ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

July 10, 2012

குரு வழியில் வாழும் வழி


சாமி புத்தகம்  குரு வழியில் வாழும் வழி
(பக்கம் 4, 8-12)
இந்த வாழ்க்கையில், பித்தனைப் போல் இருந்தார் குரு. ஆனால், “இந்த உலகமே பித்து நிலையில் இருக்கின்றதுஎன்பதை உணர்த்துவதற்கு, இந்த உலகில் உள்ளோர்க்கு அவரைப் பார்த்தால், பித்தனாகத்தான் தெரியும்.

ஆனால், இந்த உலக மக்கள் பித்துப்பிடித்து, பித்தனாக உள்ளனர். இதிலிருந்து நான் விடுபட்டே செல்கின்றேன் என்று, உண்மையின் உணர்வின் இயக்கத்தை, அவர் உடலில் தெளிவாகப் பதிவு செய்து கொண்டார். ஆகையினால், மற்றவர்கள்
யார் தவறு செய்கின்றார்கள்?
எப்படிச் செய்கின்றார்கள்?
என்பதைச் சிந்திப்பதில்லை.
அவர் ஏற்றுக்கொள்வதும் இல்லை.

உதாரணமாக, நாம் கண் கொண்டு பார்க்கும்பொழுது, பையன் தவறு செய்கின்றான், என்று நாம் நுகர்கின்றோம். நமது உடலிலுள்ள நல்ல குணங்களுக்கும், அவன் செய்யும் தவறான குணங்களுக்கும், எதிர்மாறான நிலைகளில் அவன் இருக்கும் பொழுது, உயிரிலே பட்டபின், அவனுடைய உணர்ச்சிகள் அவன் தவறு செய்கின்றான் என்று, உணர்த்துகின்றது.

உணர்த்தியவுடனே நாம் அறிகின்றோம். அறிந்தவுடன், அதை நிறுத்திவிட்டு, அவன் ஏன் செய்கின்றான் என்று சிந்தனை செய்து, அவனை நல்வழிப் படுத்தவேண்டும். அதை விடுத்து, நாம் வேதனைப்பட்டால், வேதனை என்பது விஷம். நாம் சிந்திக்கும் தன்மையை இழக்கின்றோம்.

சிந்திக்கும் தன்மை இழக்கப்பட்டால், கோபமென்ற உணர்ச்சியின் வேகம் கூடுகின்றது. அப்பொழுது, சிந்தனையற்ற நிலைகளில் அதீதமான உணர்வுகளை, நாம் சேர்க்கும் பொழுது, இந்த உணர்ச்சிகள் எல்லாம் நம் உடலில் கலக்கப்படுகின்றது.

அப்படிக் கலக்கப்படும் உணர்வுகள், நம் இரத்தங்களில் கலந்து, இதை ஏற்க மறுத்தால் நாம் சோர்வடைந்து விடுகின்றோம். இப்படிப் பண்ணுகின்றானே, என்ன பண்ணுவது? என்று வேதனையில் வெறுப்பானபின், நம் உடலிலுள்ள நல்ல அணுக்கள் எல்லாம் சோர்வடைந்தால், நாமும் சோர்வடைகின்றோம்.

செய்வதறியாது மயக்கப்படுவோரும் உண்டு. சமாளிக்க முடியாத நிலையில், பதட்டமும், பயமும், நடுக்கமும் ஏற்படும். அவனை எண்ணினாலே மயக்கம் வரும். நம் பக்கத்து வீட்டில், யாராவது இடைஞ்சல் செய்தாலும், மயக்கம் வரும் ரோட்டிலே, பக்கத்து வீட்டிலே ஒருத்தருக்கொருத்தர் சண்டை போடுவதைப் பார்த்தாலே, சண்டை வரும். இவைகளெல்லாம், நம்மை அறியாது இயக்கக் கூடியது.

தவறு செய்யும் உணர்வுகள், பையன் உடலிலேரிக்”. அவன் சந்தர்ப்பத்தால் நுகர்ந்த உணர்வுகள் வெளிப்படுவதுசாம”, இசை.

நமது உடல் ரிக், அவன் மேல் அன்பு கொண்டு, பரிவு கொண்ட நாம், பேசும் பொழுது நம்முடைய நல்ல எண்ணங்கள் வெளிப்படும்போது, சாம, இசை.

பாலில் பாதாமைப் போட்டால், பாலிற்கு நல்ல சத்து இருக்கிறது. அதில் ஒரு துளி விஷம் பட்டால், அதற்கு சக்தியிருக்கிறதா? நம்மை மயங்கத்தான் செய்கிறது. பாதாம் வலு இழந்து விடுகின்றது.

பையன் தவறு செய்கின்றான், என்ற உணர்வை நுகர்ந்தோம் என்றால், அதைக் குறைத்துப் பழக வேண்டும்.
இல்லையென்றால், அவன் செய்த தவறான உணர்வுகள்
நமக்குள் வந்து, எதிர் நிலையாகி,
நமது நல்ல குணத்தை அடக்குகின்றது.
இதற்குப் பெயர் அதர்வண”.

அவன் இப்படிச் செய்கின்றானே, என்ற உணர்வின் தன்மையை வளர்க்க வளர்க்க, “யஜூர்”, ஓர் வித்தாகின்றது. அதனை எண்ணும் பொழுது, வேதனைப் படும் உணர்வுகள், நம் உடலில் வித்தாகின்றது.

அவன் இளையவன், நாம் மூத்தவர்கள், அவன் இப்படிப் பண்ணுகிறானேஎன்ற உணர்வுகளை வளர்த்து, நம் உடலில் கலந்துவிட்டால், நம் உடலில் இரத்தக் கொதிப்பு வரும். நாம் எதாவது எண்ணினால், இப்படியாகிப் போச்சே என்ற வேதனை இரண்டும் கலந்துவரும்.

சிறு மூளை பாகம் செல்லக்கூடிய இடங்களில், இரத்த அழுத்தம் அதிகமாகிவிட்டால், அந்த நரம்பு மண்டலம் வெடித்துவிடும். யாரை நினைத்து, இந்த ஆன்மா வெளியில் செல்லுகின்றதோ, அவர் உடலுக்குள் சென்றுவிடுகிறது.

நாம் குழந்தையைக் காக்க வேண்டும் என்று நினைத்தோம். அவனாலே வேதனையை அதிகமாகச் சேர்த்தோம். இறந்தபின், அவன் உடலுக்குள்ளே போய், இதே வேதனை என்ற உணர்வை உருவாக்கும்.

மான் சாந்தமானது. புலி துரத்தும் பொழுது, அதே நினைவாகின்றது. துரத்தும் நேரத்தில், அந்த உணர்வுகள் அதிகமாகின்றது. அது இறந்தால், புலியின் ஈர்ப்பிற்குள் வந்து, இந்த உணர்வை நுகர்ந்ததனால், புலியாக மாறுகின்றது.

பரிணாம வளர்ச்சியில், புலிக்குண்டான குணம்
அது, மற்றொன்றை வேதனைப்படுத்திக் கொன்று சாப்பிடும்.

இதைப் போன்ற உணர்வை வளர்த்துக் கொண்ட தந்தை,
உடலை விட்டுச் சென்றபின்,
மகன் உடலுக்குள் சென்று,
நல்ல குணங்களையெல்லாம் சாப்பிட ஆரம்பித்துவிடும்.

பையனைக் காக்க வேண்டும் என்று எண்ணினாலும், இந்த உணர்வுகள் அதை பலவீனப்படுத்தி, அதையே வளர்க்கும். அவனுக்கும் கோபம் வரவைக்கும். இதைப் போல, அதன் உணர்வுகள் தவறாகப் போக வைக்கும். தேடி வைத்த செல்வத்தை, அவன் பாதுகாக்க முடியாமல் போய்விடும்.

கடைசியில், அவனும் இதே கதியில் மடிவான். அதே சமயத்தில், இவர் ஆன்மாவும், உடலை விட்டு வந்தபின், எதன் உணர்வுகள் அணுக்களாக மாறியதோ, இந்த பூமிக்கு அந்த உடலை விட்டு வெளி வந்தபின், புலி மேய்ந்து கொண்டிருந்தால், அதன் உணர்வின் வலுக்கொண்டு, ஈர்த்துவிடும்.

அந்த உடலுக்குள், அதே உணர்ச்சிக்குத்தக்க அதனுடைய கருவாகி, மனிதன் ரூபத்தை மாற்றிவிடும். நாம் தவறு செய்யவில்லை. இதே போன்று, நம் வீட்டில் அடிக்கடி பேசினால், பரம்பரை நோய் என்று வரும். இரத்தக் கொதிப்பு வந்ததென்றால், மற்றவர்களுக்கும் இதே போல் வரும்.

அவர் இரத்தக் கொதிப்பில் இறந்தார். அதே போல, அந்தக் குடும்பத்தில் பரம்பரை நோயாக மாறும். அந்தக் குடும்பத்தில் எப்பொழுது பார்த்தாலும், யாராவது ஒருவருக்கொருவர் சண்டை போட்டுக் கொண்டே இருப்பார்கள்.

இப்படிச் சண்டை போட்டுக் கொண்டிருப்பது கருவில் வளரும் சிசுவுக்கும், அந்த உணர்வுகள் விளையும். ஆக, மனிதனின் முடிவு எங்கு போகின்றது? ஒரு குடும்பத்தில் இப்படி ஏற்பட்டால், அடுத்து இந்தக் குடும்ப வரிசையிலும், இதே போன்று மாறும்.

