ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

June 7, 2012

குரு காட்டிய அருள் வழி


சாமி புத்தகம்   குரு காட்டிய அருள் வழி
(பக்கம் 5-10)
நமது குருநாதர், எமக்குக் கொடுத்த அருள்வழிப்படி, படிப்படியாக அவர் காட்டிய அருள்நெறிப்படி, தியானமிருக்கும் அனைவருக்கும் அந்த அருள்சக்தியை உடல்களில் பெறும்படி செய்து, அவ்வப்போது உபதேசத்தை உபதேசித்து, குரு காட்டிய அருள் வழியில் தியானவழி அன்பர்கள் அனைவரது உடல்களிலும், அருள்சக்தியைப் பெறும்படி செய்து வருகின்றோம். 

அதன் பலனாக, இப்போது அகஸ்தியர் எவ்வாறு சக்திகளைப் பெற்றார்? என்பதனைப் பார்ப்போம். பல லட்சம் ஆண்டுகளுக்கு முன்,
அகஸ்தியனின் தாய் தந்தையர்,
காட்டு விலங்குகளிடமிருந்து தங்களைக் காத்துக் கொள்ள
விஷமுறிவுப் பச்சிலைகளை, மூலிகைகளை,
அரைத்துத் தங்கள் உடல்களில் பூசிக்கொண்டு
குகைகளிலும், மறைவிடங்களிலும்,
வாழ்ந்தும் வளர்ந்தும் வந்தார்கள்.

மிருகங்களும், மற்ற உயிரினங்களும் தான் நுகர்ந்தறிந்து உணவிற்காகத் தேடிச் செல்லும்போது, அகஸ்தியனின் தாய் தந்தையர் உடல்களில் இருந்து வெளிப்படும், விஷமுறிவு மணத்தை நுகர்ந்தபின் விலங்கினங்களின் கண்கள் இருண்டு விடுவதும், மயக்க நிலை வருவதாக இருப்பதனால், அவர்கள் படுத்திருக்கும் திசைப் பக்கம் எந்த மிருகங்களும், விஷப்பூச்சிகளும், கொசுகளும், வருவதில்லை.

காட்டுவாசிகளாக இருக்கும் காலங்களில், இவ்வாறு அவர்கள் வாழ்ந்தாலும், கருவில் விளையும் சிசுவிற்கு, அவர்கள் நுகர்ந்த உணர்வுகள் அந்தக் கருவில் இணைந்து, விஷத்தை முறித்திடும் அணுக்களாக உருபெற்று விடுகின்றது.

இவ்வாறு, பத்து மாதமும் உருப்பெற்று அந்தக் குழந்தை பிறந்தபின், அந்தக் குழந்தையைக் காணும் பொழுது, மற்ற விலங்குகளோ, விஷ ஜந்துகளோ, அவன் உடலில் இருந்து வரும் மணத்தை நுகரும்போது, மயக்கம் வருவதால் அவன் அருகில் செல்லாது, விலகிச் சென்று விடுகின்றது.

அத்தகைய நிலையை, அந்தக் குழந்தையின் தாய் தந்தையர் உற்றுப் பார்க்கும்பொழுது, அவன் கடவுளின் பிள்ளை என்று, உயர்ந்த நோக்கம் கொண்டு வளர்த்து வந்தார்கள்.

இருப்பினும், அக்காலங்களில் சூரியன் உதயம் ஆகும் பொழுது, இவர்கள் சூரியனைக் கண்கூசாது உற்றுப் பார்க்கின்றார்கள். அப்பொழுது, சூரியனுக்குள் நடக்கும் நிகழ்ச்சிகளையும் பார்க்கின்றார்கள்.

சூரியன் தனக்குள் கவரும் அணுக்களை, தன் உடலில் உருவான உணர்வு கொண்டு மோதி, நஞ்சினைப் பிரித்து விடுகின்றது. ஒளிக்கதிராக பிரபஞ்சத்தில் பரவுகின்றது. பிரபஞ்சத்தில் மற்ற கோள்கள் வெளிப்படுத்தும் உணர்வுகளைக் கவர்ந்து, பிரபஞ்சத்தில் பரவிக் கொண்டிருக்கும் இச்சக்தியை அவர்கள் காண நேருகின்றது.

அக்குழந்தையும் அதை உற்றுப் பார்க்கின்றது. அதை அறிகின்றது. ஆனால், குழந்தைப் பருவத்தில் வெளிப்படும் நிலையை, வெளிப்படுத்த முடியவில்லை. இவ்வாறு அவர்கள் வாழ்ந்து வந்தாலும், நமது சூரியக் குடும்பத்தில் விளையும் உணர்வுகளை, அறியும் ஆற்றல் பெறுகின்றது,  அக்குழந்தை. நஞ்சினை ஒடுக்கும் ஆற்றல் பெறுகின்றது.

தனது ஐந்து வயதிற்குள், ஒவ்வொரு தாவர இனத்தின் மணங்களை நுகர்ந்தறிந்து, அதன் இயற்கை நிலைகளை உணரும் பருவம் வருகின்றது.
அவ்வாறு உணரும் பருவம் வரும்பொழுது, நுகர்ந்தறியும் உணர்வுகள் அவனுக்குள் சேர்ந்து, அந்த உணர்வுகளின் இயக்கம் எவ்வாறு? என்று வெளிப்படுத்துகின்றான், அந்தப் பிஞ்சு உள்ளத்தில்.

ஆகவே, அக்கால மக்கள் அவனுக்கு அகஸ்தியன் என்று காரணப் பெயரைச் சூட்டுகின்றனர். அணுவின் இயக்கங்களைக் கண்டுணர்ந்து அவன் வெளிப்படுத்துவதால், மற்ற மக்கள் இவ்வாறு காரணப் பெயரைச் சூட்டுகின்றார்கள்.

அவன், இந்தப் புவியின் தாவர இனச் சத்தை நுகரப்படும் பொழுது, அதை உணவாக உட்கொள்ளும் மற்ற உயிரினங்கள், அதன் மணத்தை நுகர்ந்தறிந்து, அதை உணவாக உட்கொள்வதும், இப்படிப் பல நிலைகளை அவன் கண்ணுற்றுப் பார்த்து, அறியும் ஆற்றலைப் பெறுகின்றான்.

பின் ஒன்றை ஒன்று விழுங்கி, மாறுபட்ட உடல்கள் பெறுவதையும் உணர்கின்றான். இன்று ஒரு புழுவை, குருவி கொத்தி உட்கொண்டால், அந்தப் புழுவின் உயிரான்மா குருவியாகப் பிறப்பதும், அதைக் காக்கை உட்கொண்டால் காக்கையாகவும் பிறக்கின்றது.

இதைப் போன்று, எது எதை விழுங்குகின்றதோ, அந்த உயிரான்மா அதற்குள் சென்று இப்படி ரூபங்கள் மாறிக் கொண்டே செல்கின்றது. இதைப் போன்று, மானை ஓநாய் தின்றால் ஓநாயாகப் பிறக்கின்றது. இப்படி எத்தனையோ வகையாக, மானை அடித்துக் கொல்லும் விலங்குகளுக்குத்தக்க, மானின் உயிரான்மா உருமாற்றம் பெறுகின்றது.

இதைப் போன்று மற்ற உயிரினங்கள் எவை எவை அடித்துக் கொல்லுகின்றதோ, அடித்துக் கொல்லும்போது,
அதனின்று வெளிப்படும் உயிரான்மாக்கள்
அடித்துக் கொன்ற உடலுக்குள் புகுந்து,
அதன் உணர்வைக் கருவாக்கி,
பரிணாம வளர்ச்சி அடைவதை
தனது ஐந்து வயதிற்குள் தெளிவாக்குகின்றான், அகஸ்தியன்.

பின், இவன் அறிந்த உணர்வின் துணை கொண்டு, வானை நோக்கி உற்றுப் பார்க்கும் பொழுது, நமது பூமியின் சுழற்சியின் ஈர்ப்பிற்குள், துருவப் பகுதியில், இந்த சூரிய குடும்பத்திற்குள் விளைந்த உணர்வினை, இது போகும் பாதையில், துருவப் பகுதியில் கவர்ந்து, நமது பூமிக்குள், அணுக்கள் அலைகளாக மாறிக்கொண்டு இருப்பதையும், உணர்கின்றான்.

இவ்வாறு, உணர்ந்த உணர்வுகளை அவன் நுகரப்படும் பொழுது,
எதை உற்று நோக்கி, துருவப் பகுதியில்
கூர்மையாக உணர்வைச் செலுத்துகின்றானோ,
அந்த உணர்வை, அவன் நுகரும் பருவம் பெறுகின்றான்.
நுகர்ந்த உணர்வுகள் அவன் உடலுக்குள் கலக்கின்றது. மற்ற தாவர இனங்களுக்குச் சத்தாகச் செல்லும் அந்தச் சத்தை, “தாவர இனச் சத்தை உணவாக உட்கொண்டு அணுக்களாக விளைந்த அணுக்களுக்கு”, இதை உணவாகக் கொடுக்கின்றான்.

அவனுடைய சந்தர்ப்பம், அவ்வழியில் நுகரும்படி செய்கின்றது. அவனுக்கு அது கிடைக்கின்றது. அவ்வழியில் நுகர்ந்து, அந்த உணர்வின் துணை கொண்டு, சூரியக் குடும்பத்தின் நிலைகளை அறியும் பருவம் வரும்பொழுது, அகஸ்தியன் துருவனாகிறான். அவ்வாறு துருவனாகி, அவன் வாழ்க்கையில் இந்த பிரபஞ்சத்தின் உண்மைகளை, உணர்வின் ரூபமாக அறியும் ஆற்றலை, அவன் பெறுகின்றான்.

அந்த அறிவு அவனுக்குள் விளைகின்றது. உதாரணமாக, ஒன்றுமறியாத ஒரு புழு, எந்தச் செடியின்மேல் அந்த உயிரணு பட்டு, புழுவாக ரூபம் பெற்றதோ, அந்தச் செடியின் மணத்தை உணர்வின் அறிவாக இயக்கி, அதே செடியைத் தன் ஞானமாக, அதை உணவாக உட்கொண்டு வளர்கின்றது.

இதைப் போன்றுதான், வானுலக உணர்வுகள்  துருவப் பகுதியில் வெளிவரும் பொழுது, அகஸ்தியன், தனக்குள் நுகர்ந்தறிந்த உணர்வுகள் அந்த உணர்ச்சிகள் ரூபமாக உணர்ந்தறியும் தன்மை பெறுகின்றான்.

அவன் உடலில் வளர்த்துக் கொண்ட உணர்வுகள் அனைத்தையும், தன் நினைவாற்றலால் வெளிபடுத்துகிறான். வெளிப்படுத்திய உணர்வுகளை, சூரியனின் காந்தப் புலனறிவுகள் கவர்ந்து, இந்தப் புவியில் பரவச் செய்துள்ளது. அவ்வாறு பரவி இருப்பதைத்தான், நமது குருநாதர் காணும்படிச் செய்தார்.

அகஸ்தியனாக இருக்கும்பொழுது, அவன் கண்டுணர்ந்த உணர்வும், அவன் துருவனானபின், அவனின்று விளைந்த உணர்வின் ஒளி அலைகளை, சூரியன் கவர்ந்து வைப்பதும், அதன் வழியில் பிரபஞ்சத்தின் ஆற்றலைத் தனக்குள் பெருக்கிப் பெருக்கி, இந்தப் பிரபஞ்சத்தின் உண்மையை உணர்கின்றான், அகஸ்தியன்.

 (பக்கம்  10-15)
அகஸ்தியன், அவன் வளர்ச்சியில் பதினாறு வருடங்கள் வளர்ச்சி பெறுகின்றான். அவனுக்குப் பதினாறாவது வயதில், அக்கால மக்கள் திருமணத்தைச் செய்து வைக்கின்றார்கள். அத்திருமணத்தைச் செய்து வைக்கும் பொழுது, கணவனும் மனைவியும் இரு மனமும் ஒன்றாகி, அதன் வழியில் அவர்கள் வாழ்கின்றார்கள்.

