
விஞ்ஞான அறிவால் வரும் அழிவினை மாற்றியமைக்கும் திறன் “சாதாரண மனிதனுக்கும் கிடைக்க வேண்டும்”
1.காலையில்… மாலையில்… படுக்கப் போகும்
முன்… தொழிலுக்குப் போகும் முன்… மகரிஷிகளின்
அருள் சக்திகளை எடுத்துப் பழக வேண்டும்.
2.பிறருடைய தீமைகளைப் பார்க்க நேர்ந்தது என்றால் அதையெல்லாம் தனக்குள்
பதிவாகாதபடி அழித்துப் பழகுதல் வேண்டும்… பதிவாக்கக் கூடாது.
3.ஈஸ்வரா…! என்று உயிரை எண்ணி மகரிஷிகளின் அருள் சக்தி
பெற வேண்டும் என்று எண்ணிச் சுத்தப்படுத்திப் பழகுதல் வேண்டும்.
4.இந்தப் பழக்கத்திற்கு வந்தால் வளர்ச்சி பெறுகின்றீர்கள். உங்கள் மூச்சு உலகைக் காக்க உதவும்.
எங்கள் பேச்சும் மூச்சும் உலக மக்கள் நன்மை பெறச் செய்ய வேண்டும் என்று நாம்
சொல்கின்றோம் அல்லவா…! அதைப் போல மூச்சு
ஒரு நூறு பேர் தெருவில் விட்டாலே அங்கே தீமைகள் வராதபடி பாதுகாக்கலாம். உங்கள் மனதைத் தூய்மைப்படுத்துங்கள்… தீமை புகாது உங்கள்
ஆன்மாவைத் தூய்மைப்படுத்துங்கள்.
இதைச் செய்யச் செய்ய… அறியாமலே பல
அற்புதங்கள் உங்களுடைய பேச்சால் மூச்சால் வரும்… பல நிலைகளைச்
செய்ய நாம் பழக வேண்டும். நீங்கள் ஒவ்வொருவரும் அருள் ஞானத்தைப்
பெற வேண்டும்… அருள் வாழ்க்கை வாழ வேண்டும்… தெளிந்த மனம் பெற வேண்டும்.
1.தபோவனம் என்று சொன்னால் நீங்கள் தான் தபோவனம்…! நான்
அல்ல…!
2.நாம் எல்லோரும் சேர்ந்தால் தான் தபோவனம்.
உயர்ந்த குணங்களை எடுத்து எல்லோருக்கும் உயர்ந்த சக்தியைக் கொடுக்க வேண்டும். உயர்ந்த நிலைகள் நாம் பெற வேண்டும்.
“எல்லோரும் உயர்வான நிலைகள் வர வேண்டும்”
என்று இதை நாம் முன்னணியில் வைத்துக் கொள்ள வேண்டும்.
வெளியில் மட்டுமல்ல…
வீட்டிற்குள்ளும் எந்தக் குறையாக இருந்தாலும் உடனே நிவர்த்தி செய்ய வேண்டும். சாந்தத்தையும் ஞானத்தையும் வளர்த்து நம்முடைய நிலைகளை “மற்றவர்களுக்கும் எடுத்துச் சொல்லக் கற்றுக் கொள்ள
வேண்டும்…”
யாம் வெளிப்படுத்தியுள்ள உபதேச நூல்களை ஒரு நாளைக்கு “ஒரு அரை மணி நேரமாவது” படிக்க வேண்டும்.
1.அதில் இருக்கக்கூடிய “முக்கியமான கருத்துகளை” வெளிப்படுத்த வேண்டும்.
2.எல்லோருக்கும் அதைப் படித்துச் சொல்லும் ஆர்வம் ஒவ்வொருவருக்கும் வர வேண்டும்.
3.எல்லோருக்கும் கேட்கும்படியாக அந்த “அருள் உணர்வோடு” வாசிக்க வேண்டும்.