அப்பொழுது, நாம் மனிதனானபின், ஒரு குடும்பத்தில் பரம்பரை நிலையாக, இதே போல வரும். ஆஸ்துமா நோய் போன்ற நோய்களும், இதைப் போன்று, நாம் எடுத்துக் கொண்ட நிலைகளால் வருவதுதான். வாத நோய் வருவதும், இதைப் போன்றுதான். அந்தக் குடும்பத்தில், பரம்பரை நோயாக மாறுகிறது.

எத்தனையோ கோடிச் சரீரங்களைக் கடந்து வந்த, நம் அம்மா, அப்பா, மனிதர்களாகப் பிறந்து, நம்மை மனிதனாக உருவாக்கினாலும், சந்தர்ப்பத்தால், நாம் மனிதனல்லாத உருவுக்குத்தான் நாம் திரும்பிச் செல்கின்றோம். இந்த உணர்வுகள் எப்படியோ, அதற்குத்தக்கத்தான், மற்ற உடல்களை உருவாக்கிக் கொண்டிருக்கும் இந்த உயிர்.

இதைப் போன்ற நிலைகளை மாற்றத்தான், அடிக்கடி யாம் உங்களை ஆத்ம சுத்தி செய்யச் சொல்வது. தீமை வரும் பொழுது, அந்த துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெறவேண்டும் என்று,
அந்த அருள் சக்திகளை, உயிரின் வழியாக நுகர்ந்து,
உடலுக்குள் உள்ள எல்லா அணுக்களுக்கும் பாய்ச்சி,
உடனுக்குடன் சுத்தப்படுத்திக் கொள்ள வேண்டும்

(பக்கம் 17-20)
குருநாதர் காட்டுக்குள்ளே செல்லும்போது, சில இடங்களிலே கூட்டிக் கொண்டு போவார். “இங்கே படுடாஎன்பார்.

இந்தப் பக்கம் படுத்தால், கொசுக் கடிக்கின்றது. இன்னொரு பக்கம் படுத்தால் கொசுக் கடிக்கிறதில்லை. இந்த மண்ணிலே, காட்டிலே இருந்து தவம் பண்ணி, தன்னைப் பெரிய சித்தானக்கிக் கொள்ள வேண்டும் என்று, தவத்திற்கு வந்தவர்கள், இந்த இடத்தில், பச்சிலை மூலிகைளை வைத்திருப்பார்கள்.

அவர்கள், இந்தப் பச்சிலை மூலிகைகளை எடுத்துத் தன் உடலிலே பூசிக் கொள்வார்கள். தவம் என்ற நிலைகளில் இருக்கப்படும் பொழுது, அந்த எல்லை வரையிலும் கொசுக்கள், பாம்புகள் மற்றவை வருவதில்லை.

அங்கே, சுத்தமான மனிதன் போனால்தான், போக முடியும். தவறான ஆசையுடன் போனால், அவனைத் தூக்கி எறிந்துவிடும். நான் போனேன்.

அங்கே உட்காருடாஎன்றார்.

தூக்கி எறியப்பட்டேன். “என்ன சாமி பேயோ, பிசாசோ இருக்கு போலிருக்குஎன்றேன்.

பேயுமில்லை, பிசாசுமில்லை அந்தக் காலத்தில், தன்னைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்று, இந்தக் குறிப்பிட்ட இடத்திலே செய்திருக்கிறார்கள். அவர்களுக்கு மட்டும்தான் தெரியும். தவறான ஆட்கள் உட்கார்ந்தார்கள் என்றால், விஷத்தன்மை பரவிவிடும் என்று, இந்த உணர்வுகள், உன்னைத் தூக்கி எறிகிறது என்று சொன்னார்.

நான் சொன்ன மாதிரி இப்படிச் செய்என்றார். “அப்படிப் போய் உட்கார்என்றார்.

போய் உட்கார்ந்தால், கொசுவும் வரவில்லை ஒன்றும் வரவில்லை. ஆனந்தமாகத் தூக்கம் வந்ததது.

அவர் எப்படித் தியானம் பண்ணினாரோ, அதே மாதிரி எனக்கும் சக்தி கிடைத்தது. இதைப்போலத்தான், அந்த துருவ நட்சத்திரத்தின் உணர்வை எடுத்து, இந்த தபோவனத்தில் பாய்ச்சப்படும் பொழுது, இங்கே பதிவாகின்றது.

இதைப்போல, துருவ நட்சத்திரத்தின் உணர்வை எடுத்து, உங்கள் வீட்டில் நன்றாகப் பதிவு செய்து விட்டீர்கள் என்றால், விஷத்தன்மைகளையெல்லாம் போக்கும் நிலைகள் வரும்.

குருநாதர் அனுபவ ரீதியிலே, இதை எமக்கு உணர்த்தி, நாம் எப்படி வரவேண்டும். ஏனெனில் அந்தச் சித்தன் பல நிலைகளை உணர்ந்தான். அதைச் செய்தான், நீ அங்கே போக முடியலை என்றார்.

இந்த வேதனை உணர்வுகளை எடுத்து, உங்கள் மேல் பொறாமையால் வந்தார்கள் என்றால், திடீரென்று பேயோ, ஆவி பிடித்தவர்களை எல்லாம் பார்க்கலாம், உங்களைத் திட்டி விட்டுத்தான் போவார்கள். உள்ளே வரமாட்டார்கள்.

அவர்கள் திட்டியதை எடுத்தால், இந்த உடலுக்குள் வந்துவிடும். அவர்கள் உடலில் விளைந்த உணர்வுகள், நம் உடலிலேயும் விளைந்துவிடும். ஆவி பிடித்த நிலையில், நாம் இந்த தியானம் எடுக்கப்படும் பொழுது, அது விலகிச் செல்லும். இதே மாதிரி சில இங்கே வரும்.

நான் ஒண்ணுமே செய்யவில்லையே, என்னை எப்படிப் பேசுகின்றார்கள்என்ற எண்ணினால், நாம் என்ன செய்கின்றோம்? அந்த உணர்வை நுகர்கின்றோம். அந்த உணர்வை நுகர்ந்து, நம் உடல் அதை ஜாஸ்தி இழுக்க ஆரம்பித்துவிடும்.

அப்பொழுது, நம் இரத்தத்தில் கலந்தவுடன் என்ன செய்கின்றது? அவர்கள் உடலில், எப்படி ஆவியின் தன்மை இயக்கியதோ, அதே உணர்வு போல் நம்மையறியாது இயக்குவதும், இந்த உணர்வுகள் வளர்ந்துவிட்டால், இதைப்போல இன்னொரு உடலிலே, உடலைவிட்டு ஆவிபோனால், அதைக்கூட இழுத்துக் கொள்ளும் சக்தி வந்து விடும். அப்பொழுது நம்மை அறியாமலேயே, இன்னொரு ஆவி நமக்குள் புகுந்து விடும். நீங்கள் சில நேரங்களில் இதைப் பார்க்கலாம்.

இதை, எமக்கு குரு உணர்த்தினார். அதன் வழிகளில் பின்பற்றும் பொழுது, உங்களை அறியாமல் வந்த தீமைகளை, நீங்கள்தான் தடுத்துப் பழகவேண்டும். சாமி கொடுப்பார், சாமி கொடுப்பார் என்றால், யாம் நிறையைக் கொடுத்துக் கொண்டிருக்கின்றோம்.

நல்ல விதையைக் கொடுத்து,
முளைக்க வைத்து,
நிறைய வளர்த்துக் கொள்ளுங்கள் என்று சொன்னால்,
அந்த ஒரு வித்தையும் வளர்க்க விடாதபடி, அடித்துப் போய் விட்டால், நீங்கள் எங்கே பெறுவது?

குருநாதர், எம்மிடம் அந்த ஞான வித்தைப்பதிவு செய்தார். அவர் சொன்னபடி காப்பாற்றுகின்றேன். காடு மேடெல்லாம் அலைந்தேன்.

எப்படி வித்தை உருவாக்குவது என்பதைத் தெரிந்து கொண்டேன். “உருவாக்கிய வித்தைஉங்கள் உடலுக்குள் பதிவு செய்கிறேன்.

நினைவு கொண்டு, அந்த அருள் உணர்வைப் பெற வேண்டுமென்று, அதை எடுத்தீர்களென்றால், அகஸ்தியன், துருவனாகி, துருவ மகரிஷியாகி, துருவ நட்சத்திரமான அருளைப் பெறலாம்.

அதை நீங்கள் காலையில் எழுந்து, கொஞ்சம் கொஞ்சம் எடுத்தால், ஊட்டம் கிடைக்கும். அது வளர ஆரம்பிக்கும். தன் இனத்தைப் பெருக்கும்.

(பக்கம் 22-25)
உதாரணமாக, பட்டு நூல் உருவாக்கும் புழு, தன் மலத்தால் பட்டு நூலை உருவாக்கி, தன்னைச் சுற்றிச் சுற்றி, அதற்குள் சிக்கிக் கொள்கின்றது. ஆகாரம் எடுப்பதற்கு வழியில்லை.

வெளியில் போகவேண்டும் என்ற உணர்வு வருகின்றது. தன்னை அறியாமலேயே, பறந்து போக வேண்டும் என்ற ஆசை வருது.