துருவன், தான் கண்ட உண்மைகளைத் தன் மனைவி பெற வேண்டும் என்று உணர்வுப் பூர்வமாகச் சொல்லுகின்றான். அவனுடைய மனைவி கேட்கின்றது.
தனக்குள் பதிவு கொண்ட உணர்வின் துணை கொண்டு
விண்ணை நோக்கி ஏங்குகின்றது.
இவன் கண்ட பேருண்மைகளை அவளும் காணுகின்றாள்.
அந்த உணர்வின் அறிவுப் பூர்வமாக அறிகின்றாள்.

தன் கணவனால் பெற்ற சக்தியால், பேரின்பப் பேரானந்த நிலைகள் அடைகின்றாள். இந்தப் பிரபஞ்சத்தின் இயக்கத்தை உணரும் பருவமும், அதை நுகர்ந்தறிந்து, தனக்குள் மகிழ்வுறும் உணர்வுகள் வெளிபடுத்துவதையும், நஞ்சினை ஒடுக்கும் ஆற்றலும், தான் நுகரும் உணர்வு, ஒளிக் கற்றைகளாகத் தன் உடலில் இருந்து வெளிப்படுவதையும் உணர்கின்றாள்.

இவ்வாறு, தன் கணவனால் பெற்ற இந்தச் சக்தியால், இந்தப் பிரபஞ்சத்தை அறிந்திடும் உணர்வுகள், நுகர்ந்திடும் உணர்வுகள் தனக்குள் வளரும் தன்மை பெற்று, கணவன் அந்த உயர்ந்த நிலைகளை, மேலும் மேலும் பெற வேண்டும் என்ற, ஏக்க உணர்வுகளைத் தனக்குள் வளர்த்துக் கொள்கின்றாள்.

துருவனோ, தான் உபதேசித்த உணர்வுகளைத் தனக்குள் விளையச் செய்து, அதன்வழி தனக்குள் வளர்த்துக் கொண்ட உணர்வுகளைக் கண்டு, அவனும் பேரானந்தப் படுகின்றான். அப்பொழுது, இருமனமும் ஒன்றாகி, ஒருவரை ஒருவர் உயர்த்தி எண்ணும் நிலை வருகின்றது.

ஒருவர் சொல்லை, ஒருவர் உயர்த்தும் நிலை வரும் பொழுதுதான், அதற்கு நளாயினி என்று காரணப் பெயரை வைக்கின்றார்கள்.
தன் கணவன் சொல்லை சிரமேல் கொண்டு
அதன் வழி நடப்பதை நாமெல்லாம் புரிந்து கொள்வதற்காக
நளாயினி என்று காரணப்பெயரை வைக்கின்றார்கள்.

தன் கணவன் சொன்ன சொல்லைத் தனக்குள் உயர்த்தி, அந்த உணர்வின் சத்தைத் தனக்குள் வளர்த்து, இந்தப் பிரபஞ்சத்தின் இயக்கத்தை உணர்வதோடு மட்டுமல்லாது, அகண்ட உலகில் நட்சத்திரங்கள் எவ்வாறு உணவை உட்கொள்கின்றது? என்பதை அறியும் பருவம் வருகின்றது.

அந்த நட்சத்திரங்கள், உணவாக உட்கொண்ட உணர்வுகள், நமது பிரபஞ்சத்தில் பரவும் பொழுது, சூரியன் அதை உணவாக உட்கொள்வதையும், அதன்வழி அது வளர்ச்சி பெற்று வெளிப்படும் உணர்வுகள், கோள்களும் அணுக்களும் எப்படி உருப்பெறுகின்றது? என்ற நிலையையும் அவள் அறிகின்றாள்.
தான் கண்ட உண்மையை, தன் கணவருடன் ஒன்றி,
அந்த உண்மையின் தன்மைகளைச் சொல்வதும்,
இருவருமே ஒன்றிய நிலைகள் கொண்டு,
அகஸ்தியன், தன் மனைவியை உயர்த்தி எண்ணுவதும்,
உயர்ந்த சக்தி பெறுகிறதென்றும் உணர்கின்றான்.
அந்த உணர்வுகள் அனைத்தும், அவர்கள் உடல்களில் விளையப்பட்டு, இரு உயிரும் ஒன்றி வாழும் நிலை பெறுகின்றது.

இரு உயிரும் எதைக் கவர்ந்ததோ அதைக் கருவாக உருவாக்கும் திறன் பெறுகின்றார்கள். துருவனின் உடலில் விளையும் உணர்வுகள், துருவ மகரிஷியின், மனைவியின் உடலிலும் விளைகின்றது.

அதற்கு அருந்ததி என்று, காரணப் பெயரை வைக்கின்றார்கள். தனக்குள் கவர்ந்து கொண்ட சக்தி, அதனுடன் இணைந்து வாழ்ந்திடும் நிலையை அருந்ததி என்று, பெயரை வைக்கின்றார்கள்.

வசிஸ்டரும் அருந்ததியும் என்றால், வசிஸ்டர் ஆண்பால், அருந்ததி,  தனக்குள் கவர்ந்து கொண்ட உணர்வுகள். இருவரும் ஒன்றாக இணைந்து, அந்த உணர்வின் தன்மையை இரண்டறக் கலந்து, ஒன்றாக உயிருடன் இணைக்கும் பருவம் பெறுகின்றார்கள்.

உயிருக்குள் வெப்பம் என்ற நிலைகள் இருப்பினும், ஈர்க்கும் காந்தம், பெண்பால் அருந்ததி என்றும், தன்னுடன் இயக்கும் உணர்வுகளை வசிஸ்டர் என்றும், காரணப் பெயரை வைக்கின்றார்கள். இவ்வாறு வளர்ந்த உணர்வுகள் “சத்தியவான் சாவித்திரி”. உயிருடன் ஒன்றிய உணர்வாக, மரணமில்லாப் பெருவாழ்வு வாழும் தகுதி பெறுகின்றார்கள்.

இதைத்தான், நமது ஞானிகள் நாமெல்லாம் கண்டுணர்வதற்கு,
சந்தர்ப்பத்தால் ஏற்படும் இணைப்பும்
அதனால் உருப்பெறும் சக்தியும்,
அவைகளுக்குக் காரணப்பெயர்களை வைத்து அழைத்து,
அகஸ்தியன் தொடர்களை, நாமும் கண்டுணரும்படி செய்கின்றார்கள்.

அவ்வழியில் வளர்ந்தவர்கள்தான், இன்று எதைக் கூர்மையாக எண்ணி, அந்த உணர்வினை இருவரும் ஒன்றாக இணைந்து பெற்றனரோ, இணைந்து, இன்று துருவ நட்சத்திரமாக வாழ்கின்றார்கள்.

      துருவ நட்சத்திரமாக வாழ்ந்தாலும், அகண்ட உலகின் தன்மையைத் தன் உணர்வுக்குள் பெறும் தகுதியும் பெறுகின்றனர்.

நட்சத்திரங்கள் பிற மண்டலங்களிலிருந்து தனக்குள் வரும் நிலையைக் கவர்ந்து, அது உமிழ்த்தும் உணர்வலைகள் பால்வெளி மண்டலங்களாகப் படர்கின்றது. அணுக்களின் தன்மைகள் சுழற்சியில் வரப்படும் பொழுது, தூசிகளாக மாறுகின்றது.
இப்பொழுது விஞ்ஞான அறிவு கொண்டு,
ஒரு பொருளைக் காற்று அழுத்ததால், அழுத்தப்படும் பொழுது
மிகவும் தூசிகளாக மாற்றுகின்றார்கள்.

அகஸ்தியரும் அவர் மனைவியும், துருவ நட்சத்திரமாகும் பொழுது, பிற மண்டலங்கள், அகண்ட உலகில் அது பெறும் உணர்வுகள் தூசுகளாக வருவதையும், பிரபஞ்சத்தில் பரவுவதையும், பிரபஞ்சத்தில் பரவுவதை நமது பூமி துருவப் பகுதியில் ஈர்க்கப்படும் பொழுது,
இடைமறித்து,
அந்த உணர்வின் தன்மையை,
(எப்படி, நமது பிரபஞ்சத்தில் உள்ள ஒவ்வொரு கோளும்,
துருவப் பகுதியில் இடைமறித்து, அதன் உணர்வாக எடுத்து,
தான் வளர்க்கின்றதோ அதைப் போன்று,)
நமது பூமியில் விளைந்த, இவர்கள் இருவரும் ஒன்றானபின், இந்த உணர்வின் நிலையைக் கருவாக்கும் நிலைகள் பெற்று, ஒளியின் சுடராக மாற்றிக் கொண்டே உள்ளார்கள்.

அகஸ்தியரும் அவர் மனைவியும், இருவரும், இந்தப் பிரபஞ்சத்தின் உணர்வை, ஒளியின் அணுவாக மாற்றியது போன்று,
அக்காலங்களில் பெற்ற, மற்ற மக்கள்
ஆறாவது அறிவு ஏழாவது நிலைகள் பெற்று,
துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்தில், இன்றும்
சப்தரிஷி மண்டலங்களாக வாழ்ந்து கொண்டுள்ளார்கள்.
“என்றும் பதினாறு” என்ற நிலையை, அடைந்து விட்டார்கள்.

ஆகவே, நாம் அனவரும் இதே வழியில், அதை உற்று நோக்கி அந்த உணர்வினைக் கூர்மையாகப் பதிவு செய்து கொண்டால், நாமும் அந்த துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்தில் இணைந்து, ஒளியின் சரீரமாவது திண்ணம். எமது அருளாசிகள்.

(பக்கம் 15-20)
அகண்ட அண்டத்தில் சூரியன், எத்தனையோ மைல் பரப்பளவு கொண்டது என்று சொன்னாலும், நாம் கண்ணுற்றுப் பார்க்கும் பொழுது, நமது நெற்றியில் பொட்டு வைப்பது போன்றுதான், காண முடிகின்றது. ஆனால், நமது பிரபஞ்சத்தில் வியாழன் கோள் மிகவும் பெரிதானது. அதை நாம் பார்க்க முடிகிறதா என்றால், இல்லை.

சனிக் கோளைப் பார்க்க முடிகின்றதா என்றால், முடியவில்லை. அது நுகர்ந்து எடுக்கும் உணர்வுகள், அதிலிருந்து வெளிப்படும் உணர்வுகள் வெளி வரும்பொழுது, இரண்டும் மோதலில் உறைந்து, வளையம் போல் சுழன்று, அது தனக்குள் இத்தகைய நிலைகளை உருவாக்கும் நிலைகள் பெற்றது. 

அது கரைந்து வரும் உணர்வின் நிலைகளை, சூரியன் காந்தப் புலனறிவு கவர்ந்து, மற்ற நட்சத்திரங்களின் உணர்வுகளுடன் கலக்கின்றது.  அவ்வாறு இணைந்து இருந்தால்தான், ஒன்றுடன் ஒன்று இணைந்து கலக்கும் சக்தியும், வளரும் பருவமும், உருவாகும் தன்மையும் பெறுகின்றது.

ஆகவே சனி, அனைத்தையும் பெருக்கும் சக்தி பெற்றது. சனிக்கோள் செயலிழந்து விட்டால், நமது பூமியில் நீர் நிலைகளே இல்லாது போய்விடும். நீர் நிலைகள் இல்லையென்றால், நம் பூமியில் உயிரினங்கள் வாழமுடியாது.

