ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

June 9, 2025

ஊண் உடம்பு ஆலயம்

ஊண் உடம்பு ஆலயம்


மனிதர்களாக இருக்கக்கூடிய ஒவ்வொருவருமே துன்பத்தை அனுபவித்து “எனக்கு இப்படி வந்து விட்ட்தே…” என்று சொல்லி எல்லாத் தெய்வங்களையும் வணங்குகின்றோம். நான் உன்னை வணங்கினேனே எனக்கு இப்படித் துன்பம் வருகிறதே… தெய்வமே…!
 
எந்தெந்தத் தெய்வத்தை வணங்கினோமோ
1.அந்தத் தெய்வ குணத்தை நல்ல குணத்தை எண்ணாதபடி நாம் வேதனைப்படுகின்றோம்
2.நல்ல பாலிலே விஷத்தை ஊற்றிக் குடித்தது போன்று…!
 
அதே சமயம் ஆத்திரம் வந்து விட்டால் உன்னைத்தான் நான் வணங்கி வந்தேன் என்னைப் பரிசோதிக்கின்றாயே…” என்ற ஆத்திரம்…! அந்த நல்ல குணத்தில் காரத்தைக் கலந்து நாம் குடித்தது போல் ஆகின்றது.
 
ஆனால் ஆலயத்தில் காட்டப்பட்டது என்ன…?
 
நாம் நல்ல குணங்களைச் செயல்படுத்தினோம் என்றால் அவை நமக்குள் மறைந்திருக்கின்றது. ஊண் உடம்பு ஆலயம்…!” நான் எடுத்துக் கொண்ட உணர்வுகள் ஊணாக மாறி உடலாக மாறி இது ஆலயமாக மாறும்.
 
1.நான் எந்தக் குணத்தின் தன்மையை எடுத்தேனோ அந்த உணர்வின் சக்தி எனக்குள் தெய்வமாக இருக்கின்றது.
2.நான் நல்லதை எண்ணி நினைவுபடுத்தும் பொழுது அதைப்போல நான் சுவாசித்து உயிரான ஈசனிடம் படும்பொழுது
3.அந்த மகரிஷிகள் எண்ண ஒலிகளைப் பரப்பி நான் நல்லதைச் செய்வேன் என்ற எண்ணம் வருகின்றது.
4.அத்தகைய குணம் எனக்குள் நல்லதை உருவாக்கும் பக்குவமாக
5.அந்த எண்ண அலைகள் உணர்வுகள் எனக்குள் வளர்ந்து தெய்வமாக இருக்கின்றது மனிதனுக்குள்.
 
நாம் சாப்பிடும் ஆகாரத்திற்குள் விஷம் மறைந்திருந்தாலும் அந்த விஷத்தை மாற்றி விட்டு உடலை நல்லதாக்கி எனக்குள் வரும் மணத்தின் தன்மை சுவாசித்து நல்லதைச் செய்யும் உணர்ச்சிகளைத் தூண்டிச் செயலாக்கும் எண்ண அலைகளைப் பரப்பிக் கொண்டு இருக்கும் அந்த நல்ல குணங்களைத் தான்
1.ஒவ்வொன்றையும் தனித்துத் தனித்து இன்னென்ன குணங்கள் இன்னென்னது செய்யும் என்று
2.1008 குணங்களாகப் பிரிக்கப்பட்டு 1008 ஆலயங்களாகப் பிரிக்கப்பட்டது.
 
நான் நல்லதைச் செய்ய வேண்டும் என்று என் பையனை எண்ணுகின்றேன். அந்த நல்ல உணர்வுடன் போகும் பொழுது சம்பந்தமில்லாதபடி ஒரு குழந்தை உருண்டு கீழே விழுந்து விடுகின்றான்.
 
கீழே விழுந்தவுடனே அவன் அலறுகின்றான். தாய்ப் பாசம் கொண்டு நாம் ஐயோ இப்படி ஆகிவிட்டதே என்ற வேதனை கொண்டு நல்ல உணர்வுடன் எண்ணும் பொழுது நான் எந்தக் குணத்தை எண்ணினேனோ அந்த உணர்வின் சுவாசம் (நினைவு) அந்த எண்ண அலைகள் சுவாசிக்கப்பட்டுச் செயல்படும் ஆற்றலாக இங்கே வருகின்றது.
 