அந்த உணர்வுகளை எடுக்க, எடுக்க, இந்தப் புழுவின் உடல் குறுகி, பூச்சியாகப் பிறக்கின்றது. அதனுடைய உணர்வுகள் மாறிய உடனே, சிந்தனை வருகின்றது. அந்தக் கூட்டை வெடிக்கச் செய்து, வெளியிலே வருகின்றது. வெளியில் வந்தவுடன்,
இது ஏற்கனவே உட்கொண்ட இலையை விடுத்து,
வேறு ஒரு இலையை உண்டு,
ஓடு பலமாகி, வண்டாகப் பிறக்கின்றது.
இந்த ஒரு கூட்டுக்குள்ளேயே, உணர்வுகள் மாறுகின்றது.

இதே போல, சில புழுக்கள் தன் உடலிலே வரக்கூடிய மலத்தைக் குச்சிகளாக ஒடித்து வைத்து, சுற்றிக் கொள்கிறது. அதற்குள்ளே ஒடுங்கி வளர்கின்றது. பாதுகாப்பாக இருப்பதற்குச் செய்தாலும், அதனால் வெளியில் வர முடியாமல் போய் விடுகின்றது. அப்பொழுது, அது தன்னை அறியாமலேயே, தப்ப வேண்டும் என்ற உணர்வை, எடுக்கின்றது.

தலை மட்டும் வெளியில் உள்ளது. வெளியே வரமுடியாமல் சிக்கியபின், அங்கேயும், இங்கேயும் பல பச்சிலைகள், மற்றவைகளை எல்லாம் பார்க்கின்றது.

இந்த உணர்வுகளை அது, தான் எந்த மாதிரி செடிகளில் கட்டியதோ (குச்சியை எடுத்ததோ), அந்தச் செடியை நுகர்ந்து அதே மாதிரி தட்டான் பூச்சிகளாக மாறுகின்றது. இவையெல்லாம் இயற்கையின் நியதிகள்.
இதே போன்றுதான்,
நாம் நுகர்ந்த உணர்வுகள்
நம் உடலில் அணுக்களாக மாறிய உடனே,
உடலில் வித்தியாசமான அமிலங்கள் வந்து,
நல்ல அணுக்கள் மாறிக் கொண்டே இருக்கும்.
இதை குருநாதர், தெளிவாகக் காட்டுகின்றார்.

இவ்வாறு, நமது வாழ்க்கையில் இதைப்போன்று பல கோடிச் சரீரங்களைக்  கடந்து, இன்று மனிதனாக வந்தபின், பச்சையாக எதைச் சாப்பிட்டாலும், வாயில் அந்த வாசனைதான் வருகின்றது. உடலிலும் அந்த வாசனை வரும். வெங்காயம் சாப்பிட்டால், எப்படி அந்த வாசனை வருகின்றதோ, இதைப்போன்று அந்த உணர்வுகள் உடலுக்குள் சென்றபின், அந்த உணர்ச்சிகள் இயக்குகின்றது.

இதைப்போலத்தான், பச்சையாகச் சாப்பிடக்கூடிய உடல்களிலே அதாவது, ஆடு மாடுகளில், இந்த மணம்தான் வரும். நாம் பச்சையாகச் சாப்பிட்டோம் என்றால், உடலை விட்டுப் போனோம் என்றால், ஆடு எத்தனை வகையான இலையைச் சாப்பிட்டதோ, அதே மாதிரிச் சாப்பிட்டவுடன், நாம் அங்குதான் போவோம். ஆடாகப் பிறப்போம்.

அதே ஆட்டை அறுத்துச் சாபிட்டாலும், நமக்கு ஆட்டின் நினைவு வரும். உடலை விட்டுப் போனால், அந்த ஆட்டிடம்தான் செல்ல வேண்டும்.
ஆட்டை வேகவைத்துச் சாப்பிட்டாலும் சரி.
பச்சை இலைகளைச் சாப்பிட்டாலும் சரி.

அதே சமயம் இந்தப் பச்சிலைகளை வேக வைத்து விட்டால், இந்த வீரியசக்தி குறைகின்றது. பல பொருளோடு சேர்த்து, இணைத்து ருசியாகச் சாப்பிடும் பொழுது, அதற்குத்தக்க அளவை நம் இரத்தங்களிலே கலந்து, நல்ல அணுக்களாக உருவாகின்றது.

இந்த அணுக்கள் இரத்தங்களிலே கலந்து, நம் உடலிலுள்ள அணுக்களுக்குச் சேர்க்கப்படும் பொழுது, கொஞ்சம் விஷம் தோய்ந்த உணர்வின் நிலைகள் மாறி, அணுக்கள் திடகாத்திரமாக மாறும் என்ற உண்மையை, அகஸ்தியர் முதல் முதலில் கண்டுபிடிக்கின்றார்.

ஒவ்வொரு செடியையும் நுகர்ந்தறிந்து, அதனுடைய இயக்க நிலைகளை அறிந்து கொண்டு வருகின்றான். அறிந்தபின், காய்கறிகளை வேகவைத்து, ருசியாகச் சாப்பிடப் பழகினான்.

அப்புறம் கனிகளைச் சாப்பிட்டான். கனிகளின் உணர்வினை அதிகமாகச் சாப்பிட்டாலும், அதன் உணர்வு கொண்டு, உணர்வுகளின் அணுக்கள் மாறி, அந்த கனியைச் சாப்பிட்ட உயிர் அங்கே சென்றபின், அதனைக் கவர்ந்து மாறிவிடும் (தனித்துச் சாப்பிட்டால்).

இதையெல்லாம் உணர்ந்தபின், இன்று புல் இருக்கின்றது. பயிராகி வருகின்றது. அதில், இதைப் போல எடுத்து உணவாக உட்கொள்ளவும், பல செடிகளை இணைத்து, புதுப் புதுச் செடிகளை உருவாக்கினார் அகஸ்தியர். ராகி, சோளம், அரிசி, அவைகளையெல்லாம், மற்ற புல் பூண்டிலிருந்து எடுத்து, உருவாக்கினார்.

இன்று விஞ்ஞானிகள் எத்தனையோ வகையான சோளம், இதெல்லாம் மாற்றுவதுபோல் மாற்றி, அதனை வேக வைத்து, மனிதன், கலவையாகச் சாப்பிடுவதும், தாவர இனங்களில் உருவாவதைச் சேர்த்து ருசியாக சாப்பிடப் பழகினார்.

என்று நெருப்பைக் கண்டுபிடித்தானோ,
அதன் தன்மை கொண்டு,
வேக வைக்கும் உணர்வுகள் மாறுகின்றது.
இப்படி மாற்றியமைத்தவர் அகஸ்தியர்.
ஆக, இந்த உண்மையின் உணர்வை அறியப்படும் பொழுது,
இந்தச் செடி எப்படி உருவாகின்றது
என்று சிந்திக்கத் தொடங்குகின்றார்.

அப்பொழுதுதான், நமது பூமி துருவப்பகுதியில் இருந்து, அதனைக் கவருவதை உணர்கின்றார். இந்த விஷத்தை அடக்கக்கூடிய சக்தி இவனிடம் இருந்ததனாலே, எதையுமே தெரிந்து கொள்ளக்கூடிய சக்தி அவனுக்கு வருகின்றது. மற்ற மனிதனைக் காட்டிலும், இவன் அந்த அறிவில் வளர்ச்சி உள்ளனவாக, வருகின்றான்.

அப்படிப் பெற்றவன், வான் வீதியில் உற்றுப் பார்க்கும் பொழுது, இந்த 27 நட்சத்திரங்களும், ஒன்றோடு ஒன்று மோதும் பொழுது, மின்னலாக மாறுகின்றது என்பதைக் காண்கின்றான்.

நம் பிரபஞ்சத்தைக் காட்டிலும், பிற மண்டலங்களிலிருந்து வரும் விஷத்தன்மை நம் பூமிக்குள் வந்தால், மிகவும் தீங்கு செய்கின்றது என்பதனை, இவன் உடலுக்குள் தீங்கினை மாற்றும் சக்தி இருந்ததனால், உணர்வை நுகர்ந்து, கொஞ்சம், கொஞ்சமாக இரத்தத்தில் கலந்தது. மின் கதிர்களை ஜீரணிக்க கூடிய சக்தி, அவனுக்கு இருந்தது. அவைகள் வளர்ச்சி அடைந்தது.

இவ்வாறு, இந்த உயிரைப் போலவே இந்த அணுக்களின் தன்மை, அது கொஞ்சம், கொஞ்சமாக வளர்ச்சியடைகின்றது.

27 நட்சத்திரங்களும், 27 விதமான நிலைகளில் மோதும் பொழுது, மின் கதிர்களை அவன் சுவாசித்து, அவன் வாழ்க்கையில், அதனை அடக்கும் வல்லமை இருந்ததனால்,
சூரியன் தனக்குள் எப்படி பாதரசமாக மாற்றி,
அது வெளிப்படுத்தும் உணர்வுகள்
உலகிற்கே ஒளி தருவது போல்,
அந்த உணர்வின் தன்மை உயிருடன் ஒன்றி
ஒளியின் அறிவாக
அகண்ட அண்டத்தையும் அறியும் உணர்வுகள்
அகஸ்தியனுக்குள் வந்து சேர்கின்றது.
(பக்கம் 28-34)
நமது குருநாதர் காட்டிய  அருள்வழியில், அகஸ்தியன், துருவனாகி, துருவ நட்சத்திரமாகி, அதிலிருந்து வரக்கூடிய உணர்வை, அந்தச் சக்தி வாய்ந்த பேரருளை நீங்களும் நுகர வேண்டும் என்பதற்காகத்தான்,
பல முறை உபதேசத்தைக் கொடுத்து,
பல விதமான உணர்வை நுகரச் செய்து,
இரத்தங்களிலே கலக்கச் செய்து,
உங்க உடலிலுள்ள அணுக்களுக்கு, அதைப் பெறச் செய்வதற்குத்தான்
யாம், மணிக்கணக்கிலே பேசுகின்றோம். சில சாமியார்கள், அரை மணி நேரத்தில் பேசிவிட்டுச் சென்று விடுவார்கள்.