இப்படிச் செய்தோம் என்றால் அனைவரும் ஒன்றாகின்றோம்.
1.என் சொல்லே உங்களுக்குள் வருகின்றது.
2.குருவின் அருள் எனக்குள் இருக்கின்றது
3.அந்த குருவின் அருளே உங்களுக்குள் பாய்கின்றது
4.அந்த உணர்வே நம் அனைவரையும் ஒன்று சேர்க்கின்றது.
மனப்பாடம் செய்து புத்தகங்களைப் படித்தால் ஏற்றத்தாழ்வுகள் கூட வரலாம். சிறிது நாளைக்கு இந்த மாதிரி எடுத்து
ஒரு இடத்தில் உபதேசம் செய்கிறோம் என்றால்… கேட்டார்கள் என்றால்…
1.எம்முடைய
புத்தகத்தை எடுத்து அந்த உணர்வை எடுத்துச் சொல்ல ஆரம்பித்தால் ஒன்று
போல குரு அருளை நாம் எல்லோரும் எடுத்துப் பேசலாம்
2.குரு அருளால் நாம் அனைவரும் ஒன்றாக இயங்கும் தன்மை வந்துவிடும்.
நம் உணர்வுகள் அதிலே பற்று வளர்ந்து விட்டால் எந்தக் கலக்கமும் வராது… உணர்வுகள் தெளிவாகும். ஆகையினால் ஒவ்வொருவரும் எம்முடைய உபதேசங்களை அடிக்கடி படியுங்கள்…
கேட்டுப் பதிவாக்குங்கள்.
ஒரு விசேஷத்துக்குச் சென்றாலும் உபதேசக் கருத்துக்களை எடுத்துக் கணவன் மனைவி வசிஷ்டரும் அருந்த்தியாக
எப்படி வாழ வேண்டும்…? என்ற தத்துவத்தை வாழ்த்தாகச் சொல்லி நம்முடைய
புத்தகங்களை அன்பளிப்பாகக் கொடுக்கலாம்.
ஒருங்கிணைந்த நிலையில் நாம் செயல்படும் பொழுது நாம் விடும் மூச்சலைகள் இந்த காற்றிலே
தான் பரவுகின்றது… இது
பெருகிக் கொண்டே வரும்.
ஆனால் சங்கடம் சலிப்பு போன்ற உணர்வுகள் தான் இந்தக் காற்றில் அதிகமாக உள்ளது. இதிலிருந்து மாறுபட்ட உணர்வுகளாக
1.இந்த உலகத்திலே நாம் உயர்ந்த உணர்வுகளை வெளிப்படுத்தி
2.அதை வளர்த்துக் கொண்டு வர வேண்டும்.
எத்தனையோ கெமிக்கல் கலந்த விஷங்களை விஞ்ஞான முறையிலே பிரிக்கின்றார்கள்… நியூட்ரானைப் பிரித்து அணு உலைகளாகவும்
உருவாக்கியுள்ளார்கள். ஆகையினால் விஷத் தன்மைகள் வெப்பத்தால்
பிரிந்து பலவாறு பூமி முழுவதும் பரவிக் கொண்டுள்ளது.
சூரியனுடைய காந்த சக்தி அனைத்தையும் கவர்ந்து வைத்துள்ளது. இந்த விஷங்கள் ஒரு பக்கம்
அடர்த்தியாகி இன்னொரு பக்கத்திலிருந்து எதிர்நிலையான அலைகள் வந்தால் “மோதிச் சூறாவளியாக மாறி அதிவேகமாகச் சுழல ஆரம்பிக்கின்றது…”
உலகம் முழுவதற்கும் “எந்த
நிமிடத்தில் என்ன நடக்கும்…?” என்று இப்பொழுது சொல்ல
முடியாது. செல்வம் நம்முடன் வரப் போவதில்லை. விஞ்ஞானிகள் இருக்கக்கூடிய இடங்களிலும் விஷத் தன்மைகள் அதிகமாகப் பரவி
பரிதாப நிலைகளில் தான் அவர்களும் உள்ளார்கள்.
