ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

June 11, 2025

“தட்டி எழுப்பி உஷார் பண்ணி விட்டால்” உங்களை நீங்களே காப்பாற்றிக் கொள்ள முடியும்

“தட்டி எழுப்பி உஷார் பண்ணி விட்டால்” உங்களை நீங்களே காப்பாற்றிக் கொள்ள முடியும்


எப்பொழுது துன்பம் வருகின்றதோ அப்பொழுது ஆத்ம சுத்தி செய்யும் ஒரு பழக்கத்திற்கு நீங்கள் எல்லோருமே வர வேண்டும்.
 
அம்மா அப்பா அருளால் மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று ஏங்கி இருங்கள் கண்களைத் திறந்தே ஐந்து முறை எண்ணி ஏங்குங்கள்.
 
மகரிஷிகளின் அருள் சக்தி எங்கள் உடல் முழுவதும் படர்ந்திட அருள்வாய் ஈஸ்வரா குருதேவா. ஐந்து முறை எண்ணி ஏங்குங்கள்.
 
மகரிஷிகளின் அருள் சக்தி என் ஜீவான்மா ஜீவணுக்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா குருதேவா கண்களை மூடி மகரிஷிகளின் அருள் சக்தி எங்கள் உடல் முழுவதும் படர்ந்திட அருள்வாய் ஈஸ்வரா குருதேவா என்று உடல் முழுவதற்கும் செலுத்தி உள் நினைவாகக் கொண்டு வாருங்கள். ஒரு ஐந்து முறை எண்ணுங்கள்.
1.இப்பொழுது அவரவர்கள் உடலுக்குத் தக்கவாறு அந்த உமிழ் நீர்கள் கூடி வரும்.
2.இது தான் உங்களுக்கு உயர்ந்த சத்தாக உடலுக்குள் சேருகின்றது.
 
இப்பொழுது கண்களைத் திறங்கள் மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா குருதேவா. கண்களைத் திறந்து ஏங்கியிருங்கள். மகரிஷிகளின் அருள் சக்தி எங்கள் உடல் முழுவதும் படர்ந்திட அருள்வாய் ஈஸ்வரா குருதேவா.
 
கண்களைத் திறந்து ஏங்கிய பின் மகரிஷிகளின் அருள் சக்தியால் எங்கள் உடலில் உள்ள நோய்கள் அனைத்தும் நீங்கி எங்கள் உடல் நலம் பெற அருள்வாய் ஈஸ்வரா குருதேவா.
 
மகரிஷிகளின் அருள் சக்தியால் எங்கள் உடல் நோய்கள் அனைத்தும் நீங்கி நாங்கள் நலம் பெற அருள்வாய் ஈஸ்வரா குருதேவா. ஒரு ஐந்து முறை இவ்வாறு எண்ண வேண்டும்.
 
அதற்குப்பின் கண்களை மூடி மகரிஷிகளின் அருள் சக்தியால் எங்கள் உடலில் உள்ள நோய்கள் அனைத்தும் நீங்கி நாங்கள் நலம் பெற அருள்வாய் ஈஸ்வரா குருதேவா என்று எண்ணுங்கள்
 
1.உதாரணமாக வயிற்று வலியாக இருக்கிறது என்று வைத்துக் கொள்ளுங்கள்.
2.அந்த வலிக்கும் இடத்தில் கண்ணின் நினைவைச் செலுத்தி மகரிஷிகளின் அருள் சக்தி அங்கே படர்ந்து
3.அந்த வயிற்று வலி நீங்கி நாங்கள் நலம் பெற அருள்வாய் ஈஸ்வரா குருதேவா என்று எண்ணுங்கள்
4.கண்ணின் நினைவை அந்த இடத்தில் செலுத்தப்படும் பொழுது வயிற்று வலி நீங்கும்.
5.குடல் புண்ணாக இருந்தாலும் அந்தப் புண் ஆற வேண்டும் என்றால் அதுவும் ஆறும்.
 
கேன்சராக இருந்தால் ஒரு 15 அல்லது 20 நிமிடம் இதைப் போன்று மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று எண்ணிவிட்டு எங்கே வலி தோன்றுகின்றதோ
1.வலி ஏற்படக்கூடிய இடங்களில் மகரிஷிகளின் அருள் சக்தியால் எங்கள் உடலில் உள்ள வேதனை அகல வேண்டும்.
2.நாங்கள் நலம் பெற அருள்வாய் ஈஸ்வரா குருதேவா என்று கண்களை மூடி நினைவைச் செலுத்தி அந்த இடத்திலே எண்ண வேண்டும்.
 
மீண்டும் கண்களைத் திறந்து மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும் அந்த நோய் நீங்க வேண்டும் என்று வலிக்கும் இடத்திலே எண்ணி விட்டு மறுபடியும் கண்களை மூடி எங்கே வலி ஏற்படுகின்றதோ அங்கே
1.வெளியில் இருந்து அந்தச் சக்திகளை இழுத்து அந்த உணர்வுகளை அங்கே பாய்ச்சப்படும் பொழுது
2.”அபூர்வமான சக்தி வாய்ந்த மருந்தாக அந்த நோய் இருக்கும்  இடங்களிலே பாய்ந்து அந்த நோய்கள் குணமாகும்.
 