யாம் மணிக்கணக்கிலே சொல்கிறோம் என்றால், அந்த மூன்று மணி நேரம் சுவாசிக்கின்ற உணர்வுகள், உங்கள்  இரத்தங்களிலே கலக்கும்.

எந்த அளவுக்கு உற்றுக் கவனிக்கின்றீர்களோ, அந்த அளவிற்கு இரத்தத்தில் கலந்து, அந்த அணுக்களில், கொஞ்சம் கொஞ்சமாக இணையும்.

அவ்வாறு, உற்றுப் பார்த்த உணர்வுகளை, மீண்டும் அதை நினைவுபடுத்தி எடுத்தீர்களென்றால், அருள்ஞானவித்து உங்களிலே விளையும். யாம் உங்களிடம் பதிவு செய்த ஞான வித்தை, நீங்கள் வளர்க்க வேண்டும்.

செடிகளுக்கு வித்து வைத்தவுடன், நெல்லுக்கு ஒரு உரம் போடுவார்கள். சோளத்துக்கு ஒரு உரம் போடுவார்கள். அதே போன்று, இந்த ஞானவித்திற்கு, அருள்ஞான உணர்வின் உரத்தை, நாம் செலுத்திக் கொண்டே இருக்க வேண்டும்.

யாம் சொல்லும் உணர்வுகள் ஞானவித்தாக, உங்களுக்குள் ஊழ்வினை என்ற வித்தாகப் பதிவாகின்றது. ஒவ்வொரு நிமிடத்திற்கும் அதற்குச் சத்து கொடுக்க வேண்டுமென்றால், அந்த துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெறவேண்டும், எங்கள் உடல் முழுவதும் பெற வேண்டும், எங்கள் ஜீவாத்மா, ஜீவணுக்கள் பெறவேண்டும், என்று உள்ளுக்குள் சேர்த்துக் கொண்டே இருக்க வேண்டும்.

இது இரத்தங்களில் கலந்து என்ன செய்யும் என்றால், கொஞ்சம் கொஞ்சமாக, நம் உடலில் உள்ள நல்ல அணுக்களை உயர்த்தும்.

நான் தியானம் பண்ணிக் கொண்டே இருக்கின்றேன்,
என் வீட்டுக்காரர் இப்படித் திட்டுகின்றார்.
நானும் தியானம் பண்ணிக்கொண்டே இருக்கின்றேன்,
கொடுத்த கடன்காரன் கொடுக்கவே மாட்டேன் என்கிறான்
என்று விட்டுவிட்டால் என்னாகும்? இது சவாரி பண்ணி விடும்.
தியானம் பண்ணிக்கிட்டேயிருக்கேன்,
நோய் வந்துவிட்டது என்று நினைத்தால்,
இதை விட்டுவிட்டு, அதை எடுத்துக் கொள்கிறீர்கள்.
ஆக, கெட்டதுக்குத்தான் நீங்கள் சக்தி வளர்க்கின்றீர்கள். ஆக, எதுக்கு ஜீவன் ஊட்டுக்கின்றீர்கள்? நம் எண்ணங்கள் எதில் வருகின்றது?

நம்முள் உள்ள அணுக்கள், பசியைத் தூண்டும் பொழுது, நல்லதை எடுக்க விடாமல் தடுக்கின்றது. அந்த மாதிரி தடுக்கின்ற நேரத்தில், நாம் என்ன செய்ய வேண்டும்?

ஆன்மாவைச் சுத்தப்படுத்திப் பழகவேண்டும். “ஈஸ்வராஎன்று உயிரை எண்ணி, அந்த துருவ நட்சத்திரத்தின் பேரருளும், பேரொளியும் பெறனும், என் உடல் முழுவதும் படரனும், என் ஜீவான்மா பெற வேண்டும் என்று துருவ நட்சத்திரத்தின் உணர்வை நல்ல உரமாகக் கொடுத்து, அந்த ஞானத்தை நாம் பெருக்க வேண்டும். தீமையான உணர்வு, நமக்குள் போகாமல் தடுக்க முடியும். இப்படிச் சுத்தப்படுத்த வேண்டும்.

ரோட்டிலே ஒருவன், யாரையோ கோபமாகப் பேசுகின்றான். “நடுரோட்டில், இந்த மாதிரிப் பேசுகின்றானேஎன்ற உணர்வு வந்தவுடனே, உயிரில் பட்டவுடனே, நமக்கும் அந்த உணர்ச்சியைத் தூண்டுகிறது.

அவன் உணர்வு, நம்மை இயக்குகின்றது. அப்பொழுது நாம் என்ன செய்ய வேண்டும்? ஈஸ்வரா என்று கண்ணின் நினைவை உயிருக்கு, புருவமத்தியில் கொண்டு போகவேண்டும்.

துருவ நட்சத்திரத்தின் பேரருளும், பேரொளியும் நாங்கள் பெற வேண்டும், எங்கள் உடலில் படரவேண்டும், எங்கள் ஜீவாத்மா பெறவேண்டும் என்று, உள்ளுக்குள் செலுத்த வேண்டும். இந்த வலுவான நிலைகள் இங்கே வந்தவுடனே, இதைத் தள்ளிவிட்டு விடுகிறது. இங்கே அடைத்து வலுக்கூட்டி, ஆன்மாவைச் சுத்தப்படுத்துகின்றோம்.

துணியில் அழுக்குப் பட்டவுடன்,
சோப்பு போட்டவுடன்,
நுரை உள்ளுக்குள் போய்,
அழுக்கை வெளியே தள்ளிவிட்டு விடுகிறது.
சோப்புப் போடாமல், என்னதான் துவைத்தாலும், இருட்டடித்த மாதிரிதான் இருக்கும். வெள்ளையாக வருவதில்லை.

அதுபோல, நம் ஆன்மாவைத் தூய்மை செய்ய வேண்டும்.
இவ்வாறு ஆன்மாவைத் தூய்மைப்படுத்துவதற்கு,
நம் எண்ணத்துக்கு வலு கொடுப்பதற்கு,
ஜீவன் ஊட்டுவதற்கு என்ன செய்ய வேண்டும்?

காலையில் எழுந்தவுடனே, அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும், பேரொளியும் பெறனும், என் உடல் முழுவதும் படரனும், என் இரத்த நாளங்களில் கலக்கனும், என் ஜீவான்மா, ஜீவனுக்கள் அனைத்தும் பெறனும் என்று நினைத்து, தன் கணவருக்கு அந்த சக்தி பெற வேண்டும் என்ற எண்ணி, அவர் உடல் முழுவதும் படரனும், அவர் ஜீவாத்மா பெறனும் என்று எண்ண வேண்டும். அதேபோல, ஆண்களும், தன் மனைவியும் பெற வேண்டும் என்று எண்ண வேண்டும்.

இரண்டு பேர் சண்டை போட்டார்கள் என்றால், அமெரிக்காவில் இருந்தாலும் புரையோடுகின்றது. நன்மை செய்தான் என்று எண்ணினால், விக்கலாகின்றது. இங்கே, குடும்பத்தில் பாசத்துடன் இருந்து, “குழந்தைக்கு இந்த மாதிரி ஆகிப்போய்விட்டதுஎன்று எண்ணிப் பாருங்கள், அங்கே தொல்லை கொடுக்கும்.

கணவர், ரொம்ப உழைத்துக் கொண்டேயிருக்கிறார். இருக்கிறவன் எல்லாம் இப்படி பேசுகிறார்களே என்று மனைவி எண்ணினால், ஆண்கள் எவ்வளவு திறமைசாலியாக இருந்தாலும் செயலற்றதாக ஆக்கிவிடும். அப்பொழுது நாம் என்ன செய்ய வேண்டும்?

அந்த அருள் ஒளி பெற வேண்டும். என் கணவர் ஜீவான்மா பெற வேண்டும். நாங்கள் இருமனமும் ஒன்றி, இரு உயிரும் ஒன்றனும். வாழ்க்கையில் இருளை அகற்றும், அந்த அருள்சக்தி பெற வேண்டும் என்று, இரண்டு பேரும் அதிக நேரம் இல்லையென்றாலும், கொஞ்ச நேரம் எண்ண வேண்டும். ராத்திரியிலே விழிப்பு வரும்பொழுது, இந்த மாதிரி செய்து பழக வேண்டும்.

தியானத்திலே இருக்கிறவர்களுக்கு, காலை 4 மணியில் இருந்து 6 மணி வரை, இந்த உணர்வுகள் தட்டி எழுப்புவதை நீங்கள் பார்க்கலாம். உங்களையறியாமலேயே விழிப்பு வரும். அந்த நேரத்திலே, அந்த அருள்சக்திகளை நுகருங்கள்.

