்பமாகி, விஷ்ணுவாகி,
உணர்வின் ஒலியை நாதங்களாக்கி,
அந்த நாதங்கள் உடலிலே சுழற்சியாகி,
அந்த உணர்வின் தன்மை நமக்குள் இயங்கத் தொடங்கும். 

உயிரின் துடிப்பால் ஏற்படும் வெப்பத்தால், ஈர்க்கும் காந்தம் நமக்குள் இழுத்து, உயிருடன் உராயப்படும்பொழுது, சுழன்றாலும், உபதேசிக்கும் இந்த அருள் ஒளியின் உணர்வுகள் கருவாகி. இரத்த நாளங்களிலே உறைந்து விடுகின்றது. 

அகஸ்தியன் கண்ட உணர்வுகளை, உங்கள்  இரத்த நாளங்களில் இணைக்க, இணைக்க, சேர்க்கச் சேர்க்க,  அந்த உணர்வுகள் நமக்குள் வளர்ச்சி அடைகின்றது.

அதன் வழியில், அகஸ்தியன் கண்டுணர்ந்த உணர்வுகளின் நினைவுகள் வரும்.  அதன்வழி அகஸ்தியன் துருவனாகி, துருவ நட்சத்திரமாகி, துருவ நட்சத்திரமான அதனின்று வெளிப்படும் பேரருளும் பேரொளியும், நுகரும் ஆற்றல், அந்த  உணர்ச்சிகளைத் தூண்டி, நம்மை அறியாமலேயே, அங்கே அழைத்துச் செல்லும்.

நுகரும் உணர்வுகளை, நமது உயிர் என்று ஜீவ அணுவாக மாற்றி,  நமது இரத்த நாளங்களில் அணுவாக உருவாக்கும்  இந்திரலோகமாக மாற்றும். எண்ணத்தின் தன்மை பெருகும் பொழுது, அந்தப் பேரொளியை நமக்குள் பிரம்மலோகமாக மாற்றி, சொர்க்கலோகமாக மாற்றிடும் அந்த அருள் சக்தியைப் பெறச் செய்வதற்கே, என் குருநாதர் எனக்குள் உருவாக்கியதைப் போன்று, உங்களுக்கு உபதேச வாயிலாக, அருள் ஞான வித்தாகப் பதிவு செய்கின்றேன்.

குருநாதர் விண்ணின் ஆற்றலை,
எத்தனையோ வழிகளில் தனக்குள் கண்டறிந்தார்.  
அகஸ்தியனில் விளைந்த கருவின் உணர்வையும்
துருவனின் உணர்வையும் ஊடுருவி,
அவர் தனக்குள் வளர்த்தார்.

அகஸ்தியன் கண்டுணர்ந்த புவியின் நிலையும், விண்ணின் ஆற்றல்களையும், நஞ்சினை வென்றிட்ட அருள் ஒளியையும், பெற்ற இவர், உடலை விட்டு அகன்றபின், ஒளியின் சிகரமாக நிலை கொண்டு, இன்று ஆறாவது அறிவை, ஏழாவது நிலைகள் கொண்டு உருப்பெற்றார்.

தன்னில் கண்ட உணர்வின் தன்மைதான், எம்மையும் காணச் செய்தார், மது குருநாதர். ஏனென்றால்,  20  வருட அனுபவத்தை உங்களுக்குச் சொல்கின்றேன்.  இதில் விளைந்து, பல வருடம் ஆராய்ச்சியின் பலனாகக்  கண்டுபிடித்த வித்தினை, நீங்கள் வளர்க்கும் தன்மை பெற வேண்டும்.

தாவர இனங்கள் வளர்வது போல, வளர்ச்சியின் பருவத்தில் இருக்கும் இந்த நிலைகள், நினைவு கொண்டு உங்களுக்குள் பதிவு செய்யும் பொழுது, இந்த உணர்வும் உங்களுக்குள் வளர்ச்சி பெருகின்றது.