வான் வீதியில், மற்ற கோள்களில் நீருடன் கலந்திருக்கும் பொழுது பாறைகள் உருவாகின்றது. அது இணைந்திடும் நிலைகள் கொண்டு, நடு மையம் ஏற்படும் வெப்பத்தால், தன் அருகில் இருப்பதை உருக்குகின்றது.
அவ்வாறு உருக்குவதும், ஆவியாக மாற்றுவதும்,
கோள்கள் அதை வெளித் தள்ளுவதும்,
பல வித்தியாசமான பொருள்கள் உருமாறுவதும்,
நமது பூமியிலும் சரி, மற்ற கோள்களிலும் சரி,
இவ்வாறு வருகின்றது,
இதுவெல்லாம் துருவன் கண்டுணர்ந்தவை.  அவனில் கண்டுணர்ந்து வெளிப்பட்ட முச்சலைகள் சூரியனால் கவரப்பட்டு, நம் பூமியிலும் பரவியுள்ளது.  இதைத்தான் நமது குருநாதர் நுகரும்படி செய்தார்.

பிரபஞ்சத்தின் இரகசியமும், பேரண்டத்தின் அகண்ட நிலையையும், உணர்வுப் பூர்வமாக உணர்ச்சிகள் எப்படி இயக்குகின்றது? உணர்ச்சிகள் எப்படி மாறுகின்றது? என்ற நிலையையும் தெளிவாக்குகின்றார் நமது குரு. அந்தத் தெளிவான உணர்வின் தன்மையைத்தான், சொல்லாக வெளிப்படும் பொழுது கேட்டுணர்ந்த உணர்வுகள், சூரியனின் காந்தப் புலனறிவு கவர்ந்து அலைகளாக மாற்றுகின்றது.
      உங்களுடைய நினைவுகள்,
      கூர்மையாக நினைவாற்றலைச் செலுத்தும் பொழுது,
உணர்வுகள், உங்களுக்குள் பதிவாவதும்,
பதிவான பின், ஈர்க்கும் சக்தி வருவதும்,
நுகரும் சக்தி பெறுவதும்,
உயிருடன் ஒன்றி, உடலுக்குள் பரப்பும் சக்தி பெறுவதும்,
      இப்படிப் பல நிகழ்ச்சிகள் நடக்கின்றது.

      அதன்வழி உங்களுக்குள் வரும் சக்தியின் நிலைகளை, நீங்கள் நுகருவதற்கு, உங்களில் பதிவாகி, பதிவான உணர்வின் துணை கொண்டு, அகண்ட அண்டத்தின் நிலைகளை, நீங்கள் அறியும் பருவம் பெறுகிறீர்கள்.

அகண்ட அண்டத்திலிருந்து வரும் உணர்வுகளைக் கவர்ந்து,என்றும் மரணமில்லாப் பெருவாழ்வுஎன்ற நிலையை அடைந்திடும் நிலையும், “ஒளியின் சரீரமாக உருப்பெறும் சக்தியும்”,  நீங்கள் பெறும் தகுதியை, இப்பொழுது உபதேசிக்கும் வாயிலாக, உங்களுக்குள் அருள்ஞான வித்தாகப் பதிவாக்கப்படுகின்றது. 

எமது குருநாதர் எக்கு உருவாக்கியது போன்று, உங்களுக்குள்ளும் இதை உருவாக்கி, நினைவினை வலுக்கொண்டு நுகரப்படும் பொழுது, அதனைப் பெறும் நிலையும், உருவாக்கும் நிலையும், நீங்கள் பெறுகின்றீர்கள்.

துருவ நட்சத்திரத்திலிருந்து வரும் பேரருளையும் பேரொளியையும், நாம் பெறவேண்டும் என்ற ஆசையுடன், நம் உடல் உறுப்புக்களை உருவாக்கிய அணுக்கள் அனைத்தும் பெறும் வண்ணம், தியானித்து வருகின்றோம். 

தினம் தினம், அதிகாலை  4.00 – 6.00  மணிக்குள், ஒரு அரை மணி நேரமாவது உங்கள் உடல் உறுப்புக்களை உருவாக்கிய அணுக்கள், அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளையும் பேரொளியையும் பெற, நீங்கள் தியானித்துப் பழக வேண்டும். இதை நீங்கள் தலையாயக் கடமையாகப் பழக வேண்டும்.

நம் உடலுக்கு, நாம் எப்படி ஆகாரத்தைச் சாப்பிடுகின்றோமோ, அதைப் போன்று, நம் உடலில் உள்ள அணுக்களுக்கு, துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியைப் பெறச் செய்ய வேண்டும். 

நம் பூமியில், 27 நட்சத்திரங்களில் இருந்து வரும் உணர்வுகள், புவி ஈர்ப்பின் துணை கொண்டு, கவர்ந்து, அது மின்னலாகப் படருகின்றது. சில நட்சத்திரங்களின் உணர்வுகள், எப்பகுதியில் அதிகமாகப் படர்கின்றதோ, அந்தந்த நட்த்திரங்களின் குணங்களுக்கு ஒப்ப, மண்ணுடன் கலந்து வைரங்களாக விளைகின்றது. இதைப் போன்று,
துருவ நட்சத்திரத்திலிருந்து வரும் பேரருளையும் பேரொளியையும்,
நம் உடல் உறுப்புகளை உருவாக்கிய அணுக்களுக்கு, 
சிறுகச் சிறுகச் சேர்க்க, அந்த ஜீவ அணுக்கள்
உயிரைப் போலவே, உயிரணுவாக மாறிவிடும். 

இந்த உடலில் உள்ள, பல கோடிக்கணக்கான ஜீவ அணுக்களையும், உயிரைப் போலவே, உயிரணுவாக மாற்றும் பொழுது, 
ஓர் ஒளியின் உடலாகவும்,
எத்தகைய விஷத்தன்மையும் ஒளியாக மாற்றும் திறனையும்,
நமது உயிர் பெறுகின்றது,  என்பதனை நாம் அறிதல் வேண்டும்.

(பக்கம் 20-24)
நமது உயிர் ஓரு நெருப்பைப் போன்றது. நெருப்பில் ஒரு பொருளைப் போட்டால், அதன் மணம் வெளிப்படுகின்றது. இதைப் போன்று வெப்பத்தால் ஒரு சத்தின் தன்மை கலந்தால், அதை உயிரணு நுகரும்பொழுது, எண்ணங்கள் உருவாகின்றது.

சுவைக்கு ஒப்ப எண்ணங்கள் உருவாகின்றது. அதற்கு சீதா ராமாஎன்று பெயரை வைக்கின்றார்கள். சீதாஎன்றால் சுவை, “ராமாஎன்றால் எண்ணங்கள். எண்ணங்கள் உருவானாலும்,
எந்தச் சத்தினை எடுத்துக் கொண்டதோ,
அந்தச் சத்தினை, மணமாக வெளிப்படுத்தும் சக்தி பெறுகின்றது. 
அந்த மணம்தான், அணுவிற்குப் பாதுகாப்பு. 

இப்படித்தான், அணுக்களின் இயக்கமாகும் பொழுது அது ஒரு இயக்க அணுவாக மாறுகின்றது. அதை நாம் நுகரப்படும் பொழுது, எந்தச் சத்தியைக் கவர்ந்து கொண்டதோ அது உயிரிலே பட்டு, அந்த உணர்ச்சிகளும், அதற்குத்தக்க எண்ணங்களும் வருகின்றது.

அந்தச் சுவைக்கொப்ப எண்ணங்கள், நம் சொற்களாக வெளிப்படுகின்றது. அந்த உணர்ச்சிக்கொப்ப, சொல்லாகவும் செயலாகவும் செயலாக்கப்படுகின்றது. நுகர்ந்த உணர்வுகள் உயிரில் பட்டு, அந்த உணர்வின் சத்து உமிழ்நீராக மாறி, நம் ஆகாரத்துடன் கலந்து அது இரத்தமாக மாற்றப்படுகின்றது.
இவ்வாறு  இரத்தமாக மாற்றப்படும் பொழுது, 
ஒரு சத்தினை இயக்க அணுவாக மாற்றிய,
கவர்ந்து கொண்ட  இயக்க அணு
நம் இரத்தத்தில் கலந்தால், ஜீவ அணுவாக மாறி,
அதனுடைய மலம், நம் உடலாக மாறுகின்றது.

இதை, நாம் புரிந்து கொள்வதற்காகத்தான் காவியங்களில், “விஷ்ணுவின்மறு அவதாரம் சீதா ராமன்என்று காட்டினார்கள். உயிர் எப்படி ஒளியாக  இருக்கின்றதோ, அந்தச் சுவைக்கொப்ப ஜீவ அணுவாக மாறி, எண்ணங்களை இயக்குகின்றது.

நட்சத்திரங்களின் சத்து பூமியில் மண்ணுடன் கலந்து, புவி ஈர்ப்பில் அது சிறுகச் சிறுக வளர்ந்து, வைரமானபின் அது வெடித்து, தனித்தன்மையாக வெளி வந்துவிடுகின்றது.

இதைப் போன்றே அந்த ஜீவ அணுக்கள், நாளுக்கு நாள் அது வெளிப்படும் பொழுது, அறிவின் வளர்ச்சி, அறிந்திடும் வளர்ச்சி”, வருகின்றது.

ஒரு வெளிச்சத்தைக் கண்டபின் பொருள் தெரிவதைப் போன்று,  நமது ஜீவ அணுக்களின் துணை கொண்டு, கண்களின் வழி ஒரு உணர்வின் அறிவினை அறியும் ஞானமாக வளர்கின்றது.

நட்சத்திரங்கள் எப்படி மின்னுகின்றதோ, அதைப்  போன்று
நமது உயிர், மின் அணு போன்று இயங்கிக் கொண்டே இருக்கின்றது,      அந்த உயிரின் இயக்கத்தைக் கொண்டு,
நமது ஜீவ அணுக்கள், மின் அணுக்களாக இயங்குகின்றது. 
எப்படி மேட்டூரில், மின் அணுவினை உருவாக்கும் பொழுது, நம் வீட்டில் எந்தெந்தப் பொருள்களில் அதை இணைக்கின்றோமோ, அந்த மின் அணு, அதை இயக்கி, அதன் வழி காண்கின்றோம்.

இதைப் போன்றுதான், நமது உயிரின் துணை கொண்டு, உடலுக்குள் ஜீவ அணுக்கள் இயங்குகின்றது. சூரியனின் இயக்கத் தொடரில் நாம் வாழ்ந்தாலும், நமது உயிரே, சூரியனின் தொடர்பு கொண்டுதான் இயங்குகின்றது.

நாம் எப்படி, ஊருக்கு ஒரு துணை மின் நிலையம் வைத்துள்ளோமோ, அதைப் போன்றே நமது உயிரும், அந்த  நிலை பெறுகின்றது. சூரியனின் துணை கொண்டு, அந்த மின் அணுக்கதிர்கள், நம் உடலில் உள்ள மின் அணுக்களை இயக்குகின்றது.

இருப்பினும், பல உணர்வின் தன்மை கொண்டு அனைத்தையும் அறிந்திடும் ஆற்றல் கொண்டு, மனித உடலில் விஷத்தினை வென்றவன் அகஸ்தியன்.

விஷத்தை வென்றிடும் ஆற்றல் கொண்டு, உணர்வினை ஒளியாக்கும் திறன் பெற்று, ஒளியாக இருக்கும் அகஸ்தியன் துருவனாகி, திருமணமாகி, கணவனும் மனைவியும், இரு மனமும் ஒரு மனமாகி, அருள் மணம் பெற்று, ஒளியாக இருக்கும் உயிரைப் போலவே, உயிரணுக்களை வளர்த்து, துருவ நட்சத்திரமாக இருக்கின்றனர்.

27  நட்சத்திரங்களும், கடும் விஷத்தன்மை கொண்டது. அதன் துகள்கள் பூமியில் பட்டால், வைரங்களாக விளைகின்றது. அந்த வைரத்தினைப் பொடி செய்து சாப்பிட்டால், மனிதனைக் கொன்றுவிடும், அவ்வளவு விஷம் கொண்டது.
     