அவன் கீழே விழுந்த பின் அவன் சுவாசித்த வேதனையின் உணர்வலைகளை
1.நான் சுவாசிக்கும் போது என் உயிரிலே பட்டு எனக்கு அந்த வேதனை தெரிகின்றது.
2.அவன் வலி எனக்கு வந்ததாகக் கருதி அவனைக் காப்பாற்றுகின்றேன்.
 
அவனைக் காப்பாற்றி விட்டேன் ஆனால் அந்த நல்ல குணத்திற்குள் வேதனைகள் கலந்து வரும் பொழுது யார் பெத்த பிள்ளையோ…? இப்படி ஆகிவிட்டதே…! என்ற வேதனையும் அவன் வேதனையில் பட்ட துடிப்பு நிலையும் ன் நல்ல குணத்துடன் கலந்து விடுகின்றது.
 
இதை இப்படியே விட்டு விட்டால் என்ன செய்யும்…?
 
இன்று இதைச் செய்து விட்டோம். இதைப் போன்று ஏதாவது ஒரு உணர்ச்சிகள் நாம் போகும் பாதையில் ஒரு பையன் ஒரு சாமானைத் தூக்கிப் போடுகிறான் என்றால் பயத்தால் இந்த உணர்ச்சியின் வேகங்கள் எனக்குள் தூண்டிக் கொண்டே இருக்கும்.
 
பய உணர்வுகள் தோன்றி
1.அதைத் தடுக்கும் நிலைகளில் இருந்து கீழே விழுந்து விடுமோ விழுந்து விடுமோ என்று எண்ண எண்ண அந்தப் பொருள் கீழே விழுந்து விடும்.
2.சரியான நிலைகள் பக்குவப்படுத்த முடியாதபடி உர்வின் இயக்க நிலைகள் மாறி விடுகின்றது.
3.நான் நல்லதை நினைத்தேன் நல்லதைச் செய்தேன்…! :எதைத் தொட்டாலும் என் காரியம் விளங்க மாட்டேன் என்கிறது…”
 
நல்லதை நினைத்தேன் ன்று வேதனையான நிலைகளை எடுத்துக் கொண்டு அந்த ணர்வலைகள் அதிகமாகும் பொழுது என் வட்டமாகின்றது.
 
உதாரணமாக ஒரு குழம்பை வைக்கப்படும் பொழுது எல்லாம் சமமாக இருந்தால் ருசியாக இருக்கும். காரம் அதிகமாகி விட்டால் உசு உசு என்று எரிச்சல் ஆகின்றது அதே சமயம் காரல் அதிகமாகி விட்டால் அதற்குத் தக்க சுவை மாறுகின்றது. உப்பு அதிகமாகிவிட்டால் கரிக்கின்றது.
 
இதைப் போல நாம் எடுத்துக் கொண்ட மம் அதிகமாக எடுக்கப்படும் பொழுது அது முன்னணியில் வந்து விடுகின்றது. அப்பொழுது ஏதாவது ஒரு நல்ல காரியத்திற்கு நான் போகிறேன் என்றால்
1.நான் வாயை திறந்து பேசினாலே போதும்
2.சங்கடமான அலைகள் முன்னாடி இருக்கும் பொழுது
3.என் சொல் மற்றவர்கள் செவிகளிலே படும் அந்த உணர்ச்சிகள் உந்தி என்னைப் பார்க்கின்றார்கள்.
4.எனக்கு முன் இருக்கும் இந்தச் சங்கட அலைகள் அவருடைய ஈர்ப்புக்குள் போகும்.
5.அதைச் சுவாசித்த உடனே என் வார்த்தை மீது நம்பிக்கை இல்லாது வெறுப்படைவார்கள்.
6.நான் எவ்வளவு நல்லது செய்கிறேன் ஆனால் என்னைப் பார்த்து வெறுக்கின்றார்களே என்று நாம் சொல்வோம்.
 
ஆனால் தவறு செய்யவில்லை. அப்பொழுது இதை யார் துடைப்பது…? இதற்குத்தான் ஆலயத்தைக் கட்டி வைத்துள்ளார்கள்.
 
நல்ல குணத்தை எதனால் நீ போர்த்திக் கொள்ள வேண்டும்…? அந்த மலரை வைத்து நல்ல வாசனை கொண்ட பூக்களைப் போட்டு.
1.வாசனையான சந்தனத்தை சாமி மீது ஊற்றுகின்றார்கள்.
2.ஏனென்றால் நம்மிடம் இருக்கும் குணத்திலே அதை ஊற்றினால் தான் அந்தத் தீமையான வாசனை போகும்.
 