1.எந்த இடத்திலே பார்த்தாலும் மனிதன் தன்னம்பிக்கை இழந்து வாழக்கூடிய
நிலைகளாக இருக்கின்றது.
2.தன்னம்பிக்கை வர வேண்டும் என்றால் நம்மைப் போல் இந்த அருள் ஞான வழியினைச்
செயல்படுத்துபவர்கள் தான் அதை வழி நடத்த முடியும்.
3.நாம் செய்யும் தியானத்தைச் சாதாரணமாக எண்ண வேண்டாம்.
அந்த மகரிஷிகளின் அருள் சக்திகளை எடுத்து வெளிப்படுத்துங்கள். எல்லோருக்கும் கிடைக்க வேண்டும்
என்று தியானியுங்கள். இந்த உணர்வுகள் கலக்கப்படும் பொழுது
நாளடைவில் “உங்களுடைய சக்தியை” நீங்கள்
பார்க்கலாம்.
குரு அருளால் அரும் பெரும் சக்தியை நீங்கள் நுகர்கின்றீர்கள். அந்த உணர்வுகளை மூச்சலைகளாக
வெளிப்படுத்துகின்றீர்கள். இதை நீங்கள் செய்ய முடியும்.
1.சூறாவளிகள் வருகிறது என்றால் ரிமோட் செய்கின்ற மாதிரி
2.நம்மைப் பாதுகாப்பாக அழைத்துச் செல்லும்.
உதாரணமாக அன்று போபாலில்
விஷ வாயு கசிவு ஆனது. நம்முடைய தியானத்தைக்
கடைப்பிடிப்பவர்கள் அங்கே வாழ்ந்து கொண்டிருந்தார்கள்.
அந்தக் குடும்பமே
தியானத்தில் இருந்தது. அதன் வழியிலேயே தான் எல்லோரும்
இயங்கிக் கொண்டிருந்தார்கள். அங்கே வேலை செய்து
கொண்டிருக்கும் பொழுது ஒன்றுமே தெரியாதபடி “யாரோ ஒருவர்
திடீரென்று அங்கிருந்து உடனே கிளம்பி வாருங்கள்” என்று சொல்கின்றார்.
குடும்பத்துடன் அங்கிருந்து பூனாவிற்குக் கிளம்பி விட்டார்கள். இவர்கள் சென்ற சிறிது நேரத்தில் போபாலில்
வெடிச் சத்தம் கேட்கின்றது அதற்குப்பின் டிவியில் ஒளிபரப்பு செய்கின்றார்கள் “விஷவாயு டேங்க் வெடித்தது… என்று…!”
இந்தக் குடும்பம் இருந்த வீட்டிற்கு அருகில் தான் அந்த டேங்க் இருந்தது. எல்லாம் பாதிப்படைந்து விட்டது. இவர்களுடைய உறவினர்கள் என்ன ஆனதோ…? என்று
எண்ணுகின்றார்கள்.
ஆனால் இவர்கள் நாங்கள் வெளியிலே வந்து விட்டோம்… பூனாவில் பாதுகாப்பாக இருக்கின்றோம். நாங்கள் வசித்த தெருவில் இருப்பவர்களுக்குக் கண்
போய்விட்டது மாடெல்லாம் இறந்துவிட்டது ஏராளமானோர் இறந்து கொண்டிருக்கின்றார்கள்
என்று ஃபோனிலே சொல்கிறார்கள்.
இதைப் போன்று இன்னொரு பையன் திருநெல்வேலியில் இருந்து வந்து அங்கே தங்கி
இருந்தான். அவனுடைய
தாயார் எம்முடைய உபதேசப் புஸ்தகத்தைக் கொடுத்து “இதைப்
படித்துக் கொண்டே வா…” என்று சொல்லி இருக்கின்றார்கள்.