நாம் எடுத்துக் கொண்ட மூச்சினால் தான் நமக்குள் இந்த நோய்கள் வருகின்றது. ஞானிகளுடைய மூச்சலைகளை உடலில் சேர்க்கப்படும் பொழுது
1.அந்தக் குறித்த இடங்களில் அதைச் செலுத்தப்படும் போது
2.அது எவ்வளவு கொடிய நிலைகள் இருந்தாலும் அது மாறி அது நலம் பெறும். ஐந்து நிமிடம் அல்லது பத்து நிமிடம் வரை இவ்வாறு எண்ணலாம்
 
ஆஸ்த்மா நோய் இருக்கிறது என்றால் மகரிஷிகளின் அருள் சக்தி எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் என்று ஒரு 15 நிமிடம் எண்ண வேண்டும்.
 
ஆஸ்த்மா நோய் நீங்கி எங்கள் உடல் நலம் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று கண்களைத் திறந்து ஏங்கி மறுபடியும் சுவாசத்தை உள்ளே செலுத்தி ஐந்து தடவை சொல்லி கண்களைத் திறந்து மூடி
1.இப்படித் திரும்பத் திரும்ப திரும்பத் திரும்ப பத்து நிமிடம் வரை இந்த மாதிரி சுவாசம் எடுத்தால்
2.காற்றிலிருக்கக்கூடிய நல்ல சக்திகள் உமிழ் நீராகச் சுரக்கப்பட்டு நல்ல மருந்தாக நம் உடலில் கலந்து
3.அந்த நோயை நீக்கக்கூடிய சக்தியாக வரும்.
 
ஏனென்றால் நமக்கு வரக்கூடிய நோய்களும் இதே போன்றுதான் அந்தந்த சந்தர்ப்பங்களில் நாம் எடுத்துக் கொண்ட சுவாசங்கள் அந்தந்த குணங்கள் உமிழ் நீராகச் சுரக்கப்பட்டு ஆகாரத்துடன் கலந்து அது நஞ்சாக மாறி அது தான் நோயாக மாறுகின்றது.
 
ஆகவே அந்த நோய்களைப் போக்கக்கூடிய சக்தி உங்களுக்குக் கிடைக்க வேண்டும் என்று
1.வாக்கின் தன்மையாக இப்பொழுது உங்களுக்குள் பதிவு செய்கின்றேன்.
2.மகரிஷிகளின் அருள் ஞான வித்தினை உங்களுக்குள் ஆழமாகப் பதிவு செய்து ஊன்றுகின்றேன்.
 
வயல்களை எப்படிப் பண்படுத்தி நல்ல வித்துக்களைப் போட்டு நீரை ஊற்றிய பின் தன்னிச்சையாக காற்றிலிருந்து அந்த வித்தின் சத்தை எடுத்து வளர்ந்து அதனுடைய மகசூலை நாம் அறுவடை செய்து எவ்வாறு சுவை மிக்கதாக்கிச் சாப்பிடுகின்றோமோ இதைப் போன்று தான்
1.ஞானிகளின் அருள் வித்தை ஊன்ற உங்கள் மனதைப் பண்படுத்தி அந்த பண்பான நிலை ஆனபின் அருள் வித்தைப் பதிவு செய்து
2.உங்களை அறியாது வரும் துன்பங்களை நீக்கி அந்த மகரிஷிகளின் அருள் வித்தால் உங்கள் நோய்களும் நீங்கி
3.உங்கள் எண்ணங்களையும் அதன்வழி நலம் பெறும் சக்தியாகப் பிரதிபலிக்கச் செய்து
4.நல்ல உணர்வின் மூச்சுலைகளாக எண்ண அலைகளாக நீங்கள் வெளிப்படுத்தும் பொழுது மற்றவர்களுக்கும் இது நல்லதாகின்றது.
 
நல்லதைப் பெற வேண்டும் என்ற உங்கள் மூச்சும் பேச்சும் உங்கள் உடலுக்குள் எப்படி நன்மை தருகின்றதோ இதைப் போன்று உங்களைச் சார்ந்தவர்களுக்கும் அவர்கள் எண்ணும் பொழுது அவர்களுக்கும் நன்மை பெறும் சக்தியாக அமைகின்றது.
 
நாம் இடும் மூச்சலைகள் சூரியனுடைய காந்தப்புலனறிவுகள் கவரப்படும் பொழுது
1.இந்தக் காற்று மண்டலத்தில் அது பரவி
2.இந்த நாட்டு மக்களுக்கும் நல்லதை எண்ணுவோர் அனைவருக்கும் அந்த நல்ல உணர்வுகள் கிடைக்கப் பெற்று அவர்களும் நன்மை பெறுகின்றார்கள்.
 
மனிதனாக இருக்கக்கூடிய அனைவருமே நல்லது எண்ணுகின்றோம். ஆனால் வேதனை கலந்த உணர்வுகளைப் பரப்பப்படும் போது நல்லதைச் சிந்திக்கும் நிலையற்று இருக்கின்றது.
 