அப்பொழுது பெண்கள், தன் கணவனுக்குக் கிடைக்க வேண்டும், ஆண்கள், தன் மனைவிக்குக் கிடைக்க வேண்டும் என்று எண்ண வேண்டும். எண்ணியபின், அந்த குரு அருளைப் பெற வேண்டும். என் கணவர் பார்வையில், தீமைகள் அகற்றும் அந்த சக்தி பெற எண்ண வேண்டும். அவர் செயலிலே புனிதம் பெற வேண்டும், அவரைப் பார்ப்போரெல்லாம், அந்தப் புனிதநிலை பெற வேண்டும் என்று, எண்ண வேண்டும்.

அதே மாதிரி, கணவன், மனைவியை ஓர் 5 நிமிடம் எண்ணிப் பழக வேண்டும். இப்படி நீங்கள் எண்ணினால், காலையில் 6 மணிக்கு விழித்தெழும் பொழுது, ஓர் ஆனந்தமான நிலை வரும்.

இந்த மாதிரி எண்ணுபொழுது பார்த்தால், உங்கள் உடலில் பளீர், பளீரென்று வெளிச்சம் வரும். ஏனெனில், அது நுகரப்படும் பொழுது, இது பட்டவுடன் மோதி, அந்த இருள் நீக்கி, வீட்டிற்குள் ஒரு வெளிச்சம் வருவதைப் பார்க்கலாம்.

சூரியன், தன் உடலில் எடுத்துக் கொண்ட பாதரசத்தால், தன் அருகில் வந்தவுடன் மோதி, பளீரென்று உலகம் முழுவதும் ஓர் வெளிச்சத்தை கொடுக்கிறது. அதே மாதிரி,
நம் மூச்சலைகள் பட்டவுடன்,
நமது வீட்டிற்குள் இவ்வாறு எண்ணும் பொழுது,
நம் உடலில் எடுத்து கொண்ட சக்தி, தீமை என்ற நிலையில் மோதியவுடனே, அது விலகிப் போகும். உடலில், ஒரு விதமான வெளிச்சம் வரும். உடலில் மகிழ்ச்சி ஏற்படும்.

இதை நீங்கள், ஒவ்வொரு நாளும் காலையில் 4 மணிக்கெல்லாம் செய்து பழக வேண்டும். அப்படிச் செய்தால், யாம் பதிவு செய்கின்ற ஞானவித்திற்கு, அப்பொழுது நீங்கள் சக்தி ஊட்டுகிறீர்கள்என்று அர்த்தம்.

(பக்கம் 34-37)
வீட்டிலே, நாம் வேலைக்கு அவசரமாகப் போக வேண்டும் என்று நினைப்போம். அந்த நேரத்தில், சந்தர்ப்பத்தில் மனைவிக்கு முடியாமல் இருக்கலாம். அப்பொழுது, “இன்னும் எழுந்து, அவர்கள் ஒன்றும் செய்யவில்லை பார்என்று கோபத்தை எடுத்தால், அவர் உடலில் முடியாமையை அறிய முடியாது.

அப்பொழுது, உடனே நமக்குக் கோபம் வரும். அப்பொழுது, எதற்கு ஊட்டம் கொடுக்கிறோம்? எனெனில்,
நம் உடலில் கோபத்தை ஊட்டும் அணுக்கள் உள்ளது.
அதற்கு ஆகாரம் தேவை.
இந்த சந்தர்ப்பம் பார்த்து, ஊடே புகுந்து கொள்ளும்.
நாம் சிந்திக்க முடியாத நிலையில், அது சாப்பாடு எடுக்கின்றது.

புலி, பத்து நாள் பட்டினி போட்டவுடன், ஒரு ஆளைக் கண்டவுடன் எப்படித் தாவுகின்றதோ, மற்றும் மழை இல்லாமல் பூமிக்குள் பதிந்திருக்கும் செடி, கொடிகள், மழை பெய்தவுடன் எப்படி, கிடு கிடுவென விதைக்காமலே முளைக்கின்றதோ, அதிலேயும், இந்த விஷ வித்துக்கள், கிடு கிடு என்று முளைக்கும்.

நல்ல வித்துக்கள் போட்டால், சீக்கிரம் முளைக்கின்றதா? அதற்கு வேண்டிய பக்குவ நிலையும், சூழ்நிலையும் உருவாக்கினால்தான், அது விளைகின்றது.

ஆகையால், நாம் என்ன செய்ய வேண்டும்? அந்த ஞான வித்துக்களை, வளர்த்துப் பழக வேண்டும். இது, மனிதன் ஒருவனால்தான் சாத்தியமாகின்றது.

நாம் ரோட்டில் போகும் பொழுது, பார்த்து நுகர்ந்த உணர்வுகள் அணுவாகி விட்டால், அதற்குச் சாப்பாடு தேவை. நம்மை அறியாமலேயே, நுகர்ந்து, அந்த வெறுப்பின் உணர்வுகளச் சுவாசிக்கச் செய்யும்.

இத்தகைய உணர்வுகளை நீங்கள் சுவாசித்தவுடனே, தொழில் செய்யப் போகும் பொழுது, அவனைப் பார்க்கப்படும் பொழுதே, அவன் மேல் வெறுப்பு வரும். நமக்காக வேலை செய்யும் பொழுது, இந்த வெறுப்பின் உணர்வுகள் அவனுக்குள் சென்று, தவறாக வேலை செய்வான்.

அதே சமயத்தில், இந்த உணர்வின் தன்மை கணக்கு எழுதப்படும் பொழுது, என்ன செய்கிறது எனில், கணக்கைத் தவற விட்டுவிடுகிறது. நாம் நுகர்ந்த உணர்வுகள், நம்மை அறியாமலேயே, அதனுடைய உணர்வுக்காக, அந்த உணர்ச்சிகளைத் தூண்டி, அது வளர்கின்றது.

நல்ல குணங்களை, நாம் நமக்குள் தேடித் தேடிப் பார்த்துக் கொள்ள வேண்டியுள்ளது. நல்ல குணத்தைப் பாதுகாத்துக் கொள்ள முடிகின்றதா?

அதற்கு நாம் என்ன செய்ய வேண்டும் எனில், அந்த உணர்வு தூண்டுகின்றது என்றால், நமக்குள், நம்மை எது இயக்குகின்றது? அவன் உடலில் பிறிதொரு உணர்வுகளைக் கேலி பண்ணிப் பழகியிருப்பான். அவன் முகத்தை நாம் பார்க்கவில்லை. நாம் பேசவில்லை. அவன் உடலைச் சுற்றி, அந்த ஆன்மாவில் இருக்கும். உற்றுப் பார்த்தால், நமக்குள் பதிவாகி, நுகரச் செய்கிறது.

அவனை அறியாமலேயே, குற்றவாளியாகப் பார்க்கிறான். அப்பொழுது, இதை எது செய்கிறது? இந்த உணர்வின் அணுக்கள் உந்தப்படும் பொழுது, அதைக் கவர்ந்து, நம்மையறியாமலேயே சாப்பாடு எடுக்கின்றது.

நுகர்ந்தபின் என்ன செய்கின்றது? மாம்பழத்திலிருந்து, வாசனை வருகிறது. நல்ல பழமாக இருந்தால், “ஆகாஎன்கிறோம். அதிலே புளிப்பு கலந்தால், புளிப்பாக இருக்கிறது என்கிறோம். எதிலே வருகிறது? காற்றின் நிலைகளில் வருகிறது. அதனை உணர்ந்து நுகர்ந்தவுடனே, பழம் இதுவென்று பார்க்கிறோம்.

ஒரு பூச்செடியிலிருந்து வரக்கூடிய மணத்தைப் பார்த்தவுடன், நன்றாக உள்ளது. பச்சிலையிலிருந்து வரும் மணத்தைக் கண்டு, நமக்குப் பிடிக்கவில்லை என்றால், வாந்தி வரும்போல உள்ளது.

நம் உடலிலுள்ள அணுக்கள், அதை ஏற்றுக் கொள்ள மறுத்தால், வாந்தி வருகின்ற மாதிரி உள்ளது. இதையெல்லாம் எது செய்கின்றது?

இதையெல்லாம் நுகர்ந்து, நாம் இரத்தத்தில் கலந்தபின், நம் உடலுக்குள் இருக்கும் அணுக்களுக்கும், அந்தத் தீங்கு விளைகின்றது. அந்த அணுக்கள் வளர ஆரம்பிக்கும். அப்பொழுது நாம் என்ன செய்ய வேண்டும்? நல்ல அணுக்கள் ஏற்க மறுக்கும் நிலை வருகின்றது. கெட்ட அணுக்கள் எடுக்கும் பொழுது, அது வளர்கின்றது. அப்பொழுது, நம்மையறியாமலேயே மயக்கம் வரும். அந்த நேரத்தில், நாம் இந்த ஆத்மசுத்தி செய்ய வேண்டும்.

ஈஸ்வராஎன்று, உயிரை எண்ணி, துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற வேண்டும். எங்கள் ஜீவான்மா, ஜீவ அணுக்கள் பெறவேண்டும் என்று இங்கே புருவ மத்தியில் நிறுத்திவிட்டு, எங்கள் உடலிலே அது பரவ வேண்டும், என்று எண்ணிவிட்டு, யார் இந்த மாதிரி நடந்தனரோ, அவர் பொருளறிந்து செயல்படும் சக்தியும், சிந்திக்கும் ஆற்றலும் பெறவேண்டும் என்று எண்ண வேண்டும். இவ்வாறு எண்ணினால்,
அவன் செய்த செயலும்,
நாம் எண்ணிப் பார்த்து நுகர்ந்தது,
இரண்டும் உயிருக்குத்தான் வருகின்றது.