அகஸ்தியன் நிலையிலிருந்து,
அவனுடைய வளர்ச்சியின் நிலைகள் கொண்டு,
உங்களுக்குள் பதிவாக்கி,
படிப்படியாக உங்களின் நினைவின் ஆற்றலுக்கு,
ஈர்க்கும் சக்தியாக, உங்களுக்குள் பெறச் செய்ய வேண்டும்,  
என்று பதிவு செய்கின்றேன்.

அகஸ்தியன்  விண்ணை நோக்கி உற்றுப் பார்க்கும்பொழுது,  நமது பூமியின் சுழற்சியின் ஈர்ப்புக்குள் துருவப்பகுதியில், இந்த சூரியக் குடும்பத்தில் விளையும் உணர்வை, அது போகும் பாதையில் துருவப் பகுதியில் கவர்ந்து, நமது பூமிக்குள், அணுக்களின் அலைகளாக மாற்றிக் கொண்டிருப்பதை உணர்கின்றான். 

இவ்வாறு உணர்ந்த உணர்வுகளை, அவன் நுகர்ந்தறியப்படும் பொழுது, எதை உற்று நோக்கி, துருவப் பகுதியில், னுடைய கூர்மையான நினைவுகளைச் செலுத்துகின்றானோ, அதை நுகரும் பருவம் பெறுகின்றது, அவன் உடலுக்குள்ளும் கலக்கின்றது.

மற்ற தாவர இனங்களுக்குச் சத்தாகச் செல்லும் அந்தச் சத்தினை, அதே தாவர இன சத்தினை உணவாக உட்கொண்டு, உடலின் அணுக்களாக மாற்றிய அணுக்களுக்கு, உணவாக, இரையாகக் கொடுக்கின்றான் அகஸ்தியன். 

அதாவது, அவனுடைய சந்தர்ப்பம், அதை அவன் நுகரும்படி செய்கின்றது, அது அவனுக்கு கிடைக்கின்றது. அவ்வாறு நுகர்ந்த இந்த பிரபஞ்சத்தின் உணர்வை, அதன் உணர்வின் துணை கொண்டு, நமது சூரியக் குடும்பத்தின் நிலைகளை அறியும் பருவம் வரும் பொழுது, அகஸ்தியன் துருவன்ஆகின்றான்.

அவ்வாறு துருவனாகி, அவன் வாழ்க்கையில் இந்த பிரபஞ்சத்தின் உண்மைகளை உணரும் ஆற்றலாக, உணர்வின் ரூபமாக அவனுள் விளைகின்றது. அகஸ்தியன் துருவனானபின், அதன் வழி இப்பிரபஞ்சத்தின் ஆற்றலை தனக்குள் பெருக்கி, ஆதியில் பேரண்டத்தின் அகண்ட நிலையையும், பிரபஞ்சம் உருவான நிலையையும் வெளிப்படுத்துகின்றான்.

அவ்வாறு அவனுக்குள் வளர்த்துக் கொண்ட உணர்வுகள் அனைத்தையும், தன் நினைவாற்றலால் வெளிப்படுத்துகின்றான், வெளிப்படுத்தும் உணர்வுகள், சூரியனின் காந்தப் புலனறிவு கவர்ந்து இப்பூமியில் பரவியுள்ளது.

அவ்வாறு பரவிக் கொண்டிருப்பதைத்தான், நமது குருநாதர் காட்டிய அருள் வழியில், யாம் இப்பொழுது உங்களுக்குள் பதிவாக்கி, அதைக் கவரும்படி செய்கின்றோம்.

(பக்கம் 29-32)
நமது பிரபஞ்சத்தில், 27 நட்சத்திரங்களும்
பிற மண்டலங்களிலிருந்து கவர்ந்து,
பால்வெளி மண்டலங்களாக மாற்றும் பொழுது,
அந்தப் பால்வெளி மண்டலத்திலிருந்து வரக்கூடிய துகள்கள்,
மற்ற நட்சத்திரத்தின் துகள்களோடு மோதும் பொழுது,
மின்னல்களாக மாறுகின்றது.