என் நல்ல குணத்துடன் கீழே விழுந்தவனைப் பார்த்தேன். அவன் வேதனைப்பட்ட உணர்வை எடுத்த உடனே இதை மூடிவிட்டது அதிலிருந்து
1.பாலில் விஷம் பட்டால் குடித்தால் நம்மையும் எப்படி வேதனைப்படச் செய்யுமோ
2.நல்லது எண்ணும் போதெல்லாம் வேதனை வந்து கொண்டே இருக்கின்றது.
 
அதைத் துடைப்பதற்குக் கோவிலைக் கட்டி வைத்து ந்தத் தெய்வ குத்தைப் பெறும்படி செய்தார்கள்.
 
இருட்டறைக்குள் சாமியை வைத்திருக்கின்றார்கள் திரையை நீக்கியபின் எதைக் கொண்டு அங்கே பார்க்கின்றோம் தீபத்தைக் காட்டும் போது வெளிச்சத்தால் இருட்டுக்குள் மறைந்த அனைத்தும் தெரிய வருகின்றது.
 
பொருளறிந்து செயல்படும் அந்தச் சக்தி பெற வேண்டும் ஈஸ்வரா என்று ஈசனிடம் கேட்கின்றோம். அதை நாம் சுவாசிக்கும் பொழுது நம் உயிரிலே படுகின்றது.
 
கீழே விழுந்தான் கீழே விழுந்ததைச் சுவாசித்த பின் உயிரிலே பட்டு என்று பயமாகி அந்த வேதனைப்பட்டு அவனைக் காக்கச் செய்கின்றது. ஈசனுக்குள் படும் பொழுது தான் இது வரும்.
 
அதே உணர்வு உமிழ் நீராக மாறி அந்த வேதனை என் உடலுக்குள் போகும்போது என் நல்ல குணங்கள் எல்லாம் பதறுகின்றது. அந்த நல்ல குணங்களை எல்லாம் சேர்த்துத் தாங்கி உடலாக இருக்கும் சிவம் இப்படிச் செய்கின்றதே என்று பதட்டமாகின்றது. இந்த உடல் முழுவதும் பதட்டமாகின்றது நல்ல குணங்களுக்கும் பதட்டமாகின்றது. ஆனால் ஈசனுக்கோ வேதனையாகின்றது.
 
அதைத் துடைப்பதற்கு நாம் என்ன செய்ய வேண்டும்…? கோவிலில் அங்கே சென்று அங்கிருக்கும் சிலைக்கு அபிஷேகம் செய்தால் இங்கு சரி ஆகுமா…?
 
அபிஷேகம் எதைச் செய்ய வேண்டும்…? எங்கே செய்ய வேண்டும்…?
 
அந்தச் சந்தனத்தைப் போன்ற நறுமணம் நான் பெற வேண்டும் என் பேச்சிலும் மூச்சிலும் நல்ல இனிமையான உணர்வுகளைச் சுவாசிக்க வேண்டும் ஈஸ்வரா என்று
1.இங்கே நம் உயிருக்கு அபிஷேகம் செய்ய வேண்டும்.
2.இதை அங்கே புறத்திலே சிலைக்கு ஊற்றிக் காண்பிக்கின்றார்கள். ஆனால் இப்படி யாரும் நினைப்பது இல்லை.
 
அங்கே சந்தனத்தை ஊற்றுவார்கள். அப்போது “பையன் சொன்னபடி கேட்கவில்லையே என்று இங்கே வருத்தமாக இருக்கும். ஆக இங்கே வருத்தத்தைச் சுவாசித்து இங்கிருக்கும் ஆண்டவனுக்குக் கவலையை அபிஷேகம் செய்கின்றோம்.
 
நல்லத்தை எடுத்து உனக்குள் இருக்கக்கூடிய தெய்வங்களுக்கு அதைக் கொடு என்று ஆலயத்திலே காண்பித்தால் யாரும் அவ்வாறு கும்பிடுவதில்லை.
 