உயிர் ஒரு நெருப்பு. நெருப்பை வைத்து, ஒரு பாத்திரத்திலே எந்த சரக்கைப் போடுகிறோமோ, அதை இரண்டறக் கலந்து, ஓர் கலவையாகின்றது. ஆகையால், பிறிதொரு மனிதனுடைய உணர்வுகள், இங்கே உருவாகக் கூடாது.

ஒவ்வொரு நொடியிலும் நாம் சுவாசிக்கும் பொழுது
அந்த மகரிஷிகளின் அருள் சக்தியை
உயிர் வழி நுகர்ந்து, சுவாசித்து,
அதை நமக்குள் வளர்த்து,
இந்த உடலில் ஏகாந்த நிலை என்று மகிழ்ந்து வாழ்ந்து, உயிருடன் ஒன்றி, ஒளியின் சரீரமாகி, மகரிஷிகளின் அருள் வட்டத்தில் இணைய வேண்டும். எமது அருளாசிகள்.


(பக்கம் 38-52)
நாம் நுகர்ந்த உணர்வுகளால், நம் உடலின் உணர்வின் மாற்றமும், அடுத்த பிறவியும், ரூபங்கள் எப்படி மாறுகின்றது என்பதைத் தெளிவாக மெய்ஞானிகள் கூறுகின்றார்கள்.

நான் குருநாதரோடு ஆயுள் மெம்பராக இருக்கின்றேன். அவர் ஒளியானார். அவர் வழியைப் பின்பற்றுகின்றேன். நான் ஒளியாகின்றேன்.

அதே உணர்வை உங்களிடம் சேர்த்து, அவரோடு சேர்த்து, ஆயுள் மெம்பராக வருகின்றீர்கள். ஆயுள் காலம் என்றால், இந்த உயிரின் கடைசி நிலை. இதைத்தான் இராமாயணத்தில் எண்ணங்களைப் பற்றிச் சொல்வார்கள்.

நாம் வேதனை என்ற உணர்வை உடலில் பெற்றபின், சிவ தனுசு உடலாகி இந்த உணர்வு வலுப் பெற்றுவிட்டால், நல்லதை எடுக்க விடுகிறதோ? எடுக்க விடவில்லை. நமது உயிர் விஷ்ணு. துருவ நட்சத்திரம் இந்த உயிருடன் ஒன்றி, உணர்வுகளை ஒளியாக மாற்றியது. பல தீமைகளை வெல்லக்கூடிய சக்தி பெற்றது

அந்த துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும், நாங்கள் பெறவேண்டும்ஈஸ்வராஎன்று, இங்கே புருவ மத்தியில் அனுப்பும் பொழுது, இந்த உணர்வுகளை எடுத்து ஒளியாகின்றது இதற்குப் பெயர் விஷ்ணு தனுசு. இந்த உணர்ச்சிகள் இரத்தத்தில் கலந்தவுடனே, தீமையான உணர்வின் அணுக்களைச் செயலற்றாதாக்குகின்றது.

ஆகையால், வேதனைப்படும் உணர்வை நாம் நுகர்ந்துவிட்டால், “ஈஸ்வராஎன்று அந்த துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெறவேண்டும் என்று இணைத்துவிட வேண்டும். எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும், எங்கள் ஜீவாத்மா பெறவேண்டும் என்று சொல்கிற பொழுது, இது விஷ்ணு தனுசு.

பையன் வேதனைப்படுவதை, வேதனைப்படுமாறு செய்வதைப் போன்று, குடும்பத்தில் இப்படி நிலை வருகிறதென்றால், இது சிவ தனுசு. எடுத்துக் கொண்ட உணர்வின் தன்மைதான், சொல்லாக வருகின்றது. நாம் கேட்டவுடனே என்ன செய்கிறது? இதே உடலைத்தான் இயக்குகிறது.

ஆனால், நாம் அந்த துருவ நட்சத்திரத்தின் உணர்வைச் சேர்த்து, உடலுக்குள் பெறவேண்டும் என்கிற பொழுது, அந்த விஷ்ணு தனுசு என்ன செய்கிறது? சிவ தனுசை அடக்குகின்றது.

இவ்வாறு நாம் அறிந்துகொண்ட பின், நம் உயிரின் இயக்கத்தால் ஒளியின் சரீரமாக, துருவ நட்சத்திரமானான் என்று தெரிந்தபின், தெரிந்தும் அதை விட்டுவிட்டால் என்ன ஆகும்?

எனவே, அந்த துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெறவேண்டும், எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும், எங்கள் ஜீவாத்மா பெறவேண்டும், ஜீவ அணுக்கள் பெறவேண்டும் என்று, தூய்மை செய்யப்படும் பொழுது, அந்த வலுவைக் கூட்டியபின்
அவன் அறியாமை நீங்க வேண்டும்,
அவன் பொருளறிந்து செயல்படும் சக்தி பெறவேண்டும்,
சிந்திக்கும் ஆற்றல் பெறவேண்டும்,
தெளிவான மனம் பெறவேண்டும்,
என்று அவனை எண்ணி இதை எடுத்தோமென்றால்,
இதைப் பெருக்கிக் கொள்கிறோம்.

மிளகாய் காரம் என்றால், தூக்கி எறிந்து விடுகின்றோமோ? அதைச் சேர்த்துச் சுவையாக மாற்றுகின்றோம்.

அந்தக் காரம் என்ற உணர்வு, கோபப்படுபவர்களை, வேதனைப்படுபவர்களை, வெறுப்படைபவர்களை, துயரப்படுபவர்களைஇந்த மாதிரி சங்கடங்களைக் கண்ணுற்றுப் பார்க்கும் பொழுது, தெரிந்து கொள்கின்றோம்.

தனித்துவிட்டால், அந்த உணர்வின் தன்மை நமக்குள் சேர்த்து, கார உணர்ச்சிகள் அதிகமாகி, நம் அணுக்களில் பெருக்கிவிட்டால், இதன் நிலைகளில் ரூபம் மாறிவிடும்.

சில வீடுகளில், “இப்படிப் பேசுகிறானே, உருப்படுவானாஎன்று சொல்லிச் சொல்லி, இவர்களே உருப்படாமால் பண்ணிக் கொள்வதைப் பார்க்கலாம்.

இந்த மாதிரிப் பேசுகிறவர்கள் உடல்களிலே, நிறைய சங்கடங்கள் வரும். குடும்பத்தில் சண்டை வரும். குழந்தைகளிடம் வெறுப்படைவார்கள். இவர்கள் எண்ணமே, உதவி செய்வதற்கு மாறாகப் பிரித்துவிட்டுவிடும்.

நண்பர்களிடமும், இதே போன்ற உணர்வுகளைத் தோன்றச் செய்து, பிரித்துவிடும். எப்பொழுது பார்த்தாலும், இதேபோல உருப்படுவானா?” என்று சொல்வதைக் கேட்டு, நண்பர்களுக்கும், இவன் உருப்படுவானா? என்ற எண்ணத்தைத் தோற்றுவித்துவிடும்.

ஆக அவர் இவ்வாறு, காரம் என்ற நிலைகளை எடுத்தால், நோய் என்ற நிலைகள் விளைகின்றது. அதனை நாம் எடுத்தால், நமக்குள்ளும் அதே நிலையாக மாற்றும். ஆகையினால், நம்மைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டுமென்றால், நமக்குப் பாதுகாப்பு தேவை.

ஒவ்வொரு நொடியிலும், அந்த துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற வேண்டும் என்று இதை எடுத்து வளர்த்துக் கொண்டால், இதன் வழி நமக்கு, இந்த உண்மையின் நிலைகள் வரும்.

நாம் தொழிலுக்குச் செல்லும் பொழுது, இதே மாதிரி ஆத்ம சுத்தி செய்துவிட்டு, நம்மிடம் வேலை செய்பவர்கள் அனைவரும்,
மகரிஷிகளின் அருள் சக்தி பெறவேண்டும்,
பொருளறிந்து செயல்படும் சக்தி பெறவேண்டும்.
தொழிலில் நல்ல நாட்டம் வரவேண்டும்,
தெளிவான மனம் பெறவேண்டும்,
தெளிவாகத் தொழில் செய்யும் அந்த எண்ணம் வரவேண்டும்,
என்று உங்கள் இடத்திலே உட்கார்ந்து, ஒரு பார்வை பார்க்க வேண்டும். நீங்கள் எதை எண்ணுகிறீர்களோ, அதே போன்று, நன்றாக இருக்க வேண்டும் என்று எண்ண வேண்டும்.

யாராவது தவறு செய்கிறார்கள் என்றால், இயற்கையில் அவர்களது குடும்பத்தில், எத்தனையோ விதமான நிலைகள் இருக்கும். பொருளாதாரத்தில் குறை இருக்கலாம். சொந்தத்திற்குள் யாராவது குறையாகப் பேசியிருக்கலாம்.

இந்த மாதிரி குறைகளைப் பேசி, அவர்களுக்குள் வெறுப்பான நிலைகள் இருந்தால், நம்மிடம் வேலை பார்க்கும் பொழுது, சிந்தனையிழந்து வேலை செய்யும் நிலை வரும். அப்பொழுது, நம் பொருள்களுக்கு நஷ்டம் வரும்.