வ்வாறு மின்னலாக மாறும் பொழுது, மின் ஒளிக் கற்றைகளை, வெள்ளிக்கோள் எடுத்துக் கொள்கின்றது.

அதே சமயத்தில், அதிலிருந்து வரும் விஷத் தன்மையை  உட்கொண்ட, வலுவான கேதுக் கோள், விஷத்தை எடுத்துக் கொள்கின்றது.

அதே சமயத்தில், சப்த லியுடன், பல உணர்வின் இயக்கத்துடன் கலந்ததை, செவ்வாய்க் கோள் எடுத்துக் கொள்கின்றது.

மின்னலின் மோதலில் ஏற்பட்ட கருகிய உணர்வுகளை, ராகுக் கோள் எடுத்துக் கொள்கின்றது.

உதாரணமாக, எவ்வாறு ஈயமும், பித்தளையும் நமச்சாரத்தையும் இட்டபின், இணைந்து வாழச் செய்கின்றதோ, அதைப் போன்று தன் உடலிலே இயக்குவதும், அதற்குத்தக்க பருவமாவதும், உடலுக்குள் இணை சேர்த்து வருவதும், இவையெல்லாம் தோல்கள் உருவாவதற்கும், நமக்கு பாதுக்காப்பாகவும், உணர்வின் தன்மை வருகின்றது.

வியாழன் கோள், 27 நட்சத்திரங்களின் உணர்வைத் தனக்குள் கவர்ந்து, வியாழனின் சுழற்சியின் வேகம் அதிகமானதால், அது ஈர்த்து, தன் உடலிலே வரும் வெப்பத்தின் தன்மை வரப்படும் பொழுது, ஆவியாக மாற்றி, சுழற்சியில் குளிர்ந்த பாறைகளாவது போல, நடு மையம் கொதிகலன் ஆனாலும், மேற்பரப்பில் அமைதியாகும் தன்மை வருகின்றது.

இதிலே வரும் ஆவியின் தன்மை வெளிப்படுத்தும் பொழுது, தைப் போன்று, 27 நட்சத்திரங்களின் உணர்வின் அணுக்கள், இந்த ஆவியின் மத்தியில் ஓடும் பொழுது, பல விதமான உணர்வுகளை ஒன்றாக இணைத்து, (வியாழன் கோள் இணைத்து) பல அணுத் தன்மையை உருவாக்கும் தன்மையைப் பெறுகின்றது.

மோதலில் பிரிந்து செல்லும் ஆவியின் தன்மையை, சனிக் கோள் கவர்ந்து, நீராக மாற்றும் சக்தி பெறுகின்றது.

நமது பூமி, துருவப் பகுதியில் சர்வத்தையும் கவர்ந்து, தாவர இனங்களை வளர்க்கும் சக்தியும், உயிரணுக்களை வளர்க்கும் நிலையும் பெறுகின்றது.

இதன் வழியில், புதன் கோளுக்குச் சென்றால், அது உலோகமாக மாற்றுகின்றது.

அதிலிருந்து ஆவித்தன்மையை எடுத்தபின், தன்னுடன் இணைத்து வாழும் பாதரசங்களாக சூரியன் மாற்றுகின்றது.

அது மாற்றி உணர்வுதான், பாதரசத்தால் மோதி, அங்கேயிருந்து வரும் பொருளுக்குள் இணைத்துக் கொண்டபின், இரண்டறக் கலந்தபின், வெப்பத்தை உருவாக்கும் சக்தியும், ஈர்க்கும் காந்தமாகி சிதறி,
ஓர் விஷத்தின் தாக்குதல் ஏற்படும் பொழுது,
வெப்பத்தின் தன்மையாகி, வெப்பத்தின் தன்மை வரும் பொழுதுதான்,
இந்த உணர்வுகளைச் சேர்த்து
அது படைக்கும் சக்தியாக மாறுகின்றது.