சரணாகதித் தத்துவமாக உன் கஷ்டத்தை எல்லாம் அங்கே அழுது சொல்லு. அவன் பார்த்துக் கொள்வான் போ…! தேங்காய் பழம் பகாரத்தைச் செய்து கொடுத்து…
1.உனக்கு நல்லதை எல்லாம் கொடுத்து இருக்கின்றேன் என்னை எப்படி எல்லாம் துன்பப்படுத்துகின்றார்கள்
2.நல்லதைச் செய்கின்றேன் என்னை இப்படிப் பேசுகின்றார்கள் நல்லதைச் செய்தேன் ஏமாற்றுகின்றார்கள்
3.நீயே பார்த்துக் கொண்டிருக்கின்றாயே…! ஏன் நீ அவர்களுக்குச் சொல்லக் கூடாதா…? என்று சரணாகதித் தத்துவமாக அழுது அங்கு புலம்புகின்றோம்.
 
வேதனையைக் கொண்டு அபிஷேகம் செய்தால் எதைச் சம்பாதித்து வருகின்றோம்…?
 
எதை நீக்குவதற்காகக் கோவிலை வைத்தார்களோ
1.அந்தக் கோவிலுக்குச் சென்று சுத்தப்படுத்துவதற்குப் பதிலாக அசுத்தப்படுத்துகின்றோமே தவிர
2.கோயிலின் மரியாதையையே நாம் கெடுத்து விடுகின்றோம்.
 
இந்த உடலான கோவிலைச் சுத்தப்படுத்துவதற்கு நமக்குள் இருக்கும் நல்ல குணங்களைக் காப்பாற்றுவதற்கு மாறாக அவன் பட்ட வேதனையைத் தான் எண்ணுகிறோம். காரணம் என் நல்ல குணங்களை அது மூடிவிட்டது. அதைத் துடைக்க வேண்டும் அல்லவா.
 
ஆனால் நல்ல குணங்களைக் காப்பாற்றிய ஞானிகள் சப்தரிஷி மண்டலங்களாக அங்கே இருக்கின்றார்கள். அதனால் தான் பௌர்ணமி அன்று விண்ணை நோக்கி உற்றுப் பார்க்கும்படி சொல்வதும் காலையில் சூரியனைப் பார்க்க வேண்டும் என்றும் அன்று ஞானிகள் சொன்னார்கள்.
1.ஞானிகள் உணர்வை எண்ணி எடுப்பதை காயத்ரி என்பார்கள்.
2.இந்த காற்றிற்குள் சூரியனின் காந்த சக்தியால் கவரப்பட்ட ஞானிகள் பேசிய உயர்ந்த சக்திகள் இருக்கின்றது.
3.அதை எண்ணி எடுத்து அந்த ஞானியின் அருள் சக்தி பெற வேண்டும் என்று நமக்குள் சேமிக்க வேண்டும்.
 
அது பரமாத்மா பூமியில் இருப்பது. அதை எண்ணி எடுக்கப்படும் பொழுது உடலுக்குள் அணைப்பாக வருகின்றது. இரண்டாவது என் ஆத்மா. அதிலிருந்து சுவாசித்து உடலுக்குள் சேர்க்கப்படும் பொழுது ஜீவாத்மா. இது எல்லாம் நல்ல குணங்களை விளைய வைத்துச் சுத்தப்படுத்தி உயிருடன் சேர்க்கப்படும் பொழுது நல்ல உணர்வாக வரப்படும் பொழுது நான்காவது உயிராத்மா. இதற்குப் பெயர் காயத்ரி…”
 
அந்த உயர்ந்த உணர்வுகளை நமக்குள் எடுத்து விளைய வைத்தால் உண்மையான முழு சக்தியாக அங்கே பெறுகின்றது. இதை ஆண்கள் தான் செய்ய வேண்டும் பெண்கள் செய்யலாமா வேண்டாமா…? என்று இப்படி ஒரு கேள்வி கேட்பார்கள்.
 
முதலில் தாய்மை…!
1.சக்தி தான் முதலில் சிவமாகின்றது. சிவத்தில் இருந்து தான் சக்தியும் வளர்ச்சி பெறுகின்றது
2.சக்தி இல்லையேல் சிவமில்லை சிவம் இல்லையேல் சக்தி இல்லை.
3.சக்தியை முதலில் வைத்துத்தான் சிவமாகும் என்று அன்று சொல்லி இருக்கின்றார்கள்.
 
ஆனால் இன்று இருக்கக்கூடிய சாஸ்திர சட்டங்கள் பெண்கள் காயத்ரி மந்திரம் சொல்லலாமா கூடாதா என்று சொன்னால் இது என்ன கேள்வி…? பெரும்பகுதியானவர்கள் பெண்கள் காயத்ரி மந்திரம் சொல்லக் கூடாது சொன்னால் தப்பு” என்கிறார்கள்… இவர்கள் சொல்லிக் கொள்ளும் காயத்ரி மந்திரம்.
 