ஆனால்,  விஷத்தின் உணர்வினை ஒளியாகக் காண முடிகின்றது. வெளிச்சமாக அது தெரிகின்றது. விஷமே உலகத்தை இயக்குகின்றது.
இன்றைக்கும் சூரியன் இயங்குகிறது என்றால், விஷத்தின் தாக்குதலால்தான், வெப்பத்தின் தன்மை கொண்டு இயங்குகின்றது. 
நமது உயிரும் விஷத்தின் தாக்குதலால்தான்,
துடிக்கும் தன்மை ஏற்படுத்திக் கொண்டுள்ளது.
இதைப் போன்று, ஒவ்வொரு அணுக்களிலும் கலந்திருப்பதால்தான்,
இயக்க அணுக்களாகவும், ஜீவ அணுக்களாகவும்
மாறிக் கொண்டுள்ளதை, நாம் அறிதல் வேண்டும்

நமது ஆறாவது அறிவால், துருவ நட்சத்திரத்தின் உணர்வினை, யாரும் எளிதில் பெறுவது என்றால், மிகவும் கடினம். குருவின் துணை இல்லாமல் எடுப்பதென்றால், மிக மிகக் கடினம். 

நமது குருவின் மூலம், எத்தகைய கடும் விஷத்தையும் ஒளியாக மாற்றிடும் சக்தியைப் பெற முடிந்தது. நமது குரு விஷத்தையும் தாங்கி, அதை ஏற்றுக் கொள்ளும் பருவத்தினை ஏற்படுத்தினார்.

ஆகவேதான், உங்களுக்கும் அந்த ஆற்றல் மிக்க சக்தியாக, விஷத்தை ஒளியாக மாற்றும் திறனைப் பெறச் செய்வது.

நாம் ஒவ்வொரு நாளும்,  
உயிரின் முகப்பில் ஈர்க்கப்படும் பொழுது,
இந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வுகள்
உடல் முழுவதும் பரவுகின்றது.

இதைப் போன்று,  உடல் உறுப்புகளை உருவாக்கிய அணுக்களின் முகப்பின் இயக்கத்தில், உயிரின் துணை கொண்டு,  துருவ நட்சத்திரத்தின் உணர்வினை ஈர்க்கச் செய்யும் பொழுது, என் குரு எப்படிச் செய்தாரோ, அதைப் போன்று உங்களில் ஈர்க்கச் செய்யும் பொழுது,  நாம் அனைவரும் ஒளியின் சரீரம் பெறும் தகுதி பெறுகின்றோம்.

(பக்கம் 25-29)
பாம்பினங்கள், தன் உணவிற்காக மற்றொன்றின் மீது விஷத்தினைப் பாய்ச்சி உணவாக எடுத்தாலும், மற்றதிலுள்ள விஷங்கள் இதனுடன் கலந்து, அது பலவித வண்ணங்களாகி, றையப்படும் பொழுது, நாகரத்தினமாக மாறுகின்றது.  அது கல் மயமாக மாறுகின்றது.
நமது உயிரின் துடிப்பு, மின் மயமாக இருக்கின்றது.
அதைப் போன்று, நம் உடலில் உள்ள
அணுக்கள் அனைத்தையும்,
உயிரைப் போன்று மின் மயமாக்க வேண்டும்.

எப்படி, தேனீக்கள் ஒன்றாகச் சேர்த்து தேனை உருவாக்கி, ஒரு கூட்டினை அமைத்துக் கொள்கின்றதோ, இதைப் போன்று நமது உயிரும், இந்த உடலில் வளர்த்துக் கொண்ட உணர்வுகள் தேனைப் போன்று இணைந்து, திடப் பொருளாகி விட்டால், அது கல்லாக மாறிவிடும், வைரங்களாகிவிடும்,

கோள்களைப் போன்று பாறைகளாகிவிடும். மின் இயக்கத் துடிப்பாக அதன் உணர்வின் இயக்கம் வரும்பொழுது, கோள்கள் தன் சுழற்சியில் நடு மையம் வெப்பமாகி, அதன் உணர்வினை கவர்ந்து கொண்டு வருகின்றது.

ஆனால், உயிரணு தோன்றி, நட்சத்திரமாக்கப்படும் பொழுது, தேனீயைப் போன்று தன் உணர்வின் தன்மை, ஒளியின் உணர்வுகளை ஒன்றாக எடுத்து, ஒளிக்கதிர்களைப் பாய்ச்சிக் கொண்டே உள்ளது. 

நாம் தேனை எடுத்து உணவாக உட்கொள்ளும் பொழுது, எப்படி சுவை மிக்கதாக உள்ளதோ, அதைப் போன்று, துருவ நட்சத்திரத்தின் உணர்வினை நாம் நுகர்ந்து, நம் உடலில் உள்ள அணுக்களுக்கு ஆகாரமாகச் சேர்த்து, அதன் உணர்வினை வளர்ச்சி செய்யப்படும் பொழுது, இந்த உடலில் உள்ள விஷத்தை மாற்றி, இனிமை என்ற உணர்வை ஊட்டும். இந்த உணர்வினை வளர்த்துக் கொள்வதுதான், ஆறாவது அறிவின் தன்மை.

நாம் சந்தர்ப்பத்தால் நுகர்ந்தறிந்த உணர்வுகள்தான்,
பரிணாம வளர்ச்சிக்கே காரணமாக இருந்தது. ஆனால்,
ஆறாவது அறிவான பின், தீமைகளை நீக்கும் சந்தர்ப்பத்தை உருவாக்கி, நமக்குள் இயங்கிக் கொண்டிருக்கும் ஜீவ அணுக்களை, உயிரணுக்களாக மாற்றி, இந்த ஆறாவது அறிவின் துணை கொண்டு உலக இருளை நீக்கி, ஒளி என்ற உணர்வின் அறிவாக ஒருங்கிணைந்து இயக்கும் தன்மை பெறுகின்றது. அப்படிப் பெறச் செய்வதுதான், இந்த ஆறாவது அறிவின் நோக்கம்.

இந்த உயிர், உடலுக்குள் உணர்வின் அறிவாக இந்த உடலை இயக்குகின்றது. ஆனால் இந்த உடலிலே, உயிரைப் போலவே, ஒளியின் உடலாக மாற்றிச் சென்றவர்கள் மகரிஷிகள்.

அவர்கள்,  இந்த பிரபஞ்சத்தில் சூரியனே அழிந்தாலும், சூரியனிலிருந்து வெளிப்படும் விஷத்தன்மையைக் கூட, ஒளியாக மாற்றிக் கொள்ளும் திறன் பெற்றவர்கள்.

2000 சூரிய குடும்பத்துடன் இணைந்து வாழ்கின்றது நமது சூரியன். இதைப் போன்று, 2000 சூரிய குடும்பங்களும் அகண்ட அண்டத்தில், மற்ற கோள்களுடன் ஒன்றுடன் ஒன்று இணைந்தே வாழ்கின்றது.
ஒன்றில்லையேல் ஒன்று இல்லை, 
ஒன்று என்றுமே தனித்து இருந்ததே இல்லை.

விஷம் தாக்கும் பொழுதுதான், வெப்பம் உருவாகின்றது. வெப்பம் உருவாகும் பொழுதுதான், ஈர்க்கும் சக்தியாக, இயக்கச் சக்தியாக மாறுகின்றது.
ஒவ்வொரு நொடியும், உபதேசிப்பதைக் கூர்ந்து கவனிக்கும் பொழுது,
நீங்கள் நுகர்ந்த உணர்வுகள்
உங்கள் உடல் உறுப்புகளிலுள்ள ஜீவ அணுக்களின் முகப்பில்
உயிரில் மோதுவது போன்று, அந்த அணுக்களும்,
இந்த உணர்வினைப் பெறும் தகுதி பெறுகின்றது.
இதைப் பெறச் செய்வதற்குத்தான், இந்த உபதேசம். 

எனக்கு குரு, எப்படி என் நினைவினை அழைத்துச் சென்றாரோ,  அதைப் போன்று, துருவ நட்சத்திரத்துடன் உங்கள் உணர்வினைத் தொடர்பு கொண்டு, அதனின் உணர்வுகளை, உங்கள் உடல் உறுப்புகளை உருவாக்கிய அணுக்கள் அனைத்தும்,  அந்தத் துருவ நட்சத்திரத்துடன் தொடர்பு கொண்டு,  ஈர்க்கும் அந்த அருள் சக்தியைப் பெறச் செய்வதற்கே, இந்த உபதேசம்.

இதை ஏன் நீங்கள் முன்பெல்லாம், எங்களுக்குச் சொல்லவில்லை என்று கேட்பீர்கள். விதையைப் போட்ட பின்பு அது வளர வளர, அதன் நிலை வேறுவிதமாக இருக்கும். அது வளர்ந்த பின்பு, அதனுடைய வளர்ச்சியில் வரும் பொழுது எந்த வித்தோ, அதைப் போன்று, பின் தான் உருவாகின்றது.

இதைப்போன்று முதலில் ஏன் சொல்லவல்லை என்று கேட்டால், செடி ஓரளவிற்கு வளர்ந்தபின், உரம் போட்டால், தாங்கும். செடி சிறிதாக இருக்கும் பொழுது, உரம் போட்டால் கருகிவிடும்.

ஆகவே, விஷத்தை ஒளியாக மாற்றும் இந்த உணர்வுகள், சரியான பருவம் வரவில்லை என்றால், நீங்கள் வளரும் பருவத்தை மாற்றிக் கருக்கி விடும், செயலற்றதாக்கி விடும்.

ஆகவே,  அந்தந்தக் காலப் பருவங்களுக்கொப்ப குருநாதர்க்கு எந்தெந்தப் பருவத்தில், எதெனெதன் சந்தர்ப்பங்களில், எப்படிக் கொடுத்தாரோ,  அதைப் போன்று, உங்களுக்குள் மனப்பக்குவமும், உங்கள் வளர்ச்சிக்குத் தகுந்தவாறும், இந்த உணர்வினை வெளிப்படுத்துவது.

இவ்வாறு மனப்பக்குவமான பின், இந்த உணர்வுகள் உங்களுக்குள் விளைந்தால், உங்களுடன் பழகும் நண்பர்களுக்கும், உங்களில் விளைந்த உணர்வுகள், நன்மை பயக்கும் சக்தியாக மாறும். 
இனி வருவோர்க்கு, உங்கள் மூலமாக, அவர்களுக்கும் கிடைக்கும்.
ஏனென்றால், வளர்ச்சி பெற்ற பருவம்
ஒன்றுடன் ஒன்று தொடர்பு கொண்டு, அது விளைகின்றது
என்பதனை நாம் அறிதல் வேண்டும்.

நாம் இவ்வளவு காலம், 15  வருட காலமாக சாமியிடம் தொடர்பு கொண்டு இருந்தோமே, நமக்கு இதெல்லாம் தெரியாமல் போயிற்றே, என்று இருக்கலாம். 

உங்களில் விளைந்ததுதான், இன்று வருவோர்க்கு, அதன் உணர்வின் சக்தி கொண்டு, அவர்கள் உடலில் விளையச் செய்கின்றோம். 

ஆகவே,  நீங்கள் குருவுடன் தொடர்பு கொண்ட, உங்களில் விளைந்த உணர்வுகள்தான்,  பிந்தி வருவோர்க்கு இந்த உரமான சத்தும் கிடைக்கப் பெறுகின்றது, என்பதனை நாம் உணர்தல் வேண்டும்.

(பக்கம் 29-33)
இப்பொழுது வந்தவர்களுக்கு எல்லாம் அதிர்ஷ்டம்தான். யாம் முன்பு பேசும் பொழுது, பாஷை தமிழாகத்தான் இருக்கும். ஆனால் அர்த்தம் புரியாத நிலைகளில் இருக்கும், புரிந்து கொள்வதற்குள், வேகமாக மளமள எனப் பேசிக் கொண்டே இருப்பேன்.