இதைப் போன்றுதான், நமது உயிர் இந்த உடல் என்ற நிலையில், ஒரு பிரபஞ்சமாக மாறுகின்றது. இந்தப் பிரபஞ்சத்தில், சூரியன் எப்படி ஒளிக்கதிராக மாறியதோ, இந்தச் சூரியக் குடும்பத்தில், வெள்ளிக் கோள் எப்படி ஒளிக்கற்றைகளைக் கவரும் சக்தி பெற்றதோ, இதைப்போன்று, தாய் கருவிலே இருக்கும் பொழுது, விஷத்தை வென்றிடும் சக்தி பெற்ற அகஸ்தியன், தனது வாழ்நாளில், இந்தப் பிரபஞ்சத்தில் வெள்ளிக் கோள் எடுப்பது போல, ஒளியின் உணர்வுகளை, அதிகமாக வளர்த்துக் கொள்கின்றான்.

அவன் வளர்த்துக் கொண்ட உணர்வின் தன்மைதான்,
தன் எண்ணங்களை எங்கு செலுத்தினாலும்,
அதன் உணர்வை, எளிதில் அறிந்துக் கொள்ளும்
ஞானத்தைப் பெறுகின்றான்.

ஏனெனில், விஷத்தின் தன்மை கடுமையானல், சிந்திக்கும் தன்மை இழக்கப்படுகின்றது. இதைப் போன்ற நிலைகளில் எல்லாம் இருந்து, அகஸ்தியன் பெற்ற அந்தப் பேரருள்தான், திருமணமானபின் தன் மனைவிக்குப் பெறச் செய்து, இந்த உணர்வின் தன்மை இருவருமே ஒன்றாகப்படும் பொழுது, இரு உயிரும் ஒன்றாகி, அந்த உணர்வின் தன்மை உருவாக்கும் தன்மை பெறுகின்றனர்.

ஆக, அந்த உயிரின் தன்மை, அந்த உணர்வின் தன்மை பெறும் பொழுது, ஆண், பெண் என்ற நிலைகளில் இந்த உணர்வுகள், ஒளியின் சரீரமாக மாறுகின்றது. இந்த உணர்வின் கருவாக மாற்றப்படும் பொழுது, மின் கதிர்களின் உணர்வைத் தனக்குள் எடுத்து, ஒளியின் சரீரமாகப் பெறக்கூடிய தன்மையைப் பெறுகின்றார்கள்.

இருவரும் ஒன்றென இணைந்து, அவர்கள் எடுத்தக் கொண்ட உணர்வால், எதை எல்லையாக வைத்து உற்று நோக்கினரோ, இந்த உடலைவிட்டுச் சென்றபின், துருவத்தையே எல்லையாக வைத்து, இன்று துருவ நட்சத்திரமாக வாழ்ந்தும், வளர்ந்தும், கொண்டுள்ளார்கள்.

அவர்கள் இந்தப் பிரபஞ்சத்தின் உணர்வை, ஒளியின் அணுவாக மாற்றியது போன்று, அக்காலங்களில் பெற்ற மற்ற மக்கள், அவர்கள் எடுத்துக் கொண்ட நிலையில், ஆறாவது அறிவு, ஏழாவது  நிலையாக முழுமை பெற்றார்கள்.

அவ்வாறு முழுமை பெற்று, துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்தில், “சப்தரிஷி மண்டலங்களாக (சிருஷ்டித்துக் கொண்ட உணர்வு) வாழ்கின்றார்கள், வளர்கின்றார்கள், என்றும் 16 என்ற  நிலையை, அடைந்துவிட்டார்கள்.

அவர்களுடைய வளர்ச்சிகள், அதன் வழி நாம் உற்று நோக்கி, கூர்மையாக உணர்வினைப் பதிவுச் செய்து கொண்டால், நாமும் அவர்களைப் போன்றே, என்றும் பதினாறு என்ற நிலையை அடைய முடியும். எமது அருளாசிகள்.