மந்திரம் என்றால் என்ன…? அந்த இயற்கையின் சக்தி ஞானிகளுடைய அருள் சக்தி பெற வேண்டும் என்று எண்ணி ஈர்க்கப்படும் பொழுது நமது ஆத்மாவாகி சிறுகச் சிறுகச் சேர்ந்து ஜீவாத்மாவாக நமக்குள் விளைந்து அதில் விளைந்த நிலைகள் உயிராத்மாவாகச் சேருகின்றது.
 
கோவிலிலே பார்க்கப்படும் பொழுது எந்தக் குணத்தைக் காக்க வேண்டும் என்று எண்ணினோமோ அந்தக் குணமான சக்தி எனக்குள் இருக்கின்றது. அந்தக் குணத்தை நான் எண்ணும் பொழுது தான் அவனைக் காப்பாற்றினேன் (கீழே விழுந்தவனை). ஆனால் அதே உணர்வு எனக்குள் கலந்து விடுகின்றது.
 
அந்த குத்திற்குள் கலந்ததை நான் துடைக்க வேண்டும். அதற்குத் தான் அங்கே காட்டியுள்ளார்கள்.
1.அவனைக் காக்க வேண்டும் என்று எண்ணினேன். அந்த உணர்வின் சத்து எனக்குள் பட்டுவிட்டது.
2.அந்த வேதனையை அகற்றிவிட்டு நல்ல குணத்தைக் காக்க வேண்டும் என்றால்
3.கோவிலில் காட்டப்பட்டுள்ள அந்த தெய்வ குணத்தை நாங்கள் பெற வேண்டும் ஈஸ்வரா.
4.இதை அருளிய அந்த மகரிஷிகளின் அருள் சக்தி நான் பெற வேண்டும் ஈஸ்வரா. வானை நோக்கி நாம் எண்ண வேண்டும்.
5.இந்தத் தெய்வ குத்தை அவர்களுக்குள் விளைய வைத்து இது தான் உண்மை என்று அறிந்து சொன்ன வாக்கினை நாம் எடுக்க வேண்டும்.
 
தெய்வத்தைச் சொல்லி அந்தத் தெய்வத்திற்கு அர்ச்சனை செய்தால் நல்லது என்று சொன்ன சாதாரண மனிதன் இங்கே இருக்கின்றான். நல்லதைச் சொல்லிச் செய்பவன் எல்லாம் விண்ணிலே இருக்கின்றான். ஆனால் சாமியை நீ சொல் என்று மந்திரத்தைச் சொல்லி நீ இதைச் செய்தால் நல்லதாகும் என்று சொல்கின்றான்.
 
அதே மந்திரத்தைச் சொல்லி தெய்வத்தை ஜெபித்து வணங்கப்படும் போது நாம் இறந்த பின் இன்னொரு மனிதன் அதே மந்திரத்தைச் சொல்வான் என்றால் அவனுக்குள் ஆட்டிப்படைக்கும் பொம்மையாக ஆவோம்.
 
1.எந்தெந்த மந்திரத்தைச் சொல்லி உடலில் சேர்த்துக் கொண்டோமோ இறந்த பிற்பாடு
2.அதே மந்திரத்தை இன்னொரு மனிதன் சொன்னால் அந்த மந்திரத்திற்குள் சிக்கப்பட்டு
3.அவன் என்னென்ன வேலை செய்கின்றானோ அதற்கு அடிமையாவோம் இவர்கள் சொல்லும் மந்திரத்தில் சென்றால்…!
 
ஞானிகள் சொன்ன வழிப்படி.. அந்த மகரிஷிகளின் அருள் சக்தி நான் பெற வேண்டும் அந்த மகரிஷிகள் உணர்த்திய அருள் சக்தியான தெய்வ நிலைகள் நான் பெற வேண்டும் ஈஸ்வரா என்று ஏங்கி என் உடலுக்குள் அதைச் செலுத்தி மலரைப் போன்ற மம் பெற வேண்டும் இந்த வாசனை என் உடலுக்குள் பெற்று அந்த நறுமணமான நிலைகள் பெற வேண்டும். என் சொல்லுக்குள் அந்த நறுமணம் வரவேண்டும். நான் சொல்வதெல்லாம் மற்றவர்களுக்கு இனிமையாக இருத்தல் வேண்டும் என்று எண்ண வேண்டும்.
 