ஏனென்றால், சில அதர்வண வேத மந்திரவாதிகளின் கையில் சிச்கிவிடக் கூடாது என்பதற்காகவும், உண்மையின் உணர்வின் அறிவினைப் பெறவேண்டும், என்று ஏங்குவோருக்கு மட்டும் அது கிடைப்பதற்காக, அவ்வாறு வேகமாகப் பேசியது.

 இன்று, உலகமே விஷத் தன்மையாக மாறும் இக்காலத்தில், எப்படி விஷத்தைப் பாய்ச்சி விஷமற்ற வைரங்களாக மாற்றியதோ, இதைப் போன்று, துருவ நட்சத்திரத்தின் உணர்வினை நாம் கவர்ந்து,
நம் உடலுக்குள் உள்ள அணுக்களை வீரிய அணுக்களாக மாற்றி,
எதுவும் அதைத் தாக்கா வண்ணம், அழியாப் பொருளாக
ஒன்று சேர்ந்து, இணைந்தே வாழும் தன்மை பெறுவதற்கே,
இதைச் செய்வது.

இதைப் பெறுவதற்குத்தான் நம் சாஸ்திர விதிகள் ஆலயங்களை அமைத்து, விளக்கைக் காட்டும் பொழுது, பொருளறிந்து செயல்படும் சக்தி பெற வேண்டுமென்றும், நம் குடும்பத்தில் அனைவரும் பொருளறிந்து செயல்படும் சக்தி பெற வேண்டுமென்றும், இந்த ஆலயம் வருவோரெல்லாம் அந்த நிலை பெற வேண்டும் என்றும், தெய்வீக அன்பையும், தெய்வீகப் பண்பையும் பெற வெண்டும் என்று எண்ண வைத்தது. ஞானத்தால் வெறுப்பை மறந்து, அரவணைத்து, நமக்குள் உணர்வுகளை ஒன்று சேர்க்கும் சக்தி, பெற முடிகின்றது.

அன்று பாட நூல்கள் இல்லை, கல்வி அறிவு இல்லை. ஒருவர் தனக்குள் பாடிக் கொண்ட உணர்வை, மற்றொருவர் செவி வழி தட்டி எழுப்பி, அந்தப் பதிவின் தன்மை கொண்டுதான் பண்டைய காலங்களில் வந்தது. ஆகவே,  சாதாரண பாமர மக்களும் இந்த நிலைகளைப் பெறச் செய்வதற்குத்தான், ஞானிகளும், மகரிஷிகளும் ஆலயங்களை அமைத்தனர்.

தங்கம் எப்படி மங்குவதில்லையோ, அந்தத் தங்கத்தைப் போல, மனம் மங்காத நிலை,  நாம் பெற வேண்டும்.  ஒருவர் குறை கூறி விட்டால், அதனால் நம் மனம் மங்கி விட்டால், அந்தக் குறைதான் நமக்குள் வளரும், தங்கத்தைப் போன்ற தரம் வராது. தங்கத்தில், செம்பும் பித்தளையும் சேர்ந்தாலும், தங்கம் மங்கி விடும். 

நமது மனம் மங்கும்படியாக, குறையான உணர்வுகளை நமக்குள் சேர்த்து விட்டால், பல கோடி உடல்களில் தீமைகளை நீக்கி வந்த, இந்த உணர்வுகளும், தெளிவான   நிலைகளில் இயங்காதபடி, மனம் சோர்ந்து, சிந்திக்கும் தன்மை இழந்து, வெறுப்படையச் செய்யும் உணர்வுகளே நமக்குள் வரும்.  இதைப்போன்ற நிலைகளில் இருந்து மனிதன் மீள, ஆலயப் பண்புகளை அமைத்து, தெளிவான வாழ்க்கை வாழும்படி செய்தனர், ஞானியர்கள்.

வைரம் எப்படி ஜொலிக்கின்றதோ, அதைப் போன்று
தியானமிருப்பவர்கள் இந்த உணர்வினை எடுக்கும் பொழுது, 
இப்பொழுது நான் சொல்கிறேன் என்றால், உங்கள் செவிகளில் பட்டு,  பளிச்சென்று, தெளிவான மனமும், சிந்திக்கும் ஆற்றலும் கிடைப்பதைப் போன்று உங்களுடைய சொல்லும், செயலும் வைரத்தைப் போன்று ஜொலித்து, மற்றவர்களுக்கு அது கிடைக்க வேண்டும்.

அது தெரிந்ததென்று, நமக்குள், தெளிவான வாழ்க்கை வாழும் அருள் உணர்வுகள் பெருக வேண்டும். வைரத்தைப் போன்று என் செயல் ஜொலிக்க வேண்டும். நான் ஏதாவது செயல் செய்து கொண்டிருக்கிறேன் என்றால், பிறர் கண்ணுற்றுப் பார்க்கும் பொழுது, பிறருக்கும் நல்லதைச் செய்யும் உணர்வுகளை ஊட்டி, அதன் உணர்வின் வளர்ச்சியை, அங்கே பெறச் செய்ய வேண்டும்.

வைரத்தைப் போல் என் சொல் ஜொலிக்க வேண்டும், என் வாழ்க்கை ஜொலிக்க வேண்டும் என்பதற்குத்தான், வைரத்தை ஆலயத்தில் வைத்தது. வைரம் எப்படித் தன் அருகிலே, இருள் சூழா நிலைகளில் சுடர் விட்டு ஒளியின் உடலாக இருக்கின்றதோ, அதைப் போன்று,
நம் உடலில் உள்ள உணர்வின் அணுக்கள்
ஒளியாக இருக்கப்படும் பொழுது,
நமக்குள் இருள் சூழ்ந்த நிலைகள் வராது.
இருள் சூழும் நிலைகள் நமக்குள் வராத பொழுது, நமக்குள் தெளிந்த நிலை பெற்று, தெளிந்த மனம் பெற்று, வலிமை பெற்று, பொருளறிந்து செயல்படும் அந்த உணர்வுகள், நமக்குள் வரும்.

வெளிச்சத்தில், இந்தப் பொருள்தான் என்று தெரிகின்றது. இதைப் போன்று, இந்த ஒளியின் உணர்வுகள் ஊடுருவி, இருளை அகற்றி, அந்தப் பொருளை அறியும் ஆற்றல் வருகின்றது.இதனால்தான்  ஆலயங்களில், வைரத்தை சிலைகள் மேல் கிரீடங்களாக வைத்தது.

அந்த உணர்வினை, நமக்குள் முன்னிலையில் கொண்டு வரவேண்டும் என்பதற்காகத்தான்,  உடல் உறுப்புகளின் சிகரத்தில் அது வைக்கப்பட்டது.

இதைப் போன்று, உடல் முழுவதும் நறுமணங்கள் வரப்படும் பொழுது, அந்த மணத்தை நாம் நுகரும் பொழுது, மகிழ்ந்து வாழ்கின்றோம். துருவ மகரிஷி இதைப் போன்று, மனம் மகிழ்ந்து வாழ்ந்த காலங்களில், அவர் உடலில் விளைந்த உணர்வுகள், நம் பூமியில் பரவியுள்ளது. மலருக்குப் பின் தான், அதனின் வித்தின் தொடர் வருகின்றது.  மலர் நறுமணமாக இருக்கும் பொழுது, அதன் வித்தும் நறுமணமாகவே இருக்கும்.

அதைப் போல், நமது மனங்கள் சரியாக இருப்பினும்,
நறுமணங்கள் கொண்ட இந்த உணர்வுகள் பெற வேண்டும் என்றும்,
ஞானியின் உணர்வுகள் பெற வேண்டும் என்றும் ஏங்கிச் சுவாசித்து, நம் உடலில் உள்ள இரத்தத்தில் கலந்து,  எல்லா அணுக்களுக்கும் அந்த உரமான சத்தை, நற்பண்புகளை”,  ஞானமாக ஊட்டச் செய்யவே, ஆலயங்களை அமைத்தது. 

(பக்கம் 34-37)
நாம் என்றுமே இருளை நீக்கி,  உயிருடன் ஒன்றி,  என்றும் நிலையாக வாழ வேண்டும். இந்த மனித உடலில் குறுகிய காலமே வாழ்கின்றோம். நேரமாகி விட்டது என்று காவியங்கள் கூறுகின்றன.  நாம் வளர வளர,  இந்த உடலின் ஆயுளும் குறைந்து கொண்டே வருகின்றது. இந்த உடலின் தரமும் குறைகின்றது.

ஆகவே நாம் தற்குள்,  உயிருடன் ஒன்றி ஒளியின் உடல் பெற வேண்டும். அதற்கு,  நாம் நமது மனதை ஒன்றாக குவித்துப் பழகுதல் வேண்டும். நமது வாழ்க்கையில் பகைமை என்ற உணர்வு வந்தாலும்,  அது நம்மை இயக்காது,  பிறர் உடலில் உள்ள பகைமை ஊட்டும் உணர்வுகள், நம் பார்வையால் அகன்று செல்லும் சக்தி,  நாம் பெறுதல் வேண்டும்.

அனைவரையும் நல்வழியில் இயக்கும் எலெக்ட்ரானிக்காக”,  நமக்குள் வலிமை பெற்று, பிறருடைய தீமையை நீக்கி,  அவர் உடலுக்குள் சென்று, அந்த உணர்வினை மாற்றும் சக்தி பெறுதல் வேண்டும். 

நம் உணர்வுகள் என்றுமே,  பிறரை இயக்கும் “எலக்ட்ரானிக்காக” உருவாக வேண்டும்.

வேதனை, வெறுப்பு, என்ற உணர்வுகளை  நாம் கண்டு கொண்டபின், இயற்கையின் நிலைகளில்,  அந்த வேதனையான  உணர்வுகள் நம்மை அறியாமலேயே மற்றவர்களுடைய தீமையான உணர்வுகளைக் கவரும் நிலைகளாக,  நமக்குள் சலிப்பு,  சஞ்சலம்,  சோர்வு,  போன்ற நிலைகள் ஏற்படுகின்றது.

நீங்கள் ஒருவரைப் பார்த்துவிட்டுச் செல்லுங்கள்,  எவன் முகத்தில் விழித்து விட்டுச் சென்றேனோ, தெரியவில்லை, என் காரியமெல்லாம் கெட்டுப் போய்விட்டது என்று சொல்வார்கள். ஏனென்றால்,  அவருடைய உணர்வுகளை  நாம் கவர்ந்து கொண்டபின்,  நம் நல்ல உணர்வுகள் கெட்டு விடும்,  செயலற்றதாகி விடும். 

ஒரு பொருளின்  முகப்பில் எதைப் பூசுகின்றோமோ, அந்த மணம்தான் வரும். உட்பொருளில் வேறு விதமாக இருக்கும்.  இதைப் போன்று, நம் ஆன்மாவின் முன் பகுதியில் அது வந்து விட்டால்,  முன் பகுதியில் உள்ள உணர்வே,  நமக்கு எதிரியாக வந்து சேரும்.
 

நல்ல உணர்வுகள் முன் பகுதியில் இருந்தால், அது நம்மை வாழ வைக்கும். இவ்வாறு செய்தோம் என்றால், நமக்குள் தெரிந்து, தெளிந்து, எதிரி என்ற நிலையை மாற்றி, நண்பனாக மாற்றும் திறன் பெறுகின்றது. அதனை நாம் வளர்த்துக் கொள்ள வேண்டும்.

உங்களுக்குள், நீங்கள் உண்மையின் இயக்கங்களை உணர வேண்டும் என்பதற்காகத்தான்,  துருவ நட்சத்திரத்துடன் தொடர்பு கொண்டு, இதை உபதேசிப்பது.  ஆகையினால்.  நமது மனதினை ஒன்றாகக் குவித்துப் பழகுதல் வேண்டும்.