(பக்கம் 54-57)
இன்று ஒரு நாடாவில், நாம் எப்படி ஒரு கம்பூட்டரின் இயக்கத்தைப் பதிவாக்கி, அந்த நாடாவை வெளியிட்டால், அதன் இயக்கப்படி, அது செயல்படுகின்றது.

இதேபோலத்தான், மனிதனின் எலும்புக்குள் இருக்கும் ஊனுக்கள்,
உயிரின் துடிப்பு கொண்டு,
உணர்வின் தன்மை, ஒலி அதிர்வுகளாக வரப்படும் பொழுது
“ஊழ்வினை” என்ற வித்தாக உருவாகின்றது

எலும்புக்குள், இந்த உணர்வின் தன்மை, மீண்டும் நினைவாக்கப்படும் பொழுது, அந்த உயிருடன் ஒன்றி, மற்றொன்றோடு மோதப்படும் பொழுது, அதனுடைய அறிவே அறியப்படுகின்றது.

தீமை என்றால், விலகிச் செல்கின்றான். நன்மை என்றால் அரவணைக்கின்றான். இதெல்லாம்  இயற்கையின் உணர்வு என்று, அன்று வியாசகன் கண்டான்.

இன்று “எலக்ட்ரிக்” “எலக்ட்ரான்” என்று, விஞ்ஞானத்தின் தன்மை பெற்றாலும், அஞ்ஞான வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருப்பதும், பக்தி மார்க்கத்தில் இந்தத் தெய்வம் செய்யும் என்று, அஞ்ஞான வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருப்பதும், மக்களை நான் காக்கிறேன் என்று தெளிவுப்படுத்தினாலும், தன்னையும், மக்களையும் காக்கும் நிலையில்லாமல்தான் உள்ளது.

தன்னையே காக்கும் நிலைகள் இல்லையெனில், மக்களைக் காப்பது எவ்வாறு? தான் நுகரும் உணர்வுகள் எதுவோ, அந்த உணர்வின் தன்மையை உயிர், அணுவாக மாற்றி, எந்த உணர்வை நுகர்ந்தானோ, அந்த உணர்வின் தன்மையை நிச்சயம் இயக்கும்.

ஆக, உயிரிடமிருந்து தப்ப முடியாது என்ற நிலையை, யாரும் சிந்திப்பதில்லை. அன்று அகஸ்தியன் வெளிப்படுத்திய அருள்ஞானத்தில், இதைத் தெளிவாகச் சொல்லி உள்ளான்.

தீமைகளின் நிலைகளிலிருந்து, மனிதன் எப்படி மீள வேண்டும் என்றிருந்தாலும், அன்று நட்சத்திரத்தின் இயக்கப் பொறிகளை வியாசகன், அகஸ்தியன் கண்டுணர்ந்த பேருண்மையை இவன் உணர்ந்து, இவன் தெரியப்படும் போது, எழுத்தறிவில் பெறப்படும் பொழுது, வேதங்களாக மாற்றி ஒரு பொருளின், ஒரு இயக்கத்தின் கதிரியக்கப் பொறிகள் எப்படி வருகின்றது என்று உணர்ந்தவன். இது உங்களுக்குக் கொஞ்சம் அர்த்தம் புரியாதிருக்கலாம். உங்களுக்குள் விளக்கம், உங்கள் வாழ்க்கையில் அறியும் பண்புகள் வரும்.

தீமைகளை அகற்றும் உணர்வுகளைப்பற்றி, உங்களுக்குள் அறிய வேண்டும் என்றால், நமது குருநாதர், எமக்கு அர்த்தமாகவில்லை என்றாலும், இந்த உணர்வைப் பதிவாக்கும் பொழுது, இந்த வாழ்க்கையில், அவர் சென்ற பாதையில் செல்லும் பொழுது, இந்த உண்மையின் உணர்வை அறிய முடிந்தது. இந்தப் பிரபஞ்சத்தில் கலந்து கொண்டிருக்கும், உணர்வின் ஆற்றலை யாம் பெற முடிந்தது

நமது குரு அருளால், அவர் உணர்வின் அருளை இங்கே பெருக்கி, இந்த உணர்வின் தன்மை பெருக்கப்படும் பொழுது, அகஸ்தியன் தனக்குள் பெற்ற உணர்வினை, சந்தர்ப்பத்தால் வியாசகன் கற்றுணர்ந்த உணர்வை, எப்படி வெளிப்படுத்தினானோ, இதுவும் உண்டு, அதுவும் உண்டு.