அதைப் படித்துக் கொண்டிருக்கும் போது என்ன ஆனது…? அவரும் விஷக் கசிவிலிருந்து தப்பிவிட்டார்.
திடீரென்று என்னவென்றே தெரியவில்லை…!
1.வித்தியாசமான நெடி தெரிந்தவுடன் கம்பளித் துணி போட்டு அந்த நெடி பாதிக்காதபடி
மூடிக்கொண்டு
2.ஈஸ்வரா குருதேவா ஈஸ்வரா குருதேவா என்று சொல்லி தன்னுடைய தாயை நினைத்துக்
கொண்டே இருந்திருக்கின்றார்.
அடுத்து பார்த்தால் அருகிலே மற்ற இடங்களில் உள்ளவர்கள் எல்லாம் இறந்து
கிடக்கின்றார்கள்.
அதற்குப் பின்னாடி அவர் மாற்றலாகி டெல்லி சென்றார். அங்கே எம்மைச் சந்தித்து இந்த விவரங்களை எல்லாம் என்னிடம் சொன்னார்.
1.என் தாய் சொல்லித் தான் இந்தப் புத்தகத்தைப் படித்தேன். இந்தப் புத்தகம் தான் கடவுள்…
2.என் தாய் தான் எனக்குக் கடவுளாக இருந்து காப்பாற்றியது.
3.இதைப் படிக்கவில்லை என்றால் கண்டிப்பாக நானும் அந்த விபத்தில்
சிக்கியிருப்பேன்.
என் அருகில் இருந்தவர்கள் எல்லாம் இறந்து விட்டார்கள் நான் தப்பிவிட்டேன்
என்று என்னிடம் சொல்கின்றார்.
இதெல்லாம் காரணம் என்ன…? என்று
கேட்டால் “நமக்கு நாமே… நாம் எதை
எண்ணுகின்றோமோ… அதுவே நம்மைக் காக்கக்கூடிய சக்தியாக
வருகின்றது…!”
வேதனை என்ற உணர்வு வந்தால் பாதுகாப்பு இல்லை… போகும் இடங்களில் எல்லாம் சண்டை வருகின்றது… தொழிலில் நிம்மதி இல்லை. ஆனால் அருள் உணர்வுகளை
நாம் வளர்த்துக் கொண்டால் போகும் இடங்களில் எல்லாம் அனுசரணையாகி பாதுகாக்கக்கூடிய
நிலையாக வருகின்றது.
1.துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை நாம் பெற்றால் நமக்கு அது பெரிய
பாதுகாப்பாக அமைகின்றது.
2.ஒரு எதிர்பாராத நிலைகள் வருகிறது என்றால் ஓரளவுக்குத் தாங்கி நம்மைப்
பாதுகாக்கக் கூடிய நிலையும்
3.அதற்குண்டான சந்தர்ப்பத்தில் ஏதாவது ரிமோட் செய்து “வேறு
பக்கம் அழைத்துச் செல்லக்கூடிய நிலைகள் இருக்கின்றது…”
இந்த உணர்வுகள் ஒளியாக மாற்றக்கூடிய சக்தியாகக் கிடைக்கும் ஆகையினால் உங்களை நீங்கள் நம்புங்கள். நீங்கள் ஒவ்வொருவரும்…
1.சாமி தான் என்று நினைக்கிற மாதிரி…
2.சாமி மாதிரி நானும் பெரிய சக்திக்கு வர வேண்டும்.
3.என் பேச்சால் மூச்சால் பிறருடைய நோய்கள் போக வேண்டும்
4.என் மூச்சால் மற்றவர்கள் நலம் பெற வேண்டும் என்ற இந்த உணர்வை எடுத்துக்
கொண்டு வாருங்கள்.
இது உலகம் முழுவதற்கும் பரவ வேண்டும்.