ஒரு பாலின் நறுமணங்கள் ஒன்றாக இருந்தால், ஒரே மணமாக இருக்கும். பாலில் ஒரு பக்கம் காரம்,  உப்பு போன்ற நிலைகள் இருந்தால், அது  காரத்தின் சுவையாக மாறும்.  பாலின் தரத்தின் சத்தைக்  காண முடியாமல் போய்விடும்.

நாம் எத்தனையோ கோடி  உடல்களில்,  இன்னலைச் சந்தித்தோம். ஒன்றுக்கு இரையானோம். நாமும் மற்றொன்றைத் துன்புறுத்தி,  உணவாக உட்கொண்டோம். இப்படி, பல நரக வேதனைப்பட்டு, தீமையான நிலைகளில் இருந்து மீளும் வண்ணம்,  மனித உடல் பெற்றது நமது உயிர்.

இந்த மனித உடலை உருவாக்கியது நமது உயிர் என்றாலும், ஒவ்வொரு உடலிலும் காத்திடும் உணர்வினைச் சேர்த்துச் சேர்த்து, அதன் உணர்வுக்கொப்ப, அந்தந்த உடல்களில், அதைக் காத்திடும் ஞானமும் அதன் வழி வளர்ச்சியும் பெற்று, இன்று மனிதனான  இந்த உடலுக்குப் பின்,
உயிர் நம்மை உருவாக்கியது என்று
எல்லாவற்றையும் அறிந்திடும் ஆறாவது அறிவின் துணை கொண்டு,
என்றும் ஒளியின் சுடராக வாழ வேண்டும்.

இந்த மனித உடலில் ஆறாவது அறிவில், விஷத்தைக் கலக்காது, அதைத் தடுக்கும் ஞானம்தான், துருவ நட்சத்திரத்தின் உணர்வினை நம் உடலுக்குள் உள்ள அணுக்களுக்குச் சேர்ப்பிக்கும் நிலை. அதைப் பெறும் நிலையாகத்தான், இப்பொழுது உபதேசித்துக் கொண்டுள்ளோம். 

ஆகையால், நீங்கள் உங்கள் உயிரைக் கடவுளாக மதித்து, ஆறாவது அறிவை அதனுடன் இணைக்கும் பருவம் பெற வேண்டும். ஆறாவது அறிவின் துணை கொண்டுதான், இன்று துருவ நட்சத்திரம் ஒளியின் சுடராக இருக்கின்றது.

நாம் இந்த உடலை  விட்டு,  எந்த நிலையில் சென்றாலும், 
ஒரு கூட்டமைப்பாக வாழ்ந்து கொண்டிருக்கும் (சப்தரிஷி மண்டலம்),
உயிருடன் ஒன்றி, உணர்வினை ஒளியாக மாற்றிச் செல்லும் கூட்டமைப்பில், நாம் இணைந்திடல் வேண்டும். 

ஆகவே, அங்கே இணைந்து விட்டால், அகண்ட அண்டமே இருண்ட சூழ்நிலைகள் கொண்டு, பல பிரபஞ்சங்கள் அழிவைத் தேடிச் சென்றாலும், அந்தந்தப் பிரபஞ்சங்களில் தோன்றிய உயிரணுக்கள், அது ஒளியின் சுடராகத்தான் வாழும்.

எத்தனையோ கோடி ஆண்டுகள், என்றும் ஏகாந்த நிலை என்ற, அந்த நிலை பெறுவது, இந்த மனித உடலில்தான்.  ஆனால், நம்முடைய இந்த சந்தர்ப்பம், மிகப் பெரிய சக்தி வாய்ந்த, குருவின் அருளைப் பெற்றதினால், நம் அனைவருக்கும் அந்த பாக்கியம் கிடைத்துள்ளது.

நாம் அனைவரும் அவர் காட்டும் வழியில் செல்வோம். குருவின் துணையால் அஞ்ஞானத்தை அகற்றி, மெய்ஞானத் தொடரில் இந்த வாழ்க்கையைத் தொடர்வோம். எமது அருளாசிகள்.

(பக்கம்  38-54)
அகஸ்தியன் துருவனாகி, துருவ மகரிஷியாகி, கணவனும் மனைவியும் வசிஸ்டரும் அருந்ததியும் போன்று வாழ்ந்து, சாவித்திரியைப் போன்று இரு மனமும் ஒரு மனமாகி, நளாயினியைப் போன்று ஒருவரை ஒருவர் மதித்து நடந்து, அவர்கள் வாழ்க்கையில் இருளை வென்று, ஒளி என்ற உடலைப் பெற்று, இன்றும் துருவ நட்சத்திரமாக வாழ்ந்தும், வளர்ந்து கொண்டும் உள்ளார்கள்.

அதிலிருந்து வெளிப்படும் ஆற்றல் மிக்க சக்திகள் சூரியனால் கவரப்பட்டு, நமது பூமியில் அலைகளாகப் படர்கின்றது. அந்த ஆற்றல் மிக்க சக்திகளை, நம் உடல் உறுப்புக்களை உருவாக்கிக் கொண்டுள்ள அணுக்களுக்கு, வீரியமாகச் சேர்க்கவும், அதைப் பெறவும், இப்பொழுது நாம் தியானிப்போம்.

அம்மா அப்பா அருளால், மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் அருள் சக்தியால், துருவ நட்சத்திரத்திலிருந்து வெளிப்படும் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று, நினைவினைக் கண்ணில் செலுத்தி, கண்ணின் நினைவினை துருவ நட்சத்திரத்தோடு இணைத்து, அதிலிருந்து வெளிப்படும் பேரருளும் பேரொளியும் பெற வேண்டும், என்ற உணர்வுடன் ஏங்கி தியானியுங்கள்.

இவ்வாறு நாம் தியானிக்கும் பொழுது, நம் கண்களில் உள்ள கருமணிகள் அதைக் கவரும், அதன்வழி, நம் உடல் உறுப்புக்களுக்கு உணர்ச்சிகளை ஊட்டி, துருவ நட்சத்திரத்திலிருந்து வெளிப்படும் பேரருள் பேரொளி, நம் பூமியில் பரவியிருப்பதைக் கவரும் திறன் பெறுகின்றோம். .

இப்பொழுது உங்கள் கண்ணின் நினைவினை, புருவ மத்தியில் இந்த உடலை இயக்கிக் கொண்டிருக்கும் ஈசனும், நுகர்ந்ததை உருவாக்கிக் கொண்டுள்ள ஈசனிடம் செலுத்தி, உயிர்வழி துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற வேண்டுமென்று உணர்வினைச் செலுத்தி, உயிருடன் இணைக்கச் செய்யுங்கள்.

அவ்வாறு தியானிக்கும் பொழுது, நம் உடலிலுள்ள தீய அணுக்களுக்கு, நம் உயிர்வழி உணர்வுகள் செல்லாது தடைப்படுத்துகின்றோம்.

துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று, உங்கள் நினைவினை உயிரான ஈசனிடம் செலுத்தி, உயிர் வழி கவர்ந்து வலுப்பெறச் செய்யுங்கள், ஒரு நிமிடம்.

இப்பொழுது, தீமை என்ற உணர்வுகள் நமக்குள் செல்லாது நிறுத்திவிட்டு, நம் உடலில் தீமை என்ற உணர்வுகளை உருவாக்கும் உணர்வினை, நம் உடலின் ஈர்ப்பை விட்டுக் சுழற்றிச் செல்ல, துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எங்கள் இரத்த நாளங்களில் கலந்து, இரத்தத்திலுள்ள ஜீவ அணுக்கள், ஜீவான்மாக்கள் பெற வேண்டுமென்று கண்ணின் நினைவினைச் செலுத்தி, நம் இரத்த நாளங்களில் உள்ள, ஜீவான்மா ஜீவ அணுக்களிடம் உணர்வினைச் செலுத்தி, வலுப் பெறச் செய்யுங்கள்.
உங்கள் இரத்தத்திலுள்ள உணர்வுகள்
அந்த வீரிய சக்தியைப் பெறும் பொழுது,
உங்கள் இரத்தத்தில் மகிழ்ச்சியூட்டும் உணர்வுகள்
உங்களை இயக்குவதை உணரலாம்.

துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எங்கள் இரத்த நாளங்களில் கலந்து, எங்கள் உடல் முழுவதும் படர்ந்து உடல் உறுப்புக்களை உருவாக்கிய அணுக்கள் அனைத்தும், துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று, ஏங்கி தியானியுங்கள்.

இப்பொழுது, உங்கள் உடல் உறுப்புக்களை உருவாக்கிய அணுக்கள், அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளையும் பேரொளியையும் பெறும் தகுதியை ஏற்படுத்தி, வலுப் பெறச் செய்யுங்கள்.

இவ்வாறு, உங்கள் உடலிலுள்ள அணுக்களை வீரியமடையச் செய்யும் பொழுது, உங்கள் உடலின் ஈர்ப்பு வட்டத்திலுள்ள, தீய அணுக்களை அப்புறப்படுத்த இது உதவுகின்றது.

துணியைச் சோப்புப் போட்டு நுரைத்து, அழுக்கை வெளியேற்றுவது போன்று, துருவ நட்சத்திரத்தின் உணர்வினை உங்கள் உடலுக்குள் பெருக்கி, உடலின் ஈர்ப்பு வட்டத்தில் உள்ள, தீய அணுக்களை வெளியேற்றுவதுதான் இது.

இப்படி வெளியேற்றியபின், துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எங்கள் சிறு குடல் பெருங்குடல் முழுவதும் படர்ந்து, சிறு குடல் பெருங்குடலை உருவாக்கிய அணுக்கள் அனைத்தும், துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று, நினைவினைச் சிறுகுடல் பெருங்குடலில் செலுத்தி, ஏங்கி தியானியுங்கள்.

இவ்வாறு, அந்த வீரிய சக்தியை ஊட்டும் போது, நாம் உண்ணும் ஆகாரத்தை, நல்ல இரத்தமாகவும் சீராகவும் மாற்றுகின்றது.

துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும், எங்கள் கணையங்களை உருவாக்கிய அணுக்கள் அனைத்தும் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று, நினைவினைக் கணையத்தில் செலுத்துங்கள்.

இவ்வாறு தியானிக்கும் போது, நீங்கள் உண்ணும் உணவில் இருந்து ஆவியாக வருவதை, அமிலமாகவும், பல சத்துகளாகவும் பிரித்து, நல்ல இரத்தமாக மாற்றும், திறனுள்ள கணையங்களாக மாறும்.

துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும், எங்கள் கல்லீரல் மண்ணீரலில் படர்ந்து, கல்லீரல் மண்ணீரலை உருவாக்கிய அணுக்கள், துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று நினைவினைச் செலுத்தி, தியானித்து அந்த அணுக்களை வலுப் பெறச் செய்யுங்கள்.

நம் உடல் உறுப்புக்களை உருவாக்கிய, நல்ல அணுக்களைச் சீராக வைக்கவும், பரிசுத்தமான இரத்தமாக உருவாக்கவும் இது துணை புரியும்.

எங்கள் நுரையீரலை உருவாக்கிய அணுக்கள் அனைத்தும், துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று நினைவினைச் செலுத்தி, தியானித்து அந்த அணுக்களை வலுப்பெறச் செய்யுங்கள்.

இவ்வாறு வலுப் பெறச் செய்யும் பொழுது, நுரையீரலில் உள்ள குறைகளை நீக்கி, வலிமையான அந்த துருவ நட்சத்திரத்தின் உணர்வினைச் சுவாசிக்கும் திறன் அது பெறுகின்றது.

நுரையீரலை உருவாக்கிய அணுக்கள், அந்த வீரிய சக்தியைக் கவர்ந்து, நமக்குள் ஆரோக்கிய உணர்வுகளைப் பரப்ப, துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நுரையீரலை உருவாக்கிய அணுக்கள் அனைத்தும் பெற வேண்டும் என்று நினைவினைச் செலுத்தி, அந்த அணுக்களை வலிமையாக்குங்கள்.