கனியைப் பார்க்கின்றோம். அதை உட்கொண்டால் எப்படி இனிமையாக இருக்கின்றதோ அது போன்று என் சொல்லுக்குள் அந்த இனிமை கலந்து பிறருடைய செவிகளிலே படும் பொழுது அங்கே நல்லதாக அமைய வேண்டும்.
 
ஆனால் கீழே விழுந்தவனைப் பார்த்தவுடனே ஆ…! என்று எனக்குள் அலறல் ஆகின்றது. பிறருடைய மகிழ்ச்சியான சொல்களைக் கேட்கப்படும் பொழுது எனக்குள் ஆனந்தத்தைத் தூண்டுகின்றது.
1.இதைப் போல அந்த மகிழ்ச்சியான உணர்வின் தன்மை நான் பெற வேண்டும்
2.கனியைப் போன்ற சுவையான சொல்லும் செயலும் நான் பெற வேண்டும் ஈஸ்வரா என்று எனக்குள் இந்த உணர்வினை அபிஷேகம் செய்தால்
3.இந்த உணர்வின் தன்மை கீழே விழுந்தவனைக் காப்பாற்றிய அந்த விஷத்தை நீக்கிட” அந்த ஞானியின் அருள் வித்து உதவுகின்றது.
4.இவனைக் காப்பாற்றினேன்தே உணர்வின் தன்மை எனக்குள் அந்த நல்ல குணத்தை நிலை நிறுத்த முடிகின்றது.
 
இப்படித்தான் ஆலயத்தின் பண்புகளை நமக்குச் சொன்னார்களே தவிர சரணாகதித் தத்துவமாக துன்பத்தை எல்லாம் சொல்லி எல்லா பதார்த்தங்களையும் அங்கே வைத்துவிட்டு நான் எல்லாமே உனக்குச் செய்தேன் என் பிள்ளை மக்காக இருக்கின்றானே…! உன்னைத்தானே நான் வேண்டினேன் என்று வேதனையைத் தான் சொல்கின்றோம். எல்லோருக்கும் நான் தர்மத்தைத் தானே செய்தேன். எல்லோரும் ஏமாற்றுகின்றார்களே…!
 
அப்பொழுது எதை வணங்குகின்றோம்…?
 
ஆக நமக்குள் வந்த தீமையைத் தான் அந்தக் கோவிலுக்குள்ளும் சென்று அங்கேயும் அதே தீமையை வளர்க்கின்றோம். நாம் விடும் மூச்சுகள் நமக்குக் கெட்ட்தாவதோடு மட்டுமல்லாதபடி மற்றவர்களுக்கும் அது அங்கே கெடுதல் ஆகின்றது.
 
ஆலயம் நம்மைப் புனிதப்படுத்தும் நிலைக்காகத்தான் உருவாக்கப்பட்டது. ஆகையினால் இனி எந்த ஆலயத்திற்குச் சென்றாலும் அந்தத் தெய்வ குணத்தைப் பெற வேண்டும் ஈஸ்வரா. இதையெல்லாம் அருளிய அந்த மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும் ஈஸ்வரா. மலரைப் போல் மணம் நாங்கள் பெற வேண்டும். என் மூச்சாலும் பேச்சாலும் நல்ல மங்கள் வெளிப்பட வேண்டும் ஈஸ்வரா என்று எண்ணுங்கள்.
 
பிறரை மகிழ வைக்க வேண்டும். கனியைப் போன்ற சுவையான சொல்லும் செயலும் பெற வேண்டும். என் சொல்லால் பிறர் மகிழ வேண்டும் என் செயலால் பிறர் ஆனந்தப்பட வேண்டும்.
1.அந்த மகரிஷியின் அருள் சக்தியால் எனக்குள் அது விளைய வேண்டும் ஈஸ்வரா.
2.அந்தக் கோவிலுக்கு வரும் அத்தனை பேருக்கும் அந்த மகரிஷிகளின் அருள் சக்தியால் நலமும் வளமும் பெற வேண்டும்.
3.என் சொல்லும் செயலும் இங்கு வருவோர் அனைவரையும் மகிழ வைக்கும் எண்ண அலைகளாகப் படர வேண்டும் ஈஸ்வரா என்று
4.இப்படி எல்லாம் செய்யும் போது நாம் தெய்வமாகின்றோம்.
 
இது தான் கோவிலின் தத்துவம்.