அவ்வாறு வராதபடி செய்ய வேண்டுமென்றால், நாம் அவருக்கு, அருள் உணர்வுகளைப் பாய்ச்சி, மகரிஷிகளின் அருள் சக்தியால், “நீ நன்றாக வேலை செய்ய வேண்டும்”, மகரிஷிகளின் அருள் சக்தியால், “நல்ல முறையில் உடல் ஆரோக்கியத்துடனும், சிந்திக்கும் சக்தியும் பெற்று நலமாக இருப்பாய்என்று சொல்லி அனுப்ப வேண்டும்.

இதைப் போல, நாம் எடுத்துக் கொண்ட உணர்வுகள், தினம்  தினம் அவருக்குச் சொல்ல சொல்ல, அவர் காதிலே கேட்கக் கேட்க, (தினமும் வேலைக்கு வந்தவுடன் அவரிடம் சொல்லிவிட வேண்டும்).
மகரிஷிகள் அருள் சக்தியால் நீ நன்றாக இருப்பாய்,
தொழிலில் சிறந்து விளங்க வேண்டும்
என்று வாக்குகள் கொடுத்து, இதே போன்று செய்யச் சொல்லிவிடுங்கள்.

சில வெறுப்பான நிலைகளோ, சிந்தனையிழக்கும் நிலைகளோ அதிகம் இருந்தால், விபூதியைக் எடுத்து கையில் கொடுத்து, இதே போல சொல்லச் சொல்லி, வேலை செய்யச் சொல்லுங்கள்.

இவ்வாறு செய்யச் சொன்னீர்கள் என்றால், தொழில் நன்றாக இருக்கும். மேலும், “எங்கள் வாடிக்கையாளர்கள் அனைவரும் மகரிஷிகளின் அருள் சக்தியால், நன்றாக இருக்க வேண்டும் என்று எண்ணும் பழக்கத்திற்குக் கொண்டு வர வேண்டும்.

சில சமயம் இதெல்லாம் மீறி, நமது தொழிலில் சில குறைபாடுகளைக் கண்டால், அந்தக் குறை நம்மை இயக்கிவிடக்கூடாது.

அந்தக் குறை உணர்வு வந்தவுடன், நமக்குக் கோபம் வரும் அல்லது வேதனைப்படுகின்றோம். நாம் இதை நுகர்ந்தவுடனே, நமது உயிர் இந்த உணர்வை, உணர்ச்சியால் உடல் முழுவதும் பரப்புகின்றது. நமது இரத்தநாளங்களில் கலக்கின்றது. அப்பொழுது என்ன செய்கின்றது?

நமது உடலில் உள்ள நல்ல அணுக்களில், விஷத்தன்மை போன உடனே அதை ஏற்க மறுக்கும். நாம் தைரியமாகச் செய்யக் கூடிய எண்ணங்களும் பலவீனமடையும்.

ஆகையினால், அவ்வாறு விடாதபடி, அடுத்த நிமிடம்ஈஸ்வராஎன்று சொல்லி, உங்கள் உயிரை எண்ணி, அந்த துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெறவேண்டும், எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும், எங்கள் இரத்தநாளங்களில் படரவேண்டும் என்று இரண்டு நிமிடம் எடுத்துவிட்டு, அவர் பொருளறிந்து செயல்படும் சக்தி பெறவேண்டும், அவர் தெளிவான மனம் பெறவேண்டும், தொழிலில் சிந்தித்துச் செயல்படும் அந்தச் சக்தி  பெறவேண்டும் என்று நாம் இங்கே உருவாக்கிவிட வேண்டும்.

அப்பொழுது, அவரின் உணர்வு இங்கே சிறுத்துவிடுகின்றது. பின் அவரைக் கூப்பிட்டு,
பார்த்துச் செய்வீர்கள்,
சிந்தனையுடன் செய்வீர்கள்,
நன்றாக நீங்கள் செயல்படுவீர்கள்
என்று சொல்லிவிடுங்கள். இதனை ஒரு பழக்கத்திற்குக் கொண்டுவரவேண்டும்.

ஏனென்றால், அவர் குடும்பத்தில் இருக்கும் சிக்கலால், அவர் அறியாமல் செயல்படும் பொழுது, அவர் உணர்வை நாம் நுகர்ந்தோம் என்றால், நமது உடலிலும் கலக்கின்றது.

சேற்றில் விழுந்து வருபவர்களைக் கட்டித் தழுவினால், எப்படி இருக்கும். நம் உடலிலும் சேறாகிவிடும். ஆகையினால், அந்தச் சேற்றை நீக்கக் கூடிய அளவிற்கு, நம் உடலில் ஒட்டிவிடாதபடி, அதனைச் செயல்படுத்த வேண்டும். தொழிலில், இது ஒரு பழக்கத்திற்கு வர வேண்டும்.

இவ்வாறு, ஒவ்வொரு நிமிடமும் அந்த துருவ நட்சத்திரத்தை எண்ணும் பொழுது,
ஒவ்வொரு கெட்ட குணத்திலேயும்,
அதை அடக்கக்கூடிய சக்தியாக,
நமது எண்ணம்வருகிறது.

அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வுகள், நம் உயிரில் பட்டவுடன், இது கலந்து அவர் நல்ல குணம் வளரவேண்டும் என்கின்ற பொழுது, இதையே நமது உயிர், நல்ல அணுக்களாக நமது உடலில் மாற்றுகின்றது.

நமது உடலில் உள்ள நல்ல அணுக்கள் அனைத்திலுமே, அந்த உணர்வு அனைத்தையும் சேர்த்து, இந்த வாழ்க்கையில் எத்தகைய தீமையின் நிலை வந்தாலும், மிளகாய் தனியாகக் காரமாக இருந்தாலும், குழம்பில் போட்டவுடன் ருசியாகிவிடுகின்றது. உப்பு தனியாகக் கரித்தாலும், குழம்புடன் சேர்க்கப்படும் பொழுது, தணிந்து விடுகின்றது.

இதே போல நாம் தொழில் செய்யும் இடங்களில் பலவிதமான நிலைகள் இருந்தாலும், நாம் இது போன்று, செய்து பழக வேண்டும். தொழிலில் இது ஒரு பழக்கத்திற்கு வரவேண்டும்.

நாம், சிநேகிதருக்குள்ளே ஒருவருக்கொருவர் சண்டை போட்டுக் கொள்கிறோம். அமெரிக்காவில் இருக்கிறார் என்றால், இந்த மாதிரி சண்டை போட்டான். “பாவி உருப்படுவானாஎன்று சொன்னால், சாப்பிட்டுக் கொண்டிருக்கும் பொழுது புரை ஏறுகிறது.

தொழில் செய்யும் பொழுது புரை ஓடியதென்றால்,
கணக்கைத் தவறாக விட்டுவிடுவார்கள்.
அதே சமயத்தில், நாம் எண்ணினாலும்
இங்கே கணக்கு தப்பாகப் போய்விடும்.
ஏனெனில், இதே உணர்வுதான் நம்மையும் இயக்குகிறது.
அவர்களையும் இயக்குகின்றது

ஆகையினால், இந்த மாதிரி நினைவுகள் எப்பொழுது வந்தாலும், “ஈஸ்வராஎன்று சொல்லி, துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற வேண்டும். அவரை அறியாமல் சேர்ந்த, இருள் அகல வேண்டும். அவர் பொருளறிந்து செயல்படும் சக்தி பெறவேண்டும், என்று எண்ணிவிட்டால், நமக்குள் வராது, நம்மீது, அவர் வெறுப்பாக இருந்த உணர்வுகள், நம்மைச் சாடாது.

ஏனெனில், நினைவு வரும் பொழுதெல்லாம் இந்த உணர்வை மாற்றிவிட்டோம் என்றால், நம் உடலில் விளைந்த அந்த அணுக்கள் கோபித்துச் சொன்ன உணர்வுகள், அதாவது அந்த உணர்ச்சிகள் உந்திதான் ஆகாராத்திற்கு ஏங்குகிறதுஅந்த உணர்ச்சிகள் உந்தப்படும் பொழுது, அந்த நிலை வருகிறது.

அந்த மாதிரி நேரங்களிலெல்லாம், இவ்வாறு மாற்றிப் பழக வேண்டும். இவ்வாறு செய்துகொண்டு வந்தோமென்றால், நமது வாழ்க்கையில் தனுஷ்கோடி”. பல உணர்வுகள் எல்லாவற்றையும் சேர்த்துக் கொண்டு வருகின்றோம். கடைசி நிமிடம் வரையிலும், தீமைகளை நமக்குள் போகாதபடி பாதுகாப்பது. அதுதான்.

தீமைகளை அகற்றக்கூடிய வல்லமை, துருவ நட்சத்திரத்துக்கு உண்டு. அந்த உணர்வு,
நமது வாழ்க்கையின் எந்ததெந்த குணங்கள் வருகிறதோ,
அந்தத் தீய குணங்களை, தீய செயல்களைப் பார்க்கும் பொழுது,
இந்த மாதிரி எண்ணினோம் என்றால்,
அதைத் தணித்து, நமக்குள் சக்தி வாய்ந்ததாக மாற்றும்.

இந்த உடலில், இந்த உணர்வையெல்லாம் உயிர் இருக்கும் பொழுது, ஒளியாக மாற்றிவிட்டோம் என்றால், உடலைவிட்டு வெளியில் செல்லும்பொழுது, அதன் பற்று அதிகமாகின்றது.

அப்பொழுது இந்த உடலைவிட்டுச் சென்றவுடனே, துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்புக்குப் போய்விடுகின்றோம். தொக்கியுள்ள உணர்வை எல்லாம் கரைத்து விடுகின்றது. உயிருடன் ஒன்றிய ஒளியின் சரீரமாகின்றது.