இவ்வாறு நாம் தியானிப்பதால், நம் நுரையீரலில் உள்ள குறைபாடுகள் அகலவும், வலிமையான அந்த துருவ நட்சத்திரத்தின் உணர்வினைச் சுவாசிக்கவும், சந்தர்ப்பம் உருவாகின்றது.

துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும், எங்கள் சிறுநீரகங்களை உருவாக்கிய அணுக்கள் அனைத்தும் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று, நினைவினைச் செலுத்தி, சிறுநீரகங்களை உருவாக்கிய அணுக்கள் அந்த வீரிய சக்தியைப் பெறச் செய்ய தியானியுங்கள்.

இவ்வாறு, சிறுநீரகங்களை உருவாக்கிய அணுக்களை வீரியமடையச் செய்யும் பொழுது, சர்க்கரைச் சத்து, உப்புச் சத்து, விஷத் தன்மை போன்ற நிலைகளை அது பலவீனப்படுத்தும்.

எப்படி, குப்பையில் பல கழிவுகள் இருப்பினும்
அதன் சத்தினை மாற்றி, செடி, கொடி, மரங்கள்
நல்ல சக்திகளாக மாற்றிக் கொள்கின்றதோ,
அதைப் போல, நமக்குள் முந்தைய தீமைகள் இருப்பினும்,
இதைப் போன்று வீரியமடையச் செய்யும் பொழுது,
இந்த அசுத்தமான விஷத் தன்மைகளை, ஒளியின் சுடராக மாற்றிவிடும். இப்பொழுது நாம் எடுத்துக் கொண்ட ஒவ்வொரு உணர்வின் அணுக்கள், இவ்வாறு மாறும்.

துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும், எங்கள் இருதயத்தை உருவாக்கிய அணுக்கள் அனைத்தும் பெற, அருள்வாய் ஈஸ்வரா என்று ஏங்கி தியானியுங்கள்.

இவ்வாறு வலுப்பெறச் செய்யும் பொழுது,
இதனுடன் சென்று, வீரிய இரத்தங்களாக மாறி,
உடல் முழுதுக்கும் பரப்பி,
அசுத்த உணர்வுகளைத் தனித்து,
அருள் உணர்வுகளைப் பெருக்கி,
இருளை அகற்றும் அந்த உணர்வின் இயக்கங்களாக மாறி,
மன உறுதி கொண்டு
நம் வாழ்க்கையைச் சீர்படுத்தும் ஞானமும்,
தெளிந்த மனமும் கொண்டு,
தெளிவான வாழ்க்கை வாழ, இது உதவும்.

துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும், எங்கள் கண்ணிலுள்ள கருமணிகள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று, கருமணிகளில் நினைவினைச் செலுத்தி, ஏங்கி தியானியுங்கள்.

நமது வாழ்க்கையில், காலையில் இருந்து இரவு வரையிலும், வேதனை, வெறுப்பு, சலிப்பு, சங்கடம், கோபம் போன்ற உணர்வுகள் அனைத்தும் கருமணிகளில் பட்டுத்தான், உடலுக்குள் செல்கின்றது.

ஆனால் அதே சமயம், இந்தக் கருமணியில் விஷத்தின் தன்மை பட்டால், வேதனைப்பட்டோரைப் பார்த்துவிட்டு. ஒரு நல்ல காரியம் செய்ய வேண்டுமென்றால், அது நடைபெறாது.

வேதனைப்பட்டோரைப் பார்த்துவிட்டு, நாம் சிந்திக்கும் ஆற்றலைப்பெருக்க வேண்டுமென்றால், அது தடைப்படும். வேதனைப்பட்டோரைப் பார்த்துவிட்டு அடுத்து, எதைச் செய்ய வேண்டுமென்றாலும், சிந்தனையற்ற செயல்களையே செயல்படுத்தும்.

ஆகவே, இதைப் போன்ற நிலைகளில் நமது கருமணிகளைத் தூய்மைப்படுத்த, வேதனைப்பட்டோரைப் பார்த்தால், அடுத்த கணமே, “ஈஸ்வரா” என்று கருமணிகளில் நினைவினைச் செலுத்தி, துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெறவேண்டும், என்று ஏங்கி தியானித்து, கருமணிகளைத் தூய்மைப்படுத்த, இந்த உபாயத்தைக் கடைப்பிடியுங்கள்.

துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும், எங்கள் கண்களில் உள்ள கருமணிகள் பெறவேண்டும் ஈஸ்வரா என்று ஏங்குங்கள். இப்பொழுது உங்கள் கருமணிகளில், துருவ நட்சத்திரத்தின் ஒளியலைகள் படர்ந்து, தூய்மைப்படுத்துவதை உங்களால் உணர முடியும்.

துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும், எங்கள் நரம்பு மண்டலம் முழுவதும் படர்ந்து, நரம்பு மண்டலத்தை உருவாக்கிய அணுக்கள் அனைத்தும், துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற அருள்வாய் ஈஸ்வரா, என்று ஏங்கி தியானியுங்கள்.

இவ்வாறு தியானிக்கும் பொழுது, நரம்பு மண்டலத்திலுள்ள விஷத்தன்மைகளைக் குறைத்து, கைகால் குடைச்சல் என்ற நிலையோ, மூட்டுவாதம், முடக்குவாதம் போன்ற நிலையோ, சரவாங்கி நோய் என்ற நிலையோ, அதைச் சிறுகச் சிறுக மாற்றி, இத்தகைய நோய்கள் வராது தடுக்க, இது உதவும்.

விஷத்தன்மையுள்ள பாம்பு, தன் விஷத்தினைப் பாய்ச்சி மற்றொரு உணவினை எடுத்துத் தனக்குள் நாகரத்தினமாக மாற்றியதோ, இதைப் போன்று நமது நரம்பு மண்டலத்தை உருவாக்கிய அணுக்களுக்குச் சிறுகச் சிறுக, துருவ நட்சத்திரத்தின் உணர்வினைப் பெறச் செய்யும் பொழுது, நரம்பு மண்டலத்தை உருவாக்கிய அணுக்கள் தெளிவான நிலைகள் பெற்று, தெளிவான செயல்களைச் செய்து, நமக்குச் சாதகமாகச் செயல்பட முடிகின்றது.

துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும், எங்கள் எலும்பு மண்டலம் முழுவதும் படர்ந்து, எலும்பு மண்டலத்தை உருவாக்கிய அணுக்கள் அனைத்தும், துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற அருள்வாய் ஈஸ்வரா, என்று ஏங்கி தியானியுங்கள்.

இவ்வாறு நாம் தியானிக்கும் பொழுது, எல்லா உறுப்புகளிலும் உள்ள உணர்வுகள் அனைத்தும், ஒளியின் சுடராகும் நிலை பெறுகின்றது.

துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும், எங்கள் நெஞ்சின் எலும்புக்குள் ஊனை உருவாக்கிய அணுக்கள் அனைத்தும், துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற அருள்வாய் ஈஸ்வரா, என்று ஏங்கி தியானியுங்கள்.

நம் நெஞ்சிலுள்ள அணுக்கள் அந்த வீரிய சக்தி பெற்றால், நம் அருகில், தீமை என்ற உணர்வுகள் வராது, தடுக்கும் திறன் பெறுகின்றது.

இவ்வாறு, துருவ நட்சத்திரத்தின் உணர்வினை நம் எலும்புகள் பெறவேண்டுமென்று, உணர்வினைப் பதிவாக்கப்படும் பொழுது, நெஞ்சுக்கு முன் ஒரு குருத்தெலும்பு இருக்கும். அதன் வழி, துருவ நட்சத்திரத்தின் உணர்வுகள் காற்றில் கலந்திருப்பதை, உங்கள் ஆன்மாவிற்குக் கொண்டு வருகின்றது.

வேதனைப்படுத்துவோரின் உணர்வு பதிவானால்,
குருத்தெலும்பு, வேதனைப்படுத்துவோரின் உணர்வினைக் கவர்ந்து,
நமது ஆன்மாவிற்குக் கொண்டு வரும்.
அப்பொழுது, படபடப்பு என்ற நிலைகள் உருவாகி,
அதன் உணர்வுகள் சுவாசித்தபின், அதே இயக்கமாக மாறும்.

இதைப் போன்று, துருவ நட்சத்திரத்தின் உணர்வை  நம் நெஞ்சின் எலும்புக்குள் உள்ள அணுக்களுக்குள் சிறுகச் சிறுகச் சேர்த்தால் அது வலிமை பெறும் பொழுது, நாம் அருள் உணர்வைப் பெறும் தகுதியைப் பெறுகின்றோம்.

தீமை என்ற உணர்வுகளோ, விஷத்தன்மை கொண்ட உணர்வுகளோ, நம் அருகில் வராது தடைப்படுத்தி, நம் உடலுக்குள் உள்ள, சர்வ ரோகங்களையும், சர்வ பிணிகளையும், நீக்கும் திறன் பெறுகின்றது.

துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும், எங்கள் தசை மண்டலம் முழுவதும் படர்ந்து, தசை மண்டலத்தை உருவாக்கிய அணுக்கள் அனைத்தும், துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற அருள்வாய் ஈஸ்வரா, என்று ஏங்கி தியானியுங்கள்.

துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும், எங்கள் தோல் மண்டலம் முழுவதும் படர்ந்து, தோல் மண்டலத்தை உருவாக்கிய அணுக்கள் அனைத்தும், துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற அருள்வாய் ஈஸ்வரா, என்று ஏங்கி தியானியுங்கள்.

ஏனென்றால், இந்த அணுக்கள் வீரியத் தன்மை பெறப்படும்பொழுது, நம் அருகில் விஷத்தன்மை கொண்ட உணர்வுகள் வராதபடி, இதுவும் வலிமை சேர்க்கப்படும் பொழுது, நமக்கு ஒரு பாதுகாப்புக் கவசமாக மாறும்.

நல்ல உணர்வினை நாம் வளர்த்துக் கொள்ளவும், நமக்குள் அருள் உணர்வினைப் பெருக்கிக் கொள்ளவும், இருளை அகற்றி என்றும் ஏகாந்த நிலை என்ற அருள் உணர்வினை நாம் பெற, இத்தகைய நல்ல அணுக்களை வளர்த்துப் பழக வேண்டும்.

விஞ்ஞான அறிவு கொண்டு, ஊசி மூலம் மருந்தை இரத்தத்தில் கலக்கச் செய்து, எப்படி வளர்க்கின்றனரோ, அதைப் போன்று, அருள் உணர்வினை நம் கண்ணின் நினைவு கொண்டு, நம் உடல் உறுப்புக்களை உருவாக்கிய அணுக்களுக்கு, வீரிய உணர்வைச் செலுத்தி,
திடமாக அந்த இருளை அகற்றிடும்,
ஓர் ஒளியின் உணர்வாக நாம் வளர்ப்பதே,
இப்படித் தியானிக்கும் முறை.

நம் குருநாதர் காட்டிய அருள் வழியில், நம் உடலிலுள்ள, எல்லா  உறுப்புக்களையும் உருவாக்கிய அணுக்களுக்கு, அந்த துருவ நட்சத்திரத்தின் உணர்வினைப் பெறச் செய்து, அதை வளர்த்துக் கொண்டு வருவதே, இந்த தியானத்தின் நோக்கம்.

இவ்வாறு, நம் உடலை உருவாக்கிய அணுக்களுக்குத் தியானித்து நாம் வளர்த்துக் கொண்டபின், அதற்கு நல்ல உரம் கொடுக்க வேண்டும்.