உங்கள் எல்லோருக்கும் அந்தச் சக்தி கிடைக்க வேண்டும் என்று தான் சதா என்னுடைய
தியானமே. நீங்கள்
எல்லாம் தயாராக வேண்டும்.
இந்த உடல் தான்… தொழில் தான்… சம்பாத்தியம் தான்… அது தான் மிச்சம் என்று எண்ணாதபடி
1.அருள் தான் நமக்கு வேண்டும்… அது தான் நிலையானது
என்று உணர்வோடு வளருங்கள்.
2.துருவ நட்சத்திரத்தை மறந்து விடாதீர்கள்… எந்த
நிமிடமும் அதை எடுத்துப் பழகுங்கள்.
3.இந்த உணர்வை உங்களுக்குள் சேருங்கள்… எந்த இருளும் உங்களை நாடாது
பாதுகாத்துக் கொள்ளுங்கள்.
எதை நீங்கள் எண்ணுகின்றீர்களோ அதை உங்கள் உயிர் இயக்குகின்றது. அதன் வழி உங்களைப் பாதுகாத்துக்
கொள்ள முடியும். கீதையிலே நீ எதை எண்ணுகின்றாயோ
அதுவாகின்றாய்…! என்று சொன்னது போல்.
எல்லோருக்கும் நான் நன்மை செய்தேனே…! “எனக்கு ஏன் இப்படி வந்தது…?” என்று வேதனைப்பட்டால் அதுவாக நாம் மாறி விடுகின்றோம். ஆகவே அருள் ஒளி பெற வேண்டும். எல்லோருக்கும் அது
கிடைக்க வேண்டும். எல்லோரும் நலமாக இருக்க வேண்டும் என்று
எண்ணினால் “நாம் அதுவாகின்றோம்…”
எல்லோருடைய அந்த உயர்ந்த உணர்வுகளும் நமக்குள் வரும் பொழுது உலகைக் காக்கும்
எண்ணங்கள் நமக்குள் வளருகின்றது ஆகையினால் நாம் அனைவரும் அதைச் செயல்படுத்துவோம். அருள் ஞானத்தைப் பெருக்குவோம்…
உலகத்தைக் காப்போம்.
1.உங்கள் உணர்வுகள் நீங்கள் வாழும் பகுதியிலோ அல்லது
மற்ற இடங்களிலோ உண்மையில் நல்லதைச் செய்யும்.
2.உங்களையும் காக்கும் மற்றவர்களையும் காக்கும்
3.உலகையே காக்கக்கூடிய திறன் உங்களிடமிருந்து அது வெளிப்பட வேண்டும்.
சாதாரண மனிதனாக உங்களை நீங்கள்
எண்ண வேண்டாம்…! எல்லோருக்கும் அருள் சக்தி கிடைக்க வேண்டும் என்று பிரார்த்தித்துச் செயல்படுத்துங்கள்.
ஒவ்வொருவரும் அன்பை வளர்க்கக் கற்றுக் கொள்ள வேண்டும். அரவணைக்கக் கற்றுக் கொள்ள வேண்டும்.
இருளை அகற்றக் கற்றுக் கொள்ள வேண்டும்.
1.தனக்குள் வரும் தீமைகளை அகற்றும் அந்த வலிமை பெற வேண்டும்.
2.அந்த நிலையை வளர்த்துக் காட்டி உலகிற்கு எடுத்துக்காட்டாக நம்முடைய
செயல்கள் இருக்க வேண்டும்.
3.நமது குருநாதர் துருவ நட்சத்திரத்துடன் தான் இயங்கிக் கொண்டுள்ளார்.
4.அவருடைய அருளை நாம் எளிதில் பெறலாம். இருளை
அகற்றலாம் மெய்ப்பொருளைக் காணலாம் பிறவி இல்லாத நிலை அடையலாம்.
5.அந்த நிலைக்குத் தான் இந்த உபதேசம்.