 நமது குடும்பத்தில், குழந்தைகள் நன்றாகப் படித்துக் கொண்டிருக்கும் பொழுது, சந்தர்ப்ப பேதத்தால் படிப்பு குறைந்து போனால், “ஐயோ, நன்றாகப் படித்துக் கொண்டிருந்த குழந்தை, இப்படி ஆகிவிட்டதேஎன்று வேதனைப்பட்டு, குழந்தைகளை எண்ணவே கூடாது.

அந்த மாதிரி சொற்கள் வந்தாலே, “ஈஸ்வராஎன்று உயிரை எண்ணி, அந்த துருவ நட்சத்திரத்தின் பேரருளும், பேரொளியும் நாங்கள் பெற வேண்டும், என்று எண்ண வேண்டும். எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும். எங்கள் ஜீவான்மா, ஜீவ அணுக்கள் பெற வேண்டும் என்று எண்ண வேண்டும்.

இந்த மாதிரி, நம் உடலுக்குள் அதைச் செலுத்தி, குழந்தையை நினைத்து, அகஸ்திய மாமகரிஷியின் அருள் சக்தியும், துருவ மகரிஷியின் அருள் சக்தியும், சிந்தித்துச் செயல்படும் அந்த சக்தி பெற வேண்டும், நல்ல மனவலிமை பெறவேண்டும், கல்வியில் சிறந்த ஞானம் பெறக்கூடிய அருள் சக்தி பெற வேண்டும், என்று நமது உடலில், இதை உருவாக்கிக் கொள்ள வேண்டும்.

நாம் இதை எண்ணினாலே போதும். கல்வியில் சிறந்த மாணவனாக, மாணவியாக வர வேண்டும் என்று நாம் குழந்தைகளைப் பார்க்கும் பொழுதெல்லாம் இந்த உணர்வோடு பார்த்து, நீ வெற்றி பெறுவாய், தேர்வில் முன்னனியில் வருவாய், என்று மனதில் எண்ணிப் பார்த்தால் போதும்.

பள்ளிக்குப் போகும் பொழுது, ஆசீர்வாதம் கேட்டால், இதே போன்று சொல்லால் சொல்லி, அந்த உணர்வைப் பாய்ச்சி அனுப்ப வேண்டும்.

அதே சமயத்தில், குழந்தைகள் மற்ற நேரங்களில், சில செயல்களில் அவர்கள் உணர்வுக்குத்தக்கச் சில குறைபாடுகள் வருகிறது என்றால், அந்த உணர்வு நமக்குள் வந்துவிடும்.

அந்த உணர்வு நமக்குள் வராதபடி, “ஈஸ்வராஎன்று உயிரை எண்ணி, அந்த துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற வேண்டும், எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் என்று நாம் சுத்தப்படுத்திக் கொள்ள வேண்டும். பின் பையனை எண்ணி,
சிந்தித்துச் செயல்படும் சக்தியும்,
மலரைப் போன்ற மணமும் மகிழ்ந்து வாழும் சக்தியும்,
மகிழச் செய்யும் உணர்வுகளும் அவனுக்குள் வளரவேண்டும்.
தெளிந்த மணமும், தெளிவான நிலை அவன் பெறவேண்டும் என்று
அவன் உணர்வை எடுத்து,
நமக்குள் மாற்றி உருவாக்கிவிட்டால்,
அவனைப் பார்க்கும் பொழுதெல்லாம்
இந்த எண்ணம் வரும்.

இல்லாவிடில், குறை வந்துவிட்டால் அவனை எண்ணும் பொழுதெல்லாம் கோபம் வரும். நம் உணர்வு அவன் மேல் பாயும், அப்பொழுது, அந்த உணர்வின் எண்ணங்கள் அவன் மீது, “இப்படியே பண்ணிக் கொண்டிருக்கிறானே”, என்ன ஆகப்போகிறானோ?” என்று எண்ணும் போது, அவன் சிந்தனை பூராவுமே குறைக்கப்பட்டு, அவன் சிந்திக்கும் தன்மையையே இழந்து விடுகிறான்.

அதனால், நாம் இந்தக் குடும்பங்களிலே அந்த துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளை, நாம் ஒவ்வொரு நொடியிலேயும் நம் உடலுக்குள்ளேயும், குழந்தைக்குள்ளேயும், தொழில் செய்யும் பொழுதும், எடுத்துப் பழக வேண்டும்.

குரு வழியில் நாம் சொல்லப்படும் பொழுது, அவர் பிறவியில்லா நிலையை அடைந்தார். ஒளியின் சரீரமாக இருக்கின்றார். அதிலிருந்து வரக்கூடிய உணர்வை, நமக்குள் சேர்த்து இருளைப் போக்கிப் பழக வேண்டும். அது ஒரு பழக்கத்திற்கு வரவேண்டும்.

ஆகவே நாம் ஒவ்வொருவரும், இப்பொழுது இங்கு கொடுக்கின்ற அருள் ஞானச்சக்கரத்தில்துருவ தியான நேரத்தில், நாம் எண்ணி, துருவ தியானம் முடிந்தவுடன்,
அந்த அருள் ஞானச்சக்கரத்தைப் பார்த்தீர்கள் என்றால்,
அந்த துருவ நட்சத்திரத்தின் உணர்வின் ஒளிகள், இதிலிருந்து வரும்.
நாளுக்கு நாள், அது வளர ஆரம்பிக்கும்.
உங்கள் உணர்வுகளில், ஒரு தெளிவான மணம் கிடைக்கும்.

இதனுடைய வரிசையில் வரப்படும் பொழுது, சில சமயங்களிலே, பிரபஞ்சங்களும் தெரியலாம். அந்த மகரிஷிகள் யார் என்ற நிலைகளும், உங்களுக்குத் தெரியவரும்.

தெரியவரும் என்று சொன்னவுடன்,
தெரியவில்லையே என்ற உணர்வுக்குப் போய்விடாதீர்கள்.
நாம் அதைப் பெற வேண்டும் என்ற உணர்வை மட்டும்,
செலுத்திக் கொண்டு வந்தால் போதும்.
ஏனெனில், அந்த உணர்வு உங்களுக்குள் வளர்ச்சியாகும்.

ஒரு செடியை வைத்துவிட்டு, உடனே பூ பூக்கவில்லை. காய் காய்க்கவில்லை என்றால் முடியுமோ? எத்தனையோ ஆண்டுகள், பல உடல்கள் பெற்று, இப்பொழுது மனிதனாகப் பிறந்துள்ளோம். இவ்வாறு மனிதனாகப் பிறந்ததில், துருவ நட்சத்திரத்தின் உணர்வை  ஒவ்வொன்றாகச் சேர்க்கிறோம்.

அந்த நினைவின் ஆற்றலும், ஈர்ப்பும் வருவதற்காகவே, இந்த அருள் ஞானச்சக்கரத்தைக் குறைந்தது, மூன்று வருடமாக பூஜை அறையிலே வைத்து, அதற்காகத் தியானம் பண்ணியுள்ளேன்.

எங்கே போக வேண்டும் என்றாலும், கொஞ்ச நேரம் சக்கரத்தின் முன் நின்று, சக்கரத்தைப் பார்த்து, ஈஸ்வராஎன்று உயிரை எண்ணி, அந்த துருவ நட்சத்திரத்தின் பேரருளும், பேரொளியும் நாங்கள் பெற வேண்டும், என்று எண்ண வேண்டும். எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும். எங்கள் ஜீவான்மா, ஜீவ அணுக்கள் பெற வேண்டும் என்று எண்ணிப் பிரார்த்தனை பண்ணிக் கொள்ளுங்கள்.

குழந்தைகளுக்கு, நன்றாகப் படிப்பு வரவேண்டும். நல்ல ஞாபக சக்தி வரவேண்டும், என்று எண்ண வேண்டும். தொழிலுக்குப் போகும் பொழுது, என் தொழில் நன்றாக இருக்க வேண்டும். என் வாடிக்கையாளர்கள் நலமாக இருக்க வேண்டும் என்று, எண்ணிவிட்டுச் செல்லுங்கள்.

அந்தச் சக்கரத்தின் முன்னால் நின்று, அதற்குச் சௌகரியப்படும் இடத்தில் சக்கரத்தை வைத்து, உடகார்ந்து பார்ப்பதற்கோ, நின்று பார்ப்பதற்கோ, தகுந்த மாதிரி செய்து கொள்ளுங்கள்.

அதைப் பார்த்துவிட்டு, நீங்கள் போனீர்கள் என்றால், எந்தக் காரியமும் ஜெயமாக வேண்டும் என்று, இந்த உணர்வை, மீண்டும் மீண்டும், வலுப் பெறச் செய்து கொள்ளுங்கள்.

மன உறுதி கிடைக்கும். உங்க சொல் கேட்போருக்கு ஓரளவுக்கு மகிழ்ச்சியை ஊட்டும். ஆகையினால், நாமும், நம் குழந்தைகளும், இந்த மாதிரி செய்து, அதைக் கட்டாயாமாக்கி, பழக்கத்திற்குக் கொண்டு வரவேண்டும்.

இந்த சக்திகளை, நீங்கள் அனைவரும் பெற்று, மகிழ்ந்து வாழ்ந்து, பிறரையும் மகிழ்வித்து வாழ்ந்து, பேரின்பப் பெருவாழ்வு வாழ்ந்து வளர்ந்திட, எமது அருளாசிகள்.