அந்த உரம்தான், நாங்கள் பொருளறிந்து செயல்படும் திறனும், கனியைப் போன்று சுவையான சொல்லும் செயலும் பெற வேண்டுமென்றும், எங்கள் குடும்பத்தில் அனைவரும், நாங்கள் பார்ப்போர் அனைவரும், நாங்கள் தொழில் செய்யும் இடங்களிலும், அந்த நிலை பெற வேண்டுமென்று எண்ணி, அந்த உணர்வினைக் கவர வேண்டும்.

நமது ஆன்மாவிற்கு, இந்த அணுக்களுக்கு இத்தகைய வீரிய உணர்வை ஊட்டும் பொழுது, அந்த அணுக்கள் நல்ல நிலைகளில் வளர்கின்றது. இதைப் போன்று,
தெய்வீக அருளும்,
தெய்வீகச் சக்தியும்,
தெய்வீக அன்பும்,
தெய்வீகப் பண்பும்,
நாங்கள் பெற வேண்டுமென்றும், எங்கள் குடும்பத்திலும், நாங்கள் பார்ப்போரும், நாங்கள் தொழில் செய்யும் இடங்களிலும், இந்த நிலை பெற வேண்டுமென்றும், எண்ண வேண்டும்.

பிறருடைய பகைமையை நீக்க, காலையில் நாம் இந்த உணர்வினை வளர்த்துப் பழக வேண்டும். பிறருடைய குறையைப் பார்த்தால், நமது மனம் மங்கிவிடும். அது மங்காதிருக்க தங்கம் எப்படி மங்குவதில்லையோ, தங்கத்தைப் போன்ற மனம் மங்காத நிலை நாங்கள் பெறவேண்டும் ஈஸ்வரா என்று எண்ணி, அந்த உணர்வினை ஏங்கிப் பெறவேண்டும்.

இதைப் போன்று, எங்கள் குடும்பத்தில் அனைவரும் அந்த நிலை பெற வேண்டுமென்றும், நாங்கள் பார்ப்போரும், நாங்கள் தொழில் செய்யும் இடங்களிலும், அந்த நிலை பெற வேண்டுமென்றும், எண்ண வேண்டும்.

அடுத்து, வைரம் எப்படி ஜொலிக்கின்றதோ, இதைப் போன்று, நம் சொல்லைக் கேட்போர் வாழ்வில் இருளை நீக்கி, அவருக்கு ஒரு, நல்ல தெளிந்து வாழும் அருள் உணர்வை, நாம் பாய்ச்சுதல் வேண்டும்.

வைரத்தைப் போல, எங்கள் சொல் ஜொலிக்க வேண்டும், எங்கள் செயல் ஜொலிக்க வேண்டும், எங்கள் குடும்பத்திலும் நாங்கள் பார்க்கும் அனைவரும் பெறவேண்டும் என்று, எண்ணும் பொழுது,
அவரையும் தெளியச் செய்யும்.
நம்மிடத்தில், இருள் சூழாத நிலைகள் வளரும்.

இதைப் போன்று, மலரைப் போன்ற மணம் பெறவேண்டும், மகிழ்ந்து வாழும் அருள் சக்தி பெறவேண்டும் என்றும், நாங்கள் பார்க்கும் குடும்பமெல்லாம் அந்த நிலை பெறவேண்டும். நாங்கள் தொழில் செய்யும் இடங்களில், அந்த நிலை படரவேண்டும் என்று எண்ண வேண்டும்.

இதைத் தலையாயக் கடமையாக, நாம் கொண்டு வருதல் வேண்டும். நாம் இந்தச் சக்தியை உரமேற்றி, அந்த வீரிய உணர்வினை நாம் வளர்த்துக் கொண்டால், நாம் தொழிலின் நிமித்தம் வெளியே செல்லப்படும் பொழுது, பிறிதொரு உணர்வின் தன்மை, நம்மைத் தாக்காது. நம் சிந்தனையை ஜீவிக்க வைக்க, இது உதவும்.

இப்பொழுது, எலக்ட்ரிக், எலக்ட்ரானிக் என்ற நிலைகளில், வெயில் காலங்கள் வரப்படும் பொழுது, எலக்ட்ரானின் அழுத்தத்தை வைத்தபின்,
வெயில் அதிகமானால், அதற்குத்தக்க
குளிர்ந்த காற்றை உருவாக்குவதும்,
அதே சமயம் குளிர் அதிகமானால், இதை மாற்றி
சூட்டை உருவாக்குவதும்
இந்த உணர்வுகளுக்கொப்ப எந்திரங்களை இயக்குகின்றனர்.

இதைப் போன்றுதான், நம் உடலில் கடுமையான நிலைகள் தாக்கப்பட்டால், அது தாக்காது, நமது உணர்வுகளைச் சமப்படுத்தி, நாம் சிந்திக்கும் ஆற்றல் பெற்று, தெளிவான வாழ்க்கை வாழ இது உதவும்.

பின், இதனுடைய தொடர்புகள் கொண்டு வரப்படும் பொழுது, உயிரைப் போலவே உணர்வின் அணுக்கள் அனைத்தையும், உள் முகமாக ஒளியின் சுடராக, அதனுடைய உணர்வின் தன்மை பெறும் பொழுது,
இது வேகாநிலை என்ற நிலைகளில்,
எதுவுமே இதை அழித்திடாது,
வருவதனைத்தையும் ஒளியின் சுடராக மாற்றிக் கொண்டேயிருக்கும்.

இந்த உடலில் இவ்வாறு மாற்றி அமைத்து, உடலில் உள்ள ஒவ்வொரு அணுக்களுக்கும், அந்தச் சக்தியை ஏற்றினால்தான், இந்த உடலைவிட்டுச் செல்லும் அணுக்கள் அதனைக் கவர்ந்து, என்றும் ஒளியின் சுடராக, எத்தகைய விஷத்தன்மைகள் இருந்தாலும், அது மாற்றிக் கொண்டே இருக்கும்.

ஆகவே, இதைப் போன்று காலை துருவ தியானம் செய்து விட்டு, பிறருடைய  கஷ்டங்களையும், நஷ்டங்களையும், வேதனைகளையும் கேட்டறிந்தால், துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எங்கள் உடல் முழுவதும் படர்ந்து, இரத்த நாளங்களில் கலந்து, ஜீவான்மா ஜீவ அணுக்கள் அனைத்தும் பெற வேண்டும் ஈஸ்வரா என்று, ஆத்மசுத்தி செய்து கொள்ள வேண்டும்.

இவ்வாறு செய்து, உங்கள் வாழ்க்கையில் தீமைகளை அகற்றி, இந்த உடலுக்கு பின் பிறவியில்லா நிலை அடைவதே, மனிதனின் கடைசி நிலை.

உயிரணு வான் வீதியில் தோன்றி, இந்த பூமிக்குள் விஜயமாகி, பூமியில் விளைந்த சத்தினை நுகர்ந்து எண்ணங்களும், எண்ணத்தால் கண்களும், கண்களானபின் கூர்மையும், அதன் வலிமை கொண்டு பரிணாம வளர்ச்சியில், பல தீமைகளை நீக்கி, அந்த நீக்கும் வலிமை பெற்றபின் அதற்குத்தக்க வராகன், பன்றியை உருவாக்கி, நமது உடலுக்குள் நஞ்சை மலமாக மாற்றி, நஞ்சென்றால் நீக்கும் அருள் உணர்வைப் பெருக்கி, சமப்படுத்தும் எண்ணங்கள் வந்து, பல உணர்வுகளைக் கண்டாலும், அதை எப்படி நாம் சமப்படுத்த வேண்டும் என்ற உணர்வு பெற்று, தீமை என்ற உணர்வுகள் நம் உடலுக்குள் புகாது, அதைத் தடைப்படுத்துகின்றது.

உயிரைப் போன்றே உணர்வுகள் ஒளியானால், ‘கல்கி’. கல்கியில் உருவாகி எல்லாவற்றையும் கல்கியாக்கி, பெறும் உணர்வுகளை, ஒளியாக மாற்றுவதே கல்கி. அதுதான் விஜயதசமி.            

அடுத்தது, ஏகாதசி விரதம். பிறருடைய உணர்வுகள் நமக்குள் வராதபடி, நாம் எல்லோரும் ஏகாந்தமாக இருக்கும் அந்த நிலை வரும்பொழுது, பத்தாவது நிலை.


காலையில், அந்த துருவ நட்சத்திரத்தின் உணர்வினைப் பெறும் பொழுது, எப்பொழுதுமே பகைமையை மறந்து, அருள் உணர்வை உணவாக உட்கொள்ளும் பொழுது, தீமை என்ற உணர்வுகள் நமக்குள் வராது, விரதம் இருக்கின்றோம்.
     
இப்பொழுது நாம் என்ன செய்கின்றோமென்றால்,
தீமையை நமக்குள் வளர்த்துக் கொண்டு,
நல்ல அணுக்களுக்குச் சாப்பாடு கொடுக்காமல்
விரதம் இருக்கின்றோம்.
எல்லாம் தலைகீழ் பாடமாக, மாறி விட்டது.

ஆகவே, காலையில் ஒவ்வொரு நாளும், இந்த ஏகாதசி விரதம் தேவை. அதற்குப்பின் வருவதை ஆத்ம சுத்தி செய்து, நமக்குள் இருள்சூழாத நிலையில் இந்த வாழ்க்கையை முழுமையாக்கி, இந்த உடலுக்குப்பின், பிறவியில்லா நிலை அடைய, இங்கே உங்களுக்கு அருளைப் பெருக்கச் செய்யவும், வழியறிந்து செயல்படும் தன்மையும், சிந்தித்துச் செயல்படும் தன்மையும், அருள் வழியில் வாழும், அருள் ஞானம் பெறச் செய்யும் சந்தர்ப்பத்தை ஏற்படுத்தவே, இதை உபதேசிப்பது.

இது உங்களுக்குள் விளைந்தபின், உங்களைச் சார்ந்தோருக்கும் இதனைப் பெறச் செய்யுங்கள். வைரம் எப்படி ஜொலிக்கின்றதோ, அதைப் போன்று, உங்கள் சொல் அவருக்குத் தெளிவான நிலை பெறும்படிச் செய்யுங்கள். அவர் தெளிவான நிலை பெறவேண்டுமென்று, எண்ணும்பொழுது, நம் மனம் முதலில் தெளிவாகின்றது.  

ஆகவே, நமது குரு காட்டிய அருள் வழியில், நாம் துருவ நட்சத்திரத்தின் பேரருளைப் பெற்று,
இந்த வாழ்க்கையில் பொருளறிந்து செயல்படும் திறனும்,
கனியைப் போன்று சுவையான சொல்லும் செயலும் பெற்று,
தெய்வீகப் பண்பும், தெய்வீக அன்பும்,
தெய்வீக சக்தியும் பெறும் அருள்ஞானம் பெற்று,
தங்கத்தைப் போன்று மனம் மங்காத நிலையும்,
வைரத்தைப் போன்று சொல்லில் ஜொலிப்பும்,
செயலில் ஜொலிப்பும், வாழ்க்கையில் ஜொலிப்பும் பெற்று,
மலரைப் போன்ற மனம் பெற்று, மகிழ்ந்து வாழும் சக்தி பெற்று,
துருவ மகரிஷிகளின் அருள் சக்தி பெற்று,
துருவ மகரிஷிகளின் அருள் வட்டத்தில் வாழ்ந்து,
இப்பிறவியில், ஏகாந்த நிலை என்ற நல் வாழ்க்கை வாழ்ந்து,
என்றும் ஏகாந்த நிலை என்ற அருள் உணர்வுடன்,
உலக இருளை நீக்கிடும் அருள்ஒளி என்ற உணர்வு கொண்டு,
பிறவியில்லா நிலை அடைந்திடவும்,
குரு அருள் துணை கொண்டு, மகரிஷிகளின் அருள் சக்தி பெற்று,
அருள் வழி வாழ்ந்திடவும்,
எமது அருளும், குரு அருளும் உங்களுக்கு உறுதுணையாக இருக்கப் பிரார்த்திக்கின்றேன்.