இந்த உடல் நமக்குச் சொந்தமில்லை என்று தெரிகின்றது… சொத்து நம்முடன் வருவதில்லை என்றும்
தெரிகின்றது. தெரிந்தும் நாம் அதில் சிக்கிவிடக் கூடாது.
நாம் அந்த அருள் பெற வேண்டும் அருள் ஞானம் பெற வேண்டும் அருள் வழியில் வாழ
வேண்டும் இருளை அகற்றி மெய்ப் பொருளுடன் ஒன்றி வாழ வேண்டும் என்ற இந்த உணர்வே நமக்குள் உருவாக வேண்டும்.
அருள் ஞானம் உலகம்
முழுவதும் பரவ வேண்டும் இருளை அகற்றும் சக்தி ஒவ்வொரு மனிதனும் பெற வேண்டும்.
1.விஞ்ஞான அறிவால் வரும் அழிவினை மாற்றி அமைக்கும் திறன்
2.சாதாரண மனிதனுக்கும் அந்தச் சக்தி கிடைக்க வேண்டும் என்ற இந்த உணர்வை நாம்
வேண்டினோம் என்றால்
3.இந்த உண்மைகள் உலகம் முழுவதும் பரவும்.
இதை எடுத்து நுகர்வோர் எவரோ… காக்கும் சக்தியை அவரே பெறுகின்றார்கள்.
ஒரு நூலால் ஒன்றும் செய்ய முடியாது. நான் ஒருவன் என்ன செய்ய முடியும்…?
1.உங்களுக்குக் கிடைக்க வேண்டும் என்று நான் பிராத்திக்கின்றேன்.
2.எண்ணுகின்றவர்களுக்கு இது கிடைக்கின்றது… பெற
வேண்டும் என்று ஏங்கினால் உங்களுக்குள் வருகின்றது
3.அதைப் போன்று நீங்கள் ஒவ்வொருவரும் எல்லோருக்கும் அது கிடைக்க வேண்டும்
என்று எண்ணுங்கள்.
ஒருவருக்கு நோய் வந்துவிட்டது அல்லது குடும்பத்தில் கஷ்டம் என்று
கேள்விப்பட்டால் அதைக் கேட்போர் அனைவருக்கும் கஷ்டமாக இருக்கின்றது.
அப்போது
இந்த உயர்ந்த உணர்வுகளை எடுத்து உங்கள் குடும்பம் நன்றாக இருக்க
வேண்டும் தொழில் நன்றாக இருக்க வேண்டும். நோய் இல்லை என்று
இந்தச் சொல்லை அவர்களிடம் நீங்கள் சொல்லுங்கள்.
1.உங்கள் உணர்வுகள் அவர்களுடைய நோயை நீக்கும்
2.அவர்கள் கஷ்டத்தைப் போக்கக்கூடிய சக்தியாக வர வேண்டும்.
3.அவருடைய உணர்வு நமக்குள் வராது தடுத்துக் கொள்ள முடியும்.
குருநாதர் காட்டிய அருள் வழியில் அவருடைய அருள் சக்தி நீங்கள் பெற வேண்டும். எல்லோரும் பேரின்பம் பெறக்கூடிய
தகுதி அந்தச் சக்தி பெற வேண்டும் எல்லோரும் அதைப் பெறக் கூடிய அந்த நிலையை உருவாக்க
வேண்டும் என்று பிரார்த்தித்துக் கொள்கின்றேன்.
1.உலகம் நலம் பெறத் தியானிப்போம்.
2.உலக மக்களைக் காக்கும் உணர்வை நமக்குள் விளைய வைப்போம்
3.நம்மையும் காப்போம்..,. உலக மக்களையும் காப்போம்.
4.விஞ்ஞான அறிவால் வரும் தீமைகளை அகற்றும் சக்தியைப் பெறுவோம்.
5.எல்லா மக்களுக்குள்ளும் இதைப் பதிவு செய்வோம்..!