ஆகையினால் அதை எல்லாம் மாற்றி அமைக்க அந்த மகரிஷிகள் காட்டிய அருள் வழிப்படி மற்ற மந்திர ஒலிகள் எதுவும் கலக்காதபடி இயற்கையினுடைய தன்மைகளில் ஞானிகள் அருள் சக்திகளை நீங்கள் பெற வேண்டும் என்ற எண்ணத்தில் தான் அருள் வித்தினை உங்களுக்குள் பதிவு செய்து
1.துன்பம் நேரும் பொழுதெல்லாம் வயல்களில் களை எடுப்பது போல
2.எப்பொழுது கஷ்டம் என்று வருகின்றதோ அந்தக் கஷ்டத்தை உள்ளுக்குள்ளே நுழைய விடாதபடி வேதனை வந்தாலும் அதை விடாதபடி
3.மகரிஷிகளின் அருள் சக்தியால் அந்த வேதனைகள் அகல வேண்டும்
4.மகரிஷிகளின் அருள் சக்தியால் எங்கள் உடல் நோய் நீங்க வேண்டும்
5.மகரிஷிகளின் அருள் சக்தி எங்கள் உடல் முழுவதும் படர்ந்து நோய்கள் நீங்க வேண்டும் என்று திரும்பத் திரும்ப எண்ணி எடுத்து வளர்த்துக் கொண்டால்
6.அது எப்பேர்ப்பட்ட கடுமையான நோயாக இருந்தாலும் உங்கள் உணர்வால் போக்க முடியும்.
 
ஏனென்றால் இதைக் கேட்போர் உள்ளங்களில் வாக்காகப் பதிவு செய்கின்றேன். இதை மீண்டும் நினைவுபடுத்தும் போது காற்றிலிருந்து அந்த அருள் சக்தி உங்களுக்குக் கிடைக்கின்றது.
 
உங்களை மீட்டிக் கொள்ள நீங்கள் தான் எண்ணி எடுக்க வேண்டும். சாமியார் செய்து கொடுப்பார் சாமி செய்து கொடுப்பார் ஜோசியம் செய்யும் தெய்வம் செய்து கொடுக்கும் என்று எண்ணுவதற்கு மாறாக நீங்கள் எடுக்கும் அந்த உயர்ந்த எண்ணமே தெய்வமாகின்றது…”
 
1.நீங்கள் எண்ணும் எண்ணம் விதையாகி அந்த உணர்வின் செயலாக அதுவே உங்களுக்குள் நின்று தெய்வமாகி
2.எந்த உயர்ந்த எண்ணங்கள் எடுக்கின்றீர்களோ அந்தத் தெய்வமாக இந்த சக்தி உள் நின்று உங்களுக்குள் செயல்படும்.
 
சாமி செய்து கொடுப்பார் என்பதற்குப் பதில் சாமி சொன்ன வழியில் அந்த உயர்ந்த சக்தியினை அந்த ஆற்றலை நாம் பெற்றோமேயானால் நமக்குள் வரக்கூடிய துன்பத்தை நீக்க முடியும். நம் மூச்சும் பேச்சும் நம்மைச் சார்ந்தவருக்கும் அவர்களை நலம் பெறச் செய்ய உதவும் என்ற இந்த எண்ண அலைகளிலேயே நீங்கள் செயல்படுங்கள்…”
 
அப்பொழுதுதான் இந்த நாட்டின் நிலையில் மனிதனாகப் பிறந்தவர்கள் அனைவருமே தன்னிலை அடைய முடியும். உயிரோடு ஒன்றிய உணர்வுகள் ஒளி பெற்று மனிதனான நிலையில் இன்னொரு உடல் பெறாதபடி இதையே ஒளிச் சரீரமாக மாற்றிக் கொள்ள முடியும்.
 
இதை எல்லோருமே பெற முடியும்.
 
இப்படித் தான் இருக்க வேண்டும் அப்படிச் செய்ய வேண்டும் என்று கட்டுப்பாடுகள் இல்லை. நீங்கள் நினைத்த நேரத்தில் மகரிஷிகளின் அருள் சக்திகளைப் பெற முடியும்.
 
1.துன்பம் வரும் சமயத்தில் அது எப்படி நோயாகின்றதோ
2.துன்பம் வரும் போதெல்லாம் நோயாகும் பொழுதெல்லாம் அந்த மகரிஷிகளின் அருள் சக்திகளை எண்ணி
3.அந்தத் துன்பத்தையும் நோயையும் உங்களால் நீக்க முடியும்.
 
உங்களை நீங்கள் நம்ப வேண்டும்…!
1.ஆக நமக்குள் நல்ல சக்திகள் இருக்கின்றது என்பதைத் தட்டி எழுப்பி உஷார் பண்ணி விட்டால்
2.உங்களை நீங்களே காப்பாற்றிக் கொள்ள முடியும்.
 
குருநாதர் காட்டிய அருள் வழியில் மிக மிகச் சக்தி வாய்ந்த அருள் வாக்காக இதை உங்களுக்குக் கொடுக்கின்றேன். எல்லோரும் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.