காலத்தால், காலத்திற்கொப்ப இந்த உணர்வின் தன்மை மாற்றி, பேருண்மையின் உணர்வினை அறியும் பருவம், நம்மிடையே இல்லை.

நமது குருநாதர் இந்த உணர்வின், இந்தப் பூமியின் துடிப்பை அறிந்து, அருள் ஒளியின் சுடராக, உயிருடன் ஒன்றி, ஒளியின் சரீரமானார். அவரின் உணர்வினை இன்று நாம் பகிர்ந்து கொண்டு, அவர் சென்ற பாதையில் நாம் சென்றோம் என்றால், வாழ்க்கையில் வரும் இருளை அகற்றி, மெய்ப் பொருளுடன் நாம் ஒன்ற முடியும்.

மனிதனாகப் பிறந்தபின், இனிப் பிறவி இல்லை. பிறவா நிலைகள் பெற்று, அருள் ஒளியின் சுடரில் இணைந்து, நாம் வாழ்க்கை நடந்த வேண்டும்.

வாழ்க்கையின் நிலைகளில் அனைத்தையும் பெற்றாலும், துன்பத்தை நுகர்ந்து, நோயின் தன்மையோ மற்ற நிலைகளோ வந்துவிட்டால், மற்றதெல்லாம் இருந்து எதற்கு? என்ற நிலைகளில், வெறுப்பின் நிலைகளே வருகின்றது. அப்போது வருவதற்குள், இப்பொழுதே அது வரலாம்.

அருள் ஒளி பெற வேண்டும். அவர்கள் மகிழ வேண்டும் என்ற உணர்வை எடுத்தால், நாம் இந்த உடலின் இச்சையை வீழ்த்தி விட்டு, எல்லோரும் நலம் பெற வேண்டும் என்ற உணர்வை உருவாக்கி, உணர்வின் ஒளியின் சரீரமாக மாற்றிவிட்டால், பிறவியில்லா நிலைகள் அடைகின்றோம். ஆகவே, இதில் ஒன்றும் கடினமில்லை.

நஞ்சினை நுகர்ந்து, நல்ல குணத்தைச் செயலாக்கும் நிலையை அழித்து, அசுர உணர்வாகவே இயக்கிக் கொண்டிருக்கும், இது போன்று நிலைகளிலிருந்து நாம் தப்புதல் வேண்டும்.

மனிதனாக வந்தபின், இந்த ஆறாவது அறிவு “கார்த்திகேயா”, அதே சமயத்தில் “சேனாதிபதி” என்று நம் உணர்வின் செயலாக்கங்களைத் தெளிவுப்படுத்தி, காரணப் பெயர்களை வைக்கின்றனர்.

தீமைகளை உருவாக்கும் நிலைகளில் இருந்து,
தீமைகளை அகற்றிய அருள்ஞானியின் உணர்வை
நமக்குள் உருவாக்கிவிட்டால்,
நமக்குள் இந்த மனித உடலைக் காத்து,
உணர்வினை ஒளியாக மாற்றி,
என்றும் பிறவியில்லா நிலை அடைய முடியும்
என்ற நிலையும் தெளிவாக்கப்பட்டுள்ளது.

அதன் வழியில் நாம் எளிதில் பெற முடியும். ஆகவே, அதன் வழி பெறுவதற்குத்தான், இந்த அருள் ஞானத்தை உங்கள் அனைவருக்கும் பெறச் செய்வது. எமது அருளாசிகள்.